பதிவுலகம்-சில அனுபவக்குறிப்புகள்
➦➠ by:
எம்.ஏ.சுசீலா
வலைச்சரத்திலிருந்து நான் விடைபெறும் முன்,உங்களிடம் சில வார்த்தைகள்...
நான்காண்டுக் காலமாகப் பதிவுலகில் நான் பெற்ற அனுபவச்சேமிப்புக்களின் குறிப்புக்களே இவை. இதன் வழி,எவருக்கும் ஆலோசனை வழங்குவதோ,அறிவுரை அளிப்பதோ என் நோக்கமில்லை;வலையுலகில் சற்று அதிகமான பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் புழங்கும் இந்தத் தளத்தில் இச்செய்திகளை வைத்தால் அவை பலரிடம் சென்று சேரக்கூடும் என்னும் நோக்கமே இவற்றை இங்கே பதிவு செய்வதற்கான மனத் தூண்டுதலை எனக்கு அளித்திருக்கிறது.
பதிவுலகம் ஒரு பரந்த வானம்.அங்கே சிறகு பரப்பித் திரியும் விருப்பம், இணையமும்,தமிழும் வசப்பட்டு...ரசனையும் எழுத்தார்வமும் கொண்ட பலருக்கும் எழுவது இயற்கைதான். பத்திரிகைகளின் மாற்று வடிவங்களைப்போலவே பெரும்பாலான வலைப்பூக்களும்,தளங்களும் இருந்தாலும்..பத்திரிகைத் துறையில் உள்ள தணிக்கை(censor) மற்றும் செம்மையாக்கம்(editing)செய்ய இங்கே எவருமில்லை.பதிவுலகுக்கு வாய்த்த மிகப்பெரிய வரம் அது; அதைச் சாபமாக்கி விடாமல் இருப்பதும் நம்மைச் சார்ந்ததே.
‘’வரங்களே சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே தவங்கள் எதற்காக’’என்கிறது அப்துல் ரகுமானின் கவிதை ஒன்று.
வானமே எல்லையெனக் கொண்டு...நாம் பார்த்ததை,நாம் உணர்ந்ததை,நாம் ஆழ்ந்து தோய்ந்ததை,நம்மைப்பாதிப்புக்குள்ளாக்கியதை என எதை வேண்டுமானாலும் எழுதும் விடுதலைவெளி நமக்கு வாய்த்திருக்கிறது.ஆனால்...அந்த சுதந்திரத்தின் மீது நமக்கும் சற்று சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போகும்போது பதிவுகளின் முகங்கள் கோரமாக,அருவருப்பாக மாறிப்போய்ப் பிறர் மீதான காழ்ப்புணர்வை,தூஷணைகளை வாரித் தூற்றும் யுத்த களமாகப் பதிவுலகை ஆக்கி விடுகின்றன.அவற்றால்,எழுதுவோருக்கும் பெருமையில்லை;வாசகருக்கும் பயனில்லை.வலை எழுத்தென்பது வம்பு மடமாக மாறும் அந்தத் தருணம் தவிர்க்கப்படுவதே ஆரோக்கியமான பதிவுகளுக்கான வாயில்களைத் திறந்து வைக்கும்.
அடுத்து...பின்னூட்டங்கள் பற்றி.
பதிவுலகில் தொடர்ந்து செயல்பட ஊக்கம் நல்கி உற்சாகமளிப்பவை அவற்றைப்படிக்கும் வாசகர்கள் அவ்வப்போது இடும் கருத்துரைகளே. எழுதிய படைப்புக்கு உடனுக்குடன் கிடைக்கும் எதிர்வினை என்பது இந்த இணைய ஊடகத்தில் மட்டுமே சாத்தியமாகக்கூடியது; அச்சு ஊடகத்தில் காணக்கிடைக்காதது. அதுவும் கூட வலையெழுத்தின் வரங்களில் ஒன்றுதான். பிறரைப்பாராட்டியோ புகழ்ந்தோ ஒரு சொல் கூடக்கூற மனம் வராதவர்களே மலிந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அபாரம்,அற்புதம்,வாழ்த்துக்கள் போன்ற ஒற்றைச் சொற்களும் கூடக் கிடைத்தற்கரியவைதான்! மதிப்புக்கு உரியவைதான்! எனினும் நேரம் சற்றுக்கூடுதலாகக் கிடைக்கும்போது பதிவிலுள்ள ஏதேனும் ஒரு அம்சத்தைக் குறிப்பாக முன்னிறுத்தி அதைப்பாராட்டுவதாகவோ,விமரிசிப்பதாகவோ,அதன் மீதான மாற்றுக் கருத்தையோ கேள்வியையோ எழுப்புவதாகவோ பின்னூட்டங்கள் அமையுமானால் தங்கள் பதிவுகளை மெய்யாகவே வாசித்து விட்டுத்தான் கருத்திட்டிருக்கிறார்களென்ற எண்ணம் பதிவர்களுக்கும் பிறக்கும். எழுதப்பட்ட பொருளின் மீதான விவாதம் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவும் அது உதவும்.
கையிலிருக்கும் ரிமோட்டை இயக்கித் தொலைக்காட்சிப் பெட்டியின் சேனல்களை ஓயாமல் மாற்றி மாற்றிப் பார்ப்பதைப்போல இணையத்தில் உலவும்போதும் பலப்பல வலைகளுக்குள் மாறி மாறிக் கூடு பாய்ந்து கொண்டிருக்கும் வேக சஞ்சாரிகளின் கவனம் பெறுபவை பெரும்பாலும் சிறிய பதிவுகளாகவே இருந்து விடுகின்றன. உழைப்பைக் கொட்டி ஆழ்ந்து நுணுகி எழுதப்படும் சற்று நீண்ட பதிவுகளைக் கண்டால்,பாம்பைக்கண்டதைப்போல தூர விலகிப்போய் விடுபவர்களே பலர். இன்றைய வாழ்வுப்போக்கின் அவசர கதியில் நேரம் கிடைக்காமலிருப்பதும் அதற்கு ஒரு காரணம் என்றாலும் அதன் காரணமாகவே சில நல்ல பதிவுகளையும் நாம் தவற விட நேர்கிறது.அது பற்றியே,கடந்த ஆறு நாட்களாகக் கவனம் பெறக்கூடியவையும்,கவனம் பெறாமல் நழுவிப்போனவையுமான அத்தகைய பல பதிவுகளை நான் பெரிதும் முன்னிலைப்படுத்த விரும்பினேன்.
இறுதியாக நான் விரும்பி வாசிக்கும் - அடிக்கடி செல்லும் பிற தளங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டு என் பணியை நிறைவு செய்கிறேன்.....
சமையல்குறிப்புக்களைக் கூட இலக்கிய ரசனையோடும்,நகைச்சுவை உணர்வோடும் இணைத்து வழங்கும் தாளிக்கும் ஓசை( இதில் இப்போது பதிவுகள் ஏன் வருவதில்லை தெரியவில்லை;ஆனாலும் இதிலுள்ள பதிவுகளே அதிகம்தான்),
இறுதியாக.....
நான்காண்டுக் காலமாகப் பதிவுலகில் நான் பெற்ற அனுபவச்சேமிப்புக்களின் குறிப்புக்களே இவை. இதன் வழி,எவருக்கும் ஆலோசனை வழங்குவதோ,அறிவுரை அளிப்பதோ என் நோக்கமில்லை;வலையுலகில் சற்று அதிகமான பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் புழங்கும் இந்தத் தளத்தில் இச்செய்திகளை வைத்தால் அவை பலரிடம் சென்று சேரக்கூடும் என்னும் நோக்கமே இவற்றை இங்கே பதிவு செய்வதற்கான மனத் தூண்டுதலை எனக்கு அளித்திருக்கிறது.
பதிவுலகம் ஒரு பரந்த வானம்.அங்கே சிறகு பரப்பித் திரியும் விருப்பம், இணையமும்,தமிழும் வசப்பட்டு...ரசனையும் எழுத்தார்வமும் கொண்ட பலருக்கும் எழுவது இயற்கைதான். பத்திரிகைகளின் மாற்று வடிவங்களைப்போலவே பெரும்பாலான வலைப்பூக்களும்,தளங்களும் இருந்தாலும்..பத்திரிகைத் துறையில் உள்ள தணிக்கை(censor) மற்றும் செம்மையாக்கம்(editing)செய்ய இங்கே எவருமில்லை.பதிவுலகுக்கு வாய்த்த மிகப்பெரிய வரம் அது; அதைச் சாபமாக்கி விடாமல் இருப்பதும் நம்மைச் சார்ந்ததே.
‘’வரங்களே சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே தவங்கள் எதற்காக’’என்கிறது அப்துல் ரகுமானின் கவிதை ஒன்று.
வானமே எல்லையெனக் கொண்டு...நாம் பார்த்ததை,நாம் உணர்ந்ததை,நாம் ஆழ்ந்து தோய்ந்ததை,நம்மைப்பாதிப்புக்குள்ளாக்கியதை என எதை வேண்டுமானாலும் எழுதும் விடுதலைவெளி நமக்கு வாய்த்திருக்கிறது.ஆனால்...அந்த சுதந்திரத்தின் மீது நமக்கும் சற்று சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போகும்போது பதிவுகளின் முகங்கள் கோரமாக,அருவருப்பாக மாறிப்போய்ப் பிறர் மீதான காழ்ப்புணர்வை,தூஷணைகளை வாரித் தூற்றும் யுத்த களமாகப் பதிவுலகை ஆக்கி விடுகின்றன.அவற்றால்,எழுதுவோருக்கும் பெருமையில்லை;வாசகருக்கும் பயனில்லை.வலை எழுத்தென்பது வம்பு மடமாக மாறும் அந்தத் தருணம் தவிர்க்கப்படுவதே ஆரோக்கியமான பதிவுகளுக்கான வாயில்களைத் திறந்து வைக்கும்.
அடுத்து...பின்னூட்டங்கள் பற்றி.
பதிவுலகில் தொடர்ந்து செயல்பட ஊக்கம் நல்கி உற்சாகமளிப்பவை அவற்றைப்படிக்கும் வாசகர்கள் அவ்வப்போது இடும் கருத்துரைகளே. எழுதிய படைப்புக்கு உடனுக்குடன் கிடைக்கும் எதிர்வினை என்பது இந்த இணைய ஊடகத்தில் மட்டுமே சாத்தியமாகக்கூடியது; அச்சு ஊடகத்தில் காணக்கிடைக்காதது. அதுவும் கூட வலையெழுத்தின் வரங்களில் ஒன்றுதான். பிறரைப்பாராட்டியோ புகழ்ந்தோ ஒரு சொல் கூடக்கூற மனம் வராதவர்களே மலிந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அபாரம்,அற்புதம்,வாழ்த்துக்கள் போன்ற ஒற்றைச் சொற்களும் கூடக் கிடைத்தற்கரியவைதான்! மதிப்புக்கு உரியவைதான்! எனினும் நேரம் சற்றுக்கூடுதலாகக் கிடைக்கும்போது பதிவிலுள்ள ஏதேனும் ஒரு அம்சத்தைக் குறிப்பாக முன்னிறுத்தி அதைப்பாராட்டுவதாகவோ,விமரிசிப்பதாகவோ,அதன் மீதான மாற்றுக் கருத்தையோ கேள்வியையோ எழுப்புவதாகவோ பின்னூட்டங்கள் அமையுமானால் தங்கள் பதிவுகளை மெய்யாகவே வாசித்து விட்டுத்தான் கருத்திட்டிருக்கிறார்களென்ற எண்ணம் பதிவர்களுக்கும் பிறக்கும். எழுதப்பட்ட பொருளின் மீதான விவாதம் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவும் அது உதவும்.
கையிலிருக்கும் ரிமோட்டை இயக்கித் தொலைக்காட்சிப் பெட்டியின் சேனல்களை ஓயாமல் மாற்றி மாற்றிப் பார்ப்பதைப்போல இணையத்தில் உலவும்போதும் பலப்பல வலைகளுக்குள் மாறி மாறிக் கூடு பாய்ந்து கொண்டிருக்கும் வேக சஞ்சாரிகளின் கவனம் பெறுபவை பெரும்பாலும் சிறிய பதிவுகளாகவே இருந்து விடுகின்றன. உழைப்பைக் கொட்டி ஆழ்ந்து நுணுகி எழுதப்படும் சற்று நீண்ட பதிவுகளைக் கண்டால்,பாம்பைக்கண்டதைப்போல தூர விலகிப்போய் விடுபவர்களே பலர். இன்றைய வாழ்வுப்போக்கின் அவசர கதியில் நேரம் கிடைக்காமலிருப்பதும் அதற்கு ஒரு காரணம் என்றாலும் அதன் காரணமாகவே சில நல்ல பதிவுகளையும் நாம் தவற விட நேர்கிறது.அது பற்றியே,கடந்த ஆறு நாட்களாகக் கவனம் பெறக்கூடியவையும்,கவனம் பெறாமல் நழுவிப்போனவையுமான அத்தகைய பல பதிவுகளை நான் பெரிதும் முன்னிலைப்படுத்த விரும்பினேன்.
இறுதியாக நான் விரும்பி வாசிக்கும் - அடிக்கடி செல்லும் பிற தளங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டு என் பணியை நிறைவு செய்கிறேன்.....
அரசியல்,சமூகம் சார்ந்த கட்டுரைகளைத் தருக்க பூர்வமான வாதங்களோடும்,துணிவோடும்,நடுநிலையோடும் அளிக்கும்ஞாநியின் ’ஓ’ பக்கங்கள்,
| ‘தீம்தரிகிட’இதழின் ஆசிரியரும்,பரீக்ஷா நாடக அமைப்பை நடத்தி வருபவருமான இதழியலாளர் ஞாநி |
பெண்ணியக் கருத்துக்களை மையப்படுத்தி அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரலாகப் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப்பெண்கள் நடத்தி வரும்ஊடறு,
நாட்குறிப்புக்களைக் கூடக் கதை போன்ற சுவாரசியத்துடன் சொல்லும் கனடா எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் தளம்,
இணையம் கற்போம் என்ற நூலை எழுதியவரும் கல்வித் துறையில் இருப்போரை இணைய வெளிக்குள் ஈர்ப்பதில் வல்லவருமான
பேராசிரியர் மு.இளங்கோவனின் தளம்,
சமையல்குறிப்புக்களைக் கூட இலக்கிய ரசனையோடும்,நகைச்சுவை உணர்வோடும் இணைத்து வழங்கும் தாளிக்கும் ஓசை( இதில் இப்போது பதிவுகள் ஏன் வருவதில்லை தெரியவில்லை;ஆனாலும் இதிலுள்ள பதிவுகளே அதிகம்தான்),
| எட்வின் |
இணையத்திலும் வலைப்பதிவு எழுதும்போதும் கையாளக்கூடிய உத்திகளை மிக இலகுவாக முன் வைத்து அவற்றை நாம் கற்றுக்கொள்ள உதவும் வந்தேமாதரம்,
சமூகச்சிந்தனை கொண்ட எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி கவிஞர் திலகபாமாவின் சூரியாள்,
சிங்கப்பூர் பெண் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனின் கமலகானம்,
மதுரையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் உஷாதீபனின் வலைப்பூ
ஆனந்தவிகடனில் பணியாற்றுபவரும்,வெட்டுப்புலி நாவலாசிரியருமான தமிழ்மகனின் தளம்,
தொடர்ந்து பல ஆன்மீகப் பயணக்கட்டுரைகளைப்பதிக்கும்http://natarajar.blogspot.in,
மற்றும்,
கோமதி அரசின் திருமதி பக்கங்கள்
பி.கு;
எல்லாக் கட்டுரைகளுக்கும் சில வரையறைகள் உண்டென்பதால் நான் செல்லும் எல்லா வலைத் தளங்களையும் என்னால் குறிப்பிட இயலவில்லை என்பது சிறிது மனக்குறைதான்!
ஆனந்தவிகடனில் பணியாற்றுபவரும்,வெட்டுப்புலி நாவலாசிரியருமான தமிழ்மகனின் தளம்,
தொடர்ந்து பல ஆன்மீகப் பயணக்கட்டுரைகளைப்பதிக்கும்http://natarajar.blogspot.in,
மற்றும்,
கோமதி அரசின் திருமதி பக்கங்கள்
பி.கு;
எல்லாக் கட்டுரைகளுக்கும் சில வரையறைகள் உண்டென்பதால் நான் செல்லும் எல்லா வலைத் தளங்களையும் என்னால் குறிப்பிட இயலவில்லை என்பது சிறிது மனக்குறைதான்!
இறுதியாக.....
இந்த மாய உலகின் சஞ்சாரத்தில் நான் சந்தித்த சில மனிதர்களையும்,அவர்களின் படைப்புக்கள்,மற்றும் அனுபவங்களையும் பலரோடும் பகிர்ந்து கொள்ள வலைச்சரத்தை அரங்கமாக்கி எனக்கு முழுமையான சுதந்திரத்தை அளித்த நண்பர் திரு சீனாவுக்கும்,வருகை புரிந்து ஊக்க மொழிகளால் நாளும் உற்சாகமளித்த உள்ளங்களுக்கும் நன்றி....நன்றி...





.jpg)







