07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சுய விளம்பரம். Show all posts
Showing posts with label சுய விளம்பரம். Show all posts

Monday, February 17, 2014

பள்ளிக்கூடம் போகாமலே! பாடங்களைப் படிக்காமலே! நான் இப்ப டீச்சர்!!

ஏம்மா! தூயா உன் அம்மா எங்கம்மா!? நீ காஃபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்குறே!


ஏம்பா, வீடு அமைதியா இருக்குறது உனக்கு பிடிக்கலியா!?

இல்லம்மா, ஆஃபீசுல இருந்து வந்து இம்புட்டு நேரமாகியும் உன் அம்மாவை காணலியே அதான் கேட்டேன்.

அப்பா! நீங்க நெட் கனெக்‌ஷன் வாங்கினாலும் வாங்கினீங்க. படிப்பு சம்பந்தமா தேடுறதுக்குக் கூட எங்களை கம்ப்யூட்டர் பக்கம் விடாம, அவங்களே 24 மணி நேரமும் உக்காந்துக்கிட்டு இருக்காங்கப்பா!சரி, அவங்க இம்சை இல்லாம நாங்க படிக்கலாம்ன்னு கண்டுக்கிடலை. ஆனா, இன்னிக்கு பீரோவுல இருக்குற பட்டு புடவை, நகைலாம் எடுத்து போட்டுக்கிட்டு, பியூட்டி பார்லர் போய் மேக்கப் பண்ணிக்கிட்டு வந்து காலைல இருந்து கம்ப்யூட்டர் முன்னாடியே உக்காந்துட்டிருக்காங்க.

அப்படியா! காலைல அப்ப சாப்பிடவே இல்லியா பசங்களா!?

சாப்பிட்டோம்பா! ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வர வச்சிட்டாங்க. அதுமட்டுமில்லாம ஒரு வாரத்துக்கு சாப்பாடு ஹோட்டல்ல இருந்துதானாம்.

ஏன் அப்பு!? அம்மாக்கு உடம்புக்கு முடியலையா! வாங்க, அம்மாக்கிட்ட போய் என்னன்னு கேட்டு வரலாம்.

ஏய் ராஜி! ராஜி! சனியனே எம்புட்டு நேரமா கத்துறேன். இங்க என்ன பண்ணிட்டு இருக்கே! பசங்களுக்கு சமைச்சு போடுறதை விட அப்படி என்ன முக்கியமான வேலை!?

எப்ப வந்தீங்க!? ஏன் இப்படி கத்துறீங்க!?

என்னது!? எப்ப வந்தீங்களாவா!? ஏண்டி நான் வந்ததுக்கூட தெரியாம இங்க என்ன பண்ணுறே!? அதுமில்லாம இதென்னடி வாய் வீங்குன அனுமார் மாதிரி லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு இப்படி இருக்கே!

நான் பிளாக்கரா இருக்குறது உங்களுக்கு தெரியும்ல. என்னை மாதிரி நல்லா எழுதும் பதிவர்களை, சக பதிவாளர்களுக்கு அறிமுகப்படுத்த வலைச்சரம்ன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சு சீனா ஐயா நடத்தி வர்றார். அவர்தான் என் திறமையை பார்த்து ராஜி! நீ நம்ம பிளாக்ல எழுதனும்மான்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தார். சரி போனாப்போகுதுன்னு ஒத்துக்கிட்டேன்.  

நீ நல்லா எழுதுறியா!? உன் திறமையைப் பார்த்து உன்னை கூப்பிட்டாங்களா!? சரி, அப்படியே கூப்பிட்டு இருந்தாலும் இந்த நகை, மேக்கப்லாம் எதுக்குடி!? 

ஏன்க! படிக்காமயே டீச்சர் ஆகிர்யிருக்கேன். டீச்சருக்கேத்த மாதிரி அழகா தெரியனுமில்ல! அதுக்குதான்.

அடிப்பாவி! ஏண்டி இம்படி அலம்பறே!? அப்படி என்னதான் எழுதி கிழிச்சிருக்கேன்னு நானும் பார்க்குறேன். நகரு.

இருங்க நீங்க போய் பார்த்தால் நான் எழுதுன எல்லாத்தையும் பார்த்துட்டு என்னைத் திட்டுவீங்க. அதனால, நானே சில லிங்க் எடுத்துக் கொடுக்குறேன் பாருங்க.

பேப்பர், நோட்டுல கிறுக்கிட்டு இருந்து, அறிவியல் வளர்ச்சி காரணமா பிளாக்ல கிறுக்குன முதல் கவிதை.

எனக்கும் சுமாராக் கவிதை எழுத தெரியும்ன்னு அப்பப்ப நான் போடும் அறுவைகள்

பிளாக்ல ஆண்கள் ராஜ்ஜியம்தான். அதனால, என் சகோதரர்கள் அவங்க வீட்டுல அடிவாங்காம காய்கறிகள் வாங்கி வந்து, சமைச்சு நல்ல பேர் எடுக்கனும்ன்னு நான் போட்ட பதிவுகள்.

டிப்ஸ் மட்டுமில்ல மொக்கையும் போட தெரியும்ன்னு நான் போட்ட பதிவு

நம்ம பசங்க பிறந்த நாளுக்கு நாம் மட்டும் வாழ்த்தினா போதுமா!? நல்லவங்க பலரும் வாழ்த்தினாதானே நல்லா இருக்கும்ன்னு நினைச்சு நான் போட்ட பதிவுகள் தூயா,   இனியா,  அப்பு , என் அப்பா அம்மா கல்யான நாள்

நாம அப்பபப்போ டூர் போன போது எடுத்த படங்களை வச்சு போடும் பதிவுகள்

போன வருசம் பதிவர் சந்திப்புக்கு போய் வந்த அனுபவம், இந்த வருசம் பதிவர் சந்திப்புக்கு போய் வந்த அனுபவம்

சந்தோசங்களில் சேர்ந்து சிரிக்க மட்டுமில்ல, துக்கத்தில் தோள் கொடுக்கவும் நாங்க இருக்கோம்ன்னு சொல்ற என் சகோதரர்களை நம்பி பகிர்ந்துக்கிட்ட சோகம்.

இதுமட்டுமில்லாம புண்ணியம் தேடி, ஐஞ்சுவை அவியல்,  கிராஃப்ட் ன்னு இன்னும் இருக்கு. போய் படிச்சு பார்த்து என்ன எழுதிக் கிழிச்சேனு பார்த்து வாங்க! உங்க கூட பேசிப் பேசி என் மேக்கப் கலைஞ்சுட்டுது. நான் போய் மேக்கப் போட்டு வரேன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது