07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 12, 2008

என்ற ஊர்க்காரங்க

என்னங்க இது என்றன்னு பார்க்கறேங்களா, கொங்கு பாஷையில என்னுடையதுன்னு அர்த்தமுங்க. என்னடா ஒட்டிக்கறான்னு பார்க்கறீங்களா. பொறந்த மண்ணு பாசந்தாங்க.



முதல்ல சொல்ல வேண்டியவரு பரிசல்காரன் அண்ணணுங்கோ, இவரும் உடலப்பேட்டக்காரருங்க ( உடுமலைப்பேட்டை) அதாவ்து உடும்பு மலை பேட்டைகாரருங்கோ. ஒரு காலத்துல எங்க திருமூர்த்தி மலைல உடும்புக நெறைய இருந்ததா கேள்வி பட்டிறுக்கோங்க ஆனா இப்பெல்லாம் கண்ணுல படறதே இல்லீங்க.




இப்ப அண்ணன் திலுப்பூருல வேலை செய்யறாங்க இவரோட வலைப்பூ பரிசல்காரன்






ரசிப்போர்கள் விழி தேடி... பதிவுகள் எழுதறாருங்க.



நம்மளப் பத்தி சொல்லோணும்னா..



நானெழுதுவது உங்களுக்குப் பிடிக்கவேண்டுமென நினைப்பதில்லை.. ஆனால் கண்டிப்பாய் படிக்கவேண்டுமென நினைப்பேன்! (ஏதாவது புரிஞ்சுதா?) அப்படீங்கறாருங்கோ.




அவரைப் பத்தி என்ன சொல்லறதுக்கு இருக்குங்க, அதான் மூன்றரை லெச்சம் தடவை இவர் படிக்கப்ட்டிருக்காங்க்றது ஒன்னு போதாதுங்களா? ஆனாலும் ஒண்ணு ரெண்டு சொல்லறேங்க.






இப்பத்தான் நூறாவது பதிவை போட்டிருக்காங்க. கஷ்டப்படறவங்கள பரிசலாக இருந்து கரை சேர்க்க பாடுபடுகிறார். K. B. கிருஷ்ணக்குமார் அண்ணன்.




கோவிலுக்கு வெளியிலேயும் தெய்வமுண்டு அதை குழந்தையும் எனச்சொல்வதுண்டு அப்படீன்னு குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுன்னு சொல்லற அண்ணன் வாழ்க.




----------------------------------------


அடுத்தவங்க சின்ன அம்மிணிங்க, நம்ம சின்ன அம்மிணி இல்லீங்க இவங்க கோயம்புத்தூர்காரங்க ஆனா இப்ப வசிப்பது நியூசிலாந்தில்ங்க. அதனால கிழக்கால இருக்கறதால காலையிலே நேரத்துலயே பின்னூட்டம் போட்டுறறாங்க.






நம்ம கொங்குப்பேரையே தன்னோட பேரா வெச்சுகிட்டு இருக்காங்க அம்மிணி.



பெண்களில் நல்ல பெண்கள் கெட்ட பெண்கள் உண்டு
தாயாரில் நல்ல தாயார் கெட்ட தாயார் உண்டோ
- ஆதி சங்கரர் ன்னுட்டு அம்மாவைபப்த்தி அருமையா எழுதற இவங்க எழுத்தைப்படிக்க கிளிக்குங்க சின்ன அம்மிணி.




------------------------

அடுத்த கொங்கு அன்பர் Covai Ravee ங்க. இசையே மூச்சாக வாழும் அன்பர் கோவை இரவி. இவரின் வலைப்பூக்கள் தெய்வீக இராகம் SPB அவ்ர்களுக்காக படைக்கப்பட்ட வலைப்பூ. விநாய்கரோட் ஆபிஷேகம் அருமை.பாலாபிஷேகம் காணும் அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்ன்னு நல்ல எண்ணத்தோட இருககாங்க. பணம் திரட்டி பொது சேவைகளும் செய்யறாங்க.




இவரோட வற்றாயிருப்பு சுந்தர் ரும் இந்த பூவுல எழுதுறாங்க.


எல்லா பாடகர்களுக்கும் வலைப்பூ வெச்சிருக்காங்க இரவி அண்ணன்


பாடும் நிலா பாலு பாட்டு கேக்க போங்க SPB சாரோட பாட்டுக்கள்.



இசைக்குயில் SJ இசைக்குயில் ஜானகியம்மா அவர்கள் வழங்கிய இனிய பாடல்கள் இந்த வலைப்பூவில கேட்கலாம் நீங்க.



இசையரசி இன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள். சினிமாப்பாடல் வலைப்பூ தேன் கிண்ணத்துலயும் எழுதுறாறு ரவி சார்.




You rock ங்கற அந்த அனிமேஷன் பூணை அருமை.


__________________

இன்றைய தினம் முக்தி தரவல்ல மானசரோவர் ஏரியின் காட்சிகள் அதிகாலை சூரியன் ஒளியில் மற்றும் இராவணன் தவம் இராக்ஷஸ் தால் எனப்படும் இராவண ஏரியின் சில காட்சிகள்.



Sun's reflection in Holy Manasarovar





சூரிய கதிரை மனசரோவர் பிரதிபலிக்கும் அழகு



VIEW OF HOLY MANASAROVAR AT EARLY MORNING


காலை சூரிய ஒளியில் தங்கமென மின்னும் மானசரோவர்


மானசரோவர் தடாகம் பிரம்மா தனது மனதிலிருந்து உருவாக்கியது. இதன் கரையில் கிடைக்கும் ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம். இதில் ஒரு முறை குளித்தால் முக்தி வழங்கவல்லது. சிவசக்திக்கு ஆகும் அபிஷேக நீரே மானசரோவர் தடாகத்தில் வந்து கலக்கின்றது. அம்மையின் சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், வைணவர்கள் திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் கருதும் மானசரோவரின் பல்வேறு அழகை கண்டு களிக்கின்றீர்கள்.








We get the first view of Kailash from Rakshas Tal only.





அசுரன் இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்த போது உருவாக்கிய ஏரி இந்த இராக்ஷஸ் தால் ஏரி. எனவே இதன் தண்ணீரை நாம் பயன்படுத்துவது இல்லை. ஆயினும் யாத்திரையின் போது நமக்கு கயிலங்கிரியின் முதல் தரிசனம் இதன் கரையிலிருந்து தான் கிடைக்கின்றது.





2 comments:

  1. நம்மளையும் கண்டுக்கிட்டதுக்கு நன்றி

    ReplyDelete
  2. காலங்காத்தால எழுந்த்வுடனே எழுதறேங்க உங்களை எப்படீங்க மறக்க முடியும்.

    தங்களுக்கு திருக்கயிலை நாதன் தரிசனம் வழங்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது