07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 13, 2013

2521.இறுதியில் ஒரு ரகசியம் சொல்றேன்

தொலைகாட்சியில் சில வினாடிகள் அறிமுகம்,ஆனால் அது தரும் பூரிப்பை பாருங்கள் !
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் ! என்னை விட்டுவிட்டு பொங்கல் சாப்பிடும் உங்கள் அனைவருக்கும் இனிப்பான அறிமுகங்கள் இன்றும் (கரும்பு யாரவது அனுப்புங்களேன் ருசிபார்த்து ரொம்ப நாளாச்சு ஹி ஹி )

குருநாதசுந்தரம் கவிதைகள் 

   இது அன்பர் குருநாதசுந்தரம் அவர்களின் தளம். புதுக்கோட்டையை சேர்ந்தவர் நல்ல தரமான கவிதைகள் படைத்தது வருகிறார் . படித்து பாருங்கள் அதில் எனக்கு பிடித்தவை ..




இங்கே நபர் ஷாபி அஹமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை காணொளி தொடராக தந்து வருகிறார் . மிகவும் பயனுள்ள தளம் பார்த்து பயனடைவோம் ....

எண்ணங்கள் ஆயிரம் 
சகோதரி ஆர்.வி.ராஜி அவர்களின் மணம்வீசும் வலைப்பூ இது.இங்கே போடோஷாப் பற்றிய தகவல்களும் கிடைக்கும் கவிதைகளும் கிடைக்கும்.படித்து பாருங்கள் எனக்கு இந்த கவிதைகள் ரொம்ப பிடித்தது ..

சிறந்த ஆயுதம்தானுண்டோ 

இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கோ 


தமிழ் இசை 

தமிழ் தேனை இசை என்னும் பருக இச்சை என்று சொல்லும் இசைபா குழுவினரான ஓஜஸ் மற்றும் தமிழ் ஆகியோரின் வலைப்பூ இது .இங்கே நல்ல நல்ல பாடல்கள் வரிகளுடன் கேட்டு மகிழலாம் .....

நேர்வழி 
இது சகோதரி ஆஷா பர்வின் அவர்களின் வலைப்பூ பல தலைப்புகளில் காரசாரமாக கதைகள்,கட்டுரைகள் எழுதி வருகிறார் மிகவும் புதியவர்! படித்து பயன்பெறுவோம் ..........
---------------------------------------------------------------------------------------------------

தந்திரங்கள் எல்லாம் மந்திரங்கள்
ஆனது ஆன்மிகத்தில் !
அருவருப்புகள் எல்லாம்
ராஜதந்திரங்களாம் அரசியலில் !
குப்பைகள் கூட படைப்புகள்
ஆனது கலையில் !
தோட்டத்து பூக்களில் கூட 
மாசுபடிந்து இருக்கையில் 
வலைப்பூக்கள் மட்டும் அழகான
வாசம்வீசும் வாடா மலர்களாவது
வலைசரத்தில் தினமும் தோரனமாவதாலே !

---என்று பாடி என் பணியை இன்றுடன் நிறைவு செய்கிறேன். இந்த 7 நாட்களும் உங்களுடன் நான் மிகவும் ஆத்மார்த்தமாக நடைபோட்டேன். வேலை பளுவுக்கு இடையில் நான் முடிந்த வரையில் புதியவர்களை அறிமுகம் செய்தேன் . குறைகளை மன்னித்து என்னை இந்த 7 நாளும் கவனித்து சிறப்பித்தது போல் தொடர்ந்து ஆதரவு தந்து இங்கே  அறிமுகமானவர்களின் பதுவுகளுக்கும் என் எழுத்துக்கும் சிறகு தந்து என்றும் சிறப்பிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.

வலைச்சர ஆசிரியர் சீனா ஐயாவுக்கும் அவரது குழுவினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.ஆசிரியராக மட்டும் இன்று விடைபெறுகிறேன் என்றும் மாணவனாக வலைச்சரத்தில் தொடர்வேன் ...நன்றி நன்றி !

Optimist (இன்முகச்செவியர் ,அனைத்திலும் நன்மையே காண்பவர் ) களின் மனம் எப்படி செயல்படவேண்டும் என்ற ரகசியம் சொல்லும் காணொளி இதோ  உங்களுக்கு நான் விடைபெறும் முன் பரிசாக ............




19 comments:

  1. ஏற்றுக்கொண்ட பணியினை சிறப்பாக நிறை வேற்றி இருக்கீங்க. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    ரியாஸ் (அண்ணா)

    1வார காலமும் பலமைக்கல்லை கடந்துள்ளீர்கள் அசிரியர் பொறுப்பு கிடைக்கப்பெற்ற காலத்தில் குடும்ப சுமைக்கும் வேலைச் சுமைக்கும் மத்தியில் நல்ல முறையில் பலவகைப்பட்ட தளங்களை அறிமுகம் செய்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் இன்று படைக்கப்பட்ட பதிவுகள் அனைத்தும் அருமை
    சொர்கமே என்றாலும் அது நம் ஊரப்போல வருமா????? எப்படி பிற நாட்டில் வாழ்ந்தாலும் நம் நாட்டுக்கு ஈடாகாது இப்படி இருந்தாலும்
    நம் தாய் நாட்டுக் கரும்புக்கு பிறகுதான் என்னதான் செய்வது ரியாஸ் (அண்ணா) காலத்தின் கட்டாயம் வாழவேண்டி இறைவன் வகுத்துவிட்டான் கவலை வேண்டாம் 2014 வருகிற பொங்கல் நாளில் கரும்புக
    ருசித்துப்பார்க்கலாம் தாய் நாட்டில்
    தொடருகிறேன் பதிவுகளை


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    ரியாஸ் (அண்ணா)

    1வார காலமும் பலமைக்கல்லை கடந்துள்ளீர்கள் அசிரியர் பொறுப்பு கிடைக்கப்பெற்ற காலத்தில் குடும்ப சுமைக்கும் வேலைச் சுமைக்கும் மத்தியில் நல்ல முறையில் பலவகைப்பட்ட தளங்களை அறிமுகம் செய்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் இன்று படைக்கப்பட்ட பதிவுகள் அனைத்தும் அருமை
    சொர்கமே என்றாலும் அது நம் ஊரப்போல வருமா????? எப்படி பிற நாட்டில் வாழ்ந்தாலும் நம் நாட்டுக்கு ஈடாகாது இப்படி இருந்தாலும்
    நம் தாய் நாட்டுக் கரும்புக்கு பிறகுதான் என்னதான் செய்வது ரியாஸ் (அண்ணா) காலத்தின் கட்டாயம் வாழவேண்டி இறைவன் வகுத்துவிட்டான் கவலை வேண்டாம் 2014 வருகிற பொங்கல் நாளில் கரும்பு
    ருசித்துப்பார்க்கலாம் தாய் நாட்டில்
    தொடருகிறேன் பதிவுகளை


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ரூபன் அய்யா!

    அருமையான படைப்புகள். நேரம் கிடைக்கும்பொழுது உங்களுடைய மொத்த படைப்புகளையும் படித்து வலம் வருகின்றேன். தங்களது மேலான கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  5. வணக்கம்
    ரியாஸ்(அண்ணா)

    சின்ன சின்ன கவிதைகள் என்ற அகிலாவின் பக்கம் கொடுக்கப்பட்ட லிங்கை ஒருதடவை நீங்கள் கிளிக் செய்து பாருங்கள் வலைப்பூ திறக்கவில்லை கொடுக்கப்பட்ட லிங் சரி என்று பாரக்கவும்
    1எனக்குரொம்ப பிடிச்சிருக்கு 2நானும் என் பென்சிலும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அன்புள்ள ரியாஸ் அஹமது,

    இன்று உங்கள் அறிமுகத்தில் இசைப்பா தளம் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

    எனது பதிவுலக இளைய நண்பர்கள் திரு ஓஜஸ், மற்றும் திரு தமிழ் அவர்களின் புதிய முயற்சி இது. இந்தக் காரணத்துக்காகவும், நானும் இந்த இசைப்பாவில் பங்களிப்பவளாகவும் இருப்பதால் இந்த அறிமுகம் மட்டற்ற ஆனந்தத்தைக் கொடுக்கிறது.

    தமிழ் இசைப்பா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    மிகச்சிறந்த வகையில் ஒரு வார ஆசிரியப் பணியை நிறைவேற்றியதற்கு வாழ்த்துகள்!



    ReplyDelete
  7. அன்புள்ள இந்த வார வலைச்சர ஆசிரியரே!

    காலை வணக்கங்கள்.

    அதற்குள் இந்த வாரம் முடிந்து விட்டதே என என் கண்களில் கண்ணீர் தான்.

    இருப்பினும்

    //தொலைகாட்சியில் சில வினாடிகள் அறிமுகம்,ஆனால் அது தரும் பூரிப்பை பாருங்கள் !//

    பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த பூரி மஸால் கிடைத்தது போலவே பூரிப்பும் அடைந்தேன். ;)))))

    >>>>>>>>

    ReplyDelete
  8. //அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் !//

    நன்றி நண்பரே, நன்றி.

    //என்னை விட்டுவிட்டு பொங்கல் சாப்பிடும் உங்கள் அனைவருக்கும் இனிப்பான அறிமுகங்கள் இன்றும்//

    அடடா, உங்களை விட்டுவிட்டு பொங்கல் சாப்பிடுவதில் எங்களுக்கும் வருத்தம் தான்.

    பொங்கல் கிடைக்கவில்லையே என பொங்கி எழுந்து கோபம் கொள்ளாமல் எங்களுக்கும் இன்றும் இனிப்பான அறிமுகங்களைக் கொடுத்துள்ளது,

    உருக்கிய நெய்யில் முந்திரி மணம் கமழ, ஏலக்காய் ருசியுடன் கிடைத்த மிக இனிப்பான சர்க்கரைப்பொங்கலாக நினைத்து மகிழ்கிறோம் ஐயா. ... ம்கிழ்கிறோம் ;)))))

    >>>>>>>>

    ReplyDelete
  9. //கரும்பு யாரவது அனுப்புங்களேன் ருசிபார்த்து ரொம்ப நாளாச்சு ஹி ஹி //

    இதோ அனுப்பியுள்ளேன்:

    இனிய பொங்கல் வாழ்த்துகள்:
    ============================

    செங்கரும்புச் சாறெடுத்து
    இதழினிலே தேக்கி,

    சிந்துகின்ற புன்னகையால்
    துன்பம் நீக்கி,

    மதமதத்த வளையணிந்த
    கைகள் வீசி,

    மங்களாம்
    “தை” என்னும்
    மங்கை வருவாள்!

    பொங்கியெழும்
    புத்தின்ப உணர்ச்சி
    தருவாள்!!

    -oOo-

    செங்கரும்புச் சாறுடன் இங்கிருந்து ’ரியாஸ் அஹமது’வைக் காண மலேசியா நோக்கி வந்து கொண்டிருக்கிறாள் நான் அனுப்பி வைத்துள்ள “தை” என்னும் மங்கை.

    அவளைக் ‘கப்’பெனக் கட்டிப் பிடித்துக்கொள்ளுங்கள், ஸ்வாமீ. ;))))

    கை நழுவ விட்டீர்களானால் “தை” போய் மாசில்லா “மாசி” என்பவர் குறுக்கே வந்து விடக்கூடும்.

    [’தை’க்குப்பிறகு ’மாசி’ அல்லவோ]

    >>>>>> இடைவேளை >>>>>>

    மீண்டும் வருவேன் ஜாக்கிரதை! ;)

    ReplyDelete
  10. இன்றைய தங்களின் அறிமுகங்கள் அனைத்தும் அருமையே.

    இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப்
    பதிவர்களுக்கும் என் அன்பான இனிய வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.

    >>>>>>>>>>

    ReplyDelete
  11. //தந்திரங்கள் எல்லாம் மந்திரங்கள்
    ஆனது ஆன்மிகத்தில் !

    அருவருப்புகள் எல்லாம்
    ராஜதந்திரங்களாம் அரசியலில் !

    குப்பைகள் கூட படைப்புகள்
    ஆனது கலையில் !

    தோட்டத்து பூக்களில் கூட
    மாசுபடிந்து இருக்கையில்

    வலைப்பூக்கள் மட்டும் அழகான
    வாசம்வீசும் வாடா மலர்களாவது

    வலைசரத்தில் தினமும் தோரனமாவதாலே !//

    தங்களின் இன்றைய பணி நிறைவுக்கு எழுதியுள்ள இந்தக்கவிதை மிஅவும் அருமை. அழகோ அழகு. அதுவும் அந்தக்கடைசி மூன்று வரிகள் முத்தான முத்தல்லவோ!

    ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹெள

    என சொல்ல வைக்குது.

    ஹெள ஈஸ் திஸ் பாராட்டு?

    >>>>>>>

    ReplyDelete
  12. //இந்த 7 நாட்களும் உங்களுடன் நான் மிகவும் ஆத்மார்த்தமாக நடைபோட்டேன். வேலை பளுவுக்கு இடையில் நான் முடிந்த வரையில் புதியவர்களை அறிமுகம் செய்தேன் . குறைகளை மன்னித்து என்னை //

    ”குறையொன்றும் இல்லை..
    மறை மூர்த்தி கண்ணா!”

    என எங்களுக்குப் பாடத்தோன்றுகிறது.

    >>>>>>>

    ReplyDelete
  13. //என்னை இந்த 7 நாளும் கவனித்து சிறப்பித்தது போல் தொடர்ந்து ஆதரவு தந்து, இங்கே அறிமுகமானவர்களின் பதிவுகளுக்கும் என் எழுத்துக்கும் சிறகு தந்து என்றும் சிறப்பிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.//

    நிச்சயமாகச் செய்வார்கள்.

    தொடர்ந்து சமூக சிந்தனையுடன் கூடிய அழகான, ருசியான, தரமான படைப்புகளாக மட்டும் தாருங்கள்.

    அப்போது ... தானே அனைவரும் ஓடோடி வருவார்கள்.

    நமக்கு விளம்பரச்செலவும் குறையும். நம் பொன்னான நேரமும் மிச்சமாகும்.

    >>>>>>>>

    ReplyDelete
  14. //Optimist

    (இன்முகச்செவியர்,அனைத்திலும் நன்மையே காண்பவர்) களின் மனம் எப்படி செயல்படவேண்டும் என்ற ரகசியம் சொல்லும் காணொளி இதோ உங்களுக்கு நான் விடைபெறும் முன் பரிசாக ............//

    காணொளி வெகு அருமை.

    பார்த்ததும் எனக்கும் ஒரே உற்சாகம் ஏற்பட்டு விட்ட்து.

    ஸ்வீட் சிக்ஸ்டீனாக 16 வயது பாலகனாக மாறியது போல உணர முடிந்தது.

    இறுதியாக தாங்கள் தந்துள்ள இந்தப்பரிசு, உண்மையிலேயே விலை மதிப்பற்றது.

    நன்றி, நன்றி, நன்றி.

    Bye for Now .... My Dear Friend.

    பிரியமுள்ள
    VGK

    ReplyDelete
  15. வலைச்சரபொறுப்பை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
    (கரும்பு யாரவது அனுப்புங்களேன் ருசிபார்த்து ரொம்ப நாளாச்சு ஹி ஹி )
    உங்கள் விருப்பம் நிறைவேறி விட்டதே!
    கரும்பு அனுப்பி விட்டாரே திரு வை.கோபாலகிருஷ்ணன் சார!



    ReplyDelete
  16. வலைச்சரத் தோரணத்திற்கு
    வாழ்த்துகள் ..

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. //கோமதி அரசு said...
    வலைச்சரபொறுப்பை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ** கரும்பு யாரவது அனுப்புங்களேன் ருசிபார்த்து ரொம்ப நாளாச்சு ஹி ஹி **

    உங்கள் விருப்பம் நிறைவேறி விட்டதே!

    கரும்பு அனுப்பி விட்டாரே திரு வை.கோபாலகிருஷ்ணன் சார!//

    வாங்கோ திருமதி கோமதி அரசு மேடம்.

    நேற்று இரவு உங்களுடன் மட்டுமல்ல இந்தத் திரு. ரியாஸ் அகமதுவுடனும் ஏராளமான விஷயங்களை தாராளமாக மெயில் மூலம் பகிர்ந்து கொள்ள முடிந்தது, அதுவும் ... உங்களால் மட்டுமே. ;)))))

    எல்லாவற்றிற்கும், புரிதலுக்கும், எனக்கு சில விஷயங்களைப்பற்றி புதிதாகப் புரிய வைத்ததற்கு நன்றியோ நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  18. அன்பு அண்ணனுக்கு,

    இசைப்பா தளத்தை (முதன் முதலில்) அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல. எங்களை முந்தி கொண்டு, எங்கள் குழுவின் மூத்த தலைவி, ரஞ்சனி அவர்கள் நன்றி சொல்லி விட்டார்கள். நீங்கள் எங்களுடன் சேரலாம், உங்கள் வாசகர் விருபங்களை சொல்லாம். இசை என்னும் இன்பம் பரவட்டும்.

    நாற்சந்தி ஓஜஸ்

    ReplyDelete
  19. சிறப்புற பணியாற்றி, மன நிறைவுடன் விடை பெற்றுச் செல்லும் ரியாஸ் அஹமதுவிற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது