07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label காயத்ரி தேவி. Show all posts
Showing posts with label காயத்ரி தேவி. Show all posts

Sunday, March 15, 2015

விடைபெறும் பட்டாம்பூச்சி...














ஒரு வாரம் முழுக்க இந்த வலைச்சரத்த சுத்தி சுத்தி வந்ததுனால நானும் நிறைய புது வலைதளங்கள பாக்க முடிஞ்சுது. ஒவ்வொருத்தருக்கும் உள்ளேயும் இருக்குற எழுத்துத் திறமைய வெளில கொண்டு வர்ற புண்ணியம் இந்த வலைதளங்களையே சாரும்... நாமளும் நல்லா எழுதுறோம், நம்மை ஊக்கப்படுத்தவும் வாசகர்கள் இருக்காங்கங்குற நினைப்பே அவங்கள இன்னும் உற்சாகமா எழுதத் தூண்டும்... இதுக்கு நானே ஒரு எடுத்துக்காட்டு தான்... ஆரம்பத்துல எழுதி எழுதி போஸ்ட் பண்ணிட்டு, யாருமே இல்லாம சோர்வடைஞ்சு இருந்தப்ப தான் சரியான வழிகாட்டல் மூலமா இன்னிக்கி எதோ என் எழுத்தையும் ஒண்ணு ரெண்டு பேர் பாக்குறாங்க... அந்த வகைல புது எழுத்தாளர்களை, அவங்க வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி, உற்சாகப்படுத்தி, அவங்களுக்கு பார்வையாளர்கள அதிகப்படுத்தி குடுக்குற வலைச்சரமும் அத நல்ல முறைல கொண்டுப் போற வலைச்சரக் குழு சீனா ஐயாவுக்கும் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணாவுக்கும் முதல்ல என்னோட நன்றிகள்....

பலகை

நிசப்தம்

தென்றல்

ஸ்கூல் பையன்

திண்டுக்கல் தனபாலன்

செல்வா ஸ்பீக்கிங்

ஜாக்கி சேகர் – பிருந்தாவனமும் நொந்தக் குமாரனும்

டி.என். முரளிதரன்

சங்கவி

அருணா செல்வம்

மனதில் உறுதி வேண்டும்

மின்னல் வரிகள்

தமிழ்வாசி

கவிதாயினி

திடங்கொண்டு போராடு

பெண் என்னும் புதுமை

கதம்ப மாலை

பயணம்

ஜெசிக்காவின் கிறுக்கல்கள்

இன்னும் இன்னும் நிறைய வலைத்தளங்கள் நான் பின்தொடர ஆரம்பிச்சுருக்கேன். காலேஜ் போயிட்டு வந்து கிடைக்குற நேரங்கள்ல வாசிச்சுட்டு கடந்து போறேன்.

வாசகர்கள் குடுக்குற ஊக்கம் தான் ஒரு வலைபதிவாளரை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தும் இல்லையா? அதனால வலைத்தளம் வச்சிருக்குற எல்லாருக்கும் உங்களோட ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பின்தொடர்தல் மூலமாகவும், கமண்ட்ஸ் மூலமாவும் குடுங்க... வாசகர்கள் அத்தனை பேருக்கும் என்னோட அன்பான நன்றி...

அப்புறம், முக்கியமா நான் இங்க நன்றி சொல்லணும்னா திண்டுக்கல் தனபாலன் அண்ணா, கில்லர்ஜி அண்ணா, ரூபன் அண்ணா, மை மொபைல் ஸ்டுடியோ, துரை செல்வராஜ் அண்ணா, உமையாள் காயத்ரி, மணிமேகலை... இன்னும் இன்னும் தொடர்ந்து கமண்ட்ஸ் மூலம் ஆதரவு தந்த அத்தனை பேருக்கும் என்னோட நன்றி...

மறுபடியும் ஒரு வாய்பிருந்தால் மீண்டும் சந்திப்போம்ன்னு விடைபெறுற காட்சி எல்லாம் இங்க நடைபெறப் போறதில்ல, ஏன்னா, நான் இங்க தானே இருக்கேன்... உங்க கூடவே.... அதனால, இப்போதைக்கு டாட்டா மட்டுமே.....

டாட்டா.....

.
மேலும் வாசிக்க...

வரலாற்றுப் பதிவுகள் - சில துளி



எல்லோருக்கும் வணக்கம்...

ரம்மியமான காலைப் பொழுதுல, உங்கள எல்லாம் சந்திக்குறதுல ஒரு சந்தோசம் இருக்கு.

அதுவும் இன்னிக்கி ஞாயிற்றுக் கிழமை. வழக்கமான சுறுசுறுப்பு இல்லாம பொறுமையா நிதானமா ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு சோம்பலோடயே விடியுற நாள்.... ஆனா, நான் சீக்கிரம் எழுந்ததுக்கு ஒரு காரணம் உண்டு... தூங்கி எழுந்த உடனே நீங்க நல்ல நல்ல வலைத்தளமா தேடி படிக்க வேணாமா?

சரி, சரி வாங்க, நேரடியா நாம இப்போ அறிமுகத்துக்கு போய்டலாம்....

முக்கியமா நாம இன்னிக்கி ஒரு வலைதளத்த பாக்கப் போறோம்.

வரலாற்றில் தென்மாவட்டங்களோட போராட்டங்களையும், அந்தக்காலக் கட்டத்தில் மக்களோட வாழ்க்கைநிலையையும் அப்படியே படம்பிடித்துக்காட்டும் பதிவுகளை இந்த வலைதளத்தில் பார்க்க முடியும்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் பலவிசயங்களைப் புள்ளி விபரங்களோடு முன்னெடுத்துவைக்கும் சோஷியல் ஆக்டிவிஸ்ட் கே.எஸ். இராதாகிருஷ்ணன். இவர் தன்னோட வலைதளமான கே.எஸ்.ஆர் பிளாக்- ல் தமிழிலே பெரும்பாலான பதிவுகளை தரவுகளோடு எழுதிட்டு வர்ரார்..

முக்கியமா நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய பதிவுன்னா மதுரையின் அந்தகாலத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் மருதம் சூழ்ந்த மாமதுரை

எத்தனையோ அற்புதங்கள், மனத்திற்கேற்ற ரம்யமான அமைதி, புதிய உலகம், அரிய காட்சிகள் , கானுயிரிகள், துயரத்தையும் ரணத்தையும் போக்கும் மாமருந்தான மேற்குத் தொடர்ச்சி மலை- சிலகுறிப்புகள் :

காலங்காலமாக தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தரவுகளோட விளக்கும் விவசாயிகள் போராட்டம் :

எட்டப்பர்ன்னாலே காட்டிக்கொடுத்தவர்ன்னு நினைச்சுட்டு இருக்கும் போது எட்டப்ப ஜமீன்களின் வரலாற்றையும் சமூகத்துக்கு செஞ்ச நற்பணிகளையும் சொல்லும் : குறையொன்றுமில்லை எட்டப்பா :

இலக்கியத்தில் புகழ்பெற்ற மூன்று பெண் படைப்பாளிகளை அறிமுகம் செய்திருக்கும் :மூன்று உலகப்புகழ் பெற்ற பெண் படைப்பாளிகள்.

இப்படி இவரோட வலைத்தளத்துல கொட்டிக்கிடக்குற பயனுள்ள பதிவுகள் ஏராளம் ஏராளம்... கண்டிப்பா பொறுமையா எல்லாரும் படிக்க வேண்டிய வலைத்தளம் இது...



அடுத்ததா நாம பாக்கப் போற வலைத்தளம் கார்த்திக் புகழேந்தி காற்றில் எழுதியவன்... சமீபத்துல “வற்றாநதி” சிறுகதை தொகுப்பை வெளியிட்ட கார்த்திக் புகழேந்தியோடது இந்த வலைத்தளம்.

சிறுகதை ஆர்வத்தில் பேனாவின் சிறகு விரித்து... கணிப்பொறி காகிதத்தில் கற்பனைச் சருகுகளை துளிர்த்து எழுதத்துவங்கியுள்ள இவருக்கு வாசிப்பு பட்டியலில் ஆயிரம் பேர் லட்சியமெல்லாம் கிடையாது... அவர் கதைக்கு அவரே முதல் ரசிகனாய் இருக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் மேலோங்கியவனாய் இருக்கிறார்.

குற்றாலத்துக்கு குளிக்க போற மனுஷன் அப்படியே ரசிச்சுட்டு வர வேண்டியது தானே... தான் ரசிச்சத சொல்லி நம்மள எல்லாம் ஐயோ நாம இப்படி அனுபவிக்கலயேன்னு கடுப்பு ஏத்துறார் பாருங்க... குற்றாலமும் கனவுப் ப்ரியனும் படிச்சுட்டு கண்டிப்பா ரசிக்காமலோ சிரிக்காமலோ முக்கியமா பொறாமப் படாமலோ இருக்க முடியாது.

நாகர்கோவிலில் இருந்து சினிமாவில் சாதிக்கனும்ன்னு கிளம்பிப் போன ஒரு பெரிய வணிகக் குடும்பத்தின் மகனுக்கு சென்னையில் கிடைத்த அனுபவங்களையும், அவருக்கு நேர்த துயரத்தையும் சிறுகதையா எழுதி இருக்கு பதிவு இது - லைட்ஸ் ஆஃப்

சென்னையோட ஆவணப்பதிப்பு இந்த பதிவு. சென்னையின் வரலாற்றை புகைப்படங்களோட விளக்குற ஒரு குட்டி தகவல் களஞ்சியம் இதுல இருக்கு. சென்னை வாசிகளும், சென்னை விரும்பிகளும் இந்த சென்னை 375 பதிவ கண்டிப்பா படிச்சு சென்னையோட முழு வரலாற்ற தெரிஞ்சுக்கலாம்...

மொத்தமே தன் ப்ளாக்ல 25 போஸ்ட் தான் போட்டிருக்கும் கார்த்திக் புகழேந்தி இன்னும் அதிகமான பதிவுகள குடுக்கணும்ன்னு கேட்டுப்போம். இன்னுமொரு முக்கியமான விஷயம், அவர் எழுதின வற்றாநதி புத்தகத்துல இடம்பெற்ற கதைகள்ல சில இந்த வலைதளத்துல இருக்கு. நீங்களே சாம்பிள் படிச்சுக்கலாம்...



நான் மறுபடியும் மதியம் உங்கள சந்திக்குறேன். இதுவரைக்குமான என்னோட இந்த வலைச்சர பயணத்துக்கு இதுவரைக்கும் தொடர்ந்து ஆதரவு குடுத்தவங்களுக்கு நன்றி சொல்ல வேணாமா?

எப்பவுமே நன்றி நவில்தல் நன்று இல்லையா?


அதனால, கண்டிப்பா வர்றேன்.


.
மேலும் வாசிக்க...

Saturday, March 14, 2015

கிட்சன் கில்லாடிகள்



சாப்பாடுனாலே என்னைப் பொருத்தவரைக்கும் எப்பவும் ஸ்பெசல் தான்... சின்ன வயசுல சாப்பாட்டு ஐட்டம் எது கிடைச்சாலும் நல்லா ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவேன்.



அப்படி என்னோட சாப்பாட்டு லிஸ்ட்ல இருக்குற ஐட்டங்கள் தான் தேங்காப் புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு... இந்த புண்ணாக்கு ஐட்டங்கள சாப்பிடுறதே தனிக்கலை. தேங்காப் புண்ணாக்கு அப்படியே சாப்பிடலாம். தேங்காய் எண்ணெய் வாசம் தூக்கும். எள்ளு புண்ணாக்குக்கு கருப்பட்டி செம காம்பினேசன். ரெண்டையும் உரல்ல வச்சு இடிச்சு எடுத்து சாப்பிட்டா எம்மி..... கடலைப் புண்ணாக்கு சும்மா வாய்ல போட்டாலே எச்சி ஊறிடும்...


அட, நானாவது பரவால, என் தம்பி, கூழாங்கல்லை எல்லாம் வாய்ல போட்டு குதப்பிட்டு இருப்பான்.


அப்புறம் அடுப்படில சமைக்குறோம் பேர்வழின்னு நானும் தம்பியும் அதகளம் பண்றதெல்லாம் தனிக்கதை... பிரியாணி, கடலை முட்டாய், மைசூர்பாகு, முட்டை கேக், பீசா, அதிரசம், கேசரி, உளுந்த வடை, குலோப் ஜாமூன்.... லிஸ்ட் எல்லாம் போட்டா அப்புறம் தாங்கிக்க மாட்டீங்க...

அதனால, வாங்க இப்ப நாம சில கிட்சன் கில்லாடிகள பாக்கலாம்....


1. மிராவின் கிட்சன்  – வடைகள் பலவிதம் 
 




இன்னும் ஏகப்பட்ட ஐட்டம்ஸ் இருக்குனாலும் காலேஜ் போற அவசரத்துல இவ்வளவு தான்  என்னால முடிஞ்சுது... 

கூலாங்கல்லு வச்சு ஏதாவது ரெசிபி செய்ய முடியுமான்னு யோசிச்சு வைங்க, நான் காலேஜ் போயிட்டு வந்துடுறேன்... 
மேலும் வாசிக்க...

Friday, March 13, 2015

கோழி முட்டையும் வலைப்பூவும்



வாசக பெருமக்களே, 

முதல்லயே சொல்லிட்டேன், இந்த தலைப்பு எல்லாம் ஏன் வச்சன்னு கேட்டீங்கனா கண்டிப்பா என்னால விளக்கம் குடுக்க முடியாது... 

அதுக்கு என்னோட ஒரே பதில், "அதெல்லாம் அப்படிதான்... ஆஆஆங்ங்ங்.... "

கிராமப்புறங்கள எடுத்துகிட்டீங்கனா பச்சை பசேல்ன்னு வயல் வெளி இருக்கோ இல்லையோ, ஒவ்வொருத்தங்க வீட்லயும் ஆடு, மாடு, கோழின்னு அமோகமா இருக்கும்... அவங்களோட வாழ்வாதாரமே இத எல்லாம் வச்சுத்தான். 

எங்க ஊருல பாட்டி ஒருத்தங்க இருக்காங்க. தினமும் காலைல ஒவ்வொரு வீடா போய் யாருக்கு என்ன வேணும்னு கேட்டு, சந்தைல போய் வாங்கிட்டு வந்து குடுப்பாங்க. அதுக்கு தனியா எல்லாம் காசு வாங்க மாட்டாங்க. சாமான் காசு மட்டும் தான். 

இங்க எல்லாம் கோழிங்க வளர்ப்பு ரொம்ப அதிகமா இருக்கும். யார் வீட்ல கோழி முட்டை அடை வைக்கணும்னாலும் அந்த பாட்டிக்கு தான் சொல்லி விடுவாங்க. சேர்த்து வச்சிருக்குற முட்டைகள்ல இருந்து பொட்ட கோழி பொறிக்குற முட்டையா சரியா பிரிச்சு குடுப்பாங்க. எப்படி தான் தெரியுமோன்னு ஆச்சர்யமா இருக்கும்.  அவங்க கணிப்பு எப்பவுமே பெர்பெக்ட் தான்... 

அதென்ன பெரிய சிதம்பர ரகசியம்ன்னு ஒரு நாள் பாட்டிகிட்ட கேட்டேன். அது ஒண்ணும் பெரிய கம்பசூத்திரம் இல்ல, முட்டைய கைல குறுக்க வச்சுட்டு பாத்தா, முனை மழுங்கி இருக்குற முட்டைல இருந்து பொட்ட கோழி குஞ்சுங்க வரும், நீளமா இருக்குற முட்டைல சேவல் குஞ்சு வரும்னு சொன்னாங்க... 

நானும் ட்ரை பண்ணி பாத்துருக்கேன், ஆனா ஒரு 60% வரைக்கும் சரியா இருக்கும்... இதுக்கே நான் இல்லாத காலர தூக்கி விட்டுக்குறது எல்லாம் நடக்கும்... 

நிஜமாவே நம்ம முந்தின ஜெனரேசனோட நுண்ணறிவு அவ்வளவு அற்புதம். நாம தான் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு சொல்றதுக்கே கேல்குலேட்டர தேடி ஓடிடுறோம், அப்புறம் எங்க நுண்ணறிவு வளருறது? 

என்ன பண்றது, காலம் மாறிடுச்சு, இனிமேல் இந்த மாதிரி நுண்ணறிவு இருக்குறவங்கள பாத்தா நமக்கு எதோ அதிசய பொருள பாத்த மாதிரி தான் பாக்கப் போறோம்...

சரி, அத விடுங்க, ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு நம்ம வேலைய ஆரம்பிப்போம்... 

இன்னிக்கி நாம பாக்கப் போற பெரும்பாலான வலைபூக்கள் கேசவராஜ் அண்ணா பரிந்துரைத்தது... அதனால கேசவராஜ் அண்ணாவுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்சோட நாம இப்ப பதிவுகள பாக்கலாம்...



நாலாயிரம் பதிவுகள், ஒரு கோடி ஹிட்ஸ், தனிநபர் தமிழ் வலைப்பூக்களில் முதலிடம்ங்குற அட்டகாசமான அதிரடியோட ஐந்தாவது ஆண்டுல அடியெடுத்து வச்சிருக்காங்க அட்ரா.... சக்க... நிஜமாவே அட்ரா சக்க தான்... அசந்துட்டேன். இதுல மேலாண்மை. பொன்னுச்சாமியோட வனச் சுதந்திரம்  சிறுகதை இருக்கு. சிறுகதை விரும்பிகள் அவசியம் படிக்கவும்.



சுவாரஸ்யமாய் எழுதுவதன் ரகசியம் கற்க, எழுதி பழக, தான் இந்த மரப்பசு  வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டதாம். அம்பேத்கார் வாழ்க்கைல நடந்த முக்கியமான விசயங்கள இவர் அம்பேத்கர் மனதை பாதித்த ஆறுசம்பவங்கள்... ன்னு சுருக்கமா தந்துருக்கார்.



நோக்கும் இடமெல்லாம் நாமன்றி  வலைப்பூவோட சொந்தகாரர் இரா எட்வின். இவர் நிறைய எழுதியிருக்கார்னாலும் இவருடைய சாமி மீண்டும் பொய்மையாய்ப் போனார்-  ங்குற சிறுகதைய முதல்ல படிச்சிடுங்க. அப்புறமா அடுத்தடுத்து ஒவ்வொரு பதிவா படிங்க..



இப்போ இணையத் தளமா தன்னோட சேவையை தொடங்கியுள்ள மாற்று  வலைப்பூவுல அநீதி, அடிமைத்தனம், அறியாமை, ஆதிக்கம் பற்றின பல்வேறு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுருக்கு. அணு ஆற்றல் பத்தின கருத்துக்கள அணு ஆற்றல் தேவையா? -2 (இரு கண் பார்வை தேவை)  அப்படின்னு வெளியிட்டுருக்காங்க. அவசியம் தெரிஞ்சிக்கோங்க.



கோயம்புத்தூர் இளங்கோவுக்கு சொந்தமானது இப்படிக்கு இளங்கோ. இயற்கை பொருட்களுக்காக கோவைல ஆரம்பிக்கப்பட்ட தரு இயற்கை அங்காடி  பற்றிய விபரங்கள இங்க பாக்கலாம். கோவை மக்கள் கண்டிப்பா இயற்கை பொருட்கள வாங்கி பயனடையுங்க...



மனிமேகலாவோட வலைப்பூ அக்ஷ்ய பாத்ரம் . காதலர் தினத்துக்கு உங்கள் காதல் எதனை விலையாகக் கேட்கிறதுன்னு சொல்லியிருக்காங்க... படிச்சுப் பாருங்க...



செங்குருதி வலைப்பூவோட ஆசிரியர் யார்ன்னு தெரியல. ஆனா, விசையுறு பந்தினைப்போல் – உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்! ன்னு அமரகவி பாரதியோட வரிகள கையாண்டுருக்கார். ம. தவசியின் சேவல்கட்டு புத்தகத்தை சேவலுடன் ஒரு வாழ்க்கை ங்குற தலைப்புல விமர்சித்து எழுதியிருக்கார்.



விஷ்ணுபுரம் சரவணனோட வலைப்பூ நள்ளிரவு காற்று. தினமணி – சிறுவர் மணி ல வந்த வித்தைக்காரச் சிறுமி சிறுவர் கதைய படிச்சுட்டு உங்க வீட்டு குட்டீஸ்க்கு சொல்லிக் குடுங்க...



நீங்க அப்படியே எல்லாம் படிச்சு, கமன்ட் போட்டு எல்லாரையும் ஊக்கப்படுத்துங்க... நான் அப்படியே காலேஜ் போயிட்டு வந்துடுறேன்...
மேலும் வாசிக்க...

Thursday, March 12, 2015

கதம்ப மாலை...





எல்லாருக்கும் குட் மார்னிங் குட் மார்னிங்....



இந்த நாளுக்கு ஏன் இருபத்திநாலு மணிநேரம் வச்சாங்க, பேசாம நாப்பத்தெட்டு மணிநேரம் வச்சிருக்கலாம்ல, பாருங்க, ஒரு பனிரெண்டு மணிநேரம் கூட நிம்மதியா தூங்க முடியல.... ஒரு பத்து நிமிஷம் கூடுதலா தூங்கினா நச்சு நச்சுங்குறாங்க... என்னவோ போங்க...

அச்சச்சோ, சாரி, நான் பாட்டுக்கு புலம்பிட்டே இருந்துட்டேன்ல... நீங்க ஒண்ணும் பதட்டப்படாதீங்க... நான் வேலைய ஆரம்பிச்சுடுறேன்...



ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஒரு தத்துவம் பாத்துருவோமா?



என்னதான் நமக்குன்னு பிரெண்ட்ஸ் வட்டம், சதுரம் எல்லாம் பெருசா இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச, நெருங்கிய நட்புன்னு ஒண்ணு இருக்கும். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அத எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு தோள் குடுத்து நிக்குறது தான் அந்த நல்ல நட்புக்கு அடையாளம். கண்டிப்பா எல்லோருக்கும் உண்மையா இருக்கணும்னு நினச்சா முடியாது, ஆனா நட்புக்குள்ள உண்மையா இருக்கணும். அத விட்டுட்டு மதில் மேல பூனை மாதிரி இந்த பக்கமா அந்த பக்கமான்னு தடுமாறிட்டு நிக்கக் கூடாது. புடிச்சவங்க பக்கம் தொபுக்குன்னு குதிச்சு பிரெண்ட் ஷிப்ப நிலைநாட்டணும். இல்லனா வாழற வாழ்க்கைல பாதி இல்ல, முழுசுமே வேஸ்ட் அப்படின்னு காலங்காத்தால இந்த பட்டாம்பூச்சி தத்துவம் சொல்லிக்குது....



அப்படியே கதம்பம் தேடி தேன்குடிக்க பறந்தப்ப தான் இந்த பக்கமா வந்தேன். ஆன்மீகம் பற்றிய பல தெரிஞ்சுக்க வேண்டிய கருத்துக்கள உள்ளடக்கியது சசி ராமாவோட இந்த வலைப்பூ (ஆன்மிகம்). இதுல பலவிதமான கருத்துக்கள அவர் பகிர்ந்திருந்தாலும் இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள்  என்னன்னு சொல்லியிருக்கார், கண்டிப்பா எல்லாரும் படிங்க...



அடுத்து என்னடா பண்ணலாம்னு யோசிச்சுகிட்டே ஒவ்வொரு வலைப்பூவா தாவிகிட்டு இருந்தேனா அப்ப தான் உமையாள் காயத்ரியோட வலைப்பூ பக்கமா வந்தேன். கண்ணுல டக்குன்னு பட்டது பரோட்டா பத்தின பதிவு தான். பரோட்டானா தான் எனக்கு ரொம்ப புடிக்குமா, சரி, பரோட்டா அதுவும் கோதுமை பரோட்டா  எப்படி பண்றதுன்னு சொல்லியிருக்காங்களே புதுசா யாராவது தெரிஞ்சுக்கட்டும்ன்னு இங்க தூக்கிட்டு வந்துட்டேன்.



அடுத்ததா கண்ணுல பட்டது மனசு.  சரி எதோ புது வலைப்பூ, நாமளும் ஒரு போஸ்ட் இதுல இருந்து எடுக்கலாம்னு நினச்சா பரிவை சே குமார் உலகம் தழுவிய சிறுகதை போட்டியில மூன்றாவது பரிசு பெற்றவர்ன்னு தெரிஞ்சுகிட்டேன். இனி நான் என்ன சொல்ல, இவரோட கதைய எல்லாரும் தான் படிச்சிருப்பாங்களே, ஆனாலும் படிக்காதவங்க இந்த செவலைப்பசு வ படிங்க..



இந்த அண்ணன் எப்பப் பாத்தாலும் நம்மள விடாம ஓட்டு போடுறதுக்கு காரணம் சொல்லிட்டே இருக்காரு. சரி, அண்ணன் வலைப்பூவ போய் பாத்துரலாம்னு உள்ள போனேன். ஏண்ணே உங்க வலைப்பூ பேரு கில்லர்ஜியா, இல்ல என் குரலா?  காவல் துறை உங்கள் நண்பன்னு  சொல்லிட்டு அவங்கள என்ன கிண்டல் பண்ணியிருக்கார் பாருங்க.... நான் எஸ்கேப்

என் பக்கம்  யாசோதா அப்படிங்குறவங்களோட வலைப்பக்கம். குட்டி குட்டியா கவிதைகள் எழுதியிருக்காங்க. ஏனோ இப்போதைக்கு வலைப்பூ பக்கம் எட்டிப் பாக்கலன்னு நினைக்கிறேன். சரி சரி, அவங்க மறுபடியும் எழுதணும்ன்னு வாழ்த்தோட பிரிவு  பத்தின அவருடைய இந்த கவிதைய வாசிச்சுட்டு கருத்தும் சொல்லிட்டு போங்க.



கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டிய தூரங்களின் தொகுப்ப அறந்தாங்கியான் தன்னோட வலைப்பூவுல குடுத்துருக்கார். பெரும்பாலும் தன்னோட மனக்குமுறல கொட்டித் தீர்த்திருக்கும் அவர் சுதந்திர தினமும்... பேஸ்புக்கும்  பற்றி என்ன சொல்றார்ன்னு பாக்கலாம்.



நம்ம திண்டுக்கல் தனபாலன்  அண்ணாவோட போஸ்ட் எல்லாம் எப்பவுமே எனக்கு ரெண்டு மூணு தடவ படிச்சா தான் புரியும். அண்ணன் சுத்த தமிழ் எனக்கு புரியலன்னு நினைக்குறேன். அடப்போங்கப்பா.... நீங்களும் உங்க பதிவும்னு  (அய்யய்யோ அப்படி நான் சொல்லவே இல்ல, அண்ணன் தான் சொல்றார்) அண்ணன் சொல்றத கேட்டுருங்க. இல்லனா, இன்னொரு தடவ படிக்க வச்சிருவேன்...



எப்படியோ இன்னிக்கி போஸ்ட் எல்லாம் பிரபலங்கள குறிவச்சே எழுதுறமாதிரி ஆகிப்போச்சு. விட்டா, ஏய், எங்க வீட்டுக்குள்ளயே வந்து எங்களையே அறிமுகப்படுத்துறியான்னு கேட்டாலும் கேட்ருவீங்க. அதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆகிடுறேன். ஜூட்....
மேலும் வாசிக்க...

Wednesday, March 11, 2015

வலைப்பூக்கள் பலவிதம்



வாங்களேன், ராமேஸ்வரம் பக்கமா போய் ஒரு டைவ் அடிச்சு பவளப்பாறைகள பாத்துட்டு வரலாம்...

ஆமா, பவளப்பாறைனா என்ன? மலை மேல இருக்குற மாதிரி இது கடல்ல இருக்குற பாறையா?



ஹஹா... அதெல்லாம் இல்லீங்க, அது ஒரு உயிரினம். இத தனி தனியா பாத்தா கண்ணுக்கே தெரியாம குட்டியா இருக்கும். இதல்லாம் ஆயிரம், இல்ல லெட்சக்கணக்குல ஒண்ணு சேரும் போது, இதெல்லாம் அழகான பவளப் பாறைகளா மாறிப் போகுது.



என்னோட கூட பி.ஜி படிச்ச பையன் இப்ப பவளப் பாறைகள தான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான். பவளப் பாறைகள் ஏன் அழியுது, அதோட இனபெருக்கம் எப்படி நடக்குது, அதுகளுக்கு என்னென்ன நோய்கள் வரும் அப்படின்னு எல்லாம் நாம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்ல...



முக்கியமா கடல் நீர மாசுபடுத்தாம இருந்தா போதும். அடுத்து, அழகுக்காக பவளப் பாறைகள தகர்த்து எடுத்துடுறாங்க. இதனால கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஏன், சுனாமி வந்தா நம்மால அலைய சமாளிக்க முடியாம ஏகப்பட்ட உயிரிழப்பு வேற நடந்து போகுது.



இயற்கை எப்பவுமே நமக்கு பாதுகாப்பானது தான்னு நாம நம்பணும். நாம அத பாதுகாத்தா மட்டும் தான் இயற்கை நம்மள பாதுகாக்கும். இல்லனா நம்மள நாமளே அழிச்சுக்குறோம்னு அர்த்தம்...



சரி, காலங்காத்தாலே க்ளாஸ் எடுக்காம, ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு வலைப்பூக்கள் பக்கமா போய்டுவோம்...



தமிழை மையப்படுத்தி தன்னோட தமிழ் தேன் சுவை தேன்  வலைப்பூவை எழுதிட்டு வரார் குமார். ரா... அழுதும் தொழுதும் அவர் வாசித்து நேசிக்கும் நூல்களில் ரசித்தவற்றையும் அவருள் உதித்தவற்றையும் இணையம் இணைக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடுறார்... கல்லூரிக் குறும்புகள், கண்ணன் பாட்டு, தமிழே!தாயே! பண்பாடுன்னு பல தலைப்பின் கீழ எழுதினாலும் தமிழே! தாயே!!  கீழ நிறைய கவிதைகள எழுதியிருக்கார். படிச்சு பாருங்க, கண்டிப்பா பிடிக்கும்.



மலர்விழி ரமேஷ் ரெண்டு வலைபூக்கள் வச்சிருக்காங்க. மலர்ஸ் கிச்சன்ல அவங்க விதம் விதமா சமையல் கத்துக் குடுக்குறாங்க, அதுவும் முடக்கத்தான் கீரை தோசை  எப்படி செய்றதாம்? படிச்சு தெரிஞ்சுக்கோங்க. மலர்விழி ரமேஷோட இன்னொரு வலைப்பூ ஒருத்தியின் பார்வையில் . இங்க தன்னோட மனசுல தோணுற எண்ணங்கள அவரோட பார்வைல அலசியிருக்கார். இவர் குடுத்த சுய ஆலோசனை  என்னன்னு பாப்போமா?



முத்துச்சரம்...  இது ராமலெட்சுமி ராஜன் எழுதிட்டு வர்ற வலைப்பூ. பல இலக்கிய விருதுகளையும் நேர்காணல்களையும் நடத்திட்டு வர்ற இவங்க தன்னோட கவிதை தொகுப்பையும் வெளியிட்டுருக்காங்க. சிறந்த புகைப்பட கலைஞரான இவங்க, தான் அன்றாடம் சந்திக்கும் சாமானியர்களை  புகைப்படமாய் பேச வச்சிருக்காங்க. கண்டிப்பா பாருங்க...



நாச்சியார்ங்குற  வலைப்பூவை எழுதிட்டு வர்றவங்க ரேவதி நரசிம்மன். இவர் தான் பிரான்ஸ் போன அனுபவங்களை ஸ்ட்ராஸ்பர்க் பிரான்ஸ் பயணம் கட்டுரைல குடுத்துருக்கார். கண்டிப்பா எல்லாரும் படிங்க...



கேசவராஜ் ரங்கராஜன்  – வலைப்பூ பெயரும் இது தான், பதிவரின் பெயரும் இது தான். இப்ப தான் பதிவு எழுதவே ஆரம்பிச்சுருக்கார். ஆனாலும் தன்னோட வாழ்க்கைல நடந்த சுவாரசியமான விசயங்கள பதிவா எழுதியிருக்கார். சமீபத்திய ஒரு நிகழ்வுல தன்னோட நிலைபாட்டை எங்கெங்கு காணினும் நிற்பயாங்குற  தலைப்புல சொல்லியிருக்காரு, பாருங்க...



கீதா மதிவாணன் எழுதிட்டு வர்ற வலைப்பூ கீதமஞ்சரி . என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே! அப்படின்னு ஆரம்பிக்குற இவங்க என்றாவது ஒருநாள் (மொழிபெயர்ப்பு சிறுகதை) தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தன்னோட வலைப்பூவுல ஏகப்பட்ட விசயங்களை கொடுத்துள்ளார். ஒண்ட வந்த பிடாரிகள்  தலைப்புல விலங்குகளோட வாழ்வியலை விளக்கியிருக்கார்.



ஒரு இன்ஜினியரான அகிலா ஓவிய கலை மேல தணியாத ஆர்வம் கொண்டவர். தன்னோட சின்ன சின்ன சிதறல்கள்  வலைதளத்துல ஆர்வமா எழுதிட்டு வர்றார். நமது தலைநகரில் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த, அதன் பின்னும் நடந்துக் கொண்டிருக்கிற, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் சுவடுகள் மறையாத நிலைல ஒரு பெண்ணோட பார்வைல மகளிர் தினம் எப்படி இருக்குன்னு சொல்லியிருக்காங்க. கண்டிப்பா படிச்சு பாருங்க.

கல்யாணி சங்கரோட  வலைப்பக்கம் போனா, அவர தேடி வந்த விருதுகள பாக்கலாம். சமீபமா பதிவுகள் எழுதலனாலும் படிக்க படிக்க உற்சாகத்துக்கு குறைவே இருக்காது. இத நீங்க இவங்களோட அக்கு வேறு ஆணி வேறா நான் பாத்த அக்குவேரியம்!!!  பதிவுல இருந்து தெரிஞ்சுக்கலாம்.


சரி, எனக்கு காலேஜ் போக நேரம் ஆகிடுச்சு. அதனால நாளைக்கு இன்னும் சில பதிவர்களோடயும், பதிவுகளோடும் உங்கள சந்திக்குறேன். அதுவரைக்கும் டாட்டா....

.
மேலும் வாசிக்க...

Tuesday, March 10, 2015

மகளிர் மட்டும்



இந்த பூக்கள்ல பூக்கள், அது பலவிதம். ரோஜாப்பூ, மல்லிப்பூ, பிச்சிப்பூல ஆரம்பிச்சு, அப்படியே தாமரை, அல்லின்னு தண்ணிக்குள்ள பூத்து, கனகாம்பரம், அரளி, எருக்கம், செம்பருத்தி, க்ரேந்தி, ஜினியா, சங்குபுஸ்ப்பம், காஸ்மாஸ், ஊதான்னு டிசைன் டிசைனா பூக்கள் உண்டு. அட, மாம்பூ, கொய்யா பூ, கொல்லாம்பூ, தென்னம்பூ, பனம்பூ, வாழைப்பூ, பலாப்பூ.... ஷப்பா, இதெல்லாம் வெறும் ஜுஜுபி பெயர்கள். பூக்கும் தாவரங்கள்ல பூக்குற ஆயிரக்கணக்கான பூக்கள் உண்டே...



இந்த பூக்கள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். எல்லா பூக்களுமே எதோ ஒரு வகைல தனித்துவம் கொண்டவை.

இந்த ரோஜாப்பூவ எடுத்துக்கோங்க, பாக்க அழகா இருக்கும். அப்படியே பாத்துகிட்டே இருக்கலாம். அவ்வளவு ரம்மியம். வாசனை ஆளை தூக்கிடும். மல்லிகை, பிச்சி, இதெல்லாமே அப்படி தானே. இத எல்லாம் வேணாம்னு சொல்றவங்க யாராவது உண்டா என்ன?



இப்படி, மனச சந்தோசப்படுத்துறதுல இருந்து, உணவாவும் பயன்படுற பூக்கள சொல்லிட்டே போகலாம்....

இந்த வாழப்பூ இருக்குல வாழப்பூ, அப்புறம் வெங்காயப்பூ, முருங்கைப் பூ, வேப்பம்பூ இதெல்லாம் சமைச்சு சாப்ட்டா, அவ்வளவு டேஸ்ட். விடியல் காலைல, வாழைப்பூவுல தேன் உறிஞ்சி குடிக்குற சுகம் இருக்கே, அடடா, அடடா.....



சங்குபுஸ்ப்பம், கும்குமப்பூ, புளியம்பூ, மாதுளம்பூ, தென்னம்பூ இதெல்லாம் ரொம்பவே மருத்துவ குணம் கொண்டவை...



சரி, இதெல்லாம் எதுக்கு? இப்ப நான் என்ன தான் சொல்ல வரேன்...

ம்ம்ம்ம் ஆமால, நான் இப்ப நிறைய வலைப்பூக்கள அறிமுகப்படுத்த தான வந்துருக்கேன். இப்ப நான் என்ன சொல்ல வரேன்னா, எப்படி எல்லா பூக்களுக்கும் விதம்விதமான பயன்கள் இருக்கோ, அப்படி எல்லா வலைபூக்களுக்கும் விதம் விதமான தனித்துவம் இருக்கும்..



நாம முதல்ல பாக்கப் போற வலைப்பூவுக்கு சொந்தக்காரங்க ஸ்ரீதேவி செல்வராஜன். இவங்களோட வலைப்பூ பெயர் கனவுத் திருடி. தன்னோட குடும்பத்துல இருந்து அன்றாடம் சந்திக்குற மனிதர்கள்கிட்ட கத்துக்குற விசயங்கள, ரசிக்குற விசயங்கள, முக்கியமா தான் வாங்குற பல்புகள அட்டகாசமா சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்ல, பயணக்கட்டுரையும் உண்டு, கவிதைகளையும் எதிர்பார்க்கலாம். இப்போ இதோ தன்னோட அப்பாவின் சைக்கிள்  பத்தி என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க...



அடுத்ததா நாமப் பாக்கப்போற வலைப்பூ பலகை. அதாவது பள்ளிக்கூட சிலேட்டுப் பலகையாம். இந்த வலைப்பூவுக்கு சொந்தக்காரங்க கிருத்திகா தரன். இவங்க புதுமுகம் எல்லாம் இல்ல, ஏற்கனவே இங்க நிறைய பேருக்கு பரிட்சயம் ஆனவங்க தான். ஆனாலும் இந்த நேரம் இவங்கள இங்க அறிமுகப்படுத்துறதுக்கான காரணம் இவங்களோட இந்த “கொண்டாட்டம் என்றும்” மகளிர் தின கொண்டாட்ட பதிவு தான்...



இந்த சுந்தர நேசங்கள்  முழுக்க முழுக்க கவிதைகளால ஆனது. மனசுக்கு தோணுறத நிமிட நேர இடைவெளில எழுத்துல கொண்டு வந்துடுரவங்க இவங்க. காதல், இயற்கை, காப்பியம், தாய்மை, நட்பு, நேசம், பெண்மை, பொய்மை, மழலை, மழை, முதுமை, யதார்த்தம், ரொமான்ஸ்,ன்னு எக்கச்சக்க கவிதைகள் இங்க இருந்தாலும் இப்போதைக்கு இதோ உங்க பார்வைக்கு ஒண்ணு மட்டும் (பொற்காலம் தந்த பொன்மனச் செம்மல்)



மலரும் நினைவுகளுக்கு சொந்தக்காரங்க லலிதா முரளி. தன்னோட சொந்த மொக்கைகள தான் இதுல பதிவு செய்துருக்கேன்னு அவங்க சொன்னாலும், சிறந்த புத்தகங்களே நல்ல நண்பன்னு தன்னை ரொம்ப கவர்ந்த நூல் விமர்சனம் கூட எழுதியிருக்காங்க. பாதியிலயே இத விட்டுட்டேன்னு வருத்தப்படுற இவங்க தொடர்ந்து எழுதணும்ன்னு கேட்டுக்குவோம்...



இதோ இந்த ஒற்றைக்குயிலும் கவிதை சார்ந்த வலைப்பூ தான். குட்டி குட்டியா தன்னோட எண்ணங்கள அழகான கவிதையா சொல்லியிருக்குறவங்க கல்யாணி சுரேஷ். பாட்டும் கவிதையும் இருந்தா பசியை கூட மறந்து போற இவங்க, இப்ப மொபைல் யூஸ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து வலைப்பூவுல எழுதுறதையும் மறந்துட்டாங்களாம். அதெப்படி இவங்கள சும்மா விட முடியும்? நாம குடுக்குற உற்சாகம் மறுபடியும் அவங்கள எழுத தூண்டட்டுமே... இதோ எனக்கு பிடிச்ச ஒரு கவிதை ஆலமும் அமிர்தமும், துளி 17, உங்களுக்கும் பிடிக்கும்...



சொந்தமா நமக்கு தோணினத வலைப்பூவுல எழுதுவோம், இல்ல, பாத்து ரசிச்சத எழுதுவோம். ஆனா, தன்னோட அம்மாவுக்காக மட்டுமே அன்புடன் அம்மா  அப்படிங்குற வலைப்பூ ஆரம்பிச்சு, தன்னோட அம்மா எழுதின பதிவுகள போட்டுட்டு வராங்க அம்பிகா மாணிக்கவாசகம். அம்மாவுக்காக தனியா ஒரு வெப்சைட் ஆரம்பிக்கணும்ங்குற இவங்க கனவு கூடிய சீக்கிரம் நிறைவேறட்டும்... இதுல நிறைய விஷயங்கள் இருந்தாலும் அம்மா போட்டுருக்குற விடுகதைகள  பாத்து, அதுக்கு விடை சொல்லுங்க பாப்போம்... இது மட்டுமில்ல, இவங்ககிட்ட இன்னும் அஞ்சு வலைப்பூ இருக்கு... அதுல எனது பார்வையில்  தமிழ்ல எழுதியிருக்காங்க...



கலா ஸ்ரீராமோட வலைப்பூ புதுகைத் தென்றல் . ஊர் சுத்தினது, ஆன்மிகம், சமையல், அனுபவம்ன்னு எக்கச்சக்க பதிவுகள் இவங்களோட வலைப்பூவுல இருக்கு. எத படிக்க, எத விடன்னே தெரியாம திண்டாடத் தான் வேணும். அப்படியே பாத்துட்டு வந்தப்ப இவங்க இல்லத்தரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ் குடுத்தத பாத்துட்டேன். அத நீங்களும் பாக்கணும்ல, அப்போ படிங்க....



சரி, இன்னிக்கி இந்த அறிமுகங்கள் போதும்.... நாளைக்கு இன்னும் சிலபேரோட வலைப்பூக்களோட உங்களை சந்திக்கிறேன். அதுவரைக்கும், உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் பட்டர்ப்ளை காயத்ரி தேவி...

.
மேலும் வாசிக்க...

Sunday, March 8, 2015

மறுபடியும் உங்கள் முன் ஒரு பட்டாம்பூச்சி....



ஹாய் ஹாய் ஹாய்....

ஒன்னரை வருசத்துக்கு அப்புறம் மறுபடியும் நான் உங்க பட்டர்ப்ளை (நம்புங்க) காயத்ரி தேவி உங்கள எல்லாம் பாக்க வந்துருக்கேன்...

முதல்ல எனக்கு இந்த வாய்ப்ப குடுத்த தமிழ்வாசி பிரகாஷ் அண்ணாவுக்கும், சீனா ஐயாவுக்கும் என்னோட நன்றிகள்....


இன்னிக்கி முதல் நாளா இருக்குறதால என்னோட பதிவுகள நீங்க கண்டிப்பா படிச்சே ஆகணும்ங்குற கட்டாயத்துல இருக்கீங்க... எனக்கு செம ஜாலி, பின்ன, இப்படி ஒரு வாய்ப்பு கிடச்சா விடுவேனா, வாங்க உங்கள எல்லாம் என்னோட வலைப்பூவுக்கு இழுத்துட்டு போறேன்...

என்னாச்சு, ஏன் வர மாட்டேங்குறீங்க? என்னாது, நீ யாரா?

அவ்வ்வ்வ்... ஆமால, என்னைப் பத்தி கண்டிப்பா உங்களுக்கு சொல்லியாகணும்ல...

நான் இப்போதைக்கு பி.ஹச்.டி ஸ்காலர், ஒரு வருசத்துல டாக்டர் ஆகிடுவேன்னு நம்புறேன். வீட்ல எனக்குன்னு ரூம்மேட்ஸ் இருக்காங்க, அவங்கள குருவிங்க, மீனுங்கன்னு சொன்னா கோபம் வரும், ஆல் மை செல்லம்ஸ்... ரொம்ப ஊர்சுத்துவேன், அதுக்கு பரிகாரமா இப்ப ரூமுக்குள்ள முடங்கிட்டேன். அப்பா, அம்மா ரெண்டுமே எனக்கு இப்போதைக்கு ஒரே ஆள் தான், கூட ஒரு போட்டியாளர் தம்பி... அன்பையும் அமைதியையும் விரும்புறவ, ஆனா ரொம்ப கோபக்காரி. எழுதுறது பிடிக்கும். அதுவும் நடைமுறை இயல்போட எழுத ரொம்ப பிடிக்கும்... சவாலான விஷயங்கள ஈசியா ஹாண்டில் பண்ணவும் பிடிக்கும். இப்போதைக்கு இவ்வளவு தான்... இங்க தான இருக்கப் போறேன், என்னோட மொத்த குடும்பத்தையும் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா இன்ட்ரோ பண்ணிடுறேன்...


அம்மாவ பத்தி பேச ஆரம்பிச்சுட்டேன்னா பேசிட்டே இருப்பேன். அதுவும் அவள பாக்கப் போறதா இருந்தா, கேக்கவே வேணாம்... சந்தோசம்னா சந்தோசம் அவ்வளவு சந்தோசம்... அம்மாவோட நினைவு நாள்-ல அவள பாக்கப் போன சம்பவத்த தான் அம்மாவோட ஒரு நாள்-ல சொல்லியிருக்கேன். அத தொடர்ந்து ஒரு அமாவாசை நாள்-ல அம்மாவ பாக்க பிரகதியோட போன சம்பவம் இதோ இங்க இருக்கு (ஆடி அமாவாசை- அம்மாவும் பிரகதியும்)


சில விசயங்கள பாத்தா எனக்கு ரொம்ப கோபம் வந்துடும்... ரெளத்திரக்காரியா மாறினா அவ்வளவு தான். வர்ற கோபம் மொத்தத்தையும் கன்னாபின்னான்னு எழுதியே தீத்துடுவேன். அது மட்டுமில்ல வாய்ப்பு கிடச்சா அந்த இடத்துலயே போய் சண்டைப் போடுவேன்... சரி, சரி, இப்ப நீங்க ரொம்ப பயந்துடாதீங்க, ஆரம்பம் எல்லாம் அமைதியா தான் இருக்கும்.... இத படிச்சிடுங்க... (இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்)



என்னடா இவ, ரொம்ப சண்டைக்காரியா இருக்காளேன்னு நினைச்சுடாதீங்க, சின்னபுள்ளைங்களுக்கு மட்டுமில்ல, உங்களையும் கூட அழகா குட் மார்னிங் சொல்லி எழுப்பி விடுவேன்.... சந்தேகம்னா இத பாருங்க.... குட் மார்னிங்....

இது ஒரு வகைல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதை. இந்த கவிதைய பேஸ்புக்ல போஸ்ட் பண்ணிட்டு நான் வாங்கின திட்டு இருக்கே.... ஷப்பா.... மாங்கு மாங்குன்னு அழுது, டெலிட் பண்ணிடலாமான்னு யோசிச்சு அப்புறம் அதெப்படி, ரொம்ப ரசிச்சு ரசிச்சு எழுதினோம், இத டெலிட் பண்ணவான்னு ப்ளாக்ல போட்டேன். இங்க வந்த கமண்ட்ஸ் பாத்துட்டு தான் மனசே குளுந்துச்சு. அப்படினா நீங்களும் இத கண்டிப்பா படிக்கணும்ல.... இந்தாங்க இதான் அந்த கவிதை.... பாலையாய் ஒரு வெற்றுக் கேவல் . முதல் தடவ எல்லாம் புரியாது, ஒரு நாலஞ்சு தடவ எனக்காக படிச்சிடுங்க, சரியா...


நானெல்லாம் படம் பாக்குறது ரொம்ப குறைவு. ஆனா பிடிச்ச படமா இருந்தா ரொம்ப ரசிச்சு ரசிச்சுப் பாப்பேன்.. அப்படி பாத்த படங்கள பத்தி எழுதி உங்கள டார்ச்சரும் பண்ணுவேன்... இப்படி தான் யாராவது என்னப் படம் பாக்கலாம்னு கேட்டா இந்த படம் பாருங்கன்னு சொல்லி அப்படியே லிங்க்கும் குடுப்பேன். நீ எழுதின விமர்சனத்த படிக்க வைக்க இப்படி ஒரு தந்திரம் பண்றியான்னு நம்மள சரியா கார்னர் பண்ணிடுவாங்க ப்ரண்ட்ஸ். அவங்கள விடுங்க, ஆல் பேட் பெல்லோஸ்.... நீங்க சமத்து தான, அதனால கண்டிப்பா இத படிச்சுடுங்க... (ப்ரிட்டி வுமன் (Pretty Woman)

படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம். நானெல்லாம் ஒரு  புத்தகத்த படிச்சுட்டு ரிவியூ வேற எழுதுனேன்னு சொன்னா நம்புவீங்களா? ஆனா நீங்க நம்பித் தான் ஆகணும்... நல்லா பாருங்க, இந்தா இதான் அந்த வற்றா நதி- சிறுகதை தொகுப்புக்கான ரிவியூ.... அப்படியே புத்தகம் வாங்க  ஆர்டரும் குடுத்துருங்க. பின்ன சொந்த வீட்டு புத்தகம்ல....


இதுக்கு மேல நான் இங்க இருந்தா, கண்டிப்பா நீங்க என்னை தொரத்தி விட்ருவீங்க... அதனால, நாளைக்கு பல புதுமுகங்களோட அறிமுகத்தோட வர்றேன்... இப்போதைக்கு உங்க கிட்ட இருந்து விடைபெறுவது....


நான் தான்.... பட்டர்ப்ளை காயத்ரி தேவி...
......
மேலும் வாசிக்க...

Sunday, November 3, 2013

ஆரம்பம் - விடைப்பெறுவது உங்கள் பட்டாம்பூச்சி


ஹாய் ஹாய் ஹாய்... நான் தாங்க, பட்டாம்பூச்சி வந்துருக்கேன். ஒருவாரமா உங்க எல்லோரோட தோட்டத்துலயும் சுத்திட்டு இனி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப் போறேன்..

உண்மைய சொல்லணும்னா என்கிட்ட வந்து நீங்க பொறுப்பு எடுத்துக்குறீங்களானு கேட்ட நேரம் நான் ரொம்ப பிசி. காலேஜ்ல ப்ராஜெக்ட் நேரம். எனக்குன்னு ஆறு ஸ்டுடென்ட்ஸ். எப்படியும் அந்த வாரத்துல தீசிஸ் வச்சே ஆகணும். அந்த நேரத்துல நான் ஆன்லைன் வரதே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணத்தான். பெரும்பாலும் யார் கூடவும் சாட் பண்ண மாட்டேங்குரதால கிடைக்குற கொஞ்ச நேரத்துல வந்து ஏதாவது கலாட்டா பண்ணிட்டு ஓடிடுவேன்.

அப்படி இருக்கும் போது தமிழ்வாசி பிரகாஷ் அண்ணாவுக்கு எப்படி தான் என்னை இதுல ஆசிரியரா போடலாம்னு தோணிச்சுன்னு தெரியல, ஆனா கேட்டுட்டாங்க. இனி வர வாரங்கள்ல ரெண்டு வாரம் ரொம்பவே ப்ரீயா இருப்பேன், அப்போ பாத்துக்கலாமான்னு கேக்க நினச்சேன், அப்புறம் தான், கேட்டுட்டாங்க, முடியாதுன்னு சொல்றது சரியில்லன்னு தோணிச்சு. அதோட ஏற்கனவே மீரா அம்மா வேற என்கிட்ட லைட்டா இத பத்தி சொல்லி வச்சிருந்தாங்க, சதீஷ்சங்கவி அண்ணா என்னை பத்தி வலைசரம் சார்பா எதோ விசாரிச்சார்ன்னு. இப்போவரை நான் அவர் கிட்ட பேசினதில்ல, ஆனாலும் எல்லோரும் என்கிட்ட என்னவோ இருக்குன்னு தான் கேக்குறாங்க, சோ, கண்டிப்பா கொஞ்சம் இதுக்காக நேரம் ஒதுக்க முடியும்னு நினச்சு சரின்னு தலையாட்டிட்டேன்.

தலையாட்டிட்டேன், சரி தான், ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு உதறல் லைட்டா இருந்துட்டு தான் இருந்துச்சு. இனியாவது கொஞ்சம் இந்த ப்ளாக்ஸ் எல்லாம் படிக்கணும்னு முடிவு பண்ணினேன். நான் நினச்ச மாதிரி கண்டிப்பா அது ஈசியா இருக்கலங்க... அது எனக்கு புது அனுபவமா  இருந்துச்சு. அப்போ தான் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா கொஞ்சம் ஊக்கம் குடுத்தாங்க. ஸ்கூல் பையன் அண்ணா எனக்கு நிறைய லிங்க்ஸ் எல்லாம் அனுப்பி தந்தாங்க.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேடி தேடி பதிவுகள் படிச்சேன், காரணம், நாம எதயும் படிக்காம எதையாவது போட்டுட்டு போய்ட்டா அப்புறம் அது நல்லா இருக்காதே. நிறைய படிச்சிருந்தாலும், நான் சிலரோட பதிவுகள அதிகமா இங்க மேற்கோள் காட்டினதில்ல, காரணம் அதெல்லாம் எல்லோருக்கும் ரொம்ப நல்லா தெரிஞ்ச பதிவர்களோட பதிவுகள். அவங்களோட எழுத்துக்கள இங்க நான் எடுத்து சொல்ற அளவு நான் இன்னும் வளரலங்குறது தான் அதுக்கு காரணம். ஆனாலும் அவங்க எல்லோரோட பதிவுகளையும் நான் தொடர்ந்து படிச்சுட்டு தான் இருக்கேன், இன்னும் தொடர்ந்து படிப்பேன்.

நான் தொடர்ந்து படிச்ச பதிவுகள் இதெல்லாம்...  


இந்த நேரத்துல திண்டுக்கல் தனபாலன் அண்ணாவுக்கும் தம்பி மகேஷ்க்கும் என்னோட நன்றிய கண்டிப்பா நான் தெரிவிச்சாகனும், காரணம், இவங்க ரெண்டு பேரும் தான் நான் இங்க ரீ-என்ட்ரி ஆக காரணம்.

கடைசியா எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சீனா ஐயாவுக்கு என்னோட நன்றிய தெரிவிச்சுக்குறேன். என் மேல அவர் வச்ச நம்பிக்கைக்கு பெரிய தேங்க்ஸ்.

சரி, என்னை நான் ஏன் பட்டாம்பூச்சினு சொல்றேன்னு இதுவரைக்கும் நான் சொல்லவே இல்லையே... இந்த பட்டாம்பூச்சி இருக்கே, இதோட ஆயுள் ரொம்ப குறைவு தான். ஆனா அது வாழுற காலம் வரை சுதந்திரமா அது மனசுக்கு தோணுற மாதிரி வாழ்ந்துட்டு போயிடுமாம். நானும் ஒரு வகைல அப்படி தாங்க, எனக்கு பிடிச்ச விசயங்கள மட்டும் தான் பண்ணுவேன். சுதந்திரமா இருக்கணும்னு ஆசைப்படுவேன். என்னோட அம்மா என்னை சின்ன வயசுல இருந்தே அப்படியே வளத்துட்டாங்க. நான் இப்படி இருக்குறதுக்கு காரணம் என்னோட அம்மா... அவளும் ஒரு பட்டாம்பூச்சி தான். ஒரே ஒரு வித்யாசம், அவ என்னை சுதந்திரமா பறக்க விட ஆசை பட்டு அப்படியே பறக்க விட்டுட்டு அவ ஒரு கூட்டுப் புழுவா மாறிட்டா. இந்த நேரத்துல நான் அவளுக்கும் கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லியே ஆகணும்ல.

இந்த ஒரு வாய்ப்பால என்னோட உலகத்த நான் இன்னும் கொஞ்சம் பெருசாக்கிகிட்டேன். இங்க வந்ததால நிறைய பேர என்னால தெரிஞ்சுக்க முடிஞ்சுது. இங்க நான் நிறைய கத்துக்கிட்டேன். இப்போ எதோ கோச்சிங் கிளாஸ்ல இருந்து கிளம்புற பீல். கண்டிப்பா இங்க கத்துகிட்டத வச்சு என்னை நானே இன்னும் மேம்படுத்திப்பேன். வாய்ப்பு குடுத்தவங்களுக்கும், எனக்கு ஆதரவு குடுத்தவங்களுக்கும் மறுபடியும் நன்றி... இது என்னோட ஆரம்பம்ங்க....

அடுத்ததா வலைச்சரம் ஆசிரியரா பொறுபேற்க போறவங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்... ரொம்ப சிறப்பா வரும் வாரங்களை அவங்க கொண்டு போவாங்கங்குற நம்பிக்கை இருக்கு.

நான் வரேங்க... இங்கயே தான் சுத்திட்டு இருக்கப் போறேன்...  
மேலும் வாசிக்க...

வாங்க, வந்து கைக்குலுக்கிக்கோங்க...


ரெண்டு நாளா தீபாவளி கொண்டாடின டையர்ட்ல இருப்பீங்க நீங்க எல்லாம்... கடைசி கடைசியா நான் நேத்து பிளாக்ல போஸ்ட் போட்டுட்டு கிளம்புனதுக்கு அப்புறம் தான் ரெண்டு பேர் தீபாவளி பத்தி போஸ்ட் போட்டுருந்தத கவனிச்சேன். சரி, அவங்க எல்லாம் பெரிய ஆட்கள், இதுல தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா எப்படி எல்லாம் தீபாவளி கொண்டாடுவோம்னு கண்ணுக்குள்ள ஒரு காட்சியையே ஓட விட்ருந்தார். படிச்சி வச்சுட்டு அடுத்த தீபாவளிக்கு மறக்காம நியாபகத்துக்கு கொண்டு வாங்க.

நான் இங்க இருந்து கிளம்புற நேரம் வந்தாச்சு. என்னோட இந்த ஒரு வார அனுபவத்த கிளம்புறதுக்கு முன்னாடி கண்டிப்பா சொல்லிட்டு போறேன். காரணம் என்னன்னா

ஸ்கூல் படிக்குறப்பவே புக் எடுத்து படிக்கணும்னா ரொம்ப சோம்பல் எனக்கு. இதுல ஒருவாரம் நிறைய பதிவுகள் படிக்கணும்னு ஒரு கட்டாய சூழ்நிலை (அவ்வ்வ்வ்) வந்ததும் ரொம்ப திணறி தான் போனேன். அப்புறமா தான் பேஸ் புக்ல நமக்கு தான் ஏகப்பட்ட அண்ணாஸ் இருக்காங்களே, அவங்க கிட்ட கேக்கலாமேன்னு கேட்டேன். அப்படி நிறைய பேர் அவங்களுக்கு தெரிஞ்ச பிளாக்கர்ஸ் லிங்க் எல்லாம் எனக்கு குடுத்தாங்க. அப்படி சாதிக் அலி அப்துல்லா அண்ணா எனக்கு சில பேர எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாங்க... அவங்கள பத்திதான் நாம இப்போ பாக்க போறோம்.

வெய்ட் வெய்ட் வெய்ட்... ஒரு குட் மார்னிங் கூட சொல்லாம, ப்ளாக்ஸ் பாக்க கிளம்பிட்டா எப்படி? அதனால முதல்ல ஒருத்தருக்கொருத்தர் குட் மார்னிங் சொல்லிப்போம்.

அப்புறமா, இப்போ நாம யார பாக்க போறோம் தெரியுமா?

ஜெசிக்காவின் கிறுக்கல்கள்னு சொல்லிட்டு மனசுல தோணுறத அழகா செதுக்கி இருக்காங்க இவங்க. உங்கள்ள பலபேருக்கு இவங்கள தெரிஞ்சிருக்கும். ஆனாலும் நான் இப்போ தான் பாக்குறேன். 2005-லயே ப்ளாக் எழுத ஆரம்பிச்சுருக்காங்க, நிறைய பேர் இவங்க பதிவுகள படிக்கவும் கமன்ட் பண்ணவும் செய்துருக்காங்க. ஆனா அப்புறம் படிப்படியா இவங்க பதிவுகள் ரொம்பவே குறைஞ்சு போய் இந்த வருஷம் மொத்தமே ரெண்டு பதிவு தான் எழுதியிருக்காங்க. எந்த விசயத்த எடுத்துகிட்டாலும் அத தனி ஸ்டைல்ல சொல்றது இவங்களோட சிறப்பா இருக்கு. நிறைய எழுதியிருக்காங்கன்னாலும் வேற்றுமொழி படங்களுக்கு இவங்க குடுத்துருக்குற திரைவிமர்சனம் பத்தி நாம பாக்கலாமே

எங்கிருந்தோ வந்தான்

அடுத்து நாம பாக்குறவங்களுக்கு ஏகப்பட்ட ப்ளாக்ஸ் இருக்குன்னு இப்போ தான் எனக்கே தெரியும். எல்லா ப்ளாக்லயும், தங்கள் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கானு தான் ட்ரைலர் ஓடுது. இதுல நாம அவங்களோட கலைச்சாரல் பத்தி தான் பாக்கப்போறோம். இதுல அவங்க நிறைய டிப்ஸ் குடுத்துருக்காங்கங்க. படிச்சு பாருங்க, கண்டிப்பா உங்களுக்கு யூஸ் புல்லா இருக்கும். அதிலயும் நாம நார்மலா சாப்பாடு சாப்ட்ட பிறகு என்னவெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கார். அதெல்லாம் ரொம்ப ரொம்ப உண்மை தெரியுமா.

சாபிட்டப்பின் செய்ய கூடாதவை

எண்ணப்பறவை சிறகடிக்க வண்ண வண்ண கனவுகளோடு விண்ணில் இதமான அலைகளா பறக்குறாங்களாம் இவங்க. நிறைய கவிதை எழுதியிருக்காங்க. அதோட தன்னோட மனக்குமுறலையும் பதிவு செய்துருக்காங்க. அப்படி என்ன மனக்குமுறல்னு கேக்குறீங்களா? ஒரு பெண் எப்படி எல்லாம் இந்த உலகத்துல வஞ்சிக்கப்படுறான்னு தன்னோட மனசுல வர்ற ஆதங்கத்த கொட்டித் தீத்துட்டாங்க. நீங்களே அவங்க சொல்றது சரி தானேன்னு பாத்துக்கோங்க

பெண்மை சாபமோ?

புதுசா எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஒரு மொட்டு மாதிரி தான். அத விரியும் பூக்களா மாத்துற திறமை அந்த நூலை ஆய்வு செஞ்சு ரசிகர்களோட கைகள்ல குடுக்குற ஆய்வாளர் கைல இருக்கு. நான் சொல்றது சரிதானே? அப்படி தான், நூலாசிரியர்கள் பலரும் எழுதின நூல்கள ஆய்வு செய்து இங்க பதிவு பண்ணியிருக்காங்க இவங்க. இவங்களோட யதார்த்தம் எப்படி பட்டதுனா வானத்தைப் பார்த்து உருவாகும் கற்பனைகளை விட மண்ணில் உருவாகும் யதார்த்தங்கள் சிறப்பானவைன்னு சொல்றார். அப்படி இவர் ஆய்வு செய்த ஒரு மொட்டை பத்தி பாப்போமா?

நூலாய்வு

சமையல் வீட்ல பெண்கள் மட்டும் தான் செய்யணுமா என்ன? ஆண்களும் சமைக்கலாம் தானே. இந்த காலத்துல ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் சமையல் சொல்லிக் குடுக்க ஆள் இல்லனா அவ்வளவு தான். அதுக்கு தான் Thenu’s Recipies சொல்லிக் குடுக்க இவங்க இருக்காங்களே. இது இவங்களோட இரண்டாவது வசந்த காலமாம். எந்தவகையான சமையலா இருந்தாலும் ஈசியா நாம எப்படி பண்ணனும்ன்னு இவங்க தமிழ்லயும் இங்கிலீஷ்லயும் சொல்லிக் குடுக்குறாங்க. அதுலயும் பிரட் பக்கோடா எப்படி போடுறதுன்னு சொல்லி தராங்க பாருங்க, கண்டிப்பா படிச்சுட்டு வீட்ல போய் செஞ்சு சாப்ட்டு பாருங்க.

ப்ரெட் பகோடா

இப்போதைக்கு இது போதுங்க. கைக்குலுக்கி கைக்குலுக்கி டயர்ட் ஆகிட்டேன். பகோடா வேற சாப்ட்டேனா, இனி ரெஸ்ட் தான். எப்படியும் சாயங்காலத்துக்குள்ள மறுபடியும் வந்து உங்கள எல்லாம் மீட் பண்ணி டாட்டா சொல்றேன்... அதுவரைக்கும் நீங்க ரெஸ்ட் எடுக்காம எல்லா பிளாக்க்கும் போய் பாருங்க...
மேலும் வாசிக்க...

Saturday, November 2, 2013

இது நம்ம தீபாவளி....


நேத்து ராத்திரி நல்லா பட்டாசு வெடிச்சிருப்பீங்க, இந்த அதிரசம், முறுக்கு, உன்னியப்பம் எல்லாம் சாப்ட்டுருப்பீங்க, அப்படி சாப்டலனா ஏதாவது பேக்கரில இருந்து பால்கோவா, ஜாங்கிரி, லட்டு, மிக்சர்னு வாங்கி ஆச ஆசையா சாப்ட்டுருப்பீங்க.... என்னமோ எல்லாம் பாத்த மாதிரியே சொல்ற, உனக்கு இதெல்லாம் தெரியுமான்னு கேக்குறீங்களா? பின்ன, நேத்துல இருந்து இந்த பக்கம் யாரையும் காணோம், இப்பவும் எட்டிப்பாப்பீங்களா மாட்டீங்களான்னு தெரியல, ஆனாலும் நான் என் கடமைய செய்து தானே ஆகணும்....

ஆனா ஒண்ணுங்க, நல்ல நாளும் அதுவுமா ஆன்-லைன்ல இல்லாம குடும்பத்தோட கொண்டாடுற எல்லோருக்கும் ஒரு பெரிய ஓ...... போட்டுக்குறேன் முதல்ல....

அப்புறம், இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, இத்தனநாள் என்னை பொறுத்துகிட்டு சகிச்சுகிட்டு, இருந்த உங்க எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

இத்தன நாள், எனக்கு ரொம்ப தெரிஞ்ச, அப்புறம் தெரியாத பதிவர்கள தேடி தேடி இங்க கொண்டு வந்து சேர்த்தேன். ஆனா இப்போ அப்படி யாரையும் தேடி ஓடப் போறதில்ல... இங்கயே, நமக்குள்ள நல்லா அறிமுகமானவங்க எல்லாம் எப்படி தீபாவளி கொண்டாடுறாங்க, தீபாவளி பத்தி என்னதான் சொல்றாங்கன்னு எல்லாத்தையும் கொண்டு வந்து கொட்டப் போறேன்.

அப்படி கொட்டுறதுக்கு முன்னாடி ஒரே ஒரு புதுமுக அறிமுகம்... ஆனா நான் கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடியே நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணா அங்க அட்டனன்ஸ் போட்டுட்டாங்க. சோ அவருக்கு பழசு, நமக்கு புதுசு. இந்த ப்ளாக்ல அப்படி என்ன இருக்குனு கேக்குறீங்களா?

திரைக்கதை முதல் திரைப்படம் வரை ஒரு கதைய அணுஅணுவா எப்படி உருவாக்குறதுன்னு சொல்லிக்குடுக்குறார். திரைக்கதை மேல ஆர்வம் இருக்குறவங்க வாங்களேன், ஒண்ணா கைக்கோர்க்கலாம்னு கூப்டுறார்... போய் தான் பாருங்களேன்.
கனவுப்பட்டறை


இந்த தீபாவளி எதனால வந்துச்சு, எப்படி வந்துச்சு, அப்படின்னு ரொம்ப ரொம்ப சிம்பிளா விளக்குறாங்க மீரா அம்மா... கண்டிப்பா படிச்சு பாத்துடுவோம்

சரி சரி, இப்போ தீபாவளி கவிதைகள்ல ரெண்டை பாக்கலாம்

ஒருநாள் அசுரன் அழிந்ததனால் திருநாள் தீபாவளி வந்திடுச்சாம்... அது ஏன்னு அருணா செல்வம் அண்ணா சொல்றாங்க, கேளுங்க கேளுங்க...

கூடவே நாம எப்போ என்ன பண்ணினா சிவக்குமார் அண்ணா நமக்கு தீவாளி வாழ்த்து சொல்வார்னு பாக்கலாம் வாங்க...

அப்புறம், தீபாவளிய கலகலப்பா கொண்டு போக வேணாமா? அதுக்கு தானே இவங்க எல்லாரும் இருக்காங்க. இவங்கன்னா யார் யாரு?

எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்சவங்க தாங்க... இவங்கள பத்தின அறிமுகம்னு எதுவுமே நமக்கு தேவையில்லை, அப்படி நான் ஏதாவது சொன்னா அது அதிகப்ரசங்கி தனமா தான் இருக்கும். அதனால கப்சிப்ன்னு வாய மூடிட்டு, லிங்க் மட்டும் தரேன், என்னன்னு நீங்களே பாருங்க...

அதுல பாருங்க, எல்லாருமே அவங்கவங்க அனுபவங்கள சொல்றாங்க, அதுவும் ரொம்ப ரொம்ப சுவாரசியமா சொல்றாங்க.... நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்க, ஆனாலும் மறுபடியும் படிக்கலாம் வாங்க.

தீபாவளி: பொட்டுவெடி டூ பொக்ரான் குண்டு 

உல்லாசம் பொங்கும் இனிய தீபாவளி 

ஏப்பி டிவாலி

என்ன, இதெல்லாம் படிச்சிட்டீங்களா? இல்ல இனி தான் படிக்கனுமா? படிச்சிட்டீங்கனா சந்தோசம், மகிழ்ச்சி... இல்லனா படிச்சிடுங்க, ரொம்ப சந்தோசப்படுவேன்...

அப்புறம், மதியமா எல்லோர் வீட்லயும் கறிக்குழம்பு தான் விசேசமா இருக்கும். நல்லா சாப்பிடுங்க, சாப்ட்டுட்டு தெம்பா இருங்க, நாம அடுத்த பதிவுல பாக்கலாம்...
மேலும் வாசிக்க...

Friday, November 1, 2013

மனசுக்கு பிடிச்ச பாட்டு....


தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சாச்சு. வீட்ல பெண்கள் எல்லோரும் ஸ்வீட்ஸ், காரம், பலகாரம்னு சமையல்ல பிசியா இருப்பாங்க. டிவி பாத்துட்டே அத எல்லாம் கொறிச்சுட்டு, கூடவே இந்த பேஸ் புக், ப்ளாக்ஸ் னு பாத்துட்டு இருப்பாங்க அந்தந்த வீட்ல உள்ள ஆண்கள்..... ஹே ஹேன்னு கூச்சல் போட்டுட்டு பக்கத்துக்கு வீட்டு பசங்களோட சேர்ந்து வெடி வெடிசுட்டு இருப்பாங்க, இந்த வாண்டு பசங்க எல்லோரும்... அப்புறம் இந்த இளைஞன், இளைஞிகள் எல்லோரும் என்ன பண்றாங்கன்னு யாரும் சரியா கணிக்கவே முடியாது. இது அவங்க காலம், யார் கூட தீபாவளி கொண்டாடனும்ங்குறது அவங்க தான் டிசைட் பண்ணுவாங்க....

நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா?

“அவ்வாறு நோக்கினால், எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டேன்.
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் ,
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்..

எதிர்பாராமலே அவன்………..
எதிர்பாராமலே அவன்……. ஓ
பின் இருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் – எந்தன்
வாயோடு வாய் பதித்தான்...

இங்கு பூலோகம் என்றொரு
பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி...”

இந்த பாட்ட கேட்டு மறுபடி மறுபடி அதுல லயிச்சுட்டே இருக்கேன். அப்போ தான் இவங்க என்னோட பார்வைல பட்டாங்க. என் பார்வைல தான் பட்டுட்டாங்களே, அப்புறம் அவங்கள இங்க அறிமுகப்படுத்தலனா எப்படி?

இவங்களுக்கு நாணமே வராதாம்? அப்படியா? ஏன் அப்படின்னு அவங்களே சொல்றாங்க கேளுங்க

எனக்கு ஒன்னும் பாட்டு ஞானம் எல்லாம் பெருசா கிடையாதுங்க... முதல்ல ஒண்ணு ரெண்டு லைன்ஸ் தெரிஞ்சா போதுமே, அப்புறமா அத வச்சே முழு பாட்டையும் தேடி எடுத்துடலாம்... இதுக்குன்னே ஏகப்பட்ட ப்ளாக்ஸ் இருக்கே. நாம ரசிக்கணும்ங்குரதுக்காகவே இவங்க ரசிச்சதோட மட்டுமில்லாம நமக்காகவும் எழுதி வச்சிருக்காங்க பாருங்க, பாட்டு ரசிகர்கள் கண்டிப்பா இவங்கள எல்லாம் பாலா பண்ணினா ஈசியா நமக்கு பிடிச்ச பாட்டுக்கள ரசிக்கலாம்...

அப்படினா, அவங்கள்ல சில பேர நாம இங்க உங்க பார்வைல படும்படி கொண்டு வந்தா என்னன்னு தோணிச்சு, இந்தா கடகடன்னு என்னோட பார்வைல பட்ட மூணு ப்ளாக்ஸ் இப்போ உங்க பார்வைல...

நமக்கெல்லாம் பிடிச்ச நிலாப்பாட்டு

பிடிச்ச பாட்ட ரசிக்க இசைவரிகள்

எப்பவுமே சுவைக்க தேன்கிண்ணம்

பாட்டு கேட்டு ரசிச்சேன் சரி, திடீர்னு ஒருத்தர் நீயெல்லாம் நண்பனாடான்னு அசர வைக்குற மாதிரி ஒரு கேள்விய கேட்ட மாதிரி இருந்துச்சு, அவ்வ்வ்வ் பாவம், எந்த அப்பாவி மாட்டினார்னு தெரியலயேன்னு மெதுவா உள்ள போக போறேன், நான் மட்டும் போய் அது என்ன பஞ்சாயத்துன்னு பாத்தா போதுமா, நீங்களும் வர வேணாமா? வாங்க வாங்க, போய் பஞ்சாயத்த தீர்த்து வைப்போம் 

பஞ்சாயத்து பண்ண போய் எனக்கு தலையே சுத்திடுச்சு... நாளைக்கு தீபாவளி வேற, ஏதாவது புதுசா நீங்க ரசிக்க கொண்டு வரணுமே, அதனால இப்போதைக்கு அப்பீட்டு.... நாளைக்கு மறுபடியும் ரிபீட்டு.... வர்ட்டா....
மேலும் வாசிக்க...

டம்... டுமீல்.... டமால்......


ஹாய் ஹாய் ஹாய்..... ஏனுங்க, நேத்து ஏன் யாரையும் அதிகமா இந்த பக்கம் காணோம்? எல்லோரும் தீபாவளி பிசி போல...

ஜவுளி கடை, பட்டாசு கடை, ஸ்வீட் ஸ்டால்ஸ்னு கூட்டம் நிரம்பி வழியுதாமே.... அனேகமா நீங்களும் இங்க எங்கயாவது பிசியா இருப்பீங்க....

இந்த வாரம் முழுக்க நான் ரொம்ப பிசி, தீபாவளி பத்தி எல்லாம் யோசிக்கவே நேரம் இல்லாதப்போ தான் வலைச்சரத்துல இந்த வருஷ தீபாவளி ஸ்பெசல் என் கையிலன்னு நியாபகப் படுத்திட்டாங்க. ரொம்ப யோசிச்சு யோசிச்சு பாத்தேன். நாம இங்க விசேஷமா என்னப் பண்ணலாம்னு... அப்படியே யோசிச்சுட்டு இருக்குறப்பவே பாதி பேரு தீபாவளி கொண்டாட அவங்க அவங்க ஊர்களுக்கு எஸ்கேப் ஆகிட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் முதல்ல ஒரு பெரிய தீபாவளி வாழ்த்த தெரிவிச்சுப்போம்.

அதுக்கப்புறமா, மறுபடியும் இங்க வந்த பிறகு கண்டிப்பா எல்லாம் படிச்சு கமன்ட் போடணும்னு தண்டனை குடுத்துக்கலாம்...

அது சரி, இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெசல்?


எண்ணெய் தேய்ச்சு விட ஆள் செட் பண்ணியாச்சா?

மத்தாப்பு கொளுத்த நாலு வாரத்துக்கு முன்னாடியே தயாராகிட்டீங்களா?

வீட்டுக்கு வரவங்க, அக்கம் பக்கத்து வீட்டுக்கு குடுக்க வச்சிருக்குற பலகாரத்துல இருந்து அப்பப்போ யாருக்கும் தெரியாம திருடி சாப்ட்டுட்டு இருக்கீங்களா?

ஓலை வெடிய கொளுத்தி போட்டுட்டு என்னமோ சந்திர மண்டலத்துக்கே ராக்கட் விட்ட மாதிரி பெருமையா நெஞ்ச நிமிர்த்து ஒரு பார்வை பாக்குறீங்களா?

அப்படினா கண்டிப்பா நீங்க தீபாவளி கொண்டாட ரெடி ஆகிட்டீங்கங்க...

நான் தான் இங்க என்ன பண்ணலாம்னு ரெண்டு நாளா மூளையை போட்டு கசக்கிகிட்டே இருக்கேன், எப்படிடா இந்த தீபாவளிய ஸ்பெசல் ஆக்குறதுன்னு...

கவிதை போட்டி வைக்கலாம்னு பாத்தா, ஆத்தீ.... ஏகப்பட்ட பேர் கவிதைய எழுதி குவிச்சுட்டாங்க போலயே... இந்த நேரத்துல நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணாவுக்கு ஒரு ரிக்குவஸ்ட்.... அந்த கவிதை போட்டியில கலந்துகிட்டவங்க லிஸ்ட் அப்படியே எனக்கு கொஞ்சம் தட்டி விடுங்களேன், நாமளும் அந்த பூங்கொத்துகள்ல இருந்து அப்பப்போ தேன் சுவைச்சுட்டு அப்படியே இங்க உள்ளவங்க கிட்டயும் ஷேர் பண்ணிப்போம்ல....


எங்க இருந்து எப்படி ஆரம்பிக்குரதுனே தெரியல, இந்த நாகேஷ் சொல்ற மாதிரி சொக்கா...... கையும் ஓடல, காலும் ஓடல.... ஆனா எப்படியும் இந்த தீபாவளிக்கு வகை வகையா சாப்ட தான் போறோம், அப்போ முன் எச்சரிக்கையா நம்ம தென்றல் சசிகலா அக்கா, திண்ணைல உக்காந்துகிட்டே ப்ரீயா டிப்ஸ் குடுக்குறாங்களே, கூடவே இனிப்பா கவிதையும் குடுக்குறாங்களே... அத படிச்சு, மனசுல வச்சுகிட்டே தீபாவளி பட்சணங்கள ஒரு பிடி பிடிப்போம்.


எப்பவுமே மனசு தெளிவா, அப்படியே ஒரு பூ மாதிரி மென்மையா இருந்தா தான் எதையுமே சரியா செய்ய முடியும். பதறாத காரியம் சிதறாது ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க... ஆனா நான் அழகான ரம்யமான ஒரு சூழ்நிலைல உக்காந்து ரொம்ப ரொம்ப யோசிச்சு டையர்ட் ஆனது தான் மிச்சம், அதனால முதல்ல ஏதாவது ஸ்வீட் சாப்பிட்டு எனர்ஜி லெவல இன்க்ரீஸ் பண்ணிக்குறேன். அப்படி என்ன ஸ்வீட்னு கேக்குறீங்களா? சீம்பால்ல செய்த குலோப் ஜாமூன். சீம்பால்ல குலோப் ஜாமூனா? அப்படின்னு அதிர்ச்சி எல்லாம் அடையாதீங்க, இந்தா இவங்க ரிக்கோடா சீஸ்ல எப்படி குலோப் ஜாமூன் பண்றதுன்னு சொல்லித் தராங்க, என்னான்னு கொஞ்சம் பாருங்க...

அட, அட அடடே, குலோப் ஜாமூன் சாப்ட்டுட்டே இருக்குறப்போ தான் இந்த ஐடியாவே உதிச்சுது... தீபாவளினாலே பட்டாசுக்கு அடுத்து நல்லா சாப்டவும் செய்வோம். அப்போ இந்நேரம் சாப்பாடு பத்தி போஸ்ட் போட்டா எவ்வளவு பொருத்தமா இருக்கும்?


இனி யோசிக்கவே வேணாங்க, வாங்க, இதெல்லாம் பாத்து நல்லா தெரிஞ்சுகிட்டு அதே மாதிரி செய்து குடுத்து தீபாவளிக்கு அசத்திடுவோம்....

சமைக்கவே தெரியாதவங்க முதல் முதலா ஸ்டவ் பக்கம் போய் நின்னு செய்ய வேண்டியது ரவா கேசரி


சாதம் வச்சா குழஞ்சு போகுதுன்னு பீல் பண்ணாதீங்க, அப்படியே அத வெண்பொங்கலா மாத்திடலாம்

வடை பிடிக்காதவங்க இருக்காங்களா என்ன? ஈஸியா செய்துடலாம் உளுந்து வடை 


மட்டன் மேல பிரியமா இருக்குரவங்களுக்காக ஹைதராபாத் மட்டன் பிரியாணி 


ஹைய்யோ நான் சுத்த சைவம்னு பதறுரவங்களுக்காக வித்யாசமா கத்தரிக்கா பிரியாணி 


பரோட்டோவா? அதெல்லாம் கடைல தானே செய்வாங்கன்னு கேக்குறவங்களுக்கு வீடியோ லிங்கோட இந்த பரோட்டா 


என்ன? அவ்வளவு தானான்னு கேக்காதீங்க, நான் குடுத்த லிங்க் போய் அவங்க ப்ளாக் புல்லா படிச்சு பாருங்க, அப்படியும் அங்க கிடைக்காத சமையல் குறிப்பு வேணும்னா அப்புறம் என்கிட்ட வந்து கேளுங்க, நான் ஞே.... னு ஒரு முழி முழிச்சுட்டு அப்படியே எஸ்கேப் ஆகிடுறேன்... அடப்பாவி, அப்போ உனக்கு என்ன சமையல் தெரியும்னு கேக்குறீங்களா?

வெந்நீர் நல்லா வைப்பேன். எங்க ஊர்ல அத சுடு தண்ணின்னும் சொல்லுவாங்க, பலரோட வீட்ல காப்பின்னும் சொல்லுவாங்க....

மதியம் சமையலுக்கு இப்பவே ரெடி ஆகணும், அதனால இப்போதைக்கு உங்க கிட்ட இருந்து வடை (எதுக்கு ரெடி ஆகுறேன்னு இப்போ தெரிஞ்சிருக்குமே) பெறுவது, உங்கள் பட்டாம்பூச்சி.... காயு....
மேலும் வாசிக்க...

Thursday, October 31, 2013

கதை சொல்றாங்கோ - கூடவே கவிதையும் தத்துவமும் வருது


ஆரம்பத்துல இருந்தே ஒரே யோசனை. எப்படியாவது ஒரு தத்துவத்த உங்க கிட்ட சொல்லியே ஆகணும்ன்னு. ஐய்யய்யோ தத்துவமா, ஆத்தா, எங்கள பாத்தா உனக்கு எப்படி இருக்குன்னு பதறிடவே பதறிடாதீங்க... அப்புறம், தத்துவத்த படிக்காம எஸ்கேப் ஆகிட கூடாது பாருங்க.... நான் தத்துவம் சொல்லியே தீருவேன்...

நாம ஒருத்தர் மேல அன்பு வச்சிருக்கோம்னு வைங்க, அந்த அன்பு எப்படி பட்டதா இருக்கணும் தெரியுமா? எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, நாம அன்பு வச்சிருக்குறவங்களோட சுதந்திரத்துலயும் தலையிடாம இருக்கணும். அப்போ தான் அந்த அன்பு கடைசி வரை நிலைக்கும்.

ஆனா நான் உங்க கிட்ட ஒரு எதிர்பார்ப்பு வச்சிருக்கேன். அது என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்.... சரி, நானே சொல்லிடுறேன், இப்போ நான் உங்களுக்கு இன்ட்ரோ பண்ண போற ப்ளாகர்ஸ் எல்லாரையும் நீங்க கைத்தட்டி உற்சாகமா வரவேற்கணும். அப்போ தானே அவங்களுக்கு உற்சாகமா இருக்கும், தொடர்ந்து எழுதுவாங்க...

சரி, கை தட்ட நீங்க ரெடி ஆகிட்டீங்க, இன்ட்ரோ பண்ண நான் ரெடி ஆக வேணாமா? வாங்க, ஒவ்வொருத்தரா பாப்போம்.

சிநேகம்னா நட்பு, மித்ரானாலும் நட்பு, இப்படி பெயர்லயே நட்பு நட்பு நட்பை தவிர வேறெதுவுமில்லைன்னு காற்று வெளியிடை பிரகடனப் படுத்திட்டே வராங்க இவங்க. நிறைய கவிதை எழுதியிருக்காங்க. கொஞ்சமா கதையும் எழுதியிருக்காங்க. இவங்களோட எழுத்துக்கள வாசிச்சா ரொம்பவே வித்யாசமா இருக்கு. கண்டிப்பா எல்லோரோட பார்வைலயும் பட வேண்டியவங்க இவங்க. பெண்களை பற்றி இவங்க எழுதுற விதம், அப்படியே நம்ம வீட்டு பெண்களையோ, இல்ல பக்கத்து வீட்டு பெண்களையோ பாத்த மாதிரி இருக்கு. இவங்களோட ஒரு கதை தான் இப்போதைக்கு படிச்சேன், அழ வச்சுட்டாங்க. என்னை அழ வச்ச அந்த கதையை படிச்சுட்டு நீங்களும் அழ வேண்டாமா, கிறுகிறுன்னு தலை சுத்த வச்சி, பிரசவிக்கவும் வச்ச இவங்க கதை இதோ இங்க.
குருனைக்கட்டி

இவங்க கிட்ட ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல, மூணு ப்ளாக் இருக்கு. காரணம் இவங்களோட கனவுகள அவரோட தேவைகளுக்குள்ள அடக்கி வைக்கத் தெரியாம தேவைகள கனவுகள் போல விஸ்த்தரிசுக்கிட்டதா தன்னோட கண்மணி- தமிழும் கவிதையும்ல சொல்றாங்க.  வாழ்க்கை கடல்ல மூழ்கிடாம இருக்க, நீந்திக்கிட்டே இருக்குற பல்லாயிரக்கணக்கான படகுகள்ல இவங்களும் ஒண்ணுன்னு சொல்லிட்டு, இந்த சமூகத்தின் மேல இருக்குற கோபத்த, வருத்தத்த, ஆற்றாமைய வாய்ப்பு கிடைச்சதும் எப்படி கொட்டியிருக்காங்கன்னு பாருங்க. இது மட்டுமில்ல, இன்னும் நிறைய இருக்கு.

வாழ்க்கை எனபது நீ சாகும் வரை அல்ல, மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரைனு ஒரு தத்துவத்த சொல்லிட்டு, தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவைனு நமக்கு தெரியப்படுத்துறார் இவர். மூணு வருசமா எழுதிட்டு இருக்கார். மனசுல தோணுற கவிதை, கதைன்னு ஒரு கலவை இவரோட வலைப்பூ முழுக்க இருக்கு. அதிகமா போஸ்ட் இல்லனாலும், இனிமேல் அதிகமா இவங்கள எழுத வைக்க வேண்டியது நம்ம எல்லோரோட பொறுப்பு. ஒரு பொண்ணோ பையனோ வயசுக்கு வரது இயற்கை, அதுவே பாலினம் மாறி வயசுக்கு வந்தா??? அதுவும் இயற்கை தான்னு நாம கண்டிப்பா ஏத்துகிட்டு தானே ஆகணும். அது பத்தி இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க
குமரி


சுவாதியும் கவிதையும்ன்னு தலைப்பை பாத்தாலே இது கவிதைகளுக்கான ப்ளாக்னு உடனே நம்ம மனசுக்குள்ள தோணிரும். குட்டி குட்டியா நிறைய எழுதி இருக்காங்க இவங்க. அதுல அனுபவம் அதிகமா கலந்து இருக்கு. அனுபவம்னா எல்லோரோட அனுபவங்களும் தாங்க. படிச்சு முடிச்சதும், அட ஆமாலன்னு நாம நமக்கு நாமே சொல்லிப்போம். கவிதைன்னு நினச்சு படிக்க ஆரம்பிச்சா, தத்துவமா கொட்டி தீத்துடுறாங்க. அப்படி என்ன சொல்லியிருக்காங்கன்னு பாக்கணும்னா நீங்க ஒரு சாம்பிள் இப்போ பாக்கணும். இந்தா பாருங்க.
முகங்கள்


இவங்க கவிதைகள் எழுதுறதுக்காகவே வலைப்பூ ஆரம்பிச்சுருக்காங்கன்னு நினைக்குறேன். ரொம்ப குறைவான அளவே போஸ்ட் பண்ணியிருக்காங்க. ஆனாலும் கவிதைகள் மேல இவங்களுக்கு இருக்குற காதல் இங்க சாரல்லா பொழிஞ்சிருக்காங்க. இவங்க என்னை விட பெரியவங்களான்னு கூட எனக்கு தெரியாது. ஆனாலும் இவங்க இன்னும் நிறைய கவிதைகள் எழுதணும்னு ஊக்கம் குடுக்க வேண்டியது நம்மோட கடமை தானே. ஒரு குழந்தை வச்சு விளையாடிய காகித கப்பலையும், ஒரு இளைஞனோட பார்வைல அது தொனிக்குற விதத்தையும் இங்க விவரிச்சுருக்கார். அப்படி என்ன எழுதி இருக்கார்னு இங்க பாக்கலாம்.

நான் இப்போ டையர்ட் ஆகிட்டேன். அதனால இந்த பட்டாம்பூச்சி இப்போ ரெஸ்ட் எடுக்க போகுது. அப்புறமா பிரெஷா வேற பூக்கள்ல தேன் தேடி போகணுமே. அதனால இப்போதைக்கு ரெஸ்ட். ரெஸ்ட் ஆப் தி இன்ட்ரடக்சன் நெக்ஸ்ட்... கொர்ர்ரர்ர்ர்.....   


மேலும் வாசிக்க...

Wednesday, October 30, 2013

மகளிர் அணி - இது அவங்க ஏரியா


கூ... கூ... ன்னு குயில் ஒண்ணு கூவிகிட்டே இருக்கு. கீச் கீச்ன்னு அணில் எல்லாம் என்னவோ அவங்களுக்குள்ள பேசிட்டு இருக்கு. ரொம்ப கூர்ந்து பாத்தா குட்டி குட்டி உயிரினங்கள் எல்லாம் அவங்க அவங்க இருப்பை இந்த உலகத்துக்கு உணர்த்த எதோ ஒரு வகைல பேசிகிட்டு தான் இருக்குதுங்க. அப்போ நாம மட்டும் பேசாம இருந்தா எப்படி? அதான் டான்னு உங்க முன்னால ஆஜர் ஆகிட்டேன்.

சரி, வந்தாச்சு. முதல்ல எல்லோருக்கும் குட் மார்னிங். இன்னிக்கி நாள் பூரா நீங்க சந்தோசமா, உற்சாகமா இருக்கணும். அதுக்கு இப்போ நாம புதுசா ஒரு அஞ்சு பேர பாக்க போறோம். நாம இப்போ பாக்க போறவங்க எல்லோரும் பெண் பதிவர்கள். ஆமாங்க, இவங்க எல்லாம் மகளிர் அணி, வாங்க வாங்க, ரொம்ப டைம் எடுத்துக்காம அவங்கவங்க ஏரியாவுக்கு போய் ஒவ்வொருத்தரயா பாப்போமா?

முதல்ல நாம பாக்க போற வலைப்பூ நினைவலைகள். கல்லூரி ஒண்ணுல மைக்ரோபயாலாஜி துறைத் தலைவியான இவங்க, தன்னோட எண்ணங்களின் நினைவுகள்ல தொக்கி நிக்குற அனுபவங்கள தன்னோட நினைவலைகளா இங்க உலவ விட்டுருக்காங்களாம். இவங்களோட ப்ளாக் பக்கம் போனா தன் பிரெண்ட்ஸ் கூட அவங்களோட சந்திப்பு, நமக்கு உடம்புல வர்ற பிரச்சனைகள், சமூகம் பத்தி என்ன நினைக்குறாங்க, கவிதைகள்னு ஒரு மசாலா கலவை கொட்டி கிடக்கு. படிக்க எல்லாமே சுவாரசியமா தான் இருக்குன்னாலும், பதினெட்டு வருஷம் கழிச்சு அவங்க மீட் பண்ணின பிரெண்ட்ஸ் கூட எங்க போனாங்க, என்ன நடந்துச்சுன்னு விவரிக்குறாங்க பாருங்க, நாமளும் கொஞ்சம் அவங்க கூட போயிட்டு வருவோம்..
பள்ளி நண்பர்களுடன் ஒரு சந்திப்பு

பிறந்தது மதுரைனாலும் சீனாவின் பீய்ஜிங்ல வாழுறவங்க இவங்க. சீனாவை பத்தின இவங்களோட பார்வையை “அண்ணன் தேசம்” ன்னு ஒரு புத்தகமா விகடன் பதிப்பகத்தார் வெளியிட்டுருக்காங்க. புத்தகமே வெளியிட்டுட்டாங்க, அப்புறம் இவங்கள பத்தி வேற என்னங்க சொல்ல? அன்பானவங்க, பண்பானவங்க, இவங்கள நேசிக்குற ஒரு கூட்டமே இருக்கு. இவங்களோட வலைப்பூ பெயரே தமிழுக்கு ஒரு பிரேமாஞ்சலி  தான். தமிழை அவ்வளவு காதலிக்குற இவங்க மூழ்கி முத்தெடுக்கும் நிலவு கன்னி, வாரி அணைக்க காத்திருக்கும் அலைகடல்லோட சங்கமத்துல ரம்மியமான சூழ்நிலையில சீனாவை பத்தின தன்னோட பார்வை, தன்னோட பயண அனுபவங்கள், அங்க கொண்டாடப்படும் திருவிழாக்கள்னு பல விசயங்கள அழகு தமிழ்ல இங்க பதிவு பண்ணிருக்காங்க. இப்போ நாம அவங்க பார்வைல ஹாங்காங் எப்படி இருக்குன்னு பாக்கப் போறோம். வாங்க.


ஒரு பிசியோதெரபிஸ்ட்டா வாழ்க்கைய தொடங்கி, அப்புறமா குடும்ப தலைவியாகி, இசையையும், புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வந்துட்டு இருக்காங்க இவங்க. இவங்களோட மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையா நமக்கு குடுக்குறாங்க. இவங்க ப்ளாக்ல கூட கவிதை, மருத்துவம், கல்விமுறை, நட்பு, தியானம், சந்தோசம்னு பல விஷயங்கள் கொட்டிக் கிடந்தாலும், இப்போதைக்கு மன உளைச்சல்ல இருந்து எப்படி விடுபடுறதுன்னு விளக்குரங்க பாருங்க, கண்டிப்பா எல்லோரும் படிச்சு கடைபிடிக்க வேண்டிய ஒண்ணு. கடைப்பிடிச்சுடுங்க.
மனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்

அறிவியல் ஆசிரியையா இருந்தாலும் கவிதைகள் மேல தனக்கு இருக்குற தீராத காதலால கவிதாயினின்னு தன்னை அடையாளப்படுத்திக்குறாங்க இவங்க. என்ன தான் இவங்க இவங்கள கவிதாயினியா சொல்லிக்கிட்டாலும் இவங்களோட ப்ளாக்ல அறிவியல், முகநூல், எண்ணங்கள், நூல் விமர்சனம், சிறுகதை, கட்டுரைன்னு ஏகப்பட்ட பதிவுகள உணர்வின் நெருடல்களா பதிவு பண்ணியிருக்காங்க. இவங்க இலங்கையை சார்ந்த கவிதாயினிங்குறதால இவங்களோட எழுத்துகள்ல இலங்கை தமிழின் வாசம் நம்ம வீடு வரை அடிக்கும். அதுக்காகவே இங்க பதிவுகள தேடிப் படிக்கலாம். கவிதைகளுக்காக பல பரிசுகள வாங்கின இவங்க அப்பா பத்தி ஒரு கவிதை எழுதி இருக்காங்க. அந்த கவிதை ரொம்பவே எதார்த்தமா, உணர்வு பூர்வமா இருக்கு. அப்போ கண்டிப்பா அத படிக்கணும் தானே... வாங்க, படிங்க  
தந்தைக்கோர் கடிதம்

இவங்கள பத்தி சொல்றதுக்கு அதிகமா இல்லையாம், நடுத்தர குடும்பத்த சேர்ந்த இவங்கள எல்லோரும் எழுதுன்னு ஊக்கம் குடுத்ததால அவங்களோட சிந்தனை சிறகுகளை விரிக்க வந்துடுக்காங்க. சாதி மதம் மேல் தனக்கு ஈர்ப்பு இல்லைன்னு சொல்ற இவங்க, இவங்கள பத்தின நம்மோட எண்ணங்கள அவங்களோட பகிர்ந்துக்கவும் சொல்றாங்க. கதை சொல்லப் போறேன்னு தான் ஆரம்பிக்கவே செய்துருக்காங்க, இப்போ தொடர் கதை வேற எழுத ஆரம்பிச்சுட்டாங்க. குட்டி குழந்தையோட மனநிலை பத்தி குழந்தையாவே மாறி கதையா சொல்லியிருக்காங்க பாருங்க, வாங்க, நாமளும் குழந்தையா மாறி இந்த கதைய ரசிக்கலாம். 
பிறந்தநாள் வேண்டுதல்

சரிங்க, இப்போ நமக்கு அறிமுகமானவங்க எல்லோருக்குமே இந்த பதிவர் உலகத்துல கண்டிப்பா அவங்களுக்கான அங்கீகாரத்த நாம குடுக்கணும்ங்க. அடுத்ததா நான் காலேஜ் போய் அங்க என்னோட பொறுப்புகள பாக்கணும்ல, அதனால அப்புறமா வந்து இன்னும் கொஞ்ச பேரை பத்தி பாக்கலாம். அதுவரைக்கும் நீங்களும் வீட்ல இருந்தா வீட்டு வேலை, ஆபிஸ்ல இருந்தா அங்க உள்ள வேலையெல்லாம் பாத்துட்டு, அப்புறமா அடுத்த அறிமுகங்கள பாக்க வந்துடுங்க. இப்போ கிளம்புவோம். 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது