07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

Thursday, December 20, 2012

வலைச்சரத்தில் நான்காம் நாள்-காரஞ்சன்(சேஷ்)

வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம்!
இன்று நான்காவது நாளாக உங்களுடன் நான்!
கடந்த மூன்று நாட்களாக வருகை புரிந்து, பதிவுகளை படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்! என்பது வள்ளுவரின் வாய்மொழி.
ஆதலால் இன்று ஒரு போட்டோக் கவிதை ஓய்வுண்டோ எனும் தலைப்பில் பகிர்ந்துள்ளேன். (பட உதவி: கூகிளுக்கு நன்றி!)


                                                                                ஓய்வுண்டோ?
 
கயிற்றுக் கட்டில்மேல்
கால்மேல் கால்போட்டு
கனவில் ஆழ்ந்தீரோ?
மனக்கணக்கில் ஆழ்ந்தீரோ?

உழைப்பின் மிகுதியால்
உண்டான களைப்போ?
உழவுத் தொழிலின்மேல்
உள்ளத்தில் அலுப்போ?

வாயில்லா ஜீவன்களின்
வயிற்றுப் பசிபோக்க
போராடி நெல்விளைத்து-வைக்கோல்
போராக்கி வைத்துவிட்டீர்!
 
உழவே தொழிலென்று
உமைப்போல் பலருண்டு!
சார்ந்து இருப்பதிலும்
சங்கடம் மிகஉண்டு!

இருப்பவர் இத்தொழிலில்
இயந்திரம் புகுத்திவிட்டார்!
இல்லாத உழவரெலாம்
சொல்லொணாத் துயரமுற்றார்!

 வேற்று வேலைசெய்ய
விரும்பிச் செல்பவர்கள்
ஏற்ற கூலிதந்தும்-உழவை
ஏற்க வருவதில்லை!

 உழுபவன் கணக்கிட்டால்
உழக்கும் மிஞ்சாது!
உழுபவன் ஓய்ந்துவிட்டால்
உலகே இயங்காது!            

                          -காரஞ்சன்(சேஷ்)
II) படித்ததில் பிடித்தது!

தன்னம்பிக்கை
சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.
“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். “என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர். அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம். “குழந்தைகளைப் பார்த்தால் ரொம்ப பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று”. குதிரைவண்டி ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார். பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி ‘அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். “ஓ கேள்விபட்டிருக்கிறோமே! ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனா இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாக தெரிகிறதே” அப்படின்னாங்க சுவாமியோட சிஷ்யை.
இதைக் கேட்டுவிட்டு… அதற்கு பிறகு அந்த குதிரை வண்டியை ஓட்டியவர் விளக்கினார். “நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்ப கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணி கடன்களை எல்லாம் அடைக்க சிறிது நாள் ஆகும் போல தெரிகிறது. இந்த நிலைமையில் நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்த குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசூல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியை திறந்துவிடுவேன்!” என்றார்.
சுவாமி விவேகானந்தர் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் சொன்னார், “இதோ இந்த மனிதரைப் பார்? இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார்! பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்துவிட்டால் கூட சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை! அப்படின்னு சொல்லி ஆச்சரியப்பட்டார்!”.
“எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது”

(நன்றி: மீரா நீலகண்டன் அவர்களின் மின்னஞ்சல்)


III) காணொளி :


(ஒவ்வொன்றும் 5 நிமிட அளவே)  தவறாமல் பாருங்களேன்!
தன்னம்பிக்கை ஒன்றே தன் துணை என்று கூறும் இவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!

அகவிழி-பாகம்1  
அகவிழி-பாகம்2
அகவிழி-பாகம்3
அகவிழி-பாகம்4
அகவிழி-பாகம்5

நிச்சயம் அனைவருள்ளும் ஒரு தாக்கத்தை  ஏற்படுத்தினார் அல்லவா!
காணொளியைப் பரிந்துரைத்த என் மகளுக்கு நன்றி!


IV) இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்க்கலாமா?
 
1. அம்மாவுக்கு இணை அம்மாதான். திருமதி கீதமஞ்சரி அவர்களின் பதிவினைப் படியுங்களேன்!  அம்மா என்றொரு மனுஷி.
 
2. திருக்குறள் மேற்கோள்கள் அதிகம் குறிப்பிட்டு எழுதும் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவு:மனித வாழ்வில் நழுவ விடக்கூடாதது எது?
 
3. குறையொன்றும் இல்லை திருமதி லஷ்மி அம்மா அவர்களின் பயண அனுபவம் மற்றவர்கள் புதிய இடத்திற்கு/நாட்டிற்குசெல்கையில் கவனத்தில் கொள்ள வேண்டிய  பயனுள்ள விஷயங்கள்.
 
4. மார்கழிப்பூமலர்வதைப் பார்க்க கவியாழி கண்ணதாசன் அவர்களின் வலைப்பூவிற்கு வாருங்கள்! அவரின் மற்றுமொரு ஏக்கம்

அம்மா வருவாயா?

5. ரங்குவின் வழிகேட்கும் யுக்திகளைப் படிக்கடிக்க அநன்யாவின் எண்ண அலைகள் வலைப்பூவிற்கு வாருங்கள்.
 
6. T.N.முரளிதரன் அவர்களின் பயனுள்ள பதிவு!

இன்றைய பகிர்வுகள்  உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். பிடித்திருப்பின்  தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
 
நாளை சந்திப்போம்!
 
 
                                                                      --காரஞ்சன்(சேஷ்)
 
 
 

 

 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது