பெரு மகிழ்வுடன் சிறு அறிமுகம் ...
➦➠ by:
அரசன்,
சுயஅறிமுகம்
அன்பின் வலைச்சர , மற்றும் தமிழ் பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள். எங்கோ, எப்படியோ இலக்கின்றி பொழுதை போக்கி கொண்டிருந்த என்னை, என்னின் துளி ஆர்வத்தைக் கண்டு எனக்கு, இளைய/இணைய தமிழின் பெருங்களமாகிய பதிவுலகத்தை அறிமுகப் படுத்தி, இதுநாள் வரை கைப்பிடித்து வழி நடத்திச் செல்கிறார் எங்கள் மண்ணின் மைந்தர் திரு. கருணாகரசு, இப்படி தான் எனக்கு பதிவுலகின் முதல் அறிமுகம், அவரின் அந்த சிறு விதை இன்று எண்ணற்ற நட்புக்களை எனக்கு வழங்கி இருக்கிறது.
புதுக்கணவன் மனைவி வீட்டுக்கு முதலில் செல்லுகையில் எந்த மாதிரி தயக்கத்தில், கூச்சத்தில் இருப்பாரோ அந்த அளவு தயக்கத்தில் இருந்த என் மன தயக்கத்தை உடைத்தெறிந்தது கடந்த வருடத்தில் சென்னையில் நடந்த பதிவர் மாநாடு. அனைவரிடமும் இயல்பாக பேசி கலக்க சந்தர்ப்பம் வழங்கிய நண்பர் குழுவினருக்கு நன்றியை தவிர்த்து சொல்ல வேறு எதுவும் வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.
எனது ஆரம்பால கவிதைகளை என்னாலே மீண்டும் படிக்க இயலாது என்பதால் உங்களை இம்சிக்க விருப்பமின்றி என்னால் அதிகம் இரசிக்க பட்ட சில பதிவுகளை உங்களுக்கு என் அறிமுகமாக வழங்க விழைகிறேன்! அதில் ஒன்று தான் தாயில்லா ஒரு பெண் குழந்தையின் ஏக்கம் அம்மா இல்லா வீடு என்ற கவிதையில் கிறுக்க முனைந்தேன்!
அடுத்து களவு போன கடவுள், வரலாறாகும் வாழ்வு என்ற இரு பதிவுகளையும் எழுத சற்று சிரமப்பட்டேன். எனக்குள் நிறைந்த மகிழ்வை தந்த பதிவுகளும் கூட.. ஊரைவிட்டு சென்னை நோக்கி நகருகையில் மனம் சற்று சந்தோசத்தில் திளைத்தது என்னவோ உண்மை தான், பிறகு இங்கு அடைப்பட்டு கொண்டதும் மீண்டும் மனக்குரங்கு ஊரை பற்றி சிந்திக்கையில் எழுத ஆரம்பித்தது தான் ஊர்ப்பேச்சு எனும் தொடர்...
அடுத்து எங்களது மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக நான் எடுத்த சில படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன் ... அதையும் ஒரு எட்டு பார்த்துடுங்க .தோழமைகளே .. அடுத்து சிதையும் கலைத்தமிழ் என்ற கிறுக்கலையும் கிறுக்கி உள்ளேன்.
பெரும்பாலானவர்களை சுழற்றிப் போடும் காதல் என்னையும் விட்டுவைக்கவில்லை, அதை மையப்படுத்தி சிலவற்றை புனைந்துள்ளேன். அவற்றுள் சில உங்களின் பார்வைக்கு
செம்மண் தேவதை
அப்படியே உன்னையும்
சின்ன சின்ன ஆசைகள்
மேலும் இந்த வாய்ப்பை வழங்கி என்னை பெருமை படுத்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கும், என்னை இந்த வாரம் முழுதும் தொடரப் போகும் நண்பர்களாகிய உங்களுக்கும் இந்த கிராமத்தானின் உள்ளம் நிறை நன்றிகளும், வணக்கங்களும்....
நிறை மகிழ்வுடன்,
அரசன்
உ. நா குடிக்காடு
