07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள். Show all posts
Showing posts with label ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள். Show all posts

Sunday, December 2, 2012

சப்தப்ராகாரம் - மனிதர்கள்


அன்புள்ள வலைச்சரம் நண்பர்களே..

உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்.. என்ற பாடல் நினைவில் ஆடுகிறது இப்போது.

இந்த வாரம் போனதே தெரியவில்லை.! பதிவர்களைத் தேடிப் படிக்கும் ஆனந்தம்.. பின்னூட்டங்களில் கிட்டிய உற்சாகம்.. புதிதாய் அறிமுகமான நண்பர்கள்.. வாழ்க்கை இன்னும் சுவாரசியப் படுத்திக் கொண்டிருக்கிறது இப்போது.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் வரிசையில் மழையைக் கொண்டு வந்தேன்.. நீரில் அதுவும் அடக்கம் என்றாலும்.  மழை குறித்த காதல் எப்போதும் மனதில் .. சிறுதூறல்.. பெருமழை.. எதுவாயினும்.. நனைத்துப் போகிறது அதன் போக்கில்..

இதோ முடிவாய்.. மனிதர்கள்..

எவராயினும்..எந்தப் படைப்பாயினும்.. மனிதம் பேசாத எழுத்து ஜீவனற்றது.. சொல்லப் போனால் மனிதனா.. எழுத்தா என்றால் முன்னுரிமை மனிதனுக்குத்தான். மனித நேயம் பகிர எழுத்தும் ஒரு வடிகாலாய்..

கை குலுக்கிக் கொள்வோம்.. அன்பாய். சிரிப்புடன். அவரவர் சிந்தனைகளில் இருக்கும் வேறுபாட்டை ஒரு ஓரமாய் உட்காரவைத்துவிட்டு. எதையும் விட மேலானதாய் நம் பிரியம்..



மனித நேயம் என்று சொல்லும் போது ஞாபகம் வரும் இருவர்..
ஸ்ரீரங்கம் கோவிலில் ஐக்கியமான இருவர் ..  ஆண்டாள்,.. திருப்பாணாழ்வார்.  

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதனைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.

என்று பாடி ரெங்கனோடு கலந்து விட்டவர் திருப்பாணாழ்வார்.




ஆண்டாளோ பிரேமையின் சொரூபம். இந்நாட்களில் நாம் சொல்லும்
143  ( I love you) வைக் கண்டுபிடித்த அந்த நாள் சுட்டிப் பெண். 
143 பாசுரங்களில் அவள் சொன்ன தமிழை இனி யாரும் விஞ்சப் போவதில்லை..

இப்போது இன்றைய பதிவர்கள்..

வேணுவனம்  இலக்கிய ஆர்வலர்கள் ரசிக்கக்கூடிய பதிவுகள்.. அப்படியே நம்மை வேறுலகம் கொண்டு போய் விடும்..

மின்மினிப்பூச்சிகள் சக்திப்ரபாவின் இந்த வலைத்தளம் தீவிர எழுத்துக்களுக்கு உறைவிடம். இவரும் அதிகம் எழுதுவதில்லை. எழுதியவை நிச்சயமாய் வித்தியாசமானவை.

துளசிதளம் துளசிகோபாலின் பிரமிக்க வைக்கிற பதிவுகளின் சங்கமம். 5 வலைத்தளங்களுடன்.. புகைப்படங்கள், தகவல்கள், பயணங்கள் என இவர் பதிவுகளில் ஏகத்துக்கு சுவாரசியங்கள்.

கரடி பொம்மை காற்றைக் கொண்டு கவிதை பேசும் ஒரு இலையின் பக்கங்களில் கவிதை கலந்த ரசனை கொட்டிக் கிடக்குது.. கூடவே மனித நேயமும்

சிறகுகள்   உலகத்தின் எந்த கோடிக்கும் உடனே பறந்து சென்று, இயற்கை சீற்றங்களினால் கஷ்டப்படும் யாருக்கும் உதவ, இயற்கையை ரசிக்க, நதியோடும், அருவியோடும், காடுகளோடும், பறவைகளோடும் கலந்து ஓடிக்கொண்டே இருக்க சிறகுகள் வேண்டி, என்னை தடுக்கும் மாயச்சுவர்களை எப்போதும் தகர்த்துக்கொண்டே...இருந்த இடத்திலேயே நான்! 
-இவங்களை இதற்குப் பிறகும் பிடிக்காமல் போகுமா என்ன.. எழுதுங்க.. முடிஞ்சப்ப..அதைத்தான் சொல்ல முடியும்..

திவ்யா ஹரி இவரும் எப்பவாச்சும் எழுதறார்.. ஆனா ஒரு ஸ்பார்க் இருக்கு.. 

காவ்யாவின் தமிழ்வனம் மொழியின் ஆளுமை கொண்ட இவரும் ஏன் எழுதுவதில்லை அவ்வப்போதாவது.???

சிதறல்கள் இவரும்தான்.. எழுதலாமே மாசம் ஒண்ணாவது..

சிறு முயற்சி  அழகிய பதிவுகளுக்கு சொந்தக்காரர். வாழ்த்துகள் முத்துலெட்சுமி மேடம்.

இந்த ஏழு நாட்களில் நான் ரசித்த.. ரசிக்கிற சிலரை உங்களோடு சேர்ந்து இன்னும் ஒரு முறை ரசித்தேன்.. நேர நெருக்கடியில் இன்னும் பலரை என்னால் குறிப்பிட முடியவில்லை..

எனக்கு வாய்ப்பளித்த திரு. சீனா ஸார்.. வலைச்சர குழு.. ஒவ்வொரு நாளும் வந்து என்னையும் ரசித்த நீங்கள்.. எல்லோருக்கும் இதய ஆழத்திலிருந்து அன்பின் நன்றி.

வாழ்க்கை மகத்தானது.. அது ஒரே அலைவரிசையில் கொண்டு வந்து சேர்த்து விடும் நேசத்துக்குரியவர்களை..

சந்திப்போம் இன்னொரு சமயம்.. இன்னும் உற்சாகமாய்..

பேரன்புடன்
 ரிஷபன்.    
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது