07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 11, 2008

இனிய Positive அந்தோணி முத்து

இது மற்றபப்திவுகளைப் போல ஒரு அன்பரை அறிமுகப்படுத்தும் பதிவு அல்ல.

ஒரு உடற் குறையை எதிர்த்து போராடி வெற்றி கண்ட ஒரு வீர உள்ளத்துக்கு தலை வணங்கும் பதிவு.

அதே சமயம் அவருக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறும் பதிவு.

வலைப்பூ என்பது பொழுது போக்கு மட்டும் அல்ல பல நன்மைகள் செய்வதற்கும் உபயோகப்படும் எனபதை உணர்த்தும் பதிவு.

இனிய Positive அந்தோணி முத்து

எதையும் தெளிவாகக் கற்றுக்கொள்.
அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.

நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.
-ஸ்ரீ சத்ய சாய்பாப

என்று ஆரம்பிக்கும் அந்தோணி முத்துவின் வலைப்பூவிற்கு சென்று பார்பவர்கள் அவருடைய திட மனதை புரிந்து கொள்ளலாம் . வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், ஆழக் கடலும் தோணியாகும் ஆசை இருந்தால் நீந்தி வா என்று அவர் விடும் அறைகூவல் நம்மை எல்லாம் உற்சாகப்படுத்துகிறது.


அவரின் கதையை அவரே கூறியுள்ளதை இங்கே படியுங்கள்.

The Real Anthony Muthu

Yeah..! I"ve got a Special boon from God. Physically Challenged.Percentage of Disability is 90 %(According to the doctor's certificate.)
Paralysed below my chest.

Oh... Thank you God for giving me 2 hands & an Independent Brain to work.
Residing at Chennai/Tamilnadu/India at the mercy of my elder sister.Below my chest there is no sense at all. I do not have the sense to pass Urine & Toilet. Someone has to press my Stomach to pass Urine. My Sister, has to dig out Toilet manually. She is a living God for me.
I got this disability at the age of 11. (In an accident)

Knowledge

My reading habit increased my knowledge. Developed a great interest in Electronics at the age of 15 & got 2 Diplomas in Radios & Audios respectively. (studied through correspondence) At the age of 20 the love for music from my boyhood flowered. Got an Electronic Musical Keyboard from a friend, & practiced on my own. Got basic lessons in music from
Rev.Fr. Paul Rajareegam and continued to study B.A degree (Indian music) through open university in Chennai University.

I N V E N T I O N S

In 1998 I Invented a new sound system by Combining Music fundamentality & Electronics(similar & advanced than Dts).
You can feel music Dancing around you according to the Composing in my sound system.

My Failures

I left no stone unturned and left no doors unknocked to popularize & to utilize my idea to the Film Industry.I cried for recognition.....No one recogonized me.Each and every moment of life chased me to the extreme end of my life.In one of those dark days with a black mood due to frustration and anger I smashed my Sound system, into pieces.

Regaining Confidence

Later I learnt to smile through the most difficult situations, and negotiate persistently for my point of view, taking risks in the process, in the most difficult of circumstances.

Computers

In 2005 my Friend Miss.Gomathi gifted me an old Computer & I practiced with it for atleast 18 hrs every day.Now I can say that I am a little bit Computer savvy.

Internet

In 2007 Novermber, I got internet connection, & my life took a sudden turn with beautiful bends.... The world with a path leading to heaven with beds of roses!!!

Blog Writing

I began to write a blog in Tamil, and the whole Tamil world turned its attention towards me. I even started my own English blog too.

Future Plans

I'm not sure what God wants me to do with all of this, but the strange thing is, I feel less tension with good hearted people around me always..

I have a greater sense of equilibrium about me now.Sometimes I have days when a black mood takes over and I just donot know how to shift from it, whatever the weather, rain or shine.If my mind is made up that I'm going to have a negative thinking day, then nothing can stop it, not even the brightest sunshine outside.
But I don't let my disability define me.....
And that keeps me alive....with lots of...hope...courage...confidence....and trust on me!!!!

What the future will bring? Who knows?


அன்பர்கள் பலர் சேர்ந்து அவருக்கு சக்கர நாற்காலி வழங்கிய பின் அவர் எழுதியுள்ள கவிதை

எனக்குக்
கால்கள் முளைத்தன....
சக்கரமென்னும்
விரல்களுடன்.....

தெரிந்த பத்து முகங்கள்
தவிர பலப்பல
முகங்களின்
தரிசனம்......
தினமும்......

எனக்கே எனக்கான
வெயிலுடன்
மழையுடன்
காற்றுடன்,
பூக்களுடன்..,
செடி, கொடி... மரங்களுடனும்...
என்னை நானே
அறிமுகப் படுத்திக்
கொண்டேன்.....

இருபத்தைந்து
வருடங்களுக்குப் பிறகு
வண்ணத்துப் பூச்சியுடன்
சினேகம்.......

ஓ.....வாழ்க்கை
இவ்வளவு அழகானதா?

இப்புதிய சக்கரங்கள்
கற்பித்த அற்புதங்களை
அனுபவிக்க வித்திட்ட
அத்தனை
அன்புள்ளங்களையும்

கண்ணீர்ப் பளபளக்கும்...
விழிகளுடன்...
பெருமை பொங்க... நோக்கி...

எவரெஸ்ட் உச்சி மீதேறி நின்று.....
"நான் சந்தோஷமா இருக்கேன்"
எனக்கூவ ஆவல்.........

சொற்களைத் தேடியலைந்து
தோற்றுப் போயின
என் உணர்வுகள்.....

வெறும் நன்றி
சொல்லித் தப்பிக்கப்
போவதில்லை.....

கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன்........

ஒரே நாளில்
பதினோரு வயதுக்
குழந்தையாய் மறுபடி பிறந்தேன்.....

மீண்டும் வாழ்கிறேன்
பதினோரு வயதிலிருந்து ஆரம்பித்து.........

ஆம்...

நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன்.

இல்லையில்லை..!

சிறகு விரித்துப் பறக்கத் துவங்கியிருக்கிறேன்...!

அவரது வலைப்பூ அந்தோணி முத்து

இவ்வாறு அவர் எழுதுவதற்கு ஒரு சக்கர நாற்காலி வாங்கித் தந்த அனைவருக்கும் கோடி கோடி நன்றி. அன்பரே துன்பம் வரும் போது யாரும் துவண்டு விடத்தேவையில்லை, தன்னம்பிகை மட்டும் போதும் வானமும் வசப்படும், இறைவன் ஒரு கதவை மூடினால நிச்சயமாக மறு கதவை திறந்து வைத்துள்ளான் எனபதை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கும் நன்றிகள்.
----------------------------------------------------------------
பல பேர் ஏன் இவ்வாறு சிலர் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கலாம், கடவுளே உனககு கருணை கிடையாதா என்று வசை பாடலாம். ஆனால் அவனின் கணக்கில் எல்லாவற்றிக்கும் ஒரு விளக்கம் உண்டு.

எனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி, எனக்கொரு மகன் பிறந்தான் என்று மகிழ்ந்தோம், இரண்டாவதாக என் மகன் பிறந்தவுடன், எல்ல்லோரையும் போல் வளர்ந்தான், ஓடினான் , பாடினான்,பள்ளியில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றான், அப்பனிடம் கதைகள் கேட்டான், மாணிக்கவாசகருக்காக ஐயன் பிரம்படி பட்ட கதை அவனுக்கு ரொம்பப்பிடிக்கும்.

திடீரென்று ஒரு நாள் பள்ளியில் ஆசிரியை என் மனைவியிடம் கூறினார்கள், ரவி டிபன் பாக்ஸை திறக்க முடியாமல் கஷ்டப்படுகின்றான் என்னவென்று பாருங்கள் என்று, டாக்டர்களிடம் ஒடினோம், மூளையில் சிறிய இரத்தக்கட்டி இடதுகரம் செயலிழக்க துவங்கிவிட்டது , கல்லீரலும், மண்ணீரலும் வீங்கியுள்ளது பார்க்கலாம் என்று கூறினார்கள் நான்கு வருடங்கள் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக அலைந்ததுதான் மிச்சம். ஒன்றும் பலன் இல்லை முடிவில் மூளையின் செல்கள் தானாக மடிகின்றன ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டனர்.

முதலில் இடது கை மடங்கியது, பின் இடது கால் என்று ஒவ்வொரு அவயவமாக முடங்கி இறுதியில் படுக்கையில் முடக்கியது ஏதோ ஊட்டுவாள் என் மனைவி, அதுவும் நெஞ்சுக்குள் சென்று Infection ஆகும், அதற்கும் மருந்து கொடுத்து பார்த்துக் கொண்டோம். ஒரு நாள் இறைவன் நீ பட்டது போதும் என்னிடமே வா என்று அழைத்துக் கொண்டான்.

எதற்காக இந்தக்கதை என்று யோசிக்கிறீர்களா? இவ்வாறு அவன் துன்பப்பட்ட போது பலர் கேட்ட கேள்வி இது. ஏன் இது போல துன்பப்பட வேண்டும், ஏன்? ஏன் ? இந்த் சிறு வயதிலேயே இவ்வளவு துன்பம் ஏன்? எவ்வளவு பணம் இருந்தாலும் ( எங்கள் கம்பெனியில் மருத்துவம் இலவசம், எங்கு வேண்டுமென்றாலும் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் இலவசமாக. இந்தியா முழுக்க சுற்றினேன், டெல்லி AIIMS. பெங்களூர் NIMHANS என்று ) ஆனாலும் பலன் ஒன்றும் கிட்டவில்லை. பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பது எவ்வளவு பொய் என்பதை இறைவன் அடியேனுக்கு உணர்த்தினான் .

அப்போதுதான் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது ஒரு தெளிவும் தோன்றியது நாம் ஆணவத்தால் என்னதான் செய்ய நினைத்தாலும் அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லை. எல்லாம் அவன் செயலே.
எனவே அவனிடம் பூரண சரணாகதி ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டியது என்பது விளங்கியது.

இனி அந்த கேள்விக்கான விடை பூர்வ புண்ணிய பாவம், நாம் இருக்கும் நிலை நம்மைத்தொடர்ந்து வரும் இருவிணையின் பயன். யாருக்கு மோட்சம் நெருங்குகின்றதோ அவர்க்ள் இந்த கர்ம பூமியில் அதிக நாள் தங்குவதில்லை. இருக்கின்ற கர்மாவை சீக்கிரம் தொலைத்து விட்டு எம்பெருமானுக்கு சேவை செய்யப் போய் விடுகின்றனர். பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளும் இவ்வாறு தான் இருக்கின்றன சிறு கர்மாவை ஒழிக்க அது ஜன்மம் எடுக்கின்றது. Spastics வகைக் குழந்தைகளும் இவ்வாறுதான். அவர்கள் யாருக்கும் துன்பம் செய்ய முடியாது, அவர்களுக்கு யாரும் துன்பம் விளைவிக்கவும் முடியாது. இவவாறு பிறந்தவர்களுக்கு சேவை செய்பவர்களும் கொடுத்து வைத்தவர்களே. அவர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள், முக்தியை நெருங்கி விட்ட ஆத்மாக்கள்.

ஆகவேதான் அன்பர்களே ஆன்மீகப்பதிவுகள் மட்டுமே எழுதி வருகிறேன் அவன் புகழ் பாடுதல் ஒன்று மட்டுமே பேரின்பம், நிலையானது, குறைவில்லாதது, அழியாதது, அள்ள அள்ளக் குறையாதது, மற்ற ஐம்புலன்களால் நாம் உணரும் இன்பங்கள் எல்லாம் சிற்றின்பங்களே.
இது அடியேன் சொலவதல்ல, நம் முன்னோர்கள் சொல்லிய்வைதான் இதை உணரத்தான் இறைவன் இப்பிறவியை அளித்தானோ என்னவா. இலுப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பை வராமற் கா என்பதே அந்த இறைவனிடம் பிரார்த்தனை.

அந்தோணி முத்து போன்றவர்கள் இறைவனின் அன்பர்கள் அவர் போன்றவர்களுக்கு உதவி செய்பவர்களும் இறைவனுக்கு பிரியானமானவர்கள் எனப்தால் உங்கள் அனைவருக்கும் தலை வணங்கி இப்பதிவை நிறைவு செய்கின்றேன்.
----------------------------------------------------------------------

7 comments:

  1. அன்பானவரே!

    அந்தோணி குறித்து இத்தனை உணர்வுபூர்வமாக, விவரமாக, நீங்கள் எழுதியுள்ளது கண்டு நெகிழ்கிறேன்.

    உங்கள் வேதனையும் சாதாரண ஒன்றல்ல. இரமண மஹரிஷி சொல்லியுள்ளார்: "இருக்கும் சோகங்களிலேயே மிகவும் வலி தரும் சோகம் 'புத்ர சோகம்'" என்று. அதுவும், எத்தனை கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது உங்கள் மகனும் நீங்களும்!

    இறைவனிடம் உங்களுக்காக என்றும் என் ப்ரார்த்தனைகள்.

    அன்பே சிவம்!

    மிக்க பாசத்துடன்
    விஸ்வநாதன்
    (noblehearted@gmail.com)

    ReplyDelete
  2. ///அவர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள், முக்தியை நெருங்கி விட்ட ஆத்மாக்கள்.....
    அவனின் கணக்கில் எல்லாவற்றிக்கும் ஒரு விளக்கம் உண்டு.//

    கண்களில் நீரை வரவழைத்த பதிவு.....உண்மைதான் அவர்கள் இறைவனின் குழந்தைகள்.....அவன் கணக்கில் எல்லாவற்றிக்கும் ஒரு விளக்கம் உண்டு ......உங்களின் துயரத்துக்கும்,அந்தோணிமுத்துவின் வலிக்கும் கூட ஒரு கணக்கு இருக்கும்..
    அன்புடனும் பிரார்த்தனைகளுடனும்,
    அருணா

    ReplyDelete
  3. //இறைவனிடம் உங்களுக்காக என்றும் என் ப்ரார்த்தனைகள்.

    அன்பே சிவம்!

    மிக்க பாசத்துடன்
    விஸ்வநாதன்
    (noblehearted@gmail.com)//

    மிக்க நன்றி விஸ்வநாதன் ஐயா. மற்றவர் துன்பம் க்ண்டு உருகும் தங்கள் நல்லஉள்ளத்திற்கு தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  4. //உங்களின் துயரத்துக்கும்,அந்தோணிமுத்துவின் வலிக்கும் கூட ஒரு கணக்கு இருக்கும்..
    அன்புடனும் பிரார்த்தனைகளுடனும்,
    அருணா//

    நன்றி அருணா, இதை அனைவரும் உணர்ந்து விட்டால் உலகில் பாதி பிரச்னைகள் தீர்ந்து விடும்.

    ReplyDelete
  5. அன்பு நண்பர் கைலாஷி

    நெஞ்சம் நெகிழ்கிறது - அருமையான பதிவு

    விஷி ( விஸ்வநாதன் ) கூறியது போல் தங்களின் துயரம் - தாங்க முடியாதது.

    எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மன அமைதியை அளிப்பான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. என்றும் என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  6. அன்பு நண்பர் சீனா ஐயா,


    தங்களின் பரிவுக்கு மிகவும் நன்றி எல்லாம் அவ்ரது இச்சை. அவர் கையில் நாம் எல்லாரும் பாவைகள் தானே ஐயா.

    ReplyDelete
  7. good points and the details are more specific than somewhere else, thanks.

    - Joe

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது