07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 30, 2009

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்ங்கோ!! நான் தான் தாரணி பிரியா
இன்னும் ஒரு வாரத்திற்கு நீங்க எல்லாம் பாவம் ஏன்னா நான் எழுதபோறதைதான் படிக்க போறீங்க. உருப்படியா ஒண்ணும் எழுதறதுதான் இல்லை. அட்லீஸ்ட் படிக்கறதுதாவது உருப்படியா ஒழுங்கா படிக்கிறியா பாக்கலாமுன்னு சீனா சார் எனக்கு ஒரு டெஸ்ட் வெச்சு இருக்கார். இந்த டெஸ்டுல நான் நல்ல மார்க் எடுத்து பாசாகணுமுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு வந்து வேலையை ஆரம்பிச்சாச்சு.

முதல என்னைய பத்தி சொல்லிடுறேன். என்னை பத்தி பெரிசா மட்டுமில்ல சிறிசா சொல்லறதுக்கு கூட ஒண்ணுமில்லைங்க. கோவையில இருக்கிற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில அக்கவுண்ட்ஸ் செக்சன்ல வேலை பார்க்கிறேன். அவ்வளவுதான்

ஒரு தடவை அவள் விகடன்ல ப்ளாக் பத்தி எல்லாம் போட்டு ஒரு கட்டுரை வந்து இருந்தது. அதை படிச்சபிறகுதான் இப்படி ஒரு உலகம் இங்க இருக்கறது தெரிஞ்சு தேடி கண்டு பிடிச்சு அதுல என்னையும் இணைச்சுக்கிட்டேன். நான் எழுதினது எல்லாத்தையுமே கொஞ்சம் கூட யோசிக்கமா மொக்கை இல்லாட்டி செம மொக்கை வகையில சேர்த்துக்கலாம். எனக்கு பிடித்ததே அடுத்தவங்களை சங்கடப்படுத்தாத நகைச்சுவை, காமெடி, கிண்டல்தான்.

வலைச்சரத்துல மொத பதிவுல நம்ம பதிவோட வெளம்பரம் போட்டுக்கலாமாம். வந்தது வந்தீங்க அப்படியே இங்க ஒருஎட்டு போய் பார்த்திட்டு ஏதாவது ஒரு போஸ்டாவது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு வாங்களேன் ப்ளீஸ்
மேலும் வாசிக்க...

Sunday, November 29, 2009

நன்றி அண்ணன் வணங்காமுடி - வருக வருக தாரணி பிரியா

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் ( 29.11.2009) நிறைவுறும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று அழகாக ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி மனமகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார் நண்பர் அண்ணன் வணங்காமுடி. இவரேழு நாட்களும் இடுகைகள் இட்டு ஏறத்தாழ எண்பது மறுமொழிகள் பெற்று கடமையைச் செய்திருக்கிரார்.

இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் பலர் புதியவர்கள் - அறியப்பட வேண்டியவர்கள் - அவர்களை அறிமுகம் செய்த விதமும் நன்று.

நண்பர் அண்ணன் வணங்காமுடி அவர்களை வாழ்த்தி நன்றியுடன் வழி அனுப்புவதில் வலைச்சரம் குழுவினர் சார்பினில் பெருமை அடைகிறேன்.

நாளை (30.11.2009) திங்கட்கிழமை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் கோவையில் வசிக்கும் தாரணி பிரியா. இவர் கோவையில் உள்ள ஒரு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் அலுவலராக இருக்கிறார். ஊஞ்சல் என்ற பதிவில் கடந்த 18 மாதங்களாக எழுதி வருகிறார். பல தலைப்புகளில் ஏறத்தாழ எழுபது இடுகைகள் இட்டுள்ளார்.

அன்பின் தாரணி பிரியாவினை ஆசிரியப் பொறுப்பினை ஏற்க வருக வருக என வலைச்சரக் குழுவினர் சார்பின்ல் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஏழாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...


நான் இதுவரை தொடர்ந்து ஏழுநாட்கள் பதிவு போட்டதே இல்லை இதுவே முதல்முறை. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த ஏழுநாட்கள் என்னை பிண்ணுடங்கள் மூலம் ஊக்குவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இவர்கள் அனைவரும் இந்த ஏழு நாட்கள் பிண்ணுட்டகள் இட்டு என்னை ஊக்குவித்தவர்கள்:


புதுகைத் தென்றல்,
செ.சரவணக்குமார்,
அப்பாவி முரு,
ராசு,
அ.மு.செய்யது,
நிகழ்காலத்தில்,
வானம்பாடிகள்,
ரம்யா,
கலை அக்கா,
Mrs.Menagasathia,
திகழ்,
ஜோதிஜி. தேவியர் இல்லம்.,
வால்பையன்,
cheena (சீனா),
செந்தில் நாதன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி,
கிருஷ்ண பிரபு,
VISA,
tamiluthayam,
இராகவன் நைஜிரியா,
ரங்கன்,
தமிழரசி,
सुREஷ் कुMAர்,
நட்புடன் ஜமால்,
தேவன் மாயம்,
பிரியமுடன்...வசந்த்


அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். விடைபெறுகிறேன் நன்றி. அடுத்தவார வலைச்சர ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.


சந்திப்போம் சிந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Saturday, November 28, 2009

வலைச்சரத்தில் ஆறாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...


தினம் ஒரு தித்திப்பு:

விடியற்காலை எழுந்து, நாளும் பூஜை செய்வதையும் தினமும் சொற்பொழிவு நிகழ்த்துவதையும் தவமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் பலர். ஆனால் தினமும் நாம் அப்படி செய்ய முடியுமா? செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. தினமும் தாய், தந்தையரை வணங்கினால் போதும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட. கண் முன் இருக்கும் தாய், தந்தையரை வணக்குவது சாலச் சிறந்தது. கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பார்கள். நமது பெற்றோர்கள் கண்முன் இருகிறார்கள். தினமும் நம் வளர்ச்சியில் பங்கு கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்புவதை காட்டிலும் கண்முன் இருக்கும் பெற்றோரை வணங்குவோம்.

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை, தந்தையே அன்பின் எல்லை

மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த வரிசையை நம் முன்னோர்கள் தான் சொல்லி உள்ளனர்.

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்.

தினமும் அறிமுகம்:

ரம்யா அக்கா Will To Live
இவர் பதிவர்களைக் கொண்டு ஒரு கிரிக்கெட் போட்டியே நடத்தியுள்ளார்.
சினிமாவில் வரும் சிரிப்பு பகுதி போல் இவரும் தன் சொந்த எழுத்துக்களால் ஒரு சிரிப்பு பகுதி எழுதியுள்ளார்.


சரக்கு மன்னன் வால்பையன்
இவர் புது விதமான சிந்தனை கலந்து நிறைய பதிவுகள் எழுதுவதில் வல்லவர். மற்றவர்கள் இடும் பிண்ணுட்டங்களை கொண்டே பதிவு எழுதும் திறமை வாய்ந்தவர்.
அதுமட்டும் அல்லாது பிறர் போடும் டிஸ்கி கொண்டும் பதிவு எழுதுபவர்.
சரக்கு பற்றிய இவரது கவிதைகள் அருமை.


ஜீவன் அவர்களது கண்ணாடி
இவர் சமுக சிந்தனை வாய்ந்தவர். சமுகத்திற்கு நடக்கும் அநியாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டும் சமுக அக்கறை வாய்ந்தவர்.



குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம் குடுகுடுப்பை அனுபவம் என்று இவர் எழுதும் அனைத்து பதிவுகளும் அருமையானது.


கொத்து பரோட்டா கேபிள் சங்கர்
கொத்து பரோட்டா ஸ்பெசல்.


சந்திப்போம் சிந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Friday, November 27, 2009

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...

தினம் ஒரு தித்திப்பு:

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு தேர்
தமிழுக்கும் நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கும் மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கும் மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைக்கு செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

இப்படி ஒரு காலத்தில் இருந்த தமிழ் மொழி இப்போது நமது மக்களிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு இருக்கிறதே!. தமில், தமிள் இந்த மாதிரித்தான் பலர் உச்சரிக்கின்றனர், பலர் எழுதுகின்றனர். இதற்க்கு காரணம் அவர்களது நாக்கில் வார்த்தை நுழைய வில்லையா அல்லது ஒரு கெளரவத்திற்காக அப்படி பேசுகிறார்களா என்பது தெரியவில்லை. சிலர் டமில் என்று உச்சரிக்கின்றனர் கேட்டால் ஆங்கிலத்தில் (Tamil) அப்படிதான் எழுதி இருக்கு என்கிறார்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது போய், சங்கு வைத்து தமிழ் புகட்ட வேண்டி உள்ளது. என்ன கொடுமை அய்யா(சார்) இது.


தினமும் அறிமுகம்: (கவிதை ஊற்றுகள்...) - நன்று கவிதை எழுதுபவர்கள்...

தியாவின் பேனா - தியாவின் பேனா பேசுகிறது - (தியாவின் பேனாமுனையிளிருந்து உதிரும் உதிர்வுகள்)


மலிக்கா -
நீரோடை (நம் எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும்)
கலைச்சாரல் (எண்ணங்களில் உதித்த கை வண்ணங்கள்)

தமிழரசி - எழுத்தோசை (என் எழுத்துக்களின் ஓசை!)

வசந்த் குமார் - பிரியமுடன்......வசந்த் (ONLY FOR ENTERTAINMENT... DON'T SEARCH LOGIC...)


சந்திப்போம் சிந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Thursday, November 26, 2009

வலைச்சரத்தில் நான்காம் நாள்...

வணக்கம் நண்பர்களே...


தினம் ஒரு தித்திப்பு:

புத்த ஞானியிடம் போர்வீரன் ஒருவன் சந்தேகம் ஒன்றை கேட்டான். அவன் கேட்ட கேள்வி சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? இவை இருப்பது உண்மைதானா?

அந்த புத்த ஞானி நீ யார் என்று கேட்டார்? அவன் அதற்கு நான் அரசரின் பாது காவலன் என்றான். அதற்கு அந்த புத்த ஞானி உன்னை பார்த்தால் பிச்சை காரன் போல் தெரிகிறாய் உன்னை எப்படி அந்த அரசர் பாதுகாவலனாக வைத்துக்கொண்டார் என்று சிரித்தார். அந்த வீரனுக்கு கோபம் பொங்கியது. உடனே அந்த வீரன் உடைவாளை உருவினான். அப்போது அந்த புத்த ஞானி கூறினார் ஓ கத்தி வேறு வைத்திருக்கிறாயா? அந்த கத்தி மழுங்கிப்போய் இருக்கிறது என்றார். உருவிய கத்தியுடன் அவர் பக்கத்தில் வந்தான் வீரன்.

அப்போது அந்த புத்த ஞானி நீ இப்போது நரகத்தின் கதவை திறந்து விட்டாய் என்றார். இதை கேட்ட வீரன் பின்வாங்கினான். அவனது கத்தியை உரையில் சொருகினான். அப்போது அந்த புத்த ஞானி சொன்னார் இப்போது உன் கேள்வியின் மறுபாதிக்கு பதில் கிடைத்து விட்டது. நீ இப்போது சொர்க்கத்தின் கதவுகளை திறந்து விட்டாய்.

அன்பு, இனிமை, உண்மை, மலர்ச்சி, வளர்ச்சி, உதவி, ஆரோக்கியம் என்ற எண்ணங்களை மனதின் உள்ளே விடும்போது நாம் சொர்க்கத்தை உருவாக்குகிறோம். வறுமை, பொறாமை, சினம், பயம், என்ற நோய் கொண்ட எண்ணங்களை உள்ளே விடும் பொது நாம் நரகத்தை உருவாக்குகிறோம்.

தினமும் அறிமுகம்:

அதிரைக்காரன் - வெட்டிப் பேச்சு - (அதுக்காக மற்றதெல்லாம் விவரமான பேச்சு என்று அர்த்தமல்ல.) இவரது பதிவுகள் மிகவும் அருமையானதாக இருக்கும். இவரது இந்த பதிவுகள் அவரது எழுத்துக்கு எடுத்துக்காட்டு
தேசிய விலங்காக கழுதை தேர்வு,
தொழிலுக்கேற்றப் பெயர் (அல்லது) பெயருக்கேற்ற தொழில்


ஹரன்பிரசன்னா - நிழல்கள் (தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?) புத்தகக் கண்காட்சி, கவிதை, அரசியல், அறிவிப்பு, அறிவியல் புனைகதை, ஆன்மிகம், ஆவணப் படம், கட்டுரை, குறுநாவல், கூட்டம், சிறுகதை, நாடகம், நிழற்படங்கள், நையாண்டி என அனைத்திலும் தேர்ந்தவர்


பிஸ்கோத்து பயல் - மொக்கை பதிவு எழுதுவதில் நல்லவரு, வல்லவரு...


சந்திப்போம் சிந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Wednesday, November 25, 2009

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...

குட்டி கதை

ஒரு பள்ளியில் ஆசிரியர் அவரது வகுப்பு மாணவ செல்வங்களை உருளை கிழங்குகளை எடுத்து வருமாறு சொன்னார். ஒவ்வொரு கிழங்குக்கும் அந்த குழந்தைகளுக்கு பிடிக்காதவர் களின் பெயரை வைக்க சொன்னார். அதே மாதிரி எத்தன பேர பிடிக்காதோ அத்தன கிழங்குகளை எடுத்துக்கொண்டு அதற்கு அவர்களின் பெயரை வைக்க சொன்னார்.


அவர் சொன்னார் போல் அடுத்த நாள் எல்லாக்குழந்தைகளும் கிழங்கை எடுத்துவந்தனர். ஒரு சில குழந்தைகள் ஒன்று, சிலர் இரண்டு, சிலர் மூன்று, சிலர் ஐந்து என பல எண்ணிக்கையில் எடுத்து வந்தனர். ஆசிரியர் அனைவரிடமும் ஒருவாரத்திற்கு அந்த கிழங்குகளை நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் எடுத்து செல்லுமாறு கூறினார். அதே போல் அனைவரும் பின்பற்றினர்.


அந்த குழந்தைகள் ஒவ்வொருவராக புகார் பல தெரிவித்தனர். அதாவது அந்த கிழங்குகளை எடுத்து செல்வதற்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், அதிகமாக எடை உள்ளதால் அதை சுமப்பதற்கு சற்று சிரமமாக இருப்பதாகவும், கிழங்குகளில் இருந்து ஒரு விதமான நாற்றம் அடிப்பதாகவும் சொன்னார்கள்.


அந்த ஒரு வாரம் முடிந்தது. அடுத்தவாரத்தில் ஆசிரியர் அந்த குழந்தைகளிடம் இதை பற்றி விசாரித்தார். அப்போது அந்த குழந்தைகள் பட்ட கஷ்ட்டங்களை சொன்னார்கள். அதற்க்கு அந்த ஆசிரியர் உங்கள் மனதில் எந்த மாதிரியான எண்ணத்தை கொண்டுள்ளீர்களோ அது மாதிரியே உங்கள் சூழ்நிலையும் வாழ்க்கையும் அமையும் இந்த நிகழ்வு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த ஒரு வாரத்தில் நீங்கள் சுமந்து சென்ற இந்த கெட்ட கிழங்கின் வாடையும் அதன் எடை இவற்றை தாங்க முடிய வில்லயோ அதே போல் உங்கள் மனதில் கெட்ட எண்ணங்களை சுமந்து சென்றால் என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.


அதனால் உங்கள் மனதில் வாழ்நாள் முழுவதும் எப்போதும் நல்ல எண்ணங்களை சுமந்து செல்லுங்கள் அது உங்களை நல்ல வழியில் நடத்திச்செல்லும்.


டிஸ்கி: உங்கள் இதயம் என்பது ஒரு தோட்டம் போன்றது அதை தினந்தோறும் சுத்தம் செய்து தேவையில்லாத களைகளை அகற்றி விடவேண்டும். மறப்போம் மன்னிப்போம் என்ற என்னத்தை வளத்துக்கொல்லுங்கள். கெட்ட எண்ணங்களை மறந்து நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.


தினமும் அறிமுகம்:


நட்புடன் ஜமால் கற்போம் வாருங்கள் ஒரு நாள் இவர் எழுதிய கவிதை அனைவரும் வியக்கும் அளவிற்கு மிக பிரபலம் அந்த கவிதை இதுவரை யாரும் எழுதியதில்லை இனிமேலும் யாரும் எழுதப்போவதில்லை. எனக்கு தெரிந்து அந்த கவிதை பதிவு முதல் முறையாக அதிக பின்னுட்டங்களை பெற்றது. அந்த கவிதையில் இலக்கானப் பிழை இல்லை. எழுத்துப் பிழை இல்லை. யாராலும் குற்றம் கண்கொண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஒரு கவிதை.


ஆதிமூலகிருஷ்ணன் புலம்பல்கள்.! இவர் குறும் படம் எடுப்பதில் மிகவும் கெட்டிக்காரர். இவர் எடுத்த ஆயுதம் குறும்படம் மக்கள் ஆதரவை பெற்றது இல்லை பேராதரவை பெற்றது. தற்போது குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கட்டிவரும் இவர் வருங்கலத்தில் பெரிய இயக்குனராய் வருவார் என்பதில் ஆச்சர்யம் இல்லை


உங்களில் ஒருவன் - தமிழ் உதயம்
சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய, ஜனரஞ்சகம் என எல்லாவற்றிலும் தேர்ந்தவர்


சந்திப்போம், சிந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Tuesday, November 24, 2009

வலைச்சரத்தில் இரண்டாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...


நாம் வாழும் இயந்திர வாழ்க்கையில் தினமும் பல இன்பங்கள் துன்பங்கள் நம்மை சூழ்ந்து கொள்கிறது ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் வேகம் விவேகம் புத்திசாலித்தனம் தைரியம் தன்னம்பிக்கை ஆகியவற்றை கொண்டு எல்லாவற்றையும் இன்ப துன்பங்களை துணிச்சலாக எதிர் கொண்டு முன்னேறி வர வேண்டும் அனைத்து வேலைகளிலும் நமது அக்கறையையும் ஆர்வத்தையும் கொண்டு வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்.

இதெல்லாம் இந்த கால இளைஞர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள்.
1. அவன் கிடக்கிறான் லுசுப்பய. அப்பாவ பாத்து அவனுடைய நண்பன் கிட்ட இப்படி சொல்கிறான் ஒரு இளைஞன்.

2. இதோ பாருடா தகர டப்பா தலையன். இது இரு கல்லுரி நண்பர்கள் அவர்களது வகுப்பு ஆசிரியரை பார்த்து இப்படி சொல்கிறார்கள்.

3. இவன் வந்தாலே இப்படிதான். இது வீட்டிற்கு வரும் சொந்த பந்தங்களை பார்த்து அவனது நண்பனிடம் சொல்லுகிறான் ஒரு இளைஞன்.

4. அவள பாக்கும் போதெல்லாம் வானத்துல பறக்கற மாதிரியே இருக்குடா . இது ஒரு இளைஞன் அவனது நண்பன் ஒருவனிடம் அவன் ஒன்று அல்ல இரண்டல்ல எந்த பெண்ணை பார்க்கும் போதும் இது மாதிரி சொல்லுகிறான்.

5. அவன் எப்பபாரு புருடா விடுவாண்டா. ஒரு நண்பனை பற்றி இன்னொரு நண்பனிடம் இது போன்று சொல்லுகிறான்.

இதை பற்றி உங்கள் கருது வரவேற்க்கப்படுகிறது

தினமும் அறிமுகம்:

நசரேயன் - என் கனவில் தென்பட்டது இவரது ஐ டி யின் அவலம் அழிச்சாட்டியம்
பாகம் 1 - பாகம் 1
பாகம் 2 - பாகம் 2


பாரதி - தமிழ் நிதி இந்த தளத்தில் எப்படி பணத்தை சம்பாதிப்பது அல்லது சேமிப்பது என்ற விசயங்கள் சொல்லப்பட்டு இருக்குதுங்கோ. பங்கு சந்தை நிலவரம், பொருளாதாரம், வியாபாரம் என பல பயனுள்ள தகவல்கள் மற்றும் விமரிசங்கங்களை பார்க்க முடிகிறது.


பெருந்தேவி இன்ன பிற இவர் கவிதை, கதை என எழுதி வருபவர்

தினம் ஒரு தித்திப்பு 2:
எளிதாக சாதிக்கக்கூடிய சிறிய காரியங்களைக் கொடுத்து குழந்தைகளுக்கும் பள்ளியில் உற்சாக மூட்டுங்கள் என்று கூறுகிறார்கள் மனநூலார் இப்படிப் பல சிறிய சாதனைகள் மனதில் ஒரு பழக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றன ஒரு வெற்றி மனநிலையை அவை அமைத்து விடுகின்றன இந்த அனுபவம் பின்னால் பெரிய லட்சியங்கள் சாதனையாவதற்கு வழி காட்டுகிறது குழந்தைகளை வளர்க்கும்போது நமக்கு வீட்டிலும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கூடத்திலும் எத்தனை பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள் ஏ மக்கு நீ உருப்படமாட்டாய் என்று கோபப்படும் ஆசிரியர் மாணவரின் எதிர்காலத்திற்கு எத்தனை கேடு புரிகிறார் என்பதைச் சற்று கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள்

சந்திப்போம் சிந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Monday, November 23, 2009

வலைச்சரத்தில் முதல் நாள்...

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும், பரிந்துரை செய்த ரம்யா அக்காவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைச்சர மற்றும் வலைபதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் ஒரு சென்னை வாசி. கல்லூரி முடித்து தற்போது கணினி துறையில் பணி புரிந்து வருகிறேன். 2008ல் வலை பதிவு எழுத ஆரம்பித்து 30க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன். அதில் கதை, கவிதை, மொக்கை என பல. நான் ஆங்கிலத்தில் (Mr-Message) என்ற ஒரு வலைபதிவும் எழுதிவருகிறேன்.

இயல், இசை, நாடகம் என அனைத்தயும் வளர்த்த நம் தமிழ். இப்போது நமது வலைப்பதிவர்கள் மூலமாக வளர்கிறது.ஒவொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதை தேடி நாம் நம் வாழ்வில் வெற்றி என்னும் கொடியை நாட்ட வேண்டும். அந்த பணியில் வலைசரத்தின் பங்கு மிகவும் வியக்கும் அளவிற்கு உள்ளது.

தினமும் அறிமுகம் பகுதியில் நான் எழுதவிருக்கும் இல்லை அறிமுகபடுத்தவிருக்கும் முகங்கள் நீங்கள் அறிந்தவராகவும் இருக்கலாம் அறியாதவர்களாகவும் இருக்கலாம். அந்த அறிமுக படலத்திற்கு நான் அளித்த தலைப்பு இது: (பறவைகள் பல, குஞ்சுகள் சிலபல/பலசில, முட்டைகள் சில)

பறவைகள் பல: இதுவரை பல பதிவுகளை வெற்றிகரமாக பதித்து வலையுலகில் நிலையான இடம் பிடித்த பறவைகள்.

குஞ்சுகள் சிலபல/பலசில: இடைப்பட்ட இவர்கள் பதிவுகள் பல எழுதி சில வெற்றியும் கண்டவர்கள்.

முட்டைகள் சில: புதிதாக பதிவுலகில் பல கனவுகளுடன் நிலையான இடம் பிடிப்பதற்க்காக எழுத ஆரம்பித்திருக்கும் சில முட்டைகள்.

தினமும் மூன்று அறிமுகம்: ஒரு பறவை, ஒரு குஞ்சு, ஒரு முட்டை:

பத்ரி சேஷாத்ரி - எண்ணங்கள் புத்தகம், அரசியல், தொலைத்தொடர்பு, கல்வி, அறிவியல், சமூகம், பயங்கரவாதம், தொழில், வர்த்தகம் அனைத்து துறைகளைப்பற்றி இவர் பதிவுகள் மிகவும் தெளிவாக கூறும்.

மெய்யப்பன் - "அனாமிகா" பாமரனின் பிதற்றல்கள் கவிதைகளை சரமாக தொடுப்பவர் இவர்.

ராசு கோவை - இவர் உபயோகமான குறிப்புகள் கொண்ட இணைய தளத்தையும், இவர் அனுபவங்களையும் வலைப்பதிவின் மூலம் கொடுத்து வருகிறார்.

தினம் ஒரு தித்திப்பு 1:

ஆசைகளில் நியாயம் இருக்கும் போது நமது ஆசைகள் பிறர் உரிமைகளை பாதிக்காத போது ஆசைகளினால் நமக்கு உண்மையான ஈடுபாடு நிரந்திரமாக துவங்கும் போது ஆசைகள் நமது மனதில் திடமான வலுப்பெறும் போது அவை லட்சியமாகிறது.

இதுவரை நாம் எங்கிருந்தோம் எப்படி இருந்தோம் என்பதை பொறுத்ததல்ல லட்சியம். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இது நாள் வரை இருந்திருக்கலாம். நாளை எதிர்காலத்தில் எங்கே போக விரும்புகிறோம் என்பதை பொறுத்ததே லட்சியம். லட்சியம் தீர்மானிக்க பட்டு விட்டால் நாளடைவில் பாதை அமையும், பாதையில் நடக்கத் துவங்கும் போது லட்சியம் தீபமாய், ஒளியாய் வழிகாட்டும்.

சந்திப்போம், சிந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Sunday, November 22, 2009

Dear Bloggers

Very Sorry - I have no tamil font as of now

This week, our friend A M SYED ha sposted six posts and received around 250 replies

He has done a good job - He has introduced many bloggers - in various categories.

I am very happy in thanking him, on behalf of VALAICHCHARAM.

ALL THE BEST SYED

Starting from next Monday ( 23.11.2009). Our friend RAMAKRISHNAN will be taking over as

EDITOR. He has a blog called

" சின்ன உலகத்தில் பெரிய அறிவாளி "


and posts are being posted there using the nick name ANNAN VANANGAMUDI. He lives in Chennai. He has started his blog in 2008 and posting good posts - varieties of posts including MOKKAI.

WE welcome him on behalf of VALICHCHARAM.

All the best - VANANGAMUDI

Cheena
மேலும் வாசிக்க...

புதிய பதிவர்களும் விடைபெறுதலும்..!

வலையுலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் நண்பர்களுக்கான
அறிமுகத்துடன் இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியை மனமகிழ்வுடன் நிறைவு
செய்கிறேன்.

ஒரு வாரம் முழுதும் பொறுமையாக பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும், இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

வலைச்சர பொறுப்புடன் நின்று விடாமல்,என்னுடைய தனிப்பட்ட வலைதளமான
மழைக்கு ஒதுங்கியவையிலும் புதிய பதிவர்களையும் குறிப்பிடத்தக்க
பதிவுகளையும் அறிமுகம் செய்யலாமென்ற ஆவலும் இருக்கிறது.உங்களின்
ஆதரவுடன் ..!!

சமீப காலங்களில் தம் அதிரடி பதிவுகளால் வலையுலகை
கலக்கி வரும் பதிவர்கள்:


1.ஹூஸைனம்மா

2.ஷஃபி

3.நாஞ்சில் பிரதாப்

4.லெமூரியன்

5.ஸாதிகா

*****************
மேலும் வாசிக்க...

Friday, November 20, 2009

க‌விதைக‌ளைப் பெய்யும் ம‌ழை..!


அரச மரத்தடி குளிர்ந்த நிழலைப் போல,சுட்டெரிக்கும் வெயிலையும் சிலாகிக்க ஆரம்பித்து விட்டீர்களா ? தனிமையின் நிசப்தத்தை விட, ஜன நெரிசலும் வாகனங்களின் பேரிரைச்சலும் உங்களுக்கு மன அமைதியை தருகிறதா ? பாறைகளுக்கிடையில் உறங்கிக் கொண்டிருக்கும் தேரையுடன் பேசத் துடிக்கிறீர்களா ? புத்தகங்களும் இசையும் அலுத்து விட்டதா ? காதலும் மழையும் போதும் என்கிறீர்களா ? ஏதேதோ காரணங்களுக்காக இந்த பூமி போதவில்லை என்கிறீர்களா ? அடிக்கடி கோபம் வருகிறதா ?? இல்லை கோபமே வருவதில்லையா ??

நீங்க‌ளும் க‌விஞராகி விட்டீர்க‌ள்...!!!



******

"சொற்களோடு புணரும் சாத்தியமற்ற
நிசி நுனி வளர் பொழுதில் .
மேல்தட்டு மண்ணகழ்ந்தோடிய புழுவின்
வழித்தடமாய் வெடிப்புகளால்
நிரம்புகிறது .
வீட்டுள் வீடுகட்டும்
மஞ்சள் குளவியின் பிருஷ்ட
கொடுக்கு விஷம் தின்ற
புழுவென நிறம் மாறுகிறது
இதயம் .
வன்முயக்க குரூர திருப்தி
ஊடற் பெருநிறையையுன் மேல்
கவிழ்த்ததன் .
வன்மம் தொலைந்த பின்னொரு நொடியில்
அழத்தொடங்குகிறேன் யார்க்கும்
கேட்டிராவண்ணம்...."


மரண ரசனை கொண்ட கவிஞன்!! பாலா என்கிற பாலமுருகன்.

வாழ்நாளின் பெரும்பகுதி நடுக்கடலில் கழிக்கும் இக்கவிஞனின் தனிமை அடர்த்தியான‌ வரிகளை உமிழ்கிறது.சொற்சிக்கனத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன் மொழி நடையை படிமங்களாக்கி, முற்றிலும் புதிய வாசிப்பானுபவத்தை தோற்றுவிக்கிறான்.

****

ஒருவேளை
இன்று பார்க்கலாம்
அக்காவும் நீங்களும்..

"உலகத்தில் இல்லாத தொம்பியை"
(இப்படித்தான் உச்சரிப்பாள், இறுதியில் அக்கா!)

-------

நீ இல்லாமல் போய்ட்டியே
அப்படி ஒரு மழைடா"
மூவாயிரம் மைலை
நனைக்கிறது
மொபைல்.

தட்டச்சு மொட்டில்
தவிக்கிறது விரல்.
திரையில் அவள்


ஓரிரு வார்த்தைகளில் மனதை கலங்கடிக்கச்செய்யும் வல்லமை படைத்த கவிஞன் பா.ராஜாராம் "பா.ரா" என்று நண்பர்களால் உரிமையோடு அழைக்க‌ப்ப‌டுகிறார். மனித உறவுக‌ளினூடே புதைந்திருக்கும் மென் உணர்வுகளையும் இறுக்கங்களையும் பேச்சு வ‌ழ‌க்கில் போகிற‌ போக்கில்,க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லின் ஈர‌த்தைப் பிழிகிறார் தன் க‌ருவேல‌ நிழ‌ல் ப‌க்க‌ங்க‌ளில்.

*****

"உரிந்து கிடக்கும் பாம்புச்சட்டையில்
துளி விஷமும் இல்லை மெக்சிகோ சீக்கு
வந்து புதைக்கும் ஜில்லாவின்
முதல் பிரேதத்தை விட

தீரக்குடித்தாயிற்று ஆகாய நீலத்தை
மேகம் முளைக்கும் வரை
தான் பணப்பை பதுக்கும் இடத்தில்
அடை வைத்துக் கொள்வதாய் சொன்ன தேவதைக்கு
இரண்டு பெயர்

காயங்கள் ஆற்றும் செவிலிப் பெண்
மாதவம் செய்து கொண்டிருக்கிறாள்
தெய்வங்கள் புகைப்படமாகிவிட்ட உலகில்.."



வழக்கமாக கவிஞர்கள் பயன்படுத்தும் யுத்திகளை முற்றிலுமாக‌ நிராகரித்து விடுகிறார் நேசமித்ரன். புதிய வார்த்தைப் பிரயோகம், பன்முகத்தன்மை, செறிவான வாக்கிய கட்டமைப்பு என்று முழுக்க முழுக்க புதிய தளத்தில், தமிழ்க்கவிதைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சியில் பெருமுனைப்போடு ஈடுபடுகிறார்.

"கவிதை உருவானவுடன் படைப்பாளி இறந்து போகிறான் .வாசிக்கும் அனைவருக்கும் அது சொந்தமாகி விடுகிறது. "

கவிதைகளைப் பற்றிய தன் கருத்துகளை சமரசமின்றி "நான் பயிலும் நரகத்தின் மொழி" எனும் இப்பதிவில் நிறுவுகிறார்.

****

"நாகூராச்சி வீட்டில்
செம்பருத்தி பூ
பாமா அக்காவுடன்
சேர்ந்து மல்லிகைக்குவியல்
கோதை பாட்டி
எப்போதும் கனகாம்பரக்காரி
சுவர் நீண்ட
பால்கனியில் வளர்ந்து
உதிர்ந்திருக்கும் செண்பகவல்லிகள்
பவானி வீட்டில் தோட்டம் இல்லை
அவள் பார்வையை
மாத்திரம்
பறித்து வருவேன்.
என்றாலும்
ணிசாவுக்கு பிடித்த அந்தக்கொத்துப்பூவை
பறிப்பதை விட பார்க்கப் பிடிக்கும்.."


இப்படி மனம் வருடும் கவிதைகளையும் சில நேரங்களில், தற்கொலை,தீக்குளித்தல் என்று வன்மமும் கழிவிரக்கமும் நிறைந்த கவிதைகளையும் எழுதும் கவிஞர்
"சென்ஷி" வளைகுடா இலக்கியவாதி. "அந்தரவெளிகள்" என்னும் மின்குழுமத்தை நடத்தி வருகிறார்.முழுக்க முழுக்க தலை சிறந்த கவிஞர்களை உறுப்பினர்களாக கொண்ட அந்த‌
கவிதைக் குழுமத்திலிருந்து வரும் மின்மடல்கள் வெகு சுவாரஸியம்.

****

மேலும் சில‌ க‌விதைப் ப‌க்க‌ங்க‌ள்

1.சத்ரியனின் "மனவிழி"'

2.பிரவின்ஸ்காவின் பக்கங்கள்

3.சி. கருணாகரசுவின் "வெள்ளை மனமும் சிவப்பு சிந்தனையும்... "

4.விஜ‌ய் க‌விதைக‌ள்

5.வேல்க‌ண்ண‌னின் ப‌க்க‌ங்க‌ள்

****
மேலும் வாசிக்க...

Thursday, November 19, 2009

திக‌ட்ட‌த் திக‌ட்ட‌ புத்தக‌ங்க‌ளும் இல‌க்கிய‌மும்..!



"ஒரு புத்தகம் எனது கனவு

ஒரு புத்தகம் எனது நிஜத்தின் நிழல்

ஒரு புத்தகம் திரியைத் தூண்டும் விரல்

ஒரு புத்தக‌ம் ஆசிரியரின் பிரம்பு

ஒரு புத்தகம் கண்ணாடி

ஒரு புத்தகம் புன்னகை

ஒரு புத்தகம் காணாமல் போன என் தேசம்..!
"


புத்தகங்களோடே வாழ்ந்து கொண்டிருக்கும் வெகு சிலரைப் பற்றிய பதிவு இது.


*********


1.கிருஷ்ண‌ பிர‌புவின் "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்"

இப்பதிவை நான் எழுதி முடிக்க‌ த‌ன் முழு உழைப்பையும் ப‌ரிச‌ளித்த‌ புத்த‌க‌ப்பிரிய‌ர், சென்னை இல‌க்கிய‌வாதி ப‌திவ‌ர் கிருஷ்ண பிர‌புவுக்கு இப்ப‌திவு ச‌ம‌ர்ப்ப‌ண‌ம்.கிருஷ்ண‌ பிர‌பு சென்னை த‌னியார் நிறுவ‌ன‌மொன்றில் வெப் டிசைனிங் துறையில் ப‌ணிபுரிகிறார்.தேடி தேடி புத்த‌கங்க‌ளை வாங்கிப் ப‌டிக்கும் இவ‌ர்,த‌ன் ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் புத்த‌கங்க‌ளையே ப‌ரிச‌ளிக்கிறார்.புத்த‌க‌ வெளியீட்டு விழாக்க‌ள்,கேணி போன்ற‌ இல‌க்கிய‌ கூட்ட‌ங்க‌ள் என‌ எழுத்து ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌ எல்லா இட‌ங்க‌ளிலும் காண‌க்கிடைப்பார்.

கேணி இல‌க்கிய‌ ச‌ந்திப்பு குறித்த‌ இவ‌ர‌து க‌ட்டுரைக‌ளை வாசிக்க, "கதைகள் மற்றும் கட்டுரைகள்" வ‌லைத‌ள‌ம் பாருங்க‌ள்.

****

2.அழியாச் சுடர்கள்

ந‌வீன‌ த‌மிழ் இல‌க்கிய‌ க‌ர்த்தாக்க‌ளின் அரிய ப‌டைப்பு பொக்கிஷ‌ங்க‌ள் இத்த‌ள‌ம் முழுதும் காண‌க்கிடைக்கின்ற‌ன‌.புதுமைப்பித்த‌ன்,ஜெய‌காந்த‌ன்,கி.ரா போன்ற‌ ப‌ழைய‌ ஜாம்ப‌வான்க‌ளிலிருந்து தொட‌ங்கி,க‌ந்த‌ர்வ‌ன்,மெள‌னி,சுந்த‌ர‌ ராம‌சாமி வ‌ழியே ப‌ய‌ணித்து இன்றைய‌ ஜெய‌மோக‌ன்,ம‌னுஷ்ய‌புத்திர‌ன் வ‌ரை ஏராள‌மான‌ எழுத்தாளர்க‌ளின் ஆக்க‌ங்க‌ளும் அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ குறிப்புக‌ளும் அழியாச்சுட‌ரில் காண‌லாம்.மேலும் த‌மிழின் முத‌ல் சிறுக‌தை என்று அரிய‌ப்ப‌டும் 'குளத்தங்கரை அரச மரம்' உள்ளிட்ட‌ அரிய‌ ப‌ல‌ தொகுப்புக‌ள் இத்த‌ள‌த்தில் புதைந்திருக்கின்ற‌ன‌.

****

3.வே.சபாநாயகத்தின் "நினைவுத்தடங்கள்"

"சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான் காண்பிக்கும்; கடைசியில் தான் தெரியும் தலை!" கி.ரா.வின் எழுத்துக்க‌லை ப‌ற்றி குறிப்பிடும் இந்த‌ப் ப‌திவோடு கடித‌ இல‌க்கிய‌ம், நினைவுத்த‌ட‌ங்க‌ள்,ப‌ய‌ண‌க்க‌ட்டுரைக‌ள் என்று இல‌க்கிய‌ம் குறித்த‌ ஒரு முழுமையான‌ தொகுப்புக‌ளை எழுதி வ‌ரும் முதுநிலை விரிவுரையாள‌ரான‌ திரு.வே.சபாநாயகம் அவ‌ர்க‌ள் "அக்கரைப் பச்சை,அன்பின் மகத்துவம் என்று குழ‌ந்தைக‌ளுக்காக‌வே பிர‌த்யேக‌மாக‌ இர‌ண்டு புத்த‌க‌ங்க‌ள் எழுதியிருக்கிறார்.

****
4.சேர‌லின் "புத்த‌க‌ம்"

ந‌வீன‌ க‌விஞ‌ர் என்ற‌றிய‌ப்ப‌டும் சேரல் என்கிற சேரலாதன் என்னும் இளைஞ‌ரால் நிர்வ‌கித்து,எழுத‌ப்ப‌ட்டு வ‌ரும் புத்த‌கங்க‌ள் குறித்த இவ்வ‌லைத்த‌ள‌த்தில் ஞான‌சேக‌ர்,பீ'மோர்க‌ன் என்று பலர் தான் வாசித்த புத்தகங்கள்,சிறுகதை தொகுப்புகள்,புதினங்கள் குறித்து நேர்த்தியான நடையில் எழுதி வருகின்றனர்.எழுதப்பட்ட 51 பதிவுகள் ஒவ்வொன்றுமே முத்துக்கள் என்றாலும் நான் மிகவும் ரசித்த பதிவுகள்,

வ‌ண்ண‌தாசனின் "பெய்த‌லும் ஓய்த‌லும்" பற்றிய சேரலின் க‌ட்டுரை

பீமோர்க‌னின் "மெள‌னியின் க‌தைக‌ள்" குறித்த‌ க‌ட்டுரை

****
5.ராமஸ்வாமி வைத்யநாதன் & ப‌க்ஸின் "கூட்டாஞ்சோறு"

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்த நண்பர்களான ராமஸ்வாமி வைத்யநாதன் மற்றும் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் இருவரும் தங்களுடைய அனுபவங்களையும்,புத்தகம் மற்றும் சினிமா பற்றியும் எழுதுகிறார்கள்.இவர்கள் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் நூவார்க் நகரில் அருகருகே வசிக்கிறார்கள்.ப‌க்ஸ் ப‌ற்றி குறிப்பிடும் போது ராம‌ஸ்வாமி இப்ப‌டி சொல்கிறார்."இந்த ப்ளாக்குக்கு தான் ஒரு guest author என்று அவன் நினைக்கிறான், co-author என்று நான் நினைக்கிறேன்!".

****

6.லேகாவின் "யாழிசை ஓர் இல‌க்கிய‌ ப‌ய‌ண‌ம்"

த‌மிழ் இல‌க்கிய‌ நாவ‌ல்க‌ள்,சிறுக‌தை தொகுப்புக‌ள் ப‌ற்றி வ‌லையுல‌கில் நான் முத‌ன் முத‌லாக‌ அறிந்து கொள்ள‌ கார‌ண‌மாயிருந்த‌து லேகாவின் இவ்வ‌லைப்பூ.ம‌துரையை தாய‌க‌மாக‌ கொண்ட‌ லேகா, சென்னையில் ப‌ணிபுரிகிறார்.நான் முன்பு வேலை செய்த‌ ப‌ழைய‌ மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் தான் அவ‌ர் இப்போது ப‌ணிபுரிகிறார் என்ற‌ உண்மை அந்நிறுவ‌ன‌த்தை விட்டு நான் வெளிவ‌ந்த‌வுட‌ன் தான் தெரிய‌ வந்த‌து.த‌ன் த‌ந்தை வாயிலாக‌ த‌மிழ் இல‌க்கிய‌த்தின் மீது தீராக்காத‌ல் கொண்ட‌ லேகா,வாசித்த‌ புதின‌ங்க‌ள்,சிறுக‌தை தொகுப்புக‌ள்,உல‌க‌ சினிமா என்று சிலாகித்து எழுதுகிறார்.எஸ்.ரா வின் சிற‌ந்த‌ வ‌லைப்பூக்க‌ள் ப‌ட்டிய‌லில் லேகாவின் "யாழிசையும்" ஒன்று.

****

இன்னும் சில‌ புத்தக‌ வ‌லைப்பூக்க‌ள்

அ) விருபாவின் வ‌லைப்ப‌க்க‌ம் த‌மிழ்ப்புத்தக‌ த‌க‌வ‌ல் திர‌ட்டு

ஆ) வ‌ட‌க‌ரை வேல‌னின் "நூல்ந‌ய‌ம்"

இ) மா.சிவகுமாரின் புர‌ட்டிப் போட்ட‌ ப‌டைப்புக‌ள்"

ஈ) நிழ‌லின் "த‌மிழ் புத்த‌க‌ம்"

*****
மேலும் வாசிக்க...

Wednesday, November 18, 2009

க‌டித‌ங்க‌ளும் சில‌ நினைவுக‌ளும்..!



இப்போதெல்லாம் மழை கூட சலிப்பை ஏற்படுத்துகிறது.எப்போது பார்த்தாலும் நொச நொசவென்று பெய்து தொலைக்கிறது.நமக்காகவே பார்த்து பார்த்து பெய்கிறதென சிலாகிப்பதற்கு நீ இல்லாத ஒரு காரணத்தாலும் அல்லது அந்த‌ ஒரே காரணத்தாலும் இந்த வெறுமை தோன்றியிருக்கலாம்.மழையைக் கூட பழிக்க ஆரம்பித்து விட்டேன் என்று உனக்கு தெரிய வந்தால் கோபப்படாதே.அல்லது கோபப்படு.சேறும் சகதியுமாக நாட்கள் ஆகி விட்ட பின்,மழையை குறை சொல்லி பயனில்லை என்று நீயும் உணர்ந்திருக்கக் கூடும்.மழையைத் தூற்றவும் ஆரம்பித்திருப்பாய்.நினைவுகளில் தூசி ப‌ட‌ர்ந்து ம‌ன‌வெளியெங்கும் ம‌ங்கலாக‌ தெரிய ஆரம்பித்திருக்கும் உன் பிம்பத்தில் இன்றளவும் ஈரப்படுத்தி கொண்டிருப்பது நம் மழை மட்டுமே.ஏதோ ஒரு மூலையில் இறுக்கி வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் உன‌துருவ‌ம் கால‌ சுழ‌ற்சியில் பிடி த‌ளர முனைப்படும் போது நிச்சயம் வானம் வெறித்திருக்கும்.

இர‌வெல்லாம் ப‌னிபெய்து க‌ண்ணாடி ச‌ன்னல்க‌ளில் ப‌டிந்திருக்கும் வெண்புகை ம‌ண்ட‌ல‌த்தின் ஈர‌த்தைப்போல‌ இன்னும் கொஞ்ச‌ம் மிச்சமிருக்கிறது உன் நினைவுகள்.ஏதோ ஒரு ம‌ழை நாளில் சாலையில் அடிபட்டு இற‌ந்து கிட‌க்கும் ப‌றவையை பார்க்கும் போதெல்லாம் நிராத‌ர‌வாகிப் போன‌ ந‌ம் காத‌ல் நினைவுக்கு வ‌ருகிற‌து.

இப்படித்தான் ஆரம்பிக்கின்றன நினைவுகளை பிழியும் கடிதங்கள்.கதறி அழ வேண்டும் போலிருக்கும் நேரங்களில்,தன் மடியில் கிடத்தி காதலுடன் தலையை கோதும் விரல்கள் கடிதங்களே.எல்லா உணர்வுகளுக்கும் வடிகாலாக அமையும் கடிதங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை,கடிதம் எழுதப்பட்ட பெறுநர் எப்போதுமே அதை வாசிப்பதில்லை.

அழகான நினைவுகளையும் இழையோடும் மெல்லிய சோகத்தையும் காதில் ரகசியமாய்ச் சொன்ன கடிதங்களின் தொகுப்பு இந்த பதிவு.


*******************


"கங்காவின் கடிதங்கள்,ஹேமா தன் சாய்வான எழுத்துக்களில் எனக்கெழுதிய நூற்று சொச்ச கடிதங்கள், என் அப்பாவின் உடைந்த கையெழுத்து, என் அண்ணனின் கொம்பில்லாத எழுத்துக்கள், வீணாவிடமிருந்து வந்த வாழ்த்து அட்டைகள், அபூர்வமாய் சங்கமித்ரா எழுதிய ஒரே ஓர் கடிதம், கல்லூரி நண்பர்கள்,பள்ளி நண்பர்கள் எனக்கனுப்பிய வாழ்த்து அட்டைகள், “ஏதாவது வேல அங்க கெடைக்குமா மச்சான்” கள் தீபாவளி பொங்கல் வாழ்த்துக்கள் என குவிந்திருக்கும் பெட்டியினை இப்போதெல்லாம் திறக்க அவகாசம் கிடைப்பதில்லை."

அய்யனாரின் "கடிதங்களை சேகரிப்பவனின் முதல் கடிதம்" சொல்லும் உணர்வுகள் அலாதியானவை.

"நாட் எக்ஸிஸ்ட்,புல்ஷிட்,சுயநலம், ஃபார் த சேக் ஆஃப் செக்ஸ்,என்றெல்லாம் ஒரு பாறையின் மீதேறி சத்தமாய் பிரசிங்கித்துக்கொண்டிருந்த என் தோள் தொட்டு திருப்பினாய் இடைவிடாது சொற்களைக் கொட்டியபடியிருந்த என் உதடுகளில் மிகுந்த தவிப்புகளோடு நீ முத்தமிட்ட கணத்தில் சகலமும் உறைந்து போனது.என் விரல்களை பிடித்துக்கொண்டபடி நீ முன்னால நடந்துபோகிறாய்.."

*******

"பேசிக்கொண்டிருக்கும் போதே என் கைகளை உன் கைகளில் எடுத்துக் கொண்டு விரல்களில் நீ சொடுக்கெடுக்கும் சுகம் அலாதியானது."

வித்யாவின் "முதல் கடிதம்" ஆள் அரவமில்லா ஒரு நிசப்த இரவை கடத்த இந்த ஒரு கடிதம் போதுமானதாக இருந்திருக்கலாம்.

******

"ஒரு முறை பேசிப்பாரேன் ஒரே ஒரு முறை பேசிப்பார்..பேசும் போது நான் மறுப்பது போலத் தான் நடிப்பேன் ஆமாண்டா உன் காதலின் ஆழம் எனக்கு நீ காட்டுவாய் என்று நான் மறுப்பேன்.."

தொலைந்து போன‌ காத‌லனை விழுங்க‌ விழுங்க‌ கேள்வி கேட்ட‌ தமிழரசியின் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்" ம‌ர‌ண‌ வ‌லி.!

******

இன்னும் சில‌ ப‌ழைய ஞாப‌க‌ங்க‌ள்

1.நிலவுநண்பனின் ம‌ற‌க்க‌ முடியாத‌ ஆக‌ஸ்ட் மாத‌ங்கள்"

2.சுகாவின் "திருந‌வேலி"

3.எதிரொலி நிஜாமின் தூர்த‌ர்ஷ‌ன் பொன்விழா நினைவுகள்"

மீண்டும் இணைவோம்..

*********************************************************************
மேலும் வாசிக்க...

Tuesday, November 17, 2009

கால‌த்தை வென்ற‌ க‌தை சொல்லிக‌ள்..!



ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்று எங்கோ படித்ததாக நினைவு.காய்ந்த இலைச்சருகுகளில் தீப்பொறி பட்டு பற்றி எரிதலைப் போல,கற்பனைக் கோடுகளில் ஒரு புள்ளி முழுமையான படைப்புக்கான நெருப்பைக் கொணர்கிறது.அது ஒரு மழை நாளில் ஆரம்பிக்கலாம்.அல்லது அடர்ந்த இருளின் மறைவில் உறங்கி கொண்டிருக்கலாம்.எதோ ஒரு புத்தகத்தின் ஒரு மூலையில் சிதைந்திருக்கும் ஒரு வார்த்தையால் தட்டி எழுப்பப்படலாம்.அல்லது பேருந்தில் முன் இருக்கையில் தன் தாயின் தோளில் கண்ணயர்ந்திருக்கும் சிறுகுழந்தையின் கண்களிலிருந்து துவங்கலாம்.இப்படித்தான் கதைகள் பிரசவிக்கின்றன என்று எந்த ஒரு படைப்பாளியும் அறுதியிட்டு சொல்வதில்லை.கற்பனைச் சிறகுகள் பறக்க முயலும் தருணம் வரை அதை வண்ணந்தீட்டி கொண்டே இருக்கிறான்.அவ்வப்பொழுது மனதிற்குள் அதற்கு உருப்போடுகிறான்.அழகு குறையாமல் சூசகமாக செதுக்குகிறான்.மொழி பிசகாமல் மெளனமாக கதையோடு உரையாடுகிறான்.உறவாடுகிறான்.இறுதியில் தாயின் வ‌லியோடு பிர‌ச‌விக்கிறான்.

ஒவ்வொரு ப‌டைப்பிற்குமுண்டான‌ அடிப்ப‌டை வேத‌னையை அனுப‌வித்து,பார்த்து பார்த்து த‌ன் க‌தைக‌ளை செதுக்கும் ப‌டைப்பாளிக‌ளுக்கான‌ அறிமுக‌ம் இன்று.


************

இரா.வ‌ச‌ந்த‌குமார்


"when i was young
we did it again

when i was younger
you did it first

you come near
i come near
we come out of fear

you smooch my lips
you catch my hips,
then
you smooch my lips
you smooch my lips"


வசந்தகுமாரின் க‌தைக‌ளினூடே ஒளிந்திருக்கும் இதுபோன்ற‌ நுணுக்க‌ வேலைப்பாடுக‌ள்,தீராத‌ அழ‌கிய‌லோடு க‌விதைக‌ளாக‌ ப‌ரிண‌மிக்கின்ற‌ன‌.

"பிறகு அவள் எங்கள் கூட்டத்தில் ஒன்றானாள்.கிளி முற்றத்தில் மேலும் ஒரு கிளி சேர்ந்தது.நாங்களும் விகல்பமில்லாமல் பழகினோம்"

எளிமையான‌ வ‌ரிக‌ளில் ம‌ன‌தை வ‌ருடும் எழுத்துக்க‌ள் எல்லோருக்கும் சாத்திய‌மான‌த‌ல்ல‌.பால்ய கால காதல் உணர்வுகளைச் சொன்ன வசந்தகுமாரின் "கிளிமுற்றம்" சிறுகதையில் வரும் வரிகள் அவை.த‌ன் வ‌லைப்ப‌க்க‌த்தை நிர‌ம்ப‌ த‌ர‌மான‌ சிறுக‌தைக‌ளால் நிர‌ப்பியிருக்கிறார்.முற்றிலும் புதிய‌ வாசிப்பானுப‌வ‌த்திற்கு இரா.வ‌ச‌ந்த‌ குமாரின் ப‌க்க‌ங்க‌ள் அதிக‌ம் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டுகின்றன.

1.கிளி முற்றம்

2.இராஜ விஷம் போலொரு முத்தம்

******

ஆடுமாடு

"இது மேய்ச்சல் காடு. கயிறு அவிழ்க்கப்பட்டதும் மேய்ச்சலுக்குத் தயாராகிற மாடு, ஆடுகளின் வாழ்க்கைதான் நமக்கும்.குறுணி நிலத்தில் முதுகு குனிந்து முத்தெடுக்கிற அந்த மேய்ச்சல் காரர்களின் வாழ்க்கையை எழுத பேனாக்கள் போதாது.இது கிராமத்து சகதி.நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்"

ஆடுமாடுக‌ளோடு இணைந்திருக்கும் இடைய‌ர்க‌ளின் வாழ்விய‌லை, ம‌ண் ம‌ண‌ம் க‌ம‌ழும் வ‌ட்டார‌ மொழியோடு வெகு இய‌ல்பாக‌ த‌ம் க‌தைக‌ளில் சொல்கிறார்.த‌ற்போது காடு என்ற‌ ஒரு தொட‌ர்க‌தையையும் எழுதி வ‌ருகிறார்.அவ‌ர‌து குறிப்பிட‌த்த‌க்க‌ க‌தைக‌ள்.

ஆட்டும‌ந்தையிலிருந்து ஒரு காத‌ல்

கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை-4

மூனு பொட்டு செவ‌ளை

******

அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா

விளிம்பு நிலை ம‌னித‌ர்க‌ளின் அலைக்க‌ழிக்கும் வாழ்விலிருந்து கிள்ளியெடுக்க‌ப்ப‌டுகிற‌து அமித்த‌ம்மாவின் க‌தைக‌ள். இவ‌ர‌து க‌தைக‌ளில் வாழும் வெங்கிட்டும், சின்னைய‌னும், த‌ன‌ல‌ட்சுமியும் என‌க்கு மிக‌வும் முக்கிய‌மான‌வ‌ர்க‌ள்.வார்த்தை ஜால‌ம்,அடுக்குத்தொட‌ர்,ம‌ய‌க்குமொழி இப்ப‌டி எந்த‌வித‌ ஜிகினா க‌ல‌வைக‌ளோ, போலிப் பூச்சுக‌ளோ இல்லாத‌ எளிமையான‌ க‌தைக‌ளை லாவ‌க‌மாக‌ கையாள்கிறார்.வேலைக்கு செல்லும் ச‌ராச‌ரி பெண்க‌ளின் ம‌ன‌ உண‌ர்வுக‌ளை பிர‌திப‌லிக்கும் இவ‌ர‌து க‌தைக‌ளின் ய‌தார்த்த‌ மொழி ந‌டை,வ‌டிவ‌ம், அநாவ‌சிய‌ செருக‌ல்க‌ள் இல்லாத‌ த‌ரமான‌ ப‌டைப்புக‌ள் வாச‌க‌ர்க‌ளை சுண்டி இழுக்கின்ற‌ன‌.க‌ன‌மான‌ ப‌ரிந்துரைக‌ள் சில‌.

உப்பு ( வ‌லையுல‌கில் அதிக‌ம் பேச‌ப்ப‌ட்ட‌ ப‌டைப்பு )

காக்காணி

உள‌வு

******

விசா

கேப்சியூள் க‌தைக‌ள் மூல‌ம் பிர‌பல‌மான‌ எழுத்தாள‌ர் விசா,வ‌ர்த்த‌க‌ ரீதியான‌ எழுத்துக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.ம‌னோத‌த்துவ‌ம்,சைக்கோ,திரில்லர்,கொலை என்று வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளுக்கு ஏற்ற‌ க‌தைக‌ளை த‌ன் வ‌லைப்ப‌க்க‌த்தில் எழுதி வ‌ருகிறார்.நாற்காலி நுனிக்கு கொண்டு செல்லும் எழுத்தோட்ட‌மும்,க‌தைக‌ள் முழுதும் வியாபித்திருக்கும் சுவார‌ஸிய‌ அலையும் எண்ண‌ற்ற‌ வாச‌க‌ர்க‌ளை இவருக்கு பெற்றுத்த‌ரும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.


திண்ணையில் வெளிவ‌ந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் வாசக‌ர்க‌ளிடையே ஆழ்ந்த‌ சல‌ன‌த்தை ஏற்ப‌டுத்திய‌ "சாவுகிராக்கி"
சிறுக‌தை குறிப்பிட‌த்த‌க்க‌ ஒன்று.மேலும் சில‌ க‌தைக‌ளை கொலைக‌ளை ப‌டிக்க‌,

முத‌லிர‌வில் முத‌ல் கொலை

அடுத்த‌ இர‌வில் அடுத்த‌ கொலை

ஷுட்டிங் ஸ்பாட்டில் கொலை

******

மேலும் மூன்று முத்துக்க‌ள்

1.விதூஷின் "ஆர்த்தர், லான்செட் மற்றும் சூனியக்காரி"

2.ஆதிமூலகிருஷ்ணனின் "அழுக்கின் அழகு" ( விகடனில் வெளிவந்த கதை )

3.க‌ண்ணாடி ஜீவ‌னின் "மிளகாய்ச்செடி" ( அனுபவ‌மாக‌ இருந்தாலும் அழ‌கான‌ க‌விதை அல்ல‌து க‌தை )


******
மேலும் வாசிக்க...

Monday, November 16, 2009

வலைச்சர அறிமுகம்-அ.மு.செய்யது

சக பதிவர்கள்,

எல்லாப்புக‌ழும் இறைவ‌னுக்கே !!

பள்ளிப்படிப்பை முடித்து ஆறு வருடங்களே ஆன‌ ஒரு மாணவனை ஆசிரியராக்கி பார்க்கும் அழகு உள்ளம் கொண்ட அன்பு நண்பர் சீனா அவர்களுக்கும், ப்ளாக் என்னும் ஒரு புதிய‌ உல‌கை என‌க்கு அறிமுக‌ப்ப‌டுத்திய‌ க‌ல்லூரி ந‌ண்ப‌ர் கொல்க‌த்தா ஜிம்ஜி என்கிற‌ ஏழும‌லைக்கும் ந‌ன்றிக‌ள் !!!!



சிவ‌ந்த மென்பாத‌ங்க‌ள் த‌ரை தொடுமுன், க‌ண்க‌ளை அக‌ல‌ விரித்து உல‌கை விய‌க்கும் சிறுகுழ‌ந்தையாகத் தான் என்னை பாவித்து வழி நடத்தி செல்கிறது வலையுலகம்.பொழுதுபோக்கு,சினிமா,அர‌சிய‌ல் போன்ற‌ வ‌ழ‌க்கமான‌ இத்யாதிக‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு க‌லை,இல‌க்கிய‌ம்,அறிவிய‌ல்,ம‌ருத்துவ‌ம்,ச‌மூக‌ சிந்த‌னைக‌ள்,உத‌விக்க‌ர‌ம் என்று ப‌ல பரிமாணங்களைக் காட்டி,என்னைப் போன்ற குழந்தைகளை தன் உள்ள‌ங்கையில் வைத்து செல்ல‌ங்கொஞ்சிக் கொண்டிருக்கிறது.

நிறைய‌ எதிர்பார்ப்புக‌ளுட‌னும்,க‌ன‌வுக‌ளுட‌னும் எழுத்துல‌கில் மேற்கொள்ள‌ வேண்டிய‌ ஐந்தாண்டு திட்டங்க‌ளுக்காக‌வும் "ம‌ழைக்கு ஒதுங்கிய‌வை" தொட‌ங்கி,காத்து வாங்கி கொண்டிருந்த‌ ஆர‌ம்ப‌ நாட்க‌ளில் முத‌ன் முத‌லாக‌ ந‌ட்புக்கர‌ம் நீட்டி,ஒரு ஏணியாக‌ இருந்து என்னை ஊக்குவித்த‌வ‌ர் அண்ண‌ன் ந‌ட்புட‌ன் ஜ‌மால் அவ‌ர்க‌ள்.வ‌லைச்ச‌ர‌த்தில் ஆர‌ம்பித்து,சளைக்காமல் ஒவ்வொரு ப‌திவ‌ராக‌ சென்று என் வ‌லைப்ப‌க்க‌த்தின் சுட்டியை கொடுத்து எட்டிப்பார்க்க‌ வைத்த‌வ‌ர்.இன்ற‌ள‌வும் என்னுடைய‌ எதிர்கால‌ திட்ட‌ங்க‌ள் குறித்தும்
மிகுந்த‌ அக்க‌றை கொள்ப‌வ‌ர்.

பிறகு அன்புடன் வாலு என்கிற ஆஷா ஜலால் அவர்களின் அறிமுகத்திற்கு பின் அவர்களோடு சேர்ந்து உருவாக்கிய என்னுடைய மற்றொரு வலைப்பூ இஸ்லாம் வாழ்வியல் வழிகாட்டி.

தடாக‌த்தில் எறிந்த‌ க‌ல்லாய், ஜமாலுடைய‌ அறிமுக‌த்திற்கு பின் ர‌ம்யா,சக்தி,அபுஅஃப்ஸர்,ந‌வாஸூதீன்,எம்.எம்.அப்துல்லா,ராக‌வ‌ன் நைஜீரியா,வால்பையன்,தமிழரசி,ஷஃபி என்று எழுத்துலகை தாண்டி எங்க‌ளுடைய‌ ந‌ட்பு வ‌ட்ட‌ம் அன்பின் நிழ‌லில் விரிவ‌டைய‌ துவ‌ங்கிய‌து.

பிறகு அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா,ஆதிமூல‌கிருஷ்ண‌ன்,பாலா,கார்த்திகை பாண்டிய‌ன்,பீர்,லேகா,கிருஷ்ணபிரபு,பா.ராஜாராம் என்று ஒரு ந‌ட்பு, இல‌க்கிய‌ ர‌சனை,வாசிப்பானுபவம் நிறைந்த ஒரு பாசக்கார கூட்ட‌ம் என்னை முழுமையாக‌ ஆக்கிர‌மித்து மூச்சுத்திண‌ற‌லை ஏற்ப‌டுத்திய‌து.

நண்ப‌ர்க‌ளின் அறிமுக‌ங்க‌ளோடு நிறைய‌ புதுமுக‌ங்களை அறிமுக‌ப்ப‌டுத்த‌ வேண்டிய‌ ஆவ‌லும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.இணைந்திருங்க‌ள் !!!
மேலும் வாசிக்க...

Sunday, November 15, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

இன்றோடு முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற - மலேஷியாவினைச் சார்ந்த சகோதரி சுபா - ஏற்ற பணியினைச்
சரிவர நிறைவேற்றி - ஆறு இடுகைகள் இட்டு - ஏறத்தாழ எழுபது மறுமொழிகள் பெற்று - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை வலைச்சரம் குழுவினர் சார்பில் வாழ்த்தி விடை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் அ.மு.செய்யது ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் மகாராஷ்டிர மாநிலத்தினைச் சார்ந்த பூனாவில் வசிக்கிறார். மென் பொருளாளராகப் பணியாற்றுகிறார். ஒராண்டு காலமாக இவரது வலைப்பூவான மழைக்கு ஒதுங்கியவை யில் இடுகைகள் இட்டு வருகிறார்.கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் எனக்கலக்கி வருகிறார்.
இளமை விக்டனில் சிறுகதை எழுதி இருக்கிறார்.

நண்பர் செய்யதை வலைசரக் குழுவினர் சார்பினில் வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன். . நல்ல பதிவர்களை அறிமுகம் செய்க என வாழ்த்துகிறேன்.

சீனா
மேலும் வாசிக்க...

இந்தியா ஒளிர்கிறது


அன்பின் பதிவர்களே

தமிழ் நாட்டினை இயற்கை சோதித்துப் பார்க்கிறது. பெரு மழை பொழிகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. அணைகள் நிரம்புகின்றன. அருவிகள் கொட்டுகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பெயர் புரியாத புயல்கள் சீறுகின்றன. கடல்கள் கொந்தளிக்கின்றன.

இவை வாழும் மனிதர்கள் அனைவரையும் சோதித்தாலும் - துயரப்படுத்தினாலும், இயல்பு வாழ்க்கையினை பாதித்தாலும் - சாலையோரம் வாழும் ஏழை மக்கள் - இருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி - அன்றாடம் காய்ச்சியாய் அல்லல் படும் இவர்கள் மழையின் கொடுமையால் மிகவும் துன்பப்படுகிறார்களே !. இவர்களுக்கு ஒளிரும் இந்தியா ஏதும் செய்ய வில்லையே. இவர்களும் இந்தியர்கள் தானே !

நாம் சாலையோரங்களில் ஒதுங்குகிறோமே ! இயல்பாக சாலைகளை கடக்கிறோமே ! இவர்களை இவர்கள் வாழ்க்கையினை என்றாவது கவனித்திருக்கிறோமா ? பார்த்து விட்டு கடந்து போக மனம் வந்தால் நன்று. நாம் இந்தியர் தான் என உறுதிப்படுத்தி விடலாம். கடந்து போகும் போது மனம் குமுறினால் நாம் மனிதர்தான். அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமென நினைத்து உதவி செய்ய விரைந்தால் நாம் மகாத்மா ஆகி விடுவோம்.

நாம் ஏதாவது செய்ய வேண்டாமா - சிந்திப்பது மனதோடு கரைந்து விடும். பேசுவது காற்றோடு கரைந்து விடும். செயலில் இறங்கினால்தான் நன்மை பிறக்கும். அரசு இயந்திரம் மெதுவாகத்தான் இயங்கும். நல்ல உள்ளம் படைத்த மக்கள் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் இவர்களுக்கு உதவ முடியும்.

என்ன செய்வது ? எப்படிச் செய்வது ? தன்னார்வலர்கள் நிறைந்த தொண்டு நிறுவனங்கள் இருக்குமே ! ம்ம்ம்ம்ம்ம்

நமது கடமை இடுகை இடுவதோடு முடிந்ததா - வேறு வழி தெரியவில்லையே ! ஆனால் நிச்சயம் ஏதேனும் செய்வோம் என்பது மட்டும் உறுதி.

நமது நண்பர் ரங்கராஜன் என்ற ரங்கா ஒரு படம் வரைந்திருக்கிறார். மேலே கூறிய அனைத்தும் அவரது மனதினை துயரப்படுத்தியதால் இப்படத்தினை வரைந்திருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகள்.


சீனா
மேலும் வாசிக்க...

விடைபெறுகிறேன்..

இனிய வணக்கம் நண்பர்களே...

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் என் சகோதரரின் திருமண வேலையால் நேற்று பதிவெழுத வர முடியவில்லை. மன்னிக்கவும். இந்த பதிவில் மேலும் ஒரு சில பதிவர்களை அறிமுகப்படுத்திவிட்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

இன்றைய முதலாவது வலைப்பூ, என்னுள்ளே!
தன்னுடைய அறிவுக்கு எட்டிய பல தகவல்களை சுவாரசியமாக நமக்குத் தொகுத்து கொடுத்திருக்கிறார் மணி.

இவ்வளவு நாள் கொஞ்சம் ‘சீரியசான’ வலைப்பூக்களையே பார்த்து வந்த நாம் கடைசியாக பார்க்கவிருப்பது அழகான சில கவிதைகளை சுமந்திருக்கும் வலைப்பூவான ,கண்ணாடி பிம்பங்கள்! கவிதை மழையில் நனைந்தவாரே எனக்கும் விடைகொடுங்கள்.


மேலும் வாசிக்க...

Friday, November 13, 2009

கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்...

என் இனிய வணக்கம் நண்பர்களே..

கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்...புதிதாய் பூத்த நட்சத்திரங்களைக் கண்டுகொண்டேன்...விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்! வாருங்கள் நண்பர்களே..உங்களுக்கும் நான் பார்த்த நட்சத்திரங்களைக் காட்டுகிறேன்.

முதல் நட்சத்திரம், நிலாமதியின் பக்கங்கள். இவரின் ஒவ்வொரு பதிவும் வலிக்கும் வரிகளுடனே அமந்துள்ளது. நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்...மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன் என்று சொல்லும்படியாக படித்துதான் பாருங்களேன்!

இரண்டாவது நட்சத்திரம், அப்படியா? இது என்ன அப்படியா என ஒரு நட்சத்திரம் என யோசிக்கிறீர்களா? அடடே..அப்படியா என அதிசயக்க வைக்கும் பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்,மெளனி.

மூன்றாவது நட்சத்திரம், டாக்டர் எஸ்.மரகதமணி. இவரின் கவிதைகளும் மற்றைய சில பதிவுகளும் அருமை. திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா எனும் இவரது அண்மைய பதிவு நெஞ்சை நெகிழ செய்கிறது. மறுக்க முடியாத உயிருள்ள எழுத்து!

என்ன நண்பர்களே...நிலாவின் ஒளி வெளிச்சத்தையும் நட்சத்திரங்களின் ரம்மியமான சூழலயும் ரசித்தீர்களா? காத்திருங்கள். மீண்டும் நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Thursday, November 12, 2009

வலைப்பூக்கள் பட்டியல்

வணக்கம் நண்பர்களே...

நான் இந்த 2 நாள்களில் அறிமுகப்படுத்திய பதிவுகளுக்கு வரவேற்ப்பு இல்லாததால், இன்று வெறும் வலைப்பூக்களின் பட்டியலோடு என் பதிவை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. தமிழால் இணைவோம்.
2. தீப்பெட்டி.
3.ஹாய் நலமா?

நன்றி நண்பர்களே!
மேலும் வாசிக்க...

Wednesday, November 11, 2009

முத்துக் குளிக்க வார்றீகளா?

வணக்கம் நண்பர்களே...

இன்று எனது பதிவை மிக சுருக்கமாக முடித்துக்கொள்ளும் நிலையில் உள்ளேன். அதனால் இன்று மூன்று முத்துக்களை மட்டுமே அறிமுகபடுத்தலாம் என்றிருக்கிறேன். முத்துக் குளிக்க என்னுடன் வார்றீகளா நண்பர்களே?

முதல் முத்து...உங்களுக்காக!

ஆன்மீகம், வாழ்வியல், அறிவியல் நிகழ்வுகள், தொழில்நுட்பம், ஆரோக்கியம் என பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இந்த பதிவர். இது ‘வேர்ட்ப்ரஸ்’சின் வலைப்பூ. அதனால் பதிவரின் பெயரை என்னால் கண்டுகொள்ள இயலவில்லை. மன்னிக்கவும்.

இரண்டாவது முத்து...உளறுவாயன்.

உள்ளதை உள்ளபடி உளறுபவன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் இம்முத்தை உருவாக்கியவர். நெஞ்சை உருக வைக்கும் கவிதை முதல் அறிவியல் அதிசயங்கள் வரை எல்லாவற்றிலும் கலக்குகிறார் உளறுவாயன்.

மூன்றாவது முத்து...பாரதீஸ் வெப்ளாக்

இவருடையதும் கதம்பமே. பல தகவல்களை நமக்கு அள்ளித்தருகிறது இந்த முத்து.


சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்துப் பார்க்க நேரமில்லைடீ இராஜாத்தினு இந்த முத்துக்களையெல்லாம் திறந்து பார்க்காமல் விட்டுவிடாதீர்கள் நண்பர்களே..நாளை மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Tuesday, November 10, 2009

முதல் நாள் இன்று...

அனைவருக்கும் என் இனிய வணக்கம்.

அறிமுகத்துக்குப் பின் இன்று முதன் முதலாக எழுதும்போது, இந்த இனிய கானம்தான் என் நினைவுக்கு வருகிறது...முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று வேராக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்! நான் புதிதாக தேடிய இந்த பூக்கள் வேராக என்னையும் உங்களையும் மாற்றுமா..இல்லை...எதிராக நடக்குமா? விடை விரைவில் தெரியும் :)

இன்று நாம் நம்மைச் சிந்திக்க வைக்கும் விஷயங்களை தொகுத்து வழங்கும் கதம்பமான வலைப்பூக்கள் சிலவற்றை உலாவ இருக்கிறோம். இவற்றில் பெரும்பாலான விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கும் அவலங்களை நமக்குப் புரிய வைக்கும் நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளன என்றால் மிகையில்லை.

பெண்களுக்கு எதிரான சில சமூக வன்முறைகளை இங்கே காணலாம். பெண்ணியம் எனும் இந்த பூவில் நிறைய சிந்திக்க தூண்டும் கருத்துக்கள் இருந்தாலும் இதை எழுதுபவர் யார் என்று தெரியவில்லை. எழுதுபவர் யாராக இருந்தாலும் எழுத்து சொல்லும் கருத்து முக்கியம் என்பதால் இப்பூவை நான் அடிக்கடி படித்து வருகிறேன்.

இந்த தேடலில் நான் பார்த்த இன்னுமொரு பூ, மானிடள். இது தமிழ் இலக்கியம் பற்றியும் மேலும் பல விஷயங்களைப் பற்றியும் சிந்திக்க வைக்கிறது. வாழ்க்கையில் நமக்குத் தெரியாத பல தகவல்களை மேற்கோளுடன் அழகான உரைநடையில் நமக்குத் தருபவர் முனைவர் திரு பழனியப்பன்.

பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவதற்கு தன்னால் ஆன தகவல்களை இப்பூவில் மாலையாக தொடுத்திருக்கிறார் கிராமத்துப் பையன். இவற்றைப் பற்றி நாமும் தெரிந்துவைத்துக்கொண்டால், நாளை ஒரு சகோதரியைக் காப்பாற்றும் வாய்ப்புக் கிடைக்கலாம் இல்லையா?

தினசரி வாழ்வில் நடக்கும் விஷயங்களில் நமக்குத் தெரியாதவற்றை விளக்கங்களுடன் கொடுக்கும் வலைப்பூ, தாசானுதாசன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நோக்கில், தான் படித்தவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இவர்.

அகற்றுவோம் அறியாமையை என்கிறது அடுத்து வரும் பூ. பெயரிலேயே இப்பூவை எழுதும் பிரதீப்பின் நோக்கம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பூவைச் சுற்றும் வண்டுக்கு அச்சாரமாக, சற்று உள்ளே போய் தேனெடுத்துவிட்டுதான் வாங்களேன்.

இன்று இந்த பட்டியல் போதும் என்றும் நினைக்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே..
மேலும் வாசிக்க...

Monday, November 9, 2009

இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்..


வணக்கம் வலையுலக நண்பர்களே..

நலமா? நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இந்த அறிமுக பதிவைத் தொடங்குகிறேன். அதற்கு முன், எனக்கு வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்.

மலேசிய திருநாட்டில் மலாக்கா எனும் மாநிலத்தில் குடிகொண்டிருக்கும் எனது பெயர் சுபாஷினி. என்னதான் மலேசியா எனது பிறந்த ஊராக இருந்தாலும் எனது முன்னோர் தோன்றிய இந்திய மண்ணோடு தொடர்பு வைத்துக்கொள்வதை நான் பெருமையாகவே நினைக்கிறேன். அதனாலேயே எனது மணவாளனும் இந்திய மண்ணின் மைந்தராக அமைந்தாரோ என்னவோ :)

சீனா ஐயா சொன்னதைப் போலவே நான்கு ஆண்டுகள் வங்கியில் பணிப்புரிந்த பின்னர் உள்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறேன். ஆசிரியப்பணியில் மேல் இருந்த அளவிலா காதலே இந்த பணி மாற்றத்திக்குக் காரணம்.
இப்போது என் வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆசிரியர்களைப் பற்றி நான் எழுதிய பதிவு ஒன்றை இங்கே சென்று காணவும்.

நான் தமிழ் வலையுலக வாசம் கொண்டது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்தான். சில நேரங்களில் பணியின் காரணமாக அதிகமாக எழுதமுடியாவிட்டாலும் வலையுலக வாசத்தை நான் முகர்ந்து கொண்டேதான் இருக்கிறேன். அப்படி சில நேரங்களில் நான் எழுதிய, கடல் கன்னிகள், அன்னையர் தினம் - ஒரு நாள் போதுமா? , நட்பின் எல்லை என்பது எதுவரை? , ஏன் சண்டை போடறோம்? ஆகிய பதிவுகளை நிறைய நண்பர்கள் படித்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன்.

சரி நண்பர்களே...என்னைப் பற்றிய அறிமுகம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். நாளை முதல் சில முத்தான பதிவுகளோடு உங்களைச் சந்திக்கிறேன். என்னை வரவேற்ப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று விடைப்பெறுகிறேன்.
மேலும் வாசிக்க...

Sunday, November 8, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் சிவசு வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ ஐம்பதர்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, தன் கடமையைச் சரிவரச் செய்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் புதிய - அறிமுகம் இல்லாத பல பதிவர்களை அறிமுகப் படுத்தி உள்ளார். அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகள் அனைத்துமே சிறந்த இடுகைகள் தான்.

அன்பு நண்பர் சிவசுவினை வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து ஒன்பதாம் நாள் துவங்கும் வாரத்திற்கு சகோதரி சுபா ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் பொதுவாக மொக்கைக்குழுமத்தில் கலக்கிக் கொண்டிருந்தாலும் , என் உலகம் மற்றும் நளபாகம் என்னும் குழுமப் பதிவிலும் இடுகைகள் இட்டு வருகிறார்.

சகோதரி சுபா மலேஷியாவில் ஒரு உள்நாட்டு வங்கியில் பணியாற்றி, பிறகு ஆசிரியத் தொழிலை ஏற்றவர். அங்கிருந்து இந்தியாவிற்கு சில மாதங்கள் முன்பாகத்தான் வந்து இங்கு ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழ் கற்றவர் - தமிழ் அறிந்தவர்.

சகோதரி சுபாவினை வருக வருக என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை சிறப்பாகச் செய்க என வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.




மேலும் வாசிக்க...

வலைச்சரம் நிகழ்காலம் சிவா நன்றி கூறுதலும், வழிவிடுதலும்

வலைச்சர வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

கடந்த ஒரு வாரமாக வலைச்சரம் பதிவில் இயன்ற அளவு பணியாற்ற வாய்ப்பு வழங்கிய அன்பின் சீனா அவர்களுக்கு நன்றிகள்

ஒளி தரும் விளக்குக்கும் தூண்டுகோல் கண்டிப்பாக தேவை, அந்த தூண்டுகோல் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த பணியைச் செய்கிற சீனா அவர்களை மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

பதிவுலகில் வாரம் ஒருவரை முழுமைப்படுத்தும் பணியை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்யும் வலைச்சரம் பதிவிற்கும், குழுவினருக்கும்
வாழ்த்துக்கள்.

இவ்வார பொறுப்பில் நிறைகள் இருப்பின் அன்பின் சீனா அவர்களுக்கும், குறைகள் இருப்பின் முழுக்க என்னையும் சாரும்.
என்னுடைய இடுகைகளை நிகழ்காலத்திலும், வலைச்சரத்திலும் பொறுமையாக படித்து பின்னூட்டமிட்ட எனதருமை நண்பர்களுக்கும் முக்கியமாக நன்றிகளைக் கூறி அடுத்து ஆசிரியப் பொறுப்பு ஏற்பவருக்கு வழிவிட்டும், வரவேற்றும், விடைபெறுகிறேன்

நன்றி நன்றி நன்றி

நிகழ்காலத்தில் சிவா

மேலும் வாசிக்க...

Saturday, November 7, 2009

வலைச்சரம் - நிகழ்காலத்தில் சிவா - ஆறாம் நாள்

நண்பர்களே

நம் வாழ்க்கை பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது, சிக்கல் வருகிறது என்றால் அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றே பொருள்.

”எந்த மாற்றத்திற்கும் தயார்!” என்ற ஊக்கத்துடன் மனதை வெட்ட வெளியாகத் திறந்து வைத்திருப்பர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.

”நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!” என்று அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே சிக்கலாகத் தெரியும்.

மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்தப் பிடிவாத மனதிற்குப் பெயர்தான் விதி... வினைப்பயன்...துரதிர்ஷ்டம் என்று பல பெயர்கள் வைத்துள்ளோம்.

சமையலில் சிறிது உப்பு அதிகம் என்றால் சற்று தண்ணீர் சேர்த்து சரி செய்யலாம்
அதே போல் தண்ணீர் அதிகமாகிவிட்டால் சற்று தண்ணீர் அதிகமாக்கி சரி செய்யலாம்.

அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும், (உறவுச் சிக்கல்கள்)
அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும் (தொழில்சிக்கல்கள்)

இனி அறிமுகம்


தமிழ்நெஞ்சம்ஹிப்ஸ் இவர் தேர்ந்தெடுத்து தருகிற கட்டுரைகளை படியுங்கள், நிச்சயம் உங்களில் உள்ளே ஒரு மாற்றம் வரும்,

ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
மன அழுத்தம் (Stress
மாத்திரையோ மாத்திரை


திருத்தம் இவரது முயற்சியைப் பாருங்கள், யாரும் செய்யாத ஒன்றை செய்து கொண்டிருப்பவர், தமிழ் புலமை உடையோர்க்கு விருந்து

ஆத்துல போட்டாலும்
இருள்சேர் இருவினை
கற்க கசடற'


ஞானப்பித்தனின் தொடர்வண்டியில் ஓர் கதை இவரது கட்டுரைகளை படிக்கும்போது அந்த இடங்களில் நானே பயணித்தது போல் உணர்வேன், நீங்களும் பொறுமையாக படித்து பாருங்கள்


பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 1
சிவகங்கா - கர்நாடகா

என்னுடைய இடுகைகளை தொடர்ந்து படித்துவரும் நீங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள :))

Laws of "ஜொள்"ளோ dynamics..

வாழ்த்துக்களுடன்

நிகழ்காலத்தில் சிவா
மேலும் வாசிக்க...

Thursday, November 5, 2009

வலைச்சரம்-நிகழ்காலம் சிவா-நான்காம் நாள்

சத்யராஜ்குமார் - இவரைப்பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவரது கதைகள் கதை படிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல், இயல்பான நடையில் உண்மைச்சம்பவம் போல் கண்முன்னே தோன்றும், மிக நிறைவான கதை சொல்லும் யுக்திக்கு சொந்தக்காரர். படித்துப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்

எக்ஸானந்தா

பாண்டேஜ்

நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு

பெண் பார்த்துப் பார்

மோப்பக் குழையும்


ஜாம்பஜார் ஜக்கு- கொஞ்சம் மனக்குழப்பம், அல்லது பணி அழுத்தம் காரணமாக மனம் சோர்வாக தெரிகிறதா? இந்த பதிவுகளைப் படியுங்கள், எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க என ஆச்சரியப்படுவீங்க

Urgent! இந்த ஜோக் புரியுதா பாருங்க!!!

உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு அதிசயமான TEST !!!!!

Printer வேலை செய்யாத போது அவசரமாய் காப்பி எடுப்பது எப்படி?

அவனும் அவளும்... தனியாக ரயில் கூப்பேவில் (18+ சிறுகதை)!!!


பூவுலகின் நண்பர்கள்  - பெயரே இவர்கள் யாரென உணர்த்தும், சமுதாய விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் பலவித உண்மைகளை நாம் உணர வைப்பவர்கள்

மேற்குலகின் குப்பைக்கூடையாகும் இந்தியா..!

பன்றிக் காய்ச்சல்: பலனடையும் மரண வியாபாரிகள்!

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்



நெஞ்சின் அலைகள் - பதிவுலகில் அணுவிஞ்ஞானம், பிரபஞ்ச அறிவியல் குறித்து எழுதும் பதிவு எனக்குத் தெரிந்து இது ஒன்றே..

சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?

காம சக்தி

தமிழில் முதல் அணுசக்தி நூல்



படித்துபார்த்து உங்கள் அனுபவங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் :))

நிகழ்காலத்தில் சிவா
மேலும் வாசிக்க...

Wednesday, November 4, 2009

வலைச்சரம் - தொழில்நுட்பப் பதிவுகள்

வலையுலகில் வலைப்பதிவு ஒன்றை தட்டுத் தடுமாறி ஆரம்பித்த பின்னர் ஒரே யோசனைதான் :)) ஒரு பக்கம் என்ன எழுதுவது என்று தெரியாத கருத்து வறட்சி,:))

மறுபுறம் பிளாக்குகளில் என்னென்னவோ தொழில்நுட்ப மாற்றங்களை மற்ற பதிவுகளில் காண்கிறோம், நாம அதை எப்படி பண்றது அப்படின்னுதான் !

code அப்படிங்கிறாங்க, அதை இங்க கட் பண்ணி அங்க பேஸ்ட் பண்ணுங்க அப்படின்னு சொல்றாங்க ஒண்ணுமே புரியலயே என தயங்கி நின்றபோது துணை செய்த பதிவுகள் இவை,

தொடர்ந்து தொழில்நுட்ப பதிவுகளை படித்து வந்தேன், யாரும் சொல்லிக் கொடுக்காமலே எல்லாம் கற்றுக்கொள்ள முடிந்தது..

படித்து பாருங்கள், தயக்கம் போய்விடும், கண்டிப்பாக உங்கள் தேவை நிறைவேறும்.



கணினித்துறை தொழில்நுட்பம்

வேலன்
கணிணி மென்பொருட்களின் கூடம்
பி.கே.பி
கிராமத்து பையன்
உங்களுக்காக
வேலன்
தேன் தமிழ்
அனூப்புடன் ஒரு ஐடி வலம்
கோ.மணிவர்மா
சங்கர்
சூர்யா கண்ணன்
தமிழ் கணிணி
தமிழ் வலைப்பதிவு
தமிழ் தொழில்நுட்பம்
தமிழ் வெஃப்
வன்னி தகவல் தொழில்நுட்பம்
மேனனின் கணினி உலகம்
கணித்துளி
தமிழ்ஹேக்ஸ்
காம்ஃபோகஸ்
டிஜிட்டல் வேர்ல்டு
தமிழ்வேர்ஸ்
ஸைபர்சிம்மேன்ஸ் பிளாக்
பொன்மலர் பக்கம்
கிராமத்துப்பையன்

இந்த பதிவுகளில் இருந்து தனி இடுகை எதனையும் நான் இங்கே குறிப்பிடவில்லை, காரணம் அனைத்துமே பயன்படக்கூடியவையே, உங்களுக்கு பயன் தந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நன்றி

நாளை சந்திப்போம்

வாழ்த்துக்களுடன்

நிகழ்காலத்தில் சிவசு
மேலும் வாசிக்க...

Tuesday, November 3, 2009

வலைச்சரம் - எனக்குப் பிடித்த, கவர்ந்த பதிவுகள்

வலைப்பதிவுகள் படிக்கும்போது ஒத்த கருத்துகள் உடைய வலைப்பதிவுகளையே பின் தொடர்ந்து படிக்கிறேன். விதிவிலக்குகள் நிறைய உண்டு :)

படிப்பது அனைத்து இடுகைகளையும்தான், ஏற்றுக்கொள்வது பொருத்தமான கருத்துகளை மட்டுமே, மற்றவை செய்திகளைப் போல்தான்,

அவர்களோடு முரண்பாடு கொள்வது எப்போதும் கிடையாது.

எங்கும் எதிலும் நல்லவைகளே என் கண்ணுக்கு தெரிகின்றன

இதோ நீங்கள் ஏற்கனவே அறிந்த வலைப்பதிவுகள் தான், பிடித்த இடுகைகள் மாறுபடலாம். மீண்டுமொரு முறை இங்கு..

தினமும் படிப்பது 115 பேரின் இடுகைகள், இது நாள்தோறும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது அதில் சில

ஷண்முகப்பிரியன்-  

பழகுவதற்கு எளிமையானவர், திரைத்துறைக்கு இவர் கிடைத்தது அதன் பாக்கியம் என நான் நினைக்கிறேன்


பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி-இது வரை நீங்கள் சந்தித்திராத எதிரி

ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு

உடல்,உள்ளம்,உலகம்

இறந்து விடு,யோகியே இறந்து விடு.(நூல் அறிமுகம்)



லதானந்த்- 

இவரைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவரது இடுகைகளைப் படிக்கும்போதே உற்சாகம் பற்றிக்கொள்ளும். கடைசிவரியில்   லதானந்த் ’டச்’ இருக்கும். வனத்துறையில் இருந்தாலும் அனைத்தையும் நன்றாக அவதானித்து எழுதுபவர்.


பதிவர்கள் பலவிதம்!

வாஹனப் ப்ராப்தி

கேள்வி பதில் போட்டாச்சு

இரு வாட்சிப் பறவை

வெற்றியா தோல்வியா?




ஓம்கார்

இவரின் எழுத்துக்கள் நவீன காலத்திற்கேற்ப புரியும்படி வாழ்வை ஆன்மீகவாழ்வாக, வேதகால வாழ்வாக வாழ்வது என்ற விசயங்களை எந்த சிரமும் இல்லாது நாம் அறியத் தருபவர்.



ஸ்ரீ சக்ர புரி - ஆன்மீகத் தொடர்

விசேஷ கால தாத்பர்யம்

இளம்பெண்ணுக்கு கிழவனை திருமணம் செய்ய விருப்பம்

ப்ராண சக்தி

ஹதயோகம்

ஜோதிடத்தில் பரிகாரங்கள் வேலை செய்யுமா?



கோவி.கண்ணன்

ஆன்மீகம், நாத்தீகம் இரண்டையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டு இரண்டிலும் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்.. இவரது ஒரு விசயத்தை அலசும் திறன் எனக்குப் பிடிக்கும் :)


யாதும் நாடே யாவரும் பாரீர் - 1

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1

இறைவன் படைக்கிறானா ?

இறை நம்பிக்கை முற்றிலும் தவறா ?

மதுரை திருக்காட்சி பகுதி 1
 


என் கணேசன் - 

இவரது ஒவ்வொரு இடுகையும் ஏதாவது ஒரு வாழ்வை உயர்த்தும் சிந்தனைகளை தாங்கி நிற்கும், தொடர்ந்து படித்து வந்தால் மனதில் மாற்றம் உறுதி.


விதியை வென்ற விடாமுயற்சி

மனதோடு போராடாதீர்கள்!

மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

கொடுங்கள்.. பெறுவீர்கள்!..

இதுவும் கடந்து போகும்.


கதிர், 

தனியாக எந்த இடுகையையும் சுட்ட வேண்டியதில்லை, சமுதாய விழிப்புணர்வுக்கு நம் பங்கு என்ன எனபதை தெளிவாக உணர்த்தக்கூடிய வகையில் அற்புதமாக எழுதுபவர். 


இவரைப் பற்றி கிராமப்புறத்தில் வழக்கில் இருக்கும் கொங்குதமிழின்  சிறப்புச் சொற்களை
நமக்கு மறக்காமல் இருக்கவும், வருங்கால சமுதாயம் உணரவும் எழுதி வருபவர்.

படித்துப் பாருங்கள், இணையமும், வலைப்பதிவும் நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நம் கையில்தான், தேர்ந்தெடுத்து வாசியுங்கள், நாளை சந்திப்போம், நட்புகள் பெருகட்டும்

நிகழ்காலத்தில் சிவா
மேலும் வாசிக்க...

Monday, November 2, 2009

வலைச்சரம்- நிகழ்காலம் சிவா சுயஅறிமுகம்

வாழ்விலும் வலையுலகிலும் மாணவனாக இருக்கும் என்னை இந்த வார பொறுப்பு ஆசிரியராக அறிமுகம் செய்த நண்பர் சீனா அவர்களுக்கு முதலில் நன்றி கலந்த வணக்கங்கள்..

தொடர்ந்து வலைச்சரத்தில் பலதரப்பட்ட நண்பர்களை ஆசிரியர்களாக பார்த்து, படித்து கலந்துரையாடி மகிழ்ந்த வலைச்சர தொடர்வாசக நண்பர்களுக்கும் வணக்கங்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைப்பதிவின் பெயர் நிகழ்காலத்தில்...

முதலில் என்னைப் பற்றி சுய அறிமுகம் :)

என் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். திருப்பூரில் பிறந்து வளர்ந்தேன்.
பனியன் சம்பந்தமான தொழில், சுய தொழில்

கணினி தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இணையத்தில் தேட,முதலில் பி.கே.பி அண்ணன் அவர்களின் வலைப்பதிவுகள்தான் முதலில் எனக்கு அறிமுகம்.

அதன் பின்னர் தமிழ்மணம், தமிழிஷ் திரட்டிகளின் மூலம் ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகள் இருப்பதை அறிந்து படிக்க ஆரம்பித்தேன்.

நட்பை பெரிதும் விரும்பும் நான், நண்பர்களை பெறும் வாய்ப்பாக எண்ணி
எனக்கென வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்தேன்

இப்போது இதோ உங்கள் முன்னால் :))


முதலில் அறிவே தெய்வம் என்ற பெயருடன் வலையுலகில் அறிமுகம் ஆனேன், இறைநிலை குறித்து நண்பர்களிடையே என்னால் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியும் இப்பெயர் வைத்தேன்.

பின்னர் ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக் கொண்டு நம்மை துன்பப் படுத்திக் கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் விளைவு தேவையற்ற குணங்கள் , குறிப்பாக கவலை மேலோங்கி, நடப்பதை உணர்ந்து கொள்ளாமல், வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல், அவர்களோடு முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக நிகழ்காலத்தில் அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ என மாற்றம் செய்தேன்.

என்னுடைய இடுகைகளில் சில அதிமுக்கியமான (?!:) என நான் கருதும் சில இடுகைகளின் சுட்டி தந்துள்ளேன். இவை நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டே தீரும்.


உடலைப்பற்றி


 மனதைப்பற்றி..

சொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே

கொஞ்சம் உள்ளேயும் பாருங்களேன்....... 

நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே

வந்துட்டீங்க…. சாப்பிட்டுவிட்டுதான் போகனும்

 அடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்

கடவுளை நம்புவோம் ஆனால் ஒட்டகத்தை கட்டி வைப்போம்


அவுங்களும் நானும்

கடவுள் நல்லவரா கெட்டவரா

குழந்தையும், சுதந்திர தின அனுபவமும்
 
ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

படித்துப்பாருங்கள்...:)) 

உங்களின் கருத்துக்களை வலைச்சரம் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள், மீண்டும் சந்திப்போம்
மேலும் வாசிக்க...

Sunday, November 1, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !

ஒரு வார காலம் ஆசிரியப் பொறுபேற்ற அருமை நண்பர் தமிழ் அமுதன் என்ற ஜீவன் ஏற்ற பொறுப்பினை சரிவரச்செய்து, பல அரிய பதிவுகளையும், இடுகைகளின் சுட்டிகளையும் அறிமுகப் படுத்தி மன நிறைவுடன் விடை பெறுகிறார். ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றிப்பத்து மறுமொழிகள் பெற்று பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

நண்பரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரம் சார்பினில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து நவம்பர்த் திங்கள் இரன்டாம் நாள் துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் சிவசு ஆசிரியப் பொறுப்பேற்கிறார். ‍ கோவையைச் சார்ந்தவர் ‍ ‍ ஏற்கனவே வலைச்சரத்தில் பழமைபேசியால் அறிமுகப் படுத்தப்பட்டவர். ஓராண்டிற்குள் ஏறத்தாழ எண்பது இடுகைகள் அவரது வலைப்பூவான நிகழ்காலத்தில் இட்டவர். அவரை ஏறத்தாழ அறுபது பதிவர்கள் பின் தொடர்கின்றனர். பல அருமையான இடுகைகள் பல தலைப்புகளில் இட்டிருக்கிறார். அவரை வருக வருக ! ஏற்ற பணியினைச் சிறப்புறச் செய்க என வாழ்த்தி, வலைச்சரம் குழுவின் சார்பினில் வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

சீனா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது