07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 27, 2007

எல்லாரும் என்னை மன்னிச்சுக்குங்க..

வலைச் சர ஆசிரியராக இருக்க முடியுமா எனக் கேட்டபோது அதற்கென்ன செய்தால்ப் போச்சு எனத் தலையை ஆட்டி விட்டு ஏற்கனவே பதிவுகளை எழுதி வைத்துப் பதிவு செய்ய முடியுமா என கேள்வி வேறு கேட்டிருந்தேன். ஆனால் வழமைபோலவே சோம்பேறித் தனமாக இருந்தாயிற்று. தவிர போன வாரம் நட்சத்திரப் பதிவுகளோடும் நேரம் போனதால் கொஞ்சம் கால இடைவெளியில் இந்தப் பொறுப்பைக் கேட்டிருக்கலாம் தான். திங்கள் வரை அழைப்பிதழும் வராத படியால் ஆகா தப்பியாச்சு என இருந்த வேளை செவ்வாய் காலை கிடைக்கப் பெற்ற அழைப்பிதழினால் அவசர அவசரமாக இந்த வாரத்தை ஒப்பேற்ற வேண்டிய நிலை. எல்லாரும் என்னை மன்னிக்கணும்.

இப்போதெல்லாம் வலைப்பதிவர் சந்திப்புக்கள் நடைபெறுவதும் அது குறித்து கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் அறிக்கை எழுதுவதும் வழமையானவை. ஆரம்பத்தில் வலைப் பதிவர் சந்திப்புக்கள் சிங்கப்பூரில்த் தான் பெருமளவில் அல்லது வழமையாக நடப்பதுண்டு. 2005 மார்ச் இவ்வாறான ஒரு வலைப்பதிவு மாநாடு அவுஸ்ரேலியாவில் நடந்தது. இப்போ வரும் மாநாட்டு அறிக்கைகளுக்கு முன்னுதாரணம் எனச் சொல்லக் கூடிய ஒரு அறிக்கையொன்றை வசந்தன் எழுதியிருந்தார்.

அதாவது எப்போ போனேன்.. யாரெல்லாம் வந்திருந்தார்கள் யார் கைகொடுத்து வரவேற்றது எந்த வீதியால் போனேன் என்னவெல்லாம் சாப்பிட்டோம் என்பது போன்ற இன்னோரன்ன விசயங்கள் இந்த வலைப்பதிவு அறிக்கையில் உண்டு. இதிலே இன்னொரு சிறப்பம்சம் அறிக்கையில் சொல்லப் பட்டவாறான ஒரு மாநாடு நடைபெறாமலேயே அறிக்கை எழுதப்பட்டது தான்.(அந்த உண்மையை இப்போது தான் வெளிவிடுகிறேன்)

அவுஸ்திரேலிய வலைப்பதிவர் மாநாடு.

இனிவருவதும் ஒரு வலைப்பதிவர் மாநாட்டு அறிக்கைதான். அண்மையில் சின்னக்குட்டி இந்தப் பதிவினை எழுதியிருந்தார். இதுவும் ஒரு கற்பனைப் பதிவு தான். ஆனால் சகல பதிவர்களினதும் குணாதிசயங்கள் ஓரளவு அவதானிக்கப் பட்டு அங்கு எழுதப்பட்டுள்ளது தான் பதிவின் சிறப்பம்சமே..

லண்டனில் நடந்த பிரமாண்டமான வலை பதிவர்கள் சந்திப்பு

வரும் வலைப்பதிவர் சந்திப்பு அறிக்கைகளுக்கிடையில் இவ்வாறான கற்பனை அறிக்கைகள் வேறேதாவது வந்திருக்கிறதா.. அல்லது சந்திப்பு குறித்து நகைச்சுவையுடன் எழுதப் பட்டுள்ளதா..?
மேலும் வாசிக்க...

Tuesday, June 26, 2007

தொடரும் கொண்டாட்டம்

'எனக்கு சரம் தொடுக்கவெல்லாம் தெரியாது' என்று சொல்லிக் கொண்டு சரவெடியாக தொடுத்து விட்டார் சிநேகிதி. இயல், இசை, நாடகம் தாண்டி நடனம், ஓவியம், கவிதை, தாயக கீதங்கள் என்று கலைநயமிக்க வாரமாக வடித்துக் கொடுத்த சிநேகிதிக்கு எங்களின் நன்றிகள். பல புதிய பதிவுகள், பதிவர்களையும் அறிமுகப்படுத்தி ஒரு முன்மாதிரி வலைச்சர வாரமாக ஆக்கிவிட்டார்.

அடுத்தபடியாக வலைச்சரம் தொடுக்க வருபவரைப் பற்றிச் சொல்லுமுன், முதலில் பெரிய கும்பிடோடு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தொடரும் கொண்டாட்டமாக, நட்சத்திர வானில் மின்னிக் கொண்டிருந்தவரை வலைச்சரத்துக்குக் கடத்திக் கொண்டுவர திட்டமிட்டிருந்தோம். என் கவனக்குறைவால் இடையில் ஒரு நாள் விட்டுப் போய்விட்டது.

ஆம்.. இந்த வார வலைச்சர ஆசிரியர் போனவாரம் தமிழ்மண நட்சத்திரமான சயந்தன் தான்... 'இந்திய நேரம்தவறாமை' விதிப்படி ஏற்பட்டுவிட்ட இந்தத் தாமதத்தை, மன்னித்து மறந்து தலைமை தாங்கி சிறப்பிக்க சயந்தனைக் கேட்டுக் கொள்கிறோம் ;)
மேலும் வாசிக்க...

Monday, June 25, 2007

டான்ஸ் பேபி டான்ஸ் :-)

வலைச்சரமம் தொடுத்துச் சாமிக்குச் சாத்தி இப்ப எடுத்து எறியப்போயினம் அதுக்குள்ள மாலை கட்ட உதவி செய்தாக்கள் எல்லாருக்கும் நன்றியைச் சொல்லிக்கொண்டு மீண்டும் தத்தக்க பித்தக்கவில் சந்திப்போம்!

கொஞ்சம் றிலாக்ஸா இந்தக் குழந்தைகளின் நடனங்களையும் பாட்டுக்களையும் பார்த்து ரசியுங்கள்.

யாருக்காவது விளங்குதா?? பாசை விளங்கேல்ல ஆனால் முகபாவம் சூப்பரோ சூப்பர்:-)


டோடு டோலுதான் அடிக்கிறா
யெப்பா இதுவும் அந்தப்பொண்ணுதான் :-)
ஹா ஹா இந்தப்பொண்ணு என்ன பண்றா என்று பாருங்கோ..ஆர் பெத்த பிள்ளையோ.உங்களுக்குத் தெரிஞ்சவையா இருந்தா என்னை அடிக்க வராதயுங்கோ!

மரங்கொத்திகள்
சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் கொத்தினம்.

கேளுங்கடா வாயப்பொத்தி
ஐயையோ நானில்லை நானில்லை..இரண்டு பேற்றயும் ஆட்டத்தப்பாருங்கோ. அகப்பை கூட ஆடுது!

பொங்கல் நாடகம்
எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு இவேன்ர நாடகம். என்ன வடிவாக் கதைக்குதுகள்.எந்த ஊரு பாசை என்று ஊர்க்காரங்க வந்து சொல்லுங்கோ.

பட்டையக் கிளப்புறதென்டா இதானோ
usher ல தொடங்கி எங்கயோ போட்டாங்கள். கள்ளுப்போத்தல் எல்லாம் வச்சிருக்கிறாங்கள் கவனம்.

வாண்டு ஸ்ரேயாக்கள்
யாரோ ரசிகர்கள் செய் சதி போல..மழையில் ஏற்பட்ட தடங்கலுக்கு நான் பொறுப்பல்ல.

இவை என்னவாம்?
கீர்த்தனா இதையும் ஒருக்கா மொழிபெயர்த்துச் சொல்லுங்கோவன் பிளீஸ்.

வாறான் குட்டி விஷால்
இவரு கெட்ட தண்ணியடிக்கிறாராம்:-)

என்னத்த சொல்ல..

யே யே
usher விட நல்லாத்தானாடுறா!

Walk It Out
இதான் பேபி டான்ஸ் :-) Unk அடுத்த அல்பத்தில சான்ஸ் தருவாரு கட்டாயம்.

Beyonce ரசிகர்களே ...no offence pls..
மேலும் வாசிக்க...

Friday, June 22, 2007

ஈழத்தின் இளைய தலை முறை

"ஈழத்தின் குட்டிச்சுவர் கூட்டம்" என்றுதான் தலைப்புப்போடுவம் என்று நினைச்சனான் பிறகு குட்டு வாங்கி மண்டைல போக்கிரி வடிவேலின்ர கட்டு மாதிரி வந்திடுமென்டு மனச மாத்திட்டன்.

அகிலனண்ணாவின்
கனவுகளின் தொலைவு


இந்த வலைப்பதிவு எனக்குச் சமீபகாலமாகத்தான் அறிமுகமானது.ஏற்கனவே முன்பொருதடவை கனவுகளின் தொலைவுக்குச் சென்றிருக்கிறேன் ஆனால் அன்று நான் வாசித்த ஆக்கம் பெருசா என்னைக்கவரேல்ல ஆனால் போன வாரம் ஒருபேப்பரில் அகிலனண்ணா எழுதின"வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு " என்ற ஆக்கத்தை வாசித்தபோது சின்ன வயசில கிணத்துத் தட்டில இருக்கிற எல்லாத் தும்பியையும் நான் படுத்தின பாடு ஞாபகம் வந்திட்டா உடனயே கனவுகளி்ன் தொலைவுக்குப்போய் எல்லாப்பதிவுகளையும் வாசிச்சு முடிச்சிட்டன்.மரணத்தின் வாசனை பற்றிய நான்கு பதிவுகளுண்டு.அம்மம்மாவின் மரணத்தைப்பற்றிய பதிவை வாசிச்சுப்பாருங்கோ.ஊரில நீங்களும் என்னைப்போல யாராவது சொந்தக்காரக் கிழவிகளோட சேட்டை விட்டிருந்தீங்கிள் என்டால் இதை வாசிச்சுக் கட்டாயம் அழுவீங்கள்.மற்றது நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டியது "கார்த்திகை தீபமும் கணேசலிங்கம் வாத்தியும்.. .ஊரில கார்த்திகை விளக்கீடு நேரம் சின்னப்பிள்ளைகளா இருந்த நேரம் நடந்தவை எல்லாம் அப்படியே உங்கள் முன் நிழலாட வைக்கும் பதிவு.


தான்யாவின் காகித மலர்கள்
'கற்பை' அழித்தல் .இதுதான் நான் முதன் முதலில் வாசித்த தான்யாவின் ஆக்கம்.சா இப்பிடியெல்லாம் எப்பிடி யோசிக்கினம்,எழுதினம் என்று யோசிச்சுக்கொண்டே தான்யாவின் கவிதைகளையும் விமர்சனங்களையும் வாசிச்சு முடிச்சிட்டன்.கவிதைகள் விளங்கினதா என்று கேக்காதயுங்கோ :-) இதுவரைக்கும் நிறையப்பேரெழுதின 100 கவிதை வாசிச்சிருப்பனெண்டால் அதில ஒரு 5 கவிதை விளங்கியிருக்குமோ தெரியேல்ல.

பிரதீபாவின் An Utopian *in tamil*
என்னத்தச் சொல்ல...கதையெழுதினாலே கவிதை மாதிரிக்கிடக்கு.கவிதைகளையும் வாசிச்சு என்னை விட நல்லாவே விளங்கிக்கொள்ள வாழத்துக்கள்:-)

அம்புலியக்காவின் நேசமொழியில் பேசவிடு
கனநாளா நேசமொழியில் நானும் பேசவேணும் என்று ஆசை.சில வருடங்களுக்கு முதல் "Orpahn At My Door" என்றொரு புத்தகம் வாசிச்சனான்.உண்மையா அதைப்புத்தகம் என்று சொல்லேலாது.அது உரு நாட்குறிப்பேடு.ஒரு 11 அல்லது 12 வயதுப்பிள்ளையின் நாட்குறிப்பேடு.நாய்க்குட்டி முதல் குடும்ப உறுப்பினர்களின் அத்தனை பேரைப்பற்றியும் ஆசிரியர்கள் நண்பர்கள் என குறிப்புகள் சுவாரிசயமாக எழுதப்பட்டிருக்கும்.அம்புலியக்காவின் பத்திகளை வாசிக்கும்போது Orpahn At My Door ல் வரும் அந்தச்சிறுபெண்ணின் நினைவு வருவது வழக்கம்.ஆனால் அம்புலியக்காவின் பத்திகளி்ல் பல வரலாற்றுச்சுருக்கங்களும் இடம்பெற்றிருக்கும் சிலநேரம் அந்த வரலாற்று நிகழ்வுகளைப்பற்றிய அறிவு இல்லையென்றால் விளங்குறது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும்.

முரண்வெளி>
பெட்டையின் வலைப்பதிவிலிருந்து "
வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…" வாசிக்கப்போய்த்தான் முரண்வெளி எனக்கு அறிமுகமானது.முரண்வெளியில் பலர் எழுதுகிறார்கள்.பெயருக்கேற்றதுபோல முரணான ஆக்கங்கள்தானுண்டு.இதுவரை நினைத்துப்பார்க்காத கேள்விப்படாத பல விடயங்களுண்டு தெரிந்துகொள்ள.நான் வாசித்தது ஒரு சில ஆக்கங்கள் தான்.வாசித்துப் புரிந்துகொள்ள வட்டத்துக்கு வெளில வந்துநின்று சிந்திக்க நிறையவுண்டு.(எனக்குத்தான்).


நிருபாவின் புழுதி

2005க்குப்பிறகு எதுவும் புதிதாக எழுதவில்லை.ஆனால் எல்லாரும் கதைச்சு ஓய்ஞ்சு போன இந்த பூப்புனித நீராட்டு விழா பற்றிய Pfui! Pfui! புனித விழா எல்லாரும் முக்கியமா அம்மாமார் வாசியுங்கோ.அப்பிடியே மச்சான் 19 பவுணில தாலி செய்துபோட்டானெண்டு தான் 21 பவுணில தாலி செய்யணும் என்று ஆசைப்படுற ஆக்களைப்பற்றியும் அதை வாங்கிக் கட்டிக்கொண்டு திரியத் தயாரா இருக்கிறவையைப்பற்றியும் ஆராவது எழுதுங்கோவன்.

நம்மட கொழுவித்தாத்தா :
தாத்தா என்னதான் எல்லாரோடயும் கொழுவுப்பட்டாலும் உருப்படியாவும் சிலது செய்வார்.அப்பிடி அவர் எழுதினது
என்னைத் தேடுது சாவு . ஒருகூடை சன்லைட்டைக் கொட்டுறது விட்டிட்டு இப்பிடி ஏதாவது எழுதச்சொல்லலாம் தான் பிறகு கொழுவின்ர மவுசு குறைஞ்சிடும். {தாத்ஸ் இளைய தலைமுறைக்க வருவாரோ தெரியல ஆனால் அவற்ற எழுத்து வரும் ஸோ கண்டுக்காதயுங்கோ)

கீர்த்தனாவின் ள் http://keerthanakk.blogspot.com/2007/05/blog-post.html
சத்தியமா எனக்கு கீர்த்தனா எழுதுறகள் விளங்காதாம்.வெளில சொன்ன வெக்கக்கேடு.பல்லியோடு சிலந்தியோடயெல்லாம் கதைக்கிறா அதாலதானோ என்னவோ:-)

இப்ப என் நண்பிகள் இருவர் எழுதத்தொடங்கியிருக்கிறார்கள்.

நந்தியாவின் வாடமல்லிகை
காதுக்க கோச்சி விட்டுக்கொண்டிருந்தாலும் "அம்மா கிடைக்குமா போன்ற நல்ல கதைகளையும் எழுதும் புதிய வலைப்பதிவர்.

வாசகியின் தூறல்
போனமாதம் தான் தூறத்தொடங்கியிருக்கு.போக போகத்தான் தெரியும் சூறாவளியா வாடைக்காற்றா என்று :-)


இனி அறிமுகம் தேவையற்றவர்கள்

வசந்தனண்ணா
சயந்தனண்ணா
சோமியண்ணா
பிரபாண்ணா
டிஜே
ஈழநாதனண்ணா
கிஸோக்கண்ணன்
விஜே
தமிழ்பித்தன்
மதியக்கா
ஷ்ரேயா (அம்மணியை வலைப்பக்கம் காணேல்ல ஆனால் facebook பக்கம் ஒவ்வொருநாளும் காணலாம்:-) யாராவது தேடுறீங்ககள் என்றால் சொல்லுங்கோ உடன மெஸேஜ் அனுப்பலாம்)
நித்தியா
நிவேதா
மயூரனண்ணா
U.P.தர்சன்
ஹரன
மயூரேசன
பகி

உங்களை அல்லது உங்கள் நண்பர்களை தெரிந்தவர்களை பட்டியலில் குறிப்பிட மறந்திருந்தால் தயவுசெய்து சொல்லுங்கோ!
மேலும் வாசிக்க...

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா!

94 ம் ஆண்டுக்குப்பிறகு ஒவ்வொருநாளும் தாயகப்பாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பம் இல்லாது போய்விட்டது.முந்தியென்றால் பள்ளிக்கூடத்திலயும் சரி வீட்டயும் சரி எந்தநேரமும் ஏதாவதொரு தாயகப்பாடல் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கும்.அப்பவும் இந்த ipod மாதிரி ஏதாவதிருந்திருந்தால் எல்லாத் தாயகப்பாடல்களையும் பாடமாக்கியிருக்கலாம்.அப்பிடியிருந்தும் 90 களில் வந்த கரும்புலிப்பாடல்கள் முதல் எல்லாப்படாட்டுகளையும் பாடமாக்கி மாவீரர் தினத்துக்கு ஊரில போட்டிருக்கிற பந்தல்வழிய பாடிக்கொண்டு திரியுறது. கிட்டண்ணா நினைவுவெளியீடாக வந்த ஒரு புத்தகத்தில் இப்படியான பாடல்வரிகள் எல்லாம் இருந்ததால் பாட்டைப்பாடமாக்கிறது பெரிய விசயமில்லை.அந்தக்காலத்தில பள்ளிக்கூடங்களிடையே நடைபெறும் நடனப்போட்டிகளிலும் தாயகப்பாடல்களுக்கு ஆடுவது ஒரு ரெண்டாக இருந்தது அதுவும் முக்கியமாக "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் " , "பொங்கிடும் கடற்கரையோரத்திலே " போன்ற பாடல்வரிகளும் நடனமும் எங்களுக்கத்துப்படி.தவிர இப்ப நாங்கள் இங்க சினிமாப்பாட்டுகளை வைத்துப் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சி செய்வது போல ஊரில் கோயில் வாசலில் இருந்துகொண்டு பெரியவர்கள் சின்னவர்கள் எல்லாரும் கூடியிருந்து தாயகப்பாடல்களைப் பாடுவது மறக்கமுடியாதவொன்று.

90களில் அல்லது அதற்கு முதல் வெளிவந்த எனக்குப்பிடித்த பாடல்கள் பலவுண்டு.முக்கியமாக "இந்தமண் எங்களின் சொந்த மண் இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்" ,"எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்" ,தென்னங்கீற்றுத்தென்றல் வந்து மோதும் " "ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று ", "கடலதை நாங்கள் வெல்லுவோம் " ," ,எம்மை நினைத்து யாரும் கலங்கக்ககூடாது " இப்பிடி இன்னும் பலபாடல்கள்.தாயகத்திரைப்படப்பாடல்கள் அவ்வளவாக நினைவிலில்லை ஆனால் "பிஞ்சு மனம் " படத்தில் இடம்பெற்ற " பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது" பிடித்த பாடல்.

இப்போது தாயகப்பாடல்கள் அடிக்கடி கேட்பதில்லை.அப்பிடி எப்போதாவது கேட்டவற்றில் "ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டு வந்த பூமி " என்ற குட்டிக்கண்ணன் பாடிய பாடலும் "முட்டி முட்டிப்பால் குடிக்கும் கன்னுக்குட்டி போல" "மேகம் வந்து கீழிறங்கி முத்தம்கொடுக்கும்" "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லைப்போராடுமா" போன்ற பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

இனி தாயக கீதங்கள் பாடும் வலைப்பதிவுகளும் தளங்களும்.

வன்னியனின் ஈழப்பாடல்கள்
பாடல், பாடல்வரி, மற்றும் பாடலைப்பற்றிய குறிப்புகளுமுண்டிங்கு.

சந்திரவதனாவின் தாயககீதங்கள்

யாழ்களத்தில் தாயகப்பாடல்பவரிகள்
தூயா ஆரம்பித்து வைத்துப் பலரும் தங்களுக்குப்பிடித்த தாயகப்பாடல்களின் பாடல்வரிகளை இணைத்துள்ளார்கள்.

தாயகப்பாடல்களில் அநேகமானவற்றை இங்கே கேட்கலாம்.
தமிழீழ விடுலை கானங்கள்
தமிழர் இணைப்பகம்


youtube ல் கிடைத்த சில தாயக கீதங்கள்

போரம்மா உனையன்றி யாரம்மா

அழகே அழகே தமிழழகே

பொய்யாகிப் போகாதோ இந்தச்சேதி

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்

மண்ணில் புதையும் விதையே

கட்டுமரமேறிப் போற மச்சான்

கண்ணீரில் பூக்குதே

வெண்ணிலவும் சாய்ந்து ஊர்தூங்கும் வேளை

* இவை தவிர இன்னும் சில பாடல்களை youtube லிருந்து எடுத்து வைத்திருந்தேன் ஆனால் அவற்றில் 3 பாடல்கள் youtubeலிருந்து அழிக்கப்பட்டுவிட்டனவாம்.ஒரு நாளைக்கு 3பாட்டென்ணடால் இவையம் விரைவில் அழிக்கப்படலாம்!
மேலும் வாசிக்க...

Thursday, June 21, 2007

சித்திரம் பேசுகிறது

நேற்று ஒரு இடுகைகளும் போடமுடியவில்லை.அப்பிடியே போட்டிருந்தாலும் சிவாஜி பார்க்காம வலைச்சரத்தையா ஓடி வந்து பார்க்கப்போறீங்கிள் :-)இன்று ஓவியத்தோடு தொடர்கபுடையவர்களைப்பற்றியும் அவர்களின் இணையத்தளங்களைப்பற்றிச் சொல்றன் கேளுங்கோ.

ஆரதி ரவீந்திரன்

ஆரதி சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு இளம் ஓவியர்.இவருடைய "இளம் தூரிகையின் படர்வு!" என்ற வலைப்பதிவு ஒக்டோபர் 2006 உடன் புதுப்பிக்கப்படாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை.

சனாதனன்
யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் சனாதனன். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஓவியத் துறையில் முதுகலைப் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் சித்தி பெற்றவர். இங்கிலாந்து, இலங்கை, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் இவரது ஓவியக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



வாசுகி ஜெயசங்கரின் ஓவியங்கள்
தமிழியல் மாநாடு 2007 ,posters,post cards,brochure போன்றவற்றிலெல்லாம் இடம்பிடித்து யாரிந்த ஓவியர் என்று பலரையும் கேள்வியெழுப்ப வைத்த வாசுகியின் ஓவியங்கள் அனைத்துமே செம்மணி போன்ற புதைகுழிகளில் தம் குழந்தைகளைத் தேடித்தொலையும் பெண்களைப் பற்றியே பேசுகின்றன.



Kiko றுசாந்தனின் ஓவியங்கள்




வாசனின் ஓவியங்கள் புரியாத கவிதை போல புரியாத ஓவியங்களுமுண்டு :-)


சாத்தானின் பிறழ்வு
இந்த பிறழ்வு என்ற வலைப்பதிவில் வித்தியாசமான பல ஓவியங்களிருக்கின்றன.தன்னுடைய படைப்புகள் தவிர வேறு பல ஓவியர்களின் ஓவியங்களும் அவை பற்றிய சுவையான குறிப்புகளுக்கும் பஞ்சமில்லை.


மூனாவின் கிறுக்கல்
மூனாவின் துகிலிகை

கிறுக்கல் வலைப்பதிவில் அநேகமான ஓவியங்கள் (இவை எந்த வகையான ஓவியம் என்று சரியாகச் சொல்லத்தெரியவில்லை) ஈழம் ,போர் ,இலங்கை அரசியலோடு தொடர்புபட்டவை.

வலைப்பதிவர் கோபியின் ஓவியங்கள்


மோகன்தாஸின் ஓவியங்கள்

ஒவியர் விஜிதனின் நேர்காணல்


போராளி ஓவியர் நீதனின் 'விடிவின் நிறங்கள்'



ஓவியர் புகழேந்தியின் தூரிகைத்தளம்
மேலும் சில ஓவியங்கள்
மேலும் வாசிக்க...

Tuesday, June 19, 2007

இன்னிசை மட்டும் இல்லையென்றால்...

"எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்" என்ற அலைபாயுதே படப்பாடலில் ஒரு வரி வரும் "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்" என்று.உண்மையா இசையென்று ஒன்று இல்லையென்றால் எப்பிடியிருக்கும்? யோசிச்சுக்கொண்டிருங்கோ நான் வலைச்சரத்தில எனக்குத்தெரிந்து பாடல்வரிகளையும் பாடல்பற்றியும் எழுதும் சில பதிவர்களையும் மற்றும் நான் பார்த்த சில youtube பாடல்களையும் தொடுத்திட்டு வாறன்.

விஸ்ணு அண்ணாவின் மனதில் நின்றவை

பல நல்ல பழையபாடல்களையும் இடைக்காலப்பாடல்களையும் எனக்கறிமுகம் செய்து வைச்சது விஸ்ணு அண்ணாதான்.நான் என்ன பாட்டுக்கேட்டாலும் தன்ர mp3 data base ல இருந்து அனுப்பி வைச்சிடுவார்.அதால மனதில் நின்றவைல இருக்கிற அருமையான பொக்கிஸங்கள் யாருக்கும் தேவையென்றால் விஸ்ணு அண்ணாட்ட கேட்டு வாங்குங்கோ.இல்லையென்றால் இருக்கவே இருக்கிறார் பிரபாண்ணா.

பிரபாண்ணாவின் றேடியோஸ்பதி
றேடியோஸ்பதியைப்பற்றி நான் சொல்லப்புதுசா ஒன்றுமில்லை.நீங்கள் கேட்டவை எல்லாம் டக் டக்கென்று வருது நான் கேட்ட பாடல்களைத் தவிர :-)

கோவைரவீயின் பாடும் நிலா பாலு!
நல்ல பாடல்களோடு பாடல்வரிகளையும் சேர்த்து தருவார் ரவீ.

சந்திரவதனாவின் திரைப்படப் பாடல்கள்
சினிமாப்பாடல்களுக்கொரு வீட, ஈழத்துக்கானங்களுக்கு உரு வீடு , தாயகக்கீதங்களுக்கொரு வீடு என்று எண்ணிலடங்கா வீடுகளைக்கட்டி எல்லாத்தையும் நல்லா வைச்சிருக்கிறா.அநேகமான பாடல்களில் என் ரசனையோடு ஒத்துப்போகிறது இவருடைய பாடல் தெரிவுகள்.

கண்ணன் பாட்டு
ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்கள் இணைந்து கண்ணன் பாடல்களைத் தருகிறார்கள்.ஊரில "ஆலய மணியின் ஓசை காதில் கேட்கவில்லையா " என்று பாடிக்கொண்டு வல்லிபுரக்கோயிலுக்கு நடந்துபோன ஞாபகத்தை வரவழைக்கும் இவர்களுடைய பக்தி :-)


தமிழமுதம்
இசையமுதம் தவிர ஒளியமுதம் எனப்பல பல அமுதங்களிருக்கி்ன்றன இங்கே.உலகின் எல்லாப்பாகங்களிலிந்தும் வெளியிடப்படும் தமிழ் இசைத்தட்டுகளின் இருப்பிடம்.இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட் சில நாளைக்குள்ளே எப்பிடியோ தமிழமுதத்துக்கு வந்து சேர்ந்துவிடும் :-) என்ன மாயமோ!

உங்களுக்குத்தெரிந்த தளங்களையும் சொன்னால் சேரத்துக்கொள்ளலாம்!

இவை நான் youtube ல் பார்த்த பாடல்கள்.உங்களுக்காக!

கதையல்ல நிஜம்
வசந்த்தின் இசையில் சுஜீத் மற்றும் ஸ்ரெபியா டன்ஜா ஆகியோரின் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப்பாடலை எழுதியவரும் சுஜீத் தான். சந்தூரின் உதவியுடன் லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பாடல்.(இதுபற்றிய என் பதிவு)

Krishan - காதல் கடிதம்
நீ சொல்வதோ இல்லை நானே புரிவதோ...
Krishan - நினைவுகளே


நிருவின் இசையில் பெண்ணே போகாதே
மூங்கில் நிலா என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற இந்தப்பாடல் பற்றி ஏற்கனவே உங்களில் பலர் கேட்டிருக்கக்கூடும்.பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப்பாருங்கள்.

வசந்தின் இசையில் கடவுள
இளமை இனிமை புதுமை என்ற அல்பத்திலிடம்பெற்ற இந்தப்பாட்டில் தோன்றுவபர்கள்:ரவி ,சுரேஷ் மற்றும் வசந்த்

தேவதையே தேவையிங்கு நீ
இது எந்த குறூப் என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ராப்புலவர்களின் சமாதனம் வேண்டும்

மீண்டும் நாளை ஈழத்துப்பாடல்களுடன் வருகிறேன்.குட்நைட்!
மேலும் வாசிக்க...

Monday, June 18, 2007

எல்லாருக்கும் என்னோட ஒரு சேட்டை

பொன்ஸ்க்கு என்னோட நக்கல் கூடிப்போச்சு அதான் இந்த தன்னிலை விளக்கம் போடவேண்டியதாயிற்று."இசையரசி" என்று போட்டு என் குரலினிமையை இப்பிடி பப்பிளிஸிற்றி பண்றா..இந்தக்கொடுமையக் கேப்பாரில்லையா :-(

எனக்குப்பிடித்த என் பதிவுகளுக்கு முதல் என்னைப்பற்றியும் நான் வலைப்பதிய வந்த கதையையும் சொல்றன்.எனக்கு அம்மா அப்பா வச்ச பெயர் ஜலஜா.தமிழ்ப்பெயர் இல்லையென்று தமிழார்வலர்கள் நக்கலடிக்கிறமாதிரி சலசா என்று கூப்பிடுவீங்கள் என்ற பயத்தில சினேகிதி என்ற பெயரில் எழுதத்த தொடங்கினன் இப்ப என்னடா என்டால் சினேகிதியும் தமிழ்ப் பெயரில்லை என்கிறார்கள் சிலர். தற்போது மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு உளவியல் படித்துக்கொண்டிருக்கிறேன்.வேற என்னத்த சொல்ல என்னைப்ற்றி??

ஊரை விட்டு வந்து 10 வருடங்களாகிறது.நாட்டை விட்டு வந்து 7 வருடங்கள்.தமிழ் என்றால் எனக்குயிர் அப்பிடியென்றெல்லாம் டயலாக்கடிக்க மாட்டன்.பொழுதுபோக்கா கதை எழுதினன்.நேரம் கிடைக்கிற நேரம் இணையத்தில் தமிழ்ப்பக்கங்களைத் தேடி வாசிப்பேன்.அப்பிடி முதன் முதலாக வாசித்தது நிலவுநண்பனின் வலைப்பதிவைத்தான்.பிறகு நிலவுநண்பன்தான் எனக்கு ப்ளாக் பற்றியும் தமிழ்மணம் பற்றியும் சொல்லி நிறைய உதவிகளும் செய்தார்.பிறகு பிறகு நிறையப்பேரின் உதவியோடு அப்பிடியே நானும் ஒன்றுக்கு இரண்டு வீட்டைக்கட்டி குடியேறிட்டன் :-)

சுயபுராணம் காணும் எனக்குப் பிடித்த என் பதிவுகள் இதோ.

நடந்து வந்த பாதை தனை திரும்பி பார்க்கிறேன். இது தத்தக்க பித்தக்கவில தவளத்தொடங்கி ஒருவருடமானதும் எழுதியது.போன வைகாசி 27 ஓட தத்தக்க பித்தக்கவுக்கு 2வயதாகி எழும்பி நடக்கத்தொடங்கியாச்சு.
I now pronounce you man and wife

உஷா எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான் வலைப்பதிவில அடிக்கடி காணாமல் போறதால சில முகக்குறிகள் சங்கேதங்கள் எனக்கு டக்கெண்டு புரிவதில்லை.அப்பிடித்தான் உஷா அம்மணி போட்ட பின்னோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு நான் போட்ட பதிவு.அவாவே தூக்க வேண்டாமெண்டு சொன்னதால இன்னும் என் வலைப்பதிவிலயே இருக்கு.வாசிக்கிற நேரமெல்லாம் சிரிப்பு வரவழைக்கும் பதிவிது.

நட்சத்திரங்கள் என் சொந்தம்
இது எனக்கு மிகவும் பிடித்த பதிவு.இறந்த ஒருவரின் ஞாபகத்துடன் எழுதிய பதிவு.வெள்ளி பார்க்கிற குணம் நிறையப்பேருக்கு இருக்கென நினைக்கிறன்.இப்பெல்லாம் அதுக்கெங்க நேரமிருக்கு.

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்... இதில இன்னும் நிறையக் குழப்படிகளை நான் சொல்லாமல் விட்டாலும் நிறையக் குழப்படிகளை மீட்டிப்பார்க்க வழிகோலிய பதிவிது.

உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும் . இது ஒருநாள் சோசியல் சைக்கோலஜி லெக்ஸர் கேட்டுக்கொண்டிருக்கும்போது இதைப்பற்றி எழுதவேண்டுமென்று நினைத்து வீட்ட வந்த உடன எழுதியது.

ஆம்பரலங்காயும் அணிஞ்சில் பழமும்
மலைநாடான்ர மருதநிழலுக்குப்போய் பாலைப் பழம் சாப்பிட்ட களைப்பில எழுதித்தள்ளினது:-)

என்று தணியும்.... .

அலாதியானது அவர்களுடைய மொழி . மொழி படம் பார்த்தவுடன் எழுதியது.கோபியைக் காணும்போது அவனை வாசிக்க வைக்கவேண்டும்.

இந்தக்காதல் இருக்கே... . இதைப்பற்றி நான் என்ன சொல்ல :-)



தாயகப்பறவைகளுக்காக நான் எழுதிய நலம்நாடிக் கட்டுரைகள்.முழுவதும் வலைப்பதிவிலில்லை.தொடர்ந்து வாசிக்க நீங்கள் பறவைகள் சரணாலயத்துக்குத்தான் வரவேண்டும்.

பார்த்தோலின் கிளான்ட் சிஸ்ற் (Bartholin's Gland Cyst)

Genital Wart

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே!

ஆட்டிசம்

உறைப்பு சாப்பிட்டால் அல்சர் வருமா ?



உண்மைச்சம்பவங்களை வைத்து எழுதியவை.
கனவாகிப் போனவர்கள்.

இது என்ர மாமாவை நினைச்சு எழுதிய உண்மைக்கதை.மாமா எப்பிடியிருப்பாரெண்டு கூடத்தெரியாது.சிலருடைய அடையாளங்கள் விரும்பியோ விரும்பாமலோ அழிக்ப்பட்டுவிடும்.அவரைப்போல இருக்கிற யாரையும் பார்க்கும்போது மாமா இப்பிடி தாடி வைச்சிருப்பார் இப்பிடியான சேர்ட் விருப்பம் என்றுஅம்மா சொல்றதை வைச்சு நானா ஒரு கற்பனை பண்ணி வைச்சிருக்கிற ஒருவர்.

இல்வாழ்வு தந்த இயலாமை
ஒலிவடிவில்.இதுவும் ஒரு உண்மைக்கதைதான்.இப்ப எங்க இப்பிடியெல்லாம் நடக்குதென்று கேக்காதயுங்கோ.எங்கயோ நடந்துகொண்டுதானிருக்குது.
பதின்மவயதுப்பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? . இது பயந்து பயந்துதான் எழுதினான்.சம்பந்தப்பட்டவர்கள் வாசித்தான் குறைப்பட்டுக்கொள்வார்களோ என்று.அப்பிடியே வாசி்த்தாலும் அவர்களுக்கு உண்மை உறைக்க வேண்டும்.

பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட... .வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோருக்கான குறிப்புகளைப்படிக்கப்போய்.இதில் நான் சொன்ன அந்த காக்கைவன்னியன் இன்று கம்பிகளுக்குப்பின்னால். (ஒரு குரூர சந்தோசம்)

தன்வினை தன்னைச் சுடும்... . ஊரில இருந்துகொண்டு வெளிநாட்டில இருக்கிறவையெல்லாம் பணம்காய்க்கிற மரம் வளர்க்கிறார்கள் என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு.


இவ்வளத்தையும் நீங்கள் வாசிக்கோணும் என்று சொல்லேல்ல நான்.ஆனால் வாசியுங்கோ என்ன.
மேலும் வாசிக்க...

சினேகிதி வந்திருக்கிறேன்

எல்லாருக்கும் வணக்கம்.இந்தவாரம் என்னை வலைச்சரம் கட்டச்சொல்லியிருக்கினம்.எனக்குண்மையா சரம் கட்டத்தெரியவே தெரியாது.

ஊரில கோயில் திருவிழா நேரம் அக்காவும் அக்கான்ர நண்பர்களும் பொன்னொச்சிப்பூ நந்தியவட்ட தேமாப்பூ இன்னும் எனக்குப் பெயர் தெரியாத பூவெல்லாம் வச்சு இரண்டு வாழைநாரையும் வச்சு என்ன வடிவான பூமாலை கட்டுவினம்.ஆனால் நான் இரண்டு வாழை நாரை வச்சுக்கொண்டு பூவை வச்சு சுத்தினன் என்டால் பூ பிஞ்சு விழுந்திடும்.நானெல்லாம் ஊசியையும் நூலையும் வச்சுக்கொண்டு மாலை கட்டினாத்தானுண்டு வாழைநாருக்கும் எனக்கும் ஒத்தே வாறேல்ல.இந்த லட்சணத்தில வலைச்சரம் கட்ட வந்திருக்கிறன்.பார்ப்பம் அதாவது ஒழுங்காக் கட்டுப்படுதா என்று.

எனக்கு கோடை வகுப்புகள் 19ம் திகதி தொடங்குறதால முதலே சரத்தைத் தொடுத்து வைச்சிட்டு ஒவ்வொரு நாளும் தண்ணி தெளிச்சு உங்களுக்குக் குடுப்பம் என்று நினைச்சன் ஆனால் அதுக்கு பூக்கள் ஒத்துளைப்புத் தர மாட்டினமாம்.

பொன்ஸ் அக்காக்கு எனக்கு மெயில் போட்டே வெறுப்பு வந்திருக்கும் ஏனென்றால் நான் இப்பிடிச்செய்யலாமா? இதுக்கு அனுமதியிருக்கா? அதுக்கு அனுமதியிருக்கா? என்று 1008 கேள்வி கேட்க அவாவும் பதில் சொல்லிக் களைச்சுப்போனா.

நான் இந்த வாரம் தொகுக்க நினைத்திருப்பவை தமிழ் ராப், ஈழத்துக் கீதங்கள,ஓவியம் தொடர்பான பதிவுகள், சில ஈழத்துக்கலைஞர்களின் அறிமுகம் ,குழந்தைகளின் நடனங்கள் போன்றவற்றோடு சில புதிய வலைப்பதிவர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறன்.அத்தோடு எனக்குப்பிடித்த சில பதிவுகள் பற்றியும் சொல்றன்..இந்த வாரம் சில youtube வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.தவிர வேற சில எண்ணங்கள் குறுக்கிட்டால் அதையும் சரத்தில் செருகிவிடுறன் :-)

அடுத்த பதிவில் நான் எழுதியவற்றில் எனக்குப் பிடித்தது அல்லது என்னால திரும்ப வாசிக்கக்கூடியது என்று நினைக்கிற சில பதிவுகள் பற்றிச் சொல்கிறேன்.அதுக்காக மிச்சமெல்லாம் என்ன அலட்டி வைச்சிருக்கிறன் என்று நானே நினைப்தென்று அர்த்தமில்லை :-)
மேலும் வாசிக்க...

Sunday, June 17, 2007

சிநேகிதச் சரம்....

ரவிசங்கர் தினம் ஒரு பதிவு என்ற கணக்கில் இட்டு ஒரே வாரத்தில் ஆறேழு இடுகைகள் பதிந்து கலகலப்பாகி விட்டார். தற்போது அதிகம் எழுதாத பதிவர்கள், திரட்டிகளில் இல்லாத காரணத்தால் நாம் தவற விடும் பதிவர்கள், ஒரே விதமான பேசுபொருளுடன் எழுதும் பதிவர்கள் என 'பதிவர் எத்தனை பதிவரடி[டா;)]!' என்று வியக்க வைத்துவிட்டார். எனினும், பிற தளங்களில் நுட்ப மேம்பாடு, பதிவுலகம் குறித்த ஆலோசனைகள் அதிகம் பேசும் அவரது இடுகைகள் கணினி நுட்பங்கள் குறித்த இன்னும் பல்வேறு திசைகளிலிலும் நிறைந்த விவரங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். கடைசி நாளில் நுட்பமும் பேசி எங்கள் எதிர்பார்ப்பையும் ஈடுகட்டி விட்டார்.

எங்கள் அழைப்புக்காக, நேரம் ஒதுக்கிப் பதிவிட்டு வாரம் முழுமைக்கும் வலைச்சரத்தை சுறுசுறுப்பாக வைத்ததற்காக எங்களின் சிறப்பு நன்றிகள்...

அடுத்ததாக இந்த வாரம், தமது ஒலிப்பதிவுகள் மூலமும், வித்தியாசமான இடுகைகள் மூலமும் தொடர்ந்து இயங்கி வரும் 'இசைக்குயில்'(;)) சிநேகிதி வலைச்சர ஆசிரியராக இருந்து தமது ஆர்வங்களையும் பரிந்துரைகளையும் பகிர வருகிறார்.
மேலும் வாசிக்க...

நுட்பம் பேசும் பதிவர்கள்

1. சங்கர் கணேஷ் - ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும்பாலும் கணினி, நுட்பம் குறித்து எழுதி சக்கை போடு போடுகிறார். இவர் பள்ளி மாணவர் தான் என்பது ஆச்சர்யப்படுத்தும் செய்தி. பதிவுகள் தவிர தமிழ்க் கணிமை களங்கள் சிலவற்றிலும் இயங்கி வருகிறார்.

2. Techintamil.org -கணினி, மென்பொருள்கள் குறித்து மேலாளர் என்ற பெயரில் எழுதுகிறார். கூடிய சீக்கிரம் அவரே தம் உண்மைப் பெயரை வெளிப்படுத்துவதாய் சொல்லி இருக்கிறார் :)

3. ஆமாச்சு - தமிழ் உபுண்டு குழுமத்தில் தீவிரமாக இயங்குபவர். உபுண்டு, கட்டற்ற மென்பொருள்கள் குறித்து எழுதத் தொடங்கி இருக்கிறார்.

4. மயூரன் - லினக்ஸ் / உபுண்டு பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எட்டிப் பார்க்கும் இவரது குறிப்பேடு இங்கே.

5. பகீ - யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் அறிவிக்கப்படாத கூகுள் முகவர் :) (நெதர்லாந்து முகவர் யாமே :)) கணினி, இணையம், மென்பொருள், புதிய gadgetகள் பற்றி குறிப்புகள் தந்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

6. தமிழ்பித்தன் - இணையத்தில் கிடைக்கும் மென்பொருள்கள், சேவைத் தளங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

7. தமிழூற்று தந்த மாஹிர் தரும் நிரலாக்கம், வலையுலகம் தொடர்பான நுட்பக்குறிப்புகள்.

8. தமிழ் வலைப்பதிவுலகில் நுட்பம் என்றாலே பெரும்பாலும் கணினி, இணையம், நிரலாக்கம் சுற்றி வரும் நிலையில் electronics குறித்து தொடர்ந்த எழுத விழையும் கீர்த்தனாவின் முதல் இடுகை இங்கு.

9. தமிழ்மண நட்சத்திர வாரத்தில், நிகழ்நேர இயக்குதளம் குறித்து சத்தியா எழுதிய எழுதி இருந்தார். பதினறும எண் முறை குறித்து முன்னரே எழுதத் தொடங்கி உள்ளார். அவருடைய துறை குறித்துத் தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

10. கணனி உலகம் - கணினி குறித்து மயூரேசன் தரும் குறிப்புகள்.

11. இலங்கையில் இருந்து எழுதும் உமாபதி, அவ்வப்போத்து கணினி, லினக்ஸ் குறித்த குறிப்புகள் தந்து வருகிறார். தமிழ் விண்டோஸ் களங்களில் நன்கு அறியப்பட்ட ஆர்வலர்.

12. நிரலாக்கம் குறித்து க்ருபாஷங்கர் எழுதும் புள்ளிவலை.

13. லினக்ஸ் குறித்து குமார் எழுதும் பதிவு.

நுட்பம் குறித்து அடிக்கடி எழுதும் பதிவர்களின் பெயர் ஏதும் விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

--

முந்தைய இடுகைகளில் குறைவான தொடுப்புகளே தரப்பட்டிருந்தது என்ற குறையை நானும் உணர்ந்தேன். இந்த இடுகை கொஞ்சம் பரவாயில்லைன்னு நினைக்கிறேன். இத்துடன் என் வலைச்சர வாரத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். வாய்ப்பு அளித்த வலைச்சர நிர்வாகிகளுக்கு நன்றி.

அன்புடன்,
ரவி
மேலும் வாசிக்க...

புது கூட்டு வலைப்பதிவுகளுக்கான ஆலோசனைகள்

முன்பு வலைச்சரத்திலேயே பல புது வலைப்பதிவுகளுக்கான ஆலோசனைகள் தந்து சிறில் எழுதி இருந்தார். எனக்குத் தோன்றும் சில ஆலோசனைகள்:

1. வீடு / நிலம் / வண்டி வாங்குவது / விற்பது எப்படி - என்று அனுபவம் உள்ளவர்கள் எழுதினால் நல்ல வரவேற்பைப் பெறும்.

2. +2, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்பாகத் தயாராவது, மேற்படிப்பைத் தேர்ந்தெடுத்தல் குறித்த உதவிப் பதிவு.

3. மகப்பேறு, குழந்தை வளர்ப்பு குறித்த ஆலோசனைகள், தீர்வுகள், வழிகாட்டல்கள் தரும் அனுபவப் பதிவு - இதில் ஒரு மகப்பேறு, குழந்தை நல மருத்துவரையும் இணைத்துக் கொள்ள முடிந்தால் மேலும் உதவியாக இருக்கும்.

4. உள்ளூர்ப் பதிவுகள் - அந்தந்த நகரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் எங்கு, என்று நடைபெறுகின்றன, உள்ளூர் செய்திகள், உள்ளூரில் என்ன திரையரங்கில் என்ன படம் போன்ற விவரங்களைத் தரும் பதிவுகள்.

5. கணினி உதவிப் பதிவு - விண்டோஸோ லினக்ஸோ எவ்வளவு முட்டாள்த்தனமான கேள்வியானாலும் தயக்கமில்லாமல் தமிழில் கேட்டு விடை பெறக்கூடியதாக ஒரு உதவிப் பதிவு.

6. உலகத் திரைப்படங்கள் குறித்த பதிவு - அவரவர் பார்த்து ரசித்த உலகத் திரைப்படங்கள் குறித்த பதிவு.

7. ஆங்கில உதவிப் பதிவு - ஆங்கிலம் குறித்த எந்த ஒரு எளிய சந்தேகத்தையும் கூச்சமின்றித் தமிழில் கேட்டுத் தெளிய ஒரு பதிவு.

உங்களுக்கு இன்னும் சில யோசனைகள் தோன்றினால் தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்,
ரவி
.
மேலும் வாசிக்க...

Friday, June 15, 2007

திரட்டிகளில் காணக்கிடைக்காத பதிவுகள்

பலரும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளுக்கு வெளியே எட்டிப் பார்ப்பதில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் காணக்கிடைத்த சில வலைப்பதிவுகளை இங்கே தருகிறேன்.

1. உள்வெளி - கனடாவில் வாழும் பேராசிரியர். செல்வகுமாரின் வலைப்பதிவு. தமிழ் விக்கிபீடியா, கலைச்சொல்லாக்கக் குழுமங்களில் நன்கு அறியப்பட்டவர். கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேல் தமிழ் சார் களங்களில் ஈடுபாடு உடையவராக அறியப்படுகிறார். இவரது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

2. விழிகளின் மொழிகளில் - பிரபாகரனின் ஒளிப்படக் காட்சிப் பதிவு. படங்களும் அதற்கான தலைப்பு, விவரிப்புகளும் அருமை. இவரது கவிதைப் பதிவு மெய்ப்பொருள் காண்பது அறிவு. இந்தப் பதிவில் உள்ள இவையெதுவும் என்ற கவிதை என்னை ஈர்த்தது.

3. Tid bits of my life - இளம் தாயான இவர் தன் குழந்தை பிறந்த முதல் 90 நாட்களை உருகி உருகி பதிவு செய்திருக்கிறார். இப்போது தமிழிலும் எழுதத் தொடங்கி இருக்கிறார்.

4. Kick off - நிறைய ஆங்கிலத்திலும் அவ்வப்போது தமிழிலும் எழுதுகிறார். புதுப்பதிவருக்கான எல்லா அங்க அடையாளங்களையும் இவர் பதிவில் பார்க்கலாம் :)

5. Snapjudge - பாஸ்டன் பாலா Blogspotல் எழுதும் SnapJudgment நிறைய பேருக்குத் தெரியும். இப்ப Wordpressல் கிடைக்கும் SnapJudgmentன் பரப்பும் பாணியும் நல்லா இருக்கு.

விட்டுப்போன நல்ல பதிவுகள் பெயர் உங்களுக்குத் தெரிந்தால் மறுமொழிகளில் தெரிவியுங்கள்.

நன்றி,
ரவி
மேலும் வாசிக்க...

Thursday, June 14, 2007

என் பார்வையில், Top 2 தமிழ் வலைப்பதிவர்கள்

என் பார்வையில், Top 2 தமிழ் வலைப்பதிவர்கள் குறித்துக் குறிப்பிட விரும்புகிறேன்.

Paulo coelho எழுதிய The Alchemist நூலை முதலில் படித்தவுடனும் Majidi Majidiயின் Baran திரைப்படம் பார்த்த பிறகும் அவர்களின் பிற படைப்புகளையும் அலைந்து திரிந்து தேடிப் பிடித்தேன். ஒரு படைப்பாளியின் ஒரு படைப்பைப் பார்த்த உடனேயே, அவருடன் நம்மைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்போது, அவரின் பிற படைப்புகளைத் தேடிப் பார்க்க வைக்கும் போது நாம் அவரின் ரசிகராகவே மாறி விடுகிறோம். ஒரு படைப்பின் மூலமே கூட அவரை முழுமையாக அறிந்து கொள்ள இயல்வதோடு அவரின் பிற படைப்புகளில் என்ன எதிர்ப்பார்க்க முடியும் என்பதும் தெளிவாகி விடுகிறது.

இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ தமிழ் வலைப்பதிவுகள் படித்திருக்கிறேன். ஆனால், ஓரிரு மாதங்கள் வலைப்பதிவுகளைப் படிப்பதையே நிறுத்தி விட்டுத் திரும்ப வந்தாலோ நண்பர்களுக்கு நல்ல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கும்போதோ மனதில் தோன்றி மறையும் வலைப்பதிவுகள் மிகச் சிலவே. Paulo Coelho, Majidi Majidi போல் ஒரு இடுகை கூட விடாமல் நான் முழுமையாகப் படித்த வலைப்பதிவுகள் என்று நினைவுக்கு வருவது இரண்டே இரண்டு தான். அவை

1. இராம. கி அவர்களின் வளவு வலைப்பதிவு - தமிழ், தமிழ், தமிழ் என்ற தெளிவான எல்லை, நோக்கோடு இயங்குகிறது இந்தப் பதிவு. ஒரு இடுகையைப் படித்தாலே பதிவு எதைப் பற்றியது என்று புரிந்து போகும் அளவுக்கு consistentஆக எழுதுகிறார். தமிழ் வலைப்பதிவுலகில் மலிந்து கிடக்கும் மொக்கை, மொன்னை, மொட்டை, கும்மி, வெட்டி, ஒட்டிப் பதிவுகளுக்கு இடையில் எத்தனை பின்னூட்டம் வருகிறது என்று எல்லாம் அலட்டிக் கொள்ளாமல், தான் பதிய விரும்புவதைத் தொடர்ந்து அயராமல் பதிந்து வருகிறார். தொடர்வினை (meme) இடுகைகளைக் கூட எப்படி தன் ஈடுபாடுகளுக்கு ஏற்ப பயனுள்ளதாய் தர முடியும் என்பதற்கு இவரின் இந்த சுடர் இடுகை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

"தமிழில் ஐயமா, இராம. கியைக் கேட்டுப் பார்க்கலாம்" என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு வல்லுனர் பதிவராக இருந்து வருகிறார். புத்தகமாகப் பதிப்பிக்கத் தக்க அளவுக்கும், உசாத்துணையாகச் (reference) செயல்படக் கூடிய அளவுக்கும் தகவல் செறிவு மிக்கதாய் உள்ளன இவரது இடுகைகள். வலைப்பதிவு என்னும் ஊடகம் இல்லாவிட்டால் இவரைப் போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளுவது அவ்வளவு எளிதாய் இருந்திருக்காது. வலைப்பதிவு ஊடகத்தின் வீச்சை, பயனை முழுமையாகப் புரிந்து செயல்படும் ஒரு சில பதிவர்களில் இவர் ஒருவர் என்று தயங்காமல் குறிப்பிடுவேன்.

2. அஞ்சலியின் ஒரு குட்டித் தோட்டம் பதிவு - சமூக நோக்கோடு செயல்படும் இராம. கியின் வளவுக்கு நேர் எதிர்த் திசையில் வலைப்பதிவுகளின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுவதாக அமைந்து இருக்கிறது அஞ்சலியின் குட்டித் தோட்டம். அஞ்சலி எழுதும் உள்ளடக்கம் போன்றவைக்காகவே உண்மையில் வலைப்பதிவுகள தொடங்கப்பட்டன. யார் எதைப் படிப்பார்கள், யார் என்ன எழுதுகிறார்கள், பின்னூட்டம் போடுவார்களா மாட்டார்களா, இன்றைய வலைப்பதிவுலக அரசியல் நிலவரம் என்ன, திரட்டியில் தன்பதிவு தெரிகிறதா இல்லையா, இன்று என் வலைப்பதிவுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பதிவைப் போட்டோமா விளையாடப் போனோமா வீட்டுப் பாடத்தை முடித்தோமா என்று வலைப்பதிவை ஒரு இனிய, எளிய, தனக்குப் பிடித்த பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.

இராம.கியிடம் இருக்கும் consistency அஞ்சலி இடமும் உண்டு. அவரின் ஒரு இடுகையைப் படித்தாலே, இந்தப் பதிவு முழுக்கவே அவர் வாழ்க்கை, விருப்பங்கள், பொழுதுபோக்குகள் குறித்தது என்று புரிந்து போகும். குழந்தைப் பதிவர் என்று எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாத இடுகைகள். அஞ்சலி எழுதிய பொய் என்ற இடுகை என் all time favourite. தமிழ் வலைப்பதிவுலகில் நினைவில் நிற்கும் இடுகைகளில் இதுவும் ஒன்று.

தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் குழந்தைகளின் விருப்பம் அளவில்லாதது. அதற்கு வலைப்பதிவுகள் எப்படி உதவக் கூடும் என்பதற்கு, ஆந்திராவில் உள்ள ஒரு பள்ளி மாணவர்கள் பதிந்த ஒளிப்படப் பதிவைக் குறித்த BBC விவரிப்பைக் காணலாம். குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதுவதைக் காட்டிலும் அவர்களே நேரடியாக எழுதுவது அவர்களின் சின்ன அழகான உலகத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக்காட்டு்கிறது.

அஞ்சலியின் உணர்வுகளைச் சிதைக்காமல், பூச்சிட்டு மெருகேற்றுகிறேன் என்று இல்லாமல் அப்படியே வலையில் இடும் அஞ்சலியின் அம்மாவின் திறனும் மெச்சத்தக்கது. அஞ்சலி போல் இன்னும் நிறைய குழந்தைகள் வலைப்பதிய வர வேண்டும் என்பது என் ஆசை.

உங்கள் பார்வையில் சிறந்த வலைப்பதிவர்கள் யார், ஏன் என்று அவரவர் பதிவில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அன்புடன்,
ரவி
மேலும் வாசிக்க...

Wednesday, June 13, 2007

தனித்தளத்தில் எழுதும் பதிவர்கள்

தனித்தளத்தில் இருந்து பதியும் தமிழ்ப் பதிவர்கள் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் கூடி வருகிறது. எத்தனை பேர் தனித்தளத்தில் பதிகிறார்கள் என்று ஒரு குறிப்புக்காகவும் சுவாரசியத்துக்காவும் எண்ணிப் பார்த்ததில்..

1. மதி
2. கானா பிரபா
3. பொன்ஸ்~~Poorna
4. தமிழ்சசி
5. மயூரேசன்
6. விக்கி
7. ஹல்வாசிட்டி விஜய்
8. லோகேஷ்
9. சதீஷ்
10. வெங்கட்
11. முகுந்த்
12. அருட்பெருங்கோ
13. shankar Ganesh
14. ரவிசங்கர் ;)
15. கிச்சு
16. சுந்தரவடிவேல்
17. பாலச்சந்தர் முருகானந்தம்.
18. ஆமாச்சு
19. செல்லா
20. மலைநாடான்
21. Peddai.net

காசு போட்டு வலைப்பதியும் அளவுக்கு எவ்வளவு தமிழ்ப் பதிவர்கள் வலைப்பதிதலை seriousஆக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ள இது ஒரு குறியீடாக இருக்கலாம். புதிதாக தனித்தளத்தில் வலைப்பதிய விரும்புபவர்களும் இவர்களை அணுகி உதவிகள் கேட்க உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பட்டியல்.

யார் பெயராவது விட்டுப்போயிருந்தால் தெரிவியுங்கள்.

அன்புடன்,
ரவி
மேலும் வாசிக்க...

Tuesday, June 12, 2007

ஒக்கே ஒக்க வலைப்பதிவு..

எனக்குத் தெரிந்து,

1. மதியழகன் சுப்பையா கவிதைகள் - நிறைய தமிழாக்கப் படைப்புகள் இடம்பெற்றுள்ள ஒரே பதிவு.

2. சாத்தான் எழுதும் பிறழ்வு - ஓவியம் குறித்து பேசும் ஒரே பதிவு.

3. இயற்கை விவசாயம் - வேளாண்மை சார் பதிவு.

4. கூமுட்டை என்னா சொல்றாருன்னா - பின்னூட்டங்களுக்காக குழாயடிச்சண்டைகளும் உலகப்போர்களும் நடக்கும் உலகில், பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்து விட்டு எல்லா இடுகைகளையும் இடும் ஒரே தமிழ்ப் பதிவு இதுவாகத் தான் இருக்கும்!!

5. தமிழீழம் - தமிழீழத்தின் எதிர்காலம் குறித்த ஆக்கப்பூர்வமான, தொலைநோக்கு உடைய ஒரே ஒரு பதிவு.

6. இந்தியாவில் எய்ட்ஸ் - முழுக்க முழுக்க ஒரு நோய் குறித்து மட்டும் எழுதப்படும் வலைப்பதிவு

இது போல ஒரே ஒரு பதிவு என்று சொல்லத் தக்க வகையில் துறை சார்ந்தோ வேறு சிறப்பு அம்சங்களோ உள்ள பதிவுகள் உங்களுக்குத் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்,
ரவி
மேலும் வாசிக்க...

Monday, June 11, 2007

காணாமல் போன பதிவர்கள்

1. சந்தோஷ்குரு - கசாகூளம் வலைப்பதிவில் அருமையான நூல் விமர்சனங்கள், எழுத்தாளர் அறிமுகங்கள் தந்து வந்தார்.ஓராண்டாய் காணாமல் போயிருந்தவர் weird குணம் சொல்ல மட்டும் இரண்டு மாதம் முன்னர் தலையைக் காட்டி விட்டு மறைந்து விட்டார்.

2. காசி - இவரின் தமிழ்மண நிர்வாக அனுபவத் தொடர் நான் விரும்பிப் படித்தது. கடைசியாக ஜூலை 2006ல் பதிந்து இருக்கிறார். அதற்கப்புறம் ஆளைக் காணோம் !

3. ராம்கி - பத்திரிகையாளர் என்ற வகையில் இவரது பதிவு பெரும்பாலான பதிவுகளைக் காட்டிலும் உள்ளடக்கத்தில் ஒரு படி மேலே இருந்தது.

4. நற்கீரன் - புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வியல், கட்டற்ற மென்பொருள், தத்துவம் குறித்து சிந்தனையைத் தூண்டும் விதமாக எழுதி வந்தார். ஓராண்டாய் ஆளைக் காணவில்லை.

நீங்கள் தொடர்ந்து விரும்பிப்படித்து வந்து, காணாமல் போன பதிவர்கள் பற்றிய தகவல் ஏதும் இருந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி - காவல்துறைக் கண்காணிப்பு ஆணையர், சென்னை - 600028 ;)

அன்புடன்,
ரவி
மேலும் வாசிக்க...

பதிவர் வாரம்

வணக்கம். வலைச்சரத்தில் ஒரு வாரத்துக்கு எனக்குப் பிடித்த பதிவுகள், பதிவர்கள் குறித்து எழுத இருக்கிறேன். இடுகைகள், பதிவுகள், திரட்டிகள் என்பதைத் தாண்டி அதற்குப் பின்னால் இயங்கும் பதிவர்கள் என் பார்வையில் முக்கியமானவர்களாகப் படுகிறார்கள். எனவே, வலைச்சர வழக்கத்துக்கு மாறாக, இடுகைகளுக்கு அல்லாமல் பதிவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து என் இடுகைகளை எழுதலாம் என்றிருக்கிறேன். எங்கும், என்றும் மனிதர்கள் தானே முக்கியம் :) ?

முதலில் சில தெளிவுபடுத்தல்கள் / disclaimerகள்:

1. கடந்த ஒரு வாரத்திலோ மிக அண்மையிலோ எழுதப்பட்ட இடுகைகளுக்கான சுட்டிகள் தருவது மிகக் கடினம். அண்மைக் காலமாக வலைப்பதிவுகளை வாசிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன்.

2. சில இடுகைகள் மிகச் சிறியனாவாய் இருக்கலாம். இடுகைக்கான மறுமொழிகள் மூலம் இடுகைப் பொருளை இன்னும் மெருகேற்றலாம் என்று நினைக்கிறேன்.

3. நான் குறிப்பிடுபவை அனைத்தும் என் பார்வை, வாசிப்பு, ரசனைக்கு உட்பட்டவையே. எனவே, விடுபட்ட பதிவர்கள், பதிவுகள் பொறுத்துக் கொள்ளவும்.

4. நான் குறிப்பிடக்கூடிய பல விசயங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதாக இருக்கலாம். ஆனால், இன்று தான் தமிழ் வலைப்பதிவுலகுக்கு அறிமுகமாகி இருக்கும் ஒரு வாசகருக்கு உதவும் வகையில் இவை பயனுள்ளவையே என்று நினைக்கிறேன்.

அடுத்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று வலைச்சர வழிகாட்டி பிரிவு 1.52ல் :) குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே..

சந்தோஷ்குருவின்
பதிவைப் படித்த ஆர்வத்திலும் அவர் தூண்டி விட்டதன் பேரிலும் 2005 ஜனவரியில் முதன் முதலில் என் வலைப்பதிவில் எழுதினேன். (ஆனா, இதற்குப் பிறகு வலைப்பதிய வந்த பலர் மூத்த பதிவர்கள் ஆகிட்டாங்க ;)) 2006 பிற்பகுதியில் இருந்து தொடர்ந்து பதிந்து வருகிறேன்.

வரும் வாரத்தில் என்னிடமிருந்து வரக்கூடிய இடுகைகள் விவரம்:

1. காணாமல் போன பதிவர்கள்.
2. நுட்பம் பேசும் பதிவர்கள்.
3. என் பார்வையில், Top 2 தமிழ் பதிவர்கள்.
4. திரட்டிகளில் காணக்கிடைக்காத பதிவுகள்.
5. தனித்தளத்தில் இயங்கும் பதிவர்கள்.
6. ஒக்கே ஒக்க வலைப்பதிவு.
7. புது வலைப்பதிவு முயற்சிகளுக்கான ஆலோசனைகள்.

அடுத்தடுத்த இடுகைகளில் தொடர்ந்து பேசுவோம்..

அன்புடன்,
ரவி
மேலும் வாசிக்க...

Sunday, June 10, 2007

ஆசிரியர் அறிமுகம்

வலைச்சரம் தொடுக்க இராமைத் தொடர்பு கொண்ட போதே, அவர் அந்த வாரம் தான் விடுமுறை முடிந்து திரும்புகிறார் என்பதால் நேரம் கிடைக்காமல் போகலாம் என்று எதிர்பார்த்தோம். எனினும், தன் அலுவலக, சொந்த நேரக் குறைபாடுகளுக்கிடையிலேயும் சொன்னபடி மூன்று இடுகைகள் இட்டு வலைச்சரத்தை மிகவும் அழகாக வழிநடத்தியுள்ளார்.

வட்டார வழக்கு பதிவுகள் ஒரு சுவை என்றால், வணக்குமுங்க இடுகைகளும் சுகமானவை.. சிவாஜி படம் பற்றிய இடுகைகளை இராம் தொகுத்த பிறகு படத்தின் எதிர்பார்ப்பு குறித்த விரிவான விமர்சனங்கள் வர உதவி இருப்பது குறிப்பிடத் தக்கது.. நன்றி இராம்..

இந்த வார வலைச்சர ஆசிரியர் பற்றி நான் சொல்ல புதிதாக ஏதுமில்லை. வலைச்சரத்தின் பக்கப்பட்டியில் தோன்றும் அவர் பங்கேற்கும் பதிவுகளைப் பார்க்கையிலேயே எத்தனை சுறுசுறுப்பான பதிவர் என்பது விளங்கும். ஆசிரியர் தொடர்ச்சியாக, சுணக்கமில்லாமல் பங்கேற்கும் மூன்று பதிவு ஓடைகளை மட்டுமே இங்கே காண்பிப்பது என்ற எங்களின் உச்சவரம்பு எத்தனை குறைவானது என்று உணர வைத்த, 'திறவுமூல மென்பொருள் மேம்படுத்தோர் சங்க'(Opensource Promoter Team) உறுப்பினரான (தமிழ்வலைப்பதிவுகள் துறைத்தலைவர்? ;) ) ரவிசங்கரின் தொகுப்பில் வருகிறது இந்த வார வலைச்சரம்..
மேலும் வாசிக்க...

Saturday, June 9, 2007

பாதித்த சிறுகதைகளில் சில...

உண்மைச் சம்பவத்தை கட்டுரையாக எழுதுவதில் வாசிப்பவர்களை உணர்வுபூர்வமாக பாதிப்புக்குள்ளாக்குவது என்பது சற்றே கடினந்தான். அதே போல் கதைகளிலே உண்மைச் சம்பவத்தை எழுதும் பொழுது உணர்வுப்பூர்வமான பாதிப்பு ஏற்படுத்துவதும் சற்றும் கடினந்தான். அந்த கடினமான எழுத்துப்பணியை கதைகளில் எளிதாக வடிக்கும் சில எழுத்தாளர்களின் கதைகளை என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியவற்றை பார்க்கலாம்.


தம்பியின் இந்த கதை, லாரி ஓட்டும் டிரைவர் குடும்பங்கள் சிலவற்றில் நடக்கும் வருந்ததக்க நிகழ்ச்சியை கருவாக கொண்டு எழுதியது.

தேன்கூடு நடத்திய சிறுகதை போட்டியின் போது மரணம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கதை, முகமறிய, முகமறிந்த மனிதர்கள் தீடீரென்று மரணம் நிகழும் பொழுது நாம் அடையும் சோகம் இக்கதையை வாசித்தப் பொழுது உணரமுடியும்.

கப்பி பயல் எழுதிய மரணம் சிறுகதை

இவரின் மற்றொரு கதை. மற்றொரு உணர்வுபூர்வமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

கோ.இராகவன் எழுதிய பகலில் வந்த பூர்ணிமா

செதுக்கல் தேவ்'வின் கதிரேசன் கதை

லிவ்ங்ஸ்மைல் வித்யா தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கதையின் பாணியில் எழுதிய புனைவாக சொல்லும் முயற்சி.
மேலும் வாசிக்க...

Friday, June 8, 2007

சிவாஜி - The Boss

சிவாஜி தற்போது தமிழ் சினிமாவுலகிலும் தமிழ் ஊடகங்களிலும் அதிகமாய் இல்லை ரொம்பவே அதிகமாய் உபயோகப்படுத்தபடும் பெயர். ரஜினி சந்திரமுகி முடிந்ததும் அடுத்தப்படத்தை பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் ஊடகங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெகுசன ஊடகங்களுக்கு இணையான பதிவுலகிலும் சிவாஜி படத்தை பற்றிய பதிவுகள் வரதொடங்க ஆரம்பித்தன. அந்த வகையில் சிவாஜி படத்தை பற்றி பதிவர்கள் எழுதி நான் படித்த சில பதிவுகள்.



ரஜினி ரசிகர்களின் அதிகாரப்பூர்வ வலைப்பூ

சிவாஜி படத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ.

ஆ.வி.யில் ரஜினி பற்றி வந்த I.மோகன் தாஸின் பதிவு.

அவரின் மற்றுமொரு பதிவு.


பினாத்தல் சுரேஷ்'ன் சிவாஜி பதிவு பட்டியல்கள் ;)

சிவாஜி திரை முன்னோட்டம்

சிவாஜி2.0 revised Premier show (flash)


சிவாஜி-ஒரு திரை முன்னோட்டம்

சிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்!!!!!

லக்கிலுக்கின் சிவாஜி படத்தின் விமர்சனம்

படம் வெளியானதும் இது 100% உண்மையா இருந்தா கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ;)

சிவாஜி படத்தை பற்றி மாறுபட்ட பார்வையில் கண்டவர்களின் பதிவுகள் :-

கோவி.கண்ணனின் - சிவாஜி என்னும் பூச்சாண்டி வருகிறது..

சுரேஷ் கண்ணனின் சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்.

கச்சேரி தேவ்'ன் வாஜி வாஜி சிவாஜி - ரஜினி ரசிகர்களின் வரவேற்பு

மகியின் சிவாஜியை நான் விமர்சித்தால் எப்படி இருக்கும்?

சிவாஜி "டப்பும் பில்டப்பும்"

மனதின் ஓசையின் ரஜினி/சிவாஜி - சில கேள்விகள் - என் பதில்கள்.

நுனிப்புல் உஷா'வின் கிழட்டு நாயகனும், இளம் வயது நாயகியும்

செல்வனின் கிழட்டு நாயகனும், இளம் வயது நாயகியும்

ஓசை செல்லா'வின் கிறுக்குத் தமிழனுக்கு என்றே ஒரு சூப்பர் ஸ்டார்!

ஆகமொத்ததில் சிவாஜி படத்தோட முன்னோடத்திலே ரஜினி சொல்லுறமாதிரி பேரை கேட்டவுடனே சும்மா அதிருது'லே?? எல்லாரையும் படம் அதிரவைக்குமான்னு தெரிய இந்த ஏழு நாள்கள் நகர வேண்டும்.
மேலும் வாசிக்க...

Thursday, June 7, 2007

வட்டார வழக்கு பதிவுகள்.....

சென்ற இரண்டு நாளாக அலுவலகப் பணி அழுத்தம் காரணமாய் இங்கு பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். நம் தாய்மொழியான தமிழ் இடத்துக்கு இடம் பலவகையான மொழிவழக்கு பிரயேகப்படுத்தபடுகிறது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர்களுக்கு செல்லும்போது அவர்கள் பேசும் மொழி நடையை வைத்து அவர்களின் சொந்த ஊரை அறியப்படும் பொழுது பிறக்கும் சந்தோஷம் அளப்பறியது அல்லவா?? பேசுவதில் இயல்பாக வரும் வட்டார வழக்கு மொழி எழுதும் பொழுது அவ்வளவு சுலபத்தில் வந்துவிடாது. நானும் பலமுறை முயன்று தோற்று இருக்கிறேன். அந்த வட்டார வழக்கை எழுத்துக்களில் கொண்டு வரும் முயற்சிகளில் சிலருக்கு கைவந்த கலையாக அமைகிறது.

இப்பதிவில் வட்டார வழக்கில் புகுந்து விளையாடும் சில பதிவர்களின் சுவராசிய பதிவுகளை பார்க்கலாம்.

நல்லா இருங்கடே'ன்னு எப்பவுமே சொல்லுற நம்ம அண்ணாச்சியோட தன்னோட படிப்பை பத்தி எழுதுன பதிவு.

திருநெல்வேலி பாணியே அப்பிடியே எழுத்திலே கொண்டு வந்துருப்பார்.


அந்த வட்டார வழக்கிலே எழுதும் மற்றுமொரு பதிவர் ஜியின் தொடர்கதை ஒன்று.

கதாப்பாத்திரங்களின் வசனபிரயோகங்கள் அனைத்தும் நெல்லை பாணி.


கோவை கொங்கு வட்டார வழக்கிலே அசத்துறது'க்கு வேறயார்... நம்ம கொங்கு ராசா'வின் அசத்தல் அழகு.


நம்முரு மதுரை வட்டார வழக்கில் எழுதும் வரவனையின் பதிவு

தருமி ஐயாவின் இப்பதிவு


ஈழத்து தமிழில் சமிபத்தில் நான் படித்த பதிவுகள்

கானாபிரபா'வின் மண்ணெண்ணையில் பார்த்த படங்கள். கடைசி வரியில் கண்கலங்க வைத்து விட்டார்.


சிநேகதியின் கானமும் கதையும் குரல் பதிவு.


சகோதரி தூயா'வின் நானும் என் ஈழமும் தொடர்

சயந்தனின் ஆராய்ச்சி பதிவான காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் என்ன தொடர்பு.

ஈழத்து தமிழ் பேச்சு வழக்கை மதுரையிலிருந்த அகதிகள் முகாமில் கேட்டப்பொழுது சில வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தமே புரியவில்லை. அவர்களிடமே அதுக்கு என்ன அர்த்தமின்னு கேட்டு நமது சொல்வழக்கு அவர்களுக்கு சரிவர தெரியாதனாலும் ஆங்கிலத்தில் எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள்.

இன்னமும் பல சுவாரசியமான பதிவுகளை நாளை பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Monday, June 4, 2007

எல்லாருக்கும் வணக்கமுங்க....

என் இனிய தமிழ் பதிவர்களுக்கு நாந்தான் உங்கள் பாசக்கார பய இராம் எழுதுகிறேன்னு பாரதிராஜா எப்க்ட்'லே பில்ட்-அப் எல்லாம் கொடுத்து எழுதமுடியாதுங்க. நம்ம மண்டையிலே இருக்கிற கொஞ்சகாணு பச்சை மண்ணிலே என்ன செய்யமுடியுமோ அதே மட்டுந்தானே செய்யமுடியும், சட்டி செய்யுற அளவுக்கு மண்ணை வைச்சிக்கிட்டு பானையா செய்யமுடியும். எதுக்கு இப்பிடி நீட்டி மொழங்குறன்னா வலைசரமின்னு ஒரு பதிவு. அதுக்கு ஒரு வாரத்துக்கு ஆசிரியர்'ன்னா கெத்தா இண்டரோ கொடுக்கவேணாமா? கொடுக்கிற அறிமுகத்திலே இவ்ங்கிட்டே என்னோமோ விஷயமிருக்குன்னு நம்ப வைக்கக்கூட வேணாம், அட்லிஸ்ட் சந்தேகப்பட வைக்கலாம் இல்ல.

இன்னவரைக்கும் நான் எப்பிடி வலைபதிய ஆரம்பித்தேன்னு யாருக்கிட்டேயும் சொல்லவே இல்லை. அதுக்கு எங்களுக்கு தெரிஞ்சு என்னா ஆகப்போகுதுன்னு நீங்க முணுமுணுக்கிறது என்னோட மானிட்டர் ஸ்பீக்கர் அலறுது. அப்பிடியெல்லாம் வலிக்கிறமாதிரியெல்லாம் நடிச்சா நாங்க விட்டுருவோமா?

வாங்க பாஸ்! என்னோட வலைபதிய வந்த வரலாற்றை சொல்லுறேன்.

2005 டிசம்பர் மாசம் நம்ம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பத்தி கூகுளிலே தேடிட்டு இருந்தோப்போ எதோச்சையா ஷிரிஷிவ் பதிவை படிக்க நேர்ந்துச்சு, அவரு அதிலே உலக அதியசத்தை பத்தி எழுதிவைச்சிருந்தார், அதே படிச்சி பார்த்ததும் நம்ம ஊரு கோவிலை ஒலக அதிசயமா ஆகிறக்கூடாதுன்னு நடக்கிற வெளிநாட்டு சதியோ இல்ல உள்நாட்டு சதிக்கோ அவரும் துணைப்போறார்'ன்னு நான் போய் கருத்தை சொல்லிட்டு வந்தேன். அப்பிடியே அந்த பதிவிலே இருந்து மோகன்தாஸ், பினாத்தலார், கொழுவின்னு யாரல்லாம் பின்னூட்டம் போட்டுருந்தாங்களோ அவங்க பதிவுக்கெல்லாம் போய் படிச்சுப்பார்த்துட்டு மதியோட இந்த சுட்டிதான் முதலிலே அறிமுகம் ஆச்சு. ஓய்வுநேரங்களிலே ஒவ்வொரு பதிவா படிச்சிட்டு இருப்பேன். எவ்வளவு நாள்தான் படிச்சிட்டே இருக்கிற நாமெல்லும் தமிழிலே எழுதனுமின்னு என்னத்தயோ டவுண்லோட் பண்ணி இன்ஸடால் பண்ணுனேன். நாமே உபயோகப்படுத்துற லினக்ஸ்'க்கு இன்னும் Unicode Tool வரலைன்னு அப்போதான் தெரிஞ்சது. ஆபிஸிலே அதுக்காக சண்டைப்போட்டு ஒரு (வீணாப்போன) விண்டோஸ் சிஸ்டத்தையும் வாங்கி வைச்சிட்டு வலைப்பதிய ஆறு மாசம் ஆகிப்போச்சுங்க.

ஏண்டா இப்பிடி ஆரம்பத்திலே அறிமுகம் கொடுக்கிறேன்னு அறுவையே போடுறேன்னு இன்னொருதடவையும் ஸ்பீக்கர் அலறிருச்சு. ;)

நம்ம மக்கள்ஸோட சுவராசியமான அறிமுகத்தை பற்றி பதிவுகளின் சுட்டிகளை பாருங்க. அதுக்குள்ளே அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.


கொங்கு ராசா'வின் கலக்கல் அறிமுகம்

ஆசிப் அண்ணாச்சியின் அறிமுகம்

'ஓ'மப்பொடியோட அறிமுகம்

தடாலடியாரின் அறிமுகம்

(பதிவிலே போய் டைரக்டர் கெளதமா'ன்னு கலாய்ச்சு வைக்க, அவரோ அதை சீரியஸின்னு நினைச்சிட்டு தனிமெயிலாம் அனுப்பி வைச்ச நல்லவரு... )

கைமண் அளவுதான்னு சொல்லிட்டு கடலளவு விஷயத்தை எழுதும் ஜெகத்'ன் அறிமுகம்

கல்யாணம் ஆனதும் பதிவே எழுதாத துபாய் இராஜா'வின் அறிமுகம்

தன்னடக்கத்தின் ஒட்டுமொத்த உருவம் CVR'வின் அறிமுகம்

கதையோ,கவிதையோ எல்லாத்திலேயும் அசத்தும் ஜி'யின் அறிமுகம்

மிகவும் சமிபமாய் வந்து கவிதைகளில் கலக்கும் காயத்ரியின் டிபிகல் அறிமுகம்

அடுத்த பதிவிலே இன்னும் சில சுவராசியமான பதிவுகளை பார்க்கலாம்.

பாபா வேலை எவ்வளோ கஷ்டமின்னு இப்போதாய்யா தெரியுது.
மேலும் வாசிக்க...

வெட்டிப்பயல், அய்யனார், இராம்

நேரமின்மையால் முந்தைய வாரத்தில் அறிமுகப்பதிவு எழுத விட்டுப்போய்விட்டது. அய்யனார் மன்னிக்க :)

வெட்டிப்பயல் மே 21ஆம் தேதி தொடங்கும் வாரம் நிறைந்த வேலைச் சுமைகளுக்கிடையிலும் நிறைவான வாரமாக சரம் தொடுத்திருந்தார். பொருளடக்கம்வாரியான பரிந்துரைகள் என்றில்லாமல், பதிவர் வாரியான இடுகைகளாக பரிந்துரைத்ததில் பதிவர்களாக இருந்த எழுத்தாளர்கள் வரைக்கும் எழுதி பல்வகைப்பட்ட இடுகைகளைப் பரிந்துரைத்திருக்கிறார்.

படிமக் கவிதைகள், ஆங்கிலப்படங்கள் என்று கலக்கிக் கொண்டு பாசக்காரக் குடும்பத்தில் பங்காளியாக இருக்கும் அடர்கானகப் புலி அய்யனாரை வலைச்சரம் தொடுக்க அழைத்த முதற் காரணமே, அவரது பரந்துபட்ட வாசிப்பே. எங்கள் கணிப்பை மெய்ப்பிப்பது போலவே, திரட்டிகளில் இல்லாத பல்வேறு பதிவுகளையும், இடுகைகளையும் பல்வகையாகப் பிரித்துப் படைத்து ருசிகரமான விருந்தாக படைத்துவிட்டார்.

அடுத்து இந்த வார வலைச்சர ஆசிரியராக வரவிருப்பது வ.வா.சங்கம் புகழ் மதுரைக்காரர் இராம். ரசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் புதிய இணைய பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொணரவும் இராமை வருக வருக என்று அழைக்கிறோம்..
மேலும் வாசிக்க...

Sunday, June 3, 2007

விடைபெறல்







வலைச்சரத்தின் மூலமாய் என் பார்வைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆரம்ப பதிவில் சொன்னது போல சமீபமாய் படிக்க துவங்கியிருப்பதால் பெரும்பாலான பதிவர்களை இன்னும் கண்டறியவில்லை.என் ஒற்றைப் பார்வையில் இவ்வுலகில் தட்டுப்பட்ட இடுகை மற்றும் பதிவர்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.பதிவுகளை படித்த நபர்களின் எண்ணிக்கை எனக்கு திருப்திகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பின்னூட்டமிட்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும் (குறிப்பாய் மின்னுதுமின்னல்) எழுதப் பணித்த வலைச்சரம் ஆசிரியர் பொன்ஸ் க்கும் மிகுந்த அன்பும் நன்றிகளும்.

திட்டமிட்டபடி ஐந்து இடுகைகளை பதிவிக்க முடிந்தது.செறிவாய் வந்திருந்ததா என தெரியவில்லை.ஐந்து இடுகைகளும் ஒற்றை சாளரமுறையிலே எழுதப்பட்டது ஒரு குறையாகப் படுகிறதெனக்கு இருந்தும் திட்டமிட்டபடி செயலாற்றியதில் மகிழ்ச்சி.

எதிலேயும் திருபதியடையா சிக்கலான மனதின் நீட்சி இன்னும் செறிவாய் எழுதியிருக்கலாமோ என விடைபெறும் கணங்களில் யோசிக்கத் தவறவில்லை.
மேலும் வாசிக்க...

ஒரு விடுபட்ட கவியும் சில புதிய பதிவர்களும்

தூரன் குணா - கொரங்காடு
வலைக் கவிகள் பதிவில் விடுபட்ட செறிவான கவிஞர்.அபூர்வமாய் வலைபதியும் குணா தற்போது தன் கவிதைகளை தொடர்ந்து பதிவிக்க தொடங்கி இருக்கிறார் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.இவரின் சில கவிதைகள் ப்ரியத்தின் பொங்குகள், பாழை அடைகாப்பவன் நீ , கூடற்ற பறவை


காயத்ரி
பாலைத்தினை என இலக்கியமாய் உள்ளே வந்திருப்பவர் ஒரே மாதத்தில் 40 இடுகைகளுக்கு மேல் எழுதி தள்ளிவிட்டார் .இவரின் பரட்டை என்கிற அழகு சுந்தரம் விமர்சனம் படித்து இன்னொரு நகைச்சுவை பதிவர் என முத்திரை குத்தும்முன் கவிதைகளாய் எழுதி இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.எல்லா கவிதைகளும் நன்றாய் வந்திருக்கிறது.புறக்கணிப்பின் வலிகள், மரபுடைக்க முடியாமையின் துயர் மிகச் சரியாய் சொல்லப்பட்டிருக்கிறது.வந்த உடனேயே பரவலான கவனம் பெற்றிருக்கிறார்.

அருண் சிவா - குட்டிப்பிசாசு
அட்டகாசமான பேர் :) உள்ள நுழைந்த உடனே நேராய் கிடேசன் பார்க்கில் துண்டு போட்டு இடம் பிடித்து பாசக்கார குடும்பத்தின் கொ.ப.செ பதவியையும் வாங்கிட்டார். நகைச்சுவை,திரைப்படம்,கவிதை ன்னு இந்த பிசாசு நல்லா எழுதுது serigo leone பற்றிய இடுகை நல்லா வந்திருந்தது.கம்மங்க்கூழு வித் கவுண்டமணி செம காமெடி
எழுத்துருவ மாத்து பிசாசு.


கீர்த்தனாவின் - +ள் விகுதி
உள்ள வரும்போதே நண்பர்கள் புடைசூழ வந்திருக்காங்க பெரிய பதிவர்களின் தோழியா இருப்பங்கன்னு நெனக்கிறேன்.இவங்களோட எண் முறை இல்த்திரனியல் புதுமையான அபூர்வமான இடுகை.கரப்பான், ஆண் சிலந்திகள் , போன்ற கவிதைகள் சிறப்பாக இருந்தது.

கதிரவன் - வாழ்க்கைப் பயணம்
தன் பயணங்களை பகிர்ந்து கொள்ளும் கதிரவனின் இப்பதிவு செறிவாய் இருக்கிறது.இஸ்ரேல் பற்றிய வரலாற்றுப் பூர்வமான தகவல்களை இங்கே பெறலாம்

கோகிலவாணி - துவக்கம்
குழந்தைகளுக்கான படைப்புகள் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் வலைப்பதிவில் இல்லை.அக்குறை தீர்க்க குழந்தைகளுக்கான பாடல்களை சுமந்து வந்திருக்கிறார்.சிங்க ராஜாவும் சின்ன பெண்ணும் , கோழியும் மயிலும் இந்த பாடல்கள் இனிமையாக் இருக்கிறது.
பொன்ஸ் இவங்களை கவனிங்க குழந்தைகளுக்கான் வலைத்தளத்துல பயன்படுத்திக்கலாம் :)

சிமோன்தி
இந்த வலைப்பக்கம் இன்னும் தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை என நினைக்கிறேன் மூன்று கவிதைகளும் மிக சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.காலத்தின் மீது மரணத்தால் எழுதுதல்,கனதியான பொழுதுகளில் அழியும் இருப்பு

திரைவெளி - மணிதர்ஷா
இவரது ஒசாமா திரைப்படபதிவு நன்றாக வந்திருக்கிறது.சரிநிகர் இலக்கிய இதழில் வெளிவந்த விமர்சனம் மிகச் சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.மற்ற இரண்டு படங்களும் two woman , turtles can fly வெகு சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.இவரின் வரவு என் போன்றவர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்.

தனிமடலில் சிமோன் தி மற்றும் மணிந்தர்ஷா பதிவின் சுட்டிகளை தந்த ABV VBA (என்ன பேர்னு கூட தெரியலிங்க மடல் ஒண்ணு வந்தது) க்கு நன்றிகள்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது