07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 11, 2011

சிந்தனை செவ்வாய்


நேற்று ஆரம்பித்த இந்த வலைச்சர வாரத்தில் இன்று முதல் நான் ரசிக்கும் சில வலைப்பூக்களைப்பற்றி எழுதப் போகிறேன்.  அதற்கு முன் இந்த செவ்வாய்க் கிழமையை ஒரு நல்ல சிந்தனையுடன் ஆரம்பிப்போமா?

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது இதயத்தின் இசை
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது சக்தியின் பிறப்பிடம்
விளையாட நேரம் ஒதுக்குங்கள்
  அது இளமையின் ரகசியம்
படிக்க நேரம் ஒதுக்குங்கள்
  அது அறிவின் ஊற்று
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
  அது மகிழ்ச்சிக்கு வழி
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்
  அது வெற்றியின் விலை.


வலைப்பூ எழுதும் நம்மில் தக்குடு வலைப்பூவினை நுகர்ந்து ரசிக்காதவர் உண்டோ? நான் சொல்லப்போவது அதைப் பற்றி அல்ல.  அவரது உம்மாச்சி காப்பாத்து என்ற வலைப்பூவில் சில பதிவுகளே எழுதி இருந்தாலும் நிறைவாக எழுதி இருக்கிறார்.  நம்மைக் காப்பாற்ற உம்மாச்சியை விட்டா யார் இருக்கா?

நாரத்தங்காய் சாப்பிட்டால் சிலருக்கு அதன் பிறகு வரும் ஏப்பத்தினால் பிடிக்காதுஆனால் நாரத்தங்காய்நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு உதவுவது எத்தனை பேருக்குத் தெரியும்?”  இதை நான் கேட்க வில்லை.  இப்படி கேட்பது கீதா சாம்பசிவம் அவர்கள்.  கேட்டது அவரின் சாப்பிடலாம் வாங்க  பக்கத்தில்.  போய் சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.

நவராத்திரி முடிந்து விட்டது.  நிறைய வீடுகளில் கொலுவைப் பார்த்து விட்டு வந்த சிலர் அவர்களது வீட்டிலும் வைக்க ஆசைப்படுவார்கள்.  ஆனால் எப்படி வைப்பது என்று தெரியாமல் இருக்கலாம்.  அவர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல் சீக்கிரமா போய் படிக்க வேண்டியது சிமுலேஷன் படைப்புகள் பக்கத்தினை. ”கொலு வைப்பது எப்படி? என்று பகுதி பிரித்து எழுதி இருக்கிறார்.  அடுத்த வருடம் கொலு வைத்து அசத்துங்க!  மறக்காம சுண்டல் வாங்கிக்க என்னையும் கூப்பிடுங்க!

திலகாஷ்ட மகிஷபந்தனம் அப்படின்னு ஒரு நூல் உங்களுக்குத் தெரியுமா?  அதைப்பற்றித் தெரிந்து கொள்ள ருக்மணி சேஷசாயி அவர்களின் பாட்டி சொல்லும் கதைகள் பக்கத்திற்கு உங்களை அழைக்கிறேன்.  உங்கள் சுட்டிகளுக்குக் கதை சொல்லித்  தூங்க வைக்க தினம் தினம் நீங்கள் அல்லாட வேண்டாம்.  நிறைய கதைகள் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.

”மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்: என்று தன் பக்கத்தில் சொல்லும் மாதேவி தனது அனுபவங்கள், சுற்றுலா என்று பல பக்கங்களில் ரம்யமாய் உலா வருகிறார். அவரின் ’நிமிர்ந்தெழும் கடலலையருகே நிறையழகாய் மணற்காடு’ பகிர்வில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் கண்ணைக் கொள்ளை கொள்கிறது.

இந்த வருட மே மாதத்தில் தன் வலைப்பூ பயணத்தினை தொடங்கி இருக்கும் சீனுவாசன். கு. தனது வலைப்பக்கத்தில் நிறைய குறுஞ்செய்திகள், மெட்டுப் பாடல்கள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள் என இது வரை 231 பதிவுகள் எழுதி இருக்கிறார். இவரின் இந்த “ல” வரிசைப் பாட்டு லவ்லியாக [அட ‘ல’-னாவுக்கு ‘ல’-னா] இருந்தது.


இன்னிக்கு இது போதும். நாளை எங்க ஏரியாவுக்கு உங்களை அழைத்துப் போகிறேன். அதுவரை இன்று தந்த சுட்டிகளைச் சென்று பார்த்து படித்து ரசியுங்களேன்.

நாளை மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

பின்குறிப்பு: ”இந்த பகிர்வுக்கும் டோராவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்பவர்களுக்கு, இதற்கு விடை உங்களுக்கு ஞாயிறன்று கிடைக்கும். பொறுத்திருங்கள்…


67 comments:

  1. சோதனை மறுமொழி….

    ReplyDelete
  2. சீனுவாசன் பக்கங்கள் புதிய அறிமுகம்.நன்றி

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஆதி.பதிவுகளை சென்று பார்க்கிறேன்.டோராவோட எதோ பெரிய ப்ளானில் இருக்கீங்க போலருக்கே.இப்பவே சொல்லி எதிர்பார்க்க வச்சுடீங்களே.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள் ..

    ReplyDelete
  5. பொன்மொழியோடு ஆரம்பித்து அருமையான அறிமுகங்கள் ... டோரா ...ஞாயிறு வரை சஸ்பென்ஸ் ... அதற்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. valaichara asiriyaruku valthukkal

    ReplyDelete
  7. ஆசிரியரானதற்கு வாழ்த்துகளும், எனது வலைப்பதிவைக் குறிப்பிட்டதற்கு நன்றிகளும். - சிமுலேஷன்

    ReplyDelete
  8. சிந்தனை செய்யவைக்கும் அருமையான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. சிறந்த அறிமுகங்கள்!

    ReplyDelete
  10. "டோராவின் பயணங்கள்” சிறப்பாக, விறுவிறுப்பாக அமைய வாழ்த்துகள்!! :-)))))

    ReplyDelete
  11. I think Husainamma has found out the Dora suspense.

    ReplyDelete
  12. ஆரம்பத்தில் சொன்ன பொன்மொழிகள் அருமை. அறிமுகங்களுக்கு வழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. போய் படிக்கிறேன், நாளை வருகிறேன்

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்கள்.

    புதிரும் உண்டோ?

    தொடருங்கள்.

    ReplyDelete
  16. அருமையான பயனுள்ள பதிவுகளை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  17. அருமையான சிந்தனைகள் .. அறிமுகங்கள்

    ReplyDelete
  18. உங்கள் சிந்தனைகளும் அருமை
    ரோஜாவும் அழகு
    அறிமுகங்களும் அருமை
    டோராவும் சூப்பர்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. டோராவின் பயணங்கள்ல நாங்களும் கலந்துக்க ஆர்வமா இருக்கோம் :-)

    ReplyDelete
  20. அனைத்தும் அருமையான அறிமுகங்கள்.

    அனைவருக்கும் வாழ்த்துக்களும்.
    பாராட்டுக்களும், உங்களுக்கும் சேர்த்துத் தான்.

    ReplyDelete
  21. சூப்பர் அறிமுகங்கள்

    ReplyDelete
  22. முதல் பயணம்
    ஆரம்பம் முதல் அருமை...
    அறிமுகப் பதிவர்களை சென்று பார்க்கிறேன் சகோதரி..

    ReplyDelete
  23. அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் அறிமுகங்களுக்கும், அறிமுகப்படுத்தியவருக்கும்!

    புஜ்ஜி எங்கே??

    ReplyDelete
  25. அறிமுகங்களில் சில பார்க்காதவைகள்.இனி மேல் தான் படிக்க வேண்டும்.வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  26. @ கலாநேசன்: வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  27. @ thirumathi bs sridhar: டோரா படம் தினமும் போடலாம் என்று நினைக்கிறேன்.வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஆச்சி.

    ReplyDelete
  28. @ Madhavan Srinivasagopalan: வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  29. @ பத்மநாபன்: காத்திருங்கள் ஞாயிறு வரை... வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க சகோ.

    ReplyDelete
  30. @ புதுகைத் தென்றல்: வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  31. @ Simulation: வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி.

    ReplyDelete
  32. @ இராஜராஜேஸ்வரி: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  33. @ ஹுஸைனம்மா: ”பயணங்கள்” நல்லபடியாக அமைய வேண்டும். வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  34. @ மோகன் குமார்: ஹுஸைனம்மா சொல்வது போலவும் இருக்கலாம்.பார்க்கலாம்...
    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  35. @ Lakshmi: அந்த பொன்மொழிகள் எங்கள் வீட்டில் ஒரு புத்தகத்திலிருந்த வரிகள்.நன்றாக இருந்தது.
    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  36. @ கோகுல்: வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  37. @ suryajeeva: பொறுமையாக படித்துப் பாருங்கள். வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  38. @ சே.குமார்: ஒவ்வொருவரும் யோசித்து வையுங்கள்.புதிருக்கு விடை ஞாயிறு காணலாம்.வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  39. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா.

    ReplyDelete
  40. @ "என் ராஜபாட்டை"- ராஜா: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  41. @ Jaleela Kamal: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  42. @ அமைதிச்சாரல்: எல்லோருக்கும் டோரா தான் புடிச்சிருக்கு போலருக்கே...:))
    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  43. @ வை.கோபாலகிருஷ்ணன்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  44. @ வைரை சதிஷ்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  45. @ மகேந்திரன்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  46. @ RAMVI: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  47. @ middleclassmadhavi: புஜ்ஜி வரும் நாட்களில் வருவான். தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  48. @ அமுதா கிருஷ்ணா: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  49. உங்கள் வாரம் இனிதாக சிறக்கட்டும்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ரம்யம் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  50. தலைப்பே அருமை!!நல்ல சிந்தனை..அறிமுகப்படுத்திய விதமும் நன்றாக இருந்தது..டோராவுக்காக sunday வர waiting'ஆஆ....வ்.

    ReplyDelete
  51. அழகான தொகுப்பு.
    டோரா... ஞாயிறுவரை எதிர்பார்ப்பு...

    ரைட்டு ...

    இன்று என் வலையில்:
    "விகடனும் நானும்!"

    ReplyDelete
  52. அனைவருக்கும் வாழ்த்துக்களும்.
    பாராட்டுக்களும்.

    ReplyDelete
  53. சிந்தனை செவ்வாய் அருமை.

    கவிதை அருமை.

    நல்ல அறிமுகங்கள் .

    ReplyDelete
  54. வலைசர அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி மேடம்!! நீங்க வெங்கட் அண்ணாவோட தங்கமணியா?? ரொம்ப சந்தோஷம்!!

    ReplyDelete
  55. @ மாதேவி: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  56. @ விச்சு: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  57. @ NIZAMUDEEN: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  58. @ கவியின் கவிகள்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  59. @ கோமதி அரசு: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  60. @ தக்குடு: ஆமாம். தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  61. கடைசியா டோராவைப் போட்டு புதிரும் போட்டீங்களே ஆதி.சரி அறிமுகப் படுத்திய பதிவுகளை பாத்துட்டு வரேன்.
    தக்குடு தவிர எல்லாமே எனக்கு புது பதிவர்கள்தான்.பகிர்விற்கு நன்றி.
    தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  62. அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய பதிவுக்கு முதல் வரவுக்கும், நன்றி. வலைச்சரம் ஆசிரியர் ஆனமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  63. @ ராஜி: மன்னிப்பெல்லாம் வேண்டாம்.
    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  64. @ geethasmbsvm6: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  65. என் மனக்குறையை போக்கி விட்டீர்கள்!
    உண்மையில் அனைத்து எழுத்துக்களையும் பிள்ளைகள் சுலபமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பாடல்களை நான் எழுதினேன்.எம் பள்ளி பிள்ளைகள் அனைவரும் இப்பாடல்களை இசையோடு பாடுவார்கள்!தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  66. @ சீனுவாசன். கு: குழந்தைகளின் நன்மைக்காக தாங்கள் எழுதும் இந்த பாடல்கள் தொடர வாழ்த்துகள்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது