07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 14, 2012

தொடர்கிறேன்..

வணக்கம் தோழர்களே!

இந்த இனிய ஐந்தாம்  நாளில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! முன்பே குறிப்பிட்டது போல பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் நேற்று என்னால் பதிவிட முடியவில்லை. அதற்காக எனது வருத்தங்களைப் பதிவு செய்கிறேன். சீனா அய்யா அவர்களும் பொறுத்தருள வேண்டுகிறேன்.

இனி..

இன்று கவிதை தவிர்த்த வேறு களங்களைக் கொஞ்சம் அலசுவோம்.

வன்முறையும் போரும் நிறைந்துவிட்ட இன்றைய உலகில் அவை எந்த நேரத்திலும் எங்கும் வெடித்துவிடக் கூடிய ஒரு அச்சமூட்டும் சூழலில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். கற்களை ஆயுதமாகக் கொண்டு தன் வன்முறை வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் இன்று அணு ஆயுதம் வரை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். இன்றைய ஆயுதங்களின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு நாம் பதற்றப்படாமல் இருக்க முடியாது. இத்தகையதொரு சூழலில், நாளைய ஆயுதங்கள் குறித்து டிஸ்கவரி சேனல் நடத்தி வரும்  நிகழ்ச்சியின் மீதான அதிர்ச்சி தரும் இந்த மாற்றுப்பார்வையை உங்கள் முன் வைக்கிறேன்.

அணு உலைகள் தேவையா இல்லையா என்ற விவாதங்களுக்கு நடுவே இந்திய அணு உலைகள் தொடர்பாக ஒரு விரிவான பார்வையை முன்வைக்கிறார் அ.முத்துக்கிருஷ்ணன்.

பேரரசர் அசோகர் பற்றிப் பாடப்புத்தகங்களில் படித்திருப்போம். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, நீர்நிலைகளைப் பேணல், காட்டுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பல விஷயங்களில் அப்பேரரசர் குறித்து  நாம் அறியாத பல சுவையான தகவல்களைத் தருகிறது இக்கட்டுரை.

தொல்காப்பியத்தையும் அதன் ஆசிரியர் தொல்காப்பியரையும் நாம் அறிந்திருப்போம்.  அவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்பது குறித்து ஒருமித்த கருத்து இல்லை. ஆனால், அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை அழகாக நிறுவுகிறார் இரா.பானுகுமார்.

வாழ்க்கை மிகவும் எளியது. நாம்தான் நமது அதீத நடவடிக்கைகளால் அதை மிகவும் சிக்கலாக்கிக் கொள்கிறோம். பின் அதிலிருந்து விடுபட எதை எதையோ தேடி ஓடுகிறோம். இந்தக் கணத்தில் வாழ்வது குறித்து நாம் எந்த சிந்தனையுமில்லாமல் எதிர்காலம் என்ற இல்லாத ஒன்றைக் கட்டமைத்து அதன் மாய உலகில் நம்மைத் தொலைக்கிறோம். ஜென் எப்போதும் இந்தக் கணத்தைக் குறித்தே பேசுகிறது. அதன் அழகியலும் அறவியலும் மிக எளிமையானவை. ஜென்னைக் குறித்து ஜென் கவிதையைக் குறித்து விளக்குகிறார் நண்பர் ஆதி

ஜென் குறித்து இன்னும் சுவாரஸ்யமாய் சொல்கிறார் ருத்ரா; வாசியுங்கள்!
ஜென்

ஜென் சிந்தனைகளை அசைபோட்டுக் கொண்டிருங்கள்! வேறு பதிவுகளோடு மீண்டும் உங்களை நாளை சந்திக்கிறேன் தோழர்களே!

அன்புடன்,
அப்துல் காதர்.


5 comments:

  1. சில தளங்கள் அறியாதவை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  2. நன்றி திரு தனபாலன்!

    ReplyDelete
  3. அறிந்து கொண்டேன். அறிமுகப்படுத்திமைக்கு நன்றி. தொடருங்கள்

    ReplyDelete
  4. அறிந்து கொண்டேன். அறிமுகப்படுத்திமைக்கு நன்றி. தொடருங்கள்

    ReplyDelete
  5. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்;

    ஆசிரியர் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது