07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஸாதிகா. Show all posts
Showing posts with label ஸாதிகா. Show all posts

Sunday, March 11, 2012

கதம்பச்சரம்






தனக்குள் சிரிப்பவன் ஞானி
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்

தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்
தன்னை நினைத்து சிரிப்பவன் காதலன்

பிறரை பார்த்து சிரிப்பவன் கர்வி
பிறருக்காக சிரிப்பவன் கயவன்

பிறர் நோக சிரிப்பவன் கொடியவன்
பிறர்காண சிரிப்பவன் கோமாளி

சிரித்துக்கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்மயோகி

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

சதா சிரிப்பவன் வேடிக்கையாளன்
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்

விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையால் சிரிப்பவன் கோழை

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
அன்பால் சிரிப்பவள் அன்னை

காதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலி

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்

அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
பிறரை மனதார சிரிக்க வைப்பவன் படைப்பாளி

நகைச்சுவை மட்டுமல்ல பல சுவைகளும் கலந்த கதம்பச்சரமாக மணக்கின்றது இறுதியாக பிறந்திருக்கின்ற கதம்பச்சரம்.

1.பதிவுலகம் வந்த புதிதில் என்கண்களில் மாட்டிய கொன்றைவேந்தன்.படிச்சு படிச்சு அப்ப மட்டுமில்லை இப்பவும் சிரிப்பை வரவழைத்துக்கொண்டுள்ளது. சீனா ஐயாவுக்கு பிடித்த கொன்றை வேந்தன்.பெரிசுங்க ஒதுங்குங்கப்பா என்று சீனா சார் பயம் காட்டினாலும் பெர்சுங்களும் படித்து ஜாலியாக சிரிக்கலாம். வாய் விட்டு படிங்க.மனம் விட்டு சிரியுங்க.நோய் விட்டுப்போகும்.


2.நிஜாம் ரசித்த ஜோக்குகளை நாமும் ரசித்து நகைப்போமா?


3.கொறுக் கொறுக் என்று பித்தனின் வாக்கு சுதாகர் பக்கத்தில் இருந்து சப்தம் வருகின்றதே.போய் பார்த்தால் வேறொன்றுமில்லை.சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே பயங்கரமாக ஜோக் அடிக்கின்றார்.


4.சிரித்து ரிலாக்ஸ் பண்ண வேண்டுமா?ஆயிஷா அபுல் பதிவிட்ட நகைச்சுவையை படித்து சிரியுங்கள்.


5.பழரசத்தை இப்படி கூட தயாரிக்கலாமா?சைட் எஃபக்ட் எதுவும் இல்லாமல் ஆயுர்வேதிக் முறையில இதை வெற்றிகரமா செய்ததுவேறு யாராக இருக்க முடியும் ?ஜெய்லானியேதான்.


6.களுக் என்று பதிவர் சர்புதீனை சிரிக்க வைத்த ஜோக் கண்டிப்பாக நம்மையும் படக் என்று சிரிக்க வைக்கும்.


7.வயரில் அழகழகான வீட்டு உபயோகப்பொருட்களை செய்து காட்டி இருப்பவர் அஸ்மா

8.”மிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க...
டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க...
சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க...
பப்ள்கம் சாப்பிட்டு சீட்டுக்கு அடியில் ஒட்டுறவனுங்க...
சோறு வாங்கி கொடுத்துட்டு சொல்லி காட்டுறவனுங்க...
பஸ்ஸில் ஓசி பயணம் செய்ரவனுங்க...
இவர்கள் எல்லோரும் வன்மையாக தண்டிக்கப் படக் கூடியவர்கள்.”
நாட்டாமை ஐயூப் உத்தரவு போட்டு விட்டார்.ஜோக்கை படிச்சுட்டு சிரிச்சுடுங்க.சிரிக்கா விட்டால் இதற்கும் வன்மையா தண்டனை கொடுத்து விடுவார்.


9.நிஜப்பூக்களா என்று வியக்கும் படி ஸ்டாகின்ஸில் மின்னும் பூக்கூடையை செய்து அசத்தியவர் பாயிஜா காதர்.


10.பணத்தாணி..என்ன வென்று பார்க்கின்றீர்களா?பதிவர் ஷஃபி ஏ டி எம் மெஷினைத்தான் இங்ஙனம் தமிழாக்கம் செய்து அருமையான தகவல்களை பகிர்ந்துள்ளார்.


11.பிளாக் தொடங்குவது எப்படி என்று அக்கு வேறு ஆணி வேறாக விபரமாக எழுதி இருக்கும் பிளாக்கர்களின் நண்பரான அப்துல்பாஸிதின் இடுகையை அவசியம் படிங்க.மிகவும் உபயோகமாக இருக்கும்.


12.போட்டோ ஷாப் பற்றி தெளிவான விளக்கம் ஸ்ரீதர் தந்து இருக்கின்றார்.


13.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.ஆமாமாம்.டவுசர் பாண்டியின் இடுகையில் உபயோகமான டெக்னிக்கையும் கற்றுக்கொள்ளலாம்.அதனை நகைச்சுவையாக சொல்லும் விதத்தில் சிரித்தும் மகிழலாம்.கூடவே மெட்றாஸ் பாஷயையும் கற்றுக்கொள்ளலாம்.


14.கற்பனை உருவங்களை கணினியில் உருவாக்கும் வித்தையை வேலனின் இந்த இடுகை மூலம் கற்றுக்கொள்ளலாம்.


15.ஊரில் 30% மக்கள் வெளிநாடு,வெளியூர்களில் புலம் பெயர்ந்து விட்டதால் இந்த ஊரில் நடக்கும் எந்த சிறு நிகழ்வுகளையும் படங்களுடன் உடனுக்குடன் தந்து அசத்தும் கீழக்கரை செய்திகள் வலைத்தளம் கீழை வாசிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.


16.கீழை இளையவன் தளமும் அதே சேவையை அளிக்கின்றது.சேவையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

17.நகராட்சியின் சேர்மனுக்காக ஒரு வலைப்பூ .நகராட்சியின் ஒவ்வொரு நடப்புகளையும் அவ்வப்பொழுது அப்டேட் செய்து வருவது கீழக்கரை சேர்மன் வலைப்பூவின் சிறப்பு


18.தமிழ் மீரானின் தேடலில் நட்பின் ஆழம் நன்றாகவே தெரிகின்றது.


19.அழகான கரடி பொம்மையை செய்யக்கற்றுத்தருகின்றார் திருமதி பி எஸ் ஸ்ரீதர்


20.ஆடைகளில் படிந்த கறைகளை எவ்வாறு போக்குவது என்ற அருமையான டிப்ஸ்களை வழங்கியவர் வனப்பு - சந்திரக்கெளரி.


21.நகராட்சித்தலைவருக்கு மட்டுமல்ல உதவித்தலைவரின் செயல் முறை குறித்தும் அவ்வப்பொழுத்து சுடச்சுட தகவல்கள் தரும் நேற்று ஜனித்த புத்தம் புது வலைப்பூ இது.


22.பிளாகின் தலைப்பு போல் இவரது இடுகைகளும் சூடாக இருக்கும். சிராஜின் அறிமுக ஆரம்பமே அட்டகாசமாக இருப்பதை பாருங்கள்.


23.வரவேற்பரை சுவரை அலங்கரிக்க அழகான முறையில் படம் வரைந்து காட்டி இருப்பவர் பிரியா.


24.டெல்லி குளிரைப்பற்றி வாய் தந்தி அடிக்க அழகாய் சொல்லி இருப்பவர் ஜிஜி .


25.உள்ளத்தில் நம்பிக்கை கொண்டால் செயலில் வெற்றி பெறலாம் என்ற தத்துவத்தை அருமையாக பகிர்ந்திருப்பவர் ஆயிஷா பேகம்.


26.தில்லி ஜனாதிபதி மாளிகையைப்பார்த்திருக்கின்றீகளா?ஆதி வெங்கட் நம்மை எல்லாம் அழைத்துச்செல்கின்றார் .போய் பார்க்கலாமா?
l

27.தமிழில் போர்ட் எழுத வேண்டுமென்ற அரசாங்க ஆணை குறித்து ஐயராத்து மாமி என்னமா பொலம்பறா பாருங்க.ஐயராத்து மாமியை அறிமுகப்படுத்தியவர் பக்கோடா பேப்பர் விதூஷ்


28.மாமிச உணவு மனித இனத்திற்கு உகந்ததா இல்லையா என்பதை அலசி கட்டுரையை தந்திருப்பவர் பாத்திமா ஜொஹ்ரா.


29.ஆம்னி பஸ்,வோல்வோ ,பஸ்,புளூ லைன் ,பஸ் எல்லோ லைன் பஸ்,ஏஸி பஸ்,எக்ஸ்பிரஸ் பஸ் என்று பஸ் வகைகளை அறிந்திருக்கின்றோம்.சூப்பர் பஸ் பார்த்திருக்கின்றீர்களா?சூப்பர் பஸ்ஸை கண்காட்சிக்கு வைத்திருப்பவர் ரஜின்.

30.அமீரகத்தில் கோடைகால மதியத்தினை பற்றி கண் முன் கொணர்ந்து நிறுத்துகின்றார் ராஜகிரி ஹாஜா மைதீன்.


31.டிஷ்யூ பேப்பரில் அருமையான பூ செய்து காட்டி இருக்கும் ஏஞ்சலினின் அழகிய கைவண்ணத்தைப்பாருங்களேன்.


32.எவரால் இந்தியப்பொருளாதாரம் உயிரோடு இருக்கிறது என்று யாரை ஸ்ரீ குறிப்பிடுகின்றார் தெரியுமா?


32.மன அழுத்தம் மூளையை பாதிக்கும் என்ற விஞ்ஞான உண்மையை பட விளக்கத்துடன் துரைடேனியல் பகிர்ந்திருக்கும் இந்த இடுகை அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய ஒன்று.


விடை பெறுகின்றேன்.


ஒரு வாரகாலமாக வலைச்சரத்தில் கிடைத்த ஆசிரியர் பணியில் பெரிதும் உவகை அடைகிறேன்.வாய்ப்பு கொடுத்த சீனா ஐயா,மற்றும் வலைச்சரகுழுவினருக்கும்,பரிந்துரை செய்த வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

பிரிக்கப்படாமல் இருந்த நாளிதழ்கள்,அருந்தப்படாமல் ஏடு படிந்த தேநீர் கோப்பை,சார்ஜ் செய்யாது விட்ட கைபேசி,”த்சோ..என்னம்ம்ம்ம்ம்மா”என்று செல்லமாக அலுத்துக்கொள்ளும் என் செல்லங்களின் செல்லச்சிணுங்கல்கள்,”சண்டே,மொறு மொறு வென்று மசால் தோசையும்,சட்னி சாம்பாரும் வேண்டும் ”என்று கேட்கும் பிள்ளைகளுக்கு பிரட்டில் ஜாமை தடவி பவ்யமாக தட்டில் வைத்து நீட்டி சமாளிக்கும் சாதுர்யம், மடிக்கப்படாமல் சலவை செய்து மலையாய் குவிந்த துணிகள்,”என்ன ஊரில் இல்லையா?ஆளையே காணும்”எதிர் வீட்டுத்தோழியின் கேள்விக்கணைகள் எல்லாம் என்னை சுற்றிலும் நடக்க நானோ கணினியும் கண்ணுமாக வெகு சுவாரஸ்யமாக பொழுதைப்போக்கிக்கொண்டிருந்தேன்.

நட்புக்களிடம் இருந்து வந்த பின்னூட்டங்களும்,மெயில்களும் என்னை மிகவுமே உற்சாகம் கொள்ள வைத்தன.தினமும் தவறாது வந்து பின்னூட்டம் இட்டு எனக்கு எனர்ஜி கொடுத்த அன்புள்ளங்கள்,நாளை என்ன சரம் என்று வினா எழுப்பும் இனிய உள்ளங்களின் ஆர்வம்,குறையே காணாது தட்டிக்கொடுத்து பின்னூட்டமிட்ட கருத்துக்கள் அத்தனையும் என் அலுப்பையும் சோர்வையும் விரட்டி அடிக்கும் விட்டமின் டானிக்குகளாக இருந்தன.

பொதுவாக நான் இடும் இடுகையில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனித்தனியாக பின்னூட்டம் இட்டு நன்றி தெரிவிப்பதையே விரும்புவேன்.ஒரு இடுகை எழுதுவதை வேண்டுமானால் தாமதப்படுத்தலாம்.பின்னூட்டம் இடுபவர்களுக்கு பதிலளிக்க தவறிவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பேன்.ஆனால் இந்தவலைச்சரத்தில் நேரமின்மை காரணமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை.சரத்தில் தொடுக்க மறந்த விடுபட்ட பதிவர்களும்,சரத்தில் தொடுத்தும் படத்தில் வர மறந்த பதிவர்களும் தயவு கூர்ந்து மன்னிக்கவேண்டுகிறேன்.

மொத்தத்தில் இந்த வாரம் எனக்கோர் மறக்கவியலாத மகிழ்வான வாரம்.இந்த வாய்ப்பை எண்ணி மகிழ்வுடன் விடை பெறுகின்றேன்.நன்றி!

எல்லாப்புகழும் இறைவனுக்கே!


மேலும் வாசிக்க...

Saturday, March 10, 2012

கவிச்சரம்







கவிதை பற்றி நம்மில் பலருக்கும் பல அபிப்ராயங்கள்
உள்ளன.சில கவிதைகள் சிலருக்குப் புரிகிறது, சிலருக்குப்
புரிவதில்லை.

கற்பனையாளனின் சிந்தனைத் திறனால் ஒரு வடிவம் கொடுத்து வரிகளை அழகாக்கி லயத்துடன் படைப்பதுதான் கவிதை என்று சொல்லுவேன்.

கவிதை மூலம் செய்திகள் அனுப்பியவர்களும் உண்டு.நட்பை பலப்படுதியவர்களும் உண்டு.உறவுகளை ஏற்படுத்திக்கொண்டவர்களும் உண்டு என்பது சரித்திரம் கூறும் உண்மை.

சில சினிமா பாடல்கள் பிறந்த கதையினை பார்ப்போம்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணதாசன் விலகிய காலத்தில், கர்ம வீரர் காமராஜரிடத்தில் ஒரு தனி மரியாதை வைத்திருந்த கவியரசர் கண்ணதாசன் , காமராஜரை மனதில் வைத்து ,பெருந்தலைவர் காமராஜர் காதில் எத்தி வைப்பதற்காக எழுதிய பாடல் இது.
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச்சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன்இல்லாமல் தோகை ஏதடி

கவிஞர் வைரமுத்து எழுதி புகழ் பெற்ற

அந்திமழை பொழிகிறது
ஒவ்வோரு துளியில் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

இந்த பாடலை கேட்கும் பொழுது இந்திரன் தோப்பில் முந்திரி காய்த்தால் என்ன மாங்காய் காய்த்தால் என்ன ஏதோ வார்த்தை ஜாலத்திற்காக எழுதி இருப்பார் கவிஞர் என்றுதான் நினைத்தேன்.

பிரிதொரு சமயம் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து ஒரு பேட்டியில் “முந்திரி ஆண்மையை வீரத்தை வீரியத்தை அதிகரிக்கக்கூடியது.இந்திரன் என்பவன் வீரம் மிக்கவன் வீரியம் மிக்கவன்.அந்த இந்திரனின் தோட்டத்து முந்திரி எத்தனை வீரியமிக்கதாக இருக்கும் என்ற பேட்டி வரிகளை பார்க்கும் பொழுது வியந்து போனேன்.

அதே போல் மறைந்த புரட்சித்தலைவர் எம் ஜி ஆரும் ,ஈ டி ஏ நிறுவனரும் பிரபல தொழில் அதிபரும், கல்வியாளருமான பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் உடன் உள்ள நட்பில் உண்டான நெருக்கத்தில் பிறந்ததே கீழ் கண்ட பாடல் என்பது செவி வழிச்செய்தி.

எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்

இப்படியாக பல வித கவிதைகள் பற்பல பரிணாமத்தில் பிறந்துள்ளது என்பது வரலாறு கூறும் உண்மை.

நம் வலையுலக நட்புக்கள் தங்கள் கற்பனையில்,அனுபவத்தில்,கண்டவற்றில்,கேட்டவற்றில் உதித்தவற்றில் ஜனித்த அழகிய கவிதைகளை சரமாக்கி தொடுத்து அலங்கரித்த சில கவிதை மலர்களை இக்கவிச்சரத்தில் நுகர்வோமா?

1.தொலைக்காட்சி பிஞ்சுகளின் மனதில் எங்ங்கனம் விஷ வித்தை விதைக்கின்றது என்பதினை வழக்கம் போல் படு அசத்தலாக கவிதையில் பொழிந்திருப்பவர் ரமணி சார்.

2.பாவிகளே!இரக்கமில்லையா?உங்களுக்கு
இதயமென்பதே இல்லையா உங்கள் தேகத்துக்குள்!இப்படி உணர்வுப்பூர்வமாக கவிதையில் கொதிப்பவர் மலிக்கா.


3.கூகுளின் அதிரடி மாற்றம் தந்த குழப்பத்தை கவிதையில் வடித்து அசத்தி இருப்பவர் புலவர் சா இராமாநுசம்.


4.அன்பிற்கு வண்ணமுண்டோ?உண்டென்கின்றார் இந்த பெண் கவிஞர்.என்ன நிறமா? கவிதாயினி மதுமிதா பக்கம் வாருங்கள்.

5.சின்னஞ்சிறு வரிகளிலே பெரிய பெரிய விஷயங்களை கவிதையில் வடித்திருப்பவர் சீமான்கனி.

6.சில வரிகளிலேயே நச் என்று கவிதை பாடி வியக்க வைத்து விடுவார் நட்புடன் ஜமால்.


7.புதுமைகள் அறிந்து,பழமைகள் களைந்து புரட்சி செய்ய மங்கயருக்கு அழைப்பு விடும் நினைவுகளுடன் நிகே கருத்தை கவிதை வடிவில் பாருங்கள்.

8.கேள்விக்கணைகளை தன் கவிதை வரிகளில் தொடுத்து புருவம் ஏற வைப்பவர் ஹைதர் அலி.

9.கனவை கவிதையாக்கி ’உச்’ கொட்ட வைத்து விட்டார் விச்சு.

10.புத்துயிரை ஜனிக்கும் தாயின் மனஓட்டத்தை படம் பிடித்து காட்டும் வரிகளை இக்கவிதையில் வடித்திருப்பவர் சி.கருணாகரசு.

11.வானையே கடலாக்கி ரசனையுடன் கவிதை பாடி இருக்கின்றார் ஷைலஜா.

12.மேகம் காற்று மின்னல் இடி இவற்றை என்ன கற்பனை வளத்துடன் ஒப்பீடு செய்கின்றார் நம்பிக்கை பாண்டியன்.


13.வாழ்வின் யதார்தத்தை கவிதை வரிகளில் அடித்து சொல்லும் அம்பாளடியாள்


14.தோழன் மபாவின் அழகிய ஹைக்கூ

15.இணையைப்பற்றிய ஒரு இணக்கமான கவிதை பிறந்திருப்பது கலியுகம் தினேஷ்குமாரிடமிருந்து.

16.நான் உன்னை
பலமுறை சந்திக்க
ஆசைப்படுகிறேன்
எனது காதலோ
ஒரே ஒரு முறை
விவாகத்தை சந்திக்க
ஆசைப்படுகிறது வார்த்தைகளில் விளையாடி அசத்தி இருப்பவர் மதுமதி

17.இதுதான் வாழ்க்கை என்று அழகுற பனித்துளிசங்கர் கவிபாடி இருக்கும் கவிதையைக்கேளுங்கள்.

18.இளையதலை முறையினரின் முறையற்ற இதுதான் நவ நாகரீகம் என்ற மாயையில் மற்றவரை மதியாது வாழும் வாழ்க்கைக்கோட்பாடை சாடி இருப்பவர் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜாராகவன்

19.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது வேடந்தாங்கல் கருணின் இக்கவிதை வரிகளிலே.

20.ஜெரிஈசானந்தாவின் கனக்க வைத்த கவிதை வரிகள்.

21.சின்னஞ்சிறு மகளின் தவிப்பினை சிறு வரிகளில் படம் பிடித்து காட்டி இருப்பவர் மதுரை சரவணன்.

22.மனதை கலங்கடித்த வரிகளில் கவிதை பாடி நெஞ்சை கனக்க செய்துவிட்டார் தீபிகா.

23.தோள் கொடுப்பான் தோழன் என்பதினை வெகு அழகாக சொல்லி இருப்பவர் ராஜி.

24.பொருந்தாத நேரத்தில் நா தவறி செப்பும் சொல் விருந்து சாப்பாட்டில் சுவை கெடுக்கும் உப்புக்கல் என்ற தத்துவத்தை சத்ரியன் வெகு அழகாய் கவிதையில் வடித்திருக்கின்றார்.

25.புண்ணியம் சேர்க்காதவன் மட்டுமல்ல.இவன் மனதில் புண்ணும் நிறைந்தவன்.யாரவன்?கலையின் கைவண்ணதில் பாருங்கள்.

26.மின்வெட்டுக்கொடுமையை சிறிய வரிகளில் கவிதை வடித்திருப்பவர் ஆர்.வி சரவணன்.

27.”கடலை பூத்து காய்ப்புக்கும் தயாராச்சு..கன்று மரமாகி குலை குலையா தள்ளிருச்சி “ எதற்கு இந்த புலம்பல் என்று பார்க்கின்றீர்கள்.மண் வாசனை மணமணக்க கிராமிய நடையில் குடந்தை அன்புமணியின் கவிதை வரிகளை கேளுங்கள்.

28.நடைபாதை வாசியின் வாழ்கை முறையை நெகிழ வைக்கும் படத்துடன்,மனதை கனக்கச்செய்யும் வரிகளுடன் தென்காசித் தமிழ் பைங்கிளி எழுதிய கவிதை இது.

29.நம்பிக்கை பற்றி தோழி பிரஷா மென்மையாக கவிதை பாடி இருக்காங்க.

30.சிறப்பு என்றால் என்ன?இபுனு ஹம்தூன் தன் கவிதை வரிகளில் சொல்லி இருக்கின்றதை பாருங்கள்.

31.நசிந்து வரும் நெசவுத்தொழிலை பற்றி விசனப்படுகின்றார் சசிகலா .வளர்ந்து வரும் நாகரீகத்தில் காந்தியின் கனவு பொய்யாய் போன உண்மையை அழகாக கூறுகின்றது இக்கவிதை வரிகள்

32.சிறகு விரித்த அலுமினியப்பறவை வானில் சீறிப்பாய்ந்த பொழுது அதில் செய்த முதல் பயணத்தை தித்திப்பாய் கீழை இளையவன் கூறும் இக்கவிதை கேளுங்கள்.

33.குழந்தைகள் இல்லாதவீடு எப்படி இருக்கும்.கவிதைவீதி செளந்தரின் கவிதையை பாருங்கள்.

34.மழையில் கரையும் குடிசைவாசியின் வாழ்கையை உணர்வு ஒங்க கூறும் கவிதையை வடித்திருப்பவர் செய்தாலி.

35.புத்தாண்டை நம்பிக்கையோடு எதிர் பார்த்து கவிதை எழுதி இருக்கும் மஞ்சுபாஷினியின் நம்பிக்கை ஈடேறட்டுமாக.

36.சி.பிரேம்குமார் சில வரிகளிலேயே எழுதிய “நச்”கவிதையை பாருங்கள்.

மீண்டும் நாளைய சரத்தில் சந்திப்போம்!



மேலும் வாசிக்க...

Friday, March 9, 2012

கட்டுரைச்சரம்






அனுபவம்,வாழ்கைபாடம்,விழிப்புணர்வு,மருத்துவம்,ஜெயித்தது,தோற்றது,பயணம்,விருந்து,ஷாப்பிங்,அவஸ்தை,நகைச்சுவை,இன்னல்களைத்தவிர்த்தல் இப்படி பற்பல நிகழ்வுகளின் கோர்வைகளை பதிவர்கள் தங்கள் எழுத்துத்திறமையால் அழகிய வார்த்தைக்கோர்வைகளுடன் சுவாரஸ்யம் தாண்டவமாட கட்டுரை வடிவில் தொகுத்து தந்திருக்கும் பதிவுகளை இன்றைய கட்டுரை சரத்தில் பட்டியலிடுகின்றேன்.

1.குடல்வால் நோயைப்பற்றி தெளிவாக கூறுகின்றார் எதிர்க்குரல் ஆஷிக் அஹ்மத்.அனைவரும் அறிந்து வைத்திருக்கக்கூடிய பகிர்வு.

2.சென்னையில் இருந்து நாகூர் போகின்றீர்களா?மறக்காமல் அப்துல்காதர் சொல்லும் இந்த ஹோட்டலுக்கு போய் டேஸ்ட் பண்ணிப்பாருங்கள்.பர்ஸ் அதிகம் பழுக்காதாம்.

3.தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிப்பற்றிய விபரத்தை தங்கம்பழனி தொகுத்து தந்திருப்பது மிகவும் உபயோகமான பகிர்வு.

4.ரயிலில் பயணம் செய்து வெறுத்துப்போய் சபித்து இருக்கும் நாஞ்சில் மனோவின் புலம்பலை கேளுங்கள்.

5.மங்களகிரி,கத்வால்,கலம்காரி,பாந்தினி,தர்வார் சூளூர்பேட் ,நாரயண்பேட்,வெங்கடகிரி இப்படி உடுத்திக்கோண்டால் ரிச் ஆகத்தெரியும் புடவை வகைகளை விலாவாரியாக சொல்லி அசத்துகின்றார் புதுகைத்தென்றல்.சேலைகட்டும் மாந்தர்களுக்கு கண்டிப்பாக உபயோகமாக இருக்கும்.

6.கோடை தொடங்கிவிட்டது.உபயோகமான குறிப்புகளை அள்ளித்தருகின்றார் ராஜகிரிஆன்லைன்.இக்குறிப்புகள் கோடையின் கொடும் பிடியில் இருந்து நம்மை தற்காக்கும்.

7.ஒரு மனிதன் நேர்வழியை தேர்ந்தெடுக்க இறைவனின் கிருபை தேவைப்படுகிறது. அடுத்து அவனின் சுற்று சூழல் சீரிய முறையில் அமைந்தால்தான் அந்த நேரிய வழி தொடர்கதையாகிறது.-அழகிய கருத்துக்களைச்சொல்லி அசத்துகின்றார் சுவனப்பிரியன்.

8.”உலகத்தில் பெண்ணுரிமை பற்றி பெண்களுக்குத் தெரிந்ததை விட ஆண்கள் அதிகம் தெரிஞ்சு வச்சிருக்காங்க...” இப்படி கதைப்பது யார் தெரியுமா?பதிவர் என்றென்றும் 16

9.மின்சாரத்தட்டுப்பாடினை தடுக்கும் உபயோகமான குறிப்புகளை தந்திருப்பவர் வீடு கே.எஸ் சுரேஷ்குமார்.

10.மாபெரும் புரட்சியாளர் சே குவாரா பற்றிய கட்டுரையை தந்திருப்பவர் கே எஸ் எஸ் ராஜ்

11.நியூஜெர்ஸிக்குப்போய் நினைவுகளை பொக்கிஷமாய் சேகரித்து வைத்து பேரனைப்பற்றி மகிழ்ச்சி பொங்க உகப்பாக சொல்பவர் கோமதிஅரசு

12.கனவாகிப்போன அடுக்களை உபகரணங்களை படங்களுடன் காண்பித்து நம்மை அந்தக்காலத்திற்கே அழைத்துச்செல்பவர் சின்னு ரேஸ்ரி மாதேவி

13.பிளஸ்டூ பொதுத்தேர்வு நடந்து வருகின்றது.ஆண்டுவாரியாக வெளியிட்ட வினாத்தாள்களைப்பற்றிய விபரத்தை தந்து அசத்துகின்றார் என் ராஜபாட்டை ராஜா.மாணவமணிகளுக்கு மிகவும் உபயோகமான பகிர்வு.

14.நெருங்கிய உறவுக்குள் மணம் வேண்டாம் என்பது மருத்துவர்களின் வேண்டுகோள்.இதனையே படவிளக்கங்களுடன் ரத்னவேல்நடராஜன் சார் பகிர்ந்த பதிவைப்பாருங்கள்.

15.பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம் பீரிடம் ஷிப்பைப்பற்றி படங்களுடன் காட்டி இராஜஇராஜேஸ்வரி பிரமிப்பை தருகின்றார்.

16.மனிதனுக்குவேண்டிய முதன்மை குணம் என்ன என்று திண்டுக்கல்தனபாலன் எதனை சொல்லிக்காட்டி எழுதி இருக்கின்றார் தெரியுமா?படித்துப்பாருங்கள்.


17.முட்டை சைவமா அசைவாமா என்று முட்டை தோன்றிய காலத்தில் இருந்து விவாதம் நடப்பது முடிவுக்கு வரவில்லை.எம் ஆர் ரமேஷ் முட்டைகளின் குணநலன்களைபற்றி இக்கட்டுரையில் கூறி இருக்கின்றார்.

18.லிப்ட் அறுந்து விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்திருக்கும் முஹம்மதுஆஷிகின் கட்டுரை உபயோகமானது.

19.மனசாட்சியால் நன்மையான காரியங்களை மட்டுமோ அல்லது உண்மையை அடிப்படையாக செயல்களை மட்டுமோ எல்லா நிலையிலும் செய்ய முடியாது.”என்ற வாதத்தினை அழகுபட விவரித்திருப்பவர் குலாம்.

20.மரபணுக்கள் பற்றியும், அவற்றில் நடைபெறும் செயல்கள் பற்றியும் படவிளக்கங்களுடன் விபரமாக இக்கட்டுரையில் சொல்லி இருப்பவர் கார்பன்கூட்டாளி.

21.சென்னை சைதாபேட்டைக்கு நம்மை அழைத்து செல்பவர் பதிவர் விக்கி.
h

22.தனது அமெரிக்க பயணத்தை சுவாரஸ்யமாக படங்களுடன் பதிவிட்டு காட்டுவது முத்துலட்சுமி.
h
23.சதா பிளே ஸ்டேஷனிலும் கம்பியூட்டரிலும் மூழ்கி இருக்கும் இக்கால சிறுவர்கள் விளையாட்டுக்களையே இழந்து விட்டனர் என்பதை விஜயன் கூறுவது மலரும் நினைவுகளை பூக்க வைக்கின்றன.


24.கார்ட்டூனிலேயே களை கட்டுகின்றது நெல்லி முர்த்தியின் வலைத்தளம்.


25.”ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடுவதற்கு எதற்காக வரதட்சணை? எதற்காக இத்தனை ஆடம்பரம்? பெண்ணைப் பெற்ற ஒரே காரணத்துக்காக அம்மாவும் அப்பாவும் ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கேள்விகள் வந்து போனாலும் யாரிடமும் கேட்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார் மீது திருமணத்துக்கு முன்பே அதிருப்தியும் பயமும் ஏற்பட்டு விடும்.”இப்படி காராசாரமாக கேட்பவர் முதுபெரும் பதிவர் நீடூர் அலி அவர்கள்.இன்றைய பெண்ணைபெற்றவர்கள் படும் பாட்டினை அருமையான கட்டுரையாக தொடுத்திருகின்றார்.

26.சிங்காரச்சென்னையில் வாழ்ந்து கொண்டே சென்னையைப்பற்றி புகழன் புலம்பும் பீலிங்ஸை சற்று கேளுங்கள்.

27.பெண்களின் வலைப்பூக்களை தொகுத்து தந்து கொண்டு இருக்கும் மங்கையர் உலகம் வலைப்பூ பதிவுலகின் புதுவரவு.பெண் பதிவர்கள் இதில் இணைந்து கொள்ளலாம்.

28.தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று ரெவரி குறிப்பிடும் சூப்பர் ஸ்டார் யார் என்று காண ஆவலா?

29.கீழை இளையவன் தொகுத்துத்தரும் ஐ ஏ எஸ் வழிகாட்டி ஐ ஏ எஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

30.எல்லாம் மேலே இருக்கின்றவன் பார்த்துக்குவான் என்று சொன்ன சிறிது நாட்களிலேயே மேலே போய் விட்ட பதிவர் மாயா என்ற ராஜேஷ் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் பதிவுலகம் இருக்கும் வரை அவரிட்ட பதிவுகள் இருக்கும்.

31.நான் பதிவுலகம் வந்த புதிதில் என் கண்களில் பட்ட இடுகை.ஒரே மூச்சாக எல்லா இடுகைகளையும் படித்து விட்டு என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை அடக்க இயலவில்லை.இப்போழுது அனுராதா அம்மா நம்முடன் இல்லாவிட்டாலும் அவரிட்ட இந்த பதிவுகள் காலத்தால் அழியாது.முகம் தெரியாத அனுராதா அம்மாவை இப்பொழுது நினைத்துக்கொண்டாலும் மனம் கனத்துப்போய் விடுகிறது.அனைத்துப்பெண்களுக்கும் நல்லதொரு விழிப்புணர்வை தரும் என்பது திண்ணம்.


32.நிககொள்ள போய் பார்க்கறீங்களா?அப்படி என்றால் என்ன என்கின்றீர்களா? முஹம்மது ஃபாகீயின் சொந்த ஊரைப்பற்றித்தான் நம்முடன் பகிர்ந்திருக்கின்றார்.

33.சுற்றுலாவுக்கும் இவருக்கும் செம பொருத்தம்.துளசிகோபால் நம்மை தாய்லாந்துக்கு அழைத்துச்செல்கின்றார்.புறப்பட ரெடியா?

34.வல்லிசிம்ஹனின் ஸ்விஸ் பயண அனுபவத்தை படங்களுடன் பகிர்ந்து இருக்கின்றார்.


35.”அய்யய்யோ.....எங்க ஊரை தமிழ்நாட்டிலிருந்து தூக்கிட்டாங்க..”ஒருவர் ஏன் இப்படி சப்தம் போடுகின்றார் யார்?ஏன்?எதற்கு?என்பதை அறிய ஆவலா?ரஹீம் கஸ்ஸாலி தளத்திற்கு வாங்க.

36.என் குழந்தை கொழு கொழு என இல்லையே என்று விசனப்படும் இளம் பெற்றோர் அவசியமாக படிக்க வேண்டிய இடுகை.குழந்தைகள் வயதிற்கேற்ற எடைதான் இருக்க வேண்டும் என்பதினை இக்கட்டுரை மூலம் தமிழ்வாசி பிரகாஷ் அருமையாக சொல்லி இருக்கின்றார்.

37.வெடிதேங்காய் என்ன ருசி?அதிலும் தமிழ் பிரியன் கூறும் மெதடில் வெடிதேங்காய் செய்தால் எப்படி இருக்கும்?


38.இப்பொழுது கிரீன் டீயின் மகத்துவத்தைப்பற்றிய பேச்சு நிறைய காதில் விழுகின்றது.எடக்குமடக்கு விபரமாக சொல்லி இருப்பதை பாருங்கள்.


39.முதல் முறையாக எஸ் கே தயாரித்த இட்லியை எவ்வளவு பெருமிதத்துடன் நம்முடன் பகிர்ந்திருக்கின்றார் பாருங்கள்.

40.கல்வித்தந்தைகள் எப்படி எல்லாம் கல்லா கட்டுகின்றார்கள் என்ற உண்மையை படம் பிடித்துக்காட்டுகின்றது பதிவர் சேகர் எழுதிய இந்தக்கட்டுரை.

41.உலக அதிசயங்களின் பட்டியல் உருவானது எப்படி என்பதினை இக்கட்டுரை மூலம் விவரித்து இருப்பவர் வரலாற்று சுவடுகள்.

42.குழந்தைகளுக்கு படிப்பு சுமையை அதிகரித்து அவர்களுக்கு இயந்திர வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கும் படிப்பு முறையை நியாயமாக சாடும் உன்னைப்போல் ஒருவனின் வாதத்தினை கேட்போமா?



மேலும் வாசிக்க...

Thursday, March 8, 2012

அறுசுவைச்சரம்





ஆரோக்கியமாய் வாழவேண்டும் என்றுதான் அனைத்து மனிதர்களும் விரும்புவோம்.அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.மனிதன் நோய்வாய்ப் படும்போதுதான் ஆரோக்கியத்தைப் பற்றிய அக்கறையும், கவலையும்,அச்சமும் தோன்றுகின்றது. நோயின் தாக்கம் குறைந்தவுடன் இந்த கவலையும், அக்கறையும்,பயமும் தானாகவே மறைந்துவிடுகின்றன.இதுதான் உண்மை.

உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையான உடல் நலக்கேடுகள் முறையற்ற உணவினாலும்,ஆரோக்கியம் இல்லாத உணவினாலும் ,அளவுக்கதிகமான உணவினாலும் தோன்றுகின்றன.

நோயுற்ற பின்னரே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டு அதனை சீர்படுத்த முற்படுகிறோம்.வரும்முன் காப்போம் என்ற வைராக்கியம் மனதில் உருவாக வேண்டும். சீரான உணவு, சத்தான உணவு,சுத்தமான உணவு ,ஆரோக்கியமான உணவு,நார்சத்து அதிகமுள்ள உணவு,அளவான உணவு இவற்றின் மூலம் தேக ஆரோக்கியத்தை எப்போதும் சிறப்பான முறையில் வைத்துக் கொள்ளவேண்டும்.

அறுசுவைகளின் குணநலன்கள்

இனிப்புச் சுவை உடலுக்கு பலத்தை அளிக்கும். எலும்புருக்கி நோய்க்கு நல்லது. உடலை குண்டாக்க கூடியது.மனதிற்கும்,உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையாகும்.

புளிப்புச் சுவை பசியைத் தூண்டும்.நரம்புகளுக்கு வலு கொடுக்க வல்லது. இருதயத்திற்கு நல்லது. ருசியை உண்டாக்கும். உஷ்ணவீரியம் உடையது. பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற உபாதைகள் தோன்றும். உடல் அசதி ஏற்படும்.

உவர்ப்பு பசியைத் தூண்டும். உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். வேர்வையை உண்டாக்கும். அதிகமாக உப்பை சேர்த்தால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்.சிறுநீர்கபாதிப்புகளை உருவாக்கும். அதிகமாக உட்கொண்டால் தோல் தள்ர்ச்சி ஏற்பற்பட்டு சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதியும் ஏற்படும்.


பிடிக்காத சுவையாக இருப்பினும் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது.கசப்புச் சுவை கொழுப்பை குறைக்கும். மலம், சிறுநீரை குறைக்கும். எளிதில் ஜீரணமாகும். குளிர்ச்சியானது, தொண்டையை சுத்தம் செய்யும்.

காரம் தோல்தடிப்பு, வீக்கம், தொண்டை நோய் ஆகியவற்றைப் போக்கும். கொழுப்பை குறைக்க உதவும். இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

துவர்ப்பு வாதத்தை அதிகரிக்கும். பித்த கபங்களைக் குறைக்கும்.வியர்வையை குறைக்க உதவுகின்றது.எளிதில் ஜீரணமாகாது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்பைக் குறைக்கும்.பேசும் திறனை பாதிக்கும்.

இவ்வாறாக ஒவ்வொரு சுவைகளும் மனித உடல் நலத்திற்கு நன்மைகளும் தருகின்றது.தீமைகளையும் தருகின்றது.

எதனையும் அளவோடு உட்கொண்டால் சாலச்சிறந்தது என்பதினையே “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு”என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்லிச்சென்றார்கள்.

பெண்கள் தினமான இன்று சமைப்பதில் வல்லவர்களான சமையல் திலகங்களான ,பதிவுலக நட்புக்களின் விதவிதமான சமையல் திறமைகளையும்,சிலர் ருசித்த உணவகங்களின் அனுபவத்தினையும் பார்ப்போம்.

அனைவருக்கும் பெண்கள் தின
வாழ்த்துக்கள்.


1.சமைத்துஅசத்தலாம் தலைப்பினைபோல அசத்தலாக சமைத்து நேர்த்தியான குறிப்புகளுடன் வித விதமான சமையல் குறிப்புகளை தந்து அசத்தியவர் இப்பொழுது வீடியோ சமையல் மூலம் பிரியாணி செய்து காட்டி மேலும் அசத்தி விட்டார் ஆசியா.


2.விருந்து என்றால் அசைவப்பிரியர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பிரியாணி.அநேக அசைவ விரும்பிகளுக்கு பெயரைக்கேட்டாலே நாவில் எச்சில் ஊறும் வகை வகையான பிரியாணியைப்பற்றி சமையலில் அட்டகாசம் செய்துவரும் ஆல் இன் ஆல் ஜலீலா சொல்வதைப்பாருங்கள்.


3.ஓட்ஸை வைத்தே கலக்கி வருபவர்.ஓட்ஸில் விதம் விதமாக ரெஸிப்பி சொல்வதில் கில்லாடி மேனகா.

4.பூந்திலட்டு பேசன் லட்டு ரவா லட்டு,திருப்பதி லட்டு,மா லட்டு என்று கேள்விப்பட்டுள்ளோம்.பார்லி லட்டை கேள்விபட்டுள்ளீர்களா?கீதா ஆச்சல் பார்லியில் லட்டு செய்து இருக்கின்றார்.

5.இருபதே நிமிடத்தில் மைக்ரோவேவில் சுலபமாக மைசூர்பாக் செய்து காட்டி இருக்கின்றார் காஞ்சனா ராதாகிருஷ்ணன்.


6.மிருதுவான சுவையான இட்லி தயாரிப்பின் சகல நுணுக்கங்களையும் பிங்கர் டிப்ஸில் வைத்திருக்கும் இட்லி ஸ்பெஷலிஸ்ட் மகி பக்கம் கொஞ்சம் போய் பாருங்களேன்.


7.சென்னையில் நல்ல ரெஸ்டாரெண்ட் போவதென்றால் இவரது வலைப்பூ சென்று பார்த்து விட்டு செல்லலாம்.விதம் விதமான ரெஸ்டாரெண்டுகளுக்கு சென்று அனுபவத்தினை அழகிய படங்களுடன் பகிர்ந்து இருக்கின்றார் வித்யா.


8.கடையில்தான் ரஸ்க் வாங்கி சாப்பிடுவோம்.வீட்டிலேயே ரஸ்க் செய்து சாப்பிட கற்றுத்தந்து இருப்பவர் யாஸ்மின்


9.அப்சராவின் பருப்பு கடைசல் ரசத்தையும் சூடாக டேஸ்ட் செய்து பாருங்கள்.


10எனக்கே எனக்காக ஆமினா அவசரம் அவசரமாக செய்து காட்டிய அருமையான பெப்பர்சிக்கன்.


11.ரவாவில் உப்புமா கிச்சடி கேசரி லட்டு,பாயசம் என்றுதான் ரெஸிப்பி இருக்கும்.புவனேஸ்வரி ராமனாதன் ரவாவில் பொங்கல் செய்து காட்டி இருக்கின்றார்.


12.மின்மினி தயாரித்த தக்காளி ரசத்தையும் கூடவே ரசத்தில் சேர்த்திருக்கும் பொருட்களின் மருத்துவ குணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.



13.திண்டுக்கல் பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி,ஆம்பூர் பிரியாணி,வாணியம்பாடி பிரியாணி பாகிஸ்தானி பிரியாணி ரேஞ்சில் அலிகார்பிரியாணி செய்து அசத்திவிட்டார் அன்னு.



14.இறைச்சியில் அவியல் செய்து நாவூறச்செய்து விட்டார் நிஹாசா.



15.தக்கடி..பெயரை பார்த்தால் பகீர் என்றுள்ளதா?வேறொன்றுமில்லைங்க.சுருக்கமாக சொல்லப்போனால் கறிகுழம்பில் போட்ட கொழுக்கட்டைதான் தக்கடி.இஸ்லாமிய சமையலில் முன்னனியில் நிற்கும் அருமையான பதார்த்ததை நாஸியா செய்து காட்டி இருக்காங்க.


16.பருத்தியில் பஞ்சு எடுத்து அதில் இருந்து ஆடை தயாரிக்கலால்.ராதாஸ் கிச்சனில் பருத்தியில் சுவையான பருத்திப்பால் காய்ச்சி இருகின்றார்.மிகவும் சத்தானது.டிரடிஷனலானது.



17.இலங்கையில் சம்பல் வகைகள் பிரபலம்.அதில் இடிச்ச சம்பலை தூயா செய்து அசத்தி இருக்கின்றார்.


18.வெளிநாட்டு வரவான பாஸ்தவை ரொம்ப சிம்பிளாக செய்து காட்டி இருக்கின்றார் அமுதா.சுலபமான முறையைப்பார்த்தால் உடனே சமைக்கத்தோன்றும்.


19.பெயரைப்பார்த்தாலே கலகலப்பாக உள்ளது அல்லவா?என்ன ஒரு அம்சமாக கலகலாசுருள் செய்து அதனை அழகாக அடுக்கியும் வைத்தும் பந்தி வைத்து விட்டார் பாசமலர்


20.பேக்கரியில் கிடைப்பது போலவே சாக்லேட் சிப் குக்கீஸ் செய்து காட்டி இருக்கின்றார் என் சமையல்.இதை தயாரிக்க சற்று மெனக்கெட்டாலும் சுவை சூப்பராக இருக்கும் என்று படத்தைப்பார்த்தாலே தெரிகின்றதே.


21.தனியாக வறுத்து அரைத்த பொடியைப்போட்டு பொடி போட்ட வத்தக்குழம்பு செய்து காட்டி இருக்கின்றார் பிரியா ராம் .


22.அரிசி முறுக்கு பயத்தம் முறுக்கு,கடலைமா முறுக்கு மைதா முறுக்கு முள்ளு முறுக்கு என்று கேள்விப்பட்டுள்ளோம்.ராகி முறுக்கு கேள்விப்பட்டுள்ளீர்களா?ராகி முறுக்கு செய்து புதுமை செய்து விட்டார் அன்புடன் ஆனந்தி.அதுவும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன்.


23.மிஞ்சிய இட்லிகளை வைத்து விழித்துக்கொண்டு இருகின்றீர்களா?டோண்ட் வர்ரி. ஹாஷினி சொல்லிய இட்லி மஞ்சூரியனை பார்த்தால் இட்லியை கொஞ்சம் அதிகமாகவே பண்ணுவீர்கள் இனிமேல்.

24.படத்தில் இருப்பது மஞ்சள் வர்ண ரோஜாப்பூவா என்று கேட்டு விடாதீர்கள்.உருளைக்கிழங்கு சிப்ஸைத்தான் இத்தனை கலை நயத்தோடு செய்து பார்ப்பவரை வாவ் போட வைத்து விட்டார் வசந்தமுல்லை.எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா!


25.கலர் ஃபுல்லான மெத்தென்ற ஓட்ஸ் டோக்ளா செய்து காட்டியவர் அடுப்பங்கரை கமலா


26.தான் ருசித்த உணவகங்களை படங்களுடன் பகிர்ந்திருப்பவர் விக்னேஷ்வரி.


27.சாருஸ்ரீராஜ் முதல் குறிப்பே சுவையான அசோகா அல்வா.


28.பலாபழத்தில் கலர்ஃபுல் அல்வா செய்து அசத்தி இருப்பவர் தெய்வசுகந்தி.


29.சிம்பிளா ஃபிரை.அவசரத்துக்கு உதவும் ஒரு டிஷ்ஷை செய்து காட்டி இருக்கின்றார் சித்ரா கிருஷ்ணன்


மேலும் வாசிக்க...

Wednesday, March 7, 2012

அனுபவச்சரம்




மனித வாழ்க்கையை பூரணமாக்குவது அவன் பெற்றுக் கொள்ளும் அனுபவங்கள்தான்.வாழ்க்கை என்ற இலக்கை தொட வேண்டுமானால் அனுபவம் என்ற நெளிவு சுளிவுகளை கடந்துதான் ஆகவேண்டும்.

ஆராய்சிகள், மனித செயற்பாடுகள்,பரிணாமம் ,கண்டுபிடிப்புகள்,விஞ்ஞான வளர்ச்சி அனைத்துக்கும்,காரணகர்தாவாக இருப்பது மனிதனுக்கு கிடைக்கும் அனுபவங்களைக்கொண்டுதான்.

பிறருடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் மற்றவரது அனுபவம் இருக்க வேண்டுமே தவிர தனது அனுபவத்தை மற்றவர்களுக்கு திணிப்பது என்பது ஒரு வித சலிப்பத்தரும்.

பிறரின்அனுபவத்தை மட்டிலும் பார்த்து அதனையே குறிகோளாக்கிக்கொள்ளாமல்,பிறர் அனுபவத்தை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக,ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ்வதே சாலச்சிறந்தது.

நம் வலை உலக நட்புக்கள் தங்கள் சுவாரஸ்யமான அனுபவங்களை தங்களது எழுத்துத்திறமையால் இன்னும் சுவாரஸ்யம் கூட்டி சுவைபட தங்கள் பகிர்வுகளில் பதிந்துள்ளார்கள்.அவற்றில் சிலவற்றினை இன்றைய அனுபவச்சரத்தில் காண்போம்.


1.சிலரின் எழுத்துக்களில் நகைச்சுவை இருக்கும். கணேஷின் எழுத்துக்களோ நகைச்சுவையே எழுத்தாகா இருக்கும்.இவரின் இந்த அனுபவத்தை படித்துப்பார்த்து வாய் விட்டு சிரித்து மனதினை உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.


2.மும்பை வாசியான இவர் பதிவுகளில் மும்பையைபற்றி அதிகம் அறிந்து கொள்ளலாம்.மும்பையின் ரத்த நாளங்கள் என்று இவர் குறிப்பிடுவது எதனைத்தெரியுமா? அமைதிச்சாரலின் இந்த இடுகையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.


3.சாலை விபத்துகளில் உயிரிழப்பிற்குரிய காரணங்களில் முக்கியமானவை போதை மருந்துகள்,மது பானங்கள் மற்றும்
அதீத சோர்வு என்ற உண்மையை பதிவர் சுல்தான் வாசித்து பகிர்ந்த இந்த அனுபவம் மனதினை நெகிழ்த்தியது.


4.நியுஸிலாந்தில் கொண்டாடிய தீபாவளியை சுவாரஸ்யமாக படங்களுடன் பகிர்ந்திருக்கின்றார் இமா.


5.”வாழ்க்கையே வேடிக்கையானதுதான். அதில் டயட் வேற இருந்து காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இப்போ இல்லை”இப்படி சொல்வது யார் தெரியுமா?வெட்டிப்பேச்சு என்று தலைப்பிட்டு வலைப்பூ எழுதினாலும் அர்த்தமுள்ள பேச்சுகளாக பகிரும் சித்ராதான்.


6.”விஷேஷங்களுக்கு ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்லை” என்று தன் ஊரைப்பற்றி வெகு சுவாரஸ்யமாக அக்பர் சொல்வதைப்பார்ப்போமா?

7.நகரத்தார் இல்லத்திருமணத்தை சுவாரஸ்யம் பட விளக்கத்துடன் கூடிய தேனம்மையின் இந்த பகிர்வை பாருங்கள்.

8.தென் மாவட்டத்தினர் மெதுவாக ஊர்ந்து செல்லும் லோக்கல் புகை வண்டியில் சோம்பேறித்தனமாக பயணம் செய்தது போக எக்ஸ்பிரஸ் ரயில் போட்டதும் பயணம் படு சுறுசுறுப்பாக தென்மாவட்டத்தினருக்கு அமைந்து விட்டதை சுவாரஸ்யம் பட சொல்லும் சோனகனின் அனுபவத்தினை பார்ப்போமா.


9.சுற்றுலா பிரியரான இவர் தான் சுற்றிவந்த ஊர்களை சுவைபட படங்களுடன் இடுகையில் பதிவிட்டு நம்மை அந்த தளங்களுக்கே அழைத்து சென்று விடுவார் கிளியனூர் இஸ்மத்


10.சேலையில் இவர் போட்டது வண்ண அலங்காரங்களும் டிசைன்களும் மட்டுமல்ல.அன்பும்,பாசமும் சேர்ந்தே.அழகாக சேலையை வடிவமைத்த செந்தமிழ்செல்வியின் கைவண்ணத்தை பார்ப்போமா.


11.வாழ்வதோ தூரதேசத்தில்.இருப்பினும் தீபாவளி முதல் சிறிய பண்டிகைகள் வரை அனைத்தையும் பழமை மாறாமல்,கொண்டாடி,அனுஷ்டித்து,அதனை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார் விஜி.



12.புகைப்படங்கள் எடுப்பதில் வித்தகி.இவர் கண்களை கவரும் விதமாக எடுத்த புகைபடங்களை வலையில் பறிமாறி பரவசப்படுத்துகின்றார் ராமலக்‌ஷ்மி.பெங்களூரில் நடந்த குடியரசுதின கண்காட்சியை தன் புகைபடகருவியினுள் சிறை பிடித்து நமக்கு விருந்தளிப்பதை ரசிப்போமா.


13.”முதுமைக்கான சேமிப்பை இதுவரை ஆரம்பித்திருக்காவிட்டாலும் இனியாவது அந்த சேமிப்பைத் தொடங்க ஆரம்பிப்போம்” என்ற விழிப்புணர்வை இக்கட்டுரை மூலம் ஆழ்ந்த அர்த்ததுடன் அடித்து சொல்லுகின்றார் மனோ சுவாமிநாதன்.


14.சுற்றுலா செல்வதற்கான பல நல்ல அவசியமான தகவல்களை விலாவாரியாக சொல்கின்றார் என்றும் இனியவன்.


15.மின்சாரம் எங்களைத் தாக்காவிட்டாலும்
மின் வெட்டு எங்களை நன்றாகவே தாக்குகிறது!என்று இன்றைய தமிழ்நாட்டின் இருட்டு நிலவரத்தை முனைவர்.இரா.குணசீலன் கூறி இருப்பது நியாயம்தானே.


16.தான் கொண்டாடிய பழமை மாறாத பொங்கல் பண்டிகையை பொங்கும் மகிழ்ச்சியுடன்,அருமையான புகைபடங்களுடன் ராஜி பகிர்ந்திருப்பதை பாருங்களேன்.


17.சோகத்தை மறக்க குடிப்பதுதான் ஒரே வழியா?தொலைக்காட்சித்தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதாக அமையலாமா?!இன்றைய தொலை காட்சித்தொடர்கள் சமூகக்கேடுகளுக்கு காரணியாக அமைந்து விட்டது என்ற உண்மையை காரத்துடன் சாடுகின்றார் வியபதி

18.வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்து கொண்டே இருக்கின்றது கறுவல் சொல்லும் கருத்தினை படித்துப்பாருங்கள்.


19.பயணிகளின் கவனதிற்கு பாங்கான தகவல்களை அள்ளித்தெளித்திருக்கின்றார் அரபுத்தமிழன்.


20.தமிழ்நாட்டில் மட்டிலுமா உழவர் சந்தை?யு எஸ்சிலும் உழவர் சந்தை உண்டு.விசா இல்லாமல்,டிக்கெட் செலவிலாமல் யு எஸ் உழவர் சந்தைக்கு போகலாமா? இதயம் பேசுகிறது இலாவுடன் உழவர் சந்தை செல்வோமா?


21.அப்பா அத்தான் ஆன கதையை ஒரு ஆசிரியையான செபா தன் அனுபவத்தில் இருந்து சுவைபட கூறுகின்றார்.


22ஒரு பெரிய பாடகரை பிரமாதமாக அறிமுகப்படுத்தும் தளிகாவின் நகைச்சுவையைப்பாருங்கள்.



23.நாமும் கிராமத்தினுள்ளேயே போய் வந்த அனுபவம் கிடைக்கின்றது.ஒரு பொன்னான மாலைப்பொழுதினை சுவைபட பகிர்ந்துள்ள ஈரோடு கதிரின் பகிர்வை படித்துவிட்டு.


24.தாவரத்துக்கும் தனிமை பிடிப்பதில்லை,கூட்டம் தேவைப்படுகிறது என்று தன் தோட்ட அனுபவத்தினை சொல்கின்றார் கோமா.


25.நாளை பள்ளிப்பொதுத்தேர்வுகள் வர இருக்கின்றன.பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பயன் படும் வகையில் அருமையான டிப்ஸ்களை வழங்குகின்றார் மிடில்கிளாஸ் மாதவி.


26.உஷா ஸ்ரீகுமார் பதிவுலகிற்குத்தான் புதிது என்றாலும் பத்திரிகை உலகிற்கு மிகவும் பழையவர்.கதை ,கட்டுரை,கைவினைப்பொருட்கள் என்று அனைத்தையும் எழுதக்கூடியவர்.வரும் நாட்களில் இவரது படைப்பாற்றலை வலைப்பூவில் நிறைய காணலாம்.


27.வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள்,நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் அதன் இனிமையையும்,கூட்டுக்குடும்பம் தரும் உபகாரத்தினையும் கெளசல்யா பகிர்துள்ளார்.


28.விமானப்பயணம் சிலருக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.சிலருக்கு போர் அடிக்கும்.சிலருக்கு தூக்கத்திலே கழியும்.சிலர் பக்கதில் இருப்பவருடன் பேசியே கழியும்.பதிவர் கிரிக்கோ டரியல் பயணமாக அமைந்து விட்டது.


29.எங்க போயிட்டிருக்கோம் நாம? இப்படி நியாயமாக கோபப்பட்டு இருப்பவர் வலை உலகின் புதுவரவு நிரஞ்சனா.


30.ஹைதையை அருமையாக படங்களுடன் சுற்றி காட்டி இருப்பவர் மோகன்குமார்.



31.வாழ்வில் மனிதர் தேகப்பயிற்சி செய்வதால் மனதில் உற்சாகத்தையும், அதனால் வாழ்வில் மகிழ்ச்சியையும் பெறுகிறார்கள். என்பதினை வேதா இலங்காதிலகம் இக்கட்டுரையில் விவரித்து இருக்கின்றார்.

மீண்டும் மற்றுமொரு சரத்தில் நாளை சந்திப்போம்.

...தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக இறைவன் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை - 4:36 அல்குர்ஆன்




மேலும் வாசிக்க...

Tuesday, March 6, 2012

கதைச்சரம்




படிக்கும் செய்திகளை,சிறு நிகழ்வுகளை,சின்னஞ்சிறு அனுபவங்களை,நகைச்சுவையுடன் நம்மை சிரிக்க வைத்த நிகழ்வுகளை,செவி வழியாய் கேட்பவைகளை,விழி வழியே காண்பவைகளை,சிந்தனையில் உதித்தவைகளை,அக்கம் பக்கம் நடப்பனவற்றை கருவாய் எடுத்துக்கொண்டு அதில் கற்பனை கலந்து எழுதுவதுதான் சிறுகதை.

சிறுகதைகள் என்பது படிப்பினையை அடிப்படியாக கொண்டு உயர்ந்த குறிகோளை ,விழிப்புணர்வை வலியுறுத்தவதாக இருப்பின் அது முழுமை அடைகின்றது.படைப்பாளியின் கற்பனை சிறகு விரிய விரிய தன் எண்ணங்களை சுவாரஸ்யம் குறையாமல் படிப்பாளிக்கு அலுப்புதட்டாமல் எழுதப்பட வேண்டும்.

காந்தியடிகள் அரிச்சந்திரன் கதை மீது ஈடுபாடு கொண்டு சத்தியம் பேசுபவராக விளங்கினார்.

வீர,தீரக்கதைகளைக் கேட்டு சிவாஜி தீரனாகத் திகழ்ந்தார் என்று சரித்திரம் கூறுகின்றது.அதுபோன்று படிப்பாளியின் மனதினை கவரும் விதமாக ஒரு படைப்பாளின் படைப்பு இருந்துவிட்டால் அந்த படைப்பின் முழு பயனும் அனைவருக்கும் கிடைத்து விடுகின்றது.

தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத் துணை நின்றவை வாராந்திர, மாதந்திர இதழ்களே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தப் படைப்பிலக்கியம் இன்று மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இப்பொழுது இணையம் அதில் அசூர வளர்ச்சியைக்கண்டுள்ளது.

குடத்திலிட்ட விளக்கு போன்று திறமைகள் வெளிப்படாமல் அத்தனை திறமைகளையும் மறைத்துக்கொண்டு மறைந்து போனவர்கள் எத்தனையோ பேர்.இன்று அப்படி அல்ல.வலைப்பூ என்று ஒன்று தோன்றி பிரமாண்டாமாக வளர்ச்சி கண்டு நம்மை எல்லாம் ஆக்ரமித்துக்கொண்டுள்ளது.படைப்பிலக்கியத்தில் சிறிதே திறமை இருப்பினும் அதனை இணையம் மூலம் பந்தியிலிட்டு தங்களை செதுக்கிக்கொள்கின்றனர்.பட்டை தீட்டிக்கொள்கின்றனர்.

நம் வலையுக நட்புக்கள் தம் திறமைகளை வெளிப்படுத்தி தம் படைப்பிலக்கியங்களை படிப்பிலக்கியங்களாக வலைப்பூவில் பறிமாறிய சிலவற்றினை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


1.யானைக்கும் அடிசறுக்கும் என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல அதி முன் ஜாக்கிரதைக்காரான முகுந்தனின் அனுபவத்தை தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவை ததும்ப அழகிய நடையில் வை.கோபாலகிருஷ்ணன் எழுதிய இந்த சிறுகதையை ரசித்து வாசித்தால் சிரித்து மகிழலாம்.

2.எழை விவசாயி படும் கஷ்டங்களை கிராமிய மணத்துடன்,ஊர் வழக்குசொற்களை சரளமாக உபயோகித்து ஸ்டார்ஜன் எழுதிய மனதினை நெகிழ வைக்கும்

3.கண் திருஷ்டி பட்டு விடும் என்பதற்காக ஒரு மனைவி கில்லாடித்தனமான வேலைகளை செய்கின்றாள் என்பதை வெகு சுவாரஸ்யமாக ஹுசைனம்மா இந்த சிறுகதையில் விவரிப்பதைப்பாருங்கள்.

4.பாட்டியைப்பற்றி நெகிழ வைக்கும் சிறுகதை.அதிராவின் கன்னி முயற்சியாயினும் இலங்கைதமிழில் வெகு சுவாரஸ்யமான நடையில் எழுதி மனதினை கவர்ந்து விட்டார்

5.முன்பெல்லாம் சங்கீதம் என்பது குரல் வளத்திற்கும் பாடகர்களின் அற்புதமான பாடும் திறமைக்காகவும் சபாக்களில் ரசிகர்கள் மெய் மறந்து பாடல்களை ரசிப்பார்கள்.இன்றோ பட படக்கும் வகை வகையான பட்டுகளுக்கும்,மினுமினுக்கும் டிஸைன் டிஸைனான நகைகளுக்கும் கூட்டம் கூடுகின்றது என்பதினை வெகு அழகாக யதிஷ்ர்டம் சிறுகதையில் அழகிய நடையில் வித்யாசுப்ரமணியன் எழுதியதை பார்க்கலாமா?

6.மனதில் மறவாது நிலைத்து நிற்கும் படியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அழகான சிறுகதையை படைத்திருக்கின்றார் செ.சரவணக்குமார்.


7.இவரை அறிமுகப்படுத்தும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லாவிட்டாலும்,இவரது நகைச்சுவை மிளிரும் எழுத்துக்களின் பால் ஈர்க்கப்பட்டு இவரது தீவிர ரசிகையாகி விட்டேன். இவரது படைப்புகளை படித்து மனம் விட்டு சிரித்து மகிழலாம்.கடுகு என்ற பெயரில் எழுதும் முது பெரும் எழுத்தாளர் திரு.பி.எஸ்.ரங்கநாதன்அவர்கள் பத்திரிகை வாயிலாக அனைவரும் அறிந்த ஒருவர்.கமலா,தொச்சு,அங்காச்சிப்பற்றி எழுதும் இவரது படைப்புகளை படிப்பவர்களை கலகலப்பாக்கிவிடும்.

8.தங்கையின் திருமணத்திற்காக ஒரு அண்ணன் படும் செல்ல அவஸ்தையை வானதி இந்த சிறுகதையில் சொல்லி இருக்கின்றார் .


9.பாம்பு கடித்துப்பிழைத்தவனும் உண்டு,செருப்பு கடிச்சு செத்தவனும் உண்டு என்ற பழமொழிகொப்ப அப்பாவி தங்கமணி தனக்கே உரிய பாணியில் அருமையான கருவை கையில் எடுத்து அழகான சிறுகதையை பின்னி இருகின்றார்.

10.இறை நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் சேர்த்து தனக்கேற்பட்ட கடும் பிணியை கதீஜா கடந்து வந்ததை இச்சிறுகதை மூலம் விழிப்புணர்வு ஊட்டும் வகையில்,மனதில் ஆழமாக பதித்து விட்டார் ராஜகிரி ஹாஜா மைதீன்.

11.”வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழியுங்கள். அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்.” என்ற வாழ்க்கை தத்துவதை எத்தி வைக்கும் அழகிய சிறுகதை அவர்கள் உண்மைகள் எழுதிய இந்த சிறுகதை.

12.சுவாரஸ்யமான நிகழ்வுகளை கதையாக வடித்துள்ள ரிஷபனின் இந்த சிறுகதையை படித்துப்பாருங்களேன்.

13.“நான்கு மாடிகள் இறங்கிய பின்னரும் அந்த கதறல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது..அவனுக்கு மட்டும்..” கதறல் சப்தம் அந்த மருத்துவருக்கு மட்டுமல்ல மயிலனின் இந்த சிறுகதையை படிக்கும் அனைவருக்கும்தான்.மனதை பிழிந்து விடும் சிறுகதை.

14.எதிர் பார்க்காத ஒரு முடிவை இக்கதையில் புகுத்தி கலா நேசன் எழுதிய அருமையான சிறுகதையை படித்துத்தான் பாருங்களேன்.

15.விளக்கின் வெளிச்சம் கண்களை விட்டும் மறைய இயலாத அளவிற்கு ஒரு அரிக்கேன்விளக்கை வைத்து மனதினை இந்த சிறுகதை மூலம் தொட்டு விட்டார் சே.குமார்

16."இன்னைய தேதியிலே கல்யாணத்த சிறப்பா நடத்துற தெம்பு என்னை விட நான் அனுப்புற ரூபாவுக்குத் தான் இருக்குங்குறப்ப நான் எப்புடி முந்திகிட்டு போறது "பெற்ற மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் பணம் ஈட்ட நாடு விட்டுநாடு சென்று இருக்கும் ஒரு தந்தையின் உணர்வை பளிசென்று படம் பிடித்து காட்டுகின்றார் நூருல் அமீன் இச்சிறுகதை மூலமாக.

17.மினி கதைகளிலேயேஅருமையாக டிவிஸ்ட் வைத்து அசத்தி விட்டார் செய்யத்.


18.சுண்ணாம்பும் வெண்ணையும் என்ற தலைப்பில் இர்ஷாத் எளிய நடையில் எழுதிய இந்த சிறுகதை கண்டிப்பாக படிப்பவரின் மனதினை தொடும்.


19.பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள நேசத்தை இச்சிறுகதையில் விவரித்து அம்மாச்சியை பேத்தி மட்டுமல்ல நாமும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் பதித்து விட்டார் கீதமஞ்சரி.


20.ஆயிரம்தான் வகை வகையான வெளிச்சாப்பாடு எளிமையான வீட்டு சாப்பாட்டுக்கு இணையாகாது என்பதை லக்‌ஷ்மியம்மா இந்த சிறு கதைமூலம் சொல்லி இருப்பது அருமை.


21.கதையை வாசித்து முடித்தும் டொக் ..டொக் .டொக் சப்தம் காதிலேயே ஒலிக்கும் படி செய்துவிட்ட வெங்கட் நாகராஜின் சிறுகதை இது.

22.கணவனை இழந்த மனைவின் உணர்வுகளை
கிராமிய மணம் தவழ இச்சிறுகதையில் அழகாக வடித்து நெகிழ்த்தி விட்டார் பிரியமுடன் வசந்த்.

23.மாமா,மச்சினன் என்றால் அநேக மாமாக்களுக்கு இளக்காரம்தான்.இந்த மாமா மட்டும் விதிவிலக்கா என்ன?பழனி கந்தசாமி சாரின் மாமாவை படித்து விட்டு சிரியுங்கள்.

24.வீட்டு வேலை செய்பவர்களை எப்படி டீல் பண்ணுவது என்று நல்லதொரு மெசேஜை காதோடு சொல்லிய கே.பி ஜனாவின் சிறுகதை இது.

25.லிப்ட்மாமா மனதினை விட்டு அகலாத மாமாவாகி விட்டார்.ஆர் வி எஸ் எழுதிய சிறு கதை இது.

26.இனிமையான முடிவுடன் மனம் மகிழ்ந்து ரசிக்க வைத்து அருமையான சிறுகதையை படைத்து கெளல்யா-தங்கப்பன் தம்பதிகளை கண் முன்னர் நிறுத்தி விட்டார் ஜீவி.

27.கதாபாத்திரங்களை கண் முன்னர் நிறுத்தி உண்மையான அன்புக்கு தடை ஏதுமில்லை என்பதை அழகாக இச்சிறுகதையில் வடித்திருக்கின்றார் தமிழ் உதயம்.

28.நட்பின் மகத்துவத்தை மென்மையாக சொல்லி இருகின்றார் கலையரசி.இந்த சிறு கதை மூலம்.



மேலும் வாசிக்க...

Monday, March 5, 2012

சுயச்சரம்


வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் ஸாதிகாவின் இனிய காலை வணக்கங்கள்!

வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்கச் செய்து என் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கொடுத்த ஐயா சீனா அவர்களுக்கும்,என் எழுத்தில் நம்பிக்கை வைத்து எனக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி ஊக்கமும் ஆக்கமும் தந்து பரிந்துரை செய்த ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும்,மற்றும் வலைச்சர ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

வலைப்பூக்களின் வளர்ச்சிக்கு வலைச்சரம் பேருதவியாக இருக்கின்றது.வேறு எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் வலையுலக வளர்ச்சி ஒன்றினையே குறிகோளாகக் கொண்டு சீனா ஐயா மற்றும் வலைச்சர குழுவினர் அனைவரின் சேவையையும்,உழைப்பினையும் அறிந்து வியந்து போகின்றேன்.வலைச்சரம் மேன்மேலும் சிறப்படைய வலைச்சர குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை இச்சமயம் கூறிக்கொள்கிறேன்.

சீனா ஐயா வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்ததும் கணினி முன் அமர்ந்தவள் என் முக்கிய அலுவல்கள்,சாப்பிடும், தூங்கும் நேரம் தவிர எனக்கு மற்ற பொழுதுகள் கணினி முன்னேயே சுவாரஸ்யமாக கழிந்து கொண்டுள்ளது.ஒரு பரிட்சை எழுதும் மாணவியின் உணர்வுடன் இருக்கின்றேன்.

2009 ஆம் வருடத்தில் இருந்து எழுதுகின்றேன்.இந்த வலைப்பூ ஆரம்பித்ததால் நான் இன்று வரை 274 பாலோவர்களும்,455949 ஹிட்டுகளும்,பல நல் உள்ளங்களின் நட்புக்களும் பெற்று இருப்பது பற்றி மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.

என்னைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவினை பாருங்கள்.

வாழ்கையில் நகைச்சுவை என்பது இன்றியமையாதது.நாமும் சிரித்து பிறரையும் சிரிக்க வைக்கும் பொழுது மனித மனம் கொள்ளும் உவகை சொல்லில் அடங்காதது.அந்த வகையில் நகைச்சுவையான பதிவுகள் எனக்கு மிகவும் உகப்பானவை.

நான் கிண்டிய உப்புமாவை டேஸ்ட் செய்து பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.


அப்படியே டெய்லர் கிச்சாவை சந்தித்து விடுங்கள்.இப்படியும் ஒரு கில்லாடியா என்று சிரிப்பீர்கள்.


இட்லிக்கடை அன்னம்மா வாயைத்திறந்தாலே பழமொழி அருவியாக கொட்டும்.அன்னம்மாவின் பழமொழி அருவியில் சற்று நனையுங்கள்.

வாழ்வியல் என்ற லேபிளில் நான் பகிர்ந்த பதிவுகள் நிறைய பதிவர்களால் விரும்பி பார்க்கப்பட்ட பதிவுகள்.

என்தந்தையைப்பற்றிய இந்த பகிர்வும் இந்தக்கவிதையும் என் ஆத்ம திருப்திக்காக எழுதப்பட்டவை.

மீண்டும் நாளை மற்றொரு சரத்தில் சந்திப்போம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

நன்றி!

அன்புடன்,
ஸாதிகா ஹாஜா


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது