07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 19, 2012

ஐந்தாம் நாளிதழ் !

நான்  :         நம்மாளு,  ஏன் லேட் ?
நம்மாளு : டிராபிக் ஜாம் ! எல்லா ஊரிலும் தக்காளில ஜாம் செய்வாங்க !
                      நம்ம ஊர்  மார்க்கெட்ல தக்காளில ஜாம்     மட்டுமல்ல  டிராபிக்    ஜாமும்  செய்வாங்க .தக்காளி வரத்து ஜாஸ்தி
                  யானதால வண்டிங்க அங்கிட்டும்,இங்கிட்டும் நின்னு டிராபிக் ஜாம் ஆயிடுத்து !                          
நான்          : இன்னிக்கு என்ன பண்ணப் போற ?
நம்மாளு  : வூட்ல கேட்கிறா மாதிரி கேட்கிறயேப்பா !
நான்          :  வீட்டில இப்படி கேட்க மாட்டேன் ! இன்னிக்கு என்ன டிபன்
                      பண்ணட்டும் சொல்லுன்னு சொல்வேன் ..புள்ளைங்களும்
                       என் கட்சி !என்னைத் தான் சமைக்கச் சொல்லும் !
நம்மாள்   : அட !
நான்          : அடை  அவியல் !
நம்மாள்   : நீ பண்ணினதா ?
நான்          : நீ வேற ! நான் பண்ணினது பிடிக்காமத தானே  ஹோட்டல்ல போய்   ஒரு வெட்டு வெட்டிட்டு வந்தோம் !
நம்மாள்   :  அதுக்குத் தான் புள்ளைங்க உன்னை சமைக்க சொல்லுதா ?
நான்          :   சரி..சரி..கதை பேச வரல்ல நாம ! இப்படி வெட்டியா     பொழுதைப்
                        போக்கினா நம்ம காதை திருகிடுவார் சீனா சார் !
                        நம்ம ஜீவி சார் பதிவை பார்த்திருக்கியா ?
நம்மாள்    : அட ..அவர் நிறைய எழுத்தாளர்களைப் பற்றி எழுதறது
                        எனக்கு ரொம்பவும் பிடிக்கும் அதுவும் நம்ம ஜெ கே யைப்
                        பற்றி அவர் எழுதினது டாப் !
                        http://jeeveesblog.blogspot.in/2010/01/blog-post_25.html
நான்            : எந்த ஒரு எழுத்தாளனுக்கும் விருதுனால பெருமை ! ஆனா ,
                         ஜெ கே யால அந்த விருதுக்குத் தான் பெருமை !அவர் காலத்துல
                         நாம வாழறது என்பது நமக்கு கிடைத்த பெருமை !
நம்மாளு    : ஆர்.ஆர்.ஆர். இதோ பாரு ஒரு பொக்கிஷம் ! அன்னையர்
                         அந்தாதி அருமை ! http://thamilkavithaikal.blogspot.in/2011/06/3.html
நான்            : சூப்பர் !
நம்மாளு    : நிறைய பதிவுகளைப் படித்து நொந்து நூடில்ஸா  போனவர்
                         எழுதின கவிதை இது ..அந்த கடைசி பஞ்ச் சூப்பர் !
                         http://nondhakumar.blogspot.in/2012/10/blog-post.html   
நான்            :  அப்புறம்?
நம்மாளு   :  பனையூரான்னு ஒருத்தர் எழுதறாரு ..வித்யாசமாய் ...
நான்           :  நம்மாளு அந்த தலைப்பைப் பார்த்தியா ???????????????????????
                        சூப்பராயிருக்கில்ல......
                         http://nondhakumar.blogspot.in/2012/10/blog-post.html
நம்மாளு  :  அட இது கூட அருமையா இருக்கே ?
நான்          :   நம்ம எஸ். ரா . வோட அந்த வார்த்தைகள் அருமை !
                         http://nondhakumar.blogspot.in/2012/10/blog-post.html
நம்மாளு :   அது சரி இப்பல்லாம் பேனால எழுதறாங்களா என்ன?
நான்         :   என்ன சொல்றே ?
நம்மாளு :   இதைப் பாரு புரியும் ?
                         http://uyirodai.blogspot.in/2012/09/blog-post.htm
நான்         :   வேற ஏதாவது இருக்கா ? கடையை கட்டலாமா?     
நம்மாளு :  உன்னோட 'காளிங்கன் கர்வ பங்கம்'
                       தான் நல்லா இருக்கே ? அதைப் போடலாமே ?
நான்         :  நீ வேறப்பா ! ஏதோ உணர்வு பூர்வமா எழுதினது அது !
                      இலக்கணப்படி சரியா இருக்கான்னு ஒரு தமிழ் ஆசானிடம்
                      ஒப்புதல் வாங்கிண்டு பப்ளிஷ் பண்ணலாமே !
நம்மாளு : இது JUST FOR SHARING OF OUR HAPPINESS தானே !                       
                      ஏதாவது போட்டிக்கா அனுப்பப் போறோம்? நம்மாளுங்க
                       படிச்சுப் பார்த்து நிச்சயம் சந்தோஷப் படுவாங்க!
                       நீ வேணா பாரு !   
                       http://keerthananjali.blogspot.in/2010/11/blog-post.html

18 comments:

  1. எந்த ஒரு எழுத்தாளனுக்கும் விருதுனால பெருமை ! ஆனா ,
    ஜெ கே யால அந்த விருதுக்குத் தான் பெருமை !அவர் காலத்துல
    நாம வாழறது என்பது நமக்கு கிடைத்த பெருமை !

    ஜேகேயினால் எழுத்தாளர்களுக்கு கிட்டியது ராஜ அந்தஸ்து.

    ReplyDelete
  2. புது பதிவர்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் கிளர்கிறது உங்களால்.

    ReplyDelete
  3. இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் எனக்குப் புதியவர்கள். ஒவ்வொன்றாய் படிக்கிறேன்....

    அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அருமை. அனைத்தும் அருமையோ அருமை.

    //நம்மாளு :
    இது JUST FOR SHARING OF OUR HAPPINESS தானே !
    ஏதாவது போட்டிக்கா அனுப்பப் போறோம்? நம்மாளுங்க
    படிச்சுப் பார்த்து நிச்சயம்
    சந்தோஷப் படுவாங்க!
    நீ வேணா பாரு ! //

    சபாஷ்!

    நம்மாளு நம்மாளு தான்
    நம்ம இராமமூர்த்தி சாரின்
    பிரதிபிம்பம் போலவே பேசறாரே!

    கடைசியிலே நம்மை கீர்த்தனாஞ்சலி பக்கம் இழுத்துட்டுன்னா போய்ட்டார்.

    பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!!

    பாராட்டுக்கள்
    வாழ்த்துகள்
    பகிர்வுக்கு நன்றிகள்.

    இன்று அடையாளம் காணப்பட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    நாளை சந்திப்போம் நண்பா !!!

    ReplyDelete
  5. 'நம்ம ஜீவி சார்' என்று சொன்னது எனக்குப் பெருமை, ஆர்.ஆர்.ஆர்!

    'வலைச்சர' அறிமுகம் பற்றிச் செய்தியைச் சொன்ன திண்டுக்கல்
    தனபாலன் அவர்களுக்கும் நன்றி.

    திரு. தனபாலன்! நான் திண்டுக்கல்
    செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூலில்
    படித்தவன். எனது ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக் கல்வி 1955-56, 1956-57 கல்வி ஆண்டுகளில் அங்கே தான்!

    ReplyDelete
  6. அனைத்து தளங்களும் சிறப்பான தளங்கள்...

    சென்று படித்து, இங்கு வந்து கருத்திடுவதற்குள் மின் வெட்டு...

    தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  7. வணக்கம் ஆரணிய நிவாஸ்(ஆர் ராமமூர்த்தி)அண்ணா

    இன்றும் அழகாக வலைப்பதிவாளர்களின் பதிவுகளை தொகுத்த வழங்கியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    அதிலும் பிரபலியம் மிக்க ஒருஎழுத்தாளன் ஜெயக்காந்தன் பற்றிய விளக்கம்அருமை. அவருடைய சிலபடைப்புக்களை படித்த போது மிகவும் சுவாரகசியமாக உள்ளது ஜெ .கே ஐயாவுக்கும் அந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்த உங்களுக்கும் எனது நன்றிகள்

    உத்தம புத்திரன் அவர்களின் (அன்னையர் அந்தாதி) அதுவும் காலத்துக்கு ஏற்ப தொகுத்துள்ளிர்கள் அதாவது நவராத்திரி காலம்...நல்ல விளக்கம் நல்ல ஒருபதிவு வாழ்த்துக்கள் ஆர்..ஆர்

    வலையுலகமும் .நொந்தகுமாரனும் அவருடைய பெயரைப்பார்தாள் ஒரு வித்தியாசமாக உள்ளது. அவருடைய கடசி வரியை பார்த்தாள் சிரிப்பு வருகிறது.ஆர்...ஆர்....அனைத்துப்பதிவுகளையும் தொகுத்துவழங்கிய ஆர்.ஆர்.ஆர் (அண்ணாவுக்கு எனது இதயம்கனிந்த வாழ்த்துக்கள் 6ம் நாளும் வலைச்சரம் வலைப்பூ அழகாக விழாக் கோலமாக அமைய வாழ்த்துக்கள்(அண்ணா)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. ஆம் ரிஷபன்! ஜெ.கே என்கிற மாபெரும்
    சிம்மத்தினால்,ஒவ்வொரு தமிழ் எழுத்தாளனுக்கும் ராஜ அந்தஸ்து கிடைக்கிறது என்பது உண்மை தான்...
    அலைகடலில் தேடும் முத்துக்கள் போல் தான் வலைகடலில் தேட வேண்டி இருக்கிறது..இது ஒரு சுகமான அனுபவம்!
    சமயத்தில் வலம்புரிச் சங்கும் கிடைக்கும்!

    ReplyDelete
  9. வெங்கட் நீங்கள் சொல்வது உண்மை தான்..இது ஒரு புதிய அனுபவமாகத் தான் இருக்கிறது?
    அது ச்ரி, நானும் ஒரு சாதாரண பதிவர் தானே...
    யாராவது பிரபல பதிவர் அறிமுகப் படுத்தினால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
  10. வை.கோ. சார்,
    நான் வேற... நம்மாளு வேற...
    நான் திருவானைக்காவல்..அவர் இருக்கிறது திருத்துறைப் பூண்டி..எனக்கு உதவி செய்வதற்காக திருச்சி வந்து
    ஒரு வாரமா எங்க வீட்ல டேரா போட்டிருக்கிறார் அவர்...
    தீபாவளி பர்ச்சேஸ் முடிந்து தான் திருத்துறைப் பூண்டி போவார் என நினைக்கிறேன்..
    ’டே பை டே’ திருச்சி டெவலப் ஆகிண்டு இருக்கு என்று வியட்னாம் வீடு படத்தில் சொல்வது போல் அடிக்கடி சொல்கிறார்..
    பயமாக இருக்கிறது!

    ReplyDelete
  11. ஜீவி சார் வருவது எனக்கு பெருமை அன்றோ!தங்கள் வலைத்தளத்தில அந்த பிரபல எழுத்தாளர்களைப் பற்றி தாங்கள் எழுதியிருப்பதைப் படிப்பது என்பது என்ன ஒரு சுவாரஸ்யமான அனுபவம்?

    ReplyDelete
  12. தனபால்..இங்கும் அதே நிலை தான்..
    னெட் வேறு அடிக்கடி போய் வயிற்றெறிச்சல் கொட்டிக் கொள்கிறது...
    கூகுள் ஆண்டவரே, பாக்கி இரண்டு நாளும் நல்லபடியாய் முடிச்சு வைப்பா..
    உன் கோவிலுக்கு வந்து கொழுக்கட்டை
    நைவேத்யம் செய்கிறேன்..!

    ReplyDelete

  13. ரூபன்..என்ன ஒரு அன்பு உங்களுக்குத் தான்!மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோதரரே!

    ReplyDelete
  14. வித்தியாசமான எழுத்துக்களை உங்கள் அறிமுகம் மூலம் படிக்க முடிவது சந்தோஷமான அனுபவம்.

    ஜெயகாந்தன் பற்றிய கட்டுரை அந்தக் காலத்தில் அவரது எழுத்துக்களை சுடச்சுட படித்த நினைவுகளை மறுபடி கொண்டு வந்தது.

    அறிமிகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ஆம் ரஞ்சனி மேடம் .....

    ஜெயகாந்தன் வாழ்கின்ற காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமை தானே !

    ReplyDelete
  16. வலைதளங்களின் அறிமுகங்கள் படு ஜோர்!!!
    அறிமுகபடுத்தும் ராமமூர்த்தி படு சூப்பர் !!!
    அந்த ராமமூர்த்தியின் நட்பு எனக்கு படு சூப்பர் !!!
    அவரை பார்க்காமல் இருப்பது படு போர் !!!!!!!
    அவருடன் பேச ஆரம்பித்தால் படு சூப்பர் !

    ReplyDelete
  17. பூ வனம் ஒரு நறு மணம்!!!
    அதில்
    ஜெ கேவின் வாழ்வுரை
    ஒரு நறுமண கதம்பம்
    அதை அறிமுகபடுத்திய
    ஆரண்ய ராமமூர்த்தி ஒரு
    வலைதள கடல்

    ReplyDelete
  18. தமிழ்க் கவிதைகள் பக்கத்தில் ‘அன்னையர் அந்தாதி’ க்கு வழங்கிய தங்களின் அறிமுகத்திற்கு எமது அன்பார்ந்த நன்றிகள் ஆர்.ஆர்.ஆர்.

    அறிமுகம் பற்றிய விபரம் பதிவு செய்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது