07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 18, 2008

சும்மா இருக்கிறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா?

பதிவுலகம் ஒரு பயன் மிக்க பொழுதுபோக்கு மையம் எனக் கூறினால் அது மிகையாகது என்றே நினைக்கிறேன். வேண்டியத் தகவலை சுலபமாகத் தேடிப் பிடித்துப் படிக்க முடிகிறது.

பொழுதுபோக்கு என்பது நாம் விருப்பம் கொண்டு செய்யும் செயல். அதில் ஒரு நிறைவு இருக்கும். மனதின் முழு ஈடுபாடும் அதில் திலைத்திருப்பதை ஒரு செயல்பாட்டின் முடிவிலும் அதன் முழுமையினிலும் நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

பொழுதுபோக்குகளை பல வகையாகப் பிரிக்கலாம். படிப்பது, எழுதுவது, தபால்தலை அல்லது நாணயங்கள் சேகரிப்பது, மீன் பித்தல், பேனா நட்பு, பயணங்கள், இன்னும் எவ்வளவோ.

அவ்வகையில் பதிவுலகில் நமது சக பதிவர்களின் ஏனய பொழுதுபோக்குகள் என்னவெனவும் அது தொடர்பான சில பதிவுகளையும் காண்போம்.

பொதுவாகவே காண்கையில் நமக்கு மிக தெரிந்த விடயம் நமது பதிவர்களின் புகைப்பட திறன். புகைப்பட திறனை வளர்த்துக் கொள்ள அடிக்கடி வைக்கப்படும் திறனாய்வுகளும் அவர்களிடையே ஆரோக்யமான போட்டியையும் திறமையையும் வளர்க்கிறது.

திருமதி.கோமதி அவர்கள் 'ஸ்னாப்பி' எனும் தளத்தில் அவர் சுட்ட படங்களை தேர்வு செய்து பதிவேற்றி வைத்திருக்கிறார். பல அழகான படங்கள் இங்கு இருப்பதைக் காண முடிகிறது.

அடுத்ததாக எனது வலையுலக முதல் நண்பர் வெங்கட்ராமன். இங்கு கிடைக்காத அல்லது விலைமிகுந்த புத்தகங்களை தமிழகத்தில் இருந்து அனுப்பி உதவி செய்தவர். ஆரம்ப காலத்தில் 'வெட்பிரஸ்' தளத்தில் எழுதும் போது அறிமுகமான நண்பர். இராஜபாட்டை எனும் தளத்தில் எழுதி வருகிறார். சமிபத்தில் புகைப்படங்களை பதிவேற்றுவதற்காக எனது க்ளிக்குகள் எனும் வலைதளத்தை ஆரம்பித்துள்ளார். திறம்பட படங்களை சுட்டுப் போட்டு வைத்திருக்கிறார். மேலும் பல அழகான இதமான படங்களை நமக்களிக்க வாழ்த்துக்கள்.

பள்ளி பருவத்தின் போது வெளிநாட்டு நண்பர்களோடு பேனா நட்புக் கொண்டிருக்கிறேன். ஸ்வீடன், ஆஸ்த்ரேலியா, பிலிபைன்ஸ், துர்க்கி போன்ற நாடுகளில் பேனா நண்பர்கள் இருந்தார்கள். பேனா நட்புக் கொள்பவரிடையில் பெரும்பாளும் தபால்தலை சேகரிக்கும் பழக்கமும் இருக்கும். பல நாட்டு தபால்தலைகளை சேகரித்து அழகு பெற அடுக்கி ஒப்பிட்டு பார்க்கையில் கிடைக்கும் மகிச்சியே அளாதி.

முதல் நாள் வெளியீடு காணும் தபால்களை வாங்கி, அதன் வெளியீடு காரணங்களை முதன் முதலில் அறிந்துக் கொண்டு நண்பர்களோடு பகரும் தருணங்களின் இனிமை மறவாதது. நம்மிடம் அதிகமாக இருக்கும் தபால்தலைகளை நண்பரிடம் கொடுத்து மாற்றி புதிய தபால்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

தபால்தலை சேகரிப்பில் ஈடுபாடு உள்ள பதிவர் கைப்புள்ளை. அவரின் சேமிப்புகளை பற்றி மூன்று பாகங்களாக எழுதியுள்ளார். மிகவும் சுவாரசியமான பதிவு. தபால்தலை சேமிப்பு பற்றிய அவரது பதிவு.

கோபி எனும் இவர் தமது வாழ்க்கை பயணம் எனும் தளத்தில் கார்களை சேமிப்பது அவரது பொழுதுபோக்கு எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனது தளத்திற்கும் அவரது தளத்திற்கு ஒரு 'ப்' என்ற வார்த்தை மட்டுமே வித்தியாசம். பதிவுலக சீனியரும் கூட. எனது வலைபதிவின் பெயர் அவரை பார்த்து வந்ததல்ல. தற்செயலான ஒன்றுதான் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

சில பெண்மணிகள் ஓய்வு வேலைகளில் எதையாகினும் சமைத்து புதிய சமையல் யுக்தியை கண முனைப்புக் கொள்வார்கள். சமையல் ஒரு கலை. அதிகமான தமிழ்ப்படங்களில் வரும் வசனம் ஒன்று, 'எல்லோராலயும் நல்ல காபி போட முடியாது' என்பதுதான். சுடு நீர் சமைக்கத் தெரியாதவர்கள் இருக்கும் இக்காலத்தில் சமையல் போற்றுபவர்களின் மனப்பாங்கு மதிக்கதக்கது.

என் சமையல் அறையில் எனும் 'வெட்பிரஸ்' தளத்தில் கீதா அவர்கள் சமையல் குறிப்புகளை எழுதி வருகிறார்.

அடுத்ததாக பலரும் அறிந்த தூயாவின் சமையல் கட்டு. மிகவும் எளிமையான முறையில் சமையல் குறிப்புகளை விளங்கக் கூறியுள்ளார்.

பதிவர் ஜெயஸ்ரீ அவர்கள் தாளிக்கும் ஓசை எனும் தளத்தில் சமையல், பலகாரம் என பலவகை குறிப்புகளை எழுதிவருகிறார். இவர் எழுதியிருக்கும் கேரட் அல்வா பதிவை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுகிறது.

நான் பதிவுலகத்தில் எழுத ஆரம்பித்த போது திரு.செல்வேந்திரன் நட்சத்திர பதிவராக வலம் வந்துக் கொண்டிருந்தார். அவருடைய பயணக் கட்டுரைகள் மிகவும் நன்றாக இருக்கும். அவருடைய காட்டின் ஒரு துண்டு படித்துப் பாருங்கள்.

இவைபோக தையல்கலை, வீடு அலங்காரம் போன்ற அங்கங்கள் தொடர்பாக யாரும் எழுதுவதாக அறிய முடியவில்லை. பொழுதுபோக்குகள் மனிதனின் ஓய்வு நேரத்தை நல்வழியில் இட்டுச் செல்லும் கருவி. மேலும் பல தளங்களில் தமது பொழுதுபோக்குகளை பற்றி எழுதுவது படிப்பவர்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என பெரிதும் நம்புகிறேன்.

இன்றைக்கு இவ்வளவுதான்.

மீண்டும் சந்திப்போம்...

5 comments:

  1. வீடு அளங்காரம்?????

    வீடு, அலங்காரம்.

    ReplyDelete
  2. விக்கி, அருமையான மேட்டர்ப்பா!

    ஒரு ஆசிரியராய்ட்டாலே பொறுபு வந்துடுது இல்ல?

    சபாஷ்!


    //திரு.செல்வேந்திரம் //

    அவர் செல்வேந்திரன். எங்க கோவைக்காரர்!

    ReplyDelete
  3. நல்லா தேடி நிறைய பேரைக் கண்டுபிடிச்சு பதிவு போட்டு இருக்கீங்க...நன்றி!

    ReplyDelete
  4. ஒரு ஆசிரியராய்ட்டாலே பொறுப்பு வந்துடுது இல்ல?

    சபாஷ்!

    ReplyDelete
  5. @துளசி கோபால்

    திருத்திவிட்டேன். மிக்க நன்றி.

    @பரிசல்காரன்

    பொறுபு மட்டும்தாண்ணே. 'ப்' வரமாட்டுது.

    @தமிழ் பிரியன்

    வருகைக்கு நன்றி தமிழ் பிரியன். பதிவுலகம் தேடல்கள் நிறைந்தது.

    @ மங்களூர் சிவா

    என்ன வச்சி காமடி கீமடி பண்ணலயே..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது