Sunday, September 30, 2012
➦➠ by:
* அறிமுகம்
சென்று வருக மணிகண்டன் - வருக ! வருக ! மஞ்சுபாஷினி
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் வா.மணிகண்டன், தான் ஏற்ற பொறுப்பினை அழகாக நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் இட்ட பதிவுகள் : 9
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 30
இவர் அவர்களது தளத்தினையே சுட்டி கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
அவர்களது பதிவுகளில் தனக்கு மிகவும்...
பறவைகளின் வானம்
➦➠ by:
வா.மணிகண்டன்
பட்சியின் வானம்:
சிறுகதை எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் வலைப்பதிவு. சில சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவ்வப்போது இவர் பதிவிடும் சிறுகதைகளுக்காக இந்தத் தளத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம்.
ராஜா சந்திரசேகர்:
விளம்பரத்துறையில் பணியாற்றும் ராஜா சந்திரசேகரின் கவிதைகளால் நிரம்பியிருக்கும் வலைப்பூ. பெரும்பாலும் சிறு கவிதைகள்தான். ஆனால் தனக்குள் முடிச்சினை வைத்திருக்கும் கவிதைகள். மேஜிக்கல் தன்மையுடைய கவிதைகளை இப்பொழுது...
Posted by
Vaa.Manikandan
at
10:03 AM
2
comments
மூத்தோர் சொல்
➦➠ by:
வா.மணிகண்டன்
சுகுமாரன்:
எனக்கு பிடித்த கவிஞரும், முன்னோடியுமான சுகுமாரன் அவர்களின் வலைத்தளம் இது. திருவனந்தபுரத்தில் வாழும் கவிஞர் இந்தத்தளத்தில் பெரும்பாலும் தனது கவிதைகளை பதிக்கிறார். தற்பொழுது அவர் எழுதிவரும் வெலிங்டன் நாவலின் சில அத்தியாயங்களையும் இங்கு வாசிக்க முடியும். ஆனால் தொய்வில்லாமல் எழுதிவரும் சுகுமாரன் அவர்களின் எழுத்துவேகத்துக்கு வலைத்தளத்தில் வாசிக்க கிடைப்பது புல்லுக்கு பொசியும் நீர் அளவுக்குத்தான்.
கலாப்ரியா:
மூத்த...
Posted by
Vaa.Manikandan
at
1:56 AM
4
comments
Saturday, September 29, 2012
துளிகள்
➦➠ by:
வா.மணிகண்டன்
இலையுதிர்காலம்
சமீபத்தில் அதிக கவனத்தைக் கோரும் கவிதைகளை எழுதி வரும் ஆறுமுகம் முருகேசனின் கவிதைகளால் நிரம்பிய தளம் இது. ஈராக்கில் வசிக்கிறார். அன்பினாலும், பிரியங்களினாலும், துக்கங்களினாலும் சொல்ல முடியாத உணர்ச்சிகளாலும் நிரம்பிய கவிதைகள் இவை. கவிதைக்கான புதிய தளங்களை மிக இயல்பாக கண்டடைவது ஆறுமுகத்தின் பலமாக இருக்கிறது.
இன்னமும் இணையதளங்களிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களின் பக்கம் தனது பார்வையை திருப்ப வேண்டும்...
Posted by
Vaa.Manikandan
at
8:39 AM
7
comments
Thursday, September 27, 2012
இன்னும் கொஞ்சம்
➦➠ by:
வா.மணிகண்டன்
தூரன் குணா:
கவிஞன், சிறுகதைக்காரன் தூரன் குணாவின் வலைத்தளம். கவிதை, கதை தவிர்த்து அனுபவங்கள், வாசிப்பு என எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் கொஞ்சமே கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறார். தூரன் குணாவை நினைக்கும் போதெல்லாம் ஓட்டிற்குள் அடங்கியிருக்கும் ஆமையின் சித்திரம் மனதில் தோன்றும். அது பொருத்தமான சித்திரம் என்று நினைத்துக் கொள்வேன்.
தமிழ்நதி:
ஈழத்து காட்டாறு. சமூகம், இலக்கியம், அரசியல், கவிதை, கதை என அடித்து நொறுக்குகிறார்....
Posted by
Vaa.Manikandan
at
7:05 PM
4
comments
நவீன கவிகள்
➦➠ by:
வா.மணிகண்டன்
யவ்வனம்:
கவிதைகளுக்குள் கதைகளைச் சொல்வதன் மூலமாகவும், விசித்திரமான கவிதைச் சித்திரங்களினாலும் கவனம் பெறக்கூடிய கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் கதிர்பாரதியின் தளம். இவரது கவிதைகளின் புதிய பாதை ஆச்சரியமூட்டுவதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கின்றன. "கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள் ஊதா நிறத்தில் இருந்தனவாம்" பிறகு ஏன் நிறம் மாறின என்பதை கதிர்பாரதியின் கவிதையின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.
நிலாரசிகன் பக்கங்கள்:
ஒரு...
Posted by
Vaa.Manikandan
at
1:38 PM
8
comments
Wednesday, September 26, 2012
அக்கரைக் காற்று
➦➠ by:
வா.மணிகண்டன்
கே.பாலமுருகன்:
மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன், சிறுகதை எழுத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்து வருபவர். அவரின் வலைத்தளம் இது. மலேசிய வாழ்க்கையை அசலாக பதிவு செய்யும் பாலமுருகனின் எழுத்துக்கள் வரலாறு, சமூகம், புத்தக விமர்சனங்கள், குறுநாவல், கவிதைகள் என பயணம் செய்கின்றன. மலேசிய தமிழ் இலக்கியத்தில் மிக ஆக்கப்பூர்வமான உரையாடலை முன்னெடுக்கும் சில இளைஞர்களில் பாலமுருகனுக்கு முக்கிய இடம் என்பதாலேயே அவர் மீது மரியாதை கூடுகிறது.
மாற்றுப்பிரதி:
ஈழத்துக்கவிஞர்...
Posted by
Vaa.Manikandan
at
11:55 PM
7
comments
கண்ணாடிக்கிணறு
➦➠ by:
வா.மணிகண்டன்
தந்துகி:
மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர், களப்போராளி ஆதவன் தீட்சண்யாவின் வலைத்தளம் இது. தற்பொழுது ஓசூரில் வசிக்கிறார். இவரது கூர்மையான சமூக விமர்சனங்களுக்கும், அங்கத எழுத்திற்கும் நான் ரசிகன். இவர் ஓசூரைப் பற்றி என் விகடனில் எழுதிவரும் கட்டுரைகள் மிக அதிக அளவிலான வாசக ஈர்ப்பை பெற்றிருக்கின்றன.
இவரது எழுத்துக்கள் இந்தத் தளத்தில் வகைப்படுத்தப்படாமல் இருக்கின்றன என்பது குறை.
ஓசூர் எனப்படுவது யாதெனின்,இடி இறங்குவதற்கு முன்பிருந்த...
Posted by
Vaa.Manikandan
at
1:31 PM
4
comments
Tuesday, September 25, 2012
தீராத எழுத்துக்கள்
➦➠ by:
வா.மணிகண்டன்
அழியாத கோலங்கள்:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படும் இந்த வலைப்பதிவில் இதுவரை 'தீராக் காதல்' என்னும் நாவலின் அத்தியாயங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுவரை வெளிவராதது இந்த நாவல்.
ஒரு த்ரில்லர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்லும் மீசை முனுசாமியின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவிடுகிறேன். உண்மையில் மீசை முனுசாமி என்பது புனைப்பெயர். அவர் ஒரு பத்திரிக்கையாளர் என கேள்விப்பட்டிருக்கிறேன்....
Posted by
Vaa.Manikandan
at
8:17 AM
7
comments
Monday, September 24, 2012
கனாக்காலம்
➦➠ by:
வா.மணிகண்டன்
2004 ஆம் ஆண்டு படிப்பிற்காக சென்னை வந்திருந்த காலகட்டம். அப்பொழுது சினிமாவும், இலக்கியமும் மட்டுமே தேடலாக இருந்தது. சினிமா என்றால் பாடலாசிரியர் ஆகிவிடலாம் என்று கனவு. எழுதி வைத்திருந்த கவிதைகள் அந்த கனவுத் தீக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தன.
வைரமுத்துவும், மேத்தாவும் மட்டுமே இலக்கிய கர்த்தாக்கள் என்ற நினைப்பு ஆக்கிரமித்திருந்த அந்த நாட்களில் சினிமாக்கவிஞர்களை தேடிப்பிடிப்பது ஞாயிற்றுக்கிழமைகளின் பொழுதுபோக்காக இருந்தது....
Posted by
Vaa.Manikandan
at
7:57 AM
17
comments
Sunday, September 23, 2012
➦➠ by:
* அறிமுகம்
சென்று வருக ஜலீலா கமால் - பொறுப்பேற்க வருக வா.மணிகண்டன்
அன்பின் சக பதிவர்களே
இன்றுடம் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஜலீலா கமால் தான் ஏற்ற பொறுப்பினை முழு மனது மற்றும் ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் மகிழ்ச்சியாக நம்மிடம் இருந்து விடைபெறுகிறார்.
இவர் இட்ட பதிவுகள் : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 124
சுய அறிமுகப் பதிவுகள் உள்ளிட்ட - அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகள் :...
Posted by
cheena (சீனா)
at
5:51 PM
8
comments
இல்லக்கலவை
➦➠ by:
ஜலீலாகமால்

வீட்டு மருத்துவம் அனைவருக்குமே பயன்படும். மாத்திரை மருந்து களை விட கை மருந்து , பாட்டி வைத்தியம் மூலம் ஓரளவுக்கு நாமே நம்மை பார்த்து கொள்ளலாம். ஹச்சுன்னா டாக்டர் , புச்சுன்னா டாக்டர் கிட்ட ஓடி போக வேண்டியது அவரும் ஒரு பை புல்லா மாத்திரை மருந்த அள்ளி கொடுப்பது.
இதனால் ஏகப்பட்ட பக்க விளைவுகள். இதிலிருந்து ஓரளவுக்கு விடுபட கண்டிப்பாக...
Posted by
Jaleela Kamal
at
5:21 PM
20
comments
Subscribe to:
Posts (Atom)