07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கோமதி அரசு. Show all posts
Showing posts with label கோமதி அரசு. Show all posts

Tuesday, December 24, 2013

குருவே சரணம்

'குரு இல்லா வித்தை பாழ்' என்பார்கள். எல்லோருக்கும் முதல் குரு அம்மா. அப்புறம் அப்பா ; பின், பள்ளியில் ஆசிரியர்.  வாழ்க்கை நடத்திச் செல்லும் போது நல்ல வழிகாட்டிகளாய் வருபவர்கள் எல்லாம் குருதான்.
அவரவர் தேடலுக்கு ஏற்ப  குருஅமைவார்கள்.

காயத்ரீ மந்திரம்:

நம்முடைய உயிராற்றலாகவும், துக்கத்தை அழிப்பதாகவும், இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும்  தன்னைவிட மேலாக ஒன்றும் இல்லாததும் நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீக பரம்பொருளை நாம் மனதில் இருத்தி தியானிப்போமாக! அந்தப் பரம்பொருள் நமது அறிவை நல்வழி யில் ஈடுபடுத்தட்டும். 

எவர் நம் அறிவைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக!

 இப்படி நம் அக இருளைப் போக்கி ஞான ஒளி ஏற்றுபவர்  குரு தானே! அந்த குருவாய் வந்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் குருவைப்பற்றிய பதிவுகள்:-

1. ’குருவே சரணம்’ என்ற பதிவில் குருவின் அவசியத்தைச் சொல்கிறார்,  வாசுதேவன் திருமூர்த்தி அவர்கள்.

கடவுள் எல்லா இடத்திலும் நேரே வரமுடியாது; மனித உருவில் நடமாடும் தெய்வங்கள் நமக்கு உதவுவார்கள் என்பார்கள், அனுபவப்பட்டவர்கள். என் கணவர்,  பாடல் பெற்ற தலங்களுக்குச் செல்லும்போது  (அந்தக் காலத்தில் சரியான பஸ் வசதி இல்லாத ஊர்களுக்கு செல்லும் போது) எங்கிருந்தோ நல்ல மனிதர் வந்து சைக்கிளில் அழைத்துச் சென்றார் என்று சொல்வார்கள்.

2. முத்துப்பாண்டி என்று வலைத்தளம் வைத்து இருக்கும் தேவா சுப்பையா,  ’கடவுளின் மொழி ’  என்ற பதிவில்,  அவர் அவசரமாய்  ஊருக்குப் போக வேண்டி இருக்கும்போது, சாலை மறியலில்  மாட்டிக்கொண்டு தவித்தபோது,  முன்பின் தெரியாத மனிதர் ஒருவர் வந்து அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு வண்டியில் அழைத்துச் சென்று விட்டதையும்,  அவர் குலதெய்வ வழிபாட்டுக்கு செல்ல வந்தவர் செல்லாமல்  தனக்கு உதவிசெய்ததையும், அதைத்தான்  இறைவன் விரும்புவான் என்று  உதவியவர் கூறியதையும் அழகாய் சொல்கிறார். அவரது செல் நம்பர் வாங்கியவர் , பெயரைக் கேட்க மறந்து, பின் செல்லில் ’கடவுள்’ என்று போட்டுக் கொள்கிறார். தக்க நேரத்தில் உதவுபவர் கடவுள்தானே!

3. வாழ்க்கையில் நாம் நிறைய பேரைச் சந்திக்க வேண்டி உள்ளது. அவர்கள் கருத்துடன் நாம் ஒத்துப் போக முடியாமல் முரண்பட வேண்டி இருக்கும். சிலர் குதர்க்கமாய் பேசுவார்கள். அதை எப்படிச் சமாளிக்கலாம் என்று புத்தரின் அனுபவ  போதனைகளில் இருந்து  சிலவற்றை அழகாய்ப் பகிர்கிறார், ’சித்தவித்யா விஞ்ஞானம்’ என்ற வலைத்தளத்தை வைத்திருக்கும் சுமனன் அவர்கள். முரண்பாடுகளை, குதர்க்கங்களை எப்படி சமாளிப்பது -- புத்தரின் ஞானம்


4. சப்பாத்தி சொல்லும் வாழ்க்கைப் பாடம் - சப்பாத்தி பிசைவதிலிருந்து அதை அழகாய்ப் போட்டுச் சாப்பிடுவது வரை உள்ளதை வாழ்க்கையுடன் இணைத்து வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தருகிறார்,மகாலக்ஷ்மி விஜயன். ( பொறுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை) வாழ்க்கை, போரடிக்காமல் , ஒவ்வொரு நாளும் புதிதாகவும்  அழகாகவும் வாழலாம் என்கிறார்.  

5.’பிரியாவிடைகளும், பிரியங்களும்’ என்ற பதிவில், ’மகிழம்பூச்சரம்’ என்று வாசம் மிக்க வலைத்தளம் வைத்து இருக்கும் சாகம்பரி அவர்கள் பிரியாவிடைகளைப்பற்றிச் சொல்கிறார் :-
எப்போதிருந்து இந்த பிரியாவிடைகள் உருவாகுகிறார்கள்? கணவன் மனைவிக்கிடையே ஒரு ஆத்மபூர்வமான உறவு ஏற்படும்போது உருவாகலாம். அதென்ன ஆத்மபூர்வம் என்று கேட்டால், உணர்தலும் , புரிதலும் , நெகிழ்தலும் என்பதுதான்  என்கிறார்.


 6. ’கைக்கெட்டும் தொலைவில் இருந்த ஸ்ரீஅரவிந்தரை நான் உணர இத்தனை நாட்கள் கடந்திருக்கின்றன. போன வருடத்தின் ஆவணி மாத மழைநாளின் மங்கலான ஒரு முழு இரவு என்னுள் முழு நிலவு உதயமாகக் காரணமாக இருந்தது. அரவிந்தரைப் படிக்க ஆரம்பித்தேன், நள்ளிரவு கடந்த நிசப்தத்தில் அரவிந்தர் என் அருகே அமர்ந்திருப்பதாய் உணர்ந்தேன். மொழியின் துணையால் சில இடங்களையும், ஆன்மாவின் துணையால் பல இடங்களையும் நதியில் மிதக்கும் கட்டுமரமாய்க் கடந்து கொண்டிருந்தேன்.’- இப்படி சொல்வது ’கைகள் அள்ளிய நீர்’ என்ற வலைத்தளம் வைத்திருக்கும் சுந்தர்ஜி ப்ரகாஷ்.
 ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழிகள்- சுபாஷிதம் 17.

7. குரு, தானே வருவார்.- இப்படிச் சொல்வது  சுவாமி ஓம்கார் அவர்கள்.
’குரு கதைகள்’ என்ற வலைத்தளத்தில்,  ’குருவைத் தேடி  என்று கதைகளைப் பகிர்ந்து வருகிறார். குரு என்பவர் எந்த தோற்றத்திலும் இருக்கலாம். உங்கள் வீட்டுக்கு வரும் குப்பை அள்ளுபவர், உங்கள் மனைவி, உங்கள் குழந்தை, உங்கள் செல்லப் பிராணியான நாய் என யார் வேண்டுமானாலும் உங்கள் குருவாக இருக்கலாம். குருவை உங்கள் பார்வையில் தேடாதீர்கள். அறியாமை இல்லா மனதைத் திறந்து  வையுங்கள் உங்கள் குரு தானே வருவார் என்கிறார்.

8.


ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாளின் அற்புத தத்துவம் சகலத்திடமும் சமமான அன்புதான் அவரது சாஸ்வத சத்யமான அன்புதான் அவரை உலக நாடுகளின் பேரவைக்கு ”மைத்ரீம் பஜத” என்ற கீதத்தை அருளச் செய்தது. சகல நாடுகளுக்கும் அவர் வழங்கிய இந்த கீதம் மக்களுக்கு மற்றுமோர் கீதோபதேசம். இப்படி குருவைப் பற்றிச் சொல்பவர், 'கற்றலும் கேட்டலும் 'என்ற வலைத்தளம் வைத்திருக்கும்  ராஜி.

9.குரு வாரத்தில் ஷீர்டி பாபாதர்சன் யதேச்சையாக கிடைத்த்தைப் பெரும் பாக்கியமாகச் சொல்லுபவர்,’ உலகமே ஒரு வலை, இது என் இல்லத்து வலை ’என்று சொல்லும் சூரி சிவா சார். அனைவராலும் சுப்புத் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படுபவர்.வாழ்வில் ஒரு பொருள் வேண்டும்  என்கிறார் .

 //வாழ்வில் ஒரு பொருள் வேண்டின் இறைவனைத் துதியுங்கள் . வாழ்வின் பொருள் தெரியவும் இறைவனைத் துதியுங்கள் .//
இந்த வாக்கியங்களை யார் சொன்னார். அவர் பதிவில் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

10. அன்றாட அனுபவமே பாடம் எனக் கற்றுக் கொடுத்து வரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்  நன்றி சொல்கிறார் , ’தூரிகைச்சிதறல்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் கவிக்காயத்ரி. 

எல்லாப் பதிவுகளும் மிக நன்றாக இருக்கின்றன.


நீ எங்கிருந்து எச்செயலைச் செய்துகொண்டிருந்தாலும் மனதை மட்டும் சதா சர்வகாலமும் தெய்வத்தின் திருவடியில் வைத்திரு. ----இராமகிருஷ்ணபரமஹம்சர்.
மேலும் வாசிக்க...

Sunday, January 8, 2012

மனநிறைவு



வலையுலக அன்பர்களே!

ஏழு நாட்களாகப் பல தலைப்புகளில் செய்திகளை உங்களுடன் பரிமாறிக் கொண்ட நான்,இன்று நிறைவுப் பகுதியில் வாழ்க்கைக்கு உபயோகமான சில பொதுச்செய்திகளை வலை அன்பர்களின் தளங்களில் இருந்து தொகுத்துத் தந்திருக்கிறேன்.



கொஞ்சம் வெட்டி பேச்சு’என்ற தளத்தில் சித்ரா அவர்கள் அயல் நாட்டிலும் நல்ல கலாச்சாரத்தைப் பின் பற்றி

வாழும் மக்களையும் அவர்களுடைய கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை பற்றியும் சொல்கிறார். இங்கு நமக்கு மின்சாரம் ஒரு நாள் இல்லையென்றால் வேலை நடக்க மாட்டேன் என்கிறது .மின் சாதனங்கள் இல்லாமல் இன்றும் இயற்கையோடு இணைந்து வாழுகிறவர்கள் அங்கு இருக்கிறார்கள். தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து
கொள்கிறார்கள். அந்த மக்களைப்பற்றி விரிவாய் அழகாய் சொல்கிறார் சித்ரா.

’இங்கிட்டு கலாச்சாரம் .... அங்கிட்டு அமெரிக்கா...’என்பது தலைப்பு.

// ”சித்ரா, நீ அமெரிக்காவிலேயே இருக்கியே? நம்ம ஊரு கலாச்சாரத்தை அங்கே பின்பற்ற முடிகிறதா?"
என்று கேட்ட தோழிக்கு :

நான் இருக்கும் //மாநிலத்திலும் சரி, அருகில் உள்ள சில மாநிலங்களிலும் சரி - தமிழ் கலாச்சாரங்களை தூக்கி

சாப்பிட்டு விடுகிற மாதிரி ஒரு கட்டுக்கோப்பான கலாச்சாரத்தோடு, ஆமீஷ் ( Amish) என்ற ஒரு பிரிவினர் (sect) வாழ்ந்து வருகிறார்கள். அவர்களே இங்கே - இதே அமெரிக்காவில் இருக்கும் போது - நாங்கள், நம்மூரு கலாச்சாரத்தைப் பின்பற்ற தடை என்ன? சொல்லுங்க...

Amish Mennonites என்ற ஒரு குழுவினர், கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு சபையை (denomination)
சார்ந்தவர்கள். எளிமையான வாழ்க்கை முறை - உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை - எந்த வித நவநாகரீக தொழில்நுட்ப முறைகளையும் ஏற்று கொள்ளாது, இன்றும் இயற்கையோடு ஒத்து வாழ்பவர்கள்.//
எங்கிருந்தாலும் பாரம்பரிய கலாச்சாரத்தோடு வாழ்வது சாத்தியம்தான் என்பது விளங்குகிறது.


*********



அம்பாள் அடியாள் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு ஒரு அருமையான பதிவை எழுதியிருக்கிறார்கள்

குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து சொல்லிகிறார். எப்படி குழந்தையை சிறப்பாய் வளர்ப்பது என்று பெற்றோர்களுக்கு நிறைய குறிப்புகளைத் தருகிறார்.
வாழ்த்துச் சொல்லலாம் வாருங்கள்... ”என்ற தலைப்பில்.

//குற்றமற்ற இந்த உள்ளங்களால் என்றும் யுத்தங்கள் நிகழ்வதில்லை .ஆனாலும் இவர்கள் வளர்ந்து வரும்போது எவ்வாறு வர வேண்டும் என்பதை எமது வாழ்க்கையின் நடைமுறைகள்தான் தீர்மானிக்கின்றன .
இயற்கையாக எல்லாப் பிள்ளைகளுக்கும் ஏதோ ஓர் திறமை கண்டிப்பாக இருக்கும் .பெற்றோர்களாகிய நாம் எம் குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறமைகளைத்தான் முதலில் அதிகம் ஊக்குவிக்க முற்பட வேண்டும் .தவிர பிள்ளைக்கு நாட்டம் இல்லாத எந்த ஒரு கலையையும் எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து
திணித்து வந்தால் நிட்சயம் அதில் வெற்றிகொள்வது மிகவும் அரிது .அத்துடன் வயது எல்லைகளையும் நாம் கவனத்தில்க்கொள்ளல் மிக மிக அவசியம் .எல்லாப் பிள்ளைகளாலும் எடுத்த எடுப்பில் சாதனை புரிய முடியாது .அவர்களின் அறிவு வளர்ச்சியை நாம் மெல்ல மெல்லத்தான் வளர்த்தெடுக்க வேண்டும் .//

நாளைய தலைமுறை நல்ல விதமாய் வளர்ந்திட இக்கருத்துக்கள் பயன்படும்.

**********



”பார்வைகள்” கவிதா ,எந்த காரியம் செய்யும் போதும் திட்டமிடுதல் அவசியம் என்கிறார். திட்டமிட்டு செய்யும் வேலைகள் எல்லாம் சிறப்பாய் முடியும்.

’நமக்கு நாமே திட்டமிடல் - எல்லா பிஸி நண்பர்களுக்கும்.’-என்பது தலைப்பு.

//வாழ்க்கையில், தொழிலில், செய்யும் வேலையில் முன்னேற்றமும், வெற்றியும் பெற்ற எல்லோருக்குமே இதே 24 மணி நேரம் தான் இருந்து இருக்கிறது. அதே நேரத்தை கொண்டு தான் அவர்கள் சாதித்தும் இருக்கிறார்கள்.

அவர்களால் முடிந்தது நம்மாலும் முடியும் அல்லவா?

இவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம், அவர்களின் தினப்படி நாட்கள், நாளைய தினம், எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மட்டுமே முன் நிற்கும். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரையிலான நம் நேரத்தை எப்படி நாம் பயன்படுத்த போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும்.//

வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

******************




தமிழ் வலைப்பூ வைத்து இருக்கும் கார்த்திக் லக்ஷ்மணன் அவர்கள் ’தனிமனித கருத்துக்கள் & ஆரோக்கியமான உறவுகள்என்ற தலைப்பில் அமைந்த பதிவில் நாம் அனைவரும் வேவ்வேறு விதமாக சிந்திப்பதால் தான் நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்கிறார். எல்லோரும் ஒரே மாதிரி யோசித்தால் அந்த உலகம் எப்படி இருக்கும் !

//உளவியலின் மிக அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். எந்த

இரு மனிதர்களும் சிந்திப்பதிலும், புரிந்து கொள்வதிலும் மிகச் சரியாய் ஒரே போல் இருப்பதில்லை, கிட்டத்தட்ட ஒரே பின்புலம் கொண்ட இரட்டையர்கள் கூட வெவ்வேறு விதமாக சிந்திக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவம், சிந்தனை முறை கொண்டவர்கள். வேறு விதமாய் சொல்ல வேண்டுமானால், கடவுள்
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் படைத்துள்ளார். இதனால் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது இயற்கை.//

முரண்பாடுகள் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று தெரிகிறது.

****


முகுந்தஅம்மா தனது தளத்தில், ’தண்ணீருக்கா ஒரு யுத்தம்? வேண்டாம் ’என்கிறார்.

//உலக புள்ளிவிவரங்கள் எல்லாம் இருக்கட்டும், தற்போது தமிழ்நாட்டுக்கும் அதன் அண்டை மாநிலங்களுக்கும் அடிக்கடி நடக்கும் உரசல்கள் எல்லாம் நதிநீர் சம்பந்தப்பட்டது.தானே. அது உள்ளூர் கலவரமானது அனைவரும் அறிந்ததே.
சரி! இதற்கு தீர்வு!

1. இருக்கும் நீர் நிலைகளை காப்பது
2. கழிவு கூடாரமாகி இருக்கும் ஆறு குளங்களை சுத்தபடுத்துவது
3. மேலும் கழிவு ஆறு குளங்களில் கலக்காமல் காப்பது.
4. நிலத்தடி நீரை அதிகப்படுத்துவது

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு . //

தண்ணீரைச் சேமிக்க தண்ணீர்த் தட்டுப்பாட்டைத் தடுக்க பல நல்ல கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

***********



’தலை வாழை விருந்து.’என்ற தலைப்பில் மங்கை அவர்கள் கூறுகிறார்கள்:

//வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு என்பதுடன், இதில் ஒரு மருத்துவத் தன்மையும்

உண்டாம். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் இருக்குமாம். நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். நம் முன்னோர்கள்களின் வாழ்க்கை முறையில்தான் எத்தனை சிறப்பம்சங்கள். அவர்கள் வகுத்துள்ள வாழ்க்கை விதிகள் யாவுமே மனிதர்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பெருக்கிப் பாதுகாக்கும் சிறப்புகள் படைத்தவை என்று நன்கு தெரிந்தும் ஏனோ நாம் அதை எல்லாம் விட்டு வெகு தூரம் வந்து விட்டோம். சாம்பார், ரசம் சாப்பிட்ட பிறகு பாயசம் போடுவது... சாப்பாட்டில் ஒரு நிறைவைத் தந்துவிடும். பிறகு மோர் சாதம் சாப்பிடும்போது அந்த இனிப்பான பாயசம் நெஞ்சிலே ஏப்பமாக வராமல் இருக்கும்.//

இனி வாழை இலையிலேயே சாப்பிடுவோம்!

*******



’மூலிகை வளம்’ என்ற தளம் வைத்து அதில் மூலிகைகளைப் பற்றி விரிவாகச் சொல்கிறார்,திரு.குப்புசாமி அவர்கள்.
பொங்கலுக்கு வெற்றிலை வாங்குவோம். அதன் பயனை தெரிந்து கொண்டால் நல்லது தானே! என்ன சொல்கிறார்,பார்ப்போம்.

//வெற்றிலை வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.
வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.
பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.
மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.//

வெற்றிலை சுவைக்கு மட்டுமின்றி மருந்துக்காகவும் பயன்படுகிறது.



திரு குப்புசாமி அவர்கள் மருதாணி இலையின் குணங்கள் பற்றிக் கூறும்போது,
// மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல்

தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.//


பொங்கல் விழாவுக்கு மருதாணி வைக்கும் பழக்கம் நல்லது. அழகுக்கு அழகு! மருத்துவ பயன்களும் உண்டு!

**********


கவிதை வாழ்த்துக்கள். என்ற தளத்திலிருந்து சில கவிதைகள்.

(தளத்திற்கு உரியவரின் பெயர் காணப்படவில்லை.)

//பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைத்திருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்! //


இந்தப் பண்பாட்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவாம்.

***பொங்கலோ! பொங்கல்

ஒரு வாரம் வலைச்சரம் மூலம் நான் படித்த வலைப் பதிவர்களின் பதிவிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன்.நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. வலைச்சரப் பொறுப்பாசிரியர் திரு. சீனா அவர்களுக்கும், என்னைப் பரிந்துரை செய்த
திரு. வை கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. பின்னூட்டங்கள் மூலம் எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து அன்பர்களுக்கும் ,நண்பர்களுக்கும் நன்றி.

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

கவிதாயினி கவிநயா அவர்களின் பொங்கல் வாழ்த்து கவிதை.

//பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

பச்சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!
அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!
கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!
நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!
இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!
பொங்கலோ பொங்கல்!//


//பாட்டாளி மக்க ளெல்லாம் பல்லாண்டு வாழ்கவே!
வீட்டுக்கு வீடு செல்வம் விரைந்துயர்ந்து பொங்குகவே
நாட்டிலும் வீட்டிலும் நல்லோர் சொல் செயல்படுக!
ஏட்டறிவோடியற்கையறி வெங்கும் பொங்கித் திகழ்க!//---வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வளமுடன்!







மேலும் வாசிக்க...

Saturday, January 7, 2012

பல்சுவை

வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகள்,விவரங்கள் பதிவுகளில் உள்ளன.பல சுவையான அச்செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன்.


தருமி அவர்கள் தான் கற்றுக் கொண்டவைகளைப்பற்றி சொல்கிறார்: முதலில் ஒவியம், பின் புல்லாங்குழல், பின் புல் புல் தாரா, மவுத்ஹாரன், விசில் அடித்துப் பாடுவது, பலவித விளையாட்டுகள் என்று விளையாடி கடைசியில் புகைப்படக் கலையை ஒரு கை பார்ப்பது என்று முடிவு செய்து விட்டதை அழகாய்ச் சொல்கிறார். வயதானாலும் கற்கும் ஆசை இருந்தால் எப்படியும் கற்கலாம் தானே!.

539. நானும், photography-யும் .. 1

//-வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை புதுசா கத்துக்கிடணும்னு சின்ன வயசில இருந்து அப்படி ஒரு ஆசை. ஏதாவது ஒண்ணுன்னா ... ஏதாவது ஒரு கலையைக் கத்துக்கிடணும்னு ஆசை.
எங்க காலத்தில் அப்பா அம்மாக்களுக்கு இது மாதிரி ஆசைகளை பிள்ளைகளிடம் வளர்த்து விடணும்னு எல்லாம் தெரியாது. இப்போ கொஞ்சம் பரவாயில்லை.//

ஆமாம், இப்போது பரவாயில்லை.குழந்தைகள் தங்கள் படிப்புடன் பொழுதுபோக்குகளை மேற்கொள்ளப் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.

*************

மருத்துவர்கள் உயிரைக் காக்கும் பணி, உயர்ந்த பணி. அதை சரியாக செய்த மருத்துவரை பற்றிய ஒரு உண்மைக் கதை:

//மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை- என ஒரு சிறுகதை அவரது முக நூல் பக்கத்தில் 21.12.2011 நாள் எழுதியிருக்கிறார். இது உண்மைக்கதை. ஒரு மருத்துவரின் வாழ்வில் நடந்த்து. நண்பரின் அனுமதி வாங்கி பதிவாக வெளியிடுகிறேன். திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.//

இப்படி கூறிப்பிட்டு எழுதி இருக்கிறார், தன் பதிவில் திரு ரத்னவேல் நடராஜன் அவர்கள்.
டாக்டரின் உண்மைக்கதை ப்டிக்கவேண்டிய ஒன்று.
*********

ஒரு மாலைக்குறிப்பு’ - வழங்குபவர் செல்வநாயகி.

//பாவாடை சட்டை போட்டுக்கிட்டு அம்மாவோடு இடுப்பு உசரம் இருந்தப்ப ஊர்ல அடிக்கடி
நான் போய் உட்கார்ந்து அனுபவிச்ச மொட்டப்பாறையும், சும்மா வெறுமனே போய் நின்னுட்டு வரத் தோணுமே அந்தப் பெரிய புளியமரத்து நெழலும் ஏன் என்னை ஈர்த்துதோ அது போலத்தான் இந்த ஊர்ல அந்த மியூசியமும் போறப்பெல்லாம் எனக்குள்ள ஒரு பிடிபடாத அமைதியை, நெகிழ்வைத் தருது.//

நமக்கும் அந்தப் புளியமரத்து நிழல் மகிழ்ச்சியைத்தருகிறது!

************

'என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்’
என்று திரு.சபாபதி அவர்கள் குறிப்பிட்டார்.அவரது கருத்துக்களை திரு தருமி அவர்கள் மேற்கோளாகத் தனது பதிவில் கூறியுள்ளார்.

// சாலை பாதுகாப்பு வார கடைசி நாளான 7-1-2012 அன்று அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன். என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்—உதவுவீர்களா?//
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி //

சாலைப்பாதுகாப்பு வாரத்தில் மட்டுமின்றி எப்போதுமே பாதுகாப்பாக இருப்போம்.

*************


‘ஏன் ஏஏன், ஏன் இப்படி - வேகம்’

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிறுமுயற்சி முத்துலெட்சுமி தானும் சாலைப்பாதுகாப்பு பற்றி எழுதியுள்ளார்.

//விதிமுறைகளை பின்பற்றினாலே பாதுகாப்பு தானாக அமைந்துவிடும்.
மிகப்பெரிய சாலைகளில் 4 லேன்கள் இருந்தாலும் ட்ராபிக் முண்டியடிக்கும். உண்மையில் அவரவர் லேனில் தொடர்ந்து பயணித்தால் ட்ராபிக் இத்தனை இருக்கவே செய்யாது. மக்கள் லேன் பற்றிய எந்த ஒரு உணர்வுமே கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்கு எப்படி முன்னேறுவது என்பது தான் வழியே ஒழிய விதிமுறைகள் பொருட்டு அல்ல. 5 கார்கள் ஒரு வரிசையில் அதற்கும் நடுவில் மூக்கை நுழைக்க முண்டியபடி ஆறாவது என்பது சர்வ
சாதாரணம்.//

டெல்லி அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்.


*** ’வேகம் விவேகம் அல்ல’
இது முத்துலெட்சுமியின் தொடர்பதிவு அழைப்பிற்கு நான் எழுதியது.

//வேகம் வேகம் என்று தாங்களே முதலில் முந்திப் போக வேண்டும் என்று எல்லோருமே நினைக்கிறார்கள் .சீக்கிரம் போகவேண்டும் என்றும் நினைக்கிறார்கள் .டிராபிக் ஜாம் ஏற்பட்டால் காத்திருத்தல் என்பது பெரிய குற்றமாய் கருதப்படும் காலம்.

முன்பு நான் சிறுமியாய் இருக்கும் போது நீதி போதனை வகுப்பு உண்டு.
அதில் சாலை குறியீடுகள்,சாலை அடையாள குறிகள்,சாலை விளக்குகள்
பற்றி எல்லாம் பாடம் உண்டு .இப்போது இல்லை.//

மீண்டும் அவை பாடத்திட்டத்தில் அரசு சேர்த்தால் நல்லது.

***


’சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..’

என்ற தலைப்பில் திருமதி. ராமலக்ஷ்மி தன் சிறு வயது நிலாச்சோறு நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். இப்போது அந்த மாதிரி காலங்களை மறுபடியும் வாழமட்டோமா என்ற ஏக்கங்கள் எல்லோருக்கும் வரும் இதைப் படிக்கும் போது. குடும்பத்துடன் எல்லோரும் சேர்ந்து சாப்பிட நேரம் இல்லாமல் ஒடிக் கொண்டு இருக்கிறோம்.இனிமேலாவது உறவுகளுடன் கூடி மகிழ நேரம் ஒதுக்குவோம்.

//அம்மாவும் பெரியம்மாவும் பெரிய சட்டியில் ‘கொழுக்க கொழுக்க’ தயிர்சாதம் பிசைந்து, மதிய சாம்பார் அவியலை சுண்டவைத்து செய்த பழங்கறியுடன் உருட்டிப் போடப் போட குளுமையாக அவை தொண்டைக்குள் வழுக்கிச் செல்லும்.பின்னாளில் கல்லூரி பக்கமாய் வீடு மாறி வசித்த போது, தூத்துக்குடியிலிருந்து கோடை விடுமுறைக்கு வரும் சித்தி குழந்தைகளோடு சித்திரா பெளர்ணமி சாப்பாடு தொடர்ந்தது, அவர்களுக்கு மிகப் பிடித்த எங்கள் அம்மாவின் கைமணத்தில் தயாராகும் கூட்டாஞ்சோறு மற்றும் பொரித்த அப்பளம் கூழ் வற்றலோடு.//

நிலாச்சாப்பாட்டைச் சிறப்பாகப் படங்களுடன் கொண்டுவந்து தருகிறார்.

***************


’உங்களின் மந்திரச் சொல் என்ன? என்ற தலைப்பில் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் நிறைய நல்ல மந்திரச்சொற்களை சொல்லி இருக்கிறார்.’அம்மா’என்பதே முதல் மந்திரச்சொல் என்று கூறுகிறார்.



’சும்மா’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி .தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் ’போராடி ஜெயித்த கதைகள்’ என்று எழுதி இருக்கிறார்.

அதில் தலைமை ஆசிரியர் திருமதி. லூர்துராணி அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஹீமோக்ளோவின் அளவு குறைவுக்காக ஸ்டிராய்டின் தொடர்ந்து சப்பிட்டதால் அவரிடம் அது ஏற்படுத்திய பக்க விளைவுகள் -அதை போக்கி சாதனைகளச் சாதித்து கொண்டு இருப்பது- பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.

//டயாபட்டீஸ்., ரத்த அழுத்தம்., காடராக்ட்., கிட்னியிலும் நெஃப்ரான்கள் வீக், 2000 ஆம் வருடத்தில் கான்சர் வந்து மார்பக நீக்கம்., கீமோதெரஃபி., மற்றும் ரேடியேஷன் 55 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாழ்நாள் பூரா இது எல்லாவற்றுக்கும் தனித்தனி மாத்திரை சாப்பிட வேண்டும். இவை எல்லாம் சமாளித்து இவர் பள்ளிக்கு பங்சுவலாக காலை 8 3/4 க்கு வந்தாரென்றால் மாலை 4 மணிக்கு பள்ளி பூட்டியபின்தான் வீடு செல்வார்.இதுவரை ஆஸ்பத்ரியில் படுத்திருந்த நாள் தவிர லீவே எடுத்ததில்லை. பிள்ளைகளுக்கு மெட்ரிக்குலேஷன் கல்விக்கு இணையாக இங்கும் கல்வி அளிக்கப்படுவதாக சொன்னார் //


திருமதி.லூர்துராணி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துவோம்.


வாழ்வில் எல்லா சுவைகளும் அளவோடு இருந்தால் தான் மகிழ்ச்சி.







மேலும் வாசிக்க...

Friday, January 6, 2012

நம்பிக்கை தான் வாழ்க்கை




உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் இறை நம்பிக்கை மிகவும் அவசியம். வாழ்வில் பிடிப்பும் , அமைதியும் இன்பமும் கிடைக்கும். நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது; அது நம்மை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பார்கள். சித்தர்கள்,’ இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய், ஞானதங்கமே!’ என்கிறார்கள். உள்ளத்தில் உறைந்திருப்பது உண்மை. உண்மைப் பொருள் அவன் தானே!

//பெம்மானே, என்னை உன்னோடு பிணைத்து வைப்பது பக்தி.பக்தியை பெறுவதும் உன்னைப் பெறுவதும் ஒன்றே. பக்தியை நீ எனக்கு உவந்தளிப்பாயாக!//என்கிறான் பக்தன்.
// பக்தி வலையில் படுவோன் காண்க- //என்றார் அப்பர்.

//நல்ல மனம் என்னும் வீட்டை நான் கட்டிவைத்திருக்கிறேன், நாதா,நீ நீங்காது அதனுள் குடியிருப்பாயாக.//என்கிறான் பக்தன்.

//நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒருபோதும் இருந்தறியேன்//
என்றார் அப்பர்.
***



**ஆட்டி வைத்தால் யார் ஒருவர் ஆடாதாரே!

"நாட்டியமாடுது மண்ணின் பாவை."என்ற தலைப்பில் கபீரன்பன் சில கூறுகிறார்.

சீக்கியரின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் ரவிதாஸின் நாற்பத்தியொரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை இத் தளத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் கபீரன்பன்.

//உலகில் நாம் காண்பதெல்லாம் வெறும் பொம்மலாட்டம் என்ற பொருளில் ரவிதாஸ்ர் சொல்லியிருக்கும் இந்தப் பாடலும் பிரபலமானது.

माटि के पुतरा कैसे नचतु है
देखे देखे सुनै बोलै दउरिओ फिरतु है
जब कुछु पावै तब गरबु करतु है
माइआ गई तब रोवनु लगतु है
कहि रविदास बाजी जगु भाई

நாட்டியம் ஆடுது மண்ணின் பாவை;
பார்க்குது கேட்குது பேசுது
இப்படி அப்படி ஓடவும் செய்யுது
நெனச்சது கெடச்சா உடனே துள்ளுது
கெடச்சது போனா அம்மா! அழுவுது
ஐயோ பாவம்;
சொல்லுறேன் கேளு
எல்லாமே வெறும் நாடக மாச்சு
ரவிதாசு எனக்கு புரிஞ்சு போச்சு

[இது வரிக்கு வரி மொழிபெயர்ப்பு அல்ல. ஆனால் முழுக்கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. சாமானியர்களோடு பழகி சாமானியராய் அவர் வாழ்ந்ததால் சாமானியன் மொழியில் மொழியாக்க முயற்சி.]//என்கிறார் கபீரன்பன்.

அவர் மேலும் கூறுகிறார்:

//இந்த காயம் மண்ணால் ஆனது தானே அதனால்தான் மண்ணில் முடிகிறது. நாமெல்லோரும் இறைவனின் கையில் பொம்மைகள். அவன் சூத்திரதாரி. அறியாமை நம்மில் இருக்கும்வரை நமக்கு ஆட்டம் ருசிக்கிறது. ரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைகளுக்கான இடம் எது என்பது தெரியுமாதலால் இது வெறும் நாடகம் என்ற உண்மையில் மனம் லயித்து அறிவுரை கூறுகிறார்கள். உலகத்திலே மிக சிறந்த பொக்கிஷமாக காமதேனுவாக இராம நாமம் இருக்கையில் வேறென்ன வேண்டும் என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது.

ரவிதாஸை, மாபெரும் கிருஷ்ண பக்தையான மீராவின் குரு என்றும் சொல்வர். ராஜா பீபா வும் இவரிடம் ஞானோபதேசம் வேண்டி நின்றார். பீபாவும் ஒரு தலைசிறந்த பக்தர்.
மகான்களின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாலே சத்சங்க பலன் உண்டு.//

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி!

****
**தீர்த்தயாத்திரை


திருமதி ஹுஸைனம்மா அவர்கள் முஸ்லிம்களின் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரை பற்றி விரிவாக பக்தி மணம் கமழச் சொல்கிறார்.அவர் அந்த கடமையை இறையருளால் நல்லபடியாக முடித்து மாதாஜி ஆகிவிட்டார்.

நாடு, மொழி, இனம், ஆண், பெண், ஏழை, பணக்காரன், இளையவர், முதியவர் என எந்தப் பேதமுமில்லாமல் கடைபிடிக்க வேண்டிய முஸ்லிம்களின் ஐந்து கடமைகள்

1. இறை நம்பிக்கை 2. தொழுகை3. நோன்பு 4. ஸாகத் 5. ஹஜ்யாத்திரை என்பவையாம். இந்த ஹஜ் யாத்திரை பற்றி தனது தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறர்கள்.

//ஒருவர் செய்த ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவரது அதுவரையான பாவங்கள் மாத்திரமே மன்னிக்கப் பெறும். அதன் பின்னர் அந்நிலையைத் தன் நல்ல நடத்தைகளினால் தக்கவைத்துக் கொள்வது அவர் பொறுப்பு.அதனால்தான், அந்தக் காலங்களில், பக்குவம் அதிகம் வந்திருக்கும் வயதான காலத்தில்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்போல. எனினும், வாய்த்திருக்கும் வசதியும், வாழ்க்கையும் (உயிர்) என்றுவரை நிலைத்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாதே! ஆகையால், உரிய காலத்திலேயே இக்கடமையை நிறைவேற்ற முனைவோம், இன்ஷா அல்லாஹ்.//



*********

***என்னில் நீ உன்னில் நான்!



’எங்கிருக்கிறான்?..’என்ற கவிதையில் திரு ஜீ,வி அவர்கள் சொல்வது :

//நீரே மேகம் எனில் நீள் விசும்பில்
நீந்திப் போவது எவ்வாறு என்கின்றார்

நீர்மோரே நெய் எனில் கலயத்திலது
நீர்த்து இருப்பது எப்படி என்கின்றார்

நிலவே இரவியின் தண்மை ஒளியெனில்
நீளிருட்டு இரவு எங்ஙனம் என்கின்றார்

யாழின் மீட்டல் நாத தாலாட்டில் மயங்கி
இத்தனை நேரமிது இருந்ததெங்கே என்கின்றார்

நீக்கமற நிறைந்தோனின் இருப்பு இதுவென்றால்
பார்க்கிறபடி தோற்றம் அவனுக்கில்லையா என்கின்றார்

உன்னின் ஜீவிதத் துடிப்பு அவனே என்றால்
என்னில் தெரியலையே எங்கிருக்கிறான் என்கின்றார்

நீயே அவன் தான் என்றால் நாணிச் சிரித்து
நானே அவனென்றால் நான் யார் என்கின்றான்//

சிந்திக்கத்தூண்டும் கவிதை இது.

****************

எல்லாம் வல்ல இறைவன்


திரு. சுப்பு ரத்தினம் அவர்கள் அன்னையின் பிராத்தனையைச் சொல்கிறார்,
ஒரு அன்னையின் பிரார்த்தனை’யில்:

//பரந்தாமனே ! பிரபுவே! நீ இருக்கின்றாய் அல்லவா?
சர்வவல்லமை பொருந்திய உனது பேரன்பு
நிச்சியம் இவ்வுலகைக் காக்கும்.
- ஸ்ரீ. அன்னை.//
இறைவனின் பேரன்பு நிச்சியம் நம்மை காக்கும்.
**********

திருமதி. புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் இறையருள் என்ற தலைப்பில் கோவில் வழிபாடு பற்றிச் சொல்கிறார்.

//நாம் இப்போது மேற்கொள்ளும் நடைப் பயிற்சியினால் கிடைக்கும் பயனை அப்போது கோயில் பிரகாரத்தை சுற்றியே பெற்றார்கள். எப்படியென்றால் கோயில் பிரகாரப் பாதையில் கருங்கல் தரையில் நடக்கும்போது பாதத்தில் உள்ள நரம்புகள் மூலமாக நமக்கு உள்ள உடல் உபாதைகள் தீரும். கோயிலில் நாம் உச்சரிக்கும் மந்திரங்களின் அதிர்வலைகள் நமக்கு நன்மைகளை அளிக்கும். அங்கு நமக்கு தரப்படும் பிரசாதங்களை ஏழை பணக்காரன்
பாகுபாடின்றி அனைவரும் சேர்ந்து உண்ணும்போது கடவுளின் முன் அனைவரும் சமம்.//

முன்னோர்களைப் பின்பற்றினால் துன்பமில்லை.

**************



அன்பென்ற மழையிலே என்ற தலைப்பில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
இயேசு பிறப்பு தினத்தை எந்த எந்த நாட்டில் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அருமையான பாடல்கள், அருமையான படங்களுடன். விளக்குகிறார்.

//மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் இயேசு என்னும் இறைவன்// என்று அழகாய் கூறுகிறார்.
இறை பாலகன் அன்பும், கருணையும் தருவார்.

*******
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.


நிறைய நம்பிக்கைகளை உள்ளடக்கிய கோவில்ஆகிய
பானக நரசிம்மர் கோயில் பற்றிச் சொல்கிறார், புதுகை தென்றல்.

//அத்தனை பானகம் உபயோகப்படுத்தினாலும் சந்நிதியிலோ ஒரு எறும்பு கூட இல்லை!!! இந்தியாவிலேயே வெல்லம் உபயோகித்தும் அங்கே ஒரு எறும்பு கூட இல்லை என்பது மங்களகிரியில் மட்டும்தான்!!!!! எப்பொழுது எறும்புக்களும், ஈக்களும் இந்த இடத்தில்
வருகிறதோ அப்பொழுது இந்த யுகம் முடிவுக்கு வரும் என அர்த்தமாம். //

//முன்பு இந்த மலை ஒரு எரிமலை என்றும் அது பொங்கி விடாமல்
இருக்க பானகத்தை ஊற்றி குளிர்விக்கிறார்கள் என்றும் தகவல்.//

//நாரதர் இன்றளவும்
அங்கே இந்த மர வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதுதான் அந்த மரம்.//

நம்பிக்கை தான் வாழ்க்கை!
வாழ்வோம் வளமுடன்!
மேலும் வாசிக்க...

Wednesday, January 4, 2012

உடல் நலம் ,உள நலம், காப்போம்


அன்பு உள்ளங்களுக்கு

முதல் நாள் என் கதையைக் கேட்க வந்தீர்கள், மறுநாள் நான் கொடுத்த விருந்தை ரசித்தீர்களா?இன்று உடல் நலம் எப்படி இருக்கிறது? (அந்த காலத்தில் )கடிதம் எழுதும் போது நலம் நலம்றிய ஆவல். என்று தான் எழுதுவோம். இப்போது ஒவ்வொருவர் சந்திக்கும் போது, தொலைபேசி, அலைபேசியில் எல்லாம் நல்ம் விசாரிப்பு நடக்கிறது. உடலில் ஏதாவது தொந்திரவு செய்வதைச் சொன்னால் கிடைக்கும், நிறைய அறிவுரைகள். ஆரோக்கியம்
என்பது நம் கையில் தான் இருக்கிறது. நாள் தோறும் உடற்பயிற்சிகள், உள் உணர்வுகளை ஒழுங்கு படுத்தச் சிறிது நேரம் தியானம், அளவான உணவு, உறக்கம்,இருந்தால் நல்லது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் . அப்படியே நோய் வந்தாலும் அதை மனவலிமையோடு எதிர் கொண்டால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். முதுமையில் கவலை, இயலாமை தரும் சினம் எலலாம் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நம் உடல் நலத்துக்காக ஒரு மணி நேரத்தை ஒதுக்கி பயிற்சிகளை செய்யலாம். மனம் வைத்து இந்த தளங்களுக்கு சென்று படித்துப் பார்த்தால் கண்டிப்பாய் நேரம் ஒதுக்க முடியும். உடல் நலத்தைக் காத்துக் கொள்ளலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பார்கள் !


//நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.//

என்ன நோய் வந்து இருக்கிறது, நோய் வந்ததின் காரணம் என்ன, அதைக் குறைப்பதற்கு என்ன வழி, என்று ஆராய்ந்து நோயைப் போக்க வேண்டும்.


முதலில் எளிதாக செய்யும் முத்திரைகள்: நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரை ஆகும். நரம்புகளுடன் சம்மந்தமுள்ள உடல் உறுப்புகளை முத்திரை ஆள்கிறது. 1.கட்டைவிரல்- அக்னி, 2.ஆள்காட்டிவிரல் -காற்று, 3. நடுவிரல்- விண், 4. மோதிரவிரல் - நிலம், 5 .சிறுவிரல் - நீர். இந்த ஐந்தும் சமநிலையில்
இருக்கும் போது உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்.இம் முத்திரைகளை நிற்கும் போதோ,நடக்கும் போதோ ,அமரும் போதோ செய்யலாம்,

கைகளின் அற்புத சக்தி:

முத்திரைகளை உங்களுக்கு தரப் போவது திரு என்.கணேசன் அவர்கள். முத்திரைகளால் என்ன நன்மைகள் என்று அவர் கூறுகிறார்:
/// இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும்போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்பதாகப் பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து

பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்றுப் பார்ப்போம். இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?//
********

டாக்டர் முருகானந்தம் M.K அவர்கள் மருத்துவ பதிவுகளின் பட்டியல் வைத்து இருக்கிறார். அத்தனையும் நமக்கு பலன் தரக் கூடியது. அனுபவ பதிவுகளும் இருக்கிறது. சிரிக்க ,சிந்திக்க நலமுடன் வாழ அனைத்தும் உள்ளது இவரது வலைத்தளத்தில்.

’ஹாய் நலமா?’ என்னும் பகுதியில் எவ்வளவு உடற்பயிற்சி என்ற தலைப்பில் நாம் காண்பது:
//உடற்பயிற்சி அவசியம் என்பதை வைத்தியர்களும் சரி நோயாளிகளும் சரி ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், வைத்தியர்கள் சொல்லும் அளவிலான பயிற்சியைச் செய்ய பலருக்கும் முடிவதில்லை. உடலால் முடிவதில்லை என்பது ஒரு காரணம், நேரம் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணமாகும்.

எனவே, சோம்பிக் கிடக்காதீர்கள். சிறிய அளவிலான உடற் பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். உடல் நலம் நாடி வரும், பிரஷர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும்.//

** சுவாச நோய்க்கு ஒரு பயிற்சி.:

நெஞ்சு நிறையப் பாடுங்கள் சுவாச நோய்கள் பறந்தோடும்.’

//பாடுவதானது, மூச்செடுப்பதில் சிரமப்படும் நோயாளிகளது துன்பத்தைக் குறைத்து சுவாசத்தை இலகுவாக்கும் என

அண்மையில் ஒரு ஆய்வு கூறுகிறது. பாடுவதானது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை, துல்லியமாக நாம் எமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வருகிறோம். எம்மையறியாமலே இது நிகழ்கிறது. தன்னிச்சையாக இயங்கும் எமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் எமது மனதின் கட்டுப்பாற்றிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் எமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இப்பொழுது இசைவாக இயங்குகின்றன.

பிறகென்ன பாடுங்கள். தினசரி பாடுங்கள். இறைவனைத் துதிக்கையில் பாடுங்கள். குளிக்கும்போது குளியலறையிலும் பாடுங்கள். வானொலியில் தொலைக்காட்சியில் பாட்டுகள் வரும்போது சேர்ந்து பாடுங்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக்கொண்டே இருங்கள்.//


** மூட்டு வலிக்குப் பயிற்சி:


மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்.

//பயிற்சி செய்வது மூட்டு வலியை அதிகரித்து, மூட்டுகளை மேலும் இறுக்கமடையச் செய்து இயங்கவிடாமல் தடுக்கும்

எனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பயிற்சிகள் செய்யாது மூட்டுகளை ஆட அசையாது வைத்திருப்பதுதான் உண்மையில் மூட்டுகளின் வலியை அதிகரித்து இறுக்கமடைய வைக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் மூட்டுகளும் எலும்புகளும் திடமாக இருப்பதற்கு சுற்றியுள்ள தசைகள் பலமாக இருப்பது அவசியம். அவை திடமாக இருந்து போதிய ஆதரவையும் பக்கபலத்தையும் கொடுக்கவில்லை எனில் மூட்டுகள் சிதைவடைவதற்கும் எலும்புகள் உடைவதற்குமான சாத்தியம் அதிகமாகும். //

***

** சிரிப்பு நல்ல மருந்து:



’.
வாழ்வில் நகைச்சுவை மிக மிக அவசியம் அது நம்மை எப்போதும் இளமை யாக வைக்க உதவும் என்பார்கள் அது திருமதி கோமா அவர்களிடம் நிறையவே இருக்கிறது. நகைச்சுவைக்கு என்றே தனித் தளமே வைத்து இருக்கிறார்.

’ஹா ஹா ஹாஸ்யம்’என்ற தளத்தில் எழுதும் திருமதி. கோமா அவர்கள் ’இடுக்கண் வருங்கால் நகுக ஹ ஹ ’ என்ற தலைப்பில் அவர் அளித்த நகைச்சுவை. கண்,காது, மூக்கு, தொண்டை ,பல், இருதயம் எல்லாவற்றுக்கும் சிறந்த டாகடரை சிபாரிசு செய்கிறார் நகைச்சுவையாக .
எல்லா டாக்டருகளுக்கு மேலாய் அவர் சொல்வது:

// எல்லாத்துக்கும் மேலே நம்ம வைத்தீஸ்வரர் இருக்கார் .அவர்தான் நல்ல டாக்டர், அவர் பார்த்துப்பார் . அவர் கையிலே நம்ம டாக்டர்ஸ் எல்லாருமே டூல்ஸ்தான் //

உண்மைதானே!
***

** உணவு உண்ணும் முறை:



உடல் ஆரோக்கிய டிப்ஸ் தருகிறார் திரு. M.R அவர்கள்.

இவர் வலைத்தளத்தில் உடல் நலக் குறிப்புகள் எல்லாம் கிடைக்கும். எப்படி உணவு உண்பது, எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்று எல்லாம் சொல்கிறார் . பயனுள்ள பதிவு.

***

மனவலிமை:


பிசையோ வலியோ தெரபி :) ’-இது தலைப்பு.

உடல் துன்பத்தையே நினைத்துக் கொண்டு இருக்காமல், தான் ஃபிசியோதெரபி எடுத்துக் கொள்ள வைத்திய சாலைக்குப் போன அனுபவங்களை நகைச்சுவையாக நம்முடன்பகிர்ந்து கொள்கிறார், திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள்.

இப்படி மனதைரியத்துடன் எதிர் கொண்டால் நோய் வந்த இடம் தெரியாமல் ஒடிவிடாதா!

***
சினம் தவிர்த்தல்:



’கோபத்திற்கு குட்பை ’ என்ற பதிவில் , ’ஆறுவது சினம் என்றார் அவ்வைப்பாட்டி. மனித வாழ்க்கை சீராக சுபமாக செல்லவேண்டுமாயின் கோபத்தைக்குறைப்பதுதான் கைகண்ட மருந்து’ என்கிறார் திருமதி ஸாதிகா அவர்கள்.
***

உடலைக் காப்பது நம் கடமை:


மகரிஷியின் சிந்தனைகளை அழகாக் பகிர்ந்து இருக்கிறார், திரு. குமாரன் அவர்கள்.

’உடல் என்ற நற்கருவியை நன்றாகப் போற்றிக் காத்துப் பயன்படுத்த வேண்டும். எனவே மனிதன் தனது நோக்கத்தை

ஒட்டி இயல்பாக வாழ்ந்து, அமைதியும், மகிழ்ச்சியும் பெற வேண்டுமெனில் அறிவில் முழுமை பெறுவது, உடலைப்

பொறுப்போடு காப்பது என்ற இரண்டு வகையிலும் உணர்ந்தாற்ற வேண்டும்.’
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
***

முதுமை என்பது நோயல்ல.:



திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் ’வயோதிகம்! 500 வார்த்தைகளில், சாத்தியமா!’
என்ற பதிவில் முதுமைக் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று அழகாய் சொல்கிறார் நமக்கு.

// என்னைப் பொறுத்த அளவில் வயோதிகம் என்பது மனதிலும் ஏற்பட்டாலே வயோதிகர் ஆகலாம். வெறும்

உடல்மாற்றம் அல்ல. வயோதிகத்திலும் அழகாய் இருந்த எம்.எஸ். அம்மா, சந்திரலேகா, கம்பீரம் குறையாத இந்திரா

காந்தி, அன்னை தெரசா, போன்ற எத்தனையோ பேர் உதாரணம் காட்டலாம்.//

வயோதிகம் என்பது உடலுக்குத் தான்.மனதுக்கு இல்லை என்கிறார்.

வயோதிகத்தை எப்படி கழிக்கலாம் என்கிறார் . ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருத்தல் நலம் பயக்கும். இது ஓரளவு மன வலிமையைக் கொடுக்கும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கின்றன.//

நோயின்றி வாழ இந்தக்கருத்துக்கள் நன்கு பயன்படும்.

வாழ்க நலமுடன்!


மேலும் வாசிக்க...

மார்கழிக் கலைகள்









இது மார்கழி மாதம் அல்லவா? மார்கழி என்றாலே நினைவுக்கு வருவது கோலம், இசை , கோயில், அங்கு தரப்படும் பிரசாதங்கள். தெருவை அடைத்து கோலம் போடும் பழக்கம் எல்லாம் இன்னும் கிராமங்களில் இருக்கிறது. நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் வாழும் மக்களாகவே இருக்கிறார்கள். கொஞ்ச இடம் தான் இருக்கும். அதற்குள் சிறு கோலங்களை மனது இருந்தால் போடலாம்.

மார்கழி மாதத்தில் கண்களுக்கு விருந்து - கோலம், நாவுக்கு விருந்து - இறைவனின் பிரசாதங்கள், செவிக்கு விருந்து - இறைவனின் புகழ் பாடும் கீதங்கள்.

நம் வலைப் பதிவர்களில் நான் படித்த பதிவுகளிலிருந்து, கோலங்கள், சமையல்கள், இறைவனின் புகழ்பாடும் இசை ஆகியவை பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.

கண்களுக்கு விருந்து:

கோலப்போட்டி எல்லாம் இந்த மாதம் நடைபெறும். நல்ல செய்திகளைச் சொல்லும் கோலங்கள் பெரும்பாலும் பரிசினைத் தட்டி செல்லும். அப்படி, தன் அலுவலகத்தில் நடந்த ரங்கோலிப் போட்டியைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சந்தனமுல்லை.

கோலங்கள் எத்தனை வகை உண்டோ அவை எல்லாவற்றையும் அழகாய்க் கண்களுக்கு விருந்து அளித்து மார்கழிக் கோலங்களின் நன்மைகளைச் சொல்கிறார்,அமைதி சாரல்.
’கோலங்கள் நம்ம மக்களோட வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடிக்கு இழையோடுது.’ என்கிறார். காண்க: அமைதிச்சாரல்

கமலாவின் ’கோலங்கள்’ரசிப்பதற்கு உரியன. கோலங்களைப் பற்றிய அவரது தளம்

இது கோலம் போட ஆசை இருப்பவர்களுக்கு ஏற்ற தளம். பண்டிகைக்கோலங்கள், சிக்குக் கோலம், புள்ளிக் கோலம், ரங்கோலி., நவக்கிரக கோலங்கள், பூக் கோலம் ,
சின்னக் கோலங்கள் பெரிய கோலங்கள் என்று கோலம் போடவும் சொல்லித் தருகிறார்.

***

’சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்’ என்று பழைய பாடல் ஒன்று உண்டு. சமையல் செய்வது அவ்வளவு கடினம் , சங்கீதம் எளிது என்பது போல். முன்காலத்தில் கடினம் தான். விறகு அடுப்பு, கரி அடுப்பு, என்று கஷ்டப்பட்டார்கள். இப்போது நவீன மின் அடுப்புகள், கேஸ் அடுப்புகள் என்று சமையல் செய்வது எளிதாகி விட்டது. மனம் தான் வேண்டும் சமைக்க.(பட்டனைத் தட்டிவிட்டால் இரண்டு தட்டிலே இட்லியும் காப்பியும் நம் பக்கத்திலே வெண்டும் என்றால்)

சமையல் செய்வது ஒரு பெரிய கலை. செய்த சமையலை நன்கு அழகாய்ப் பாத்திரங்களில் அழகு படுத்தி பரிமாற ஆயத்தமாக வைத்தால் கண்களுக்கு முதலில் விருந்து, பின் வயிற்றுக்கு விருந்து. அது நான் பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் இருக்கிறது. ’ஏங்க இன்று சமையல் எப்படி இருக்கு?’ என்று கேள்வி கேட்டால் சிலர் ’வீட்டில் இன்று சமையல் அசத்திவிட்டாய், சிலர் வீட்டில் அட்டகாசம் போ’ என்பார்கள்.
வெளி நாட்டில் உள்ள நம் மக்கள் விழாக்கள் , பண்டிகைகளை ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடுவார்கள். அப்போது ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒவ்வொரு விதமான உணவுகளைக் கொண்டுவந்து எல்லோரும் உண்டு மகிழ்வார்கள். அது போல் நானும் நம் வலைத்தளத்தில் உள்ள சமையல் கலை அரசிகளின் குறிப்பில் இருந்து மார்கழி பிரசாதங்களை உங்களுக்கு வழங்குகிறேன். நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.

எளிதாக, புளியோதரை.(பெருமாள் கோவில் புளியோதரை நன்றாக இருக்கும் என்பார்கள்.) ஆசியா சுலப புளியோதரை செய்து நமக்கு விருந்து அளிக்கிறார்.


 ஜலீலா ’முந்திரி ,ரவைகீர்’ தருகிறார்.


மிராவின் தளத்தில் ’நவராத்திரி’ என்ற பதிவில் ’நவதானிய சுண்டல்கள்’,’கோலத்தில் நவராத்திரி கொலுவின் படம்’ என்று அசத்துகிறார். உணவே மருந்து என்று உணவுப் பொருளில் சமைத்து தருகிறார்.

 மிராவின் கிச்சனில், அவர் ’பொங்கலோ பொங்கல்’ பதிவில், பால் பொங்கல், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் தருகிறார்.

 மாதேவி பழச்சாறு பொங்கல் செய்து தருகிறார்.

//வயலில் விளைந்த அரிசி எடுத்து, சுவைக்கு பால், வெல்லம், பருப்பு இட்டு சமைத்துப் படைத்து வருடம் பூராவும் இனிதே இருக்க வேண்டி உண்பர்.// - எவ்வளவு விஷயங்களை இதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்!

ஆதி வெங்கல உருளியில் அரிசிப்பாயாசம் தருகிறார்

***




மனித வாழ்வில் இசை விருந்தாக மட்டும் அல்ல மருந்தாகவும் இருக்கிறது.உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகம் அளிக்கிறது.இசை என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல.
இசைக்கு மயங்காதவர் உண்டோ! இசைக்கு இறைவனும் வசப்படுவான்.

/பொய்யான தேவைகளை உருவாக்கிக் கொண்டு அதை நிறைவேற்ற போராட்ட வாழ்க்கையை நடத்துவதும், இயற்கையிலிருந்து விலகிக் கொண்டே செல்வதும், அவசர ஓட்டமும் இக்கால மனிதர்களின் நிம்மதியின்மைக்கு முக்கிய காரணங்களாக சொல்கிறார்.* குமரன்//
அதற்கு மாற்றாக அமையும் இசை.

இசை விருந்து:

இசை இன்பம் தளத்தில் தமிழிசை வரலாறு -5,- சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை என்ற தலைப்பில் மார்கழி மஹா உற்சவத்தில் திருமதி செளம்யா பாடிய பாடல்களைக் கேட்கலாம். பகிர்ந்து கொள்பவர் ஜீவா.

* தி. ரா. ச.(T.R.C.)
* மலைநாடான்
* ஷைலஜா
* கவிநயா
* மடல்காரன்
* ராதா
* ராகவ்
* இரா. வசந்த குமார்
* சங்கர்
* ச்சின்னப் பையன்
* லலிதா மிட்டல்
இவர்கள் எல்லாம் கண்ணனின் புகழபரப்புவர்கள்.
பாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி!
முத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழந்து
நம்மையும் மகிழ்விக்கிறார்கள்.

கண்ணம்மா எனது குலதெய்வம்’ என்ற பதிவில் காருகுறிச்சி பி.அருணாசலம் அவர்களின் கம்பீரம் நாதஸ்வர இசையில்,

’நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !’

கேட்க கேட்க இன்பம். பகிர்ந்து கொள்பவர் ராதா. இது பின்னால் வரும் ஆண்டாள் ரங்கன் திருமணத்திற்கு மங்கள இசை வாசிப்பது போல் இருக்கிறது.


 ’தோழி கோதை பிறந்தநாள்!’ என்ற பதிவில் ஆண்டாளின் பாடல்கள், திருமணம் எல்லாம் காணலாம். மார்கழி என்றாலே ஆண்டாள் தான். மாதங்களில் நான் மார்கழி என்கிறான் கண்ணன். அந்த கண்ணனின் புகழ்பாடும் தளம் இது. சினிமாவில் வரும் கண்ணன் பாட்டு, தனிப் பாடல்கள், பஜனைப் பாடல்கள் என்று நிறைய உள்ளன. கேட்டு மகிழுங்கள்.






மேலும் வாசிக்க...

Tuesday, January 3, 2012

கதை கதையாம் காரணமாம்

முன்பு எல்லாம் குழந்தைகளுக்கு நல்ல படிப்பினை ஊட்டும் கதைகளைச் சொல்லி வளர்க்க தாத்தா, பாட்டி இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கதை சொல்லிகள் உண்டு. என் பேத்திக்கு தினம் கதை கேட்க வேண்டும் படுக்கப் போகும் முன். நல்ல கதை கேட்டு நல்லபடியாக வளர்வார்கள் குழந்தைகள். கதை கதையாம் காரணமாம் காரணத்தில் தோரணமாம் , என்பது போல் இன்று கதைத் தோரணம் கட்டப் போகிறேன். கதை கேட்க ரெடியா?

எந்த ஒரு செயலைச் செய்தாலும் இறைவன் அருள் இருந்தால் தான் முடியும் என்பார்கள்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள். எந்தச் செயலைச் செய்யும் போதும் முழுமுதற் கடவுளான விநாயகனை வணங்கிச் செய்தால் நல்லது என்பார்கள்.

வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் நல்ல கதை சொல்லி. நல்ல படிப்பினை ஊட்டும் கதைகள், சிரிக்க, சிந்திக்க வைக்கும் கதைகள் எல்லாம் எழுதுவார். நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வரேன் ’என்ற கதை படித்துத் தான் நான் அவருடைய வலைத்தளத்திற்குப் போக ஆரம்பித்தேன்.

உருக்கமான கதை.

ஏமாற்றாதே ! ... ஏமாறாதே’ கதை உச்சிப் பிள்ளையாருக்கு 12 தேங்காய்கள் உடைப்பதாய் வேண்டிக் கொண்டவரின் கதை. தெருவோரம் தேங்காய் விற்பவரிடம் எப்படி தேங்காய் வாங்குகிறார் பாருங்கள்.

//அவளுடன் ஏதேதோ பேசிக்கொண்டே ஒவ்வொரு தேங்காய்களையும் தன் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு காய்களின் மீது தன் ஆள்காட்டி விரல் நகத்தினால் மிருதங்கம் வாசித்தும், பன்னிரெண்டுக்கு பதிமூன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டியபடி, மீதிப்பணம் கொடு என்றார் அவசரமாக.//

வேண்டிக்கொண்டபடி 12 தேங்காய்களை உச்சி பிள்ளையாருக்கு உடைத்தபின் ஏமாற்றி வாங்கிய 13வது தேங்காயை தன் மனைவியின் சமையலுக்கு கொடுக்கிறார். அது எப்படி இருந்தது என்று சொல்கிறார் பாருங்கள்.

//பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் அவர்கள் சொல்லுவது தான் விலை. யாரும் பேரம் பேசுவது கிடையாது. பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்கும். மனைவி கையில் வைத்திருந்த அந்த அழுகல் தேங்காய் மூடிகளை உற்று நோக்கினார். அதில் அந்த ஏழைக் கிழவியின் தளர்வான முகம் அவருக்குக் காட்சியளித்தது.//

காசு கொடுத்து வாங்கிய தேங்காய்கள் பிள்ளையாருக்கு நல்ல வெள்ளையாக உடைந்தது. ஏமாற்றி வாங்கிய காய் என்ன ஆனது பாருங்கள். இறைவன் என்ன நினைக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறார் பாருங்கள்.

//அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார். //

கதை சொல்லும் நீதி- யாரையும் ஏமாற்றகூடாது. தெய்வம் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பது தானே!

***

அடுத்த கதையும் வை.கோபாலகிருஷ்ணனின் கதைதான். கதையின் பெயர் உடம்பெல்லாம் உப்புச்சீடை உருவம் கண்டு எள்ளல் கூடாது என்பதை வலியுறுத்தும் கதை. பலாப்பழம் வெளித் தோற்றத்தில் முட்கள் நிறைந்ததாய்க் காணப்பட்டாலும் உள்ளே உள்ள சுளை மிகவும் இனிப்பானது.

காசி செல்லும் ரெயில் பயணத்தில் சக பயணியாய் வருபவரை எப்படி நினைக்கிறார்கள் என்று சொல்கிறார் பாருங்கள்:

//அவருக்கு சுமார் 75 முதல் 80 வயதுக்குள் இருக்கலாம். உயரமான ஒல்லியான தேகம். சற்று கருத்த உருவம். பின் கழுத்துக்கு மேல் கொஞ்சமாக தொங்கும் நரைத்த முடிக்கற்றைகள். அதன் மேற்புறம் சந்திர பிம்பம் போன்ற வளைவு. முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும், பெரியதுமான கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.//

அழகற்ற அவரைப் பார்க்கவும் ,பேசவும், பிடிக்காமல் அவரை வார்த்தைகளால் சக பயணி சாடுகிறார்., பின் அந்த அழகற்ற அவர், அவர்களுக்கு உதவிய போது, அவர்களுடைய மனதில் அழகிய மனிதராய் உயர்ந்து நிற்கிறார்.

இந்தத் தொடர்கதையைப் படித்து முடிக்கும்போது கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வந்தது உண்மை.

அழகிய உடலோ
அருவருப்பான உடலோ

உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய,
நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய
பொருளாகி விடுகிறது.

அதை எரிக்க வேண்டிய
அவசரமும், அவசியமும், நிர்பந்தமும்
ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்

அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை.சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!//

என்று பெரியவர் சொல்வதாய் தோன்றுகிறது சக பயணிக்கு. உயர்ந்த மனிதர் என்ன உதவிசெய்தார் என்பதைப்

படித்துப் பாருங்களேன்!

***

அடுத்த கதை-

கே.பி. ஜனா அவர்களின் சிறுகதைகள்

பக்கம் பக்கமாய்ச் சொல்லும் விஷயங்களை எளிமையாகத் தன் சிறுகதையில் சொல்லிவிடுகிறார். இவர் நாவல்களும் எழுதியிருக்கிறார். கவிதைகளும் எழுதி இருக்கிறார். இவரைப் பற்றி வசந்தபாரதி கூறியது மிகவும் சாலப் பொருத்தமே:

//வாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடிநாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி //
நலம் வாழ சிறுகதையில் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக என்னக்கொடுத்து மகிழ்வித்தார் பாருங்கள். தன் மனைவியின் முன்னாள் தோழியின் முகவரியைக் கண்டுபிடித்துச் சந்திக்க வைக்கிறார், தன் மனைவிக்கு மறக்க முடியாத பரிசாக.
சிறந்த பரிசு தானே!

சந்தோஷ முகம் -சிறு கதையில் : // என்ன வாத்தியார் ஐயா? மெடிகல் செக் அப்புக்கு சென்னை போறீங்களாமே? கேள்விப்பட்டேன். கண்டிப்பா நம்ம பையன் வீட்டில தான் தங்கணும்.'' பரிவோடு சொன்னார் பொன்னையா. //

//சோமு , பரதன்,லோகநாதன் -- எல்லாருமே தற்போது சென்னையில் இருக்கும் அவரது பழைய மாணவர்கள் -- இவர்களின் பெற்றோரும் அவரை சந்தித்து, தங்கள் மகன் வீட்டில் தங்கிக் கொள்ளச்சொல்லி வற்புறுத்திவிட்டுப் போயிருந்தார்கள்.//

இத்தனை பேர் அழைத்தும் அவர் யார் வீட்டில் தங்கினார்? அவர் மனைவிக்கு எழுந்த ஆவல் போல் நமக்கும் ஏற்படுகிறது. மனைவியிடம் ,’வெங்கட் வீட்டில்’ என்கிறார். காரணம் கேட்கும் மனைவியிடம் அவர் சொல்வது :

// வெங்கட்டைத் தவிர மற்ற எல்லாரும் கல்யாணமானதும் பெற்றோரைத் தங்களோட அழைச்சிட்டுப் போகாம இங்கே கிராமத்திலேயே விட்டு வெச்சிருக்காங்க. பெத்தவங்களையே கவனிக்காதவங்க, என்னை எவ்வளவு தூரம் வரவேற்பாங்க? ஓர் ஆசிரியர் பார்க்க விரும்பறது தன் மாணவன் முன்னுக்கு வந்து நல்லா இருக்கிறதை மட்டுமில்லே, அவனைப் பெத்தவங்களோட சந்தோஷ முகத்தையும்தான். அதுக்கு நான் அங்கேதானே போகணும்?''//

வாழ்த்து - சிறுகதை, அடுத்தவர் மனது புண்படாமல் அவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான் மனிததன்மை. என்பதையும், தவறை மறந்து மன்னித்தலையும் வலியுறுத்துகிறது. அதைக் கதை நாயகனுடைய தாயின் மூலம் சொல்லவைக்கிறார். தன்னை அவமானப்படுத்திய மாமன் மகன் திருமணத்திற்கு வர மறுக்கும் மகனுக்குப் புத்தி சொல்லும் தாயைப் பாருங்கள்:

// ''இத பாரு ரகு, நீ சொல்றது சரிதான். உன் மனசில் விசனம் இருக்கும். வார்த்தைகள் வெளி உதட்டிலேயிருந்துதான் வரும். ஆனால் இது வெளியில் யாருக்காவது தெரியப்போகிறதா? இல்லையே? அவங்க கோணத்திலேயிருந்து பாரு. நீங்க சிரிச்சபடியே அங்கே வர்றீங்க. எல்லா நிகழ்ச்சியிலேயும் கலந்துக்கறீங்க. கைகுலுக்கி வாழ்த்தறீங்க. அதைக் கேட்டு அவங்க மனசு சந்தோஷம் அடையுது. பார்க்கிறவங்களும் சந்தோஷப்படறாங்க. அத்தனை பேரையுமே சந்தோஷப்படுத்த நம்மால முடியுதுன்னா அப்புறம் பிரயோசனமில்லைன்னு ஏன் நினைக்கிறே? யார் கண்டது? ஒரு வேளை அந்த சந்தோஷ சூழ்நிலையில் உன் மனசிலேயும் ஒரு மன்னிப்பு உண்டாகி மனசார அந்த வாழ்த்தை
வாழ்த்திடலாமில்லையா?''//

ரகு திருமணத்திற்கு போனாரா வாழ்த்தினாரா படித்துப் பாருங்களேன்.

***

அடுத்து ரிஷபன்.


இவர் , சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் எழுதுகிறார்.
அவர்களின் சூர்யா- சிறுகதை சமூக அவலங்களை கூறுகிறது.

இதில் குழந்தையை 10 மாதம் சுமந்து அதை இழக்கும் தாயின் சோகத்தைச் சொல்கிறார். ஆசையாய் தந்தி கிடைத்தவுடன் குழந்தையைப் பார்க்க ஆவலாய் வந்த தந்தையின் சோகத்தையும் கண்முன்னே கொண்டு வருகிறார்.

// "...ஹரீஷ்னு பேர் வச்சோம். பொண்ணா இருந்தா... சூர்யான்னு..."// என்று சொல்லி புலம்பும் தந்தை ராஜன் கதாபாத்திரம்

உண்மையான சோகத்தை சொல்கிறது.

இது ஒரு புறம் இருக்க, குழந்தை வேண்டாம் என்று குப்பைத் தொட்டியில் எறியும் ஒரு கல்மனதையும் சொல்கிறது.குழந்தையின் தந்தையின் நண்பர் பாலு குழந்தையை இழந்த தன் நண்பனுக்கு ஆறுதல் சொல்லி வெளியில் அழைத்து செல்வதும் தான் நடத்தும் இளைஞர் நற்பணி மன்றம் மூலம் குப்பைதொட்டிகளை துப்புரவு செய்வதும் அதில் குழந்தை கிடப்பதை பார்த்த சிறுவன் பாலுவிடம் வந்து சொல்லும் போது நம் மனதும் பதை பதைத்துப்
போகிறது.

//"...அண்ணே... ஒரு குழந்தையை யாரோ குப்பைத் தொட்டில போட்டுட்டுப் போயிட்டாங்க..."//

பாலு தன் நண்பனை அழைத்துக் கொண்டு அங்கு போனபோது அவர்கள் பார்க்கும் காட்சி நெஞ்சை உலக்குகிறது.

//பிறந்த சிசு. கண் மூடிப் படுத்திருந்தது. வாழை இலை ஒன்றின் மேல் விடப்பட்டிருந்தது. சுள்ளெறும்புகள் மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தன. அவசரமாய் வாரித் தூக்கினான். மேலே ஒட்டியிருந்த குப்பைகளைத் தட்டிவிட்டான். //

பாலு அங்கு வேடிக்கை பார்க்கும் பெண்ணைப் பார்த்துக் கேட்கும் கேள்வி:

//"...ஏம்மா... நீயும் புள்ளையப் பெத்தவதானே... அட... புள்ளை யாருதுன்னு தெரியாட்டியும் போவுது... எடுத்து நிழல்ல வச்சிருக்கலாமில்ல..." என்றான் பாலு ஆற்றாமையுடன்.//

நம்மையும் அப்படித்தான் கேட்கச் சொல்கிறது.பாலுவுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும் உரையாடல் மிக யதார்த்தம். சிணுங்கும் குழந்தையின் பசியை எப்படிப் போக்குவது என்றவுடன் குழந்தையை இழந்த தந்தை தன் மனைவி கொடுப்பாள் என்று சொன்னதும் கதையின் முடிவு தெரிந்து விடுகிறது. கூட்டத்தில் இருந்த சிறுமி குழந்தையை ஏன் குப்பை தொட்டியில் போட்டார்கள் யார் போட்டார்கள் இவர்கள் ஏன் தூக்கி போகிறர்கள் என்ற
கேள்விக்கு கணேசன் சொல்லும் பதில் "...பாப்பா... இங்கே... வா..." "உனக்கு அம்மா... அப்பா இருக்காங்க... அவங்க உன்னைப் பார்த்துப்பாங்க... இல்லையா... பாவம்... அந்தக் குழந்தைக்கு யாரும் இல்லே... அதனால தான்... நாங்க எடுத்துக்கிட்டுப் போய்... வளர்க்கப் போறோம்..."புரிந்தவள் போல தலையாட்டியது.

//கூட்டத்தில் ஒரு குரல் என்ன குழந்தை என்று கேட்டது. சூர்யா என்றான் //
பெண் குழந்தை என்றால் கள்ளிப் பால கொடுத்து அழிப்பது, குப்பைத்தொட்டியில் போடுவது எல்லாம் என்று முடிவுக்கு வரும்?

***

வெங்கட் நாகாராஜ் நிறைய பயணக்கட்டுரைகளை சுவாரசியமாக எழுதி உள்ளார். அவருடைய பதிவிலிருந்து ஒரு அனுபவக்கதை..


தடுப்பது மேல்’
இந்தக் காலத்தில் ஆண் பெண் திருமண வயது தள்ளிப் போகிறது. அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆன பின் தான் குழந்தை என முடிவு எடுக்கிறார்கள் . அப்புறம் குழந்தைக்காக மருந்து மாத்திரைகள், புதிதாக வந்து இருக்கும் சிகிட்சை என்று நேரத்தையும், பணத்தையும் தண்ணீராய்ச் செலவு செய்கிறார்கள்.

முதல் குழந்தைக்கு 11 மாதம் தான் ஆகிறது அதற்குள் அடுத்த குழந்தை. அந்த குழந்தையை அழிக்க வந்த தாயைப் பற்றிய கதை.

டாக்டரைப் பார்க்க வந்த கணவன் மற்றும் மனைவியின் மன நிலையை அழகாகக் கூறுகிறார். கணவன் தன் குழந்தையை கண்ணே! மணியே என்று கொஞ்சுகிறான்.

தாயின் கவலை தோய்ந்த முகத்தைப் பற்றியும் சொல்கிறார். சூழ்நிலைக் கைதியாக சில நேரம் பெண்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். முதல் குழந்தை பெண் என்றால் அடுத்து பிறக்கப் போவதும் பெண் என்றால் புகுந்த வீட்டில் வேண்டாம் என்கிறார்கள். ஆண்பிள்ளை இலலை என்று மறு திருமணம் செய்வதும் நடக்கிறது. ஸ்கேன் செய்து பார்த்து அந்த குழந்தைக்கு நோய் இருந்தால் வேறு வழி இல்லாமல் அழிக்கலாம். மற்றபடி அழிப்பது பாவம் இல்லையா
டாகடருக்கும், அந்த குழந்தையின் தாயுக்கும் நிகழும் உரையாடல்கள் அருமை.

//டாக்டர்: சரி, வாம்மா, பார்க்கலாம் [சிறிது நேரத்திற்குப் பின்], "ம்ம்ம் கொஞ்சம் கஷ்டம் தான். உங்க பிரச்சனை ஒரு குழந்தை ஏற்கனவே இருக்கும்போது அதையும் பார்த்துக்கொண்டு இன்னுமொரு குழந்தையை வயிற்றுக்குள் வளர்த்து பெற முடியாது என்பதுதானே. வயிற்றுக் குழந்தையை இப்போது ஒன்றும் செய்ய முடியாது, அதாவது அதை அழிக்க முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம், ஏற்கனவே பிறந்த இந்த குழந்தையை வேண்டுமானால் அழித்து விடலாம். அது கொஞ்சம் சுலபம்... அப்புறம் நீங்கள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை பிறந்த பின் பொறுமையாக வளர்க்கலாம் இல்லையா! //

டாக்டரின் கேள்வியில் பதறி போகும் பெற்றோரிடம் டாகடர் கூறும் விளக்கமும் அவர் காட்டும் காணொளியும் பார்க்க வேண்டிய ஒன்று. முடிவில் என்ன ஆயிற்று என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.


மேலும் வாசிக்க...

Monday, January 2, 2012

வலைச்சரத்தில் நான்


வலைச்சர வாசகர்களுக்கு வணக்கம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த புது வருடம் எல்லோருக்கும், எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் தரட்டும்.

என்னை வலைச்சர ஆசிரியராக இந்த வாரம் அழைத்து இருக்கும் திரு. சீனா அவர்களுக்கும், அவரிடம் என்னைப் பரிந்துரை செய்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகளும், வணக்கங்களும்.

என்னைப் பற்றி:

என் சொந்த ஊர் பாளையங்கோட்டை. நான் பிறந்தது திருவனந்தபுரம். என் அப்பாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும் உத்யோகம். செட்டில் ஆனது மதுரை. பள்ளிப் படிப்பு பல ஊர்களில். பாதியில் திருமணம். என் கணவர் கல்லூரிப் பேராசிரியாராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இப்போது வேறு ஒரு கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளாராய் இருக்கிறார்கள். நான் திருமணத்திற்குப் பின் பள்ளிப் படிப்பை முடித்து, B.A பொருளாதாரம் படித்தேன், அதுவும் ஒரு வருடப்படிப்புடன் நின்று விட்டது. காலையில் பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் கல்லூரிக்கும் சென்றவுடன் ஆங்கிலத் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சு, தையல், என்று போனேன். நான் போகும்போது பள்ளி பிள்ளைகள் ’குட் மார்னிங் டீச்சர்’ என்பார்கள் . என்னைப் பார்த்தால் டீச்சர் போல் தோன்றி இருக்கிறது. குழந்தைகள் மனதில் பட்டது பலித்து விட்டது. நான் ஆசிரியர் ஆகிவிட்டேன். எப்படி என்று கேட்கிறீர்களா? உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து யோகா , தியானம், முத்திரைகள் படித்து அதில் ஆசிரியர் பயிற்சி, பொறுப்பாசிரியர் பயிற்சி எல்லாம் எடுத்தேன்.

கடமைகள் முடிந்து விட்டன( இப்போது தான் பொறுப்புகள் அதிகமாகிறது) . சமுதாயத்திற்கு ஏதாவது பணி செய்யலாம் எனறு முடிந்த சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன்.

விடுமுறைக்கு வந்த என் மகள் அம்மா நீங்களும் வலைத்தளத்தில் எழுதலாமே ஒன்றும் கஷ்டம் இல்லை என்று என்னை வலைத்தளம் ஆரம்பிக்க வைத்தாள்.
அவளும் வலையில் எழுதுபவள் தான் சிறுமுயற்சி வைத்து இருக்கும் முத்துலெட்சுமி.

என் மருமகள் ”திருமதி பக்கங்கள்” என வலைத்தளத்திற்குப் பெயர் சூட்டினாள், என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து. எனக்கு வலைக் கல்வியை மகள், மகன், மருமகள், பேத்தி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப் படுத்தும் என் கணவருக்கு நன்றி.

2009 மே மாதம் 31 ம் தேதி ’கிளிக்கோலம்’ என்று கிளிக்கோலம் போட்டு, மகரிஷியின் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து கவிதையுடன் என் வலைத் தளத்தை ஆரம்பித்தேன்.

//எண்ணமே இயற்கைதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கி போகும்.//


முதல் முதலில் வந்து வாழ்த்தியது தெகா.
’அம்மா, அழகான எண்ணங்கள்.
இந்த அடிப்படை உண்மையை ரொம்ப உறுதியா நம்புறேன்!
உங்க எண்ணங்களையும் எங்களோட பகிர்ந்துக்கோங்க..’
June 2, 2009 8:55 AM

என் பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டம். அவருக்கு நன்றி.
அடுத்து சென்ஷி -வலைப்பதிவுலத்திற்கு வணக்கத்துடன் வரவேற்றார்.
மங்கை  ஜோதியில் ஐக்கியமாக வாருங்கள் என்றார்கள்.
நானானி , சந்தனமுல்லை, கோபி நாத்  கோலத்தைப் பாராட்டி என்னை வரவேற்றார்கள்.
ராமலக்ஷ்மி
கிளிக் கோலம் உங்களை காட்டிக் கொடுத்து விட்டது. நீங்கள் யாரென்று என்று எழுதி இருந்தார்கள். அவர்களை பதிவர் சந்திப்பில் பெங்களூரில் சந்தித்த போது நானும் பதிவு எழுத ஆரம்பித்து விட்டேன் என்று சொன்னதை வைத்துக் கொண்டு அடையாளம் கண்டு கொண்டார்கள்.

தீபாவின் பின்னூட்டம்:
‘வணக்கம் அம்மா,
வலைப்பதிவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
நீங்க ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுபுத்தகத்திலே கிறுக்கினதை இனிமேல் வலைப்பதிவுகள் மூலமாக பதியுங்கள்.. இது கிழியாது,செதிலரிக்காது..எப்பவுமே பர்மனெண்ட்..

வாழ்த்துக்கள்
மேலும் மேலும் பதியுங்கள்
தீபா கோவிந்த்
July 14, 2009 9:07 PM’

தீபா சொன்னது போல் படித்ததை, நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கி வைத்ததை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

வலைஉலகம் பெரிய கடல் அதில் துளிதான் நான் கற்றுக் கொண்டது. தினம் அதில் கற்க வேண்டியது நிறைய உள்ளது.”கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்பது போல் நான் கற்றுக் கொண்ட வலைக் கல்வி ஒருகைப் பிடி அளவு கூட இல்லை. எத்தனை திறமைகள் ஒவ்வொருவரிடமும்! எல்லோரும் நன்கு எழுதுகிறார்கள்.

அந்த காலத்தில் தாங்கள் எழுதிய கதை, கட்டுரை கவிதைகளை பத்திரிக்கையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் ! இப்போது அப்படியில்லை. நமக்கு என்று ஒரு தளம் நம் எண்ணங்களை ,அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. உடனுக்கு உடன் அதற்கு விமர்சனமும் கிடைக்கிறது. பத்திரிக்கையில் எழுதினால் அடுத்தவாரம் தான் வாசகர் கடித்தில் காணமுடியும். வாழ்க்கையில் நம்மாலும் எழுத முடியும் என்ற நினைப்பே மனதுக்கு உற்சாகத்தையும், தெம்பையும் தருகிறது. பத்திரிக்கைகளும் நம்மை வரவேற்கின்றன. என்னுடைய மார்கழிக் கோலங்கள் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்றது, போன மார்கழியில். தேவதையில் ’குருந்தமலை குமரன்’ என்ற என் ஆன்மிகப் பதிவும், ’தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’ என்ற பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும், ’எண்ணம் முழுதும் கண்ணன் தானே’ என்று என் பேரனைப் ப்ற்றி எழுதிய பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும் வெளி வந்தன. நம் எழுத்தை பத்திரிக்கையில் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இதுவரை 82 போஸ்ட்கள் எழுதி இருக்கிறேன். அவற்றில் சில:

குழந்தைகள் உடல் நலத்திற்கு விளையாட்டு மிக அவசியம் என்று சொல்லும்” ஓடி விளையாடு பாப்பா

சாலை பாதுகாப்பு தொடர் பதிவில் ”வேகம் விவேகம் அல்ல” சாலை பாதுகாப்பு சட்டத்தை மதித்து நடக்க வலியுறுத்தும் பதிவு.

வாழ்க்கை வாழ்வதற்கே!’ காதல்,கடவுள்,அழகு பணம் ஒன்றோடு ஒன்று தொடர் உடையதைப் ப்ற்றி எழுதியது.

பேரக்குழந்தையின் குறும்புகள்

சர்வதேச முதியோர் நாளுக்காக ”முதியோர் நாள்

ஆன்மீகப் பயணத் தொடர்கட்டுரையில் திருக்கயிலைப் பயணக் கட்டுரை எழுதியது எல்லாம் மனதுக்கு நிறைவு தந்தது.

எனக்கு வாய்ப்பு அளித்த திரு. சீனா அவர்களுக்கும், என்னைப் பரிந்துரைத்த
திரு. வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களுக்கும், என் குடும்பத்தார்களுக்கும், என பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து பின்னூட்டங்களால் என்னை ஊக்கப்ப்டுத்தினவர்களுக்கும், வலைச்சரத்தில் படிக்க வரும் புதிய அன்பர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.

கடல் போன்ற பதிவுலகத்தில் கரையோரமாய்க் கால் நனைத்துப் படித்துச் சுவைத்த என் நினைவில் உள்ள பதிவுகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

தொடர்ந்து வந்து ஆதரவு தருவீர்கள் தானே!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது