07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Tuesday, October 28, 2014

ஜெமோ (GMO) எனும் ஓரசுரன்

B.T.Tomato (கருப்புத் தக்காளி)
Photo Credit: Google
சமீபத்தில் பரவலாக‌ உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மூன்றெழுத்து GMO (ஜெமோ).

'ஜெமோ'விற்குள் இறங்குமுன், பசுமைப்புரட்சி குறித்து சிந்தித்தல் நலம் பயக்கும்.  பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பாரத நாடே பஞ்சம் பட்டினியில் தவிப்பதைத் தவிர்க்க, அன்றிருந்த அரசியல் தலைவர்கள் வேளாண் வல்லுநர்களோடு இணைந்து இத்திட்டத்தைக் கொண்டு வந்ததாக அறிகிறோம்.

எல்லாத் துறைகளிலும் இருக்கும் Pros & Cons, 'ஜெமோ'விலும் இல்லாமலில்லை.  மரபணு மாற்று விதைகள், உயர்ரக‌ ரசாயணம், பூச்சிக் கொல்லிகள், மேலதிக மகசூல். இவை, இதன் சிறப்புக்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன.  இதெல்லாம் தேவையேயில்லை, இவை நம் மண்ணின் வளத்தை இன்றில்லை என்றாலும் நாளை குலைத்துவிடும் என்று இயற்கை வழி விவசாயிகள் போராடுகின்றனர்.

GMO உலகையே ஆட்டி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவின் மான்ஸான்டோ நிறுவனம், வித்திலிருந்து, விருட்சம் வரைக்கும் தன் கைகளுக்குள் வைத்திருக்கிறது.  ஏன்?  நாளைய விவசாயம் இவர்களிடம் எனும் நிலையும் ஓங்கி வருகிறது.

GMO நன்மையே என நவீன விஞ்ஞானமும், பண முதலைகளும் சொல்லிக் கொண்டிருக்க, மரபணு மாற்று காய்கனிகளால் மனிதனுள் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அடித்துக் கூறுகின்றனர் இயற்கை வழி விவாசயம் செய்யும் பலர்.  இது பல கேடுகளை விளைவித்து, நாளைய சமுதாயத்தை சத்தின்றி நடைபோட வைக்கும் என்றும் பதறுகிறார்கள்.  உதாரணத்திற்கு ஒரு காணொளி Seeds of death.  தயவுசெய்து நேரம் ஒதுக்கி கவனித்துப் பாருங்கள்.

GMO ஒரு புறம் எனில், ஊரே பீட்ஸா, நூடுல்ஸ், பர்கர் என்று இன்னொரு புறம். நமக்கு இன்னும் Non GMO குறித்த விழிப்புணர்வு போதவில்லை என்றே தோன்றுகிறது.  இது குறித்து நம் பதிவர்கள் என்ன நினைக்கின்றார்கள் எனத் தேடியதில் மிக சொற்பமான பதிவுகளே காணக்கிடைக்கின்றன.  அதுவும் ஒரு சில வருடங்கள் முன்னர் எழுதியவை.  இதோ ...

நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி.  - அட்ரா...சக்க எனும் தளத்திலிருந்து.  இதில் பலரின் மறுமொழிகளும் சிந்திக்க‌ உகந்தவை.

பசுமை புரட்சி என்னும் மாய வலை - முத்துக்கிருஷ்ணன் அவர்களின் தளம்.  இவரைத் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்.  நன்றாகப் பேசக்கூடியவர்.

பசுமைப் புரட்சி..!!! - கலைவேந்தன் வடுவூர் தளத்திலிருந்து.  தான் எழுதியதல்ல எங்கேயோ படித்தது எனப் போட்டிருக்கிறார்.  இருப்பினும் வாசிக்க உகந்த பதிவு.

பசுமைப்புரட்சியின் உண்மைக் கதை - சங்கீதா ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து.  இவர் எழுதிய புத்தகத்திற்கு, எழுத்தாளர் 'ஜெமோ' அளித்த முன்னுரையின் ஒரு சிறு பகுதி ... "ஆகவேதான் சங்கீதா ஸ்ரீராமின் ‘பசுமைப்புரட்சியின் கதை’ என்ற இந்த நூல் எனக்கு என் வாழ்க்கையை விளக்கும் மிக அந்தரங்கமான, கொந்தளிப்பான ஒரு வாசிப்பனுபவமாக அமைந்தது. பசுமைப்புரட்சியைப்பற்றிய பெரும்பாலான ‘நவீனதொன்மங்களை’ இந்த நூல் மிக விரிவான ஆதாரங்களுடன் மறுக்கிறது. பசுமைப்புரட்சி நல்லது என்று இன்று கொஞ்சம் நிதானமான எவரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ‘பசுமைபுரட்சிதான் இந்தியாவில் பட்டினியை இல்லாமலாக்கியது’ என்று சொல்வார்கள். ‘இப்ப அது எப்டி இருந்தாலும் அப்ப அது நன்மைக்காகத்தான் வந்திச்சி சார்’ என்பார்கள்"

பி.டி. கத்தரிக்காய் குறித்த பீதியும், அறிவார்ந்த விவாதமும் - GMOவிற்கு ஆதரவாக தனது கண்ணோட்டம் தளத்திலிருந்து ரவி ஸ்ரீநிவாஸ்.  பதிவை படிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.  கண்மூடி நம்புகிறோமா நாமெல்லாம்.  நம்மாழ்வார், பாலேக்கர் செய்த செய்துவரும் பணியை எந்த ஆதாரத்துடன் இவர் மறுக்கிறார் எனத் தெரியவில்லை.  இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுகருத்து இருக்கத் தானே செய்யும்.

GMOவில் இருந்து விடுபட வேண்டுமெனில், இயற்கை வழி விவசாயம் தான் சிறந்தது என்று போராடும்/போராடிய பாலேக்கர், நம்மாழ்வார் போன்றோரின் கருத்துக்களை சிந்திப்போமாக!

நம்மாழ்வாரும்,எஸ்.கே.ஸாலிஹூம் - நேர்வழி எனும் தளத்திலிருந்து அதன் ஆசிரியர், நம்மாழ்வார் அவர்களின் வானகத்திற்கு விஜயம் செய்ததை விவரித்திருக்கிறார்.

நன்றி!  நாளை வேறொரு பதிவினில் சந்திப்போம்!!
மேலும் வாசிக்க...

Tuesday, October 14, 2014

செங்கீரைப் பருவம்!!!







"ஏலே! மருதமுத்து என்னலே வாய திறந்தா கொட கொடன்னு மடத்தண்ணி பாஞ்சாப்புல தகரக் குரல் ல பாடுவயே. எங்கவே போச்சி அந்த குரலு?"
"அட போய்யா சின்னக்காளை, விளைஞ்சிருக்கிற வெள்ளாமைய பார்த்தா தொண்டையில எச்சில் கூட ஊறல, இதில எங்கிட்டு பாட்டு பாட"...........

ழவுத் தொழிலு
உசிரப்பா!
உழவன் எமக்கு
சிரசப்பா!!

ஏனப்பா! தேனப்பா!
இடக்குமடக்கு உனக்கேம்பா!!
என் வழியில நான்போக
விடுவதில்லை நாடப்பா!!


விதைச்ச காசு
விளைஞ்சிடுமா!
வேரிலே அழுகி
பிறந்த இடம் புதைஞ்சிடுமோ!!


விவசாயத்தின் இன்றைய நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. விவசாயத் தொழிலில் கட்டுண்டு செங்கழுநீர் பூசிய முகத்துடன் பூமித்தாய் பச்சைப்பட்டு மேனியுடன் சிரித்திருப்பதை உழவன் உடல் களைப்புடன் இருந்தாலும் மனம் இனிக்க பார்த்திருந்த காலம் கனவாகிப் போனது.

நமக்கெல்லாம் வரமாகக் கிடைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். கரிம விவசாயமுறையில் சிறந்த மகசூல் கிடைக்க கணக்கில் அடங்காத ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவரின் மறைவும் நமது விவசாயத்திற்கு பேரிழப்பே.




" கட்டு களம் காணும்

கதிர் உலக்கு நெல் காணும்..."
"மாடுகட்டி போரடித்தால் மாளாதென்று
யானைகட்டி போரடித்த
மரபில்
வந்தவனல்லவா நீ.........."

இப்படி விவசாயம் செழித்தோங்கி இருந்த காலமும் உண்டு.
பின்னர் கூட்டுறவு விவசாயம் என்ற பெயரில் ஏழைகளின் நிலத்தை வஞ்சகமாக அபகரித்து அதோடு நில்லாது உழவர்களை அடிமையாக்கி தட்சனாட்சி செய்த முதலாளி பண்ணையார்கள் இருந்தது ஒரு காலம். அப்போதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடல்கள் செவியில் தேன் பாயத்தது மட்டுமில்லாது நம்மை உசுப்பியும் விட்டது...

" மாடா உழைச்சவன் வாழக்கையில
பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?!!"........
"அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்தினில்
சேர்வதனால் வரும் தொல்லையடி..."""


இப்படியாக காலம் புரண்டு இன்றோ விவசாயம் அரிதான தொழிலாகி அருகி வருகிறது. வானத்தை அண்ணாந்து பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிப்போய், போதும்டா சாமி... இருக்கிற நிலத்தை வித்து பிள்ளைகளை நல்லா படிக்கவைச்சி பட்டணத்தில் குடிபோகனும் என்று இடம்பெயரும் உழவர்கள் ஆயிரமாயிரம்.

=====================================



இன்றைய வலைச்சரத்தில் பிள்ளைத்தமிழ் செங்கீரைப்பருவம், தனது பொக்கைவாய் திறந்து வித்தியாசமாக ஒலிகள் பல எழுப்பி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி.. இருகைகளையும் ஊன்றி கீரை கடைவதுபோல ஆடும் பருவம்.... அந்த பொன்னான பருவத்தில் நம் பொன்னான தொழிலாம் விவசாயம் பற்றி சொல்லும் பதிவர்கள் பற்றிய அறிமுகம்.
=====================================





ன்பிற்குரிய நண்பர் ரகுபதி. இவரின் இயற்கை விவசாயம் எனும் வலைத்தளம் முழுக்க முழுக்க விவசாய செய்திகளை தாங்கி நிற்கின்றன.
இதோ பாருங்கள் மண்ணை வளர்த்த மாமனிதர்கள் எனும் தலைப்பில் மண்புழுக்கள் பற்றிய செய்திகளைத் தருகிறார்.
தந்தான தாளம்போட்டேன்
தலைகீழா நடந்துவந்தேன்!
தவத்தொழிலு விவசாயத்தை
தரமாய் உயர்த்திடவே
தங்கமான பதிவு தந்த
ரகுபதி ராசாவுக்கு
தலைப்பாகை கொண்டுவந்தேன்!!!

==========================================================




யற்கை உரங்களும் இயற்கை மருந்துகளும் தான் பயிர்களை செழுமையாக வளமையாக வளர்ந்திட முழுமூச்சாய் செயல்படுகிறது. அதனை நாமும் பின்பற்ற அருமையான இயற்கை மருந்து கலவைகள் பற்றி இங்கே சொல்கிறார்கள் இயற்கை மருந்துகள் பயிர்களைக் காக்கும் என்று.

மேலுரம் கீழுரம்
அடியுரமென
ஆயிரம் நீ போட்டாலும்
அத்தனையும்
மண்ணுக்கும் பயிருக்கும்
கேடு தானய்யா!
இயற்கையை நம்பிடு
இனியிங்கு நோயில்லை என
இனிதாய் வளர்த்திடு!!

===================================================

 
வரது தளத்தின் முதல் வரவேற்பு வரிகளே நெஞ்சைத் தாலாட்டுகிறது. நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம் ..இதுவே அந்த வரவேற்பு வரிகள். பல பரிமாணங்களில் பதிவுகள் நிறைத்திருக்கும் நண்பர் மு.சரவணக்குமார் அவர்கள் 2400 சதுர அடியில் ஒருங்கிணைந்த விவசாயம் பற்றி எடுத்துரைக்கிறார். வாருங்கள் நாமும் அந்த ஒருங்கிணைந்த விவசாயத்தை கண்டு இன்புற்று வருவோம்.

மாடக்குள செல்லையா
தலையில் என்ன புல்லா அய்யா!
இறக்கிவைச்சி வாருமய்யா
இங்கினக்குள்ள சேதியுண்டு!
கூட்டுறவு என்பதெல்லாம்
கூறு கூறாய் பிரிந்தபின்னே...
நமக்கான இடத்துக்குள்ளே
ஒருங்கிணைந்த விவசாயமாம்
வாருமய்யா போய்வருவோம்
கம்பங்கஞ்சி குடிச்சி வருவோம்!!

====================================================




ந்த வலைப்பூ பக்கம் போனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் கிராமப்புற படப்பிடிப்பு பக்கம் போனதுபோல ஒரு உணர்வு.... அருமையான தகவல்கள், அசத்தலான நடையில் எழுதியிருக்கிறார் பண்ணையார் என்ற பெயருடன் ஒரு நண்பர். ஒரு காலத்தில் கிணற்றில் இருந்து நீர் இறைக்க பயன்படுத்தப்பட்ட பறி என்னும் ஒரு வகையான பொருளை நமக்கு அடையாளம் காட்டுகிறார் பார்த்து வருவோம் வாருங்கள்.

தீர்ப்பு சொல்ல வந்தவரே
தெற்குசீமை மன்னவரே!
காலம்போன காலமதில்
காஞ்சி கிடக்கும் நிலங்களிலே
சிறுதுளி நீரேனும்
உம் பதிவு தெளித்துவிட்டால்
மகிழ்ச்சி கொள்வேனய்யா!!

=================================================================




பொதுவாகவே சர்க்கரை நோய் வந்தால் தான் கோதுமை கேழ்வரகு என்ற தானியங்களை நாடிச் செல்கிறோம். இதில் கோதுமை இன்று அன்றாட தானியங்களில் ஒன்றாகிவிட்டது. ஆயினும் கேழ்வரகு மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. சிறந்த ஊட்டச்சத்து மிக்க இந்த தானியத்தை பற்றி வறட்சியிலும் வாரிக்கொடுக்கும் வரகு என்று இங்கே பதிவினைக் கண்டேன். அறிந்திராத தகவல்களைப் பெற்றேன்.

கொல்லிமலை திரவியமே
ஆழ்கடலின் நித்திலமே!
உமக்கெல்லாம் மிஞ்சிய
மதிப்பிட இயலாத
மங்காத பொன்மணியாம்
வரகு காண்பீரோ?
அதன் புகழ் கேளீரோ!!

========================================================

தேசத்துக்கு முதுகெலும்பு போல விளங்கும் விவசாயம் பற்றி எத்தனை எத்தனயோ பதிவர்கள் நிறைய எழுதி இருப்பார்கள். சிலரை இங்கே அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
வானம் பொய்ச்சிதுன்னா
மானம் போச்சுதடி!
வாழ்வே இருள்தானா - தங்கமே கட்டழகி
நான் வாழும் நாள் ஏதோ
குங்கும பொட்டழகி!!
டல் போல் கரைபுரண்டு
வானம் இடியிடிக்கும்!
கீழ்வானம் கருத்துருச்சி - ஆச மச்சானே
உன் வாழ்வில் வெண்ணிலவு
நேச மச்சானே!!

ழவே எம்பொழப்பு
செங்கழனி என் வீடு!
வேறு சோலி தெரியாது - தங்கமே கட்டழகி
வெள்ளாம விளைஞ்சிடுமா
குங்கும பொட்டழகி!!
போட்ட விதை வீறுகொண்டு
விருட்சமாகும் நாளும் வரும்
அன்னைக்கு நானும் வாரேன் - ஆச மச்சானே
அதுவரை நெல்லுக்கு நீர் விடய்யா
நேச மச்சானே!!!
 
 


அன்பன்
மகேந்திரன்












மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது