07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 31, 2007

நினைவுகளை கிளறியவை..!

நான் சின்ன வயதாக இருக்கும் போது.. டைப் கிளாஸ் போகும் என் பெரிய அக்காவை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களை மட்டும் டைப் அடித்து வராமல்.. சிவன், கிருஷ்ணர், மலை, இயற்கை காட்சிகள் போன்றவற்றை டைப் அடித்து வருவார்.

அந்த விதவிதமான டைப் ஓவியங்களை ஒரு பெரிய நோட்டில் ஒட்டியும் வைத்திருப்பார். கூடை பின்னுவது, கோலம் வரைவது மட்டுமின்றி, புனைவுகள் எழுதுவதிலும் ஆர்வமிக்கவர் அவர்.

பெரிய அக்கா கதை சொல்லும் அழகே தனி. குரலில் நல்ல ஏற்ற இறக்கம் இருக்கும். அதிகம் அவர் சொல்லுவது நகைச்சுவை கதைகளாக இருக்கும். வெறும் வார்த்தை ஜாலம் செய்ய்யும் மொழி விளையாட்டு கதைகள் அல்ல அவை. அத்தனையும் காட்சிப்படுத்தப்பட்ட கதை.

அந்த அக்காவுக்கு கல்யாணம் நடந்த போது என் வயது பதினைந்து. இன்று இரண்டு வயது வந்த குழந்தைகளின் தாய் அவர். அவரின் இளவயதில் இருந்த கதை சொல்லும் குணம் இன்று இல்லை. அவரின் கல்லூரிக்காலத்துடனே அவரின் துடுக்கதனம், கதை சொல்லுவது எல்லம் குறையத்தொடங்கி இருந்தது.. இன்று சுத்தமாக கதைஇ வாசிப்பு கூட இல்லாமல் இருக்கிறார்.

கடைசியாக அவரை இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்த போது.., "என்னக்கா.. இப்ப எல்லாம் ஒன்னோட குழந்தைகளுக்கு கூட கதை சொல்லுறதில்ல போலிருக்கே. டிவியில காமடி காட்சியில் கூட சிரிக்க மாட்டீங்கிறியேன்னு" கேட்டேன். அவர் விரக்தியாய் ஒரு சிரிப்பை உதிர்த்தார். அந்த சிரிப்புக்கு எனக்கு பொருள் புரியவில்லை. ஆனால்.. முரட்டு குணம் கொண்ட அத்தானுக்கு இது எல்லாம் பிடிக்காது என்று எனக்கும் தெரியும். என்ன செய்ய.. கற்பகமக்காவின் இந்த பதிவு ஏனோ.. எனக்கு சுயத்தை இழந்து வாழும் என் அக்காவை நினைவு படுத்தியது. :(

**

ஒரு காலகட்டத்தில் மடல் வழி தொடர்புகளான பேனா-நட்புகள் எனக்கு நிறைய இருந்தது. இன்றும் என் நண்பர்களில் பலர் இந்த பேனா- நட்பு மூலம் ஏற்பட்டவர்கள் தான். அப்படி ஏற்பட்ட ப்பல நட்புகளில் சிலது மட்டும் குடும்ப நட்பாக மாறி இருக்கிறது. இந்த பதினைந்து வருடங்களில் அப்படி ஏற்பட்ட நட்புகளில் பலரை குறிப்பிட்டு சொல்ல முடியும். இந்த பாலா இன்றும் உயிர்ப்போடு இயங்குவதுக்கு அந்த நட்புகளும் முக்கிய்ய காரணம். அது போல.. வலை உலகிலும் நட்புகள் சாத்தியம் என்பதை இந்த இரண்டு ஆண்டுகளில் உணர்ந்திருக்கிறேன். கிட்ட தட்ட ஒத்த கருத்துடையவர்களை, அல்லது தமிழ் நேசிப்பவர்களை தாயகம் விட்டு பிற இடங்களில் வாழும் போது நட்பு கொள்வது என்பதே சுவாரஸ்யமான விசயம். நிறைய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும். அப்படியான உணர்வை வாசிக்கும் போதே தந்தது துளசியம்மாவின் இந்த பதிவு.

**

மனித மனங்கள் பற்றி யோசிக்கையில் சில சந்தர்ப்பங்களில் வியப்பும், வேதனையும் எனக்கு தோற்றுவிக்கும். எல்லா வகையிலும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர் மேல் பாரத்தை சும்மத்தி விட்டு தப்பிக்கப் பார்க்கும். இப்படி பல விதங்களில் என்னை அலைக்கழிக்கும் இந்த மனிதர்கள் மேல் ஏனோ.. எப்போதும் என்னால் அதிக பட்சமாய் அரைமணி நேரத்திற்கு மேல் கோபமாய் இருக்க முடிவதில்லை. இதோ நிவேதா வின் இந்த எழுத்துக்கள் அப்படியான பல எண்ணங்களை எனக்குள் ஏற்படுத்தியது.

**

திதி செய்ய மனமில்லை
இன்னும் வாழ்கிறாள்
மனதில் அம்மா.

-என்று நான் குறுங்கவிதையாய் எழுதியதும் என் நெருங்கிய நண்பனின் அனுபவத்தைத் தான். அந்த வரிகளில் மூழ்கி.. என் தோள் தட்டாதவர்கள் குறைவு. அம்மா என்ற சொல்.. வெறும் சொல்லாக மட்டும் பார்க்கப்படுவதில்லை என்பதை திடமாக நம்புகின்ற நபர்களில் நானும் ஒருவன்.

அளவுக்கதிகமாய் நேசித்த கணவன் இறந்து போன.. அதே வீட்டில் தானும் இறக்கவேண்டும் என்ற அசட்டு வைராக்கியத்துடன் வாழும் கிழவிகளை நான் பார்த்திருக்கிறேன். பையன்களும், பிள்ளைகளும் சொந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு குடியேறியபின்னும், தனித்து.. தன் கடைசி நாட்களை அதே வீட்டில் எண்ணிக்கொண்டு வாழும் கிழவிகள் இங்கே நிறைய உண்டு.

ஆவி வந்த வீடு என்றெல்லாம் சொல்லபடுகின்ற வழக்கம் இன்றும் தென்மாவட்டங்களில் உண்டு.

சரி.. இது எல்லாம் சொந்த வீட்டுக்காரர்களுக்கு.., நீண்ட காலமாக வாடகை வீட்டில் வாழ்பவர்கள் நிலை..?! கிளைகள் முறிக்கப்பட்டு மொட்டையாய் நிற்கும் மரங்கள் மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன. வாடகை வீட்டினரை நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.

புலம் 'பெயர்க்கப்பட்டவர்'களின் நிலை... எழுத்துக்களினால் சொல்லிவிட முடியாத் துயரமது. நெஞ்சை அடைக்கும் அப்படியான பதிவு இது. மூஊஊஊஊஊத்த பதிவரான சந்திரமதியின்( அப்பாடா.. ம.க.ச-வை ஆரம்பிச்சாச்சு) எழுத்தின் வன்மையை இதில் உணரலாம்.

***

இன்னுமிருக்கு..
மேலும் வாசிக்க...

Monday, July 30, 2007

வந்துட்டோம்ல..!

வணக்கம் நண்பர்களே!

திட்டமிட்டபடி இந்த வாரத்தை ஒழுங்கமைவுடன் கொண்டு செல்லமுடியுமா.. என்பதும் சந்தேகமே! பட்டறைக்கான வேலைகள் கழுத்தை சுற்றி தோளில் கணக்கும் அனகொண்டா போல இறுக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த இடைவெளில் இப்படி அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து விட்டுப் போகிறேன்.


நூறு பதிவுகளை தொட்டு விட்ட சமயம் பலரிடம் என் பதிவுகளில் பிடித்தவை(!) பற்றி கருத்து கேட்டிருந்தேன். பலர் பின்னாங்கால் பிடறியில் பட ஓடி விட்ட நிலையில்... சிலர் மட்டுமே துணிந்து பொய் சொல்ல வந்தார்கள். அவர்கள் சொன்ன கருத்து இங்கே!

அந்த சமயத்தில் விட்டுப் போய் தன் கருத்தை.. அவரசமாக பதிவு செய்தார் என் செல்ல மகள் ( நான் இவங்களுக்கு சித்தப்பு முறை)

கவிஞர்.தாஜ் இவரை பற்றிய தனி அறிமுகம் தேவை இருக்காது. பிரபலமானவர். ஆனந்த விகடன் நடத்திய ஒரு போட்டியில் சிறந்த கவிதைகளில் ஒன்றாக இவரது கவிதையும் தேர்வானது. காந்திvsபெரியார் என்ற இவரது பதிவு நல்ல பொக்கிசம். உண்மையை இணையத்தில் பதிவு செய்தமைக்கு இவரை பாராட்டலாம்.

கீற்று டாட் காம் தளத்தில் வந்து கொண்டிருக்கும் பெரியாரின் பேச்சுக்கள், தலையங்கம், கருத்துக்கள் இந்த பகுதியில் தான் சேமிக்கப்பட்டிருக்கிறது. பெரியாரின் எண்ணங்களை ஒருங்கு குறியில் பார்க்கவும், படிக்கவும் இந்த சுட்டி பயன்படலாம்.

என் பாசமிகு அண்ணன் ஆதவன் தீட்சன்யா-வின் படைப்புகளை ஒரே இடத்தில் காண இங்கு சொடுக்கவும். இவரைப் பற்றி நான் சொல்லுவதை விட இவரது படைப்புக்கள் சொல்லும் வாசித்துப் பாருங்க!

அடுத்த அண்ணான் அழகியபெரியவன் எழுத்துக்கள் தமிழகத்தில் தனித்த அடையாளம் கொண்டவை. அவற்றை இணையத்தில் சில வாசிக்க கிடைக்கிறது. அதன் தொகுப்பு இங்கே. இவறைப்பற்றியும் தனி அறிமுகம் தேவை இல்லை. படைப்புகள் பறைசாற்றும் இவரைப் பற்றி!

மீண்டும் அடுத்த பதிவில்..
மேலும் வாசிக்க...

Sunday, July 29, 2007

பாகச வாரம்

பிள்ளையாரை வேண்டிக் கொண்டு தொடங்கினாலும், பொகச வேலைகளுடன் தொடங்கியதால் அகிலனின் வாரம் முழுமையடையாமலே போய்விட்டது போலும்.. ;-) நிறைய முன் தயாரிப்புகள் இருந்தாலும் பயன்படாமல் இரண்டே பதிவுகள் இட்டு விட்டு நகர்ந்திருக்கிறார் அகிலன். சேமித்து வைத்த சுட்டிகளை, பிறிதொரு சமயம் அவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் வலைச்சர ஆசிரியருக்கு நன்றி கூறுகிறோம்..

அகிலனைத் தொடர்ந்து இந்த வாரம், பா.க.ச வாரம். அகில உலக பா.க.ச தலைவராக நம்மிடையே அறிமுகமாகி இருக்கும் கவிஞர் பாலபாரதி, தான் படித்த, ரசித்த பதிவுகளைப் பகிர்ந்து கொள்ள வருகிறார். வரும் ஞாயிறன்று சென்னையில் நிகழவிருக்கும் பதிவர் பட்டறை நிர்வாகக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தாலும், வலைச்சரத்தையும் தொகுக்க வந்திருக்கும் (தல) பாலபாரதியை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்..

வாங்க தல.. பாகச மக்களே, ரெடி, ஸ்டார்ட் மீசிக்
மேலும் வாசிக்க...

Friday, July 27, 2007

பாலபாரதி சொன்னது போல....!!!

அன்பர்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடவேண்டுகிறேன். வலைச்சரத்தில் எனக்கு ஒரு பொறுப்பான கடைமையைக் கொடுத்தும் அதை சரிவர செய்ய முடியவில்லையே என்கிற கவலையில் இடப்படுகின்ற பதிவு இது.

என்ன செய்ய முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.

நான் வழக்கமாக ஒரு இணைய உலாவி மையத்தில் எனது இணையம் சார், மற்றம் தட்டச்சிடும் பணிகளை மேற்கொள்வது வழக்கம். பலர் அலுவலக கணிணிகளை தங்களது சொந்த கணிணியாக பயன்படுத்துவது போல நான் அங்கிருக்கும் கணிணியை பயன்படுத்துவதுண்டு. ஆனால் திடீரென்று அந்த மையத்தின் உரிமையாளரது தயார் மதுரையில் இறந்து விடவே. அவர் கடையை ப+ட்டி விட்டு மதுரைக்கு போய்விட்டார்(போகத்தானே வேண்டும்) ஆகவே இந்த வலைச்சர வாரத்துக்கான எனது முன்தயாரிப்புக்கள் அனைத்தும் ப+ட்டப்பட்ட நிலையில் வெளிவரமுடியாமல் சாவியற்றுத் துடிக்கின்றன. இந்த வாரத்தை அமர்க்களப்படுத்தும் திட்டங்கள் இருந்தும் அதையெல்லாம் செய்யமுடியாமல் விதியின் சதி என்னை தடுத்து விட்டது…

இனி விதியின் சதியை மீறி…

இந்த வார வலைச்சரத்தின் முதலாவது தொகுப்பு இது.


01.
இது புல்வெளி. ஈழத்தின் மிக முக்கியமான கவிஞராக கருதப்படுபவரால் நடத்தப்படுகின்ற வலைப்பூ இது. தமிழகத்தினால் ஆலவட்டம் போடப்பட்டு ஆராதிக்கப்பட்டு வருகின்ற ஈழத்துக் கவிஞர்களில் இவர் அடங்கவில்லை என்றாலும் ஈழத்தில் அடுத்த தலைமுறைக் கவிஞர்களின் வளர்ச்சியில் பெருமளவு ஆதிக்கத்தையம், அவர்களது வளர்ச்சிக்கான ஊக்கத்தையும் விளங்குகின்ற மூத்த கவிஞர் இவர். அவர்தான் கருணாகரன் இரண்டு கவிதைத் தொகுதிகள் தொகுதிகள் ஏற்கனவே வந்திருக்கின்றன.

இப்போதும் தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகின்ற. இவர் உலகம் முழவதிலும் இருந்து வெளிவரும் தமிழ் நாளேடுகள் சஞ்சிகைகளிலும் அரசியற்பத்திகளும் விமர்சனக்கட்டுரைகளும் எழுதி வருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கேயும் இட்டு வைத்துள்ளார்.

02.
அடுத்தது பஹீமா ஜகான் கவிதைகள். ஈழத்தில் புதிய தலைமுறை பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர். ஒரு ஆசியயையாக இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் ஆசிரியப்பணியில் மூழ்கிக் கிடப்பதனால் வலைப்பூக்களில் அதிக நேரம் செலவிடுவதில். மிகவிரைவில் தமிழகத்தில் இருந்து பனிக்குடம் வெளியீடாக இவரது தொகுதி ஒன்று வெளிவரஇருக்கிறது. கவிதையால் உங்களை திணற அடிக்க இந்த வலைப்பூ தயார் உள்ளே போங்கள் பஹீமா ஜகான் கவிதைகளின் நனைய.


03.
இது காற்று. புல்வெளிக்குப்போய்ட்டு காத்து வாங்கலன்னா எப்புடி.நேற்றைய காற்று என்கிற வானொலி நிகழ்ச்சி மூலம் இலங்கையில் பிரபலமான வானொலியாளர். அதைவிடவும் மிக நல்ல கவிஞர். அவர்தான் இலங்கையில் நன்கு அறியப்பட்ட கவிஞர் மற்றும் வானொலியாளர் யு.எல் மப்றூக். அதைவிட பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக பத்திகள் எழுதிவருகிறார். இவரது கவிதைகளும் உங்களை ஆச்சரியப்படுத்தும். நிச்சயம்.


இன்னும் கொஞ்சம் வலைப்பூக்களின் தொகுப்பு இருந்தது. ஆனால் எல்லாம் இப்போது கைவசம் இல்லை. அதைவிட இவர்களுடைய எழுத்துக்களில் இருந்து சிலதை இங்கே இடவும் எண்ணியிருந்தேன். பாமினி அல்லாத தமிங்கிலீசில் தட்டச்சிடும் சிரமம் என்னை வருத்துகிறது.மன்னிக்கவும் நண்பர்களே.


இனி தலைப்புக்கு காரணம்.

நான் வலைச்சரத்தின் முதல் போட்ட பதிவிற்கு பாலபாரதி பின்னூட்டம் போட்டிருந்த பா.க.ச தலைவர் இப்படி சொல்லியிருந்தார்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
அடப்பாவீ... ஒனக்கு ஒரு பொருப்பான வேலையைக் கொடுத்தா... அங்கன போயும் சங்கத்தை திறப்பேன்னா.. என்ன அர்த்தம்...?!


கடைசியா சங்கத்தை திறந்தது தான் மிச்சம் ஒழுங்கா ஒரு பதிவு போட முடியல. அந்த வருத்தத்தில தான் இப்படி ஒரு தலைப்பு வைச்சேன். (நல்லா குழப்புறீங்களே எண்டு நினைக்கிறியளோ…)

யக்கா பொன்ஸ் அவர்களிடம் ஒரு கேள்வி யக்கா நான் எப்ப அமானுஷ்ய கதைகள் எழுதினேன்!!!!!!!
மேலும் வாசிக்க...

Tuesday, July 24, 2007

பொன்ஸின் தும்பிக்கையால் தூக்கிவரப்பட்டு...

நண்பர்களிற்கு வணக்கம் என்னதான் வலைப்பூவில் எழுதிக்கிழித்தாலும் உங்களில் நிறையப்பேருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் வலைப்பதிவுகளை விட வலைப்பதிவர் சந்திப்புக்கள் மூலமாக கொஞ்சப்பேருக்கு அறிமுகமாயிருப்பேன் என்று நினைக்கிறேன்.

நான் படித்த இரண்டாமாண்டு சைவநெறி புத்தகத்தில் முதலாம் பாடமாக ஒரு கதை இருந்தது. யாரோ இரண்டு நாயன்மார்களோடு ( பேர் மறந்து போச்சுங்க) சேர்ந்து கொண்டு ஒளவைப்பாட்டி கைலாயத்திற்கு போகவிரும்பியதாகவும். அதற்காக ஒவைப்பிராட்டி வழக்கமாக தான் பூசை செய்கிற பிள்ளையாருக்கு அவசரஅவசரமாக பூசை செய்துவிட்டு போக வெளிக்கிட்டாராம். உடனே பிள்ளையாருக்கு விளங்கிவிட்டதாம் ஒளவையார் அவசரமாக பூசை செய்கிறார் என்று. (மோதகம் சைசில் வழமையை விட சின்னதாயிருந்ததை வைத்து கண்டு பிடித்திருப்பாரோ) உடனே அவர் ஒளவையிடம் கேட்டிருக்கிறார் பாட்டி ஏன் அவசரப்படுகிறாய் என்று. ஒளவையும் காரணத்தை சொல்லியிருக்கிறார். உடனே பிள்ளையார் இதென்ன பிரமாதம் நீ வழமை போல மோதகத்தை பெரிசாப்பண்ணு சீ பூசையைப் பெரிசாப்பண்ணு நான் உன்னை வேகமாக கொண்டு போய் சேர்க்கிறென் என்று சொல்லி பூசை முடிந்ததும் ஒளவையை தும்பிக்கையால் தூக்கி கைலாயத்தில் வைப்பாராம் என்று அந்த கதை முடியும். ஏ4 அளவைவிட சற்றே பெரிய அளவில் இருக்கும் அந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்தில் இருக்கும் கைலாயத்திற்கு தும்பிக்கையில் ஒளவைப்பாட்டியை அலற அலற இல்லை இல்லை அலேக்காக பிள்ளையார் தூக்கி வைக்கும் காட்சியும் வரைந்திருப்பார்கள்.

நண்பர்களே இந்த கதையை இவ்வளவு வேலை மினக்கெட்டு இங்கே எழுதுவதன் நோக்கம் என்ன. எங்கோயோ தொலைவில் கனவு கண்டு கொண்டு (அதாங்க தூங்கிக்கொண்டு ) இருந்த என்னை தனது தும்பிக்கையால் தூக்கிவந்து வலைச்சரத்தில் வைத்து விட்டார் பொன்ஸ் அக்கா. நேற்றே அவர் வரச்சொல்லியிருந்தும் நான் அதிகமாக தூங்கிவிட்டதால் வரமுடியவில்லை. அதனால் தான் தனது தும்பிக்கையால் ஒரு தட்டு தட்டி இன்று தூக்கி வந்திருக்கிறார்.

என்னைப்பற்றி நானே சொல்வதற்கு வேற எதுவும் இருப்பதாய் நினைக்கவில்லை எதற்கும் இருக்கட்டும் என்று சினேகிதி இங்கே வலைச்சரத்தில் எழுதியதையே மறுபடியும் படித்து பார்க்கு மாறு வேண்டுகிறேன். வரும் நாட்களிலும் எனது பொ.க.ச பதிவுகள் தொடரும் மன்னிக்கவும்(ஹி ஹி ஹி) வலைச்சரப்பதிவுகள் தொடரும். முதல் முறையாக பாமினியில் அல்லாமல் தமிங்கிலீசில் தட்டச்சிடுவதால் எழுத்துப்பிழைகளை பெரிய மனசு பண்ணி மன்னிக்கவும்….
மேலும் வாசிக்க...

Monday, July 23, 2007

இந்த வாரம்....

வரிசையாக நான்கு இடுகைகள் இட்டு வலைச்சரத்தை கோர்த்திருக்கிறார் வினையூக்கி. பல நல்ல இடுகைகள் கொடுத்தாலும் சரியாக தொகுத்து, பாக்கேஜ் செய்யவில்லையோ என்று தோன்றுகிறது.. இன்னும் வகை பிரித்து விட்டிருந்தால் சிறப்பு கவனம் பெற்றிருக்கக் கூடிய சுட்டிகள்..

அடுத்ததாக வலைச்சரம் விட வருபவரும் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் - கனவுகளின் தொலைவில் மனதை உருக்கும் நடையில் எழுதும் அகிலன். அகிலன் கனவுகளில் கொஞ்சத்தை நம்மோடும் பகிர்ந்து கொள்ள வருகிறார்....
மேலும் வாசிக்க...

Friday, July 20, 2007

தமிழ்மண விவாதக்களம் சில சுவாரசியமான விவாதங்கள்

தமிழ்மண விவாதக்களத்தில் நடைபெற்ற சில சுவாரசியமான விவாதங்கள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய விவாதம் --->
கடவுள்

கோயில்களின் தற்போதைய நிலைப்பாடு, அது உண்மையிலேயே கடவுள் வீற்றிருக்கும் இடமா? --- >
கடவுளின் இருப்பிடமா

பரம்பரை அரசியல் மன்னராட்சியில் மட்டுமன்றி, மக்களாட்சியிலுமா --->
வாரிசு அரசியல் உங்கள் பார்வை என்ன?


சாதிகளின் கூட்டமைப்பே சமுகமா ---- >
சாதிதான் சமூகமா

ஆண் பெண் பாகுபாடுகள் பற்றி ---- >
பெண்ணீயம் ஆண் பித்தளை
மேலும் வாசிக்க...

Thursday, July 19, 2007

ஆவிப்பதிவுகள்

வலைப்பதிவுகளில் அடிக்கடி அண்டார்டிகா ஆவி, அமிஞ்சக்கரை ஆவி , பட்டிக்காட்டு ஆவி, படிச்ச ஆவி என கும்மி பின்னூட்டங்களைப் பாத்திருப்பீங்க..அந்த ஆவி அனானிங்க எல்லாம் ஒரு க்ருப்பாதான் திரியிறாங்க
அதுங்களுக்கு(அவங்களுக்கு?!!!)
தலைவர் --- > ஆவி அண்ணாச்சி
பொது செயலாளர் ---> ஆவி அம்மணி

உண்மையில் பேய், அமனூஷ்ய விசயங்கள் இருக்கிறதா என்பதைப் பற்றி தமிழச்சி விரிவாகவே இரு பதிவுகள் இட்டு உள்ளார்.

பாகம் 1
பாகம் 2


பாரா-நார்மல் விசயங்களைப் பற்றிய ஒரு ஆங்கில வலைப்பதிவு
மேலும் வாசிக்க...

Monday, July 16, 2007

நண்பர்களின் சில பதிவுகள்

இந்த வாரம் வலைச்சரம் அமைக்க வாய்ப்பளித்த பொறுப்பாசிரியருக்கு நன்றிகள்.

வலைச்சரத்தில் முதல் பதிவாக, சில சுவாரசியமான பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பு இதோ

தமிழ்வலையுலகுக்கு புதியவரான பூர்ணிமாவின்
வலைப்பதிவினில் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அவரின் இசைப்பதிவுகளில் அவரின் குரலில் பாடல்கள் சிலவற்றை பதிந்துள்ளார். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த
மாயாவி படத்திலிருந்து
"கடவுள் தந்த அழகிய வாழ்வு, உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடி வாழ்த்துப் பாடு" என்ற பாடல் இதோ


நண்பர்களிடையே ஏற்படும் இட ஒதுக்கீடு பற்றிய வாதப் பிரதிவாதங்களின் போதும், என் நண்பர்களுக்குப் நான் பரிந்துரைக்கும் ஓசை செல்லாவின் இட ஒதுக்கீடு பற்றிய ஆங்கில வலைத்தளம்.

நான் வலைப்பதிந்த ஆரம்பக் காலங்களில், படித்துவிட்டு என்ன ஒரு அருமையான கதை என்று வியந்த சிறுகதை ஆயிரத்தி முன்னூறு ரூபாய் ஒரு சிறுகதைக்கான இலக்கணத்தை இக்கதையில் பார்க்கலாம். இந்தக் கதையை எழுதிய நண்பரும் சக வலைப்பதிவருமான முத்து(தமிழினி) பிற்பாடு கதைகள் ஏதும் அதிகம் எழுதுவதில்லை. முத்து(தமிழினி) யிடம் இந்த வலைச்சரத்தின் வாயிலாக ஒரு விண்ணப்பம், கதைப் பக்கம் மீண்டு(ம்) வாங்க.

என் பேய்க்கதைகளுக்கு மிகப்பெரும் இன்ஷ்பிரேஷன் நாமக்கல் சிபியின் இந்த
அமானுஷ்ய வாசகி தொடர்கதை இதைப்படித்த பிறகுதான் எனது பயங்களின் வடிகாலாக பேய்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.

எப்படித்தான் பணிச்சூழலிலும் நேரம் கிடைக்கிறதோ என்று நான் அடிக்கடி வியப்பவர்கள், மா.சிவக்குமாரும், டி.பி.ஆர் ஜோசஃப் சாரும். மா.சிவக்குமாரின் பொருளாதரக் கட்டுரைகளின் தொகுப்பு இங்கே சிவா வின் மற்ற துறை சார்ந்த பதிவுகளும் போற்றுதலுக்குரியவையே

டி.பி.ஆர் ஜோசஃபின் திரும்பிப்பார்க்கிறேன் ஒரு அருமையான அனுபவத்தொடர்கட்டுரை புத்தகமாக வெளிவரும்போது நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயம் இல்லை.


தொடரும்.
மேலும் வாசிக்க...

என் கதைகளில் சில வலைச்சரமாக

இந்த இரண்டு வருடத்தில் வலைப்பதிவில் நான் நாற்பது கதைகளுக்கு மேல் எழுதியிருந்தாலும் வலைச்சரத்தில் கட்டுவதற்கு சில கதைகள் மட்டுமே தேறுகிறது.

காதல் கதைகள், அமானுஷ்ய கதைகள் எழுதிக் கொண்டிருந்தக் காலத்தில், பொழுதுபோக்கு அம்சம் மட்டும் இருப்பது கதை இல்லை, அதை தாண்டி ஏதாவது ஒரு கருத்து இருக்கவேண்டும் என்று நண்பர்கள் கடிந்து கொண்ட பிறகு எழுதிய கதை நானும் கடவுள்களும் நண்பர்களால் ஓரளவுக்குப் பாராட்டைப் பெற்றக் கதை இது என்று சொல்லலாம்.

அங்கீகாரம், இது மட்டும் இல்லை என்றால் மனிதன் எந்த புது முயற்சியும் எடுக்காமல் அப்படியே ஆதி மனிதனாகவே இருந்திருப்பான். இணைய இதழான பூங்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிகப்பட்ட கதை ஒரு ஞாயிற்றுக்கிழமை சிக்ஸ்த் சென்ஸ் பாதிப்பில் அமைந்துள்ளது என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் பலக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் பாராட்டப்பட்டது.

தேன்கூடு போட்டியில் வாசகர் வாக்குகளில் இரண்டாமிடம் பெற்ற மரணம் மாபெரும் விடுதலை என்றக் கதை.
பரிசு கிடைக்காவிட்டாலும் கூட அதிக பேரினால் பார்வையிடப்பட்ட என்னுடைய கதை இதுதான்.

Agnostic மனப்பான்மையில் எழுதப்பட்ட

வெங்கடாஜலபதிக் கோவில்
என்ற இந்தக் கதை நான் எழுதியவைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதனுடைய sequel ஆக எழுதப்பட்டக்கதை

கோவில் பிரசாதம்


தொடரும்
மேலும் வாசிக்க...

ஊக்கச் சரம்...

வலைச்சரத்தை குட்டிக் குட்டிச் சரவெடிகளாக வெடிக்கச் செய்து கலகலப்பாக்கிவிட்டார் லக்கிலுக். அரசியல், காமெடி, சீரியஸ் கதைகள், இவற்றோடு நையாண்டி, விளம்பரப் பதிவுகள் என்று கூட எழுதுவார் என்று எதிர்பார்த்தோம். மொத்தம் ஐந்து பதிவுகள் இட்டாலும், நல்ல கவனம் பெற்றன என்பதை இங்கு பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள் போன வாரம் பின்னூட்டம் பெற்று மேலெழுந்து வந்ததிலிருந்தே தெரிகிறது.

அடுத்து, இந்த வார வலைச்சரம் தொடுக்க வருபவர், நேரில் பார்க்க அமைதியானவராக இருந்தாலும், அவ்வப்போது பேய்க்கதை எழுதி மிரட்டும், அமானுஷ்ய ஆசிரியர் வினையூக்கி..
வினையூக்கி, வாங்க, இந்த வாரமாவது புள்ளைய(நாந்தேன்) பயமுறுத்தாம, காத்து கருப்பு இல்லாம எழுதுங்க...
மேலும் வாசிக்க...

Saturday, July 14, 2007

மொக்கை சரவெடி!

மொக்கை போடுவதையே முழு நேரத் தொழிலாக கொண்ட பதிவர்கள் ஏராளம் உண்டு. "மொக்கைப் பதிவுகள் எல்லாம் வலைச்சரத்தில் வராதா? யாரும் திரட்ட மாட்டீர்களா? லிங்க் கொடுக்க மாட்டீர்களா? குற்றமென்ன செய்தோம் கொற்றவனே?" என்று கண்ணகி ரேஞ்சுக்கு மெயில் அனுப்பி அன்பாக மிரட்டிய மொக்கை நண்பருக்கு நன்றி சொல்லும் வகையில் இப்பதிவு.

மொக்கைப் பதிவுகளை போட்டுவிட்டு அதற்கு 50, 60 பின்னூட்டங்கள் போட்டுக் கொள்வது அல்லது போடவைப்பது செந்தழலாரின் பாணி. இந்தப் பதிவு மொக்கைகளுக்கெல்லாம் மொக்கை :(
காமதேனு - உண்மையில் இருக்கா ?

கவிஞராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக அறியப்பட்டாலும் இவர் பேரைக் கேட்டவுடனே மொக்கை மன்னர் என்பதாகவே நினைவு வருகிறது. எப்படிப்பட்ட ஒரு சீரியஸான பதிவை மொக்கைத் தலைப்பு மூலம் மொக்கைப் படுத்தியிருக்கிறார் அண்ணன் பாலபாரதி என்று பாருங்களேன்.
டோண்டூ-வும் , கைப்புள்ளை-யும்... வோட்டு வேட்டை!

தலைப்பை பாத்ததுமே எல்லாரும் விழுந்தடிச்சுக்கிட்டு ஓடிப்போய் பார்ப்போம். உள்ளே மேட்டரு மொக்கையா இருந்ததுண்ணா? உண்மைத்தமிழனின் சூப்பர் மொக்கை.
நான் எந்த ஜாதி..?

இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டாய்யா? நாமக்கல்லோட மொக்கைக்கு ஒரு அளவேயில்லையா? :(
நாங்களும் பீட்டாவுக்கு மாறிட்டோம்!

மொக்கை போடறதுக்கு சுப்பையா வாத்தியாருக்கு சொல்லிக் கொடுக்கணுமா என்ன?
வாரத்தில் எத்தனை நாட்கள்?

என்ன கொடுமை சார் இது? பதிவு போட மேட்டரு இல்லன்னா இப்படியா மொக்கை போடுவாங்க? வரவனையானின் மொக்கை
மொக்கை பதிவு என்றால் என்ன ?

மொக்கை போடுறதுக்குன்னே புதுசா ஒரு க்ரூப் கெளம்பியிருக்கு. ஆஹா.. கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்க... குட்டிப் பிசாசின் சூப்பர் மொக்கை
மொக்கை பதிவு என்றால் என்ன ?

ரவிசங்கர் கூடவா மொக்கை போடுவார்?
தமிழ் வலைப்பதிவர் கலைச்சொல் அகராதி :)

ஓவரா மொக்கை போடுவேன்னு தைரியமா சொல்லிக்கிட்டே மொக்கை போடுறாரு வெட்டிப்பயல்.
விசித்திர குப்தன்

வலைப்பூவோட பேரே கும்மியாம். கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
நான் இங்கே சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டிய நிலையில் உள்ளேன்.

"ஏம்பா... ஏன்? நாங்கல்லாம் மொக்கை போட்டதில்லையா... இல்லை போடத்தான் தெரியாதா? எங்க பதிவெல்லாம் ஏன் வரலை?" என்று கேட்கும் அன்பர்களே! "நீங்களும் சூப்பர் மொக்கை தான்.. ஆனாலும் உங்க மொக்கையை எல்லாம் தொகுத்தால் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை விட பெருசாக தொகுக்கணும் என்பதால் விடு ஜூட்!"

வலைச்சரத்தில் வந்த பதிவுகளிலேயே மிக மொக்கையான பதிவு எது தெரியுமா?
கண்ணா.... இங்கே பார்... அழுத்தி அமுக்கு!!!
மேலும் வாசிக்க...

Friday, July 13, 2007

அரசியல் சரவெடி!

தமிழ் வலைப்பதிவுகளில் மிக அதிகமான பதிவுகளை தன்னகத்தே வைத்திருக்கும் துறை அரசியல் துறை. சங்கராச்சாரியார் கைது, தமிழக சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வன்முறை, குஷ்பு-கற்பு-அரசியல் பிரச்சினை, இடஒதுக்கீடு, மதுரை தினகரன் வன்முறை என்று பல விவகாரங்களில், பல தலைப்புகளில் காரசாரமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை வலைப்பதிவாளர்கள் ஆணித்தரமாக பதிந்து வருகிறார்கள். பதிவுலக அரசியலும் பட்டையைக் கிளப்பி வருகிறது :-)))))

இடையில் திமுக, பாமக, கம்யூனிஸ இயக்கங்கள், இந்துத்துவா இயக்கங்கள் மற்றும் இதர அரசியல், மனித உரிமை அமைப்புகளின் ஆதரவாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கொள்கைகளை பரப்பவும் இத்தளத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். நேரடியாக தன்னை அதிமுக ஆதரவாளர் என்று கூறிக்கொண்டு அதிமுகவின் கொள்கைகளை நியாயப்படுத்தக்கூடிய ஒரு வலைப்பதிவர் தோன்றுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் சுனாமியாக உருவெடுத்த சில பதிவுகளை பார்ப்போமா?

அடிக்கடி நான் வாசித்து மகிழும் தொடர்பதிவு இது. ஒரு கைதேர்ந்த பத்திரிகையாளரின் லாவகத்துடன் தோழர் முத்து (தமிழினி) எழுதிய இந்தப் பதிவுகள் வலையுலகில் பலரின் கவனத்தை அவர் பால் திருப்பியது.
சொக்க தங்கமா "சோ" ராமசாமி-- பாகம் 1
சொக்க தங்கம் "சோ" வை உரசிப்பார்ப்போம் -பாகம் -2
சொக்க தங்கம் சோ பாகம் -3(இறுதி)

அருண் வைத்தியநாதன் அவர்களின் இப்பதிவு சோ குறித்த மற்றொரு பரிமாணத்தை காட்டுகிறது.
போற்றுதலுக்குரிய பல்கலை வித்தகர் சோ

தோழர் அசுரனிடம் யாருமே வாதம் செய்ய முடியாது. அப்சல் குறித்து அவர் எழுதிய இந்த கட்டுரை சூப்பர் டூப்பர் ஹிட்
அப்சலும் - அரசியல் ஓட்டாண்டிகளும் - அடிவருடிகளும்

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான உரத்த குரலுக்கு சொந்தக்காரர் தோழர் குழலி. அவருடைய இந்தப் பதிவு இடஒதுக்கீடு குறித்த பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியத்துக்கு இணையானது.
ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு

நான் தொடர்ந்து வாசிக்கும் ஈழப்பதிவர் அண்ணன் சபேசன் அவர்களின் அசத்தலான கட்டுரை இது. ஒருவேளை உண்மையிலேயே ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்கிறாரோ?
கலைஞர் பற்றிய ஒரு பார்வை!

நான் அடிக்கடி கூகிளில் அதிகம் தேடுவது ஈழம், பெரியார் என்ற இருவார்த்தைகளை தான். ஈழப்போராட்டம் குறித்த எனக்கு மாறுபாடான கருத்துக்களை கொண்டிருந்தாலும் மயக்கவைக்கும் மேஜிக் எழுத்துக்களுக்கு சொந்தக்காரரான ஷோபாசக்தி அவர்களின் விரிவான கட்டுரை ஒன்று இதோ :
ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும் - ஷோபா சக்தி

#=@->*& பார்ட்டி வெளியே மிதக்கும் அய்யாவுக்கு இன்னா நக்கலுய்யா :-)
நாடு

இப்போதெல்லாம் ரொம்ப நக்கலாக பேசிக்கொண்டிருக்கும் பொட்டீக்கடையும் ஒரு காலத்தில் சீரியஸாக அரசியல் பேசியவர் தான்
நான் இந்தியனா?

நகைச்சுவையாக அரசியல் பேசுவதில் வல்லவர் உடன்பிறப்பு. எதிர்காலத்தில் இவர் மிகச்சிறந்த பத்திரிகை காலம்னிஸ்டாக வரக்கூடிய வாய்ப்புண்டு.
தமிழக பந்த் பற்றி பொதுநலவாதிகள்

நிறைய சரக்கு இருந்தாலும் கட்டுப்பாடற்ற எழுத்துநடையின் காரணமாக உண்மைத்தமிழனின் பதிவுகளை வாசிப்பதில் ஆயாசம் ஏற்படுகிறது. எனினும் அவரது இந்தப் பதிவு பல செய்திகளை கொண்டது. என்ன வழக்கம்போல கொஞ்சம் நீளம் :-)
மாயாவதியின் மாயாஜாலம்

வழக்கம்போல ஒரு டிஸ்கி : என்னைக் கவர்ந்த அரசியல் பதிவுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் சில பதிவுகளை மட்டுமே இடநெருக்கடி கருதி குறிப்பிட்டிருக்கிறேன். குறிப்பிட்ட பதிவுகளை தவிர மற்ற பதிவுகள் எனக்கு பிடிக்காதவை என்று யாரும் கோள் மூட்ட வேண்டாம் :-)
மேலும் வாசிக்க...

Wednesday, July 11, 2007

சீரியஸ் சரவெடி!

சீரியஸான பதிவுகளை எழுதும் வலைப்பதிவர்கள் மிக அதிகம். ஆயினும் தங்கள் அனுபவத்தில் இருந்து எழுதுபவர்களின் எழுத்து ஏற்படுத்தும் தாக்கம், புனைவு மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதில்லை. கதை, கட்டுரை என்று இலக்கியத்தின் எந்த கூறாக இருந்தாலும் சொந்த அனுபவங்கள் மூலமாக உருவாகும் எழுத்துக்கான வசீகரமே தனி தான். என்னை கவர்ந்த, என் நினைவில் இருக்கும் சீரியஸ் பதிவுகள் சில :

கேலிக்கூத்து! - குட்டி பூர்ஷ்வாவின் இப்பதிவைப் படித்து விட்டு உங்களுக்கு தாவு தீர்ந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

விட்டில் பூச்சிகள் - இளவஞ்சி எழுதிய கதை. இது புனைவா அல்லது அவரது அனுபவமா என்று அவர் தான் சொல்லவேண்டும் :)

ஒரு பத்திரிகையாளரின் பர்சனல் அனுபவம் - தேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது! - சுவையாக ஆரம்பித்து நெகிழ்ச்சியாக முடியும் அட்டகாசமான பதிவு. தடாலடியாரின் மாஸ்டர் பீஸ் இது!

சுடர் விளையாட்டு சுயபுராணமாக தெரிந்தாலும்... சுயமரியாதை கொண்ட - பகுத்தறிவைப் பயன்படுத்த விரும்பிய மனிதனின் வாழ்க்கைப் போக்கு எப்படி போகும் என்பதை படம்பிடித்து காட்டிய பாலபாரதியின் அசத்தல் பதிவு இது... சுடர்:- பத்தவச்சுட்டியே பலூன்மாமா..

ஆனந்தக் கண்ணீர் - சிறுகதையா அல்லது கவிதையா என்ற குழப்பமிருந்தாலும் தன் உணர்ச்சிகளை தெளிவாகவே இப்பதிவில் கொட்டியிருக்கிறார் விவசாயி!

மே 21, 1991 - 1
மே 21 1991 - 2
மே 21, 1991 - 3
மே 21, 1991 - இறுதிப்பாகம் - நான் படித்த மிகச்சிறந்த தொடர்பவுதிகளில் ஒன்று. பெனாத்தலாரின் மே 21.

முரட்டு வைத்தியம் - 3 - தனக்கு தானே முரட்டு வைத்தியம் செய்துக் கொள்ளும் தில் டோண்டு சாரை விட்டா வேற யாருக்கு இருக்கு?

"மரணம்" - மரணம் மட்டுமா மரணம் என்று கேள்வி எழுப்புகிறார் வித்யா. இக்கவிதையை வாசிக்க கொஞ்சம் மனத்திண்மை தேவை.

என்னுடைய சென்னை - சில நினைவுத்துளிகள் - இது சீரியஸ் பதிவா, ஜாலி பதிவான்னு சொல்ல முடியாத வித்தியாசமான பதிவு. மதியக்காவின் எழுத்துக்களுக்கு தான் எத்தனை வசீகரம்!

சந்திரா அத்தை - தேன்கூடு போட்டிக்கு - அந்த காலத்து எழுத்தாளர் லஷ்மி ரேஞ்சுக்கு இப்பவும் கதை எழுத ஆளிருக்கு டோய்!!!

வழக்கம்போல டிஸ்கி : நினைவில் நின்ற சில பதிவுகளை மட்டுமே சேர்த்திருக்கிறேன். எனக்கு பிடித்த எல்லாம் பதிவுகளையும் சேர்க்க வேண்டுமென்றால் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்காவது நான் வலைச்சரம் சிறப்பாசிரியராக இருக்க வேண்டும்.
மேலும் வாசிக்க...

Tuesday, July 10, 2007

காமெடி சரவெடி!

நகைச்சுவை என்பது எழுத்திலேயே இயல்பாக வரும்போது தான் ரசிக்க முடிகிறது. ஒரு பதிவர் வலிந்து நகைச்சுவையை திணிக்க முற்படுவாரேயானால் அது அவருக்கு மட்டுமே நகைச்சுவையையும், படிப்பவர்களுக்கு தாவு தீரும் வகையிலும் தான் அமையும். வலைப்பூக்களில் அரிதான நேரங்களில் மட்டுமே தரமான நகைச்சுவைகளை காண முடிகிறது. பதிவுகளை விட பின்னூட்ட லூட்டிகளில் தான் நம் வலைப்பதிவர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள். நான் ரசித்த நகைச்சுவை பதிவுகளில் சில :

வாசுவும் ஜெனிபர் லோபசும் - நண்பர் ஜெயராமன் எழுதிய இந்தப் பதிவு 100 சதவிகித நகைச்சுவைக்கு உத்தரவாதம். பாக்கியம் ராமசாமி போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கு இணையானது இவரது பாணி நகைச்சுவை எழுத்து.

செந்தலழார் என்றாலே கோமாளித்தனம் தான். தலைவர் கொலைவெறியுடன் பட்டையைக் கெளப்பிய பதிவு இது. படிப்பதற்கு முன்னால் வயிற்று வலி மாத்திரை ஸ்டாக் இருக்கிறதா என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள் - சுண்டக்கஞ்சி with கோயிந்தசாமி & கொலசாமியுடன் - நொச்சிக்குப்பம் பீலா

உடன்பிறப்பு வரவனையான் மிக சீரியஸாக எழுதும் பதிவுகள் கூட பல நேரங்களில் புன்னகையை வரவழைக்கும். மிக உயர்தர இலக்கிய நையாண்டி இவரது ஸ்பெஷாலிட்டி. இணையத்தில் டவுசர் பாண்டிகளின் டவுசரை அவிழ்ப்பதில் கெட்டிக்காரர் இவர். ஒரு உதாரணம் : ஆரப்பாளையம் போலீசார் Vs டவுசர் பாண்டிகள்

குசும்பனின் குசும்புகளுக்கு என்றுமே நான் பரம விசிறி. இணைய எழுத்தாளர்களுக்கு தன் நகைச்சுவை 'பஞ்ச்'களால் கும்மாங்குத்து குத்தும் குசும்பனுக்கு இணை வேறு யார்? குசும்பனின் குசும்புகளுள் ஒன்று : டாப் டௌன் பத்து

நான் வலைப்பூ தொடங்குவதற்கு முன்பே பேவரைட்ஸில் Add செய்து வாசித்துக் கொண்டிருந்த வலைப்பூ பெனாத்தலாரின் பெனாத்தல்கள். முன்பெல்லாம் இயல்பான நகைச்சுவையில் பட்டையைக் கிளப்புவார். சில காலமாக அவரது பதிவுகளில் வலிந்து நகைச்சுவையை திணிக்க முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் எனக்கு ஆல் டைம் பேவரைட் இது : வந்தாச்சு அவன் விகடன்

சுகுணா திவாகரின் எழுத்துக்களை படித்தாலே பலருக்கு சுளுக்கு பிடித்துக் கொள்ளும். என்னைப் போன்ற பின்நவீனத்துவ ரசிகர்களுக்கு இலக்கிய தாகமெடுத்து விடுகிறது. அவரது மிக முற்போக்கான நவீன எழுத்துச் சூறாவளிகளுக்கு இடையிலேயும் அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்ள சில நேரங்களில் நகைச்சுவை சரவெடியை கொளுத்திப் போடுவார் - முரளிமனோகர் - ஒரு பின்நவீனத்துவ சிறுகதை முயற்சி(?)

நண்பர் நாமக்கல் சிபி மட்டும் நரசிம்மராவிடம் பேசியிருந்தால் நரசிம்மராவே கூட சிரித்து தொலைத்திருப்பார். இயல்பிலேயே நகைச்சுவையில் ஊறிய நண்பரின் டாப் கிளாஸ் பா.க.ச. பதிவு ஒன்று - பாலபாரதி : சும்மா கேட்டவுடன் அதிருதில்ல!

சமீபகாலமாக நகைச்சுவை சரவெடிகளை தமிழ்மணத்தில் கொளுத்திப் போடும் நண்பர் அபிஅப்பாவின் பதிவுகளுக்கு நான் ரெகுலர் விசிறி. அவரது இந்தப் பதிவினை தலைப்புக்காகவே படித்தேன் : ஒரு சீரியஸ் பதிவு!!

துக்ளக் சோ ராமசாமிக்கும் நண்பர் முத்து(தமிழினி)வுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அதென்னவோ தெரியலை அவர் சீரியஸாக சோ ராமசாமியை விமர்சித்தால் கூட எனக்கு சிரிப்பு தான் வருகிறது. நண்பரின் "நச்" பதிவொன்று இதோ : துக்ளக் ஆண்டு விழா - ஒரு வம்பு பதிவு

What the f***? - எப்போதான் பொட்டீக்கடை நாகரிகமாக :-) பேச கத்துக்கப் போறாரோ?

மைடியர் முண்டக்கன்னி அம்மனே! - NO COMMENTS :-)

நினைவில் நின்ற சில பதிவுகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். மற்ற நகைச்சுவை மற்றும் மொக்கை எழுத்தாளர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.
மேலும் வாசிக்க...

Monday, July 9, 2007

சரவெடி!!!

பத்திரிகைகளில் எழுதுவது என்பது எனக்கு சிறுவயதில் இருந்தே கனவாக இருந்து வந்த ஒரு இலட்சியம் தான். ஆயினும் எதிர்காலத்தில் வலைப்பூ பூக்கும். அதிலெல்லாம் எழுதிக் கிழிப்பேன் என்றெல்லாம் நினைத்ததில்லை. வலைப்பூக்களை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வாசிப்பேன். அப்போது எனக்கு தமிழ்மணமெல்லாம் அறிமுகமில்லை. எதையாவது கூகிளும்போது மாட்டும் வலைப்பூக்களை வாசிப்பது எனக்கு வழக்கமாக இருந்தது.

நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இலவசமாகவே வலைப்பூ தொடங்கமுடியும் என்பதை அறிந்து வலைப்பூ தொடங்கினேன். எதை எழுதுவது என்ற குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது. நல்லவேளையா 2006 தமிழக சட்டமன்றத் தேர்தல் அவ்வேளையில் வந்து என்னை காப்பாற்றியது. மிக மிக சுமாரான நடையில் நிறைய புள்ளிகள் வைத்து எழுதிக் கொண்டிருந்தேன். வலையில் அறிமுகமான நண்பர்கள் அவ்வப்போது தந்த ஆலோசனையில் எழுத்து ஓரளவுக்கு கைவசமானது.

வலையுலகம் எனக்கு அறிமுகமானதாலேயே பத்திரிகைகளில் எழுதும் என் கனவு எனக்கு சாத்தியமானது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம்!

எழுதத் தொடங்கிய காலத்தில் எல்லோருமே வலைப்பூவில் டெஸ்க் ஒர்க் செய்து கொண்டிருந்ததை கண்டேன். எதையாவது வித்தியாசமாக செய்யலாம் என்ற எண்ணத்தில் கலைஞரின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றினை நேரடி ரிப்போர்ட் செய்தேன். "நெப்போலியன் நல்ல சரக்கு" என்ற அந்தப் பதிவு தான் ஓரளவுக்கு எனக்கு வலையுலகில் அறிமுகத்தை தந்தது என்றால் மிகையில்லை.

திமுக பதிவராக பரவலாக அறிமுகமான நான் தேர்தல் நேரத்தில் எடுத்த சபதம் ஒன்றினை இப்போது பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது! :-)

சாணக்கியன் சபதம்!


சன் தொலைக்காட்சியின் சித்திரை ஸ்பெஷல் நிகழ்ச்சியான "நித்திரை கலைக்கும் சித்திரை" நிகழ்ச்சிக்கும் ஒரு நேரடி கவரேஜ் கொடுத்திருந்தேன்.

இன்னொரு நேரடி ரிப்போர்ட் : உள்ளாட்சித் தேர்தல் - கண்டனப் பொதுக்கூட்டம்

அவ்வப்போது போட்டோஷாப்பில் விளையாடி போட்டோ பதிவுகளும் போட்டு தாளித்திருக்கிறேன்.

"டி.ஆர். தாடி எடுத்து விட்டாரா?"

"ஜெயாவை ஒழிக்க கிளம்பிய அந்நியன்!"

"செந்தழல் வீராச்சாமி"

"மன்னா.... என்னா?"

"டோண்டு சார்... கோச்சுக்க மாட்டேளே?"

வலையுலக தாதா அழைக்கிறார்!!!

பெரியவாவும், சின்னவாவும்!!!


அந்த நேரத்தில் வலையுலகில் திரைவிமர்சனம் எழுதுபவர்கள் குறைவாக இருந்தார்கள். எனவே மொக்கைப் படங்களையெல்லாம் கூட பார்த்து திரைவிமர்சனங்களாக எழுதி தள்ளிக் கொண்டிருந்தேன்.

ஜெர்ரி

புதுப்பேட்டை

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி!

சூப்பர்மேன் ரிடர்ன்ஸ்!

பாரிஜாதம்!

உனக்கும், எனக்கும்!

அனார்கலி!

"கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்" - திரை விமர்சனம்

DON - திரைவிமர்சனம்

இம்சை அரசன் - 100வது நாள் விழாத்துளிகள்

கேசினோ ராயல் - திரை விமர்சனம்

ஈ - திரை விமர்சனம்!

குரு – திரை விமர்சனம்

சிவாஜி (ஒரிஜினல்) திரைவிமர்சனம்!



தமிழ்மணத்தில் டிரெண்ட் செட்டரான ஒரு பதிவு இது : போண்டா செய்வது எப்படி?


நான் வ.வா.ச.வின் அட்லஸ் வாலிபராக இருந்தபோது எழுதிய பதிவுகள் :

வாலிபமே வா... வா...

சிஸ்டர் ஐ லவ் யூ!

"A"க்கம்

"ASL Pls" - Part 1

"ASL Pls" - Part 2


"காமிக்ஸ் ரசிகர்களுக்கு" என்று நான் எழுதிய இப்பதிவுக்கு இன்னமும் கூட எப்போதாவது பின்னூட்டங்கள் வந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னைப் போல வளர்ந்த குழந்தைகள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.


தினமலர் நாளிதழின் டாட்காமில் இன்று பகுதியில் வந்த என்னுடைய பதிவு இது. முகம்மது அப்ஸல் யார்? உண்மை நிலவரம் என்ன?


"மு.க." - ஜெ.ராம்கியின் புத்தக அறிமுக காட்சியின் நேரடி ரிப்போர்ட் ஒன்று - ஒரு மாலை, ஒரு தேனீர், ஒரு புத்தகம்!


"அ.தி.மு.க. கிரியேஷன்ஸ்" - வலையுலக நண்பர் ஒருவரை இமிடேட் செய்து போட்ட பதிவு. ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத இயக்கமல்ல :பரபரப்பான ஆய்வு முடிவுகள் - இதுவும் நண்பர் ஒருவரை கலாய்க்க போட்ட பதிவு! :-)

தியாக வேங்கை திலீபன் குறித்த பதிவு இது. தியாக வேங்கை திலீபன்!

தேன்கூடு நடத்திய இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற என்னுடைய படைப்பு : அப்பாவி அடிமைகளுக்கு

சில ஜாலி பதிவுகள் :

ரகசிய சிநேகிதியும், கள்ளக்காதலனும்!

அடுத்தவர் டயரியை எட்டிப் பார்த்த போது....

காக்க காக்க (திரைவிமர்சனம் அல்ல)

காவிரி நீர் வாங்கித்தருவார்களா தேசிய ஜல்லிகள்?

கொண்டைய மறைக்கலியேடா

தமிழ்மணம் – இந்த வாரம்

போதும் நிறுத்திக்குவோம்!

பாலகிஷ்ட ஐயங்கார் ஹெல்மெட் வாங்கிய கதை!


அமரர் தேன்கூடு சாகரன் அவர்களால் பாராட்டப்பட்ட ஒரு பதிவு : இலவசமாம் இலவசம்!


அ.மு.க. ஸ்பெஷல் பதிவுகள் :

நண்பர் செந்தழல் ரவி பார்வைக்கு!

அனானிகளுக்கு ஏனிந்த கொலைவெறி?

லக்கிலுக் ரசிகர் மன்றம்!

வலைப்பதிவாளர்களுக்கும் கடும் எச்சரிக்கை!

ஷேக்ஸ்பியரும் அய்யராம்!

போதும் நிறுத்திக்குவோம்....

சென்னையில் வரும் ஞாயிறு வலைப்பதிவர் சந்திப்பு!

மாட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் இடுவது எப்படி?

ஏப். 22 - சென்னை கொலைப்பதிவர் சந்திப்பு!

அமுக குடிகாரர் அணி தத்துவம்!!!


கலைஞானி கமல்ஹாசன் குறித்த என் பதிவுகள் இன்றும் வலையை மேய்பவர்களால் அவ்வப்போது கவனிக்கப்படுகிறது.

சாதனை சிகரம் கமலை நினைத்து பெருமை கொள்வோம்!

கமல்ஹாசன் - உள்ளிருக்கும் கடவுள்!

இந்த படம் எப்போ வரும் ? :(


எனக்குப் பிடித்த என்னுடைய பதிவுகளில் சில :

உலக வானொலி தினம்!

வாங்க 3க்கு போலாம்!


இன்றைக்கு மட்டும் தான் சுயபுராணம். நாளையிலிருந்து என்னை கவர்ந்த வலையுலகத்தின் அதிரடிப் பதிவுகளை எழுதுகிறேன்.
மேலும் வாசிக்க...

அதிரடி வாரம்..

நேரமின்மையால் ஒரே ஒரு பதிவுடன் நிறுத்திவிட்ட சயந்தனின் வாரத்துக்குப் பின்னர், குறுகிய காலத்தோடு போராடி, கடைசி நாளில் கொடுத்த டார்கெட்டை அடித்துப் பிடித்து விட்டார் சித்தார்த்.

கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், புத்தக வாசிப்புகள் என்று அவர் ரசனையை ஒட்டிய இடுகைகளாக அறிமுகம் செய்து நிறைவளித்துவிட்டார்.

அடுத்து இந்த வார வலைச்சர ஆசிரியர் யார் என்று நீங்கள் பக்கப்பட்டியைப் பார்த்தே ஊகித்திருப்பீர்கள். ஆம், வலைப்பூ சுனாமியார் என்று அவரின் பதிவில் பின்னூட்டமிடும் அனானியார்களால் அழைக்கப்படும் லக்கிலுக்கின் அதிரடி வலைச்சர வாரம் இன்று தொடங்குகிறது..
மேலும் வாசிக்க...

விடைபெறுதல்

மணி அதிகாலை 2:00... விழி விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது தூக்கம்.
உடலின் சோர்வெல்லாம் கண்களிலும் விரல் நுனிகளிலும் முயங்கி நிற்கிறது.
ஒவ்வொரு விசையழுத்தமும் விரல்களால் மிக மிக யோசித்துச் செய்யப்படுகின்றன.
இருப்பினும் புத்தகம் பற்றிய பதிவுகளைப் போடாமல் எனது இந்த வாரத்தை
நிறைவு செய்வது சரியில்லை என்று படுவதால்....


புத்தகம் குறித்த பதிவுகளை நான் வழக்கமாக படிப்பது மதியின் புத்தகவாசம்
பதிவில் இருந்து. நல்ல சேவை அது. சினிமாவிற்கு ஒரு கீற்றுக்கொட்டாய் போல புத்தகங்களைக் குறித்த பதிவுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட தளம்.


சன்னாசியின் மூன்று மிக நல்ல புத்தக விமர்சனங்களோடு எனது இந்த வாரத்தை
முடிக்கிறேன். எழுத்தாளனை சகனாக மதித்து, குறைகளையும் நிறைகளையும் கூட
உட்கார்ந்து பேசும் பாவனையில் சரளமான தன்மையுடன் எழுதப்பட்ட விமர்சனங்கள்
இவை. எனக்கு மிகவும் பிடித்த "கொற்றவை" யின் விமர்சனத்தை அறிமுக
பதிவிலேயே கொடுத்திருந்தேன்.


நகுலன் நாவல்கள்


காடு

மார்க்குவேசின் சுயசரிதை

வாய்ப்பை அளித்த பொன்ஸுக்கு நன்றிகள். அடுத்த முறையேனும் இது போன்ற
தவறுகளை செய்ய வேண்டாம் :).
மேலும் வாசிக்க...

திரைப்படங்கள்... சில பார்வைகள்...

பரமசிவன் அருள் புரிய வந்து வந்து போவார்!
பதி விரதைக் கின்னல் வரும் பழையபடி தீரும்!
சிரமமொழு தாள மெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!

- பாரதிதாசன் (தமிழ் நாட்டிற் சினிமா)


திரைப்பட விமர்சனங்களை படிப்பது ஒரு நல்ல அனுபவம். இது தான் படம். இது கதை (விகடனில் செழியன் செய்வதைப்போல, படத்தை காட்சிக்கு காட்சி விளக்கி விடுவது) என்றெல்லாம் ஒற்றைப்படையில் பேசாமல், திரைப்படத்தில் இருந்து தொடங்கி வேறு பல தளங்களுக்கு சென்று திரும்பும் இலக்கியத்தை நெருங்கும் விமர்சனங்களைப் படிப்பது அலாதியானது. இணையத்தில் ரோஜர் ஈபர்ட்டின் பல விமர்சனங்களில் இந்த அம்சம் இருக்கும். தமிழ் பதிவுலகில் நான் படித்து ரசித்த விமர்சனங்களில் சில.


சந்திரசேகரன் கிருஷ்ணனின் செவன் சாமுராய் பற்றிய பதிவு.

கானா பிரபாவின் செவன் சாமுராய் குறித்த விமர்சனம் ஒன்று. ஈழத்தை தொட்டு செல்லும். தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. முதல் இரண்டும் எனக்கு பிடித்த மலையாளப் படங்கள் என்பதால்... அடுத்த இரண்டும், திரைப்படத்தில் தொடங்கி வேறு ஒரு தளத்திற்கு சென்று முடிவதால்...

கானா பிரபா - மனசின் அக்கரா
காழ்ச்சா
சினிமா பாரடிசோவும் யாழ்பாணத்து திரையரங்குகளும்
பதே பஞ்சாலியும் பெரிய மாமியும்

நான் ஒரு ஆண் ஆதிக்கவாதி என்ற உண்மையை எனக்கு சொன்னவர் மதி. :) . இவரது திரைப்பட மற்றும் புத்தக விமர்சனங்களை தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். ஒன்றிரண்டு முறை சாட்டில் உரையாடியும் இருந்தேன். வாசப்பின், ரசனையில் வீச்சை கண்டு இயல்பாகவே மதி ஒரு ஆணாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது என்னைப் பற்றி பல விஷயங்களை எனக்கே சொன்னது. இன்னொரு விதத்திலும் மதிக்கு நன்றி கூற வேண்டும். என்னை சினிமா பாரடிசோ பார்க்கச்சொல்லி கேட்டுக்கொண்டார். இல்லையெனில் அந்த அனுபவம் கிடைக்காமலேயே போயிருக்கக்கூடும். அவரது சில விமர்சனங்கள்.

மதி கந்தசாமி - விட்

காதல் படங்கள் - ஒரு பட்டியல்

ஜூலியஸ் சீசர்
மேலும் வாசிக்க...

Wednesday, July 4, 2007

நட்பைத் தொடங்கிய கவிதைகள்

வணக்கம், மீண்டும்.

கவிதை வாசிப்பு நமக்கு அளிக்கும் நுட்பமான அதிர்வை உள்ளங்காலில் தொடங்கி மேலெழும் பரவசத்தை மீதமிருக்கும் அந்நாளின் மீது நிறம் பூசிச்செல்லும் தன்மையை அனுபவித்தல் ஒரு கொடுப்பினை. நான் இருக்கவில்லை வாழ்கிறேன் என உணரச்செய்யும் தருணங்கள் அவை. கவிஞர்கள் நண்பர்களானது மிக சமீப காலமாகத்தான். இந்த ஒவ்வொரு நட்பும் ரசனையின் படிகளில் என்னை ஏற்றிவிட்டுக்கொண்டிருக்கின்றன.

இணைய நண்பர்களில் கவிஞர்களைப் பற்றி... இந்த பட்டியலில் உள்ள அனைவரும் இன்னும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள். ஒவ்வொரு கவிஞரது கவிதைகளில் என்னை முதன்முதலில் கவர்ந்து மனதளவில் அவர்களின் அருகில் அழைத்து சென்ற கவிதைகள் இவை. இப்போது இக்கவிதைகளை படிக்கையில் மென்சோகமும், மௌனமும் இந்த கவிதைகளின் பொதுத்தன்மையாய் இருக்கிறது.


முபாரக்கின் மஞ்சள் வானம் : http://arasanagari.blogspot.com/2005/11/blog-post.html

அய்யனாரின் உட்குளம் : http://ayyanaarv.blogspot.com/2007/03/blog-post_29.html

தமிழ்நதியின் நதியின் ஆழத்தில்(இக்கவிதையின் முதல் பத்தி தந்த் அதிர்ச்சி யை இப்போதும் உணர முடிகிறது) : http://tamilnathy.blogspot.com/2007/05/blog-post_19.html

அனிதாவின் துரோகம் : http://idhazhgal.blogspot.com/2006/12/blog-post_21.html

மணிகண்டனின் கவிதை : http://pesalaam.blogspot.com/2006/11/blog-post.html
மேலும் வாசிக்க...

Tuesday, July 3, 2007

நுனிப்புல்லின் ருசி அறிய ஓர் அழைப்பு...

மு. கு : இது வலைச்சரத்தின் நூறாவது பதிவு.


வணக்கம்.

அறிமுகம் ஏதும் இல்லாமல் சட்டென நுழைகிறேன். சட்டென மேடைக்குள் தள்ளப்பட்ட, வசனத்தின் தொடக்கம் மறந்த குழந்தையின் உணர்வுடன் எழுதத் தொடங்குகிறேன். நான் சித்தார்த். அங்கிங்கெனாதபடி என்ற ஒரு வலைப்பதிவை வைத்திருக்கிறேன் (எப்போதாவது அதில் எழுதவும் செய்கிறேன்). இவ்வாரம் வலைசரத்தை நான் தொகுக்கப்போகிறேன். அழைத்த பொன்ஸுக்கு நன்றி.

முதலில் வலைப்பதிவு எனும் கருத்தாக்கத்தைக் குறித்த எனது கருத்துக்கள் என
தொடங்கி, வெப் 2.0, பரவலாகும் ஜனநாயகம், புதிய ஊடகத்தின் பெருவெடிப்பின்
விளிம்பு என்றெல்லாம் ஜல்லி அடிக்கலாம் என்று தான் பார்தேன். ஆனால் சில
காலம் கழித்து இதை படிக்கையில் எனக்கே மண்டையில் போட்டுக்கொல்ல வேண்டும் போல இருக்கும். இதில் உங்களை வேறு ஏன்....

தமிழ் இணையத்தை பொருத்தவரை எனது தளம் இலக்கியம் மற்றும் திரைப்படம் தான்.அதுவும் கூட பெரிய அளவிலான வாசிப்பெல்லாம் இல்லை. எனக்கென சில சுட்டிகள்.அதில் வரும் புதிய இடுகைகள். எப்போதாவது திரட்டிகளில் மேய்வது... ஏன் சொல்கிறேன் என்றால், இந்த வாரம் பெரியதாக என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்பதற்காகத் தான்.

முதல் இடுகையாக எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவுகள்.

ஒன்று சன்னாசியில் "கரிசல்". நீண்ட நாட்களாக நான் தொடர்ந்து வாசித்து
வரும் வலைப்பதிவு. சிலரிடம் உங்களுக்கு தோன்றும் ஈர்ப்பிற்கு காரணமேதும்
சொல்ல இயலாது. அது போன்ற ஈர்ப்பு தான் எனக்கு சன்னாசியின் பதிவுகளைப்
படிக்கையில். கூர்மையான நகைச்சுவை உணர்வு உண்டு. இவரது பெரும்பாலான பதிவுகள் இலக்கியம் மற்றும் திரைப்படங்களை சுற்றியே உள்ளது. பல வேற்று மொழி கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். சில கவிதைகளை எழுதியும் உள்ளார். இவற்றையும், இவரது கட்டுரைகள் சிலவற்றையும் பிரம்மராஜன் கவிதையைப் படிப்பதைப் போல படித்துவிட்டு கொஞ்ச நேரம் மண்டையை சொறிந்து விட்டு சென்று விடுவேன்.சு.ரா மொழியில் சொன்னால், ஆர்வமான (பெரும்பாலும்) புரியாத எழுத்து.

சில இடுகைகளுக்கான சுட்டிகள் :

கொற்றவை நாவலைக் குறித்து சன்னாசி எழுதியது. (கொற்றவையை விட கடின
மொழியில் அதற்கு ஒரு கட்டுடைப்பு)
http://dystocia.weblogs.us/archives/228

பியர் குடிக்கப்போய் எடுத்து வந்த புகைப்படங்கள்

http://dystocia.weblogs.us/archives/237

பெர்ஃபியூம் திரைப்படத்தை குறித்த பதிவு.

http://dystocia.weblogs.us/archives/241


மற்றொரு இடுகை பாம்பாட்டிசித்தனின் "நடைவழிக் குறிப்புகள்"

பாம்பாட்டி சித்தன் எனது நண்பர். கவிஞர் (முதல் தொகுப்பு அடுத்த மாதம்
வரலாம்). இப்பதிவின் கட்டுரைகள் எனக்கு மிகவும் அருகில் இருப்பவை. இவை என் கண் முன்னால் உருவானவை. மிகுந்த உழைப்பை வேண்டி நின்றவை. சில இடுகைகள்...

புதுக்கவிதையின் வரலாறு குறித்த கட்டுரைத் தொடர்.

http://thaaragai.wordpress.com/2006/10/25/puthukkavidai_3/


ழாக் பிரவரின் கவிதைகள் குறித்த பதிவு:

http://thaaragai.wordpress.com/2006/10/27/prevert/


உப்பு - திரைப்பட விமர்சனம்

http://thaaragai.wordpress.com/2006/04/21/uppu-review-6/
மேலும் வாசிக்க...

Sunday, July 1, 2007

தமிழ்99

எல்லாரும் என்னை மன்னிச்சுக்குங்க.. என்று சொல்லி விட்டு மாநாட்டு பட்டியல் தந்த இந்த வார ஆசிரியர் சயந்தன் காணாமல் போய் விட்டதால் வலைச்சரத்தின் 99வது இடுகையை தமிழ்99 சிறப்பு பதிவாக இடுகிறேன்.

முதலில் தமிழ்99 பிரச்சாரகர் ரவிசங்கருக்கு நன்றி. ரவிசங்கரின் முயற்சி படிப்படியாக வெற்றி கண்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்களெல்லாம் வெறும் அறிக்கைகள் மாதிரி தமிழ்99 பெருமைகளை சொல்லிக் கொண்டிருந்த போது புயலாக வந்த ரவிசங்கர் நேரடியாக களத்தில் இறங்கி தனிப்பட ஒவ்வொருவராக தமிழ்99க்கு மாற்றி வருகிறார். அது அவரது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி. நன்றி.

பழம்பெரும் தமிழ் வலைஞர்கள் பலரும் புதிதாக தமிழ்99 பெருமையை உணர்ந்து வருவது இதில் பெருமைக்குரிய விதயம். பாராட்டுகள் ரவி.

இங்கே தமிழ்99 உதவிகள் சில.

தமிழ்99 முறையில் தட்டச்ச முதலில் எகலப்பையை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். (நீங்கள் ஏற்கனவே எகலப்பை பயன்படுத்துபவராக இருந்தால் அது தமிங்கில தட்டச்சு முறை என்பதால் இதை நீங்கள் தனியாக பதிவிறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும்.

பதிவிறக்க: எகலப்பை தமிழ்99

தமிழ்99 விசைகளை உணர்ந்து கொள்ள பழகும் வரை தற்காலிகமாக காகிதத்தில் அச்சிட்டு வைத்துக் கொள்ள விசைப்பலகை உதவிப்படம்.

தமிழ்99 விசைப்பலகை படம்



தமிழ்99 முறையில் நேரடியாக தட்டச்சுமுன் ஓரளவு பயிற்சி பெற விரும்பு கிறீர்களா? எனில் இந்தக் கருவி உங்களுக்கு உதவும். இதில் பயிற்சி எடுத்த பின் எகலப்பை தமிழ்99 மூலம் விரைவாக தட்டச்ச முடியும்.

தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி(பதிவிறக்க)

தமிழ்99? அது என்ன? எதற்காக தமிங்கில முறையை விட்டு தமிழ்99க்கு மாற வேண்டும்? தமிங்கில முறை மிக வசதியாக இருக்கிறதே என்கிறீர்களா? பரவாயில்லை. ஆனால் இதைக் கொஞ்சம் பார்த்து விட்டு வாருங்கள்,

சிறந்த தமிழ் விசைப்பலகை எது?
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது