07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 31, 2008

கவிஞர்கள் அறிமுகம் - வலைச்சரம்

நண்பர்களே, சில கவிஞர்களை அறிமுகம் செய்கிறேன்.

முதலில் அருமை நண்பர் புகாரி பற்றி எழுதுகிறேன். வானூறி மழை பொழியும், வயலூறி கதிர் விளையும், தேனூறி பூவசையும், தினம்பாடி வண்டாடும், காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும், பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில்(ஒரத்தநாடு - தஞ்சை மாவட்டம்) பிறந்தவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும். இவை அனைத்தும் கவிஞர் கைவண்ணம். எது என் ஊர் என ஒரு அழகுக் கவிதை, எளிய சொற்களில், நச்சென்ற முடிவுடன் படைத்திருக்கிறார். அவரது அருமைக் கவிதைகளில் இதுவும் ஒன்று. வெளிச்ச அழைப்புகள் என்றதொரு புத்தகமும் கவிப்பேரரசின் முன்னுரையோடு வெளி வந்துள்ளது.
செல்லுங்களேன் அவரது கவிதையைச் சுவைக்க.

நண்பர் நந்து, அருமை நிலாவின் தந்தை. பலவித ஒளிப்படங்கள் படைத்திருக்கிறார். அருமை அருமை. பார்க்க வேண்டிய பதிவொன்று. கண்ணுக்கு விருந்து படையுங்கள்.

நண்பர் கருப்பன் நெதர்லாண்ட்ஸில் பணியாற்றுகிறார். மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற ஒரு வலைப்பூவில் எழுதுகிறார். நகைச்சுவை மிளிர புதிய திரைப்படம் "ரோபோ" பற்று எழுதி இருக்கிறார். படியுங்களேன்.

செல்வி ஷங்கர் என்ற ஒரு பெண் பதிவர் அழகுத் தமிழில் அருமையான ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். பட்டறிவும் பாடமும் என்ற வலைப்பூ. பல வித கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். பயனுள்ள பதிவு.

நாளை சந்திப்போமா ?








மேலும் வாசிக்க...

வலைச்சர, படிக்காத, படிக்க வேண்டிய பதிவுகள்

நண்பர்களே !! வலைச்சர கொள்கைப்படி, பதிவர்களால் அதிகம் படிக்காத, ( படித்தும் மறு மொழி இடாத) , பயனுள்ள பதிவுகள் பற்றி கீழே எழுதி இருக்கிறேன்.

நண்பர் பிரபு ராஜ துரை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி யாற்றுகிறார். பலதரப்பட்ட வழக்குகளையும் கையாளுகிறார். அவற்றைப் பற்றி எளிமையாக விளக்குகிறார். இதோ அவரது வலைப் பூவான மணற்கேணியில் வந்த
ஜல்லிக்கட்டு பற்றிய இடுகை. இதில் உச்ச நீதி மன்றத்தில் நடந்த, சல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு பற்றி விளக்குகிறார். இன்னுமொரு இடுகை அலங்காநல்லூர் சல்லிக்கட்டு பற்றியதும் இப்பதிவினில் இருக்கிறது. படியுங்களேன்.

பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள கோட்டக்குப்பத்தில் வளர்ந்த நண்பர் இக்பால் தற்போது சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். இவர் இயற்கையோடு கூடி வாழ்ந்தால் இது சுகமே என்ற பதிவினில் பல விதமான பாட்டி வைத்தியம் பற்றிக் கூறுகிறார். பலவித
கீரைகளின் பயன்கள், இஞ்சி மற்றும் தேன், நெய் ஆகியவை எவ்விதம் நம் உடலைப் பாதுகாக்க உதவுகின்றன என்பதை எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறார். சென்று தான் பாருங்களேன்.

மக்கள் சட்டம் என்றொரு வலைப்பூ மக்களுக்கான சட்டங்களை வளர்த்தெடுக்கவும், மக்கள் விரோத சட்டங்களை அடையாளம் காட்டவும் அரிய பணி யாற்றிக் கொண்டிருக்கிறது.
வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகள், அதன் மூலம் பெறப்படும் கடன்கள், அதனால் விளையும் துன்பங்கள் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறது. பயனுள்ள பதிவு. பதிவர்கள் அலசலாமே!!

நண்பர் ஜி.ராகவன் அடுப்படி என்ற வலைப்பூவினில் சுவைக்கச் சுவைக்க சிறந்த சமையல் குறிப்புகளை சுவை படத் தருகிறார்.
முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா செய்வது பற்றி நகைச்சுவையாக குறிப்புகள் தருகிறார். முயற்சி செய்யலாமே.

பதிவர்களே அடுத்த பதிவில் சந்திக்கலாமா ?
மேலும் வாசிக்க...

Wednesday, January 30, 2008

படித்ததில் பிடித்த பதிவுகள் - வலைச்சரம்

நண்பர்களே ! இதுவரை தொடுத்த சரங்களில் இருந்த பூக்கள் எல்லாம், எல்லோரும் நன்கு அறிந்த வலைப் பூக்கள். ஆனால் வலைச்சரத்தின் நோக்கமே புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துதலும், அதிகம் அறியப்படாத பதிவர்களை அரங்கத்திற்கு கொண்டு வருவதுமே ஆகும். அவ்வடிப்படையில், இவ்விடுகையில் சில பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்.

அருமை நண்பர் சேவியர் அலசல் என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். அதில் பல்வேறு பயனுள்ள தகவல்களையும், பல்வேறு ஆய்வு முடிவுகளையும், பல்வேறு ஒளிப் படங்களையும் ( புகைப் படங்கள் அழிந்து விட்டதால் இப்போதெலாம் Digital Camera தான் அதன் மூலம் எடுக்கும் படங்களை இவ்வாறு அழைக்கலாமா), சில நகைச்சுவை இடுகைகளையும் தருகிறார். இவரது இடுகைகளில் பல்வேறு செய்திகள் இருக்கும்.வலைப்பூ ஆரம்பித்து 15 மாதங்கள் ஆகின்றன. ஏறத்தாழ 250 இடுகைகள் இட்டிருக்கிறார். அதிக பட்ச பதிவர்கள் இவ்விடுகைகளுக்கு வருவதில்லை. 90 விழுக்காடு - இடுகைகள் என்னால் படிக்கப் பட்டவை. இவரது கிரிக்கெட் கலாட்டா - சிட்னி ஸ்பெஷல் ஒரு நகைச்சுவைப் பதிவு. அனைவரும் ஒரு முறை இவ்விடுகைக்கு வருகை புரியலாமே!

மற்றொரு நண்பர் கலை அரசன் மார்த்தாண்டம். இவர் தூறல் என்ற வலைப்பூவின் உரிமையாளர். நெல்லைச் சீமையைச் சார்ந்தவர். குமரி முனையை ரசித்தவர். காவிரிக் கரையில் வசிப்பவர். கவிதைகளில் களிப்பவர். மும்பை, மராத்திய முரசு ஏட்டில் பத்துக்கும் மேற்பட்ட பைந்தமிழ்க் கவிதைகளைத் தந்தவர். 2006 சூலை முதல் இடுகைகள் இட்டு வருகிறார். கவிதைகள், சிறு கதைகள், நடப்புகள், தொடர் கவிதை, ஹைக்கூ கவிதைகள் என்று கலக்குகிறார். பேனாவைப் பற்றிய நல்லதொரு கவிதை. சென்று தான் பாருங்களேன்.

அடுத்த நண்பர் சிவமுருகன் மதுரையைச் சார்ந்தவர். பெங்களூரு பணி செய்யுமிடம். நிகழ்வுகள் என்ற வலைப்பூவில் ஈராண்டுகளாக நிறையச் செய்திகளை உள்ளடக்கிய இடுகைகள் படங்களுடன் படைத்துள்ளார். குறும்பு என்ற இடுகை அவரது பள்ளிப் பருவத்தைப் பற்றியது. குறும்பு வாரமாக ஒரு வாரத்தை, பல்வேறு குறும்புகளுடன் கொண்டாடி இருக்கிறார். படியுங்களேன். இவர் ஒரு பன்முகப் படைப்பாளர். பாராட்டி மகிழலாம். குறளை 11 மொழிகளில் ( சௌராஷ்ட்ரா உட்பட) பதிந்திருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பற்றி அரிய படங்களுடன் சுமார் 50 இடுகைகள் இட்டிருக்கிறார்.

இனிய நண்பர் கபீரன்பன் கோவையில் வேதியியல் பொறியாளர். இவர் கபீரின் கனிமொழிகள் என்ற வலைப்பூவில், கபீர்தாஸின் இரண்டடி தோஹாக்களை தமிழ்ப் படுத்தி இருக்கிறார். சில நாட்களின் சிறைவாசம் அரவிந்தரை ஆன்மீகத்திற்குத் திருப்பியது. தீவிரமான கருத்துகளோடு சுதந்திரப் போராட்டத்தில் இருந்தவரை திசை திருப்பியது. அந்நிகழ்வை அவரது சொற்களிலேயே படைத்துக் காட்டுகிறார். அரவிந்தரின் அனுபவத்தை கபீரின் கருத்துகளோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். நாமும் படித்து மகிழலாமே !


மேலும் வாசிக்க...

காணவில்லை - கும்மி அடிக்கறவங்கள காணலெ -

அடப் போங்க - போரடிக்குதுங்க - ஆன்மீகச்சரம்னு எழுதுனா ஒருத்தரும் வர மாட்டீங்கரேங்க - ஒதுக்குறீங்க - ஏனுங்கோ கோவில் குளமெல்லாம் போறதுண்டா - இல்ல இந்த மாதிரி பதிவெ எல்லாம் படிச்சா யாராச்சும் முதுகுலே முத்திர குத்திடுவாங்கன்னு பயமா ? ம்ம் இருக்கட்டும்

இப்ப எல்லாம் மொக்க - கும்மி – குசும்பு – அப்பிடின்னு கலாய்ச்சாதான் எல்லோரும் வந்து கும்முறாங்க. ஜாலியா இருக்கு.

இங்க பாருங்க - இங்கன்னா இங்க இல்லீங்க - அய்யே - அடுத்த பத்தி ஆரம்பிக்கும் போது அப்பிடிச் சொல்றது வழக்கமுங்க - நம்ம இணையத்துலே ( நாம என்ன வெலைக்கு வாங்கிட்டமா ) கும்முற பதிவுகளைத் தேடிப் பிடிச்சு சுட்டலாமுன்னு ஒரு ஆசைங்க. அதென்ன விபரீத ஆசன்னு கேக்குறீங்களா ? என்ன பண்றது - ஆசாபாசங்கள் நிறைந்த மனித மனம் ஆசைப் படுவதை நிறுத்துகிறதா - இல்லையே. இம் மாபெரும் உலகில் ஒருவர் கூட ஆசைப் படக் கூடாது என ஆசைப் பட்டவன் சித்தார்த்தன் (அட நம்ம புத்தர் தானுங்க).

எனக்குப் பிடிச்ச ஒரு பதிவு என்னோட பேரனுது - பாருங்க - உடனே எங்க பாக்கணும்னு அபி அப்பா கேக்குறாரு - தொடர்ச்சியா எழுத வுட மாட்டெங்குறாங்கப்பா - சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி எழுதுறது - எங்கே விட்டேன் - அட போங்கப்பா - மறந்து போச்சி.

ஆங்க்க்க்க்க், என்னோட பேரனோட வலைப்பூ சரவணன் என்ற குசும்பனோடதுங்க - சாரிடி ஷுட் ஸ்டார்ட் ஃப்ரம் ஹோம்னு சொல்லுவாங்க பெரியவங்க ( நான் தானுங்க) - அதனாலே மொதல்லே எங்காளுது - குசும்பன் இருக்கானே - அவனுக்கு பிடிச்சவங்க பிடிக்காதவங்கன்னு பாகு பாடே கெடயாது - கண்லே பட்டவங்களெல்லாம் கலாய்ப்பான். அப்பிடிப் பட்ட ஆளு - எம்மா - தாங்க முடியாது - ஒரு எட்டுப் பாத்துட்டு வந்துடுறிங்களா ? இவன் மத்தவங்க கூட எல்லாம் சேந்துக்கிட்டு குழுப் பதிவுலே எல்லாம் கும்முறான்.

அப்புறம் பாருங்க நம்ம அபி அப்பா - நட்டப்பா - கும்முறதுக்கேன்னு பொறந்தவரு - சும்மா மொக்க கும்மின்னு எதுனாச்சும் எழுதிக்கிட்டே இருப்பாரு - பொழுது போகாதப்ப - ஆணி இல்லாதப்ப பாக்கலாம் - படிக்கலாம் - ரசிக்கலாம் - பின்னூட்டத்துலே பின்னலாம் - என்னா வேணா பண்ணிக்குங்க.

கொறஞ்ச பச்சம் மூனு பேரயாச்சும் அறிமுகப் படுத்தனுமாம். வலைச்சர பொறுப்பாளர்கள் விதி எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க - அதனாலே வலையெல்லாம் வீசி வலைபூராத் தேடிக் கண்டு பிடிச்சேனுங்கோ - நம்ம ரசிகனே. - நம்ம ஸ்ரீதருங்க - இவருக்கு அறிமுகம் எல்லாம் தேவை இல்லீங்க - சும்மா மொக்க போட்டே மொக்கிடுவாருங்க - மொக்கையனே வுட மோசமுங்கோ - பாண்டிச்சேரிலேந்து கத்தாருக்கு வழி கேளுங்க - கரெக்டா சொல்லுவாரு.

.:: மை ஃபிரண்ட் ::. - ஏன் என்னெப் பத்தி எழுதுலே - ஆட்டோ அனுப்பட்டா - நான் தானே எல்லாப் பதிவுலேயும் 100 1000 10000 100000 னு பின்னூட்டம் போடுவேன் - கச்சி கட்டி ஹிட் ரேட்ட ஏத்திடுவேன்லெ - ஒரே பயமுறுத்தல் - மலேசியாப் பொண்ணாம் - ஒரு பத்து பதிவுலே எழுதுது. தனக்குன்னு ஒரு பதிவு – மத்ததெல்லாம் குழுப் பதிவு.

போதும்னு நெனைக்கி
றேன் - 100 பின்னூட்டம் வந்தா அடுத்ததும் இது மாதிரித்தான் - ஆமா - சொல்லிப்புட்டேன்
மேலும் வாசிக்க...

Tuesday, January 29, 2008

ஆன்மீகச் சரம் - 2

ஆன்மீகச் சரத்தினைத் தொடர்வது எனத் தீர்மானித்து இப்பதிவினைத் தொடங்கினேன். முந்தைய பதிவினில் சில ஆன்மீகப் பதிவர்களை அறிமுகப் படுத்தினேன். அறிமுகம் என்ற ஒன்று தேவை இல்லாதவர்கள் அவர்கள் அனைவரும். அவர்களை வலையுலகம் நன்கு அறியும். இருப்பினும் அவர்களை அறியாதவர்களுக்கும், புதியவர்களுக்கும், சுட்டி கொடுத்து, அவர்களது வலைப்பூவினை காணச் செய்தேன். முதல் ஆன்மீகச் சரம் தொடுத்த பின்னர் தான், இன்னும் அதிக பதிவர்கள் இருக்கிறார்கள் ஆன்மீகம் பரப்புவதற்கென்றே என்ற எண்ணம் நினைவிற்கு வந்தது. அதன் விளைவு இப்பதிவு.

அமெரிக்காவில் வசிக்கும் மாணவி ப்ரியா (எ) செண்பகலட்சுமி ( பிரியா வெங்கடகிருஷ்ணன்) ஆன்மீகம் என்ற வலைப்பூவில் ஆன்மீகம் பற்றி எழுதி வருகிறார். அப்பூவினில், ஆன்மீகத்தை பற்றிய செய்திகளை, சிறு சிறு வினா விடைகளாக, தருகிறார்.அதன் மூலம் ஆன்மீகத்தினைப் பரப்புகிறார்.

இவர் தமிழ்க் கல்வி என்ற ஒரு வலைப்பூவிலும் மற்ற சில குழுப்பூக்களிலும் கூட எழுதி வருகிறார். இவர் ஒரு தமிழ்மண நட்சத்திரப் பதிவரும் கூட என்பது மகிழ்ச்சியான செய்தி.

கைலாஷி என்ற சு.முருகானந்தம் சென்னையில் வசிப்பவர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து, சென்னையிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிபவர். நரசிம்மர், நடராசர், நவராத்ரி நாயகி, திருமயிலை, வைகுந்த ஏகாதசி, காரைக்காலம்மையார், திருப்பாவை, திருவெம்பாவை எனப் பல பூக்கள் மூலம் பக்தியைப் பரப்புகிறார். அனைத்துப் பூக்களும் படித்துப் பயன் தரத் தக்கன. புகைப்படங்களும் இலவச இணைப்பாக இணைக்கப் பட்டிருக்கிண்றன.

சென்ற பதிவில் குறிப்பிட்ட மதுரையம்பதி என்ற பதிவர் சௌந்தர்யலஹரி என்ற வலைப்பூவில், ஆனந்த லஹரி பற்றி அழகாகச் சொல்கிறார்.

நண்பர் தி.ரா.ச பல குழுப் பதிவுகளிலும் தனிப்பதிவுகளிலும் எழுதி வருகிறார். கௌசிகம் என்ற வலைப்பூவில் படங்களுடன், பாடல்களுடன், வளமான கருத்துகளைத் தருகிறார்.

சகோதரி கீதா சாம்பசிவம் பல வலைப்பூக்களில் பதிவுகள் இட்டாலும், ஆன்மீகப் பயணம் என்ற வலைப்பூவில், தன்னுடைய பயணக்கட்டுரையைத் தொடர்வதோடு, சிதம்பர ரகசியம் என்ற தலைப்பில், தில்லைச் செய்திகளை, ஆடல் வல்லானைப் பற்றிய செய்திகளை, அள்ளித் தருகிறார்.

நண்பர்களே சுட்டிகளைச் சுட்டி பயனடையுங்கள்

அன்புடன் சீனா
மேலும் வாசிக்க...

கவிதைச்சரம் - பூக்களில் உறங்கும் மௌனங்கள்

பொதுவாக வலைப் பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட வட்டம். அதில் பதிவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், இணையத் தொடர்பு இல்லாதவர்களை, வலைப்பூ அறிமுகம் இல்லாதவர்களை, வலைப் பதிவர்களின் கருத்துகள் எட்டுவதில்லை. வலைப்பூவில் உள்ள கட்டற்ற சுதந்திரம் மற்ற ஊடகங்களில் இல்லை. வலைப்பூ என்பது நம்முடைய தனிப்பட்ட நாட்குறிப்பு.

நண்பர் சிறில் அலெக்ஸ் எழுதும் தேன் என்ற வலைப் பூ முதல் முதலாக புத்தகமாக வெளி வந்துள்ளது. வலைப்பூ புத்தகமாக வெளி வருவதின் நோக்கமே ஆசிரியரின் எழுத்துகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல சிந்தனை தான்.

முட்டம் என்ற பெயரில் புத்தகமாக வெளி வந்திருக்கிறது. தன் பிறந்த ஊரைப் பற்றி - மலரும் நினைவுகளாக - இனிமையாகக் கழிந்த இளம் பருவத்தினைப் பற்றி எழுதி உள்ளார். ஆழி பதிப்பகம் 64 பக்கங்களில் 45 ரூபாய் விலையில் வெளியிட்டிருக்கிறது.

சிறில் அலெக்ஸ் ஒரு நச்சென்ற கவிதைப் போட்டி ஒன்று நடத்தி முடிவும் அறிவித்து விட்டார். பூக்களில் உறங்கும் மௌனங்கள் என்ற ஒரு நல்ல தலைப்பினையும் தந்து, மக்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று அறிவதற்காக போட்டி நடத்தினார். மக்களும் பல்வேறு வகைகளில், பல்வேறு கருத்துகளில், மாறுபட்ட சிந்தனைகளோடும், பல்வேறு கருப்பொருளில், கவிதை படைத்தார்கள். அனைத்துக் கவிதைகளையும் பொறுமையாகப் படித்து, ஆராய்ந்து, முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது. போட்டியாளர்களில் பெரும்பாலானவர்கள் கவிதைகள் அதிகம் எழுதியவர்கள் அல்ல. போட்டிக்கென்று, சிந்தித்து, ஒரு சிறு கவிதையை அழகு தமிழில் எழுதி உள்ளனர்.

போட்டிக்கு வந்த கவிதைகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

வலைச்சர பொறுப்பாளர்களில் ஒருவரான சிந்தாநதி அழகாக எழுதி இருக்கிறார். மக்கள், பூங்காக்களில் இறக்கி வைக்கும் மனப் பாரங்களை மௌனமாகச் சுமந்து கொண்டிருக்கும் மலர்களைப் பற்றிய கவிதை.

அடுத்து அருமை நண்பர் வி.எஸ்.கே. ஆத்திகம் பற்றி அதிகம் பேசும் பதிவர். அழகாக அந்தாதி வடிவத்தில் மனித வாழ்க்கையையும், மலர்களையும் ஒப்பு நோக்கி, கனியது புளிப்பு என முடிக்கிறார்.

அடுத்து ட்ரீம்ஸ் எளிமையான சொற்களைக் கொண்டு கவிதை படைத்திருக்கிறார். மனித மனத்தையும் மலர்களின் உறக்கத்தையும் ஒப்பு நோக்குகிறார். அருமையான கவிதை.

அடுத்து குட்டிபிசாசு மலர்களைப் பற்றி - அவற்றின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றி - மலர்களும் ஒரு அழகியல் வெறுமை தான் என முடிக்கிறார்.

அடுத்து செல்வி ஷங்கர் வழக்கம் போல அழகு தமிழில் தனது தமிழறிவை வெளிப்படுத்துகிறார். மனிதனுக்குக் கூறும் அறிவுரைகளாக, பூக்களில் உறங்கும் மௌனம் போதும் என்கிறார்.

அடுத்து ஐயா சுப்பையா . அழகு - எளிமை - கவிதை அற்புதம். எதிர்காலம் என்ன வென்று தெரியாத நாமும் மலர்களும் ஒன்று தான் என்கிறார். உறங்கும் மௌனத்தை அப்படியே எழுப்பாமல் விட்டால் அது தான் நளினம் என்கிறார்.

அடுத்து வேதா சமூக அக்கறையுடன், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி மன வருத்தத்தையும் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மழலைச் செல்வங்களின் பிஞ்சு விழிகளில் உறங்கும் கனவுகளை பூக்களின் மவுனத்திற்கு ஒப்பிடுதல் அருமை அருமை.

அடுத்து பி.கே.எஸ் பேசாப் பொருளைப் பேசும் துணிவுடன் இருளைப் பற்றி எழுதுகிறார். வித்தியாசமான சிந்தனை.

அடுத்து சக்தி கை விடப்பட்ட மழலைச் செல்வங்களைப் பற்றி மிகுந்த மன வருத்தத்துடன், யாரோ செய்த பிழைகளுக்காக இவர்கள் படும் துன்பத்தை, விவரிக்கும் வரிகள் மனத்தை நெகிழச் செய்கின்றன. கண் கொண்டு பார்க்காவிட்டாலும், மனம் கொண்டு நேசிக்காவிட்டாலும், இதழ் கொண்டு தூற்றாதிருக்க வேண்டுகிறார்.

அடுத்து கண்மணி பல கவிதைகள் எழுதி இருப்பினும், இக்கவிதை மழலையின் மயக்கத்தை எண்ணி எண்ணி வருந்தும் மனதின் - உணர்வின் வலிகளை அழகாக, எளிமையான, பொருத்தமான சொற்களைக் கொண்டு எழுதிய விதம் பாராட்டத் தக்கது.

அடுத்து சதீஷ் மனித மனத்தில் தோன்றி மவுனமாக மறைந்து விடும் சொற்கள், கருத்துகள், ஆசைகள் பற்றி அழகாக கவிதையாக வடித்திருக்கிறார்.

அடுத்து அமிர்தன் காதலன் காதலி - இடையே உள்ள காதலைப் பற்றி எழுதி உள்ளார். காதலுக்கு முதல் எதிரி காதலை வெளிப்படுத்தாத மவுனம் தான்.

அடுத்து இப்னு ஹம்துன் மலரைப் பற்றி, வைரமுத்து போல, மகிழ்வுடன் எழுதி இருக்கிறார். மவுனமாக இருந்தாலும் மலர்ந்தே இருக்க அறிவுறுத்துகிறார். மவுனத்தின் அழகை ரசிக்கிறார்.

அடுத்து நிலா ரசிகன் பெண்மையைப் பற்றி, அதன் இயலாமையைப் பற்றி, அது படும் துன்பங்களைப் பற்றி அழகாக, எளிமையாக, வலிமை கொண்ட சொற்களால் வருந்தி இருக்கிறார்.

அடுத்து சகாரா கைவிடப்படும் குழந்தைகளைப் பற்றி, பொருள் பொதிந்த வரிகளுடன், மனித நேயத்துடன் யதார்த்தமாக, மொழி பெயர்க்க இயலாத மவுனத்தை எழுதி இருக்கிறார்.

அடுத்து நாடோடி இலக்கியன் வித்தியாசமான சிந்தனைச் சிதறல்கள்களாக - மௌனமாகப் பிறந்து, மௌனமாக வாழ்ந்து, மௌனமாக மரிக்கும் மலர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்.

அடுத்து பிரேம்குமார் பூக்களின் இயல்பான குணங்கள் - படிப்பினைகளாக நமக்கு - ஆனால் நாம் தான் எதையும் எளிதில் புரிந்து கொள்ள மாட்டோமே என வருந்துகிறார்.

அடுத்து அருமை நண்பர் சேவியர் ஈழத்தமிழர் படும் துன்பங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். பூக்களில் உறங்கும் மவுனங்களையே - எப்படி உறங்கும் எனக் கேட்ட வித்தியாசமான சிந்தனை.

அடுத்து இராகவன் என்ற சரவணன் மு மாந்தர் வெளியிடும் உணர்வுக் கதம்பங்கள் அத்தனையையும் உள் வாங்கியும் தன் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற கொள்கையுடன் மௌனமாக உறங்கும் பூக்கள் என்கிறார்.

அடுத்து ஷைலஜா மவுனத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மலர்களைப் பற்றியும், நிரந்தர மவுனத்தில் ஆழ்ந்து போகும் மலர்களின் / மனிதர்களின் பொதுவிதியைப் பற்றியும் அழகாக எழுதி இருக்கிறார்.

அடுத்து நம்பிக்கை பாண்டியன் முதிர் கன்னியரைப் பற்றி எளிமையாக, ஆழ்ந்த வருத்தத்துடன் எழுதி இருக்கிறார்.

அடுத்து அருட்பெருங்கோ புத்தாண்டில், புதுச் சிந்தனையுடன், புது திசையில், ரசிக்கும் படியான கவிதை படைத்திருக்கிறார். போட்டிக் கவிதைகளில் இதுதான் முதல் சோகக் கவிதை என நினைக்கிறேன். மாறுபட்ட சிந்தனை.

அடுத்து நண்பர் மா.கலைஅரசன் மழலைச் செல்வங்களைப் பற்றி மகிழ்ந்து எழுதி இருக்கிறார். அருமையான கவிதை. எளிமையான சொற்கள்.

அடுத்து நண்பர் நவன் பூக்களின் புரிந்து கொள்ள முடியாத மவுனத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்.

இறுதியாக, நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு கவிதை எழுதி போட்டியைத் துவக்கி வைத்தார். காதல், தாயின் அன்பு, மழலையின் தூக்கத்தில் சிரிப்பு, இருண்ட கோபுரத்தின் ஒற்றைத் தீபமென பலவற்றை உவமையாகக் காட்டுகிறார். சிறு கவிதை. அருமை.

இத்தனை கவிதைகளின் உட்பொருள்களையும் ஒருங்கே தருகிறார் செல்வி ஷங்கர் .

பதிவர்களே அனைத்துக் கவிதைகளையும் படியுங்கள். மனம் மகிழுங்கள்.
மேலும் வாசிக்க...

Monday, January 28, 2008

வலைச்சரம் ஆன்மீகச்சரம்

அன்பர்களே!

இணையத்தின் வலைப்பூக்களில், ஆன்மீகத்தினை வளர்த்து, அருந் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் அருமை நண்பர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

அருமை நண்பர் குமரன் மதுரையில் பிறந்து அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நன்பர். ஏறத்தாழ முப்பது வலைப்பூக்கள் வரை வைத்துக் கொண்டு கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். அனைத்துமே ஆன்மீகப் பூக்கள் தான். திருநீற்றுப்பதிகம் என்று திருநீற்றின் அருமைகளைப் பற்றி எழுதி வருகிறார். சில குழுப் பதிவுகளிலும் எழுதி வருகிறார். முருகனருள் என்ற வலைப்பூவில், முருகனைப் பற்றிய பல செய்திகளும், பல பக்திப் பாடல்களும், பல படங்களும், கந்த சஷ்டியைப் பற்றிய பல பதிவுகளும் இருக்கின்றன.

அய்யன் வள்ளுவனின் இன்பத்துப் பாலையும் லேசாகத் தொட்டிருக்கிறார்.

இவரது முக்கிய வலைப்பூ கூடல் என்பதே! அனைத்து ஆன்மீக இடுகைகளும், பின்னூட்ட விவாதங்களும் நிறைந்த வலைப்பூ.

இவருக்கு எழுதுவதற்கு எப்படித்தான் நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. தனக்குத் தெரிந்த, தான் அறிந்த அத்தனை யையும் அனைவரும் அறிய வேண்டும் என்ற பேரவாவினால், விளக்கமான, நீண்டதொரு பதிவாக பதிவிடுவார். பின்னூட்டங்களும், விவாதங்களுமே நீண்டு கொண்டே போகும்.


நண்பர் கண்ணபிரான் ரவி ஷங்கர் ஆன்மீகத்தினை வளர்க்க அரும்பாடு படுகிறார். சென்னையிலே பிறந்து நியூயார்க்கிலே வசிப்பவர். மாதவிப் பந்தல் என்ற முக்கியப் பூவினோடு, குழுப்பதிவுகள் உட்பட மற்ற வலைப்பூகளிலும் எழுதி வருகிறார். ஒரு இளமைத் துள்ளல், நகைச்சுவை, நையாண்டி இவற்றினால் ஆன்மீகம் வளர்ப்பவர்.

நண்பர் விஎஸ்கே ஆத்திகம் என்ற முக்கிய வலைப்பூவில், கவிதைகள், கதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், குறள் விளக்கம் எனப் பல பதிவுகள் இடுகிறார். சில குழுப் பதிவுகளிலும் எழுதி வருகிறார். இவருடைய தொடர்கதை ஒன்று “சித்தர் என்ற கனவு மெய்ப்படும்” என்ற தொடர்கதையை அருமையாக எழுதி இருந்தார். சாய்பாபா பக்தரும் கூட.

நண்பர் மதுரையம்பதி ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். மதுரையில் பிறந்து பெங்களூர் வாசம். நல்ல ஆன்மிகப் பதிவுகள் இடுகிறார். நல்ல நண்பர்.

நண்பர் ஜீவா ரமணர், வள்ளலார், விவேகாநந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி எல்லாம் பதிவுகள் இட்டிருக்கிறார்.

நண்பர்களே ! இணையத்தில் உள்ள வலைப் பூக்களில் ஆன்மீகம் வளர்ர்கும் இப்பதிவுகள் எல்லோராலும் படிக்கப் பட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அறிமுகப் படுத்தி உள்ளேன். பயன் பெறுக.


மேலும் வாசிக்க...

கடவுளிடம் ஒரு வேண்டுகோள் :

சென்னை ரெட் ஹில்ஸில் அந்தோனி முத்து என்ற தெய்வத்தின் குழந்தை ஒன்று உயிர் வாழ்கிறது. அக்குழந்தைக்கு இப்போது வயது 35. அக்குழந்தை 11 வயதாய் இருக்கும் போது ஒடியாடி விளையாடும் போது, தவறிப் போய், ஒரு கிணற்றினுள் விழுந்து விட்டது. அக்கிணற்றில் நீரே இல்லாத காரணத்தால், முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, நெஞ்சுக்குக் கீழ் உணர்ச்சியற்று இருக்கிறது.

இவ்விளைஞரின் தற்போதைய நிலை, இரு கைகளும் மூளையும் செயல் படும் நிலையில், அதிக அசைவுகளின்றி, கணினியே துணையாக பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கிறார். இசை கற்றவர். கணினி கற்றவர்.

கூடப் பிறந்தவர்கள் 8 பேர். ஆறு சகோதரிகள். தந்தை கடந்த ஆண்டு இறைவனடி சேர்ந்து விட்டார். அறுபது வயதைக் கடந்த மூத்த அண்ணனும், அண்ணியும் தான் வளர்த்தவர்கள். தங்கள் குழந்தையைப் போல் கண்ணும் கருத்துமாக போற்றிப் பாதுகாப்பவர்கள். ஒரு சகோதரி இவருடைய அன்றாடத் தேவைகள் அனைத்தும், உடல் உபாதைகள் உட்பட, கவனித்துக் கொள்கிறார்.

இவருக்குத் தேவைப்படும் உடனடிப் பொருட்கள் :

1. வெளி உலகைக் காண, 25 ஆண்டுகளாகக் காணாததைக் காண, ஒரு சக்கர நாற்காலி
2. பெட் சோரைத் தடுக்க, ஒரு ஸ்பாஞ்சு மெத்தை
3. சரி செய்யப்பட இயலாத வலது கண்ணின் குறையினால், மேசைக் கணினியின் பயன்பாடு குறைவதினால், பெரிய திரையுடன் கூடிய ஒரு மடிக்கணினி.

இவைகள் இருந்தால், கணினியின் மூலம் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், தன்னைப் பாதுகாத்து வரும் சகோதர, சகோதரிகளின் பாரத்தைக் குறைக்கவும், பணம் ஈட்டவும் முடியும் என நினைக்கிறார்.

இவருக்கு நல்வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தருவோம்.

இவருக்கு உதவும் நோக்கத்துடன், சக வலைப் பதிவர்கள், நல்ல உள்ளம் படைத்தவர்கள், வலைப் பூவில் இடுகைகள் இட்டிருக்கின்றனர்.

மதுமிதா : தன்னுடைய காற்று வெளி என்ற பதிவில், டிசம்பர்த் திங்கள் 18ம் தேதி, தெய்வக் குழந்தை அந்தோணி முத்து என்று ஒரு இடுகை இட்டிருக்கிறார்.

சுரேஷ் : அழகுக் கவிதை ஆங்கிலத்திலும் தமிழிலும் படைத்திருக்கிறார் இக்குழந்தையைப் பற்றி. யாரிவர் என்ற தலைப்பிலும், Do we have time என்ற தலைப்பிலும்.

என்றென்றும் அன்புடன் பாலா : இவர் நண்பர் அந்தோனி முத்துவிற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சாம் தாத்தா: முதியவர் - வலைப்பூக்களுக்கு புதியவர் - சென்னைத் தமிழும் தெரிந்தவர் - கலக்கல் பதிவுகள் இடுபவர். இவரது பதிவிலும் அந்தோனிமுத்து பற்றி ஒரு பதிவு இருக்கிறது.

அந்தோனி முத்துவும் ஒரு சக பதிவராக இருக்கிறார்.

நண்பர்களே, தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்ற நல்ல செயல்களை சில நல்ல உள்ளங்கள், இறைவனின் கருணையைத் துணை கொண்டு செயல் படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு நல் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக.

நான் இரு கரம் கூப்பி, இங்கு வருகை தந்த நண்பர்களை, நல்லவர்களை, சுட்டியைச் சுட்டி, மேலே கண்ட இடுகைகளையும் படிக்குமாறு, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து - குறள்

நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க...

இறை வணக்கம்

என்னுடைய அறிமுகப் பதிவினிற்கு அடுத்து இறை வணக்கப் பதிவு.


எனக்கு சிறு வயது முதலே இறை நம்பிக்கையையும், இறைப் பாடல்களையும் அறிமுகப் படுத்திய எனது தாய்க்கு முதல் வணக்கம். அவர் கற்பித்த, இன்று வரை பயன்படுத்தும், எனக்குப் பிடித்த பிள்ளையார் பாடல்கள்.


ஸ்ரீதர மூல
செழுஞ் சுடர் விளக்கே
காணர மேனி
கற்பகக் களிறே
அல்லல் வினையை
அறுத்திடும் ஞானம்
வல்லவர் தானே
வருவீர் மகனே
பொன் கரம் அணிந்த
புண்ணிய மூர்த்தி
சங்கரன் அருளிய
சற்குரு நாயகா
பெண்ணாள் உமையாள்
பெற்றிட்ட தேவே
குருவே சரணம்
குமணனே சரணம்
ஓரானைக் கண்ணனை
உமையாள் திருமகனை
பேணினால், வராத புத்தி வரும்
சம்பத்து வரும் சித்தி வரும்
தான் கணபதி.


குள்ளக் குள்ளனே
குண்ட வயிறனே
வெள்ளைப் பிள்ளையாரே
விநாயக மூர்த்தியே
கருத்தப் பிள்ளையாரே
கற்பக மூர்த்தியே
செவத்தப் பிள்ளையாரே
செண்பக மூர்த்தியே


ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை, ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராய் நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு


எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் கருணையுடன் தொடங்குகிறேன்.
மேலும் வாசிக்க...

வலைச்சர ஆசிரியர் - ஒரு சுய அறிமுகம்

அன்புள்ள சகபதிவர்களே,


அனைவருக்கும் வணக்கம்.


முதற்கண் என்னையும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்த வலைச்சர நிர்வாகத்தின் சிந்தாநதி, சகோதரிகள் முத்துலட்சுமி, பொன்ஸ் ஆகிய அனைவருக்கும், என மனங்கனிந்த வாழ்த்துகளுடன் கூடிய நன்றி.


நான் 2007 ஆகஸ்டுத் திங்கள் கடைசியில் தான் வலைப்பூ தொடங்கினேன். 5 மாத காலத்தில் 25 பதிவுகள் தான் இட்டிருக்கிறேன். ஆனால் மற்ற பதிவுகளைப் படித்து நான் இட்ட மறு மொழிகள் கணக்கிலடங்காது.


புத்தாண்டுச் சபதமாக, மறுமொழிகளைக் குறைத்து, பதிவுகளை அதிகம் இட எண்ணினேன். தொடங்குகிறேன்.


அசைபோடுவது என்ற வலைப்பூவில் என்னுடைய மலரும் நினைவுகளாக இளமைக்கால இன்பங்களை பதிவிடுகிறேன். படித்ததில் பிடித்தது என்ற வலைப்பூவில் எனக்குப் பிடித்த மற்றவர்களின் எழுத்துகளைப் பதிவிடுகிறேன்.


தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்


ஆதரவுக் கரத்தினை மறு மொழிகளின் மூலம் நீட்டுக.


நன்றி

மேலும் வாசிக்க...

அசைபோட்டு அனுபவித்து எழுதியவை...

நண்பன் அவர்கள் தொடுத்த வலைச்சரவாரம் விவாதங்கள் விறுவிறுப்பாக நடந்தது திரைவிமர்சனங்கள் இலக்கிய சச்சரவுகள் என்று புதுவிதமான வாரமாக அமைந்தது. அறிமுகத்திலிருந்தே ஒவ்வொரு பதிவைப்பற்றிய விசயத்தையும் மிக அழகான வார்த்தைகளில் விரிவானதொரு அலசல் பார்வையில் வாரம் முழுமையையும் அவரே சொன்னது போன்று வேலைப்பளு மற்றும் எதிர்பாராத மழை மின்சாரத்தடை என்று அத்தனை தடைகளையும் மீறி வலைச்சரத்தை தொடுக்க எடுத்துக்கொண்ட சிரத்தைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
------------------------------------------------------
இவ்வார வலைச்சரத்திற்கு அழைப்பது சமீபத்தில் மதுரையில் மாநாடு கண்ட மாவீரர் சீனா அவர்களை,,, தமிழ் கற்றவன் என்று பதிவில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் இளமைக்கால நினைவுகளை நம்மோடு பகிர்கிறார்.அதிக பதிவுகளை வாசித்து அனைவரையும் உற்சாகப்படுத்தும் பின்னூட்டங்களை இடுவதில் வித்தகர்.இதுவரை தான் ரசித்த அசைபோட்டு அனுபவித்து வாசித்த நல்ல பதிவுகளை நமக்களிக்க வருகிறார்.
மேலும் வாசிக்க...

விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...

விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...


ஒரே வாரத்தில் இத்தனை அதிகமாக எழுதியதில்லை. எழுதினால் வாசிப்பதில்லை. வாசித்தால் எழுத நேரமில்லை என்று போய்க்கொண்டிருக்ககயில், வாசித்து வாசித்து எழுத வேண்டிய இந்த வாய்ப்பு மிக்க மகிழ்வாக இருந்தது என்பது உண்மை. எதிர்பாராத சில தொல்லைகள் குறுக்கிட்டன. மூன்று நாட்களாக மின்சாரமும், நீரும் துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தனை எழுதியதே வியப்பாக இருக்கிறது. முன் கூட்டிய தயாரித்தல் ஏதுமின்றி தோன்றிய பொழுதும் வழக்கமுள்ள நான், இப்பொழுதும் அதையே பின்பற்றினேன். ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் தான், எதைப் பற்றி எழுதுவது என முடிவு செய்து கொண்டு, பின் அது குறித்த தேடுதலைத் தொடங்கினேன் என்பதும் உண்மை. அரசியல் குறித்தான பதிவுகள் மட்டுமே தொடர்ந்து நான் வாசித்து வந்தவை. மீதியெல்லாம், அந்த நேரத்தில் தோன்றியவை மட்டுமே.

விடை பெறும் முன், துபாய் பதிவர்களின் பதிவுகளைப் பற்றிய ஒரு இடுகையுடன் முடித்துக் கொள்ளலாம் என்று ஒரு ஆவல். இவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருக்கிறேன். சிலரை அடிக்கடி. மேலும் சிலருடன் இணைந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதுவும் உண்மை. தனித்தனி பார்வைகளுக்குக் கீழே படியுங்கள்:

ஜெஸீலா பெண்கள் போகப் பொருளா என்ன என்ற கட்டுரையின் ஆதங்கம் அவரது சிந்தனை போக்கைச் சொல்லும். கலகலப்பாகவும், தீவிரமாகவும் ஒரே சமயத்தில் எழுதப்பட்ட படைப்புகளின் சொந்தக்காரர். அவரைப் போலவே அவரது எழுத்துகளும் இனிமையாகப் புன்னகை பூக்கும்.

ஆசிப்
எல்லாவித பிரச்சினைகள் பற்றியும் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வுடன், பிறர் மனம் புண்படாதபடி, தான் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிடக்கூடிய லாகவம் மிக்க எழுத்துகளைக் கொண்டிருப்பவர். சிறுகதைகள், கவுஜைகள், பொதுப்பிரச்சினைகள் என்று எல்லாமுமாக அலசிக் கொண்டிருப்பவர். நடுநடுவே திரண்ட அனுபவம் கொண்ட தந்தையின் கட்டுரையும் கூட வரும். முளைவிடும் பையனின் திரைவிமர்சனம் ஒன்றும் வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து மூன்று தலைமுறைகளாக ஒரே தளத்தில் எழுதுகிற வலைப்பூக்கள் இல்லை என்றே சொல்லலாம்.

முத்துகுமரன் ஆரம்பகாலக் காதல் கவிதைகளை இப்பொழுது சற்று மெருகேறிய நடையில் எழுதி வரும் நண்பர் - அறைத்தோழர். பெரியார் கருத்தியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெரியாரைப் பற்றிய புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறுகதைகள் எழுதினாலும், இன்னும் 'சொல்வதைத்' தவிர்த்து விட்டு, கதையை நிகழ்த்திக் காட்டுங்கள் என்று விமர்சிக்கும் அளவில் இருக்கிறது. இன்னும் மெருகேற காலமிருக்கிறது. சிறப்பான எழுத்துகளையும், சமூக சிந்தனைகளையும் முன்வைத்து இன்னும் சிறப்பாக எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இசாக் ஒரு நல்ல உழைப்பாளி. மிக அதிகமாக செய்யும் வேலையே காலத்தை உறிஞ்சிக் கொள்ள, மீதி கிடைக்கும் நேரங்களில், எவ்வாறு இத்தனை செயல்பட முடிகிறது என வியக்க வைப்பவர். கவிதைகள் எழுதும் இவர், தன் கவிதைகளில் பலவற்றைப் புத்தகங்களாக கொண்டு வந்திருப்பவர். சமீபத்திய சாதனை, குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டது தான். அண்ணன் அறிவுமதியுடன் நெருங்கிய தொடர்பிலும் இருப்பவர். அரசியல் ஈடுபாடுமுள்ளவர்.

கவிமதி
பெரியாரின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர். கவிதைகள் இவரது முக்கிய மொழி. கவிதைத் தொகுதிகளும் வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகளும் எழுதி அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வரும் முயற்சிலும் இருக்கிறார்.

தம்பி பேரன்புகள் எப்பொழுதுமே கிடத்தப்பட்ட நீண்ட மௌனத்துள் சிக்குண்டு அலையும் என்பது எனது அனுமானம். ஏனென்றால் நான் அப்படித்தான் இருக்கிறேன். 'பேரன்பும், பேரன்பு மட்டுமே கொண்டவன்' என தம்பி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நேரிலே காணும் பொழுது மிக நீண்ட மௌனத்தின் சொந்தக் காரர். கொஞ்சம் அறிமுகம் ஆனதும் பேசுகிறார் தேவைக்கேற்ப. அவர் அழகாக, வாசித்து ஈடுபட வைக்கும் ஒரு நடையில் எழுதுவார் என்பதே தெரியாதிருந்தது. அப்பொழுது தான், ஆசிப் தம்பியைப் பற்றி எழுதிய ஒரு சிறுபதிவை படிக்க நேர்ந்தது. ஆசிப் தன் ஆசான் என்று தம்பி குறிப்பிடுகிறார். ஆசிப், தம்பியின் எழுத்துகள் வாசிப்பதற்கு அலாதியானவை; அரிதானவை என எழுதுகிறார். அதை வாசித்த நான் பதில் எழுதிவைத்தேன் - 'Indulging in mutual back scratching' என்று. ஆனால், பின்னர் தம்பியின் சிறுகதைகளைப் படித்த பின் தான் தெரிந்தது - அவருடைய எழுத்துகள் செறிவும், வளமையும், புனைவும் மிக்கது என்று. 'back scratching' என்று எழுதியதற்கு இதுவரையிலும் வருத்தம் தெரிவிக்கவில்லை. வெறும் வார்த்தைகளால் சொன்னால் ஆகாது. சரியான சந்தர்ப்பத்தில், சரியான தளத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று காத்திருந்தேன். இது தான் சமயமென்று நினைக்கிறேன். - 'Asif & Thambi - My heartfelt apologies to you, both'

அய்யனார் எழுதுவதற்கு, தனக்கென ஒரு தனி நடை வைத்திருக்கும், அய்யனாரின் எழுத்துகளைப் பற்றிய அறிமுகமா? அனைவருக்கும் தெரியும் தானே? ஏற்கனவே அவரது பதிவுகளைப் பற்றிய ஒரு பார்வையை திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல் என்ற தலைப்பிலே எழுதிவிட்டேன். அதனால், அடுத்தவர்களைப் பற்றி...

குசும்பனின்
படிக்கலாம் வாங்க - போட்டோஷாப் உபயோகிப்பதைப் பற்றிச் சொல்லித் தருகிறார். அதிலும், கறுப்பு வண்ண படங்களை எப்படி வண்ணப் படமாக மாற்றுவது என்பது குறித்த அவரது பதிவு அருமை. எல்லோருக்கும் பயன்படும் வகையில் அமையும். அதிலும் குறிப்பாக புகைப்பட கலைஞர்களாக வலம் வர விரும்புபவர்களுக்கு, அல்லது புகைப்பட தொழில் செய்ய முனைவோருக்கு உதவிகரமாக அமையும். தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

சுல்தான் மிக மென்மையாகவும், அமைதியாகவும் இயங்குபவர். நகைச்சுவை உணர்வும் உடையவர். வாகன ஓட்டிகளைப் பற்றிய அவரது பதிவே அதற்குச் சான்று. என்றாலும், ஏதோ எண்ணிக் கொண்டு, வளைகுடா நாடு வந்து, பின்னர் வேறு எதுவாகவோ மாறிப் போகும் நண்பர்களைப் பற்றிய ஒரு கார்ட்டூன் அட்டகாசம். Just arrived என்பதில் தொடங்கி, இறுதியாக Got converted என்று முடித்திருக்கும் வரையிலும் அருமை என்றாலும், இறுதியாக converted to what? என்று எழுதாது ஒரு குறை தான். அதுபோல அவரது நாட்டுப்புறப் பாடல்கள், சிலேடை, என்ற இலக்கிய ஆர்வத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து தனது ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதுவார் எழுத வேண்டுமென்று விரும்புகிறேன்.

கோபிநாத், அபிஅப்பா, சென்ஷி இவர்களைப் பற்றிய நேரிடையான அறிமுகம் இல்லை. வல்லிசிம்ஹன் அவர்கள் துபாய் வந்த பொழுது, பார்த்திருக்கிறேன். ஆனால், அதிகம் பேசியதாக நினைவில்லை. துபாய் பதிவர்கள் பற்றிய ஒரு இடுகை செய்யலாமென்று தோன்றிய பொழுது தான் இவர்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். சிநேகத்தை மட்டுமே பேசுவேன் என்று அடம் பிடிக்கும் எழுத்துகள் இவை. வெகு தீவிரமாக விவாதங்கள் புரிந்து, என்ன சாதித்தோமென்று எப்போதாவது சில சமயங்களில் ஒரு சலிப்புத் தோன்றும் பொழுது, இவர்களைப் போலவே, சிநேகம் மட்டுமே பேசி, மனதை எப்பொழுதும் இலகுவாக வைத்துக் கொண்டால் என்ன என்று தோன்றும். ஆனால், அத்தகைய பாதைக்குத் திரும்பவும் செல்ல முடியுமா என்பது சந்தேகமே.

பெனாத்தல் சுரேஷ் நகைச்சுவை தான் பிரதானமென்றாலும், அவ்வப்பொழுது விவாதத்தைக் கிளப்பும் பதிவுகளையும் இட்டு விடுகிறார். அப்படியான சமீபத்திய ஒரு பதிவு தான் இது. புது வருடத்தைக் கொண்டாடுபவர்கள் தான் இது குறித்து கவலை கொள்ள வேண்டும், நேற்றைய கவலைகளுக்காக நொந்து கொள்வது, நாளைய தினத்துக்காக அச்சம் கொள்வது என இன்றைய தினத்தை ரசிப்பதை இழந்து கொண்டிருப்பவர்கள் கூடி விவாதிக்க வேண்டிய ஒரு சமாச்சாரமிது - ஒரு வருடத்தின் முதல் நாள் குறித்த விவாதங்கள். அது போகட்டும் - அவ்வப்பொழுது அவர் எழுதும் நகைச்சுவைகள் - அதுபோலவே நேரிலும் அவரது நகைச்சுவை ததும்பும் பேச்சுகள் பிடிக்கும். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொலைபேசியில் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தும் சாமர்த்தியம் இல்லையென்பதால், பெரும்பாலும் தொலைபேசிகளைத் தவிர்த்து விடுகிறேன் - வாய்ப்புகள் கிடைத்தால் சந்திக்கலாம் நண்பரே.

லொடுக்கு கிரிக்கெட் பற்றி எழுதும் பொழுது கட்டாயம் வந்து பின்னூட்டமிட்டுச் செல்வார். அவருடைய ஆர்வம் கிரிக்கெட் நுணுக்கம் சார்ந்தது. என்னுடையது கிரிக்கெட்டின் அரசியல் பற்றியது. சென்னை ரசிகர்கள் பற்றி அவர் எழுதியது நிஜமாகவே நம்மைப் பெருமையடைய வைக்கும். என்றாலும் லொடுக்கு என்ற பெயர் ஏன்? அவரிடம் நான் கேட்கவில்லை. அவராக சொன்னால் சொல்லட்டுமே!
மேலும் வாசிக்க...

Sunday, January 27, 2008

ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்.....

ஒரு தீவில் தனித்து விடப்படும் தனிமை கிடைத்தால் அதை எவ்வாறு கொண்டாடுவாய் என்று ஒரு கேள்வி கேட்கப்படுமென்றால், 'வாசித்து' கொண்டாடுவேன் என்று தான் சொல்வேன். வாசிப்பு என்பது அத்தனை வசீகரமானது. எதை வாசிக்கிறோம் என்பது வேறுபடலாம். ஆனால் வாசித்தல் தரும் இன்பம் அனைவருக்கும் பொதுவானவை. வெறுமனே வாசித்தல் என்பது ஒரு வகை என்றால், வாசிப்பைத் தந்தவர்களைப் பற்றிய அறிமுகங்களைத் தரும் வாசிப்பும் மிக அலாதியானது. சுவராஸ்யமானது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களையும் தீர்மானிக்கக் கூட, இந்த இலக்கியச் சண்டைகள் ஒருவகையில் உதவலாம்.

பல காலங்களாக, அரசியல் வாசிப்பில் திளைத்திருந்த பொழுதும், அவ்வப்பொழுது இலக்கியங்கள் பக்கமும் திரும்பும். சமீபத்தில், இலக்கியமும் அரசியலும் கலந்த ஒரு வாசிப்பைத் தேடிய பொழுது சிக்கியது தான் இந்த இலக்கியச் சண்டைகள் பற்றிய பதிவுகள். இந்த அரசியல் வழியாக அறியக் கிடைப்பது - ஒருவருக்கு மறுபக்கம் என்று ஒன்றும் உண்டு. ஒரு வழியாகவே பயணப்படும் நமது பார்வைகளை அந்த படைப்பாளியின் மறுபக்கத்தையும், அதன் போலித் தனங்களையும் சுட்டிக் காட்டும் பொழுது, இலக்கியம் படைப்பவர்கள் எப்படி அவர்களது படைப்பிற்கு எதிராகவும் இருக்கிறார்கள் - இயங்குகிறார்கள் என்ற புரிதலையும் தருகிறது. அது மட்டுமல்ல, ஒரு படைப்பின் நோக்கம், அதற்கான உன்னதம் - சொல்லப்பட்டவற்றிலிருந்தும் மாறுபாடும் கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இலக்கியம் வாயிலாக தாங்கள் முன்வைக்கும் பார்வைகளின் பின்னால், உள்ளார்ந்த அர்த்தத்துடன், அவர்கள் பதிவு செய்யும் சுயவிருப்பு வெறுப்புகளையும் வெளிக்கொண்டு வருகிறது இந்த இலக்கிய சச்சரவுகள். அந்த வகையில், இலக்கியம் படிப்பதானால் கிடைக்கும் பார்வைகளைப் போன்றே, இலக்கியம் படைப்பவர்கள் நம்மிடையே இருந்து மறைக்க விரும்பும் பார்வைகள் வழியாகவும் நிறைய அறிந்து கொள்கிறோம். வாசிப்பு இன்பத்திற்காக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தாலும், அந்த எழுத்துகளில் முற்றிலுமாக மயங்கி விடாமல், நம்மை மீட்டுக் கொள்ளவும், இந்த மறுபார்வைகள், விமர்சனங்கள் நம்மைத் தயார் செய்து வைக்கின்றன. இந்த வகையில், இலக்கிய அரசியலும் சுவராசியமானது. அந்த அரசியல் பற்றிய ஒரு பதிவு Dispassionated DJவில்...

இலக்கிய அரசியல் பேச ஆரம்பித்தால், அதில் பீடங்களில் எழுந்தருளும் ஆளுமைகளைக் கண்டு கொள்ளாமல் போக முடியாது. சமீப காலங்களில் தமிழகத்தில், இலக்கிய பீடமொன்று அமைக்கப்பட்டு வருகிறது - அதில் ஏற்றி வைக்கப்படாத பாடு படுகிறார்கள் - சுரா என்ற மனிதரை. இது குறித்த நகைச்சுவை கலந்த பதிவு ஒன்றைப் படியுங்கள், சுகுணா திவாகர் எழுதிய இந்தப் பதிவில்... எப்பொழுதுமே, ஒரு மனிதனை, அவனது தகுதிக்கும் மீறிய ஒரு புனித பிம்பமாக அறிவிக்கப்படாத கடவுளாக மாற்ற முனையும் பொழுது தான், அந்த ஆளுமையின் மறுபக்கம் குறித்தும் செய்திகள் வருகின்றன. அந்த எழுத்தாளர்களை அப்படியே விட்டுவிட்டால் கூட, அவர்கள் தங்கள் சொந்த எழுத்துகளின் பலத்தால், ஒரு காலத்தில் நிஜமாகவே எழுந்து நின்று விடக் கூடும் தான். ஆனால், பாவம், இவர்கள் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த முனையும் பொழுது தான், முட்டுக் கம்பை எவராவது பறித்து விடுகின்றனர். பின் என்ன, வெறுமனே ஒரு வடிவத்தைத் தாங்கி நின்று செயலிழந்து கிடப்பதை விட, ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு தனது ஆடுகளிடையே ஒர் கட்டுப்பாட்டை உருவாக்கப் பயன்படுமென்றால், அதல்லவா, முக்கியமான பயன்பாடு அந்த முட்டுக் கம்பிற்கு!

இலக்கியச் சண்டைகள், சில சமயம் இலக்கிய வட்டத்தையும் தாண்டிப் போய்விடும். வேறு எல்லைகளுக்குள்ளும் நுழைந்து, விமர்சகர், விமர்சிக்கப்பட்டவர் என்ற இருவரையும் பற்றிய பல பரிமாணங்களையும் எடுத்து வைக்கும். அதுவே, போதுமானதாக இருக்கும் - அந்த இருவரைப் பற்றியும் அறியவும். மிக கவனமாக, ஒரு ஆளுமையைத் தனக்காகக் கட்டிக் காத்து வருகையிலே, தன்னையுமறியாமல எங்காவது ஓரிடத்தில், தன் அடையாளத்தை வெளிப்படுத்தி விடக்கூடும் இந்த சச்சரவுகள். பின் தான் கட்டியெழுப்பிய கடந்த கால பிம்பங்களைத் தூக்கிக் காட்டி என்னையா இப்படி சொல்கிறீர்கள் என்பது தொட்டு, தான் விமர்சித்தவர், எப்படிப்பட்டவர் பார் - அவர் செயல்பாடுகள் எத்தனை தவறானவை என்பது வரை பேச ஆரம்பித்து விடுவோம். ஆனால், விமர்சனத்திற்குட்படுத்தப்பட்ட ஒரு செயலை மறந்து விட்டு, அந்த செயலின் உரிமையாளரின் பிற செயல்களின் நியாய அநியாயங்கள் முன்னுக்கு வந்து விடும். என்றாலும், பெரும்பாலானவர்கள் ஒரு நிலை எடுக்க, அதற்கு முற்றிலும் மாறான ஒரு நிலை எடுத்து, அங்கிருந்து தன் நியாய வாதங்களை பதட்டமின்றி, அடுத்தவர் மீதான குற்றச்சாட்டாக இல்லாமல், ஒரு சிறந்த விளக்கமாக முன் வைக்கும் இந்த சற்று காலம் முன்னே நடந்தேறிய கலைஞர் - ஞாநி சண்டை பற்றிய இந்தப் பதிவைப் படியுங்கள். செல்வநாயகியின் இலக்கிய வாதிகள் குறித்த அரசியல் என்ற வகையில் தான் இந்த சுட்டி. செல்வநாயகியின் இந்தச் சுட்டி சிறப்பான எழுத்துகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டவில்லை. ஞாநி - கலைஞருக்கு மட்டுமே அறிவுரை கூறினார். அவர் தன் அறிவுரையை இன்னும் ஓர் பரந்த தளத்தில் வாஜ்பேய், அத்வானி, பால் தாக்கரே, தொடரும் மரபான வயது கடந்த இந்திய முதல் குடிமகன்கள், என்று இந்தியாவில் அதிகார மேடையேறும் ஆசையுடன் கூடிய அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொதுவான ஒரு அறிவுரையாக அவர் பேசி இருக்க வேண்டும். ஆனால், கலைஞர் ஒருவர் மட்டுமே வயது கடந்த பின்னும் அதிகாரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று ஞாநி எண்ணியதில் தான் அனைவரும் அவரது சட்டைக்குள் நெளியும் பூணூலைக் கண்டு கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். வெறுமனே சுஜாதாவைச் சாடியதால், அவர் சமயச் சார்பற்றவர் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான நேசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், இப்படி எழுதினார், அப்படி எழுதினார் என்பதில் வாழ்க்கை இல்லை. வாழ்வதில் தான் வாழ்க்கை இருக்கிறது. வாழும் பொழுது பேசும் பேச்சுக்கும், பிறரைப் பிரமிக்க வைக்க - தனது புலமையை பிறருக்குக் காட்சிப்படுத்த, எழுத்து தரும் போதை என்று ஒருவர் எழுதுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும். பெரும் இலக்கியகர்த்தாக்களில் பலர் தங்கள் எழுத்துகளை எங்கோ ஒரு தளத்தில் வைத்து விட்டு, அதற்கு முற்றிலும் மாறான வாழ்க்கையில் இயங்கத் தான் செய்கின்றனர். ஒருவர் பிரமாதமாக எழுதி விட்டதினாலே, அவர் அப்படியாக்கும் என்று முடிவு கட்டி விட வேண்டியதில்லை.

இந்த இலக்கிய சச்சரவுகள் எல்லாம் ஒரு சிறுதுளியாக ஒரு அறிமுகம் மாத்திரமே - ஒரு மனிதனை விளங்கிக்கொள்வது அவனது இலக்கியத்தில் பாதியைப் புரிந்து கொள்வதாகும். அடுத்த முறை, ஒரு புத்தகம் வாங்கும் பொழுது, அதன் ஆசிரியனையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு வாங்குங்கள். அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள, கொஞ்சம் கவனமாகப் பாருங்கள் - நிறைய இலக்கிய சண்டைகள் நடக்கின்றன. தெரியவரும்.

தயவு செய்து முதுகு சொறியும் அறிமுகங்களை விட்டு விலகி நின்று கவனியுங்கள்.
மேலும் வாசிக்க...

Friday, January 25, 2008

ஆழ மேயுங்கள்


ஆழ மேயுங்கள்:


எழுத வேண்டுமென்ற ஆர்வமும், முனைப்பும் ஒருவனிடத்தில் தோன்றிவிட்டால், உடன் என்ன செய்கிறார்கள்? கவிதை எழுதுகிறார்கள். கதை எழுதுகிறார்கள். உலக இலக்கியவாதிகளைப் படித்து கொண்டாடுகிறார்கள். சிலாகிக்கிறார்கள். நம் இலக்கியங்கள் எல்லாம் உலகத் தரமானதுதானா என்ற விவாதம் நடத்துகிறார்கள்.

வெகு சிலர் மாத்திரமே, தங்கள் எழுத்தின் வன்மை கொண்டு, தன்னைச் சுற்றி நிகழும் செயல்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதுகிறார்கள். அப்படி ஒரு விமர்சனத்தை முன் வைப்பதன் மூலம், தான் ஒருசார்பானவன் என முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சத்தையும் மீறி, எழுதுகிறார்கள். மொழி என்பது அவர்களது பயன்பாட்டினால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தன்னைச் சுற்றிய சூழலைக் குறித்து அக்கறையற்ற புனனவுகளால் என்றும் ஒரு மொழி வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்க முடியாது.

இத்தகைய மொழி அறிவைத் தங்கள் சமூக அக்கறை மிகும் எழுத்துகளுக்காக அர்ப்பணிக்கும் சில எழுத்துகளைப் பற்றியும் சொல்லி விடலாம். இவர்கள் குறித்து எனக்கு மிக்க மதிப்புண்டு - சமூக அக்கறையும் அதன் விளைவாக எழும் சிந்தனையையும் எழுத்தில் எழுதி வைக்க அசாத்திய துணிவு வேண்டும். எந்த இலக்குமற்ற ஊர்ப்புறணிகளுக்கு கிடைக்கும் வாசிப்பு அளவிற்கு, இந்த பதிவுகளில் வாசகர்கள் வந்து குவிவதில்லை தான். எல்லோரிடத்திலும் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்று 'பரந்த மனம் உடையவராக' வேஷமிடும் பலரும் இந்த எழுத்துகளிலிருந்து ஒதுங்கியே இருக்கின்றனர் என்பதும் வெளிப்படை. ஆனால், இதையெல்லாவற்றையும் மீறி, இந்த எழுத்துகள் வாழ்ந்திருக்கும் - வாசிக்கப்படும்.

அத்தகைய எழுத்துகளை எழுதிக் கொண்டிருக்கும் சில நண்பர்களைப் பற்றி:

பெண்களின் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் குறித்து எப்பொழுதும் என்னுள்ளே ஒரு தீராத கோபம் உண்டு. ஒரு சமூகமாக ஒரு கூட்டம் கூடி, ஒரு பெண்ணின் மீது வன்முறை நிகழ்த்துவது அநாகரீகம் என்றால், ஒரு அரசே முன்னின்று ஒரு சமூகத்தின் மீது கொடுமை நிகழ்த்த துணை புரிந்த ஒரு செயலைக் கண்டித்து எழுதப்பட்ட அசுரனின் பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று? என்ற இந்தப் பதிவைப் படித்தால் தெரியும், நான் சொல்லும் எழுத்தின் பயன்பாடு என்னவென்று. எது தண்டனை என்ற இந்தப் பதிவின் அலசல், நீதியின் ஒரு புதிய பரிமாணத்தை முன் வைக்கிறது. சிறைத் தண்டனை என்பது வர்க்கத்தினால் தீர்மானிக்கப்படுகிறது - அது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் அதிக தண்டனை தருகிறது என்பது நமது நீதி வழங்கும் முறை சரிதானா என்ற புதிய கேள்வியையும் முன் வைக்கிறது. சார்புத் தன்மைகளைத் தாண்டிய ஒரு பார்வையுடையவராகவும், அது குறித்த அக்கறையுள்ளவர்களாகவும் ஒருவர் இருப்பாரென்றால், இந்தப் பதிவைப் படித்து ஒரு வார்த்தையாவது பாராட்டி எழுதியே தீர வேண்டும்.

தன் இனம் அடிபட்டுத் துடிக்கையில் ஆறுதலாக ஒரு கவிதையை எழுதுவது கூட, இறையாண்மைக்குத் துரோகம் என்று பாடம் சொல்லும் நிலத்திலிருந்து பிழைக்கும் ஊடகத்துறையின் கள்ள மௌனத்தைச் சாடும் திரு வின் இந்தப் பதிவு, ஊடகத்துறையின் சில பெரிய பெயர்களின் போலித் தனத்தைச் சுட்டிக் காட்டுகிறது. பத்திரிக்கையாளர் மாலனுக்கு.... என்ற பதிவில் திரு சொல்லியிருக்கும் செய்திகள், எப்படி இந்திய இறையாண்மை என்ற பெயரில், பத்திரிக்கை ஊடகங்கள், சில விருதுதுண்டுகளுக்காக, தன் சொந்த இனத்தை அழிப்பையே வேடிக்கைப் பார்க்கிறது என்பதை வாசிக்க முடியலாம். யாராவது, எழுதக் கூடும், எப்படி, தமிழினம் மாலனுக்கும், ராமிற்கும் சொந்த இனமாக முடியும் என்று எழுதக் கூடும். உண்மை தான். தமிழினம் அவர்களது சொந்த இனமில்லை என்றிருக்கட்டும். ஆனால், அதற்காக, மனசாட்சியின் படி கூடவா செயல்படக்கூடாது?

சில மேலாண்மை மிக்க அரசியல் விளக்கவுரையாளர்கள், தேசபக்தியை ஏகபோகத்துக்கும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட சில அறிவுமிக்க இனங்களின் இறையாண்மைகளால் அவ்வப்பொழுது கொட்டப்படுபவர்களாக நாம் அமைந்து விட்டது மற்றொரு துரதிர்ஷ்டம். இலக்கியப் பாத்திரங்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நன்மை விளைவிக்கும் நலதிட்டங்கள் முடக்கிப் போடுவதை கண்டித்து மக்கள் போராட்டங்கள் நடத்தினால், அதற்காக அந்த மக்கள் தேர்ந்தெடுந்த அரசு கொட்டப்படும். இந்த மண்ணில் அவர்களுக்குள்ள உரிமையை மறுத்து மற்ற மாநிலங்கள் தங்கள் கதவுகளைச் சார்த்திக் கொள்ளும் பொழுது மௌனம் காக்கும். இந்த வகையைச் சார்ந்து சமீபத்தில் நடந்தது தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை. பெயர் என்னவோ பிராணிவதை தடுத்தல். வதைத்தல் நிகழ்கிறதா இல்லையா என்பதை முழுமையாக அறியாமலே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது வழங்கப்பட்ட தீர்ப்பு தான் ஜல்லிக்கட்டிற்குத் தடை. இறுதியாக, தீர்ப்பிற்கு கிளம்பிய எதிர்ப்பும், தனது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து, மறுபரிசீலனையைக் கோரிய அரசு, மக்களின் தொடர் உண்ணாவிரதங்கள், கறுப்புக் கொடி, தடை மீறி, ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்ற உறுதி, அத்துடன் சில தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வம், முயற்சி, இவற்றினாலெல்லாம் இறையாண்மிடருந்து மீண்டது ஜல்லிக்கட்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கலாச்சார செயல்பாடுகளுக்கு முழுபாதுகாப்பு என்பதிலிருந்து எத்தனை எளிதாக, இல்லாத வதைத்தலின் பின்பு சென்று நீதி ஒளிந்து கொண்டது? வருத்தமாக இருக்கிறது - சில இனங்கள் மட்டும் தங்களுக்கென்ற அடையாளங்களைப் போராடியே மீட்க வேண்டுமென்ற நிலைமை இருப்பது. ஜல்லிக்கட்டு தடையைப் பற்றிய தகவல்களை பிரபு ராஜதுரையின் மணற்கேணி,
தளத்தில் இருக்கிறது. ஒரு வழக்கைப் பற்றி எழுதும் பொழுது எப்பொழுதுமே ஒரு சுவராசியம் வந்து ஒட்டிக்கொள்ளும். இங்கும் அப்படித்தான். அத்துடன், சல்லிக்கட்டின் உண்மைப்பொருளும் வெளிப்படும் வகையில் எழுதி இருக்கிறார். ஒரு தனிமனிதனின் சுய விருப்பு தவிர்த்து நீதிபதிகள் நடந்து கொள்வது எத்தனை முக்கியமானது என்பதையும் புரிய வைக்கிறது இந்த பதிவு.

இறையாண்மையைப் பற்றிப் பேசும்பொழுது, தேசபக்தியும் உடன் வந்துவிடுகிறது. தேசபக்தி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என சிலர் உரிமை கொண்டாடுவதும், மற்றவர்கள் எல்லாம் அதை நிரூபணம் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்று நிர்ப்பந்திப்பதுவும், சில அரசியல் தலைமைகளுக்கு ஒரு ஆயுதமாகவே இருக்கிறது. அதிலும் தோல்வியடைந்து, ஆட்சிக் கட்டிலில் அமர வழியில்லை என்றதும், உடன் கையில் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் = இங்கு எவருக்கும் தேசபக்தியில்லை என்று கூட்டத்திற்கு கூட்டம் முழங்கித் திரும்புவது தான். இவற்றை நிராகரித்து, தங்கள் இனத்தின் மீதான அக்கறை குறித்துப் பேசுவது எவ்வகையிலும் கருத்துரிமையை மீறுவதில்லையென தொல்.திருமாவளவன் அளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள உரிமைகளை வலியுறுத்தவே கருத்துரிமை மீட்பு மாநாடு: தொல். திருமாவளவன் பேட்டியைப் படித்துப் பாருங்கள்.

இனம் என்ற ஒரு பெரிய வட்டத்தினுள் அடைக்கப்பட்டு, மறக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி பேச பலர் இருந்தாலும், அவர்களாஇப் பற்றிய அறிமுகங்கள் வெளி உலகிற்கு வெகு சொற்பமாகவே கிடைக்கின்றன. சில அரசியல் தலைவர்கள், தங்கள் பொதுவாழ்க்கையின் மேற்பூச்சுக்காக ஒடுக்கப்பட்ட மக்களிடம் தங்களுக்குப் பரிவு இருப்பதாகக் காட்ட முயற்சிப்பதுவும், பரபரப்பு செய்திகள் கிடைத்தால் மட்டுமே அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவோம் என்று அடம் பிடிக்கும் வெகு ஜன ஊடகங்களுக்கிடையில், வலைப்பூக்களில் சிலர் முனைப்புடன், தலித் இன அரசியல் எழுச்சி குறித்து எழுதி வருவது பாராட்டுக்குரியது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பேட்டி, ஒரு புதிய தகுதியை வலைப்பூக்களுக்குத் தருகிறது. வலைப்பூக்கள் என்றாலே, பொழுது போக்க எழுதும் இடம் என்ற தளத்திலிருந்து, இன்று அது தீவிரமான சிந்தனைகளையும் முன்வைக்கும் இடமாக மலரும் என்ற நம்பிக்கையைத் தரும் பதிவு இது. ஓசைசெல்லாவின் இந்தப் பதிவும், ஒலி மூலமாக அவர் வழங்கிய பேட்டியும், மீதி தொடர்ச்சியாக தமிழ்வெளித் திரட்டியிலும் காணக்கிடைக்கிறது. அனைவரும் படிக்க, கேட்க வேண்டிய ஒரு பேட்டி. ஓசை செல்லாவின் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் பேட்டியைக் கேட்பதற்கு. (தலைப்பு ரொம்ப நீளம்...) மீதி தமிழ்வெளியில் (தமிழ்வெளி திரட்டியாக இருந்தாலும், தொடர்ச்சியாக இருப்பதனால், அதன் சுட்டியும் கொடுத்திருக்கிறேன்...)

தலித் பற்றிப்பேசும் பொழுதே, இட ஒதுக்கீடு அரசியலும் கவனத்திற்கு வந்து விடுகிறது. தருமி எழுதிய இந்தப் பதிவில் இன்னமும், தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை எந்த விதத்திலும் குறையவில்லை என்பதையும், இட ஒதுக்கீடைக் கண்டு புலம்புபவர்கள், இடஒதுக்கீடை என்றாவது ஒரு நாள் விலக்கிக் கொள்ள உதவும் உரிமைகளை தலித் மக்களுக்கு ஒரு துளியைக் கூட, சமூக தளத்தில் கொடுக்க முன்வரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இடஒதுக்கீடு என்பது நிறுத்தப்படவே இயலாத ஒரு அங்கமாக மாறிவிட்டிருக்கிறது நமது சமுதாயத்தில். சமூக அந்தஸ்து சமமாக அனைவரிடமும் ஒன்றென கலந்து மதிப்பும் மரியாதையும் மிகுந்ததாக மனித இனம் மதிக்கப்பட போகிறதோ அன்று தான் இடஒதுக்கீட்டையும் மறு பரீசீலனைக்கு உட்படுத்தும் காலம் வரும் என்ற நிதர்சனத்தையும் எடுத்து வைக்கிறது.


சமூக அக்கறை என்பது எத்தனையோ தளங்களில் இயங்கினாலும், சமூக நீதி என்ற தளத்தில் தான் இன்னமும் ஒவ்வொரு அங்குலத்தையும் போராடிப் பெற வேண்டிய நிலையில் உள்ளது என்பதனால், அவற்றைப் பற்றிப் பேசும் சில கட்டுரைகளை எழுதிய வலைப்பூக்களை இங்கு குறிப்பிட்டு எழுதியுள்ளேன். இன்னும் நிறைய இருக்கலாம். ஆனால், மிக சமீபத்தில் எழுதப்பட்டவை இவை என்பதனால், இந்த கட்டுரைகள். மேலும் நாளை குடியரசு தினமும் கூட. ஆனால், எல்லோருக்கும் இன்னமும் குடியரசின் பலன்கள் போய்ச் சேராத நிலையில், இவை குறித்து இன்னமும் வலுவாகப் பேசப்பட வேண்டும். பேசியாக வேண்டும்.

கதை, கவிதை, இலக்கியம் எல்லாம் குடியரசின் பலன் மக்களிடத்தில் பெருமளவில் போய்ச் சேரும் பொழுது தான் பலன் அளிக்கும். அல்லது அவ்வாறு சேர்ப்பிப்பதற்கான ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டும். அது தான் எழுத கற்றதன் பயன். இல்லையென்றால், நுனிப்புல் மேய்ந்து விட்டு, பெரிதாக எழுதி கிழித்து விட்டேன் என்று நம்மை நாமே முதுகில் வருடிக் கொண்டு அடுத்தவர்களிடத்தில் அங்கலாய்த்து அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கலான்.

எழுத்து என்பது சிந்தனையின் வெளிப்பாடு. சிந்தனையற்றவர்கள் எழுதுவதை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த நேரத்தில் துயில் கொள்ளலாம். ஆரோக்யத்திற்கு நல்லது.
மேலும் வாசிக்க...

Tuesday, January 22, 2008

திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல்....

வாசித்தல் என்ற ஒற்றைப் பரிமாண அனுபவத்தைப் புத்தகங்கள் தருகிறனவென்றால், பார்த்தல், கேட்டல் வழியே பன்முக அனுபவத்தை திரைப்படங்கள் தருகின்றன.

திரைப்படம் கலை வடிவம், வர்த்தக வடிவம் என்ற இரு மாறுபட்ட வடிவங்களில் இன்று நம்மிடையே உலவி வருகிறது. வர்த்தக வடிவத்தில், 'fantasy' என்ற கற்பனைகளே மிகுந்து, இன்று சலிப்பூட்டும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கலை வடிவமான திரைப்படங்களே, வாழ்வைப் பற்றிய அலசுதல்களை செய்து கொண்டிருக்கிறது. மிகக் குறைந்த மொழியின் பங்களிப்புடன், ஒரு மனிதனின் சூழலில், அவனது உடல் மொழி, உடைகள், அவன் வாழும் நிலத்தின் தன்மை இவையனைத்தையும் ஒருசேர அலசுகிறது. ஒரு நல்ல திரைப்படத்தை மொழி மாற்றம் செய்ய இயலாது. ஏனென்றால், மொழி பெரும்பாலும் நிலத்தின் இயல்பைப் பெற்றிருப்பது தான். ஒரு நல்ல கலைப்படத்தைப் பார்க்க வேண்டுமென்றால், அதன் படைப்பாளியின் மொழியிலே தான் பார்க்க வேண்டும். மொழி இயங்கும் நிலம், சுற்றுப்புறங்கள், இவையனைத்தையும் உள்ளடக்கியே ஒரு கலை வடிவம் எழ வேண்டும்.

அவ்வாறானால், நல்ல கலை வடிவங்களைப் பார்க்க அதன் மூல மொழியில் பார்ப்பது தான் உத்தமம். இத்தகைய படங்களைத் தேடியலைபவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் இன்றி, எப்பொழுதும் நல்ல படைப்புகளை அடைந்து விட முடியாது. என்றாவது ஒரு சிறந்த கலைப்படைப்பு கைகளில் சிக்கக் கூடும். பல நேரங்களில், பெயர்களின் பிரபலத் தன்மையைக் கணக்கில் கொண்டு, பார்த்து விட்டு பின்னர் வருத்தப்படக் கூடும் - ஏமாந்து விட்டோமே என்று. நல்ல கலைப்படங்களைப் பார்க்க, அல்லது வாழ்வைத் தத்ரூபமாக நிர்மாணித்துப் பார்வைக்குப் படங்களைப் பற்றி வலைப்பூக்கள் எழுதுகின்றனவா?

முழுவதுமாக திரைப்படங்களுக்கு மட்டுமென அர்ப்பணிக்கப்பட்ட திரைப்பட வலைப்பூக்கள் இரண்டு மட்டுமே கண்ணில் தட்டுப்பட்டது. ஒன்று - மதி கந்தசாமியின் திரைப்பார்வை. மற்றது மாற்றுத் தடங்கள். மாற்றுத் தடங்களில் மொத்தமே ஏழு அல்லது எட்டு படங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், மலைப்பூட்டும் அளவிற்கு எழுதி இருக்கிறார், மதி கந்தசாமி. வலைப்பூ நண்பர்களுக்கு நல்ல திரைப்பட வழிகாட்டியாக அவரது வலைப்பூவைத் தான் பரிந்துரைக்கிறேன். மாற்றுத்தடங்களிலும் நல்ல படைப்புகள் வரும் - நிதானமாக.

ஒரு நல்ல பரிந்துரை எப்படி இருக்க வேண்டும்? கதையின் முடிச்சுகளை அவிழ்த்துப் போடாமல், பார்க்கும் ஆவலைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். திரைப்பார்வைகளில் முழு கதையையும் உட்கார்ந்து எழுதி கொண்டு இருக்கத் தேவையில்லை. ஆனால், அந்த திரைப்படம் எந்த பிரச்சினையைப் பற்றிப் அலசுகிறது?எந்த வகையில் அலசுகிறது? என்பதைப் பற்றி எழுதுவதே - சிறப்பாக இருக்கும். சில படங்களை அனைவரும் பார்க்க வழியே இல்லாத பொழுது, விரிவாக அதன் திரைக்கதையைக் குறிப்பிடலாம்.

மதி கந்தசாமியின் திரைப்பார்வையில் நிறையத் திரைப்படங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். 1966 தொடங்கி இன்றைய தேதி வரையிலுமென பல திரைப்படங்கள். மலைப்பாக இருக்கிறது. திரைப் படங்களைப் பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் திரைப்பார்வை என்ற அந்தத் தளத்தில் கிடைக்கும் நேரத்தைச் செலவிடலாம். சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனக்கு. அவரது பார்வையில் Who is afraid of Virginia Wolf 1966 என்ற திரைப்படம் உங்களுக்காக.

இந்தப் பார்வையின் சிறப்பம்சம் எனச் சொல்ல வேண்டுமானால், படத்தைப் பார்வைகளுடனே, அந்தப் படத்தில் பங்கேற்றவர்களைப் பற்றிய பிற தகவல்கள், மற்ற படங்களுடன் ஒப்பீடு என விரிந்து செல்லும் பார்வையில், பல தகவல்களைப் பெறுகிறோம். 50/ 60களில் இளமைப்பருவத்தைக் கழித்தவர்களுக்குத் தெரியும் - டெய்லர் என்ற நடிகையைப் பற்றி என்று எழுதிய மதியிடம் கேட்கத் தோன்றுகிறது - உங்களுக்கு என்ன வயது என்று! கொஞ்சமாவது, அரசல் புரசலாக ஒரு தகவல் இருந்தால் மட்டும் தான் அது குறித்த தகவல்களைச் சேகரித்து, சுவையாக எழுத முடியும்.

மாற்றுத்தடங்களில் நான் எழுதிய ஒரு திரைப்பார்வையைப் பற்றி At Five in the afternoon
படியுங்கள் - At five in the afternoon என்ற திரைப்படத்தின் மூலம், ஆஃப்கன் மக்களின் வாழ்க்கை அவலங்கள், அதனிடையே அவர்களிடம் கிளர்ந்தெழும் புதிய வாழ்க்கையைப் பற்றிய ஆர்வங்கள் என்று சிறப்பாக இயக்கப்பட்ட திரைப்படம். விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறது.

திரைப்படங்களுக்கென எழுதப்பட்ட இந்த இரண்டு தளங்களை விட்டு விட்டு, தங்கள் பதிவுகளில் அவ்வப்பொழுது திரைப்படங்களைப் பற்றி சிறப்பாக எழுதுபவர்களும் இருக்கின்றார்கள். அய்யனாரின், தனிமையின் இசை தளத்தில் சமீபத்தில் அவர் எழுதிய Volver aka Coming back என்ற திரைப்படப் பற்றி படித்துப் பாருங்கள். மேலும் சில நல்ல திரைப்படங்கள் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார். HOUSE OF SAND AND FOG (2003), Citta` delle donne, La (1980) aka The City of Women, tare zameen par, The Brief Encounter என்பது போன்று. 22 திரைப்படங்கள் என்று அவரது சேமிப்புக் கணக்கு சொல்கிறது. அவசரமற்ற வாசிப்புக்குகந்தது அவரது மொழி நடை. படம் பார்க்கத் தோன்றுகிறதோ, இல்லையோ, அந்த மொழி நடைக்காகாவது படிக்கலாம்.

செப்புப்பட்டயம் வலைப்பூவில் பல நல்ல படங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம் - அவற்றுள் சில - Blackboard, Blackboard Baran, Marooned in Iraq, 8 mile, y las visitadoras என களஞ்சியமே இருக்கிறது.

நடை வழிக் குறிப்புகள் தளத்தில் ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனம் கூட இருக்கிறது. உப்பு என்ற திரைப்படம். இது வரையிலும் தமிழ்த் திரைப்படங்கள் கலைப்பட வரிசையில் இடம் பெற்றது மிக அபூர்வம். துரை இயக்கிய 'பசி' பாலுமகேந்திராவின் 'வீடு,சந்தியாராகம்' மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' 'உதிரிப்பூக்கள்' என வெகுசில படங்களையே சொல்ல இயலும். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, குறிப்பிடப்படும்படியாக ஒரு தமிழ்ப்படம்!

டுபுக்கு வலைத்தளத்தில் Memoirs of a Geisha என்ற விமர்சனமும் ஒரு நல்ல திரைப்படத்தை அறிமுகப்படுத்துகிறது.

நிழல்கள் தளத்தில் ஹரன்பிரசன்னாவின் இந்தப் பார்வையையும் படியுங்கள். களியாட்டம் திரைப்படத்தைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நல்ல படங்கள் என்று குறிப்பிடும் பொழுது, மலையாளப் பட உலகை தவிர்க்கவே முடியாது. மம்முட்டியின், 'மதிலுகள்' இன்றளவும் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கும் ஒரு படம். ஒரு பெண்ணை சிநேகிப்பதற்கு அவளது குரல் மட்டுமே போதும் என்ற திரைக்கதையை வைத்துக் கொண்டு, வைக்கம் பஷீரின் எழுத்துகளைப் படமாக்கி இருப்பார்கள் அற்புதமாக. தமிழ் திரைப்படைப்பாளிகள் வேண்டுமானால், சொல்லிக் கொள்ளலாம் - இதெல்லாம் நாங்கள் புதிதாக முயற்சிக்கிறோமென்று. (மதிலுகள் பற்றி யாராவது எழுதி இருக்கிறார்களா?) ஹரன் பிரசன்னா, கிட்டத்தட்ட 24 திரைப்பார்வைகள் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வாசித்த மற்றொரு தளம் நிர்மலாவின் ஒலிக்கும் கணங்களில் சில நல்ல இந்தியத் திரைப்படங்களைப் பற்றிய செய்திகள் இருக்கின்றன. paroma என்ற திரைப்படத்தைப் பற்றி எழுதத் தொடங்கும் பொழுதே ஒரு நல்ல திரைப்படம் எவ்வாறு தன்னுள் பார்வையாளானை இழுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பேசிவிட்டு தொடர்கிறார். அபர்ணா சென்னின் படம். (Mr&Mrs.Iyer செய்தவர் தானே?) The Nameshake
Parzania, Babel என விரியும் இந்தப் பதிவையும் பார்த்து விடுங்கள். நேரம் கிடைத்தால் இன்னும் சற்று விரிவாகவே பாருங்கள் - நிறையப் படங்கள் இருக்கின்றன.

முழுநேர திரைப்படங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் வேளையில், சப்தமின்றி, புரட்சி செய்து கொண்டிருக்கும் குறும்படங்களைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். இன்னமும் குறும்படங்கள் போதுமான அங்கீகாரம் பெற்றிருக்கவில்லையென்றாலும், குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. அவற்றைக் குறித்த புரிதல்களையும் உண்டாக்க வேண்டியதும், அவற்றைப் பற்றிய அறிமுகத்தைப் பரவலாக அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டியதும் திரைப்படங்களை ஒரு கலைவடிவமாக நேசிப்பவர்களது கடமையாகும். சமீபத்தில், துபாயில் நண்பர் இசாக்கின் குறும்பட திரையிடும் விழாவில் நான் எழுதி வாசித்த இன்றைய சூழலில் குறும்படங்களின் தேவை கட்டுரையையும் வாசியுங்கள். சில பார்த்து ரசித்த குறும்படங்களைப் பற்றிய ஒரு பார்வை படம் காட்டுதல் அல்லது பயமுறுத்துதல் என்ற தளத்தில் கிடைக்கிறது நமக்கு..

மேலும் இலங்கைத் திரைப்படங்களைப் பற்றியும், குறும்படங்களைப் பற்றியும் ஒரு அலசல்
Dispassionaed DJ வில் இருக்கிறது.

இன்னுமின்னுமென்று தேடிக் கொண்டிருந்தால், கிடைத்துக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது, திரைப்படங்களைப் பற்றிய பார்வை. நல்ல திரைப்படங்களைப் பார்ப்பவர்கள், ரசிப்பவர்கள் நிறையவே இருக்கின்றனர். ஆனால், 99 சதவிகிதத்தினர் நல்ல படங்கள் என்று எழுதியவை அனைத்தும் வேற்று மொழிப் படங்களே. என்று நம் தமிழிலும் நல்ல படங்கள் வரக்கூடிய முயற்சிகளைத் தொடங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இங்கு முடித்துக் கொள்கிறேன்.

நல்ல படங்களைப் பற்றி எழுதும் மேலும் நல்ல நண்பர்கள் இருந்தால், சுட்டி கொடுங்கள் - வசதியாக இருக்கும்.


நண்பன்.
மேலும் வாசிக்க...

Monday, January 21, 2008

பெண் வலைப்பதிவர்களின் பார்வையில்.... பெண்மொழி.


பெண்மொழி – பெண் வலைப்பதிவர்களின் பார்வையில்….


கடந்து மறைந்து போன முற்காலங்களை விட, இன்றைய நாட்களில் பெண்ணியம் அதிகம் பேசப்படுவதாக உணர்கிறேன். அல்லது, முன் சென்ற காலங்களில், எவற்றிலும் ஈடுபடுத்திக் கொள்ளாத தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்ததால், பெண்ணியம் என்ற தனித்த வடிவம் குறித்து கவனம் கொள்ளாதிருந்திருக்கலாம். எப்பொழுதுமே, ஆண், பெண் என்ற தனிப்பிரிவாக எந்த ஒரு படைப்பையும் அணுகாமல், ஒட்டுமொத்தமாக நல்லதா, கெட்டதா என்ற வகைப்படுத்தலின் உள்ளே அனைவரையும் அடக்க முயற்சித்ததனால் இருக்கலாம். எப்பொழுதுமே, எல்லா தளங்களிலுமே, சிலர் மற்றவர்களை விட கூடுதலான சமன்பாட்டைக் கேட்கின்றனர். பெண்களின் கோரிக்கைகளும் இப்பொழுது அவ்வாறு தான் எனக்குத் தோன்றுகிறது. சமம் என்ற வார்த்தை தரும் பொருளை விட அதிகமாகவே கோருகிறார்கள் என நினைக்கிறேன். இன்னமும், ஒன்றின் சரி, தவறுகளை மட்டுமே நான் கணக்கிடுகிறேன் – செயலின் கர்த்தா ஆணா, பெண்ணா என பார்ப்பதில்லை. பெண்ணியம் கோருவதை முழுவதுமாக ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல், ஒரு வினையின் தாக்கத்தைப் பற்றி மட்டுமே எனது கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறேன். Rather, I see the value of an action and its implication, not the actors enacting the act.

லீனா மணிமேகலையின் ‘ஒற்றையிலையென’ என்ற கவிதைப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய சுகுமாரன், இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘பத்தாண்டுகளுக்கு முன் எழுதி வெளியான கட்டுரையொன்றில் (பெண் கவிதை மொழி – கணையாழி, ஏப்ரல் 1994) புதிய தமிழ்க்கவிதையில் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகவோ தீவிரமானதாகவோ இல்லை என்ற தொனியில் எழுதியிருந்தேன். பெண் அனுபவங்களில் அர்த்தம் கொண்டதும் அவளது உணர்வுகளில் ஒலி பெற்றதுமான ஒரு கவிதைமொழி உருவாகவில்லை என்ற புகாரையும், உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கட்டுரை வெளிப்படுத்தியது. அந்தக் கருத்தை முன்னிறுத்திய தருணத்தில் ‘பெண்ணெழுத்து’ என்ற கருத்துருவம் தமிழில் வலுப் பெற்றிருக்கவில்லை. வெளியாகியிருந்த ஓரிரு பெண் கவிஞர்களின் தொகுப்புகளும் ஒற்றையான உதாரணங்களாக இருந்தனவே தவிர பொதுக் கருத்தாடலுக்கான விரிவு கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதை இன்று மகிழ்ச்சியோடு உணர முடிகிறது. தமிழ்க் கவிதையில் இப்ப்போது கேட்கும் அசலானதும் தீவிரமானதுமான குரல்களில் சில பெண்களுடையவை. அவற்றுள் பொருட்படுத்தக் கூடிய ஒன்றாக லீனா மணிமேகலையின் கவிக்குரலையும் காண்கிறேன். படைப்பெழுத்தில் பால் வேற்றுமைக்கு இடமில்லை என்று விசாலமான அர்த்தத்தில் நம்புகிறேன். எனினும் காலமும் சூழலும் பெண்ணெழுத்து என்ற பிரிவினையை யதார்த்தமாக்கியிருக்கிறது. ஆணாதிக்க சிந்தனையே கலாச்சார மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் அமைப்பில் இந்தப் பாகுபாடு இயல்பானதும் கூட.’

இரண்டு முக்கியமான செய்திகளை இங்கு காணலாம். ஆணாதிக்க சிந்தனைகள் கட்டியெழுப்பும் கலாச்சார மதிப்பீடுகளுக்கு மாற்றான பெண்சிந்தனைகள் எழுந்து கொண்டிருக்கின்றன பெண்களிடமிருந்தே என்பதுவும், அத்தகைய சிந்தனைகளை முன் வைக்கும் ‘பெண் கவிதை மொழி’ அதற்கான அத்தியாவசிய தேவையினால் உருவாகி இருக்கிறதும் என்பது தான். பத்திரிக்கை ஊடகங்களில், இத்தகைய மாற்றங்களைத் தேடி அலையும் ‘பெண் கவிதை மொழியையும்’, ‘சிந்தனையையும்’ தேடாமல், வலைப்பதிவில் மட்டுமே இயங்கும் நமது சகபெண்வலைப்பதிவர்களின் ‘பெண் கவிதை மொழியையும், சிந்தனைகளையையும்’ பார்க்கலாமா?

நிவேதாவின் ரேகுப்தி வலைத் தளத்தில், புகையெனப் படரும் பிணங்களின் வாசம் என்ற இந்த கவிதையை வாசித்து விடுங்கள். பின்னர் கீழே படியுங்கள்.




‘அடக்கியொடுக்கப்பட்டு மரித்துப் போன (பெண்ணின்) தாபங்கள் பிறக்கலாம் மழலையென’ இது தான் பெண்மொழியாக இருக்கின்றது. பெண் தன் தாபங்களை மூன்றாமவர் அறியும் படியாக பேசக் கூடாது என்ற ஆண்சிந்தனை தான் இதுநாள் வரையிலும் பெண்களுக்கான மொழியையும் படைத்து வந்தது. ஆனால், இன்றைய பெண்கள் தங்களின் உணர்வுகளைப் படைப்பதற்கு ஆண்கள் தேவையை நிராகரித்து விட்டு, தங்களின் மொழியைத் தாங்களே பேசத் தொடங்கிவிட்டனர். ‘மூன்றாமவர் என்ன, அனைவரும் அறிந்து கொள்ளுங்கள் எங்களுக்குள்ளும் தாபங்களிருக்கின்றன. காமம் இருக்கின்றன. அவற்றை நெரித்து பிணமாக எங்கள் கருவறைக்குள் தள்ளினீர்களென்றால், அந்தப் பிணங்களே மழலையாக பிறக்கும்’ தங்கள் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளும் ஆண்கள் பிணங்களைப் பிறப்பிப்பவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது எத்தனை வலிமையான சாடல்!

சமூக கட்டமைப்புகளைத் தோற்றுவிக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிராக எழும் பெண்மொழி, ஆணின் வன்மத்தை மறுக்க, தன்னை முன்னிலையில் வைத்து அடையாளப்படுத்துவதற்கு தனது பெண் பாலியியல் அடையாள உறுப்புகளை முன்வைத்து பேசுகையில், ஆணின் வன்மத்தை மறுப்பதற்கு மற்றொரு தளத்திலும் ஒரு மொழி கிளம்பியெழுகிறது. விளிம்பு நிலை மனித குரலாய் ஒலிக்கும் அந்த பெண் மொழியின் கவிதை அடையாளப்படுத்தும் உறுப்பு இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும், அதன் மீதும் ஆண் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வக்கிரத்தைச் சாடும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் - மகளிர் தின சிறப்பு கவிதை என்ற இந்தக் கவிதையைப் படித்து விடுங்கள்.



இவ்வுலக வாழ்க்கையின் தங்கள் மீதுள்ள விசுவாசத்திற்கு பரிசாக மதங்களால் நிர்மாணம் செய்யப்பட்ட மறு உலக சொர்க்கம் கூட ஒரு துர்சொப்பனமாக மாறிவிடுகிறது – மதங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு, அதை தங்கள் விருப்பம் போல வளைத்து ஒரு சாரரை அடக்கியொடுக்கும் விதிகள் புகுத்தி பீடத்தில் ஏறி அமர்ந்து கொள்ளும் வர்க்கத்தினால்…

பெண்மொழிகளின் தன்மைகளை உள்ளடக்கிய பெண்ணை அடையாளப்படுத்தி பெரும்பாலும் பரபரப்பூட்டும் தலைப்புகளுடன் எழுதும் மற்றொரு எழுத்து மொழி. தமிழச்சியினுடையது கடைசியாக எழுதிய பத்து பதிவுகள் மட்டுமே இருக்கின்றன. சேமித்து வைக்கப்படும் archieves இல்லாததினால், எதுவும் சுட்டிக்காட்டி எழுத இயலவில்லை. ஆனால், தமிழச்சியின் எழுத்துகள் சுயத்தை அடையாளப்படுத்துவதை விட, சமூக கோபத்தை ஆங்காரத்துடன் இடித்துக் காட்டும் வகையிலே தான் அமைந்திருக்கின்றன. என்றாலும் பெண் மொழியைக் கையாளுகிறார் – அதுவும் பெண்ணின் பிரத்யேக சிந்தனைகளை அல்லது உணர்வுகளை வைக்கவில்லையென்றாலும், சமூக கோபம் அல்லது அதன் போலித் தனங்களை அடையாளப்படுத்தும் ஒரு எழுத்தாக அமைவதால் மட்டுமே அதை இங்கே சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.

ஆனால், ஆண்களை சாடுவது எப்பொழுதும், எல்லாவிடத்திலும் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இல்லையென்றே சொல்வேன். தன்னை அடையாளாப்படுத்தும் பொழுது, அதற்கு எதிர்ப்பதமான ஆண்களைத் திட்டித் தீர்த்தே ஆக வேண்டும் என்ற அவசியம் தேவையற்றது. ஆனால் அவ்வாறு நிகழ்ந்து கொண்டும் இருக்கத் தான் செய்கின்றது. தாங்கள் பேச விரும்பும் ஒரு மொழியை ஒரு ஆணும் பேசினால், அதற்காக கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தானே? அவ்வாறு கோபம் கொண்டால், வெற்று ஜம்பத்திற்காக பெண்ணியம் பேசுவது ஆகிவிடாதா?

ஆண் என்ற பொதுவை விட, ஒரு ஆண்கவிஞரின் பெயர் குறிப்பிட்டு வக்கிரம் என எழுதப்பட்ட ஒரு சாடலை கீழே உள்ள ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. தான்யா எழுதியது. அது, பெண்மொழி மற்றும் சிந்தனையை முன்வைத்து அலசப்பட்ட ஒரு அருமையான கட்டுரை. பல பெண் கவிஞர்களின் கவிதைகளைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு ஆவேசப்பாய்ச்சலை உள்ளடக்கிய இந்தக் கட்டுரையை வாசித்த பொழுது, இவர் மகுடேஸ்வரனைக் குறிப்பிட்டு எழுதியவை சரிதானா என கேள்விகள் எழுகின்றன. தான்யா குறிப்பிடும் அந்த மகுடேஸ்வரனின் கவிதை - 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நு¡லை முன் வைத்து...
"

அவலட்சணமான
அந்த அறிவுஜீவிப் பெண்ணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை

(மகுடேஸ்வரன, யாரோ ஒருத்தியின் நடனம்)

ஒரு ஆண் கவிஞரின் தொகுப்பில், இப்படி ஒரு கவிதை வெளிவந்திருந்தது. இப்படியான வன்முறையான வக்கிரமான ஆணாதிக்க சிந்தனையுள்ள இந்தக் கவிதைகளை எதிர்க்காத இந்தப் படைப்பாளிகள், பெண்கள் தங்கள் உறுப்புக்களைப் பற்றி தாங்களே எழுதும் போது வந்து விடுகிறார்கள். " இது அந்தக் கட்டுரையில் எழுதப்பட்ட விமர்சனம்.


பெண்கள் தங்கள் மனதில் நிகழும் காமத்தை, தங்கள் உறுப்புகளின் மேலேற்றிக் கூறுவதை ஒரு உரிமையாக வைக்கும் பொழுது, ஒரு ஆண், தன் மனதில் நிகழும் கிளர்ச்சியூட்டும் ஒரு உணர்வை கவிதையாக வெளிப்படுத்தியது வக்கிரமா? நிச்சயமாக இல்லை. ‘Intellectual Compatibility ’ is the highesr order of ‘turn on’ for anyone, irrespective of the gender. அறிவுஜீவித்தனம் மற்றெந்த அக, புறப்பண்புகளையும் விட, காமத்தை அதிக கிளர்ச்சியூட்டி உத்வேகம் கொள்ளச் செய்யும். அதைத் தான் மகுடேஸ்வரன் தன் கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அந்தக் கவிதையை ‘தன்மை’ மொழியில் எழுதி விட்டதனால், அது ஆணின் மொழியாக ஆண் மனநிலை வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெண் கவிஞர் ஒருவர் இதையே

அவலட்சணமான
அந்த அறிவுஜீவி ஆணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை

என்று எழுதி இருந்தால், அதை ஒரு மகா பெரிய கொண்டாட்டமாக ஆக்கி இருக்க மாட்டார்களா, என்ன? ஆனால், ஒரு ஆண் எழுதி விட்டதால் இது வக்கிரமாகிவிட்டதா, என்ன? இன்னும் சொல்லப் போனால், இது ஆணின் மொழி கூட அல்ல. இந்த கவிதை பெண்களுக்கும் கூடப் பொருந்தும்.

நான் குறிப்பிட்டேன், சமம் என்பது அது தரும் பொருளைவிட, அதிக சமம் என்ற அர்த்தத்திலே தான் எல்லோராலும் கையாளப்படுகிறது. பெண்கள் கூட இப்பொழுது, தன் பெண்மொழியின் வாயிலாக, அந்த அதிக சமன்பாட்டைக் கோருகிறார்களோ என்று? இது சரியா, தவறா என மேலும் விவாதிப்பதை விட, மகிழ்வூட்டுவது என்னவென்றால், ஒதுங்கிப் போகாமல், ஆண்களின் எழுத்துகளையும் எடுத்து விவாதிக்கும் சிந்தனை வலுவைப் பெற்றுவிட்டார்கள் பெண்கள் என்பது தான்.

சரி, இறுதியாக பெண்களைப் பற்றி, நான் எழுதிய நிறையவற்றில் ஒன்றை இங்கே வாசியுங்கள். பின் அதுபற்றி, நீங்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். சுட்டி 'கனியின் பழங்கதை...'
மேலும் வாசிக்க...

நான் நண்பன்


நான் நண்பன்


தன்னை சுயமாக முன்னிலைப் படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்வதில்லையென்பதில் இத்தனை நாட்களும் உறுதியாக இருந்தேன் - இன்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன். யாரிடமும் சொல்லாமல் தனித்து இயங்கிக் கொண்டிருந்த எனது விருப்பங்களைப் பிறருக்கும் அறிமுகம் செய்யும் ஒரு வாய்ப்பைத் தந்து செய்யுமாறு நண்பர்கள் வேண்டிக் கொண்ட பொழுது, ஒதுங்கிப் போவது எப்போதும் போல அத்தனை எளிதாக இல்லை. எனது விருப்பமாக நான் மட்டுமே படித்துக் கொண்டிருந்த சிலவற்றைச் சொல்லிக் கொள்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்புகளோடு, என்னைப் பற்றியும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான், நண்பன்.

என்னைப் பற்றிய அறிமுகத்தை எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குவது? என்னைப் பற்றிய முன்முடிவுகள் ஓரளவிற்காவது சிலரிடம் இருக்கக் கூடும். எந்த அடையாளாங்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் பெருவிருப்பமிருந்தாலும், எனது பெயரே என்னை ஒருதளத்தில் அடையாளப்படுத்துகிறது. பிறப்பினாலே இயல்பாக என்னுடனே பிறந்துவிட்ட இந்த அடையாளம் என்னை ஒருவித அந்நியப்படுத்தலுக்கே இட்டுச் சென்றது. எனது வாசிப்பும், அனுபவங்களும் இந்த அடையாளத்தை மீறியவை. என்னை நேரிலே அறியாதவர்கள் இந்த அடையாளத்தின் மூலமாகவே காண்கின்றனர் என்பது எனது விருப்பத்தையும் மீறி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த அடையாளத்தைக் கொண்டு நான் அந்நியப்படுத்தப்படுவதை வன்மையாக மறுக்க வேண்டிய கட்டாயச் சூழலில், எனது மொழியும் அவ்வப்பொழுது கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் போல், என்னிடத்தில் பதிலை எதிர்பார்ப்பவர்களின் வன்மத்தையே முன்வைத்தது. இந்த அந்நியப்படுத்தும் அடையாளங்களை விட்டு விலக வேண்டும் என்ற முனைப்புடன் மீண்டும் மீண்டும் விலகி வெளியேறித் திரும்புகிறேன் - புதிதாக என்னை உணர்ந்தவனாக.

மனுஷ்யபுத்திரன் தனது நீராலானது என்ற கவிதைத் தொகுதியின் முன்னுரையில் எழுதுகிறார், 'கவிதைக்கான புலன்கள் அழிந்து என் படைப்பியக்கத்தின் அந்திமப் பருவத்தை எய்திவிட்டேனோ எனத் தோன்றும் படியாக எல்லாமே சலனமற்றுப் போயிருந்தன. என் மொழியின் வழியாக எப்போதும் வெளியேறிக் கொண்டிருப்பவனாக இருந்தேன். தற்செயலாக நான் வர நேர்ந்துவிட்ட ஒவ்வொரு இடத்திலிருந்தும், நாற்காலிகளிலிருந்தும், முடிவுகளிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் முடிவில்லாமல் வெளியேறிக் கொண்டேயிருப்பது தான் எனது எழுத்தின் பயணவழியாக இருந்திருக்கிறது. எழுத முடியாது என்பது வெளியேற முடியாது என்பதையே குறித்தது'

மனுஷ்யபுத்திரனுக்கு படைப்புச் சக்தியின் அந்திமப் பருவத்தை எய்தி விட்டேனோ என்ற அச்சத்தைத் தருகிறது சலனமற்ற பொழுதுகள். எனக்கு படைப்பு சக்தி என்ற பிரம்மைகள் அல்லது மாயையைகள் எல்லாம் கிடையாது. நான் சலனமற்றுப் போவதெல்லாம், இயல்பை மீறி அந்நியப்படுத்தப்படும், சிதைக்கப்படும் எனது அடையாளங்கள் பற்றிய கவலைகள் எழும் பொழுது தான். அப்பொழுதெல்லாம் என்னை நானே சற்று வெளியேற்றிக் கொள்கிறேன் - புதிதாக ஒன்றைக் கண்டு கொள்ள அல்லது இந்த அடையாளச் சிதைவுகளிலிருந்து மீண்டு எழ. நீண்ட மௌனங்களுள் அமிழ்ந்து போகின்றேன் என்னுள்ளே அடைந்து கிடக்கும் தேவையற்ற பிம்பங்களையும் அசூயைகளையும் தொடர்ந்து வெளியேற்றிக் கொள்ள. நீண்ட மௌனங்கள் இந்த வெளியேறுதலுக்கான ஒரு அஞ்சலியாகவே அமைகின்றன. இந்த தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதன் மூலமே, எனது அடையாளங்களை மறுக்க நான் விரும்புகிறேன்.

மனுஷ்யபுத்திரனின் இந்த வார்த்தைகளைப் படிப்பதற்கு முன், எனது இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளச் செய்யும் அனுபவங்கள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. (இலக்கியம்) வாசித்தல் என்னிடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்களில் ஒரு துளியையேனும் தொட்டிருப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வாசித்தல் என்னை ஒன்றிலிருந்து வெளியேற்றி மேலும் மேலும் புதிய பாதைகளில் பயணிக்க வைக்கிறது. புதிய புதிய அறிமுகங்களை தேடி இட்டுச் செல்கிறது. வாசித்தலைப் போலவே பார்த்தலிலும் திருப்பங்களைத் தந்திருக்கிறது. வெறுமனே வாசித்தல் - பொழுதுபோக்கிற்கான வாசித்தல், பார்த்தல் என்ற தளத்திலிருந்து வெளியேற்றி, என்னை நானே உணர்ந்து கொள்ள வைக்கும் பாதைகளுக்கான வாசித்தலை, பார்த்தலைத் தேடச் சொல்லி அலைக்கழிக்கிறது.

இலக்கியம் வாசித்தலால் என்ன பயன் என சொல்பவர்களுக்கு எனது பதில் மேலே சொன்னவை தான். இந்த வாசித்தலால், பார்த்தலால், வெளியேறுதாலால், புதிதாக வாழ்க்கையை வாழும் ஒரு புது அனுபவம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆக, இவன் தான் நண்பன் என நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் பொழுது, நான் அங்கிருந்து வெளியேறி மற்றொரு தளத்திற்குப் போயிருப்பேன். நிறைய எழுதி, நிறைய பேசி, என்னைப் பற்றி எல்லோரையும் நிறைய பேச வைப்பதை விட, நிறைய பார்த்து, நிறைய எழுதி, நிறைய என்னைப் பற்றிப் புரிந்து கொண்டவனாக இருப்பேன்.

ஆக, நான் எங்கும் தங்காமல், போய்க் கொண்டே இருப்பவன். வெளியேறிக் கொண்டே இருப்பவன் - ஒரு நதி தடையற்று ஓடிக் கொண்டேயிருப்பதைப் போன்று.

நான் நண்பன்.

நான் எழுதிக் கொண்டிருக்கும் தளங்கள் கீழே:

நண்பன்
மாற்றுத்தடங்கள்
Nanban
மேலும் வாசிக்க...

அடைமழை ஒய்ந்தது!!!

ஒரு வாரத்தில் எத்தனை பதிவுகள் .. ஆம்..சுனாமிப்பதிவர் என்று சொன்னாலும் சொன்னார்கள் வலைச்சரமே ஒரு பெரிய சுனாமியைப்பார்த்தது போல் நிற்கிறது. வரும்பொழுது வலைச்சரத்துக்கு ஏழரை என்றார் சரி ஏழரை வந்த போது படுத்தினாலும் போகும் போது அள்ளிக்கொடுக்கும் என்று நினைத்துக்கொண்டேன் . பணச்சரம் என்றும் பிட்னெஸ் என்றும் எண்ணிக்கையிட்டு தொடராக வலைச்சரம் தொடுத்ததில் எத்தனை கவனம் எடுத்துக்கொண்டார் என்று தெரிகிறது.



கவிதைகள் கதைகள் சமையல் நகைச்சுவை என்று தான் வலையில் வாசிக்கத் தொடங்கிய பொழுதிலிருந்து (வாசிக்காது விட்டவைகள் உண்டோ ?) அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.. நின்று நிதானித்து படிக்க வேண்டிய அளவு பதிவுகளும் சுட்டிகளுமாய் மழையாக கொட்டித்தீர்த்த மங்களூர் சிவாவிற்கு நன்றிகள்.

------------------



"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....." - இப்படி அறிமுகப்படுத்திக்கொள்ளும் நண்பன் அவர்கள் இந்த வார வலைச்சரத்தைத் தொடுக்க இருக்கிறார். அரசியல் சினிமா விவாதம் என்று களைகட்டும் பதிவுக்கு சொந்தக்காரர் . அவர் ரசித்த நல்ல பதிவுகளின் சுட்டிகளை இந்த வாரம் வாசிக்கலாம்.
மேலும் வாசிக்க...

Sunday, January 20, 2008

வர்ட்டா!?!?


"வலைச்சரத்தி(ல்)ற்க்கு ஏழரை" என்ற பதிவோடு வந்தாலும் இந்த ஒரு வாரக் காலம் உங்களுக்கு ஒருச் சிறப்பான வலைசரத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசையை இயன்ற வரை சிறப்பாக செய்திருப்பதாகவே நம்புகிறேன். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பணச்சரம் 1, 2 , 3 , 4 நான்கு பாகங்களும் மற்றும் ஃபிட்னெஸ் சரம் 1, 2 . நிறைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் நிறைய இடங்களில் பயன்படுதிவிட்டேன் பொருத்தருளவும்.

பழைய வலைச்சர பதிவுகளை பார்க்கும்போது பல சுட்டிகள் தவிர்க்க இயலாமல் திரும்ப வந்திருக்கலாம். குறிப்பாக 'கவிதை தோரணத்தில்' . நான் தொகுத்தப் பதிவுகள் எல்லாம், சிறப்பானவை என்றால், நான் தொகுக்காமல் விட்டப் பதிவுகள் மிகச் சிறப்பானவை என்றே நான் கருதுகிறேன்.

ஒரு வார காலம், எனக்கு இங்கே சரம் தொடுக்க வாய்ப்பளித்த 'டீம் வலைச்சரம்' க்கு நன்றி. என்னைத் தொடர்ந்து எழுதப் போகும் வரும் வார ஆசிரியர்களும் சிறப்பான வலைச்சரம் தொடுக்க என் வாழ்த்துக்கள்.

பின்னூட்டங்களால் ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்க்ளுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் நீங்கள் அளித்த பின்னூட்டம்தான் அடுத்தடுத்த பதிவுகளை நான் தயார் செய்ய கிடைத்த ஒரு உற்சாக (பானம்) டானிக் (தப்பு பண்ணிட்டமோன்னு இப்ப ஃபீல் பண்ணாதீங்க, இது ரொம்பா லேட்டு).

இந்த இனிய பொங்கல் வாரத்தில் வலைச்சரத்தில் உங்களுடன் நான் படித்த ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டது மனதுக்கு ஒரு இனிய அனுபவம்.

இத்துடன் வலைச்சரத்துக்கு ஏழரை முடிந்துவிட்டது. ஜென்ம சனியாக நான் பிடித்து வைத்திருக்கும் என் ப்ளாகில் கடந்த ஒரு வாரமாக ஒரு பதிவும் போடாமல் காத்து வாங்குகிறது. அங்கு செல்ல வேண்டியிருப்பதால் அடுத்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்களை கூறி விடை பெறுகிறேன்.

வர்ட்டாஆஆ

மேலும் வாசிக்க...

கவிதை தோரணம்

ரத்தம் தோய்ந்த
வாட்கள்
யுத்தத்திற்கழகு !
முத்தம் தோய்ந்த
இதழ்கள்
காதலுக்கழகு !

எத்தனை முறை
படித்தாலும் மேலும்
மேலும் படிக்கத்
தூண்டுகிறது
உன் இதழ்கள் மட்டும்தான் !

புலம்புபவர் - நவீன் ப்ரகாஷ் "முத்தபூமி" யில் இவரின் வலைப்பூவில் படங்கள் கவிதைகளை மிஞ்சும் கவிதைகளோ படங்களை விஞ்சும் இவரின் வலைப்பூ ஆதலினால் .

கவிதைன்னு சொல்லீட்டு அருட்பெருங்கோவை விட்டுபுட்டா எப்பிடி

கரும்பும் சர்க்கரை பொங்கலும்
எதற்கு
கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிரு
போதும்!

கோலப்போட்டியில்
உனக்குதான் முதல் பரிசா?
உன்னை வரைந்த உன் அம்மாவுக்கே கொடுத்திருக்கலாம்!

காதலிக்கு பொங்கல் வாழ்த்து - அருட்பெருங்கோ
இது போல பல கவிதைகளுக்கு இவரின் வலைப்பூ அமராவதி ஆத்தங்கரை.


அனைவரும்
உனக்கு அழகென்ற
திமிர் என்றனர்...
ஆனால் நான் சொன்னேன்,
திமிர்தான் உன் அழகு..!

குப்பைதொட்டி மனசு - சென்ஷி


வெகுதூரம் பின்னோக்கி
நகர்ந்துவிட்ட அப்பாவின்
கையிலுள்ள ஐஸ்க்ரீமை நோக்கி
நகர்த்திக்கொண்டேயுள்ளது
பிள்ளை
இன்னும் உலரத் தொடங்காத
தன் பிஞ்சு வாயை!

அப்பிடி என்னய்யா பேச்சு சுவாரஸ்யம் புள்ளைக்கு ஐஸ்கிரீம் ஊட்டறத விட இடைவெளி - சிவஸ்ரீ

வேலை கிடைக்கவில்லையென
வெட்டியாய் ஒரு நாளைத்
தள்ளிக் கொண்டு
வேடிக்கை பார்த்திருக்கும்
என்னைக் கடந்து...

எல்லாரும் "தள்ளிக்கொண்டு" போகிறார்கள் எதை!?!?!

கூலிக்கி பதிலா
சம்பளம் கிடைச்சென்ன
பதிலுக்குக் கூலியா
பிய்யாரும் கிடைச்சென்ன?

எல்லாத்துலயும் 'வெட்டு' தான். என்னத்தை படிச்சி பாருங்களேன். சிங்கப்பூர்ல இப்பிடித்தான் தமிழ் பேசுவாங்களா!?!?!
மேலும் வாசிக்க...

செம ஹாட் மச்சி

அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு "இல்லை' என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம். பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய - குறிப்பாக - தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.

சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை. லயோலா கல்லூரியில் லீனா மணிமேகலைக்கு நடந்த அவமரியாதை. துப்பட்டாவில் படபடக்கும் தமிழ் கலாச்சாரம் - செல்வன்

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவனுடன், பாய்பிரண்டுடன் பீச்சுக்கு போன இரண்டு பெண்களை எண்பது பேர் கொண்ட வெறிநாய் கும்பல் மானபங்கப்படுத்தியுள்ளது. அந்த பெண்களுக்கு இந்த எண்பது நாய்களும் சேர்ந்து இழைத்த கொடுமையை விட அதிக கொடுமையை இனி கற்புக் காவலர் பலரும் சேர்ந்து இழைக்கபோவதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது."நைட் 12 மணிக்கு ஏன் பாய்பிரண்டுடன் பீச்சூக்கு போனாய்?" "ஏன் ஜீன்ஸ் போட்டாய்?" என்று அவர்கள் நடத்தையை சந்தேகத்துக்குரியதாக்கி, அவர்கள் கேட்காத அட்வைஸ் மழையை இவர்களாக பொழிந்து தள்ளி,இவர்கள் மானபங்கப்படுத்தப்பட இவர்கள் டிரஸ்ஸூம் நடத்தையும் தான் காரணம் என்று தீர்ப்பெழுதி, இவர்களை அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரனமாக்கி "ஆண்களின் காம இச்சையை தூண்டும் வண்ணம் ஆடை அணிவது தவறு. பெண்ணியத்தை விட கண்ணியமே முக்கியம்" என்று ஒட்டுமொத்த இந்திய பெண்ணினத்துக்கும் (மேல்நாட்டு பெண்களிடம் பருப்பு வேகாது என்பதால்) அட்வைஸ் கூறுவர். "ஆண்கள் ஏன் பேண்ட் மேல் ஜட்டி போடுவதில்லை" - செல்வன்

நியூ இயர் கொண்டாட்டம்னா என்னாங்க? நாம ஒரு பொது இடத்துல கூடுவோம், நம்ம பைக்க எடுத்துகிட்டு வருவோம். 9 மணியில இருந்து நல்லா கும்முன்னு சரக்கை ஏத்திக்கணும், 12 மணி ஆனதும் இல்லாத கலாட்டா எல்லாம் பண்ணிட்டு அப்பால காலியா இருக்க ரோட்டுல வரலாறு காணாத ஸ்பீட்ல பறக்கணும், எப்ப வீட்டுக்கு வந்து விழுந்தோம்னே தெரியாம வந்து விழணும். அட.. ரோட்லேயே எவன் மேலேயாவது இடிச்சாலும் சரி.. எலும்பு முறிஞ்சாலும் சரி எவனாச்சும் செத்தாலுமே சரி.. இது நம்ம கலாச்சாரம் ஆச்சே, விட்டுக் கொடுக்க முடியுமா?

பொம்பளைங்களுக்கு என்ன தெரியும்? சும்மா படிச்சுட்டாப்பல ஆச்சா? எப்பப்ப ஆம்பளைங்களோட உணர்ச்சி தூண்டப்படும்னு தெரியுமா? கலாச்சாரத்தை அவங்களால தனியா காப்பாத்த முடியுமா? முதல்ல கலாச்சாரம்னா என்னன்னு அவங்களுக்குத் தெரியுமா? இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை - பெனாத்தல் சுரேஷ்

இன்றைய காலகட்டத்தில் கலாசாரம் என்பதற்குச் சரியான விளக்கமோ, அளவுகோலோ தனியாக விதிக்க முடியாத நிலைமைதான்.அவரவர்க்கு எது சௌகரியமோ,எது பிடிக்குமோ அதுவே கலாசாரம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு விளக்கம் சொன்னாலும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது இதன் விளக்கம். கலாசாரம் அவரவர் பார்வையில், புத்தாண்டு சம்பந்தமாக கலாசாரம் - பாசமலர்.

இந்த சினிமாவிலே சான்ஸ் கேட்டு அலையறதுங்கிறது நம்மிடையே உள்ள பெரும்பாலான இளைஞர், இளைஞிகளுக்கு ரொம்ப சர்வ சாதார்ணமான விஷயம்! அதுவும் சினிமாங்கிற கனவுத் தெழிற்சாலையிலே சாதிக்கணுங்கிற வெறியோட இன்னைக்கு முகம் தெரியாத எத்தனையோ பேருங்க அலைஞ்சிக்கிட்டிருக்காங்க!. திரை உலகில் நுழையும் பெண்கள், திரைக்கு பின்னால் இருக்கும் கலாச்சாரம் - வெளிகண்ட நாதர்
மேலும் வாசிக்க...

Saturday, January 19, 2008

கதைகள் - நினைவிலிருந்து!

'செத்தாலும்' இது கதையோட தலைப்பு ஒரு பெண் எதோ ஒரு கோபத்தில் செத்து போவதற்காக தூக்க மாத்திரைகளை விழுங்க்கி விடுகிறார் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதாக போகும் இந்த கதைய படிச்ச நமக்கே செத்து திரும்பின அப்பிடி ஒரு அனுபவம். ஏனோ இவங்க நிறைய எழுதறதில்லை. கொஞ்சம் பெரிய கதை ஆனால் வாசிப்பது சலிப்பு ஏற்படுத்தாத நல்ல அனுபவம். கதை விரும்பிகள் தவற விடக்கூடாத கதை இது.

உங்கக்கிட்ட தாம்மா முதல்ல சொல்லிருக்கனும். ஆனா, புள்ள சரியில்ல, பொறந்தாலும் செத்துத் தான் பொறக்கும், அதுனால கீறி எடுத்தாகனும்னு டாக்டரம்மா சொன்னதுக்கப்றம், எப்டிம்மா சொல்லுவேன், உங்க பேரனோ, பேத்தியவோ, என் வயித்துல சுமந்துக்கிட்டிருக்கேன்னு!. பத்து மாசம் மட்டுமில்லாம, இன்னமும் என்னையச் சுமந்துக்கிட்டிருக்கிற உங்கக்கிட்ட, நா எம்புள்ளய பாதில இறக்கி வைக்கப் போறதச் சொல்லி, உங்க மேல சுமைய ஏத்தவா ? தாங்க மாட்டிங்கம்மா. கிள்ளுப் பூ.

இந்த கதைய மொத தரம் படிச்சப்ப எனக்கு முழுதுமா புரியலை இரண்டாவது மூன்றாவது முறை படித்தபோதுதான் முழுமையா புரிந்தது. எத்தனை தடவை படித்தாலும் அலுக்காத சலிக்காத கதை சொல்லி இவர் ஆனால் இவர் நிரம்ப எழுதுவது இல்லை என்பது மிக்க வருத்தமே. சிங்கப்பூரில் வீட்டுவேலை செய்யும் பெண்மணி கதையை சொல்லுவதாக மிக அருமையான கதை பொழப்பு.

"வீட்ல சண்டை போட்டுட்டு வந்துட்டண்டா" அப்படீன்னு அண்ணா பதில் சொன்னாங்க. காலம் மாறுது போல. பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுக்கிட்டு புருஷன் வீட்டை விட்டுக் கெளம்பற லெவலுக்கு சமுதாயம் மாறிட்டு வருது. என்னால லீவ் போட்டு வீட்ல உக்காந்து கொழந்தையைப் பாத்துக்க முடியாது. வேணும்னா நீ லீவ் போட்டுக்கனு புது மிரட்டல் கடந்த ரண்டு வாரமா ஆரம்பிச்சிருக்காம். 'ஹைடெ'க் கணவன் மனைவி இடையே புரிந்துகொள்ளாமை 'ஈகோ' அதன் விளைவாக விளைந்தவை பற்றி செல்லமுத்து குப்புசாமியின் 'உண்மை' எனும் இந்த கதையில்.


"நான் வந்து ரொம்ப நல்ல பொண்ணு, எல்லாரு கிட்டேயும் நல்ல பழகுறேன் திடீர்னு ஒரு நாள் பாத்தா வயசு கால் நூற்றாண்டு ஆகிருச்சு. ஆஃபீஸ் போக வேண்டியது, வர வேண்டியது, சமைக்க வேண்டியது, சாப்பிட வேண்டியதுன்னு வாழ்க்கை ஒரே மெஷின் மாதிரி மாறிடுச்ச்சு. அப்பா அம்மா மாப்பிளை தேட ஆரம்பிச்சாங்க".

அவளுக்கு மாப்பிள்ளை பாத்து பிடிச்சிபோயிடுது அதுக்கப்புறம் என்ன பண்றாங்க போனை காதுல எடுத்து வெச்சிகிட்டு 24 மணி நேரமும் அப்பிடி என்னதான் பேசறாங்களோ தெரியாது பேசிகிட்டே இருக்குறாங்க. கடைசியில என்ன ஆகுது சஸ்பென்ஸ்.

ஒரு பெண் தன் கதையை சொல்வதாக எழுதியிருக்கிறார் செல்லமுத்து குப்புசாமி மாடர்ன் மஹாலட்சுமி.

நீங்க சாந்தி அம்மாதானே" எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?

இப்படி இயல்பான உரையாடலாக கல்யாண வீட்டில சந்திக்கும் காதலி பற்றிய கதை கொல்ட்டி பாலாஜியின் ச்ச வெட்டி பாலாஜியின் "தீயினால் சுட்ட புண்".

இது இவரு மொத மொதலா எழுதின கதையாம் நம்ப முடியுதா!?!? இப்ப நடந்த சர்வேசன் போட்டில கடைசி சுற்றுவரைக்கும் போன கதை நந்துவின் எதுனா வேலை இருந்தா குடு சார்.

சர்வேசனின் 'நச்'னு ஒரு கதை போட்டி க்ரூப் A கதைகள்.
சர்வேசனின் 'நச்'னு ஒரு கதை போட்டி க்ரூப் B கதைகள்.
சர்வேசனின் 'நச்'னு ஒரு கதை போட்டி க்ரூப் C கதைகள்.

நிறைய கதைகள் நினைவில் இருந்தாலும் அதை எங்கு படித்தேன் என நினைவில்லாததால் மிக குறைவான கதைகளுக்கே சுட்டி கொடுத்துள்ளது சற்று வருத்தமே.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது