07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பெயர் சொல்ல விருப்பமில்லை. Show all posts
Showing posts with label பெயர் சொல்ல விருப்பமில்லை. Show all posts

Sunday, September 5, 2010

நவரச ஞாயிறு (வலைச்சரம் - ஏழாம் நாள்)

லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.
முதலில் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
வலைச்சர ஆசிரியர் என்ற முறையில் உங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்! (ஓ! அந்த ஆசிரியர் வேற, இந்த ஆசிரியர் வேறயோ? சாரி!)

இந்த பதிவுல பலதரப்பட்ட பதிவர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
என்னது நானு யாரா? இவரு இயற்கை மருத்துவத்தைப் பற்றி விலாவரியா எழுதறார். வாழை இலை மருத்துவம்னு ஒண்ணு சொல்றாரு, படிக்கும்போதே நம்ம கெட்ட நீரெல்லாம் போயிடற மாதிரி பீலிங். பால் சாப்பிடாதீங்கன்னும் சொல்றாரு.  படிச்சுப்
பாருங்க, நம்பறதும் follow பண்றதும் உங்க இஷ்டம்!

அருண் பிரசாத் இவரும் பலதரப்பட்ட பதிவுகளை எழுதியிருக்காரு.ஒரு பதிவில் ஊருக்கெல்லாம் சோறிட வைக்கும் இவரின் மனிதாபிமானம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

டெரர் பாண்டியன் இவரோட எல்லா கமென்டுமே பலமா சிரிக்க வைக்கும். ரொம்ப நாள் கழித்துதான் பதிவுகள் எழுத ஆரம்பிச்சாரு. கமென்ட்டுங்கற பேர்ல கும்மி அடிக்கறவங்களை கும்மியிருக்காரு பாருங்க, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!  இவருக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கு அது வெங்கட் ப்ளாக் போய் படிக்க ஆரம்பிச்சா புரியும்.

நவரசம்னு தலைப்பு வச்சுட்டு இயல் தமிழ் மட்டும் சொன்னா எப்படி? இதோ இசைத் தமிழ். கர்நாடக இசைப் பிதாமகரான தியாகராஜரின் கீர்த்தனைகளும் அதன் அர்த்தங்களும் இந்த ப்ளாகில் இருக்கின்றன. ஒரு சாம்பிளுக்கு இதைப் படியுங்க!

ஓகே. ஒரு வழியா ஏழு நாட்களுக்கு ஏழு பதிவுகள் போட்டாச்சு. என்னை அன்போடு அழைத்த சீனா அவர்களுக்கு என் நன்றி! என் பதிவுகளுக்கு யோசனை சொல்லிக் கொடுத்த...........
....................
...................
...................
வேணாம், அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது. அதுனால கோகுலம் வெங்கட் பேரை சொல்லாமயே உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்!

டிஸ்கி : என் முந்தைய பதிவுகளில் எல்லாம் என் பதிவோட சுட்டிகளும் கொடுத்து பழகிவிட்டதால், என் பதிவுகளிலேயே சிறந்தவை என்று நான் நினைக்கும் சில பதிவுகள் இங்கே:-

என் பெற்றோர் பற்றி

உதவி செய்வதன் மகத்துவம்

வைகுண்ட ஏகாதசி - ஒரு விளக்கம்   
மேலும் வாசிக்க...

Saturday, September 4, 2010

சகலகலா சனிக்கிழமை (வலைச்சரம் - ஆறாம் நாள்)

சென்ற பதிவில் கவிதைப் பதிவர்களைப் பற்றி எழுதியிருந்தேன். இப்போது கதை எழுதும் சில பதிவர்கள்.

பெரும்பாலான பதிவர்கள் நகைச்சுவைக் கதைகளையே எழுதி வந்தாலும், சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதும் ஒரு பதிவர் மின்மினி தேசம் இவரது இந்த சிறுகதை சூப்பர்! இந்த சிறுகதை (சுட்டாலும்) நிதரிசனத்தை  சொல்கிறது!

நிழல்கள் என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ள இவரின் மொத்த சிறுகதைகளையும் இங்கே படியுங்கள்!

கேணிவனத்தில் திகில் தொடர்கதை இங்கே படியுங்கள்!

முகிலன் - இவர் பலருக்கு அறிமுகமாகி இருக்கலாம். இவரது இந்த க்ரைம் தொடர்கதை எனக்கு பிடித்திருக்கிறது. கதையைவிட அதில் சொல்லப் பட்டுள்ள அறிவியல் தகவல்கள் அருமை!

ஓகே, இனி என்னுடைய கதைத் தொகுப்பு கீழே:-

கதை ஒன்று 
கதை இரண்டு
 கதை மூன்று 

டிஸ்கி : ஒரு வழியாக ஆறு நாள் தாக்குப் பிடித்துவிட்டேன், இன்னும் ஒரே நாள்தான். அப்புறம் ஜாலி..................உங்களுக்கும்தான்!
மேலும் வாசிக்க...

Friday, September 3, 2010

வெள்ளி (க)விதைகள் (வலைச்சரம்-ஐந்தாம் நாள்)

பொதுவாகவே கவிதைகள் பலரையும் கவருகின்ற ஒரு விஷயம்!
பத்திகளில் விளக்கவொண்ணா 
பல்வேறு செய்திகளை 
புத்தியில் உறைக்கும்படி
புகல்வது கவிதைதானே!
(ஹி.ஹி. இது என் சொந்தக் கவிதை)

கவிதை என்ற தலைப்பில் வலைத்தளத்தில் தேடியபோது கிடைத்த சிலரைப் பற்றி இப்போது எழுதுகிறேன்.

மைந்தன்  சிவா வின் ஹைமைகூகவிதைகளைப் படியுங்கள். இவரே பல பாடலை வைத்து
காமெடியாய் ஒரு கவிதை சொல்லி கலந்துவிட்டார் எந்தன் நெஞ்சில்!

இதுவரை நான்கே கவிதைகள் தான் எழுதியிருக்கிறார் அன்புடன் பிரசன்னா மேலும் எழுத வாழ்த்துவோம்!

ராஜா சந்திரசேகர் இவர் ஒரு கவிதைப் புதையலே வைத்திருக்கிறார். எல்லாக் கவிதைகளுமே சிறியதாய் ஆனாலும் சீரியதாய்! இன்னதென்று என்னால் சொல்ல இயலவில்லை,  மொத்த கவிதைகளும் படித்துவிடுங்கள்!

சந்தோஷ் இவரும் சின்ன சின்ன கவிதைகள் எழுதியிருக்கிறார். இவரின் இந்தக் கவிதைப் பக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது!

ஓகே, என்னோட கவிதைப் பதிவுகளை சுட்டி இந்தப் பதிவை முடிக்கிறேன்:-
கவிதை ஒன்று
கவிதை இரண்டு
கவிதை மூன்று
மேலும் வாசிக்க...

Thursday, September 2, 2010

வெடிச்சிரிப்பு வியாழன் (வலைச்சரம் - நான்காம் நாள்)

வெடிச்சிரிப்பு வியாழன்(வலைச்சரம் நான்காம் நாள்)

"நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லது போயிருந்தால் நான் என்றோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்று சொன்னார் காந்திஜி. மனிதன் நிம்மதியாக வாழ இந்த நகைச்சுவை பெரிதும் உதவுகிறது. சொல்லப் போனால், பதிவுலகில் நகைச்சுவை மட்டுமே பிரதானமாக விளங்குகிறது எனலாம். நான் ரசிக்கும் சில நகைச்சுவைப் பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.

தீராத விளையாட்டுப் பிள்ளை இவர் எங்க ஊரு ஆளுங்கறது ஸ்பெஷல் நியூஸ். இவரது எல்லா பதிவுகளுமே நகைச்சுவை கலந்து இருக்கும் என்றாலும், இந்தப் பதிவும் இன்னொரு பதிவும் என்னை கவர்ந்தன.

டெரர் பாண்டியன்.இப்பதான் புதுசா வந்திருக்காரு இவரு! கமென்ட் போடறதில கில்லாடி. இவரோட எல்லாப் பதிவுகளுமே நகைச்சுவைதான் படிச்சு பாருங்க.
காயத்ரி இவங்க எல்லா பதிவுகளுமே சிரிப்புதான். பின்ன டைட்டில்லையே Just for Laugh-னு போட்டுடறாங்களே! இந்த ஒரு சோறு பதம்!
அஷீதான்னு ஒரு அம்மணி இவங்களோட இந்தப் பதிவும் சிரிப்பை வரவழைக்குது.

ஓகே! என்னோட சில நகைச்சு(வைச்சு)வை பதிவுகள் இதோ:-

ஒண்ணு
ரெண்டு
மொத்த நகைச்சுவை பதிவுகளும் இங்கே

நாளை சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

Wednesday, September 1, 2010

புதிர் புதன் (வலைச்சரம் மூன்றாம் நாள்)

ஹி...ஹி... மறுபடியும் நான்தானுங்க! ஒவ்வொருத்தர் ஒரே நாளிலேயே பல பதிவுகள் போடும்போது இவர் மட்டும் ஒரு பதிவு போடறதுக்கே ஏன் இப்படி கஷ்டப்படராருன்னு யோசிக்கிறீங்களா? அதுதான் புரியாத புதிர்.

ஓகே, இன்றைய பதிவு புதிர்கள் பற்றியது. பொதுவாகவே, இந்த உலகமே பல ஆச்சரியங்களை தன்னுள் கொண்டதுதான். பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைத்த பாடில்லை. அதனால் தானோ என்னவோ, பலர் புதிர்களையும் அதன் விடைகளையும் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் புதிர்கள் பற்றி யாரெல்லாம் பதிவிடுகிறார்கள் என்று தேடியதில் சிக்கியவர்கள் விவரம் இதோ:

யோசிங்க-ன்னு ஒரு ப்ளாக். அதில எத்தனை புதிர்கள்-னு இந்தப் பக்கத்துல பாத்துக்குங்க!
கண்மணி
இவங்க ரொம்ப அருமையா புதிர்கள் போடறாங்க. படங்களை வைத்துப் புதிர் இப்படின்னா, ட்ரூடுல்ஸ்-னு ஒண்ணு சொல்றாங்க, சூப்பர்! 

ராம்சுரேஷ்
இலவசம்-ன்ற வலைப்பூவில   குறுக்கெழுத்து புதிர் படித்தேன். அருமை.
 
எங்கள் ப்ளாக்
இந்த வலைப்பூவில பலவகைப் புதிர்களையும் படிக்கலாம். குறுக்கெழுத்துப் புதிர், சினிமா புதிர் ரெண்டுமே நல்லா இருக்குது, படிச்சுப் பாருங்க! 

மாதவன்
இவரோட இந்தப் புதிர் அறிவுபூர்வமா யோசிக்கிறவங்களுக்குத்தான் புரியும். (என்னது, எனக்கு புரியுதாவா? அவ்......!) இந்தப் புதிருக்கு விடை இங்க இருக்கு!இவரும் படப் புதிர் எழுதியிருக்கார்.

எல்லாம் சரி, நானும் புதிர் பத்தி ரெண்டு பதிவு போட்டிருக்கேன், இங்க பாருங்க!
புதிர் ஒன்று
புதிர் இரண்டு,
மேலும் வாசிக்க...

Tuesday, August 31, 2010

சினிமா செவ்வாய் (வலைச்சரம் - இரண்டாம் நாள்)

வலையுலக மக்களுக்கு வணக்கம்.

நான் இப்படி டென்ஷன் ஆனதே இல்லை. ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே வலைப்பூவை உருவாக்கி எனக்குத் தோன்றியதை எழுதிக் கொண்டிருந்த நான் வலைச்சரத்தின் தற்காலிக ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு பின்னால்தானோ என்னவோ, அலுவலகத்தில் அதிக ஆணி. அறிமுகப் பதிவிற்குப் பின் இப்போது தான் புதிய பதிவு. எனவே, மன்னிக்க வேண்டுகிறேன்!

பொதுவாக நான் வளர்ந்த சூழலில் சினிமா பார்ப்பது மிகவும் அரிது. அப்படியே பார்த்தாலும், சம்பூர்ண ராமாயணம், பக்த பிரகலாதா போன்ற பக்திப் படங்கள்தான் பார்த்திருக்கிறேன். (அதற்காக நான் வருத்தப் பட்டதும் இல்லை.) பின்னாளில் சொந்தமாக டிவி வாங்கி அதன் உதவியால் பல புதிய பழைய திரைப்படங்கள் நிறைய பார்த்துவிட்டேன். ஆனாலும்,  அநேகமாக எல்லாத் திரைப்படங்களுக்கும் திரை விமரிசனங்கள் படித்துவிடுவேன். குறிப்பாக கேபிள் சங்கர் எழுதும் விமரிசனங்கள் பெரும்பாலும் நடுநிலையோடு இருக்கும். ஒருவேளை, இவர் துணை இயக்குனர் என்பதாலோ என்னவோ? தமிழ்ப் படம்தான் என்றில்லை, பீப்லி (லைவ்) என்ற  ஹிந்தி படத்துக்கு இவர் எழுதியுள்ள விமரிசனத்தைப் படியுங்கள். அதேபோல், படங்களைப் பற்றிய விமரிசனத்தை விட, அந்தப் படம் பார்க்கும்  போது தியேட்டரில் நடந்த சுவையான விஷயங்களை எழுதுவதில் நம்மை ஈர்க்கும் ஒரு தளம்  பார்த்ததும் படித்ததும்  ஜெட்லியின்  இந்த லேட்டஸ்ட் விமரிசனம்  படியுங்கள் புரியும். வேறு யாராவது திரைப்படங்களைப் பற்றி சுவையாக சொல்கிறார்களா என்று தேடியபோது கிடைத்தவர்தான்  சார்லஸ். இவர் தொலைக்கட்சிகளில் தொடர்கள் இயக்குவதாக அறிவிக்கிறார். இவர் திரைத்துறையில் எடிட்டிங் செய்யும் மாயாஜாலங்களை இந்தப் பதிவில் எப்படி கூறுகிறார் பாருங்கள்!

ஓகே. நான்கூட  திரை விமரிசனங்கள் எழுதியிருக்கிறேன். இங்கே பாருங்கள்:-
விமரிசனம் ஒன்று.
விமரிசனம் இரண்டு.

பிறகு சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

Monday, August 30, 2010

எந்தரோ மகானுபாவுலு.............

எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு.....!
எத்தனையோ மகான்கள் இந்த வலை பூமியில், அவர்கள் அத்தனை பேருக்கும் என் வணக்கங்கள்!
என்னைப் பெற்ற தாய் தந்தையருக்கும், என் அறிவை வளர்த்த ஆசிரியர் பெருங்குழுவுக்கும் என்னை ஒரு நல்லோனாய், நன்மதிப்புடன் இந்த உலகத்தில் வலம் வரச் செய்து கொண்டிருக்கும் என் இறைவனுக்கும் என் நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

பல வருடங்களாக பிறருடைய வலைத்தளங்களைப் படித்துக் கொண்டிருந்த நான், எனக்கென்று ஒரு வலைத்தளம் அமைத்துக் கொள்ள விரும்பி சென்ற அக்டோபர் மாதம் முதல் வந்துட்டான்யா வந்துட்டான் என்ற பெயரில் ஆரம்பித்தேன்.

பெயர் சொல்லக் கூடாது என்றில்லை, ஆனால் ஒரு சுவாரசியத்திற்காக "பெயர் சொல்ல விருப்பமில்லை" என்ற பெயரில் பதிவுகளும் பின்னூட்டங்களும் இட்டு வருகிறேன். தெரிந்த ஒரு சிலரிடம் என் உண்மையான பெயரையும் தெரிவித்திருக்கிறேன்.

பதிவுலகம் ஒரு அருமையான மேடை. இதில் நமது தனித்திறமைகளையும் சில பொதுவான விஷயங்களில் நம்முடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளத் தோதான இந்த பதிவுலகத்தில் தான் எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்க, படிக்க முடிகிறது!

அன்பின் சீனா அவர்கள், இந்த வாரம் என்னை ஆசிரியர் பொறுப்பேற்கச் சொன்ன போது, முதலில் கொஞ்சம் தயங்கினேன். ஆனாலும் இது ஒரு அருமையான வாய்ப்பு என்பதால் ஒப்புக் கொண்டேன். இத்தனை ஆயிரம் பதிவர்கள் இருக்க, பல பதிவுலக ஜாம்பவான்கள் எழுதிய ஒரு வலைத்தளத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு வருகின்றபோது அதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான் என்று உள்மனம் என்னை உசுப்ப, இந்த வாரம் உங்கள் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்கிறேன்!

பிறிதொரு பதிவில் மீண்டும் சிந்திப்போம்! 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது