கடம்பவனத்திலிருந்து...

கடம்பவனத்திலிருந்து பதிவுகளைத் தொடர்கிறேன். முதலில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான வண்ணநிலவனைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய அவர்அப்படித்தான் என்னும் கட்டுரை வாசித்துப்பாருங்கள். நீங்களும் வண்ணநிலவனின் தீவிர வாசகனாகிவிடுவீர்கள். வண்ணதாசனின் அகமும் புறமும் வாசித்துப்பாருங்கள்.
கவிஞரும் சமூகசேவகியுமான சக்திஜோதியின் தளத்தையும், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதிவரும் விஜயலட்சுமியின் தளத்தையும் வாசித்துப்பாருங்கள். இதுவரை குறிப்பிட்ட ஆறுபேருடைய எழுத்தையும் பதிந்து வரும் சுல்தான் அவர்களுக்கு நன்றிகள் பல. அறிவுமதி, யுகபாரதி, தமிழச்சிதங்கப்பாண்டியன் போன்ற கவிஞர்களின் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துப்பாருங்கள். கவிதை மீதான உங்கள் காதலும் அதிகரிக்கும்.
விழியன் எடுக்கும் நிழற்படங்களைப்பார்க்கும் போது எனக்குப் பொறாமையாய் இருக்கிறது. நல்ல பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவரும் நற்றமிழன் தற்போது கூடங்குளம் அணுஉலைக்கெதிராக எழுதிவரும் பதிவுகள் முக்கியமானவை. பன்றிக்காய்ச்சலுக்குக்கூட மருந்துண்டு, ஐ.பி.எல் கிரிக்கெட் கிறுக்கிற்கு மருந்தில்லை என்னும் புரட்சிகரமாணவர்இயக்கத்தின் தளத்தைப் பாருங்கள். கிரிக்கெட் தவிர மற்ற நல்ல விளையாட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
மனசை மேம்படுத்த மந்திரச்சாவி என்னும் தொடர் எழுதிவரும் எழுத்தாளர் நாகூர்ரூமியின் தளத்தை வாசியுங்கள். நெகிழ்வூட்டும் நினைவுகளைப் பதிந்து வரும் ஆருத்ரா தரிசனம் தளத்தில் சைக்கிள் குறித்த நினைவுகளை வாசித்து பாருங்கள். நீங்கள் சுஜாதாவின் வாசகரா? அப்பொழுது பாலஹனுமன் தளத்தைப் பாருங்கள். முன்பெல்லாம் பாட்டுப்புத்தகங்களை வாங்கி வைத்து சினிமாப்பாடல்களைப் பாடிக்கொண்டிருப்போம். உங்களுக்கு பிடித்த தமிழ்ப்பாடல்வரிகளை வானம்பாடியோடு சேர்ந்து பாடுங்கள். இயற்கை உணவு உண்டு நோயற்ற வாழ விரும்புபவர்கள் இந்தப் பதிவை வாசியுங்கள். சமையல் குறிப்புகளை வாசிக்க இத்தளத்தை காணுங்கள். வனம் என்னும் இதழை வாசித்துப்பாருங்கள்.
இவன்தான் பாலா புத்தகம் தன்னை மாற்றியதை குறித்து ஆம்பல் எழுதியுள்ளதைப் படியுங்கள். மதுரையைச் சேர்ந்த கவிஞர் இரா.ரவியின் ஹைக்கூ கவிதைகளை வாசித்துப்பாருங்கள். ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களமான தூமை எனும் தளத்தை வாசித்துப்பாருங்கள். மதுரை வடக்குமாசிவீதிக்கும் செல்லூருக்கும் உள்ள தொடர்பை அறிய கட்டியங்காரன் சொல்வதைப் படியுங்கள்.
இணையதளங்கள் குறித்த அதிக தகவல்களைப் படிக்க சைபர்சிம்மன் தளத்தையும், தமிழை விரும்பும் தமிழாள் பக்கத்தையும், சிபிச்செல்வனின் இலக்கியசுற்றம் தளத்தையும், அரவான் குறித்து அருமையான பதிவு எழுதிய வித்யாசாகரின் தளத்தையும், ஆனந்தவிகடனில் வந்த அறிவழகனின் சிறுகதையையும், பாண்டித்துரை, ராம்மலர், நடைவழிக்குறிப்புகள் தளத்தையும் பாருங்கள். இன்றென்ன முழுவதும் வேர்டுபிரஸ் பதிவுகளாக இருக்கிறதென்று பார்க்கிறீர்களா? இந்தப் பதிவை வாசித்துப் பாருங்கள். தமிழில் உள்ள நிறைய வலைப்பதிவுகளின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தவிர எல்லாநாட்களும நூலகம் இருக்கும் நாம் செல்கிறோமா? நம்முடைய வாசிப்பையும், எழுத்தையும், நம்மையும் செதுக்கிக்கொள்ள கீழ்உள்ள தளங்களையாவது அடிக்கடி வாசிக்கலாமே.
கீற்று, அழியாசுடர்கள், தமிழ்தொகுப்புகள், நூலகம், தமிழ்இணையப்பல்கலைகழகம், கூடு, சொல்வனம், நட்பூ, உயிர்மை, காலச்சுவடு, வடக்குவாசல்.
மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.