07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஷைலஜா. Show all posts
Showing posts with label ஷைலஜா. Show all posts

Sunday, May 4, 2008

மங்களச்சரம்!






நான் நன்றி சொல்வேன் முத்துலட்சுமிக்கு
என்னைவலைச் சரம் எழுதவைத்தமைக்கு
நான் நன்றி சொல்வேன்பதிவர் பலருக்கும்
என்பதிவினில் பின்னூட்டம் இட்டதற்கு
வலைச் சரமிதில் வாரம்முழுவதும்
நானும் மகிழ்ந்ததென்ன
வலைசரமிதில் வாரம் முழுவதும்
நாமும் மகிழ்ந்ததென்ன?




(பாட்டு ஒலிவடிவில் கேட்டு மகிழ்க!!!)


மங்களச்சரம்

ஒருவாரம்! ஓட்டமாய் ஓடிவிட்டது! வலைப்பூக்கள் ஏராளம். இருந்தாலும் சிலபூக்களைமட்டுமே சரம் தொடுக்க முடிந்தது. முன்னமே அழகாய் பலர் தொடுத்த சரங்களின் முன் நானும் என் கைவரிசையைக் காட்ட இயன்ற அளவு முயன்றேன். என்னை ஊக்கப்படுத்த இங்குவந்து பின்னூட்டமிட்ட அனைத்துப்பதிவர்களுக்கும் மிக்க நன்றி ...


வாய்ப்பு தந்த அன்புச்சகோதரி முத்துலட்சுமிக்கு ஒரு ரிமிக்ஸ் பாட்டு பாடி படுத்தி இருக்கேன்
யாரும் எஸ்கேப் ஆகாம கேட்டுட்டு இங்கேருந்து போகணும் என்ன?:)

பிரிவோம்!மீண்டும் இதேபோல வலைஞர்கள்கூடும் இடத்தினில் சந்திப்போம்!
அடுத்து வரும் வலைச்சர ஆசிரியருக்கு வரவேற்புகூறி விடைபெறுகிறேன்! நன்றி !வணக்கம்!
மேலும் வாசிக்க...

Saturday, May 3, 2008

ஆன்மீக சரம்

ஆன்மீகச்சரத்தில் பக்திப்பாடலக்ளும் பக்திகட்டுரைகளும் இன்று தொடுக்கலாமா ?







முதலில் ஜீவா வெங்கட்ராமனின் சமீபத்திய பதிவு .

திருக்கைலாயத்தை தேடிச்சென்ற திருநாவுக்கரசர், பூலோக கைலாயமென பெரியவர் ஒருவர் குறிப்பிட திருவையாறு தலத்தை அடைகிறார். அங்கே அவர் தான் கண்ட காட்சியாக பாடுவதாய்க்கூறுவது விஜய்சிவாவின் கணீர்க்குரலில் பாடலும் விளக்கமும் மனதையும் செவியையும் அள்ளுகின்றன! நன்றி ஜீவா.



திராச அளிக்கும்நமச்சிவாய வாழ்க வலைத்தளத்தில் வருகலாமோ ஐயா பாடலை நித்யஸ்ரீ பாட விளக்கமுடன் அளித்திருப்பதைக்கேட்டு,பார்த்திருக்கிறீர்களா?

மதுரையம்பதி அளிக்கும் சௌந்தர்யலஹரி அனந்தலஹரியாய் இங்கே அன்னையின் அருள்வடிவத்தை அவள் கருணையை நமக்கு பாடலுடன் விளக்கமும் தருகிறார்.

கீதாசாம்பசிவம் அவர்களின் ஆன்மீகப்பயணத்தில் சிதம்பர ரகசியம் நமக்கு வெளிச்சமாய் தருகிறார் படிக்கும்போதே மன இருள் நீங்குவது நிஜம்.

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

என்னும் குமரனின் வலைப்பூ அன்னைக்கு அர்ப்பணம் அனைத்தும் அவளுக்கே சமர்ப்பணம் என்பதான பாடல்கள்.நிறைவுபெற குமரன் அளித்துள்ளதை இங்கு கண்டு மகிழலாம் அன்னையின் அருளையும் பெறலாம்.

கடுவெளி சித்தரின் இந்தப்பாடலைப்போல
எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சிவமுருகனின் சித்தர்பாடல்கள் வலைத்தளத்தில்அர்த்தம் நிறைந்த அபூர்வப்பாடல்களைக்காணலாம்.








கண்ணன்பாட்டு தளத்தில் மலைநாடன் அண்மையில்அளித்துள்ள கட்டுரையும் பாடலும் அருமை!பல்லாண்டெனும் பதங்கடந்தவனுக்குப் பல்லாண்டு கூறுதலா?. திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோலத் தோன்றுகிறதா?. நமக்கு விருப்பமானது, ஆண்டவனுக்கும் விருப்பமானது . வாழ்த்திப் பாடுவது நமக்குப் பிடிக்கிறது என்கிறார் மலைநாடன் நியாயம்தானே?

இங்கே ஜிரா முருகன்மீது பாட்டு இயற்றி என்னைப்பாடவும் வைத்திருக்கிறார்!

வல்லிசிம்ஹனின் பதிவில் சின்னராமனும் சின்னக்ருஷ்ணனும் மிகவும் பிடித்தவை எனக்கு அதன் எளிமை காரணமாகவே!

வீஎஸ்கே சிவனைப்பற்றி இங்க ஒரு பாடல் தந்திருக்கார் பாருங்க அப்படியே கண்முன் சிவம் நிற்கிறது!


கண்ணபிரான் ரவிசங்கர்! இந்த ஆன்மீகச்செம்மலின் மாதவிப்பந்தலும் கண்ணன்பாட்டும் அருமையான அழகான தெய்வீகப்படங்களினாலும் இனியபாடலக்ளினாலும் திகட்டாத தீந்தமிழில் கண்ணபிரான் ரவிசங்கர் அவருக்கே உரிய மெல்லிய நகைச்சுவையோடு எழுதும் கட்டுரைகளினாலும் அவரது பந்தலில் பல்காலமும் குயில்கள் கூவும் வண்ணம் சிறப்பாக இருக்கிறது.
விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!
நல்லோர் நெஞ்சமெல்லாம் நிறைய, அரங்கன், சிம்ம கதி போட்டு வரும் அழகே அழகு!
அரங்கன் நடை அழகு!
ரத்னாங்கி உடை அழகு!
சக்கரப் படை அழகு!
சதிராடும் குடை அழகு
! என அரங்கனைப்பற்றி எழுதி படங்கள் அளித்து இனியபாடலும் கொடுத்துள்ள இந்தப்பதிவு என்னை அரங்க நகருக்கே இட்டுச்சென்றது நீங்களும் திருவரங்கம் போகவேண்டுமா முதலில் இங்கே செல்லுங்களேன்!

அரங்கன் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும் என வேண்டி ஆன்மீகப்பதிவினை இங்கே நிறைவு செய்கிறேன்.
மேலும் வாசிக்க...

Friday, May 2, 2008

நகைச்சுவை சரம்






அபிஅம்மா.. அபிக்கு மட்டும் இல்ல.. எங்களுக்கும்..
அந்த வீட்டிலேயே ரொம்ப நல்லவங்க.. எதையும் தாங்கும் இதயம்.. பின்ன.. இந்த அபியப்பாவை சமாளிக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்?.. அதை விட பெரிய விஷயம் அந்த அராத்து அபிராமியையும் குட்டி தாதா நட்டுவையும் சமாளிக்கிறது.. அப்பப்பா.. என்னா ஒரு வில்லத் தனமானவங்க இவங்க 3 பேரும்.... ஆனா நான் எதையும் தாங்கும் இதயம்னு சொன்னதுக்கு காரணம் வேற.. அதாவது 2 நாள் எங்களுக்கு சமைச்சி போட்டு சமாளிச்சாங்க பாருங்க.. நிஜமாவே அபி அம்மா தி க்ரேட் தான்.



வ வாச இரண்டு பத்தி கேட்டாலும்கேட்டாங்க ஆளாளுக்கு கற்பனை எப்டில்லாம் பறக்குதுபாருங்க:
வாவா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு" ரெண்டு அப்ப‌டின்னு எங்க சித்தப்பூ நாமக்கல் சிபி சொல்ல போய்.. நானும் ரெண்டு நாளா யோசிக்கிறேன் ஒன்னும் தோண‌ல அப்புறம் ரெண்டு எப்படி தோணும்? இப்படி யோசிச்சிகிட்டே இருக்கும் போது யோவ் இளையகவின்னு ரெண்டு சத்தம் ( note this point ரெண்டு சத்தம் ) அந்த ரெண்டு பேரும் யாருன்னா என் மகனும் மனைவியும். என்னய்யா இது நாங்களூம் ரெண்டு நாளா பாக்குறோம் இப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்குற. உண்ணைய நார்மலா பாத்தாலே சகிக்காது

பூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....
பூங்கா இதழ் வெகு நாட்களாக வெளிவரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதை புதுவடிவில் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அது எப்படி என்றுஒரு கற்பனை. முன்பு எல்லாம் பதிவு போட்ட பின்புதான் அது பூங்காவில் வரும் இனி சிறந்த எழுத்தாளர்களிடம் எழுதி வாங்கி வெளியிடுவது, அதன் பின்பேஅதை பதிவில் போட அனுமதிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

ரங்கமணி Vs கிச்சன்
இந்த பெண்கள் மத்த விஷயங்களில் 33 சதவித இட ஒதுக்கீடு கேட்டாலும், கிச்சன் சமாசாரங்களில் ஆண்களை ஒதுக்கியே வைத்து நூறு சதவிதத்தையும் தம்மிடமே வைத்துள்ளனர். இரண்டு நாள் தங்கமணிகள் பிறந்த வீட்டுக்கு போவதாக இருந்தாலும், நீங்க ஓட்டலில் பாத்து கொள்ளுங்கள்! தேவையில்லாம கிச்சன்ல நுழைய வேணாம்!னு ஒரு அபாய எச்சரிக்கை செய்து விட்டு தான் பெட்டியை தூக்குவார்கள். நாமளும், அவங்க சொன்ன சொல்லை மீறாம திக்கற்ற ரங்குகளுக்கு தெருவோர ஓட்டலே கதி!னு சரணடைவோம்.


பரீட்சை
வால் டிராயர் போட்டு கொண்டு எல்.கேஜி படிக்க ஸ்கூல் போன காலத்திலும் சரி, துவைக்காத ஜீன்ஸ் அணிந்து காலேஜ் செமஸ்டர் பரீட்சை எழுத போன போதும் சரி இந்த எக்ஸாம் பீவர் என சொல்லபடும் பரீட்சை பயம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை.
இதற்கு காரணம் அட்டை டூ அட்டை எல்லாம் கரைத்து குடித்து விட்டு போனேன் என அர்த்தம் கொள்ள கூடாது.

நயனதாரவை இவர் முனமே நீலசேலைல படம்போட்டு மக்களை இழுத்தார். இப்போவும் விமானக்கனவு கண்டிருக்கிறார் பாருங்க நயந்தாராவோட

தசாவதாரம் பத்தி சொல்றாரு. சொல்றத சொல்லிட்டு யாமறியோம் பராபரமே என்னும் கோபிநாத்!
    மேலும் வாசிக்க...

    Thursday, May 1, 2008

    கட்டுரைக்கதம்பம்!

    கட்டூரைகள் எழுதுவது கதை கவிதை போல கற்பனையில் ரீல் விடமுடியாதுங்க! தக்க ஆதாரம் வேணும்! அதை சுவாரஸ்யமாவும் அளிக்கணும்.
    துளசிதளத்துல துளசிமேடம் கட்டுரைகள் ரொம்ப இயல்பா இருக்கும் சமீபத்திய சமையல் காஸ் கட்டுரை உட்பட. எல்லாரும் அவங்களை இங்க சொல்லி இருப்பாங்க நானும் சொல்லாமல் இருக்கமுடியல.


    எஸ்வி சுப்பையா சாரின் வலைப்பூவின் பலகட்டுரைகள் மனதைக்கவர்பவை.இந்த சமீபத்திய கட்டுரை உட்பட

    http://cyrilalex.com/muttom/ alek muttam
    முட்டம் மேடானதால் கடலை கிழ்நோக்கிப் பார்க்கும் அபூர்வக் காட்சி கிடைக்கிறது. லைட் ஹவுஸ் மேலே ஏற அனுமதி கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்தமுறை இந்தியா வரும்போது ஒரு வலைப்பதிவர் கோட்டமொன்று முட்டத்தில் ஏற்பாடு செய்யலாம். என்று முட்டம்பற்றிய அலெக்சின் பதிவு பிடித்தமானய்து

    kaandipan iyarkaihttp://iyargai.blogspot.com' இயற்கை காண்டீபன் தருகிறார்.

    இதில் 'திமிங்கல சுறாவின் வாய் சுமார் 4 அடி(1.4மீட்டர்)வரை அகலமானது.இவ் வாய் மற்ற சுறாக்களுக்கு உள்ளதுபோல் தலையின் கீழ் பகுதியில் காணப்படாமல் தலையின் முன் பகுதியில் காணப்படும்.இதன் வாயினுள் 3,000 மிகச்சிறிய பற்கள் இருந்தபோதும் அவற்றின் பயன்பாடு சிறிய அளவில்தான் அமையும்.இதற்கு காரணம் திமிங்கல சுறா உணவை வடிகட்டி உண்பதே(filter feeders).திமிங்கல சுறா தனது வாயை திறந்தவாறு நீந்திச்செல்லும்.இதன் போது சிறுமீன்கள்,இறால்கள் போன்ற ..' தகவல்கள் புதியவை நமக்கு



    http://cvrintamil.blogspot.com/ சிவிஆரின் வானுக்குள் விரியும் அதிசியங்கள் நமக்குள்ளும்தான் விரிகின்றன!

    bhaarathi sila kaatchikaL vskhttp://aaththigam.blogspot.com பாரதியைப்பற்றி விஎஸ்கே எழுதுகிறார். இவர் ஆன்மீகக்கட்டுரை மருத்துவக்கட்டுரைகள் என கலக்கிறார்!

    http://kanapraba.blogspot.com கானப்ரபாவின் பல கட்டுரைகள் இங்கு புகைப்படம் மற்றும் பாடலுடன் ஒலிக்கிறது.

    நூறும் ஒண்ணுமாம் வல்லிமாவின்http://naachiyaar.blogspot.com/பதிவில் இது எக்சலண்ட்!

    http://shylajan.blogspot.com/2008/04/blog-post_10.html இங்க இவங்க எழுதும் கட்டுரையை படிச்சா கண்டிப்பா உங்களுக்கு குழப்பம் அல்லது கோபம் ஏற்படலாம் அதை நான் சிபாரிசு செய்யல:)

    நல்ல பல
    கட்டுரைகள் வலைப்பூவில் நிறைய இருக்குங்க.
    முந்தாநாள் பெய்த மழை, அடிச்சபுயல் இரண்டிலும் மின்சாரமே வீட்ல காணாமல் போய் இருக்கிறது. வெளியே வந்து,
    இயன்ற அளவுதொகுத்து வழங்கிவிட்டேன் மீண்டும் மணம்கொண்ட ஒரு சரத்துடன் உங்களை சந்திக்கிறேன்! நன்றி!
    மேலும் வாசிக்க...

    Tuesday, April 29, 2008

    கவிதைச்சரம்!

    கனித்தமிழில் கற்கண்டு சொல் எடுத்து கட்டிய கவிதைச்சரம் இது..
    கவிதைகளை மட்டும் அறிமுகப்படுத்தும் இந்த பதிவில் முதலில் கவிதை என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாமா?






    கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம். கவி உலகம் சுதந்திரப்பறவைகளின் சரணாலயம். இங்கே தன் ராகத்தை திர்மானித்துக்கொள்ள ஒவ்வொரு பறவைக்கும் உரிமை உண்டு. இது ஆயிரம் மலர்களின் தோட்டம்.

    கவிதை என்பது எந்த சந்தர்ப்பங்களிலும் முட்டிக்கொண்டு வந்துவிடுமா? சுனாமி வந்தபோது கவிதை வந்தது.கும்பகோண ம் தீவிபத்து நடந்தபோது கவிதை வ ந்தது. பிரபல நடிகை தற்கொலை செய்துகொண்டபோது கவிதை வ ந்தது. இந்தக்கவிதைகள் எழுதும் கவிஞர்களை நாம் மதிக்கிறோம் ஆனால் இதுபோல இன்னொருகவிதை எழுத வாய்ப்பு நேராதிருந்தால் தேவலை என்று மனம் எண்ணுகிறது.

    நம்மில் அவ்வபோது உக்கிரம் கொள்ளும் உணர்ச்சிகளையே கவிதையாக்குகிறோம் நம் உதடுகளுக்கு புன்னகைபுரியவும் தெரியும் நம் விழிகளுக்கு கனல் உமிழவும் தெரியும்.

    கவிதை இதயம் சம்பந்தப்பட்ட்து. விமர்சனங்கள் ,அதனை மூளையைக்கொண்டு அணுகும்போது அபத்தமான விளைவுகள் ஏற்படுகின்றன.
    கவிதை பலவித ருசிகளைகொண்டது சிலர் குறளில்காமத்துப்பாலை அகற்றி விட்டு மற்றதை பைண்ட் செய்துவைத்திருப்பார்கள் உண்மையில் காமத்துப் பாலில்தான் கவிதை இருக்கிறது,மற்றதில் உரைநடை இருக்கிறது!

    முகத்தைதான் படமெடுக்கலாம் முகமூடியை படமெடுத்து என்னபயன்?
    கவிதையில் நாம் நாமாக இருக்கவேண்டும்

    நம் ஒவ்வொருவரிடமும் ஒருகவிஞன் இருக்கிறான். பலரின் கவிதைகள் மௌனமாக உறைந்திருக்கின்றன சிலர்மட்டுமே அவற்றை வார்த்தையால் மொழிபெயர்க்கிறார்கள். கவிதை பார்வையிலேயே இருக்கிறது.

    இந்தவகையில் நான் ரசித்த கவிதைத்தளங்களில் சிலவற்றை இங்கு அறிமுகப்படுதத் விரும்புகிறேன்.

    வளர்ந்துவரும் இளம்கவிஞர் ரிஷான் ஷெரீபின் கவிதைத்தளத்தில்
    ! பல கவிதைகள் மிகவும் எதார்த்தமானவை..’மரணம்துரத்தும் தேசத்துக்குரியவனாக ‘ ‘நடுநிசியில் எனது தேசம்’ போன்ற கவிதைகளின் சோக்ம் நெஞ்சை உலுக்குகிறது. காதல்கவிதைகளிலும் எதார்த்தம் மெனமை மிளிர்கிறது.

    மைத்துளிகள் என்று வலைத்தளத்தில் தோழி சுவாதி எழுதிய காதல்பறிய கவிதை அதன் இயல்பை அப்படியே சொல்கிறது சுவாதியின் பலகவிதைகள் அவர் வலையில் சிறப்பாக் உள்ளன. அவை உண்மைத்துளிகள்!

    இங்கு நிலவுநண்பன் எனும் ரசிகவ் ஞானியரின் தூக்கம் விற்ற காசுகள் இது பலமுறை பலரால்பாராட்டு பெற்றதுதான்,,,இன்னும் பலகவிதைகள் சிறப்பாக உள்ளன.
    அவைகால்தடங்கள் மட்டுமன்று எனும் ப்ரியனின் கவிதையைக்காண வாருங்கள் இந்தவலைத்தளத்தில் அவரது பலகவிதைகள் எல்லாரையும் கவர்ந்துவிடும்.

    என் அன்புத்தம்பி நிலாரசிகன்! செல்லமாய் இவரை ஜூனியர்வைரமுத்து என்போம் குழுவில் நாங்கள். இரு கவிதை நூல்கள் அளித்திருக்கும் இவரது வலைமனையில் ஏராளக்கவிதைகள் கதவிடுக்கில் சிக்கியவிரலென உன் பிரிவில் நசுங்கிய என் காதல் என்பது போன்ற காதல்கவிதைகள் தொடங்கி சமுதாய சிந்தனை கொண்ட கவிதைகள் வரை நிலாதன் வலையில் உலா போவதை கவனியுங்கள் அவைகள் உங்கள் பார்வைக்குக்கிடைக்க இதோ..
    .



    கென் பெயர்தான் சின்னது .மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது இவருக்கு!
    இவருடைய தற்கொலைக்கானகாரணங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ப்ரேம்குமார் வலையில் தேடும்போதே கிடைத்த தேடல்கவிதை சின்னது ஆனா சிறப்பானது இவருடைய மற்றகவிதைகளும் அப்படியே படித்துப்பாருங்கள்.

    காதல்கவிஞர் அருட்பெருங்கோவாஇ இங்க விடலாமா? காதல்மட்டுமல்ல மற்ற தலைப்புகளிலும் மனிதர் அசத்துகிறார். பாருங்க அவைகளை இங்க…

    கவிநயாவின் கனியான கவிநயமிக்க கவிதைகளை காணவும் அங்கே அருவியின் சப்தம் கேட்கும்.அபிராமி அன்னையின் அருள்விழி திறந்திருக்கும். வசந்தம் வீசும் இன்னும் இன்னும்!! எனக்குப்பிடித்த இளம் கவிதாயினிகளில் கவிநயாவும் ஒருவர்.

    தணீகையின் அருமையான பலகவிதைகள் இங்கே ..புரியமுற்படுகையில் எனும் இவரது கவிதை சிந்திக்கவைக்கும் வெற்றுக்காகிதம் என்று சொல்லிக்கொண்டு பல வெற்றிக்கவிதைகள் படைக்கிறார்.

    சிறுவனின் வலைத்தளமாம் கம்ல்ராஜன் இங்கே பெரியபெரிய அற்புத விஷய்ங்களை கவிதையாய் தருகிறார்.

    தஞ்சைமீரானின் ‘தடை ‘கவிதை அவரது இந்த பிடிக்கும்

    சூர்யாவின் கவிதைகளை அவரது சூர்யபார்வையில் காணலாம்….உணர்சிபூர்வமான எதார்த்த கவிதைகளின் சொந்தக்காரர் இவர்.

    அங்கே தீட்டு கவிதை பிடிக்கும் எனக்கு

    இங்க மங்களூர் சிவா கவிதைகள் அருமை . ஆனா ஒரு படம் போடறார்பாருங்க பெண்களுக்கு வருமே வெட்கம் வெட்கம்! சைன்னு சொல்வேன் ஷை!!!

    அண்ணா கண்ணன் சிஃபி ஆசிரியர் மரபு மற்றும் புதுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவர். அவருடைய பொய்க்காரியின் ரசிகை நான்!

    இங்கேஎன் அன்புத்தோழி மதுமிதாவின் கவிதைகளை காற்றுவெளியிடையே காணுங்கள் அதில் அன்பின் நிறம் எனக்கு மிகப்பிடிக்கும்.

    <.

    லக்ஷ்மண் ராஜா சகாராதென்றல் என்று இன்னும் பலரின் கவிதைகள் கொண்ட தளங்களை இன்னொரு பதிவில் காண்போம்.

    கவிதைச்சரம் இப்போது கட்டிவிட்டேன். மணக்கிறதா?!
    மேலும் வாசிக்க...

    Monday, April 28, 2008

    வலைச்சரத்தில் என் 'தலை' எழுத்து!






    எனக்குத்தெரிந்த வளைச்சரம் இதுதாங்க! என்னைப்போய் வலைச்சரம் தொடுக்க முத்துலட்சுமி அன்புக்கட்டளையிட்டப்போ கொஞ்சம் திகைப்பாயிருந்தது.!சீனாவும் வலைசரம் தொடுத்துடுங்க ஏதும் உதவிதேவைன்னா தயங்காம கேளூங்கன்னு மடல் அனுப்பிட்டார்.முதல்ல நன்றி முத்துலட்சுமிக்கும் சீனாவுக்கும்.

    நான்பாட்டுக்கு பத்திரிகைளுக்கு கதை பண்ணிட்டு-ஸாரி-எழுதிட்டு இருந்தேன்…(இருக்கேன் !!)

    ஆறுவருஷம் முன்பு இணையத்தில் மன்றமையம்ல கவிதைக்குக்கவிதைமூலமா தத்திதத்தி தட்டச்சி உள்ளவந்தேன்..இப்போ ஜீவ்சா இருக்கும் அன்புத்தம்பி ஐயப்பன் மன்றமையத்துல கவிதை எழுதுவாரு. என்னை மரத்தடி.காமுக்கு அழைச்சிட்டு வந்த பெருமை அவருக்கு சேரும்.மரத்தடில வந்ததும் நிறைய நட்பும்கிடைச்சிது ..அங்க
    எழுதிக்குவிச்சேன் என்பதைவிட நிறைய குறும்பும் அன்புமாய் மடலிட்டுக்கொண்டு நட்பு வட்டத்தைக்கூட்டிக்கொண்டேன் என்பது நிஜம்! அங்கிருந்தபோதே பலருடைய வலைத்தளங்களை பார்வையிட்டு பின்னூட்டமிட்ட என்னை சொந்தவலைத்தளம் ஆரம்பிக்கும்படி சிலர் கேட்டுக்கொண்டர்கள்.



    பாரதியைப்பிடிக்கும் ஆகவே அவருடைய வாக்கான எண்ணியமுடியவேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் என்ற வரிகளை என் வலைமொழியாய் வைத்து அமைத்தேன் . ஆரம்பிச்சேனே தவிர அப்படி ஒண்ணும் அதிகமா எழுதவே இல்ல எனலாம்.

    தமிழ்சங்கம் மற்றும் கண்ணன்பாட்டுல ஓரளவு என்பங்கு இருக்கும். அதுவும் அதிகமில்லை!

    வலை ஆரம்பிச்ச உடனே தேன்கூடு போட்டில ஆறுதல் பரிசு இந்தக்கவிதைக்குக் கிடச்சிது கொஞ்சம் காதல்ரசம் அதிகமிதுல

    அன்னையர்தினத்துக்கு அம்மா பத்தி நான் எழுதின கட்டுரை எனக்கு ரொம்பவே பிடிச்சது. அம்மா பத்தி எழுதினாலே அது நல்லாத்தான் வருது இல்லையா?

    போனவருஷம் …வா.வ.ச நடத்தின போட்டில ராயல்ராமினை மையமா வச்சி குழந்தைகள் அடிச்சலூட்டியினை கட்டுரை எழுதினதுல பரிசுகொடுத்தாங்க.

    காக்ககாக்க காலணி காக்க ன்னு நகைச்சுவை கட்டுரை எழுதினேன். அது நிஜமா நட்ந்ததுதான் …எழுதறப்போவே நான் சிரிச்சது இதை!

    சீரியசா எழுதின சிலகவிதைகள் சில மட்டும் இங்க…, இங்க

    அப்புறம் அன்புடன் நடத்தின போட்டில ஒலிகவிதைக்கு பரிசைவாங்கிட்டு திரும்ப வலைமனையை பூட்டிட்டேன்.

    அதை தூசிதட்டி எழுப்பவைச்ச பெருமை டாக்டர் வீஎஸ்கேவுக்கே சேரும்! அப்போவும் ஒண்ணும் இங்க வலைச்சரத்துல இதுவரை எழுதின மத்தவங்க மாதிரி நான் அதிகம் எழுதியதாய் தெரியல! இதுல இந்தவருஷ ஆரம்பத்துல புதுவருஷ உறுதிமொழின்னு எடுத்தபடி இனிமே அடிக்கடி வலைத்தளத்துல எழுதணும்னு ஓரளவு எழுதிட்டுதான் வரேன்.

    நேரம் கிடைக்கிறப்போ எல்லாரும் வந்து படிச்சி கருத்து சொன்னீங்கன்னா மைசூர்பாக்(இதுக்கு ஒரு பெரிய கதையே இருக்குங்க..டாக்டர் வீ எஸ்கே அல்லது சுவாதி அல்லது மஞ்சூர்ராசா அல்லது கேஆரெஸ் விளக்கம் தருவாங்க) செஞ்சி தருவேன்!

    ரொம்ப என்னைப்பத்தி சொல்லிக்க எதுவுமில்ல எல்லார்கிட்டயும் அன்பாய் பழகணும் என்கிற எண்ணம் இருக்கிற சராசரிப்பெண்தாங்க!

    நாளைக்கு இணைய நண்பர்களின் + சிநேகிதிகளின் வலைப்பூக்கள் பறிச்சிட்டு சரம் தொடுத்திட்டு வரேன், என்ன?

    மேலும் வாசிக்க...

    தமிழ் மணத்தில் - தற்பொழுது