07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 31, 2008

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருக்கும்.........

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலமாக அருமை நண்பர் ஸ்ரீ ஏழு அருமையான பதிவுகள் இட்டு விடை பெற்றிருக்கிறார். பல புதிய வலைப்பூக்களை அறிமுகப் படுத்தி பல பதிவர்களை அடையாளம் காட்டி விடை பெற்றிருக்கிறார். காதல், கவிதை என கலக்கி விட்டுச் சென்றிருக்கிறார்.

அவருக்கு வலைச் சரம் சார்பினில் நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிக்கிறேன்.

அடுத்து செப்டம்பர் முதல் நாள் முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க அருமை நண்பர் முருகானந்தம் சுப்பிரமணியன் அன்புடன் இணக்கம் தெரிவித்திருக்கிறார்.

கைலாஷி என்ற சு.முருகானந்தம் சென்னையில் வசிப்பவர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து, சென்னையிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிபவர். நரசிம்மர், நடராசர், நவராத்ரி நாயகி, திருமயிலை, வைகுந்த ஏகாதசி, காரைக்காலம்மையார், திருப்பாவை, திருவெம்பாவை எனப் பல பூக்கள் மூலம் பக்தியைப் பரப்புகிறார். அனைத்துப் பூக்களும் படித்துப் பயன் தரத் தக்கன.

பல ஆன்மீக வலைப்பூக்களை வைத்திருக்கும் அன்பு நண்பர் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று அருமையான பதிவுகளை அள்ளித் தர நல்வாழ்த்துகள். அவரை வருக வருக என வரவேற்கிறோம்.

நன்றி

சீனா

மேலும் வாசிக்க...

விடைபெறுகிறேன்

பொறுத்தார் பூமி ஆள்வார். இது முதல் பதிவுல சொன்ன நான் பின்பற்றும் பொறுமை இல்லைங்க. நீங்க இந்த ஒரு வாரமா எனக்கு கொலைமிரட்டல் விடாமல் அமைதியா இருந்தீங்களே அது. உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி தெரிவிக்க கடமை பட்டிருக்கேன். ஏதாவது பெருசா எழுதலாம்னு நினைச்சேன் ஆனா கடைசி நாளும் ஏன் டார்ச்சர் பண்ணிக்கிட்டுன்ற நல்ல எண்ணத்துல உங்க எல்லாருக்கும் ஒரு நன்றி சொல்லிட்டு நான் கிளம்புறேன். கடந்த ஒரு வாரம் நான் ரொம்ப ரசித்தேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும் என நம்புகிறேன். வாய்ப்பு கொடுத்த நண்பர் சீனாவுக்கும் வலைச்சர குழுவுக்கும் நன்றி. ஸ்ரீ என்கிற ஒருவனை அடையாளம் காட்டினீர். மிக்க நன்றி. இது ஒரு அழகான வலைத்தளமாக திகழ்கின்றது இது இப்படி நீடிக்க வேண்டும் என வாழ்த்தி விடை பெற்றுக்கொள்கிறேன். போய் வருகிறேன் சகாக்களே.

நன்றிகள்,
‍-ஸ்ரீ.
மேலும் வாசிக்க...

Saturday, August 30, 2008

காதல் எனப்படுவது???

விளையாட்டாய் நான் ஆரம்பித்த தொடர் பதிவு இந்த "காதல் எனப்படுவது யாதெனில்". காதலை வரையறுக்க முடியாது. என் பார்வையில் காதலாய் இருப்பது அடுத்தவனுக்கு இருப்பதில்லை. எல்லோருடைய கருத்துகளை தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம் இருந்ததால் இதை விதிமுறைக்குட்படுத்த‌வில்லை. எழுதுபவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற போது நிறைய அழகான பதிவுகள் கிடைத்தன. இதுவரை எழுதப்பட்ட பதிவுகள் கீழே:

அருட்பெருங்கோ


இம்சை அரசி


ஜீவ்ஸ்


நிஜமா நல்லவன்


சென்ஷி


புதுகை தென்றல்


புதுகை அப்துல்லா


ஜோசப் பால்ராஜ்


திவ்யா


தமிழ்மாங்கனி


கார்த்திக் நாராயணன்


பிரேம்குமார்


நன்றிகள்
‍-ஸ்ரீ.
மேலும் வாசிக்க...

Monday, August 25, 2008

குல்மால் (அ) டக்கால்ட்டீ

நேத்து ரொம்ப காண்டு ஆகிட்டீங்களா? "இன்னைக்கே இம்புட்டு அல‌ம்பல் பண்ணிட்டு நாளைக்கு மனச கல்லாக்கிட்டு வர சொல்லிட்டான்"னு நினைச்சீங்களா? அது சும்மா லுல்லலாய்க்கு. நான் காதல் காதல்னு போட்ட மொக்கை போதும்னு நினைக்கிறேன். இன்னைக்காவது ஒரு முக்கியமான விஷயத்தை பாக்கலாமே. வேற ஒண்ணும் பெருசா இல்லைங்க வாழ்க்கை தான். நிறைய நிகழ்வுகள் வாழ்க்கையை பசுமையா வெச்சிக்க உதவும். அதை பதிவா போட்டுக்கிடே இருக்காங்க கொஞ்ச பேரு அவர்களுக்கு நடந்த சுவாரசியமான விஷயங்களை நகைச்சுவையா பதிவிட்டிருக்காங்க. இன்னைக்கு கொஞ்சம் ஜாலியா சிரிக்கலாமே!

*

அருட்பெருங்கோ கவிதை படிச்சிட்டு இருந்திருப்பீங்க அவர் நல்லவர்னு நம்பிக்கிட்டு இருக்குறவங்க கண்ணை திறக்குற பதிவுங்க இது. அவர் கல்லூரியில அட்டகாசம் பண்ணதெல்லாம் பாவமன்னிப்பு கேக்குறா மாதிரி நிறைய பதிவு இருக்கு அதுல ஒன்னு தான்

ஆத்தா நான் Physics ல பாசாகிட்டேன்!!!

*

கல்லூரி நாட்களில் எப்பவும் ஒரு மொக்கைச்சாமி எல்லாருக்கும் சிக்கிடுவான் அவனை வெச்சே 4 வருசம் ஓட்டிடுவோம் அதுலையும் அவன் கொஞ்சம் கேணையனா இருந்துட்டா கேக்கவெ வேணாம் நம்ம போதைக்கு அவன் தான் ஊறுகாய். இங்க இவருக்கு சிக்குன கோழி செஞ்ச கதை எல்லாம் கோழியின் அட்டகாசம் என்கிற தலைப்புல எழுதி இருக்காரு. படிச்சி நாள் முழுக்க சிரிச்சேன். ஏனோ இதை போன வருசத்தோட நிறுத்திட்டார். மீண்டும் துவங்குமாறு கேட்டிக்கொள்ளுங்கள்.

*

நவீன்பிரகாஷையும் கவிஞரா பாத்திருப்பீங்க அவரோட கல்லூரி கால பதிவை அகழ்வாராய்ச்சி பண்ணி கொண்டு வந்திருக்கேன் உங்களுக்காக. இவரு பீர் குடிக்கிற பூனைங்கோவ்...

*

நம்மாளுங்களுக்கு குசும்புக்கு ஒன்னும் கொறச்சலே இருக்காதுங்க. எல்லாம் வாயிலையே வடை சுட்டு, காத்துலயே வெண்னை எடுக்குற குல்மால் பார்ட்டிங்க. இங்க ஒரு குல்மால் பார்ட்டி இருக்காரு என்னதான் பண்றாருன்னு எட்டி பாருங்க.

*

காமெடியன்னு சொன்னா உடனே அபி அப்பா தான் நியாபகத்துக்கு வருவாரு. மற்றவரை புண்படுத்தாமல் தன்னை வைத்தே நகைச்சுவையாக எழுதுவது என்னை கவர்ந்த அவரின் குணம். இது வரை அவரிடம் தொடர்பில்லை அதனால் இந்த தலைப்பின் கீழ் அவர் பதிவை இணைத்ததை தயவு செய்து தவறாக எடுத்துக்கொள்ள வெண்டாம். அவரது பதிவில் நான் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு பதிவு "சங்கீதபூசனம் அபிஅப்பா". இந்த ரெண்டு வாரம் சீண்டாம இருந்தா ரொட்டிக்கு மேல வருமே அந்த பூசனமான்னு கேள்வி எல்லாம் இங்க கேக்காதீங்க அவரை போய் கேளுங்க.

*

கடைசியா நம்ம அக்கா இவங்க முன்னாடி பேமசா "அன்னைக்கு ஒரு நாளில்" அப்படின்னு அழைக்கப்பட்டார்கள். ஏன்னா நூடுல்ஸ் மாதிரி ஒரு நாள்ல பல விஷயங்களை பண்ணிடுவாங்க. ஒரு நாள் நான் (பாத்திங்களா எனக்கும் தொத்திக்கிச்சு :( ) அவங்க வலை பக்கம் போனா ஒரு நாள் ஜெயிலுக்கு போய்டோம்லன்னு ஒரு பதிவு போட்டிருந்தாங்க தூக்கி வாரி போட்டுச்சு. இதே மாத்ரி நிறைய ஒரே நாளில் பதிவுங்க இருக்கு போய் பாருங்க.

*

இது மாதிரி டக்கால்ட்டி பண்ணவங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க உங்களுக்கு பிடித்த டக்கால்ட்டி பதிவு இருந்தா பின்னூட்டமா போடுங்க. அதுக்காக என்னோட கல்லூரி கால கதைகளை சொல்லிடாதீங்கப்பு :) . நானும் டக்கால்ட்டி தான் ;)

இப்போதைக்கு எஸ் ஆய்க்கிறேன் அப்பாலீக்கா பாக்கலாம்.

நன்றீஸ் ஹை,
-ஸ்ரீ.
மேலும் வாசிக்க...

பக்கவாட்டில் எறிந்த கற்கள்

காதல் வரையறுக்க முடியாத ஒரு வார்த்தை. அது ஒரு விசித்திரமான நிலை. கண்ணீர் இனிக்கும். நம்பிக்கையில்லையா? அனுபவிப்ப‌வருக்கு புரியும். காதல் முறிந்த பிறகும் அதை அசை போட மனம் தவிக்கும். கல்லெறியப்படும் போது கனிகளோடு சில பிஞ்சுகளும் மரணமடைகின்றன. அது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் அவைகளின் மரணம் முன்னமே வந்ததை எண்ணி சந்தோஷப்படலாம். பிறிதொரு நாளில் கத்தியால் பிண ஆராய்வு நடந்தேறி மரணத்தை முத்தமிடாமல் கணப்பொழுதில் இறந்ததை எண்ணி மகிழலாம். ஆனால் காதலின் இறப்பை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. காதல் இறந்தால் அந்த வலி ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்கும் அப்பாற்பட்டு விளங்கத் துவங்கிவிடும். அப்படி ஒரு சில சோக பதிவுகளின் கோர்வை தான் இன்றைய தொகுப்பு. இது போன்ற‌ பதிவுகளை படிக்கும் நேரம் உடலில் ஒரு சிறு அலை உருவாகி உயிருக்கு மட்டும் வலி ஏற்படுத்தி மறையும் நிலை உணர்ந்திருக்கிறேன். எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கொண்டு அந்த வலியை அனுபவிப்பீர்களா?

*

சென்ஷி,

வெந்து தணிந்தது காடு அப்படிப்பட்ட ஒரு பதிவு. ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்துப்படித்தேன்.

*

இன்றைய தலைப்புக்கும் இதற்க்கும் சம்மந்தம் இருக்கிறதா எனப்பார்த்தால் "தெரியவில்லை" என்கிற பதில் தான் எப்போதும் என்னிடம் இருந்து வரும். அதை சிந்திப்பதாகவும் இல்லை நான். சில காதல்கள் பரிசல், சில காதல்கள் காகிதக் கப்பல், நிறைய காதல்கள் குளத்தில் பக்கவாட்டில் எறியப்படும் கல். நீரை ஏமாற்றி சிறிது தூரம் பயணித்தாலும் காலப்போக்கில் உள்ளமுங்கி தன் எடையளவு குளத்தின் உயரத்தை அறிவியல் விதிப்படி உயர்த்தும். குளமென்னவோ குளமாகவே தெரிந்தாலும் உள்ளே சென்ற கல் தன் இருப்பை அவ்வப்போது வெளிப்படுத்துவது குளத்துக்கு மட்டுமே தெரிந்த ஒரு விடயம். நெஞ்சத்தின் ஆழத்தில் நீச்சல் தெரியாமல் மூழ்கிப்போன பல நினைவுகள் வருடங்கள் கடந்து நீச்சல் பயின்று வெளியேறி ஆக்கிரமித்துக்கொள்ளும். அந்த நொடியை அனுபவிப்பது மட்டுமே அதை புரிந்துகொள்ள வழி. இது போன்று நீச்சல் பழகிய கல் ஒன்று தன் இருப்பை காட்டிக்கொள்ள மேல் எழும்பும் ஒரு சிறுகதை கோபிநாத் எழுதிய செல்வியின் டைரி.

*

வெட்டிப்பயல் எழுதிக்கொண்டிருக்கும் ஆடு புலி ஆட்டம் அழகா போய்கிட்டு இருக்கு. ஆனால் நான் சொல்ல வந்தது இந்த பதிவை இல்லை. நடுவில் அதன் தொடர்ச்சியை உடைத்து கொல்டி என்கிற சிறுகதை எழுதினார். அதன்னவோ இயல்பான கதையாக இருந்தாலும் அவர் சொல்லி இருந்த விதம் எனக்குப்பிடித்து இருந்தது. கதையின் போக்கில் அதன் முடிவை ஊகித்து விட்டேன் என்றாலும் கதையை முழுதாய் படிக்க செய்தது அவரது நடை. கடைசியில் சின்னதாய் ஒரு ஏமாற்றம். அறுத்துக்கொண்டவனுக்கு விரலென்ன தலையென்ன இரண்டுமே வலி தான். காதலில் காயங்களும் அப்படியே.

*

கதை என்று சொன்னால் நினைவுக்கு வரும் திவ்யாவின் கதைகளை குறிப்பிடவில்லை. காரணம் நான் சொன்ன‌ இவைகள் வேறு விதமான கதைகள். கொஞ்சம் சோகத்தை உள்ளடக்கியவை. எனக்குப்பிடித்த பாட்டு வரி ஒன்று உண்டு. "காசு மாலை தானே கலையின் சன்மானம்" என ஒரு கேள்விக்கு "கண்ணீர் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்" என அழகாய் பதில் வரும். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மேலே சொன்ன கதைகள் போல படிப்பவர்களை கொஞ்சம் அசெளகர்யப்படுத்தினால் அந்த பதிவு அட்டகாசமான பதிவென்பதில் சந்தேகமில்லை. அசெளகரியம் என்பது நான் சொல்வதன் அர்த்தம் இணைத்துயர்மை (ஆங்கிலத்தில் "Empathy") என்கிற பொருளில் கொள்ளவும்.

இதுக்கே பீலிங் ஆனா எப்படி? நாளைக்கு மனசை கொஞ்சம் கல்லாக்கிக்கிட்டு வாங்க. :)

நன்றிகள் ‍
-ஸ்ரீ.
மேலும் வாசிக்க...

கவிதைன்னா சும்மாவா?

கவிதைகள் என்பது போதை என்னைப் பொறுத்தவரை. சில கவிதைகளை உங்களுக்காக சேகரித்துள்ளேன். வாசிக்க நிறைய கவிதைகள் இருப்பதால் நான் ஏதும் அறிமுகமோ கருத்தோ கொடுக்கவில்லை.

*

ப்ரேம் குமார் நிறைய கவிதைகள் எழுதி இருந்தாலும் சின்ன சோகம் புகுத்தி எழுதிய பதிவு உரக்க சொன்னதில்லை நீ. எனக்குப்பிடித்த கவிதை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என்கிற நம்பிக்கையில் உங்கள் முன்னே.

*

இவரை காமெடியன்னு ஒரு புரளி கிளப்பி விட்டிருக்காங்க பிளாக்வுட்ல ஆனா "இவரு கல்லெடுத்து அடிச்சா ஒடயிற மிரரு இல்லைங்க‌ டெரரு...... டெரரு...... டெரரு". யார சொல்றேன்னு தெரியுதா? சமீபகாலமா உள்ளுக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த பின்நவனீத்துவ கவிஞர பெளடரெல்லாம் அடிச்சி, திருஷ்டி பொட்டு வெச்சி, வெளில‌ இப்போ நடமாட விட்டிருக்காருங்க ஓரெழுத்து பதிவர்.இவருக்கு அமெரிக்காவுல இப்போ "வாழும் வள்ளுவரே வளரும் பாரதியாரே" அப்டின்னு போஸ்டர் அடிச்சு, சிக்னலுக்கு சிக்னல் பிட் நோட்டீசும் குடுக்குறதா கேள்வி.அந்த ஓரெழுத்து பதிவர் நான் இல்லைன்னா வேற யாரு இவரு தான். அவரின் யாதுமாகி என்னுள்... கவிதை என‌க்கு பிடிச்ச ஒரு பதிவு.

கசக்கி எறியப்பட்ட
காகிதங்களுக்கு நடுவே
கண்ணீர் விட்டபடி
உன்னை அலங்கரிக்க முடியா சாபத்தில்
நிராகரிக்கப்பட்ட வரிகள்...

இப்படி செதுக்கி இருந்தார் வார்த்தைகளை.

*

குட்டி செல்வன் என்பவர் மீது வெகுநாட்களாக ஒரு சின்ன பொறாமையும் ஆச்சர்யமும் க்லந்த ஒரு விதமான உணர்வுண்டு எனக்கு. அழகான தளம் வைத்திருக்கிறார். கண்ணை பறிகாத வண்ணங்கள் படிக்கத்தூண்டும். பெரிய கவிதைகள் எனக்கு அவ்வளவாக எழுத வராது. இவர் நேர்த்தியாக இப்படிப்பட்ட பதிவுகளை இடுவார். எனக்கு அவர் இடும் அனைத்து பதிவுகளும் பிடிக்கும் ஆனால் உங்களுக்காக ஒரு பதிவு.

இனி நீ ம‌ட்டும் நானில்லை!

*

சதீஷ் நல்ல கவிதை எழுதுவார். மாதம் ஒரு பதிவு வெளியிட்டாலும் அது அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்டவரிடமிருந்து ஒரு கனமான கவிதை தொலைத்த மெளனங்கள்.

*

சிதறிக் கிடந்த சொற்களை சேர்த்ததில்...! என்று ஆரம்பித்து நல்லதொரு தொகுப்பை வாசித்தேன் தமிழனின் வலையில்.

*

சரவணக்குமாரின் ஒரு நேசம் முடிவுற்றது... என்ற பதிவு கொஞ்சம் சோகம் தந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு பதிவு.

*

நாடோடி இலக்கியனின் காதல் சொன்ன கணங்கள் கண் முன்னே காதலை நிறுத்தும் ஒரு பதிவு.

*


இது ஒரு மாதிரி போனாலும் பெண்கள் எழுதும் கவிதைகள் அழகே தனி தான் அதனால் எந்த கவிதைகளை சொல்வது என தெரியாமல் குழம்பி அவர்கள் எழுதிய எல்லாக்கவிதைகளையும் சுட்டியுள்ளேன்.

Sri

நாணல்

எழில்பாரதி

திவ்யா

தமிழ் மாங்கனி

*

ரொம்ப பெரிய பதிவா போயிடுச்சு கவிதைகள்ன்னு வந்த உடனே எதை விடுவது எனதெரியாமல் எல்லா கவிதைகளையும் முன்னே வைத்துவிட்டேன். நேரம் கிடைக்கும் போது பொறுமையாக படியுங்கள்.

நாளை சந்திப்போம்...

நன்றிகள்
-ஸ்ரீ.
மேலும் வாசிக்க...

சில பூக்கள்

பொதுவாக மற்றவர் நம்மை பார்க்கின்றார்கள் எனத் தெரிந்தால் நாம் நாமாக இருப்பதில்லை. உதாரணமும் சொல்லத் தேவையில்லை நீங்களே அதை உணர்ந்திருப்பீர். உலகின் எந்த மூலையில் உள்ள‌ குழந்தையின் முகம் அழகாகத் தெரிவதன் காரணம் அது தான். அதற்கு அடுத்தவர் பார்க்கின்றார்கள் என்கிற அச்சமில்லை, பொய்யாக நடிக்க வேண்டிய நிர்பந்தமுமில்லை. முதன்முதலாக‌ குழந்தை தான் கிறுக்கிய சில கோடுகளை ஓவியமெனச்சொல்லி தலைக்கு மேல் தூக்கிக் காட்டுவதன் அழகு எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்? அப்படி காட்டியும் பாராட்டப்படாததால் அழகான ஓவியங்கள் மக்கிப்போகும் கடைசி கணம் வரை வெறும் கோடுகளாகவே பார்க்கப்படுகின்றன. அந்த ஓவியன் கண்கள் கூட அதே கோணத்தில் தான் அவைகளைப் பார்க்கின்றன. மற்றவரை பற்றி எனக்குத் தெரியவில்லை. நான் எழுதத் துவங்கிய போது எடுத்துக்கொண்ட சுதந்திரம் எனக்கிப்போதில்லை என உணர்கின்றேன். அது எனக்கு நானே போட்டுக்கொண்ட விலங்கு. தன் சுயத்தை இழக்காமல் அழகாக எழுதும் சிலரின் வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன். இதில் சில தமிழ்மணத்தில் சேராத வலைப்பூக்கள்.



*



தமிழ் ராஜா,



வெற்றிடம் எனத்தன் வலைப்பூவை இவர் சொன்னாலும் அதில் எந்த வித அசெளகரியமில்லாமல் பொழுதை கழிக்கலாம்.



*



பூபேஷ்,



இவரின் வலைப்பூ ஒரு கருப்பு வானவில் என்பேன். அதன் வர்ணங்கள் இவர் எடுத்துக்கையாளும் கருத்தில் இருக்கின்றன. ஒரு பரந்த சிந்தனைக்குச் சொந்தக்காரர் பூபேஷ்.



*

உதய்,



பல தரப்பட்ட விஷயங்கள் கொண்டு எழுதும் ஒரு நல்ல கவிஞர். தன்னை அவ்வளவாக வெளிக்காட்டிக்கொள்ளாத ஒரு தன்னடக்கவாதி என்பேன்.மழைச்சிறகுகள் பொறுத்திக்கொண்டு பறந்து கொண்டிருக்கும் ஒரு சக்கரவாகப்பறவை. ஜோடி போட்டுக்கொண்டு சிறிது தூரம் பறந்து பாருங்கள்.



*



காவியன்,



கசங்கிய காகிதங்கள் என்கிற தலைப்பில் வலைப்பூ எழுதி வருகிறார்.



"ஒரு பெளர்ணமி நிலவுக்குள்
32 நட்சத்திரங்கள் நீ சிரிக்கும்போது."



இது போன்று சின்ன சின்ன வரிகள் கொண்டு கவிதைகள் பல எழுதியுள்ளார்.



*



விஷ்ணு,



நிஜமாகும் நிழல்கள் என்னைப்பொறுத்தவரை நிழலும் நிஜம் தான். தொட்டு உணர முடியாததால் அதை பொய் எனக்கூறுவதில் உடன்பாடில்லை. வெளிட்சத்தை யுத்தமிட்டு ஜெயித்த ஒரு பொருளுக்கு கிடைத்த பரிசு தான் நிழல் என்பேன். என்னைப் போலவே சித்தாந்தம் கொண்டவர் தான் போல‌ விஷ்ணுவும்.



*



வழக்கமாக ஒரு சில பதிவுகளை குறிப்பிட்டு பதிவிடுவார்கள். ஆனால் இதில் வலைப்பு முகவரி மட்டுமே தந்துள்ளேன். பதிவுகளின் எண்ணிக்கை குறைவே. சாவகாசமாக அலசிப் படியுங்கள். பிடித்திருந்தால் தட்டிக்கொடுங்கள். யாருக்குத் தெரியும் உங்களின் பின்னூட்டத்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவர்கள் எழுத ஆரம்பிக்கலாம்.



மேலே சொன்ன பலரை எனக்குத் தெரியாது. நான் அவர்களை பற்றி சொன்ன தகவல்களில் அவர்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் என்னை மன்னிப்பாராக.



நன்றிகள்,
-ஸ்ரீ.
மேலும் வாசிக்க...

ஸ்ரீயாகிய நான்

வணக்கம் நண்பர்களே,
இந்த வாரம் வலைச்சரத்தின் பொறுப்பை எனக்குத் தந்த நண்பர் சீனாவுக்கு நன்றிகள். எல்லோருக்கும் எனது அன்பு கல‌ந்த வணக்கம். அன்பர் சீனா அறிமுகப்படுத்தியது சற்று மிகைப்படுத்திவிட்டாரோ எனத் தோன்றுகிற‌து.

நான் ஸ்ரீ. உங்களில் ஒருவனாக "ஒற்றை அன்றில்" என்கிற தளத்தை இயக்கி வருகிறேன். நல்ல ரசனை என சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு ரசனை உள்ள ஒரு சராசரி நான். ரொம்ப பொறுமை (இது சோம்போறித்தனத்துக்கு நானிட்டுக்கொண்ட மற்றொரு பெயர்). ஒரு வேளை இந்த குணம் தான் நான் அதிகம் கவிதைகளை வாசிக்க வைத்துவிட்டது என நினைக்கிறேன். பெரிய பதிவுகள் என்றால் கொஞ்சம் தயங்கித்தயங்கி வாசிப்பேன். எவ்வளவு சுவாரசியமாய் இருப்பினும் பதிவுகள் பெரிதாய் இருந்தால் படிப்பார்களா என்கிற‌ கேள்வி என் ஆழ்மனதில் அடிக்கடி துளிர்ப்பதால் என் அனைத்துப் பதிவுகளையும் ரொம்ப சுருக்கமாக எழுதும் பழக்கமுள்ளவன். சில நேரங்களில் பிய்த்து எறிய‌ப்படும் உணவை கல் என நினைத்து சிற‌கடித்துப் பறக்கும் காக்கை போல நிறைய அழகான பதிவுகளை அதன் நீளம் காரணமாக என்னையறியாமல் தவறவிட்டும் இருக்கிறேன்.

என் தளத்தில் நீங்கள் பார்க்கும் வாக்கியம் "காதலன்றி வேறொன்றும் யாமறியேன் பராபரமே!". அதுவே என்னை முழுதாய்ச் சொல்லும். காதல் கவிதைகள் மேல் ஒரு விதமான ஈர்ப்பு. அவை நான்கு எல்லது ஐந்து வரிக்குட்பட்டு இருந்து அதற்குள்ளே கொஞ்சம் சோகத்தை புகுத்தி இருந்தால் மெய்சிலிர்த்துவிடும். அப்படி சின்னச் சின்ன காதல் கவிதைகளை வெகுவாக ரசிப்பவன்.

நான் வ‌லைப்பூ துவங்கியது என்னவோ ஒரு விபத்து போல் நடந்தேறிய ஒன்று தான். மெல்ல மெல்ல என் தரத்தை ஒவ்வொரு பதிவில் உயர்த்திக்கொள்வது போலான ஒருவித பிரம்மையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக 80 பதிவுகள் பதித்து விட்டேன். எழுதுவது எனது தேனீர்க் கோப்பை இல்லை என்பது எனக்குத் தெரியாமலில்லை. அதைப் பழக்கமாக்கிக்கொள்ள முயற்சித்ததும் இல்லை. இருப்பினும் தளம் துவங்கியத்ற்காக வாரம் ஒரு பதிவு வெளியிட வேண்டும் எனும் நோக்கத்தில் கடந்த 6 மாதங்களாக புதன்கிழமைகள் தோறும் பதிவெழுதுகிறேன். எனக்குப் பிடித்த சில பதிவுகளை பகிர்ந்துகொள்ள இன்று கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்தேன். சில பதிவுகள் படித்து சிரிக்கவும் செய்தேன். எனது சில பதிவுகள் கீழே....


பேசாமல் எழுதுவதை நிறுத்தி விடுமோம் என நினைத்து 2 மாதகாலம் நிறுத்தினேன். பின்பொரு நாள் திருக்குறளில் காமத்துப்பாலை விடுத்து மற்ற இரு பாலோடு காதலை சேர்த்து ஒரு குளம்பி (காஃபி) போட்டால் என்ன என்கிற அபத்தமான நினைப்போடு எழுதிய பதிவு "காதல் பால்". இந்த வருடத்தின் முதல் தேதி மீண்டும் எழுத ஆரம்பித்தேன் சிறு இடைவேளைக்கு பின்.

என்னுடைய தளத்தில் எனக்குப்பிடித்த சில கவிதை தொகுப்புகள்

காதல் தினம்,
தூங்காத இதயம் ரெண்டு,
தாவணிக் கவிதைகள்.

மேல் சொன்னது போல சாதாரண தமிழில் எழுதுவது சலித்து போக‌ சில புது வார்த்தைகள் தேடி
பதிவிட்டது தான் அழகான அகராதி,

கிராமிய நடையில் முயற்சித்தவை
நாக்கறுந்த மணி,
நேத்து பெஞ்ச மழை.

கோவத்தில் எழுதும் சில பதிவுகளை "கொலைவெறி" என்பேன். அதில்
சொல்லாத வாழ்த்து,
கன்னத்துப்பூச்சி இவையும் அடக்கம்.

இது போன்று
நல்லதோர் காதல் செய்தே!,
காதல் காலம், கதையும்,
ஒரு சின்ன பாடல் முயற்சியும் செய்ததுண்டு.

பெரிய பதிவுகள் எழுத மாட்டேன் என சொல்லியும் இவ்வளவு பெரிதாய் பதிவெழுதியதுக்கு மன்னிக்கவும். வரும் நாட்களில் நான் ரசித்த சில அருமையான கவிதைகளோடு வருகிறேன்.

நன்றிகள்.
-‍ஸ்ரீ.
மேலும் வாசிக்க...

Sunday, August 24, 2008

நன்றியும் - வரவேற்பும்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் என் சுரேஷ் அவர்கள் 16 பதிவுகள் இட்டு - பல நல்ல உள்ளங்களை அறிமுகப் படுத்தி, அவர்களது பதிவுகளையும் சுட்டிக் காட்டி, வித்தியாசமான முறையில் ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு வலைச்சரம் சார்பில் நல்வாழ்த்துகள் கூறி நன்றியுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து 25ம் நாள் தொடங்கும் இவ்வாரத்தினிற்கு ஆசிரியர் பொறுப்பேற்க அருமை நண்பர் ஸ்ரீ அவர்கள் இசைந்துள்ளார்கள்.

காதல் கிறுக்கனாக சின்ன சின்ன காதலை கவிதையாக்கி தந்துவரும் ஒற்றை அன்றில் இவர்.பொட்டி தட்டும் பணியில் பெங்களூருவில் இருந்து மாற்றலாகி தமிழ் சென்னை வந்திறங்கி இருக்கும் இவரின் கவிதைகள் ஒவ்வொன்றும் காதல் ரசம் சொட்டுகிறது. இவரின் தாவணிக்கவிதைகளும், முத்தக்கவிதைகளூம் பல தேவதைகளை கிறங்க வைக்கும் .வலைத்தளமெங்கும் இதயங்களை சிதறவிட்டிருக்கும் ஸ்ரீ யின் இதயங்கவர்ந்த பதிவுகளை இவ்வாரம் காணலாம்..


அவரை வலைச்சரத்தின் சார்பில் வருக வருக என வரவேற்று - அவரது மனங்கவர்ந்த பதிவர்களைப் பற்றி அறிமுகம் செய்க என கேட்டுக் கொள்கிறேன்.

சீனா
----------------------------------------------------------------
மேலும் வாசிக்க...

நன்றிகள் சமர்ப்பிக்கிறேன்...!!!

அன்பினிய உள்ளங்களே,

வலைச்சரத்தில் எனக்கு ஒருவார காலம் ஆசிரியர் பதவி தந்து என்னை பெருமையடையச் செய்த சீனா ஐயாவிற்கு எனது முதல் நன்றியை சந்தோஷமுடன் சமர்ப்பிக்கிறேன்.

15- அல்லது 16 பதிவுகள் தான் இட்டிருந்தேன் என்றாலும் அதற்குள் பலசுட்டிகள் இருந்தன. ஆக எனது மனதின் நிறைவின் தாகத்த்தை தீர்த்துக்கொண்ட சுகம் என்னை சமாதானப் படுத்துகிறது

எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு எனக்கு ஊக்கம் தந்த எல்லா பதிவர்களுக்கும் எனது அன்பான நன்றி மலர்களை சமர்ப்பித்து மகிழ்கிறேன். நீங்கள் மட்டும் பின்னூட்டமிடாமல் இருந்திருந்தால்......!!! அதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!! - நன்றி, நன்றி, நன்றி !!!!

அழகி டாட் காம் நிறுவனர் திரு. பா விஸ்வநாதன் அவர்களைப் பற்றி எழுதித்தான் ஆகவேண்டும் என்று எனக்கு அன்புக்கட்டளை இட்ட நண்பர்களுக்கு நன்றி.

அருணா எனது தோழி தான் என்றாலும், அவர்களைப் பற்றி எழுத நான் தொலைபேசியில் அழைத்து, இருபதற்கும் மேலான அவசரக்கேள்விகள் கேட்டேன். வேலை பாரம் இருவருக்கும். நான் சென்னையில், அவர் ராஜஸ்தானில் - இருப்பினும் எல்லா கேள்விகளுக்கும் பதில் தந்தார்கள். சொந்த தோழியின் விவரங்கள் அறிந்துகொள்ள இந்த வலைச்சரம் உதிவிறறே! நன்றி வலைச்சரமே!!

ராமலகஷ்மி அவர்களைப் பற்றி எழுதின "முத்துச்சரம்" என்ற பதிவிற்கு அனேகமான பின்னுட்டங்கள் வந்துள்ளது. இவர்களைப் பற்றி எழுத என் மனதில் தோன்ற வைத்த இறைவனுக்கு என் சிறப்பான நன்றி பல..! என்னை பாராட்டி நன்றி தெரிவித்த எல்லோருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி பல!

கவிஞர் சக்தி சக்திதாசனைப் பற்றி எழுத முதல்நாள் முதல் யோசித்தேன். ஆனால் அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இன்றிரவு தான் அவரோடு பேச முடிந்தது. பேசியதும் ஒரு பதிவினை இட்டேன். அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் காய்ச்சலின்றி மகிழ்ச்சியில் இப்போது, எப்போதும்போல்!!!

இந்த ஒரு வாரத்தில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. பல புதிய வலைப்பூக்கள் என் மனதின் நண்பர்களாகின. சந்தோஷமாக இருக்கு!!!

இருப்பினும் பிரியும் வேளை, என் மனதில் கவலை இல்லாமல் இலலை! இன்னமும் பலரை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்ற பாரமும் என்னை வாட்டுகிறது. என்ன செய்வது? காலம் அதன் ஓட்டத்தை அதன் சுயவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. 18 ஆம் தேதி நேற்று ஆரம்பித்ததுபோல் எனக்குத் தோன்றுகிறது. எனது சில பதிவுகளுக்குள் ஒருவாரம் சட்டென்று முடிவடைகிறது. அதிசயமானது காலம்!!!!

இரண்டாம் சுற்றில் ஆசிரியராக வர வாய்ப்பு வரும்; அப்போது நிச்சயம் முதலில் நானே வருகிறேன் என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.

இனி- எங்கு, எப்படி, சந்திப்போம் - என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்பதே உண்மை என்றாலும், "இறைவா எங்களை அவ்வப்போது இந்த இணையம் வழி சந்திக்க ஆசீர்வதியும்" என்ற பிரார்த்தனையோடு விடைபெறுகிறேன்.

இறைவனின் அன்பும் சமாதானமும் உங்கள் எல்லோருக்கும் இன்றும் என்றும் இருக்க என் இனிய பிரார்த்தனைகள்.

பாசமுடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

கவிஞர் சக்தி சக்திதாசன் அவர்கள்...


இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஈழத்தில் பிறந்த இவர் இந்தியாவில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் தனது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டவர்.
இவர்களின் ஒரே மகன் மருத்துவராக லண்டனில் சேவை செய்து வருகிறார்.
தமிழில் வெளியாகும் பல இணைய இதழ்களில் கவிஞர் சக்தி சக்திதாசன் அவர்களுடைய கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் எதிர்கால சந்ததியினரிடம் தமிழார்வத்தை வளர்க்க இணையத்தின் பங்கு மிக முக்கியமாகி வருகிறது என்று கூறும் இவர் தன் கை விரல்களுக்கு வலுவிருக்கும் வரை இணைய தளங்களுக்குத் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பேன் இதுதான் என் லட்சியம் என்கிறார்.

இதுவரை வெளிவந்த இவரது நூல்கள்:
தமிழ்ப்பூங்காவில் வண்ணமலர்கள் ( பல்சுவைத் தொகுப்பு),
உறவெனும் விலங்கு ( சிறுகதைத் தொகுப்பு ),
"தமிழே நதியாய் ! கவிதை வழியாய்!" (கவிதைத் தொகுப்பு )
கண்ணதாசன் ஒரு காவியம்


பதிப்பாளர், திரு ரவி தமிழ்வாணன் அவர்கள் இவரைப் பற்றி இப்படி கூறுகிறார்.

"மிதமிஞ்சிய தமிழ்ப்பற்று; அனைவருடனும் அன்போடு பழகும் உயரிய குணம்; அடுத்தவர்களைப் பற்றி குறை சொல்லாத பண்பு; தன்னை வருத்திக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவும் உள்ளம்; செல்வப் பின்னணி இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத எளிமை; கணினியில் பேராற்றல்; அன்பான மனைவியுடனும், அருமையான மகன் டாக்டர் கார்த்திக்குடனும் எடுத்துக்காட்டான இனிய இல்லறம்; சொல்லுக்கும் செயலுக்கும் நேரிடியான தொடர்பு இருக்கும்படியான பாசாங்கு இல்லாத நேர்மை; பெரிய நட்பு வட்டம். இந்த அற்புதமான மனிதரைப் பற்றி என்னால் விரிவான கட்டுரையே எழுத முடியும்".

"தமிழே நதியாய்! கவிதை வழியாய்" என்ற, கவிஞர் சக்தி அவரகளின் கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்யும் அளவிற்கு என் சுரேஷ் என்ற நான் வளரவில்லை என்ற அறிவு எனக்குத் தந்த இறைவனைப் போற்றுகிறேன்.
அதனால் இந்த கவிதைத் தொகுப்பை வாசிக்கும்போது நான் ரசித்த சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், நண்பர்களே!

இப்படி ஒரு நல்ல திறமையான கவிஞரை வலைச்சரம் வழியாக பலருக்கு அறிமுகப்படுத்தும் பாக்கியத்தை எனக்கு கிடைத்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்.

இவர் கவிதை எழுத வேண்டுமென்று ஒரு பச்சை நிழலில், சௌகரியமாக எல்லா வசதிக்ளோடும் உட்கார்ந்து கொண்டு இந்த கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒன்று கூட எழுதவில்லை. இயந்திர வாழ்க்கையின் இடையே அவ்வப்போது கிடைக்கின்ற கொஞ்சம் நேரத்தில் தனது மனதிலுள்ள பல்வேறு விஷயங்களைப் பற்றின தனது சிந்தனைகளை பதிவு செய்துள்ளார்.
வாருங்கள், நாம் இந்த கவிதைச் சோலைக்குள் செல்வோம்!

கவிஞர் சக்தி சக்திதாசன் அவரகளின் “தமிழே நதியாய் கவிதை வழியாய்” என்ற இந்த கவிதைத்தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள்.

என்னிதயத்தின் ஞான குருவாக வீற்றிருந்து
கவிதையெனும் விளக்கை அணையாமல் காத்திருக்கும்
அன்புக் கவியரசர் அமரர் கண்ணதாசன் அவர்களின்
பாதங்களின் இந்நூல் சமர்ப்பணம்..
என்று இவர் கவியரசரின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்துகையில் என் முன்னே கவியரசரின் புன்னகை வந்து போனது!.

திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் இந்த கவிதைத் தொகுப்பிற்கு நல்லதொரு அணிந்துரை வழங்கி வாழ்த்தியுள்ளார்.

அன்பின் திருவருவே! அடைக்கலம் தந்தவனே
அவனியின் அடித்தளமே அண்ணாமலையானே
இன்று நாம் சமர்ப்பிக்கும் கவிதைத் தொகுப்பிது
இதயங்களைச் சென்றடைய இறைவன் நீயருள்வாயே
!

என்ற முதல் கவிதையின் வரிகளை வாசிக்க, இறைவனின் அருள் இவருக்கு நிச்சயம் என்று உறுதிபடுத்துகிறது, அழகிய இவரது தமிழ்ச்சொற்கள்!

அடுத்து வரும் கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு புதிய கருத்துக்களையும் அழகாக வாசகர்களுக்குத் தருகிறார்.

நட்பு பற்றி சொல்கையில்
எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
எரியும் விளக்கில் எண்ணையாக
மெழுகுதிரியின் மெழுகாக
தன்னை உருக்கி தானே வளர்க்கும்
அன்புப் பூ
அது தானே நட்பு... என்கிறார்.

பாரதியிடம்

பாரதி, "மறக்கவில்லை மூத்த தமிழ் மைந்தனே.. "மறந்தால் தானே நினைப்பதற்கு" என்று சொல்லும் கவிதையின் முடிவில்..

பாரதி என்ற எங்கள் உயிர்மூச்சு
பார் அதிரப் பாடிய செந்தமிழ்ப்புலவன்
பாராண்ட தமிழன் மூத்த மைந்தன்
பணிந்தேன் உன்னை நினைவுநாளில் ..
என்று பாடி, அஞ்சலி செலுத்துகிறார்.

ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காட்டு
மந்தைக் கூட்டம் மனிதரில் சிலர்
மடைத்தனம் என்றே சிரிப்பர்
மாண்புமிகு வார்த்தைகளின்
மாபெரும் கருத்தறியாதொரு
மந்தை ஆடுகள் தாமிவரென்பேன்

அன்புக்கு வளைந்து கொடு
அருள்மிகு தேவமைந்தன்
ஆற்றிய அறிவுரைகள்
அனைத்தும் எமை உய்விக்கும்
அறிவோம் அவனை! அடைவோம் உயர்வே!

என்று “அன்பின் உருவம் இயேசு நாதரை” போற்றுகிறார்.

தனது எண்ணத் தடாகத்தை இப்படி பார்க்கிறார், கவிஞர்

சிந்தனைப் பூக்களில் சிந்திய தேனதை
சிதறாமல் பருகிய சர்க்கரை வண்டு
நேரான கோடுகள் தானாக வளைந்ததால்
வாழ்க்கைத் தாளிலே வடிந்த ஓவியம்

தனது தந்தையின் எட்டாம் நினைவு நாளன்று
நெஞ்சில் உன் நினைவுகள்
உறவில் உன் உணர்வுகள்
உதிருமோ அவை உலகினில்!

எத்தனை எத்தனை கருத்துகள்
எப்படி எப்படி இயம்பினாய்
அப்போது புரியாத பெருமைகள்
இப்போது நினைத்தால் கனவுகள்!

என எழுதி வாசகர்களின் கண்களோரம் கண்ணீர் வரவைக்கிறார்.

கவிஞரின் மனைவி உறங்குவதைக் கண்டு “ கண்மூடி நீ தூங்க..” என்ற ஒரு கவிதை! அதில் மனைவி மீதுள்ள பாசத்தை, நன்றிகளோடு எப்படி வெளிப்படுத்துகிறார், பாருங்கள்!

வாழ்க்கை பாதையிலே குழிகளைக் கண்டும்
தாண்டுவேன் என
வீம்புடன் பாய்ந்து விழுந்த போதெல்லாம்
தாங்கிப் பிடித்த தாரிகை நீ
இன்று.. உன் நேரம் பெண்ணே
கொஞ்சம் ஓய்வாக கண்ணயர்ந்து கொள்
இதைக் கூடப் புரிந்து கொள்ளாதவன் எபப்டி?
நான்
உன் உயிர்த்தோழனாக, உள்ளக்காவலனாக...

என்றெழுதி அதன் கடைசி பத்தியில்

கண்மூடி நீ தூங்க
கண்ணயரா வேளையில்
கவிதையொன்று நான் புனைந்தேன்
கண்மணியே
கண்ணயர்வாய்..

என்று அந்த கவிதையை அவருடைய ஞான குருவான கவியரசர் கண்ணதாசனின் பாணியில் எழுதியுள்ளார்.

கவியரசர் கண்ணதாசனைப் பற்றி இவர் போல் வேறு யார் இவ்வளவு எழுதியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு கவிதையில்

நிரந்தரமானவன் அழிவதில்லை
நிச்சயமாய்ச் சொன்னவன் நீ
காலக்கவி நீ எனக் கடிந்துரைத்து சொன்னவன் நீ
வருடங்கள் பறக்கலாம்
மனிதர்கள் இறக்கலாம்
மகாகவிஞன் உனக்கு இறப்பில்லை ..
என்று பாராட்டி மகிழ்கிறார்.

தூங்காத மனதிற்கு கொஞ்சம் நிம்மதி தேவையென்று கவிஞருக்குத் தோன்றினதும்

அறியாத வயதினிலே அரைநிமிட நேரத்திலே
அணைத்துக் கொண்ட தூக்கமே
அந்தஸ்தின் முன்றலில் அவசரமாய் வாழும்போது
அருகினிலே கூட வர ஏன் தானோ
அஞ்சி நீயும் ஓடுகிறாய் ..

என்று தனது தூக்கத்திடம் துக்கத்தோடு இப்படி கேள்வி கேட்கிறார்.

வாழ்வெல்லாம் ஓடிப்பிடித்து
வசதியான வாழ்வென முடித்து
வேடிக்கை தெரியுமோ நண்பரே!
வாடிக்கையான வேதனைதான் மீண்டுமே


என்ற இவரது இந்த வரிகள், கவியரசர் கண்ணதாசனே இவருடைய கைபிடித்து எழுதியது போல் தோன்றின. வாழ்க்கையின் விலாசத்தை நான்கே வரிகளில் எவ்வளவு அழகாய் சொல்லியிருக்கிறார் இந்த சக்திக் கவிஞன்!

கிடைத்தவை எல்லாம் கேட்டா வந்தவை?
பிரிந்தவை எல்லாம் சொல்லியா சென்றவை?
இருப்பதை இழப்பதும் இழந்ததை பெறுவதும்
இயற்கையின் நியதி
மனமே நீ இன்று அமைதி கொள்வாய்

"மயக்கமா கலக்கமா.." என்ற பாடலும் "பாலும் பழமும் கைகளிலேந்தி..." என்ற பாடலும் சேர்ந்திட அதன் சாற்றைப் பிழிந்தது போல் தோன்றும் அழகிய கவிதை வரிகள்! கவியரசர் கண்ணதாசனின் தாசன் இவர் தானென்று கவிஞர் நிரூபிக்கிறார், தனது ஒவ்வொரு கவிதை வரிகளிலும்!

புதிய வருடம் வந்து கொண்டிருக்கிறது, அதைப் பார்த்து இப்படி பாடுகிறார்

நீயென்ன சொன்ன போதும்
நானென்ன செய்த போதும்
யாரென்ன முயற்சித்தாலும்
உலகம் உருள்வது உருள்வது தான்


நிஜத்திலே விளைந்த பொய்கள் - என்ற தலைப்பில் ஒரு கவிதை, அதில்:

கண்டதும் வதனத்தில் புன்னகை
சென்றதும் வாயாலே நிந்தனை
உள்ளத்திலே ஏனோ இத்தனை
கோலங்கள் இங்கே நர்த்தனம்

கணத்திலே ஓடும் இவ்வாழ்க்கை
கடந்தபின் வௌந்துவது மடமையே
நிஜத்திலே விளைந்த பொய்களை
நிறுத்திடும் தைரியம் உமக்குண்டோ?

என்ற கேள்வியோடு முடிக்கையில், வாசகர்களின் மனதில் ஆயிரம் பாடங்களை பதிவு செய்கிறார், கவிஞர்.

பொங்கல் நாளை கவிஞர் எப்படி வணங்குகிறார் என்று பாருங்கள்!

நாளெல்லாம் ஏரோட்டி
நலிந்து தன் வீட்டில் கண்ணீரூற்றி
நாட்டுக்கே உழைப்பால் சோறூட்டி
நலமில்லா வாழ்க்கையைத் தான் பெற்றிடும்
நல்லவன் உழவுத் தோழனுக்கு
நன்றி சொல்லி இந்நாளில்
நாம் வணங்குவோம்!

தாய் தந்தையரை நினைத்து இப்படி உருகுகிறார்

ஆயிரம் சொல்லவேண்டும்
அவரருமை பேசவேண்டும்
ஆனாலும் இன்றிங்கே
அன்னை தந்தை யாருமில்லை!

தாய் தந்தையரின் பாசம் பற்றி நினைத்தால் யாருக்கும் கண்ணீர் முந்தும் என்றால் கவிஞருக்கு எப்படியிருக்குமென்று இந்த அன்னை தந்தையரைப் பற்றின கவிதையில் காணலாம். அருமை!

கனவுதானா...? என்றொரு கவிதையில்

பசி..
என்றொரு சொல்லை
எங்கோ கேட்டதும்
அகராதியைப் புரட்டும்
அற்புதமான உலகம்

வேண்டுமென்று பாடுகிறார். "இறைவா இந்த கனவு நிஜமாக வேண்டும்" என்று உடனடி பிரார்த்தனை செய்தேன், நண்பர்களே!

இன்றெனக்கு ஓய்வு தேவை என்றொரு கவிதையில் ஒரு நிஜத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.

நிழல்தேடி ஓடுகின்றான்
மரங்களில் இலைகளில்லை
தாகத்தில் தவிக்கின்றான்
கண்களில் கானல் நீர்

வாழ்வெல்லாம் ஓடி விட்டு
வந்ததையெல்லாம் தாங்கி விட்டு
எனக்கின்று ஓய்வு தேவை
எண்ணும் போது அவன்
ஏனோ தூங்குகிறான்
கல்லறையில்.

நான் கல்லறைக்குள் நித்திய உறக்கத்தில் இருக்குமென் அந்த நாள், என் மனதின் கண்களுக்கு முன்னே இதை வாசிக்கும்போதே வந்து சென்றது! ஆக! எப்படி இந்த கவிஞருக்கு இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று வியந்து போகிறேன்!

பாடாத கவிதை என்ற தலைப்பில் மனதைத் தொடும் பல எழுதியுள்ளார், அதில்

வரதட்சனை எனும்
வறுகும் தட்சணையைப் பற்றி
அறியாப்பருவத்தில்
அடுத்தவீட்டுப் பெண்ணுடன்
மணல்வீடு கட்டி விளையாடும்
ஆசைத்தங்கை

மாலையில் அறும் செருப்பை
காலையில் திரும்பவும் தைத்துக்கொண்டு
மீண்டும் தெருவிலே ஓடும்
அப்ப்பாவுக்கு புதுச்செருப்பு
கிடைத்திருக்கும்

என்ற இந்த இரண்டு கவிதைகளும் வேலை தேடி ஓடும் இளைஞனின் மனதில் எழும் எண்ணங்களை உருக்கமாக பதிவு செய்கிறார்.

அப்பாவின் செருப்பைப் பற்றி இவர் எழுதியதை வாசிக்கையில், வறுமை கடந்து வந்தோர் யாவருக்கும், இன்றும் வறுமையில் தவிக்கும் எல்லோருக்கும், அது தரும் மனவலியை சில கண்ணீர்த்துளிகளின் வரவு ஆறுதல் படுத்தலாம்!

பூவினும் மென்மையான இந்த கவிஞரின் அன்பு உள்ளம், பூவிடம் பேசுகையில்

உன்னை என்
உள்ளத்தில் குடி கொண்ட
ஊர்வசிக்கு ஒப்பாக்கினேன்
உண்மை அதுவல்லவே!

அவளை அணைத்த போது
அவள் உன்னைப்போல்
கசங்கவில்லை!
மலர்ந்தாளே!..

என்று சொன்ன பிறகு

அதே பூவிடம் இப்படி கேட்கிறார் கவிஞர்.

ஏந்தானோ!
ஏழையெந்தன் வாழ்க்கையிலே
ஏக்கம் மட்டும்
உண்மையாச்சு?

பூக்களிடம் தனது வியப்பையும் கவ்லைகளையும் கவிஞர் அழகாக பகிர்ந்து கொள்கிறார். "ஏழைக்கு ஏக்கம் மட்டும் மிச்சம்" என்ற நிஜம் எப்படி தவிக்கிறது பாருங்கள்!

ஆண்டவன் அனுப்பிய கரமொன்று
ஆம்
ஏழ்மையிலும் காதல் கண்டு
எழுபிறப்பும் கூடவரும்
சொந்தம் கண்டு
என்னைக் காதலித்துக் கரம் பிடிக்க
கன்னியவள் வந்த பின் தான்
அழுகையின் மடியில்
ஆறுதல் கிடைத்தது...

என்று தனது மனைவியை மீண்டும் பாராட்டுகிறார்.

உணர்ச்சித் துடிப்பில் இப்படிக் கதறுகிறார், கவிஞர்

தோள்களில் கைகளும்
முதுகினில் கத்தியும்
கொண்டவர்கள்
நட்பெனும் புனிதத்தை
நாசப்படுத்தியதால்
பிறந்த இசையிது

இதுதான் உலகமென்றால்
இவர்தான் மனிதரென்றால்
இனியொரு பிறப்பு
இறைவா
அவசியந்தானா?

இறைவனிடமே கேள்வி கேட்க இந்த சக்திக் கவிஞருக்கு சக்தி இருக்கிறதே என்று அதிசயத்துப் போனேன்!!!

துனிசியா நாட்டிற்கு சென்ற பதிவின் முடிவில் இப்படி எழுதுகிறார்

இதயமெங்கும் இன்பமாய்
இன்று நான் எடுத்துப்போவது
பாலைவனத்தின்
பசுமையான நினைவுகளே!

நன்றி
ஓ துனிசியா!

வறுமையைப் பார்த்து கலங்கும் கவிஞர்

பெரியதாகியது
நடைபாதையோரங்கள்
அங்கே வாழும் மனிதர்கள்
அதிகமாகியதால்.

என்று கவிதை வடிக்கிறார். அதில் கோபமும் கவலையும்ம் ஒளிந்திருக்கிறது!

"அர்த்தமும் இல்லாமல் ஆசையுமில்லாமல்" என்ற தலைப்பிலெழுதிய ஒரு கவிதையின் முதல் பத்தியின் நான்கே வரிகளில் ஒரு வியப்பைப் படம் பிடித்து தருகிறார்.

ஆலையம் சென்றேன்
அடைத்து விட்டார்
என்னிடம்
கற்பூரமில்லை!

இந்த கவிதை வரிகளை வாசித்ததும், இதை, கவிஞர் அறிவுமதி அவர்களுக்கு அனுப்ப நான் நினைத்தேன். அண்ணன் திரு அறிவுமதி அவர்கள் நல்ல கவிஞர் என்பதை விட மிக நல்ல ரசிகர் என்பதால் எனக்கு அப்படித் தோன்றினது.

விளக்கேற்றும் கைகளைப் பார்த்து மென்மையாக கவிஞர் கேட்கிறார்

வெளிச்சமின்மையால்
முகங்கள் இருண்டனவா? அன்றி
இருண்ட முகங்களினால்
வெளிச்சம் அற்றுப்போயிற்றா?

இந்த நான்கே வரிகளை புரிந்துகொண்டால், நமது இயக்குனர்கள் எத்தனையோ நல்ல திரைப்படங்கள் எடுப்பார்களே என்று சந்தோஷப்பட்டேன்!

இலங்கையைப் பற்றி எழுதும்போதெல்லாம் அவர்களின் கண்ணிர் அளவின்று கொட்டுகிறது...
வெள்ளையர்களிடமிருந்து இலங்கை சுதந்திரமானால் போதுமா என்ற கேள்வியை மனதில் வைத்துக் கொண்டு இப்படி எழுதுகிறார் கவிஞர்

என் தாய் மண்ணே
என் நினைவுகள்
சுதந்திரமடைந்து
நான் சுவாசிக்கும் காற்று
சுதந்திரமாகும் போது தான்
உனக்கு உண்மையான
சுதந்திரம் என்பேன்

நியாயமான கோபமும், வீரமும் கவலையும் நிறைந்த அவரின் மனதின் விலாசத்தை இங்கே காணலாம்

பெண்ணைப் பெற்றவர் என்றொரு தனிவர்க்கம்
தமக்கெனப் பணத்தை விளைச்சல் செய்தே
வைத்திருப்பார் என எண்ணும்
முட்டாள் மூளைகளின் பெயர்
மாப்பிள்ளையாம்

இங்கே சமுதாயத்தின் அவல நிலைகளில் முக்கியமான ஒன்றை சாடுகிறார்.

தோழனே தேடல்களை மூடி விடு
உன் இதயத்தை திறந்து வை
இருட்டில் இருந்து கொண்டே
விளக்கை அணைக்காதே
உண்மையை உன்னில் கண்டு கொள்
விடியல் தானாகவே உன்
வானத்தைத் தேடி வரும்

என்ற ஆழமான ஒரு கருத்தைச் சொல்லி இந்த கவிதைத் தொகுப்பு இங்கே நிறைவாகிறது.

56 கவிதைப் பூக்களால் அலங்கரித்த கவிதை மாலையிது என்றும் வாடாது என்பது நிச்சயம்! எனது பார்வையில் பட்ட சில பூக்களின் சில இதழ்களின் மென்மையை மட்டும், தூரத்திலிருந்து கடலைப் பார்த்து வியந்து போன ஒரு சிறுவனைப் போல், இங்கே பணிவோடு பதிவு செய்துள்ளேன், அவ்வளவு தான்!

அன்பர்களே! உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை மணிமேகலை பிரசுரத்தின் வழியோ அல்லது மற்ற தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் மூலமாகவோ வாங்கி வாசிக்க அன்போடு பரிந்துரை செய்கிறேன். மணிமேகலை பிரசுரத்தின் விலாசம்:

மணிமேகலை பிரசுரம்
7 தணிகாச்சலம் சாலை
தியாகராய நகர், சென்னை 17

இந்த அழகிய புத்தகத்தின் விலை வெறும் 50 ரூபாய்! - என்று பார்க்கையில், இவ்வளவு சிந்தனைகளின் விலைமதிப்பு, வெறும் 50 ரூபாய்க்குள் அடங்கி விடுகிறதே என்று தோன்றினாலும் இந்த கவிதைத் தொகுப்பு எல்லோரிடமும் சென்றடைய இதன் குறைந்த விலை உதவட்டுமே என்ற சிந்தனை என்னைத் தேற்றியது.

இந்த திறமையான கவிஞரை வாழ்த்துவோம்!

இவரை பாராட்ட, தொடர்பு கொள்ள: sakthisakthithasan@googlemail.com

இந்த மாபெரும் கவிஞரின் சில புதிய கவிதைகள் மற்றும் படைப்புகளை அவரின் வலைப்பூவில் வாசிக்க: http://www.thamilpoonga.com/

கவிஞர் சக்தி சக்தி தாசன் அவர்களின் கவிதையொன்று அவரின் வலைப்பூவில் நம்மை வரவேற்கிறது.

அந்தக் கவிதை:

ஆதவனாகிய நான் ….

யுகம் யுகமாய் ……
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்

வெளிச்சத்தின் இருட்டில்
வேஷம் போடுமிந்த மானிடர் மந்தை
கண்கேட்டுப் போயினும் ஏனிந்த …..
சூரியநமஸ்காரம் எனக்கு

மேகத்தைக் கலைத்துக் கலைத்து
களைத்துப் போயே, மனிதன் மீது வெறுப்புக் கொண்டே
அந்தியில் நானும் அசந்து போய்
ஆழியில் விழுவேன்……

ஆயினும் ஏனோ
மலர்களின் ஏக்கம், இயற்கையின் வாட்டம்
என்னையும் மாற்றும், உள்ளம் உருகி மீண்டும்
கிழக்கிலிருந்து புதிதாய் முளைப்பேன்….

விழுவதும் எழுவதும் ஆதவன் எனக்கு
வாழ்க்கையின் கணக்கு
இடையினில் நடக்கும் நாடகம் அனைத்தும்
இதயத்தில் பதிக்கும் தடங்கள் வலிக்கும்

இருட்டினைத் துரத்தி உலகிற்கு
வெளிச்சத்தைக் கொடுப்பேன் …..
ஆனால் மனிதன் மட்டும் ….
இதயத்தில் உறைந்த இருளில்
இறுதிவரை அமிழ்ந்தே சாகிறான் …..

கிடைப்பதைச் சுருட்டி வறுமையைப் பெருக்கி
தன்னலச் சேற்றினுள் தானும் புதைந்து
தன்கையைக் கொண்டு தன் கண்ணைக் குத்தி
காட்சி தெரியவில்லையென்று ஏன் தான்
வீண் கோஷமிடுகின்றான்

யுகம் … யுகமாய் …. நானும்
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்
ஓருண்மை உனக்கு எடுத்துச் சொல்வேன்
உலகத்தின் இருப்பை உனதாய் எடுத்து
இயற்கையைக் கற்பழித்து நீ மட்டும் வாழ்ந்தால் ….

அதோ என்மீது காதல் கொண்டு
தன்னைக் குடித்துவிடக் கேட்கும் அந்தப்பனித்துளி …..
அதைக் கொண்டே ………………….
என்னை அணைத்துக் கொள்ளச் சொல்வேன்…

அப்போது ………………………

உலகம் இருண்டு விடும்
உனக்கு விளங்கிவிடும்….. ஆம் மனிதா
இந்த உலகம் உனக்கு மட்டும்
சொந்தமானதல்ல …..
ஆதவனாகிய நானும் எப்போதும்
அழியாமல் இருக்க மாட்டேன்….

ஏனென்றால் ….. நான்
யுகம் யுகமாய் எரிந்து கொண்டே …………….


"கவிஞர் சக்தி தாசன் அவர்களின் படைப்புகள் பல தொடர்ந்து தமிழ்மக்களைத் தேடி வெளிவர வேண்டும். இந்த கவிஞர் வாழும் காலத்திலேயே அவர் உன்னதமாய் போற்றப்பட வேண்டும்" என்று இறைவனிடம் அன்போடு பிரார்த்திக்கிறேன்.
நண்பர்களே, உங்கள் வாழ்த்துகள் இந்த சிறந்த கவிஞரை நிச்சயமாக ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கையில்...

தோழமையுடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

Saturday, August 23, 2008

கட்டுரைச்சரம்

அன்பர்களே,

எனது கட்டுரைகளை இங்கே இட்டுள்ளேன்
வாசித்து பின்னூட்டம் இடுவீர்கள் என்ற எதிர்பார்ப்பில்...

அன்புடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

கவிதைச்சரம்

அன்பர்களே,

எனது கவிதைகள் சிலவற்றை இங்கே இட்டுள்ளேன்
வாசித்து பின்னூட்டமிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

பாசமுடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

அழகி டாட் காம் நிறுவனர் - என் இனிய நண்பர் பா. விஸ்வநாதன் அவர்கள்...






அன்பர்களே,

அழகி டாட் காம் நிறுவனரைப் பற்றி எழுதித்தான் ஆகவேண்டும் என்று என் அன்பு நண்பர்கள் இன்று காலை முதல் எனக்கு அன்பு கட்டளை இட்டார்கள்.

சிலருக்கு அவரை பார்க்க வேண்டும் என்று ஆசை.
அதனால் இத்தனை புகைப்படங்கள் இட்டுள்ளேன்.

அவரைப் பற்றி சில வருடங்கள் முன் அன்புடன் என்ற குழுமத்தில் எழுதியதின் சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன். எல்லோரும் வாசிக்கவும்.

வலைச்சர ஆசிரியர் பதவியை இன்னொரு எழுத்தாளருக்கு இன்னும் சில நொடிகளில் கொடுக்க இருக்கும் இத்தருணத்தில் நேரமில்லை என்ற ஒரே காரணத்தால் "விஷி" யைப் பற்றி அன்று எழுதியதின் சுட்டியை மேலே கொடுத்துள்ளேன். நேரம் மட்டும் இருந்திருந்தால்...!!!

எல்லோரும் இந்த நல்ல மனிதருக்காக பிரார்த்தனை செய்யுங்கள், தயவாக வாழ்த்துங்கள் நண்பர்களே!

பாசமுடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

மீண்டும் மீண்டும்...





நேற்றைய இரவின்
தொலைந்து போன உறக்கம் - அவளின்
குளியல் முடிந்ததும் தந்தது மயக்கம்!

வேண்டாமென்று மனம் சொன்னாலும்
வேண்டுமென்றே உறங்கி வென்றது
தளர்ந்துபோன உடல்!

கனவுகள்...
நேற்றிரவின் நிர்பந்தங்கள்
கலைத்துச் சென்ற ஓவியங்களை
கலைத்துக்கொண்டே இருந்தது
மீண்டும் மீண்டும்!

காரணங்களில் நியாங்கள்
ஆயிரம் ஆயிரம் இருப்பினும்
சுயநீதிமன்றம்
அவளின் மனக்கண்ணாடியை
உடைத்து எழுதுகிறது தீர்ப்புகள்!


மீண்டும் இரவை நோக்கி
உடல் ஓய்வெடுத்து மீண்டது!

ஆனால்...
கவலைகளிலிருந்து மீளமுடியாமல்
அழுகையை புன்னகையால் மறைத்து
இரவின் நிர்பந்தத்தை காத்திருக்கிறது
அவளின் உடைந்துபோன பாவம் மனம்!


- என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

கல்யாணமாலை!!!



திருமணம் என்பதும் இந்தியாவின் பார்வையில் அது மாபெரும் செல்வாகத் தெரிகிறது.
இந்தியாவில் திருமணத்தன்று மட்டும் எல்லோரும் ஜமீந்தார்கள் போல் இருப்பதைக் கண்டு ஒ சரி, இந்த ஒரு நாளாவது இவர்கள் இப்படி இருந்து போகட்டுமே என்ற மகிழ்ச்சி மனதின் ஒருபுறம் வந்தாலும், அடுத்த நொடியே, அட!வட்டிக்கு வாங்கி இப்படி இவர்களில் பலர் இப்படி ஆடம்பரமாக செலவு செய்ய இந்த சமூகம் நிர்பந்தப்படுத்திகறதோ? இது தேவை தானா? இவர்களுக்கு வேறென்ன வழி ? இவர்களைச் சொல்லி என்ன பலன்? - என்றெல்லாம் யோசனைகள் குவிகிறது கேள்விகளின் வடிவங்களில்?????

திருமண வயதானாதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து பார்ப்பதில் பெரியவர்களுக்கு ஒரு ஆசை கடமை என்பதைச் சொல்லக் கேட்கும் போதெல்லாம் அதில் ஒரு தவறு இருப்பது போல் ஒரு காலத்திற்கு பிறகு யாருக்கும் தோன்றக்கூடும். தனக்கு பிடித்த ஒரு துணையை தேர்ந்தெடுப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் முழுமையான ஆசைகளை சுதந்திரத்தை நமது நாட்டில் பெரியவர்கள் கொடுத்திருக்கிறார்களா என்ற கேள்வியை, ஒவ்வொரு நாளும் தாய் தந்தையருக்கு தெரியாமல் பதிவுத்திருமணங்கள் இரகசியமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பெரியவர்கள் முழுமையான சுதந்திரத்தை கொடுக்க முன்வர தடையாக இருக்கும் காரணங்கள் என்ன என்ன? - ஜாதி, மதம், இனம், நிறம் பொருளாதார அந்தஸ்து, குடும்பத்தைப் பற்றின சரித்திர/கடந்தகாலச் செயதிகள், அடுத்த பிள்ளைகளுடைய நிலை பற்றின கவலை... என்றெல்லாம் பல சொன்னாலும் இருமனங்கள் சேராமல் ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு இன்னொருவரோடு வாழவேண்டின கொடுமைக்கு பலரை தள்ளி விடுவதில் என்ன நியாயம் தான் இருக்கிறது என்ற ஒரு கேள்வி மனதில் வந்து போவதை தடை செய்ய முடியவில்லை.

இப்போது அதிகமும் சொந்தத்தில் திருமணம் செய்வதில்லை. சொந்தத்தில் திருமணம் செய்வது தவறு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரியவர்களாக பார்த்து சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பதில் ஓர் நல்ல எண்ணம் இருப்பதென்னவென்றால் திருமணம் செய்பவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஒரு முன்பரிசயம் இருக்கும் என்பது தான். அஸ்ஸலா சொந்தமா என்ற கேளிவிக்கே அர்த்தமின்றி பெரியவர்களால் நடத்தப்படும் திருமணங்களில் அதிகமும் ஒருவருக்கொருவர் பழக்கமின்றி தான் இப்பொதெல்லாம் அதிகமும் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

அந்த காலத்தில்... என்று சத்தமாக வாதங்கள் வரக்கூடும். கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன், கணவனே கண்கண்ட தெயவம் என்றெல்லாம் சொல்லிவைத்து எமாற்றப்பட்டதால் அடிமைகளாக பெண்கள் அத்தனை கஷட்டங்களையும் சகித்து வாழ்ந்தார்கள். (இன்றைய 2008 -லும் இதிலிருந்து பெரிய விடுதலை ஒன்றும்
கிடைத்தது போல் தெரியவில்லை!)

ஆண்கள் அதிகமும் இன்றுபோல் அந்த காலத்தில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அதிகமாக அடிமைத்தனத்தில் விழுந்து விடாத காலம் அந்தக் காலம் என்கிறார்கள், இன்றைய பெரியவர்கள். இது போன்ற பல காரணங்களால் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பல காலம் வெற்றி பெற்றது.

பெண்கள் படித்து முன்னேறி, தன்னைப் பற்றின ஒரு புரிதல் ஏற்பட்டு, தனக்கு வரப்போகும் கணவர் இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு?. ஆனால் அதிகமும் இந்த எதிர்பார்ப்புகள், தாய் தந்தையர் மீதுள்ள மரியாதை, பாசம் இவைகளால் மனதிற்குள் ஒளித்துவைத்துக் கொண்டு பெரியவர்களாக பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள் பெண்கள் - இதற்கு பல கட்டிமேளங்களும் சாட்சி! இதே நிலை ஆண்களுக்கும் இல்லாமல் இல்லை!

காதல் என்றாலே பாவம் என்றது ஒரு காலம். காதலித்து திருமணம் செய்தால் குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைப்பது,சொத்து வழங்காமல் ஏமாற்றுவது, குழந்தை பிறந்ததும் சேருவது போன்ற அடுத்த கட்டப் பரிணாமம். பிறகு காதலிப்பது ஒன்னும் தப்பில்ல.. ஆனால் நம்ம குடும்பத்திற்கு ஏற்றது போல் இருக்கணும் என்ற நிலை. அந்த குறைவான சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும் அதிகமாக இருப்பதை என்ன சொல்ல!
குடும்பத்திற்கு ஏற்றது போல் என்பதில் ஜாதி, மதம், நிறம், இனம், பொருளாதார அந்தஸ்து என்ற பல அளவுகோல்கள் இதில் அடங்கும். மிக கஷட்டப்பட்டு வீட்டிற்கு ஏற்றது போல் ஒரு துணையை காட்டி சம்மதம் கிடைக்கும் சிலர் பாக்கியசாலிகளே!

பதினாறு வயது முதல் இருபத்தியொன்று வயது வரை சில ஹார்மோன்களின் குழப்பத்தை அறியாமையின் சில முட்டாள் தீர்மானங்கள் என்று பெரியவர்கள் தங்கள் பிள்ளைகள் மீதுள்ள பாசத்தால் கூறும் நிஜத்தை போற்றவேண்டியது தான்! இந்த வயதில் கல்வி தான் முக்கியம்; வாழ்க்கையின் திருமணம் போன்ற முக்கிய தீர்மானஙகளை எடுக்கும் நேரமல்ல என்று உணர்த்த கல்வித் திட்டங்களும் குடும்ப சூழ்நிலைகளும் இன்றும் முழுமையாக இருக்கிறதா என்ற ஒரு கேள்விக்கு என்ன பதில் தான் உள்ளது?

ஏமாற்றும் அழகர்களிடம்/ அழகிகளிடம் பிள்ளைகள் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்று பெரியவர்கள் பயப்படுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் பிள்ளைகளிடம் இந்த வயதில் மிகவும் பாசமாக இருக்க வேண்டின தாய் தந்தையர்கள் அதிகமும் ஒரு வார்த்தை சிரித்துக்கூட பேசாத நிலை பல இல்லங்களிலும் இருக்கிறதே என்பது மிகவும் கவலையான செய்தி.

100% பெண்களின் சம்மதம் பெற்றுத் தான் இந்தியாவில் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடந்தேருகிறதா - இல்லை! காதலை எதிர்த்து கொடுமை செய்வதில் கூட பெரியவர்களின் பாசத்தை புரிந்து கொள்ளலாம். ஆனால் மாட்டுச்சந்தை, பங்குச்சந்தை போன்ற ஒரு சந்தையாக "கல்யாணமாலை" போன்ற நிகழ்ச்சியில் தங்கள் பிள்ளைகளை அறிமுகம் செய்து, ஏதோ இயந்திரத்தின் கான்பிகரேஷன் சொல்வது போல் தங்கள் பிள்ளைகளைப் பற்றி சொல்லி, இப்படியெல்லாம் இருக்கவேண்டும் ஒரு பொருள் என்று வணிகம் பேசுவது போல் எதிர்பார்ப்புகளைச் சொல்லி, பணத்தை செலவு செய்யும் பெரியவர்களைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"கல்யாணமாலை" நிகழ்ச்சி மற்றும் பல மாற்றிமோனியல் டாட் காமும்கள் 110 கோடி மக்கள் நிறைந்த இந்திய நாட்டில் பல கோடி பணத்தை ஒவ்வொரு நாளும் சம்பாதிக்க இந்த பெரியவர்கள் பலியாடுகள் ஆகிரார்களே என்பது பெரிய கவலை!

ஒருவருக்கு ஒருவர் ஒரு பழக்கமும் இன்றி, ஜாதி, மதம், இனம், போன்ற பட்டியல் மட்டும் சேர்க்கை பெற்றால் மற்றும் ரகசிய கொடுக்கல் வாங்கள் இவை வெற்றிபெற்றுவிட்டால் உடனே இதற்கு ஏற்பாடு செய்த "கல்யாணமாலை" போன்ற நிறுவனத்திற்கு வருமானம், பிறகு உடனே திருமணம்! அட இது எப்படி சரியாகும் என்று புரியாத புதிராகவே உள்ளது.

இன்னமும் இந்தியாவில் ஐந்து நாள் திருமண நிகழ்ச்சிகள் உண்டு. குறைந்தபட்சம் ஒருநாள் முழுக்க திருமணநிகழ்ச்சி என்பது ஏறத்தாழ எல்லா இடங்களிலும் உண்டு. இப்படியெல்லாம் படுத்தினால் தான் தம்பதியர்கள் பிரியமாட்டார்கள் என்று மரபு ஒருவேளை நினைத்திருக்கலாம்.

ஆனால் அந்த காலத்திலும் இந்த காலத்திலும் கணவனோ மனைவியோ பல விஷய்ஙகளை சகித்துத் தான் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை! எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க இயலாது என்பது நியாயமான நிஜமே! ஆனால் விவாகரத்து செய்துகொள்ளாமல் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் கசப்புடன் இன்னமும் வாழ்ந்து வரும் சில தம்பதியரைப் பார்த்து வியப்படைந்து போகாமல் வேறென்ன செய்ய முடியும்.

திருமணம் என்பது மிகவும் ஒரு நல்ல நிகழ்ச்சி. அதை தரகர்களிடம் அடமானம் வைத்து, இருமனங்களை அடிமையாக்கி வரும் "கல்யாணமாலை" போன்ற நிகழ்ச்சிகளை வாரா வாரம் ரசித்துப் பார்ப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

பெண்ணின் முழு சம்மதத்துடன் எல்லா திருமணங்களும் நடந்தேறட்டும். திருமணச்செலவை எந்த அளவிற்கு குறைக்கிறோமோ அந்த அளவிற்கு சமுதாயமும் நாடும் முன்னேறும். படிப்பு முடிந்து நல்ல வேலைக்கு சேர்ந்த பிறகும், படிக்க முடியாதவர்கள் தங்களுடைய முதிர்ச்சியான புரிதல் அடைந்த பிறகு, தாங்கள் தேர்ந்தெடுக்கும் துணையை திருமணம் செய்து கொடுக்கும் ஒரு விஸ்தாரமான மனம் பெரியோர்கள் எல்லோருக்கும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இன்றைய இளம் தம்பதியர்கள் வருங்காலத்தில் "கல்யாணமாலை" போன்ற நிறுவனங்களுக்கு அடிமைப்படாமல் பிள்ளைகளுடைய உண்மை உணர்வுகளை புரிந்துகொண்டால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்!

வாழ்த்துக்களுடன்...

என்றென்றும் அன்புடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

Friday, August 22, 2008

அழகி- தமிழ் மென்பொருட்களின் மகாராணி...

அழகியின் சிறப்புக்கள்:

அழகி
- புதுமை எளிமை வலிமை
ஒலிபெயர்ப்பு, தட்டச்சு, அச்சு, மின்னஞ்சல், மின்னுரையாடல், வலையாக்கம் - தமிழில்

ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் பெறலாம் - அனைத்து செயலிகளிலும்

உபயோகிப்பாளரின் பெரும் தோழி, அழகி - எல்லா வகையிலும்.

யூனிகோட்-ரெடி. ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 - 3 வகை கீபோர்ட் லே-அவுட்.

அழகியின் ப்ரொஃபஷனல் வெர்ஷன் கொண்டு, யூனிகோடில் கீழுள்ளனவையைச் செய்யலாம்:

தமிழில் தேடு/மாற்று (Find/Replace) - நேரடியாக Word, Excel, Powerpoint etc. செயலிகளில்.

தமிழில் வரிசைப்படுத்துதல் (Sorting) - நேரடியாக Excel, Access போன்ற செயலிகளில்.

கோப்புகள் (files) / டைரக்டரிகள் (folder) பெயர் தமிழில்

உங்கள் அஞ்சல்களைப் பார்க்க, WinXP/2K உபயோகிப்பாளர்கள் ஃபான்ட் ஏதும் பதிய வேண்டாம்.

உலகின் முதலாம் 'இரு திரை' தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்

ஈடிணையில்லா ஆங்கிலம்-தமிழ் சொல் இணைப்பு. உ-ம்: 'ஸ்ரீ' என்று டைப் செய்ய, sri, sree, shri, Mr என்று எப்படி வேண்டுமானாலும் டைப் செய்யலாம்

ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே டைப் செய்யலாம். உ-ம்: 'dear', 'easy', 'meals', 'queen' etc. 'diyar', 'eesi' etc. என்று டைப் செய்யத் தேவையில்லை.

அழகியின் flexibility பற்றி பல உதாரணங்களுடன் விளக்கம் காண, இங்கே சொடுக்கவும்.

தமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலியிலும்
MS-Word, Excel, Powerpoint, Access, Pagemaker, Photoshop, Outlook Express, Hotmail, MSN Messenger போன்ற எல்லா செயலிகளிலும் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு செய்யலாம்.

அனைத்து இலவச திஸ்கி[Tscii], டாப்[Tab] மற்றும் யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்கலாம்.

உங்கள் தமிழ் ஆக்கங்களை திஸ்கியிலிருந்து தாப் (TAB) எழுத்துருக்கு மாற்றம் செய்யலாம்.

அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரே ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.

நேரடியாக யூனிகோடில் ஒலிபெயர்ப்பு/தட்டச்சு (in WinXP/2K)

யூனிகோட் ஆற்றலினால்,

விண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சலை, ஃபான்ட் ஏதும் பதியாமலேயே பார்க்கலாம்.

தமிழில் Find/Replace - நேரடியாக Word, Excel etc. செயலிகளில் - சரளமாகச் செய்யலாம்.

தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.

உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் !!!

யூனிகோட் மாற்றி, 'Bulk Unicode Convertor' (multiple files converter) உட்பட.

இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு
(both Tscii/Unicode compliant) - வலைதளங்கள் அமைக்க.


மூன்று வகை கீ-போர்ட் லேஅவுட் - ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99
தமிழ்-ஆங்கிலம்-தமிழ் என்று கலப்பு ஒலிபெயர்ப்பு/தட்டச்சு.

தமிழில் சொல் எண்ணிக்கை (Word count).

நீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம் : வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் ஒலிபெயர்க்கலாம். மீண்டும் டைப் அடிக்க வேண்டியதில்லை.

மாற்று ஒலிபெயர்ப்பு - தமிழில் டைப் செய்து, ஆங்கிலத்தில் பெறலாம்.

தமிழ் எண்களை டைப் செய்யலாம்.

சமிஸ்கிருத எழுத்துக்களை டைப் செய்யலாம் - 'ஜ', 'ஷ', 'ஸ்ரீ', ... .

தமிழ் கற்க/கற்பிக்க, 'சிறுவர் கீ-பாட்' உண்டு.

மென்பொருளுடன் உள்ளடங்கிய முழுமையான, தெள்ளத் தெளிவான உதவிக்கோப்புகள்.

அழகி பெற்ற விருதுகள்.
மேலும் வாசிக்க...

Thursday, August 21, 2008

முத்துச்சரம்



"ராமலகஷ்மி" என்பவர் தனது சிந்தனைச் சிப்பியிலிருந்து சிதறி விழும் எண்ண முத்துக்களை சேகரித்து சரமாக கோர்த்தளிக்கும் ஒரு வலைப்பூவை வைத்திருக்கிறார்; அதன் இனிய பெயர் "முத்துச்சரம்" - விலாசம் http://tamilamudam.blogspot.com
தன்னைப் பற்றி அவரது வலைப்பூவில் இப்படி குறிப்பிட்டுள்ளார். வாசிக்க மிகவும் இன்பமாக இருந்தது.

Interests
=========
Browsing in the net, Photography, கவிதைகள்

Favorite Music
==============
வாலி-கண்ணதாசன் வரிகளில் MSV வைரமுத்துவின் வரிகளை இழைக்கும் இளையராஜா;AR ரஹ்மான் மற்றும் இன்றைய பல இளம் கவிஞர்களின் வரிகளை மெருகேற்றி melodious மெட்டுக்களாகத் தரும் பலரின் இசை. அந்த வரிசையில் சமீபத்தில் கருத்துக்காகவும் விரும்பிக் கேட்கும் திரைப்பாடல்: "கடவுள் தந்த அழகிய வாழ்வு" படம்:மாயாவி

Favorite Books
==============
படித்ததில் வியந்தது:பாரதியார் பாடல்கள் பிடித்துப் படிப்பது: வைரமுத்து கவிதைகள் என்றும் பிரமிப்பது:திருக்குறள் ரசித்துப் படித்தவை:-எழுபதுகளில் அப்புசாமி சீதாப் பாட்டி முத்து & இந்திரஜால காமிக்ஸ் துப்பறியும் சங்கர்லாலும் தமிழ்வாணனும் -எண்பதுகளிலும் தொன்னூறின் தொடக்கங்களிலும் தொடராக வெளிவந்த சுஜாதா;ஸ்டெல்லா ப்ரூஸ்;பாலகுமரன் நாவல்கள் -தற்சமயம் S.ராமக் கிருஷ்ணனின் எழுத்துக்கள்.... என முடிக்கிறார், வலைப்பூவில் குறிப்பிட்ட அந்த பகுதியில் அதற்குமேல் எழுத இடம் இல்லை என்ற ஒரே காரணத்தால்!!!

மீண்டும் வலைப்பூவை கூர்ந்து கவனத்த போது சேகரித்த தகவல்கள்:

திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து, தற்போது பங்களூரில் வாழ்ந்து வரும் ராமலக்ஷ்மி இந்த வலைப்பூவில் குறைவானப் பதிவுகள் தான் பதிவு செய்திருக்கிறார் என்றாலும் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக ஒன்றுக்கு ஒன்று போட்டி போடும் அளவிற்கு அருமையாக உள்ளது.

1987 ஆம் வருடத்திலேயே இவருடைய பகிர்வு குங்குமத்தில் வெளிவந்து, அந்த மகிழ்ச்சியை பெற்றவர் இவர்.

வலைச்சர ஆசிரியராக இருக்கும் இந்த வாரத்தில் தான் நான் இவருடைய பின்னூட்டம் கண்டு, இவருடைய வலைப்பூ சென்று பார்த்தேன். இவரோடு தொடர்பு கொண்டு சின்ன ஒரு தொலைபேசி உரையாடல் முடித்த பின்னர் இவரைப் பற்றி எழுதலாமே என்று எனக்குத் தோன்றினது. ஆனால் என்னிடம் அவருடைய தொலைபேசி எண்களோ, மின்னஞ்சல் முகவரியோ, இரண்டிற்கும் மேலாக எனது நேரமோ இல்லை என்பதால் இவரின் வலைப்பூ பற்றியும் இவரைப் பற்றியும் நான் வலைப்பூவிலிருந்து வாசித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், இதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

ஒரு நல்ல எழுத்தாளரின் வலைப்பதிவுகளை வெறும் சுட்டியை மட்டும் போட்டுவிட்டு செல்வதில் ஏனோ எனக்கு பெரிய அளவு ஈடுபாடில்லை.

சுட்டிகளை தட்டி பிறகு அதிலிருந்து வேறொன்று, இன்னொன்று என்று வாசகர்கள் சென்று வலைச்சரத்தின் இந்த வேர்களை மறந்து போகக்கூடாது என்பதால் நான் வெறும் சுட்டிகளை இட்டுவிட்டு சென்று விடுவதில்லை. அந்த மரியாதையை இந்த எழுத்தாளருக்கும் அளிப்பதில் நான் பெருமைப்படுகிறேன், நண்பர்களே!

காலைக் கதிரவனை இந்த கவிஞர் எப்படிப் பாடுகிறார் என்று பாருங்கள், அவருடைய இந்த அழகிய கவிதையில்:

காலைக் கதிரவனே, எம்
கண்ணின் ஒளி நீயே!
வேலையேதும் நடப்பதில்லை, நீ
வெண்கதிர் வீசி வாராயெனில்!

புத்தம்புது ஒளி வெள்ளமென
நித்தம் நீ தோன்றியே
வித்தைகள் பல புரிகின்ற
விந்தையை என் சொல்வேன்!

உறக்கம் நீங்கியதும் உலகமெலாம்
உற்ற துணைவனாம் உன்வரவை
உவகையுடன் நாடி நிற்கும்
உன் பெருமைதான் என்னே!

நீயில்லாது இயங்காது நானிலமே
நீவாராது வாழாது வையகமே!
விண்ணிலே உதிக்கின்ற பொன்னொளியே
மண்ணினை வாழவைப்பாய் உன்னொளியால்!

தங்கமென நீ மிளிர்ந்து
தாமரையை மலர வைக்கையில்
வைரமெனவும் நீ ஒளிர்ந்து
வாழ வைப்பாய் எங்களையும்!


1985-ல் கவிஞர் கண்ட காலைக் கதிரவனை அப்போதே (இளங்கலை இறுதி ஆண்டில் இருந்த போதே) இந்த கவிதை வரிகளுக்குள் பதியவைத்து அக்கவிதையை அவர் பயின்ற திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளிவரச்செய்து மகிழ்ந்தவர் இவர்.

இவருடைய வலைப்பூவை நீங்களும் வாசித்து உங்களுடைய இனிய பின்னூட்டங்களை இடவும். நிச்சயம் நீங்கள் இவர்களுடைய எழுத்துக்களை ரசிப்பீர்கள், இது நிச்சயம்.

இணையதள் இதழ்களில் ஏறத்தாழ எல்லாவற்றிலும் இவருடைய படைப்புகள் வந்துள்ளது. நல்ல புகைப்படக் கலைஞர், கவிஞர், சிறுகதை வடிப்பவர், என பன்முகம் கொண்ட இவரை கௌரவப்படுத்துவதில் நான் மகிழ்கிறேன்.... இதை வாசிக்கும் நீங்கள் ???????????

??????????? - களின்
!!!!!!!!! - பதில்களை எதிர்பார்த்து

இந்த வார வலைச்சர ஆசிரியர்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

தோல்விகள் ஆக்கிரமிக்க விட்டுக் கொடுக்காதீர்கள்- அந்தோணி முத்து


அன்பர்களே,

இணையதளத்தில் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர் தான் தம்பி அந்தோணி முத்து என்றாலும், அவரைப் பற்றி ஒருவேளை தெரியாதவர்கள் யாராகினும் இருப்பின் அவர்களுகாக அந்தோணி முத்துவின் வலைப்பூ விலாசத்தை இங்கே இடுகிறேன்.

ஊக்கம் பெற அந்தோணிமுத்துவின் வலைப்பூ மிகவும் உதவும்.

அந்தோணிமுத்துவின் வலைப்பூ விலாசம் http://positiveanthonytamil.blogspot.com/
நல்வாழ்த்துக்கள் & அன்புடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

நான் இறக்கப்போகிறேன்

http://naanirakkappokiraen-aruna.blogspot.com/

"நான் இறக்கப்போகிறேன்" - என்ற தலைப்பில் வலைப்பூ ஆரம்பித்து ஒருவர் கடந்த ஒரு வருட காலமாக எழுது வருகிறார்.

அருமை, நன்றாக உள்ளது என்று ஏதோ பின்னூட்டம் போடவேண்டுமே என்று போடாமல் எனது பல பதிவுகளுக்கும் நிறைவாக பின்னூட்டமிடுகிறாரே! யாரிவர்? ஏன் இந்த தலைப்பில் தனது வலைப்பூவின் தலைப்பை இவர் இப்படி வைத்திருக்கிறார் என்று யோசித்து அதைப் பற்றி கேட்டுத் தெரிய நேரமின்றி அப்படியே விட்டு விட்டேன்.

பலர் இந்த தலைப்பை மாற்ற பின்னூட்டங்களிட்டாலும் இவர் தன்ன்னுடைய வலைப்பூவின் தலைப்பை பல மாதங்களக மாற்றவே இல்லை. விலாசம் அதுவே தான் என்றலும், தனது வலைப்பூவின் பெயரை மட்டும் சில மாதங்களுக்கு முன்னர் "அன்புடன் அருணா" என்று மாற்றியிருக்கிறார்.

"நான் இறக்கப்போகிறேன்" என்ற வாசகம் கேட்கும்போது ஒரு பயமும் எதிர்மறை எண்ணங்களும் வந்தாலும் "அது நிஜம் தானே! இந்த புரிதல் ஒவ்வொரு நாளும் உணர்ந்தால் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உறுதியே என்று எனது அறிவு என்னை மண்டையில் தட்டிச் சொன்னதினால், நான் அருணாவிடம் எதையும் பேசவில்லை.

புதிய தலைப்பிலேயே அவருடைய பெயர் உள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆம் இவர் பெயர் அருணா. தூத்துக்குடியை சேர்ந்த இவர் தற்போது ரஜஸ்தானில் தனது இனிய குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்.

அங்கிருக்கும் சிறப்பான பள்ளி ஒன்றில் உதவித் தலமை ஆசிரியராக இருக்கிறார். இவர் எம்.ஏ. , பி.எட். எம் பில் என மூன்று கல்வி முத்திரையை பெற்றவர். கணவர் மார்கெட்டிங் (சந்தைப்படுத்தல்) பணியில் உள்ளார். அவர் பெயரும் சுரேஷ் தான். இந்த தம்பதியருக்கு இறைவன் அளித்த இரண்டு பிள்ளைகளும் அங்கேயே படித்து வருகிறார்கள். நேற்றைய முந்தினம் இந்த தம்பதியர் தங்களின் 21 ஆம் வருட திருமண நாளை கொண்டாடினார்கள். இந்த இனிய தாம்பத்தியம் நூறுவருடங்கள் காண பிரார்த்தனை செய்கிறேன். இதை வாசிக்கின்றவர்களும் வாழ்த்துங்கள்.

அருணா, வலைப்பூ ஆரம்பித்த வேளையில் தமிழ்மணம் இவரின் பதிவுகளை எடுத்துக்கொள்ள சில தொழில்நுட்ப காரணத்தால் தாமதம் ஏற்பட்டது. அப்போது என்னுடன் பேச ஆரம்பித்தார்கள். நான் அந்தோணியின் ப்ராஜக்ட் எடுத்த வேளை அது! அப்போது அந்தோணியிடம் பலர் பேசினால் தான் அவனுடைய மனம் மகிழும், தன்னை பலர் நேசிக்கிறார்கள் என்று உணர்வான், வாழ்க்கையில் சந்தோஷம் மலரும் - என்பதற்காக எனது நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் என எல்லோரிடமும் அந்தோணியிடம் நேரம் கிடைக்கும்போது பேசச் சொன்னேன். எல்லோரும் பேசினார்கள். ஆனால் சிலரைத் தவிர யாரும் இரண்டு முறைக்குமேல் பேசவில்லை:-)

ஆனால் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து, ஏறத்தாழ தினமும் அந்தோணியிடம் பேசி நல்ல ஊக்கம் கொடுத்து வருகிறார், அருணா!
அந்தோணி இவர்களை "அம்மா" என்று அன்போடு அழைக்கும் அளவிற்கு பாசத்தை அள்ளிக்கொடுத்து வருபவர் இந்த அருணா!

சில மாதங்களுக்கு முன் இவரும் இவருடைய கணவர் திரு சுரேஷ அவர்களும் என்னை சென்னையில் சந்திக்க வேண்டும் என்ற போது, நேரம் இருந்தால் சந்திப்போம் ஆனால் நிச்சயம் அந்தோணியை நீங்கள் இருவரும் சந்தித்தே ஆக வேண்டும் என்றேன். அதன்படி அப்படியே செய்தார்கள். அன்று காலை முதல் காத்திருந்த அந்தோணி இப்படி ஒரு தாய்ப்பாசம் தரும் அருணாவை நேரடியாகக் கண்டதுமே சந்தோஷத்தால் அழுது விட்டான், பாவம்! தொலைபேசியில் நான் திரு சுரேஷுக்கு நன்றி சொன்னேன். அருணாவிற்கு நன்றி சொல்ல தேவையென்ன என்ற கேள்வியால அருணாவிடம் நன்றி சொல்லவில்லை!

அருணாவைப் போன்றவர்கள் பலர் இன்னமும் இந்த பூமியில் இருப்பதால் தான் இயற்கை இந்த அளவிற்காவது நம்மை காப்பாற்றிக்கொண்டு வருகிறதோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

நான் செய்யும் சின்னச் சின்ன சமுதாய சேவைகளுக்கு எனக்கு ஊக்கம் தந்து பாராட்டி உதவ முன் வரும் பலரில் மூத்தவர்கள் எனது இனிய தோழி இந்த அருணா என்று மிகவும் சந்தோஷமாக தெரிவிக்கிறேன், அதில் பெருமிதம் கொள்கிறேன்!

ஆனால் இதுவரையில் நானும் அருணாவும் ஒருமுறை கூட சந்தித்தே இல்லை! சேவை தானே முக்கியம் சந்திப்பில் என்ன இருக்கிறது என்ற எனது கேள்விக்கு சின்னக் குழந்தையைப் போல் அருணா சிரிப்பார்கள். அவரோடு அவரின் கணவர் திரு சுரேஷ் அவர்களும்!

எனது நண்பர்கள் பட்டியலில் நான் சந்திக்காதவர்கள் தான் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு கவலையும் இல்லை! சொர்கத்தில் எல்லோரையும் நிச்சயம் சந்திப்பேன்/சந்திப்போம்!!! :-)

அருணா தனது எட்டாவது வகுப்பு காலம் முதல் கவிதை கட்டுரைகள் எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார். இதுவரை அறுபதிற்கு மேலாக கவிதைகள் அச்சிடாமல் இருக்கிறது. விரைவில் இவருடைய கவிதைத் தொகுப்பு வெளியிட நான் வாழ்த்துகிறேன். படிக்கின்ற காலதில் இவருடைய படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு மலரில் வெளிவந்துள்ளன. இது மட்டுமின்றி மங்கையர் மலர், தினமலர் ஆகியவைகளிலும் இவருடைய படைப்புகள் வெளியிட்டுள்ளன.

குடும்பம், வேலை என இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் இணையதளம் இவருக்கு மாபெரும் ஆறுதலாக உள்ளது என்கிறார். பலருக்கு உதவி செய்யவும் நண்பர்கள் பலரோடு இணையம் வழி பேச முடிவதும், தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் இணையதளம் பெரிதும் உதவுகிறது என்கிறா அருணா!

மேல் குறிப்பிட்ட அருணாவின் வலைப்பூவிற்கு நீங்கள் சென்று பாருங்கள். அவர்கள் எழுதியதில் எனக்கு பிடித்தவைகளின் சுட்டிகளை போடுங்கள் என்றால் நான் எல்லாவற்றையும் இட நேரிடும் என்பதால் தான் உங்களை அவர்களின் வலைப்ப்புவிற்கு அழைக்கிறேன்.

எம்.பில் என்ற படிப்பில் சமூகசேவைப் பற்றி படித்து சான்றிதழ் வாங்குவதோடு நின்று விடாமல் தொடர்ந்து எல்லோருக்கும் உதவி செய்ய காத்திருந்து உதவி செய்து வரும் இந்த பாசம் நிறைந்த உள்ளம் கொண்ட திருமதி அருணா அவர்களுக்கு உங்கள் சார்பிலும் வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் வழங்குவீர்கள்
என்ற நம்பிக்கையில்...
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

Wednesday, August 20, 2008

வானத்து நட்சத்திரமே!!!


அன்புள்ள நண்பர்களே,

தாரே சமீன் பர் என்ற திரைப்படத்தின் வசனகர்த்தாவும் நடிகருமான அமீர்கானுக்கு சென்னையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஓர் அமைப்பு இந்த மாதம் 12 ஆம் தேதி நடத்தியது. எனக்கு மிகவும் பிடித்த கஜல் பாடகர் திரு.ஜகஜித்சிங் அவர்கள் மிக இனிமையாக தனது ஆறு கஜல் பாடல்கள் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினார்.

அதற்கு பிறகு கே.பாலச்சந்தர், அவர் இவர் என்று பலரும் இந்த படத்தையும் அமீர்கானையும் பாராட்டினார்கள். கஜல் பாடல்மட்டும் கேட்டுவிட்டு உடனடியாக வீடு வந்து சேரவேண்டும் என்று நினைத்து அந்த நிகழ்ச்சிக்கு சென்ற என்னை திரு. அனுபம்கெர் என்ற நடிகரின் பேச்சு அந்நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே உட்காரவைத்து விட்டது!

சரி.... இந்த ஹிந்தி நடிகர் அனுபம்கெர் என்ன தான் பேசினார்? ஆங்கிலத்தில் அனுபம்கெர் ஆற்றின உரையின் தமிழாக்கம் எனது ஞாபகத்திலிருந்து இதோ.... ம்ம்... அனுபம்கெர் பேசுகிறார், கெளுங்கள்!!!

இந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த எல்லோருக்கும் எனது வணக்கங்கள். தாரே சமீன் பர் என்ற படத்தை விருதிற்காக தேர்வு செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மனநலம் குன்றிய ஒரு குழந்தையை ஊக்கப்படுத்தி மகிழவைக்கும் இந்த படம் நிச்சயமாக எந்த விருதிற்கும் தகுதி பெற்றது தான்! திரு அமீர்கானுக்கும் இந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எல்லோருக்கும் களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தையின் ஒரே வருமானத்தில் சித்தப்பா, மாமா, மற்றும் சொந்தபந்தங்கள் எல்லாம் சேர்த்து பதினெட்டு பேர் இதில் வாழவேண்டும். அப்போது என் தந்தைக்கு மாதவருமானம்வெறும் தொண்ணூறு ரூபாய் மட்டும் தான்.

ஆனால் எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருப்போம். சிறுவனாக நான் இருக்கும் வேளையில் நான் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சரியாகவோ தவறாகவோ யாராவது ஒருவர் பதில் தருவார்கள். அப்படியாக எனது சிந்தனைகளில் எழும் கேள்விகளை நான் ஒரு போதும் மறைத்து வைத்ததில்லை; அழித்துவிட்ட்தில்லை!

ஆகா! எத்தனை எத்தனை கேள்விகள்.. ஏன் வானம் நீல ஆடை அணிந்துள்ளது, இங்கிருந்து நட்சத்திரத்திற்கு எத்தனை கிலோமீட்டர் என தொடரும் கேள்வி மழை!

ஒரு நாள் பாட்டியிடம் நான் கேட்டேன். "பாட்டி, நமக்குத் தான் நல்ல ஆடைகள் இல்லை, அளவிற்குமேல் உணவும் இல்லை. இருந்தபோதும் நாம் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறோமே, நாம் கவலையே படுவதில்லையே, அது ஏன்? அதற்கு எனது பாட்டி சொன்ன பதிலை எனது வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன். பாட்டி சொன்னார்கள் "நமக்கு நல்ல கனவுகள்உண்டு; அதனால் நாம் கவலைப்படுவதில்லை"!

எனது அடிப்படை படிப்பு பள்ளியில் முடிந்தது. நாடகத்துரையில் படிக்க வேண்டியவைகளை படித்து சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். நடிகனாக வாய்ப்புகள் மலர்ந்தது. நடிகனானேன், நிறைய படங்களில் நடித்தேன். நிறைய பணம் வர ஆரம்பித்ததும் வீடு, விலை உயர்ந்த கார், மற்றும் பதினாறு ஏக்கர் நிலம் வாங்கினேன், அதில் அழகிய தோட்டம், பாம் ஹௌஸ் கட்டவேண்டும் என்ற திட்டமும் இட்டேன்.

எனக்கு திமிரும் ஆணவமும் வந்து விட்டது. இப்படியாக என் வாழ்க்கை சென்று கொண்டிருக்க ஒரு சம்பவம் என்னை ஒட்டுமொத்தமாக மாற்றியது. வாழ்க்கையை நான் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்தது என்று சொன்னால் அது மிகையாகது.

பம்பாய நகரத்தில் ஒரு விபத்து. அந்த விபத்தில் ஒரு பேருந்து சிக்கிக்கொண்டது. அந்த பேருந்தில் இருந்தவர்கள் வேறு யாருமல்ல; மனநலம் குறைந்த பிள்ளைகள். சட்டச்சிக்கல் வந்துவிடும் என்ற பயத்தால் பலர் இந்த விபத்தைக் கண்டும் காணாமல் சென்றார்கள். விபத்தில் சிக்கின பிள்ளைகளை பேருந்துவிலிருந்து எடுத்து எனது காரிலேற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று எல்லோரையும் காப்பாற்றினேன்.

இந்த சம்பவம் முடிந்து, கடந்து போய்க்கொண்டிருந்த ஒவ்வொரு நாளும் என் மனதில் சொல்ல முடியாத பாரம். நேரடியாக அந்த பிள்ளைகள் தங்கிப் படிக்கும் பள்ளிக்குச் சென்றேன்.

அங்கிருக்கும் தலமை ஆசிரியர் ஒரு கன்னியஸ்த்ரீ. அவர்களுக்கு நான் நடிகன் என்று தெரியாது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு நடிகனென்று அவர்களிடம் சொல்லவும் இல்லை. "நான் நடிப்புத் தொழில் படிக்கும்போது ஸ்பீச் தெரபி படித்துள்ளேன். அதை உங்கள் பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறேன். எல்லா புதன் கிழமைகளிலும் இரண்டு மணிநேரம் நான் இங்கு வந்து கற்றுக்கொடுக்கிறேன்" என்றேன். சந்தோஷத்துடன் அந்த சகோதரி என்னை பிள்ளைகளிடம் கொண்டு சென்றார்கள். என்னை நன்கு தெரிந்த பிள்ளைகள் ஓடி வந்து "அனுபம் அங்கில் உங்களை எங்களுக்குத் தெரியும்" என்று நான் நடித்த தொலைக்காட்சித் தொடர்கள், சினிமாக்கள் இவைகளின் பெயர்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தார்கள். உடனே அந்த சகோதரி, "மிஸ்டர்-அனுபம், நீங்கள் நடிகரா? ஏதாவது உள்நோக்கத்துடன் தான் இந்த உதவி செய்ய முன் வந்துள்ளீர்களா? இதற்கு முன்னமும் சிலர் இப்படித்தான் இங்கு வந்தார்கள். வந்து இந்த பிள்ளைகளுடைய வர்களுடைய நடைமுறைகளையெல்லாம் கற்றுக்கொண்டு படம் பிடித்து சம்பாதித்தார்கள்" - என்றதும் நான் அப்படியே அதிர்ந்து போனேன். பிறகு என் மனம் திறந்து அந்த சகோதரியிடம் இந்த பிள்ளைகள் மீதுள்ள எனது பாசத்தையும் ஈடுபாட்டையும் தெறிவித்தேன். அவர்கள் சம்மதித்தார்கள்.

இரண்டு வருடகாலம் நான் அந்த சேவையை தொடர்ந்து செய்தேன். படப்பிடிப்பில் உலகில் நான் எங்கிருந்தாலும், புதன் கிழமை அந்த இரண்டு மணிநேரம் இந்த பிள்ளைகளுக்கு ஸ்பீச் தெரபியைக் கற்றுக்கொடுக்க நான் பறந்து வந்துவிடுவேன்.

அந்நாளில் சந்தித்த ஒரு சிறுவனை இப்போது ஞாபகம் வருகிறது. அவனுடைய உடலின் வயது பன்னிரண்டு இருக்கும்; மனதின் வயது முன்று அல்லது நான்கு! பாடம் நடத்தும்போது சரியாக கவனம் செலுத்தாமல் கவலையாக இருந்தான்.

எல்லோரும் சென்ற பிறகு அந்த பிள்ளையிடம் நான் கேட்டேன், "ஏன் என் மீது கோபம்" என்று.
அதற்கு அந்த சிறுவன் சொன்னான், "அங்கிள் நீங்கள் வரும்போதெல்லாம்
நிறைய இனிப்புகள் கொண்டு வந்து தருகிறீர்கள். ஆனால் உங்களுக்குத் தர என்னிடம் ஒன்றுமே இல்லை. அது தான் கவலையாக உள்ளேன்.. சரி...என்னிடம் ஒரு சாக்லேட் இருக்கிறது இதை நான் உங்களுக்குத் தருகிறேன்.. ம்ம்.. இதோ எடுத்துக்குங்க.. அங்கில் ஆனா சாப்பிடாதீங்க, சாப்பிட்டா தீர்ந்து போயிடும்". ( Uncle, I will give you this chocklate but don't eat it because it will get over)
- என்றான்.
சந்தோஷமுடன் நான் அந்த சாக்லேட்டை வாங்கினேன். எனது ரெப்ரிஜிரேட்டரில் இன்னமும் அந்த சாக்லேட் பத்திரமாக வைத்துள்ளேன்!

கோடையின் உச்சத்தை பம்பாய் நகரம் காணும் மதியவேளை ஒன்றில் ஏசி போட்டு குளிர் நிறைந்த காரில் நான். ஏசியின் குளிரால் காரின் கண்ணாடி பனிபடிந்தது போல் இருந்தது. எனது கார் சிக்னலில் நிற்கிறது. அந்த இடத்தில் கைத்துண்டு, வளையல் போன்றவைகள் விற்கும் ஏழைப்பிள்ளைகள் காரைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிறுமி எனது காரின் கண்ணாடியில் தனது கன்னத்தை சில நொடிகள் வைத்து விட்டு, அந்த குளிர் கிடைத்த மகிழ்ச்சியில் அருகிலுள்ள நடைபாதையில் சென்று படுத்துக்கொண்டாள். எத்தனையோ படங்களை நான் பார்த்திருந்தாலும் இந்நிகழ்ச்சி அத்தனையும் அழித்து என் மனதில் பதிந்துபோனது.

பல வருடங்களுக்கு முன்னர் நான் தோட்டம் கட்டி மகிழ வாங்கின பதினாறு ஏக்கர் நிலத்தில் ஓர் அனாதை இல்லம் கட்ட இரண்டு மாதங்களுக்கு முன் நான் தீர்மானம் எடுத்தேன். பெருமைக்காக, பேருக்காக அனுபம் இதை சொல்கிறான் என்று பலர் நினைக்கலாம். அப்படி நினைப்பது சரி தான், அது உண்மையும் தான். அந்த நோக்கத்தோடு தான் சொல்கிறேன். யாராவது ஒரு நாலு பேர் எனது நல்ல நோக்கத்தை உணர்ந்தால், உதவினால் அது போதும் எனக்கு. நான் இதை விளம்பரப்படுத்தத் தான் இதை இங்கே சொல்கிறேன்.

கடந்த ஐந்து வருடங்களாக எந்த விருதுகளையும் நான் வாங்குவதில்லை, இருந்தாலும் விருது தந்து தான் ஆக வேண்டுமென்று அழைத்தால் கூட அந்நிகழ்ச்சிகளுக்கும் நான் செல்வதில்லை! ஏனென்றால் இப்போதெல்லாம் அங்கே கலையை, கலைஞர்களை பாராட்டிட நிகழ்ச்சிகள் நடத்தப்
படுவதில்லை. மாறாக அங்கே தொலைக்காட்சி விளம்பரத்திற்காக நடக்கின்ற வெறு ஒரு டி.வி. ஷோ! - தான் நடக்கிறது.

ஆனால் இங்கே, தாரே சமீன் பர் என்ற நல்ல ஒரு படத்தை பாராட்டி விருது கொடுக்கின்ற இனிய நிகழ்ச்சி என்று சொன்னதும் சந்தோஷமுடன் சென்னைக்கு வந்து இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றேன். இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எல்லோருக்கும் என்னுடைய இனிய வாழ்த்துக்கள், நன்றி...

... என்று பேசி முடித்தார்.

எவ்வளவு அழகாக ஒரு குறிப்பும் இல்லாமல் உண்மையை உண்மையின் அழகுடன் சொன்னார் இந்த நல்ல உள்ளம் கொண்ட இனிய நடிகர் அனுபம்கெர் என்று என் மனம் பாராட்டினது, உங்கள் மனம்?

உங்கள் கருத்துக்களை கேட்க ஆர்வமுடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

அன்புள்ளம் கொண்ட மூன்று மலர்கள்



அன்பர்களே,

தனது எழுபத்தி இரண்டு வயதில் தான் எனது தந்தை இறந்துபோனார் என்றாலும், அவர் இல்லாத என் வாழ்க்கையின், கடந்த பத்து வருடங்களில், அவர் என் மீது வைத்திருந்த பாசத்தால், அவரை நினைத்து என் மனம் உருகாத ஒரு நாள் கூட இருந்ததில்லை. இதை உணர்ந்த சிலரில் மூன்று பேர் என்னை தங்களின் சொந்த மகனாகவே நேசித்து வருகிறார்கள். அன்பு உள்ளம் கொண்ட அந்த மூவர், எனது ஆசிரியர் திரு மைக்கல் ராஜ் ஐயா அவர்கள், ஊடகச்செல்வர் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள், கலைமாமணி திரு வி.கே.டி பாலன் அவர்கள்.

ஆசிரியர் திரு மைக்கல்ராஜ அவர்களைப் பற்றி எனது வலைப்பூவில் எழுதினதை இங்கே வெளியிடுகிறேன்.

ஊடகச்செல்வர் திரு அப்துல் ஜப்பார் ஐயாவின் புத்தகத்தைப் பற்றி எழுதின கருத்துக்களை இங்கே வெளியிடுகிறேன்.

கலைமாமணி திரு வி.கே.டி. பாலன் ஐயாவைப் பற்றி எழுதினதை இங்கே வெளியிடுகிறேன்.

இந்த மூவரைப் பற்றியும் நீங்கள் வாசித்து உங்கள் பின்னூட்டங்களை இட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பாசமுடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

Sunday, August 17, 2008

வணக்கம்



அன்பர்களுக்கு வணக்கம்,

தாய் அன்போடு என்னை நேசிக்கும் சீனா ஐயாவின் வரவேற்பிற்கு மிக்க நன்றி. வலைச்சரத்தில் ஒருவார காலம் எனக்கு ஆசிரியர் பொறுப்பை தந்துள்ளதால் மிக்க மகிழ்ச்சி!!

பாசமுடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

ஏன் ??

இன்றைய இளைஞர்கள் அதிகமும் ஆன்மிகததில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். ஒரு கோவில் திருவிழா என்றால் அகமகிழ்ச்சியுடன் தங்களுடைய பணத்தை கொடுக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் என் தந்தை அவர்கள் ஒரு கருமாரி அம்மன் கோவிலில் கொடுத்து வந்த சிறியத் தொகைக்கு அப்படி ஒரு நன்றியினனத் தெரிவிப்பார்கள். சின்ன ஒரு விஷயத்திற்கு அவர்கள் அப்படி நன்றி சொல்வதைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். இப்போது பெரியவர்களை விட இளைஞர்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு கோயில்களுக்கு நன்கொடை கொடுத்து வருகிறார்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்களே, இதற்கு காரணம் என்ன என்று யோசித்து தயவாக உங்கள் பதில்களை சொல்லுங்கள், நண்பர்களே!!

அன்புடன்
என் சுரேஷ்
மேலும் வாசிக்க...

திரு சிவசுப்ரமணியன்


அன்பினியே தோழர்களே,

வணக்கம்..

சிவா,உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்றேன்... அவர் சொல்வதைக் வாசித்துக் கேளுங்கள். உங்களுடைய இனிய வாழ்த்துக்களால் அன்புடன் இந்த இளம் எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள்!!!

அன்புடன் என் சுரேஷ்


பெயர் சிவசுப்பிரமணியன்.
வயது: 25.
எனது சொந்த ஊர்: மாட்டுச்சந்தைக்கும், முறுக்கிற்கும் புகழ் பெற்ற மணப்பாறை

சிறிய வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம். எழுத தொடங்கியது காதலால். சிறிது சிறிதாக, கல்லூரியில் என்னை மேன்படுத்தியது சத்தியபால் என்பவர். என் கல்லூரி இதழ்களிலும், கல்லூரி போட்டிகளிலும் என்னை எழுத வைத்தவர் தான் சத்தியபால். நான் ரசிகனான முதல் கவிஞர் "காதல் பாடகன்" என்ற சத்தியபால் தான். 2006 ஆம் வருடம் என் வலைப்பூவை ஆரம்பித்தேன். 'அன்புடன்' குழும நன்பர்கள மற்றும் வலையுலக நன்பர்களின் பின்னூட்டங்களின் மூலம் என் எழுத்துக்களின் கூர்மையை கொஞ்சம் கொஞ்சமாக தீட்டிக் கொண்டு வருகிறேன்.

தற்போது நான் இருப்பது பெங்களூரில்(பணிநிமித்தமாக). ஒரு மனித வள மேன்பாடு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

நான் எழுதுபவை
என்னுடைய எழுத்துகளில் அதிகம் காணப்படுவது காதல். நான் எழுத் தொடங்கியது என் காதலால் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். "காதல்...காதல்...காதல்.." என்ற தலைப்பில் என் காதல் உணர்ச்சிகளை பதிவு செய்து வருகிறேன். நான் எழுத ஆரம்பித்த நாள் முதல் என்னை பெரிதும் ஆட்கொண்டது காதல் தான். எந்த காதல் எனக்கும் எழுதும் வரத்தை கொடுத்ததோ அந்த காதலுக்கு நான் அணிவிக்கும் மாலை தான் என் காதல் கவிதைகள்.

இப்போது கொஞ்சம் காலமாக கட்டுரை எழுத முயற்சி செய்து வருகிறேன். அதன் முதற்படியாக "நானும் என் தேவதைகளும்" என்ற தலைப்பில், இது நாள் வரையில் என் வாழ்வில் சந்தித்த, என்னை கவர்ந்த பெண்களை பற்றி எழுதி வருகிறேன்.

என் தேவதைகள் யார்? எனக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்னுடைய தேவதைகளாக நான் கூறப் போகும் பெண்கள் யார்? எப்படி எனக்கு தேவதைகளாக காட்சியளிக்கின்றனர்?

இவைதான் இந்த இழையின் தளம். எவ்வளவோ நாள் மனக் குடைச்சலில் நான் எழுத நினைதது தான் இந்த தலைப்பு. என் தேவதைகளா வலம் இந்த இழையில் வருபவர்கள் என் தாயார், பாட்டி, தங்கை, தோழிகள், காதலிகள்(???) என பலர்.

"என் பார்வையில்" என்ற வரிசையில், இந்த உலகம் பற்றிய எனது பார்வையை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறேன். என் கோபம், ஆசை, ஆச்சரியம், ஆதங்கம், வருத்தம் என என் எல்லா உணர்ச்சிகளையும் இந்த தலைப்பில் உள்ள பதிவுகள் தாங்கி நிற்கின்றன.

கவிதைகளும் கட்டுரைகளும் கலந்து ஒரு கதம்பமாக இருந்தாலும், அவை அனைத்தும் என் உணர்ச்சிகளின் வெளிப்பாடு தான். இந்த தலைப்பில் அரசியலும் உள்ளது, ஆன்மீகமும் உள்ளது, அறிவியலும் உள்ளது, தோழமையும் உள்ளது. நட்பை மையமாக கொண்ட என் கவிதைகளும் இதில் தான் வருகின்றன. என் தேடல்களும் இதில் தான் வருகின்றன. "தேடல்" என்ற தனி தலைப்பில் நம் மனித இனத்தை பற்றியும், இந்த உலகத்தின் தொடக்கம் பற்றியும், பல கலாச்சரங்கள் பற்றியும், சில விடுவிக்க முடியாத புதிர்கள் பற்றியும் எழுதி வருகிறேன்.

"Scribbles" என்ற தலைப்பில் நான் எழுத முயற்சித்த ஐந்து ஆங்கிலக் கவிதைகள் உண்டு. ஆங்கிலத்திலேயே சிந்திக்க மனம் ஒப்பாததால் அவை இன்னும் வளராமல் இருக்கின்றன.


என் வலைப்பூ: http://sivakumarz.blogspot.com/

எனக்கு பிடித்தவை

படிப்பது, எழுதுவது
புதிய நண்பர்களை தேடுதல்... நண்பர்களோடு அரட்டை அடித்தல்....
புகைப்படங்கள் எடுப்பது, சேகரிப்பது, வடிவமைப்பது..
சு-டோ-கூ மற்றும் காக்குரோ போன்ற எண்கணித விளையாட்டுகள் விளையாடுவது

எனது வலைப்பூ : http://sivakumarz.blogspot.com
பிடித்த கவிதைகள்

முதல் காதல் - http://sivakumarz.blogspot.com/2008/07/blog-post_08.html

மெய் பொய்யாக - http://sivakumarz.blogspot.com/2008/05/blog-post_07.html
எதிர்பார்ப்புகள் - http://sivakumarz.blogspot.com/2007/01/blog-post_25.html

கால இயந்திரம் - http://sivakumarz.blogspot.com/2008/03/blog-post_20.html

எனது ஈழக் கனவு - http://sivakumarz.blogspot.com/2006/10/blog-post_15.html

பிடித்த கட்டுரைகள்


திருநங்கையர் - http://sivakumarz.blogspot.com/2008/06/blog-post_27.html

தேடல் - காலம் - http://sivakumarz.blogspot.com/2008/04/blog-post_25.html

தனியார் செய்தி நிறுவனங்கள் - அவசர உதவிக்கா? ஆதாயத்திற்கா?
பெங்களூர் குண்டுவெடிப்பு - மாறுபட்ட பார்வை - http://sivakumarz.blogspot.com/2008/07/blog-post_26.html

தேடல் - நாம் மட்டும் தானா இந்த அண்டத்தில்? - http://sivakumarz.blogspot.com/2008/05/blog-post_31.html

தேடல் - துவக்கம் - http://sivakumarz.blogspot.com/2008/05/blog-post_09.html

தேடல் - மனிதன் - http://sivakumarz.blogspot.com/2008/05/blog-post_21.html
மேலும் வாசிக்க...

கவிஞர் மதுமிதா


என்னுயிர் தோழர்களே,

கவிஞர் மதுமிதா அவர்கள், தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி காந்திஅரங்கசாமி ராஜாவின் பெயர்த்தியாவார். தந்தை ரகுபதி ராஜா; தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாதராஜா.

எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்க்ருதத்தில் பட்டயப் படிப்பும் படித்துள்ளார்.

1. மஹாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, 'நீதி சதகம்' என்ற நூலாக வெளிவந்தது (2000)

2. 'மௌனமாய் உன்முன்னே' என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார் (2003)

3. 'பர்த்ருஹரி சுபாஷிதம் ' சமஸ்கி்ருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின் தமிழாக்க நூல் செப்டம்பர் 2005 இல் வெளிவந்தது.

4. 'நான்காவது தூண்' 'பதினெட்டு பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்'களின் தொகுப்பு (2006)

5. 'தைவான் நாடோடிக் கதைகள்' (2007)

6. நிலாச்சாரல் மின்னூலாக இவரின் 'பாயுமொளி நீ எனக்கு' கவிதை நூலை வெளியிட்டுள்ளது.

கல்கி, அமுதசுரபி, மங்கையர் மலர், அமீரக ஆண்டு மலர், படித்துறை, யுகமாயினி, வார்த்தை ... மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி,களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன.

படைப்புகள் வெளியான இணைய இதழ்கள், இணைய தளங்கள்:

மரத்தடி, தமிழ் உலகம், உயிரெழுத்து, சந்தவசந்தம், அன்புடன், ஈ.சுவடி, தமிழாயம், எழுத்தும் எண்ணமும் ஆகிய மடலாடற்குழுக்களிலும் சிஃபி தமிழ், திசைகள், நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம், பதிவுகள், கீற்று, தட்ஸ் தமிழ், தமிழ்நெஞ்சம் ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன.
பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதை வாசித்துள்ளார்.

தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் என்ற வலைப்பூவையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.

இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

http://www.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2006/sep/10/14
http://www.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2006/sep/10/15

இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்விஎன இயங்கி வருகிறார். இராஜபாளையத்தில் 'இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள், சிறுவர் நூலகம்' அமைய முக்கியகாரணியாய் இருந்தவர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் தமிழுலகில் கலக்கோகலக்கு என்று கலக்கிக்கொண்டிருப்பவர்!

"இனி ஒரு விதி செய்வோம்" என்ற தலைப்பில் கவிஞர் மதுமிதாவின் இந்த கவிதையை வாசித்துப் பாருங்கள். இன்னமும், ஏழ்மையில் தவிக்கும் பலருக்கும், "விடியல்" என்றால் என்னவென்று தெரியவில்லை. பலம், பணம் இருப்பவன் இல்லாதவனை ஏளனம் செய்து அடிமையாக்கி கேவலப்படுத்தும் கொடுமை இன்னமும் தீர்ந்த நிலை இல்லாத உணமையை உணர்ந்த கவிஞர், தனது கவலைகளை எப்படி எழுதி இருக்கிறார் என்று பாருங்கள்! இந்த கவிதையை எழுதும்போது ஒரு வேளை கவிஞரின் பேனாவால் கவிதை எழுதின காகிதம் கிழிந்திருக்கலாம். பேனாவின் நுனி உடைந்திருக்கலாம். இவர்களின் கண்ணீர் ஏட்டில் எழுதின எழுத்துக்களைக் கூட நனைத்திருக்கலாம். இந்த கவிதையை உற்றுப்பார்த்தால், இவரின் அன்பான உள்ளத்தையும், சமூகம் மேல் இவர் கொண்ட நேசத்தையும் காணலாம். வலைப்பு யான் ஆரம்பிக்க எனக்கு உபதேசம் செய்து உதவின இந்த கவிஞர் மதுமிதா அவர்களுடைய ஒரு கவிதையை முதன் முதலாக ஆசிரியர் தகுதி கிடைத்ததும் வெளியிடுவதில் என் மனம் நன்றியால மகிழ்கிறது!!! வாருங்கள் தோழர்களே! கவிஞர் மதுமிதா அவர்கள், "ஒரு விதி செய்வோம்" என்ற தலைப்பில் என்ன சொல்ல வருகிறார் என்று பாருங்கள். அதற்கு பிறகு அவருடைய "மழையும் மனதும்" என்ற கட்டுரையை வாசித்துப்பாருங்க்கள். அன்புள்ளம் கொண்டு பின்னூட்டங்களால் இந்த கவிஞரை போற்றுங்கள்!!!

ததும்பும் தோழமையுடன்
என் சுரேஷ்


இனி ஒரு விதி செய்வோம் - கவிஞர் மதுமிதா

ஒரே ஒருமணிநேரம் ம‌ல‌ம் அள்ள‌ட்டும்
ஒரே ஒருமணிநேரம் மனிதரை லிப்டில் ஏற்றி இறக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் சிக்னலில் ஒழுங்கு செய்யட்டும்
ஒரே ஒருமணிநேரம் ரேஷ‌ன்க‌டை வ‌ரிசையில் நிற்க‌ட்டும்

ஒரே ஒருமணிநேரம் செருப்பில்லாம‌ல் ந‌டுப்ப‌க‌லில் தார்சாலை இட‌ட்டும்
ஒரே ஒருமணிநேரம் ஹோட்டலில் பாத்திரம் கழுவட்டும்
ஒரே ஒருமணிநேரம் மண்ணை உழுது விதைக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் அசையவியலா குழியில் இற‌ங்கி துணி நெய்ய‌ட்டும்

ஒரே ஒருமணிநேரம் பனி இரவில் முழுக்க முழுக்க மழையில் நனையட்டும்
ஒரே ஒருமணிநேரம் புயல்காற்றில் கட்டுமரமேறி மீன்பிடிக்கச் செல்லட்டும்
ஒரே ஒருமணிநேரம் தங்கம் உருக்கி வடிவமைக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் எங்கேனும் ஏதேனுமொரு சேவை செய்யட்டும்

ஒரே ஒருமணிநேரம் அரசியல் மேடைக்குகீழே பார்வையாளனாய் கவனிக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் அணுக்கதிர் உலையில் பணிபுரியட்டும்
ஒரே ஒருமணிநேரம் சேல்ஸ் ரெப்ரஸண்டாகட்டும்
ஒரே ஒருமணிநேரம் மக்கும் மக்காத குப்பையைப் பிரிக்க‌ட்டும்

ஒரே ஒருமணிநேரம் தலையில் செங்கல் சுமக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் எஸ்டேட்டில் கூலிபணிக்காய் ஏறி இறங்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் கடற்கரையில் சுண்டல் விற்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் வாகனங்கள் கடக்கும் ந‌டைபாதையில் உற‌ங்க‌ட்டும்

ஒரே ஒருமணிநேரம் குளிர்மலையில் தேசம் காக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் சாதிமத வன்முறை கிளப்பாதிருக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் செய்யாத வாக்குறுதி கூறாதிருக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் உண்மையை மட்டும் பேசட்டும்

பிற‌குதேர்ந்தெடுக்கலாம் தலைமைக்கான ஒரு அர‌சிய‌ல்வாதியை
- மதுமிதா

கவிஞர் மதுமிதாவின் இந்த கட்டுரையை வாசித்தால் நமது மனமும் மழையால் நனையும்!!!

மழையும் மனசும்...

திடீரென்று வானம் கருமை போர்த்தி மூடிக்கொண்டு, காற்றடிக்க காற்றடிக்க, மண்வாசனை எழுப்பியபடி மழை பொழிய ஆரம்பித்த கணம் மனசு முழுக்க சிறகடிக்க ஆரம்பித்துவிடும். கட்டிப்போட முடியாது பின்னே.

மழை பெய்யும் ஒருநாளில் எதேனும் ஒரு சிறுமி எங்கோ ஒரு இடத்தில் அரிசி எடுத்துத் தின்றால் பெரியவர்கள் சொல்வதுண்டு 'அரிசி சாப்பிடாதே. கல்யாண நாளில் மழை வரும்.' எத்தனை பேரின் திருமணநாளில் மழை பெய்திருக்கிறது என்பதற்கான கணக்கு கைவசமில்லை.

வெயிலுக்கும், மழைக்கும் கல்யாணம் என்று சிறுவர்கள் பாடுவதுண்டு.

வெயிலும் தூறலும் இணைய கதிரவனுக்கு எதிர் வானில் வானவில் அமைவது அழகிலும் அழகு.

வெண்ணிறஒளி முப்பட்டகத்தில் பட்டு, நிறப்பிரிகையாய் சிதறும் ஏழு வண்ணங்களாய். அதுபோல் சூரியனின் வெண்ணிற ஒளி மழையின் துளியில் பட்டு பிரிகையில் வெளிப்படும் ஏழுவண்ணமே வானவில் என்று படிக்காதவர் கிடையாது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு. என்னும் வானவில்லின் நிறங்களை நினைவில் கொள்ள 'vibgyor' என்று சொல்வது போன்று 'ஊகநீபமஆசி' என்றும் சொல்வதும் உண்டு.

'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை'என்ற குறளை மனப்பாடம் செய்து சொல்லி ஆசிரியரிடம் பாராட்டு பெற்ற மகிழ்வும், வகுப்பில் செல்வாக்கு அதிகரித்த விதமும் மழையை இன்னும் நேசிக்கச் செய்தது.

'காயப்போட்ட துணியை நனையாமல் எடுத்து வா', 'வத்தல், கோதுமை வாரி வை', 'இரைசல் உள்ளே வருது. ஜன்னல் மூடு' இப்படி மழை வந்தால் எவையெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும் என்ற அறிவும் வளர ஆரம்பித்தது.

ஆனால், எல்லாவற்றையும் மீறி, மழை எழுப்பும் ஒலி ஆடுகள் நடை பயிலும் ஒலியை ஒத்திருப்பதாக எழுதிய கவிஞன் முதலில் நினைவுக்கு வர, கவிதை வரிகள் தறிகெட்டு ஓட ஆரம்பிக்கும். அடக்கி வைப்பதற்குள் பெரும் பாடாகிவிடும்.

'A Flock of Sheep that leisurely pass by one after oneThe Sound of Rain.....'

தொடர்ந்து பாரதியின் 'தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்' உணர்வலைகளை எழுப்பி விட்டுவிடும்.

உடன் கைகள் கவிதை எழுத பரபரக்கும். பலநூறு கவிதைகள் இப்படியரு மழைப்பொழுதில் எழுதப்பட்டவையே.

ஒரு முறை குழந்தைகளுக்காக உடை எடுக்க வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் மழை வலுத்து விட்டது. கடையில் வாங்கிய ஜவுளியை, கடைப்பையனிடம் வீட்டில் கொண்டு வந்து தந்து விடுகிறோம் என்று சொன்னதாலும், மாலை 6.30க்கு மேல் ஆகிவிட்டதாலும் நடந்தே வீட்டுக்குச் சென்றுவிடலாம் என முடிவெடுத்து இறங்கிய கணம் மழை தூறல் ஆரம்பித்தது. விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று மழையில் நனைந்தபடி கடையிலிருந்து இறங்கி விட்டோம். உடன் வந்தது எனது நாத்தனார்.

மழை அதிகமாகக் கொட்ட ஆரம்பித்து விட்டது. கடைகளைக் கடந்து, ஒரு தெருவுக்குள் நுழைகையில் மின்சாரமும் நின்றுவிட இருள் இருள் இருளைத்தவிர வேறு எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை. 'வான் மேகம், பூப்பூவாய் தூவும்' என்று என்னையறியாமல் பாடல் வெளிப்பட்டது. 'நல்லா மாட்டிக்கிட்டோம். இப்போ உனக்கு பாட்டுதான் கேட்குதா' என்றார் அவர். 'அண்ணி. நம்மைப் பார்ப்பதற்கு ஆளில்லை. இப்போதான் பாடவோ ஆடவோ முடியும்' என்று நான் சொன்னதும் அமைதியாகிவிட்டார் அவர். பாதி தெரு கடப்பதற்குள் மழையின் நீர் முழங்கால் அளவில் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. பாடலும், ஆடலும் அந்த தெருவின் அந்தக் கோடி வரையில் மட்டுமே. அதற்குள் மின்சாரம் வந்துவிட நனைந்தும், ரசித்தும், நடந்தும் வந்து சேர்ந்தோம். வீட்டில் நனைந்து வந்ததற்கு மண்டகப்படி கிடைத்தது வேறு விஷயம்.

ஒரே ஒருமுறை ஆலங்கட்டி மழை பொழிவதை, வயது வித்தியாசமின்றி அனைவரும் வீதியில் நின்று பார்த்தது அதிசய காட்சி. பெரிய பெரிய கட்டிகளாக விழுந்தன. மேலே பட்டால் கட்டாயம் வலிக்கும் அளவில் பெரிய கட்டிகள் விழுந்தன.

மழையில் நனையும் ஆசையை கட்டுப்படுத்தும் கலை இப்போதெல்லாம் கைவந்து விட்டது.

பிறகு வந்த நாட்களில் மழை என்றவுடன் சாப்பிடுவதற்கு ருசியாக சூடாக வடையோ, அடையோ ..... சமைப்பது பழக்கமாகிவிட்டது.

எல்லாவற்றையும்விட காதலர்களுக்கே (கல்யாணமான காதலர்களுக்கும் பொருந்தும்) மழையினால் கொண்டாட்டம். வார்த்தைகளால் எழுதி முடித்துவிட இயலாது அந்த ரசத்தை. ஆனால் பிரிந்திருக்கையில் மழை கொட்டினால் போச்சு. சோகம் பிழிந்தெடுத்துவிடும், உயிரையே.

நடக்காத ஒன்று நடந்தால், இன்றைக்கு மழை கண்டிப்பா வரும் என்று சொல்வது எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. நம்புவது போல் இல்லாமல் ஒன்றை யாரேனும் கூறினால், அருகில் இருப்பவர் வாய்திறவாது மேலே ஆகாயத்தைப் பார்ப்போரும் உண்டு. 2020 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றதால்கூட இன்றைய இந்த மழை வந்திருக்கலாம்.

வானம் பார்த்த பூமிக்கு எஜமானனான விவசாயிக்கு மழை தேவை. ஆனால், மழையின் அத்தியாவசிய தேவை பலருக்கும் இருந்தாலும், விழாக் காலத்திற்கும், வியாபாரத்திற்கும் மழை சிரமம் கொடுப்பதாகவே இருக்கிறது.

சில விழாக்களிலும், சில நல்ல நாள் என்று சொல்லப்படும் நாட்களிலும், இந்த நாளில் ஒவ்வொரு வருடமும் மழை வரும் என்று சொல்வதுமுண்டு. அந்த நாட்களில் மழை பெய்வதும் உண்டு. மாற்றி மறுநாள் பெய்வதும் உண்டு.

'மாதம் மும்மாரி பொழிகிறதா' என்று அன்றைய அரசர்கள் அமைச்சர்களைக் கேட்பதாகச் சொல்வதுண்டு. இன்றைய நிலை எப்படியோ?

மழை என்ற கொடை இல்லையென்றால் உலகம் செழிக்க முடியவே முடியாது. ஒண்ணுமில்லை பாருங்க. மழை பட்டவுடன் பக்கத்தில் இருக்கிற செடியையோ, மரத்தையோ பாருங்க எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து தண்ணீர் ஊற்றியிருந்தாலும், இந்த அளவு செழிப்பு தெரியாது. அதன் அந்த நிறமே ஒளிவட்டம் போட்டாற்போல் ஜொலிக்கும்.

என்னதான் வெயில் அடித்தாலும் சலிக்காது வெளியில் தலை காட்ட முடியும் மக்களால், தர்மத்துக்குப் பெய்யும் மழையில் வெளியே தலைகாட்ட முடியாது போய்விடும். இது எப்போதும் வியப்பான விஷயம்.

அறிவியலோ, புவியியலோ பாடத்தில் படிப்பதை விட படம் வரைவது மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த மழையின் சுழற்சியினை வரைவது எனக்குப் பிடித்தமான ஒன்று. மழை மேகம், அதிலிருந்து தூறல், அது பொழிந்து இணைந்து நதியாகி, கடலில் சேரும் படம். பிறகு அம்புக்குறியிட்டு கடலிலிருந்து மேகத்துக்கு செல்வதுபோல் வரைவது. அதேபோல் மேப்பில் மழை பொழியும் பிரதேசங்களைக் குறிப்பது, கடல் நிறத்தினை நீலமாய் வரைவது பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கும் என்று அதற்கான காரணம் தெரியாது.

இது மாதிரி ஒரு பதிவு ஏதோ ஒரு நாளில் எழுதின நினைவு இன்றைக்கு மழையின் வேகத்தில் திடீரென்று நினைவுக்கு வர தேடிப்பார்த்தேன். தலைகீழாய்க் கணினியைத் தட்டிப்பார்த்துத் தேடியும் காணோம். உண்மைதாங்க. சொல்றதுல என்ன வெட்கம். கோ. கணேஷ் தமிழ்மணத்துல நட்சத்திர பதிவு ஆரம்பிச்ச உடனே, ஒரு ஒரு மாதத்திற்குள்ளே ஏழு பதிவு எழுதி சேர்த்து வைத்திருந்தேன். எவ்வளவு சின்சியர் பாருங்க. தமிழ்மண நட்சத்திரமாக திடீரென்று அழைத்து விட்டால் எப்படி எழுதி உடனே போட முடியும். அதுக்கு முன்னேற்பாடாதான். இந்த இடத்தில யாரும் சிரிக்கக்கூடாது ஆமா. ஒரு மனுஷிக்கு தன்னம்பிக்கை இருக்கக்கூடாதா என்ன. எழுதி பத்திரப்படுத்திய அதையே மறந்திருக்கிறேன். ஆனாலும் இவ்வளவு மறதி ஆகாது. ஆனா பாருங்க இந்த மூணு வருஷத்தில இதுவரைக்கும் நம்ம கணினில வைரஸ் சுனாமி வந்து நான்கு முறை தாக்கினதில மொத்தமும் அழிஞ்சே போச்சு போலிருக்குது. திரும்ப அதையே எழுதி வைக்கவும் முடியாம போகட்டுமென்று விட்டு விட்டேன்.

இந்த மழையில் உடனே எழுதி பதிவு செய்யும் ஆவல் எழும்ப எழுத ஆரம்பித்தாகி விட்டது.

சென்ற வாரம் வெங்கட்நாராயணா சாலை வழியே வந்தபோது, கோவிலின் எதிர்புற ப்ளாட்பாரத்தில் கம்பியைப் பிடித்து நின்று கொண்டு ஒரு குழந்தை 'அம்மா அம்மா' என அழுது கொண்டிருந்தது.

'என்னம்மா. அம்மா எங்கே போயிருக்கிறாங்க'. என்று கேட்டால் திரும்பிப் பார்க்கணுமே அந்தக் குழந்தை. 'அம்மா' என்று மட்டும்தான் சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்தக் குழந்தையின் பார்வை எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஐந்து நிமிஷம் நாங்கள் மூவர் சேர்ந்து எவ்வளவோ போராடியும் எங்களை நோக்கி அக்குழந்தையின் பார்வையைத் திருப்ப இயலவில்லை. அதற்குள் அரவம் கேட்டுத்திரும்பினால் ஒரு குழந்தை தவழ்ந்து வந்து கொண்டிருக்கிறது இந்தப் பக்கம்.

'திக்' கென்றாகிவிட்டது எங்களுக்கு. கொஞ்சம் தவறினால் குழந்தை சாலையில் விழுந்துவிடும். அந்த சாலையோ நெரிசலான சாலை.

அருகே ஸ்டாப்பில் அம்மாவும், மகளுமாக நின்ற இருவர் இக்குழந்தைகளைப் பார்த்து எதுவோ பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் மூவர், இன்னும் இரு பெண்கள் சாலை வழியே நடந்தவர்கள் நின்று விட்டனர்.
நின்று அழுதுகொண்டிருந்த அக்குழந்தையின் அருகே மூன்று பைகள். தவழ்ந்து வந்த குழந்தை அப்படியே அங்கே அமர்ந்து கொண்டது. இன்னும் ஒரு அடியில் அங்கே ஒரு துணி விரிக்கப்பட்டு அதில் ஒரு குழந்தை அசந்த தூக்கத்தில்.

தவழும் குழந்தையை தூக்கி அந்தப் பக்கம் வைத்துவிடலாம் என்றால் அக்குழந்தை, தனது அக்காவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வீட்டிற்கு அவசரமாய் திரும்ப வேண்டும். ஆனால், அக்குழந்தைகளை அப்படியே விடமுடியாது. என்ன செய்வது என நிற்கிறோம்.

எனது மகள், தங்கை, நான் மூவரும் அந்தக் குழந்தையிடம் 'அம்மா வேணுமா. எங்கே போயிருக்கிறாங்க. ஏதாவது சாப்பிடுகிறாயா. அம்மா இப்ப வந்துடுவாங்க. அழாதம்மா..................................' என்ன சொல்லியும் எங்களால் சமாதானம் செய்ய இயலவில்லை.

அதற்குள் அந்த அம்மாவும், பெண்ணும் அருகில் வந்தனர். 'அம்மா எங்கேயோ போயிருக்கிறார்கள் போலிருக்கிறது. எப்படி போவது இந்தக் குழந்தைகளை இப்படியே விட்டு...' என்று சொல்வதற்குமுன் 'அம்மா இல்லீங்க, குழந்தையோட அப்பா இப்படி போனாரு, குழந்தைட்ட அந்த மூணு பைய பாக்கச் சொல்லிவிட்டு' என்று குழந்தை பார்த்துக் கொண்டிருந்த திசையில் கைகாட்டினார்.

ஏழு பேர் இருக்கிறோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படி மூன்று குழந்தைகளை தனியே விட்டுப் போனார்கள் பெற்றோர் தெரியவில்லையே என்று செயலிழந்து நின்று கொண்டிருக்கையில் குழந்தையின் அழுகை நின்றது. பார்த்தால் ஒரு ஆள் (தகப்பன் போலும்) கையில் ஏதோ கொண்டு வந்து அந்த இரண்டு குழந்தைகளையும் கண் இமைக்கும் நொடியில் படுத்திருக்கும் குழந்தை அருகில் அழைத்து வந்துவிட்டார். அழுகை சத்தமே இல்லை.

மற்ற ஐந்து பேரும் ஆசுவாச பெருமூச்சு விட்டு போய்விட்டார்கள்.

சரி குழந்தைகளுக்குப் பசி என்று ஏதேனும் வாங்கப்போயிருப்பார் போலிருக்கிறது. நல்லவேளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார் என்று வாய் திறக்கவியலாமல் நாங்கள் மூவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

என் மகள் கேட்கிறாள் 'என்னங்க இப்படி குழந்தைங்களை விட்டுட்டுப் போயிட்டீங்க. அம்மா அம்மான்னு அந்தக் குழந்தை அழுகிறது. கொஞ்சம் பாத்துக்கக் கூடாதா?'

அப்போதுதான் பார்க்கிறேன் அவரின் கையில் உள்ள பாத்திரத்தில் ஒரே ஒரு டீயின் அளவில் ஒரு திரவம். இதை எப்படி மூன்று குழந்தைகளுக்குத் தருவார்.

'குழந்தையோட அம்மா கோயம்பேடுலே வேலைக்குப் போயிருக்கு. நான் கோவில்ல செருப்பு பாத்துக்கறேன். என்ன பண்றதும்மா. இடையிலே வந்து வந்து குழந்தைங்களை பாத்துட்டுதான் போவேன். என்ன பண்றது' என்றார்.

'அம்மா எதாவது அவங்களுக்கு சாப்பிட வாங்கிக்கொடுக்கலாம்' என்றாள் மகள்.

அந்த மனிதன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.'கஷ்டம்தாம்மா' என்று சொல்லியபடி. பர்ஸ்ஸைத் திறந்து கையில் கிடைத்த பணம் எடுத்துக் கொடுத்து வந்தேன்.

இரண்டாவது அடி எடுத்து வைக்கையில் தங்கையும், மகளும் ஒன்று போல் கூறியது. 'சாப்பிட ஏதேனும் வாங்கித் தந்திருக்கலாம். ஏன் நூறு ரூபாய் கொடுக்கணும். அந்த ஆள் அருகில் குடிவாசனை இருந்தது.'

இப்போது மழை பெய்கையில் இந்தப் பாவியால், அந்தக் குழந்தைகளை நினைத்துக் கொண்டு, மழையில் சிறிதும் நனையாது, சரியாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேறு எதுவும் செய்ய இயலா நிலையில், தட்டச்ச மட்டுமே முடிகிறது.

இன்னும், நடேசன் பூங்காவில் சுண்டல் விற்கும் சிறுமி இன்று என்ன செய்வாள் என்னும் கேள்வி குடைவதையும் தவிர்க்க இயலவில்லை.

இதுபோல் எத்தனை தவிக்கும் உயிர்களோ.

மழை இன்ப நினைவுகள் மட்டுமே கொண்டுவருவதில்லை.

கவிஞர் மதுமிதா

கவிஞர் மதுமிதாவின் படைப்புகள் குறித்து இணையத்தில் வெளிவந்த சில இணைய லிங்க்குகள் இணைத்துள்ளேன், பாருங்கள் அன்பர்களே!

மௌனமாய் உன்முன்னே
http://tamilnenjam.com/04_2006/intro_1.htm

பர்த்ருஹரி சுபாஷிதம்
http://jeyanthisankar.blogspot.com/2005/11/blog-post_30.html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60709202&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60803202&format=html


நான்காவது தூண்
http://vizhiyan.wordpress.com/2007/08/28/fourth-pillar-review/

http://www.tamiloviam.com/unicode/02280814.asp

http://muthukamalam.com/muthukamalam_puthakaparvai4.htm

பாயுமொளி நீ எனக்கு
http://tamil.sify.com/art/pks/fullstory.php?id=14336868


Kavidhai Blog நீங்கா இன்பம்
http://madhumithas.blogspot.com/

அன்புடன்
என் சுரேஷ்

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது