07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Tuesday, October 28, 2014

ஜெமோ (GMO) எனும் ஓரசுரன்

B.T.Tomato (கருப்புத் தக்காளி)
Photo Credit: Google
சமீபத்தில் பரவலாக‌ உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மூன்றெழுத்து GMO (ஜெமோ).

'ஜெமோ'விற்குள் இறங்குமுன், பசுமைப்புரட்சி குறித்து சிந்தித்தல் நலம் பயக்கும்.  பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பாரத நாடே பஞ்சம் பட்டினியில் தவிப்பதைத் தவிர்க்க, அன்றிருந்த அரசியல் தலைவர்கள் வேளாண் வல்லுநர்களோடு இணைந்து இத்திட்டத்தைக் கொண்டு வந்ததாக அறிகிறோம்.

எல்லாத் துறைகளிலும் இருக்கும் Pros & Cons, 'ஜெமோ'விலும் இல்லாமலில்லை.  மரபணு மாற்று விதைகள், உயர்ரக‌ ரசாயணம், பூச்சிக் கொல்லிகள், மேலதிக மகசூல். இவை, இதன் சிறப்புக்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன.  இதெல்லாம் தேவையேயில்லை, இவை நம் மண்ணின் வளத்தை இன்றில்லை என்றாலும் நாளை குலைத்துவிடும் என்று இயற்கை வழி விவசாயிகள் போராடுகின்றனர்.

GMO உலகையே ஆட்டி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவின் மான்ஸான்டோ நிறுவனம், வித்திலிருந்து, விருட்சம் வரைக்கும் தன் கைகளுக்குள் வைத்திருக்கிறது.  ஏன்?  நாளைய விவசாயம் இவர்களிடம் எனும் நிலையும் ஓங்கி வருகிறது.

GMO நன்மையே என நவீன விஞ்ஞானமும், பண முதலைகளும் சொல்லிக் கொண்டிருக்க, மரபணு மாற்று காய்கனிகளால் மனிதனுள் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அடித்துக் கூறுகின்றனர் இயற்கை வழி விவாசயம் செய்யும் பலர்.  இது பல கேடுகளை விளைவித்து, நாளைய சமுதாயத்தை சத்தின்றி நடைபோட வைக்கும் என்றும் பதறுகிறார்கள்.  உதாரணத்திற்கு ஒரு காணொளி Seeds of death.  தயவுசெய்து நேரம் ஒதுக்கி கவனித்துப் பாருங்கள்.

GMO ஒரு புறம் எனில், ஊரே பீட்ஸா, நூடுல்ஸ், பர்கர் என்று இன்னொரு புறம். நமக்கு இன்னும் Non GMO குறித்த விழிப்புணர்வு போதவில்லை என்றே தோன்றுகிறது.  இது குறித்து நம் பதிவர்கள் என்ன நினைக்கின்றார்கள் எனத் தேடியதில் மிக சொற்பமான பதிவுகளே காணக்கிடைக்கின்றன.  அதுவும் ஒரு சில வருடங்கள் முன்னர் எழுதியவை.  இதோ ...

நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி.  - அட்ரா...சக்க எனும் தளத்திலிருந்து.  இதில் பலரின் மறுமொழிகளும் சிந்திக்க‌ உகந்தவை.

பசுமை புரட்சி என்னும் மாய வலை - முத்துக்கிருஷ்ணன் அவர்களின் தளம்.  இவரைத் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்.  நன்றாகப் பேசக்கூடியவர்.

பசுமைப் புரட்சி..!!! - கலைவேந்தன் வடுவூர் தளத்திலிருந்து.  தான் எழுதியதல்ல எங்கேயோ படித்தது எனப் போட்டிருக்கிறார்.  இருப்பினும் வாசிக்க உகந்த பதிவு.

பசுமைப்புரட்சியின் உண்மைக் கதை - சங்கீதா ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து.  இவர் எழுதிய புத்தகத்திற்கு, எழுத்தாளர் 'ஜெமோ' அளித்த முன்னுரையின் ஒரு சிறு பகுதி ... "ஆகவேதான் சங்கீதா ஸ்ரீராமின் ‘பசுமைப்புரட்சியின் கதை’ என்ற இந்த நூல் எனக்கு என் வாழ்க்கையை விளக்கும் மிக அந்தரங்கமான, கொந்தளிப்பான ஒரு வாசிப்பனுபவமாக அமைந்தது. பசுமைப்புரட்சியைப்பற்றிய பெரும்பாலான ‘நவீனதொன்மங்களை’ இந்த நூல் மிக விரிவான ஆதாரங்களுடன் மறுக்கிறது. பசுமைப்புரட்சி நல்லது என்று இன்று கொஞ்சம் நிதானமான எவரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ‘பசுமைபுரட்சிதான் இந்தியாவில் பட்டினியை இல்லாமலாக்கியது’ என்று சொல்வார்கள். ‘இப்ப அது எப்டி இருந்தாலும் அப்ப அது நன்மைக்காகத்தான் வந்திச்சி சார்’ என்பார்கள்"

பி.டி. கத்தரிக்காய் குறித்த பீதியும், அறிவார்ந்த விவாதமும் - GMOவிற்கு ஆதரவாக தனது கண்ணோட்டம் தளத்திலிருந்து ரவி ஸ்ரீநிவாஸ்.  பதிவை படிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.  கண்மூடி நம்புகிறோமா நாமெல்லாம்.  நம்மாழ்வார், பாலேக்கர் செய்த செய்துவரும் பணியை எந்த ஆதாரத்துடன் இவர் மறுக்கிறார் எனத் தெரியவில்லை.  இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுகருத்து இருக்கத் தானே செய்யும்.

GMOவில் இருந்து விடுபட வேண்டுமெனில், இயற்கை வழி விவசாயம் தான் சிறந்தது என்று போராடும்/போராடிய பாலேக்கர், நம்மாழ்வார் போன்றோரின் கருத்துக்களை சிந்திப்போமாக!

நம்மாழ்வாரும்,எஸ்.கே.ஸாலிஹூம் - நேர்வழி எனும் தளத்திலிருந்து அதன் ஆசிரியர், நம்மாழ்வார் அவர்களின் வானகத்திற்கு விஜயம் செய்ததை விவரித்திருக்கிறார்.

நன்றி!  நாளை வேறொரு பதிவினில் சந்திப்போம்!!
மேலும் வாசிக்க...

Sunday, September 11, 2011

என்ன செய்து விட்டோம்..?


ஹாய்...ஹாய்...ஹாய்!

நேற்று காதல் கவிதைகளைப் படித்ததில் இருந்து ஒரே ”ரொமான்ஸ் மூடில்” இருப்பீர்கள். ஓரிடத்திலேயே நின்று விட்டால் எப்படி? நாமெல்லாம் நதி நீர் போல, ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓட்டத்தை ஆரம்பிக்கலாமா?

ரெடி... ஒன்...ட்டூ...த்ரீ....ஸ்டார்ட்!

பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ சாதகமாக இருப்பது இந்த பூமி ஒன்றேதான். இன்றைய நமது தேடல், உழைப்பு எல்லாமே அடுத்த தலைமுறையை இப் பூமியில் விட்டுச் செல்வதற்காக தான்.

ஆனால், அடுத்த தலைமுறையினர் வாழுவதற்கு ஏற்ற நிலையில் இப்பூமியை விட்டுச் செல்ல வேண்டாமா?  இது சிந்திக்க வேண்டிய விசயம் மட்டுமல்ல. செயல்பாட்டைத் துரிதப்படுத்த வேண்டிய தருணம்.! அதற்கு, நாம் என்ன செய்யலாம் என்பதற்கு நம் சக பதிவர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்கலாம்... வாருங்கள்!


1). நண்பர் ஈரோடு கதிர் அவர்களின் கண்ணில் சிக்கிய கோடியில் இருவரை  நீங்களும் அவர்களைக் கண்டு வாருங்கள்.

அந்த இருவரைக் கண்டு வந்தவுடன் வாழ்க்கையில் நாமும் ஒரு மரத்தையாவது நட்டு வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்று ஒரு வேகம் பலருக்கும் வந்திருக்கும். அதில் ஒரு சிலர் உறுதியாக இருப்பீர்கள். உங்களைத்தான் இந்த உலகம் தேடிக்கொண்டிருக்கிறது. மரங்களை எப்படி நடுவது; எங்கு நடுவது? என ஒரு ஐயம் வந்திருக்கும் இல்லையா? 

2).அதற்கான விவரங்களை பசுமை இந்தியா   பகிர்வதைக் கேளுங்கள். 

மரம் வளர்க்க ஆசைதான் இடமில்லையே. நான் என்ன செய்யட்டும் என்பவர்களுக்காகவும் வீடு கட்டுவதற்கே இடத்தைக் காணோம் என்று சாக்கு போக்கு சொல்பவர்களுக்காகவும் இந்தக் கட்டுரையில்  அவரே ஆலோசனை சொல்கிறார்.

3).கவிஞர் நா.சுரேஷ்குமார் , ”மரங்களை வளர்ப்போம்”  என அழைக்கிறார். அதற்கான காரணங்களை அவர் எடுத்துரைக்கும் விதத்தை, கவிதையாய் கேளுங்கள். இவரின் வலைதளத்தில் சமூகத்தின் மீதான அவரது அக்கறையை வெளிப்படுத்தும் கவிதைகள் நிரம்பிக் கிடக்கின்றன.

இதையெல்லாம் இணையத்தில் தேடி படித்துக் கொண்டிருக்கும் போது பசி லேசாக வயிற்றைப் பிராண்டியது. மேசைமீதிருந்த வாழைப்பழத்தைச் சாப்பிடும் போது பிறர் பசியைப் போக்க உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றியும், விவசாயம் பற்றியும் தேடிப் படிக்கலாமே எனத் தூண்டப்பட்டேன். கூகிள் துணையுடன் தேடல் துவங்கியது. 

4). பாரதி தம்பியின் “ நடைவண்டி”யைச் சென்று பாருங்கள்.  நாம் உண்ணும் சோற்றுப் பருக்கையை உற்பத்தி செய்ய வேலை இருக்கு...ஆள் இல்லை  எனும் குமுறலில் விவசாயிகள் எவ்வளவுச் சிரமங்களை எதிக்கொள்கிறார்கள் என்பது புரியும். 

விவசாயம் என்றவுடன் நீர் ஆதாரம் பற்றிய எண்ணம் அனிச்சையாய் வந்துவிட்டது. இது உலகில் எதிர்க்காலத்தில் மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தப் போகிறது என்பது கண் கூடாக தெரிந்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ’தேமே’ எனக் கிடக்கிறோம்.

5).பதிவர் பாரதி யின் தீப்பெட்டி-யைத் திறந்து மழை நீர் சேகரிப்பின்  வழிமுறைகளையும், அவசியத்தையும், புள்ளி விவரங்களுடன் புட்டுப்புட்டு வைக்கிறார்.
***

யற்கையைக் காக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உரியது என்றாலும், துரதிர்ஷ்டவசமாக மொத்தமாக ஏழை விவசாயிகளிடம் மட்டுமே அதைப்பற்றிய கவலை இருக்கிறது. இயற்கையைக் காக்க அரசு ஆயிரம் திட்டங்களை அறிவித்தாலும், துறை சார்ந்த அலுவலகங்களில் வெறும் ஆணைகளாகவே உறங்கிக் கிடக்கின்றன. உரியவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான உதவிகளை முன்னின்று அரசு ஊதியம் பெறும் அதிகாரிகள் முன்வர வேண்டிய தருணம் இது.  அதை அரசு, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் எல்லோரும் ஒரு கூரையின் கீழ் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி தீர்வை எட்ட வேண்டியது அவசர அவசியமாக இருக்கிறது.

இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் பணம் பணம் என்று பேயாய் அலைந்துக் கொண்டிருக்கிறோம். காசு கொடுத்தால் இங்கே எல்லாம் கிடைக்கும் என்ற நச்சு எண்ணத்தை இளம் சிறார்களின் மனதில் அவர்களறியாமல் நட்டு மரமாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த எண்ணத்தை அவர்களின் ஆழ்மனதில் இருந்து வேறோடு பிடுங்கி எறிய வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

ஒன்றாய் சிந்தித்து, நன்றாய் வாழ்வோம்.!

வாய்ப்பிற்கு நன்றி கூறி, வாழ்த்தியும், பின்னூட்டமிட்டும் உற்சாகப்படுத்திய உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைச் சொல்லி இப்பணியிலிருந்து இன்றுடன் விடைபெறுகிறேன்.

நன்றி!!!
***
நாளை முதல் புதிதாய் பொறுப்பேற்க இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது