
ஸ்ரீரங்கம் கோவில் உட் பிராகாரங்களில் மேலே வரையப்பட்ட அந்த நாளைய ஓவியங்கள் பிரமிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை.
கீழே வைத்து வரைந்தாலே சொதப்புகிற எனக்கு எப்போதுமே ஆச்சர்யம் அவற்றைப் பார்க்கும்போது... எப்படித்தான் அளவு தப்பாமல்.. துல்லியமாய்.. வரைந்தார்களோ.. அதுவும் அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக் கொள்ளும்.. சாரம் கட்டி.. ஊஞ்சல்...
மேலும் வாசிக்க...

ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே சுற்றி வரும் போது சந்திரபுஷ்கரணியை பார்க்கலாம். இதன் அருகிலேயே பரமபத வாசல்.. தன்வந்தரி ஸந்நிதி.. கோதண்டராமர் சந்நிதி எல்லாம் இருக்கு..
இப்போது பூட்டி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இதற்குள்ளே போகலாம். சுற்றி வரலாம். புன்னை மரம் (ஸ்தல விருட்சம்) உண்டு.. படத்தில் தெரிகிறதே.. அதே மரம். ஸ்ரீரெங்கநாதர்,...
மேலும் வாசிக்க...

பல வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் கோவில் மூலஸ்தானத்தில் தீ பிடித்துக் கொண்டதாம். மூலவர் நெருப்பில் தகதகத்திருக்கிறார். போராடி அணைத்திருக்கிறார்கள். பிறகு மூலவரை புதிதாய் வடிவமைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் பல எதிர்ப்புகளைச் சமாளித்து வந்திருக்கிறது. பிற படையெடுப்புகள்.. ஊருக்குள்ளேயே சங்கடங்கள் என்று.....
மேலும் வாசிக்க...

இன்று பெரிதாய் நிற்கும் ராஜகோபுரம் அந்த நாட்களில் எப்படி இருக்கு பார்த்தீங்களா..
ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிராகாரங்கள் நடுவில் இருக்கிறது உங்களுக்குத் தெரியும்..
மூலஸ்தானத்தைச் சுற்றி திருவெண்ணாழி சுற்று. பாற்கடலில் பரந்தாமன் துயில்வதைப் போல..
உத்திரை வீதி, சித்திரை வீதி, அடையவளைந்தான் என்று அடுத்தடுத்து சதுரமாய் வீதிகள். உத்திரை...
மேலும் வாசிக்க...

வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு இந்த வாரம் எனக்கு.. உங்களை அன்போடு வரவேற்கிறேன்..
எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான். ஆனால் முன் மொழிந்த திரு. வை.கோ. என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.. என்மேல் நான் வைத்திருப்பதை விட அதிகம் !
திரு. வை.கோ.வின் பேரன்பிற்கு நன்றி.
திரு. சீனா ஸாருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிப் போக முடியாது. கடைசி...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே
நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற யுவராணி தமிழரசன் தான் ஏற்ற பொறுப்பினை சரியாக நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 7
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 65
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 65
பெற்ற மறுமொழிகள் : 242
யுவராணி தமிழரசனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
சென்று வருக யுவராணி தமிழரசன்
நல்வாழ்த்துகள்...
மேலும் வாசிக்க...
கடவுளின் கருணையில்
கொடுக்கப்பட்டவை அனைத்தும் விசித்திரமானவை. வாழ்க்கையின் அர்த்தமே
விசித்திரமாய் தோன்றிடும் பல சமயம். சந்தோஷத்தருணங்களை நினைவூட்டுகையில்
அழுகை வரும் சில சமயம், வருத்தமான தருணங்கள் சிலதை நினைத்தால் சிரிப்பு
வரும். சந்தோஷம், அழுகை, சிரிப்பு, கோபம், வெறுப்பு அனைத்தும்
விளக்கமுடியாத மனித உணர்வுகள்.
...
மேலும் வாசிக்க...
முதுமை!
இதயத்தில் அச்சத்தை
விதைத்துவிட்டு,
நாடி நரம்புகளை
தளர்த்திவிட்டு,
உறக்கத்தை களவாடுமே!
உறக்கத்தை தேடும்
உயிர் சுவாசத்தின்
பயணத்தில் நாம்
என்ன செய்கிறோம்
அவர்களுக்காக?
நாம் எதை தொலைக்கிறோம்
அவர்களின்றி?
பெரியவர்களின் அனுபவம் கற்று
கதை கேட்டு
பக்குவப்படுத்தி பதபடுத்தப்பட்ட
மழலைகள் இன்று
உறவுகளும் அன்பும்
அறியாது!
குழந்தை பராமறிப்பு பற்றி
அம்மா சொல்லிக்கொடுப்பது போய்
கூகிளிடம் மன்றாடுகிறோம்!
எதை...
மேலும் வாசிக்க...
வாழும் வாழ்க்கையின் அர்த்தங்கள் யாவையும் அறிந்தவர்கள் யாரும் இல்லை இங்கு. அவரவர் வாழ்க்கையின் அர்த்தங்களை அறியவே அவரவர்களுக்கு இந்த ஆயுள் போதவில்லை. "கற்றது கையளவு கல்லாதது கடலளவு" என்ற போதிலும் எதை அடைந்துவிட்டதாய் கர்வம் ஏந்தி சில மனித இதயங்கள் துடிக்கின்றனவோ?
அன்பான வார்த்தைகள், அரவணைப்பான ஆறுதல்கள், உரிமையான தேற்றல்கள், இறுக்கமான உறவுகள்,...
மேலும் வாசிக்க...
அக்டோபர் 1 "தி ஹிந்து" நாளிதழின் ஓப்-எட் பக்கத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. அதை பற்றி இங்கே பகிர விரும்புகிறேன். அந்த செய்தி ஒரு அமைச்சரின் கோரிக்கையும் அதை பற்றிய ஒரு அலசலும். அவரது கோரிக்கை என்னவென்றால் திருமணமான ஒவ்வொரு ஆணும் தனது மனைவியின் பெயரில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து மாதாமாதம் குறிப்பிட்ட சதவிகித தொகையை கணக்கில் செலுத்திவிடவேண்டும்.
...
மேலும் வாசிக்க...