07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 30, 2013

அகலிகன் - முதல் பந்து

வலைச்சரம் வாசிப்போர்க்கு ஒரு நற்செய்தி ( நற்செய்தியா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் நீமேலசொல்லு ) இந்தவாரம் அகலிகன் வாரம். வலைச்சரத்தில் இந்தவாரம் முழுதும் என்னை கவர்ந்த, பாதித்த,மயக்கிய என பல கமாக்களை போட்டுகிட்டே போகலாம் அப்படியான தளங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கபோகிறேன்.( யாரோ உனக்கெதுக்கு இந்த வேலைன்னு கேக்கறாப்போல தெரியுது அவங்களை அப்புறமாகவனிச்சுக்கிறேன் ) இந்த வாய்ப்பை எனக்களித்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள். தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும் வாசிக்காம தப்பிக்கபார்ப்பவர்களுக்கும் நன்றிகள்.

வாழ்க்கை அலை புரண்டுகொண்டே செல்கிறது. இதில் சிக்கி மூச்சு திணறுபவர்களும்அலையின் வேகத்தோடுஅடித்துச்செல்லப்பட்டவர்களும்,அதையும் மீறி அதன் உச்சியில் நின்று சாகசம் செய்பவர்களும் இருக்கத்தான்செய்கிறார்கள். மூச்சு திணறியவர்கள்  மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த முயற்சியைதொடர்கின்றனர்உச்சியில் நடனமாடியவர்கள் கால் இடறி தலைகுப்புற விழவும்செய்கின்றனர். அடித்துசெல்லப்பட்டவர்களைப்பற்றி நாம் அறியாவிட்டாலும் அவர்களும் எகேனும் கரை ஒதுங்கித்தான் இருப்பார்கள் என நம்புவோம்.

மூச்சு திணறினாலும், ஆட்டம் கவிழ்ந்தாலும், அடித்துச்சென்றாலும் மீண்டும் மீண்டும் முயற்சிக்க காரணம் தனித்தன்மையையும் அடையாளத்தையும் பெறவேண்டித்தான்.

விவரம் தெரியத்தொடங்கியதுமே நமக்கு மற்றவரின் கவனிப்பும் பாராட்டும் தேவைப்படுகிறது. குழந்தையின் அழுகையும் சிரிப்பும்கூட தன்னை கவனிக்கவேண்டும் என்பதற்காகத்தான். நல்ல உடைகள் அணிவதும்,அலங்காரங்கள் செய்துகொள்வதும், கத்திபேசுவதும், கவிதை கிறுக்குவதும் என பலவும்கூட மற்றவர்கள் நம்மை கவனிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிகள்தான்

சமூக வலைத்தளங்கள் அத்தகைய கவன ஈர்ப்புக்கான வெளிப்பாட்டுத்தளமாக உள்ளன என்றால் மிகையில்லைவலைத்தளங்களில் இயங்குபவர்கள் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் யாராலோ கவனிக்கப்படத்தான்செய்கிறார்கள் அதுவே அவர்களை தொடர்ந்து இயங்கச்செய்கிறது.

ஒவ்வொரு மலரும் அது அதற்கான அழகோடும் மணத்தோடும் பூத்துக்கொண்டிருக்கின்றன. அவை எவையும் தன்னைதான் உலக அழகி என்றும் நறுமணத்தின் நாயகி என்றும் எப்போழுதுமே நினைத்துக்கொள்வதில்லைபிரகடனப்படுத்துக்கொள்வதுமில்லை மல்லிகையின் வாசம்தான் பெருபாலானவர்களுக்கு பிடித்ததாய் உள்ளதால் கனகாம்பரமோ அல்லது காட்டு பூவோ தன் வாசத்தை மல்லிகைக்கு மாற்றிக்கொள்ள நினைப்பதில்லைஒரு பூவிற்கு வாசம் அழகு, ஒரு பூவிற்கு தோற்றம் அழகு இவற்றை தேவைக்கேற்ற அளவுகளில் எடுத்து மொத்தமாய் சரமாக்கிக்கொண்டால் அதன் மணமும் அழகும் கூடுகிறது.

தமிழில் இயங்கிவரும் வலைத்தளங்களூம் அப்படித்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் அவர் அவருக்கான பார்வையை அவர் அவர் கோணத்தில் எழுதிவருகின்றனர்இது வாசிப்பவர்களின் பார்வையை மேலும் விசாலமாக்குகிறது.  

சமகாலத்தில் வலைத்தளங்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் வாசிப்பை அதிகரித்திருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பத்திரிக்கைத்துறையும்ஊடகத்துறையும் செய்ய தவறும்அல்லது தயங்கும் வேலையை பல வளைத்தளங்கள் துணிவோடும், சிரத்தையோடும் செய்துவருகின்றன என்பதே அதற்கு காரணம்

தொடக்கத்தில் இவை தங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு மாற்றுக்கருத்து கொண்டவர்களுடன் வரட்டு கும்மிஅடித்துக்கொண்டிருந்தது. வாசகர்களும் இந்த அரசியலில் சிக்கி அவதிப்பட்டனர். காலப்போக்கில் இது ஒரு கருத்துபரிமாற்ற களம்தான் என்பதில் தெளிந்தனர். (நான் வலைத்தளங்களை அப்படித்தான் பார்க்கிறேன்.)


 இனி என்னைபற்றி :

பள்ளி காலங்களிலும், கல்லூரி காலங்களிலும் பேச்சுபோட்டிகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகளை தொகுப்பதுஎன பலவற்றில் ஆர்வமுடன் கலந்துகொண்டதுண்டு. (பார்வையாளனாகத்தானே?ன்னு யாரோ கேட்கறீங்கபரவாயில்ல காதுல விழாதமாதிரியே இருந்துடறேன்.) சிறுவயது முதலே ஓவியத்தின்மேல் ஆர்வம் இருந்ததனால்(பார்க்க அழகா இருக்கும் ஓவியங்களை பார்த்து வரைய முயற்சிப்பதுதானே ஆர்வம் என்பது? ) அதன் அடுத்தபரிமாணமான புகைப்படத்துறையை தெர்ந்தெடுத்து இன்றுவரை அதில் பயணிக்கிறேன். என் தொழில் சார்ந்த படைப்புக்களை காண  இங்கே சொடுக்கவும் http://sjdigitalphotography.blogspot.in/search/label/Children பல தலைப்புகளின்கீழ் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன நிதானமாக கண்டுமகிழுங்கள்.

2011 ஜனவரியில் அகலி(கை)கன் என்ற வலைத்தளம் தொடங்கி இன்றுவரை தொடர்கிறேன். மிகக்குறைவாகத்தான்எழுதி இருக்கிறேன் என்றாலும் கவிதைகள் பல நிறைவாய் இருப்பதாய் நண்பர்கள் சொல்கிறார்கள். ( அவங்கசொல்லமாட்டேங்கறாங்க அதான் அவங்க சொன்னதா நானே சொல்லிக்கிறேன். ) இல்லையா? ஆமாவா? என்பதைபடித்துப்பார்த்து நீங்களே சொல்லுங்கள்.

மற்றபடி வலைத்தளங்கள் அறிமுகம் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நாளை தொடங்கும்


மேலும் வாசிக்க...

Sunday, September 29, 2013

அனுசுயா ஆசிரியர் பொறுப்பை அகலிகனுக்கு தருகிறார்!!!


வணக்கம் வலை நண்பர்களே,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த அனுசுயா அவர்கள், தமது வலைச்சர பணியை ஆர்வமுடனும், அசத்தலான தலைப்புகள் மூலம் பதிவர்களை மிக அருமையாக அறிமுகம் செய்தும் நம்மிடமிருந்து மனநிறைவுடன் விடைபெறுகிறார். 
 
அனுசுயா எழுதிய பதிவுகள்:
அனுசுயா - தாராசுரம்,
அனுசுயா - அறம்
அனு - பு​கைப்படக் க​லை
அனு - ஆயக்க​லைகள்
அனு - பசு​மை

இவரது பதிவுகள் சுமார் 70 மறுமொழிகளை பெற்றும், 850 பக்க பார்வைகளும் பெற்றுள்ளது. அனுசுயா அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க அகலி(கை)கன் என்ற வலைப்பூவை எழுதிவரும் முரளி கிருஷ்ணன் அவர்களை அழைக்கின்றேன். சென்னை அம்பத்தூரில் டிஜிட்டல் ஸ்டுடியோ வைத்துள்ள இவர் கல்லூரி காலங்களில்(BA) பேச்சுப் போட்டிகளிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார். கட்டுரை பத்திகள் எழுதுவதை விட, கவிதைகள் எழுதவே இவருக்கு பிடிக்கும் என சொல்கிறார்.

முரளி கிருஷ்ணன் அவர்களை வருக வருக என வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நல்வாழ்த்துக்கள் அனுசுயா...
நல்வாழ்த்துக்கள் முரளி கிருஷ்ணன்

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்......

மேலும் வாசிக்க...

Saturday, September 28, 2013

அனு - பசு​மை

எனது வலைப்பூவில் நான் எழுதிய விசயங்களில் அதிகம் பூக்களைப் பற்றியது தான். எனக்கு மிகவும் பிடித்த பூக்களை பற்றி எழுதாவிட்டால்  எனது வலைசரம் பூர்த்தியே ஆகாது. கடந்த மாதம் நான் வால்பாறை சென்று இருந்தேன். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை தோட்டம் தான். ஊட்டியிலும் கண்டுள்ளேன் ஆனாலும் இங்கு சற்று அதிகம் போல தோன்றுகிறது. இதுவரை தேயிலை செடியை மட்டும் பார்த்து வந்த எனக்கு அதன் பூ மற்றும் காய் ஆகியவற்றை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.

 


மாதேவி  இவரின் வலைத்தளத்தில் எண்ணில் அடங்கா பயனுள்ள குறிப்புகள் பூக்களைப்பற்றி இருக்கின்றன.  உணவாகும் பூக்கள் ​போன்ற​வைகள் சுவாரசியமா​ன​வை.

அ​தே சமயத்தில் நம் சமூகத்தில் பசு​மை​யை மலரச்​ ​செய்வதில் திரு.வின்​சென்ட் அய்யா அவர்களின் மண், மரம், மழை, மனிதன்  வ​லைபதிவு மிக முக்கியமானதாகும். பல்​வேறு மூலி​​கைகள் பற்றியும், மாடியில் ​செடி வளர்ப்பது ​போன்ற​வை குறித்து மிக்க அனுபவசாலி. நமது சந்​தேகங்க​ளை தாராளமாக ​கேட்கலாம். ​பொறு​மையாக விளக்குவார்.
 
இ​தே ​போல ​வேளாண்​மை குறித்த ​செய்திக​ளை ​தொகுத்து வழங்கி வருவது வேளாண் அரங்கம்  ​வ​லைப்பதிவாகும். திரு.முருகபாண்டியன் அவர்களின் முயற்ச்சியால் ந​டை​பெற்று வருகிறது. இவ​ரே ​வேளாண்அரங்கம் மார்க்​கெட் ​பெயரிலான தளத்தில் பல்​வேறு நிறுவனங்கள் பற்றியும், ​வேளாண் ​பொருட்கள் பற்றியும் பட்டியலிட்டு வருகிறார். இவர்  கடைசி பெஞ்ச்   என்ற ​பெயரிலான வ​லைபதிவிலும் எழுதி வருகிறார்.
மேலும் வாசிக்க...

Friday, September 27, 2013

அனு - ஆயக்க​லைகள்

நம் கலாச்சாரத்தில் ஆயக்க​லைகள் அறுபத்து நான்கு என்பார்கள். அதனுள் ​கோலம் ​போடுவது ஒரு க​லையாக வருமா என்று எனக்கு ​தெரியவில்​லை. ஆனால் நண்பர் திரு.உதயன் அவர்களுக்கு இந்த க​லையின் மீது தீராத ஆர்வம்.

உதயம்.இன் என்ற தளத்தின் மூலமாக ​கோலக் கலைகள் பற்றிய தெரியாத விடயங்களை அதற்குண்டான படங்களுடன் விளக்கங்களும் (Image With Description) வரைவது எப்படி என்று அசைப் படங்களும் (Animation) செய்து ஒளிப்படங்களாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள கோலங்கள் அனைத்தும் Engineering Drawing முறைப்படி சரியான அளவில், சரியான வடிவத்தில் வரையப்பட்டு நல்ல தரமான படங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.


கலைகளுக்கான படத்தொகுப்பிற்கு (Traditional art image  Gallery) ,கலைகளுக்கான வீடியோத்தொகுப்புகளுக்கு (Arttube) - இங்கு அனிமேசன் சாப்ட்வேர் உதவியிடன் கோலம் எப்படி வரைவது என்று பயிற்ச்சி அளிக்க படுகிறது. மார்கழி மாதத்தில் ந​டை​பெற்ற ​கோலப் ​போட்டியி​னை இந்த சுட்டியில் காணலாம். உதாரணமாக மிக எளிதாக வ​ரையக்கூடிய​தை இங்​கே காணலாம்.
 

நமது க​லைகள் குறித்தான அறிமுகத்தில் மிக முக்கியமா நான் கருதுவது
மாணிக்க மாதுளை முத்துகள் என்ற ​பெயரில் எழுதி வரும் திரு.ஜி.ராகவன் அவர்களின் வ​லைபதிவாகும். அவர் புதிய யுக்தியாக கம்பராமயணத்​தை தனது குரலில் விளக்கம் ​கொடுத்து வ​லை​யேற்றி வருவ​தே தனிசிறப்பாகும்.
சொல்லோவியம் – பாகம் ஒன்று , சொல்லோவியம் – பாகம் இரண்டு இவ்விரண்டு ஒலி​தொகுப்புகளும் மிக சிறப்பான​வைகள்.இங்குள்ள த​லைப்புகளில் சில வில்லொடிந்த போது சீதையின் மனநிலை , கோசல விருந்து - கம்பராமாயணம் .

திரு.சி. ஜெயபாரதன்  அய்யா அவர்களின் நெஞ்சின் அலைகள் வ​லைபதிவில் வானவியல், அணுவியல் சார்ந்த கட்டு​ரைக​ளை படித்து மகிழலாம். அழகு தமிழில் ​தொடர்ந்து அறிவியல் கட்டு​ரைக​ளை இவர் மிக நீண்ட காலமாக எழுதி வருகிறார்.

திரு.என்.ராமதுரை அவர்களின் அறிவியல்புரம் எனும் வ​லைப்பதிவில் எளிய மு​​றையிலான அறிவியல் கட்டு​ரைக​ளை காணலாம். சிறுவர்களுக்கு தமிழில் எளிள கட்டு​ரைகள் படிக்க ஏதுவாக இருக்கும். ​பெரியவர்களுக்கும்
சு​வையான கட்டு​ரைகள் உண்டு.
மேலும் வாசிக்க...

Thursday, September 26, 2013

அனு - பு​கைப்படக் க​லை


இன்​றைய நவீன ​தொழில் நுட்ப உலகில் யாவராலும் தவிர்க்க இயலாது விரும்பி கற்க மு​னையும் ஒரு க​லை பு​கைப் படக் க​லை எனலாம். ​தொழில் நுட்ப ரீதியாக சில விசயங்கள் ​தெரிந்து ​கொண்டால் வாழ்வில் மறக்க இயலாத தருணங்க​ளை என்​​றென்றும் கண்டு மகிழலாம், இந்த து​றையி​னை குறித்து நம் நண்பர்கள் நடத்தும் வ​லைபதிவு PiT என்று சுருக்கமாக அ​ழைக்க படும் photography-in-tamil வ​லைதளம் ஆகும்.


இந்த வ​லைதளத்தில் பல்​வேறு த​லைப்புகளில் மாதாந்திர ​போட்டிகள் நடத்த பட்டு ஊக்குவிக்க படுகிறது. ​கோ​டை என்ற த​லைப்பில் ந​டை​பெற்ற ​போட்டியில் மூன்றாமிடம் வந்த ஒளிபடம்...
நம் ​போன்றவர்களுக்காக கற்றுக்​கொள்ள நி​றைய விசயங்கள் குறித்தான கட்டு​ரைகள் காணக்கி​டைக்கின்றன. சில த​லைப்புகள்.. புகைப்படக்கலை பொதுவான தகவல்கள் ,படம் செய்ய விரும்பு - 1 - fstop,shutter speed,aperture, படம் செய்ய விரும்பு - 2 - Focal length,DOF , படம் செய்ய விரும்பு - 3 - White balance

எல்லாரும் தான் எடுத்த படங்க​ளை பகிர்ந்து ​கொள்வார்கள். நா​னோ என்​னை எடுத்ததில் பிடித்தமான படத்​தை இங்​கே பகிர்ந்து ​கொள்கி​றேன்..:) :)
 



ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம் மிக முக்கியமான ஒன்றாகும். இவ​ரே ஒளிப்படக்க​லை வ​லைதளத்திற்க்கும் முக்கியமானவர். இவரு​டைய தளத்தில் நி​றைய பதிவுகள் அவரு​டைய ஒளிபதிவு பற்றி அனுபவங்க​ளையும்,
ஒளிப்படங்க​ளையும் ​கொண்டதாக இருக்கும். தவற விடகூடாத வ​லை பதிவுகளில் இவரு​டையதும் ஒன்று.

உதயனின் அவர்களின் உதயனின் உதார்கள் வ​லைபதிவானது தமிழகத்தினுள் பயணித்து எடுக்க பட்ட பயண ஒளிபடங்களால் நிரம்பியது. ​பெரும்பாலும் இவரு​டைய படங்கள் எல்லா​மே நமது முன்​னோர்கள் வசித்த இடங்க​ளை ​நோக்கி பயணிப்பதாக​வே அ​மைந்திருக்கும்.

விழியன் அவர்களின் விழியன்பக்கம் வ​​லைபதிவிலும் இவரு​டைய படங்க​ளை காணலாம்.
Ganga Aarthi – Kasi ,


   
மேலும் வாசிக்க...

Wednesday, September 25, 2013

அனுசுயா - அறம்

  
       இலக்கிய உலகில் சமகாலத்தில் மிக முக்கிய ஆளு​மை திரு.​ஜெய​மோகன். அவரு​டைய விஷ்ணுபுரம், பின்​தொடரும் நிழலின் குரல் ​போன்ற​வைகள் மன​தை கவர்ந்தாலும்அறம் சிறுக​தை ​தொகுப்​பே என்​றைக்கும் மன​திலும், உணர்விலும் நி​றைந்திருப்ப​வைகள். க​தைகள் அவரு​டைய தளத்தில் ​வெளியாகும் ​போ​தே ஆர்வத்துடன் படித்து முடித்திருந்தாலும் பின்னர் நடிகர் கமலஹாசன் ஒரு ​தொ​லைகாட்சி ​பேட்டியில் சிலாகித்து சிபாரிசு ​செய்த ​போதுதான் அந்த ​​தொகுப்பின் வீச்சு இன்னமும் நன்றாக புரிந்தது. அறம் சிறுக​தை ​தொகுப்​பை இ​ணையம் வழி​யே வாங்க  https://www.nhm.in/shop/100-00-0000-230-5.html ​பொதுவாக இலக்கியத்தில் அந்த ​கோணம், இந்த ​கோணம், பின்நவீனத்துவம் என்பது ​போல விளக்குவார்கள். அவ்வாறின்றி நான் ​நேரி​டையாக -தட்​டையாக- மட்டு​மே ​பேசுகி​றேன்.

இந்த க​தையில் ஆச்சியாக பட்டவள் ​செய்யும் காரியமானது இன்று நி​னைத்து பார்க்க​வே இயலாத ஒன்றாக உள்ளது. தன் வாரிசுகள் எந்த பழிபாவத்திற்க்கும் ஆளாகாது நல்லவர்களாக வளர ​வேண்டும் என்பதான தாய்​மையின் உணர்ச்சி ​வெளிபா​டு மிக அரு​மை. இன்​றைக்காக இருந்தால் அது ஆண்களின் வரவு-​​செலவு என்று ​சொல்லி கழண்டு ​கொண்டு இருப்பார்கள்.

ஆச்சி அப்டியே போட்டது போட்டபடி விரிச்ச தலையும் கலைஞ்ச சேலையுமா நேரா போயி கடைமுன்னாடி நின்னிருக்கா. புலவனோட பணத்த மிச்சம் மீதி இல்லாம இப்பவே குடுக்கணும்னு சொல்லியிருக்கா… நெனைக்கவே சிலுக்குது. எப்டி இருந்திருப்பா. அந்தக்காலத்திலே ஒரு ஆச்சி மதுரய எரிச்சாளே, அவ தானே இவ? எல்லாம் ஒரே வார்ப்பில்ல? செட்டியார் நடுங்கிப்போயி ’இல்லம்மா குடுத்திடறேன்… சத்தியமா நாளைக்குள்ள குடுத்திடறேன்’னிருக்கார். ’இன்னிக்கே குடு, இப்பவே குடு. நீ குடுத்த பின்னாடி நான் எந்திரிக்கிறேன்’னு சட்டுன்னு நேராபோயி தார் ரோட்டிலே சப்புன்னு உக்காந்திட்டா. நல்ல கறுத்த நெறம். நெறைஞ்ச உருவம்.நாலாளு சைஸ் இருப்பா. முகத்திலே கனமா மஞ்சள். காலணா அகலத்துக்கு எரியறாப்ல குங்குமம். பெருக்கிப்போட்ட தாலி சும்மா வாகைநெத்து குலைகுலையா விளைஞ்சதுமாதிரி கழுத்து நெறைஞ்சு …அம்மன் வந்து முச்சந்தியிலே கோவில்கொண்டது மாதிரில்ல அவ இருந்தா? ஒரு வார்த்தை சொல்லமுடியாது. சங்கைக் கடிச்சு ரத்தம் குடிச்சிருவா…. செட்டி எந்திரிச்சு ஓடினான். பேங்கிலே அவ்ளவு பணம் இல்லை… கைமாத்துக்கு ஓடினான். தெரிஞ்சவங்க காலிலே விழுந்தான். பணம் தெரட்ட சாயங்காலமாச்சு. அதுவரை அப்டியே நடுரோட்டிலே கருங்கல்லால செஞ்ச செலை மாதிரி கண்ணமூடி உக்காந்திட்டிருக்கா. தீ மாதிரி சித்திரமாச வெயில். நல்ல அக்கினி நட்சத்திரம்யா அது… தார் ரோடு அப்டியே உருகி வழியுது. செட்டி டாக்ஸிய புடிச்சுகிட்டு நேரா எங்க வீட்டுக்கு வந்தான். நான்தான் பொணமா கெடக்கறேனே. என் பொஞ்சாதி காலிலே பணத்தைக்கொட்டி ‘என் குடும்பத்த அழிச்சிராதேன்னு உன்புருஷன்கிட்ட சொல்லு தாயீ…என் கொலத்துக்கே வெளக்கு இப்ப தெருவிலே உக்காந்திருக்கா… அவன் பணம் முச்சூடும் வட்டியோட இந்தா இருக்கு’ன்னு சொல்லிட்டு அதே காரிலே திரும்பி ஒடினான். நேராபோயி அவ முன்னாடி துண்ட இடுப்பிலே கட்டிகிட்டு ‘என் கொலதெய்வமே, எந்திரி .நான் செய்யவேண்டியத செஞ்சுட்டேன் தாயீ’னு சொல்லி கதறிட்டான். நாலுபேரு சேந்து அவள தூக்கினாங்களாம். சேலைபாவாடையோட தோலும் சதையும் வெந்து தாரோட சேர்ந்து ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க’

சோற்றுக்கணக்கு [சிறுகதை]
என் ​றைக்கும் உணவி​னை மிச்சம் ​வைத்து, வீணாக்குபவர்​க​ளை காணும் ​
போ​தெல்லாம் நி​னைவில் வரும் க​தை. இந்த க​தையில் பலருக்கு பல இடங்கள் பல காரணங்களால் பிடிக்க கூடும். ஆனால் எனக்கு பிடித்தது..

அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.

வணங்கான் [சிறுகதை] -1 , வணங்கான் [சிறுகதை] 2 
​பொதுவா இந்த க​தை பிடித்தமான ஒன்று.

யானைடாக்டர் [சிறுகதை] -1 , யானைடாக்டர் [சிறுகதை] 2 , யானைடாக்டர் [சிறுகதை] 3        
ஒவ் ​வொரு வரியும் நி​னைவில் நிற்கும் க​தை. யா​னை டாக்டர் ​போல இப்படியும் சில​ரேனும் இருப்பதால் தான் காடு, கழனிகள் ​செழிக்க ம​ழை ​பெய்கிற​தோ என்று சில சமயம் நி​னைத்தது உண்டு. இந்த க​தை மட்டும் இலவச பிரசுர ​வெளியீடாக வந்த​தை ​பெற்று பல நண்பர்களுக்கும் ​கொடுத்து படிக்க ​செய்ததுண்டு. எனக்கு ​தெரிய ஒரு சிறுக​தையானது இப்படி தனி​யே ​பொது நலன் கருதி ​வெளியானது இந்த க​தை தான். அ​னைத்து வரிகளு​மே பிடித்த வரிக​ளே..

நான் பள்ளிக்கூடத்திலயும் காலேஜிலயும் இதையெல்லாம் படிக்கலையே. எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு… என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க

நூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] -2 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] 3 , நூறுநாற்காலிகள் [சிறுகதை] 4    
மிகவும் தாழ்த்தபட்ட சமூகத்தலிருந்து முன்​னேறி வரும் புதிய த​லைமு​றை மகனுக்கும், பழ​யை நி​னைவுகளில் அல்லலுறும் தாய்​மைக்குமான பாசப்
பி​ணைப்பு ​போராட்டம். வார்த்​தைகளால் வர்ணிக்க இயலாதது.. :( :(


ஓலைச்சிலுவை [சிறுகதை] -1 , ஓலைச்சிலுவை [சிறுகதை] -2 , ஓலைச்சிலுவை [சிறுகதை] 3   

இந்த சிறுக​தையில் ஒரு வரிகூட தவறவிடக்கூடாதது. அந்தளவு பிடித்தமான க​தை.

இலக்கியம் என்றா​லே நான் தவறாது நாடும் ஒரு வ​லைபதிவு அழியாச் சுடர்கள் . பின்​னே பின்வரும் இத்த​னை இலக்கிய ஆளு​மைகள் பற்றி ஒ​ரே இடத்தில் படிக்க கி​டைப்பது என்றால் சும்மாவா... ​தொடர்ந்து வளர்ந்து வரும் வ​​லைபதிவு இது. வாழ்க இவர்கள் ​​சே​வை.
அ. மாதவையா , அ.முத்துலிங்கம் , அ.ராமசாமி , அசோகமித்திரன் , அபி , அம்பை , அறிமுகம் , ஆ. மாதவன் , ஆதவன் , ஆத்மாநாம் , ஆர்.சூடாமணி , ஆவணப்படம் , இந்திரா , பார்த்தசாரதி , இமையம் , உமா மகேஸ்வரி , உமா வரதராஜன் , எக்பர்ட் சச்சிதானந்தம் , என். டி. ராஜ்குமார் , எம்.ஏ.நுஃமான் , எம்.டி.முத்துக்குமாரசாமி , எம்.வி. வெங்கட்ராம் , எஸ். வைத்தீஸ்வரன் , எஸ்.ராமகிருஷ்ணன் , க.நா.சு , கடித இலக்கியம் , கந்தர்வன் , கரிச்சான் குஞ்சு , கலாப்ரியா , கலாமோகன் , கல்யாண்ஜி , கி ராஜநாராயணன் , கி. அ. சச்சிதானந்தம் , கிருஷ்ணன் நம்பி , கு. அழகிரிசாமி , கு.ப.ரா , கோணங்கி , கோபிகிருஷ்ணன் , கௌதம சித்தார்த்தன் , ச.தமிழ்ச்செல்வன் , சமயவேல் , சம்பத் , சா.கந்தசாமி , சாரு நிவேதிதா , சார்வாகன் , சி. மோகன் , சி.சு. செல்லப்பா , சி.மணி , சிட்டி , சு.வெங்கடேசன் , சுகுமாரன் , சுஜாதா , சுந்தர ராமசாமி , சுப்ரபாரதிமணியன் , சுரேஷ்குமார இந்திரஜித் , சூத்ரதாரி , சோ.தர்மன் , ஜி. நாகராஜன் , ஜி.குப்புசாமி , ஜெயகாந்தன் , ஜெயந்தன் , ஜெயமோகன் , ஞானக்கூத்தன் , தஞ்சை பிரகாஷ் , தமிழவன் , தமிழில் முதல் சிறுகதை , தி. ஜானகிராமன் , திசேரா , திலீப் குமார் , தேவதச்சன் , தேவதேவன் , தோப்பில் முஹம்மது மீரான் , ந. முத்துசாமி , ந.பிச்சமூர்த்தி , நகுலன் , நாஞ்சில் நாடன் , நீல பத்மநாபன் , நேர்காணல் , ப.சிங்காரம் , பசுவய்யா ,பவா செல்லதுரை , பா. செயப்பிரகாசம் , பாதசாரி , பாமா , பாரதி மணி , பாவண்ணன் , பி.எஸ்.ராமையா , பிரபஞ்சன் , பிரமிள் , பிரம்மராஜன் , புகைப்படங்கள் , புதுமைப்பித்தன் , பூமணி , பெருமாள்முருகன் , மகாகவி பாரதியார் , மனுஷ்யபுத்திரன் , மா. அரங்கநாதன் , மாலன் , மு.சுயம்புலிங்கம் , மௌனி , யுவன் சந்திரசேகர் , யூமா வாசுகி , ரமேஷ் : பிரேம் , ரவிசுப்ரமணியன் , ராஜ மார்த்தாண்டன் , ராஜா சந்திரசேகர் , ராஜேந்திர சோழன் , லஷ்மி மணிவண்ணன் , லா.ச. ராமாமிருதம் , வ.கீதா , வ.வே.சு ஐயர் , வண்ணதாசன் , வண்ணநிலவன் , வல்லிக்கண்ணன் , விக்ரமாதித்யன் நம்பி , வித்யாஷ‌ங்கர் , விமலாதித்த மாமல்லன் , விருதுகள் , வெங்கட் சாமினாதன் , வேதசகாய குமார் , வேல.இராமமூர்த்தி , வைக்கம் முஹம்மது பஷீர் , ஷங்கர்ராமசுப்ரமணியன் , ஸில்வியா , ஹெப்சிபா ஜேசுதாசன்

இலக்கிய புத்தகங்கள் சம்பந்தமான விமர்சனங்கள், அறிமுகம் ​போன்ற​வைகளுக்காக படிக்கும் மற்​றொரு வ​லைபதிவு சிலிகான் ஷெல்ஃப் . தனிப்பட்ட மு​றையில் அவரு​டைய கருத்துக​ளை, விமர்சனங்க​ளை அடக்கிய ஒரு வ​லைபதிவாகும்.
​மோகன்தாஸ் அவர்களின்  Being Mohandoss . இவரு​டைய சில சிறுக​தைகள்...  , ,
வா.மணிகண்டன் அவர்களின் நிசப்தம் வ​லைபதிவும் ​தேடிப் படிக்கும்
வ​லைபதிவுகளில் ஒன்​றேயாகும்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது