07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 20, 2009

ப‌டிம‌ம்

என்னம்மா மின்னல் ஏதோ கவிதை கவிதைன்னு உருகறியே. உனக்கு கவிதைகான மொழிகள் வரைமுறை எல்லாம் தெரியுமா? சும்மா ஒரு விசயம் கேட்கறேன் ஜஸ்ட் படிமம்ன்னா என்னா என்று மட்டும் சொல்லு பார்ப்போம்.படிமம் இதை பற்றி பேசாத பெரிய கவிஞர்களே இல்லை எனலாம்.(of course என்னை பெரிய கவிஞர் வரிசையில் நான் வைக்கலை so நான் படிமம் பத்தி பேச போறது இல்லை).

படிமம் என்பது "ஒரு விஷயத்தில் இன்னொரு விஷயத்தை படியச் செய்வது. நேரடியாகச் சொல்வதில்லை. படிமம் கவிதையின் சிறப்பம்சம். கவிதையில் கொண்டுவரப்படும் படிமம் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு விதமான காட்சியைத் தரக் கூடும். படிமம் என்பது மிக எளிதான விஷயம். பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. சொல்ல வருவதனை நேரடியாகச் சொல்லாமல் வேறொன்றின் மீது ஏற்றிவிடுதல்" இப்படி சொன்னது வா.மணிகண்டன். மேலும் விபரங்களுக்கும்

http://pesalaam.blogspot.com/2006/08/blog-post_23.html

"கவிதைப் படிமம் (poetic image) என்பது பொருள், எண்ணம், கருத்து, உணர்வு என்பவைகளைப் புலன்வழிக் காட்சிகளாகவோ, நுண்காட்சிகளாகவோ, புலனுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களாகவோ மாற்றி வழங்குவது.படிமம் அலைந்து திரிவதில்லை. யோசனைக்கும் தீவிர சிந்தனைக்கும் அறிவுக்கும் இட்டுச் செல்லாமல் அனுபவத்தின் நுழைவாசலில் சுருக்கமாக இயங்குகிறது. அடுத்த நிமிஷத்தில் அந்த இயக்கம் மறைந்து படிமமே அனுபவமாகிறது." சொன்னது அய்யனார். மேலும் விரிவாக

http://ayyanaarv.blogspot.com/2007/07/blog-post_1527.html

மேலும் மிக பெரிய தலை ஜெமோவும் படிமம் பத்தி சொல்லி இருக்காராம். "படிமம் என்பது பொருள் ஓர் அந்தரங்கத்தில் உருவாக்கும் பிரதிபலிப்புகளின் சாராம்சமாக அம்மனதால் மீண்டும் உருவாக்கப்பட்ட ஒரு “ மறுபொருள்” ஆகும்.”இம் மறுபொருள் அப் பொருள் அவ் வந்தரங்கத்தில் உருவாக்கிய பிரதிபலிப்புகளுக்கு இணையான, பலமடங்கு மேலான பிரதிபலிப்புகளை வாசக மனங்களில் உருவாக்கும்."

சரி படிமத்தை பத்தி இவங்க எல்லாம் சொல்லிட்டாங்க இப்போ நீ என்ன பண்ண போற? ம்ம் நானா ஒரு சில படிம கவிதைகளை பத்தி சொல்ல போறேன்.

அய்யனாரின் சிலகவிதைகளும் நிறைய புலம்பல்களும் ஆகாயத் தாமரை என்ற கவிதை மிக கவித்துவமானது. "பற்றுதலுக்காய் அலைந்து கொண்டு இருகின்றன எனது மெல்லிய வேர்கள்" செம வரிகள் இது. இந்த கவிதையில் உன்னை முழுவதுவா ஆக்கறமிக்க பரவும் எனதிந்த நேசங்களை நீ போலி என்றோ மிகையின்றோ தவிர்த்துடாதே, உன்னுடைய அடிமனத்தின் பற்றுதலுக்காக அலைஞ்சிக்கிட்டு இருக்கு என் வேர்கள் என்கிறது மேலோட்டமாக மேலும் நேர்மறையாக வெளிப்புறம் திடமாக, அடர்த்தியாக, கொஞ்சம் எண்ணத் திமிராக காட்டிக் கொண்டாலும் என்னுடைய ஆவணமற்ற மிக மென்மையான அன்பு பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கலாம் எப்போதும்.எதிர்மறையாக வெளிப்புறம் அழகாக, நேர்த்தியாக, செழுமையாக, மிக நல்லவனாக காட்டி கொள்ளும் என்னுள் அழுக்கான பாசிபடிந்த அசிங்கமான பல சின்ன எண்ணங்கள் இருக்கலாம் என்றும் சொல்லுது.

காதல் என்று சமீப காலமாக இரவணன் ஆகி போன லஷ்மணராஜா எழுதிய இந்த கவிதை படிமம் நேரடியாக சொல்லது இது தான், காதல் தேர்தல், காதல் செய்யும் போது செய்யும் காதலிப்பரை அவர்களின் சந்தோசம் மற்றும் கோபங்களை கையாளும் விதம், காதல் பிரிவின் போது சிதைதல் இவற்றில் எதையுமே பழகாமல் காதல் நுய்பது எவ்வளவு தவறென்று ஒவ்வொரு முறை தவறி நுய்தபின் தான் புரிகின்றது. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதே தவறை ஆரம்பிக்கும் போது நுய்தலின் சுகம் மட்டுமே நினைவில், விழந்த பின் மீண்டும் புலம்பல்கள் இப்படியாக தொடர்க்கின்றது ஒவ்வொரு காதல் காதையும். காதலுக்கு மட்டுமில்லை இதை எந்த உறவோடும் நட்போடும் ஓப்பிட்டு பார்க்கலாம்.

பிசுபிசுப்பு என்ற அனுஜன்யாவின் இந்த கவிதை மிக அருமையான படிமம் அது. அந்த‌ தாள் ப‌டப‌ட‌த்த‌து அவ‌னை போல‌வே. இலை போல‌ ப‌ற‌க்க‌ நினைத்த‌து. கிழியும், ந‌னையும் க‌வலை இல்லை அத‌ற்கு. ஆனால் பூச்சி பிடிக்க‌ தான் ப‌ய‌ன‌யிற்று. நாம‌ கூட‌ எதை எதையோ சாதிக்க‌ நினைக்கிறோம் ஆனா வாழ்க்கை கைதியா மென்பொருள் இட்ட‌ இய‌ந்திர‌ம் போல‌ வேற‌ எதுக்கோ ப‌ய‌ன்ப‌ட‌றோம். த‌ன் இய‌லாமையை நினைத்து அவ‌ன் பிம்ப‌ம் அந்த‌ காகித‌த்தில் தெரிந்த‌து.

கல்யாணத்திற்கு பிறகு(க.பி கவிதைகள் - 2) விழியன் எழுதிய கவிதைகளில் வரும் அவளன்பு என்ற இந்த கவிதை மிக அழகான எளிமையான படிம கவிதை இது. முன்னமிருந்த ஒரு இழந்த காதலின் வலிகளை இப்போது வந்த மிக அழுத்தமான கடைப்புரண்டு ஓடும் அன்பு/காதல் கழுவி களைகின்றது. முன்னம் திளைத்த மேலோட்டமான ஒரு காமம் நினைவுகளை, திமிரி ததும்பும் இவளின் பிரியங்கள் திளைக்க செய்கின்றன முன்னாலிருந்த நினைவுகளை மறக்கடிக்கின்றன. அதை பொதுப்படையாக எந்த அனுபவமும் நிரந்தரம் இல்லை, அடுத்து அதையும் தாண்டிய புனிதமான அனுபவங்கள் கரைபுரண்டோடும் எப்போதும் என்பதை அணித்தரமாக உணர்த்துகின்றது.

நிராக‌ரித்த‌ல் நிராக‌ரிக்க‌ப்ப‌ட‌ல் இர‌ண்டும் மிக‌ க‌டின‌மான‌ உண‌ர்வு. கார‌ண‌மேயின்றி ஒரு விச‌ய‌த்தை நிராக‌ரித்தாலோ, தெரிந்தோ தெரியாம‌லோ அல்ல‌து சூழ்நிலை கார‌ண‌மாக‌ நிராக‌ரித்தாலோ, நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் நிலையிலும் கொடிய‌து நிகாரித்த‌வ‌ர் ம‌ன‌ உறுத்த‌லும், த‌விப்பும், குற்ற‌ உண‌ர்வும் அதிக‌ப‌டியான‌து. அவை வார்த்தையில் அட‌ங்குவ‌தில்லை. காய‌த்ரியின் இந்த‌ க‌விதையும் அதையே உண‌ர்த்துகின்ற‌து.

7 comments:

  1. படிமத்தின் விளக்கம் உரைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல விளக்கங்கள்..

    ReplyDelete
  3. வாங்க‌ சென்ஷி.

    ந‌ன்றி அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா.

    ந‌ன்றி விழிய‌ன்.

    ReplyDelete
  4. நல்ல விளக்கம்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நல்ல விளக்கம் & சுட்டிகள் நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது