07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 30, 2010

கதம்பம் ஒன்று

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா

நேற்று டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு. இன்னைக்கு பேட்டிங் அதுவும் பவர் ப்ளேவோட. பேட்ஸ்மேன், பெளலர், ஆல்ரவுண்டர் என இருப்பதை போல வலை உலகில் ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையாக பதிவிடுகின்றனர். இதில் சமூகபார்வை, கவிதை, கதைகள், திரைவிமர்சனம், அனுபவ பதிவுகள், நகைச்சுவை, பொது என  எட்டு வகையில் வரிசைபடுத்தி  ஒவ்வொரு  திறமைக்கும் ஒரு பதிவராக தினமும் குறைந்தபட்சம் 8 பதிவுகளை/பதிவர்களை களம் இறக்குகிறேன்...

சூரியகாந்தி (சமூகப்பார்வை):

சமூகத்தில் திருநங்கைகளை பார்க்கும் பார்வை இன்றுவரை மாறவில்லை என வருத்தப்படுகிறார் ஸ்மைல் பக்கம் வித்யா. இவருடைய பதிவுகளில் சமூகத்தின் மேல் கோபம் அதிகமாகவே காணமுடிகிறது.

(கவிதை) ரோஜாக்கள்:
                                                     தாய்வீடு:
                                                     பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
                                                     விருந்தாளியாய் சென்றாள்.

                                                     உரிமையிழந்தவளாய்! 

இப்படி இரு வரிகளில் கவிதைகள் எழுதி பதிவிடுகிறார் சங்கீதா. இவருடைய சங்கதியில் சதமடிக்க போகும் இவர் சில பழைய பாடல்களின் வரிகளையும் பதிவிடுகிறார்.

தாமரை (சிரிப்பு):
நான் பாராசூட்ல போய் அவஸ்த்தைபட்டது போல் என் பேர் கொண்ட இவரும் ஸ்கூபா டைவிங் போய் காமெடி பீசாகி இருக்கார். ஊரை சுத்துறதுல முதல் ஆளா இருப்பார் போல இந்த  சுற்றுலா விரும்பி.

வாடா மல்லிகை (திரைப்படங்கள்):
பல பதிவுலக சக்கரவர்த்திகள் திரைப்படங்களை பற்றிய விமர்சனங்களை வழங்கினாலும் ஆங்காங்கே குறுநீல மன்னர்களும் இந்த ஏரியாவில் கோலோச்சிதான் வருகிறார்கள்.
குறிப்பாக பதிவுலகில் பாபு ஆங்கில திரில்லர் படவிமர்சனங்களை அதன் விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் தருகிறார். இவர் பரிந்துரைக்கும் பதிவுகளை பார்த்தால் கண்டிப்பாய் அந்த படங்களை பார்க்க தூண்டுகிறது.

(கதை சொல்லும்) காந்தள்:
நம்ம மனம்+ எஸ் கே நல்ல படங்களை டிசைன் பண்ணுவாருன்னு தெரியும் ஆனா அவர் நல்லா கதையும் எழுதுவாருன்னு உங்களுக்கு தெரியுமா? அவருடைய மற்றோரு வலைப்பூ “எதுவும் நடக்கலாம்”ல் இந்த வித்தியாசமான கதையை படிச்சே ஆகணும்

(அனுபவ) அல்லி:
கஸ்டமர் கேர் - இந்த வார்த்தையை கேட்டாலே பலருக்கு எரிச்சல்தான் வரும். ஆனால், கால் சென்டரில் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் சாதக பாதகங்கள், அது செயல்படும் முறை என பல தகவல்களை தன் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிறார் எல் கே. அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது தெரிந்துகொள்ள!

(பல்சுவை) பாரிஜாதம்:
எமெர்ஜன்சி, மிசா - பற்றிய வரலாற்று தொடரை எழுதி வருகிறார்

(நெடுநாளாய் எழுதாத) குறிஞ்சி:
பட்டனத்துக்கு வந்த பட்டிக்காட்டான் தன் அனுபவங்களை நகைச்சுவையுடன் வழங்கிவந்தார். ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்தபட்சம் 100 கமெண்டுகளை பெற்று வந்த இவர் சில நாளாக எழுதுவதில்லை. @ ஜெய், உங்கள் சேவை வலையுலகத்துக்கு தேவை (கும்மி அடிக்க ஒரு கை குறையுதுப்பா)

சரி, இவங்க பேட்டிங் திறமை எப்படினு நீங்க அவங்க கிரெளண்டுக்கே போய் பார்த்துட்டு வாங்க....

கடைசியாக,


ஒரு டவுட்டு: Black & White டிவில கலர் படம் தெரியாது ., அதே மாதிரி கலர் டிவிலயும் Black & White படம் தெரியக்கூடாதுல..! ஏன் தெரியுது ..? - கேட்டது செல்வா

அதிரடி தொடரும்....

மேலும் வாசிக்க...

Monday, November 29, 2010

ஆட்டம் ஆரம்பம்!

ஊருக்கு நல்லது சொல்வேன்...
எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்...
சீருக்கெல்லாம் முதலாகும்....
ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்...

ஓகே, கடவுள் வணக்கம் முடிஞ்சது. இப்போ ஸ்டார்ட் மியூசிக்....

இதுனால சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னன்னா, சரியாக 5 மாசத்துக்கு முன்னாடி நம்ம தேவா அண்ணனால வலைசரத்தில் அறிமுகமான நான் இந்த வாரம் வலைசரத்துல ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.

இது ஜாம்பவன்கள் உட்கார்ந்த சிம்மாசனம், என்னால முடியுமான்னுலாம் சீன் போடப்போறது இல்லை.... மேல உள்ள வரிகளை மறுபடி படிச்சுக்கோங்க..... எனக்கு தெரிஞ்சதை சொல்லுறேன் அதுக்கு முன்னாடி என்னைபத்தி தெரிஞ்சிக்கோங்க... (எல்லாம் ஒரு விளம்பரம்தான்)

நான் பதிவுலத்துல பிரபலம் ஆனதே ஒரு பிராப்ளமாலதான். அதுவும்  என் வளர்ச்சிய தடுக்க ஒரு பிரபலம் ஒரு சின்ன பூச்சிய (அதாங்க  Bug ) அனுப்ப, அதை தூக்கி கூவத்துல போட்டு பிரபலம் ஆனேன் (என்ன என் பிளாக்கை தூக்கி கூவத்துல போட்டு இருந்தா நீங்க தப்பிச்சி இருப்பீங்க.....)

கவிதை எழுதறேன் பேர்விழினு சிலது கிறுக்கினேன். என் மனைவி பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி கொடுக்காம கவிதை எழுதி சமாளிச்ச அனுபவமும் உண்டு. ஆங்.. அனுபவம்னு சொன்னவுடனே தான் நியாபகம் வருது. சொந்த அனுபவத்தை வெச்சே பல பதிவுகளை தேற்றி இருக்கேன். அதுவும் பயணம் போறதுல பல அனுபவம் இருக்கும். ஆனா பாராசூட்ல போய் நான் பட்ட பாடு இருக்கே. உண்மையிலேயே செத்துபிழைச்சேங்க.

திடீருனு ஞானோதயம் வந்து சில நல்ல பதிவுகளை எழுதுவேன். அதிலும் ஒரு மவுஸ் கிளிக்ல அன்னதானம் செய்யறது, அதுவும் இலவசமா செய்யறது, சாதாரணவிஷயமா? முடிஞ்சா நீங்களும் உங்க பிளாக்ல இந்த விட்ஜெட்டை வைங்க. ஓட்டு போடும் போது இதையும் ஒரு கிளிக் செய்து ஒரு பிடி உணவு கொடுத்துட்டு போவோமே....

சினிமா பற்றி விமர்சிக்கற அளவு பெரிய ஆளா இல்லைனாலும் சினிமாவை வைத்து ஒரு புதிர் போட்டி நடத்துறது நல்லாவே போகுது. என்ன அந்த போட்டிக்கு படத்தை டிசைன் செய்யுறதுக்குள்ள விழி பிதுங்குது.

                கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை
                எவ்வளவு கஷ்டமென தெரியாதவர்

அட இது அருண்வள்ளுவர் எழுதினதுங்க... காமெடியோ மொக்கையோ எழுதுனாதான் கஷ்டம் தெரியும். எப்படி பதிவு எழுதனும்னு உங்களுக்கு நான் சொல்லி குடுக்கவேண்டியது இல்லை... ஆனா கொஞ்சம் பதிவுகளையும் பதிவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வலைசரம் மூலமா அவங்க பேட்டிங் திறமைய உங்களுக்கு காட்றேன்....

அடுத்த ஆறு நாளும் சரவெடி கொண்டாட்டம்தான்.... நமது எப்பவும் மசாலா மிக்ஸ்.... பொருத்து இருந்து பாருங்க....

Game Starts Now....

மேலும் வாசிக்க...

Sunday, November 28, 2010

வருக ! வருக ! அருண் பிரசாத் ! கலக்குக !

அன்பின் சக பதிவர்களே !

ஒரு வார காலமாக, வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்ததனாலும், ஆசிரியர் குழு சற்றே பணிச்சுமையினால் நேரம் ஒதுக்க இயலாத காரணத்தினாலும், வலைச்சரத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

நாளை 29 நவம்பர் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அருமை நண்பர் அருண் பிரசாத் இசைந்துள்ளார். இவர் சிறு வயது முதலே எழுதுவதில் மிக்க ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே ஆனந்த விகடனில் மாணவ நிருபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். தற்பொழுது மொரீசியஸில் (Mauritius) ஒரு தனியார் மருத்துவ மனையில் உயிர் கருவி பொறியாளராக(Biomedical Engineer) பணி புரிகிறார். இவர் "சூரியனில் வலைவாசல் " என்ற பதிவினில் எழுதி வருகிறார். வலைப்பூ ஆரமபித்து எட்டே மாதங்களில் ஏறத்தாழ 75 இடுகைகள் இட்டு நூற்றுப்பத்திற்கும் மேலான பதிவர்களை பின் தொடரச் செய்திருக்கிறார்.

அருண் பிரசாத்தினை வருக ! வருக ! வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! சிறந்த அறிமுகங்கள் தருக ! தருக ! என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரம் குழுவினர் சார்பாக பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் அருண் பிரசாத் - நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Monday, November 22, 2010

நன்றி இர்ஷாத்..(வலைச்சரத்தில் விடுமுறை)

வலைச்சரத்தில் தொடர்ந்து சரவெடியாக பதிவுகளை இட்டு சிறப்பித்த பதிவர் இர்ஷாத் க்கு நன்றி..
அவரைத் தொடர்ந்து வாசித்து ஊக்கமளித்த நண்பர்களுக்கும் நன்றி.
-----------------------------------


வலைச்சரத்தின் தள மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த வாரம் பதிவுகள் அறிமுகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்படுள்ளது. அடுத்த வாரம் முதல் வழக்கம் போல் தொடரும்.
நன்றி.
மேலும் வாசிக்க...

Sunday, November 21, 2010

க‌ர‌டியும் அனாதை காத‌ல‌னும்(வ‌லைச்ச‌ர‌ம் ஏழாவ‌து நாள்)

அனாதை காதலன்.. கவிதைகள் எழுதுகிறார்..(பெய‌ரே ப‌டுவித்தியாச‌மா இருக்கு)


நிலவின் மடியில்....அப்படீன்னு கவிதை எழுதுறாரு..இவரு கல்லூரியில் கரடி.... ஊருக்குள்ள வாயாடி....



இவ‌ர் அபுல்ப‌ச‌ர் நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் இவ‌ரிட‌ம் இருக்கு எல்லோருக்கும் தெரிய‌வேண்டிய‌ வ‌லைப்பூ..

இவ‌ர் ர‌ஹிம் க‌ஸாலி நிறைய‌ எழுதுகிறார் ந‌ம‌க்குத்தான் ப‌டிக்க‌ டைம் ந‌ஹி.

இந்த‌ த‌ள‌த்தில் தொழில்நுட்ப‌ம் நிறைய‌ இருக்கிற‌து..

இவ‌ங்க‌ புஷ்பா வ‌லியில்லாம‌ல் வாழ்க்கை இல்லைன்னு சொல்கிறார் கொஞ்ச‌ம் என்ன‌ன்னுதான் கேளுங்க‌ளேன்..

தஞ்சாவூரு குசும்பு - சோழர் பரம்பரையில் ஒரு பதிவர்ர்ர்(ந‌ம்ம‌ மாவ‌ட்டம் குசும்புக்கு சொல்ல‌வா வேணும்)

இவ‌ரோடு 'FAVORITE BOOK'மாம‌னாரோட‌பேங்க்  பாஸ்புக்காம் ரொம்ப‌ லொள்ளு...

ப‌ணி அழுத்த‌ம் கார‌ண‌மாக‌ நிறைய‌ பேர்க‌ளை நான் விட்டிருக்க‌ வாய்ப்புண்டு..நான்கு மாத‌ங்க‌ளுக்கு முன்பு வ‌லைச்ச‌ர‌த்தில் க‌ண்டிப்பா ப‌ங்கேற்பேன் என்று சீனா ஐயாவிட‌ம் கொடுத்த‌ வாக்குறுதி நிறைவேற்றிய‌ ச‌ந்தோஷ‌த்தோடு விடைபெறுகிறேன்..நான் அளித்த‌ தொகுப்பிற்கு வ‌ந்து ப‌டித்து,பின்னூட்ட‌மிட்ட‌ அனைத்து வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளுக்கும் என் வாழ்த்துக்க‌ளையும் ந‌ன்றியினையும் கூறிக்கொள்கிறேன்..

மேலும் வாசிக்க...

Saturday, November 20, 2010

வலையுலக சகாக்கள் (வலைச்சரம் ஆறாம் நாள்)

வ‌ண்டி வ‌ண்டிய‌ க‌ட்டுரை எழுதினாலும் வ‌ந்த‌துக்கு அடையாள‌மா ஒரு ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிற‌துல்ல‌ செம‌ கில்லாடி இந்த‌ இமா ஆனா இந்த‌ ப‌ட‌ங்க‌ளுக்காக‌வே இவ‌ங்க‌ள‌ விட்ற‌லாம்..

ஹேமாவின் க‌விதைக‌ள் எல்லோருக்கும் பிடிக்கின்ற‌ வ‌கையில் இருக்கும். ம‌ன‌தில் ப‌ட்ட‌தை க‌ருத்தாக‌ பின்னூட்ட‌மிடும் இடுப‌வ‌ர்க‌ளில் இவ‌ருக்கே முத‌லிட‌ம்.

இய‌ல்பான‌ எழுத்துக்கு சொந்த‌க்கார‌ர் இந்த‌ ஸாதிகாஹ‌ச‌னா இவரின் இந்த‌ ப‌திவப் ப‌டிச்சிட்டு சிரிக்காம‌ இருக்க‌முடியாது..

இவ‌ங்க‌ளா சொல்லாம‌ ஒரு ப‌திவா ம்ஹீஹிம் சான்சே இல்ல‌..வ‌லையூல‌க‌ தாய‌ம்மா சித்(ரொம்ப‌ நீள‌மான‌ பெய‌ர்)இந்த‌ம்ம‌ணி உதிக்கிற‌ தத்துவ‌ங்க‌ளை ப‌டிக்காத‌வ‌ங்க‌ ப‌டிச்சிருங்க‌..

அப்புற‌ம் ந‌ம்ம‌ ச‌கா ஸ்டீப‌ன் நாடோடியா எல்லோருடைய‌ ப‌திவையும் ப‌டிச்சிட்டு க‌ட்டாய‌மா பின்னூட்ட‌த்தில் ஊட்ட‌ம் கொடுக்க‌க்கூடிய‌ ந‌ண்பர் இவ‌ருடைய‌ க‌ற்ப‌னைக்குதிரையை பாருங்க‌..

ந‌ம்ம‌ அண்ண‌ன் நைஜிரியா ராக‌வ‌ன் இவ‌ருடைய‌ ப‌ல‌ ப‌திவுக‌ள் ரொம்ப‌ சுவ‌ராஸ்ய‌மா இருக்கும் என்ன‌மோ இப்ப‌ ப‌திவு எழுதுற‌தே இல்ல‌,புதிய‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழிகாட்டியா இருக்க‌ உங்க‌ ப‌திவுக‌ள் அவ‌சிய‌ம்'னு இந்த‌ வ‌லைச்ச‌ர‌ம் மூல‌மா அண்ண‌னுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.


கே.ஆர்.பி செந்தில் இவ‌ரின் ஃபுரோஃபைல் போட்டோ சே'வ என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும் அதே போல் இவ‌ரின் ப‌திவுக‌ளும்..ப‌யோ‍டேட்டா இவ‌ர‌ மாதிரி யாரும் போட‌ முடியாது..

ரொம்ப‌ ர‌ச‌னையான‌ ப‌திவ‌ர் ப‌த்மா அதே போல் இவ‌ரின் ப‌திவுக‌ளும் அனுப‌விச்சு ப‌டிக்க‌லாம் இவ‌ரின் க‌விதையே இவ‌ரைச் சொல்லும் காகித‌ஓட‌ம் என்னாப் பேரு.

ந‌ம்ம‌ தேன‌க்கா ரொம்ப‌ பிஸி ஆனா வ‌லைத்த‌ள‌த்தின் பேரைப் பாருங்க‌ சும்மா ரொம்ப‌த்தான் குசும்பு வ‌லைத்த‌ள‌த்தின் பெய‌ர்தான் சும்மா ஆனா எழுதுற‌ க‌விதை,க‌ட்டுரையெல்லாம் பார்த்தா ய‌ம்மா'ன்னு சொல்ல‌த்தோன்றும்.அற்புத‌மான‌ எழுத்துக்குசொந்த‌க்காரர்..


நீரோடையில் இவ‌ர‌து க‌விதைக‌ள் துள்ளிக்குதித்து விளையாடுகிற‌து. இவ‌ர‌து க‌விதைக‌ளில் வ‌ரிக‌ள் உண்மையை சொல்லும்.. என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌ இந்த‌க் க‌வி வ‌லிக‌ள்..

இவ‌ங்க‌ வார்த்தைக‌ளில் கோர்க்கிற‌ முத்துச்ச‌ர‌ம் அருமையா இருக்கும்..கதை,க‌விதை,புகைப்ப‌ட‌ங்க‌ளில் க‌ல‌க்குறாங்க‌..ஆ.விக‌ட‌னில் வ‌ந்த‌ இவ‌ரின் க‌விதை அருமை..

ஹீசைன‌ம்மா இவ‌ங்க‌ளை ப‌ற்றி சொல்ல‌வே வேண்டிய‌தில்லை..மிக‌த்திற‌மையான‌ எழுத்துக்க‌ள் இவ‌ரிட‌மிருந்து எதிர்ப்பார்க்க‌லாம். பின்னூட்ட‌ங்க‌ளில் நிறை,குறையை எந்த‌ த‌ய‌க்க‌மும் இல்லாம‌ல் ப‌ட்டென்று சொல்லும் சுபாவ‌ம் உடைய‌வ‌ர்..இவ‌ரின் டிர‌ங்குப் பெட்டியில் சுவ‌ராஸ்ய‌த்துக்கு குறைவிருக்காது..

புரோஃபைல் போட்டோவிலயே இவ‌ரின் குசும்பு தெரியும்... எண்ண‌ அலைக‌ள் சுனாமியா மாறி அடித்த‌ க‌ட்டுரைக‌ள் இவ‌ரிட‌ம் நிறைய‌ இருக்கிற‌து..ப‌டு சுவ‌ராஸ்ய‌மான‌ எழுத்துக்கு சொந்த‌க்காரர்.


ந‌ம்ம‌ ஆருயிர் ச‌கா சீமான்க‌னி க‌தை க‌ட்டுரைக‌ளில் தொட‌ர்ப‌திவு எழுதுவ‌த‌ற்கே ந‌ம‌க்கு நாக்கு த‌ள்ளிடும் ஆனா இவ‌ரு ஒரு ப‌டி மேலே போய் க‌விதைக‌ள்'ல‌ தொட‌ரா எழுதிக்கிட்டு இருக்க‌வ‌ரு ரொம்ப‌ திற‌மைசாலி..டிவி'ய‌ பார்த்துட்டு அந்த‌ நிக‌ழ்ச்சிமேல‌ வ‌ந்த‌ கோப‌த்த‌ பாருங்க‌..


மேலும் வாசிக்க...

Friday, November 19, 2010

கலவை (வலைச்சரம் ஐந்தாம் நாள் )

கதைகள், கவிதைகள் என கவனமாய் எழுதும் இவரின் எழுத்துக்களுக்கு வர்ணமும், வடிவமும் மட்டுமல்லாமல் எழுத்தோசையும் உள்ளது..

நம் இதயங்களுக்கு தலை வாசல் வைத்து காதல் கவிதைகளையும், பல சமுதாய அக்கறையுள்ள விசயங்களையும், இல்லறங்கள் நல்லறமாக தாம்பத்தியம் பற்றிய பல தகவல்களையும் மனதோடு மட்டும் கூறிகிறார் இவர்..

கவிதைகள், காமெடிகள், காதல் என கலகலப்பாய் கிறுக்குகிறார் இவர்இந்திராவின் கிறுக்கல்கள் என்ற பக்கத்தில்..

என் இனிய இல்லம் பற்றி அடிக்கடி நினைவூட்டும்  சைவம் சைவம் என அசத்தும் இவரின் சமையல் குறிப்புகள்.. 

அழகு குறிப்புகள், தையல் கலை, குழந்தை வளர்ப்பு பற்றி சொல்வது மட்டுமல்லாமல்  சமையல் அட்டகாசங்கள் மூலம் அசர வைக்கிறார் இவர்..


என்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள் சொல்லத்தான் நினைக்கிறேன்..

 Nice Writing மல்லிகை

மேலும் வாசிக்க...

Thursday, November 18, 2010

மொக்கை டிபார்ட்மென்ட்(வலைச்சரம் நான்காவது நாள் )

சீரிய‌ஸான‌ ப‌திவுக‌ளுக்கு ம‌த்தியில் இந்த‌ ப‌திவ‌ர்க‌ள் எழுதும் ப‌திவுக‌ள்தான் ந‌ம் விருப்ப‌மாய் இருக்கிற‌து..இந்த‌ மொக்கை க‌ல‌ந்து எழுத‌ ஒரு வித‌ திற‌மை இருக்க‌த்தான் வேண்டும்..இவ‌ர்க‌ளின் குறிப்புக‌ளை ம‌ட்டுமின்றி என் வ‌லைச்ச‌ர‌ தொகுப்பிற்கு உத‌வியாய் இருந்த‌ வெறும்ப‌ய‌'ஜெய்ந்திற்கு ந‌ன்றி..




இவர் காமெடி கிங் கவுண்டமணியின் ஆஸ்தான  ரசிகன்.. இவர் பதிவை படிக்க வேண்டுமா.. ஓகே ஸ்டார்ட் மியூசிக்...


  இவரின் பதிவுகளை படிக்க செல்லுங்கள்... அபாயம்........(உனக்கா இல்ல எனக்கா தெரியாது)


செல்வா..   Radio Jockey ஆக வேண்டுமென்பது தான் இவரின் லட்சியமே..


ரமேஷ் ரொம்ப நல்லவன் (சத்தியமா)..  இவரின் பதிவுகள் அனைத்தும் நகைச்சுவை உணர்வுடன் படிப்பதற்கு  சுவாரஸ்யமாகவே இருக்கும்.. 

இம்சைஅரசன் பாபு..  பெயரில் உள்ளது போன்று நம்மை எப்போதும் இம்சை படுத்தாலம் அவ்வப்போது பல சமுதாய அக்கறையுள்ள பதிவுகளையும் எழுதக்கூடியவர்.. x

 தகவல்கள், அனுபவங்கள், சமூகம் பற்றி எழுதுவதோடு மட்டுமல்லாமல் புதிர் போட்டி, நகைச்சுவை எனவும் அசத்தும்  இவரின் பதிவுகளை படிக்க வேண்டுமானால் நீங்கள் "சூரியனின் வலை வாசல்" வரை செல்ல வேண்டும்.. 


பெயர் சொல்ல விருப்பமில்லை. எந்த காரணத்தால் இவர் பெயர் சொல்ல விரும்பவில்லை என்று தெரியவில்லை.. ஆனால் இவரின் பதிவுகள் அனைத்தும் பெயர் சொல்லும் படியாக தான் அமைந்திருக்கும்...
மேலும் வாசிக்க...

Wednesday, November 17, 2010

சி.டி.யும் க்ரீன் பேபியும் (வலைச்சரம் மூன்றாவது நாள் )

துபாயிலிருந்து வ‌ந்த‌ வெக்கேஷ‌ன் ப‌திவு துன்பிய‌லும் துபாய் காசும் வ‌ரிக‌ள் வ‌லிக‌ள்..

கார்ட்டூன் பாலாவின் கார்ட்டூன்க‌ள் உண்மையைச் சொல்லும் ந‌கைச்சுவையோடு...

இந்த‌ இடுகையை நினைச்சி சிரிப்ப‌தா அழுவ‌தான்னு தெரிய‌வில்லை அதான் த‌லைப்பே குத்துங்க‌ டாக்ட‌ர் குத்துங்க‌..

எங்க‌ள் ப்ளாக் வித்தியாச‌மான‌ ப‌க்க‌ம் இதை பாருங்க‌ ச‌ரியான‌ ஐடியா..

ப‌திவும் ச‌ரி புகைப்ப‌ட‌ங்க‌ளும் ச‌ரி அழ‌குட‌ன் நேர்த்தியான‌து ம‌கேஷின் ப‌திவுக‌ள்..

நித்தியான‌ந்தா அப்ப‌டி என்னா செய்தார் அப்ப‌டிங்கிறாரு தெரிஞ்ச‌வ‌ங்க‌ அறிஞ்சிவ‌ங்க‌ ப‌தில் சொல்லுங்க‌ப்பு.

காத‌லை ப‌த்தி இவ‌ரோட‌ பார்வை ந‌ல்லாயிருக்கு..  ரகு புரிஞ்சிருச்சி!!

இந்த‌ மாதிரி க‌ன‌வெல்லாம் காண‌க்கூடாது பாலாஜி யய்யாடி..

ப‌திவுல‌கில் இவ‌ங்க் க்ரீன் பேபியாம் என்ன‌ சொல்ற‌துன்னே தெரிய‌ல‌..

இந்த‌ மாதிரி சி.டி.க்க‌ளால் ம‌ன‌ந‌ல‌ம் பாதிக்க‌ப்ப‌டுதாம் யோசிக்க‌வேண்டிய‌ விஷ‌ய‌ம்தான் ந‌ல்ல‌ ப‌திவுங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.

வியாபாரிக‌ள் ரொம்ப‌ விவ‌(கா)ர‌மான‌வ‌ர்க‌ள் என்கிறார் நிஜாம் நீங்க‌ என்ன‌ நினைக்கிறீங்க‌ அப்ப‌டின்ற‌தை ப‌டிச்சிட்டு சொல்லுங்க‌..

ப‌திவுக‌ளில் த‌ன்ன‌ம்பிக்கை ப‌திவுக‌ள் வ‌ருவ‌து குறைந்துவிட்ட‌து..அதுக்கெல்லாம் சேர்த்தார்போல் இவ‌ருடைய‌ இந்த‌ ப‌திவு முழுசாய் த‌ன்ன‌ம்பிக்கையை அளிக்கிற‌து பிர‌மாத‌ம் எஸ்.கே.

முதுமையை போற்றுவோம் என்ற‌ த‌லைப்பிட்ட‌ இந்த‌ ப‌திவு ரொம்ப‌வே யோசிக்க‌வைத்த‌து அருமையான‌ ஆக்க‌ம் குமார்..

இவ‌ரின் க‌ற்ப‌னையைப் பாருங்க‌ காட்டுக்குள் ஸ்டார்ஜ‌ன்..என்ன‌மா யோசிக்கிறீங்க‌ ஷேக்..

ந‌ம்ம‌ ச‌கா அக்ப‌ர் த‌ன் ந‌ண்ப‌னை ச‌ந்திக்க‌ பதிவுக‌ல‌ம் உத‌வின‌து அப்ப‌டிங்கிற‌தை எப்ப‌டி சொல்றாருன்னு நீங்க‌ளே ப‌டிங்க‌.. 

மேலும் வாசிக்க...

Tuesday, November 16, 2010

அர‌புத்த‌மிழ‌ரும் ஜில்த‌ண்ணியும்(வ‌லைச்ச‌ர‌ம் இர‌ண்டாவ‌து நாள்)



நான் குறிப்பிட்டு இருக்கும் சில‌ரில் வேக‌மாக‌ முன்னேற்ற‌ம் அடைந்துவிட்ட‌ன‌ர் ப‌திவு எழுதுவ‌தில்..ஏனென்றால் இந்த‌ தொகுப்பு நான் மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ரே த‌யார் செய்தது..நேர‌மின்மையால் வ‌லைச்ச‌ர‌த்தில் ப‌ங்கேற்க‌முடிய‌வில்லை..




ரொம்ப உபயோகமான பதிவுகள் சட்டம் நம் கையில் அப்படின்னு தலைப்பிட்ட இவரது பதிவுகள்.எல்லோருக்கும் தெரியவேண்டிய வலைப்பூ...

இவர் பெயர்தான் வெறும்பய ஆனா உண்மையிலே எல்லாம் தெரிஞ்ச பய அதுக்கு இவரது பதிவுகள படித்தாலே தெரியும் ..யார் மேலே கோபமோ திரும்பி நிக்கிறாரு. 

இந்த ஆஹா பக்கங்களில் இவர் எழுதும் பதிவுகள் அனைத்தும் ஆஹா ரகம்தான்..

அப்புறம் இவர் எழுதும் பதிவுகளில் கொஞ்சம் காரம் இருக்கும் என்ன இப்படி கோபமான பதிவுன்னு நினைக்கையில் நடிகைகளின் படங்களைப் போட்டு நம்மை 'கூல்' பண்ணிடுறார்(வெவராமானவியங்க)..

 மதுமிதா சுடர்மிகு அறிவுதா அப்படின்னு சொல்ற இவரு எழுதும் பதிவுகள், கவிதை எல்லாமே நல்லாயிருக்கு.. 

இவங்க மின்மினி இவரது பதிவுகளும் சுவராஸ்யமாக இருக்கும்.

இன்ன‌ல் விளைவிக்காத‌வ‌ரை எதுவுமே த‌ப்பில்லைங்கிறார் இவ‌ர்...

ஜில்தண்ணின்னு பெயரிலிருந்த இவர் யோகேஷ்ன்னு பெயரை மாத்திக்கிட்டு பண்ற சேட்டை தாங்கல..

இந்த ர‌சிக‌ன் நல்லாவே எழுதுகிறார் இவரின் இந்த பதிவு அருமை..

இந்த‌ அர‌புத்த‌மிழ‌ரின் இடுகைக‌ள் ப‌டுசுவ‌ராஸ்ய‌ம் அதிலும் இந்த‌ ச‌ம‌யோசித‌ம் ப‌லே.. 

இவ‌ங்க‌ ஜிஜி ப‌திவுக‌ள் வித்தியாச‌மா இருக்கு 

இவர் நான் வாழும் உலகம்ன்னு தலைப்பில் எழுதும் பதிவுகள் 
நல்லாயிருக்கு.. 

எழுத்தில் குசும்பு ஏக‌த்துக்கும் கொப்ப‌ளிக்கிற‌து இவ‌ர‌து ப‌திவுக‌ளில். ப‌திவுல‌க‌த்துக்கு புதுசு மாதிரியே தெரியாது வாங்க‌ குட்டிசுவ‌ர்க்க‌ம்..

இந்த குடந்தையூரார் எழுதும் பதிவுகள் வித்தியாசமானவை..

இந்த பிங்கிரோஸ் எழுதுற பதிவுகள் நல்லாயிருக்கு..

ரொம்ப தூய்மையான ஆளு இவரு அதே போல் இவர் எழுதும்  பதிவும்..

நான் உங்களுக்கு ஓட்டுப் போட்டேன் நீங்க எனக்கு ஓட்டுப் போடுங்க என்று உரிமையோடு? கேட்கறவர் இவர்..

தலைப்பே தெரியாததை தெரிந்துக் கொல்வது அப்புறம் நான் என்ன சொல்வது..

இவ‌ர் எழுதுற‌ க‌விதைக‌ள் ந‌ல்லாயிருக்கு அதிலும் இந்த‌ க‌விதை ம‌ழையில் ந‌னைந்த‌ உண‌ர்வு..

இன்னைக்கு இவ்ளோதான் நாளைக்கு பார்ப்போம்..

மேலும் வாசிக்க...

Monday, November 15, 2010

த‌ந்தைய‌ர் தின‌மும் ப‌ப்ளிசிட்டியும்(வ‌லைச்ச‌ர‌ம் முத‌ல் நாள்)

வந்துட்டோம்'ல... வலைச்சரத்தை இந்த வாரம் கொஞ்சம் பார்த்துக்கப்பா அப்படின்னு நம்ம சீனா அய்யா பொறுப்ப நம்ம கிட்ட ஒப்படைத்துவிட்டார்கள்.. அவருக்கு ஒரு பெரிய நன்றிய போட்டுட்டு ஆரம்பிப்போமா கச்சேரியை.. முதலில் சுயபுராணம்..இதுவேறயா..

நம்ம(ந‌ம்ம‌ பெய‌ரா உன் பெய‌ர் ஆர‌ம்ப‌மே இப்ப‌டியா?) பெயர் அஹமது இர்ஷாத்,ஊர் தஞ்சை மாவட்டத்தில அதிராம்பட்டினம்..பணி செயவது கத்தாரில்.. 

நான் அலைவரிசை அப்படிங்கிற வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதி வருகிறேன் இல்லை இல்லை கிறுக்கி வருகிறேன்.. 

நம்மள ரொம்ப ஃபேமஸ்? ஆக்கிய பதிவுன்னு இதை சொல்லலாம்.சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டிங்கிற கதையா பின்னூட்டம் போட்டு போட்டு உசுப்பேத்திய பிறகு கதை கவிதை ஆரம்பிச்ச அலைவரிசை கொஞ்சம் வேகமாகவே அடிக்க ஆரம்பிச்சிருச்சு...

நம்ம பதிவுகள்'ல படிக்காதவங்களுக்காக மறுபடியும்..

நமக்கு இதுல சாப்பிட்டுத்தான் பழக்கம்..

தந்தையர் தினத்துக்காக நான் எழுதிய கவிதை...

இவிய்ங்க தொல்லை தாங்க முடியலை...

என்னோட இந்த கதை குங்குமத்தில் வெளி வந்தது...

இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்து மகிழ்ச்சியை தந்தது...

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா..

நான் சொல்ல வந்தவை..

இன்னும் சொல்ல‌ நிறைய‌ இருக்கு இருந்தாலும் ப‌ப்ளிசிட்டி(என்னாசிட்டி) பிடிக்காது..(யாருப்ப‌ அங்க‌ இருமுற‌து)

நாளைக்கு பல புதிய பதிவர்களோட சந்திப்போம்.. வர்ட்டா..
மேலும் வாசிக்க...

நன்றி சமீர் ! வருக இர்ஷாத் !

”கலவையின் போது சதவீதங்களில் வேறுபடும் நிறங்களைப்போல நம் பதிவர்கள்”என்று கூறி அழகான வர்ணக்கலவைகளாய் தம் தேர்வுகளால் வலைச்சரத்தை அழகுபடுத்தி இருக்கிறார், (ஜீவன் பென்னி )சமீர் அகமது அவர்கள்.

சமீர் அவர்களுக்கு வலைச்சரக்குழுவின் நன்றிகள்.. அவரின் தேர்வுகளை வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு
நன்றிகள்.

--------------------------------------------
வரும் வாரத்தின் வலைச்சர ஆசிரியராக அஹமது இர்ஷாத் தயாராகிவிட்டார். அதிராம்பட்டினத்திலிருந்து கத்தாருக்கு சென்று வேலை செய்தாலும் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் விரும்பி வந்து வாழும் நாட்களுக்காக காத்திருக்கும் அவருக்கு அவர் எண்ணம் ஈடேற வாழ்த்துவதோடு வலைச்சரத்தை சிறப்பிக்க வாழ்த்தி வரவேற்போம்.
மேலும் வாசிக்க...

Sunday, November 14, 2010

நன்றிகளுடன்-விடைபெறுகின்றேன்

புறத்திலிருந்து பார்க்கும் பொழுது சுலபமாகத்தெரியக்கூடிய ஒன்று உள் சென்று பார்க்கும் பொழுதே அதன் பின் உள்ள உழைப்புத்தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பே அதன் பின் உள்ள உழைப்பினை உணர முடிந்தது.  நிறைய புதிய, பழைய பதிவுகளையும் பதிவர்களையும் அறிந்து தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பு எனக்கு பெரிதும் உதவியது.

இந்த ஒரு வார காலம் தொடர்ந்து வந்து பின்னூட்ட மிட்டு உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும்,  மற்றும் வலைச்சரக்குழுவிற்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க...

Saturday, November 13, 2010

கலவை நான்கு

 வணக்கம் வழக்கம் போல நேரா அறிமுகத்து போகலாம் வாங்க.


சேர சோழ பாண்டியர்களைப்பற்றி தெரியும்,  களப்பிறர்களைப் பற்றித்தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது.  அதனால் பதிவர் ஹரிபாண்டி எழுதியிருக்கின்ற இந்தப் பதிவ படிங்க.  மேலும் வரலாறு சம்பந்தமான நிறைய தகவல்கன் இருக்கின்றது....! 


அமைதியான இரவுகளில் அழகான நினைவுகளுடன் பயணிக்க அழைக்கு வினோ ஒரு உணர்வு பூர்வமான கவிஞர். படம் பிடிப்பது போல தன் உணர்வுகளை டக் டக் என்று எடுத்து வார்த்தைகளுக்குள் நிறைத்து கொடுப்பதில் எக்ஸ்பர்ட். ஒவ்வொரு வார்தையும் சேந்து வரிகளாய் நாம்முள் சென்று அது கொடுக்கும் சுகமே அலாதியானதுதான்...நிலவின் மடிக்குப் போய்த்தான் பாருங்களேன்.....!

சிலருடைய அனுபவங்களும்,  அவர்களுடைய வாழ்க்கையும் நிறைய பேருக்கு பாடமாவும்,  முன்னேற்றத்துக்கு ஒரு உந்து சக்தியாவும் இருக்கும்.  நம் பதிவுலகில் மிகுந்த தன்னம்பிக்கை மிக்க இவரும், இவருடைய மனம் + எனக்கும், உங்களுக்கும் உந்து சக்திதாங்க.

திருக்குறள் தமிழ் பொதுமறை முழுவதுமாக, தமிழ் அறிஞர்களின் உரையுடம் இங்கு பதிவேற்றியுள்ளார்கள்.  தமிழர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கு இது
ஒரு பொக்கிஷம்.

குழந்தைநலம் வலைப்பூவில் மருத்துவர் ராஜ் மோகன் குழந்தைகள் நலம் தொடர்பான மருத்துவ ரீதியான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைமுறைகள் பற்றி விரிவான படங்களுடன் விளக்கமாக எழுதிவருகின்றார்.  நீங்களும் பார்க்கலாம். 

நாளை சந்திப்போம்........
அன்புடன்
சமீர் அகமது.மு
மேலும் வாசிக்க...

Friday, November 12, 2010

கலவை மூன்று

  வணக்கம் நண்பர்களே, வாருங்கள் அறிமுகத்திற்குள் போகலாம்.

தமிழர்கள் உலகமெங்கும் விரவியிருக்கிறார்கள் அதுவும் அந்தமானிலிருந்து எழுதும் இந்த நண்பரின் வலைப்பூ...ஏராளமான செய்திகளை கொடுக்கிறது. எதேச்சையாக வலைப்பூவினில் வழுக்கி விழுந்த நான் வெளி வர வெகுநேரமானது.....
வேண்டுமானல் நீங்கள் உள் நுழைந்து பாருங்களேன்!

சில படைப்புகளுக்கு அறிமுகம் தேவையில்லை வலைப்பக்கத்தை சுட்டி காட்டினாலே போதும் உள்ளே இருக்கும் படைப்பே உங்களிடம் பேசி அறிமுகம் செய்யும். அப்படி ஒரு சிறப்பான படைப்புகளுக்கு சொந்தக்காரர்தான் ராஜா சந்திர சேகர். நீங்கள் வேண்டுமானால் வலைப்பூவை திறங்களே....இவரின் கவிதைகள் உங்களிடம் பேசும்.


தமிழனாக இந்தியனாகஎன்ற தலைப்பில் தான் ஊர் சுற்றிய அனுபவங்களை பதிவாக்கி நம்மையும் அவரோடு பயணிக்க வைக்கின்றார். இந்தப் பதிவை தொடராக எழுதத்தொடங்கியிருக்கின்றார். முதல் பாகம் மட்டுமே வந்துள்ளது. நீங்களும் இதை தொடரலாம்.

ß α √ ½ ¼ a² Σ ♂ ♀ ♫ ♪ Æ  இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கனுமா அப்போ இங்க வாங்க இத க்ளிக் பண்ணுங்க.

 

கேன்சர் ஒரு கொடுமையான நோய்.   இங்க அதோட ஒருத்தங்க எந்த அளவுக்கு போராடியிருக்காங்கன்னு படிச்சப்பா மனசு கனத்துப்போச்சு.  கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற வலைப்பூவில் இப்போது யாரும் எழுதுவது இல்லை.  ஆனால் அவருடைய வாழ்க்கை ஒரு ஆவணமாக அவர்களாலேயே பதிவு செய்யப்பட்டு நம் முன்னே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  அவங்களுக்கு ஒரு சல்யூட். அவங்க மன உறுதிக்கும் ஒரு சல்யூட்.


சமீர் அகமது.மு


மேலும் வாசிக்க...

Thursday, November 11, 2010

கலவை இரண்டு

பின்னூட்டங்களின் மூலம் என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

நிறங்கள் எத்தனையோ
குணங்களும் அத்தனை.

 கலவையின் போது சதவீதத்தின் அடிப்படையில் நிறங்கள் சிறு சிறு வேறுபாடுகள் கொண்ட வேறு வேறு நிறங்களையும் குணங்களையும் பெறுவது போலவே நம் பதிவர்களும் அவர்களின் பதிவுகளும்.  மலைத்துத்தான் போகின்றேன் . வாருங்கள் இன்றைய அறிமுகங்களுக்குச் செல்வோம்.

அகல்விளக்கு பெயரைப்போலவே அவரது எழுத்துக்களும் வாசகனுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடியவை.  வாசகனை உள்ளிழுக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். வசனக் கோவில் என்ற சிறுகதையில், அமானுஷ்ய சம்பவங்களின் மூலம் நம்மை பயமுறுத்துகிறார்.  இவரது கவிதைகளும்,  கட்டுரைகளும் அழகாகவும் அருமையாவும் இருக்கின்றது.

சிங்கக்குட்டி. கலவையான தளம். கதவைத்திறங்கள் கண்டிப்பாக காற்று வரும் இந்தப் பதிவில் "எனக்கு தெரிந்த நான்கு ஆன்மீக புத்தகங்கள் உள்ளன, அவற்றில் இல்லாத எந்த ஒரு கருத்தையும், கடந்த சில நூறாண்டில் வந்த எந்த ஒரு புத்தகத்திலும் நீங்கள் காட்ட முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும், அந்த புத்தகங்கள் உலகின் அத்தனை மொழியிலும் கிடைகிறது."  அது என்னன்ன தெரிஞ்சுக்க அந்தப் பதிவ படிங்க மற்றும் பழைய கதை புதிய பார்வை   இதையும் ஒரு முறை படிச்சிடுங்க.


வீரபாண்டியன் இந்திய ஆட்சிப் பணித்துறை இவர் அதிகமா எழுதுவது இல்லையென்றாலும் எழுதிய பதிவுகள் அனைத்தும் நல்லாயிருக்குங்க.  ஐஏஎஸ் தேர்வில் தான் தேர்ச்சி பெற்றவுடன் தனக்கிருந்த மன நிலையை அழகான வார்த்தைகளால் விவரிச்சிருக்கார்.



ப்ரியமுடன் ரமேஷ் பேருக்கு முன்னாடியே ப்ரியத்த வச்சிருக்கார்.  சிறுகதைகள், திரைப்படங்களுக்கான விமர்சங்கள் மற்றும் கவிதைகள் என்று படிப்பதற்கு நிறைய இருக்கின்றது.  கண்ணீர் துள்ளல்   இந்தப் பதிவ நான் ரெகமண்ட் செய்கின்றேன்.

curesure4u இது  ஆயுர்வேத மருத்துவத்தளம். ஒருவரே வெவ்வேறு மருத்துவ தலைப்புகளில் நான்கு தளங்களில் எழுதுகின்றார்.  மூலிகைகள் மற்றும் அதன் புகைப்படங்கள் என்று அறியனவற்றை தொகுத்து அளித்துள்ளார்.  தன் வேலைப்பளுவிற்கு இடையிலும் தொடர்ந்து இடுக்கைக்கள் எழுதுகின்றார்.  இது அனைவருக்கு தேவையான பயனுள்ள ஒரு தளம்


அலுவலகப்பணியின் காரணமாக காலையில் பதிவிட முடியவில்லை நண்பர்களே. மீண்டும் நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Wednesday, November 10, 2010

கலவை ஒன்று

அருமை நண்பர் சூரியனின் வலைவாசல் அருண், ஜீவன் பென்னி பெயர்காரணம் என்னவென்று சென்ற பதிவின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்.  அது என் நண்பனுடையப் புனைப்பெயர்.  தமிழின் நவீன இலக்கியங்களை அறிமுகப்படுத்தியவன். அவன் நினைவாகவே இந்தப் பெயர்.

எங்கப் பாட்டிக்கிட்ட கதை சொல்லச்சொல்லி ரொம்ப வற்புறுத்துவோம்.  ஆனா அவ்வளோ லேசுல சொல்லமாட்டாங்க.  நாங்க கட்டாயப்படுத்திக் கேக்கக்கேக்க கொஞ்சமா இறங்கி வருவாங்க கதையும் சொல்லுவாங்க.  சத்தியவான் சாவித்ரி கதையத்தவிற வேற எந்தக்கதையும் சொல்லமாட்டாங்க. ஆனா அவங்க சொல்லுற தொனியில, ஒவ்வொரு முறையும் அது ஏதோ அன்னைக்குத்தான் புதுசா கேக்குற மாதிரி அப்புடி ஒரு லாவகம் இருக்கும்.  பன்முகத்தன்மைக் கொண்ட எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் விந்தைமனிதனோட பேயெல்லாம் செத்துப்போச்சு பதிவுல அவங்க தாத்தா சொன்ன கதைய சொல்லிவிட்டு கடைசியா ஒரு பன்ச் வச்சிருக்காரு பாருங்க, நீங்களும் ஒரு தடவ போய் படிச்சிட்டு வந்திடுங்க.


தனிமையில் உட்கார்ந்து கொண்டு நமக்கு நாமே பேசிக்கொள்வது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதாவது மிகுதியானவர்களுக்கு இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றலாம்.  ஆனா அதுல ஒரு திருப்தி இருக்கும் இல்லைத் திருப்தி கிடைக்கும்.  இங்க இவங்களோட கவிதைகளும் அதைத்தான் செய்கின்றது.   தனிமையையும், இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையும்,  சந்தோசத்தையும், வெறுமையையும் என்று தன் என்ன ஓட்டங்களையும் சமூதாயத்தின் மேல் உள்ள கோபங்களையும் தன் கவிதைகள் வாயிலாக முன்வைக்கின்றார்.   பொருத்தமான புகைப்படங்களும், அர்த்தங்களுடன் கவிதையோடு நம்மை பயணிக்க வைக்கின்றன.




அழியாச் சுடர்கள் இந்தப் வலைப்பூவைப்பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கக்கூடும்.  ஆனால் என் கண்ணில் பட்டது இரண்டு வாரங்களுக்கு முன்புதான்.  எனக்குப் பிடித்த எழுதாளர்களில் ஒருவரான சி.சு. செல்லப்பா அவர்களைப்பற்றி கூகுளாண்டரிடம் தேடிக்கொண்டிருந்த போது என்னோட சேர்ந்து கொண்டது இந்தத்தளம்.  தமிழின் இலக்கிய உலகின் முக்கியமான அனைத்து எழுத்தார்களின் எழுத்துக்களும் இங்க படிக்கக்கிடைக்கின்றது.  இலக்கிய பிரியர்களுக்கு முக்கியமாக எனக்குப் பிடித்த தளங்களின் வரிசையில் அதிக முன்னுரிமை இதற்கே.




மர்மயோகி  இவர் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து படித்துக்கொண்டிருக்கின்றேன்.    சினிமா, அரசியல் இது இரண்டின் மீதும் மிக வெளிப்படையான விமர்சனங்களை மிக கடுமையான சொல்லடல்களில் வெளிப்படுத்துபவர்.  இவருடைய இந்தப் பதிவு என்ன சொல்ல நீங்களே படிச்சுப் பாருங்க,  நல்லவங்களுக்கு காலமில்ல.


அகிலன் இவர் அகி மியுசிக் நிறுவனர்.  இசைஞானியின் பாடல்களின் விநியோக உரிமை இவரிடமே உள்ளது.  அகி மியூசிக் உருவாக்கம் மற்றும் இளையராஜா அவர்களுடனான தொடர்புகள் பற்றியும் நான் பார்த்த இளையராஜா என்ற தலைப்பில் மிகுந்த முனைப்புடன் அழகாக தொகுத்து எழுதியுள்ளார்.   இசைத்தொடர்பான கட்டுரைகளும்,  அநத தொழிலில் தன் அனுபவங்களும் என்று இசைப்பிரியர்களுக்கான ஒரு தளம் இது.


நண்பர்களே மீண்டும் நாளை சந்திப்போம்..............

சமீர் அகமது.மு
மேலும் வாசிக்க...

Tuesday, November 9, 2010

சுயம்

இந்த வாய்ப்பினை வழங்கிய அன்பின் சீனா ஐயாவுக்கும், வரப்போகின்ற நாட்களில் ஆதரவு தரப்போகும் என் பதிவுலக நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அறிமுகத்துக்குள் செல்கிறேன்.


என்னைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.  அறிமுகத்தை சீனா ஐயாவே செய்து விட்ட படியால் நேராக (என் பதிவின்)அறிமுகங்களுக்கு செல்கின்றேன்.



என்ன எழுதுவது என்று தெரியாமல் இருந்த வேளையில் முதலில்  என்னிடமிருந்த புகைப்படங்களைப் பதிவாக்கி முதல் அடியினை எடுத்து வைத்தேன்.  ரொம்ப சுலபமான வழி இதுவாகத்தான் இருக்கக்கூடும்.  புகைப்படங்கள் சிறப்பானவையோ இல்லையோ ஆனால் இந்தப்பதிவு மனதுக்கு நெருக்கமானது.


நெருக்கு நேராக பேசிக்கொள்ளும் போது ஒருவருக்கொருவர் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கக்கூடிய இக்காலத்தில் என் நண்பர் ஒருவர் அலைபேசியில் ஒன்று சொல்லப்போக நான் ஒன்று செய்யப்போக என்று இந்தப்பதிவும் எனக்குப் பிடித்தமான ஒன்று.


அங்காடித்தெருவின் பாதிப்பில் எழுதப்பட்ட அனுபவப் பதிவு.  கஷ்டப்பட்டு சம்பாதித்தேன் என்று நிறைய பேர் சொல்வார்கள்.   எனக்கு அதனுடைய அர்த்தம் நான் இங்கு வேலைப்பார்த்த போதுதான் தெரிந்தது. 


ஓட்டு போடுறது மிக முக்கியமான ஜனநாயகக் கடமை.  பதினெட்டு வயசு பூர்த்தியாகி முதன் முதலா ஓட்டு போடப்போகின்ற ஒருவனோட மனநிலையை கதையாக்கி பார்த்த என்னோட கன்னி முயற்சி  இந்த சிறுகதை.


இப்புடியே போய்க்கிட்டிருந்த பதிவுலகத்துல தீடீர்னு புயலடிச்சது மாதிரி நானும் கவிதை எழுத ஆரம்பித்தது ஒரு விபத்துதான்.  கவிதைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும் படிக்கும்போது கிடைக்கும் நிறைவைவிட, நாமே எழுதிப் பார்க்கும் போதும், அதை மற்றவர்கள் பாரட்டும் போதும் கிடைக்கும் உணர்வு  அருமையானது.  மகிழ்ச்சி என்கின்ற தலைப்பில் நான் எழுதிய இந்த கவிதை எனக்குப் பிடித்தமான ஒன்று.

சுயாபுராணம் இத்தோடு முற்றும்.

நாளை முதல் பல நல்ல பதிவுகளையும், புதிய பதிவர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்ய எண்ணம் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

சமீர் அகமது.மு
மேலும் வாசிக்க...

Monday, November 8, 2010

வருக ! வருக ! ஜீவன் பென்னி

அன்பின் சக பதிவர்களே !

இன்று பொறுப்பேற்க வேண்டிய நண்பர் ஜவஹர் ஏதோ சில காரணங்களினால் பொறுப்பேற்க இயலவில்லை. அவருக்குப் பதிலாக - குறுகிய நேரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் நண்பர் ஷமீர் அஹமது. இவர் ஜீவன் பென்னி என்ற புனைப்பெயரில், "பதிவுகள்" என்ற பதிவினில் எழுதி வருகிறார். இவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி ஆனாலும் பொதுவாக வசிப்பது திருச்சியில் தான். பணி புரிவது அமீரகத்தில். இடுகைகள் இட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று. முதலில் வேர்ட்பிரஸ்ஸிலும் தற்பொழுது பிளாக்கரிலும் எழுதி வருகிறார். எல்லாவிதமான எழுத்துகளும் பிடிக்கும். இலக்கிய சிற்றிதழ்களின் மேல் மிகுந்த ஆர்வமுண்டு. தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமான எழுத்தாளர்களின் எழுத்துகளைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. சிறுகதைகள், நாவல், கவிதைகள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உண்டு.

நண்பர் ஷமீர் அஹமதினை வருக ! வருக ! மனதிற்குப் பிடித்த - அடுத்தவர் அறிய வேண்டும் என நினைக்கும் இடுகைகளை அறிமுகப்படுத்துக ! எனக்கூறி, நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நட்புடன் சீனா


மேலும் வாசிக்க...

Sunday, November 7, 2010

விடை பெறுக கிளியனூர் இஸ்மத் : பொறுப்பேற்க வருக ஜவஹர்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் கிளியனூர் இஸ்மத், தான் ஏற்ற பொறுப்பினை சரிவரச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எண்பதுக்கும் மேலான மறு மொழிகள் பெற்றிருக்கிறார். இவர் பல்வேறு தலைப்புகளில் - பல்வேறு அருமையான இடுகைகளைச் சுட்டிக்காட்டி - வாசகர்களை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். கடமையினை சரிவரச் செய்த கிளியனூர் இஸ்மத்தினை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நண்வர் கே ஜி ஜவஹர். இவர் இதயம் பேத்துகிறது என்னும் பதிவினில் எழுதி வருகிறார். இவர் ஒரு இயந்திர இயல் பொறியாளர். ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராகப் பணி புரிகிறார். சாவி மற்றும் குமுதத்தில் சிறு கதைகள் எழுதி இருக்கிறார். கிழக்குப் பதிப்பகத்தால் இவர் எழுதிய இரு புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றன.

இசையில் ஈடுபாடு உடையவர். பாடல்கள் இயற்றவும், பாடவும் தெரிந்தவர். அருமை நண்பர் ஜவஹரை வருக ! வருக ! பொறுப்பேற்க வருக ! என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். /r

நல்வாழ்த்துகள் கிளியனூர் இஸ்மத் /r

நல்வாழ்த்துகள் கே ஜி ஜவஹர் /r

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

நிறைவுடன் நவிழ்கின்றேன் நன்றி!

பதிவர்களுக்கு இலவச மின்னூல் தருவதாக கூறியிருந்தேன்.இந்த மின்நூல்களை மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
பல அரிய நூல்களை மின்நூலாக பிடிஎப் பைலில் கொடுத்துள்ளார்கள் அந்த மின் நூல்களை பெறுவதற்கு சில விதிமுறைகளை தற்போது ஏற்படுத்தி உள்ளார்கள் தங்களுக்கு தேவையான நூல்களை சுட்டி கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

இந்த ஒரு வாரக்காலத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவுடன் நிறைவு செய்தேனா? என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த ஒரு வாரம் அதிகமாக இணையதளத்தில் நேரங்களை சிலவு செய்திருக்கிறேன். பல புதிய பதிவர்களையும் நற்கருத்துக்களையும் அறிந்துக் கொள்ள பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பு பெற்றிருக்கிறேன்
அதற்கு வலைச்சரக் குழுமத்தினர் ஐயா சீனா மற்றும் கயல்விழி முத்துலெட்சுமி
பொன்ஸ் பூர்ணா அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

இந்த ஒரு வாரக்காலத்தில் எனது இடுக்கைகளுக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்துக்களை வழங்கிய நல்லுள்ளங்கள்
ஐயா சீனா,
கலாநேசன்,
ராஜாகமால்,
நிஜாமுதீன்,
சகோதரி சாதிகா,
சகோதரி ஹ_ஸைனம்மா,
சகோதரி சித்ரா,
சகோதரி துளசி கோபால்,
சகோதரி பாத்திமா ஜொஹ்ரா,
சகோதரிஆசியா உமர்,
தேவா,
ஜோதிஜி,
ஒ.நூருல்அமீன்,
அன்பரசன்,
ஸ்டார்ஜன்,
நிகழ்காலத்தில்,
ஜெய்லானி,
சென்ஷி,
சே.குமார்,
அரவிந்தன்,
இராமசாமி கண்ணன்,
நட்புடன் ஜமால்,
அப்துல் மாலிக்,
செல்வராஜ் ஜெகதீசன்,
இராகவன் நைஜிரியா,
விஜய் ,
சுல்தான்
ஒருவரை மனம்விட்டு பாராட்டுவதும் வாழ்த்துச் சொல்வதும் மனிதநேயம்.!

அனைவருக்கும் நன்றி!
மேலும் வாசிக்க...

7.மானிடம் தேடும் மனிதநேயம்

இன்றைய காலத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மிகக்கடினமாக இருக்கிறது. ஆனால் மனிதநேயம் தளர்ச்சியடைந்து வருகிறது. நமது தேவைகளுக்காக வேண்டி எத்தனையோ மறியல்களை போராட்டங்களை செய்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம்மிடம் மனிதநேயத்தை வளர்க்க பேதங்களை களைக்க இன்னும் போதிய போராட்டங்கள் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை.

தேடல் இன்றி வந்தப் பொருள்
வாழ்வில் நிலைப்பதுமில்லை
தேடிதேடி கிடைத்தப் பொருள்
எளிதில் தொலைந்ததுமில்லை
என்பது பாடல் வரிகள்

இன்று தேடப்படுவது மனிதநேயம்
அது கிடைப்பதற்கு அனைவரும் சேரவேண்டும்;.
அனைவரும் ஒன்று சேருவதற்கு மனம் வேண்டும்
அந்த மனதில் தெளிவுவேண்டும்
இவைகளை பெறுவதற்கு மனிதன் மனிதனாக வேண்டும்.

மனிதர்களிடத்தில் இருக்கும் மனிதமும் மனிதநேயமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சுயநலம் மட்டுமே இருந்துவருவதாக எனக்கு பட்டது நீங்கள் சொல்லுங்கள் இந்த மனித நேயமில்லாத உலகில் வருங்கால சந்ததிகள் எப்படி வாழப்போகிறார்கள்? என்ற கேள்வியுடன் சாலை விபத்தில் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார் சக்திவேல்.

ஒரு கவிஞன் சொல்கிறான்
சாதிக் கலவரத்தில்
மனிதர்கள் சாகும் முன்னே
அவர்களுக்குள் செத்துப்போனது
மனிதநேயம்.

உலகின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா உலகுக்கெல்லாம் நீதி சொல்ல ஆயுதங்களோடு புறப்பட்டுக் கொண்டிருக்கிறது வீட்டுக்குள்ளே நிறவெறியும் இனவெறியும் மரித்துப்போன மனிதாபிமானமுமாக வீச்சமடிக்கிறது என்று அமெரிக்காவின் மனிதநேயத்தைப் பற்றி அலசல் செய்திருக்கிறார்.

இளங்கோவனுக்கும் கார்த்திக்காயனிக்கும் பிறந்ததால் இந்துவானேன்.
டேவிட்டிற்கும் எலிசபத்திற்கும் பிறந்ததால் கிறிஸ்துவனானேன்
அன்சாரிக்கும் பேகத்திற்கும் பிறந்ததால் முஸ்லிம்மானேன்
யாருக்கும் யாருக்கும் பிறந்தால் மனிதனாவேன்.!
என்று செப்புப்பட்டயம் செப்புகின்றார்.

சென்ற ஆகஸ்ட்டில் சிலி நாட்டில் சுரங்கத்தில் நடந்த விபத்தில் மாட்டிக்கொண்ட மனித உயிர்களை அந்நாடு மனிதநேயத்துடன் கொடுக்கப்பட்ட கால அளவைவிட துரிதமாக காப்பாற்றிய நிகழ்வை இந்த உலகமே கண் கொண்டுப்பார்த்தது. இந்த மனிதநேய உணர்வு எல்லா நாடுகளிலும் பேதமில்லாமல் பேணப்படவேண்டும். சுரங்கமே வீடாக மாற்றிக் கொண்டு வாழ்ந்த நிகழ்வை விவரிக்கிறார் ஹுஸைனம்மா.

மனிதநேயமென்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக்குறித்த ஒரு தத்துவப்பார்வை அதன் அடிப்படைக்கூறு மனிதர்களுக்குள் செய்யப்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிக்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்வதுமாகும் என்று ஒரு ஆய்வு கட்டுரையை வரைந்துள்ளார் அ.ராமசாமி.

முன்னேற்றத்திற்கு பல்வேறு மூலதளங்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக்கூடியது மனிதநேயமாகும். ஆப்படி என்றால் மனிதநேயம் என்றால் என்ன? என்றக் கேள்வி எழுகிறதல்லவா?
சகமனிதர்களை நேசிக்கின்ற மாண்பு சகமனிதனை மனிதனாகப் பார்க்கின்ற அணுகுமுறை தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும் தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும் என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கின்ற தன்மை சகமனிதனைப் பாசத்தோடும் பரிவோடும் கருணையோடும் நோக்கும் அன்புநிலையே மனிதநேயம் என்கிறார் கடலோரம்.

மதம் மொழி நிறம் இவைகளுக்கு அப்பால் ஆழ்மனதிலிருந்து பொங்கிவரும் நேயத்தை பகிருபவர்கள்தான் மனிதர்கள்.ஆதலால் என்றும் எப்போதும் நம்மிடம் வளர்ப்போம் மனிதநேயம்.

இதோ விரைவில் நன்றியுரையுடன் …
மேலும் வாசிக்க...

Saturday, November 6, 2010

6.அமுதம் வற்றாத அன்னை


பல்வேறு கலாச்சாரங்கள் உலகநாடுகளில் அவ்வபோது தலைத் தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்ததும் பாசமும் பெருகிவரும் கலாச்சாரங்களால் வெற்றிக் கொள்ளமுடியாதவை என்கிறார் ஹிசாம்.

பத்துமாதம் சுமந்து
பெற்றெடுத்த அன்னையை
நெஞ்சம் கொள்ளளவு நேசிக்க
என்நெஞ்சத்தில்
இடம் போதவில்லையே
இறைவா!
என்று பிரார்தித்தவனாய்…
தாயைப் பற்றி பலரும் தங்களின் பாச எண்ணங்களை பதிவுகளில் பதித்திருக்கிறார்கள். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வலைச்சரத்தில் ஆறாம் நாளில் அடிவைக்கிறேன்.

சம்பாதிப்பதற்காக வேண்டி தாயையும் தாய்நாட்டையும் பிரிந்து வேலைப்பார்ப்பவர்களுக்கு மத்தியில் தாயைவிட எனக்கு வேலை முக்கியமல்ல என்று உதறிய நல்உள்ளத்தின் உண்மைக்கதைதான் தாயிற் சிறந்ததோர் வேலையுமில்லை.

இம்சை அரசி தனது 100வது பதிவில் என் அம்மாவிடம் முதல் சம்பளத்தில் முதல்முதலாய் உங்களுக்குத்தான் வாங்கினேன் என்று தரும்போது அந்த முகத்தில் வரும் சந்தோசத்தைப் பார்க்க காலமெல்லாம் கம்மல் வாங்கவும் நான் தயாரானது யாருக்குத் தெரியப்போகிறது என்கிறார்.

காய்ச்சலில் நெற்றித் தொடும்போதும்
மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்
தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாத போதும்
நினைவுகளில் நிழலாடுகிறது அம்மாவின் அன்புக்கை…
ராஜவம்சத்தில்
நிலாரசிகனின் பாசக்கவிதை இது.

அம்மா என்றால் அன்புமட்டும்தானா? அதையும் தாண்டி யோகிராமானந்த குரு தனது அனுபவக் கவிதையை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.

ஒருமுறை நமது முன்னால் ஜனாதிபதி மரியாதைக்குரிய அப்துல்கலாம் அவர்கள் ஆஸ்தெர்லியா நாட்டுக்கு பயணம் சென்றிருந்தார். மாணவ மாணவிகள் நமது ஜனாதிபதியிடம் கேள்விகள் கேட்னர். அதில் ஒரு மாணவி அப்துல்கலாம் அவர்களிடம் நீங்கள் பிறந்த ஊர் எது என்று கேள்வி கேட்டார் அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் சொர்க்கம் என்று!
இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத மாணவி திகைப்புடன் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு இந்திய வரைப்படத்தை காண்பித்து இது எங்களின் தேசத்தாய் இதில் எனது பிறந்த ஊர் வரைப்படத்தில் கீழே இராமேஸ்வரம் இருப்பதினால் தேசத்தாயின் காலடியில் எனது ஊர் இருக்கிறது தாயின் காலடியில்தானே சொர்க்கம் இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

தாயின் காலடியில்தான் சுவர்க்கமிருக்கிறது என்று அருமை நபிகள் நாயகம் (ஸல் அலை) அவர்கள் கூறினார்கள்.அந்த காலடிகளை கலங்கப்படுத்திய கால்களின் நிலையை இந்தச் சிறுகதை விளக்குகிறது

அன்னையின் அன்பைப் பற்றி எவ்வளவு உதாரணங்கள் சொன்னாலும் அது முடிவில்லாதது இவர் கவிதையில் தாய்யன்பை இப்படி எல்லாம் ஒப்பிடுகிறார்.

தாயின் வயிற்றில் கருதோன்றிய சிலவாரங்களிலேயே கருவின் மூளையில் நியுரான்களின் உற்பத்தி ஆரம்பமாகி விடுகிறது. அதனால்தான் என்னவோ இன்றைய மருத்துவ உலகம் குழந்தை வயிற்றில் இருக்கும் போழுதே ஆக்கப்பூர்வமான சில பல செயல்களை கருவுற்ற தாய்மார்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. குழந்தை பிறந்து உலகின் முதல் சுவாசத்தை ஆரம்பித்த உடனேயே நமது கடமைகளும் ஆரம்பமாகிவிடுகிறது என்று சகோதரி ஸாதிகா அறிவான சந்ததிகளை உருவாக்க ஆலோசனை வழங்குகிறார்.

ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு தாய் எப்படி எல்லாம் கஸ்டப்படுகிறாள் என்பதை அம்மான்னா சும்மாவா? அபிஅப்பா எழுதுகிறார்.

என் ஒவ்வொரு அணுவிலும்
கலந்த என்னுயிர் அன்னையே
எப்படி மறப்பேன்
ஒரு நொடியிலும் நின்னையே!

எனக்கு தேவையில்லை தனியொரு தினம்.! என்கிறார்.


குழந்தைகள் நன்கு படிப்பதற்கும் நல்ல பண்புகளுடன் விளங்குவதற்கும் தாயே முக்கியக் காரணம். ஆவளின் அதி கவனமும் கவனிப்பும் இல்லையேல் குழந்தைகள் சிறப்புறவளர மாட்டார்கள்.என்று தன்னம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.


அந்தளவு தாயுடைய பொருப்பும் கவனமும் தன் பிள்ளையின் மீது சதா இருந்துக்கொண்டே இருக்கிறது ஒரு தாய் தனது பிள்ளையை அன்னை என்ற ஸ்தானத்தில் வளர்க்கும் பொருப்பைவிட இந்த உலகில் எந்த ஒரு பதிவியும் உயர்ந்தது அல்ல.

இப்படி எண்ணெற்ற பதிவுகளை தாயைப்பற்றி உள்ளத்திலும் எண்ணத்திலும் எழுத்திலும் எழுதுகிறார்கள் தங்களின் தாய்மேல் வைத்திருக்கும் அன்பை செயலில் காண்பித்தால் முதியோர் இல்லங்களின் தேவை தேவையற்றதாக ஆகிவிடும்.

மீண்டும் நாளை நன்றி.
மேலும் வாசிக்க...

Friday, November 5, 2010

5.சுற்றுலா தரும் சுகங்கள்

(இன்றைய தினம் தீபாவளி கொண்டாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்)

நேற்று பொருளாதாரத்தைப் பற்றி பார்த்தோம்
சம்பாதித்துக் கொண்டே இருந்தால் எப்படி கொஞ்சம் மூளைக்கும் மனசுக்கும் ஓய்வு கொடுக்கனும்தானே அதற்கு சுற்றுலாதான் சரியான வழி.

சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் ப்ரெஸ் ஆகிவிடும் புதிதாய் பிறந்த உணர்வுக் கூட சிலருக்கு ஏற்படும் என்று சுற்றுலா பிறந்தக் கதையைச் சொல்கிறார் நெல்லைச்சாரல்.

சுற்றுலா என்பது மனசுக்கு சுகமான ஒன்று பலரும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று மனசுக்குள் பெரிதும் விரும்புவார்கள் ஆனால் விருப்பத்திற்கு மாற்றமாக வேலை அல்லது வேறு ஏதாவது காரணங்கள் சம்பவங்கள் நடந்து சுற்றுலா செல்லமுடியாமல் சில காலங்கள் அதை மறந்தே கூட போயிருப்போம். சுpல தருணங்களில் நமது நண்பர்கள் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி சுவாரஸ்யமாக பேசும்போது நாமும் செல்ல வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். வருகின்ற ஆசைகள் அனைத்தையுமே நாம் நிறைவேற்றி விடுகின்றோமா?

சிறுவயதிலிருந்தே சுற்றுவதற்கு எனக்கு மிக விருப்பம் ஆசை. நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் புறப்பட்டேன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என்னையும் சென்னையும் சுற்றிப்பார்க்க சென்றேன்.இதுதான் எனது முதல் சுற்றுலா.

என்னுடன் பணிப்புரியும் மும்பையைச் சார்ந்த நண்பன் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வருவான் அவன் சுற்றிய இடங்களை புகைப்டத்தில் பார்க்கும்போது எனக்கு ஆசையாக இருக்கும் ஆனால் ஆண்டு விடுமுறையில் சுற்றுலா செல்ல திட்டம் இல்லாமல் அது தட்டிபோகும்.

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்க்கையை துவங்கிய பிறகு சுற்றுவதற்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கிறது. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கூட்டு குடும்பம் போல அண்டை நாடுகளுக்கும் தூரமான ஊர்களுக்கும் காரில் சென்று வருவது அலாதியான நிகழ்வு.

அதுபோல் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி தொடர்கதை எழுதுகிறார் அன்புடன் ஆனந்தி அதில் ஆனந்த அனுபவம் இருக்கிறது.

எப்பவுமே வேலை வேலை என்று பார்த்துக் கொண்டிருந்தால் நிறைய சம்பாதிக்கலாம் ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது சம்பாதித்ததை நமக்காக கொஞ்சமாவது சிலவு பண்ணக்கூடிய இடம் சுற்றுலாவில்தான். கணவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு வாரம் சுற்றுலா சென்றால் அந்த ஒருவாரக் காலத்திற்கு ஒருவரையொருவர் பிரியாமல் ஒவ்வொரு மணித்துளியிலும் இணைந்தே இருப்பதற்கு சுற்றுலா மிகப்பெரிய வாய்ப்பை கொடுக்கிறது.

பள்ளியில் கல்லூரியில் என சக நண்பர்களுடன் அரட்டை அடித்து சுற்றிருப்போம் அந்த நிகழ்வை அசைபோட்டால் இன்றும் கூட அது சுகமாகவே இருக்கும். அப்படி அசைப்போடுகிறார் பூமகளின் பூக்களம்.

கல்லூரியில் சுற்றுலா செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தில்லை ஆனால் அமீரகப்பதிவர்களுடன் சென்ற சுற்றுலா மறக்க முடியாதது.

இன்று நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமது சுற்றுலா தளங்களை தேர்வு செய்யலாம் அங்கு தங்குவதற்கு விடுதி மற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்யலாம் நாம் தேர்வு செய்திருக்கும் சுற்றுலா தளத்திற்கான சிலவினங்கள் எவ்வளவு? ஆகும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துவிடக் கூடிய அளவிற்கு இணையதளத்தில் வழிகாட்டிகள் நிறைந்து இருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு எனது குடும்பத்தார்களுடன் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்றேன். மூன்று மாதத்திற்கு முன்பாகவே ஆன்லைன் மூலமாக எனது பயணத்தினை பதிவு செய்தேன் அந்த சுற்றுலாவின் அனுபவம் தான் மனம்கவர்ந்த மலேசியா கட்டுரை.

இந்த ஆண்டு ஜூலையில் நமது இந்தியாவின் வடமாநில சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டு இரயில் டிக்கெட்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து திட்டமிட்டபடி சுற்றுலாவை நிறைவு செய்தேன்.

இவைகளைப் பற்றி இங்கு குறிப்பிடக் காரணம் சுற்றுலா செல்வது கடினமல்ல அதற்காக நேரத்தை நாம் ஒதுக்கினால் எந்த நாட்டுக்கும் செல்லலாம் அதுமட்டுமல்ல அந்த நாட்டைப் பற்றிய விபரங்களையும் முன்னரே நாம் தயார் செய்துக் கொள்ளலாம் அவ்வளவும் எளிமையே.

இந்த உலகம் நமது உள்ளங்கையில் இருக்கிறது அமெரிக்கா முதல் ஆப்ரிக்காவரை எங்கு செல்லவேண்டுமோ அங்கு சென்று வரலாம் பணமும் மனமும் இருந்தால் மட்டும்.

அந்தமான் சுற்றுவதற்கு ஆசை நேபாளும் சுற்றுவதற்கு ஆசை ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆண்டு தோறும் சுற்றிக் கொண்டிருப்பது மனசுக்கும் உடலுக்கும் வயசு குறையும் என்று சொல்வது உண்மை.

தமிழர்களின் சிந்தனை களத்திற்குள் சென்றால் தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களை முழுமையாக காணமுடிகிறது.

இந்த சுட்டிகளை முழுவதும் படித்தீர்கள் என்றால் சுற்றுலா இதுவரையில் செல்லாதவர்கள் இனி செல்வார்கள் என்று உறுதியுடன் என்னால் கூறமுடியும்.
மேலும் வாசிக்க...

Wednesday, November 3, 2010

3.மூதறிவாளன்

டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிப்புரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தார்.
கடவுளைக் காணமுடியுமா? என்று ஒருவன் கேட்க, ஓ... முடியுமே! உன் கோட்டை கழட்டிவிட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார் என்றான்.
அவனும் அப்படியே செய்து திரும்பி வந்து பிரகாசமான முகத்துடன் தாங்க்ஸ். நீங்கள் என் கண்களை திறந்துவிட்டீர்கள். கடவுளை நன்றாக பார்க்க முடிந்தது என்றானாம்.இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசு அலுவலர் கடவுளைப் பார்த்தவனை அணுகி எனக்கும் பார்க்க வேண்டும் என தன் கோட்டைக் கழற்றி அவனிடம் தந்துவிட்டு பத்தடி முன்னால் சென்று பார்த்தார். காக்காய் கூடுகட்டிய டெலிவிசன் ஆன்டெனாக்களைத் தவிர ஏதும் தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் அவர்கள் இருவரையும் காணவில்லை கோட்டில் அந்த மாதச் சம்பளம்.(சுஜாதா எழுதிய நூலில்)
இப்படித்தான் எதை எங்கு பார்ப்பது தேடுவது என்று தெரியாமல் இருப்பதையும் இழந்துவிடுகிறோம்.

ஓன்றை வாங்குவது என்றால் அதைப்பற்றி பெரும்பாலோர் அலசி ஆராய்ந்து நேரம், காலம், வாஸ்த்து இப்படி நிறைய சம்பர்தாயங்கள் பார்த்து வாங்குவார்கள்.
ஒரு பொருளுக்கே இவ்வளவு பார்க்கின்ற நாம் நம்மைப்படைத்த இறைவனை(?) அறியாமலேயே இருப்பது அமைதிக்கு பாதகம்.
இப்படி அறியாமலேயே இருப்பதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணமாகவும் இருக்கிறது.அப்படி அறிவதற்கு வாய்ப்பை நமக்கு தருவது ஞானிகள்
ஞானத்தை விளக்குவதற்கு பல கதைகள் உண்டு அதில் முல்லா நசூருதீன் கதைகளும் ஒன்று.

வாழ்வியல் என்பது கிட்டதட்ட ஞானம். பலர் வாழ்வியலை போதிக்கும் குருமார்களிடம் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்.காரணம் இந்த அவசர உலகில் அமைதி என்பதை ஒருவருக்கொருவர் தொலைத்துவிட்டு பொருள்தேடலில் அதைத் தேடுகிறார்கள்.அதை எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும்.

நம்மில் தொலைத்துவிட்டு வெளியில் தேடினால் கிடைக்குமா?
எதைத் தேடுகிறோம் என்றே தெரியமால் தேடுகிறோம்
நம்மை நாம் அறிவதற்கு இந்ததளம் தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.

மூதறிவாளன் இறைவன் அவனின் முகவரியை ஞானிகளிடமிருந்துதான் இவ்வுலகம் பெற்றுக்கொண்டிருக்கிறது.
சுயத்தேடல் நிறைந்தவர்கள் சிதாகாசத்தை சித்தரித்து நம் சித்தம் தெளியத்தருகிறார்கள்.

ஞானம் என்றால் என்ன வென அறிந்துக்கொள்ள துடிப்பவர்களுக்கும் சூபியிசம் என்றால் என்ன என்றறிய துடிப்பவர்களுக்கும் ஞானவெட்டியானின் பதிவுகள் சம்பூரணத்தை விளக்குகிறது.ஞானத்தாகம் கொண்டவர்களுக்கு தாகிப்பிரபம் நீருற்றாய் விளங்குகிறது.

இந்திய விமானப்படையில் ஐந்தாண்டுகள் பணிமுடித்து ஸ்டேட் பேங்ஆப் இந்தியாவில் மேலாளராக பணிப்புரிந்து ஓய்வு பெற்ற
செயச்சந்திரன் B.SC A.M.I.E.R.E.(LOND).,C.A., I.C.W.A., M.B.A
இவர் சித்தன்னாக எல்லோருக்கும் சுயச்சிந்தனை ஊட்டுகிறார். ஞானிகளின் எழுத்துக்களுக்கும் சித்தர்களின் பாடல்களுக்கும் விளக்கம் கொடுத்து மின்னூலாக பதிவிடுகிறார்
இது ஞான ஊற்று மெய்ஞானக்காற்று அனுபவித்துப்பாருங்கள்.

புல்லாங்குழல் என்பது ஒரு மகத்தான ஆன்மீகக் குறியீடு நீங்களும் நானும் ஒருவகையில் புல்லாங்குழலைப் போன்றவர்கள் என்று மௌலானா ரூமி கூறுகிறார்கள் அதைதான் நூருல்அமீன் தனது வலைதளத்தில் ஞானமணம் பரப்புகிறார். படிக்க படிக்க நம் சிந்தனை சிறகில்லாமலேயே பறக்கிறது. விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என சந்தேகங்களுக்கு பின்னூட்டதில் கட்டுரையே வரைந்திருக்கிறார். பல ஆன்மீக சந்தேகங்களுக்கு இந்த வலைதளம் தெளிவு தருகிறது.


ஆபிதீன் பக்கங்கள் அழிந்துக்கொண்டிருக்கும் இலக்கியங்கள் அழியாத மனிதர்கள் என பட்டியலிட்டு வைத்திருக்கிறார். நிறைய விசயங்களையும் வண்ணமில்லா மனிதர்களையும் வகைப்படுத்தியுள்ளார்.நிறைய விசயங்களை நிறைத்திருக்கிறார். பேதமில்லாமல் எதார்தத்தை எழுதுகிறார்.இவரின் பதிவுகளில் ஞானமும் ஞானிகளும் நிழலாடுகிறார்கள்.


தினம் ஒரு தகவல் என நல்லதொரு சிந்தனையை தினம் தந்து கொண்டிருக்கின்றார்
இவருடைய பதிவுகளில் பல பொக்கிசங்கள் பொதிந்திருக்கிறது.ஞானியும்குழந்தையும் நல்லதொரு சிந்தைமிக்க கதையாக தந்திருக்கிறார்.
கொல்லிமலைச் சாரல் ஆனந்த் பிரசாத். இமெயில் மூலம் சிலருக்கு மட்டும் பகிர்ந்த தகவலை வலைதளம் அமைத்து அனைவருக்கும் வழங்குகிறார்.

ஞானத்தில் சிறந்த ஞானம் எது? என்று தமிழ் நண்பர்கள் கேட்டனர் அவர்களின் இந்த கேள்விக்கு ஒரு கதை பதிலாகிறது.

உணரமுடியா மர்மங்களின்...
ஆதி முடிச்சிலும்...,
கற்பனைக்குள் எட்டா காரியங்களின்
கருவிலும், விளங்க முடியா விந்தைகளிலும்
பிணைந்திருக்கும் பருமனில்
புகுந்திருப்பது நானின்றி வேறு யார்?

தேடலில் கேட்பவர் தேவா



தொடர்வோம் நன்றி.!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது