07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 31, 2011

மகிழம்பூவுடன் சிறுபொழுதுகளின் சரம்.



வணக்கம். இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்திற்கு சிரியர் பொறுப்பினை ஏற்றுள்ளேன். இது என்னுடைய பதிவுலக வாழ்க்கையின் புதிய பரிமாணம் என்று கருதுகிறேன். இந்த பொறுப்பினை தந்த வலைச்சர ஆசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஊக்கமளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரம்ப காலத்தில் தங்களின் அருமையான பின்னூட்டத்தினால் என்னை ஊக்குவித்த பதிவுலக நண்பர்கள் திரு.எல்.கே, திரு.கருண், திரு.மனோ, ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அடிப்படையிலேயே ஒரு ஆசிரியர். கற்றுத்தருதல் என்கிற வார்த்தையைவிட தேவையானவற்றையும், புதியனவற்றையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே ஆசிரியரின் பணி என்பதே என் கொள்கை. இங்கேயும் அதேதான், என்னையும் எனக்கு அறிமுகமான பதிவுகளை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். இந்த அனுபவம் ஒரு காலை நேர நடைப்பயணமாக ஆரம்பித்து   ஒரு புனிதமான யாத்திரையில் பங்கேற்ற அனுபவமாக முடியும் என்று நம்புகிறேன். முன்னதில் ஒரே ஒரு புன்னகையில் பல அறிமுகம் தொடங்கும், பின்னது நண்பர்களாக பரிணமித்த ஒரு குழுவின்  வெற்றிப்புன்னகையுடன் நிறைவடையும்.


இந்த வார வலைச்சரத்தின் கருப்பொருள் : சிறு பொழுதுகள்.

சிறு பொழுதுகள்:  ஒரு நாளானது  ஆறு பகுதிகளாக பிரித்து அவை சிறு பொழுதுகள் என அழைக்கப்பட்டன. அவை பின்வருமாறு:
    
விடியல்  அல்லது வைகறை   - 2 முதல் 6 மணி வரை   
காலை -   6 முதல் 10 மணி வரை     
மதியம் அல்லது முற்பகல்-  10 முதல் 2 மணி வரை   
ஏற்பாடு அல்லது சாயுங்காலம் - 2 முதல் 6 மணி வரை
 மாலை அல்லது அந்தி - 6 முதல் 10 மணி வரை
 இடையாமம் அல்லது இரவு  - 10 முதல் 2 மணி வரை

சிறு பொழுதுகளை பற்றிய விளக்கமானது குறியீடுகளாக இலக்கியத்தில் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, ஒரு நாளின் பகுதிகளை மனித வாழ்க்கையின் பல்வேறு பருவங்களாகவும் கொள்ளலாம். இவையே வலைச்சரத்தில் சரம்சரமாக சேர்த்துக் கட்டப்படப்போகின்றன. வாருங்களேன். இன்றைய சிறு பொழுதுகளில் மகிழம்பூச்சரத்தில் பயணிப்போம். நாளை முதல் உங்களுடன் நான்.

விடியல் :
  அன்றைய நம்பிக்கையின் ஆரம்பம் 
 குழந்தை பருவம் -பால பருவம். கருவிலிருந்தது முதல் பள்ளி செல்லும் பருவம் வரை. 
    பிறந்த குழந்தை முதலில் உணர்வது பசி. தேடுவது தாயை. இங்கு தாய்மைக்கு மதிப்பு மிக அதிகம். விடியலில் பசிக்குரல் எழுப்பும் குஞ்சுகளுக்காய் உணவு தேடி வரும் தாய் பறவையின் அறிவை சேர்த்து சொல்கிறேன் தாய்மை என்பது ஐந்து அறிவுகளுக்கும் உட்பட்ட மகத்துவம் உடையதுதான்.   ஒரு குழந்தை வளர்வதற்குள் தாய் 32 அவஸ்தைகளை அடைகிறாள் என்று வேதம் சொல்கிறது. 
இந்த கவிதைகளை   படியுங்கள்   தாய் எனும் சக்தி வடிவம்  
                                                                         மகிழம்பூ வாழ்க்கை

காலைப் பொழுது.

 அன்றைய நம்பிக்கையை வெற்றிபெறவைக்கச்  செய்யும் முனைப்புகள்.
 பிள்ளைப்பருவம். பள்ளி செல்வது முதல் பதின் வயது வரையுள்ள பருவம்.
                 
இந்த பருவம் குழந்தை தந்தையை கவனிக்கத் தொடங்கும் காலம். குழந்தைக்கும் தந்தைக்குமான உறவு தொடக்கமாகிறது. தாய்க்கும் குழந்தைக்குமான உறவு ஆரம்பம் முதல் கடைசி வரை அமைதியான நதியில் செல்லும் ஓடம் என்றால், தந்தையுடன் ஏற்படும் உறவு அடிக்கடி அலை வந்து அலைக்கழிக்கும் ஓடமாகிறது.  தந்தை என்ற உறவின் முழு பரிமாணமும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில்  விசுவரூபம் எடுத்து பிரமிக்க வைக்கும். இந்த கடிதத்தை படியுங்களேன்.   
அஞ்சல் பெட்டியை சேராதவை.              


முற்பகல் :
        
       அன்றைய நாளின் செயல் திட்டங்களை செயல்படுத்தும் நேரம்.
       குமார பருவம் - பதின் வயது முதல் திருமணம் ஆகும்வரை. 

வாழ்க்கையை பற்றியும் முன்னேற்றத்தை பற்றியும் சிந்திக்கும் பருவம். மற்றவர்களை எடைபோட முனையும் தருணம். நட்பு, சகோரத்துவம் போன்ற மற்ற உறவுகளின் மேன்மையை உணரும் நேரம். வேலை,படிப்பு ஆகியவை கவனத்தில்வரும். 

உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்திற்கான உளவியல் தீர்வுதான் Emotional Intelligence. இது பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு   உணர்வுகள் என்னும் ஆயுதம் -1.  உணர்வுகளை சரியாக பிரயோகிக்க கற்றுக் கொண்டால் இனிய வாழ்க்கையின் அடித்தளம் அமையும்.  
மனதின் பரிமாணங்களை உணர  இந்த கட்டுரையினை படியுங்கள்.
மலரினும் மெல்லிய மனம்

சாயங்காலம் :
              அன்றைக்கு செய்ய திட்டமிட்ட செயல்களின் செயலாக்கத்தினை திறனாய்வு செய்யும் நேரம்.
              யௌவனம் அல்லது சம்சார பருவம். தனக்கென்று ஒரு குடும்பம் அமைத்து அதற்கு தலைவனாகும் தகுதியை பெற்றுக் கொள்ள விழையும் பருவம். வெற்றிகரமான இல்வாழ்க்கைக்கு அடித்தளமிடும் இந்த பருவத்தில்தான் மிகுந்த மனமாச்சரியங்களை உணர முடிகிறது. 
இல்லறத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள  இந்த கட்டுரையினை படியுங்கள்.
 ஆல் போல் ... அறுகு போல்...



மாலை அல்லது அந்தி நேரம்: 

 
             அன்றைய செயல்கள் வெற்றியோ அல்லது தோல்வியோ,  அவை நம்மை பாதிக்காத வகையில் சக்தியூட்டிக் கொள்
ளும் தருணம்.
             மூத்தமகன் அல்லது பேரிளம் பருவம். முப்பதிலிருந்து அறுபது வயது வரை. ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையின் முக்கியமான கட்டம். மற்ற பருவத்திலிருப்பவர்களுக்கு உதவும் பொறுப்பு மிக்க காலம். பிள்ளைகளுக்கு வாழ்க்கை அமைத்து தருவதும், வீட்டின் பெரியவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துத் தருவதும் இந்த வயதுள்ளோரின் கடமையாகிறது.  பொறுப்புகளும் கவலைகளும் அதிகம் வரும் இந்த வயதில்  ஒரு உறுதியான மன நிலை தேவைப்படுகிறது. உடல் நிலையை பொறுத்தவரை ஒரு அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய மாற்றங்கள் நிகழும் நேரம். (சாமியாராகப் போகிறேன் என்று சிலர் குமுறும் நேரமும் இதுதான்). இந்த நேரத்து பிரச்சினைகளை சீர் செய்ய கீழ்வரும் கட்டுரைகள் உதவும்.

 நிம்மதி என்றொரு தென்றல்
 மணவிழா உண்மையான வெள்ளிவிழா காண.


இடையாமம்:
            இருள் ஆரம்பித்து ஒரு நாளைய உழைப்பின் பலன்களை அனுபவிக்கும் நேரம். 


 வயோதிக பருவம். அறுபது வயதிற்கு மேல். வாழ்க்கையின் நிறைவான கட்டம். இத்தனை நாளைய வாழ்க்கையின் பலனாக அமைதியும் அன்பும் சூழ இருக்க வேண்டிய தருணம். குழந்தைகளை கொண்டாடுபவன் மனிதனாவான் எனில், மனிதன் புனிதனாவது மூத்தவர்களை முக்கியமாக வயதான பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்போதுதான்.   முதியோரின் பார்வையாக இந்த பதிவுகளை படியுங்கள்
அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்
 சதுப்பு நிலக்காடுகள்  

மகிழம்பூச்சரத்தின் சிறுபொழுதுகளின் பயணித்தமைக்கு நன்றி.உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நாளை 'விடியலின் விந்தைகளில்' சந்திப்போம். நன்றி.
மேலும் வாசிக்க...

Sunday, October 30, 2011

சென்று வருக ஆமினா - வருக வருக சாகம்பரி

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி குட்டி சுவர்க்கம் ஆமீனா - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக ஆர்வத்துடனும் நிறைவேற்றி - இன்று நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

இவர் 150க்கும் மேலான இடுகைகளை, எட்டு இடுகைகளில் அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவர் பெற்ற மறுமொழிகளோ 320க்கும் மேல்.

சகோதரி குட்டி சுவர்க்கம் ஆமீனாவினை வாழ்த்துகளுடன் வழி அனுப்புகிறோம்

அடுத்து நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் சகோதரி சாகம்பரி. இவர் காவிரிக்கரையில் பிறந்து, மும்பையில் சில காலம் வசித்து, தற்போது மதுரையில் வசிக்கிறார். இளநிலை பொறியியலாளர் - மேலாண்மைக் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றவர் - மனோ தத்துவத்தில் பட்டயப் படிப்பு - 23 ஆண்டுகளாக கல்விப்பணி - அதில் துறைத்தலைவராக 15 ஆண்டுகள் - கணவரும், இரு மகன்களும் நல்ல பணியில் இருக்க - அமைதியாகக் குடும்பம் நடத்துகிறார். மகிழம்பூச்சரம் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ 150 இடுகைகள் ஒரு ஆண்டில் இட்டிருக்கிறார்.

சகோதரி சாகம்பரியினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சகோதரி ஆமீனா

நல்வாழ்த்துகள் சகோதரி சாகம்பரி

நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

ரசித்தவை பல.... கொடுத்தவை சில......... கெளம்புறேனுங்க!!!

வந்துட்டீயா?இந்தா கேசரி எடுத்துக்க....


ஏது? செஞ்சீயா???


நானாவது செய்றதாவது... ஏரியாவுக்கு புதுசா வந்துருக்காங்களே நாகாராம்.. அவுங்க கொடுத்தாங்க!

ம்ம்.... மரகதம் மாமிய பாத்தீயா? மகளுக்கு டீச்சர் வேல கெடச்சதும் அப்படியே பேச்ச மாத்திடுச்சு?!!

ம் கேள்விபட்டேன்.... அத விட கொடுமை.. மகன் பொறந்த நாள கொண்டாட மிச்சமா வச்சுருந்த குலோப்ஜாமுனை கூட கொடுத்ததாக சூர்யஜீவா சொன்னாகளே….. இன்னும் மனச விட்டு மறையல :-(

நித்யா புள்ள எறந்து போச்சே தெரியுமா ஒனக்கு?

சௌந்தர் சொன்னாக பொண்ணு! கேட்க கஷ்ட்டமாதேன் இருந்துச்சு. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலன்னு சொல்லுவாகளே…. அதே மாதிரிதேன்

வானதி இன்னைக்கு உள்ளங்கை அரிக்குதுபணம் வரப்போகுதுன்னு சொன்னுச்சேஎன்ன ஆச்சு?

ம் சொன்னபடியே கெடச்சுச்சாம். ஆனா திருப்பி கொடுத்துடுச்சாம்

பொழைக்கதெரியாத மனுஷி!!! கீதா சிகப்பி பத்தி சொன்னத கேட்டீயா??

ம் யூத்பூல்விகடன்ல கூட வந்துச்சாம்ல!!!

ம் ஆமா ஆமா... அப்பறம் ஜெயப்பரியா தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்ல நடந்த ஒரு அதிசய சம்பவத்த பத்தி சொல்லியிருந்தாங்க

ம். நானும் கேட்டேன். விதியை மதியால ஜெயிச்சவங்கன்னுதேன் சொல்லணும்.  நீரஜ் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தான் இல்லையா? நாம்ம நல்லா கவனிச்சுகிட்டா செடி மட்டுமில்ல அவனும் மீண்டும் துளிர்ந்து நல்ல மனுஷனா வருவான்னு முடிவு எடுத்திருக்கு !!!

அதுவும் சரிதேன்இப்ப இருக்குற புள்ளைங்களுக்கு பராமரிப்பு ரொம்ப அவசியம் இல்லையா?

நிகாஷா எல்லா விஷயத்தையும் சொல்லி முடிச்சுடுச்சா??

இல்லல்லவழக்கம் போல சுவாரசியமா சொல்லிட்டிருக்கும் போது ஓடிபோய்டுச்சு!

அடடா….

நாதன் இருக்காகள…. இப்ப முன்னமாதிரி இல்லையே….. என்ன ஆச்சர்யம்??

ஆச்சர்யம் கனவு மூலமா வந்துருக்கு! செத்து போன மாதிரி கனவு கண்டாங்களாம்அதான் இந்த மாற்றம்!!!

என்ன நோட்ல எழுதிட்டு இருக்க?

இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச கவிதைலாம் எழுதி எழுதி வச்சுட்டிருக்கேன் சின்ன பொண்ணு!

அப்படியா? அப்படி என்ன கவிதை தான் எழுதி வச்சுருக்க? யார் எழுதுனா? கொஞ்சம் எனக்கும் சொல்லேன்!!!

எவனோ ஒருவன்! வாசகியாய் நீ இல்லையேன்னு வருத்தப்படுறேன். என் எழுத்துல நீ வசிக்கிறது தெரியாமன்னு சொல்லியிருந்தாங்க.


ம்....சேரி...


அம்மாவுக்கு பசி வந்தபோது கூட அதோட குழந்தைக்காக உணவு கொடுக்கும் தாயின் மகத்துவத்தை கூறும் தாய் பசித்திருக்கிறாள் என்னும் கவிதை சகோ செய்தாலி எழுதுனது..

மாலதியின் தவத்தின் காரணம் என்னன்னு நீயே பாரேன்


வெறும் ஏக்கங்களுக்கு மட்டுமே சொந்தக்காரி நான் என ஒரு சிறுமி சொல்வது போன்ற மகேஷின் நாவறண்ட சொர்க்கம் நெகிழ செய்தது. அதே போல் பனங்கூர் காந்தி ஏழைசிறுமியின் துயரத்தை வரிகளில் சொல்லியிருப்பார்


அடப்பாவமே….


இரவுகளில் நான்... அமானுஷ்ய பயத்தில் இருந்த போதும் உன் நினைவுகளை மீட்டெடுக்கும் போது எல்லாம் மறைந்து விடுகிறது என்பது போல் சொல்லும் வரிகளுக்கு சொந்தமானவுக  ரேவா. கூடல் குணா எழுதிய இரு பொருள்படும்படியான சிலேடை பாடலை நீ வாசித்து பாரு….. இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்!

அந்தளவுக்கெல்லாம் எனக்கு ஞானம் இல்லையே!!!


உன் பிரிவால் தினம் தினம் மரணிக்கிறேன் என ஒரு பெண் கதறுவது போன்ற  பிரஷா எழுதிய கவிதை ஏதோ மனதில் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தியது,  
அந்த நிலையில் உள்ள பெண்ணுக்காக பரிதாபப்பட வைக்கிறது!அதே போல் செண்பகத்தின் பிரிதலின் தாக்கம்..... மறுபடியும் ஒரு பாசமலர் பார்த்து முடிச்சது போன்ற உணர்வு


ம்ம்


விடியும் வரையில் கொஞ்சம் நானாக நிறைய நீயாக என்னை ஆக்ரமிக்கின்றாய் கனவுகளில்....... அதற்காகவாவது கனவில் கலையாதே என்று எழுதிவுக ஹரிணி

வாழ்க்கை வாழ்வதற்கே என்று உற்சாகம் கொடுக்கும் அம்பாளடியாளும் இப்ப கவிதைகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார்!

குழந்தையின் பிரிவால் வாடும் தாயின் வலிகளை ரிம்ஸா முஹம்மத் 
எழுதிய குழந்தாய் என்னும் வரிகளில் அப்படியே பிரதிபலிக்கும் 

தன் பழைய காதலி கணவனுடன் எதிரில் வரும் போது அந்த காதலன் இதயம் படும் பாடு..... எத்தனை நாளானாலும் மறக்குமா அவன் நெஞ்சம்? அழகா இரு வரிகளில் சொல்லியிருப்பார்.... அதான் சே.குமாரின் திறமை!

இரும்பாயுதம் என்ற  சொல்லை மறந்திட அன்பென்ற ஆயுதம் என்ற ஒரு வார்த்தை போதும் என்ற லாக்ரின் சர்மா வரிகள் நச்!

நாம் மறந்தாலும் நம் நட்பு நினைக்கும் என்ற வரிகளில் நட்பின் ஆழத்தை காண்பித்திருப்பார் கவியழகன் 

எதிர்நீச்சல் போட்டு வாழும் ஒரு பெண்ணின் வாடும் நெஞ்சம் அழுகிறது- எழுதியவர் சகோ ஹாசிம்

 ஹேமாவின் அவகாசம் தேவைப்படுகிறது இலங்கையில் மக்கள் பட்ட வேதனைகளின் பிரதிபலிப்பு!

தாமதிக்கும் கணங்கள் அத்தனையும் நோவு என்று தனிமையின் க(ன)ணம் பற்றி சகோ ஸதக்கத்துல்லாஹ் எழுதிய கவிதை ரொம்ப அருமையா இருந்தது!


அட……….அட…..அட…….. எல்லாமே சூப்பர்!!! ஆமா உங்களையெல்லாம் நாஞ்சில் மனோ அமெரிக்காக்கு கூடிட்டு போடி பதிவர் சந்திப்பு நட்த்துனாங்களாம்ல!!


ஹி…ஹி…ஹி… யாரு போட்டு கொடுத்தா???? ஆர்கிட்டையும் சொல்லிடாத… பாஸ்போர்ட் விசா இல்லாம கூடிட்டு போயிருந்தாக!!


அடகளவானி கூட்டமே!!! நீ வெறும் அமெரிக்காதேனே போயிருக்க? வேதா என்னைய நெறைய ஊர்க்கு கூடிட்டு போயிருக்கு!!! அதுவும் ஒவ்வொரு எடத்துலையும் என்னைய போட்டோ பிடிக்கும் தெரியுமா?


சரி வயித்தெரிச்சல கொடுக்காத… இன்னைக்கு ஏரியால பாட்டியும் தாத்தாவும் ப்ரபோஸ் பண்ணதுதான் ஹாட் டாபிக்…. ரமேஷ் பாபுதான் இந்த மேட்டர பரப்புனதுன்னு தாத்தாவும் பாட்டியும் கொலவெறியோட தேடிட்டிருக்காங்க!

ஹா…ஹா…ஹா… நானும் கேள்விபட்டேன்!!!


பிரபுவ பாத்தீயா?

ம்ம்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்தாக… ஒவ்வொரு கேள்விக்கும் 3 பதில் சொல்லிட்டு ஓடிட்டாக


ஒரு கேள்விக்கு  3 பதிலா???

3 பதிலா சொன்னாதேன் எல்லாரும் கொழம்பி போவாங்களாம்!!!


அப்ப இனி நீ கேக்குற கேள்விக்கெல்லாம் நானும் அப்படிதேன் சொல்ல போறேன். சரி பேட்டும் (b)பாலுமா இருக்குற பாலா எங்கே போனாக?

தீபாவளிக்கு படம் பார்த்துட்டு அதிர்ச்சில பேயரஞ்ச மாதிரி இருக்காக!! வெளங்கிடும். சரி நா ஒரு கேள்வி கேக்குறேன் சொல்றீயா?


தெரிஞ்சா சொல்றேன்



தெரியலையே

நீயெல்லாம் எந்த ஸ்கூல்ல படிச்ச? விச்சு கிட்ட போயி கேளு….!!!!


ரொம்ம்ம்ம்ம்ப பேசுற நீ!! கணேஷ் சிறு கதை சொன்னாகளே கேட்டீயா?

எப்பவும் சயின்ஸா கத சொல்லுவாகளே அவுகதேனே…. ம்ம் படிச்சேன் புள்ள!


சரி பிரஷாத்க்கும் சென்னைக்கும் என்ன தொடர்பாம்?

அத விட ஒரு பெரிய மேட்டர் ஆட்ட அலங்கரிச்சு பலிகொடுக்க போறதுதேன்!!! அந்த ஆடு வேற யாரும் இல்ல… அவரேதேன்


ஹா…ஹா…ஹா…. உனக்கு எப்படி எல்லாரையும் தெரியுது???

தம்பி பலே பிரபு இருக்காகள? அவுகதேன் தமிழ் வலைபதிவர்களின் பயோடேட்டா குடுக்குறாக… அது மூலமா எல்லாரையும் தெரிஞ்சு வச்சுக்குறேன்


அப்ப நானும் என் பேர சேர்க்க சொல்லுறேன்


உன்னைய பதிவர்ன்னு ஒத்துகிட்டா கொடு


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சரி நா கெளம்புறேன்….. நாள பின்ன பாத்தா பேசிக்கலாம்… வர்ட்டா……


நானும் கெளம்புறேன் பொண்ணு… இல்லைன்னா சீனா ஐய்யா கம்பால அடிச்சே வெரட்டிடுவாக!!!
**********************************
இந்த ஒருவாரமா விதியேன்னு வேற வழியில்லாம நா கூப்டேன்னு ஒரே காரணத்துக்காக (வரலைன்னாலும் விடவா போற?) வந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!!!


எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐய்யாவுக்கும் அதற்கு உதவிய லெட்சுமி மாமிக்கும் என் நன்றிகள் பல பல!!!!


விதிமுறைகளை சரியா கடைபிடிச்சேனான்னு தெரியல… ஆனா என் சக்திக்குட்பட்டு கவனமா இருந்துருக்கேன். அதையும் மீறி எதாச்சும் தப்பு நடந்துருந்துச்சுன்னா மன்னிச்சூ… மன்னிச்சூ…


இன்னும் நெறைய பதிவர்கள அறிமுகப்படுத்தணும்னு ஆசை…. ஆனா நேரமின்மை காரணமா எதையும் ப்ளான் பண்ண மாதிரி செய்ய முடியாத்தில் எனக்குமே அதிக வருத்தம்…


நானாகட்டும் வலைச்சரத்தை படிப்பவர்களாகட்டும் அதில் அறிமுகப்படுத்தப்படும் பதிவுகளுக்கு உங்களின் ஆதரவை கொடுங்க. அதனால் அவர்களுக்கு புது உற்சாகம் கிடைக்கும். என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது அதன் மூலம் எனக்கு கிடைச்ச வரவேற்பும் அதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்ல. ஆக பிறரின் சந்தோஷத்தில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை!!!


சரிங்க... விட்டா பேசிட்டேயிருப்பேனுங்க.... நா இப்ப கெளம்புறேனுங்க!!!!

உங்களனைவரின் மீதும் உங்களை சார்ந்திருப்பவர்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவ பிரார்த்திப்பவளாக....


உங்கள் சகோதரி
ஆமினா

மேலும் வாசிக்க...

மிக்சர் எக்ஸ்ப்ரஸ்


ஏன் இவ்வளவு லேட்டு???

ரியாஸ் வச்சுருந்த பேனா காணாமாம்…. அதான் தேடி கொடுக்கலாம்னு போனேன்

ஏன் எப்படி தொலஞ்சது??

பின்ன? திருடன் ஜாக்ரதைன்னு எழுதுனா? இந்த புரட்சி வெடிச்சுடும்னு பயந்து ஒரு நல்ல திருடன் தூக்கிட்டு போயிட்டான் போல!!!

ஹா….ஹாஹாநல்லா வேணும்!!! 

ஆமாநீ ஏன் கழுத்த அப்படி இப்படின்னு ஆட்டிட்டு கெடக்க??

சுளுக்கு பொண்ணு!!! அதான் வலிக்குது

ரொம்ப நேரமா அந்த கம்யூட்டர் பொட்டிக்கு முன்னாடி உக்காந்தா அப்படிதேன் ஆகும்!சரி ஹாஜாஸ்ரின் சொன்னாப்ள செய்யி!!

அப்படி செஞ்சா சுளுக்கு போய்டுமா ??

சுளுக்கு போச்சுன்னா உன் அதிஷ்ட்டம்இல்லைனா தலைவிதியேன்னு உன்னையும் நம்பி உன் எழுத்து படிக்கிறவங்களுக்கு துரதிஷ்ட்டம்!!!!

என்ன நக்கலா??

நக்கல்லாம் இல்ல..கிண்டல் தான் பண்ணேன்னு சொன்னா விட்டுடுவீயா??

என்னையும் கொஞ்சம் பேரு பாலோ பண்றாங்க தெரியுமா??

வெளிய சொல்லாத வெட்கக்கேடுஅதுல ஒன்னு உன் பாலோஇன்னொன்னு என் பாலோ…. ஆக மொத்தத்துல டுபாக்கூர் ப்ளாக்கு அது!!! ஏதோ பாலோவர்ஸ் எண்ணிக்கைய கூட்டி காமிக்கணுங்குறதுக்காக கெஞ்சி கேட்டதுனால பாவம் பாத்து எனக்கொரு கணக்கு, என் 2 வயசு பையனுக்கு ஒரு கணக்கு, எங்க வீட்டு நாய்க்கு ஒரு கணக்கு தொறந்து எல்லார் பேரையும் சேத்துக்க சொல்லியிருக்கேன்!!!

இரு இரு,… இப்படி சொல்லிட்டீல? மாய உலகம் ராஜேஷ் கிட்ட பிடிக்காத பாலோவர்ஸ நீக்குவது எப்படி?ன்னு கத்துகிட்டு உன்னைய என் ப்ளாக்க படிக்க விடாம பண்ணுறேன்!!!

இப்படி பண்ணுனா அதுக்கு தண்டனையா உன் ப்ளாக்கையும் ஒரு நாள் திருடதான் போறாங்க பாரு!!!

கொழுப்பு கூடிபோச்சு,,,, எப்படி ஒடம்ப கொறைக்கலாம்னு அப்துல் காதர் கிட்ட கேளு!!! ப்ளாக் திருடுனாலும் கவல இல்லவைரை சதீஷ் சொன்ன முறைல செஞ்சு வச்சுக்குவேன். நிகழ்வுகள் சொன்னாப்ல வலைபதிவுகளை எப்படி சேமிக்குறதுன்னு கத்துகிட்டேன்……

இப்பதேன் பூட்டு ஒடச்சு வீட்டுக்கு வர்ர மாதிரி கம்யூட்டர் பொட்டிக்குள்ளையும் வர்ராகளாம்ல?

ஆமா பொண்ணுஆனா ப்ளாக்கர் நண்பன் இணைய பாதுகாப்பு பத்தி சொல்லி கொடுத்துருக்காக. ஆனா திருடங்க அப்படி செய்றது  கஷ்ட்டப்படுத்துற விஷயம்தேன்L

ஆமாமாகஷ்ட்டமான விஷயந்தேன்அம்மாம்பெரிய உருவம் தம்மாதுண்டு கம்யூட்டர்க்குள்ள நொழஞ்சு பூட்டு ஒடைக்கிறதுனா கஷ்ட்டமான விஷயம் இல்லாமலா?

அடிங்……….. இதுக்கு மேல என்னால முடியாது!! ஐத்ரூஸ் மாதிரி என் பிரண்டுகளும் இப்படி அரவேக்காடுகளாதேன் இருக்கணுமா

இப்ப இருக்குற பசங்களாம் அம்மா அப்பா பிரண்ட்டு கிட்ட விஷயத்த பகிராம  சக்தி மாதிரி ப்ளாக்கர் கிட்ட தானே கடிதம் போட்டு பேசுதுங்க!!! அந்த கோபத்துலதேன் அப்படி பேசுனேன் கோச்சுக்காத!!!

ம்ம்

சரி அங்கே என்ன ஒரே கூட்டம்?? அதுவும் அமைதியா?


சொன்னாக சொன்னாக….!!!  நேத்து படம் பாக்க போனேன்புள்ள….

போனீயா? சொல்லவே இல்ல?


கூட்டம்மா இருந்தா அப்படிதான். ரஜின் அண்ணாத்தே சொன்ன மாதிரி சூப்பர் பஸ் இங்கேயும் வந்துட்டா கவலையே இல்ல!!!

ஆனா சில நல்ல மனுஷங்களும் இருக்காங்க. கொழந்தையோட வர்ரத பார்த்து அவங்க எடத்த குடுத்தாங்க.

பெண்கள மதிக்க தெரிஞ்சவங்களும் இருக்காங்க பொண்ணு. இந்தா ராஜ் இருக்காகளே.... அவுக கூட எனக்கு பிடித்த பெண்கள் நெறைய பேருன்னு பட்டியல் போட்டு காமிச்சாங்கள?!!சரி என்ன படத்துக்கு போன? யாரு ஹீரோ?

ஒரு நடிக்க தெரியாத பய….


ம்ம் அதேதேன்

இப்படிபட்டவங்க படத்துல சந்தானம் நடிச்சா அதுக்காகவாவது படம் ஓடும்…!!!! அவுகளுக்கு பின்னாடி இப்ப  ரியல் சந்தானம் பேன்ஸ் கூட்டமே இருக்குல!!!!

எங்க வீட்லலாம் உஷாபேன் தான் இருக்கு…. நீ சொல்ற பேன் நல்லா ஸ்பீடா ஓடுமா???

ம்….ஓடாது…. குதிக்கும்!!!!

சரி கோச்சுக்காத…. கேட்டா ஒழுங்காபதில் சொல்லு

ஐ ஆம் ரொம்ப பாவம் ஹும்ஹும்!!!!

சிரிக்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும் சொல்றத உங்கிட்ட சொன்னா சிரிச்சுட போற….

ஏய் சொல்லாதசொன்னாலே சிரிப்பா வருது எனக்கு…!!!!

ம் அப்படிராஜபாட்டை ராஜா சொன்னாப்ள மனசுவிட்டு சிரிபுள்ளகோபம்லாம் போயிடும்!!!

கோபம்லாம் இல்ல பொண்ணுஅதுவும் உன் மேலயா??

அப்ப இந்தியா பிச்சைக்கார நாடுன்னு சொன்ன ரெவரி மேல கோபப்படுவீயா?

அப்படியா சொன்னாக?? ஜெயில்ல தூக்கிபோடு பொண்ணு அவுகள!!!!

சீ…சீ… நல்ல பையன்.. அவுக சொல்றத முழுசா கேளு பொறவு புரியும்

நீ சொன்னா எல்லாம் சரியாதேன் இருக்கும்!!! ஆமா மதிசுதாவ எங்கே ஆளே காணாம்?

பின்ன? அழிச்ச பதிவுகள எப்படி மறுபடியும் படிக்கிறதுன்னு குறுக்கு வழி சொன்னாக! எல்லாரும் கொலவெறியோட தேடுறதுனால குறும்படம் எடுக்க போயிட்டாக!!!

ஓ அப்படியா? அப்ப கமெண்ட் எப்படி போடணும்னு சொல்லி கொடுத்தவுகள இன்னுமா விட்டு வச்சுருக்காங்க??

லண்டன்ல வேலாயுதம் பார்த்து நொந்து போனதே போதும்னு எல்லாரும் விட்டுட்டாங்க போல!!!

ஓவர் வாய்யி.... உன்னையெல்லாம் பர்கான் சொன்ன ஸ்டைலில் கொல்லணும்அவுகதேன் மொதலாளிய எப்படி கொல்லணும்னு ஐடியா கொடுத்தாக!!

ஆத்தாடிகொஞ்சம் பாத்து பழகணும் போல!!!
ஆங் சொல்ல மறந்துட்டேன்இந்தா இந்த செல்போன பிடி. என்னமோ மெசேஜாம்…. என்னான்னு படிக்க தெரியல…. நீ படிச்சு காமி!!!!

இங்கே மட்டும் என்ன வாழுதாம்? சரி கொண்டா…. ம்ம்ம்ம்ம்……… 100 ரூபாய்க்கு நீ கார்டு போட்டா உனக்கு ஒரு சோப்புடப்பா ப்ரீயா குடுப்பாய்ங்களாம்!!!


ம்ம்

அதுக்குள்ள ஒரு சோப்பையும் வச்சு குடுத்துட்டா வாங்கிடலாம். வெறும் டப்பாவ வச்சு என்ன செய்ய?

குடுத்துட்டாலும்…..

இந்த சேவையை பெற நம்பர் ஒன்றை அழுத்துங்கள்ன்னு சொல்லுவாய்ங்க பாரு… செமையா தலைக்கேறும்…. காசு கொடுக்குறது நாம்ம… ஆனா அதுக்கு பேரு சேவையாம்?!!! கொடுமை

ஹா….ஹாஹாஇப்பதேன் எல்லாமே வியாபாரமாகி போச்சே…. ரத்னவேல் ஐய்யா கூட சொன்னாக…. மருத்துவமனை வியாபாரமா சேவையான்னு?!!! அப்பறம் மத்ததெல்லாம் எம்மாத்திரம்?!!!

காசு இருந்துட்டா நா ஏன் கேள்வி கேக்க போறேன்… எல்லா கம்பெனி சிம்கார்டையும் வாங்கி நோக்கியால எல்லா போனையும் வாங்கில சுத்திட்டிருப்பேன்.....கைலதேன் சிக்க மாட்டேங்குதே!!!!

ஏன் கவலபடுற? சகோ அபு  பணம் பண்ணலாம் வாங்கன்னு கூப்டிருந்தாங்க…. அவுக கிட்ட போயி கத்துக்க!!!

பணத்த பண்ண கத்து குடுக்குறாகளா? அப்பறம் என்னைய போலீஸ் பிடிச்சுட்டு போயிடாது? சம்பாதிக்க வழி சொல்லுபுள்ள…. பண்ணுறதுக்கு சொல்லி குடுக்குற?!! உன்கிட்ட போயி கேட்டேனே!!!!

அடக்கொடுமையே,.... நல்லதுக்கு ஏது காலம்??
சரி சரி போய் கத்துக்குறேன்.... ஜீ 20 வருஷத்துக்கு பிறகு ஊர்க்கு போயிட்டு வந்த அனுபவத்த சொல்லுறதா சொன்னாகபோயி கேட்க போறேன்…. அப்படியே விக்கி சொல்லி கொடுத்தாப்ள எல்லா வீட்டுக்கும் உள்ளேன் அம்மான்னு பிரசண்ட் போட்டுட்டு வர்ரேன்…. அப்பதேன் என் கடை சரக்கும் காலியாகும்!!!

மதியமாச்சேசாப்பாடு செஞ்சீயா? என்ன சாப்டூவ? நா வேணும்னா கொழம்பு தரவா??

உன் கைய்யால சாப்டுறதா? ஏன் நா நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா??? வேண்டவே வேண்டாம்… அதுக்கு பதிலா நேரா ரோட்ட பிடிச்சு சுடுகாட்டுல குழிவெட்டி நானே போயி படுத்துக்கலாம்.... போற வழிலதேன் மெட்ராஸ் பவன் இருக்கு…. ஸ்பெஷல் மீல்ஸ் சூப்பரா இருக்கும். அங்கேயே சாப்டுக்குறே!!!! வரட்டுமா???!!!!

போய்த்தொல..  எதுக்கும் எங்க அண்ணா ஹைதர் அலி சொன்ன ஆபத்தான உணவு முறை பத்தி தெரிஞ்சுட்டு போ........ ருசியா சாப்பிடுற நம்மள மாதிரி ஆளுக்கு தேவைப்படும்!!! 

ம்ம்...... கண்டிப்பா கண்டிப்பா............ சரி வார்ரேன்...........

******************
அடுத்த பதிவு- ரசித்தவை பல.... கொடுத்தவை சில......... :-)
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது