07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 10, 2008

சும்மா அதிருதுல்ல : அதிர்வுகள்

மு.கு :-
1. பின் குறிப்பு மட்டுமே படிப்பேன் என்று சிலர் அடம் பிடிப்பதால், இந்தப் பதிவில் பி.கு
கிடையாது.
2.பதிவே குறிப்பு தான் இதுக்கு எதுக்கு முன் குறிப்பு, எனவே நேரா பதிவையே படிங்க.

நம்ம திரை ரசிக கண்மனிகளை விட, அதில் தோன்றும் பிம்பங்கள், அடிக்கடி, ஆங்கிலப் படம் போன்று இருந்தது, ஹாலிவுட் ஸ்டைல் என்று எல்லாம் சொல்லி ஒரு பார்வையயை சில படங்களுக்கு அளிப்பதுண்டு. அந்தப் படங்களுக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதோ இல்லையோ, சுவாரசியமான பல படங்கள் பிரம்மாணடம் இல்லாமல் அங்கே வந்து பெயர் பெற்றியிருக்கிறது. அப்படி உலக திரைப்படங்களில் நான் கண்டு குழும்பிய ஒரு படம் முல்ஹோலேண்டு டிரைவ். படம் பார்க்கும் போதும், பார்த்தப் பின்னும், ரசிகர்களை படத்தை ஆராய வைத்து, படத்தில் குறியீடுகள் (codes) வைத்து ரசிகர்களை குழப்பிய ஒரு அருமையான படம்.

இந்தப் படத்தை பார்த்து அதை ஆராய்ந்து ரசிகர்கள் வைத்திருக்கும் வலைத்தளத்தில் போய் பார்த்தால், ஒரு படத்தில் இவ்வளவு தூரம் சொல்ல முடியும்மா, அதாவது சொல்லாமல், சொல்ல முடியும்மா என்று வியந்தூப் போனேன். இது இயக்குனர் வலிந்து செய்தது, ஏதோ இயக்குனர் இப்படி நினைத்து தான் படத்தை எடுத்தாரோ என்று தப்பிக்கும் வாதம் எடுப்படமால் போக, டிவிடியுடன், படத்தைப் பற்றிய 10 க்குளுக்கள் தந்திருக்கிறார் இயக்குனர்.

ஆக, திரைப்படங்கள் என்பது ஒரு படி கீழேயும் சென்று வாசிக்க தகுதியுடையவை, புத்தகங்கள் போலவே. புத்தகங்கள் வாசகனின் கற்பனனக்கேற்றவாறு வடிவம் கொடுக்கும். ஆனால், பெரும்பாலான திரைப்படங்கள் ஒன்றும் சொல்லாமலே போய்விடும். சிந்தனனயயை மறக்கடிக்கும், மழுங்கடிக்கும் திரைப்படங்கள் ஒரு நல்ல படமாக இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அப்படிப்பட்ட படங்களே, தமிழ் நாட்டில் வனிகரீதியாக தொடர்ந்து வெற்றிப் பெறுவது, ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை என்றூ நாம் கொள்ளாலாம். காதல் என்ற திரைப்படம், தமிழகத்தில், ஒரு போற்றப்படுகின்ற படம், படமாக்கிய விதத்தில், வாசகனை கட்டிப் போடுவதில் அது வெற்றிப் பெற்றது. எங்கே சறுக்கியது என்று வளர்மதி சொல்லுவதைப் படியுங்கள்.

உருப்படாததுவின் புதுப்பேட்டைப் பற்றிய பதிவை என் அறிமுகத்தில் கொடுத்திருந்தேன். அதனனத் தொடர்ந்து, வட சென்னையயைப் பற்றிய அவரது பதிவு,அந்த திரைப்படத்தின் அதிர்வு என்று சொல்லலாம். இதுப் போன்ற அதிர்வுகளை கிளப்பும் படங்கள் நம் போன்ற வாசகர்களுக்கு சுவாரசியமான வலைப்பக்கங்களை தருகிறது. :). நிழலுலகம் பற்றிச் சொல்லும் போது, நேரிடையான பதிவுகள் என்பது திரைப்படத்தில் மட்டுமே கண்ட நமக்கு, உன்மை நிகழ்வை தொடர்புபடுத்தி, அபுசலிம் பற்றிய இப்பதிவு சுவாரசியமானது.

வேதம் புதிது தமிழ்ப்படங்களில், மொக்கையான முடிவுகளுக்கு ஆரம்பம் என்று சொல்ல முடியாது. அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆரம்பித்து, வேதம் புதிது, இந்திரா வரை சாதி பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியாமல் போன படங்கள் நிறைய இருக்கிறது. ஆனா, வேதம் புதிது கிளப்பிய ஒரு அருமையான அதிர்வு இங்கே.

அதிர்வுகள் என்பது திரைப்படங்கள் மட்டும் தருவதில்லை. ஒரு சாதாரண செய்தி கூட ஒரு அதிர்வுகள் கிளப்பும் என்பதற்கு இந்தப் பதிவைப் படியுங்கள். படித்தவர்கள் பலரும் பேசத் தயங்கும், ஒரு விசயம் கலவிக்குப் பின், மாதவிலக்கு மற்றும் அதன் தொடர்பானவை. இயல்பான, ஒரு சமூதாயக் கோபம், இந்தப் பதிவில் இருக்கு எனக் கொள்ளலாம். சில சமயம் நாம் வாசிக்கும் சில வரிகள் அதிர்வுகள் கிளப்பும் தன்மையில் இருந்தும் கவணியாது போய் விடுவோம். அதன் காரணம் நாம் சரியாக வாசிக்கவில்லை என்பதல்ல, பல காலமாக நம் கண் முன்னே அவைகளை நியாயப்படுத்தியோ, இல்லை, அது தான் ஒழுங்கு முறை என்றோ போதிக்கப்பட்டுவிட்டதால்.

(தொடரும் )

13 comments:

  1. இன்னைக்கு விடுமுறைங்கிறதுனால முன்குறிப்பு மட்டும்தாம்ல படிப்போம்...

    இது தெரியாம இன்னைக்குன்னு பார்த்து மு.கு கொடுத்திருக்கீங்களே. :-)))))))

    ReplyDelete
  2. \\உருப்படாததுவின் புதுப்பேட்டைப் பற்றிய பதிவை என் அறிமுகத்தில் கொடுத்திருந்தேன். அதனனத் தொடர்ந்து, வட சென்னையயைப் பற்றிய அவரது பதிவு,\\

    சூப்பர் பதிவு தல..நானும் வடசென்னை தான்..பதிவுக்கு மிக்க நன்றி தல ;)

    ReplyDelete
  3. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    இன்னைக்கு விடுமுறைங்கிறதுனால முன்குறிப்பு மட்டும்தாம்ல படிப்போம்...

    இது தெரியாம இன்னைக்குன்னு பார்த்து மு.கு கொடுத்திருக்கீங்களே. :-)))))))

    //
    ரிப்பீட்டேய்

    ReplyDelete
  4. இதுக்கு பேர்தான் பின் நவீனத்துவ பிராண்டலா???

    ReplyDelete
  5. @மை ப்ரெண்டு
    யு த பர்ஸ்ட்டு...

    ReplyDelete
  6. அடுத்தப் பதிவுக்கு அதுவும் இல்லாமா போடுறேன்.. ;)

    ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    இன்னைக்கு விடுமுறைங்கிறதுனால முன்குறிப்பு மட்டும்தாம்ல படிப்போம்...

    இது தெரியாம இன்னைக்குன்னு பார்த்து மு.கு கொடுத்திருக்கீங்களே. :-)))))))///

    ReplyDelete
  7. நன்றி கோபி நாத்..

    அப்ப கூடிய சீக்கிரம் ஒரு பதிவை எதிர்ப்பார்க்கலாமா வடச் சென்னையயைப் பற்றி..

    ///கோபிநாத் said...
    சூப்பர் பதிவு தல..நானும் வடசென்னை தான்..பதிவுக்கு மிக்க நன்றி தல ;)///

    ReplyDelete
  8. வாக்கிங்க் போய்ட்டு வந்து கும்முறேன் சொன்னப்ல இருந்திச்சு...

    அப்ப இதுக்கு பேர் என்னாவாம்..

    ////
    மங்களூர் சிவா said...
    //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    இன்னைக்கு விடுமுறைங்கிறதுனால முன்குறிப்பு மட்டும்தாம்ல படிப்போம்...

    இது தெரியாம இன்னைக்குன்னு பார்த்து மு.கு கொடுத்திருக்கீங்களே. :-)))))))

    //
    ரிப்பீட்டேய்

    January 11, 2008 7:32:00 AM IST


    மங்களூர் சிவா said...
    இதுக்கு பேர்தான் பின் நவீனத்துவ பிராண்டலா???

    January 11, 2008 7:33:00 AM IST


    மங்களூர் சிவா said...
    @மை ப்ரெண்டு
    யு த பர்ஸ்ட்டு...

    January 11, 2008 7
    /////

    ReplyDelete
  9. //மங்களூர் சிவா said...
    இதுக்கு பேர்தான் பின் நவீனத்துவ பிராண்டலா???
    //

    சிவா,

    கூடவே 'இரத்தம் வர வர அறுத்தவர் - டிபிசிடி' என்று வழக்கமாக அவர் பதிவில் போடுவது போல் பின்குறிப்பாக போட்டு இருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.

    ReplyDelete
  10. //
    TBCD said...
    அடுத்தப் பதிவுக்கு அதுவும் இல்லாமா போடுறேன்.. ;)
    //
    அப்ப இந்த பின் அல்லது முன் குறிப்பு படிக்கிற வேலையும் மிச்சம் நேரா பின்னூட்ட பொட்டிதான்!!!!
    :-)))))

    ReplyDelete
  11. //
    TBCD said...
    வாக்கிங்க் போய்ட்டு வந்து கும்முறேன் சொன்னப்ல இருந்திச்சு...

    அப்ப இதுக்கு பேர் என்னாவாம்..

    //
    இது வாக்கிங் போறதுக்கு முன்னால ஜஸ்ட் வார்ம் அப்!!!
    அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  12. //
    கோவி.கண்ணன் said...

    சிவா,

    கூடவே 'இரத்தம் வர வர அறுத்தவர் - டிபிசிடி' என்று வழக்கமாக அவர் பதிவில் போடுவது போல் பின்குறிப்பாக போட்டு இருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.
    //
    ஆமாம்
    ரத்தம் வர வர படித்தவர்னு காப்பி பேஸ்ட் பண்ண வசதியாக இருந்திருக்கும்!!!

    ReplyDelete
  13. டிபிசிடி

    சிறந்த தொகுப்பு ..நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது