07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 7, 2009

கலந்து கட்டியாக


இண்ணக்குக் கலந்து கட்டியாச் சில பேரப் பத்திப் பாப்பம்.
விஜய் கோபாலசாமி என்ர மாப்பிள்ளை கோவாலு. ஆரம்ப மொதலே என்ர சிஷ்யனா இருக்காரு. மாப்ளனு அன்பாக் கூப்புடுவேன்.
ஒற்றர் படையில முன்னணி வகிப்பவரு. என்னையப் பத்தி எங்காச்சும் இணையத்துல வந்துச்சுனா உடனே போன் பண்ணிச் சொல்லிப் போடுவாரு. தஞ்சாவூர்க்காரரு. இப்பம் ஹதராபாத்தில இருக்காரு.

இவரோட முகவரி
http://vijaygopalswami.wordpress.com

”வாயுத்தொல்லை” அப்படிங்கிற இவரோட பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம்
“டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

அப்பறம் ஜோசப் பால்ராஜ்!

சிஙக்பூர்ல இருக்காரு. இவரும் என்ர பதிவுகளோட ரெகுலர் வாசகர். என்ர கம்ப்யூட்டர் பத்தின சந்தேகங்களுக்கும் அப்பப்ப பதில் சொல்லுவாரு.

வேலை மாறும்போதுங்கூடி எங்கிட்ட ஆலோசனை கேப்பாரு. சிலசமயம் சொந்தப் பிரச்சினைகளையும் என்கிட்டப் பகிர்ந்துக்குவாரு. நான் எழுதாம இருக்குறப்பெல்லாம் எழுதச் சொல்லி வற்புறுத்துவாரு. மத்தவிங்களுக்குச் சொல்லி விளம்பரம் தேடாம நெம்பப் பேருக்கு உபகாரங்கள் பண்ணியிருக்காரு. இவரு பேர்ல நன் வெச்சிருக்கிற அபிமானத்தக் காட்டுறதுக்காக என்ர படைப்புகளிலே ஏதாவது ஒரு கேரக்டருக்கு இவரு பேரை வெச்சுப் போடுவேன்.
இவரோட பதிவுக்கு :
www.maraneri.com

இனி
பத்ரி சேஷாத்த்ரி. சென்னைக்காரர்.

இவரது உலகம் பரந்து விரிந்தது. பல களங்களிலும் உருப்படியான விஷயங்கள் சொல்றார். தமிழ் வளரப் பணிகள் செய்கிறார். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” அப்படிங்கிற கான்சப்ட் நல்லாப் பின்பற்றுகிறார்.

பொதுவா நெம்பப் பதிவருங்களோட பதிவுகளப் பாத்தா நாட்குறிப்பு மாதிரி இருக்கும்.”காலையில் எழுந்தேன் வயிறு கடமுடா என்றது. அப்புறம் கரகரவென்று வந்தது” அப்படினு தங்களோட அன்றாட நிகழ்வுகளைக் கொட்டுவாங்க.

இவர் அப்படியில்ல. அவனாசியத் தாண்டியும் உலகம் இருக்குதுனு தெரிஞ்சுக்க இவரு பதிவுகளைப் படிக்கலாம்.

இவரோட வலைப் பூ முகவரி : http://thoughtsintamil.blogspot.com

அடுத்தது அகரம் அமுதா.

இவரும் சிங்கப்பூர்லதான் இருக்காரு. வெண்பா எழுதுறதுல நெம்பத் திறமையானவரு. சமயத்துல பின்னூட்டமெல்லாம் வெண்பாவுல எழுதிருவாரு. நான் நடத்துன வெண்பாப் போட்டில மொதோப் ப்ரைஸ் வாங்குனவரு.

இவரு எழுதுன குறள் வெண்பா ஒண்ணு அருமையா இருக்கும்.

கொங்கு தமிழிருந்தும் இங்கிலிஷை வைத்திடுவாள்
நுங்குநிகர் நாக்கின் நுனி!”
அடடா என்ன உவமை! என்ன உவமை! எப்பவோ படிச்சிருக்கேன் அரவப் படம்னு. அந்த மாதிரி உவமை இவரோட நுங்கு உவமை.

அதுக்கு முந்தி ஒரு ஃப்ளாஷ்பேக்.

ஆராச்சும் கொமுறிங்க இங்கிலீஷ்ல தஸ்ஸு புஸ்ஸுனு பேசுனா லதாளுக்குக் கோவம் வந்துரும்.

”............. க்கு மேல எட்டி ஒரு ஈடு போட்டா ஒளுக்கமாத் தமிள்ள பேசுவாளுக” அப்படினு காட்டமா விமர்சிப்பா.
அது இருக்கட்டும்.
அகரம் அமுதாவுக்கும் அத்தசோட்டுக் கோவம் இருக்கும் போல.
கொங்கு நாட்டுத் தமிழ் இருக்குறப்போ இங்கிலீஷ்ல பேசுற டிங்கிகளப் பத்தி.

இப்ப அதல்ல பிரச்சினை.

உவமைங்கண்ணா உவமை!

கொமுறியோட நாக்குக்கு உவமை சொல்றார் பாருங்க!
நுங்கு நிகர் நாக்காம்.

கொஞ்சம் வெலாவரியாப் பாப்பம்.

நொங்கு தின்னுருக்கீங்களா? எள நொங்கு குளுமையா இருக்கும். ஈரப் பதத்தோட இருக்கும். கொஞ்சம் சிரமப்பட்டுதான் நொங்கைத் திறக்கோணும். அதுக்கப்பறம் பாத்தீங்கன்னா வளு வளுன்னு இருக்கும். லேசா ஒரு மாதிரி பிரத்தியேகமான வாசனையாவும் இருக்கும். நாக்கால வருடினா அப்பிடியே உறிஞ்சிரலாம்னு தோணும். சூப்பியும் சுவைக்கலாம். பாக்கறதுக்கும் அட்டகாசமாயிருக்கும். லேசா சுவைக்கிறப்போ மென்மையா சத்தமும் வரும். ருசி கிறுகிறுக்க வைக்கும். ஈரப் பதத்தோட லேசாப் பசை மாதிரி வாயெல்லாம் ஒட்டும். வெயிலுக்குக் குளிர்ச்சியாயும், குளுர் காலத்துல லேசா வெதுவெதுப்பாயும் இருக்கும். இப்படி ஐம் புலனுக்கும் கிரிகிரி தர்ர நொங்கைப் பொருத்தமா உவமையாக்கியிருக்காரு.

உவமைங்கண்ணா உவமை!

இவரோட வலைப் பூவுக்கு :
http://taminglishpoem.blogspot.com/2008/05/blog-post_19.html

அப்புறம் பதிவுலக ஒளி ஓவியர் நந்து f/o நிலா. பெரும்பாலும் பின்னூட்டங்கள்தான் போடுவாரு. ஆஸ்பத்திரி சம்பந்தமா இவர் போட்ட பதிவு குறிப்பிடத் தக்கது. வனவிலங்குக் கணக்கெடுப்பு நடந்த 3 நாளும் எங்கூடவே இருந்தாரு. நந்து பெரிய போட்டோகிராஃபர். ஏராளமான போட்டோக்களை எடுத்திருக்காரு. ஃப்ளிக்கர், நேச்சுரல் வாச் அப்படினெல்லாம் புரியாம பேசிகிட்டிருப்பாரு. நல்ல கம்பனி. தரமான பதிவர். இவரோட வலைப்பூ முகவரி: http://nandhu1.blogspot.com/

********************************************************************************



*************************************************************

19 comments:

  1. //நொங்கு தின்னுருக்கீங்களா? எள நொங்கு குளுமையா இருக்கும். ஈரப் பதத்தோட இருக்கும். கொஞ்சம் சிரமப்பட்டுதான் நொங்கைத் திறக்கோணும். அதுக்கப்பறம் பாத்தீங்கன்னா வளு வளுன்னு இருக்கும். லேசா ஒரு மாதிரி பிரத்தியேகமான வாசனையாவும் இருக்கும். நாக்கால வருடினா அப்பிடியே உறிஞ்சிரலாம்னு தோணும். சூப்பியும் சுவைக்கலாம். பாக்கறதுக்கும் அட்டகாசமாயிருக்கும். லேசா சுவைக்கிறப்போ மென்மையா சத்தமும் வரும். ருசி கிறுகிறுக்க வைக்கும். ஈரப் பதத்தோட லேசாப் பசை மாதிரி வாயெல்லாம் ஒட்டும். வெயிலுக்குக் குளிர்ச்சியாயும், குளுர் காலத்துல லேசா வெதுவெதுப்பாயும் இருக்கும். இப்படி ஐம் புலனுக்கும் கிரிகிரி தர்ர நொங்கைப் பொருத்தமா உவமையாக்கியிருக்காரு.

    உவமைங்கண்ணா உவமை!//

    பின்றிங்களே சார்.. பின்றிங்களே... :)))

    ReplyDelete
  2. அன்பின்ன் லதானந்த்

    பின்னீட்டிங்க - கலந்து கட்டி

    சூபர் அறிமுகம் - விஜய் கொபொபால்சாம் - ஜோசப்பு - அகரம் அமுதா - நந்து இவங்க எல்லாம் நம்ம நண்பர்கள் தான்

    நல்லாருங்க

    ReplyDelete
  3. இன்னைக்கு அதிரடியா பல பதிவர்களை அறிமுகப்படுத்தீடிங்க!

    ReplyDelete
  4. // தரமான பதிவர்//
    நீங்க ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே. எங்கே நந்துவே வந்து தான் ஒரு தரமான பதிவர்னு சொல்லச்சொலுங்க பார்ப்பம்

    ReplyDelete
  5. // தரமான பதிவர்//
    நீங்க ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே. எங்கே நந்துவே வந்து தான் ஒரு தரமான பதிவர்னு சொல்லச்சொலுங்க பார்ப்பம்

    ReplyDelete
  6. /
    நல்ல கம்பனி. தரமான பதிவர்
    /

    மிஸ்டர் நந்து பொட்டி எம்புட்டு குடுத்தீங்க

    :)))))))))))))))))





    சும்மா தமாஸ்க்கு லதானந் அங்கிள்!

    ReplyDelete
  7. சஞ்சய் காந்தி!
    பின்னுறதுனா என்ன? எதாச்சும் உவமை சொல்லுங்களேன்?

    சீனா, வால்பையன், தமயந்தி!
    நன்றி

    இலா!
    நந்து ஒரு முள் மூடாத பலா!
    பழகுவதில் தன் பேர் போல நிலா!
    பேச்சும் சிரிப்பும் எப்போதும் கலகலா!
    நெஞ்சில் என்றும் வருவார் உலா!

    தரமான பதிவர் அப்படின்னா பதிவுகள் தரமாயிருக்கும்னு நெனைச்சிட்டீங்களா?
    அய்யே! ஆளு தரமானவரு!
    எப்பூமே நான் எழுத்துக்களையும் விட எழுதுபவர்களை அதிகமாக் கவனிப்பேன். தெரியும்ல?

    மங்களூர் சிவா!
    நந்து மூணு பொட்டி கொண்டு வந்தாரு. ஒவ்வொரு பொட்டிலயும் ஜோக்கரச் சேக்காம 52 இருந்துச்சு!

    ReplyDelete
  8. //ILA said...
    எங்கே நந்துவே வந்து தான் ஒரு தரமான பதிவர்னு சொல்லச்சொலுங்க பார்ப்பம்//

    யோவ் இளா மாமு. ஒரு மூத்த பதிவர போட்டு தாக்குன எம்பட பதிவு ரொம்ப தரமான பதிவு இல்லையா? இன்னொரு போஸ்ட் போடனும் போல இருக்கே?

    ReplyDelete
  9. //இலா!
    நந்து ஒரு முள் மூடாத பலா!
    பழகுவதில் தன் பேர் போல நிலா!
    பேச்சும் சிரிப்பும் எப்போதும் கலகலா!
    நெஞ்சில் என்றும் வருவார் உலா!//

    நான் படிச்சதிலேயே ஆகச்சிறந்த கவிதை இதுதாங் சார். காதில் இன்பத்தேன் (தேனீ அல்ல)வந்து பாய்ந்தது.

    ReplyDelete
  10. //சஞ்சய் காந்தி!
    பின்னுறதுனா என்ன? எதாச்சும் உவமை சொல்லுங்களேன்?//

    அது ஒரு 69 பக்கம் வரும் பரவால்லையா? :)))

    ReplyDelete
  11. // பத்ரி சேஷாத்த்ரி. சென்னைக்காரர் இவரோட வலைப் பூ முகவரி : http://thoughtsintamil.blogspot.com //

    குளிர் 100 டிகிரி :)

    ReplyDelete
  12. தமிழ்மணமே, வலைச்சரமே... வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.... (பாத்துப் போட்டுக் குடுங்க... இதயத்துல இடம் மட்டும் குடுத்துறாதீங்க... அங்கேந்துதான் இதை எழுதுறேன்....) :))

    ReplyDelete
  13. நந்து!
    ஒங்க சண்ட சாடிக்கெல்லாம் என்ர வலைசரம்தான் டெடைச்சுதா?
    அது சரி நீங்க மொத்தம் எத்தனை கவிதை படிச்சிருக்கீங்க? full details குடுங்க

    சஞ்சய்!
    உவமையே 69 பக்கம் வருமா?
    பரவால்ல அனுப்புங்க.
    எனக்கு 69னா நெம்ப இஷ்டம். அதப் பத்தி ஒரு தனிப்பதிவு போடட்டுமா? ’போடவும்’னு சொல்றவிங்க இந்தப் பதிவின் பின்னூட்டத்திலயே கேளுங்க. போட்றேன்.

    வெயிலான் ஏனுங்க 100 டிகிரி? புரியற மாதிரி சொல்லுங்க

    கோவாலு!
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  14. //எனக்கு 69னா நெம்ப இஷ்டம்.//

    ஆனாலும் ரொம்ப குறும்புங்க உங்களுக்கு!

    ReplyDelete
  15. // நந்து பெரிய போட்டோகிராஃபர்.

    இலா!
    நந்து ஒரு முள் மூடாத பலா!
    பழகுவதில் தன் பேர் போல நிலா!
    பேச்சும் சிரிப்பும் எப்போதும் கலகலா!
    நெஞ்சில் என்றும் வருவார் உலா! //


    இந்த மாதிரி நீங்க சொல்ல அவரு எத்த போட்டா எடுத்து தந்தரேன்னு சொன்னாரு.

    ReplyDelete
  16. //ஆளு தரமானவரு//
    சே.. லா பாயிண்டுல அடிச்சுப்ப்புட்டீங்களே.. ஆள எப்படித் தப்பாச் சொல்லமுடியும்? அவரு பத்தரை மாத்து தங்கமாச்சே.. (வூட்டுக்கு போனா சோறு கெடக்க வேணாம்??)_

    ReplyDelete
  17. இவிங்களுது எல்லாம் படிக்க முயற்சி பண்ணறேன். சித்தர் வலைச்சரம் போடும் இந்த சமயம் பாத்து ஆணி அதிகம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது