நன்றி ! எனக்கு மிகவும் பிடிச்ச பதிவுகளின் பதிவர்
நண்பர்களே
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
நண்பர்களே
Posted by
Suresh
at
6:42 AM
15
comments
கடந்த ஒரு வார காலமாக நண்பர் சுரேஷ் ஆசிரியப் பொறுப்பினை அருமையான முறையில் நிறைவேற்றி இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அவர் பல அரிய இடுகைகளையும் பல பதிவர்களையும் அறிமுகப்படித்தி உள்ளார். தனது நிச்சயதார்த்தப் பணிகளுக்கு இடையேயும் ஏற்ற பொறுப்பினிற்காக நேரம் ஒதுக்கியமைக்கு பாராட்டுகள்.
அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவினிலேயே இனிய இல்லற வாழ்வினில் ஈடுபடவும் நல்வாழ்த்துகள்.
அடுத்து 31.08.2009ல் துவங்கும் வாரத்திற்கு நண்பர் சக்கரை சுரேஷ் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் மென்பொருளாளராகப் பணியாற்றுகிறார். இனிப்பானவரானதால் சக்கரை சுரேஷ் என அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய முழு விவரம் அறிய ஆசைப்படுபவர்கள் இங்குசெல்க.இவர் சக்கரை என்னும் பதிவினில் எழுதி வருகிறார்.
அருமை நண்பர் சுரேஷ்குமார் என்ற சக்கரை சுரேஷினை வலைச்சரம் சார்பினில் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன். இனிய இடுகைகளை அள்ளித் தருக என வேண்டுகிறேன்
சீனா
Posted by
cheena (சீனா)
at
10:09 PM
6
comments
Posted by
Suresh Kumar
at
2:59 PM
8
comments
பதிவுலகம் பரந்து விரிந்தது இங்கே பதிவுகளை தேடினால் கிடைக்காத பதிவுகளே இருக்க முடியாது . நிறைய பதிவர்கள் பதிவுகள் எழுதினாலும் தங்கள் பதிவுகளை வாசகர்கள் மத்தியில் கொண்டு செல்வது எப்படியென்று தெரியாமல் இருப்பார்கள் . நான் கூட முதலில் பதிவுகள் எழுதிய பொது திரட்டிகளை பற்றி தெரியாது . இன்று கூட பல புதிய பதிவர்களுக்கு திரட்டிகள் பற்றியும் அதில் பதிவுகளை இணைப்பதை பற்றியும் அறியாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக வலைச்சரம் இருக்கிறது என்றால் மிகையாகாது .
இவர் ஒரு கவிஞர் நல்ல ஒரு கவிதை படைப்பாலம் இவர் பெயர் கூட என் பெயர் தான் சுரேஷ் . இவர் என் சுரேஷின் உணர்வுகள் என்ற தளத்தில் தன்னுடைய படைப்புகளை எழுதி வருகிறார் .இவரின் கவிதைகளில் பேனா கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஓன்று .
இவர் ஒரு நல்ல விமர்சகர் நல்ல ஒரு எழுத்தாளர் இவர் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார் . இவர் எனது ஊரின் பக்கத்து ஊரை செர்ந்த்டவர் இப்போது பெல்ஜியத்தில் பணியாற்றி வருகிறார் . யோ . திருவள்ளுவர் இவர் ஆலமரம் என்ற தளத்தில் எழுதி வருகிறார் . இவர் எழுதிய பதிவில் நான் பரிந்துரைக்கும் பதிவு ஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்! மற்றும் இவர் சமீபத்தில் ஈழம் இன படுகொலையை பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் முடிந்தால் அந்த புத்தகத்தையும் வாங்கி படித்து பாருங்கள் . நூல் அறிமுகம் : ஈழம் இனபடுகொலைகளுக்கு பின்னால்ஆழி பதிப்பகம்
தோழி உமா சக்தி இவர்கள் இவள் என்பது பெயர் சொல் என்ற தளத்தில் எழுதி வருகிறார்கள் . இவரின் பதிவுகளில் உயிரின் ஓசை பதிவு நல்ல ஒரு கவிதை .
என் பக்கம் என்ற தலைப்பில் ஓவியா அவர்கள் எழுதி வருகிறார்கள் இவர் எழதிய பதிவுகளில் நான் ரசித்த துபாய் என சில பாக்னகளாக எழுத்து துபாய் மற்றும் துபாயின் அழகை பற்றி நமக்கு தெரிய வைக்கிர்றார் . நான் ரசித்த துபாய்
நேற்று பதிவிட வேண்டிய நான் நேரமின்மையின் காரணமாக இப்போது பதிவிட வேண்டிய நிலை ஏற்பட்டது . இன்று காலை பன்னிரண்டு மணிக்கு எனக்கு திருமண நிச்சய தார்த்த நிகழ்ச்சி நடை பெறுகிறது என்பதை நண்பர்களாகிய உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . நன்றி மீண்டும் சந்த்திப்போம்.
Posted by
Suresh Kumar
at
9:25 AM
16
comments
Posted by
Suresh Kumar
at
4:58 PM
16
comments

Posted by
Suresh Kumar
at
4:26 PM
14
comments

இன்றைய நாளை இத்துடன் முடித்து கொள்கிறேன் நாளை மீண்டும் அறிமுகங்கள் தொடரும் அதுவரை உங்கள் தோழன் . உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகூட்ட உதவும் எதிர் பார்கிறேன் நன்றி
Posted by
Suresh Kumar
at
11:33 PM
22
comments
Posted by
Suresh Kumar
at
12:40 AM
39
comments
அன்பின் பதிவர்களே
கடந்த ஒரு வார காலமாக, ஏற்ற பணியினை, சிறப்பாகச் செய்து நம்மிடமிருந்து பிரியா விடை பெறுகிறார் அன்பின் லோகு. இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ என்பது மறு மொழிகள் பெற்றுள்ளார்.
இவரது இடுகைகள் விதி முறைகளின் படி, துறை வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதப்பட்டிருந்தன. சுய அறிமுகம், காதல் கவிதை எழுதும் கவிஞர்கள், அறிவு தொடர்பான புதிர்கள், உடல்நலம், கணினிக் கல்வி, இயறகை, குழந்தைவளர்ப்பு என பல நல்ல இடுகைகளை அறிமுகப் படுத்தி பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள உதவி இருக்கிறார்.
கடும் உழைப்பின் பலனை மகிழ்வுடன் ஏற்று - நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரக் குழுவின் சார்பாக வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
அடுத்து 24ம் நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் சுரேஷ் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் "என் பக்கங்கள் - சுரேஷ்" எனற் பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ நூற்று அறுபது இடுகைகள் எழுதி உள்ளார். மாலத்தீவினில் பணி புரிகிறார். இவரை வருக வருக - பல நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக என வரவேற்கிறோம்.
நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்
சீனா
----------------
Posted by
cheena (சீனா)
at
10:20 PM
10
comments

அனைவருக்கும் வணக்கம்,
வலைச்சரத்தில் இந்த வாரம் முழுதும் எழுதும் பேறு பெற்றேன். அதைஇயன்ற அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். இருந்தாலும் இதற்கு முன் எழுதியவர்களுக்கு கிடைத்த பின்னூட்ட எண்ணிக்கையை ஒப்பிடும் போது என் எழுத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியது நிறைய இருக்கிறது என தெரிகிறது.
இந்த வாரம் முழுவதும், என் எழுத்தை படித்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனக்கிந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சிறந்த வலைப்பூக்களை அறிமுகப்படுத்தும் வலைச்சரத்தின் சேவை இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதில் ஐயமில்லை. தொடர இருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.
விடை பெறுகிறேன்.
நன்றி
அன்புடன்
Posted by
லோகு
at
3:57 PM
7
comments
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே'
குழந்தை பருவம்
தான் ஒரு மனிதனின் குண நலன்களை தீர்மானிக்கிறது. பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்.
குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.
அந்த கலையை இலகுவாக இணையத்தில் கற்று தரும் சில வலைப்பூக்களை பற்றி இந்த இடுகையில் காணலாம்.
பெற்றோர்களுக்கான வலைப்பூ. குழந்தை வளர்ப்பு குறித்த பல அத்தியாவசிய தகவல்களை சொல்கிறது. பல பிரபல பதிவர்களால் நடத்தப்படும் இந்த தளம் ஒரு சிறந்த சேவை. குழந்தைகளுக்கான நீதி கதைகள், அவர்களிடம் காட்ட வேண்டிய அணுகுமுறைகள், சிறுவர்களுக்கு உகந்த உணவு பழக்கங்கள் என பல உபயோகமான கட்டுரைகள் கொண்டுள்ள தளம்.
குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டியதின் அவசியத்தை விளக்கும் இடுகை, குழ்ந்தைகளின் பற்கள் பாதுகாப்பு, கற்றுக் கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள் என பல சிறப்பான இடுகைகள் உள்ளன. படித்து பயன் பெறுங்கள்.
இதுவும் பல பிரபல பதிவர்களால் நடத்தப்படும் பதிவு. இதிலும் குழந்தை வளர்ப்பு, குழந்தை உணவு, குழந்தைகளுக்கான கதைகள், புத்தகங்கள் என பல உபயோகமான இடுகைகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமின்றி தாய்மார்களுக்கான ஆலோசனைகளும் உள்ளன. அம்மாக்கள் படிக்க வேண்டிய தளம்.
தடுப்பூசி என பல நல்ல நல்ல இடுகைகள் உள்ளன..
வளரும் குழந்தைகளுக்கான ஒரு தளம். குழந்தைகளுக்கான பாடல்கள், விளையாட்டுக்கள், கதைகள், கைவினை பொருள் செய்தல் என பல சுவையான பகுதிகளை கொண்டுள்ளது. நீதிக்கதைகள் மூலம் குழந்தைகளுக்கு அறிவுரைகள் சொல்லப்படுகிறது. புத்தியை கூர்மையாக்கும் அறிவியல், கணக்கு புதிர்களும் உள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற தளம்.
அரும்புகள் தளத்தின் அருமையான இடுகைகள் சில:
குட்டீஸ்களுக்கு பாதுகாப்பு குறிப்புகள்
குட்டி குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில், புரியும் வகையில் நல்ல நல்ல குட்டி கதைகள் நிறைந்த தளம். நீதிக்கதைகள், நகைச்சுவை கதைகள், புராண கதைகள் என பலதரப்பட்ட கதைகள் எளிய நடையில் இருக்கிறது. கதைகள் உணர்த்தும் நீதியும் மனதில் பதியும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது. நாவினால் சுட்ட வடு, வித்தியாசமான உதவி, கை மேல் பலன் கிடைத்தது என்பது போன்ற கதைகள், படித்து மகிழுங்கள்..
இந்த தொகுப்பும் பயனுள்ளதாகவும், வித்தியாசமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.
நன்றி..
Posted by
லோகு
at
12:34 PM
6
comments

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். (நன்றி : thatstamil.com)
இயற்கை வளங்களின் இன்றியமையாமையையும், அவற்றை பாதுக்கக்க வேண்டிய அவசியத்தையும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கையின் அருமை குறித்தும், அவற்றை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எழுதப்படும் பதிவுகளை இந்த இடுகையில் காண்போம்.
மண், மரம், மழை, மனிதன்:
சுற்று சூழல் குறித்த ஒரு சிறந்த தளம். புவி வெப்பமடைதல், மரம் வளர்த்தல், தண்ணீரின் அவசியம் என பல தளங்களில் கட்டுரைகள் இப்பதிவில் உள்ளன.
அது மட்டுமின்றி அரிய வகை மரங்கள் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. வனவிலங்குகள் அழிப்பு குறித்தும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் தகவல்கள் உள்ளன.
வேளாண்மை செய்திகள், விவசாய குறிப்புகள் போன்றவற்றையும் அடக்கியுள்ள இத்தளத்தின் குறிப்பிடத்தக்க இடுகைகள் சில.
எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்
புவி பந்தை காப்போம்
சுற்று சூழலும் பருவ மழையும்
இது நம் பூமி :
நாமும், நம் தலைமுறையும் நன்றாக வாழ நம் பூமியை காப்பது நம் கடமை என சொல்லும் தளம். இயற்கை சீர்கேடு குறித்த பல புதிய தகவல்களை புள்ளி விபரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுக்களை வேண்டாம் என்கிறது இந்த இடுகை . இரட்டை குவளை முறையை விட மிக கொடுமையானது பிளாஸ்டிக் குவளைகள் பயன்படுத்துவது என்கிறது இந்த இடுகை. நீரின் மகத்துவத்தை சொல்லும் இடுகை என பயன் மிக்க தளம் இது.
பூவுலகின் நண்பர்கள் :
சமூக செயல்பாட்டுக்கான ஒரு வலைப்பூ என்று சொல்லப்பட்டிருக்கும் இத்தளத்தில் சுற்று சூழல் ஆர்வம் கொண்ட அனைவரும் எழுதலாம் என்று குறிப்பிட பட்டிருக்கிறது. சுற்று சூழல் சீர்கேடு குறித்த பல கட்டுரைகள் இங்கு உள்ளன. துல்லியமான புள்ளி விபரத்துடனும், தெளிவான அலசலுடனும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும். நம் பூமி இருக்கும் அபாயத்தினை மிக வருத்தத்துடன் அனைவருக்கும் புரியும் படி விளக்கி இருக்கிறார்கள்.
இந்த இடுகை புவி வெப்பமடைவதால் தனி மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அலசி இருக்கிறது. நதி நீர் எவ்வாறு பாசனத்துக்கு பயன்படாமல் வீணாக்க படுகிறது என்பதை இந்த இடுகை அலசுகிறது. இயற்கை வளத்தின் அடையாளமான யானைகளின் அழிவு குறித்து ஆதங்க கட்டுரை இது. இப்படி இன்னும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளை சொல்கிறது இந்த தளம்.
இந்த தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போது, நாகரீகம் என்ற பெயரில் நம்மை நாமே எப்படி அழித்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது.
நம்மால் முடிந்த அளவுக்கு இயற்கையை காப்போம், மரம் வளர்ப்போம்.. மீண்டும் அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.
நன்றி.
Posted by
லோகு
at
2:01 PM
10
comments
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.

Posted by
லோகு
at
11:49 AM
10
comments

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' அந்த குறைவற்ற செல்வம் இப்போது யாருக்கும் கிடைப்பதில்லை. ஊசியே போட்டுக்கொள்ளாத தாத்தா, பாட்டியெல்லாம் இருந்தார்கள். ஆனால் இப்போது மாதத்துக்கு ஒருமுறை மருத்துவமனை செல்லாதவரை பார்ப்பதே அரிதாக உள்ளது.
விஞ்ஞான உலகில் தவிர்க்க முடியாத சுற்று சூழல் சீர்கேடும், தாறுமாறான உணவு பழக்க வழக்கங்களும், மக்கள் தொகை பெருக்கமும் தனி மனித ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கின்றன.
முடிந்த அளவுக்கு சீரான உணவு பழக்கத்தை கையாளுவதும், நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வதும் நம்மை ஓரளவுக்கு காக்கும்.
இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பொது நல மனப்பான்மையோடு எழுதப்படும் சில பதிவுகளை இந்த இடுகையில் காண்போம்.
பொது சுகாதாரமும், மருத்துவமும் :
மருத்துவர் சுரேஷ் அவர்களாலும், கிராம மருத்துவர் அவர்களாலும் நடத்த படும் தளம். மிக உபயோகமான ஒரு தளம். பல உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், ஆலோசனைகளும் தெளிவான முறையில் சொல்லப்பட்டுள்ளன. மேலும் கிராமத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள், பிரச்சனைகள், கிராம மக்களின் அறியாமை ஆகியவற்றை ரசிக்கும் வகையில் மிக அழகாக எழுதி வருகிறார்கள். கிராமத்தில் நடக்கும் சுவையான சம்பவங்கள் படிக்க நன்றாக இருக்கிறது.
மிகுந்த பணி நெருக்கடிக்கு இடையில் பொது நலத்தோடு எழுதி வரும் மருத்துவர்களின் தொண்டு பாராட்ட பட வேண்டியது.
அறியாமையால் தனக்கு போட வேண்டிய ஊசியை தன் குழந்தைக்கு போட்டஅம்மாவை பற்றிய இந்த இடுகை கல்வி அறிவின்மையின் பாதிப்பை உணர்த்துகிறது. கீரைகளின் பயன்களை பற்றிய இந்த இடுகை, மார்பக புற்றுநோய் குறித்த இடுகைகள் என பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய தளம்.
மருத்துவம்
சந்திர வதனா செல்வகுமாரன் என்பவரால் நடத்தப்படும் இந்த தளம் முழுக்க முழுக்க மருத்துவ குறிப்புகளால் ஆனது. மனச்சோர்வு, முடி உதிர்தல், தலைவலி, முட்டி வலி என பல பிரச்சனைகளுக்கு பல்வேறு மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்ட குறிப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
இது தவிர மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளை பற்றியும், காய்கறிகள் பற்றியும் நிறைய இடுகைகள் உள்ளன. தூக்கத்தின் அவசியத்தை பற்றிய இந்தஇடுகை , நோய்க்கான அறிகுறிகளை கொண்டே நோயை அறிய உதவும்இந்த இடுகை என பல சிறப்பான இடுகைகளால் ஆனது.
மிக சிறந்த தளம். தவறாமல் வாசியுங்கள்.
உங்களுக்காக :
மருத்துவ குறிப்புகள் அடங்கிய இன்னொரு வலைப்பூ. கிட்டத்தட்ட 50 இடுகைகள் மருத்துவ குறிப்புகளை கொண்டு உள்ளன. பல்வேறு கோணங்களில், பல பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளும், தீர்வுகளும் இங்கு கிடைக்கின்றன. இதுவும் அனைவருக்கும் உதவிகரமான தளம். தினசரி வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்ல பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்வுக்கு கடைபிடிக்க வேண்டிய பழக்க வழ்க்கங்கள் குறித்தும் பல இடுகைகள் உள்ளன..
இத்தளத்தின் பயனுள்ள இடுகைகளில் சில :
முதுகு வலி குறைய
குழ்ந்தை சாப்பிடாமல் அடம்பிடித்தால்
தெரிந்து கொள்ளுங்கள்
தாய்மையின் அடையாளங்கள் என பல உபயோகமான அரிய தகவல்களை உள்ளடக்கிய நல்ல தளம். படித்து பயன் பெறுங்கள்.
இன்றைய தொகுப்பும், உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் ஆலோசனைகளும், கருத்துகளும் என்னை சிறப்பாக செயல்பட தூண்டும்.
மீண்டும் சில உபயோகமான பதிவுகளோடு அடுத்த இடுகையில் சந்திக்கிறேன்.
நன்றி.
Posted by
லோகு
at
11:58 AM
7
comments

கவிதைகள், கதைகள், சினிமா விமர்சனங்கள், நகைச்சுவை பதிவுகள் தான் பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் கவனிக்கப்படுகின்றன பதிவுலகில்.. ஆனால் அதையும் தாண்டி சுவை மிக்க பதிவுகளும் உள்ளன. அவைகளில் ஒன்று தான் மூளைக்கு வேலை வைக்கும் புதிர் பதிவுகள். புதிர்களுக்கு விடை சொல்ல மட்டும் அல்ல.. புதிர்களை கேக்கவும் அபாரமான திறமை வேண்டும்..
விடுகதைகள், குறுக்கெழுத்துப்புதிர்கள், புதிர்க்கணக்குகள் இப்படி மூளைக்கு வேலை வைக்கும் பதிவுகளைப்பற்றி இந்த இடுகையில் பார்க்கலாம்..
யோசிங்க :
மிக சுவாரஸ்யமான (இந்த வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ன.. தெரிந்தால் சொல்லுங்களேன்) வலைப்பூ... இவரை அறிமுகப்படுத்த தேவையில்லை.. 2004 இல் இருந்து யோசிக்க வைத்து கொண்டிருக்கிறார்.. விதவிதமான புதிர்கள். எப்படித்தான் சேகரித்தார் என்று தெரியவில்லை. மொத்த இடுகைகள் முந்நூறை தாண்டி விட்டது.. (அம்மாடியோவ்..)
பொழுது போகாமல் கணினி முன்னால் இருக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக கழிக்க மிகச்சரியான தேர்வு, இவரது வலைப்பூ..
உதாரணத்துக்கு ஒரு கேள்வி:
தோனியும் சேவாக்கும் பாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே 94 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 49 ஓவர்களும் நான்கு பந்துகளும் வீசியாயிற்று. இன்னும் இரண்டு பந்துகளே பாக்கி. இன்னும் 7 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும். ஆனால் ஆட்ட முடிவில் தோனி, சேவாக், இருவரும் செஞ்சுரி எடுத்திருந்தனர். இது எப்படியென்று விளக்க முடியுமா?
இப்படி இன்னும் கலகலப்பான புதிர்களுக்கு சொடுக்குங்கள்:
குறுஞ்செய்தியில் குட்டி கணக்கு
வார்த்தை விளையாட்டு
கோலி
ஜன்னல் வழியே:
புத்திசாலிகளுக்கான இன்னொரு பதிவு.. வாரா வாரம் புதிர்க்கணக்குகள், கணித கேள்விகள் வெளியிடுகிறார். கட்டாயம் மூளையை கசக்க வைக்கும்.. நானும் முயற்சிக்கிறேன். இன்னும் ஒன்றுக்கு கூட சரியான விடையை கண்டு பிடிக்க முடிய வில்லை.. இந்த தளமும் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
இந்த வார கணக்குகள்
இலவசம்:
இன்னொரு பிரபலம். குறுக்கெழுத்து புதிர்கள் இவரது சிறப்பம்சம். பத்திரிகைகளில் குறுக்கெழுத்து பக்கத்தை முதலில் படிப்பவரா.. உங்களுக்கான தளம் இவருடையது. பொதுவாக தமிழ் பத்திரிகைகளில் குறிப்பிடும்படியாக குறுக்கெழுத்து போட்டிகள் வருவதில்லை. அந்த குறையை இவரது குறுக்கெழுத்து புதிர்கள் போக்குகின்றன..
இவரது குறுக்கெழுத்து புதிர்களை விளையாட இங்கு கிளிக்கவும் .
********
இந்த தொகுப்பு உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் ஒரு சுவையான தொகுப்போடு அடுத்த இடுகையில் சந்திக்கலாம்..
கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரியபடுத்தி, என்னை சிறப்பாக செயல்பட உதவுங்கள்..
நன்றி
Posted by
லோகு
at
12:05 PM
13
comments
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
(முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!)
காதல் கவிதை எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..
அதை வாங்கி செல்லும் பாக்கியசாலிகளே காதலிக்கிறார்கள்!
- நா. முத்துக்குமார்.
இது எந்த அளவு உண்மையோ தெரியாது, ஆனால் காதல் கவிதைகள் எழுதுபவர்கள் காதலித்துக் கொண்டோ அல்லது, மற்றவர் காதலுக்கு மறைமுகமாக உதவிக் கொண்டோ இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.. காதல் ஒரு மலரை போன்றது என்றால், அதை மென்மையாக நுகர்வது போன்றது காதல் கவிதை எழுதுவது.
காதலிக்கும் சுகத்தை விட காதல் கவிதை எழுதுவது அதிக சுகம் தரும். காதலில் வெற்றியோ, தோல்வியோ அதை அழகாக வார்த்தைகளில் வடிக்க, காதலை உண்மையாக உணர்ந்தவர்களால் மட்டுமே முடியும். அப்படி காதலை உணர்ந்து கவி வடிக்கும் காதலர்கள் சிலரை இன்று பார்ப்போம்.
அருட்பெருங்கோ:
நான் படித்த முதல் வலைப்பூ இதுதான் என்று நினைக்கிறேன். இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக அனைத்து இடுகைகளையும் படித்து முடித்தேன். மறுபடி மறுபடி படிக்க தூண்டும் கவிதைகள் இவருடையது.
வரிகளில் எழுத்துக்களை கோர்க்காமல், காதலை கோர்த்து எழுதுபவர்.காதலியின் அழகை வர்ணித்து எழுதுவதில், தபூ சங்கரை நியாபகபடுத்துவார்.. இப்பொழுது அதிகமாக எழுதுவதில்லை, ஏன் என தெரியவில்லை..
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும்
காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை
உறங்குவதேயில்லை.
******
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
இன்னும் இவரது காதல் கவிதைகள், முத்தம், பிறந்தநாள் வாழ்த்து போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை..
இதெல்லாம் அவர் கட்டிய காதல் மாளிகையின் சிறு கல் மட்டுமே.. அந்த மாளிகைக்குள் நுழைந்து பாருங்கள்.. எவருக்கும் காதலிக்க ஆசை வரும்..
மறவாதே கண்மணியே (லோகு) :
அவர் பெயரே எனக்கும் இருப்பது எனக்கு பெருமை. காதலின் மகிழ்ச்சியை விட் காதலின் சோகம் நிறைய வலிமையானது. சோகத்தை எழுத்தில் வடிக்கும் ஆற்றல் மிக்கவர். இவர் வரிகளை படிக்கையில் சோகம் கூட சுகமாகும். உங்கள் வரிகளின் சோகம் உங்கள் வாழ்க்கையில் கட்டாயம் தூ என நம்புகிறேன்.
காதல் சோகம் உள்ளவர்களுக்கு இவர் தளம் சொர்க்கம்.. அவரின் கண்ணீர் துளிகள் சில..
என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய் இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய் வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே உன்னால்..
*****
நீ காதலை உணரும் நாட்களில்
ஒரு கருங்கல்லைதான்
காதலித்துக்கொண்டிருப்பாய்
காதல் கடவுள் சாபங்கள் தந்துவிட்டானோ எனக்கு..
இன்னமும் உன்னையே காதலித்துகொண்டிருக்கிறேன்.
இன்னும் இவரது காதல் சாபம், மறவாதே கண்மணியே, போன்ற இடுகைகள் கண்ணீரை வர வைப்பவை.
ஆதலினால் (நவீன் பிரகாஸ்) :
Posted by
லோகு
at
11:35 AM
7
comments