07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 13, 2013

ஸ்னேகமாயும்,பூந்தூவலாயும்,,,,/

இன்று ஐந்தாவது நாளாக,,,,,,,,,/

                                                     http://antogaulbert.blogspot.in/


கொக்கரக்கோ,,,,,,,,,,இது திரு ஆண்டோஅவர்களின் வலைத்தளம் அதில் பிடித்ததாக,,,,,,,,/

மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அவனை கடந்த ஞாயிற்று கிழமை பனிமய மாதா கோயில் வாசலில் வைத்து சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டு பிடித்தவனாக ஒருவித பரபரப்போடு என்னை அணுகினான்.,,,,,,,,,,என நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த நண்பனைப்பற்றி பகிர்ந்து கொள்கிறார். தன் பதிவின் மூலம் கொக்கரக்கோ ஆண்டோ,இது மட்டுமல்ல தான் படித்த ஜமீலாவில்(ரஷ்ய நாவல்)இருக்கிற உயிரோட்டம் பற்றி தெளிவாக,ஒட்டுதலாகவும் எடுத்துக்கூறுகிறார்.இதோ:
ஜமீலா…. ஒரு பெருங்கொண்ட குடும்பத்தில் வாக்கப்பட்டவள் தான். அவளது கணவனோ நாட்டுக்காக யுத்தகளத்தில் ஆயுதமாகிப் போனான். ஜமீலாவும் ”ஒழுக்கம்” என போதிக்கப்பட்ட….படும் ஒடுக்குமுறைகள் நிறைந்த சமூக கட்டமைப்புகள் குறித்த ஐயவுணர்வும், நம்பிக்கையும் கொண்டவள் தான். ஆனால் காதல் இவை எல்லாவற்றையும் கடந்த அற்புதமான உணர்வல்லவா? காதலை உந்துவது வெறும் காமம் தான் என்றால் காதலுக்கு இத்தனை எதிர்ப்புகள் இராது. காதலில் காமம் ஒருநிலை! ஆனால் காமத்தின் நிறைவால் காதல் வடிவதில்லை.
”கிச்சினே” பாலாவுக்கும் தன் அண்ணன் மனைவியான ஜமீலா மீதிருந்தது காதல் தான். அந்தக் காதல் தான் அவளை காடையர்கள் சீண்டுகிற போது அவனை சினம் கொள்ளச் செய்கிறது…. அந்தக் காதல் தான் அவள் தானியாரின் தோள்களில் சாயும் போது அவனை ரசிக்க செய்கிறது…. அந்தக் காதல் தான் அவள் தானியாரின் கரம் பற்றி ஊரைவிட்டு செல்லும் போது துடித்து தவித்து உடைந்து வெளிப்படுகிறது.
                           
                       

 
அழகிய நாட்கள் திரு நாராயனன் அவர்களின் வலைத்தளம் அதிலிருந்து,,,,,
                                                      http://sugadevnarayanan.blogspot.in/



"ஆடி அடங்கும் வாழ்க்கையடா ....ஆறடி நிலமே சொந்தமடா"
என்ற ஒரு பாடல் தமிழ் சினிமாவில்  உண்டு.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும் " குட்டியாடு தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம் என்ற பாடலில்

 "தட்டுக்கெட்டெ மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்"

என்று ஒரு வரி சொல்லியிருப்பார்.

உறவினர்கள்/ நண்பர்கள்/ அலுவலக உறவுமுறை என்று  யாராவது செத்துப்போனால் சுடுகாட்டுப்பக்கம் போய் பழக்கமுள்ளவர்களுக்கும்
செத்தபிறகு சுடுகாட்டுக்குப்போனால் போதும் என்று இருப்பவர்களும்,
முன்ன பின்ன செத்தாதானே சுடுகாது தெரியும் என்று சொல்பவர்களும் இருக்கிற பூமி இது.

மூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் யார்?

இந்த உலகத்தில் "மூன்றாம் பாலினம்" என்ற சொல்லாடல்  திரு நங்கையர் உலகத்தைக்குறிப்பிடுவதென்று கொண்டால் முதல் பாலினம் யார்? ... லிவிங் ஸ்மைல் வித்யாவோ அல்லது பிரியா பாபுவோ ஒரு பேட்டியில் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்கள். திரு நங்கை என்பது மூன்றாம் பாலினம் என்றால் தனித்துச் சொல்லத் தேவையில்லை.பொதுப்புத்தியில் இது உறைந்தே கிடக்கிறது.  இது ஆணாதிக்க சமூகம். ஆகவே ஆண் முதலாகவும் பெண் இரண்டாவதாகவும்  நடை முறைப்படுத்தப்பட்டு விட்ட ஒரு சமூகத்தில் அவரது  கேள்வி மிகவும் அற்பமாக அல்ல; எனக்கு மிகவும் அற்புதமாகப்பட்டது.

மில்லியன் டாலர் கேள்வி என்பார்களே அது இதுதான் என நான் நினைக்கிறேன்.

                                        

தனிமரம் வலையிலிருந்து,,,,,,,,


                        http://www.thanimaram.orgஎன் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-இறுதி!!!!!ஆரம்பகாலம் தொட்டே மனிதர்களுக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம்மிக்க ஒரு செயல் .ஜோசியர்கள் ,ரேகை சாஸ்த்திரிகள் ,குறிசொல்லுவோர்,காண்டம் வாசிப்போர் என பலரை நாடுவது இது பலநாட்டில் குறைவில்லாமல் இருக்கின்றார்கள் 
என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-29ஒரு இரவில் நடக்கும் சந்திப்புக்களும் ,ஆலோசனைக் கூட்டங்களும் .திடீர் மாற்றங்களை சிலரின் வாழ்வில் மாற்றிவிடும் என்பது சோழப்பேர் அரசன் குடந்தையூர் அரண்மனையில் நடந்த ஆதித்தசோழனின் மரணம் வரலாறாக இருப்பது போலத்தான் !  

           
கவிதை வீதி சௌந்தர் அவர்களின்  வலையிலிருந்து,,,,,,

காமம் பேசும் ஓவியங்களும்...! காதல் பேசும் 

மொழிகளும்...!





ஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும்
மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும்
உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...!

****************************************************


எத்தனை பூக்கள் சூடினாலும்
உன்னால் தான் அழகு
அவைகளுக்கு..!

****************************************************


பூகம்பங்களுக்கிடையே
நீ பூத்தாலும்
என் கவிதைகளில்
உனக்கு இடமுன்டு...!

****************************************************


கல்லைத்தான் கொண்டுவந்தார்கள்
இவளை அனுப்பியிருந்தால்
நிலவையே அல்லவா கொண்டுவந்திருப்பாள்..!

****************************************************



எனக்கு எப்போதும் பயமில்லை... 
வலிக்கு பயந்திருந்தால் 
நான் காதலிக்க அல்லவா பயந்திருக்க வேண்டும்..!
 
****************************************************



என்ன ‌அதிசயம் 
உன் பெயரை உச்சரிக்கும்போதே 
உதடுகள் இனிக்கிறது..!

****************************************************


மௌனத்தை தாய்மொழியாக கொண்டவளே... 
உன் மௌனங்களையெல்லாம் 
மொழி பெயர்க்கும் அகராதி 
என்னிடம் மட்டுமே உள்ளது...!

***************************************************


காகிதத்தில் 
நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....
 
மையாக
கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
 
****************************************************


எனக்கே தெரியாமல்
ஏதேதோ நடக்கிறது...
காதல் உள்பட...!

***************************************************


 
இனிமேல் நீ தரும்
தண்டனைகள் எல்லாம்
முத்தங்களாகவே இருக்கட்டும்....!

**********************************************



எவ்வளவு நேரம் என்றாலும்
உனக்கான காத்திருப்புகள்
எனக்கு சுகமானவையே...!

***********************************************


யாருக்கும் தெரியாமல்
ஒவ்‌வொறு சாயங்காலமும்
என்னை மரணப்படுத்துகிறது
உன்னை நினைவுபடுத்தி....!
 
******************************************
காமம் பேசும் அழகிய ஓவியங்ளோடு
காதல்பேசும் என் கவிதை வரிகள்.. (மீள்பதிவு)



                               
வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்திலிருந்து,,,
                                                          http://gopu1949.blogspot.in/


உறுதியான சங்கற்பம் இருந்தால் காலம் 
கிடைக்காமல் போ காது.அநாவசியவம்பிலும்
நியூஸ்பேப்பர்விமர்சனத்திலும்செலவாகிற 
காலத்தை மட்டுப்படுத்தினால்நித்திய 
சிரேயஸைத்தருகிறதியானத்திற்கு
வேண்டிய அவகாசம் நிச்சயம்  கிடைக்கும்.

தான் இன்னொருவரைக்காட்டிலும்
உயர்ந்தவன்என்றுநினைக்கிறதே
பாபம்”  என்று சாஸ்திரங்களில் 
சொல்லியிருக்கிறது

                                                                           












                         
                                                                           

                                                            வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்
                                                                               
                                                                                                 விமலன்,,,,











22 comments:

  1. இது ஒரு வலைச்சர ஆசிரியருக்கு நான் எழுதியது ...சீனா சார் என்னை மன்னியுங்கள்;;;;!
    என் ஈழத்து சகோதரியின் இலை மறை காயாய் இருக்கும் வலைப்பூவை அறிமுகம் செய்ய ஒருவரிடம் சொன்னேன் அதுவும் அவர்கள் ஒருவார வலைச்சர பொறுப்பேற்ற முதல் நாளே ...ஆனால் அவர்கள் அதை கண்டுக்கவே இல்லை....அதனால் அவர்களுக்கு அனுப்பிய தகவலை இங்கே கொடுத்திருக்கிறேன்...!...எல்லோரும் என்னை மன்னியுங்கள் !

    வஞ்சகத்தின் வாரிசுகள் வாழும் தமிழ் நாட்டில்
    நெஞ்சுருக்கும் ஆர்வலரின் திறமை தடுப்பீர்
    வெஞ்சமரில் வீழ்ந்த வீரத்தின் மறவர்களை
    துஞ்சமென மதிக்கும் தூசுகள் நீங்கள்...!

    கருநாய் நிதியின் கட்சியில் சேர
    கற்பை விற்கும் களிசறை கூட்டம்
    தெருநாய் கூட தீட்டினில் இருப்பின்
    அருவருப்பின்றி அடையும் சாதி...!

    நல்லவர் பலவுளர் நான் காண்கின்றேன்
    வல்லவன் வாய்மை வணங்கும் சாயலில்
    எல்லோர் பதிவும் இயம்பும் நண்பர்கள்
    கல்லா உன்னை கண்டது புதுமை...!

    முதல் நாள் பதிவில் அறிமுகம் கண்டேன்
    அடுத்தநாள் பதிவில் நண்பர்கள் கண்டேன்
    இறுதி நாள்வரை எல்லாம் பார்த்தேன்
    இதயம் வலிக்க உம்மிடம் கேட்டேன்...!

    காரணம் சொல்லி கழன்று போனீர்
    காலம் வெல்லும் கடிமைகள் மீள்வோம்
    வாரணம் இன்றி மடிந்த சேனையை
    தோரணம் கட்டி தொழில் சுமப்போம் ...!

    ஒவ்வோர் குரலும் ஈழம் சொல்லும்
    வெல்வோர் நாமென மேதினி பாடும்
    லௌகீக வாழ்வில் நாங்கள் எரிந்து
    சௌமிய தேசம் சத்தியம் காப்போம்...!

    இன்றோடும்மை என்றும் நினைக்கேன்
    பெண்ணோடும்மை பெயரிலும் சேர்க்கேன்
    அன்பை அறியா ஆணவ குப்பையே
    வன்சொல் தவிர்த்து வாழந்திட பாரீர்..!

    எனக்கு உங்கள் பதில் வேண்டாம் இந்த தகவலை வாசித்தபின் என்னை ப்ளாக் பண்ணி விடுங்கள் .....ஏனெனில் என்னுள் எரிமலை எப்போதும் வெடிக்கும்.....நன்றி


    ReplyDelete
  2. ஒரு தளம் புதிது... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... பதிவில் எழுத்துக்கள் side gadget-ல் மறைந்துள்ளன... சிறிது சரி செய்ய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் வருகைக்கு/

      Delete
  3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  4. என் தளத்தினையும் இன்று அறிமுகம் செய்துள்ளதற்கு மிக்க நன்றி.

    தகவல் கொடுத்துள்ள இனிய நண்பர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வை கோபலாகிருஷ்னன் சார் வருகைக்கு/

      Delete
  5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேகுமார் சார் வருகைக்கு/

      Delete
  6. தாங்கள் அறிமுகம் செய்துள்ள பதிவர்கள்
    அனைவரும் நான் விடாது தொடரும்
    அருமையான பதிவர்கள்
    பகிர்வுக்கு தொடரவும் மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் வருகைக்கு/

      Delete
  7. அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே வருகைக்கு

      Delete
  8. அறிமுக வலைத்தளங்கள் அருமை!.. வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜ் அவர்களே வருகைக்கு/

      Delete
  9. கவிதை வீதியை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.....
    அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிதை வீதி சௌந்தர் அவர்களே வருகைக்கு/

      Delete
  10. அனைவருக்கம் வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெற்றி வேல் அவர்களே வருகைக்கு/

      Delete
  11. பலரும் போற்றும் வலைச்சரத்தில் தனிமரத்தின் தளத்தின் காதல் தொடரினை அறிமுகம் செய்த விமலன் அண்ணாவுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பலகோடி!

    ReplyDelete
  12. மூத்தவர்கள் பலரும் என்னோடு அறிமுகம் ஆனவர்கள் எல்லோருக்கும் என் நல் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. விமலன் சார் உங்களின் தனித்துவ பாதையில் எழுதியுள்ளீர்கள். அருமை. படங்களின் தேர்வும் மிக நேர்த்தி. எல்லோரின் தளங்களையும் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  14. அருமையான வலைதளங்களின் அறிமுகம் மனதுக்கு ஆனந்தம்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது