07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 10, 2008

பூவையரின் சில வலைப்பூக்கள் -1

இன்னைக்கு காலையிலே பதிவு எழுதலான்னு உட்கார்ந்தங்க, சின்ன அம்மணீயும் பெரிய் அம்மணியும் இன்னைக்கி ஸ்டரைக் நாங்க ஒண்ணும் உங்க ஆட்டத்துக்கு வல்லன்னு கோவுச்சுட்டு சமையக்கட்டுலயே உட்கார்ந்து கிட்டாங்க.

என்னடா! இது வம்பாப் போச்சேன்னு போய் கூப்பிட்டா, நீங்க மட்டும் தனியா எழுதறேங்கல்ல, நாங்க உங்க ஆட்டத்துக்கு வல்ல அப்படின்னு மக்கர் பண்ணர்றாங்க.

எப்படியோ இன்னிகு ரங்கநாதன் தெருவுக்கு கூட்டிட்டுப்போறேண்ணு தாஜா பண்ணினா, ஒரு கண்டிஷன் போடறோம், அதுக்கு ஒத்துகிட்டாதான் ஆட்டத்துக்கு வருவோம்ன்னு ஒரு வழியா எறங்கி வந்தாங்க. அந்த கண்டிஷன் என்னனனு கேக்கறீங்களா? எங்களுக்கு 33% இடம் குடுத்தாதான் நாங்க வருவேண்ணு மக்கர் பண்ணறாங்க. என்ன பண்ணற்துங்க அவங்க சொல்றதைக் கேட்டுத்தான ஆகணும் இல்லாட்டி அடுத்த வேளை சாப்பாடு கிடைக்காதே இனி எழுதற பதிகள்ள பூவையர்களின் பற்றி எழுதறேன்னு சொல்ல ரெண்டு பேரும் வந்தாங்க படிங்க இனி .

பெ அ: இனி மேல நாந்தான் அறிமுகப்படுத்துவேன்



( ஒரு கண்டிஷன் வேற போட்டாங்க.)

சரி போடுண்ணா போடுறேன் தோப்புக்கரணம்ன்னு சொல்லி ஒத்து கிட்டேன் . அதனால இந்த பதிவு முழுவதும் மகளிருக்கு உரியது.

சி. அ : முதல்ல நாம அறிமுகப்படுத்தப்போறது ஷைலஜா ஆன்டியைத்தானேம்மா?

அவங்களேதான், கற்றது கை மண் அளவுன்னு அடக்கமா சொல்லற அவங்க எவ்வளவு பெரிய தத்துவங்களை எல்லாம் சொல்லறாங்க தெரியமா?


எண்ணிய முடிதல் வேண்டும்


என்று தைரியம் கொடுக்கறாங்க இவங்கன்னு சந்தடி சாக்குல நானும் கொஞ்சம் எடுத்து விட்டேன்.

சி. அ : இதுல இவங்க பூ, கடிகாரம், பஞ்சவர்ணக்கிளி அத்தனையும் அருமை. கண்ணன் பாடல்ல 100 பாடலை இவங்களும் பாடியிருக்காங்க அல்லம்மா?


அப்ப இவங்க ஆன்மீகப்பதிவரும் ஆயிட்டாங்க.

பெ அ :ஆமா இவ்ங்க, KRS, குமரன் இவர்களோட கூட்டணி ஒரு நல்ல கூட்டணி.

"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவவகை செய்தல் வேண்டும் "என்னுங்கற கொள்கையோட







எல்லோரடயும் சேர்ந்து தமிழ்ச்சங்கம் வேற நடத்துறாங்க.

ஒரு ஆச்சிரியமாக "காசேதான் கடவுளடான்னு "இவங்க



மங்களூர் சிவாவோட இணைந்து












ஒரு வணிக வலைப்பூவுலயும் எழுதுறாங்க.






சி. அ: அம்மா நாளைக்கு மங்களூர் சிவா அங்கிளுக்கு கல்யாணம் இல்ல அதற்கு வாழ்த்து சொல்லலாமா?






மூவரும்: அன்பு மங்களூர் சிவா, இல்லறத்தில் நல்லடி எடுத்து வைக்கும் தாங்கள் அந்த வடபழனி முருகன் அருளால் சகல வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

பல விதங்களில் எழுதி சேவை செய்யும் ஷைலஜாவிற்கு நன்றிகள்.
----------------------------

பெ. அ : துளசி டீச்சரைப் பத்தித்தான் நாம அடுத்து சொல்லணும் இது என்னோட ஆர்டர்.

சி அ: ஏம்மா அவங்க நெசமாவே டீச்சராம்மா? எந்த பாடம் நடத்தறாங்க?

பெ அ: ஆமா, அவங்க பெரம்ப எடுத்தா வலைப்பதிவர்கள் அத்தன பேருமே நடுங்குவாங்க

அதனாலதான் அவங்களுக்கு பேரு டீச்சர்.

சி. அ : அவங்க ஒரு யாணைத்தலைவி. இல்ல இல்ல தானைத்தலைவி. அவங்க யாணை , பூணை அனிமேஷன் அத்தனையும் சூப்பரோ சூப்பர், அதைப் பாக்கறதுக்காகவே நான் அவங்க பதிவை படிப்பனாக்கும்.

"நினைத்தது, கண்டது, கேட்டதுன்னு" எல்லாத்தையும் நகைச்சுவையா தன்னோட துளசி தளம் வலைப்பூவுல எவ்வளவு அருமையா எழுதுறாங்க துளசி கோபால் அம்மா.

இந்த அம்மா எப்படி இவ்வளவு நகைச்சுவையா எளிமையா எழுதறாங்கண்ணு ஆச்சிரியப்பட வைக்கற எழுத்து அவங்களோடது.

பெ. அ : இவரோட ஒரு நல்ல குணம், எந்த புதிய பதிவர் எழுதுனாலும் அதைப்படிச்சு பார்த்துட்டு அதுல பின்னூட்டமும் இட்டு அவங்கள் உற்சாகப்படுத்தறதுதான்.


சி. அ : எல்லாருக்கும் புதுப் புது பேரு கொடுக்கறதுல இவங்க சூப்பர் இல்லம்மா?

ஆமாம்மா ஊர் ஊரா இல்ல நாடு நாடா சுத்தற (உலகம் சுற்றும் வாலிபி) இவங்க அங்க கிடைக்கற காய்கறி, பழம், பூன்னு எல்லாத்தையும் சூப்பரா போட்டோ எடுத்து தன்னோட வலைப்பூல போட்டு அருமையா புதுப் புது பேரும் கொடுத்து கலக்கறாஙக.

பெ அ : அப்ப துளசி டீச்சரோட சேவை நம்ம அனைவருக்கும் தேவைன்னு சொல்லறீங்களா?




அதுல என்ன சந்தேகம், இல்லாட்டி இவ்வளவு விஷயங்களை எப்படி நாம தெரிஞ்சுக்க முடியும்.

சாப்பிட வாங்க!



ன்னு எல்லாருக்கும் விருந்து இவங்களும் படைக்கறாங்க





இவங்க கூட்டணியில இருக்கற மத்தவங்க
















இன்னும் இவங்களோட பெருமைகளை சொல்லிகிட்டே போகலாம் ஆனாலும் மத்தவங்களைப்பத்தியும் சொல்லனுமல்ல அதனால அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு அடுத்தவருக்கு போகலாமா?




சரி சரி
------------------------------------------

சி. அ : அடுத்தவங்க நாச்சியார் அம்மா. திருப்பாவை பாடிய கோதை நாச்சியாரோட பேரையே தன்னோட புணைப்பெயரா வெச்சிருக்கற இவங்க தன்னோட வலைப்பூவுக்கு வில்லிபுத்தூர் ஸ்ரீ ன்னு பேர் வெச்சிருக்காங்க இல்லம்மா?

ஆமா "வருகை தரும் புதியவர்களுக்கும் வந்தவ்ர்களுக்கும் நன்றின்னு" சொல்லி அருமையான எளிமையான எழுத்தால மகிழ்விக்கறாங்க இவங்க.

பெ அ: இவங்க எழுத்து ரெம்ப சிம்பிளாத்தான் இருக்கும், ஒவ்வொரு நிகழ்வுகளையும் இவங்க சொல்லுற அழகே அழகு.






வலைப்பூவுல இவங்க எழுதுறது எல்லாமே சாதாரணமா எல்லார் வீட்டுலயும் நடக்கிற விஷயங்கதான் ஆனாலும் அதை இவங்க எழுதற விதம் தான் அருமை.

நிழலின் அருமை,காலைக் காற்று, சூழும் இசை என்றும் வேண்டும்ன்னு இவங்க அசைபோடுற அனைத்துமே அருமை.

தங்களுக்கும் நன்றி வல்லி சிம்ஹன் அம்மா.

-------------------------------------------


இன்றைய தினம் ஈசான முகம் என்று அழைக்கப்படும் முந்நீர் கலங்கிட எழுந்த காய் சின ஆலம் உண்ட நீலகண்டரின் மேல் நோக்கிய முக தரிசனம் காணுங்கள் அன்பர்களே.


The fifth aspect (face) of the Lord( Kailash ) is "Ishaan" . at the top of the peak, facing up to the sky. This face is the one that bestows blessings on mankind. Thus the five faces of the Lord represent five acts of the Lord.


ஈசான முகம் : சிறுபிள்ளை முகம் போல் பளிங்கு நிறமாய் ஈசான திசையை பார்த்து மேல் நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை குறிக்கின்றது, ஐந்தொழிலில் அருளல் தொழிலைக் (அனுக்கிரகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் "ய". ஐயன் சதாசிவ வடிவம். அம்மை பராசக்தி வடிவம். சுத்த அன்னம் நைவேத்யம். இம்முகத்தை



ஈஸான: சர்வ வித்யானாம் ஈஸ்வர: சர்வ பூதானாம்
பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர்
ப்ரஹ்மா சிவோ மே அஸ்து சதாஸ’வோம்.

என்னும் ஊர்த்வ வக்தர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம்.

சிவலிங்கம் போல் விளங்கும் கயிலாய மலையின் மேல் நோக்கிய முகம் இதோ கையிலங்கிரியிலே ஈசான முகத்தை நேரடியாக நாம் பார்க்க முடியாது, மலைதொடரிலே கையிலாய சிகரம் மட்டு 2000 அடி உயரம் அதிகம் மேலும் நான்கு புறமும் பர்வதங்களால் சூழப் பெற்றுள்ளதாலும் கைலாயத்தின் சிகரத்தின் அடிவாரத்திலே ஆழமான பனியாறுகள் இருப்பதாலும் யாரும் கையிலங்கிரியை நெருங்குவதே கடினம் எனவே ஈசான முக தரிசனம் இந்த படத்தின் மூலமாகவே கிட்டும்.



See how the HOLY Kailash resemblesa Shiv Lingam with the extension on the east side.


This face, faces upward and so it is difficult to witness this face from ground during the parikrama. This picture is the photo taken from helicopter.



ஐயனின் தரிசனம் கண்டோம் அம்மையின் தரிசனமும் வேண்டுமல்லவா, அன்னை கிரி ராஜ குமாரி, பர்வத ராஜ புத்ரியின் கர்ப்பகிரகம் தான் டோல்மா கணவாய் , யாத்திரையின் மிகவும் உயரமான இடம். திபெத்திய கொடிகளால் சூழப்பட்டுள்ளாள் அன்னை பார்வதி.

இந்துக்களுக்கு டோல்மா, சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ கன்யை பார்வதி தேவி, திபெத்தியர்களுக்கு அவர்களுடைய காவல் தெய்வம் தாரா தேவி.



View of Dolma Pass in June





சிவசக்தி ஸ்தலம் டோல்மா கணவாய்









Dolma Pass is the highest point in the whole yatra. It is also called as Shiv Sakthi sthal. This is considered to be the sanctum santorum of the Lord and Mother. Dolma is Tara Devi for Tibetians and Parvati for Hindus. We worship mother here. It is also the difficult point in the whole of Parikrama. Our group was lucky that we stayed here for around 30 minutes and did havan by Her Grace, as the weather was extremely good.


4 comments:

  1. மூவர் சார்பிலும் நன்றி கைலாஷி.

    படங்கள் அற்புதம். வானவில்லே வந்து இறங்கினாப்போல் இருக்கே!!!!

    ReplyDelete
  2. எம்பெருமானின் தரிசன்ம் கண்டு தாங்கள் எல்லா நலங்களும் பெற வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  3. பூவையர் மூவரை அருமையாக அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை -- இப்பதிவு தேவையான ஒன்று.

    நல்வாழ்த்துகள் கைலாஷி

    ReplyDelete
  4. இவர்களுக்கு அறிமுகம் தேவையில்லைதான் - ஆகவே இவர் புகழ் பாடியுள்ளேன்.

    இவர்கள் எல்லாம் நான் பார்த்து வியக்கும் சில பூவையர்கள் அதற்காகத்தான் இப்பதிவுகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது