07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மஞ்சுபாஷினி. Show all posts
Showing posts with label மஞ்சுபாஷினி. Show all posts

Friday, February 14, 2014

அன்பின் பூ - ஐந்தாம் நாள்

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்
காரியத்துக்காக காதல், பணம் பார்த்து அழகுப்பார்த்து சொத்துப்பார்த்து வரும் காதல் நிலைப்பதில்லை.  எதையும் விட்டுக்கொடுத்து காதலை தக்கவைத்துக்கொள்ள முனைவோர் காதல் கண்டிப்பா நிலைக்கும். காதலை விட்டுக்கொடுத்து வேறு எதைப்பெற?  இப்ப வரும் சினிமாவில் ஸ்கூல் போகும் பிள்ளைகள் கூட காதல் கடிதம் கொடுக்க தொடங்கிவிடுகிறார்கள். இதைப்பார்த்து பிள்ளைகளும் கற்றுக்கொள்கிறார்கள்…சினிமா, சீரியல் செய்யும் வேலை இது. காதல் வரும்போது வரட்டும். அதுவரை பெற்றோர் மனதை புண்படுத்தாமல் படிப்பதில் கவனத்தை செலுத்தி நன்றாக படித்து எதிர்க்கால வாழ்க்கையை திட்டமிட்டு அதன்படி வேலையில் அமர்ந்து வாழ்க்கையை ஜெயித்தால் காதல் தேடி வரும் நம்மை.

நிறைய படங்களில் காதலன் காதலி சேர நிறைய பாடுப்பட்டு அடி வாங்கி வீட்டில், காதலர்களுக்குள் ஈகோ, சண்டை கோபம் டூயட் செண்டிமெண்ட் இப்படி எல்லாமும் முடிந்து இறுதியில் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் அதோடு படம் முடிந்துவிடும்.  அதனால் தான் பிள்ளைகளுக்கு காதல் என்றால் வெறும் சந்தோஷம் மட்டுமே என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். உண்மையான காதல் கல்யாணத்தில் முடியவேண்டும். ரகசிய திருமணமாகவோ, அல்லது ரெஜிஸ்ட்ரார் துணைக்கொண்டோ அல்ல. பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணத்தில் முடிந்து அதன்பின்னும் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தது போல் நேசித்து வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை காதல் இருக்கவேண்டும் இருவரின் மனதிலும்..

காதல், அதன்பின் கல்யாணம், அதன்பின் குழந்தைப்பெறுதல், குழந்தை வளர்ப்பு, வளர்ந்த பிள்ளைகளுக்கு கல்யாணம், மூப்பு, இப்படி வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் காதல் உயிர்த்து இருக்கவேண்டும் இருவர் மனதிலும்…உடன் இருக்கும் உறவுகளும் புதிதாய் சேரலாம், இருக்கும் உறவுகள் மறையலாம். ஒரு சில விலகலாம். ஆனால் இறுதி வரை நிலைத்து நிற்கும் உறவு நேசம் பிறாந்த இரு உறவுகள் மட்டுமே.. ” உனக்கு நான் எனக்கு நீ “ என்று நேசிக்கும் இரு உள்ளங்கள் மூப்பு வந்து கண் மங்கி காது கேட்காமல் கைக்கால் நடுக்கத்திலும் கைவிடாது காதலை பொத்தி வைத்திருப்பார்கள் எங்கோ ஒருசில உண்மையான காதலர்கள் கணவன் மனைவியாக. இது தான் காதல்.

காதல் என்றால் என்ன? க்ளாஸ் கட் அடிச்சிட்டு சினிமா பார்க் பீச் சுடும் வெயிலில் சுற்றுவதா?  பணமும் அழகும் இருப்பவரை பார்த்து வருவதா? எதிர்ப்பார்ப்புகள் நிறைய வைத்துக்கொண்டு பகிரப்படும் காதல் சீக்கிரமே பிசுபிசுத்துவிடும்.

உனக்கு பிடிச்சது எனக்கும் பிடிக்கும்,  இதுவரை நிற்கவேண்டும். எனக்கு பிடிச்சது உனக்கும் பிடிச்சாகணும். அப்படின்னு சொன்னால் அங்கு ஆளுமை தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.  நீ எப்போதும் சிரிச்சுட்டே இருக்கணும் சந்தோஷமா இருக்கணும். நான் அதைப்பார்த்து ரசிக்கவேண்டும் இது ஓகே. நீ என்னால மட்டும் தான் சந்தோஷமா இருக்கணும், என்னிடம் மட்டும் தான் சிரிச்சு பேசவேண்டும் என்று சொன்னால் அது பொசசிவ்நெஸ்.  ஆஹா நம்மை  எந்த அளவுக்கு ஆழமா காதலிச்சா இவ்ளோ பொசசிவ்நெஸ் இருந்திருக்கும் அப்படின்னு பெருமை பட்டுரக்கூடாது. ஏன்னா இந்த பொசசிவ்நெஸ் தான் பிரிவுக்கான முதல் படி.

பொசசிவ்நெஸ்ல ஆரம்பிச்சு அவக்கிட்ட பேசக்கூடாது இவக்கிட்ட இளிக்கக்கூடாது. வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம எங்க சுத்த போனீங்க? இப்படி நிறைய கேள்விகள். அதில் எழும் சந்தேகங்கள். அவர்கள் மனசு வருத்தப்படவேண்டாம் என்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் அவர்களுக்கு சாதகமாகச்சொல்லப்போய் அதுவே ஒரு காலக்கட்டத்தில் சலிப்பு ஏற்ப்பட்டுவிடும். அடச்சே இவளை காதலிச்சதுக்கு நரகத்துக்கே போயிருந்திருக்கலாம் என்ற வெறுப்பு ஏற்பட்டுவிடும். அதைவிட ஒருவரை ஒருவர் காதலிக்கும்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  கோபத்திலும் வார்த்தைகள் அள்ளி கொட்டிவிடாமல் கவனமாக மௌனம் காக்கலாம். ஏனெனில் கோபத்தில் நாம் உமிழும் வார்த்தைகளே பாம்பாய் நம்மை கொத்தும் நிலை வரலாம். சுயமரியாதையை இழக்கும் நிலை காதலில் மட்டுமல்ல எந்த உறவிலும் நட்பிலும் வரக்கூடாது.

எந்த நிலையிலும் நேசிப்பவரின் மனம் புண்படும்படியான வார்த்தைகள் கொட்டிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். கல்யாணம் எப்படி ஆயிரம் காலத்துப்பயிரோ அதேப்போல் தான் காதலும். காதல் செய்வதே கல்யாணம் புரிவதற்காக தானே? காதலித்து கல்யாணம் புரிந்து வாழ்க்கையில் வெற்றியை தொடுவதென்பது எளிதான காரியம் இல்லை. ஆனால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லையே. மனம் நிறைந்த அன்பை இனிமையான வார்த்தைகளாக வெளிப்படுத்தவேண்டும். கோபம் ஆரம்பித்து சண்டையில் முடிந்து பிரிவதற்கு தானா உருகி உருகி காதலித்தது?  ஒரு வார்த்தை பேசுமுன் யோசியுங்கள், சொல்லும் வார்த்தையினால் உங்களுக்கோ உங்களை நேசித்தவருக்கோ பலன் இருக்கிறதா என்று. உங்கள் சொற்கள் அவரை குதறிவிடும் என்றால் அமைதி காத்துவிடுங்கள். 

இந்தக்காலத்துப்பிள்ளைகள் சீக்கிரமே காதலில் விழுகிறார்கள், சீக்கிரமே ப்ரேக் அப் கூட…  இந்த இனிய நாளில் மட்டுமே எல்லோரும் அன்பாய் இருக்காமல் எல்லா நாளுமே எல்லோரிடமும் அன்புடன் இருந்து வாழ்க்கையை மட்டுமல்ல செல்லும் இடமெல்லாம் சிறப்பாக்கிக்கொள்ளுவோம். 


இன்று மனம் கவர் பதிவர்கள் சிலரை சந்திப்போமா?

காதலிக்கவில்லை என்றாலும் கவிதை வரும் என்று அழகுறச் சொல்கிறார்.

இருட்டிலும் தடம் மாறாது புன்னகை சிந்திச்செல்லும் அருமையான கவிதைகள் நிறைந்திருக்கிறது.

சீரியசான கணேஷாக இருந்து கருத்துகள் தருவதும் வசந்தாக மாறி நகைச்சுவையால் நம்மை மகிழ்விக்கிறது.

அழகிய கலைநயம் மிக்க வேலைப்பாடுகளும், பாடல்களும் இவரின் ரசனையை சொல்கிறது.

ஒவ்வொருவரின் கவிதையும் இவர் பார்வையில் எழுதி இருக்கும் விமர்சனம் மிக அருமை.

கோவை ஞானியின் புதிய நூல் தமிழ் நாகரீகத்திற்கு என்ன எதிர்க்காலம் பற்றிய மிக அருமையான கருத்து.

குட்டி கவிதைகளுடன் நிறைந்திருக்கிறது வலைப்பூ.

கோலிசோடா படத்துக்கு என்ன அருமையா விமர்சனம் எழுதி இருக்கார் பாருங்க.

சுவைக்கவும் சிந்திக்கவும் நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

காமடி நடிகர் வடிவேலுவை தன் கற்பனையில் எழுதி இருக்கார் பாருங்க எப்டின்னு.

வித்தியாசமான விளையாட்டென்று சொல்லி ஒரு கவிதை எழுதி இருக்கார்.

ஷீரடி சாய்பாபாவின் நேரடி சிஷ்யை பற்றிய அரிய பகிர்வு.

மாயர்களுக்கும் நமக்கும் உள்ள 100 தொடர்புகளைப்பற்றி சொல்லி இருக்கிறார்.

கொலையாளி என்ற சிறுகதை எழுதி இருக்கிறார் படித்துப்பாருங்களேன்.

மக்கியும் மரமாகும் கவிதை வரிகள் சிந்தனைத்துளிர்.

படங்கள் என்றாலே எனக்கு சட்டென இவர் நினைவு தான் வரும். அழகான தொகுப்பில்  உயிரோட்டத்துடன் இருக்கும் இவர் படங்கள்.

குளத்தின் குறியீட்டை கவிதை வடிவில் சொன்ன பகிர்வு அழகு.

நடிகர் சோ வின் நகைச்சுவையை ரொம்ப அருமையா பகிர்ந்திருக்கிறார்.

பாசத்தை வரிகளில் இழைந்து கிராமத்து கருவாச்சிக்கு ஒரு அன்புக்கவிதை.

எல்லா சாமியும் ஒன்னு தான் என்ற இவர் கவிதையில் ஒரு சிறப்பு இருக்கிறது.

நிலவு வந்த நேரத்தை என்ன அழகா சொல்லி இருக்கார் பாருங்களேன்.

ஒவ்வொரு படத்துக்கும் இவர் விமர்சனம் எழுதறது அட்டகாசமாக இருக்கும்.

படைப்பாளிகளின் படைப்புகளுக்கு வரவேற்புக்கொடுத்து படைப்புகளை பகிரும் அருமையான வலைப்பூ.

சந்தேகமும் நம்பிக்கையும் என்ற முரண்பாடான இரு வார்த்தைகளை வைத்து கவிதை அழகா எழுதி இருக்கார்.

அனுபவங்களை சுவாரஸ்யமாக பதிவிட்டிருக்கிறார்.

பழமையை விட்டுவிடாத புதுமை விரும்பியின் கவிதை இது.

ஒரு பகிர்வை எப்படி சுவாரஸ்யமாக தருவது என்று இவரின் இந்த பதிவை பார்க்கும்போது தெரிந்துக்கொள்ளலாம்.

இன்றைய நாள் எல்லோருக்கும் நலன்களே தரட்டும். அன்பு வணக்கங்கள்.

மீண்டும் நாளை மனம் கவர் பதிவர்களுடன் சந்திப்போம்.



மேலும் வாசிக்க...

Thursday, February 13, 2014

அன்பின் பூ - நான்காம் நாள்

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்
வயதானவர்களுக்கு வாய்க்கு ருசியாய் சாப்பிடவேண்டும் என்ற ஆசை இருக்கும். வயதிருந்த காலத்தில் தன் குடும்பத்துக்காக உழைத்து தன் உண்டியை சுருக்கி பிள்ளைகள் கல்விக்காக அவர்கள் சந்தோஷத்துக்காக தன் சந்தோஷங்களைக்கூட புறம் தள்ளி வைத்துவிட்டு வயதானப்பின் இனி என்ன அக்கடான்னு இருக்கவேண்டியது தான். வேண்டியது எல்லாம் தானாக வரும் நம் இடத்துக்கு. இப்படித்தான் ஒவ்வொரு வயதானப்பெற்றோரும் நினைத்திருப்பார்கள். 

அவர்கள் ஆசைப்பட்டு கேட்கும் உணவை எண்ணை, காரம், உப்பு சர்க்கரை மிதமாய் குறைத்து சமைத்து உண்ணக்கொடுத்துப்பாருங்கள். அவர்கள் முகத்திலும் கண்ணிலும் தெரியும் மின்னலை.. உங்கள் மனம் நிறைந்துவிடும்…

அதேப்போல் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொஞ்ச நேரம் உட்கார்ந்துப்பேச டைம் ஒதுக்கி இருப்போமா? ஓயாத வேலை தான்,  ஆனாலும் ஒரு நாளைக்கு அரைமணி நேரம் ஒதுக்கி வயதானவர்களிடம் உட்கார்ந்து அவர்களை பேசச்சொல்லி கேட்டுப்பாருங்களேன். அவர்களின் அனுபவ வாசல் திறந்து பொக்கிஷங்கள் அறிவுரைகளாக கிடைக்கும் நமக்கு.

இதனால் கண்டிப்பாக பயன் பெறப்போவதென்னவோ நாம் தான். அவர்களுக்கு? நம் பேச்சை இவ்ளோ நேரம் நம் பிள்ளை உட்கார்ந்து கேட்டானே என்ற ஆத்மத்திருப்தி. என் மனைவி, என் பிள்ளை, என் குடும்பம் அப்படின்னு மட்டும் இருக்காம வயசான அம்மா அப்பாவையும் அரவணைச்சுக்கிட்டு சந்தோஷமா வெச்சுக்கிட்டா முதியோர் இல்லம் எல்லாம் காணாமப்போய் காக்கா ஊச் ஆகிடும். அதுமட்டுமா?
வயதானவர்களை காலாற கோவில், பீச், பூங்கா இப்படி கூட்டிச்சென்றால் அங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்துக்கொண்டும் , தூய்மையான காற்றை சுவாசித்துக்கொண்டும் வீட்டுக்கு திரும்பி வரும்போது மன நிறைவோடு வருவார்கள். ராத்திரி படுத்ததும் உறக்கமும் வந்துவிடும் சீக்கிரமாக.

வீட்டில் இருக்கும் வயதானவர்களின் கனிவான அனுசரணையான பேச்சு, நாம் பிள்ளைகளை கண்டிக்கும்போதெல்லாம் வயதில் மூத்தவர்களாகிய அவர்கள் என்னம்மா இது சின்னப்பிள்ளை தானே இதுக்கெல்லாம் அடிப்பாளா? குழந்தைக்கிட்ட அன்பாச்சொன்னா கேட்டுப்பான். என்னடா கண்ணா அப்டி தானே அப்டின்னு குழந்தையிடம் கேட்டால், அட நமக்கு தாத்தா பாட்டி சப்போர்ட் பண்றாளேன்னு குழந்தைகள் குஷி ஆகிடும். நிறைய கதைகள் சொல்லச்சொல்லி கேட்கும்.

பண்போடு வளரும், நல்லவைகள் புரியும். இப்படி வளரும் குழந்தைகள் நாளை நமக்கு வயசாகும்போது நம் பிள்ளைகள் நம்மை பாரமா நினைச்சு முதியோர் இல்லத்தில் கொண்டு விடாம நம்மை மதித்து நம்மை வீட்டில் இருத்தி நம் கால்கள் கிட்ட உட்கார்ந்து நம் மடியில் தலையை சாய்த்துக்கொண்டு பேசுவார்கள் நம் பிள்ளைகள்.


ஏன்னா நம்மைப்பார்த்து வளர்கிறார்கள் குழந்தைகள். நம் ஒவ்வொரு செயலும் குழந்தைக்கு பாடமாகிறது. நம்மில் இருந்து வெளிபடும் ஒவ்வொரு சொல்லும் குழந்தை கூர்ந்து கவனிக்கிறது. அதனால….. நல்லதே பேசுவோம்… நல்லதே செய்வோம்… பிள்ளைகளிடம் அன்பாய் இருப்போம்… பெரியவர்களுக்கு மரியாதைத் தந்து அவர்கள் சொல்பேச்சைக்கேட்டு நடப்போம். முன் ஏர் செல்லும் வழி பின் ஏர். நம் வழி நம் பிள்ளைகள் நடக்கும்.. நல்ல சந்ததி வளரும்…நாட்டுக்கும் நலன் சேர்க்கும்…

இன்று மனம் கவர் பதிவர்கள் சிலரை பார்ப்போமா?

வித்தியாசமான சிந்தனைகளின் தொகுப்பு நிறைந்த வலைப்பூ.

திடம் கொண்டு போராடச்சொல்லி  தொலைந்துப்போன நாட்களை மீட்டெடுக்கும் முயற்சியாக இவரின் இந்த எழுத்து நிறைந்த வலைப்பூ.

தேன்மிட்டாய் போல் தித்திக்கும் நிகழ்வுகளை சொல்கிறார் மினிமெல்ட் ஐஸ்க்ரீம் என்னை கவர்ந்த பதிவு.

வாழ்த்துவதில் எப்போதும் முன் நிற்கும் இவரைப்போலவே இவர் பதிவுகளும் ரசனையான கவிதைகள் நிறைந்த வலைப்பூ.

தான் உணர்ந்ததை பதிவுகளாக எழுதி வரும் வலைப்பூவுக்கு சொந்தக்காரர்.

அழகிய தமிழில் பாடல் வரிகளான கவிதைகள் நிறைந்த வலைப்பூ.

பல கவிஞர்களின் அற்புதமான கவிதைகளும் தானே எழுதிய கவிதைகளும் நிறைந்த  வலைப்பூ.

சமீபத்தில் ஆவிப்பா என்ற புத்தகம் வெளியிட்டவர். ரசனையான பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

எளிய வரிகளில் கிராமிய மணம் வீசும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

அனுபவங்கள் பகிரும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

நகைச்சுவையாடு கருத்தை அழகாகச்சொல்லி செல்லும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

நம் மொழி மட்டுமல்லாது பிற மொழி படங்கள் விமர்சன பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

தனக்கு ஏற்படும் அனுபவங்களையே நகைச்சுவையாய் பகிரும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

ஜனரஞ்சக பதிவுகளால் நிறைந்த வலைப்பூ.

கோகுல் மனதில் தோன்றியதெல்லாம் பகிரும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

மௌனத்தில் கூட சப்தங்களை உண்டாக்கும் கவிதைகள் நிறைந்த வலைப்பூ.

மனதுக்கு சரி என்று பட்டதை தைரியமாக எழுத்தில் கொண்டு வரும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

வந்தாரை வாழவைக்கும் எங்கள் சென்னை என்ற வரிகளோடு இவர் சினிமாவை அலசி எழுதப்படும் அருமையான விமர்சனம் எழுதும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

அகடவிகடமாக சிரிக்கவும் சிந்திக்கவும் ரசிக்கவும் நெகிழவும் வைக்கும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

உண்மையானவன் என்றுச்சொல்லி அனுபவங்களும் நிகழ்வுகளையும் தொகுத்து பகிர்வாய் பதிந்த பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

பயனுள்ள பல அனுபவங்கள், நிகழ்வுகள் பகிர்ந்த பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

அழகிய கவிதைகள் நிறைந்த வலைப்பூ.

துறுதுறு கவிதைகளால் ரசனை பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

இவர் வலைப்பூவில் அம்மா சொன்ன கதைப்படித்தேன். மிக அருமை.

உணர்வுகளைக்கலந்து எழுதிய கவிதை தொகுப்பு நிறைந்த வலைப்பூ.

விருந்துண்ண வாங்க என்று அன்போடு அழைத்து அசத்தலான படங்களுடன் விருந்து பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

சைவ பதார்த்தங்கள் சமைத்த பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

மீண்டும் நாளை சந்திப்போம்


மேலும் வாசிக்க...

Monday, February 10, 2014

அன்பின் பூ - முதல் நாள்

அன்புக்காலை  வணக்கங்கள் எல்லோருக்கும்…

வலைச்சர் ஆசிரியராய் பொறுப்பேற்க பரிந்துரை செய்த கோபு அண்ணாவுக்கும் வாய்ப்பளித்த சீனா அண்ணாவுக்கும் என் முதல் வணக்கங்கள்.

நான் மஞ்சுபாஷிணி… என் கணவர் சம்பத்குமார், என் குழந்தைகள் விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ், அம்மா, தம்பி தீபக்ராஜேஷ் (குடும்பம்) எல்லோருடனும் குவைத்தில் வசிக்கிறேன். கதை, கவிதை, பாடல் எல்லாமே இஷ்டம் எனக்கு. மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ரசனை கண்டிப்பாக இருக்கும். ரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. இல்லைன்னா பிறந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு நொடியும் ஒரு அட்வென்ச்சர் போல் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் நாம் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போமா??? அப்ப நான் சொன்னது சரி தானேப்பா?
என் தளத்தில் நான் என் படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து நான் எப்படி உணர்கிறேன் அவர்கள் வரிகளை படித்து என்பதை என் கருத்தாய் சமர்ப்பிப்பதில் எனக்கு கூடுதல் விருப்பம்.
முதல் நாள் என்பதால் எனக்கு பிடித்த என் எழுத்தில் இருக்கும் கவிதைகள் கதைகள் கொஞ்சம் தருகிறேன்.
கதைகள்

கவிதைகள்

சமையல்கூடம்

நாளை மீண்டும் உங்களை என் மனம் கவர் பதிவுகளோடு சந்திக்கிறேன்..
அன்பு நன்றிகள் அனைவருக்கும்….



மேலும் வாசிக்க...

Sunday, October 7, 2012

நட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )


உலகில் பிறந்த ஜீவராசிகளில் இருந்து மனிதர் வரை அன்பு என்ற இழை பிணைத்திருப்பதால் தான் ஒருவரிடம் ஒருவர் நட்புடன் பழகமுடிகிறது. மனதில் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது…. நட்பாய் தொடங்குகிறது…. நிலைத்தும் நிற்கிறது… ஆரோக்கிய நட்பு….. நேர்மையான நட்பு…. உண்மையான நட்பு….. இதெல்லாம் சொல்வது ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே… அன்பு…..

நட்புக்கு வயதில்லை…. ஆண் பெண் பேதமில்லை… அழகு, அறிவு, கல்விக்குரிய தகுதி எதுவும் அவசியமில்லை…..அன்பு இருந்தால் மட்டும் தான் நட்போ உறவோ நிலைத்திருப்பது. அன்பில் விரிசல் ஏற்படும்போது தான் அங்கே நட்பிலும் உறவிலும் தூரம் அதிகமாவது. அந்த விரிசல் கூட இப்படிப்பட்ட காரணத்தால் கூட இருக்கலாம் என்பது என் கணிப்பு...

எதிர்ப்பார்ப்புகள், பொசசிவ்நெஸ், அந்த பொசசிவ்நெஸ்ஸால் ஏற்படும் சந்தேகம், கோபம், சண்டை, வருத்தம், கண்ணீர், பிரிவு...... நட்பாய் இருப்போர் மனதில் அன்பு மிகுதியாய் இருக்கும் வரை அவர்களின் குறைகள் கூட கண்ணுக்கு தெரியாது. அன்பு குறையும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட குற்றமாய், குறையாய் தெரியும். அதுவே பூதாகரமாகி விரிசல் விட்டு பிரிவுக்கு வழி வகுக்கும்...

எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்.. எதிர்ப்பார்ப்புகளற்ற பொச்சிவ்நெஸ் இல்லாத நட்பும் சரி, உறவும் சரி என்றும் அன்பு நிறைந்து நிலைத்து இருக்கும்..

அதனால் தான் சொல்கிறேன் நட்பாய் இருக்க முக்கியமான ஒன்று வேண்டும்… அது நம்பிக்கை மனதில்... நேர்மை கண்களில்….

நம்பிக்கையுடன் கைக்கோர்த்தால் நட்பும் நலமே…

ஏழு நாட்களும் என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்க பரிந்துரைத்த வை.கோ அன்பு அண்ணாவுக்கும், பரிந்துரைத்த மஞ்சுவை நம்பிக்கையுடன் ஆசிரியராய் நியமித்த அன்பு சீனா அண்ணாவுக்கும், ஒவ்வொரு நாளும் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்தும்போது தயங்காமல் சலிக்காமல் அறிமுகமானவர்களின் வலைப்பூவுக்கு சென்று அவர்களுக்கு அன்புடன் தெரிவித்த அன்பு நண்பர் தனபாலனுக்கும், இதுநாள் வரை என்னுடனே ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் அளித்து என்னுடனே பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த மனம் நிறைந்த பணிவான அன்பு நன்றிகள்.

இன்று என் மனம்கவர் பதிவர்கள் சிலரின் வலைப்பூக்களை பார்ப்போமாப்பா?




எந்த ஒரு தகவலையும் பதியும்போதும் சரி, எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை பதியும்போதும் சரி அதை தவறு இல்லாமல் மிக கனகச்சிதமாக பகிர்ந்து தமிழை நேசித்து, சுவாசித்து அதையே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் என்பது போல் வாசகர் அனைவருக்கும் அன்புடன் பகிரும் மிக அற்புதமான மனிதநேய உள்ளம் கொண்ட தி. தமிழ் இளங்கோ ஐயாவின் பதிவுகள் சில பார்ப்போமா?




இந்த கண்ணனின் படத்தை உற்றுப்பார்த்தபோது பதிவர் மாநாட்டில் எடுத்த வல்லிம்மா படத்தில் இருக்கும் வல்லிம்மாவின் புன்னகைக்கும் இந்த உள்ளம் கவர் கள்வன் கண்ணனின் புன்னகையும் ஒரே போல் தோன்றியது எனக்கு. அத்தனை அன்பும் பரிவும் வாத்ஸல்யமும் வல்லிம்மாவின் பதிவுகளில் நான் கண்டேன். எப்போதோ ஒரு முறை எங்கள் பிளாக் என்ற வலைப்பூவில் மிக அருமையாக வல்லிம்மா பாடுவதைக்கேட்டு லயித்துப்போனேன் அவரின் இனியக்குரலில். இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகள் சில பார்ப்போமா?




புராணக்கதைகள் கேட்கணும்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதிலும் கண்ணன் இடம்பெறும் அத்தனை காட்சிகளும் எத்தனை படித்தாலும் திகட்டாது. தித்திக்க தித்திக்க கண்ணன் கதைகளைச்சொன்னால் அதில் வரும் ஒவ்வொருவரையும் கதையில் காட்சிகளாக விவரிக்கும்போது நம் கண்முன் அந்த காட்சி விரிகிறது. பீஷ்மரைப்பற்றி சொல்லும்போது பீஷ்மரின் தீட்சண்யப்பார்வை, கண்ணனின் குளுமையான அழகுப்புன்னகை...அத்தனையும் இவரின் பதிவுகளில் தவறாமல் காணலாம். ரசிக்கும்படி தலைப்புகளும் அத்தனை அசத்தல். பார்ப்போமா அழகு கண்ணனின் கதைகள் கொண்ட பகிர்வுகள் சில?

சத்யவதியின் மனோதிடம் 




இவங்க முகத்தைப்பார்த்தால் என்ன ஒரு துறு துறுன்னு ஆக்டிவா இருக்காங்க.... இதே சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் இவர்களின் பதிவுகளிலும் காணமுடிகிறது. நான் மிகவும் ரசித்து வாசித்தேன் நோகாமல் வடை சுடுவது எப்படின்னு....  நான் நேற்று மாலை வடை சுடும்போது (ஆஞ்சந்எந்த ஒரு பதிவும் பதிவும்போதே அதை வாசகர்கள் விருப்பத்திற்கிணங்க சுவாரஸ்யமா தருவது இவர்களின் அழகான பாங்கு. ஆசிரியை அல்லவா... அதான் அத்தனை பர்ஃபெக்‌ஷன். 2004 ஆம் ஆண்டில் இருந்து வலைப்பூவில் அட்டகாசமாக தொடரும் இவர் பயணம் இனியும் வெற்றியுடன் தொடரவும்... சமீபத்தில் நடந்த சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்காகவும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் மேடம்..  துளசி டீச்சரின் பதிவுகள் சில பார்ப்போமா?




இவங்க வலைப்பூவில் போய் பார்த்தால் அப்பப்பா ஒரே கதம்ப மணம் தான். குழம்பு மணக்கிறது, பொரித்த குழம்பும், வயதானவர்களுக்காக இலகுவான கஞ்சியும் இன்னும் என்னென்னவோ சமையலில் அசத்தி இருக்காங்க. நிதானமா நீங்க இவர் வலைப்பூவில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பா தினம் தினம் வெரைட்டியா சமைத்து அசத்தலாம் வீட்டிலும் பிள்ளைகளுக்கு வெரைட்டியா டிபன் கிடைக்கும். நல்லப்பெயரும் கிடைக்கும். அட அப்டின்னு அசந்து போறமாதிரி சமைக்கலாம் இவர் வலைப்பூவில் இருந்து சிலவற்றை பார்ப்போமா?

கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு 




நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா.... ஹுஹும் நிலா நம்மக்கிட்ட வராது... நாம தான் நிலாமகள் வலைப்பூவுக்கு சென்று பார்க்கவேண்டும்.. அப்படி போய் பார்த்தால் அழகிய அவரின் கவிதை பிரவாகங்களும், அருமையான மருத்துவ பயன்களும், பயன் தரும் அனுபவங்களும் மிக எளிய நடையில் பகிர்ந்திருக்காங்க. அன்பு நலன் விசாரித்தலும் உண்டு . பார்ப்போமா நிலாமகளின் சில நட்சத்திர பதிவுகள் ?





தாய்மை நிறைந்த இந்த படத்தை உற்றுப்பார்க்கும்போது இவரின் அன்பு மனதையும் அறியமுடிகிறது இவர் பதிவுகளில்.... குழந்தைகளில் பலவகை இருப்பார்கள். என் பொம்மை என்னுடையது எனக்கு மட்டும் தான்... இந்தா அழாதே என் பொம்மை நீ வெச்சுக்கோ என்று கொடுக்கும்... இன்னொரு குழந்தையோ வா நாம் இருவருமே ஒன்றாய் இந்த பொம்மையை வைத்து விளையாடுவோம் சண்டையே இடாமல்... மூன்று குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை பாருங்கள்.... குழந்தைகள் தான். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தை தான்... நாம் குழந்தையை நல்லவைகளை சொல்லித்தந்து வளர்ப்பதில் தான் சூட்சுமம் அடங்கி இருப்பது. ஏன் இதெல்லாம் வள வளன்னு சொல்றீங்க அப்டின்னு என்னை கேக்காதீங்கப்பா.. இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை போய் பார்த்தால் தாய்மை நிறைந்த அன்பு பதிவுகள் நிறைய இது போல் பயனுள்ளவை இருக்கிறது.. பார்ப்போமா அவற்றில் சில?





கதை எழுதுவது, கவிதைகள் புனைவது, படம் வரைவது, சிற்பங்கள் வடிப்பது இதெல்லாம் எப்படி ஒரு கலையோ அதுபோல் சமையலும் ஒரு கலை. சமைக்கும்போது நாம் என்ன மனநிலையில் சமைக்கிறோமோ அதே போல் பண்டமும் அமையுமாம்.  நல்ல மனநிலையில் சந்தோஷமான மனநிலையில் இசையைக்கேட்டுக்கொண்டோ அல்லது பாட்டு ஹம் செய்துக்கிட்டோ (பிடிச்சப்பாட்டு அல்லது ஸ்லோகங்கள்) சமைச்சுட்டு அதன்பின் ஈடுபாட்டோடு அதை பரிமாறி சுவைப்பவர் அதன்பின் சொல்லும் வார்த்தை ஆஹா இதுவல்லவா சமையல்... இப்டி எல்லாம் நான் சொல்லவே இல்லப்பா.. ராதாராணிம்மா கிச்சனுக்கு போய் பார்த்தால் இப்படி எல்லாம் தான் நினைச்சு செய்திருப்பாங்களோன்னு நினைக்கவைத்த அளவுக்கு தத்ரூபமா அழகான படங்களோட விதம் விதமா சமைச்சு அசத்தி இருக்காங்க. நாமெல்லாம் மாவுல இட்லி சுடுவோம் தோசை சுடுவோம். இவங்க பாருங்க சட்னி எல்லாம் செய்து அசத்தி இருக்காங்க...இவரின் அசத்தலான சில பதிவுகள் பார்ப்போமா?







துரை டேனியல்.. அதிகம் எனக்கு பரிச்சயமே இல்லாத பதிவர்.. ஆனால் வலைச்சர ஆசிரியராய் நான் பணி தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து வந்து அருமையான பின்னூட்டங்கள் அளித்து ஊக்கம் தருபவர். சரி போய் தான் பார்ப்போமே இவர் வலைக்கு அப்டின்னு போய் பார்த்தால்... அட நிஜம்மாவே இவர் குடத்திலிட்ட விளக்கு தாம்பா.. அத்தனை திறமைகளையும் தன்னுள் வைத்துக்கொண்டு எத்தனை அடக்கமாக அமைதியாக வந்து பதிவுகளும் பதிவுகளுக்கு பாராட்டும் ஊக்கமும் தரும் பின்னூட்டங்களும் அளிக்கிறார்... அருமையான தலைப்புகள் தந்து பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து, அழகிய கவிதைகளை நம்முள் சிந்தனைகளை தூண்டிவிடும் இவரின் சில பதிவுகளை பார்ப்போமா?

என் பறை முழங்குகிறது 


இன்றைய நாள் மட்டுமல்லாது இனிவரும் எல்லா நாட்களும் எல்லோருக்கும் நல்ல நாளாக, வெற்றியைத்தரும் நாளாக நல்லவைகளைத்தரும் நாளாக சந்தோஷங்களைத்தரும் நாளாக (நாட்களாக) அமைய இறைவனை வேண்டிக்கொண்டு என் பணியை முடிக்கிறேன்பா..

அடுத்து ஆசிரியர் பணி தொடரும் அன்பு உள்ளத்திற்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

இன்றோடு என் பணி இங்கே முடிந்தது.... சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது.... 









மேலும் வாசிக்க...

Saturday, October 6, 2012

கோபம் - கதம்ப உணர்வுகள் ( ஆறாம் நாள்)


கோபம்…. நம் முன்னேற்றத்துக்கு முதல் தடைக்கல்…. நம்மிடமிருந்து நம் நட்பை பிரிக்கும் எதிரி…. நம் நல்ல குணங்களை எல்லாம் பின் தள்ளிவிடும் அபாயம்… நம் உடல்நலத்தை கெடுக்கும் நோய்…
கெட்டகோபம் வந்துரும் ஆமா சொல்லிட்டேன்... கோபத்தில் நல்ல கோபம் கெட்ட கோபம் எதுவும் இல்லை. கோபத்தினால் நஷ்டங்கள் மட்டுமே ஏற்படுவதுண்டு.

கோபத்தை கட்டுப்படுத்தினாலோ…. அது இன்னும் கொடியது…. கோபம் அந்த ஷணம் அடக்கினாலும் அது நீறுபூத்த நெருப்பாய் மனதில் வன்மத்தை பெருக்கும்…. பிபி அதிகரிக்கும்…. உடல்நலம் மோசமாகும்.

ஷண நேர கோபத்தினால் கொலைகளும் நிகழ்ந்ததுண்டு. பின் சிறையில் தன் செயலுக்கு வருந்தியவரும் உண்டு… கோபம் வரும்போது கோபம் ஏற்படுத்தியவரிடம் இருந்து நகர்ந்துவிடுங்கள்.

கட்டுப்படுத்தும் கோபம் என்றாவது எதிர்ப்பார்க்காத நேரத்தில் நம்மையே அறியாமல் ஒருவர் மேலிருக்கும் கோபம் இன்னொருவர் மேல் திரும்பும்… அதுவும் அடக்கிவைக்கப்பட்ட கோபம் இருக்கிறதே அது அடக்கி வைத்து வைத்து அடக்கமுடியாத சூழ்நிலையில் சீற்றம் அதிகமாகி எதிராளியின் மனதை காயப்படுத்திவிடும்…

கோபத்தில் சிதறப்படும் வார்த்தைகளின் வீரியம் கொடியது. நல்ல உறவை சிதைத்துவிடும். நல்ல நட்பை பிரித்துவிடும்…. கோபத்தினால் சாதிக்கப்போவது ஒன்றுமே இல்லை.. கோபத்தில் இன்று நாம் வார்த்தைகள் உமிழ்ந்துவிட்டு பின்னொரு நாளில் அவரை நேருக்கு நேர் காணும்போது நாம் உதிர்த்த வார்த்தைகள் அவர் மறந்திருந்தாலும் நமக்கு நினைவுக்கு வந்து தர்மசங்கடமான ஒரு நிலை ஏற்பட்டு சிரிக்கவும் முடியாமல் இக்கட்டு ஏற்படும்...

கோபத்தினால் ஏற்படும் நம் உடலில் அசௌகரியங்களை இங்க குவைத்ல பிஸ்வரூப் ராய் சௌத்ரி அப்டின்னு ஒருத்தர் மைண்ட் பாடி பேலன்ஸ்ட் செமினார் எடுத்தார். அப்ப சொன்னார் கோபம், ஸ்ட்ரெஸ், டென்ஷன், அதீத வெறுப்பு இதனால் நமக்கே தெரியாம நம் உடலில் வயிற்றின் உள் மென்மையான சுவற்றில் ரத்தக்கசிவு ஏற்படுகிறதாம்.

உடலையும் மனதையும் சாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்….உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு நல்லதும் இருக்கிறது. கோபப்படுவதால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி சீக்கிரமே முதுமை வந்துவிடுமாம் அவசியமா சொல்லுங்க? என்றும் இளமையா இருக்கறதுக்கு கோபத்தை தவிர்த்துடுங்களேன்….இவ்ளோ சொல்றீங்க.. சொல்றது எளிது தான். ஆனால் செயல்படுத்துவது தான் சிரமம்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கிறது… முயன்றால் முடியாததுன்னு எதுவுமே இல்லை தானே. நான் முயல்கிறேன் அப்ப நீங்க?? 

சரி இன்று எனக்கு மிகவும் பிடித்த மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன் வாங்கப்பா…



இது எங்க வீட்டுப்பிள்ளை அப்டின்னு இவர் பதிவுகள் சொல்லவைக்கும் இவருடைய எங்கள் பிளாக். எங்க வீட்டுக்கு வாங்க என்று அன்புடன் வரவேற்று உபசரிக்கும் அன்பும் பண்பும் உள்ள அருமையான குணம் கொண்ட இந்தப்பிள்ளையின் பெயருக்கேற்றார்போலவே பதிவுகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு எப்பவும் தோணும்... எத்தனை வாதஸல்யம்.. எத்தனை அன்பு, பண்பு இந்தப்பிள்ளைக்கு... பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?






ஒருவரைப்பற்றி அறிய எத்தனை நாட்களோ மாதங்களோ அவசியம் இல்லை. அவரின் ஒரு வரி எழுத்து அவரின் மனதை அவரின் இயல்பை அவரின் குணத்தை மிக அழகாய் பிரதிபலிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு எனக்கு மிகவும் பிடித்த சுப்புரத்தினம் சிவா ஐயாவின் என் முதல் வலைச்சரம் நாளுக்கான இவர் பின்னூட்டம் தான். ஆச்சர்யத்துடன் இவர் வலைப்பூவில் தொடர்ந்தேன்... சென்று கண்டபோது ஆச்சர்யமாக பிரமித்தேன். பிற வலைதளங்களில் இருக்கும் நல்லவைகள் எல்லாம் தொகுப்பாக இவர் வைத்திருக்கும் பாங்கு ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது... என் கவிதை வரிகளை என்னிடம் அனுமதி கேட்டு அதை பாடலாக பாடி அனுப்பி இருக்கிறார். என்னை விட அதிக வயது. ஆனால் அவர் வார்த்தைகளில் எத்தனை பணிவு.... இவரின் வலைப்பூவில் எனக்கு பிடித்த பதிவை பார்ப்போமா?






இந்தச்சகோதரரின் கவிதைகள் படிக்கும்போதும் சரி இவரின் கதைகளை படிக்கும்போதும் சரி அந்த தாக்கம் கண்டிப்பாக நமக்கும் ஏற்படும். இவர் படைப்புகள் எளிய நடையில் கருத்துகள் சொல்லும்... இவரின் பதிவுகள் சில பார்ப்போமா?







மனம் ரொம்ப சோகமாக இருக்கும்போது இவர் வலைப்பூவுக்கு சென்று பாருங்க. சோகமெல்லாம் சட்டுனு மறைந்து வயிற்றுவலி வந்துவிடும். எப்படியா? சிரித்து சிரித்து தான்.... இவர் தன் அனுபவங்களையே வாசகர்கள் படித்து சிரித்து மகிழும்படி ரசிக்கும்படி தருகிறவர்... பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?







இந்த இனியப்பெண் எனக்கு மிகவும் இஷ்டமான குழந்தை. ஹேமாவிடம் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும் இவள் மனதின் சந்தோஷமும் சிரிப்பும் நம்மையும் தொற்றிக்கொள்ளும். இந்த இயல்பான மனதுடைய இந்தக்குழந்தையின் கவிதைகளின் ரசிகை நான்... பார்ப்போமா இந்த மௌனத்தின் ஓசையைக்கொஞ்சம்?


உனக்கான ஒரு கவிதையோடு




இது என் செல்லக்குழந்தையின் வலைப்பூ. சிரித்துக்கொண்டே இருப்பாள். சிரிக்கவும் வைப்பாள். மனதில் என்றும் அன்பை மட்டுமே நிறைத்து வைத்திருக்கும் இந்தக்குழந்தை நான் இந்தியாவுக்கு சென்றபோது தினம் தவறாமல் என் நலம் விசாரித்த இந்த அன்புக்குழந்தையின் வலைப்பூவில் இருந்து அன்பு பதிவுகள் சிலவற்றை பார்ப்போமா?



செய்தாலியின் கவிதைகள் 


அன்பும், பண்பும், அறிவும், நல்லொழுக்கமும், அநியாயத்தைக்கூட தன் கவிதை வரிகளில் மல்லிகைப்பூ தீண்டலாகவே யாரையும் துன்புறுத்தாது தன் கவிதைகளில் மெல்லியத் தென்றலாக வரிகள் அமைக்கும் இவர் பதிவுகள் சில பார்ப்போமா?

மன அறை ஒழுங்கீனம் 

கடவுள் பொம்மை

கருணை தர்மங்கள்

 




இனிய நண்பராக அறிமுகமாகி அன்புச்சகோதரனாக நிலைத்தவர். இவரின் கவிதைகளின் ரசிகை நான். சொல்ல வந்த கருத்தை இரண்டே வரிகளில் நச் என்று சொல்லிச்செல்வார்.... எளியநடை.... சமூகம், அரசியல், காதல், அன்பு, நட்பு எல்லா கவிதைகளிலும் சின்னக்கவிதையில் சொல்லிவிடுவார் சொல்லவந்ததை. பார்ப்போமா சில பதிவுகளை?








இந்த அற்புதமான மனிதரின் பதிவுகளில் மனிதநேயம் கண்டேன். அழகிய ஓவியத்திறமையையும் கண்டேன். அழகிய காதல் கவிதைகளையும் கண்டேன். நல்ல அனுபவங்களையும் கண்டேன். வயதில் சிறியவரானாலும் மருத்துவத்துறையில் புகழ் பெற்றிருந்தாலும் அடக்கமும், அமைதியும், அன்பும் மனநிறைவோடு கண்டேன். இவரை அன்புடன் வாழ்த்திவிட்டு பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?

நிவேதா முதல் நிவேதா வரை 




இவர் பதிவுகளில், இயல்பில் எப்போதும் எல்லோரையும் சிரிக்கவைக்கும் அற்புதமான ஆற்றல் பெற்றவர். எல்லோரிடமும் இயல்பாக எதார்த்தமாக பழகி யார் மனமும் புண்படாமல் நகைச்சுவை புரிந்து சிரிக்கவைப்பதில் வல்லவர். பதிவர் மாநாட்டில் இவர் செய்த ரகளை இப்போது நினைத்தாலும் நான் ரசித்து சிரிப்பதுண்டு.. பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?

பாரதி கண்ட புதுமைப்பெண் இவள் தானா? 





பெயருக்கேற்றார்போலவே இவர் வலைப்பூ சென்று பார்த்தால் நாம் இதுவரை அறியாத எத்தனையோ நல்ல விஷயங்களை அறியலாம்... ஆச்சர்யமாக இருந்தது. சுவாரஸ்யமான தகவல் பேழை இந்த வலைப்பூ.... பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?

தொப்பையை தடுக்கும் வழி 






கோமதி மேடம் இவர்களை நான் வலைச்சரத்தில் தான் முதன் 
முதல் அறிய நேர்ந்தது. இவர்களின் வலைப்பூ சென்றால் இவரின் 
மனதைப்போலவே வாத்ஸல்யமான தாயன்பை, நல்ல மனதை 
இவர் பதிவுகளில் காணமுடிந்தது.

பார்ப்போமா இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகள் சில?





அதிகம் இவரை அறிந்ததில்லை. ஆனால் கேரளாக்காரர் இத்தனை
அருமையாக தமிழை விரும்பி ரசித்து பதிவுகள் தருகிறாரே என்று 
இவருடைய வலைப்பூவுக்கு சென்றபோது மிக அருமையான மூன்று
பதிவுகள் கண்டேன். அதை உங்களுடன் இதோ பகிர்ந்து இருக்கிறேன். 




இன்றைய நாள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும் என்று 
வேண்டிக்கொள்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போமா 
அன்புள்ளங்களே?












மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது