07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 31, 2011

புதன் புண்ணியம் தேடட்டும்

மனிதர்களே இல்லாத உலகத்தில் நாம் சென்று வாழ்ந்து விடக் கூடாதா  என நினைப்பவர்கள் இவ்வுலகில் உண்டு. மனிதர்கள் மனிதாபிமானம் தொலைத்துவிட்டார்கள் என்கிற குறைபாடு அதிகமே உண்டு. ஆனால் மனிதர்களுடன், அவர்களது நிறை குறைகளுடன் வாழும் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம். காட்டில் தவம் செய்ய செல்வது, சந்நியாசம் கொண்டு வாழ்வது மிகவும் கடினம் என்றால் அதைவிட மிகவும் கடினம் குடும்பம் என ஒரு கட்டுகோப்புடன் வாழ்வதுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் எத்தனை சிறப்புடையது. ஏதாச்சும் செய்யணும் பாஸ் என அழைப்பு விடுத்த விதூஷ் மனதில் நீங்காத இடம் பெற்றார் என்றால் மிகையாகாது. இவரது எழுத்துகள் மிகவும் அருமை. 

மீண்டும் அதே மனிதர்கள். எத்தனைவிதமான மனிதர்கள் உலகில் உண்டு என்பதை மிகவும் அருமையாகவே படம் பிடித்து வருபவர்கள் மிகவும் குறைவு. நமக்கு ஏற்றமாதிரிதான் பிறர் அமையவேண்டும் என நினைக்கும் மக்கள் உலகில் அதிகம். பிறருக்கு ஏற்றமாதிரி வாழ்ந்துவிட இருப்பவர்கள் ஒன்று கட்டயப்படுத்தபட்டு இருப்பார்கள், அல்லது சூழ்நிலை கைதி என சொல்லிக் கொள்வார்கள். ஆனால் வாழ்க்கை அதுவல்ல. இவரின் பதிவுகள் ஆயிரம் கதைகள் சொல்லும். ஒவ்வொன்றும் அதி அற்புதம். என்னை பலமுறை யோசிக்க வைத்தவர். பாமரர்கள் எப்பொழுதுமே அதி புத்திசாலிகள் தான். வானம்பாடிகள் என மனதில் நீங்காத இடம் பெற்ற வலைப்பூ இது. 

மனதில் உள்ளதை சொல்ல தைரியம் வேண்டும் என்பார்கள். ஆனால் பல நேரங்களில் நமக்கு வாய்ப்பதில்லை. மனதில் இருப்பதை எழுத்துகளில் வேறு வடிவத்தில் வடித்து வைக்கும் திறனும் பலரில் உண்டு. ஆனால் தனக்கு ஏற்பட்டது இதுதான் என சொல்ல நிச்சயம் துணிவு வேண்டும். அந்த வகையில் தனது செல்ல குழந்தையை பற்றி அருமையாய் எழுதி வருபவரான இவர் சமூக அக்கறை உடைய ஒரு பதிவராகவே எனது கண்களுக்கு தீபா தெரிந்தார். ஒரு புன்னகை பதிவு இது. 

வானத்தில் கோட்டை கட்டுவது. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போன்றே இவரது ஆசைகள் எனக்கு தெரியும். அதாவது பதிவர்கள் மூலம் பல விசயங்கள் சாதிக்க இயலும் என்கிற அசையாத நம்பிக்கைதான் அது. ஆனால் எனக்கு எதற்கு இந்த வீண்வேலை, வீண் நினைப்பு என்றே தோன்றும். உண்மையிலேயே நினைத்து பார்க்கும்போது பல விசயங்கள் சாத்தியம் என்றே தோன்றுகிறது. சில விசயங்கள் சாத்தியமானது அனைவரும் அறிந்ததுதான். தமிழா தமிழா என இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை நிச்சயம் பாராட்டுக்குரியது. 

ஆண்களுக்கு மட்டுமே தைரியம் என சொல்லிவைத்த நாடு இது. பெண்கள் என்றால் மிகவும் அடங்கித்தான் இருக்க வேண்டும் என கோடு போட்டு வைத்த நாடு. ஆனால் மிகவும் வெளிப்படையாக, கலகலப்பாக பதிவுகளில் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக, கோபம் கலந்த வேகத்துடன் தீர்க்கமாக சொல்லும் அதிசயம் இந்த பதிவரிடம் கண்டேன். பெயர் என்னவோ எனக்குப் பிடித்த மாமா மகள் பெயராக இருக்கவும் ஒருமுறை வலைப்பக்கம் சென்று பார்க்க ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சிறப்பு. நிச்சயம் இவரை பாராட்டலாம். 

இவரைப் பற்றி முன்னரே எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். எனக்கு மிக மிக பிடித்தமான பதிவர். மனதின் எண்ண ஓட்டத்தை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் அழகோ அழகுதான். மனிதத்தை எப்படி வானம்பாடிகள் அவர்கள் வேறு விதத்தில் படம் பிடிக்கிறார்களோ அதைப்போலவே மற்றொரு கோணத்தில் படம் பிடிக்கும் அழகு தனி. எனக்கு பிடித்த பதிவு எனது பதிவில் சுட்டி இருந்தாலும் இங்கே வேறு ஒரு பதிவு. இவரது எழுத்துகளால் தமிழ் தினமும் புதிய உதயம் பெறத்தான் செய்கிறது. 

கலக்கல் பதிவர். கலக்கல் பின்னூட்ட காரர். இறை பக்தி அதிகம் உடையவர். திருநெல்வேலி மண்ணுக்கு சொந்தக்காரர். என்னை பல விதத்தில் ஆச்சர்யம் அடைய செய்தவர். வாசிக்கும் அனுபவமே மிகவும் உறுதுணை எழுத்துக்கு. இவரது வாசிப்பு அபாரம். எழுத்துகள் களைகட்டும். பல இடங்களை சுற்றிப் பார்த்து அதில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக சொல்வதில் வல்லவர். இப்படித்தான் அழகாக சொல்கிறார் சித்ரா. கொஞ்சம் வெட்டி பேச்சு என சொன்னாலும் மிகவும் வித்தியாசமான பேச்சுதான். 

இவரை எப்படி விட்டுவிடுவது? இன்னும் நினைவில் இருக்கிறது இவரது இயற்கை நேசி எனும் வலைப்பூ. மிகவும் வித்தியாசமான சிந்தனைகாரர். பெயரை பார்த்ததும் எனக்கு கூட அட என தோன்றியது. தெகா என செல்லமாக அழைக்க அத்தனை அழகுதான். இவரது ஒவ்வொரு பதிவும் பல அருமையான கதைகள் சொல்லும். படம் பிடிப்பதிலும் வல்லவர். ஏன் இப்படி என கேட்கும் விதத்தில் பல விசயங்கள் மிகவும் அவஸ்தைப்படும். 

அடடா, இடுகைகளை பற்றி அல்லவா நான் எழுதி இருக்க வேண்டும், ஆனால் இடுகை இட்டவர்களை பற்றி அல்லவா எழுதி விட்டேன். ஆனால் அது அப்படித்தான். ஏனெனில் ஒரு இடுகை மட்டுமே ஒருவருக்கு அறிமுகம் தந்துவிடாது. ஒவ்வொரு இடுகையும் அவர்களுக்கு அறிமுகம் ஆகவேண்டும். மனதில் நீங்கா இடம் பிடித்த மின்மினிபூச்சிகள் ஷக்திபிரபா. திருவண்ணாமலை மட்டுமல்ல பல பதிவுகள் மிகவும் சிறப்பு

இத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. விட்டுப் போகாத வியாழனில் மனம் தொட்டு சென்றவர்களை நிச்சயம் எழுதுவேன். வலைச்சரத்தின் விதிமுறைக்கு அப்பாற்பட்டு எழுதி இருப்பின் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். 
மேலும் வாசிக்க...

கிட்டவே கிட்டாத புதன்

'பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது' இதுதான் மூதாதையார்கள் சொல்லித் தந்த பாடம். பூமியில் தாதுப் பொருட்கள் ஒரு அளவுக்குள் கொட்டி கிடப்பதை கண்டு கொண்டார்கள். எப்படியாவது அந்த பொன்தனை தோண்டி எடுத்துவிட முடியும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அதே வேளையில் வானத்தை பார்த்தார்கள். அப்பொழுதெல்லாம் பூமிதான் மையம், மற்ற கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன என்கிற ஒரு அறிவுணர்வு இருந்தாலும் நம் மூதாதையர்கள் சூரியனை மையமாகவும், முதன்மையாகவும் வைத்து இருந்தார்கள் என்பது ஒரு உண்மையான விசயம். அப்படி வைத்திருந்தபோதுதான் புதன் என்கிற கோளானது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், வெப்பத்தில் தகதகத்து கொண்டிருப்பதாலும் புதன் கிடைக்கவே கிடைக்காது என்பதுதான் அவர்களின் ஒரு அறிவு. வெள்ளி என்றால் ஒரு நட்சத்திரம் என பொருள்படும். வெள்ளி மிகவும் வெப்பமான கோள் என்பதால்தான் அப்படி ஒரு பெயர் எனவும் கொள்ளலாம். அப்படித்தான் சில நேரங்களில் பெரும் பொக்கிசங்கள் நமக்கு கிடைக்காமலே போய்விடுகின்றன. அப்படிப்பட்ட அறிய பொக்கிசங்கள் பற்றிய அருமையான தொடரை எழுதிவரும் நண்பர் ரத்தினகிரி அவர்களின் அண்டத்தின் அற்புதங்கள் மிகவும் குறிப்பிட தகுந்தவை. 

நேற்றைய பொழுது இந்தியா மட்டுமல்ல பெரும்பாலான நாடுகளில் வாழும் இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டில் மூழ்கி இருந்த நேரம் எனலாம். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்ளலாம். விளையாட்டுகள் மட்டுமல்ல பல்வேறு திறன் படைத்த ஏ ஆர் ஆர் அண்ணன் எழுதும் ஒவ்வொரு விசயமும் மிகவும் சுவாரஸ்யமானவை

சில நேரங்களில் இவர்கள் எல்லாம் எதற்கு எழுத மறுத்து ஒதுங்கி விடுகிறார்கள் என நினைக்கும் போது வருத்தம் மேலிடத்தான் செய்யும், ஆனால் அதுதான் அவர்களின் நிலை என பார்க்கும்போது அதற்கான விசயத்தை அறிந்து கொள்ள இயலும். அப்படித்தான் மிகவும் அட்டகாசமான ஒரு பதிவு ஒன்று உண்டு. பத்மஜா தோழியின் பகவத் கீதை. நண்பர் மோகனின் மணல் சிந்தனை. நண்பர் மகுடதீபனின் எண்ணக் கலாபங்கள், மற்றும் சாவா கலை நெறி. 

நண்பர்கள் என்றால் ஒவ்வொரு நிலையிலும் வருவார்கள், போவார்கள் என்பதல்ல. எப்பொழுதும் இருப்பவர்கள் நண்பர்கள் என்கிற பாதையை காண்பித்த மன்னைகோசை அவர்களின் அழகிய பதிவு இது. அவர் இப்போது நம்முடன் இல்லை. எழுதுகிறோம் என்பதற்காக எழுதாமல் எப்படியெல்லாம் எழுதவேண்டும் என்கிற பாதையை காண்பிக்கும் அத்தனை அழகிய சொல்லாடலை விவரிக்கும் பாங்கு. ஜலசயனன் எனும் இவரது பெயரை தேடி இவரது எழுத்தை படித்தால் தமிழ் மணக்கும். 

தனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சந்தோசம் எதுவும் இல்லை. தன்னிடம் பல விசயங்களை கேட்பவர்களுக்கு உதவியதால் அதை எழுதினால் என்ன என எழுதிய கலை மிகவும் பாராட்டுக்குரியது. நம்மை பற்றி நமக்கு என்ன தெரியும் என்கிறார் இவர் தான் நிஷா. 

இவர் வலைப்பூவிற்கு வருவதற்கு முன்னரே எனக்கு பழக்கம். இவரது தமிழ் அத்தனை அருமை. இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் தமிழ் பெற்றுக் கொள்ளும் பெருமை. சுந்தரா சகோதரியின் எண்ணங்களை அவரது வலைப்பூவில் சென்று காணலாம், இங்கும் காணலாம்.  கவிதை பற்றி மேலும் அறிந்து கொள்ள பல கவி சித்தர்களை அங்கே காணலாம். 

இத்துடன் நிறுத்துவதில்லை இந்த கிடைக்கவே கிடைக்காத புதன். வலைப்பூவில் என்னை ஒருமுறை அல்ல பலமுறை யோசிக்க வைத்த கிட்டவே கிட்டாத வலைப்பதிவர்களை நான் குறிப்பிடாமல் போனால் அது புதனுக்கு மட்டுமல்ல எனக்கும் அழகல்ல. விரைவில் அடுத்த பகுதி வரும். 


மேலும் வாசிக்க...

Wednesday, March 30, 2011

செவ்வாய் முடிந்தும் இறைவன்

சுத்தம் சுகம் தரும், சரி சரி சோறு போடும். பரிசுத்த ஆவி. நாம் சுத்தமாக இல்லாவிட்டால் நம்மை இறைவனிடம் ஒப்புவித்தல் கூடாது என்போர் உளர். இதில் இறைவனை எப்படியெல்லாம் அணுகவேணும் எனும் முறைகள் உண்டு. ஆனால் இப்படியும் கேள்வி எழுப்பலாம் என எழுதிய கல்வெட்டு 2005 வருடத்தில் இருந்து வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரது பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் விசயங்களுக்குள் முகவரி தொலைத்து வாழும் மனிதர்கள் தான் நாம். வெளிப்படையாக எதுவும் பேசினால் அநாகரிகம் ஆகிவிடும். கனியிருப்ப காய் கவர்ந்தற்று என சொன்னாலும் காய் தான் கனியானது என்பதுதான் உண்மை. 

இந்த வலைப்பூ பற்றி நான் குறிப்பிடாமல் போனால் அது சரிவராது. எத்தனை விசயங்கள் அலசப்படுகின்றன. இறைவன் என்பவருக்கு எதற்கு அடையாளம்? ஆனால் அடையாளம் கொடுத்து சுருக்கி கொண்டோம். கடவுள் வாழ்த்து எழுதிய திருவள்ளுவர் சற்று யோசித்து இருக்கலாம். வாழ்த்து பாடினால் தான் கடவுள் ஏற்று கொள்வாரா? இல்லவே இல்லை. மேலும் பெயர்களை குறிப்பிடாமல் (இந்திரன், ஆதி) விட்டிருந்தால் எந்த கடவுள் எனும் பிரச்சினை வந்திருக்காது. இதோ ஒரு அலசல் கண்ணபிரான் பார்வையில்

இது ஒரு உலகின் புதிய கடவுள். மதம் சாராத இறைவன் ஒன்று இருந்தால் எத்தனை சுகமாக இருந்திருக்கும்? ஆனால் மதம் சார்ந்த இறைவன் என்பது மாற்ற இயலாத ஒன்றாகிப் போனது. இறைவன் எப்படியெல்லாம் ஒருவருக்கு தோன்றும் என மிகவும் அழகாகவே ஒரு சின்ன தொடர் ஒன்று இந்த வலைப்பூவில் உண்டு. 

அன்புதான் இறைவன் எனும் சொல் வழக்கு உண்டு. அதை புரிந்து கொள்ள சொல்லும் பல வலைப்பூக்கள் உண்டு. அதில் ஒன்றுதான் இது. 

உருவ வழிபாடு அவசியமா, அவசியம் இல்லை என்பதல்ல கேள்வி. எதற்கு வழிபாடு என்பதுதான் நாம் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. சில பதிவுகளின் மூலம் பல விசயங்களை பகிர்ந்து கொண்ட சாதாரணமானவரின் வலைப்பூவில் இந்த உருவ வழிபாடு குறித்த சிந்தனை உண்டு. 

நிகழ்காலத்தில் சித்தர்கள் கூட இறைவனாக சித்தரிக்கப்படுகிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த சித்தர்கள் பற்றிய ஒரு வலைப்பூ மிகவும் அருமை.  நூறு வயது வாழலாம் எனும் அறிவுரையை விட மிகவும் அதிகமாகவே சொல்லப்பட்டு இருக்கிறது. 

செவ்வாய் அன்று இறைவன் பற்றிய விசயம் இத்துடன் நிறைவுறுகிறது என சொன்னாலும் விடுபட்டு போன எத்தனையோ வலைப்பூக்கள் இருக்கிறது என்பதை நான் ஏன் மறுக்கப் போகிறேன்?!


மேலும் வாசிக்க...

Tuesday, March 29, 2011

செவ்வாயன்று இறைவன்

'செவ்வாய் வெறும் வாயாகிப் போனது' என சொல்வார்கள். காரணம் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகம் உயிரினங்களை கொண்டிருந்ததாக ஒரு கணக்கு உண்டு. அது உண்மையா என்பதை நிரூபணம் செய்ய எந்த ஒரு ஆதாரமும் கிடைத்தபாடில்லை. அதுபோலவே இறைவன் வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி இறைவன் எங்கே எனும் ஆதாரம் இன்னும் இங்கே கிடைத்தபாடில்லை என்றாலும் மனது வைத்தால் இறைவன் தெரிவார் என சொல்லலாமோ. இதோ கோவி கண்ணன் அவர்களின் இறைவன் பற்றிய பார்வை. அவரது வலைப்பூவின் பெயர் காலம். மதங்கள், மனிதாபிமானங்கள் என பலவித கலவையுடன் அவர் எழுதி வரும் விதம் பாராட்டுக்குரியது. இருமுறை தமிழ்மண விருதுகள் வென்றவர். 

சத்தியத்தின் வழி நிற்க தெரிந்த மனிதர்கள் இப்போதெல்லாம் மடையர்களாகவே கருதப்படுகிறார்கள். நேர்மை, நியாயம் என்பதெல்லாம் இன்றைய உலக சூழலுக்கு மட்டுமல்ல என்றைய உலக சூழலுக்கும் பொருந்தி வருவதில்லை. உண்மையாகவே இருப்பவரே இறைவனுக்கு உகந்தவர் என எடுத்துக் கொண்டால் இறைவன் அவதாரங்கள் கூட தோற்றுப் போய்விடும். வாய்மை எனப்படுவது யாதெனின் தீமை இலாத சொலல். யாருக்கு தீமை இல்லாமல் போக வேண்டும், யாருக்கு தீங்கு நேர வேண்டும் என்பதை எவர் தீர்மானிப்பது. அற்புத கதைகளுடன் ஒரு அழகிய பதிவுதனை படிக்க இதோ கபீரன்பனை அணுகுங்கள். அவரின் வலைப்பூவின் பெயர் கபீரின் கனிமொழிகள். 

மெய்ப்பொருள் என சொல்லும்போதே அதில் பொருள் ஒட்டி இருக்கிறது. பொருள் அல்ல இறைவன். இறைவன் பொருள் எனும் சமன்பாட்டில் ஒருபோதும் அமர்வதில்லை. இறைவன் நமது எல்லைக்கு உட்பட்டால் அது இறைவனே அல்ல. ஆனால் இதோ நூருல் அமீன் அவர்கள் தனது புல்லாங்குழல் வலைப்பூவில் அருமையாக எழுதி எனது எண்ணத்தை மாற்ற சொல்லும் வரிகள் தான் எத்தனை அழகு. ''இன்ன பொருள் என சொல்ல முடியாத ஆன்மாவின் இருப்பே அந்த ஆன்மாவை வழங்கிய ஒப்புவமை இல்லாத இறைவனின் இருப்புக்கு மகத்தான சாட்சியாக இருக்கின்றது. ஆன்மா என்னும் அகக்கண்ணைக் கொண்டு தான் நாம் அனைத்தையும் அறிகின்றோம் என முந்திய இடுகையில் பார்த்தோம். இமாம் கஸ்ஸாலி போன்ற ஆன்மீக அறிஞர்கள் நமது “புறக்கண்களுக்கு” பார்க்கும் திறன் இருந்தாலும் சூரியனின் வெளிச்சம் ஒளி வழங்கி உதவுவது போல இந்த ஆன்மீக பார்வையை வழங்கும் ஆன்மா என்னும் அகக்கண்ணுக்கு வெளிச்சம் வழங்கும் சூரியன் என இறைவேதத்தை கூறுகின்றார்கள்.''

செவ்வாயன்று இறைவன் இன்னும் வளரும்.



மேலும் வாசிக்க...

Monday, March 28, 2011

திங்களன்று அதீத கனவுகள்

விடைபெற்று சென்ற ஆசிரியர் ராஜா ஜெய்சிங் அவர்களின் தந்தையாரின் மறைவு செய்தியை படித்தபோது திடுக்கென்று இருந்தது. மனதில் இனம் புரியாத வலி. அவர்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

இன்னும் நான்கு வருசம், ஐந்து வருசம் என சொல்லிக்கொண்டிருக்கும் எனது தந்தை மனதில் நடமாடுகிறார். பதின்மூன்று வருடங்கள் முன்னர் என்னை தவிக்கவிட்டுவிட்டு சென்ற எனது தாய் கண்களில் கண்ணீராய் நிறைகிறார். இந்த ஆசிரியப் பணி பொறுப்பினை எனது பெற்றோர்களுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். 

தற்போது எனது அதீத கனவுகள் எனும் வலைப்பூவில் இப்படித்தான் என்னை அறிமுகம் செய்து இருக்கிறேன். 

தமிழ்செயின்ட்ஸ் எனும் ஒரு இணையத்தில் முதல் முதலாக ஐந்து வருடங்கள் முன்னர் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதுதான் வழக்கமாக இருந்தது. இந்த வலைப்பூக்கள் எல்லாம் சுத்தமாக எனக்குப் பரிச்சயமில்லை. அப்படி எழுதி கொண்டிருந்தபோது மற்றொரு இணையத்திலும் எழுதினேன். பின்னர் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது தவிர்த்துவிட்டு தமிழில் எழுத வாய்ப்பும் அமைந்தது. ஆனால் தமிழில் நேராக எழுதுவது என்பது இல்லாத காரணத்தால் சற்று நேரம் அதிகம் ஆனது. 

அப்பொழுது இலங்கை மகள் எனும் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வலைத்தளம் தான் முத்தமிழ்மன்றம்.  அங்குதான் எனது எழுத்து பயணம் முழுவீச்சில் பயணிக்க தொடங்கியது. நினைத்து பார்க்கவே சற்று பிரமிப்பாக இருக்கிறது. இணையங்களில் கடந்த ஐந்து வருடங்களாக எழுதி வருகிறேன். முத்தமிழ்மன்றத்தில் கிடைத்த நல்ல நண்பர்கள் மிகவும் அதிகம். இப்பொழுது சில வருடங்களாக முத்தமிழ்மன்றத்தில் எழுதும் நேரம் குறைந்து போனது. 

முத்தமிழ்மன்றத்தில் அடியெடுத்து வைத்த நாள் 4 அக்டோபர் 2006. நண்பர்களின் வேண்டுகோளினால் தொடங்கப்பட்ட வலைப்பூ நாள் 7 அக்டோபர் 2008. முத்தமிழ்மன்றத்தில் எழுதிய பதிவுகளை மட்டுமே சேகரிக்கும் வலைப்பூவாக உருவானது எல்லாம் இருக்கும் வரை. இந்த தலைப்பினை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் வரை தான் எல்லாம். எதுவும் இல்லாமல் போனால் அதனால் ஏற்படும் இழப்புகள் கூட பெரிதாக உணரப்படுவதில்லை. காலப்போக்கில் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு, மாறுதலுக்கு உட்பட்டு உலகம் புது வேகத்தில் பயணித்து கொண்டேதான் இருக்கிறது. எல்லாம் எழுதிவிட்டார்கள் என எவரும் இறுமாந்து இருக்கவில்லை. சிந்தனைகள் காலந்தோறும் புதிப்பிக்கப்பட்டு  கொண்டேதான் இருக்கின்றன. 

இப்படியான இலவசமான வலைப்பூவினை பணம் கட்டி ஒரு தனித்தளமாக மாற்றியது ஒரு முட்டாள்தனமான செயல்பாடு என்பதில் எனக்கு எள்ளளவும் மாற்று கருத்து இல்லை. எதற்காக செய்தேன், ஏன் செய்தேன் என நினைக்கும்போது தனிப்பட்ட அங்கீகாரம் என்பதற்கா எனவும் புரியவில்லை. இப்படித்தான் ஒரு கல்விக்கென ஒரு தளம் ஆரம்பித்தது கவனிப்பாரற்று கிடக்கிறது. தினமும் ஏதேனும் எழுத நினைத்தாலும் மனம் ஒத்துழைக்கவில்லை. நேரம் தடுமாறி கசிகிறது. 

சில மாதங்களாக எனது மனதின் எண்ணமெல்லாம் எங்கு எங்கோ சென்றுவிட எழுதுவதன் அவசியம் அனாவசியமாகிப் போனது. வாசித்தலில் மனம் நிலைத்திட எழுதிட எழுத்து புரிபடமால் போனது. இப்படிப்பட்ட மனநிலையில் இருந்தபோதுதான் சீனா ஐயாவிடம் இருந்து வலைசரத்திற்கு ஆசிரியராக பணியாற்ற ஒரு அழைப்பு. வாழ்க்கை பல நேரங்களில் எதிர்பாராத விசயங்களை திணித்து திக்குமுக்காட செய்துவிடுகிறது. நன்றி சீனா ஐயா. வலைச்சர குழுவினருக்கும் நன்றிகள், வலைச்சரத்தில் பணியாற்றி சிறப்பித்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். சீனா ஐயா லண்டன் வந்திருந்தபோது அவரை நான் பார்க்க இயலவில்லை. நேரத்தை காரணம் குறை கூறி எனது சோம்பேறித்தனத்தை மறைக்க விருப்பமில்லை. நான் இந்தியா வந்தபோது எந்த நண்பர்களையும் சந்திக்க முயற்சி எடுக்கவும் இல்லை. நான் ஒரு நன்றி உடையவனா என பல நேரங்களில் கேள்வி எழுந்தாலும் 'இதுதான் நான்' என்னை ஏற்று கொள்ளும் பக்குவம் உடையவர்கள் மட்டுமே எனது நண்பர்கள் எனும் அகங்காரம் இருப்பது உண்டு. 

எனது வலைப்பூவின் பெயரை பணம் கட்டி மாற்றினேன். அப்பொழுது அதீத கனவுகள் எனும் தமிழ் பெயரை பரிந்துரைத்தவர் சுரேஷ் எனும் சக பதிவர். நன்றி சுரேஷ். இவரை நான் எடின்பரோவில் சந்தித்தேன். அருமையான உபசரிப்பினை தந்தார். ஆனால் அவர் லண்டன் வந்திருந்தபோது சந்திக்க இயலவில்லை. இவர் பாராட்டிய  அந்த பாராட்டுக்குரிய தொடர் ஏனோ வெகுவேகமாக எழுத இயலவில்லை. 

எழுதுவதன் அவசியம் என்பதை விட எப்படி எழுதவேண்டும் என்பதில் எனக்கு சில வரைமுறைகள் உண்டு. வார்த்தைகள் தரும் வலி மிக மிக அதிகம். அந்த வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டும் என திருவள்ளுவர் மிகவும் அற்புதமாக சொல்லி இருப்பார். அதைவிட எங்களது கிராமத்தில் சொல்வார்கள், 'வார்த்தையை சிந்திட்டா அள்ளமுடியாது' என்பார்கள். எனது தந்தை 'பேசுனா கூட பரவாயில்லை, எழுத்தில வைக்கிறப்போ ரொம்ப கவனமா இருக்கனும்' என்பார். பலமுறை தவறி இருக்கிறேன் என்றே நினைக்கிறேன். 

நான் இங்கே இருநூற்றி பதினாறாவது ஆசிரியராக பொறுப்பினை ஏற்று கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். எனது தந்தை ஒரு ஆசிரியர். எனது தாய் மேலும் இரண்டு வகுப்புகள் படித்திருந்தால் அவரும் ஒரு ஆசிரியராக இருந்து இருப்பார். எனக்கு ஆசிரியராக பணியாற்றுவது என்றால் கொள்ளைப்பிரியம். தெரிந்ததை சொல்லித்தருவதைப் போல மிகவும் சந்தோசமான விஷயம் எதுவும் இல்லை. இந்த ஆசிரியர் எல்லாம் எவர் எவர் என்பதை பற்றி கூட ஒரு தொடர் எழுதியது உண்டு.  

தம்பி நீ ஆசைப்படு என தைரியம் தரும் வாழ்க்கை இது. ஆசை மட்டும் இல்லாது போனால் இவ்வுலகம் ஜனனம் கண்டிருக்க முடியாது என்பார்கள். உயிரற்ற பொருட்கள் உயிர் கொள்ள ஆசைப்பட்டன. உயிர் கொண்டதும் நிலை கொள்ள ஆசைப்பட்டன. இல்லாத ஒன்றை இருப்பது போன்ற ஆசைகள் வடிவம் கொண்டன. சின்ன சின்ன ஆசைகளுக்குள் பேராசைகள் ஒளிந்திருக்கும் வண்ணம் இருப்பதுதான் வாழ்க்கை. 

கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் நான் எழுதுவதை கவிதைகள் என ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் வெறும் வார்த்தைகள் என அடையாளம் சூட்டினேன். அப்படிப்பட்ட வெறும் வார்த்தைகளில் படிக்கும்போது எனக்கு கண்களில் கண்ணீர் வர செய்யும் கவிதைகள் சில உண்டு. 

எழுதும்போது இறைவனை பற்றி குறிப்பிடாமல் போனால் எனது எழுத்துகள் எப்போதும் நிறைவு பெறுவதில்லை. இந்த இறைவன் யார் என்பதில் எனக்கு எப்பொழுதும் இரு வேறு கருத்தில்லை. ஆனால் வார்த்தைகளில் வைத்திடும்போது பலமுறை தடம் புரண்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். விவரிக்க முடியாத பேரானந்தத்தை வார்த்தைகளில் சுருக்கியது எனது முட்டாள்தனமே அன்றி வேறு எதுவும் இல்லை.  

காதல்! காதல் ஒரு முறை வரும் என்பதைவிட ஒவ்வொருவரின் மீதும் வரும் எனும் பைத்தியகாரத்தனமான எண்ணங்களை கவிதைகளில் வடித்து வைப்பது எப்படி சரியாகுமோ என தெரியாது. ஆனால் காதல் புரிந்து கொள்ளும் என்பதில் மட்டும் மிகவும் கவனமாக இருக்கிறேன். 

நாவல்கள் படைத்த ஒரு வறட்டுத்தனமான போதை அதிகம் உண்டு. ஆனால் அந்த நாவல்களையே விமர்சிக்கும் சக்தியும் மனதில் உண்டு. கண்ணீர் விடவைக்கும் கதையும் உண்டு. 

நுனிப்புல் பாகம் 1 எனும் முதல் நாவலை வெளியிட உதவிய நண்பர் இரத்தினகிரி மற்றும் அவரது நண்பர் கணேஷ் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை சொல்வதிலும், வெறும் வார்த்தைகள் எனும் கவிதை தொகுப்பை வெளியிட உதவிய தம்பி செல்வமுரளி மற்றும் அவரது நண்பர் இஷாக் அவர்களுக்கு நன்றி சொல்வதிலும், தொலைக்கபட்ட தேடல்கள் எனும் சிறுகதை தொகுப்பை வெளியிட்ட நண்பர் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களுக்கு நன்றி சொல்வதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்த வலைப்பூ எனும் சோலையில் எனக்கு பிடித்த பதிவுகளும் உண்டு. இதோ இவர்தான் சிறந்த மாணாக்கன் என ஆசிரியர் ஒருவரை சொன்னால் மற்ற மாணவர்கள் எல்லாம் சிறந்தவர்கள் இல்லை என நினைத்து கொள்ள கூடாது என்பதுதான் மாணவர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் அறிந்து கொள்ளவேண்டியது எனும் பாடம் எனக்கு ஒரு ஆசிரியர் சொல்லித் தந்தது. 

குருகுல வாசம், ஆசிரியர் எனும் பொறுப்பிற்கு மரியாதை என்பது எல்லாம் தொலைந்து கொண்டே வருகிறது என குறைபட்டு கொள்வோர் உண்டு. ஆனால் இங்கே சக பதிவர்களுக்கு ஆசிரியர் பொறுப்பு தந்து கௌரவிக்கும் வலைச்சரம் பூத்து குலுங்கட்டும். சற்று நேரம் இளைப்பாறி செல்லும் வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் உண்டாகட்டும். 

பற்றினேன் நீ வழி காட்டுவாய் என
போற்றினேன் நீதான் யாவும் என

கற்றது எவையென கேட்டால் 
மறந்தவை கணக்கில் இல்லை

சுற்றி பார்க்கும் வாய்ப்புதனில்
கிட்டுவது எத்தனை எத்தனையோ 

சுட்டிவிடும் முயற்சியில் கொட்டிவிடாது 
கெட்டியாக பிடிப்பது எதுவென்பேன்

தட்டி தருவதால் வளரும் எழுத்து
பரவட்டும் உலகம் செழித்து. 

இது எனது அதீத கனவுகளின் மிங்கி மிங்கி பா






மேலும் வாசிக்க...

Sunday, March 27, 2011

வருக வருக வெ.இராதாகிருஷ்ணன் !

அன்பின் பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஈரோட்டினைச் சார்ந்த ராஜா ஜெய்சிங் - சில எதிர் பாராத காரணங்களினால் தொடர்ந்து எழுத இயலவில்லை. இரு இடுகைகள் மட்டும் இட்டு பல நல்ல கவிஞர்களை அறிமுகம் செய்த பின்னர் - தொடர இயலவில்லை. அவருக்கு இன்னுமொரு வாய்ப்பு - அவரது திறமையினை வெளிப்படுத்த அளிக்கப்படும் என உறுதி கூறுகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ள அருமை நண்பர் வெ.இராதாகிருஷ்ணனை வருக வருக ! ஏற்ற பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றுக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவர் 1975ம் ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலத் துலுக்கன் குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். அக்கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது வரையும், அருப்புக்கோட்டையில் உள்ள மேல் நிலைப்பள்ளையில் பன்னிரண்டாவது வரையிலும் கல்வி பயின்றவர். பின்னர் உத்தங்குடி கே.எம் மருந்தாக்கியல் கல்லூரியில் இளநிலை மருந்தாக்கியல் பட்டமும். கல்கத்தா ஜதாவ்பூர் பல்கலைக் கழகத்தில் முதுநிலை மருந்தாக்கியல் பட்டமும் பெற்றவர். பின்னர் இலண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் ஆரய்ச்சி பட்டம் பெற்றவர். கடந்த எட்டு ஆண்டுகளாக, அக்கல்லூரியில் உள்ள நுரையீரல் தொடர்பான் பிரிவில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார். இவ்வாராய்ச்சிகள் தொடர்பாக பல கட்டுரைகள் வெளியீடிருக்கிறார்.

இவர் சமூக நலனில் அக்கறை கொண்டவர். சிறு வயதில் இருந்தே கதை, கட்டுரை, பேச்சுப் போட்டி என தமிழில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
இதுவரை நுனிப்புல் பாகம் 1 என்ற நாவலையும், வெறும் வார்த்தைகள் என்னும் கவிதைத் தொகுப்பினையும், தொலைக்கப்பட்ட தேடல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினையும் வெளியிட்டு இருக்கிறார்.

இவரது வலைப்பூவான அதீதக் கனவுகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதி இருக்கிறார்.

அருமை நண்பர் வெ.இராதாகிருஷ்ணனை மறுபடியும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

நல்வாழ்த்துகள் வெ.இராதாகிருஷ்ணன்
நட்புடன் சீனா



மேலும் வாசிக்க...

Friday, March 25, 2011

அஞ்சலி அறிவிப்பு

அன்பு நண்பர்களே !

வலைச்சரத்தின் ஆசிரியராக தற்பொழுது பொறுப்பேற்றிருக்கும் அருமை நண்பர் ராஜா ஜெய்சிங்கின் தந்தையார் இன்று இரவு ( சற்று முன் 8 மணி அளவில் ) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

துயரத்தில் ஆழ்ந்துள்ள ராஜா உட்பட்ட அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

வலைச்சரத்திற்கு அடுத்த திங்கட்கிழமை காலை - அடுத்த ஆசிரியர் பொறுப்பேற்கும் வரை - விடுமுறை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Thursday, March 24, 2011

கவிதைப்பூக்கள்...


கவிதைகளைச் சுகிக்கும் மனம் அனைவருக்கும் வாய்த்தாலும், கவிஞனின் பார்வையில் உலகைப் பார்க்கும் மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.

பூக்களை பார்த்து, அதன் மலர்ச்சியில் மகிழ்ச்சி கொள்வது யாராலும் முடியும், ஆனால் அந்த பூக்களை மகரந்தம் தாங்கும் கர்ப்பிணிகளாகவும், படர்ந்து வளர்ந்த நட்சத்திரக்கூட்டங்களாகவும் பார்த்து உணர்வது கவிஞர்களேயன்றி யாரும் இல்லை.

அவ்வகையில் நான் தொடர்ந்து வாசித்து வரும் சில கவிஞர்கள் சிலரை கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.

கமலேஷ் - சுயம் தேடும் பறவை எனும் வலைப்பதிவில் கவிதைகளை இட்டு வருகிறார். எதார்த்த நடையிலும் கவிதை தெறிக்க எழுதும் புலமை வாய்த்தவர். அதற்குச்சான்றாக அவரின்
இலந்தைப் பூக்கள்

கவிஞர் வைரமுத்துவைப்பற்றி அவர் வரைந்த கவிதை
ஒரு அட்சய பாத்திரம் 


நாவிஷ் செந்தில்குமார் - நாவிஷ் கவிதைகள் எனும் தனது தளத்தில் கவிதைகளை எழுதி வருகிறார். வாரப்பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இவரது கவிதைகளை நான் பார்த்ததுண்டு. ஒன்றிரண்டு வரிகள் என்றாலும் நீங்காமல் மனதில் இருத்தி வைத்து விடுவதில்லை இவரது கவிதைகள் என்றுமே வீரியமானது. அதில் ஒன்றுதான் இந்த உணவே மருந்து .

சாலையைக் கடக்க குழந்தைக்கள் என் விரல் பிடிக்கும்போதெல்லாம் நினைவிற்கு வரும் இவரின் இந்த அறிவுரைகள்...
சாலையைக் கடக்கும் குழந்தை

ரசிகை - ரசிகை என்ற வலைப்பதிவில் கவிதைகள் நிரப்பி வருகிறார். அனுபவித்து கவிதை எழுதுவதில் வல்லவர். இதோ... குளியலில் கூட எவ்வாறு விளையாடுகிறார் பாருங்கள்.. கவிதைக் குளியல்.
சிட்டுக்குருவிகளுக்காக சூழ் மவுனம் கலைக்கா இவரது பார்வையை இன்னும் அழகாக வடித்திருக்கிறார் இந்த கவிதையில் - மழை நாளில்.
முரளிகுமார் பத்மநாபன் - அன்பே சிவம் எனும் வலைப்பதிவில் எழுதுகிறார். காணும் யாவிலும் புதுமையாய் ஏதோவொன்றைக் கண்டுகொள்ளும் மழலைபோல இவரின் மனதில் எங்கும், எதிலும் அழகு நிறைந்திருக்கிறது. 
கிறுக்கல் என்ற பெயரில் அவர் சித்திரமாய்த் தீட்டிவரும் கவிதைகளில் சில...

கிறுக்கல்கள்
போனஸ்

இரவுப்பறவை - இரவுப்பறவை என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். இவரது கவிதைகள் சட்டென முடிந்து விடுவது போலத்தோன்றினாலும், அதன் பின்னால் ஏதோ ஒரு வெறுமையை அல்லது ஆழ்வெளியை கண்டுகொள்ளலாம். சில நேரங்களில் குறும்புத்தனமான கவிதைகளும் உண்டு...

அவரின் இரு கவிதைகள்

வாரக்கடைசி
நிறைவாய் ஒரு வாழ்வு

தியா - தியாவின் பேனா பேசுகிறது என்ற தலைப்பு கொண்ட அவரின் வலைப்பூவில் எழுதி வருகிறார். வீரியம் மிக்க எழுத்துக்களைக் கொண்டு கவிதை புனைவதில் வல்லவர், ஆனால் தற்போது அதிகமாய் வலைப்பக்கங்களில் பார்க்க முடிவதில்லை என்பது வருத்தமே. நண்பர் மீண்டும் வந்து அவரின் கவிதைகளைத் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்...

உதிர்கின்ற பூக்கள் 
நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும் 

மணீஜி - இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். வலையுலகில் இருக்கும் அனைவரும் அறிந்த ஒருவர். அவரின் வீச்சு மிகு கட்டுரைகளுக்கும், எள்ளல் கொஞ்சும் இடுகைகளுக்கும் இடையே அவ்வப்போது வரும் ஒருசில கவிதைகள் மகா அற்புதமானவவை. கறுப்புக்கலர் ஆரஞ்சு எனும் இவரது கவிதை என்றுமே மறக்கவியலா ஒன்று. வலையுலகம் சாராத என் அனேக நண்பர்களிடம் நான் பகிர்ந்து கொண்ட ஒரே கவிதையாக அதுதானிருக்கிறது.

கறுப்புக்கலர் ஆரஞ்சு 

அவரின் இன்னொரு அற்புதக்கவிதை

பிறிதொரு சரித்திரம் 

வேலு - GeeVee எனும் வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் வேலு அவர்களின் கவிதைகளும் மிக நல்ல அமைப்பைப் பெற்றவை. பெரும்பாலும் மனித மனங்களின் தேடுதல்களை கவிதைப்படுத்தும் இவரது நயம் போற்றத்தக்கது. அவரின் தேடல் கவிதைகளுக்கு நான் என்றுமே ஒரு நல்ல ரசிகன். இதோ அவரின் இரண்டு முத்துக்கள்

அவதார் 
வட்டங்கள் 

சி.சரவணகார்த்திகேயன் (WriterCSK) - இவர் ஒரு பிரபல எழுத்தாளர். அதைவிட ட்விட்டரில் இவரது கீச்சுக்கள் மிகப்பிரபலம். யாரோ ஒருவர் எழுதியது போல இவர் தமிழ்பேப்பர் தளத்திற்கு எழுதிய காதல்புராணம் இவருக்கு மிக நல்ல வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அக்கவிதைத் தொடரை அனானியாக இவர் எழுதிய நேரத்தில், இவர் யாராக இருக்கும் என்ற அனுமானத்தில் ட்விட்டரில் பெரிய சலசலப்பே ஏற்பட்டது. இதோ அவரது காதல் புராணத்தின் தொகுப்பு... 

காதல் புராணம் 

ஈரோடு கதிர் - வலையுலகில் ஒரு முக்கிய பதிவரான இவர், சமூகம் சார்ந்த இடுகைகளுக்குச் சொந்தக்காரர். சமயங்களில் கவிஞராகவும் உருவெடுத்து நல்ல படைப்புகளைத் தருகிறார். அவரின் கவிதைகளில் சமூகச்சிக்கல்களும், வாழ்வியல் கருத்துக்களும் அழுத்தமாக பதியப்படும். அவரின் சில கவிதைகள்

அவளாக இருப்பாளோ 
சிறகை விரிக்கும் சிறை 

இன்னும் பல நல்ல கவிஞர்களை வலையுலகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆயினும் இவர்கள் என் வாசிப்பு எல்லைக்குள் இருப்பதால், எளிதான அடையாளம் கண்டு பதிவிட்டு விட்டேன். இவர்களைப்போல பல நல்ல கவிஞர்களை வலைச்சரம் ஒவ்வொரு வாரமும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதில் நானும் சிறு பங்காக இன்று இருப்பது எனக்கு ஒரு பெருமைமிக்க ஒரு நிகழ்வு.

அடுத்து வரும் இடுகைகளில் வேறு பல நயங்களைக் கொண்டு, பதிவிடும் பதிவர்களின் தொகுப்போடு சந்திக்கிறேன்....

தொடர்வோம்...
மேலும் வாசிக்க...

Wednesday, March 23, 2011

சுயம் - ஒரு அறிமுகம்...

நான் என்பதாக அறிமுகம் செய்து கொள்ளப் பயன்படுத்துவது "ராஜா ஜெய்சிங்". எம் அம்மையும் அப்பனும் ஈன்ற அவர் உயிர்க்கு இட்ட பெயர்தான் அது. ஒத்த விசைகள் கொண்ட காந்தப்புலம் ஒன்றையொன்று விலக்குவதுபோல், ஒன்றோடொன்று வேறுபட்ட இருவேறு சமூகங்களை இணைக்கும் ஒற்றை இரும்புப்புள்ளியாகப் பெற்றெடுத்தனர்.

அடர்ந்த மலைக்காடுகளிலும், அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மென்தென்றல் காற்றுடனும் என் சிறுவயதுப் பருவத்தை தொலைத்தேன். பிழைப்புக்காகப் பெயர்ந்த சமூகத்தின் ஓர் அங்கமாக, வாழ்வை எதிர்நோக்கியபடி தற்போது நகரவாசம். மலையின் வனப்புகளை நெஞ்சில் நிறைத்து நடமாடிக்கொண்டிருக்கும் நகரத்து மனிதர்கள் வெகுசிலரில் நானும் ஒருவன்.

பகல்முழுதும் அலைந்து திரிந்து பின் பட்டியில் அடைபடும் ஆடுகளின் மனதையொத்தது என் நிலை. மீண்டும் கிராமங்களில் உறைந்து, உறக்கம் கொள்ளும் தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சீவன்.

என் எண்ணங்களை வலையில் பதிக்க எண்ணியபோது தோன்றியதுதான் இந்த அகல்விளக்கு எனும் புனைப்பெயர். ஒற்றை மண்சுவர் தாங்கிய மாடம் சூழ எழுப்பிய ஓர் குடிசை. அங்கு நித்தமும் நிறைந்தது அகலின் ஒளி வெளிச்சம். அந்த வெளிச்சத்தில்தான் பிழைத்துக் கிடந்தது என் பள்ளிப்பிராயம்.

பள்ளிப்பிராயம் கடந்த பின் பெயர்ந்து விட்ட சில நண்பர்களை மீண்டும் சேர்த்த பெருமை இந்த இடுகைக்கு உண்டு - என் அவள்.

வலையுலகிலும், மின்னஞ்சல்குழுமங்களிலும் எனக்கொரு நற்பெயரைப் பெற்றுத்தந்த இன்னொரு இடுகை - வசனக்கோயில். 

அனைத்தும் தாண்டி தற்போதைய சமீபத்திய இடுகை - வெயிற்காலம்.

என் சில கவிதைகள்...

 
***************************-

சுயத்தைப் பற்றியெழுதும் இவ்வேளையில், என்னை வளர்த்த சில மோதிரக்கைகளுக்கு நன்றி நவிலும் நல்லதோர் தருணமாக, இதுவன்றி வேறெதும் இருக்கவியலாது.

வலைச்சரம் - பெருமைக்கும், பிரம்மிப்புக்கும் உரித்தான இடம். மரகதங்களும், மாணிக்க மலர்களும் அலங்கரித்த கோபுரம். அத்ததைய பெருமைமிகு கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்ட ஓர் சிறு கூழாங்கல்லாக உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

வளர்ந்த மாணவனை வகுப்பெடுக்கச் சொல்லிவிட்டு தள்ளி நின்று பார்க்கும் இணையில்லா ஆசிரியராய் திரு.சீனா அய்யா அவர்கள். எம்மை இந்த சிம்மாசனத்தில் ஏற்றி விட்டு அழகுபார்க்கிறார்.

அவருக்கு நன்றி என்ற ஒற்றைச்சொல்லால் குருதட்சனை கொடுப்பது முறையா எனத்தெரியவில்லை.

ஆனாலும் இப்போது அவர் இட்ட பணியை செவ்வனே நிறைவேற்றுவதுதான் சாலச் சிறந்த கைமாறாக இருக்கும் என எண்ணுகிறேன்...

வலைச்சரத்தில் வாய்ப்பளித்த அதன் நிர்வாகிகளுக்கும், திரு.சீனா அய்யா அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்கி இப்பணியைத் துவக்குகிறேன்...
மேலும் வாசிக்க...

Sunday, March 20, 2011

சென்று வருக எஸ்.கே ; வருக ! வருக ராஜா ஜெய்சிங்.

அன்பு நண்பர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சுரேஷ் குமார் ( எஸ்.கே), தான் ஏற்ற பொறுப்பினை அழகாக, மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 14 இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூறுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

இவர் வித்தியாசமான முறையில், தொழில்நுட்பம், நகைச்சுவை, கதை, கவிதை, சமூகம், அறிவியல், சினிமா, காமிக்ஸ், புகைப்படம், பொழுது போக்கு ( பாடல், ஜோக், புதிர் மற்றும் காணொளிகள்), சிறுவர்கள் என பல்வேறு தலைப்புகளில், பல புதிய பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்திருக்கிறார். ஏறத்தாழ நூற்று இருபத்தைந்துக்கும் மேலாக பதிவர்களையும் இடுகைகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார். இவரது அயராத உழைப்பு பாராட்டுக்குரியது.

அருமை நண்பர் எஸ்,கேயினை, நன்றி கலந்த நல்வாழ்த்துகள் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை 21.03.2011 துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க இசைந்துள்ள, ஈரோட்டினைச் சார்ந்த, 22 வயது இளைஞர் ராஜா ஜெய்சிங்கினை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இவர் தரவியல் ஆய்வாளராக பணி புரிகிறார். பெரும்பாலும் சிறுகதைகளூம் கவிதைகளும் 2009 ஆகஸ்டு முதல் அகல்விளக்கு என்னும் பதிவினில் எழுதி வருகிறார்.

நல்வாழ்த்துகள் எஸ்.கே
நல்வாழ்த்துகள் ராஜா ஜெய்சிங்
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

விடை பெறுகிறேன்!


இன்றுடன் விடை பெறுகிறேன்!

வலைச்சரத்தில் எழுத சீனா அய்யா அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நான் ஒன்றும் பெரிய பதிவர் அல்ல. வலைப்பூ தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. மேலும் பெரிதாக எதையும் இன்னும் எழுதவில்லை. ஆனால் பல்வேறு நல்ல விசயங்களை இத்தனை நாட்களில் இங்கே கற்றுக் கொண்டேன். ஏராளமான நண்பர்கள் கிடைத்துள்ளனர். ஒரே ஒரு மனக்குறை இப்போதெல்லாம் வேலைப்பளு, உடல்நிலை காரணமாக முன்போல் எல்லா வலைப்பூக்களையும் பார்வையிடவோ கருத்திடவோ முடியவில்லை என்பதுதான்.

வலைச்சரம் எழுத அழைத்ததே எனக்கு மிகவும் பெருமையாகவும் ஊக்கம் தரக்கூடியதாகவும் இருந்தது அதற்கு முதலில் வலைச்சர நிர்வாகத்தினர் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வலைச்சர வாரம் எனக்கு மிக இனிமையாக அமைந்தது. வலைப்பூக்கள் பலவற்றை புதிதாக அறிந்தேன். இன்னும் ஏராளமான வலைப்பூக்கள் உள்ளன. எல்லாவற்றையும் தொகுத்து போட முடியவில்லை.

எல்லோர் பின்னூட்டங்களுக்கும் பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும். இத்தனைப் பதிவுகளிலும் கருத்துரை வழங்கி என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் வலைப்பூக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லா பதிவர்களும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்தி வணங்குகிறேன்.

நன்றி வணக்கம்!

இந்த பதிவு ஒன்னுமே இல்லாம இருக்கிற மாதிரி இருக்கிறதால சும்மா இது:-))))
|
|
V


உங்களுக்காக ஒரு சிறிய உளவியல் விளையாட்டு!


மேலும் வாசிக்க...

சிறுவர்களுக்கான வலைப்பூக்கள்


 சிறுவர்களுக்கு தேவையான, பயனளிக்கக் கூடிய சில வலைப்பூக்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

பதிவர்: Kanchana Radhakrishnan
இங்கே சிறுவர்களுக்கான பலவித நீதிக்கதைகள் ஏராளமாக கிடைக்கின்றன.
உதாரணம்: முன்னேறிச் செல்
பதிவர்: பரஞ்சோதி
இங்கே சிறுவர்களுக்கான பலவித பாடல்கள் ஏராளமாக கிடைக்கின்றன.
உதாரணம்: எறும்பு
பதிவர்: Rukmani Seshasayee
இங்கே சிறுவர்களுக்கான பலவித கதைகள் ஏராளமாக கிடைக்கின்றன.
உதாரணம்: உயர்ந்த வாழ்வு
பதிவர்: சுந்தர வடிவேல்/மதி கந்தசாமி
இங்கே சிறுவர்களுக்கான பலவித பாடல்கள் கிடைக்கின்றன.
உதாரணம்: மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி
பதிவர்: பரஞ்சோதி/விழியன்
இங்கே சிறுவர்களுக்கான பலவித கதைகள் ஏராளமாக கிடைக்கின்றன.
உதாரணம்: பட்டாணி
பதிவர்: RAHINI
இங்கே சிறுவர்களுக்கான வித்தியாசமான கட்டுரைகள் கிடைக்கின்றன.
உதாரணம்: நானும் பறவையாக இருந்தால்
பதிவர்: ந. உதயகுமார்

இங்கே சிறுவர்களுக்கான குட்டி குட்டி கதைகள் கிடைக்கின்றன.
உதாரணம்: உலகத்திற்கு உப்பாய் இரு
பதிவர்: கேணிப்பித்தன்
இங்கே சிறுவர்களுக்கான பாடல், கதைகள் மட்டுமின்றி  பல்வேறு கட்டுரைகளும் கிடைக்கின்றன.
உதாரணம்: கிளிக்குஞ்சு மலை
பதிவர்: அஞ்சலி
இது ஒரு சிறுமியின் வலைப்பூ. சிறுமியே பதிவுகளை எழுதி வருகிறார்.
உதாரணம்: பொய்

குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு தொடர்பாக பல பதிவர்கள் இணைந்து இங்கே எழுதி வருகிறார்கள்.

குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு, கதை, கட்டுரை என பல்வேறு  விசயங்கள் தொடர்பாக பல பதிவர்கள் இணைந்து இங்கே எழுதி வருகிறார்கள்.
பதிவர்: குழந்தை நல மருத்துவன்!
குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு தொடர்பாக பல பதிவுகள் இணைந்து இங்கே கிடைக்கின்றன.
பதிவர்: Chandravathanaa Selvakumaran
குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு தொடர்பாக பல பதிவுகள் இணைந்து இங்கே கிடைக்கின்றன.
பதிவர்: Kangs(கங்கா)

இங்கே ஏராளமான ஜென் கதைகள் உள்ளன. படிக்க படிக்க சுவாரசியமாக உள்ளது.
உதாரணம்: பதிலா உயிரா
மேலும் வாசிக்க...

Saturday, March 19, 2011

பொழுது போக்கு


வித விதமாக வலைப்பூக்களில் பொழுதுபோக்க வழி செய்யும் சில வலைப்பூக்களையும் வலைப்பதிவுகளையும் அறிமுகம் செய்கிறேன்.

வித்தியாசமான வீடியோக்கள் பார்க்க:
DENIM MOHAN
பதிவர் பெயர்:   DENIM MOHAN
எடுத்துக்காட்டுப் பதிவு:
Mesmerizing! Giant Bubbles Popping


புதிர் விளையாட்டுகளுக்கு:
எங்கள் பிளாக்
பதிவர் பெயர்:
எங்கள் பிளாக்
எடுத்துக்காட்டுப் பதிவு:
படப்புதிர்
! *பலே பிரபு* !
பதிவர் பெயர்:
பலே பிரபு
எடுத்துக்காட்டுப் பதிவு:
 Puzzles
கணக்குப் போடலாமா?
பதிவர் பெயர்:
பெயர் சொல்ல விருப்ப மில்லை
எடுத்துக்காட்டுப் பதிவு:
அந்த எண் என்ன?
ஜாம்பஜார் ஜக்கு
பதிவர் பெயர்:
ஜாம்பஜார் ஜக்கு
எடுத்துக்காட்டுப் பதிவு:
ஜாலியாக சில பழைய புதிர்கள்


ஜோக்குகள் படிக்க:

பனித்துளி சங்கர்
பதிவர் பெயர்:
பனித்துளி சங்கர்
எடுத்துக்காட்டுப் பதிவு:
தமிழ் ஜோக்ஸ்
! . தமிழ் 25 . !
பதிவர் பெயர்:
Aaqil Muzammil
எடுத்துக்காட்டுப் பதிவு:
இதைத் தான் ( A ) ஜோக் என்பார்கள் !


பாடல்கள் கேட்க:

தேன் கிண்ணம்
பதிவர் பெயர்:
 
எடுத்துக்காட்டுப் பதிவு:
ஐய்யயோ நெஞ்சு அலையுதடி
இனிய தமிழ் பாடல்கள்
பதிவர் பெயர்:
 மோகனன்
எடுத்துக்காட்டுப் பதிவு:
வரான் வரான் பூச்சாண்டி
தேனிசை
பதிவர் பெயர்:
Ganesh
எடுத்துக்காட்டுப் பதிவு:
SPB solo songs
நிலா பாட்டு
பதிவர் பெயர்:
Palanikumar Palavesam 
எடுத்துக்காட்டுப் பதிவு:
எனக்கு பிடித்த பாடல்


பாடல் வரிகள் கிடைக்கும் தளங்கள்:

சினிமா பாடல்கள்
பதிவர் பெயர்:
Chandravathanaa Selvakumaran
எடுத்துக்காட்டுப் பதிவு:
ஒவ்வொரு பூக்களுமே
எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே
பதிவர் பெயர்:
இசை காதலி
எடுத்துக்காட்டுப் பதிவு:
ஒரு கிளி உருகுது
பாட்டு ரசிகன்
பதிவர் பெயர்:
பாட்டு ரசிகன்
எடுத்துக்காட்டுப் பதிவு:
சின்னத் தாயவள்
Mounam Pesum Mozhigal!
பதிவர் பெயர்:
Mounam pesum mozhigal!!
எடுத்துக்காட்டுப் பதிவு:
கடவுள் ஏன் கல்லானான்
எனக்குப் பிடித்த பாடல்
பதிவர் பெயர்:
***D.K***
எடுத்துக்காட்டுப் பதிவு:
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
தமிழ் ...!
பதிவர் பெயர்:
சக்தி
எடுத்துக்காட்டுப் பதிவு:
தெய்வம் தந்த வீடு
தினம் ஒரு பாடல்
பதிவர் பெயர்:
ஆகிரா
எடுத்துக்காட்டுப் பதிவு:
தோல்வி நிலையென நினைத்தால்
மேலும் வாசிக்க...

புகைப்பட தளங்கள்



வலைப்பூக்களில் வெறும் புகைப்படங்களை போடும் photo blogs  என்றொரு வகை உண்டு. அப்படிப்பட்ட சில வலைப்பூகக்ளை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். இவற்றில் ஏராளமான, அழகான, விதவிதமான புகைப்படங்கள் கிடைக்கின்றன.


http://shayries-radiofm-groupmails.blogspot.comShayries -RadioFm - Groupmails
புகைப்பட தளம்
http://opticaltrance.blogspot.com/Shree
புகைப்பட தளம்
http://worldphotocollections.blogspot.com/IDEAL
புகைப்பட தளம்
http://anandvinay1.blogspot.com/An&
புகைப்பட தளம்
http://www.amazingonly.com/
புகைப்பட தளம்
http://vizhiyan.wordpress.com/vizhiyan-clicks/Vizhiyan
புகைப்பட தளம்
http://bangalore-city.blogspot.com/Rajesh Dangi
புகைப்பட தளம்
http://malar-avan.blogspot.com/Leo
புகைப்பட தளம்
http://webpics.co.in/புகைப்பட தளம்
http://dhineshmaya.blogspot.comதினேஷ் மாயா
புகைப்படம்/பாடல்வரிகள்
http://rkamalart.blogspot.com/R. Kamal
கார்டூன் - caricatures
http://www.artistramki.comRamki
கார்டூன்


அடுத்து பொழுதுபோக்கு என்ற பிரிவில் சில வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன்.
மேலும் வாசிக்க...

Friday, March 18, 2011

காமிக்ஸ் வலைப்பூக்கள்



சிறு வயதில் பல பேர் காமிக்ஸ்களை விரும்பி படித்திருப்பீர்கள். பெரியவர்களான பின்னும் அதன் மீதுள்ள ஆர்வம் குன்றாமல் இருப்பவர்களும் இங்குண்டு. எனக்கும் காமிக்ஸ்கள் மிகவும் பிடிக்கும். சில காமிக்ஸ்கள் படித்து முடிக்கும்போது ஒரு படத்தை நீண்ட நேரம் பார்த்த உணர்வுகளை அளித்திருக்கின்றன.

தமிழில் காமிக்ஸ் பற்றி எழுதும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. ஆனால் நிறைய இல்லை என்பது வருத்தமான விசயம்தான். தான் ரசித்தவற்றை அந்த ரசனை குன்றாமல் படிப்போருக்கும் அத்தகைய உணர்வு ஏற்படும் விதத்தில் அந்த காமிக்ஸை பற்றி எழுதுபவர்களையும் அப்படிப்பட்ட சில பதிவுகளையும் இங்கே குறிப்பிடுகிறேன்.





காமிக்ஸ் வலைப்பூக்கள்
வலைப்பூவின் பெயர்பதிவர் பெயர்எடுத்துக்காட்டு பதிவு
காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்!முத்து விசிறிஇரும்புக்கை நார்மன்
தலை சிறந்த காமிக்ஸ்கள்ஒலக காமிக்ஸ் ரசிகன்விஷ ஊசி வேங்கப்பா
ராணி காமிக்ஸ்ரஃபிக் ராஜாஅழகியை தேடி - ஜேம்ஸ்பாண்ட்
tamilcomicsulagamKing Viswa வாண்டுமாமா-புலி வளர்த்த பிள்ளை
browsecomicsலக்கி லிமட்Lucky Luke In Nitoglycerine - பூம் பூம் படலம்
கனவுகளின் காதலன்கனவுகளின் காதலன்ஆர்பிட்டால்
ILLUMINATIILLUMINATIKilling joke(r)
கருந்தேள் கண்ணாயிரம்கருந்தேள் கண்ணாயிரம்XIII - இரத்தப்படலம்
முதலை பட்டாளம்ப்ரூனோ ப்ரேசில்இரும்புக் கை மாயாவி
சித்திரக்கதைSIV கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை
அகோதீககளிமண் மனிதர்கள்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்விண்வெளிக் கொள்ளையர்


தொடர்ந்து படித்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி!
மேலும் வாசிக்க...

சினிமா


வலைப்பூக்களில் அதிகம் படிக்கப்படும் தகவல்கள் சினிமா சம்பந்தப்பட்டவையாக இருக்கும். அப்படிப்பட்ட சினிமா சம்பந்தமான தகவல்கள்/விமர்சனங்களை எழுதும் வலைப்பூக்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan|
கீதப்பிரியன் அவர்கள் சினிமா, சமூகம் போன்ற பல பிரிவுகளில் பதிவுகள் எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் விரிவாகவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் இருக்கும். உதாரணம்: ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
கொழந்த's blog..
கொழந்த அவர்கள் சினிமா, இலக்கியம், அறிவியல் சம்பந்தமான பதிவுகள் எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் புரியும்படியும் கோர்வையாகவும் இருக்கும். உதாரணம்: மால்கம் X
CENTER of DISTRACTION - A "சென்"தமிழ் Blog
கா.கி. அவர்கள் சினிமா, இலக்கியம், படைப்பு, சமூகம் என கலவையாக எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் விளக்கமாகவும் புரியும்படியும் இருக்கும். உதாரணமாக இன்சப்சன் படம் பற்றி எல்லா வித கேள்விகள் சந்தேகங்களுக்கும் விளக்கமளிப்பத்தை படியுங்கள்.
பாரதிக்குமார்
பாரதிக்குமார் அவர்கள் சினிமா, இலக்கியம், சமூகம், படைப்பு போன்ற பல பிரிவுகளில் எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் நன்கு புரியும்படியும் அழகாகவும் இருக்கும் உதாரணம்: குட்பை சில்ரன்
பிற மொழிப்படங்கள்... தமிழில்...
ஜெய் அவர்கள் முழுக்க சினிமா பற்றி மட்டுமே எழுதுகிறார். சமீப காலமாக இவர் எழுதவில்லை. மீண்டும் எழுத வருவார் என நம்புகிறேன். இவரின் விமர்சனங்களும் வித்தியாசமான உணர்வை அளிக்கும். உதாரணம்: Monento
உலக சினிமா ரசிகன்
உலக சினிமா ரசிகன் அவர்களின் விமர்சனங்கள் தரமாகவும்  வித்தியாசமாக்வும் இருக்கும். உதாரணம்: உதிரிப் பூக்கள். இவர் சினிமா, சமூகம், இலக்கியம் போன்ற பிரிவுகளில் எழுதி வருகிறார்.
ஹாலிவூட் பார்வை
ஹாலிவூட் மயூ அவர்கள் சினிமா, இலக்கியம் சமூகம் ஆகியவை தொடர்பாக எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் பொருள் நிறைந்தும் ஆழமாகவும் இருக்கும். உதாரணம்: 21
Lucky Limat
லக்கி லிமட் அவர்கள் தொழிற்நுட்ப தகவல்களுக்கென தனி வலைப்பூ வைத்திருக்கிறார். இந்த வலைப்பூவில் சினிமா பற்றி மட்டுமே எழுதுகிறார். இவரின் விமர்சனங்களும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் உள்ளன. உதாரணம்: 12:01Car and vanCar and vanCar and vanCar and vanCar and van
JZ சினிமா
JZ அவர்கள் சினிமா, அறிவியல் பற்றி எழுதுகிறார். விளையாட்டு தகவல்களுக்காக தனி வலைப்பூ வைத்திருக்கிறார். இவரும் சமீப காலமாக எழுதவில்லை. மீண்டும் எழுத வருவார் என நம்புகிறேன். இவரின் விமர்சனங்களும் வித்தியாசமாகவும் தகவல் நிறைந்தும் இருக்கும். உதாரணம்: Shutter Island
Tha Cinema - கனவுகளின் நீட்சி..
அவர்கள் பெரும்பாலும் சினிமா பற்றிய பதிவுகளே எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் எளிமையாகவும் புரியும்படியும் உள்ளன. உதாரணம்: Memories of Murder
யாழிசை ஓர் இலக்கிய பயணம்......
அவர்கள் சினிமா, இலக்கியம் சமூகம் பற்றிய பதிவுகள் எழுதி வருகிறார். இவரின் விமர்சனங்கள் புதிதாகவும் சிறப்பகவும் உள்ளன. உதாரணம்: அகிராவின் ‘DREAMS’

தமிழ் சினிமா பதிவுகளை உதாரணமாக அளிக்காததற்கு காரணம் அவற்றை நாம் பெரும்பாலும் படம் ரீலீஸ் ஆகும் சமயம் மட்டுமே படிப்போம் என்பதுதான்:-)))

அடுத்து காமிக்ஸ் பற்றிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன்.
மேலும் வாசிக்க...

Thursday, March 17, 2011

அறிவியல்



எல்லோருக்குமே நாம் வாழும் உலகைப் பற்றியும் அதில் உள்ளவைகளை பற்றியும் முழுமையாக தெரிந்துகொள்ள ஆசைதான். ஆனால் பல சமயங்களில் புரியாமலும் பொறுமையில்லாமலும் நாம் நம் ஆசைகளை நிறைவேற்ற இயலாமல் போய்விடுகிறது. அறிவியலின் கடினமான பகுதியே அதுதான். முழுமையாகவும் சொல்ல வேண்டும் அதே சமயம் எளிமையாகவும் சொல்ல வேண்டும். வலைப்பூக்களில் எளிமையாக தமிழில் கடினமான அறிவியல் விசயங்களை சொல்லும் வலைப்பூக்கள் பல உள்ளன. அதிலிருந்து ஒரு 10 பதிவுகளை சுட்டிக்கட்டுகிறேன்.

⇒ சென்னைக்கு எப்படி பெயர் வந்தது
பதிவர்: மலாக்கா முத்துகிருஷ்ணன்
எழுதும் வகைகள்: தொழிற்நுட்பம், அறிவியல், சமூகம்

⇒ கிருமி பரப்பும் ATM மெசின்கள்
பதிவர்: மகாதேவன்-V.K
எழுதும் பிரிவுகள்: அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம்

⇒ விலங்குகளின் தற்காப்பு ஆயுதம்
பதிவர்: Dr. சாரதி
எழுதும் வகைகள்: அறிவியல்

⇒ நம்ம பூமியின் கதை
பதிவர்: M.S.E.R.K.
எழுதும் வகைகள்: அறிவியல்

⇒ காருக்கு பெட்ரோல் தேவையில்லை
பதிவர்: jothi
எழுதும் வகைகள்: அறிவியல், சமூகம், நகைச்சுவை

⇒ கொடூர கொலைகாரிகள்
பதிவர்: ஜெகதீஸ்வரன்
எழுதும் வகைகள்: அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம், நகைச்சுவை

⇒ பெண்களே நோய் எதிர்ப்பு சக்தி கூடியவர்கள்
பதிவர்: pirabuwin
எழுதும் பிரிவுகள்: அறிவியல், சமூகம், படைப்புகள், பொழுதுபோக்கு

⇒ அணு, அண்டம், அறிவியல்(தொடர்)
பதிவர்: சமுத்ரா
எழுதும் பிரிவுகள்: அறிவியல், படைப்புகள்

⇒ உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
பதிவர்: வேடந்தாங்கல் கருன்
எழுதும் பிரிவுகள்: அறிவியல், பொது அறிவு, படைப்புகள், சமூகம், நகைச்சுவை

⇒ எக்ஸ்ட்ரீம் சூப்பர் மூன்
பதிவர்: S.Sudharshan
எழுதும் பிரிவுகள்: அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம்

பொறுமையாக படித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி!
மேலும் வாசிக்க...

சமூகம்


சமூகக் கட்டுரைகளும் அறிவியல் கட்டுரைகளும் நம் உணர்வுக்கும் அறிவுக்கும் பயனளிப்பவை. இன்று அப்படிப்பட்ட சமூக/அனுபவ மற்றும் அறிவியல் வலைப்பூக்கள் மற்றும் பதிவுகளைப் பற்றி காணப் போகிறோம்.

சமூகக் கட்டுரைகளில் பல ஆழ்ந்த கருத்துக்கள் செறிந்திருக்கும். சில சமயங்கள் பதிவர்களின் அனுபவங்கள் கூட நமக்கு பாடங்கள் கற்றுத்தரும்.

» I accept my defeat Dr.SR - Muniappan
இவர் ஒரு மருத்துவர். பல விதமான அனுபவக் கட்டுரைகளை நன்கு ரசிக்கும்படி எழுதுகிறார். இக்கட்டுரையில் தன் வாழ்வில் தன் சீனியர் டாக்டர் ஒருவரின் பெருந்தன்மையை போற்றிச் சொல்கிறார்
» தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனிவழி - ஊடகன்
இவரது வலைப்பூவில் பலவிதமான சமூகக் கட்டுரைகளை காணலாம். இது தன்னம்பிக்கை அளிக்கும் நல்லதொரு பதிவாகும்.
» வாழ்க்கைக் கோலங்கள் - Kalidoss
இவர் கவிதை அனுபவக் கட்டுரைகள், சமூகக் கட்டுரைகள் என பலவற்றை எழுதுகிறார். இந்த வாழ்க்கைக் கோலங்கள் தொடர் வாழ்வில் பல முக்கிய தருணங்களை சுவைபடச் சொல்லும் ஒரு அனுபவக் கட்டுரைத் தொடர் ஆகும்.
» Taken for granted! - அன்புடன் அருணா
இவர் கவிதை கட்டுரை என பல விதங்களில் எழுதுகிறார். நன்றி சொல்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் இக்கட்டுரை சிறப்பாக உள்ளது.
» நம் இலக்கை நாம் அறிந்தால் வெற்றி நம்மை அறியும்..!! - பிரவின்குமார்
இவர் நகைச்சுவை, கவிதை, பல்வித சமூகக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். இந்த பதிவு ஒரு சிறந்த வெற்றிக்கான இலக்கை நாம் தீர்மானிப்பதின் முக்கியத்துவத்தை சொல்கிறது.
» அனுபவம் புதுமை - Geetha Ravichandran
இவர் கவிதை, கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். இந்த பதிவு நம் அனுபவங்களை பற்றியும் அதனிலிருந்து நாம் எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும்  சொல்கிறது.
» குழந்தைய பெக்கச் சொன்னா குட்டி சாத்தானை ... - இரவு வானம்
இவர் நகைச்சுவை, கதை, கட்டுரைகள், சினிமா  போன்றவற்றை எழுதி வருகிறார். இந்த பதிவு இக்காலத்தில் குழந்தைகளின் பேச்சு வழக்கம் சிறு வயதியிலேயே எப்படி மோசமாக மாறிவிட்டது என்பதை வேதனையுடன் விளக்கும் ஒரு பதிவாகும் சிறந்த வெற்றிக்கான இலக்கை நாம் தீர்மானிப்பதின் முக்கியத்துவத்தை சொல்கிறது.
» என்னோட ராவுகள் . . . - மார்கண்டேயன்
இவர் கவிதை,  கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். தன் சொந்த ஊரான மதுரையில்  இளமைக்காலங்களை பற்றி சற்று நெகிழ்ச்சியாக சொல்கிறது இ ந்த பதிவு.
» விளையாட்டுப் போட்டியும் மாங்காய் மரமும்… - Mohamed Faaique
இவர் நகைச்சுவை, கதை, கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். இந்த பதிவு தன் பள்ளி அனுபவத்தை மிக நகைச்சுவையாக சொல்லும் ஒரு பதிவாகும்.
» செதுக்குமுத்து - விமலன்
இவர் கவிதை, பல்வித அனுபவக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். இவரது அனுபவங்கள் படிக்கும்போது கதைகள் போல இருப்பது வித்தியாசமாக உள்ளது. நம் வாழ்வில் இயல்பாக நிகழும் விட்டுப்போகும் வேலைகள் பற்றி ஒரு நெடிய அனுபவப் பதிவு.

அடுத்த பதிவில் பத்து அறிவியல் பதிவுகளை சுட்டிக்காட்டுகிறேன். நன்றி!
மேலும் வாசிக்க...

Wednesday, March 16, 2011

கவிதைகள்



கவிதைகள் எழுதுவது மிக எளிதான விசயமல்ல. அதுவும் இலக்கண மரபு மாறாமல் எழுதுவது கடினம். எல்லோருக்குமே கவிதை எழுதும் ஆசை உண்டு. சிலர் முயற்சித்தும் பார்ப்போம். ஆனால் முடிவில் தோற்றுபோய் இந்த பழம் புளிக்கும் என கைவிடுபவர்கள் இங்கே நிறைய பேர் உண்டு!:-)

ஆனால் ரசிக்கும்படி கவிதை எழுதும் பதிவர்கள் இங்கே நிறைய உண்டு அவர்களில் சிலரை இன்று காண்போம்.

கவிதைப் பூக்கள்

சு.மோகன்
கவிதை, கட்டுரை, சினிமா என எழுதும் இவரின் பதிவுகளில் ஜென் தத்துவங்கள் நிரம்பி வழியும். கடமைகள் மற்றும் வால் அறுந்த மீன் கவிதைகளை படித்து பாருங்கள் சொல்லாமல் பலவற்றை சொல்லும்.
இராமசாமி இவரும் பல கவிதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள் எழுதுகிறார். இவரின் கவிதைகளில் சில காணமல் போனவனை பற்றிய அறிவிப்பு, இராமசாமி மாமாவின் கடவுள்

சி.கருணாகரசு
பாறை உடைக்கும் பனிப்பூக்கள், நட்பு - இக்கவிதைகள் நிச்சயம் உங்களை கவரும். இவரும் பல கவிதைகள் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
தஞ்சை.வாசன் அழகான கவிதைகளை இவர் தளத்தில் காணலாம். இவரின் கவிதைகளில் சில - என்னுயிர் நண்பா!, ஏழை

தீயஷக்தி
சின்ன சின்னதாக நிறைய கவிதைகள் இவர் தளம் முழுதும் நிறைந்திருக்கும். இவரின் ரசிக்க வைக்கும் கவிதைகளில் சில - தாத்தாப் பூ, ஒப்பில்லா உன்னத நண்பன் நீ
Pranavam Ravikumar a.k.a. Kochuravi புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் பதிவர் இவர். கவிதைகள் நன்றாக எழுதுகிறார். படித்துப்பாருங்கள். அவற்றில் சில -ஓர் நாள் வரும், காகித எழுத்து

கல்பனா
அழகாக கவிதை எழுதுபவர்களில் இவரும் ஒருவர். இவரின் ரசிக்க வைத்த கவிதைகளில் சில- அழுகை, நான் வாழ்ந்த நாட்கள்
சிவகுமாரன் செய்யுள் இலக்கண முறைப்படி கவிதை, பாடல்கள் எழுதுவது இவர் சிறப்பு . நான் ரசித்த சில கவிதைகள் - படிச்சுக் கிழிக்க வேண்டாம், சிகரெட்

Arun
கவிதைகள், நகைச்சுவைகள் பலவற்றை என எழுதுகிறார் இவர். இவரின் கவிதைகளில் நான் ரசித்த இரண்டு - கனவைப் பறித்தவள், ஹைக்கூ தொகுப்பு
சுபத்ரா கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என பல எழுதி வருகிறார். காதல் கவிதைகளுக்கென தனி வலைப்பூ வேறு வைத்திருக்கிறார். இவரின் கவிதைகளில் சில - அப்பனுக்கு பிள்ளை, காதல் 
மேலும் வாசிக்க...

கதைகள்


கதைகளையும் கவிதைகளையும் வலைப்பூக்களில் அதிகம் காணலாம். பத்திரிக்கைகளில் வெளியாகுமோ ஆகாதோ என்ற தயக்கமில்லாமல், தங்கள் திறனை எப்படி வெளிப்படுத்துவது என்றக கவலையில்லாமல் இங்கே தாரளமாக நம்மை நம் முயற்சியை செய்யலாம்.

இன்று கதைகள் கவிதைகள் சம்பந்தபட்ட பதிவுகளை இடுகிறேன். முதலில் நான் ரசித்த கதைகளில் பத்தை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

கடைசி நிமிடங்கள் கணேஷ் இவர் நன்றாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகளையும் அறிவியல் விசயங்களையும் எழுதுவார். இவரின் படைப்புகளில் என்னை கவர்ந்த ஒன்று இது.
ஒரு குட்டி ஆசை! பொன் கார்த்திக் எல்லோர் வாழ்விலும் இது போன்ற ஒரு ஆசையும் கசப்பான அனுபவமும் இருக்கும். அதைப் போன்ற ஒரு விசயத்தை பற்றிய கதை. இவரின் பதிவுகள் எல்லாமே வாழ்க்கை அனுபவம் போலவும் கதைகள் போலவும் இருக்கின்றன.
பைரவன் கோவிலுக்கு வழி pappu இவரும் விஞ்ஞான சிறுகதைகள் நிறைய எழுதுவார். மேலும் நகைச்சுவை, கவிதை, சினிமா என பல வித பிரிவுகளில் எழுதுகிறார். இவரின் இக்கதை ஒரு வித்தியாசமான ஒன்றுதான்.
உலகின் கடைசி மனிதன் Prasanna இதுவும் ஒரு விஞ்ஞான கதைதான். நிச்சயம் ரசிப்பீர்கள். இவரும் கதை, கவிதை, கட்டுரை என பல விசயங்களை எழுதுகிறார்.
இதுவும் கடந்து போகும் தமிழ் உதயம்இவர் பல வித சமூகக் கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார். இக்கதை நிச்சயம் உங்கள் உணர்வுகளை அசைத்துப் பார்க்கும்.
60+இன் புலம்பல் G.ராமசாமி இவ்வலைப்பூவில் பலர் எழுதிய ஏராளமான கதைகள் உள்ளன. பல விதமான கதைகள் ரசிக்க கிடைக்கும். சில விசயங்கள் எத்தனைக் காலங்கள் ஆனாலும் மாறாது என்பதை சொல்லும் கதை இது.
நாயே நாயே பத்மினி இவரது வலைப்பூவில் ஏராளமான நகைச்சுவை கதைகளை காணலாம். தில்லுதுர, டேனி போன்ற கதாபாத்திரங்கள் வாயிலா நிறைய நகைச்சுவை கதைகளை சொல்கிறார்.
அடடே..நம்ம குவார்டர் கோவிந்தனக் கேக்குறீங்களா?? படைப்பாளி குட்டியாக குட்டியாக கவிதைகள் எழுதுவதில் வல்லவர் இவர். ஓவியமும் நன்றாக வரைவார். இவர் எழுதிய ஒரு வித்தியாசமான கதை இது.
கால்ஷீட் பிரபு எம் இவர் விளையாட்டு, சினிமா, கதைகள் போன்று பல பிரிவுகளில் எழுதுகிறார். இவரின் ஒரு நல்ல வித்தியாசமான கதை இது.
வீடு சித்ரன் வாடகை வீட்டில் இருக்கும் நிறைய பேரின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் கதை இது. இவரின் வலைப்பூவில் நல்ல கதைகள் பலவற்றை காணலாம்.

அடுத்து பத்து கவிதை வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன்.


 
இந்தப் படம் கூட ஒரு கதை சொல்லும்!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது