07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label முகிலின் பக்கங்கள் தமிழ் முகில். Show all posts
Showing posts with label முகிலின் பக்கங்கள் தமிழ் முகில். Show all posts

Sunday, May 11, 2014

புதிர் பக்கங்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.





மூளை தன்னை
முடங்க  விடாதே
முயற்சித்துப் பார்ப்போம்
முனைப்பாய் புதிர்களையே !

புதிர்கள் நமக்கு நல்ல பொழுதுபோக்காகவும், நல்ல சிந்திக்கும் திறனை  வளர்க்கவும் பேருதவி புரிகின்றன. இன்று  நம்முடன் புதிர்களை பகிர்ந்து கொண்டு, நம்மையும் சற்று சிந்திக்க செய்யும் சில பதிவுலக நண்பர்களை காணலாம்.

1. திரு. முத்து சுப்ரமணியம் ஐயா அவர்கள் தனது முத்துவின் புதிர்கள் பக்கத்தில் பலவிதமான புதிர்களை வழங்கி வருகிறார்.

குறுக்கெழுத்துப் புதிர் , கலைமொழி புதிர், சொல்கலை புதிர் என்ற பலவகையான புதிர்களை இவர் வழங்குகிறார். புதிர்களை விடுவித்து மகிழ்வோமே !


2. திரு. யோசிப்பவர் அவர்கள் தனது யோசிங்க தளத்தில், வார்த்தை விளையாட்டு, புதிர்கள், குறுக்கெழுத்து புதிர்கள், வார்த்தை தேடல் விளையாட்டு, கலைமொழி புதிர் என்று பலவகையான புதிர்களை வழங்குகிறார். இவையனைத்தும் நம் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

3. திரு. நாகராஜன் அவர்களது புதிய வலைப்பூ  தமிழ் புதிர்கள்.
 குறுக்கெழுத்து புதிர்கள்  வழங்கி வருகிறார்.

4. திரு. இராம் மலர் அவர்கள் தனது  வலைப்பூவில் பொது அறிவுப் புதிர் கேள்வி பதில்களை பகிர்ந்து வருகிறார்.

5. திரு. இராமராவ் அவர்கள் தனது திரைக்கதம்பம் வலைப்பூவில் திரைக் கதம்பம் மலர் மற்றும் திரை குறுக்கெழுத்து புதிர்களை வழங்கி வருகிறார்.

6. திரு. பார்த்தசாரதி அவர்கள் தமிழ் குறுக்கெழுத்து புதிர்கள் மற்றும் சொல்கலை, சொல்லடுக்கு புதிர்களை வழங்கி வருகிறார்.

7. மூங்கில்காற்று தளத்தில் எழுதி வரும் திரு. டி. என். முரளிதரன் அவர்களின் இந்தப் புதிர்களையும் பாருங்களேன்.


8. சீனுவாசன் பக்கங்கள் தளத்தில் திரு. கு. சீனுவாசன் அவர்கள் எந்த 
வருடமாயினும், அந்த வருடத்தின் எந்தத் தேதியாயினும், அதற்கான கிழமையைக் கண்டறிய  மிக எளிமையான வழி ஒன்றை சொல்கிறார் பாருங்கள்.

9. ஒரு பக்கம் தளத்தில் ஸ்ரீதர் நாராயணன் அவர்கள் ரீபஸ் புதிர் மற்றும் சொற்சித்திரப் புதிர்கள் வழங்கி இருக்கிறார். புதிர்களை விடுவிப்போம் வாருங்கள். 

10. தினேஷ் குமார்  அவர்கள் தனது முகிலனின் பிதற்றல்கள் தளத்தில் குறுக்கெழுத்து, சொல்கலை, ரீபஸ் புதிர்களை வழங்கியுள்ளார். 

நண்பர்களே, இன்றைய அறிமுகங்களின் பதிவுகளை  வாசித்து ஊக்கம் அளிப்போம்.



நல்லதொரு  வாய்ப்பினை   அளித்த  திரு. சீனா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கடந்த ஒருவார காலமாக, எனக்கு தங்களது மேலான ஆதரவை  அளித்த அன்பு  நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அறிமுகமான நண்பர்களுக்கு தகவலை உடனுக்குடன் தெரிவித்து பேருதவி புரிந்த திரு. திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள், 
திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், நண்பர் திரு. ரூபன் அவர்கள்  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


மேலும் வாசிக்க...

Saturday, May 10, 2014

மனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !



இசைக்கு மயங்காதோர்  எவரும் உண்டோ ? நமது வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை பெரும்பங்கு வகிக்கிறது.  இன்று நமக்கு  இசை  விருந்தளிக்கும் பதிவர்கள் சிலரை பார்ப்போம்.

 1. கிணற்றுத் தவளை தளத்தில், அசோகராஜ் ஆனந்தராஜ் என்ற பதிவர், பல திரைப்பாடல்களை,பாடல் வரிகள் மற்றும் அவற்றின் காணொளிகளுடன் பகிர்ந்து வருகிறார்.  தண்ணீரிலே மீன் அழுதால் என்ற இப்பாடலை காணொளியுடன் பகிர்ந்துள்ளார். பார்த்து இரசிப்போமே.

2. இனிய தமிழ்ப் பாடல்கள் தளத்தில், மோகனன் அவர்கள்,  கிராமியப் பாடல்கள், திரைப் பாடல்கள் என்று பல பாடல்களை அவற்றின் பாடல் வரிகளுடன் பகிர்ந்துள்ளார். ஒத்தையடிப் பாதையிலே என்ற விஜயலஷ்மி நவநீதகிருஷ்ணன் பாடலில் தான் கண்ட சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் பாருங்களேன்.


பரவை முனியம்மா அவர்களின் சில கிராமியப் பாடல்களை இங்கு பாருங்களேன்.

3. பதிவர் தம்பதியர் வெங்கட் நாகராஜ் - ஆதி வெங்கட் அவர்கள் தாங்கள் இரசித்த பாடல்கள் பலவற்றை ரசித்த பாடல் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் இந்த அற்புதமான பாடலை பார்த்தும் கேட்டும் இரசியுங்களேன்.

பஞ்சவர்ணக் கிளி படத்தில் வரும் இந்த அருமையான தாலாட்டுப் பாடலையும் பாருங்கள்.

4. தமிழ் பாடல் வரிகள் தளத்தில், பல தமிழ்  பாடல்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

சந்தோஷத்தைப் பற்றிய இந்த பாடலை கேட்டு  இரசித்து மகிழ்வோமே.

தாயின் அருமை சொல்லும் இந்த பாடலை, குறிப்பாக பாடலின் வரிகளை வாசித்து  மகிழ்வோமே !

5. தேன்கிண்ணம்  வலைப்பூவில், பல பாடல்கள் பாடல் வரிகள் மற்றும் காணொளிகளுடன்  தொகுக்கப்பட்டு வழங்கப் படுகின்றன.

நாட்டியமும் இசையும் போட்டி போடும் இந்த அற்புதப் பாடலுக்கு இணை ஏது ?

கருத்தாழம் மிக்க இந்த பாடலை கேட்டு இரசிப்போமே.

6. தமிழ் என்னும் தேனை இசை மூலம் பருக இச்சை கொள்ளும் பதிவர்கள் தமிழ், ஓஜஸ், பாணி, குழலினி , பாலு  இவர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் வலைப்பூ  தமிழ் இசை.  

மனம் கவர்ந்த கண்ணனை பற்றி காற்றில் வரும் இசையிடம் மங்கை ஒருத்தி கேட்பதாய் வரும் இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது.

தந்தைகளுக்கு மகள்கள் எந்நாளும் தேவதைகள் தாம் என்று சொல்லும் அழகான கவிதை வரிகள் கொண்ட அற்புத பாடல்.

7. செவிக்கினிய பாடல்கள் தளத்தில் அற்புதமான பாடல்கள், குறிப்பாக பல பழைய திரையிசைப் பாடல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார் திண்டுக்கல்லை சேர்ந்த திரு. ஞான வெட்டியான் அவர்கள்.

8. பாடும் நிலா பாலு தளத்தில் திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார் கோவை இரவி அவர்கள்.

9. திரு. எம்.ஜி. ராமசந்திரன் அவர்களது பாடல்களை தொகுத்து எம்.ஜி.ஆர். திரைப்பாடல்கள் தளத்தில் தொகுத்து வழங்கி வருகிறார்  பதிவர் பூங்குழலி அவர்கள்.

இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற கருத்தை வலியுறுத்தும் இப்பாடலை கேளுங்கள்.

10. இன்னிசை வேந்தர்கள் "சங்கர்-கணேஷ்" இசையில் தமிழ் திரைப்பாடல்கள் தொகுப்பு 
என்ற வலைப்பூவில் சகோதரர் திரு.நூஹூ  லெப்பை அவர்கள் இசை இரட்டையர்கள் என்றழைக்கப்படும் இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ் இவர்களது இசையில் உருவான பாடல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பாடல், பாடலைப் பாடியவர், பாடலை தரவிறக்க சுட்டி என்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.

என்ன நண்பர்களே இன்றைய அறிமுகங்கள் அனைவரையும் கண்டீர்களா ? மீண்டும் நாளை வேறு சில பதிவர்கள், அவர்தம் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்போம்.


மேலும் வாசிக்க...

Friday, May 9, 2014

கைவினையில் கலக்கும் பதிவர்கள்

நண்பர்கள் அனைவருக்கும்  இனிய  வணக்கங்கள் !!!





மனதிற்கு  மகிழ்வளிக்கும் 
நல்லதோர் வினை !
ஓய்வு  நேரமதில் 
செய்து பார்ப்போமே 
உற்சாகம் ஊட்டும் 
கைவினை !


நண்பர்களே, இன்று கைவினை பதிவுகளின் மூலம், கைவினைகள் செய்ய நமக்கு புதிய உத்திகளையும்,  பயனற்ற பொருளென்று நாம் எண்ணுபவற்றைக் கூட, பயனுள்ள கண்ணைக் கவரும் அலங்காரப் பொருளாக்குவது எப்படி என்று நமக்கு கற்றுத் தரும் பதிவர்களைக்  காணலாம்.


1. பதிவர் பிரியா ராம் அவர்கள் தனது ரசிக்க ருசிக்க தளத்தில், மணிகள் கொண்டு அழகான மாலையும் அதற்கு ஜோடியாக அழகான கம்மலும் செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறார் பாருங்கள்.

வண்ண வண்ண குந்தன் கற்கள் கொண்டு இவர் வடிவமைத்துள்ள அழகான ரங்கோலியை கண்டு இரசிக்கலாமே.

2.  இன்று முதல் தளத்தில் சகோதரி தர்ஷினி அவர்கள் பகிர்ந்துள்ள அழகான டைல்ஸ் ஓவியங்களை பார்ப்போமே.

கைவினைகள் செய்ய பயன்படுத்தும் களிமண்ணில் இவர் செய்துள்ள அழகான ரோஜாப் பூக்கள் உள்ளம் கவர்கின்றன.

3. சரண்யா அவர்களின் கைவண்ணத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில்   இருந்து உருவாக்கப் பட்ட அழகான மலர்களை பாருங்கள். படங்களுடனான எளிமையான செய்முறை விளக்கங்களையும் வழங்குகிறார்.

நிலக்கடலை ஓடுகள் / தோல் கொண்டு இவர் செய்துள்ள எழில்மிகு வண்ண  மலர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.

4. பொத்தான்கள் கொண்டு அழகான மரத்தினை உருவாக்கி இருக்கிறார் வேதாவின் வலை தளத்தில் எழுதி வரும் கோவைக்கவி  வேதா இலங்காதிலகம் அவர்கள்.

காகிதக் கூழ் கொண்டு செய்த கரடி உருவ முகமூடி அற்புதம். செய்முறை விளக்கமும் கொடுத்துள்ளார்.

5. க்வில்லிங்  முறையில் சகோதரி சங்கீதா செந்தில் அவர்கள் செய்துள்ள அற்புதமான வாழ்த்து அட்டை.

இவரது கைவண்ணத்தில்  உருவான  அழகான காதலர் தின வாழ்த்து அட்டை மனம் கவர்கிறது.

6.ஆச்சி ஆச்சி தளத்தில் திருமதி. பி.எஸ். ஸ்ரீதர் அவர்கள் காலுறையில் ( Socks )
ஆழகான கரடி பொம்மை செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறார் பாருங்கள்.

சேலைகளைக் கொண்டு இவரது கைவண்ணத்தில் உருவான  அழகான மிதியடியை காணுங்கள்.

7. எளிதாக செய்யக்கூடிய அல்லது வரையக்கூடிய  கடவுள் உருவம் யாதெனில், அது அனைவருக்கும் தெரியும் , அது பிள்ளையாரின் உருவம் தான். திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அருள் தரும் பிள்ளையாரை காண்போமே.

கண்ணைக் கவரும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் - இவரது கற்பனை மற்றும் கைவண்ணத்தில். ஆனால், இது குடிப்பதற்கு  அல்ல.

8. கலைச்சாரல் தளத்தில் சகோதரி மலிக்கா ஃபரூக் அவர்களது கைவண்ணத்தில் மண் பானையும் அழகாக மிளிர்வதை காண்போம் வாருங்கள்.

மணிகள் கொண்டு உருவான  அழகான  மாலை பளபளப்பாய் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது.

9. பயணிக்கும் பாதை தளத்தில் சகோதரி அஸ்மா அவர்கள் நட்சத்திர வடிவத்தில் கூடை பின்னுவது பற்றி அழகாக தெளிவான படங்களுடன் நான்கு பகுதிகளாக விளக்கி  இருக்கிறார் பாருங்கள்.

சாதாரணமாக காட்சி அளிக்கும் ஹேர்பின், இவரது கைவண்ணத்தால், எவ்வளவு அழகாக மாறி உள்ளது பாருங்களேன். தெளிவான படங்களுடன் விளக்கங்களும் அருமை.

10. தேன் மதுரத் தமிழ்  தளத்தில் சகோதரி கிரேஸ் அவர்களது கைவண்னத்திலும், அவரது பிள்ளையின் கைவண்ணத்திலும் வெள்ளை கைக்குட்டை எவ்வளவு வண்ணமயமாய் உருமாறி இருக்கிறது !

கிறிஸ்துமஸ் கைவினைகளும், அழகான கவிதை வரிகளும் அருமையிலும் அருமை.



 அறிவிப்பு 

திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களது தளத்தில் நடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டி 



அன்பின் திரு.வை. கோபாலகிருஷ்ணன்  ஐயா
அவர்களின் வலைத்தளத்தினில் 


ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று 
ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது. 

அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப 
போட்டியும் நடைபெற்று வருகிறது.

அனைவரும் இதில் கலந்துகொண்டு 
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

போட்டியின் பொதுவான விதிமுறைகளுக்கான இணைப்பு:



இந்த வாரப்போட்டிக்கான சிறுகதையின் தலைப்பு: 


“ சூ ழ் நி லை ”



  

  


ஆண்டு முழுவதும் பரிசுகள் !


அள்ளிச்செல்ல அன்புடன் செல்லுங்கள் !!

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

 நண்பர்களே ! இன்றைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். நாளை வேறு சில பதிவர்களுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

நன்றி !!!
மேலும் வாசிக்க...

Thursday, May 8, 2014

பயன்தரும் வீட்டுத் தோட்டம்

மண்ணை  முட்டி மோதி
தலையெடுக்கும் விதை
ஒவ்வொன்றுமே -
நம்பிக்கையின் சாட்சி !
துளிர்க்கும் ஒவ்வோர் இலையும்
மொட்டவிழ்த்து மணம் பரப்பும்
வண்ண மலர் ஒவ்வொன்றும்
கண்களுக்கு விருந்தாக்குமே 
எழில் கொஞ்சும்
இயற்கை காட்சி !


வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், நமது அன்றாட தேவைக்கான காய்கறிகள், கீரைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இன்று விவசாயத்திற்கு , பல வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களை பயன்படுத்துகிறோம். நாம்  அன்றாடம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு இரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்பது நமக்கே தெரியாது. இயற்கையான முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம் நம் அன்றாடத் தேவைக்கான காய்கறிகளை, இயற்கை முறையில், சத்து நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம்.

வீட்டுத் தோட்டம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, நமக்கும் தோட்டம் அமைக்க உதவி புரியும் வலைப்பூக்கள் சிலவற்றை இன்று  பார்க்கலாம்.


1. சகோதரி மகி அவர்கள் தனது தளத்தில் புதினா மற்றும் கத்தரிக்காய் அறுவடை பற்றி சொல்லி இருக்கிறார் பாருங்களேன்.

இவரது வெந்தயக் கீரை வளர்ப்பு பற்றிய பயனுள்ள பதிவையும் பாருங்களேன்.

2. பருப்புக் கீரை வளர்க்க நமக்கு நல்ல யோசனை சொல்கிறார் சகோதரி சித்ரா சுந்தர் அவர்கள்.

மீழ் சுழற்சி முறையில் கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி என்றும்  சொல்கிறார் பாருங்களேன்.

3. மணத்தக்காளி / சுக்கட்டி கீரை வளர்த்த மற்றும் அறுவடை செய்த அனுபவத்தை தோழி  இமா க்றிஸ்  சொல்கிறார். வாருங்களேன் கேட்போம்.

செடிகள் நம்முடன் பேசும். தெரியுமோ ?  தன்  வீட்டு ரோஜா செடிகளுடன் தனக்கு இருக்கும் பிணைப்பைப் பற்றி இங்கு சொல்கிறார்.

4. வீட்டில் தோட்டம் போட இடமில்லையா ? கவலையே வேண்டாம். மொட்டை மாடியில் கூட அழகான பயன் தரும் தோட்டம் அமைக்கலாம் என்று சொல்கிறார் சிவா அவர்கள்.

இவர் கோவைவாசி ஆதலால், கோவையில் விதைகள் மற்றும் உரங்கள் எங்கு வாங்கலாம் என்ற விபரத்தையும் நமக்கு வழங்குகிறார். பயன்படுத்திக் கொள்வோமே.

5. சகோதரர் இளங்கோ அவர்கள் அவரது வீட்டுத் தோட்டத்தில் விளைந்திருக்கும் அற்புதமான செவ்வாழை மற்றும் கற்பூரவள்ளி வாழைப்பழம் பற்றி சொல்லி இருக்கிறார்.

இவரது வீட்டில் வளர்ந்த சேனை மற்றும் பாகல் பற்றிய பதிவு, அழகான புகைப்படங்களுடன்.

6.  குப்பைவண்டி தளத்தில்   தொங்கும் தோட்டம் அமைக்கும் முறை  குறித்து விளக்கி  இருக்கிறார்கள், பாருங்களேன்.

மண் புழுக்களின் மகத்துவம் பற்றி நாம் அறிவோம். அவற்றை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க இயலாதவர்கள், மொட்டை மாடியில் கூட வைத்து வளர்க்கலாம் என்கிறார். மண் புழுக்களை வளர்த்து உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

7. நம்மவூர் குலசை தளத்தில் சகோதரர் முகமது சுல்தான் அவர்கள் காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?  என்று விளக்குகிறார்.

8. வீட்டுத் தோட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமானவை குறித்து தெரிந்ததும் அறிந்ததும் தளத்தில் சகோதரர் சின்னப்பயல் அவர்கள் விளக்குகிறார்.

9. நண்பன் தமிழ் வலைப்பூவில் தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பொதுவான 10 செடிகள்  பற்றி சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள். வளர்த்துப் பயன் பெறுவோம்.

10.  வீட்டில்  அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி துளசி.
என்று துளசியின்  பல்வேறு பயன்களையும், அவை குணமாக்கும் நோய்கள் பற்றியும் உமா அவர்கள் சொல்கிறார் பாருங்கள்.

11,  தோட்டத்திற்கு வரும் விருந்தினர்களை  திருமதி பக்கங்கள் தளத்தில் சகோதரி கோமதி அரசு  அவர்கள்  புகைப்படத்தினுள் பிடித்து நமக்கு காண்பிக்கிறார் பாருங்கள்.

12. உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, காய்கறி விதைகளை விதைக்கும் முறை, கொடிகளுக்கு பந்தல் போடும் முறை என்று பல விஷயங்களை இங்கு விளக்கிச் சொல்கிறார்  மனதோடு மட்டும் தளத்தில் எழுதி வரும் சகோதரி கௌசல்யா ராஜ் அவர்கள்.


இன்றைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.


மீண்டும்  நாளை,  வேறு  சில பதிவர்களுடன்  உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

நன்றி !!!
மேலும் வாசிக்க...

Wednesday, May 7, 2014

கோலங்கள் ! கோலங்கள் !!

 எழில் தனைக் கூட்டுமே
தீவினைகள் தமை விரட்டுமே
சிந்தையதை கூர் தீட்டுமே
வாசல் தனை அலங்கரிக்குமே
சிற்றுயிரின் பசியையும் தீர்க்குமே
அரிசி மாக் கோலமே !



வணக்கம் நண்பர்களே !



           இன்று  அழகான கோலங்களை நம் கண்களுக்கு விருந்தாக்கும் சில பதிவர்களை பார்க்கலாம் .

கோலம்  நமது பண்பாட்டுச் செறிவின் வெளிப்பாடு. அரிசி மாவால் இடும் கோலம் எறும்புக்கும்,பறவைக்கும் உணவாகிறது.அறிவு விசாலம், நாகரிக விருத்தி, சோம்பலின்மை, மறதியின்மை, சூட்சமபுத்தி, முயற்சி, ஊக்கமுடமை, மனச்சோர்வின்மை போன்ற மனம் தொடர்பான செயல்பாடுகள் கோலம் போடுவதில் அடங்கியுள்ளன. 
(கோலம் குறித்த இச்செய்திகள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டன.) 

கோலம்  பற்றி  நமது  வலைப்பதிவர்களின் பதிவுகள் சிலவற்றை நாம் இன்று காணலாம்.

1. சகோதரி சசிகலா அவர்களின் கோலங்களை இங்கு காணலாம். வண்ண மயமான, கண்ணைக் கவரும் ரங்கோலிக் கோலங்கள்.  


2. காகிதத்தில் கிறுக்கியவை தளத்தில் சகோதரி ரதிதேவி அவர்கள் கணினியில் வரைந்த கோலங்கள் பலவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அழகான ரங்கோலிக் கோலம் நம் கண்ணைக் கவர்கிறது.

3. என் தமிழ் பக்கம் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி ரேவதி சண்முகம் அவர்களது வண்ணமயில் கோலத்தினை ரசிக்கலாம் வாருங்கள்.

இவரது அழகான நெளிவுக் கோலங்களை இங்கு காணலாம்.

4. நல்லதோர் கருத்தினை வலியுறுத்தும் சகோதரி பவித்ரா நந்தகுமார் அவர்களது மாட்டுப் பொங்கல் கோலங்கள்.

 அழகான ஜல்லிக்கட்டு கோலம், இவரது ஓவியத் திறமைக்கு ஓர் சான்று.

5. ஊஞ்சல் தளத்தில் எழுதிவரும் சகோதரி ஞா. கலையரசி அவர்களது கைவண்ணத்தில்  அழகான கோலங்கள்.

இவரது கத்தரிகாய் கோலம்  அழகோ அழகு !

வண்ணப் பூக்களைக் கொட்டி வைத்தது போல மிளிரும் கோலங்கள் ... அருமை !

 இன்னும் சிலர் முகப் புத்தகத்தில்   கோலங்களுக்கென்று  தனி பக்கங்களை உருவாக்கி, தங்களது கோலங்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றுள் சிலவற்றையும் காணலாம்.

6. விருதுநகர் கோலம் என்ற பக்கத்தில் சகோதரி சாந்தி அவர்கள் வண்ணக் கோலங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார்.

7. ராணி மாருதன் அவர்கள் தனது ராணி'ஸ் ரங்கோலி 
முகப் புத்தக பக்கத்தில் தனது  வண்ணக் கோலங்களை பகிர்ந்துள்ளார்.

8. தமிழ் கலாச்சார கோலங்கள் தளத்தில் செல்வம் மற்றும் எழில் செல்வம் ஆகியோர் கோலங்கள் பகிர்ந்து வருகின்றனர். தீபாவளி நோன்பு கோலம் 
மற்றும் அரியாங்குப்பம் பச்சைவழி அம்மன் கோவிலில் எடுத்த கோலங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் பாருங்கள். 

9.  கோலங்கள் என்ற வலைப்பூவில் திருமதி. தேனம்மை  லஷ்மணன் அவர்கள் பல கோலங்களை பகிர்ந்திருக்கிறார். இவர் நம்மையும் " கோலமயில்களே ! கோலமிட வாருங்கள் ! "  என்று அன்புடன் அழைக்கிறார்.
பல பத்திரிகைகளிலும் இவரது கோலங்கள் வெளியாகின்றன.

இருதய கமல கோலம் போடுவதெப்படி என்று விளக்கியிருக்கிறார் பாருங்கள்.

வரலஷ்மி கோலம், விநாயகர் கோலம், கிருஷ்ணர் கோலம், கிராம தெய்வக் கோலங்கள், இராசிக் கோலங்கள், கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள் முருகன் கோலம் என்று பல வகையான கோலங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

10. முனைவர்  இரத்தின. புகழேந்தி அவர்கள் கோலம் போடும் முறை, சாணிப் பிள்ளையார், பரங்கிப்பூ, அரிசி மாக்கோலத்தின் மகத்துவம் என்று பல விஷயங்களை தனது பொங்கல் கோலம் பதிவில்  விளக்கியிருக்கிறார்.
 
என்ன நண்பர்களே, இன்றைய பதிவுகளை பார்த்தீர்களா ? பதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்போமே ! நாளை வேறோர் தலைப்பில் வேறு புதிய பதிவர்களை சந்திப்போம்.



நன்றி ! வணக்கம் !!
மேலும் வாசிக்க...

Tuesday, May 6, 2014

சுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்

கொஞ்சும்  மழலையர் தம் 
சொல்லும் செயலுமே
கொண்டு  வருமே 
மனதிற்கு அளவிலா
உற்சாகம் தனையே !


அன்பு நண்பர்களே, 

      வணக்கம் !



சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு  சிறு  நடவடிக்கையும், குறும்பையும் இரசிக்காத  பெற்றோர் உண்டோ ? குழந்தைகளின் குறும்புகள், அவர்தம் அறிவும், துடுக்குத் தனமும் நிறைந்த செயல்கள், அவர்களது திறன்களை பெற்றோர் பலரும் பகிர்ந்துள்ளனர். குழந்தைகளுக்கான நீதிக் கதைகள், சிறுவர் பாடல்கள்  பலவற்றையும் பதிவர்கள் பகிர்ந்துள்ளனர். அவற்றுள் சில வலைப்பூக்களையும், சின்னஞ்சிறு பிள்ளைகளின் கைவண்ணங்களையும் இன்று காணலாம்.

1. சிறு கிள்ளை தனது தந்தைக்கு எழுதிய  இரகசிய பிறந்தநாள் வாழ்த்து அட்டையை இங்கு பாருங்கள்.

சிறு குழந்தைகட்கு   சீட்டுக் கட்டின் உதவியுடன் கணிதம் கற்றுக் கொடுக்கும் உபாயத்தையும் நமக்கு விளக்குகிறார் பூந்தளிர் தளத்தில்  சகோதரி தியானா அவர்கள்.

2. நாற்றாங்கால் தளத்தில் சிறுவர்களுக்கான பாடல்கள் , நீதிக் கதைகள்தாலாட்டு பாடல்கள் , குழந்தைகளுக்கான போட்டித் தேர்வுகள் போன்ற பலவிதமான தகவல்களை தொகுத்து வழங்குகிரார் வலைப்பூவின் ஆசிரியர் விதூஷ்  அவர்கள். பார்த்து பயன் பெறுவோமே.

3. வெளிச்சக் கீற்றுகள் தளத்தில் சகோதரர். வெங்கட் நாகராஜ் அவர்கள், தனது மகள்  ரோஷ்ணி  வெங்கட் அவர்கள் வரைந்த கணினி ஓவியங்கள் மற்றும் வண்ண ஓவியங்களை பகிர்ந்துள்ளார்.

பாடப் புத்தகத்தில் உள்ள ஓர் காட்சியை எவ்வளவு அழகாய் கணினியில் வடித்துள்ளார் பாருங்களேன்.

4. தமிழ் அறிவுக் கதைகள் தளத்தில், சிறுவர்களுக்கான அறிவுக் கதைகள், திருக்குறள் கதைகள், தன்னம்பிக்கை கதைகள் போன்ற  சிறுவர்களுக்கான பல கதைகளை பகிர்ந்து வருகிறார் திரு. மாணிக்கம் நடேசன் அவர்கள்.

5. பாட்டி சொல்லும் கதைகள் வலைப்பூவில் திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள் தெனாலிராமன் கதைகள், நீதிக் கதைகள், பக்தி கதைகள், மகான்களின் கதைகள், திருக்குறள் கதைகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

6. அம்மாக்களின் பகிர்வுகள்  தளத்தில், சிறு குழந்தைகளின்  பெற்றோர்கள் சிலர் ஓர் குழுமமாக இணைந்து, தங்களது  அனுபவங்கள், குழந்தைகளின் உணவு பழக்க முறைகள், கல்வி முறைகள், ஆரோக்கியம் என பலதரப்பட்ட பயனுள்ள செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

7. பிள்ளைகள் அதிகநேரம் தொலைக்காட்சியின் முன் அமர்ந்துள்ளனரா ?  அப்படியானால் இந்தப் பதிவை அவசியம் படிக்கவும். பேரன்ட்ஸ் கிளப் வலைப்பூவில் பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவில் நண்பர் புதுகைத் தென்றல் அவர்கள் சொல்வதை பாருங்களேன்.

என்ன நண்பர்களே, இன்றைய பகிர்வுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தனவா ? 

மீண்டும் நாளை சந்திப்போம்.


நன்றி !!!!
மேலும் வாசிக்க...

Monday, May 5, 2014

சுய அறிமுகம்

அன்பு  நண்பர்களே,




                அனைவருக்கும் முதற்கண் எனது அன்பு வணக்கங்கள். எனது பெயர் பி. தமிழ் முகில். இன்று தொடங்கி, இன்னும் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க உள்ளேன். தங்களது மேலான அன்பினையும் ஆதரவையும் நாடுகிறேன்.

 சில நாட்களுக்கு முன்பு திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கேட்ட போது, சில காரணங்களால் இயலாமல் போனது.  முதன் முறையாக வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். நல்லதோர் வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் பிறந்தது  விருதுநகரில். வளர்ந்தது, கல்வி கற்றது எல்லாம் கோவையில். தற்சமயம் மணமாகி  வசிப்பது அமெரிக்காவில்.

நானும் எனது வலைப்பூ பலருக்கு அறிமுகம் ஆனதற்கு முக்கிய காரணம் வலைச்சரமும், என்னை அறிமுகப்படுத்திய அன்பு நண்பர்களுமே. இவ்விடத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

என்னை அறிமுகப் படுத்திய நண்பர்கள்

அருணா செல்வம்  தளத்தில் எழுதி வரும் சகோதரி அருணா செல்வம் அவர்கள் 
தேமதுரத் தமிழ் தளத்தில் எழுதும் சகோதரி கிரேஸ் பிரதிபா  அவர்கள்
இரவின் புன்னகை தளத்தில் எழுதும் சகோதரர் திரு. வெற்றிவேல் அவர்கள் 
மனசு தளத்தில் எழுதி வரும் சகோதரர் திரு. சே.குமார்  அவர்கள் 
சிட்டுக்குருவி தளத்தில் எழுதி வரும் திரு. விமலன் ஐயா அவர்கள் 
தென்றல்  தளத்தில் எழுதி வரும் சகோதரி சசிகலா அவர்கள் 
கிராமத்துக் கருவாச்சி  தளத்தில் எழுதி வரும் சகோதரி கலை அவர்கள் 

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நான் வைத்திருக்கும் வலைப்பூக்கள் நான்கு:

1. எனது கவிதைகளுக்கான வலைப்பூ  முகிலின் பக்கங்கள்
2. எனது கைவினைகள், கதைகள், நான் ரசித்தவை என்று பல விடயங்களை கொண்ட பல்சுவை வலைப்பூ 
3. சில கணிதப் புதிர்கள், துணுக்குகள் கொண்ட கணித வலைப்பூ
4.  நான் எடுத்த சில புகைப்படங்கள், இரசித்த காணொளிகளின் தொகுப்பாய் ஒரு வலைப்பூ.

எனது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் சில.



சில பொதுவான பதிவுகள்

 
 
 கணிதப் பதிவுகள்

சில கணித துணுக்குகள்

நாளை முதல், பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் காணலாம். அதுவரை, நண்பர்கள் அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொள்கிறேன்.

நன்றி  !!!!



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது