07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 25, 2011

ஏழாம்நிலை மாடம்!!






கதைகதையாம் காரணமாம்
வாழைமரத் தோரணமாம்!!
பலபேரு சொன்ன கதை
காதார கேட்டுபுட்டு!
சிந்தனையில் இருப்போரே!
மீண்டுமிங்கே திண்ணைக்கு
பாய்ந்து ஓடியாங்க
இன்னுமொன்று பார்த்திடுவோம்!!

ஆயிரம் பேசினாலும்
அளக்காமல் கொட்டினாலும்
ஊரெல்லாம் அலைந்து
உல்லாசம் தேடினாலும்
வீட்டு வாசல் வந்ததும்
உற்சாகம் வருவதுபோல்!
எம்மொழியைப் பேசுகையில்
என்மனம் குளிருது!!


அன்புநிறை தோழமைகளே இன்று நம்ம அரட்டைக் கச்சேரி முடியும் நாள். இன்றைய நிறைவாய் நம் இனிய தாய்மொழியின் சுவை பற்றிக் காண்போம் என நினைத்தேன்.
பேசிக்கொண்டே போகலாம், தமிழின் வளம் பற்றி. இன்றைய காலகட்டத்தில் மொழியில் கலப்பின வார்த்தைகள் பல கலந்து கொஞ்சம் மொழியின் தன்மையை மாற்றி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆயினும் இன்னும் நம் மொழி தரத்தில் இருந்து இறங்கவில்லை. முடிந்த அளவு தமிழைக் கலப்பு இல்லாமல் பேசுவதற்கு முயற்சி செய்வோம். நம் கண் எதிரே ஒரு தமிழர் வந்தால் தமிழில் பேசுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

திரைப் படங்களில் பல பாடலாசிரியர்கள் தங்களின் தமிழ்ப்புலமையை வெளிப்படுத்தி இருந்தாலும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இணை அவர்தான். இருவர் என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய நறுமுகையே..நறுமுகையே.. என்ற பாடல் எங்கு பாடினாலும் அப்படியே அந்த பாடலின் கவிநயத்தில் ஆழ்ந்து விடுவேன்.




நாவின் சுழற்சியில்
நாவன்மை தெரியினும்!
ஈரேழு பக்கங்கள்
இறுமாந்து பேசினும்!
உன்புகழைச் சொல்கையிலே
உவகை பெருகியதே!

கோடிசுகம் கிடைத்திடினும்
தேடிவந்து யான்வேண்டும்!
எந்நாளும் என்நெஞ்சில்
நீக்கமற நிறைந்திடவே!
அருள்புரிய வேண்டுமே
தமிழ்ப்பெரும் கருணையே!!

...............................................................................................................................
இங்கே நம் பதிவர்கள் பலர் தமிழின் பெருமையையும், தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் வளர்ச்சி, இலக்கியம், இலக்கணம், நாட்டுப்புற இலக்கியம், சித்தர்கள் காவியம், மருத்துவம், சங்க காலம், இலக்கியக் கவிதைகள் ஆகிய இன்னபிற செய்திகளையும் நமக்கு எளிதாக புரியும் வகையில் அழகுற படைத்திருக்கிறார்கள். வாருங்கள் தமிழமுதம் பருகிவிட்டு வருவோம்...
...............................................................................................................................




வலைகளை சுற்றி வருகையில் சற்று தாகம் எடுத்து அருகே இருந்த தெளிந்த நீரோடையில் கைகள் அள்ளிய நீரை பருகி தாகம் தணித்தேன். அங்கே என் தாகத்தை தீர்த்ததற்கு முழு உரிமைபெற்றவர் சுந்தர்ஜி. நந்தவனத்தில் ஓராண்டி என்று குசப்பாத்திடம் போட்டுடைத்து பின்னர் காதற்ற ஊசிகொண்டு வாழ்வியல் தத்துவம் பேசிய பட்டினத்தார் பற்றி அழகாக ஒரு காவியம் படைத்திருக்கிறார்.. வாருங்கள் போய் பார்த்து வருவோம்..

இதோ அவருக்காக..

பட்டினத் துறவிகளின்
பாடம் உரைத்தாயே!
பாங்குடனே நீ இட்ட
பத்துப் பாடல்களையும்!
எழுத்துக்கூட்டி படித்த பின்னே
பட்டினத்து அடிகளின்
புலமை தெரிந்ததய்யா!!

................................................................................................................................




அன்னை பூமியின் அருள்மழையை புவனமெங்கும் பொழியச் செய்யும் தோழர்கள் கூறுகிறார்கள் பிற தொழில் செய்வாரை எல்லாம் இத்தரணியில் தாங்கிப் பிடிப்பவர்கள் உழவர்களே, உலகம் என்னும் தேருக்கு உழவர்களே அச்சாணி போன்றவர்கள் என்று. உழவுத் தொழில் தான் நம் நாட்டுக்கே முதுகெலும்பு என்பதை எவ்வளவு அழகாக தமிழ் நயத்துடன் இங்கே கட்டுரையாக போட்டிருக்கிறார்கள் பாருங்கள்...

இதோ அவர்க்காக..

சேற்றிலொரு கால்பட்டால்
செங்கழனி உழுதிட்டால்!
நாற்றங்கால் இறங்கியே
நல்லவிதை செய்வித்தால்!
சோற்றில் நாமும் கைவிடலாம்
செங்குருதி ஊறிடுமே!!

.................................................................................................................................




ஒளவையின் ஆத்திசூடி கண்டு சங்கத் தமிழின் வளத்தை எண்ணி பெருமித்திருந்த வேளையில், இதோ பார் வேதாவின் ஆத்திசூடி என்று தற்கால ஔவையாய் தரணியில் வளம் வருகிறார் சகோதரி வேதா.இலங்காதிலகம். இவரின் வேதாவின் வலை சென்றால் தமிழின் இனிமையை முழுமையாக பருகிவிட்டு வரலாம். செல்வோமா..

இதோ அவருக்காக..

அறம்செய விரும்பென
ஒளவையின் மொழியினை
பழகி வருகையில்
என்மொழியை பாரடியோ!
ஏற்றமிகு ஆத்தியை
மாற்றிப் புனைந்தேன்
வாழ்விற்கு ஏற்ப!
எனப் பகன்று வந்தாயே!
கலியுலக ஒளவையே!!
...............................................................................................................................




இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் (cheers) அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்(cheers)... என மகிழ்வோடு தன் அறிவினை பகிர்ந்து கொள்கிறார் நண்பர் ஜனா தன் வலையில். அங்கே மண்ணின் பாடல்கள் என்று நம் தமிழின நாட்டுப்புற பாடல்களை எங்கே தொகுத்தளித்திருக்கிறார்.. வாருங்கள் பார்த்து வருவோம்..

இதோ அவருக்காக..

மொழியின் வளர்ச்சியோ
கலையாலே தானப்பா!
பண்பாடு பேசிவரும்
கலாச்சாரம் காத்து வரும்
கலைஞர்களின் வாய்மொழிதான்
மொழிவளர்த்து வந்ததுவே!!
அழகிய மொழியாய்
ஏட்டில் ஏறுமுன்
வாய்மொழியாய் வாழ்ந்தாயே
நாட்டுப்புறம் தன்னிலே!!
...............................................................................................................................




கடம்பவன நான்மாடக்கூடலாம் மாமதுரை நகரிலே விரிவுரையாளர் பணிக்கிடையே நம்மை தமிழின் இனிமையால் திகட்ட வைத்துவிட மகிழம்பூச்ச்சரம் தொடுத்து வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்ச்சரமாய் உலா வருகிறார் சகோதரி சாகம்பரி. அவரின் வலை முழுவதும் தமிழ் மனம் வீசும். அங்கே நான் கண்ட ஓர் பதிவு நின்னைச் சரணடைந்தேன்!! எந்தச் செயலைச் செய்தாலும் முழுவதுமாக உன்னை அங்கே அர்பணித்து சரணடைந்து விட்டால் அச்செயலில் வெற்றி உறுதி என அழகாக விளக்குகிறார். வாருங்கள் நாமும் சரணடைவோம்...

இதோ அவருக்காக..

அகண்ட அண்டமும்
அன்றே வேண்டுமென
முரண்டு கொள்ளாதே!
வாழ்வின் வெளியில்
தெரியும் பரப்பினில்
தேவையின் நிமித்தம்
முழுமையாய் பரவு!
அகமழித்து உந்தன்
செயலில் ஒன்றிட்டால்
வெற்றி நிச்சயம்!!
.........................................................................................................................



வலைப்பூக்களில் ஓர் வர்ணஜாலம். தமிழுக்காய் தன்னை முழுவதும்  அர்பணித்து வேர்களைத் தேடி  இவரிடும் ஒவ்வொரு பதிவுகளும் நமது மொழியின் சிறப்பினை எண்ணி மலைக்கும் வண்ணம் தலைசிறந்து நிற்கும். அன்புநிறை நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் தமிழ்ப்பணி வலைப்பக்கங்களிலும் இணையத்திலும் போற்றத்தக்க வணங்கத்தக்க ஒன்று. இதுதானென்று சொல்ல முடியா அளவுக்கு அத்தனை படைப்புகளும் நெஞ்சை வருடி தாலாட்டும் தமிழ்ப்புலமை. அங்கே மேற்கோள் காட்டிடப்படும் ஒரு சங்கப் பாடல் அதற்கான விளக்கம்.
இதோ இன்றைய பதிவு இரவலர் வாரா வைகல்.. சங்க காலத்தில் இரவலர் வராவிட்டால் வீட்டுப் பெண்கள் எவ்வளவு துன்பத்துக்கு ஆளானார்கள் என அவர் சொல்லும் விதமே அற்புதம் தான்.
அப்பப்பா.. முனைவரே. இங்கே நான் உம்மை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை. உம்மின் பெயருடன் என் வலைச்சரப்பணியை நிறைவு செய்வதே என் நோக்கம். செய்தேன்.. பாக்கியம் பெற்றேன்..

இதோ அவருக்காக ..

தமிழின் பெருமையை
எம் ஆசான் உரைக்க
பொறியில் ஏற்றினேன்!
எழுத்துலகில் நுழைந்ததும்
விரல்களின் நுனியில்
ஊறிவந்த வார்த்தையெல்லாம்
கவியில் ஏற்றினேன்!
என்று உன் வலை கண்டேனோ
அன்றே தருவித்தேன்
அழகாய் ஓர் முடிவை!
நினைத்ததை எழுதாதே
அதில் சிறந்ததை எழுது!!

............................................................................................................................




அன்புநிறை தோழமைகளே, இதோ இன்றுடன் என் வலைச்சரப்பணி நிறைவுற்றது. இந்த ஏழு நாட்களும் என் மனதில் உள்ளதை எழுதி சில பதிவர்களை அறிமுகப்படுத்தியும் வைத்திருக்கிறேன். இங்கே நான் ஏதும் தவறுகள் செய்திருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். நிறைவாய் செய்திருப்பின் என் வலை வந்து சிறப்பியுங்கள்.
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த வலைச்சர பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றிகள். என்னை இத்தனை நாட்கள் ஆதரித்து கருத்துரைகளும் ஓட்டும் அளித்து வந்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அடுத்து வலைச்சரப் பொறுப்பேற்கும் இனியவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்பன்
மகேந்திரன். 

48 comments:

  1. சிறந்த அறிமுகங்கள்...

    செவ்வனே செய்தீர் பணி!

    தங்களுக்கு வணக்கங்களும், அடுத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  2. தங்களுக்கும்,அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அன்பின் சகோதரா! மகேந்திரன்! வலைச்சர எனது அறிமுகத்திற்கும, இன்னும் உமது ஆசிரியப் பணியை மிகத் திறம்படச் செய்ததற்கும் மனமார்ந்த வாழ்த்துகள், எனது நன்றியுடன். இதில் முக்கியமானது என்ன வென்றால் ஒவ்வொரு அறிமுகத்திற்கும் தாங்கள் எழுதிய கவி வரிகள் அற்புதம்! நான் ஒரு தடவை வாசித்தேன் உடனே இங்கு நன்றி கூற வந்துள்ளேன். மறுபடி சென்று வாசிக்கப் போகிறேன், அதாவது இன்னும் மிக நன்கு உள் வாங்கப்போகிறேன். மேலும் பணிகள் சிறக்கட்டும். மறுபடியும் அறிமுகங்களிற்கு மனம் நிறைந்த நன்றி. இறை அருள் கிட்டட்டும்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  4. அன்பான தமிழ் உறவே வணக்கம்..

    தங்கள் வலைப்பதிவைப் போல பல மடங்கு கடமையுணர்வுடன்...

    கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திப் பல புதிய பதிவர்களையும், அறிமுகமான பல பதிவர்களையும் தங்களுக்கே உரித்தான தனித்துவத்துடன் அறிமுகம் செய்துள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. என்னையும் தாங்கள் அறிமுகம் செய்தமை மனதை நெகிழ்ச்சியுறச் செய்வதாக அமைந்தது..

    மிக்க மகிழ்ச்சி நண்பரே..

    ReplyDelete
  6. தமிழ் வலையுலகத்தில் தங்களுக்கான தனித்துவமான சிறப்பிடம் என்றென்றும் உண்டு..

    அதுபோல வலைச்சரத்தில் ஆசிரியப்பணியாற்றியவர்களுள் தனித்துவமான சிறப்பிடத்தை உருவாக்கிய நிறைவுடன் தாங்கள் பணிநிறைவு பெறுகிறீர்கள்..

    வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  7. வெற்றிகரமாய் முடித்துவிட்டீர்கள்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று இந்த ஒரு வாரமும் மிகச்சிறப்பாக பணியாற்றி விடைபெறும் திரு. மாகேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் அன்பரே!
    எங்களுக்கு தமிழமுது பருகத்தந்து
    விடை பெறுகிறீர்கள்!
    வாரம் முழுக்க அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!நன்றி!

    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்கள். வலைச்சர பணி சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
  11. வலைப்பூக்களில் தமிழ் வளர்க்கும் இணையற்ற பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக நிறைவு செய்தமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்..ஐயா.. !!எங்கெங்கும் தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்..!!

    ReplyDelete
  13. பொறுமையாக ஏழு நிலை மாடங்களையும் தொகுத்து அளித்ததற்கு நன்றி தோழர்

    ReplyDelete
  14. மிக மிக அருமையாக உங்கள் பதிவுகளைப் படைத்துள்ளீர்கள்! கவிதைகள் அற்புதம்! மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. வாரம் முழுவதும் சிறப்பான அறிமுகங்கள்... உங்களது தனிப்பாணியில் செய்த அறிமுகங்கள் மிக அருமை நண்பரே... வாழ்த்துகள்....

    ReplyDelete
  16. அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்களும் நன்றியும் மகேந்திரன்.தமிழின் பெருமையை சொல்லும் இன்றைய அறிமுகங்களுக்கு நன்றி.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இன்றைய பதிவில் அறிமுகப்படுத்தப் பட்ட கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

    தங்களின் அழகான தொகுப்புக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  19. அன்பு நண்பர் வெளங்காதவன்
    தங்களின் மனம் நிறை கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  20. அன்பு நண்பர் கருன்
    தங்களின் மனம் நிறை கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  21. அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்.
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  22. அன்புநிறை முனைவரே
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  23. அன்புநிறை நண்பர் சௌந்தர்
    தங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  24. அன்புநிறை ஐயா வை.கோபாலகிருஷ்ணன்
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  25. அன்புநிறை நண்பர் கோகுல்
    தங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  26. அன்பு நண்பர் கோவை2தில்லி
    தங்களின் மனம் நிறை கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  27. அன்பு நண்பர் பாரத்... பாரதி...
    தங்களின் மனம் நிறை கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  28. அன்புநிறை நண்பர் தங்கம்பழனி
    தங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  29. அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
    தங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  30. அன்பு சகோதரி மிடில்கிளாஸ் மாதவி
    தங்களின் கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  31. அன்பு நண்பர் வெங்கட் நாகராஜ்
    தங்களின் கருத்துக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  32. அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
    தங்களின் கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  33. அன்பு நண்பர் சண்முகவேல்
    தங்களின் கருத்துக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  34. அன்புநிறை நண்பர் ரமேஷ்
    தங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  35. வணக்கம் அண்ணாச்சி,
    வலைச்சரத்தைச் சுவைபடத் தொகுத்தளித்த உங்களுக்கு மிக்க நன்றிகள்.

    இன்று அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. அன்புநிறை நண்பர் நிரூபன்
    தங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  37. இதுவரை அருமையாக உங்கள் ஆசிரியர் பணியை செய்தீர்கள்.. வாழ்த்துக்கள் மாப்பிள அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்... 

    ReplyDelete
  38. அன்புநிறை காட்டான் மாமா
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  39. கலக்கிட்டீங்க நண்பா.... கிராமிய வாசனையில் வலைச்சரம் ஒரு வாரம் நனைந்திருக்கிறது.... சிறப்பாக தங்களது பணியை செய்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  40. முன்னுரை தொடங்கியதும் தெரியவில்லை....

    முதலாம் மாடத்தில் தொடங்கி இதோ இன்று ஏழாம்நிலை மாடத்தில் வந்து நிற்பதும் தெரியவில்லை.. அத்தனை சீக்கிரத்தில் நாட்கள் பறந்துவிட்டதா என்ன??

    ஒவ்வொரு நாளும் விளக்காய் பிரகாசித்தது உங்கள் பகிர்வுகள்.....

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொல்நயம், கருத்து செறிவு அறிமுகப்படலம்.....

    இதோ இன்று லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் இதுக்கு தமிழ் எப்படின்னு தெரியலையே... கோவிக்காம படிச்சிக்கிட்டே வாங்க....

    தமிழே அழகு.. அதிலும் உரைக்கும் விதமாய் முதலில் ஔவையை புகழ்ந்து அதன்பின் தமிழை இத்தனை அழகாய் பொ(மொ)ழியும் நண்பர்கள் அத்தனை பேரையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்க....

    ஒவ்வொரு அறிமுகத்துக்கும் சிறப்பான கவிதை வரிகள்...அவரின் மேன்மையை, அவர் படைப்பை அதன் உயர்வை சொல்லி செல்லும் அழகிய கவிதை வரிகள்.....

    இதில் வேதாம்மாவின் வரிகள், குணசீலனின் வரிகள் எனக்கு மிகவும் பரிச்சயமானது...

    தமிழை தமிழாகவே பேசச்சொல்லி இருக்கீங்க.... கண்டிப்பாக முயல்கிறேன்பா...

    நல்லதையே சொல்லவந்தேன்....
    நல்லதையே சொல்லி வந்தேன்....
    நல்லதையே சொல்லி செல்கிறேன்...

    என்று அழகிய முடிவுரைப்பா மகேந்திரன்.....

    ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. ரசித்ததை பகிராமல் இருக்கமுடியவில்லை.... பகிர்ந்ததை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை... அடக்கம் அடக்கம் அடக்கம்... ஆனால் பகிர்வோ எத்தனை பிரகாசம் வீரியம்.....

    குடத்திலிட்ட விளக்காய் பிரகாசிக்கும் ஒவ்வொரு மாடமும் அத்தனை அருமை மகேந்திரன்.....

    அன்பு வாழ்த்துகள்பா தமிழின் பெருமையை பகிர்ந்தமைக்கு.....

    அன்பு வாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அத்தனைப்பேருக்கும்.....

    வலைச்சரத்தில் ஏற்ற பணியை பொறுப்பாய் சிறப்பாய் செய்து முடித்தமைக்கு என் அன்பு வாழ்த்துகள்பா....

    எத்தனை வேலைகள் இருந்தனவோ? அதுவும் ஊருக்கு போகுமுன் அது செய்யனும் இதை செய்யனும்னு யோசிச்சுக்கிட்டு தான் போவோம் தாயகத்துக்கு.. ஆனால் பாருங்க விடுமுறை பொசுக்குனு தீர்ந்துரும்... இம்முறை இத்தனை வேலைகளின் இடையிலும் இப்படி கொடுத்த பணியை கூட சிறப்பாய் செய்து முடித்தமைக்கு (ஸ்பெஷலுக்கு என்னப்பா தூய தமிழில் மன்னிச்சுக்கோங்க ) ஸ்பெஷல் வாழ்த்துகள்பா....

    சீக்கிரம் அபுதாபி வாங்க அப்டியே குவைத் வாங்கப்பா...

    ReplyDelete
  41. அன்புநிறை நண்பர் ராஜேஷ்
    தங்களின் அன்பான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு
    என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  42. அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
    தங்களின் விலைமதிப்பிட முடியாத விரிவான கருத்துக்கு
    என் அன்பான நன்றிகள். ஐயா சீனா அவர்களின் அழைப்பு என்னை
    மெருகேற்றிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை சகோதரி.
    பலவகையான பதிவர்களை இங்கே சந்தித்தேன், நிறைய கற்றுக்கொண்டேன்.
    நான் இதுவரை எழுதாத பதிவுகளின் வகைகள் இன்னும் நிறைய உண்டு. அவைகளின் உண்மை நிலையினை நான் இங்கே கண்டேன்.

    இறைவன் அருளினால் என் எழுத்துக்களை மேலும் அழகூட்டச் செய்கிறேன்.
    வந்து பத்து நாள் போயிருச்சு அடுத்து பத்து நாளில் திரும்ப போயிற வேண்டியதுதான்...
    ஸ்பெஷல் என்பதற்கு சிறப்பு என்று சொல்லலாம் சகோதரி.

    நன்றிகள் பல

    ReplyDelete
  43. இட்ட பணிமுடித்து-மிக
    எளிமையெடு கவிபடித்து
    தொட்ட செயல்தம்மை-நல்
    தூய்மைமிக செய்தெம்மை
    திட்டமிட்டு வந்தீரே-இனிக்க
    தீந்தமிழைத் தந்தீரே
    வட்டமிட்டு பலபேரின்-பல்
    வலைதளத்தின் நற்பெயரே
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  44. மாப்ள வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  45. அன்புநிறை புலவரே
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  46. அன்புநிறை விக்கி மாம்ஸ்
    தங்களின் மேன்மையான கருத்துக்கு
    என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  47. மிக முக்கியமான ஒரு பொறுப்பில் சிக்கிக் கொண்டதால், அன்புச் சகோதரரின் வலைச்சரம் பக்கம் வரவே முடியவில்லை. ஒவ்வொரு மாடத்தையும் படித்து விட்டாலும் மனம் உணர்ந்து பதிலெழுத விரும்பியே தாமதமாகிவிட்டது. வசந்த மண்டபத்தின் நாட்டுப்புற கவிகளும் சங்கத்தமிழும் எனக்கு பரிட்சயமானதுதான். ஆனால், வலைச்சரத்திற்கு அப்படி என்ன விசேசம், சூரிய ஒளிக்கு மறைந்து கொள்ள விரும்பாத மலர்கள் போன்று ஏழு பதிவுகளும் தங்களின் திறமையின் எட்டுதிசைகளையும் காட்டிவிட்டனவே. எத்தனை அழகான கவிதைகள், அறிமுகங்கள்! என்னை வியப்பிலாழ்த்திவிட்டன. நன்றி சகோ. என்னை அறிமுகப்படுத்திய மகிழ்ச்சியைவிட , மிகவும் திறமையானவர்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் பதிவுலகத்தில் நானும் ஒரு துளியாக உள்ளேன் என்பதை உணர வைத்ததற்கு

    ReplyDelete
  48. வலைசர ஆசிரிய பணியை
    சிறப்பாக செய்து முடித்ததற்கு நன்றி சகோ ....
    இன்றைய அறிமுக பதிவாளர்களுக்கு பாராட்டுக்கள்....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது