07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ச்சின்னப் பையன். Show all posts
Showing posts with label ச்சின்னப் பையன். Show all posts

Saturday, December 13, 2008

இவங்கல்லாம் என்னை மாதிரி இல்லே...!!!

என்னைய மாதிரி தினமும் வளவளன்னு எழுதறவங்களுக்கு நடுவுலே மாசத்துக்கு நாலஞ்சு பதிவு போட்டு அதெல்லாம் நல்ல நகைச்சுவையோடவோ, கருத்தோடவோ எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படி எழுதறவங்கள்லே சில பேரை பாப்போம்.


இவங்க இன்னும் நிறைய எழுதி இந்த பரந்து விரிந்திருக்கக்கூடிய கட்டுப்பாடற்ற ஒரு சமுதாயத்துலே, பல்வேறு பரிணாமங்களுக்கு நடுவே இருந்தாலும் தங்கள் சுயசார்பற்ற கருத்தியலிலிருந்து விலகி கலைப் படைப்பு படைக்க வேணும்னு கேட்டுக்கறேன்..


என்னை மாதிரியே - முன்னாடி இருக்கற பத்தி புரியாதவங்க - கவலைப்படாமே இவங்கள படியுங்க. நிறையவே புரியும்...அவ்வ்வ்..

-----------

சத்யபிரியன்:

தசாவதாரம் வந்தபோது எல்லோரும் அதைப்பற்றி கண்டிப்பா ஒரு பதிவு போட்டே ஆகணும்ன்றது எழுதப்படாத சட்டமா இருந்தாலும், இவர் தன் விமர்சனத்தை ஒரு கடிதமா கமலுக்கு எழுதினாரு. இங்கே போய் பாருங்க. கமலிடம் உள்ள தன் எதிர்ப்பார்ப்பை இதைவிட அருமையா சொல்ல முடியாதுன்றதை பின்னூட்டத்தில் நிறைய பேர் ஒத்துக்கிட்டிருக்காங்க.


என்னோட சின்ன வயசுலே தவறிய எங்கப்பா இப்போ இருந்திருந்தா எவ்ளோ நல்லாயிருந்திருக்கும்னு தினமும் நினைக்கறதாலே, அப்பாவைப் பற்றிய பதிவுன்னா உடனே தேடிப்போய் பாக்கிறவன் நான். அப்படி இவரு தன் அப்பாவை பற்றி எழுதிய நெகிழ்ச்சியான பதிவு இங்கே. போய் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்.

சரவணகுமரன்:

நகைச்சுவை, ஜோக்ஸ், கதை அப்படி இப்படின்னு கலந்து கட்டி இவர் பதிவு போட்டாலும், சரவணகுமரன் அப்படின்ன உடனே நினைவுக்கு வருவது எனக்கு இந்த மற்றும் இந்த பதிவுகள்தான். அதுக்காக மத்த பதிவுகள் நல்லாயிருக்காதான்னு கேக்கப்படாது. படிச்சிப் பாருங்க. எல்லாமே நல்லாத்தான் இருக்கும்.

மேலே சொன்ன பதிவுகள், அப்பா மகன் இந்த ரெண்டு காரெக்டரை வெச்சி பிரபல இயக்குனர்கள் படம் எடுத்தா எப்படி இருக்கும்கிற அட்டகாசமான கற்பனை. ரெண்டாவது, தசாவதாரம் பாத்த எஃபெக்ட் - chaos தியரி - கரகாட்டக்காரன்லே எப்படி இருக்குன்ற இன்னொரு கற்பனை பதிவு.

ரம்யா

புதுசா வந்துருக்காங்க. நல்லா நகைச்சுவையா எழுதறாங்க.

நிறைய பேர் எழுதும் பார்த்திபன் - வடிவேல் காமெடியை இங்கே முயற்சி செய்துருக்காங்க பாருங்க. அருமையாத்தான் இருக்கு. இங்கே பாருங்க. இன்னொரு மொக்கைக் கதை இங்கே இருக்கு. இன்னும் நிறைய எழுதி எல்லோரையும் சிரிக்க வைப்பாங்கன்னு நம்பலாம்.

நவநீதன்:

இவரோட வலைப்பக்க முகப்பு டிசைனுக்காக நான் இங்கே போக ஆரம்பிக்கலை (நிஜம்மா...)

எழுத ஆரம்பிக்கும்போது நிறைய அருமையான கவிதைகள் எழுத ஆரம்பிச்சாரு. உதாரணத்துக்கு சில - இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே.

இவரோட கற்பனை கதாபாத்திரம் டகுல பாண்டியின் சில அட்டகாசங்கள் இங்கே மற்றும் இங்கே.

இன்னும் நிறைய கதை, கவிதைகளை படைச்சி நமக்கு படிக்கக் குடுப்பாருன்னு நினைக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Friday, December 12, 2008

மாப்பு... வெச்சிட்டான்யா ஆப்பு...!!!

மூன்று முறை நண்பர்கள்(!!!) கொடுத்த ஆப்பில் சற்றும் மனம் தளராத விக்கி போல், மன ஆறுதல் பெறவும் சரியான வேவ்லெங்த் உடைய நண்பர்களைப் பெறவும் இணையத்திற்கு வந்த என்னை இணையம் ஏமாற்றவில்லை.

அப்படிப்பட்ட அற்புதமான நண்பர்களில் சிலரைப் பற்றி
இங்கே சொல்ல விரும்புகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல - மேலும் இது அதிக நட்பு - குறைந்த நட்புங்கற தரவரிசையிலும் இல்லை.

--------------

தமிழ் பிரியன் :-> தினமும் ஒரு பதிவு போடும் பழக்கமுடைய இவரு, தன்னிடத்திலிருந்து அமெரிக்காவுக்கு இலவச தொலைபேசின்னவுடனே,
எனக்குத் தொலைபேசி மொக்கை போட்டவரு. இவரோட இந்த பதிவுலே சொல்லியிருக்கிற மேட்டர்தான் என்னை மிகவும் நெகிழ வைத்த
சம்பவம்.


ராதாகிருஷ்ணன் ஐயா -> அமெரிக்கா கிழக்குக் கரைக்கு வந்து - நியூயார்க் வருவேன்னு சொல்லி ஏமாத்திட்டு - வராமலேயே இந்தியா
திரும்பப் போறவர். ஆன்லைனில் இருந்தால் எப்போதும் பேசும் இவரோட அரசியல் பதிவுகளோடு நான் விரும்பிப் படிப்பது - (மொக்கையாக
இருந்தாலும்!!!) வாய் விட்டு சிரிங்க பதிவுகளைத்தான்.... :-)))


இளா -> ஒரு நடமாடும் தகவல் களஞ்சியமா இருக்கிற இளாவோடு சில முறை பேசியதுண்டு. பல தளங்களை நிர்வகிக்கும் இவர், பல தளங்களிலும் பயணிக்கிறார். தற்போது இவர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் - சாண்டில்யனின் ஜல தீபம். (அப்பாடா... சொல்லிட்டேம்பா...!!!).


வெண்பூ -> சில முறை சேட்டினதாலும் (சௌகார்பேட் சேட்? நோ நோ!!!) ஒரு முறையே பேசினாலும், நெருங்கிய நண்பராக கருதுவதில் இவரும் ஒருவர். சிறுகதை மன்னர் என்று அழைக்கப்படும் இவர் எழுதிய அறிவியல் போட்டிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்ததாகும்.


அப்துல்லா -> என் தம்பி கூட என்னை 'டேய்'ன்னு ஆரம்பிச்சி '$%$%' அப்படின்னுதான் கூப்பிடுவான். இவர்தான் என்னை முதலில் அண்ணே
என்று கூப்பிட்டு நெகிழ வைத்தவர். சென்னையிலிருந்து என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசிய நல்ல நண்பர். நான் புதுசா ஒண்ணும்
சொல்லப்போறதில்லை. நம்ம நண்பர் ஜோசப் கொடுத்த அறிமுகம் இங்கே.


வால்பையன் -> பலமுறை பேசிய இவரையும் நெருங்கிய நண்பராக கருதுகிறேன். பல்வேறு எதிர்ப்பதிவுகள், மொக்கைகள் எழுதினாலும்,
நச்சென்று இவர் எழுதிய இந்த பதிவு காலத்துக்கும் எனக்கு நினைவிலிருக்கும்.


பரிசல் -> முதல் தொலைபேசியிலேயே கடகடவென்று பேசி நெருக்கம் காட்டிய நண்பர். (அடிக்கடி, நான் ரொம்ப அறுக்கலியேன்னு கேள்வி
வேறே!!!). இவரைப் பற்றி போன பதிவிலேயே சொல்லிவிட்டதால், நெக்ஸ்ட்.


விஜய் ஆனந்த் -> சிரிப்பான் பின்னூட்டம் மட்டுமே போடும் புகழ் பெற்ற பதிவர் இவர். வாரயிறுதியில் என்னுடைய சாப்பாட்டு மெனு என்னவென்று தெரிந்து கொள்வதில் ஆர்வமுடையவர். அத்துடன் தன் நடவடிக்கைகளையும்(!!!) அப்டேட் செய்பவர்.


ராப் -> சொல்லாமல் கொள்ளாமல் பதிவுக்கு லீவ் போட்டால், மெயிலடித்து நலன் விசாரிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் இவரும் ஒருவர்.
(ஆயிரத்தில் ஒருத்தி!!!).


விக்னேஸ்வரன் -> கதை, கட்டுரை, கவிதை எல்லாத்திலேயும் கலந்து கட்டி கலக்கும் ஒரு நண்பர். நிறைய வாசிப்பு பழக்கமுடைய விக்கி, ஏகப்பட்ட மேட்டர்கள் ஊடகங்களிலும் எழுதி வருகிறார். அடிக்கடி பேசும் நல்ல நண்பர்களில் ஒருவர்.

------------


மக்களே, நான் பெற விரும்புவது வெறும் உங்க நட்பைத்தான். அதனால், நான் ஆன்லைனில் இருந்தால் - அந்த சமயம் உங்களுக்கு பொழுது போகலேன்னா - தயவு தாட்சண்யம் பார்க்காமல் பிங் செய்யவும்.
மேலும் வாசிக்க...

Thursday, December 11, 2008

காலையில் பாடும் ராகங்கள் என்ன?

ஏதோ ஒரு பழைய படத்தில் (ராவணன்?) ஒருத்தர் கேப்பாரு. காலையில் பாடும் ராகங்கள் என்ன? மாலையில் பாடும் ராகங்கள் என்ன? அப்படின்னு. அடுத்தவரு வரிசையா பாடிக்கிட்டே வருவாரு.


அதே மாதிரி, காலையில் படிக்கும் பதிவுகள் என்ன? மதியத்தில் படிக்கும் பதிவுகள் என்ன? அப்படின்னு வரிசையா என்கிட்டே கேட்டா (யாரும் கேக்கமாட்டீங்களே!!!) இந்த பட்டியலைத்தான் சொல்வேன்.


இந்த பதிவை படிச்சிட்டு - சூரியனுக்கே டார்ச்சா? - வெண்பூக்கே பிரியாணியா - வாலுக்கே சரக்கா - அப்படின்னெல்லாம் யாரும் பின்னூட்டம் போடாதீங்க. எனக்கு தெரிஞ்சத / பிடிச்சத சொல்றேன். அவ்ளோதான்.


---------------


தினமும் காலையில் 6.30 மணியிலேந்து offshore மெயில்கள்/தொலைபேசிகள் ஆரம்பிச்சிடும். தொலைபேசியில் பேசிக்கிட்டே இவங்க பதிவையும் படிக்க ஆரம்பிசிட்டா பொழுது போறதே தெரியாது.


லக்கிலுக்: இவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கொடுத்துட்டானா கடவுள்ன்றா மாதிரி பதிவு மழையா கொட்டினாலும், எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு முடிவு எடுக்கமுடியாமே எல்லா பதிவுகளும் அருமை. புனைவு, மசாலா அப்படி இப்படின்னு ஏகப்பட்ட வெரைட்டி கொடுப்பாரு. இவரோட எதிர்ப்பதிவுகள காலையிலே படிச்சா, அந்த நாள் மட்டுமில்லே, எல்லா நாளும் இனிய நாள்தான்...




பரிசல்காரன் : அடுத்தது நம்ம நவரச நாயகன். நிறைய படிச்சி, நிறைய எழுதறவரு - தினமும் ஏதாவது ஒரு சுவாரசியமான மேட்டர் வெச்சிருப்பாரு. பதிவர் சந்திப்போ, அவியலோ, திரைப்பட விமர்சனமோ - பரிசல் டச் தனியா தெரியும். ஜனரஞ்சகமா எழுதறதாலே நிறைய நண்பர்களையும் சம்பாதிச்சிருக்காரு.




கோவி.கண்ணன் : என்னெயெல்லாம் அடிக்கடி வீட்லே திட்டுவாங்க. கொர கொர, சொர சொரான்னு இல்லாமே இப்படி வழவழ கொழ கொழன்னு இருக்கியேன்னு. அதாவது பல விஷயத்திலே என்னாலே எந்தவித கருத்தும் சொல்லமுடியாமே - ஒரு முடிவே எடுக்காமே எல்லாத்தையும் 'காலம்' பார்த்துக்கொள்ளும்னு இருக்கறதுதான் காரணம்.



ஆனா, இவரு அந்த மாதிரி இல்லே. எந்த விஷயமா இருந்தாலும், எந்த பிரச்சினையா இருந்தாலும், அதைப் பற்றிய தன் கருத்தை வெட்டு ஒண்ணு, துண்டு மூணா எடுத்து சொல்லிடுவாரு.



-------------


அப்புறம் மதிய உணவு சாப்பிடும்போது சில 'லைட்' பதிவுகளை படிப்பேன். இந்த பதிவர்களின் நகைச்சுவை உணர்வுக்காகவும் - அது copy/paste ஆக இருந்தாலும் பல இடங்களிலிருந்து தொகுத்து போடுபவர்களாகையால் - அந்த பதிவுகளை படிப்பதுண்டு.


செல்வகுமார்:

செய்தி எல்லோரும் சாதாரணமாக படித்த செய்தியாகத்தான் இருக்கும். ஆனால் இவரோட கமெண்ட்ஸ் கண்டிப்பா சிரிப்பை வரவழைக்கும். வடிவேல் கேப்டன் லடாய் பற்றி இவர் போட்ட இந்த பதிவு நான் மிகவும் ரசித்ததாகும்.

தொலைக்காட்சிகளில் முதல்முறையாக சூப்பர் ஹிட் திரைப்படம் - இப்படி போடறதுக்கு படத்தை எப்படி தேர்ந்தெடுக்கறாங்கன்னு இங்கே சொல்றாரு பாருங்க.

------------

அருப்புக்கோட்டை பாஸ்கர்:


துக்ளக், தினமணி ஆகிய பத்திரிக்கைகளிலிருந்து வெட்டி/ஒட்டுவதால், அந்த இரண்டையும் ஒரே இடத்தில் பார்த்துவிடலாம். ஒரு ச்சின்ன கார்ட்டூனிலிருந்து வேறொரு சூப்பர் பதிவு போட ஐடியா கிடைக்குமென்பதாலும், இந்த பக்கங்களை தவறாமல் பார்ப்பதுண்டு...

-------------

கார்த்தி:

இவர் தனக்குத் தெரிந்த பல்வேறு sms, ஜோக்ஸ், மொக்கைகளை பதிவிட்டு வருகிறார். சொந்த சரக்கோ அல்லது இரவல் சரக்கோ, சாப்பிடும்போது சிரிக்க வைப்பதற்காக இவருக்கு ஒரு நன்றி... நீங்களும் போய் பாருங்க.

டாக்டர் விஜய் பற்றிய ஒரு கொலவெறிக் கதை இங்கே. சில மொக்கைகள் இங்கே, ஜோக்குகள் இங்கே.

------

அப்புறம் ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னால், இவரோட பதிவை கண்டிப்பா ஒரு தடவை பாத்துடுவேன். அடுத்த நாள் காலை 5 மணிக்கு ஷெட்யூல் செய்து வெச்சிருக்கிற பதிவு சரியா இருக்கான்னு பாத்துட்டு - இன்னிக்கு ஒரு 200 பேராவது வந்தாங்களா - ஒரு 20 பின்னூட்டமாவது வந்துச்சா, அது போறும்டா சாமின்னு கடவுளை வேண்டிக்கிட்டு தூங்கப் போயிடுவேன்... அவ்வ்வ்..

------------

நாளைய பதிவு: மாப்பு... வச்சிட்டான்யா ஆப்பு...!!!

மேலும் வாசிக்க...

Wednesday, December 10, 2008

அழுவாச்சி பதிவர்கள்!!!

அழுவாச்சி பதிவர்கள் அப்படின்னா அழுது வடியற பதிவுகள் போடறவங்க இல்லே.... தங்கள் நகைச்சுவை உணர்வால் படிப்பவர்களை சிரிக்க வைத்து, அவர்கள் கண்ணிலிருந்து கண்ணீர் வரவைப்பவர்கள்.


---------


நகைச்சுவைன்னு வந்தப்புறம் இவரை சொல்லலேன்னா, என்னை நானே மன்னிக்க மாட்டேன் (!!!). தன் அனுபவங்களை அதிரடி பட்டாசாக சொல்லி படிப்பவர்களை நெடு நேரம் சிரிக்க வைப்பவர். பல முறை அலுவலகத்தில் என் சீட்டில் சிரிக்க முடியாமல் எழுந்து போய் ஓய்வறையில் தனியாக சிரித்திருக்கிறேன். நன்றி அபிஅப்பா.


இவரோட இந்த பதிவை படிச்சபிறகு, நான் அடுத்த நாள் வெளியிடணும்னு வெச்சிருந்த நகைச்சுவை (??) பதிவை 'delete' பண்ணிட்டேன். அந்த பதிவுக்கு முன்னால், என்னோட அந்த பதிவை படிச்சவங்க கண்டிப்பா என்னை திட்டியிருப்பாங்க. அவ்வ்.


இவரோட எல்லா பதிவுமே சூப்பர்தான் - இருந்தாலும் சட்னு (not சட்னி) நினைவுக்கு வருவது இது, இது மற்றும் இதுதாங்க.


----------


அடுத்தது இவரு. பதிவு போட்டாலும் சரி, மத்தவங்க பதிவுலே கமெண்ட் போட்டாலும் சரி - எல்லோரையும் பயங்கரமாய் கலாய்ப்பார். இவரோட பதிவு தலைப்பே கலாய், கலாய் அப்படின்னு வெச்சிருக்கார். நம்ம குசும்பன் அண்ணாச்சிதான்.

நண்பர் நர்சிம்மை கலாய்த்து இவர் போட்ட பதிவு இங்கே.
பள்ளியில் படிக்கும்போது (!!!) இவர், 'படம் வரைந்து பாகங்களை குறி' அப்படிங்கற கேள்வியில் நிறைய மதிப்பெண்களைப் பெற்றியிருப்பாருன்னு நினைக்கிறேன். படம் வரைந்து கலாய்ப்பதில் இவரை விட்டால் வேறு ஆளே இல்லை... சாம்பிளுக்கு இங்கே மற்றும் இங்கே. இதுவும் ஒரு சூப்பர் அரசியல் கலாய் பதிவு.


------------


நாமக்கல் சிபி:


ரசிச்சி சிரிக்க வெக்கறதுலே இவரு மன்னரு. லேட்டஸ்டா போட்ட இந்த மீள்பதிவு இவரோட கற்பனைத் திறனுக்கு ஒரு சான்று. சில சமயம் கவிஞராய் அவதாரம் எடுத்துடுவாரு. இவரு எழுதிய ஒரு கொலவெறி கவிதை இங்கே. இணையத்துலே ஒரு காலத்துலே - பகிரங்க கடிதம் - சீசன் ஓடிட்டிருந்தபோது - இவர் எழுதிய ரெண்டு பயங்கர கடிதங்கள் இங்கே மற்றும் இங்கே.


-----------


'மீ த ஃபஷ்டு' - அப்படின்ன உடனே எல்லாருக்கும் தெரிஞ்சிடும் இவங்க யாருன்னு. எல்லார் பதிவுலேயும் போய் முதல் பின்னூட்டம் போடறவங்க. இவங்க பதிவுலே பின்னூட்டங்களைப் படிச்சா, அதுவே ஒரு பதிவு மாதிரி இருக்கும் - அப்படியாக பேச்சு வார்த்தைகளை வளர்த்துக்கிட்டே போவாங்க (பாஸிடிவ்வாத்தான் சொல்றேன்பா!!!). கதை, கட்டுரை, கவிதை(!!) இப்படி எல்லாத்துலேயும் கலந்துகட்டி அடிப்பாங்க.


கவிதை இங்கே மற்றும் இங்கே... இதையும் படிச்சி பாருங்க (மூச்சை இழுத்து பிடிச்சி படிங்க.. எல்லாமே பெரிய பெரிய வாக்கியமா இருக்கும்...!!!).
மோகன் பதிவுலே இவங்க எழுதின இந்த கட்டுரை இவங்க கொலவெறியின் உச்சக்கட்டம்னு சொல்லலாம்.


-----------


நக்கலுக்கும் நையாண்டிக்கும் பேர் போனவரு(?) இவரு. எல்லா பதிவுலேயும் இவரோட தொடல் (டச்) இருக்கும். சென்னைக்கும் பெங்களூருக்குமிடையே இவரது பயணம் பற்றிய பதிவுகள் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். அவை இங்கே, இங்கே மற்றும் இங்கே. சாருவைப் பத்தி இவரோட புகழ் பெற்ற பதிவு இங்கே.


இவரோட திருமண நாள் பதிவு சூப்பர். இனிமே வருடா வருடம் இவரோட திருமண நாள் பதிவு மட்டும் கண்டிப்பா படித்தாகணும்னு முடிவே பண்ணிட்டேன்... ஏன்னு கேக்கறீங்களா??? .. அவ்வ். என்னையும் அதே தேதியில்தான் மாட்டிவிட்டாங்க....

----------

நாளைய பதிவு -> காலையில் பாடும் ராகங்கள் என்ன?

மேலும் வாசிக்க...

Tuesday, December 9, 2008

ஜே கே ரித்தீஸுக்குப் போட்டியாக ஒரு கும்பல்!!!

அகிலாண்ட நாயகன் தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணன் ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக நம் இணையத்தில் ஒரு கும்பல் அலைகிறது. அது வேறே யாரும் இல்லீங்க நம் வருங்கால முதல்வர் க்ரூப்தான்.

ஒன்பது பேர் சேர்ந்து இந்த க்ரூப்பில் இருந்தாலும், மூன்றாவது அணியைப் போல் இவங்களும் தங்கள் முதல்வர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊர் அரசியல்வாதிகள் 2011, 2016 தேர்தல்களையே குறிவைத்து காய் நகர்த்தினால், இந்த அணி அதையும் தாண்டி 2030 தேர்தலை குறிவைத்து வேலை செய்கிறார்கள்.

மக்கள் பிரச்சினைகளான மின்வெட்டு, காவிரி நீர் இதையெல்லாம் 2030ல் எப்படி தீர்ப்பது என்று தீர்மானமே போட்டிருக்கிறார்கள்.

என்னதான் தமிழகத்தின் முதல்வர் இடத்துக்குப் போட்டி போட்டாலும், உலக அரசியலையும் ஊன்றி கவனித்து, ஆலோசனை சொல்லக்கூடிய தகுதி இந்த க்ரூப்புக்கு இருக்கிறதென்று இந்த, இந்த பதிவுகளைப் பார்த்தால் தெரியும்.

எல்லா அரசியல்வாதியும் தேர்தலுக்கு முன்னாலே தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் செய்வதுபோல், இவங்களும் ஒவ்வொரு மாவட்டமா போய் தங்களை அறிமுகப்படுத்திக்கறாங்க... தஞ்சை, கொங்கு, நெல்லை - இன்னும் பல மாவட்டங்களுக்கும் செல்ல இருக்காங்க...

சமீபத்தில்தான் இந்த அணி துவங்கியிருப்பதால், மத்திய மாநில தேர்தல்கள் நெருங்க நெருங்க, (பதிவுகளில்) சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

----------

இப்படியாக அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் சங்கத்துக்கு எதிரா நிறைய பேர் வேலை செஞ்சாலும், சங்கத்தில் புதுசா நிறைய பேர் சேந்துக்கிட்டும் இருக்காங்க.

சமீபத்துலே கொ.ப.சே-வாக சேர்ந்தவர் இவர்தான். அதற்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இங்கே இருக்கு.

இவரோட இந்த பதிவு இவரோட நகைச்சுவை உணர்வை எடுத்து காட்டுது.

அறிவாளிங்களுக்கே உரித்தான பிரச்சினைகளைக் குறித்து இவர் போட்ட பதிவும் நல்லாயிருந்துச்சு. ஹிஹி.. எனக்கு இந்த மாதிரி அடிக்கடி பிரச்சினை வரும். (என்ன பண்றது.. சமாளிக்க வேண்டியதுதான்...!!!)

---------

நாளைய பதிவு :-> அழுவாச்சி பதிவர்கள்...!!!
மேலும் வாசிக்க...

Monday, December 8, 2008

உசுப்பேத்தி உசுப்பேத்தியே...!!!

பொழுதுபோகாமெ சும்மா பதிவு படிச்சிண்டிருந்தவன் - சரி நாமே ஒரு வலைப்பூ ஆரம்பிப்போம்னு ஆரம்பிச்சி, ஒரு மூணு பதிவு போட்டு
வெச்சேன். ஒழுங்கா ஒரு லீவ் லெட்டர்கூட எழுதத் தெரியாதவன் பதிவு எழுதினா யார் வந்து பாக்கப்போறாங்கன்னு நினைச்சா, திடீர்னு ஒரு
நாள் சிலபல பின்னூட்டங்கள் வந்திருந்துச்சு.

ஆஹா, புதுசா ஒருத்தன் வந்து மாட்டிண்டிருக்காண்டா அப்படின்னு நினைச்சிருந்தாலும், பின்னுட்டத்தில் எழுதும்போது நல்லாவே வரவேற்று
எழுதியிருந்தாங்க (இங்கே மறுபதிப்பு செஞ்சிருக்கேன்). அவிங்க மட்டும் அன்னிக்கு ஒண்ணும் எழுதாமே விட்டிருந்தாங்கன்னா, நான்.... நான்....
(இருங்க. துக்கம் தொண்டையை அடைக்குது. தண்ணி குடிச்சிட்டு வர்றேன்!!!) மேற்கொண்டு ஒண்ணுமே எழுதியிருக்க மாட்டேன்னு சொல்ல
வந்தேன்.

அன்னிலேர்ந்து ஆரம்பிச்சி இன்னி வரைக்கும் பின்னூட்டம் போட்டும்/ போடாமேயும் என்னோட பதிவைப் படிச்சி ஊக்குவித்த எல்லோருக்கும்
அப்புறம் நம்ம வலைச்சரக் குழுவினருக்கும் எல்லாத்துக்கும் மேலே நம்ம சீனா ஐயாவுக்கும் நன்றி சொல்லிண்டு, இந்த வாரத்துக்கான ஆசிரியர் பொறுப்பை ஏத்துக்கறேன்... ஸ்டார்ட் மீஜிக்....

என்னோட முதல் பதிவுக்கு பின்னூட்டம் போட்டு உசுப்பேத்தி (!!!) விட்டவங்க இவிங்கதான்!!! எல்லோருமே பெருந்தலைகள்ன்றதுதான் இங்கே
முக்கியமான மேட்டர்...!!!

------------------------------------

வெட்டிப்பயல் said...
வரும் போதே டாப் கீர்ல உள்ள வறீங்க.. வாழ்த்துக்கள்!!!
cheena (சீனா) said...
நல்வாழ்த்துகள் நண்பா - வருக வருக
கோவி.கண்ணன் said...
நகைச்சுவை தெறிக்குது....
கண்டிப்பாக நல்லா எழுதுவிங்க என்ற எதிர்பார்ப்பு கூடிப் போச்சு
வாழ்த்துக்கள் !
அறிவன் /#11802717200764379909/ said...
தங்கமணி சரியாத்தான் சொல்வாங்க போலருக்கு !!!!!!!!! :-)வாங்க,சும்மா அடிச்சு விளையாடுங்க..
கண்மணி said...
வாங்க வெல்கம்பதிவுலகில் எல்லோருக்கும் ஒரு இடமிருக்கு4 பேர் வசை பாடினாலும் 40 பேர் ஆதரிப்பாங்க
.:: மை ஃபிரண்ட் ::. said...
வாழ்த்துக்கள்..வருக வருக. :-)

------------------

எனக்கு பிடிச்ச என்னோட பதிவுகள்:

ரெண்டு கண்ணுலே உனக்கு ரொம்ப பிடிச்ச கண்ணு எது? அப்படின்னு கேட்டா நான் எதை சொல்லுவேன் (அதிகமா டிவி பாக்காதேன்னு
சொன்னா கேட்டாதானே?? கச்சாமுச்சான்னு வசனம் வருது பாரு வாயிலே!!!).

ஆனாலும், எனக்கு பிங் பண்ற மக்கள் பெரும்பாலும் கேக்கறது - மாமியார் என்ன பண்றாங்க? - அப்படின்னுதான். அதனால், எல்லோரும்
நினைவில் வைத்திருப்பது - 'மென்பொருள் நிபுணரானால்' தலைப்பைத் தவிர்த்து - இந்த மாமியார் பதிவுதான்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது