07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label நிகழ்காலம்- எழில். Show all posts
Showing posts with label நிகழ்காலம்- எழில். Show all posts

Sunday, October 27, 2013

பெண்களே...உலகம் உங்களுக்காகவும்....

                                       பெண்களே... உலகம் உங்களுக்காகவும்....


பெண்களும் ரோஜாக் கூட்டம்தானே....
                             
                                          வலைச்சரம் 7

மன அழுத்தம் போக்கும் வழிகள்

**   மெலடியான இசையை ரசிக்கலாம்
**  மனம் விட்டுப் பாடலாம்
** அடுத்தவரைப் பற்றி புறம் பேசுதல் தவிர்த்தல்
**  உங்களை நேசியுங்கள்
** கவலைப்படுவதால் எதுவுமே நிகழாதென்பதை உணர்தல்
**  ஈகோவை (தான் எனும் எண்ணம்) விடுத்தல்
** நாமும் சிரித்து மற்றவரையும் சிரிக்க வைக்கலாம்
** குறைந்தது 7 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் தேவை
** துன்பங்களை மனதிற்குள்ளாக புழுங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
** பரிதாப நிலையை  உருவாக்க முயற்சிக்கக் கூடாது
** தாழ்வு மனப்பான்மையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்
** மகிழ்ச்சி என்பது பணம் சார்ந்ததல்ல மனம் சார்ந்தது என உணர வேண்டும்
** பயம் விலக்க வேண்டும்
** சந்தேகம் விலக்க வேண்டும்
** மற்றவரை மன்னிப்பதால் மனது இலேசாகும்
** எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள பழக வேண்டும்
** கோபம் தவிர்க்க வேண்டும்
** பொறாமை தவிர்க்க வேண்டும்
** புதிய சூழலுக்கு பயணம் செய்யலாம்
** நடனம் ஆடுவது அல்லது ரசிப்பது
** செடி கொடிகள் வளர்க்கலாம்
** வீட்டு விலங்குகள் வளர்க்கலாம்
** பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்

வலையுலகத்தில் பல்வேறு விதத்தில் கலக்கும் பெண்களின் வலைதளங்கள்
பல்சுவை கலவை    காணாமல் போன கனவுகள்-ராஜி

ஆவேசத்தின் எதிரொலி    பூச்சரம்              

தென்றலாய் கவிதைகள் தென்றல்-சசிகலா

குட்டிக் கவிதைகள்     அன்புத்தோழி

க்விலிங்      இளைய நிலா-இளமதி

ஆன்மீகப் பதிவுகள் குலம்தரும்- ஷைலஜா
 
அனுபவப் பதிவுகள்   கண்மணி அன்போடு

பல்சுவை பதிவுகள்   கதம்ப உணர்வுகள்-மஞ்சுபாஷிணி (ஃபேஸ்புக்கில் அருமையான கவிதைகளை இங்கும் தொகுக்கலாம்)

அனுபவப் பகிர்வுகள்  கோவை2தில்லி-ஆதிவெங்கட்
 வாழ்த்துக்கள் பெண்களே !!!!

என்னுடைய வலைச்சர வாழ்க்கை இன்றோடு முடிவடைவதில்லை..ஏனெனின் நான் இணைந்துள்ள பெரும்பாலான வலைதளங்கள் வலைச்சரத்தின் மூலம் அறிமுகமானவையே... அதனால் தொடர்ந்து அதனுடன் இணைந்திருக்கத்தான் போகிறேன் பின் தொடர்பவளாக....என்னுடன் ஏழு நாள்  இணைந்திருந்து ஊக்கமளித்த அத்துணை நட்புகளுக்கும் என் நன்றிகள். இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சர ஆசிரியர் குழு சீனா ஐயா, தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

போய் வருகிறேன் நட்புக்களே.....



மேலும் வாசிக்க...

Saturday, October 26, 2013

நட்பு வட்டம்

                                                               நட்பு வட்டம்


 கண்டிப்பாய் கரை சேரும் இந்த நட்பு வட்டம்....

****
 நாட்பட்ட மன அழுத்தமோ ,மன இறுக்கமோ அல்லது மூளையின் நியூரோடிரான்ஸ்மிட்டர்களில் சுரக்கும் பொருட்களின் அளவு மாறுபாட்டாலோ மன நோய்கள் உண்டாகிறது அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஹிஸ்டீரியா (Hysteria)
     மூர்க்கமான கட்டுப்படுத்த முடியாத மன உணர்வு

ஆட்டுவிப்பு நோய்(Obsession)
      ஒருவர் மனதில் ஆதிக்கம் செலுத்துகின்ற இடையறாத கருத்து அல்லது எண்ணம்

மனத்திரிபு (Paranoia)
        சுய முக்கியத்துவம் பற்றிய திரிபுணர்வு மற்றும் தனக்கு எதிரான சதி பற்றிய திரிபுணர்வு

அதீதக் கவலை(Hypochondrial)
           தன் ஆரோக்கியம் பற்றிய அதிகமான கவலை. நன்னிலையில் இருக்கும்போது பிணி இருப்பது போன்று உணர்தலே ஆகும்

தப்பெண்ணம் (Delusion)
             மனதில் தவறான எண்ணம் கொண்டு உண்மையற்றவற்றை நம்புவது

மாறுபடுத்தி உணர்தல்(Illusions)
          எண்ணச் சிதறல்களின் தொடர்பாக பொருட்களை விபரீதமாக மாறுபடுத்தி வெளிப்படுத்துவது

மிகுபயம் (Phobia)
      பயம் காரணமாக ஒரு பொருளையோ அல்லது அந்தச் சூழ் நிலையினைத் தவிர்த்தல்.

ஒனிரோப்ரீனியா
          கனவு உலகத்தில் சஞ்சரிக்கும் நிலை

ஸ்கீஸோஃபெர்னியா
          எண்ணச் சிதறல் நோய். சமூக வாழ்க்கையிலிருந்து பின்னடைதல் ஏற்படும்

நியூரோசிஸ்
        மனதின் மாறுபாடு காரணமாக நரம்பியல் செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்படும்போது பல குறி குணங்கள் தோன்றும்

இதெல்லாம் குறைபாடெனத் தெரியாமலேயே அப்படியே விடும் போது நோய் தீவிரமாகி அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். ஆரம்ப கட்டத்திலேயே மன நல ஆலோசகரிடமோ, மருத்துவரிடமோ செல்லலாம். உடலின் குறைபாடு வலி உணர்வதால் உடனே மருத்துவரிடம் செல்கிறோம். ஆனால் மனதில் குறை ஏற்படுவது அதைவிட பெரிய வலி என்பதை ஏன் உணர மறுக்கிறோம்

****


என்  நட்பு இணைப்புகளில் எனக்குப் பிடித்த பதிவுகளின் அணிவகுப்பு..

 சந்தித்ததும் சிந்தித்ததும் -வெங்கட் நாகராஜ்

இனிமையான  ஃப்ரூட் சாலட் 

அருணா செல்வம்

குட்டிக் கதை ராணி (இப்ப கொஞ்ச நாளா குட்டிக் கதைகளை காணாமல் ஏங்கிப் போயிருக்கிறேன்)


வீடு திரும்பல்

சுய முன்னேற்றப் பதிவுகள் (Who moved my cheese - தமிழாக்கம் இன்னும் என் நினைவில்)

தமிழ்மயில் - உஷா அன்பரசு

கதைகளில் உலாவரும் அறிவான கருத்துக்கள், கவிதைகளில் செறிந்து நிற்கும் உண்மைகள்

ரஞ்சனி நாராயணன்

மருத்துவ உண்மைகள்

எங்கள் ப்ளாக்

பாசிட்டிவ் செய்திகள்

கடல்பயணங்கள்

தொழிற்சாலைகளிலே உட்புகுந்த பதிவுகள்

மின்னல்வரிகள்

 நகைச்சுவைப் பதிவுகள் (சமீபத்தில கவிதையும் எழுத ஆரம்பிச்சுட்டார் )

முத்துச்சிதறல்

சின்னச் சின்ன வீட்டுக் குறிப்புகள்

கரைசேரா அலை

இனிய கிராமத்துக் கவிதைகள்

தீபா

இயல்பான நிகழ்வுகள்

தளிர்-சுரேஷ்

குட்டி குட்டி ஹைகூக்கள்

வினையூக்கி

அறிவியல் சார்ந்த சிறுகதைகள்

மூங்கில் காற்று-டி.என்.முரளிதரன்

நிகழ்வுகள் குறித்த விவாதங்கள்


திண்டுக்கல் தனபாலன்

தன்னம்பிக்கைத் தொடர்கள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

கவிதைகள் இவரால் மட்டும் எப்படி தினமும் முடிகிறது....
 நிறுத்தி வைத்த தொடர்கதை (வாழ்வை) தொடரலாமே ரமணி சார்


இவர்களில் பலரை பலரும் அறிவோம் ... ஆனால் புதிதாக உள் நுழைபவர்கள் இந்தத் தளங்களை சென்றடையவே இந்தப் பதிவு.



மேலும் வாசிக்க...

Friday, October 25, 2013

புத்தம் புது காலை

                                                   புத்தம் புது காலை



*******

மன அழுத்தம் எனும் வார்த்தை இன்றைய அவசர வாழ்வில் சாதாரணமாகியுள்ளது. மன அழுத்தம் ஏற்படும்போது அட்ரினலின் மற்றும் கார்டிசோல் என்னும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது இருதய துடிப்பை அதிகப்படுத்தும். மீண்டும் மீண்டும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் செரடோனின் (நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடியது)எனும் ஹார்மோனின் அளவு மாறுபடுகிறது.  குருதி சுற்றோட்டம்  பாதிப்படைகின்றது. கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும் மூளையிலுள்ள செல்களின் அளவு குறையும். இதனால் ஞாபகமறதி உண்டாகும். மன அழுத்தத்தால் இருதய நோய், மன நிலை மாறுபாடு, வெறுப்பு , தூக்கம் பாதிப்பு, அதிக இரத்த அழுத்தம், தலைவலி, குடி வெறி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பாகின்றது.
மேலும் நரம்பு மண்டலமும் பாதிப்பிற்குண்டாகி அதனால் அது தன் கட்டுப்பாட்டினை இழக்கிறது. மேலும் குடலின் இயக்கங்களும் பாதிப்படைகிறது.

மனவியலின் தந்தை என்றழைக்கப்படும் ஃப்ராய்டு கொள்கைப்படி ஒரு மனிதனின் சிறு வயதில் ஏற்படும்  நல்ல நிகழ்வுகளோ, அல்லது மறுக்கப்படும் நிகழ்வுகளுக்கோ ஏற்றார் போல் மனிதனின் குண நலன் மாறுதல் ஏற்படும் என்கிறார்.  தாயிடம் கிடைக்காத அன்பு, மல ஜலம் கழிப்பதை பண்படுத்தும் காலத்தில் ஏற்படும் விரும்பத்தகாத நினைவுகள், தன்னை உணரும் காலம் தந்தையையோ, தாயையோ போட்டியாக எண்ணி மருகுதல், பள்ளியில் நடைபெறும் தாழ்மைப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் இவையெல்லாம் அவர்களின் வாழ்வில் மறக்காத நினைவுகளாக ஆழ்மனதில் படிந்து பிற்காலத்தில் அவர்களின் ஆளுமைத்தன்மையை ஆக்கிரமிக்கிறது.

மேலும் அவரின் பின் வந்த எரிக் எரிக்சன் அவர்களின் கொள்கைப்படி ஒவ்வொரு பருவத்திலுமே ஏற்படும் நல்ல செயல்கள் நல்ல ஆளுமைத் தன்மையையும், எதிர்மறை நிகழ்வுகள் விரும்பத்தகாத ஆளுமைத்தன்மையையும் ஏற்படுத்தும் என்கிறார்...  உங்களின் ஆளுமையை மாற்றிக்கொள்ளவும், குழந்தைகளின் ஆளுமைத்தன்மையை, சுய மதிப்பை உயர்த்தவும் உங்கள் தேடுதலை விரிவுபடுத்துங்கள்

******



இன்று  சொல்லப்படுவர்கள் ஒன்று புதிய எழுத்தாளர்களாகவோ இல்லை என்றால் ஏனோ அவ்வளவாக அங்கீகரிக்கப்படாமல் இருப்பவர்கள்.... அதனால் இவர்களின் பதிவுகள் குறித்த விமர்சனம் இல்லை ...


.இப்படிக்கு இளங்கோ  
                 இவரின் பதிவில் நூல் விமர்சனங்களும், இயல்பான நிகழ்வுகளும் கொண்டது.

பலகை-கீர்த்திகாதரண்
                          கல்வி குறித்த பதிவுகள் அதிகம் உள்ளது

சிகரம்-பாரதி
             
                    எல்லா விதமான செய்திகளையும் தொட்டுச் செல்லும் பதிவுகள்

கீதாவின் வண்ணக் களஞ்சியம் 

              உள் மன தேடலான பதிவுகள்

கி.மு.பக்கங்கள்

                  நூல் மற்றும் எழுத்தாளர்கள் குறித்த பதிவுகள்
நினைவுகள்-அபயா அருணா


                     நிகழ்வுகள் குறித்த நினைவுகள்

உங்கள் எழுத்துலகம் அருமையானது வாழ்த்துக்கள்.....


இவங்கெல்லாம் நல்லா எழுதிக்கொண்டு இருந்தாங்க இப்ப கொஞ்ச  காலமா ஏனோ எழுதுவதை நிறுத்தியிருக்காங்க....
கண்டிப்பாக திரும்ப வருவார்கள் எனும் நம்பிக்கையில்....

நினைவில் சில.... கனவுகள்

                அனைத்து விதமான பதிவுகளும் சமையல் குறிப்பு உட்பட (முக்கியமா பாலாக் கீரை)

வரிக்குதிரை-அருண்குமார்

         சமூகம் சார்ந்த குறிப்பாக மலையகத்திலிருந்து தொடர்...
 
என் ஜன்னலுக்கு வெளியே-நிரஞ்சனா

              இளைய தலைமுறை பதிவுகள்

மழை கழுவிய பூக்கள் -அதிசயா

                 இனிய கவிதைகள்

வரலாற்றுச்சுவடுகள்

                      அறிவியல் ரீதியான சூழல் பதிவுகள்


உங்கள் எழுத்துலகம் தொடர வாழ்த்துக்கள்





மேலும் வாசிக்க...

Thursday, October 24, 2013

சமூகம் சிந்திப்போம்

                                                             சமூகம் சிந்திப்போம்





****
படித்தது..

அப்பத்தாவோடு கடலைச் செடி பிடுங்க காட்டுக்குப் போவோம். கொத்துக் கொத்தாய் செடிகளைப் பிடுங்கி மடி நிறப்பும் அப்பத்தா ஓரிடத்தில் மட்டும் செடிகளைப் பிடுங்காமல் வட்டமாய் கோடு கிழித்து நகர்ந்து போவாள். பிறிதொரு நாளில் அறிந்து கொண்டோம் பிடுங்காமல் விட்ட கடலைச் செடிகளின் நடுவே காடைக் குருவி முட்டைகளை வைத்திருந்தன என்பதை, கடலைச் செடிகளை தியாகம் செய்து காடை முட்டைகளைப் பாதுகாத்த அப்பத்தாவின் கருணை வழியும் முகத்தோடு கொஞ்சம் பேரன்களும்,பேத்திகளும் இருக்கவே செய்கிறார்கள். கடந்த ஆண்டு உத்தர்காண்ட் மானிலத்தில் பள்ளி ஒன்றில் ஓங்கி வளர்ந்த மரமொன்றை வெட்டிச் சாய்க்க அம்மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த 260 கொக்குகளின் குஞ்சுகளும் பொதைபொதையாய் நசுங்கிச் செத்தன. அதைக் கண்டு பதறி அழுத குழந்தைகளின் தோய்ந்த ஈரத்தில் தான் சூழலியலம் குறித்து எழுதியும் பேசியும் வருகிறேன்
- எழுத்தாளர் சதாசிவம்-இறகுதிர் காலம் நூல் முன்னுரையில்

****                            

இன்றைக்கு நாம சந்திக்கப் போறது சமூகம் பற்றி மட்டுமே சிந்திக்கும் வித்தியாசப் பதிவர்கள்...இவர்களில் சிலர் ரொம்ப குறைவாத் தான் பதிவிடறாங்க ..ஆனால் இவங்களோட பதிவை தொடர்ந்து படிப்பேன் .பல விஷயங்கள் தெரிந்து கொள்ளும் இல்லை.. இல்லை ...கற்றுக் கொள்ள வாய்ப்பு. நம்மை ஏதாவது ஒரு விதத்தில் சிந்திக்க வைக்கும் இவர்களின் பதிவுகள். இவர்களின் பதிவுகளுக்கு பெரும்பாலும் நான் மறுமொழி இடுவதில்லை..அவர்களின் பதிவுகளுக்குச் செல்லுங்கள் ஏன் என்று புரியும்...

இவர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர்,கவிஞர் ஆகிய அடையாளங்களோடு ஒரு சூழல் போராளி....
 

பில் கேட்ஸ் - தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் எண்ணற்ற பேருக்கு வாழ்வளித்துக் கொண்டிருப்பவர்.இந்திய இளைஞர்களின் முன்மாதிரி தேர்வு. இந்த இருக்கப்பட்ட மகராசன் ஏன் ஒரு வாழைப்பழப் பஞ்சாயத்துக்கு வரவேண்டும்..? காரணம் இருக்கிறது.

இவரின் பதிவுகளில் அருமையான மொழிபெயர்ப்புகளை காணலாம் ஒவ்வொன்றும் உங்களை ஒவ்வொரு சமுதாய எல்லைக்கு அழைத்துச் செல்லும்.
அந்தக் காலத்து கிராமத்து வாசனை உணர வேண்டுமா... இந்த கிராமத்துக்குப் போலாமே

எவ்வளவோ மழைக் கவிதைகள் படித்திருப்போம்... இவரின் கைவண்ணத்தில் உள்ள வித்தியாசம் உணருங்கள்.....



. இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் சமூக ஏற்றத்தின் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் செல்லும்..

 நாம் சாப்பிடும் போது நாம் உண்ணும் உணவு எங்கு கிடைக்கிறது? எப்படி கிடைக்கிறது? அதன் விலை எப்படி யாரால் நிர்ணயிக்கப்படுகிறது? அதனால் நம் உணவின் விலையில் என்ன மாற்றம் ஏற்படுத்தப்போகிறது ? என்பன போன்ற கேள்விகள் நம்முள் எழுந்துள்ளதா? இந்தத் தொகுதியைப் படியுங்களேன்.... இந்தக் கேள்வியுடன் பதிலும் பதிவிலேயே கிடைக்கும்...


இயற்கை கொடுத்துள்ள கொடையான காடுகளை அழித்தால் நமக்குத்தான் எவ்வளவு பாதிப்பு... இப்போதே அடைந்தாக வேண்டும் எனும் நம் எண்ண வேகத்தால் எப்படி அதனை அழிக்கிறோம் இதற்கு உலக அரசியலின் பங்கு என்ன என்பதையும் இந்தப் பதிவில் படியுங்கள்...  நாம் சூழல் அக்கறையாளராக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நம் வீட்டின் முன் வைக்கும் மரம் மட்டும் போதாது...



இவருடைய  நிலைத்தகவல் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமூகக் கதை பேசும்.

 நாம் ஒரு கம்ஃபர்ட் ஸோனில் அமர்ந்து கொண்டு யோசித்தால் சமூகம் எந்த பிரச்சனையும் இன்றி சென்று கொண்டிருப்பதாய்த் தான் தோன்றும். அதற்காக சமூகத்தின் கடினத்திற்குள்  புகுந்து செல்ல வேண்டுமா என்றால் தேவையில்லை . இது போன்ற புத்தகங்கள் வழி காட்டும்.. இந்தப் புதினத்தை  நான் வாசிக்கவில்லை ...வாசித்தறிய இந்த புத்தக விமர்சனம் பயன்படும்... நானெல்லாம் விமர்சனம் எழுதுவதென்றால் அதிலுள்ள வரிகளைக் கையாண்டு முடித்து விடுவேன்.. இது போன்ற எழுத்துக்களைப் படிக்கும் போதுதான் உணர்வாலும், உள்ளத்தாலும் எழுச்சி பெறுவோம்.


கல்வி வியாபாரப் பொருளாக்கப்பட்டிருப்பது நமக்கு தெரிந்தாலும் அதன் தெரியாத சில கருப்பொருளைக் காட்டியிருக்கிறார் இந்தப் பக்கத்தில்...




இவரின் பதிவுகளைப் பலர் படித்திருப்பர். எழுத்து வடிவத்தால் ஈர்க்கப்பட்டுத்தான் படித்தேன். இதை எப்படி சமூகத்தோடு இணைத்தேன்... ஒவ்வொரு பதிவிலும் உள்ளீடாக இருக்கும் சமூக நிர்பந்தங்களும், ஆழமான சமூக முரண்பாடுகளையும் சொல்வதாக இருப்பதே இவரின் பதிவின் சிறப்பு. இது இப்படித்தான் இதனை மாற்றுவதும் , ஏற்றுக்கொள்வதும் வாசகனாகிய உந்தன் பொறுப்பு என்பதாகத் தான் இவரின் ஒவ்வொரு பதிவையும் உணர்கிறேன். இவரின் பதிவுகளில் வரும் புகைப்படங்களால் ஈர்க்கப்படாதோர் மிகக் குறைவு... அதைப் பார்க்கும் போது உள்ளே ஆழமான விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது அதனால் இப்போது உங்கள் மன நிலையை நிதானப்படுத்திக்கொள்ளுங்கள் என்பதாக உணர்கிறேன் நான்.

இந்த இரண்டு பதிவுகளைப் படியுங்கள்..மற்றதை நிறுத்தாமல் படித்து விடுவீர்கள்....



இதையெல்லாம் படிக்கும் போது  எனக்கே கொஞ்சம் சுமையாகிப் போனதான உணர்வு....


இவருடைய இந்தப் பதிவின் வாயிலாகத் தான் இவரின் மற்ற பதிவுகளுக்குச் சென்றேன். நானும் தூப்புக்காரி குறித்து எழுதினேன் . ஆனால் இந்த விமர்சனம் இன்னொரு தூப்புக்காரியைப் படித்த உணர்வு கொடுத்தது...


அடுத்து....


சமூக விழிப்புணர்வைக் கற்கும் அதே நேரத்தில் அப்படியான மக்களை இனங் கண்டு பாராட்டி வருகிறார் ஒருவர் . இவரையும் இவர் பதிவுகளும் வலைதளத்தில் பிரபலம் என்றாலும் நல்ல விஷயங்களை எத்தனை முறை படித்தாலும் ஏதோ ஒரு உந்துதல் நமக்குள் ஏற்படுவது நிஜம் . அப்படியான இவரின் இந்தப் பதிவுகளைப் படிக்கலாமே....



மனிதர்களைப் படிப்போம்...மனிதம் அறிவோம்...


 நாளை சந்திப்போம்.....



மேலும் வாசிக்க...

Wednesday, October 23, 2013

இன்று கவிஞர்கள் தினம்

இன்று கவிஞர்கள் தினம்...




இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததுமே உங்கள் மனதில் ஏதேனும் வரிகள் ஊற ஆரம்பித்துவிட்டதா ...அப்போ நீங்க கவிஞர் தாங்க....

 இது எங்க ஊரு மக்களுக்காக இயற்கை அளித்த கொடை சிறுவாணி ஆறு... இதனைப் பாதுகாக்கா விட்டாலும் சிதைக்காம இருக்கணுங்க... எதிர்கால சந்ததியினருக்கு நம்மால சேமிக்க முடியற உண்மையான சொத்து இது தானுங்களே....
****
படித்தது...

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.
தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.
எப்படியெல்லாம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது மற்றும் எப்படி சேமிப்பது , எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்போமா....
****

 நண்பர்கள் தினம், காதலர்கள் தினம் அப்படிங்கற மாதிரி கவிஞர்கள் தினம்னு ஒன்று இருக்கலாம். எனக்குத் தெரியலை...ஆனா இன்னைக்கு இந்த பதிவுல அவங்களோட தினம்...
இன்று சில கவிஞர்களைப்  பார்ப்போம்.



ப.தியாகு    இவரின் கவிதைகளோடு தான் படித்த  நல்ல கவிதைகளையும் பகிர்ந்து கொள்கிறார். இயல்பான கவிதைகள் அனைத்துமே...சின்ன வரிகளில் ஒரு ஈர்ப்புடனும்...

இதோ உங்கள் வாசிப்பிற்காக ஒன்று....


 குருச்சந்திரன் கொஞ்ச மாதமாக எழுதாமல் இருந்த இவர் தற்போது எழுத ஆரம்பித்துள்ளார் வாழ்த்துக்கள். இவரின் சமூகக் கவிதைகளில் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப் போன்ற பாவனை கையாளப்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதோ படித்துப் பாருங்கள்.


 நம்மை  மலரும் நினைவுகளில் கொண்டு செல்லும் இந்தக் கவிதை...



இந்திரா கிறுக்கல்கள்  இந்திரா இம்சிக்கிறேன் என்று  அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர் கவிதைகள் இம்சைதான். இவரின் சமூகக் கவிதைகளின் வீரியம் என் இரவுத் தூக்கத்தைக் கெடுத்தது நிஜம்.  எங்கிருந்து வருகிறதோ இந்த வரிகளெல்லாம் இவருக்கு என எப்போதும் நினைப்பதுண்டு...

இதோ  சான்றுக்கு ஒன்று


எங்கேயும், எப்போதும், ஏதோ ஒரு தோழியின்  குமுறல் இதோ....



வெற்றிவேல்....இரவின் புன்னகை  இவரின் கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகள்... அவற்றிற்குரிய இலக்கணம் மாறாமல் அப்படியே... ஆனாலும் வித்தியாசமான இந்தக் காதல் நம்மை ஈர்க்கத்தான் செய்கிறது....இப்படியொரு காதலைப் பார்க்க நமக்கும் ஆசைதான்....

மற்றுமோர் ஜென்மம் உண்டெனில்   இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள். புரியும்.

மேலும் களப்பிரர் குறித்த கட்டுரை நிஜமாகவே நமது தேடுதலுக்கு தீனி போட்டே செல்கிறது தொடருங்கள்....


இளஞ்சேரல்...
 நல்ல எழுத்தாளர்.... மூன்று புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்...
இவர் முக நூலில் நிறைய கவிதைகள் பகிர்வார். இலக்கிய வாசனை கலந்ததும், கிராமிய மணம் கமழ்வதுமாய்..... ஆனால் வலைப் பக்கத்தில் பல்வேறு புத்தகங்களை விமர்சனம் செய்து வருகிறார்.... இடையே சில கவிதைகளும்...


கவிதைகளை நீங்கள் படித்து உணரவே வரிகளை நான் கையாளவில்லை....

எல்லாக் கவிதைகளையும் படித்து ரசிச்சீங்களா.... நாளை சந்திப்போம்.....








மேலும் வாசிக்க...

Tuesday, October 22, 2013

எங்க ஊர்க்காரங்க....

                                                     எங்க ஊர்க்காரங்க......





எங்க ஊரு கோயம்புத்தூருங்கோ.... இந்த பஸ் ஸ்டேண்ட்ல இறங்கி போனைப் போடுங்...எங்க ஆளுங்க கவனிக்கற கவனிப்பை எப்பவும் மறக்க மாட்டீங்க... என்னங்  நாஞ் சொல்றது  நிசந்தானுங்களே கோவை மக்களே...


தினமும் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு பின் வலைப்பதிவர்கள் குறித்து பகிர்கிறேன். இங்கு நான் அறிமுகப்படுத்துகிறேன் எனும் வார்த்தை பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இங்கு பகிரப் போகும் பலர் உங்களுக்கு அறிமுகமானவர்களாயிருப்பர். சிறந்த எழுத்தாளர்களாகவும் இருப்பர். அவர்களை கற்றுக்குட்டியான நான் அறிமுகப்படுத்துகிறேன் என சொல்வது எனக்குச் சரியெனப் படவில்லை.அவர்களின் எழுத்துக்களில் எனக்கு பிடித்த சில பக்கங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே....

***   
வலைப்பதிவில் கருத்துக் கூற புதிதாய் வரும் நண்பர்கள் அவர்களின் வலைதளத்தின் பெயரையும் அங்கேயே பதிவு செய்துவிட்டால் உங்களைத் தொடர வசதியாயிருக்கும்...என்னைப் போன்ற யாகூவில் தொடர்பிலிருப்பவர்கள் கூகுள் ப்ளஸ்ஸில் நுழைந்தால் ஒரே கன்பியூசன்ஸ் ஆஃப் அமெரிக்கா.... யாரையும் பின் தொடர முடியாமல் போகிறது....

காட்டு விலங்குகள் அழிவதால் நமக்கு என்ன என்பவரா நீங்கள்? ஒரு பெரும் உயிரினம் முற்றிலும் அற்றுப் போனதால் வளமான சமவெளிப் பகுதிகளைத் தாண்டியுள்ள பிரேசிலின் கிழக்கு அமேசான் பகுதியில் பாஸ்பரஸ் 98 சதவிகித இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரினங்களும் தாவரங்களும் வளர பாஸ்பரஸ் ஊட்டச்சத்து மிகவும் அவசியம். பாலூட்டிகளில் மிக அதிகமாக உள்ள இரண்டாவது மிகப் பெரிய கனிமம் பாஸ்பரஸ். தாவரங்களில் உயிரோடு உள்ள ஒவ்வொரு செல்லிலும் அது அவசியம் இருக்க வேண்டும். உயிரினங்கள் அற்றுப் போவதால் ஊட்டச் சத்து குறைபாடு ஏற்படும்.
***

எப்பவுமே  நம்ம ஊர்க்காரங்க எனும் போது ஒரு தனிப்பாசம் ஏற்படுவது இயல்பு...எனக்கும் அப்படித்தான்.....அப்படியாக  கோவை நட்புக்களின் பதிவுகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன்....

கோவை. மு,சரளா .... இவரின் கவிதைகளையும், கட்டுரைகளையும் படித்திருப்பீர்கள்... சமூகக் கருத்துக்களும், காதலும் இவரின் கவிதைகளின் பார்வையாய் இருக்கும். சமூகக் கவிதைகளில் இருக்கும் கோபமும் , அதன் வீச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்களும் படித்துப் பாருங்கள்...

"ஒவ்வொரு முறையும்
உயிர்ப்பிக்கப் படுகிறேன்
பிணமாவதற்கான சாத்தியங்களோடு" என்ற வரிகளுடனான
"யுத்தத்தில் வீசப்பட்ட வார்த்தைகளில் 
இருந்து கசிகிறது அழுகிய பிணத்தின் வாடை 
உற்று பார்க்கிறோம்  அதன் 
ஓரங்களில் நெளிகிறது புழுக்கள்"
நல்லவர்கள் போர்வையில்
வல்லூறுகள் பறக்கும்
சிவந்த வானில்
சிட்டுக்குருவிகளாய் நாங்கள்


இவரைத் தெரியாதவங்க ரொம்ப குறைவு...ஆனா இவரின் உணவையும், சுற்றுலாவையும் தாண்டி உணர்வாளனாக எழுதியுள்ள இரு பதிவுகள் இதோ...




இவரின் சின்ன சின்னக் கவிதைகளிலும் , கட்டுரைகளிலும் நிரம்பியிருக்கும் சமூக அக்கறை எனக்கு மிகவும் பிடிக்கும்

சான்றுக்கு இதோ ...

இந்தக் கவிதைகள்...
தனக்குத் தானே ஏணியாய் இருப்பவனைப் பாருங்கள்...

அதிகாரமே அலங்கோலப்படுத்தும் கொடூரங்களை இங்கே தோலுறித்துக் காட்டும் கவிதை....



இவரோட பதிவுகளைப் படிக்கும்போதெல்லாம் இதையெல்லாம் தேட வேண்டும் எனும் இவரின் தேடல் எனக்கு ஆச்சரியத்தையும், அவரின் ஆர்வம் 
குறித்த கேள்வியையும் எனக்குள் எப்போதும் ஏற்படுத்தும். ஏனெனில் அவரின் பணிக்கும், தேடலுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான். இந்த அறிவை நாமெல்லாம் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு....

சான்றுக்கு சில பதிவுகள்....





இவரோட பதிவுகளும்  நிறைய பேருக்கு பரிட்சயமானதாகத்தான் இருக்கும். இவரின் வித்தியாசமான எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். முதலிலெல்லாம் ஆனந்தவிகடன் சினிமா விமர்சனம் படிப்பது போல் இப்போ ஆவியோட விமர்சனங்கள்... எல்லாவற்றையும் இங்க லிங்க் கொடுக்க முடியாதே...அழகா தொடர்ந்திட்டிருந்த தொடர்கதையைக் இப்போ காணோம்... தொடரும் எனும் நம்பிக்கையோடு....


 நகைச்சுவையாய் அவர் அவருடன் பயணித்தது குறித்து எழுதியிருப்பதைப் பாருங்க.... குழம்பிட்டீங்களா ஆவி ஆவியைச் சந்தித்ததைச் சொல்கிறேன்...


 நிகழ்வை விட புகைப்படங்கள் உங்களை ஆவியுலகிற்கே அழைத்துச் சென்று விடும்.


அதே போல முக நூல் பக்கத்தில் கவிதைகள் எழுத ஆரம்பிச்சிருக்கார்.. சின்னதா அழகா .... அதோட தொகுப்பை வலைப்பதிவிலும் போடலாம் ஆவி...


இவரின் பதிவுகள் பெரும்பாலும் சினிமாவை நோக்கியே இருப்பதால் அனைத்தையும் நான் படித்ததில்லை. ஆனாலும் இவரின் இந்தப் பதிவைப் படித்த பின் தான் இந்தப் படத்தை சென்று பார்த்தேன்...

அதிலும் இந்த வரிகள்...
இங்கிலிஷ் விங்கிலிஷ்’  
என்னைப்போன்ற 
அலட்சிய கணவன்களுக்கு,
செலுலாய்ட்  போதி மரம்


அதே போல வெளி நாட்டுப் படங்கள்  பார்க்க வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டும் இவரின் விமர்சனங்கள். இதுவரை பார்த்ததில்லை என்பது வேறு..இருந்தாலும் இவரின் பதிவே படம் பார்த்த திருப்தியளிக்கும்

அதில் ஒன்று....

 நீங்களும் படித்துப்பாருங்கள்... ஆர்வம் தானாக வரும்....

இன்று இவர்கள் போதுமென்று நினைக்கிறேன்.... நாளை சந்திப்போமா.....

மேலும் வாசிக்க...

Monday, October 21, 2013

இந்த வாரத்தில் உங்களுடன் நான்.....


                                     இந்த வாரத்தில் உங்களுடன் நான்.....


                                      





தட்டில் பூக்களைக் கொட்டி வைத்து வரவேற்பார்கள்... ஏதோ என்னால் முடிந்தது இந்த ஒற்றைப் பூவைக் காண்பித்து வரவேற்கிறேன்....


வலைச்சர ஆசிரியப் பணிக்கு என்னை அழைத்த  சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றிகள். 

என்னைப் பற்றி வலைச்சர அறிமுகத்திலேயே அறிந்திருப்பீர்கள். கல்லூரிக் காலங்களில் பத்திரிக்கைகளில் எழுதுவதில் இருந்த ஆர்வம் காரணமாய் கல்லூரி தனிச்சுற்றான "குயிலிசை" யில் இரண்டாண்டுகள் ஆசிரியர் குழுவில் இருந்தேன்.எழுத்துலகில் என் ஆர்வத்தை உணர்ந்த  என் தோழி வலைப்பக்கத்தில் எழுதச் சொன்னாள்.  அப்படியாக எல்லோரும் மறந்து போன பெரியாரை அவரின் கடவுள் மறுப்பு எனும் கொள்கையல்லாமல் மற்ற கொள்கைகளும் தெரிய வேண்டும் என்பதாக அவரைப் பற்றி எழுதி வருகிறேன். வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்த என்னை "ஆனந்தம்" மாத இதழில் மக்கள் தொடர்பாளராக பணியாற்ற அழைத்தார்கள்... வலைத்தளத்தால் எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு. ஆறு மாதங்களுக்குப் பின்  நிர்வாகக் காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது அந்த இதழ். இன்னமும் இணைய இதழ் ஆரம்பிக்க வேண்டும் என் ஆர்வம் என்னுள்ளே கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதை என் நண்பர்கள் அறிவார்கள்..

ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் சமூக வேலைகளைச் செய்ய என் பார்வையைத் திருப்பிய தருணம் இதோ வலைச்சர  ஆசிரியர் அழைப்பு.   நம் ஆழ்மன  ஆசைகள்  ஏதாவது ஒரு விதத்தில் நிறைவேற்றப்பட்டுக்கொண்டுதான் இருக்குமோ? அதனால் தான் நேரமின்மை எனும் போதும் நிராகரிக்காமல் நேரம் கேட்டு பெற்றுக் கொண்டேன்.   அதற்கு இசைவு தெரிவித்த சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.

       "தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
    தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்".... எனக்குப் பிடித்த பாடல் வரிகள்... அப்படியான என் தேடலில் நான் சந்தித்த  ,பாதித்த  நிகழ்வுகளை பிப்ரவரி 2012 லிருந்து பகிர்ந்து கொள்கிறேன். என் வலைப்பக்கம் குறித்து பல நண்பர்களிடம் தெரிவித்த கிட்டத்தட்ட மக்கள் தொடர்பாளராக இருந்த  நண்பர் சுப்புவிற்கும் , என் ஆர்வத்தை ஊக்குவிக்கும் என் கணவருக்கும் , என் பக்கத்தில் பல மாற்றங்களை அவ்வப்போது செய்து கொடுக்கும் என் மகன் முகிலுக்கும் என் நன்றிகள்.

 நானாக எழுதிக் கொண்டிருந்த என்னை வலைப்பதிவர்கள் இணைப்பில் கொண்டு வந்தவர்கள் சங்கவி  , கோவை நேரம்  இருவருக்கும் என் நன்றிகள்.
அக்டோபர் மாதம் 2012 -ல் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியவர் சிவஹரி அவர்கள். அவருக்கும் என் நன்றிகள். என் சமீபப்  பதிவுகளை பலர் படித்திருப்பர் . சில பதிவுகள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதன் வாயிலாக பார்வைக்கு வந்திருக்கும் ..யாரும் படித்திராத எனக்குப் பிடித்த சில பதிவுகள் இங்கே உங்கள் பார்வைக்கு.....

 என் ஆவேசம் காட்ட முடியா தருணங்களை  எடுத்துக்காட்டிய பதிவு.  சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா

பால்ய காலத்துக்கு அழைத்துச் செல்லும் நினைவில் நின்றவை

வாழ்க்கையையும் அதற்குப் பின்னான  தேடலையும் பகிர்ந்த பதிவு... வாழ்வின் தேடல் -1

அவ்வப்போது கவிதை கிறுக்கும் எனக்குப் பிடிப்பதுண்டு . அப்படியான கிறுக்கல்களில் ஒன்று இதோ நான்.... நான்

என் தோழி கீதா இளங்கோவன் அவர்களின் வலி தரும் படைப்பு அக்ரிணைகள் அதையும் கண்டு  திரு நங்கைகளின் வலி உணருங்கள். அவர்களை சமூகத்தின் அங்கமாக்க நம்மால் என்ன செய்ய முடியும்? ஆவணப்படம் ஒரு பார்வை

 நாளை சந்திப்போம்.....






மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது