07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 31, 2015

வணக்கம் - அன்புடன் ஒரு அறிமுகம்



வலைப்பதிவுகளில் சொற்களை விளையாட விட்டு , ஞான முத்துக்களையும் , அறிவென்னும் பொக்கிஷங்களையும் நித்தமும் பெறும் , அன்பினால் ஆன நம் தமிழ் சமூகவலைப்பதிவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் .

வலைப்பதிவுகளுக்கு புதுமுகமாகிய நான் இங்கு அறிமுகமானது Dr. சுந்தரி கதிர் அவர்களால் . சுந்தர  நேசத்தை வார்த்தைகளால் குழைத்துத் தரும் இனிய தோழி , அவர் என்னையும் , என் வலைப்பதிவுகளையும் இங்கே அறிமுகப்படுத்த , அதன் பின் பட்டாம்பூச்சியாக சிறகடித்து , நம்முடன் இனிய சொல் பேசிச் செல்லும் தங்கை காயத்ரி தேவி , வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்க முடியுமான்னு கேட்டார் . யோசித்தேன் ..

 நம்மால் இப்போது முடியுமான்னு .. பிறகு , செய்து தான் பார்ப்போமே என ஏற்றுக்கொண்டேன் , நல் முயற்சியாக இறங்கியும் விட்டேன் ! நன்றி தமிழ்வாசி பிரகாஷ் . :)

திருச்சியைச்சேர்ந்தவளாகிய நான் , மதிப்பெண்களுக்களுக்காக பள்ளியில் சமஸ்கிருதம் எடுத்து , தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு குட் பை சொல்லியவதற்கு பெருந்தண்டனையாக 2001 ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ல் வந்திறங்கி , தமிழ் சொல்கேட்பதற்கு  ஏங்கித்தவிக்க ஆரம்பித்தேன் ..

அப்போது ஆரம்பித்தது தமிழ் தாகம் . வற்றினால் தானே ! , ஊற்றாக , கங்கு கனலாக கனன்றது , அது  பற்றிக்கொண்டது பேஸ்புக்கால் .

அடிப்படையில் கம்ப்யூட்டர் பட்டம் பயின்றவள் , ஆசிரியப்பணியில் 2005 வரை இருந்தவள் , சற்றே அட்மின் துறையில் பணியில்  நுழைந்தாலும் , சிறு சிறு கவிதைகள் , உணர்வின் விளிம்புகளில் அரும்பியதை கவனித்து குறித்தும் கொண்டேன்.

 ‘ஐயோ உங்கப்பொண்ணா ! .. கொஞ்சம் பேசாமல் இருந்தாப்போதுமே ! , வாயாடியா இருக்காளே ! ’ என்ற நல்ல பெயர் அப்பா அம்மாவிற்கு அடியேன்  பள்ளியில் பெற்றுத்தந்த வாய்ப்பேச்சு ,  விசுவின் அரட்டை அரங்கம் வரைக்கொண்டு சென்றது , அப்போது முதன் முறையாக இயக்குனர் திரு. விசு  , உரத்த சிந்தனை ராம் அவர்கள்,  தம் குழாமும் துபாயில் முகாமிட பல ரவுண்டுகள் படு ஆக்ரோஷமாய் பேசி கணவரை மெய் மறக்க செய்தேன் .

 ( அப்ப , வீட்ல இல்லயா ந்னு நீங்க கேக்கற்து ..புரியுது :)
  ஒரு சர்பிகேட்டும் , வால் கிளாக்குடனும் மேடையிலிருந்து இறங்கினேன் .

பல பட்டிமன்றங்களில் பேச அழைப்பு வந்தாலும் ஆர்வம் காட்டமல் தவிர்த்தேன்  , ஆன்மீக நாட்டத்தால் .

இந்தப்பேச்சே என்னை ,  தமிழ் குஷி என்ற இணைய வானொலியில் ஆர். ஜேவாகவும் அவதாரம் எடுக்க வைத்தது.முதல் நிகழ்ச்சியே கணவருடன் வீட்டுக்கு வீடு வாசப்படிதான் .. !

இல்லத்தரசியாக இருந்தப்படியே , பேஸ்புக்கில் கவிதைகள் , கட்டுரைகள் , சிறு சிறு துணுக்குகள் எழுத ( சரி..சரி .. படுத்த) ஆரம்பித்தேன் . எல்லாப்பெண்களையும் போல கணவர் , நம்  குடும்பம் என்பதையும் தாண்டிய என் சமுதாயப்போக்கும் , தார்மீக எழுத்தும் உணர ஆரம்பித்தேன் (இதெல்லாம் , உனக்கே ஓவரா இல்லையா ந்னு கேட்கப்படாது ..  ;) )

நிகழ்ச்சி தயாரிப்பு , எடிட்டிங் , மேற்பார்வை என ஆன்லைனில் ஆக்குபை செய்துக்கொண்ட எனக்கு ஒரு வருஷம் பறந்தது அறியாமல் போனது . ஒரு பெண்கள் மாதமிரு முறை வரும் இதழில் , பக்கம் தயாரிக்கும் பணியும் , அவர்கள் கேட்டபடியே வலைப்பூவும்  ஆரம்பித்தேன்.

தற்சமயம் சிறிது  ரேடியோவேலைகளில் பிரேக் எடுத்தப்படியே ,பிரபல  எழுத்தாளர், நாவலாசிரியை  திருமதி . வேதா கோபாலன் அவர்களது வழிகாட்டலுடன் சிறுகதை எழுத்தாளராக புது அவதாரம் எடுத்துள்ளேன்.

சில உடல் பிரச்சனைகளாலும் , இ-புக் வாசிப்பின் ருசியறியாமலும் , படிப்பதை தற்காலிகமாக விட்டிருந்தவள்  பிரபல பத்திரிக்கையாளர் , திரு. சுதாங்கன் அவர்களின் மூலம் பல புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டு , படித்தும் , அதைப்பற்றியும் எழுதி வருகிறேன்.

இசையுடன், சினிமா பார்ப்பதிலும் உள்ள ஆர்வம் .. ( அப்ப , எங்களுக்கெல்லாம் இல்லையான்னு கேக்கற உங்க மைண்ட் வாய்ஸ் , கேக்குதே !) சுமி_சினிமாஸ் என்ற டேக்குடன் விமர்சிக்கவும் வைத்தது பேஸ்புக்கில் .

ஏன் பேஸ்புக்கில் எழுதுவது , கவிதை , கதை , இப்படி கிறுக்குவதைத்தவிர வேற ஆர்வமில்லையா இல்ல எதுவும் தெரியாதா என்ற உங்க கேள்விக்கும் வந்துட்டேனே ..

ரங்கோலி , சமையல் , க்ளாஸ் பெயிண்டிங் , பாட் பெயிண்டிங் , பேபரிக் பெயிண்டிங் ,போட்டோகிராபி  இப்படி பல வேலைகளும் அப்பப்ப ஓடிட்டே இருக்கும்.

என் முதல் விமானப்பயணம் என்று நான் எழுதியது பேஸ்புக்கில் .. இன்றும் பலரும் பேசப்பட்டதாக உள்ளது . அதை இங்கும் பகிர உள்ளேன்.

பலக்கவிதைகள் எழுதி வெளிவந்தாலும் , மனதில் ஆழமாக ஊடுருவிய ஆன்மீகத்தேடல் ஆண்டாள் , ஆழ்வார்கள் என்று நாலாயிர திவ்யபிபந்தத்தில் இருக்கிறது . தொண்டரடிபொடியாழ்வார் இயற்றிய திருமாலை என்ற பக்தி இலக்கியத்திலிருந்து தொடராக எழுதி வருகிறேன்.

எழுத்தில் அரிச்சுவடிமட்டுமே தொடங்கியுள்ளவள் ,
 வீடு தோறும் வரவேற்கும் துணி மலைகள் ,





என்ற பதிவு ஒரு முடியாதப்பொழுதில் எழுதிட மங்கையர் கவர் மலராக சே .. பதிவாகி விட்டது . ( கொஞ்சமா .. சொல்லிக்கிறேனே .. ! )

ஒரு நாள் மொட்டை வெயிலில் பால்கனியில் வந்தமர்ந்தப்பறவை கூடு கட்டி , பிள்ளைப்பேறுப்பார்த்து , சரி, சரீ... , குஞ்சுப்பொரிச்சு ..மீண்டும் பறந்தக்கதையை எழுத அது புதிய தலைமுறை இதழில் வெளிவந்தது .

(இந்த ஜப்பானில் ஜாக்கி சான் கூப்பிட்டாங்க ... அமெரிக்காவில் அர்னால்ட் கூப்பிட்டாங்க கதையெல்லாம் இல்லீங்கோ..சும்மா ..ஒரு வெளம்பரம் தர சொன்னாங்க அதான் )

 கூடான வீடு அதான் இது.

திருச்சியில் எம் ஆர் ராதா அவர்களது குடியிருப்பில் வசித்த எபெக்ட் ஒரு நாள் நினைவலைகள் சுனாமியாக ..அதையும் பதிவாக்கி  நடிக வேள் நினைவுத்துளிகள் என்று எழுதி வச்சேன் .



வசிப்பது துபாய் ஆகையால் , பலப்பல ஊர் சுற்றல்கள், அதிலொன்று அம்மா , அப்பா இங்கு வந்திருந்த போது எழுதிய அபுதாபி கிராண்ட் மாஸ்கும் அம்மாவும் ,  எனக்குள்ளிருந்து பல உணர்வுகளை எழுத்தாக்க முடியும் என்று நிரூபித்தது .


பல வருடங்கள் , அயல் நாட்டு வாழ்க்கை பலப்பல அனுபவங்களுக்கு பஞ்சமா .. இனி பகிர உள்ளேனே .. உங்களுடனும் .

தொடர்வோமா ..இனி வரும் பதிவுகளில் ..








மேலும் வாசிக்க...

Sunday, August 30, 2015

நேசன் சென்று வருக... குஷி பண்பலை ஆர்.ஜே. சுமிதா ரமேஷ் வருக.. வருக..


வணக்கம் வலை நண்பர்களே...

இன்றுடன் முடிகிற வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த "தனிமரம் நேசன்" அவர்கள் மிகுந்த ஆர்வமுடனும், பொறுப்புடனும் தமது பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.

மொத்தம் ஏழு பதிவுகள் எழுதிய அவர் 230-க்கும் மேலே மறுமொழிகள் பெற்றும், சுமார் 1200 பக்கப்பார்வைகளுக்கும் மேலே பெற்றும் உள்ளார். அவரை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "சுமியின் கிறுக்கல்கள்" எனும் வலைப்பூ பதிவர் சுமிதா ரமேஷ் அவர்கள் ஆர்வமுடன் இசைந்துள்ளார். 

இவரப் பற்றி சொல்வதென்றால் சுமார் பதினைந்து வருடங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கணவருடனும், இரு குழந்தைகளுடனும் வசித்து வருகிறார். கணினி பட்டதாரியான சுமிதா ஆரம்ப காலங்களில் ஆசிரியராக பணியாற்றியவர். தனது பேச்சுத் திறமையால் துபாயில் நடைபெற்ற விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் விசு ஐயாவிடமிருந்து "பப்ளிக் ஸ்பீக்கிங்ல் சிறந்தவர்" என்ற பாராட்டைப் பெற்றுள்ளார். இவ்வாறு பேச்சாற்றலில் சிறந்து விளங்கிய இவர் பின்னர் குஷி பண்பலை 24 x 7 இணைய வானொலியில் ஆர்.ஜே வாக சேர்ந்து தனது கணவருடன் இணைந்து வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற நிகழ்ச்சியை வழங்கியுள்ளார். பின்னர் பலப் பல நிகழ்ச்சிகள் வழங்கியும், அதன் பலனாக நிகழ்ச்சி மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது தொடர் பணிக்கு ஓய்வளித்து விட்டு ஆர்.ஜே வாக மட்டும் பணியாற்றி வருகிறார். 

வலைப்பதிவராக, வலைச்சாகரத்தில் சமீபத்தில் இணைத்துக்கொண்ட சுமிதா ரமேஷ் முக நூல் பதிவராகவும் பல கட்டுரைகளை எழுதிவருகிறார். மேலும் கவிதை , கட்டுரைகள் , கதைகள் , விமர்சனங்கள் என்ற விசாலப்பார்வையை விரிவுப்படுத்தியப்படியே எழுத்தார்வத்துடன் வலம் வருகிறார்.

சுமிதா ரமேஷ் அவர்களை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி வருக.. வருக... என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் நேசன்,
நல்வாழ்த்துக்கள் சுமிதா ரமேஷ்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...
மேலும் வாசிக்க...

அவன் இன்றி வேற ஆறுதல் இல்லை!.

இணையத்தின் ஊடே வீட்டில் வலையுறவுகளை கொண்டும் வரும் சேவையை செய்வது திரட்டிகள்தான். நாளாந்த பத்திரிக்கை போல !. தனிமரம் 2010 வலையில் அறிமுகம் ஆனபோது இருந்தவை தமிழ்மணம்,இன்ட்லி, தமிழ்வெளி ,தமிழ்-10 என்று! ஆனால் அவைகள் பொருளாதார தடையால் நலிந்து போக   இன்று ஏதோ அதிகம் பதிவர்களை இணைப்பது தமிழ்மணம்தான்!

அதில் இந்திய-ஈழம், மதவாத போட்டியில் பிரிந்து போனவர்கள் பட்டியல் பல. அதனை புதிய பதிவர்கள் அறிய வேண்டும் !


ஆனால் தமிழ்மணம் இன்று புதிய பதிவர்களை உள்வாங்கின்றாதா?, என்பது நான் அறியேன் !அது பற்றி தனிமரம் வலைச்சித்தர் டிடியிடம் கேட்கும் ஆசையில்!நேரம் காலம் வரைவில்லை.  ஆனாலும் தமிழ்மணம் அதன் தர வரிசை, சூடான இடுகை, பற்றி எல்லாம் அதிகம் நான் அறியேன்.! இருந்தாலும் தமிழ்மணம் திரட்டியில் வரும் பதிவுகளை  கணனியில் வாசிக்கும்போது  பதிவுகளுக்கு வாக்கு இட்டுப்போவதை இன்று வரை ஜனநாயக கடமையாக செய்கின்றேன்!

ஏனா நான் முதலில் வாழ்வில் போட்ட  கள்ள ஓட்டு ஒரு சட்டதரணி அரசியல்வாதிக்கு!  இப்ப  அவர் இலங்கை மும்மொழி   ஊடகத்தில் அடிக்கும் கூத்தை நினைக்கையில் வெறுப்பாக இருப்பது போல சில திரட்டிகள் காணமல் போனதுக்கும் நாமும் ஏதோ ஒருவகையில் காரணம்  தான்!


 ஒற்றுமை இன்மை, போட்டி மனோபாவம் ,ஈகோ, விட்டுக்கொடுப்பு இன்மை வளர்ச்சிக்கு உதவாமை என்பன! அதில் தனிமரமும் அடங்கும் என்பதை வெள்ளிட மலையாக கூறிக்கொள்கின்றேன்.

சில வட்டத்தை பிரிந்தது ஈழத்து  சில பாடல் பதிவுக்கு திரட்டியில்  ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்பது அன்றி என் தனிமரம் வலையை வளக்க வேண்டிய தேவையில் அல்ல.

 காரணம் தனிமரம் என் போக்கில் போகும் ஒரு வழிப்போக்கன் அன்றி தொடர்ந்தும் இணையத்தில் இருக்கும் ஆப்பீஸ்ஸர் அல்ல !


எனக்கு புதியவர்களை பிடிக்கும். புது விடயம் தேடி ஓடும் ஒரு வாசகன் தான்!மொய்க்கு மொய் வை என்று இன்று வரை யாரையும் வேண்டியது இல்லை. என் உணர்வை எழுதுகின்றேன்!

 பிடித்தால் வாசிக்கவும் இல்லையேல் அடுத்த பதிவரை நாடி ஓட இங்கே ஆயிரம் பதிவர் இருக்கு.ஆனாலும் நட்பு என்று வந்தால் தனிமரம் ஒரு தோப்புதான் திரட்டியைவிட!

 இன்றும் நாஞ்சில் மனோ, செங்கோவி.தமிழ்வாசி, கணேஸ் அண்ணாச்சி  வலையில் வந்த கிராமத்துக்கருவாச்சி கலை, அதிரா ,ஹேமா, அஞ்சலின், சசிகலா,நேற்று இணைந்த அக்காச்சி கீத்தா ரவி என்றாலும் எப்போதும் பொதுவெளியில் தனிமரம் ஒரே பார்வைதான் வெளிப்படையாக பேசுங்கள்! பம்முவதும் ,வட்டத்துக்குள் நிற்பதால் தேங்குவது தமிழ்வலையுலகு அன்றி தாங்கள் அல்ல!

 திரட்டிகளின் சேவையைப்போல பதிவர்களுக்கு மேடை தருவது வலைச்சரம் அதனை எல்லோரும் சேர்ந்து முன்னோக்கி நகர்த்துவோம்!

  வாருங்கள் இன்றும் சிலரை நினைக்கின்றேன் காரணம்  இவர்கள் போல நான் படிக்கவில்லை எழுத என்பதால் !வலையில் தனிமரம் படிக்காதவன் ஆனாலும்.! கம்பனை  முழுமையாக கல்லாதவன்!   கம்பன் பற்றி அலச இங்கே-


என் அரசன் இங்கே -http://manidal.blogspot.fr/2006/05/blog-post_05.html.

கம்பன் போல மாதவியின் கதை தனித்துவம் ஆனாலும் இந்தப்பந்தல் வாசகனாக 2005 இல் இருந்து மேய்கின்றேன் இப்போது இவர் கொஞ்சம் தேங்கிவிட்டார் எனலாம் புதிய வருகையான முகநூல் ,டுவிட்டர், இத்தியாதி!http://madhavipanthal.blogspot.fr/2014/05/kalthondri.html.!

.இப்படி இத்தியாதி இருப்பதில் எது சிறப்பு என்று கேள்ள்வி கேட்டகும் இவர்!


நட்புக்கு நான் என்றும் சாமானியன்!http://chellappatamildiary.blogspot.com/2015/06/blog-facebook.html

இப்படி எல்லாம் கேட்க நீ என்ன புத்தகம் படித்தாய் சிரிக்க என்று கேட்டால்! தனிமரம் இன்னும் நூல் படிக்கவில்லை! ஆனால் வாசித்தேன்.

 எங்கே இங்கே  http://thillaiakathuchronicles.blogspot.com/2015/02/Sarithayanam-Sirithayaname.html. வாசித்துக்கு சாட்சி. ஐயா நான் சட்டம் படிக்கவில்லை சட்டம் தெரிந்து இருந்தால் தனிமரம் ஏன் ஏதிலியாக இருக்கப்போறன்?,.

 அந்தக் கவலையைப்போக்கும் இவரின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்!

பல பதிவு வாசிக்க இருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சட்டம் படிக்க ஆசை! ஆனாலும் உத்தமவில்லன் என்று யாரோ என்னையும் முகநூலில் குத்தும் செய்தி வருகுது[[[[[ ஜாலிகாக!

அண்ணாச்சி மற்றவர்களின் பதிவுகளை கொஞ்சம் உள்வாங்கி பின்னூட்டம் இட்டால் இன்னும் பலரை சென்றடையலாம். என்ற ஒரு சிறு ஆலோசனைச் சொல்லிய வண்ணம் படிக்காதவன் ஐயா தனிமரம்  குறை நினைக்காத!http://vriddhachalamonline.blogspot.fr/2015/02/blog-post_93.html.


இதை எல்லாம் விமர்சனம்  செய்யலாமா பொதுவெளியில் என்றால் என்ன செய்வது வேலைதேடி வந்தால் கேள்விக்கு   பதில் சொல்லித்தானே வேலை வாய்ப்பு பெறமுடியும் அப்படி நான் சொல்லவில்லை.


 இவரின் தளம் இப்ப ஏன் புதிய பதிவுகள் வராமல் இருக்கு மாதம் ஒன்று சரி எழுத நேரம் இல்லையா அல்லது வேற ஏதாவது காரணமா! வத்தி வைச்சாச்சு!ஹீhttp://vriddhachalamonline.blogspot.fr/2015/02/blog-post_93.html.

  இவர்  பரிசலில் நீந்திய காலத்தில் தனிமரம் பதிவராக வலம் வரவில்லை !


ஆனாலும் மூத்த படகு ஏனோ முகநூலில் மட்டும் முடங்கிவிட்டது தனிமரத்தோடு!http://parisalkaaran.blogspot.fr/2015/01/blog-post_91.html.

. நினைவில் பலர் இனியாபோல என்றாலும் விக்கிமீடியாவில் எழுதுவதுக்கும்  ஒரு தகுதி , பொறுமை, திறமை வேண்டும் !இவரிடம் அது அதிகமாகவே இருக்கு .லிங்கம் என்றால் சுயம்பு அதுவும் இவர் ஜம்பு   என்றால் அனுமான் என்று கேட்ட ஞாபகம்   !ஐயா பஞ்சு டயலாக் ! சார் பிழை என்றால்  மன்னிச்சு[[[[




- இங்கே-http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_16.html. ஐம்புலிங்கம் ஐயா கத்தி கொண்டுவரமாட்டார் அவரின் அனுபவத்தில் பார்த்த விடலைப் பையன்கள் பலர் !அதில் தனிமரமும் ஒரு வெட்டிப்பயல்! ஹீ அவர் கத்தி எடுத்தால் நான் கதிவேலன் `மகன் என்று சொல்ல ஆசை ஆனாலும் இப்படியா[?,

!http://malarinninaivugal.blogspot.com/2014/02/blog-post_13.html.


வலையில் பலரை சாமானியன் தனிமரம்  புதிதாய் வாசிக்கின்றேன் ஊமைக்கனவுகள், குழல் இன்னிசை, எங்கள் பிளாக், முகுந்தன் அம்மா, இப்படி பலர் என்றாலும் !எல்லாரையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யும் அளவுக்கு நேரச்சிக்கள் இருப்பது பலருக்கும் புரியும்

! ஏதோ படிக்காத வழிப்போக்கன் தனிமரத்தையும் இவ்வாரம் வலைச்சரத்துக்கு அழைத்த பெரியவர் யாதவன் நம்பிக்கும் கோடி நன்றிகள் .

அத்துடன் என் வலைச்சரப்பணியை தன் பல்வேறு பணிகளுக்கும் இடையிலும் கைபேசியில் அழைத்து பாராட்டிய பதிவர் புதுவை வேலுக்கு என் நன்றிகள் பல. மனதில் பட்டதை எழுதிவிட்டேன் யாரையும் புன்படுத்துவது என் நோக்கம் அல்ல!

 ஏனா தனிமரத்தில் கீறுவது சாமானிய மணிதர்கள் ஆய்வாளர்கள் சொல்வது கல்வெட்டு என்பதை சொல்லி என் கற்பனை வளத்தை விரியம் பெற வைத்ததுக்கு சாமானியன் தனிமரம் நேசனின் நன்றிகள்.


பல்வேறு பணிகளுக்கும் இடையில் சாமானிய வழிப்போக்கன் தனிமரத்தின் வலைச்சர மேடைக்கு பின்னூட்டம் இட்டு திரட்டியில் வாக்கு போட்டு பதவி உயர்வு தந்த மேன்மக்களுக்கும் நன்றிகள், இவ்வாரம் வர ஆசையிருந்தும் கைபேசியில் சிக்கல், கணனியில் சிக்கல்,இணையம் வேலை செய்யவில்லை,தனிப்பதிவு போட்டு இருக்கலாமே தனிமெயில் அனுப்பி உசுப்பி இருக்கலாமே  என்று மொக்கை சொல்லிய முகநூல் உறவுகளுக்கும், நன்றி!

அட தனிமரமா இவ்வாரம் வெட்டி அவன் பக்கம் போகமாடோம் என்று கைபேசியில் வலைச்ச்சரம் படித்து கருத்திடா நம்மவர்களுக்கும் நன்றிகள்.

இவ்வாரம் புதியவர்கள் பலரை அறிமுகம் செய்ய உதவிய முகநூல்/வலை நட்பு துளசி.கா வுக்கும் ,தஞ்சையம்பதி  வலைப்பதிவர் துரை செல்வராஜீவுக்கும் நன்றிகள் சொல்லிய வண்ணம் விடைபெறுகின்றேன்!


மீண்டும் தனிமரம் வலையில்
சந்திப்போம் என்ற
நம்பிக்கையில்!

தனிமரம் நேசன்
பாரிஸ்.
.                         








மேலும் வாசிக்க...

Saturday, August 29, 2015

ஓடும் நதிமேல் ஒரு பாட்டு !!!

வலையில்  பின்னூட்டம்கள் தான் பல பதிவுகளை .பலவிடயத்தை பொதுவெளியில் சிந்திக்க வைக்கவும் இன்னொரு சிறப்பாக மற்றவர்கள் பதிவு எழுதவும் வழிகாட்டும் வாய்கால் என்றால் மிகையிலை.!!


வலையில் பின்னூட்டம்  வாசிக்க என்றே பல பதிவர்கள் இருப்பதை இன்றைய புதிய பதிவர்கள் அறிய வேண்டிய இன்னொரு உலகம்.!

 ஆனால் பின்னூட்டப்போர் என்றால்  நிரூபன் பதிவாளரின் நாற்று வலையில்  பார்க்கலாம்! பின்னூட்ட உறவு முறையை செங்கோவி வலையில் ,பின்னூட்ட கமடியை  பன்னிக்குட்டியார் வலையில், கவிதைப்போட்டியை ஹேமாவின் தளத்தில்,. என்று பல தளங்களில் இந்த பின்னூட்டம் ஒரு சுவாரசியம் தரும் விடயம்!நிரூபன் பின்னூட்டம் மூடியதும் செங்கோவி வலையில் தனிமரம்  பொங்கிய வரலாறு எல்லாம் செங்கோவி தளத்தில் இன்னும் வாழுது ஆனால் இப்ப செங்கோவி பதிவுலகில் கொஞ்சம் ஒதுங்கியிருக்கின்றார்!

 ஆனால் இவர்களின் தளங்கள் எப்போதும் வடிகட்டுதல்/மட்டுறுத்தல்/ஆசிரியர் ஓப்புதல் பார்த்த பின் வெளியிடப்படும் என்ற தனிக்கை இல்லாத சந்தோஸம் இன்னும் நீங்காத நினைவைத்தருகின்றது .

சிலரின் தளத்தில் பின்னூட்டம் இட்டு அது வெளியிடப் பட்டதா,,?, இல்லையா ?,என்பதை ஆராய பலருக்கு நேரச்சிக்கல் இருப்பது புரியாமல் சிலர் இப்படி மொடரேசன் வைத்து அவர்கள் காணும் அழகு என்ன ,,?,

தனிக்கையால் இழந்தவை அதிகம்  என் தாய் நாட்டில்  என்றும் வேண்டும்   ஊடக சுதந்திரம் என்ற என் கொள்கை சில அதிகாரிகளை பகைத்து கட்டிய கழுத்துப்பட்டியை இறக்கிவிட்டு வந்தகடந்த காலம் வரலாறு என்ற போதும்! வாழும் ஐரோப்பிய சுதந்திர தேசத்தில் வாழ்பவன் தனிமரம் நேசன் அதனால் தான் என் வலையும் பின்னூட்ட வசதிக்கு எப்போதும் திறந்தே விட்டு இருக்கின்றேன்.!!

 யார் என்ன சப்பைக்கட்டு கட்டினாலும் வலையுலகில் சுதந்திர பின்னூட்டம்  சுதந்திரமாக மின்னும் வரை  தமிழ் வலையின் வளர்ச்சி என்பது மந்த கதியே!பிரெஞ்சு வலைக்கூடம் அதை தாண்டி ஓடுது!

 இந்த  பின்னூட்ட மூக்குடை வேதனையில்   சில வலைகளுக்கு இன்றும் வாசகனாக போகாது என் பின்னூட்டத்தை பதிவு செய்யாமல் இருக்கின்றேன் !இது கோபம் அல்ல சிலர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்ற ஆதங்கமே!மனசு இருந்தும் !

 நாம் எழுதும் பதிவு எத்தனை பேரைச்சென்றடையுது அதில் ஏதாவது வன்முறையான விடயம் அல்லது  அந்த பகிர்வு எப்படி வலையுலகில் எதிர்வினையாற்றும் என்பதை அறியாமல் தைரியம் இல்லாமல் யாரும் பொதுவெளியான வலையுலகில்எழுத  வருவதில்லை.!

 முன்னர் சில விசமிகளின் வைரஸ் விடயம் பரவியதால் மட்டுறுத்தல்/வடிகட்டல்/ஆசிரியர் ஓப்புதலின் பின் வெளியிடப்படும் என்ற நிலை இருந்தது, அல்லது ஆபாசதள விளம்பரம் என்ற நிலை இருந்தது.!

 ஆனால் இப்போது வலையுலகு மந்த கதியில் இருக்கும் நிலையில் ஓடும் நதியை பூட்டிவைத்து என்ன வளர்ச்சி காணப்போறோம்.?,, சிந்திப்போமா உறவுகளே ,,

யாரையும் பொதுவெளியில் வம்பு இழுக்கவும் ;செம்பு தூக்கவும்; வைக்கும் எண்ணம் இல்லை .இந்த தனிமரம் ஏற்கனவே தண்ணி தெளித்துவிட்ட ஒரு வழிப்போக்கன்.

 ஆனாலும் சொல்ல வேண்டிய கருத்தினை எந்தக்கட்சி என்றாலும் சொல்லத்தயங்காத ஒரு எழுத்தாணி மட்டுமே!

 இன்னும் பேசலாம் இந்த வலையில் எங்கோ ஒரு மூலையில் என் மனசு பேசிக்கொண்டே இருக்கும்...!வாழ்த்தும் பாராட்டும் வேண்டி அலைந்து , திரிந்த காலம் போய் ஐயாசாமி இதுவே போதும் என்று வாழும் ஒரு சாமானிய தந்தை இப்போது தனிமரம் தோப்பு!

 வாங்க துரோகி என்று இவர் யாரைச்சொல்லுகின்றார் என்று பார்க்க முன்
[
விமர்சனம் பற்றிய வலைபக்க முகத்தினை கிழிக்கும் இதைப்பார்ப்போம்[[http://vishcornelius.blogspot.com/2015/01/blog-post_16.html. .

அவரின் பார்வை ரசித்து சாப்பிட என்ன கிடைக்கும் ஒருக்கு பரோட்டா எப்படிச் செய்வது என்ற ஆவலா இங்கே வாங்க வீசலாம்[[http://saratharecipe.blogspot.fr/2015/08/parotta.html. .

வீசுவது கல் என்றால் அதுவும் உதவும் ஒரு சிலைவடிக்க ! ஆனால் ஆடோவில் ஏறும் போது சொல்வது அண்ணா கொஞ்சம் வேகமாக போக வேண்டும் என்றுதான் ஆனாலும் இந்த கலைநாயகன் எப்போதும் விமர்சனம் கடந்தவர் ஒரு வீடு இருவாசல் போல ஒரு இயக்குனர் இரு ஹீரோ வாழ்வில் தெய்வம் எனலாம்[[http://balaamagi.blogspot.com/2014/12/blog-post_24.html.

என்னடா தெய்வம் என்று சொல்லுகின்றாயா இன்று சனி பிறக்கும் நேரம் அதிகாலையில் ஐய்யப்பனிடம் போக வேண்டும்! ஆனால் பணி இருக்கு அதுக்கா மனதை வானொலியோடு இணைத்துவிட்டு பாடல் கேட்போம் இங்கே-http://www.svrpamini.com/.

 பாடல் வருமா?, வாராதா?, என்று இப்ப எல்லாம் எந்த இணைய வானொலியோடும் சண்டை போடுவதில்லை. அங்கே பாட்டு கேட்டு  முகநூலில் வரும் டென்ஷன் அதனால் நம்வீட்டில் அடிக்கடி பதிவு எழுத தனிமரம் ஒன்றும் பொக்கிஷம் சேமித்து வைத்து இருக்கும் பணக்காரன் அல்ல !ஆனாலும் பல பாடல் பதிவு எழுத ஆசை ஆனாலும் சிவகாசிக்காரன் போல இப்ப பொங்க முடியாது.!!http://www.sivakasikaran.com/2009/08/blog-post.html.


என்றாலும் இலங்கை எதிர்க்கட்சிக்கு பாரிசில்  இருந்து ஒரு கடிதம் எழுத ஆசை !ஆனாலும்  தனிமரம் தோப்பாக இருப்பதலால் இப்ப இந்த  நேயர் கடிதம் வானொலியில் வாசிக்க ஆசை என்று சொல்ல ஆசைதான் ஆனாலும் தனிமரமும் சென்னைப்பக்கம்  அடிக்கடி தரை தட்டும் ஒரு அப்பாவி[[[[ http://kanavudesam.com/myblog/?p=3928!

கப்பலில் இடம் இல்லை இன்னும் காத்து இரு அடுத்த பயணம் நீதான் என்று ஒரு வழிகாட்டி தனிமரத்தை தடுத்த காலம் இன்னும் தொடர் எழுதவில்லை .ஆனால் இங்கே இவர்  எழுதியதை வாசிக்கலாம் தனிக்கை இல்லாத நிலையில்[[[ http://putthan.blogspot.fr/2014/09/blog-post.html!

ஆனாலும் தொலைபேசியைவிட இப்ப எல்லாம் அதிகம் கைபேசியில் தான் அதிகம் இங்கே காதில் வழியுது[[ வளியுது என்று சொன்னாலும் இந்த அக்காச்சியின் ராங் நம்பர் அழகுதான் ஆனாலும் அக்காச்சிக்கு இந்த தனிமரம் அறியாத வாசகன் போலும்[[



ஹாலோ நீங்க யாரு[[[http://www.ahilas.com/2013/05/blog-post_9.htm! எழுத வெளிக்கிட்டாள் எல்லாம் மறந்து போகும்!

 ஏனோ காதில்  இசை என்னை தாலாட்டுது!

ஏதிலிக்கும் என்றும் இருக்கும்
ஏன் தொலைத்தேன்!
ஏன் நான் இப்படி?,
ஏற்றி வைப்பேன் ஒரு தீபம்!
ஏனா இன்று சனிக்கிழமை.
ஏனோ இந்த தோஷம்,,?,
எருமைமையை வெற்றி கொண்ட
என் ஐய்யப்பன் கதை நீ அறிவியா,,?,
ஏண்டா லேட் ,,?,குருவே இன்று வேலை அதிகம்!
ஏண்டா இன்னும் திருந்தமாட்டாயா!
ஏய் மரமா நீ !!
ஏண்டா குருவாயூரப்பா!
ஏன் குருவே  ஏன் தக்காளி வீசி!!
ஏற்றும் தீபம் நல்லதாக இருக்கட்டும்.
ஏன்னா சினேஹா ரசிகன் இவன்[[[[[
ஏறிய வேண்டாம் கல்
ஏற்றி வைப்போம் ஒரு தீபம் !
ஏனோ கலியாணமும்
ஏதோ காரணம் சொல்லி  நிறைவேறாமல்

ஏதோ கண்ணோரம் விழிசிந்தும்
ஏதிலிச்சிக்களையும்
 ஏனோ நானும்  குரு என்று கடந்து போகின்றேன்!
ஏதிலி யாரையும் சபிக்கவில்லை!
ஏவரும் எதுக்காவும் நல்லா வாழ/ பிரார்த்திக்க
எல்லாம் ஒரு மனசு
 ஏனோ பலருக்கு இல்லை!
 ஏதிலி பிரார்திக்கின்றேன்
ஏழைகளுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று!!











மேலும் வாசிக்க...

Friday, August 28, 2015

என் ஜீவன் இன்னும் காதலுடன்)))

கவிதை வாசித்து கவிதை வாசித்து கடைசியில் கவிஞர் ஆகிவிடுகின்றோம் என்பது  பாடலாசியர் பா.விஜய் அவர்களின் கவிதை நூலுக்கான அறிமுக அட்டை உரை.

அது போல வாசிப்பு தேடல் கொண்டு இந்த இணையத்தில் வாசிக்க என்று  வாசகன் தேடினால் அவனின் வாசிப்பு நேரத்தை கொள்ளை கொள்ளும்  வலைப்பூக்கள் பட்டியல் அதிகம் !

எதை ஆழ்ந்து மேய்வது,எதை மேலோட்டமாக ஜோசிப்பது,எதை கற்பனையில் கலந்து கண்ணோடு கண் வைப்பது;.குறிப்பு எடுத்து எதை நேரம் இருக்கும் போது பரீட்சித்துப் பார்ப்பது!

,நவரசத்தில் எதை ரசிப்பது என்ற ஏக்கத்தைக்கொடுக்கும் வாசகன் நிலை பலர் அறியாத விடயம் அல்ல!

 வாசிகசாலை என்பது இந்திர லோகத்தின் இன்னொரு கதவு என்று எங்கோ ஒரு சிங்களமொழி அதிகாரி சொல்லிய வாசகம் இன்றும் என் நினைவில் வந்து போகின்றது.


பள்ளிக்கு போகும் போதும் நேரம் போக்க போனது எல்லாம் வாசிகசாலைப்பக்கம் அதை தொலைத்த கவலையை நீக்கி  மறுமலர்ச்சி தந்தது இந்த வலையுலகம்.

  என் விருப்பம்,என் சிந்தனை ஓட்டம் என் அயர்ச்சி, என் கவலை என்று எல்லாத்தையும் மறப்பதால் தான் என்னால் இன்னும் சுவாசிக்க முடியுது!என் கற்பனைக்கு இங்குதான் வாழ்த்துக்களும்.பாராட்டும் கிடைக்கின்றது.

இதை இவன் வெட்டியாக இருந்து எழுதுகின்றானோ என்று நினைப்பவர்களுக்கு புரியாத புதிர்!

 தனிமரம் சிலருக்கு என்றும் புரியாத புதிர் என்றாலும் என் வாசிப்பு.நேசிப்பு  எல்லாம் நிஜம் வாசித்தவற்றை ,காற்றில் காதில் கேட்டவை.பார்த்து  ரசித்தவை என்பதை எல்லாம் கலந்து காலைக்கதம்பம் இலங்கை வானொலி நிகழ்ச்சி போல என் தொடரில்  புலம்பெயர்ந்த பின் பூசி அழகு பார்க்கின்றேன்..

வாருங்கள் பூசுவோம் வாழ்த்து வாசனை!இவரின் தளம் முதிர்ந்தவர்களுக்கு என்று சுழிபோடும் இவரின் பல பதிவை படித்து ரசிக்கலாம் !
இந்த மின்நூலுக்கு தனிமரமும் வாசகனே-http://moonramsuzhi.blogspot.fr/2015_07_01_archive.html அப்படியே அப்பாதுரை சார் நீ என்பக்கம் வந்த சுவடே தெரியாது என்றால் நான் என்ன பட்டபிரானா! http://tamilbloggersunit.blogspot.fr/2015/08/blog-post_20.html .

அவரை விட்டு வந்து புதுத்தமிழன் பக்கம் போனால் இப்படி உப்பு பற்றி அருமையாக சொல்லித்தந்து இருக்கும் விடயம் சேமிப்பாக!http://puthutamilan.blogspot.fr/2015/08/blog-post.html. அப்படியே  கொஞ்சம் இங்கும் போனால்  சில்லு ஏதோ சிந்திக்க வைக்குது.! http://oliyudayon.blogspot.fr/2013/03/blog-post.html. அவரை விட்டு வந்தால் அடுத்த பாட்டு போடலாம் என்றால் !இவர் கொச்சின் பற்றி சொல்லியது ரசிக்கவா !

இல்லை அயிரை மீன் சாப்பிடவா ஐயோ நான் இந்தியா போகும் காலம் எல்லாம் சைவம் ஆச்சே[ அக்காச்சி வலையுலகு  புதுசாம்  இவரை வழிக்காட்டிய குரு காய்த்திரி மேடம்.

இனித்தான் வலையை மேய வேண்டும் கொட்டிக்கிடக்குது பல முத்துக்கள். வாழ்த்துப்பூக்கள் கொடுப்போம்.http://poongothainachiyar.blogspot.in/2015/08/blog-post_22.html..

 அதுக்குள் அரங்கேற்றம் அழைக்குது மழை துளியே என்று !


சிரோயா நடிச்ச பாட்டா என்று பார்க்கப்போனால் இது கவிதையின் உச்சம்.http://psdprasad-tamil.blogspot.fr/2014/09/rainpoem.html. எல்லாம் வாசிதாயா உள்றுவாயனா நீ என்று யாரையோ கிளிக் பண்ணிக் கேட்ப்பது போல இருக்கு இவரின் இந்த பதிவு வாருங்கள் சேர்ந்து போய் ரசிப்போம்.http://ularuvaayan.blogspot.fr/2015/08/blog-post_19.html.. இந்த வழியால் இங்கே போனால் பல அறிவுரைகள்niyavankavithai.blogspot.fr/2015/08/blog-post_909.html...இன்னும் இன்னும் மடல் திறக்கும் இங்கே-http://niroodai.blogspot.fr/2015/01/blog-post_27.html அதையும் ரசித்து போனால் இங்கே .http://rishanshareef.blogspot.fr/2015/06/blog-post_3.html அப்படியே காற்று வாங்க இந்த வீதியில் நிற்க!


எச்சரிக்கை மடல்http://valvaizagara.blogspot.fr/2009/10/blog-post_24.htm !

இன்னும் பேசலாம்
 இந்த வலைச்சரத்தில் என்ற
இணைய வாசிப்புடன்.
இன்றும் விடைபெறும்
இவன் ஒரு மொழிபுரியாத
இசை ரசிகன்.
இசைக்கும் இந்த பாடலுடன்
இணையத்தில் விடைபெறும் தனிமரம்
இங்கு இப்ப நேரம்  பின்னிரவு 2.20
இப்படி சொன்னால்!

இன்னும் உதவாக்கரை என்று சொல்வார்கள்[[[[[[[[
இன்னும் இன்னும் உன் காலடியில்!
இறைவனை தேடும்
இந்தப்பாடல்
இணையத்தில் வலம் வந்த
இந்த உருகும் பிரெஞ்சுக்காதலிக்கு
இன்றும் பிடிக்குமாம்!


இங்கே பதிவு செய்யுங்கள்)))))))))))))))))!







[



மேலும் வாசிக்க...

Thursday, August 27, 2015

நெஞ்சம் தேடும் சிறகாய்யிரம் !!! ஆனாலும் ஏதிலி[[[[[


வலையுலகில்  ஒத்த சிந்தனை  ,நேசமான நட்பு பாராட்டு  என்ற அன்பில் இணையும் நட்புக்கள்  சிலர்  .

ஒரு வட்டத்தின் ஆளுமையாக ஆட்சி செய்ய நினைக்கும் போது வரும் வெடிப்பு அல்லது பிரிவு உள்குத்து என்ற இன்னொரு முகத்தினை காட்டும் உத்தி இந்த வலையுலகின் இன்னொரு போலி முகம் என்பது சில புதிய பதிவர்கள் அறியாத விடயம்!

.அதே போல மூத்தவர்கள்  சிலர் புதியவர்கள் பக்கம் கீரைக்கடைக்கு எதிர்க்கடை என்ற பார்வையில். ஏனோ,,?, வாழ்த்த அல்லது தட்டிக்கொடுக்க முன்வருவதில்லை. என்பதையும் மறுக்க முடியாது.

. நீ மட்டும் என்னோடு தொடர்ந்து  வா !நான் வருவது பற்றி பின் சிந்திப்பேன் என்ற மமதையில் தோற்றவர்கள் சிலர் இந்த வலையுலகில் இருக்கின்றார்கள். .

புதிய பதிவர்களை தட்டிக்கொடுத்து புதிய சிந்தனையை உள்வாங்க சிலர் முன்வருவதில்லை .ஆனாலும் ஜாபாவாண்கள்  அவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

  அதுக்கா சுயத்தை இழப்பது  ஏற்க முடியாது . வட்டம் தாண்டின போது தனிமரம் வலைக்கு  ஏற்பட்ட வீழ்ச்சி,  திரட்டியில் வாக்கு குறைந்து போனது  என்றாலும்  இன்றும் எப்போதும்; வட்டம்; சதுரம் ;பிரதேசம் என்ற குறுகிய வட்டத்தில் நிற்காமல் நதி போல ஓடிக்கொண்டே இருப்பதால் தான் தொடர்ந்து வலையில் இயங்க முடியும் என்பது என்  அவதானிப்பு .



இது யாரையும் நோகடிக்க வேண்டி அல்ல! ஏற்கனவே நொந்து போன ஓர் இதயம் தொடர் எழுதியவன். ))))!

நாளைய பதிவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் தான் அன்றி வேறில்லை தனிமரம் வலையில் பதிவு எழுதி பணம் பெறவில்லை ஆத்ம திருப்தியில் உண்மை நேசத்தில்  நேசனை நேசிக்கும் உறவுகளை வலையில்  தனிமரமாக பெற்ற உறவின்  பின்  பொருளாதார ஈரோ  உழைப்பு  என்றும் தராது சந்தோஸத்தை பெற்று தனிமரம் தோப்பாக வாழ்கின்றேன்.

எனக்கு செங்கோவி, நாஞ்சில் மனோ என்றாலும்  ஐயாமார்கள் புலவர் இராமானுசம்.,கந்தசாமி. ,பாலசுப்பிரமணியம்  ,. ரமனி, ஜம்புலிங்கம் , துரைசெல்வராஜீ, என்றாலும் !தளிர் சுரேஸ், கில்லர்ஜீ. தமிழ்வாசி.  சீனு என்று எல்லோரும் நட்பே!


தனிமரம் ஒரு வழிப்போக்கன் அதனால்தான் கூட்டாஞ்சோறும் பிடிக்கும், தென்றல் சசிகலாவும் பிடிக்கும்.
இப்படித்தான் தனிமரம் என்று ஒரு வட்டத்தை இந்த ஸ்பீக்கர் சொல்லாது![[[[.

 எப்போதும் புதிய சிந்தனை, புதிய அவதானிப்பு, புதிய சமையல் கலை என்று அசத்தும் என் மரியாதைக்குரிய சப்பாத்தி அக்காச்சியின் மகனுக்கும்  தனிமரம் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.! அன்பான அஞ்சலின் எனக்கு அறிமுகம் தொடர் மூலம் தான்! இன்றும் என்றும்  முகநூல்/ வலை என்று தொடரும் பாசமான சில நேரம் தனிமரத்தை  குத்தி திருத்தும் அக்காவும் கூட !ஆனால் சப்பாத்தி ருசிபோல கை வண்ணம் நாவுறும்  !செய்து பார்க்க நேரமின்னை என்பது அல்ல சோம்போறி தனிமரம்.

 ஒரே மாதத்தில், ஒரே திகதியில். சரோனும் தனிமரமும்  பிறந்தோம் என்ற சந்தோஷம் என்றும் மறக்க முடியாது வலைதந்த உறகளில். வாருங்க அக்காச்சியின் வலைக்கு இங்கே-http://kaagidhapookal.blogspot.fr/2015_03_01_archive.html.

 அண்ணாவின் இந்த வலை என்னை இன்னும் 80 இன் பின்  நம்நாட்டில் ஏற்பட்ட பாரிய  அவலத்திலும் பாட்டு என்ற ஒற்றை /இரட்டை குழாய்ப்புட்டு பின்  சுதந்திரம் தாய் மண்மீட்பு என்று போனவர்கள் பல கதை இன்னும் இணையத்தில் முழுமையாக வரவில்லை. என்ற சோகம் தொடர்கதை  என்றாலும்!

 இந்த குழாய்ப்புட்டு போல லவ்ஸ்ப்பீக்கர் நம்நாட்டின் இன்னொரு அடையாளம் இவரோ அமெரிக்கா வாசி!

 இந்த பாடலை கேட்டு ரசியுங்கோ.http://paradesiatnewyork.blogspot.com/2015/06/blog-post.html.ஆனாலும் இவர் மற்றவர்கள் வலையை படிப்பாரோ நான் அறியேன்.


எப்போதும் இனவாதம் ,மதவாதம் ,மொழிவாதம், என்ற கூட்டை வெறுப்பவன் தனிமரம் .என் தொடர்களில் எல்லாம் சகோதரமொழி  நங்கைகள் சேர்ந்தே வந்து போனார்கள்! அதனால் முகநூலில்இன்றும்  வாங்கும் குத்துக்கள் பல என்றாலும் சில பாடல் பகிர்வு பற்றி அதிகம் என்னோடு அதிக நட்பை பாராட்டும் இந்த நானாவின் வலையை இங்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியுடன்..!


மகாஜனங்களே இவர் தனிமரத்தின் போலி ஐடி/ பினாமி இல்லை இலியாஸ் ஒரு நட்பு மட்டுமே என்றும் [[[[[ ஓட்டகத்தார் வேறு தனிமரம் நேசன் வேறு !ஹீஈஈஈஈஈஈஈஈஈ!


இந்த தொடர் இவர் இலங்கையில் இருந்து  மீண்டும் அரபுலகம் விரைவில்   வந்தபின் தொடரும்.....நம்புவோம்[http://ilyas7032.blogspot.fr/2014/09/blog-post.html..


அதை வாசிதால் இங்கே ஒருத்தி கவிதையோடு ஏதோ சொல்ல வாரா !

வலைவீசுங்க தொடர்ந்து எழுத!http://kavithaikaludannaan.blogspot.fr/2015/07/blog-post.html. அவர் கவிதை பார்த்து வாசிக்க!

  இங்கே பலவிடயம் இன்னும் சிந்திக்க இருக்கு.http://maduraisskadl.blogspot.fr/2015/07/blog-post.html
இப்ப எல்லாம் பலர்   பாடகர் மனோ  பற்றி முகநூலில். ஏன் வலையிலும் அவர்கள் உண்மைகள் நண்பர் கலாய்த்த ஞாபகம் இருக்கு.

ஆனாலும் இவர் குரல் எனக்கு பிடிக்கும் இப்போது புலியில் இந்த மக்காவை ரசித்த வண்ணம்  இந்தப்பதிவை வாசியுங்க வலையில் இவரும்  மூத்தவர் !http://naadody.blogspot.fr/2015/02/blog-post.html .


இப்படியே நதி போல ஓடிக்கொண்டே இருக்க ஆசை !


 இங்கே இவர் சிந்தனை விசித்திரம் பெயரைப்போல  சகோ !


இனி புதியவர் அல்ல நீங்க பலரின் வலையை நேரம் கிடைக்கும் போது வாசித்து .பின்னூட்டம் இட்டு. முகம் காட்டுங்க  நல்ல எதிர்காலம் கிடைக்கும் , உங்க வலையை கொஞ்சம்  பின்னூட்ட விடயங்கள் சீர்செய்யுங்க ஏதோ குறை இருப்பது போல என் உணர்வு  அண்ணாச்சி டிடியை கேட்டு .செய்யுங்க! தனிமரம் தொழில்நுட்பம் அறியாத பாமரன் . ஆனாலும் பலதை  வாசிக்கும் வாசகன் .

வாழ்த்துக்களுடன்!http://karurboobageethan.blogspot.fr/2015/08/blog-post_17.html


ஆனாலும்  நாளைய  பொருளாதார தேடல் நம்மை இணையத்தில் தொடர்ந்து இருக்க நிலா விடாது !

என்றாலும்  என் வாசிப்பு வானம் தொடரும்!






யாரையும் மனம் நோகடித்தால் !
திட்டி தீருங்கள்.....
திட்டுக்கள் இன்னும் வாழ வழி செய்யுமாம்!
புலரும் பொழுது இனிதாக தோரணம் கட்டும் ஆசையுடன்!
ஏதிலி தனிமரம் நேசன்.







மேலும் வாசிக்க...

Wednesday, August 26, 2015

என் ஜன்னல் ஓரம் உற்றுப் பார்க்கின்றேன்)))))))

வலையுலகு என்ற வயலில் வளர்ந்து கிடக்கும் வலைப்பூக்கள் பல பின்னூட்டம் என்ற மழையைக் காணமல் வாடிப்போகின்றது .
 இது  ஒரு பக்கம் என்றால் திரட்டிகளில் இணைக்காமல் அதன் மூலம் கிடைக்கும் நட்பு வட்டம் என்ற உரம் அறியாமல் இருக்கும் நிலையை நாம் எப்போது கடந்து வரப்போகின்றோம் ?,.

பின்னூட்ட மழை பொழிய திரட்டிகளும் ஒரு புறக்காரணி என்பதை மறப்பது அழகல்ல. எழுதுவது மட்டும் என் வேலை தேவை என்றால் வாசகர்கள் தேடி வருவார்கள் என்ற நினைப்பு  ஒரு வலையை வளர்ச்சியில் கொண்டு சேர்க்கும் என்று நினைப்பு இருந்தால் அது கனாக்காலம் . திரட்டியில் இணைப்பது மட்டும் வலையை பிரபல்யப்படுத்தாது, பல நட்பு வலைப்பூக்கள் பக்கம் நாமும் காற்று வீசினால்தான் நம் பக்கமும் விளைச்சல் எப்படி இருக்கு நம் வலைப்பூக்கு என்ன குறையுண்டு என்பதையும் அறிந்து  நம் வலைப்பூவை வாடாமல் ,உதிராமல்  ,சருகு போல அழிந்து போகாமல் , வலைப்பூவை வளர்க்க முடியும் எனபது என் அவதானிப்பு .

இது வரை வலையில் வந்து போனவர்கள் பட்டியல் இலங்கையின் பிரதமர்கள் பட்டியலைவிட அதிகம்[[[



திரட்டியில் இணைப்பது முதல் பல ஆலோசனையும் வழங்கும் இவரின் தளம் பல்சுவைக் கதம்பம் இப்போது பெட்டிக்கடை என்ற சொல்வாடையே மறந்து போகின்ற நவீன  காலகட்டம். எல்லாம் மாறிக்கொண்டு போகும் போது பஞ்சம் பாடுவது இயல்பு! இவரிடம் கேளுங்கள் திரட்டியில் வலையை எப்படி இணைப்பது அதுக்கு என்ன வழிமுறை அண்ணாச்சி என்று அன்புடன் கைபேசியில் அழைக்க ஆசை!!


 ஆனாலும் வாத்தியார் என்ற பயத்தால் வலையில் ஒரு ரசிகன் அடுத்தமுறை சென்னையில் சந்திக்கலாம் காலம் கூடிவந்தால்!http://www.tnmurali.com/2015_07_01_archive.html.

புலம் பெயர்ந்தாளும் பலர் பல சாதனை செய்கின்றார்கள் என்று சான்று பகிரும் இந்த வலையையும் ஒரு ஜன்னல் போல  வாங்க போவோம்.http://www.gowsy.com/2015/05/blog-post.htm.


ஆவிப்பா என்றால் எனக்கு நஸ்ரியா ரசிகன் கோவை ஆவி என்ற நினைப்பை இவர் மாற்றிவிட்டார்.

 படம் பார்க்கவில்லை வரும் விடுமுறையில் பார்க்கும் ஆசையில்http://www.jeetha.info/2014/02/blog-post.html

இவரை  வாசித்து வெளியில் போனால் அப்பா என்ற குரல் திரும்பிப்பார்க்கும் ஆசையில் உள்ளே போனால் இவரின் அழுகை, பாசம் ,படபடப்பு என்னை திகைப்படைய வைக்குது http://duraikavithaikal.blogspot.fr/2013/08/blog-post.html..


அவரை கடந்து வந்து ஏதாவது வாசிப்பம் என்றால் !

இவரின் நாடற்றவன் கவிதை நெஞ்சைக்குடையுது.

வாசிக்க தயாரா ?,http://deebam.blogspot.fr/2015/07/blog-post.html.

தேவதைகள் எப்படிப்பட்டவர்கள் சத்தியமாக நான் அறியேன்! இதையும் வாசிப்போம்http://k-a-v-i-t-h-a-i.blogspot.fr/2015/08/blog-post.html.

. இந்த காதலுக்கு என்ன மரியாதை? .http://kundumani.blogspot.fr/2014/12/blog-post.html?m=1 அப்படியே ஒரு காதல் கவிதை வாசிக்க.வயசு அப்படி வானம் பார்க்குது


 இங்கே-http://mukil-clouds.blogspot.fr/. என்றாலும்  கலியாணம் ஒரு தீர்வு தரும் என்று சொல்பவர்கள் ஏன் சில நேரம் மெளனம் காப்பது[[[http://tamilamutham-germany.blogspot.fr/2015/07/blog-post_5.html..


எத்தனைபேர்  பூக்களை  உற்றுக்கவனிக்கின்றோம்?,,  கவிஞர்கள் இதயம் பூப்போல என்று படித்த ஞாபகம் .ஆனாலும்  இவரின் அறிமுகம் புதியது !!


.நல்லாக எழுதும் நீங்கள் ஏன் இதுவரை திரட்டிகள் மூலம் அறியாமல் போனேன்! .என்றாலும் அக்காச்சி பக்கம் இனி பல வலையுறவுகள் வரும் என்ற நம்பிக்கையுடன் .http://iniya-kavithai.blogspot.fr/2015/08/blog-post_23.html


என் ஜன்னல் ஓரம் உற்றுப்பார்க்கின்றேன் [[[[[


 நாளை சந்திப்போம் என்ற
நம்பிக்கையுடன்
தனிமரம்.







மேலும் வாசிக்க...

Tuesday, August 25, 2015

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப்போவமா?,

ஏதிலிக்கு வாழ்த்துக்கள் தந்து  திரட்டியில் வாக்கு இட்டு வரவேற்ற வலையுறவுகளுக்கு நன்றிகள் சொல்லி !

அடுத்த பகிர்வாக உங்களை வலைச்சரம் ஊடாக நாடி வரும் தனிமரம் .


எழுதிக்கிழிச்ச நேரத்தை பிரியோசனமாக   பேசாமல் கடையில் கணக்கு எழுதினாலும் சம்பளமாக கொஞ்சம் காசு கிடைக்கும்! உனக்கு பிடிச்ச படம் பார்க்கலாம் போய் வேலையைப்பாரு!

 எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான் பாடியவன் பாட்டைக்கெடுத்தான் உனக்கு எழுத்தும் கைகொடுக்காது, பாட்டும் சோறு போடாது .!போய்த்தொலை உதவாக்கரையே !!என்று தான் என் நண்பனுக்கு என் முன்னால் தொழில் நிமித்தம் சந்தித்த போது அர்ச்சனைப்பூக்கள் போல அவனை நோக்கி    தூவிய பூக்கள்.

அவன் வாங்கியபோது அவன் வயது18  !! தனிமரம் என்னைவிட இரண்டு வயது குறைவு!!

ஆனாலும் எழுதும் ஆர்வம் அவனை முகம் தொலைய வைத்தது! அதனை அவன் விரும்பியவாறு தனிமரம் வலையில்தொடரக  எழுதியது போது ராகுலின் வயது  31 அப்போது 2011 இல் !அதுவரை  ராகுல் போல தனிமரம் நேசனுக்கு வலையில்  தொழில்நுட்ப உதவி புரிய நாற்று நிரூபன் போல ஒரு நல்ல வழிகாட்டி கிடைக்கவில்லை!! அது நேசனின் தனிப்பட்ட அவலச்சூழ்நிலை.தனிமரம் 2010 கார்த்திகை மாதம் நேசன்-கலை  என்று சொந்த வலை தொடங்கினாலும் தனிமரம் என்று இன்றும் வலையில் இருக்கவும் !

தனிமரம் என்று மீண்டும்  வலைச்சர ஆசிரியர் மேடையில் இருக்க ஏதிலிக்கு முகம் தந்த குரு இவனை அன்பில் பணிகின்றேன்!நாற்று நிரூபன் உருவாக்கிய ஈழத்து/புலம்பெயர் பதிவாளர்கள் பட்டியல் அதிகம் !இந்த சாதனையை இனி ஒருவராலும் வலையில்/திரட்டியில் / இலங்கை தமிழ்க்கூட்டமைப்புபோல நாற்று நிரூபன் போல உருவாக்க முடியாது.!! அப்படி உருவாக்க முடிந்தால் தனிமரமும் சாதாரண ஊழியன் போல பின் வருவேன்! ஆனாலும் நிரூபன் வழிகாட்டிய ஆட்சியில்  இன்னும்  வலை/முகநூலில் /கூகில் பிளஷ்  என்று இருப்போரில் தனிமரமும் ஒருவன்!!!!!
 நிரூபனின் நிஜமுகம் இதுதான் ஆனால் பாஸ்க்கு எழுத்துப்பிழை என்றால் வரும் கோபம்  பொங்கி வரும் காவேரி[[[[!


 ஆனாலும் ஒரு  கதையை இலங்கை ஜனரஞ்சக  பத்திரிக்கை ஒன்றில்  தொடர் கதையாக  எழுத ராகுல்   பட்ட  அவமானம் புலம்பெயர்  பிரெஞ்சுக்காதலி அறியாத ஒன்று!

2000 ஆண்டில்  எனக்கு கொழும்பில்  கிடைத்த ஓசிக் காப்பியும் ஒரு கொத்து பாரோட்டாவுக்கும்  ஈடாக இன்னும் ஆயிரம் ஈரோ பாரிசில் உழைப்பு என்று வருமானத்திலும் கிடைக்காத திருப்தி.   ஆனாலும் பிரெஞ்சுக் காதலியைவிட தனிமரம் எனக்கு அதிக நட்பை வலையில் பெற்றுத்தந்த தொடர் இது .அவனை நட்பாக்கியதால் நான் பெற்ற அன்புச்செல்வம் அதிகம் வலையில். ஆனாலும் ராகுலை   அவன் பாதையில் போகவிட்டு பல கும்மி அடிக்கின்றேன் என்  வெட்டிப்பொழுதில்.வலையில் முகநூலில்.இன்றும்!!


ராகுல் நட்பை பெற உதவியது விற்பனைப்பிரதிநிதி வேலை.!!


 வாங்க அடுத்த கடைக்கு போவம் இப்படித்தான் சில கடையில் தினமும் கேட்கும் ஒப்பாரியை மறந்து அலைந்த அந்தக்காலத்தில் இப்படித்தான் நானும் சிரித்தேன் !!

ஆனாலும் இவர் போல என்னால் சிரிக்க முடியாது!! தொழில் நுட்ப அறிவிலும் .குறள் ஞாபகத்திலும் ,ஏன் வலையில் பலரை வாழ வைக்கும் அன்னை போல இவர் . தமிழ்மணம் திரட்டியில் இணைத்துக்கொடுத்த புதிய பதிவாளர்கள் பட்டியல் அதிகம்.

 இவருக்கு நான் அறிமுகம் கொடுக்கவில்லை அன்போடு நன்றிகள் மட்டுமே இவர் வாழும் ஊர் கடந்து வருடம் தோறும் போகின்றேன் இன்னும் ஐயன் அவருக்கு எனக்கு ஐயப்பன்  இவரை சந்திக்க காலம் கூடிவரவில்லை!


http://dindiguldhanabalan.blogspot.com/p/followers.html.

தனபாலன்  இருக்கும் நகர் போக முன் நான் போன இந்த ஊருக்கு தமிழ் சினிமா இன்னொரு முகவரி கொடுத்தாலும் இதை ரசியுங்கோ!

அதிகம் திரட்டிகள் பற்றி அலட்டுவது இல்லைப்போலும் http://www.thilai.blogspot.in/2015/07/blog-post_5.html.

 கப்பல் வரும் கரை சேர்க்கும் என்று பொன்னியின் செல்வன் கதையை இன்னொரு வடிவில் எழுதிய காவிரிமைந்தன் கதை எத்தனைபேர் வாசித்திருப்பார்கள்!! அது போல ஈழத்தில் கப்பல் இலங்காராணி முதல் இறுதி யுத்தத்தில் இந்திய கப்பல் , ஐரோப்பா  கப்பல் , ஏன் அமெரிக்கா கப்பல் வரும் என்று உயிர் விட்ட கதை எல்லாம் இன்னும் மழைதான் இதையும் வாசியுங்கோ!

வணக்கம் அடுத்த அழைப்பில் காத்து இருக்கும் நீங்க யார் எங்கிருந்து பேசுகின்றீர்கள் நான் தனிமரம் நேசன் பாரிசில் இருந்து என்று இன்று இணைய வானொலிகளில் உரையாடினாலும் இவரின் பதிவு இன்னும் தனித்தொடர் எழுத உந்து சக்தி தருகின்றது!

http://gopalkrishnaniyer.blogspot.fr/2015/08/blog-post_15.html

ஏன் சிறப்பாக எழுதும் பலர் தமிழ்மணம், இட்லி . என்று திரட்டியில் இணையாமல் இருப்பது இவரின் பதிவுகள் இன்னும் பல சிகரம் தொட என் வாழ்த்துக்கள். இப்போதுதான் இவரின் பக்கம் தனிமரம் உலாவுகின்றேன்.


இந்த பாடல் கேட்க ஆசை தான் ஆனாலும் இன்னும் இவர் வலையில் செதுக்க வேண்டிய கட்டமைப்பு இன்னும் அதிகம் !

முகநூலில் இருப்பை நிலைநாட்டுவதை விட வலையில் எழுதிவைத்துப்போனால் வரும்காலம் கூகிலில் தேடும் போது உங்க வலையும் வரும் என்பதை படிக்காத தனிமரம் சொல்லி வைக்கின்றேன். எனக்கு அதிகம் தொழில்நுட்பம் படிக்காத வெட்டிப்பயல்!


என்ன கணக்குப்பிள்ளை இன்று என்ன புத்தகம் படிதாய் அதில் ஒரு வாசகம் ஒழுங்கா விளங்கும் வண்ணம் முன்னால் போய் கரும்பலகையில் எழுது என்று பல ஆசிரியர்கள் பின்வருசை மாணவர்களின் சுயத்தை சோதிப்பார்கள் . இவர் முகநூலில் அதிகம் கிறுக்கினாலும் வலை மட்டுமல்ல முகடு என்று சஞ்சிகையும் வெளியீட்டுக்குழுவில் இருக்கும் குரு!

இப்படியே இவர் நண்பனை கண்டால் அவர் தீராத நதி என்பார் இவரும் இருப்பது பாரிசில் ஆனால் இன்றுவரை நானும் இவரை கண்டதில்லை இப்படிக்கடக்க!



வாழ்க்கை ஒரு வட்டம் நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லியது இந்த அக்காச்சியும் நதியா ரசிகையாம் இன்னும் பாட்டி பேர்த்தி பாசம் மறக்க முடியுமா!இப்ப ஏனோ வலைக்கு அதிக விடுமுறை ஆனாலும் முகநூலில் உலாவலாம்.


இன்று சினேஹா அரபுலம் பார்க்க கூப்பிடுகின்றா ஏன் தூக்கம் தொலைத்தேன் ஏன் இந்த  தூக்க மயக்கம்!!  

 நாளை சந்திப்போம்

நட்புடன் தனிமரம்.



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது