07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 17, 2007

வந்தேனே சபைக்கு முன்னின்று வந்தனம் தந்தேனே

வந்தேனே சபைக்கு முன்னின்று வந்தனம் தந்தேனே

மங்கலம் பொங்கும் மார்கழி முதல் திருநாளில் வலைச்சரம் வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு என் வணக்கம்.

இணையத்தமிழை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் அலுவலகத் தோழர் J கல்யாண் ( தேன்கூடு திரட்டியை அவர் பல மாதங்களுக்குப் பிறகுதான் தொடங்கினார்) முதலில் அவரை நன்றியுடன் நினைவுகூர்ந்து இந்த வார வலைச்சரம் தொடுக்கத் தொடங்குகிறேன்.

தேன்கூடு கல்யாண் இடுகைகள்
இந்த இடுகையை இன்னும் மேம்படுத்த எண்ணியிருக்கிறேன்.

அலுவலகத்தில் கல்யாண் என்ற பெயரில் இன்னொருவரும் இருந்ததால் நாங்கள் அவரை ஜாவா கல்யாண் என்றுதான் அழைப்போம். தமிழில் அதிகம் ஆர்வம் உடையவர் என்று பேச்சுவாக்கில் தெரிந்துகொண்ட பிறகு எங்கள் நட்பு இன்னும் அதிகமாகியது. பிறகு “தினம் ஒரு கவிதை” தொடர் மடல்கள், உயிரெழுத்து, மரத்தடி, ராகாகி குழும மடல்கள் முகமறியா பல இனிய உலகளாவிய இணைய நட்புகளை ஏற்படுத்தின. வலைப்பதிவுகள் வந்தபிறகு பின்னூட்டங்கள் அளித்து ஊக்குவிப்பது வழக்கமாயிற்று. அதற்காகவே பிளாக்கர் மற்றும் வேர்ட்ப்ரஸ் தளங்களில் இணைந்தேன்.

சில மாதங்களுக்கு முன் பொன்ஸ் ~ பூர்ணா அவர்கள் வலைச்சரம் தொடுக்க இயலுமா என்று வேண்டுகோள் விடுத்தார். நான் இடுகைகள் எதுவும் எழுதுவதில்லையே; பின்னூட்டம் மட்டுமே அளித்துக்கொண்டிருக்கிறேன் எனினும் வலைச்சரம் தொடுக்க வாசிக்கும் அனுபவம் போதும் என்ற எண்ணத்தில் இசைகிறேன் என்றேன்.

வலைச்சரத்தில் வந்த இடுகைகளை வாசித்தால் பல பதிவர்கள் பெயர் திரும்பத் திரும்ப வந்திருப்பதைக் காணலாம். என் இடுகைகளிலும் அதனைத் தடுக்க இயலாது என்றே எண்ணுகிறேன். நனவிடைத் தோய்தல் எல்லோருக்கும் வழக்கமான ஒன்றுதானே ? எனினும் என்னால் இயன்றவரை நல்மணம் வீசும் மாலையாகத் தொடுக்க முயற்சி செய்கிறேன். வாய்ப்பளித்த பொன்ஸ்~பூர்ணா அவர்களுக்கும் ஆலோசனைகள் அளித்த முத்துலெட்சுமி அவர்களுக்கும் இடுகைகளை வாசிக்க வருகை தரும் உங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த இடுகையில் மறுபடியும் சந்திப்போம். :-)
மேலும் வாசிக்க...

ஒருவகையில் இது வாசகர் சரம்

மிக ஆர்வமாய் தானே வலைச்சரம் தொடுப்பதாக சொன்ன முத்துக்குமரன் வேலை மிகுதியால் தன் மனதை கவர்ந்த பதிவுகளை முற்றிலுமாக நம்மிடம் பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு வருந்தினார் . கண்டிப்பாக பிறிதொரு சமயம் நமக்கு அவற்றையெல்லாம் மீண்டும் சரமாக தொடுக்கும் வாய்ப்பு வரும் என்றே நினைக்கிறேன்.நன்றி முத்துக்குமரன்.

---------*******---------

அடுத்ததாக இந்த வாரம் வரவிருக்கும் பதிவர் அதிகம் பதிவுகள் இடுவது இல்லை என்றாலும் நல்லதொரு வாசகர் நம்முடைய பதிவுகளுக்கெல்லாம் ... எனவே வாசகர் விருப்பம் அறிய வாய்ப்பு. தன் நகைச்சுவை திறனுடைய பின்னூட்டங்களின் மூலம் மற்றவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பதிவர். அவருடைய பெயரில் மனைவி பெயரை இணைத்து அன்பை வெளிப்படுத்துவது எனக்கு மிக அழகாக இருக்கிறது. பாலராஜன்கீதா தான் அவர்கள்.வாசகராக மட்டுமில்லாமல் எழுதிக்கொண்டிருங்கள் அவ்வப்போது :)
மேலும் வாசிக்க...

Friday, December 14, 2007

சரம் தொடுக்காது விடைபெறுகிறேன்.

மிகுந்த ஆவலோடு வலைச்சரம் தொடங்கினேன். நான் இதைத் தொடங்கிய நேரம் அலுவலகத்தில்
எதிர்பாராத பணிச்சுமை. ஆண்டு இறுதி என்பதாலும், நிண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த ஒரு Project செவ்வாய் அன்று கிடைத்தது. அனைத்து நடைமுறைகளையும் இந்த வார இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் இணையப்பக்கமே வர முடியாது போயிற்று.

எனக்கே மிகுந்த ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இந்த ஏமாற்றத்தை ஈடுகட்டும் வகையாக எனது பதிவில் வலைச்சரமாக தொடுக்க நினைத்தவைகள் என்று பதிவிட எண்ணி இருக்கிறேன். இராம.கி அய்யாவின்.தமிழ் பதிவுகள், பேராசிரியர் தருமியின் இட ஒதுக்கீடு, அப்சல் குரு தூக்கு தொடர்பான பதிவுகள், அசுரனின் பல்வேறு விவாதப் பதிவுகள், இன்னும் நான் ரசித்த சிறுகதைகள், புத்தக வாசிப்புகள், கவிதைகள், எனக்குள் புன்னைகைப் பூக்கச் செய்த சில வலைதளங்கள் என பலவற்றை தொகுக்க எண்ணியிருந்தேன்.

மறுபடியும் ஒருமுறை மன்னிப்பு கேட்டு விடைபெறுகிறேன்.



அன்புடன்
முத்துகுமரன்
மேலும் வாசிக்க...

Tuesday, December 11, 2007

புதுமைப் பெண்கள் - வலைச்சரத்தில்

மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் எந்த சமுகம் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது. அன்பிற்கு அடையாளமாகயும், தெய்வங்களாகவும், தெய்வ தன்மை சூட்டப்பட்டாலும்,பெண்சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்திய சமூகம் வைத்திருத்திந்தது என்பது வரலாற்று உண்மை. பெண்களின் பேச்சு சுதந்திரம் என்பது கூட சமூக அமைப்பை பாதிக்காத வரையிலும் அனுமதிக்கப்பட்டது. பெண்ணின் சிந்தனைகளை தீர்மானிக்கும் உரிமையை நீண்ட நாட்களுக்கு இந்த சமூகமே வைத்திருந்தது. அடிமைப்படுத்தப்பட்ட நிலையை பெருமைமிகுந்ததாக பெண்களை நம்ப வைத்ததும் இதன் அடிப்படையிலே. கடந்த நூற்றாண்டு பல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தியது. கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பொருளாதார சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வலைப்பதிவுகளில் பல்வேறு துறைகளில், தளங்களில் தங்கள் ஆளுமையையும், சிந்தனைத் தெளிவையும் கொண்டிருக்கும் பெண் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்வளிக்க கூடிய ஒன்றாகும். அத்தைகைய சில பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் இந்த சரத்தில் தொடுக்கிறேன். என் பார்வையில் வராமல் சிறப்பாக இயங்குபவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் இங்கு தெளிவு படுத்திவிடுகிறேன். என் வாசிப்பின் எல்கைக்குள் இப்பதிவுகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன் சரம் தொடுக்க,


சமூகத்தின் போலித்தனங்களை தனது சாட்டையடி அணுகுமுறையால் அம்பலப்படுத்தியதில் தோழி லிவிங் ஸ்மைல் வித்யாவின் எழுத்துக்கள் மிக முக்கியமானவை. சமூகத்தால் ஒடுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு என பல்முனை தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட வரும் திருநங்கைகளின் பிரதிநிதியாக, அவர்களின் உணர்வுநிலையை பொதுச்சமூகத்தின் அறிவுக்கு கொண்டுவருவதில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். மரணம் என்றால் என்ன அதன் வலியையும் ஆழமாக பதிவு செய்திருந்தார். திருநங்கைகளை கேலிப்பொருட்களாகவே பாவிக்கப்பழகிவிட்ட மனங்களுக்கு அதன் பிண்ணனியில் இருக்கும் உறைய வைக்கும் பால்மாற்று அறுவை சிகிச்சையினைப்பற்றி தெரிவிக்கும் பதிவு பால்மாற்று அறுவை சிகிச்சை - ஒரு வீடியோ பதிவு, பரவலாக ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று தந்த இந்த பதிவு,
எயிட்ஸ் விழிப்புணர்வு என்ற பெயரில் நடக்கும் அவலத்தினை அற்புதமாக அலசும் பதிவு உலக எயிட்ஸ் தினம்.


அழகியலும், சமுகப் பொறுப்பும் ஒருங்கே காணப்படுவது மிக அரிதான ஒன்றாகும். ஆனால் இவரின் எழுத்துகளில் இவை இரண்டும் காண கிடைக்கும். மிக நுட்பமான எழுத்துக்கு சொந்தகாரர். தன் எழுத்தின் உலகத்திற்குள் வாசகனை பங்கேற்க்க செய்யும் அசாத்திய திறமை உடையவர். மனித நேயமும், ஆழமான அரசியல் பார்வையை உடைய இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது, அறிவுஜீவிகளின் முகத்திரையை அம்பலப்படுத்தும் அழுத்தமான பதிவு
அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் , சமீபத்தில் பரவலாக சர்ச்சையை கிளப்பிய ஞாநி விவாகாரம் தொடர்பாக இவர் இட்ட பதிவு, எந்த வளையத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் தான் நினைப்பதை தெளிவாக எடுத்துரைக்கும் திறமையை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள் , நான் குறிப்பிட நினைத்த இவரின் மற்றொரு பதிவான ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை பதிவினை தமிழ்நதி குறிப்பிட்டு விட்டார். நான் குறிப்பிட நினைத்த பலபதிவுகளை தன் கடைசிப்பதிவில் தமிழ்நதி குறிப்பிட்டு விட்டார். :-)

சமூகப்பொறுப்புடன் எழுதும் மற்றொரு பதிவர் மங்கை. பெண்கள் நலன், பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், எயிட்ஸ் விழிப்புணர்வு, மனநலன் மருத்துவம் சார்ந்த பதிவுகள் என சமூக அக்கறையுடன் எழுதப்படும் இவரது எழுத்து. சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்த Sr. லயோலா அவர்களை நமக்கு அறிமுகம் செய்த பதிவு, நாட்டையை உறைய வைத்தை நிதாரி படுகொலைகள் தொடர்பான பதிவு நெஞ்சு பொறுக்குதில்லையே-நிதாரியின் நிஜங்கள், இவரது எழுத்தினால் அடையாளம் காணப்பட்ட இன்னொரு சாதனைப்பெண்மணியான மீனாட்சி பற்றி பதிவு செய்ததும் அதற்கு நான் தாங்க மீனாட்சி பேசறேன்... என்று நம்மிடையே பகிர்ந்து கொண்ட மனிதநேய பதிவர்.

மலர்வனம் லஷ்மி, பொதுவாக பெண்கள் விவாதிக்க தயங்கும் தலைப்புகளில் எந்தவித தயக்கமும் இன்றி மனதில் பட்டதை தெளிவாக எடுத்துவைக்கும் பதிவர். பெண் அடிமைத்தனத்தை கேள்விக்குட்படுத்துபவர், பெண்ணியம் சார்ந்த சர்ச்சைகளில் இவரது பதிவுகள் இடம் பிடித்திருக்கின்றன. எதையும் கேள்விக்குட்படுத்தபடும் இவரது சிந்தனை தளம் சிறப்பானது. தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண், அடங்கமறு! ஐ.ஐ.டியில் பணிபுரிந்துகொண்டே அங்கு நிலவும் சமூக நீதிக்கெதிராக போராடிவரும் பேராசிரியர் அவர்களின் மகள் கவிஞர், பத்திரிக்கையாளர் மீனா கந்தசாமி அவர்களின் அவள் விகடன் நேர்காணல் அடங்கமறு அவசியம் வாசிக்க வேண்டிய நேர்காணல்

பொன்ஸ், சிறந்த வலைப்பதிவு தொழில்நுட்பவியலார். உற்சாகத்தோடு எழுத வரும் பதிவர் பலருக்கு தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை செய்துவருபவர். எனக்கும் பலமுறை உதவி செய்தவர். அதற்கு சிறப்பு நன்றி. நல்ல சிந்தனையாளர். கவிதை, சிறுகதை என்று பரவலாக தனது முத்திரையை பதிந்திருப்பவர். இவரது சந்திரா அத்தை சிறுகதை பலரது பாராட்டைப் பெற்றது. தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவர் என்றாலும் பரவலான வாசிப்பு அனுபவம் உடையவர். பெரியாரை பற்றி தவறாக திரிக்கும் பலருக்கு மத்தியில் இவரது நட்சத்திர வாரத்தில் வந்த பெண் ஏன் அடிமையானாள் ஆழமான அற்புதமான பதிவு.புரிதலுடன் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை விமர்சிக்கும்.

அப்படிப்போடு! மதுரை வீரம் ஈரமும் எழுத்தில் தெறிக்கும் எழுத்துக்கு சொந்தகாரர். பதிவுலகில் நான் அக்கா என்று அழைக்கும் ஒரே பதிவர். இவரது அரசியல் அறிவு ஆச்சிரியமளிக்ககூடிய ஒன்று. சென்ற சட்டமன்ற தேர்தல் பற்றிய அவரது கருத்துகணிப்புகளை வாசிப்பவர்களுக்கு இது எளிதாக புரியும். அதிகமான பதிவுகள் இருப்பதால் இணைப்பு கொடுக்கவில்லை. மண்வாசனை மணக்கும் இந்த பதிவு அவரது நட்சத்திர வாரத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
உள்ளடங்கும் ஆமைகள்.




இன்னும் சிலர் விட்டுபோயிருப்பதை உணர்கிறேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்


















.
மேலும் வாசிக்க...

Monday, December 10, 2007

மல்லிகைச் சரம்

கை தட்ட வந்தவன் கைகளுக்கு சரம் தொடுக்க வாய்ப்பு. எந்த வித முன் தயாரிப்புகளுமின்றி இந்த வார வலைசரத்தை தொடுக்க இருக்கிறேன். எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பு இன்னுமொரு எதிர்பாரத மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. வலைச்சரத்தின் 250வது சரமிது. இதுவரை இந்த வலைச்சரத்தை சிறப்பாக செய்து வந்த அனைவருக்கும் என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். சிந்தாநதி,பொன்ஸ் மற்றும் அழைப்பு அனுப்பிய முத்துலட்சுமி அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. சில தகவல் பரிமாற்ற குளறுபடிகளில் நண்பனுக்கு பதிலாக நான் வலைச்சரம் தொடுக்கிறேன்

அவரவர் நிலத்தில்
உதிரிப்பூக்களாய் மணம் வீசும்
வலைப்பூக்களை
தமிழ் கொண்டு
தொடுக்கிறேன்
சரமாய் வலைச்சரமாய்.


வலைச்சரத்தின் விதிகளின் படி என்னைப்பற்றியும் என் பழைய பதிவுகளைப் பற்றியும் விளம்பரபடுத்திக்கொள்ள வாய்ப்பிருந்தாலும் அதிலேதும் எனக்கு நாட்டமில்லை. நான் படித்தவற்றை, படித்தவற்றுள் ரசித்தவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.


இந்த வார வலைச்சரத்தை புற்றுநோயால் போராடிக் கொண்டிருப்பினும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து வலை பதிந்துவரும் அனுராதா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்ற வேண்டிக்கொள்கிறேன்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது