07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கோகுல். Show all posts
Showing posts with label கோகுல். Show all posts

Sunday, January 29, 2012

மாணவனாக தொடர்கிறேன்.....


இந்த வாரம் நிறைய தேடல்.நிறைய புதிய தளங்களின் அறிமுகம் எனக்கும் கிடைத்தது.இன்னும் நிறைய பேரை அறிமுகம் செய்ய நினைத்தேன்.ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் எழுதலாமா எனவும் நினைத்தேன்.ஆனால் எனது சூழல் ஒத்துழைக்கவில்லை.சொல்லப்போனால் முதலிரண்டு பதிவுகள் வெளியே உலவு மையம் (browsing center)போய்தான் பதிவிட்டேன்.நான் அறிமுகப்படுத்த விரும்பும் சிலபதிவுகளுடன் மகிழ்வுடன் விடைபெறுகிறேன்.

செய்தாலி இந்த தளம் முழுக்க  கவிதைகள் கசிகின்றன.வீதிக்கு வந்த இறைவனை பார்க்கலாம்.


jom pages அதென்ன jom? ஜூனியர் ஓல்ட்மாங்க் என்பதின் சுருக்கம் இது.ரயிலுக்கு நேரமாச்சு ரயிலில் போகும் போதெல்லாம் நினைவுக்கு வரும்.

இந்த நல்லவன்.ஒரு பட்டிமன்றம் நடத்துகிறார் மனிதன் உயர்திணையா?அஃறிணையா? தீர்ப்பு என்ன பாருங்க

பணங்கூர், தெரியாததை தெரிந்து கொள்,தெரிந்ததை பகிர்ந்து கொள் என்று சொல்லும் இவர் மகாத்மா காந்தியைப்பற்றி தனக்குத்தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறார்.

Shri Prajna.நல்லோதோர் வீணை செய்து கொண்டிருக்கிறார்.மரங்கள் எனும் மகாத்மாக்கள் மூலம் வெட்டப்பட்ட மரமொன்று மனிதனுக்கு சொல்லிகொள்வது என்ன பாருங்கள்.

மெல்ல தமிழ் இனி வாழும்.சத்தியமான வார்த்தை தான் இது.THE BANYAN – இது வெறும் ஆலமரம் மட்டுமல்ல.இந்த பதிவு அன்னை தெரசா இன்னும் நம்மோடு தான் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

தன் எண்ணங்களை அம்பலத்தில் ஏற்றும் அம்பலத்தாரின் பக்கம் இது.ஆண்களின் உலகத்தில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என அறியலாம் வாருங்கள்.

பார்த்தது,கேட்டது,தோணியது,விசாரித்தது எல்லாவற்றையும் பகிர்ந்து வரும் இவர் கிரிக்கெட் மோகத்தை கபடி ஆடுகிறார்.

தமிழ் பேரண்ட்ஸ்.இந்த தளம் எல்லா பேரண்ட்ஸ்களும் கவனிக்க வேண்டியதளம்.குழந்தைகள் என்ன பந்தயக்குதிரைகளா?என கேட்கிறார்.


என் மேல் நம்பிக்கை வைத்து வலைச்சரத்தில் எழுத அழைத்து அங்கீகாரமளித்த  சீனா ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.தொடர்ந்து ஆதரவளித்துவந்த நண்பர்களுக்கும்,பின்னூட்டம் மூலம் உற்சாகம் அளித்தவர்கள் ,வலைச்சர குழுவிற்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.ஆசியராக இன்றுடன் விடைபெறுகிறேன்.மாணவனாக தொடர்கிறேன்.நன்றி.......



மேலும் வாசிக்க...

ஆக்கப்பாதையில் பதிவுலகம்..........


கொஞ்சம் சினிமாத்தனமான டயலாக்கா தெரியும்.எனக்கு வேற மாதிரி சொல்லத்தெரியல.ஓகே.விசயத்துக்கு வரேன்.இந்த சமூக வலைத்தளங்கள் ஒரு தீப்பெட்டிக்குள் தூங்கிக்கிட்டு இருக்குற தீக்குச்சி மாதிரி இதனால்  நல்ல விசயங்களை ஆக்கவும் முடியும் நல்ல விசயங்களையே அழிக்கவும் முடியும்.இதை கையிலெடுத்துக்கொண்டு சமூகத்தின் ஆக்கப்பாதைக்கு வெளிச்சம் தரும் சில பதிவுகளின் அறிமுகத்தை இன்று பார்க்கலாம்.

கிராமத்து காக்கை இந்தகாக்கை நகரத்திற்கு உணவு தேடி வந்திருக்கிறதாம்.சுற்றுச்சூழலை காக்க மரம நடுவோம் என சொல்லி கேட்டிருப்போம்.ஆனால் இந்த காக்கை மரம் வெட்டுங்கள் நாடு வளம் பெறும் என்கிறது.நான் கூட நாம தான் தப்பா படிக்குறமோன்னு நினைச்சு திருப்பியும் பாத்தேன்.மரம் வெட்டுங்கள் அப்படிதான் இருக்கு ஏன் அப்படி இருக்கு?

உண்மையா பொய்யா? நாம் கேள்விப்படும்,படிக்கும் நிகழ்வுகளைப்பார்க்கும் போது நமது மனசில எழும் கேள்வி இது.இவரும் இப்படித்தான் கேட்கிறார்.எப்போதாவது நடந்தால் விபத்து எங்கேயும் எப்போதும் நடந்தால் அது என்ன என கேட்கிறார்.

நவீனத்துவம்,நாகரிகம்(!)கன்னாபின்னாவென்று வளர்ந்து வந்தாலும் பெண் குழந்தைகளைளிடம் நமது கருத்துகள் சிலவற்றை திணிக்கத்தான் செய்கிறோம்.இந்த stereotype விளைவுகளை உலகம் எனது பார்வையில் தளத்தில் பார்க்கலாம்.


சில பேர் தங்கள் கண் முன்னே நடக்கும் நிகழ்வுகளை எத்தனை நாள் கழித்து கேட்டாலும் அப்படியே சொல்லுவார்கள்,அவங்களையெல்லாம் கேமிரா கண்ணுங்க உங்களுக்கு ன்னு சொல்லுவோம்.இன்னைக்கு எல்லோருடைய கையிலும் கேமிரா இருக்கிறது.எல்லா இடத்திலும் கேமிரா இருக்குது.எந்நேரமும் கேமிராக்கண் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது இந்த கேமிராக்களால் வரு விபரீதங்களையும் நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் வழிமுறைகள் இங்கே நமது நண்பர் பகிர்ந்திருக்கிறார்.


தினம் தினம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களது எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.அதேநேரத்தில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் வருவது போன்ற பணம் கட்டி ஏமாந்து போகும் சம்பவங்களும் கணிசமான அளவில் நடக்கிறது.சரி எப்படித்தான் ஏமாறாமல் இருப்பது?அது குறித்து இங்கே சொல்லப்பட்டிருக்கிறது வாருங்கள்.


ஏன் இந்த கொலை வெறி? இது அந்த பாட்டைப்பத்திய விசயமில்லைங்க.மருத்துவர்களுக்கும் ,மக்களுக்கும் இடையயுள்ள உறவு சார்ந்த விசயங்களை இந்த வேண்டுகோளுடன் சொல்கிறது இந்த பதிவு.அன்பு நண்பர்களே அடுத்தமுறை நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது மனிதனாக நடத்துங்கள் ! இது மக்களுக்கும் பொருந்தும்; மருத்துவர்களுக்கும் பொருந்தும். 


எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு புலம்பல் இருக்கு.அறிவியல் ரீதியாக பார்த்தால் சிந்திக்கும் திறன் மூளைக்கு தான் இருக்கிறது.ஆனா நாம மனசார சொல்றேன்,உன் நெஞ்சைத்தொட்டு சொல்லு அப்படின்னு எல்லாம் சொல்லுறோம்.உண்மையில் மனசுன்னு நாம குறிப்பிடுறது இதயத்தை.சரி,நாம மனசு சொல் படி நடக்கனுமா?இல்ல மூளை சொல்லுறத கேக்கணுமா?


மனிதா!நீயும் கடவுளாகலாம்,உன்கண்களுக்கு சாகாவரம் அளிப்பதன் மூலம்.இது கண்தானம் குறித்து நான் எழுதியது.உத்தரவின்றி இங்கே நான் நுழைந்த போது கண்தானம் ஏன்?எப்படி? ஏன் கண்ணில் பட்டது.உங்கள் பார்வைக்காக.....

ஒரு இடத்தில் விவாதம் நிகழ்ந்தால் அமைதி ஏற்படுமா?மணம் திறந்த விவாததால் ஏற்படட்டும் உலக அமைதி என்கிறார் இவர்.பசித்தால் என்ன செய்வோம்.இது என்ன கேள்வி ,சாப்பிடுவோம் என்கிறீர்களா?எதை சாப்பிடுவோம்?சிலர் சைவம்,சிலர் அசைவம் இதுதான் பதிலாக இருக்கும்.ஆனால் நாம் சாப்பிடுவது விசத்தை என்கிறார் இவர்.

எகத்தாளம்.பேர்தாங்க இப்படி,பதிவுகளில் பொறுப்புணர்வு மிஞ்சி நிற்கிறது.இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே.ஆமாங்க,வாயில் இருக்கும் வரை உமிழ்நீர் அப்படின்னு சொல்றோம்.துப்பிட்டா அதை எச்ச(ல்)என்கிறோம்.துப்பு கெட்ட பொழப்பு என கேள்விப்பட்டிருக்கிறீர்களா?இல்லையா?அப்ப வாங்க.

நண்பர்களே,ஆக்கப்பதையில் நாமும் பயணிக்கலாமா?

மேலும் வாசிக்க...

Saturday, January 28, 2012

விவசாயதிற்கான தேடல்....


இந்தியா அடிப்படையில் ஒரு விவசாயம் சார்ந்த நாடு.இன்றைய நகரமயமாகும் சூழலில் விவசாயத்தின் நிலை கேள்விக்குறியாக மாறி வருகிறது.நம்மில் பலர் விவசாய சூழலை விட்டு வேறு துறைகளுக்கு மாறிவிட்டிருக்கிறோம்.இந்நிலையில் விவசாயத்திற்கான தேடல் வலையில் கிடைக்கிறதா என தேடிய போது கிடைத்த முத்துகள் சில பற்றி இன்றைய அறிமுகத்தில் பார்ப்போம்.

முதலில் கிடைத்த முத்து இதன் பெயரே பசுமைமுத்து. விவசாயத்தை மறந்துவிட்டாலும் நம் அனைவருக்குள்ளும் விதையாகக்கிடக்கும் மரம் நடும் ஆசைக்கு வழி சொல்கிறார்.

வேளாண்மை உலகம்.ஆம் பெயருக்கேற்ற மாதிரி நிறைய வேளாண்மைத்தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. என்டோசல்ஃபான் போன்ற ரசாயன பூச்சி மருந்துகளுக்கு தடை வந்திருக்கும் சூழலில் பயிரைக்காக்க இயற்கை முறையே போதுமானது.இதை உணர்வோமா?

விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை தருகிறது இந்த தளம்.விவசாயம் சார்ந்த நிறைய நுட்பங்களைத்தருகிறது.வருங்கால விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை என்ன?என்பதை இந்த பதிவு அலசுகிறது.எங்கே செல்கிறது இந்திய விவசாயம் இந்த தொடரையும் படிக்கத்தவறாதீர்கள்.

பயிர் விளையுமுன் அல்லது அறுவடைக்கு முன் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்ற குறைபாடு விவசாயிகளிடையே உண்டு.இதற்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டம் பற்றிய தகவல்கள் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.

மண்,மரம்,மழை இந்த தளத்தில் காப்புரிமை,அறிவுசார், சொத்துரிமை,வணிகம் பற்றிய விழிப்புணர்வையும் தகவல்களையும் தருகிறது.வேம்பு,மஞ்சள்,பாசுமதிக்கு நான் காப்புரிமை இழந்ததை இப்பதிவு நினைவூட்டுகிறது

வேளாண்மை.காம் என்ற தளம் நாளுக்கு நாள் வேளாண்மை குறித்த தகவல்களை தந்து வருகிறது.
விவசாயம் பண்ண முடியலேன்னா என்னங்க நாம வீட்டிலே விவசாயியாகலாம் அப்படின்னு பசுமை இந்தியா தளத்தில் வீட்டுத்தோட்டம் போட,மூலிகை தண்ணீர் தயாரிக்க சொல்லித்தராங்க வாங்க கத்துக்கலாம். 

விவசாயத்திற்கான தேடலில் இணைந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.அடுத்த பதிவில் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Friday, January 27, 2012

முடிந்தவரை சிரிங்க.......


இன்னைக்கு உங்களை எல்லாம் சிரிக்க வைக்குறதுன்னு ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்.சிரிக்காம யாரும் தப்பிச்சுட முடியாது.

பொண்ணு பாக்கப்போறப்போ பஜ்ஜி சொஜ்ஜிஎல்லாம் சாப்பிட்டுட்டு ....ம்,சரிங்க ஊர்ருக்குப்போய் லெட்டர்(ஓ!இது அந்தக்காலத்துலதான) மிஸ்டு கால்(!) குடுக்குறோம்ங்க.இப்படித்தான் நடக்குது.ஆனா இந்த கதை வேற.காதலிக்குற பொண்ணோட அப்பாகிட்ட பொண்ணு கேக்க போறப்போ அவரு போன வாரம் வந்து பொண்ணு கேட்டது நீயில்லையா?அப்படின்னு கேட்டா பையனோட ரியாக்சன் எப்படி இருக்கும்?

கடுகு சிறுத்தாலும்..........இல்லைங்க நான் சொல்ல வந்தது அது இல்லைங்க இங்கே காரமெல்லாம் கிடைக்காதுஇங்கே இருப்பது எல்லாமே இனிப்புதான்.ஹிட்லரையே ஜோக்கராக்குகிறார் ஒரு ஜோக் எழுத்தாளர்.

பரிட்சைகள்ல கேக்குற சில கேள்விக்கு பதில் தெரியாம ஏதோ கைக்கு வந்தத எழுதி வைப்போம்.காசா,பணமா? சும்மா அடிச்சு விடறது தானே.அந்தப்பழக்கம் தான் இன்னைக்கு பிளாக் வரைக்கும் வந்திருக்கு.ஒரு தேர்வுத்தாளில் நாயக்கர்கள் பெயர்க்காரணம் சொல்லப்பட்டிருக்கு.இதுக்கு எத்தனை மார்க் கிடைச்சது?

இந்த நாட்டுல அஞ்சு மிகப்பெரிய முட்டாளுங்க(என்னது முக்காவாசி பேருங்க அப்படித்தானா?ஓகே.அதுல பெஸ்ட் அஞ்சு பேர்) இருக்காங்களாம்.அதுல நெ.1 முட்டாள் யாருன்னு தெரியுமா?ஐ!நான் சொல்ல மாட்டேன் நீங்களே போய் பாருங்க.


நகைச்சுவை.காம் இந்த பேர்ல புதுசா ஒருத்தர் கிளம்பியிருக்கார் இங்கே இருக்குற திருடன் போலிஸ் ஜோக்ஸ் வாரஇதழ்களில் வரும் ரகம்.அதிலும் ஒருத்தர் திருட்டுத்தொழிலை விட்டுட்டு வேற தொழில் ஆரம்பிசிருக்காராம்.

வேடிக்கையான மனுசன்யா நீ,இப்படி ஒரு சிலரை பார்த்து சொல்லுவோம்.இங்கே ஒரு வேடிக்கையான மனிதன் சங்கம் வைச்சு சிரிக்க வைக்குறார். நான் பார்க்க நான் பார்க்க நான் அப்படின்னா என்ன தெரியுமா?தெரிஞ்சுக்கங்க.

வாங்க சார் வந்து ஒரு விசிட் அடித்து போங்க... அப்படின்னு ஒருத்தரு கூப்பிட்டாரு சரின்னு போய் பாத்தேன்.அங்கே சாப்ட்வேர் என்ஜினியர்கள் தங்கள் மேனஜரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் சில கேட்டிருந்தார்.இந்த கேள்விகள் எல்லா மேனஜர்களையும் பார்த்து கேட்கலாம்.

இந்த டக்கால்டி வேலை எல்லாம் என்கிட்டே வைச்சுக்காத,அப்படின்னு கவுண்டரு ஒரு படத்துல டயலாக் பேசுவாரு.தன்னோட பிளாக்குக்கு டக்கால்டின்னே பேர் வைச்சிருக்கார் இந்த கவுண்டமணி ரசிகர்.கபாலியும் ககன்லால்சேட்டும் பேசிக்குறாங்க பாருங்க.

நண்பேண்டா என சொல்லிக்கொண்டு எழுதி வருகிறார் ஒரு நண்பர்(மெட்ராஸ்பவன் சிவகுமாரின் இன்னொரு தளம் நண்பேண்டா இது அது அல்ல).நம்ம கிரிக்கெட் டீம் படற பாட்ட என்ன கொடும சார் அப்படின்னு கேக்குறார்.சச்சின் எப்ப நூறாவது செஞ்சுரி அடிப்பாருன்னு போய் பாருங்க.

புன்னகை உலகம் இந்த உலகம் நம்மையெல்லாம் நிச்சயம் புன்னகைக்க வைக்கும் என்ற உத்திரவாதமளித்து அதை உண்மை என உணரவும் வைக்கிறது.உழைக்கிற கழுதை தான் உதைக்குமாம்.
ஒரு தென்றல் நம்மை சிரிக்க வாங்க என அழைக்கிறது.




நண்பர்களே,அறிமுகமாகியுள்ள பதிவுகளில் உள்ளவற்றை நகைச்சுவையாக மட்டுமே பார்க்கலாமே.
இன்னும் சில அறிமுகங்களை அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி. 

மேலும் வாசிக்க...

Thursday, January 26, 2012

அறிவியலின் ரகசியம் இனிய தமிழிலே...


உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை இயற்கை பல ரகசியங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.இந்த ரகசியம் உலகில் வீற்றிருக்கும் ஒவ்வொரு பொருளிலும்,ஒவ்வொரு உயிரிலும் அடங்கியுள்ளது.அதைக்கண்டுபிடிக்க மனிதன் கண்டுபிடித்த சாவிதான் அறிவியல்.தேடத்தேட முடிவுறாப்புள்ளியை நோக்கி பயணிக்கும் இந்த ரகசியம்.அறிவியலைப்படிப்பது நம்மில் பலருக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கசக்கச்செயதாலும் கற்க கற்க இனிக்கும் விஷயம்.அதுவும் நமது இனிய தமிழில் சொல்லவா வேணும்.இன்றைய அறிமுகங்களில் சில அறிவியல் விசயங்களை எளிமையாக சொல்லிச்செல்லும் பதிவுகளைப்பார்ப்போம்.

அறிவியல் நம்பி இந்த தளத்தில் பல அறிவியல் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. சந்திரனுக்குப் போகலாம் வாங்க என்ற பதிவின் வழியே நாமும் சந்திரனுக்குப்போய் ஒரு ரவுண்ட் அடித்து வரலாம் வாங்க.

தமிழ்த்தோட்டம் என்ற தளத்தில் தாய்மொழிக்கல்வி,அறிவியல் தமிழ்,போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுற்றுசூழலில் ஏற்படும் மாற்றங்களை அறிவியலால் வெல்வோம் வாருங்கள்.

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.இப்படி அறிமுகத்துடன் வளவு என்ற பெயரை தாங்கி வரும் தளத்தில் தமிழர்களின் அறிவியல்,வானியல் நுட்பங்களைப்பற்றி நிறைய அறியலாம்.தமிழர் வானியல் என்ற பதிவைப்பார்க்கலாமா?

தமிழில் அறிவியல் இந்த தளத்தின் பெயரே இதுதான்.சில புரிந்துகொள்ள முடியாத அறிவியல் கோட்பாடுகளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி வரும் பதிவுகள் தொடர்ந்து வருகின்றன இந்த தளத்தில்.நியூட்டன் எப்படி புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்தார் ?

அறிவியலுக்கு என ஒரு ஊர் இருந்தால் என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து அறிவியல்புரம் என பெயர் வைத்து பூமியியலைப்பற்றி நிறைய தகல்வல்கள் கொண்டுள்ள தளம் இது.காற்றழுத்தத்தாழ்வு நிலை ஒன்று புதிதாய் உருவாகியிருக்கிறது என டி.வி.ல திரு ரமணன் சொல்ல அடிக்கடி கேட்டிருப்போம்.அதென்ன காற்றழுத்த தாழ்வு மண்டலம்?தெரிஞ்சுக்க வேணாமா?

அவியல் தெரியும் இங்க அறிவியலையே அவியல் போல சுவையா விருந்தாக்கி வைச்சிருக்காங்க.மாயா மாயா எல்லாம் மாயா தாமரை இலையில் நீர் போல ஒட்டி ஒட்டாமல் இரு.எப்பேர்ப்பட்ட தத்துவம் இது?ஆனால் தாமரை இலையில் ஒளிந்துள்ள அறிவியலின் ரகசியம் அறியாமலிருக்கலாமா?

பொதுவாக குருவி இரை தேடப்பறக்கும் ஆனால் ஒரு விஞ்ஞானக்குருவி  அறிவுப்பசியால் பறந்து பல தகவல்களை நமக்கு அளித்து வருகிறதஎக்கச்சக்கமான தவகள்கள் இந்த விஞ்ஞானக்குருவியின் கூட்டில் கிடைக்கிறது.ஒளியின் வேகம் தெரியும் ஆனால் ஒளியின் வேகத்தை மிஞ்சக்கூடியது எது தெரியுமா?

வணக்கம் இணையக்கல்வி இந்த தளம் தமிழ் அறிவியல்,விஞ்ஞானப்ப்ரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,பல துறைகள் சார்ந்த தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.ஏன்,எதற்கு,எப்படி,எனும் இந்த தளத்தின் பக்கத்தில் மூடநம்பிக்கையாகப்பார்க்கும் சில விசயங்களுக்கு அறிவியல் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.

கனல் மணக்கும் பூக்கள் என சமீபமாக எழுதி வருகிறார் திரு.பெர்ஜின், இவர் ரத்தத்தை சுத்தப்படுத்தலாம் என்கிறார் எப்படி?

இன்னும் சில அறிமுகங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி!
மேலும் வாசிக்க...

எப்படியெல்லாம் பேர் வைக்குறாங்க?

பதிவுக்கு தலைப்புவைக்க ரொம்ப யோசிப்போம்.சில பேரோட வலைப்பூவின் பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கும் அப்படிப்பட்ட சில தளங்களின் அறிமுகத்தை இன்று பார்ப்போம்.


யோசிங்க ,அட உங்களைசொல்லலைங்க இங்க ஒருத்தர் அப்படித்தான் தன் தளத்துக்கு பேர் வைச்சிருக்காரு.அப்படி என்ன யோசிக்க சொல்றார்னு உள்ள போய்த்தான் பாப்போமேன்னு போனேன்.சும்மா சொல்லக்கூடாதுங்க மண்டைய பிச்சுக்க வைச்சிட்டார்(யோசிச்சு தாங்க)அறிவுக்கு வேலை கொடுக்கும் பல விளையாட்டுகளை நீங்களும் போய் விளையாடுங்கள்.

யார்கூடவாவது பேசிக்கிட்டு இருக்கும் போது அடிக்கடி எதிர்வாதம் பேசுறவங்களை பாத்து ஏன்பா இப்படி எடக்கு மடக்கா பேசுற அப்படின்னு கேப்போம்.உடனே அவங்க பார்த்திபன் மாதிரி எடக்குன்னா என்ன மடக்குன்னா என்னன்னு அதுக்கும் மடக்குவாங்க.இப்படி தன் வலைக்கு பேர் வைச்சு வாழ்க்கை பற்றி தனது நடையில் சொல்லியிருக்கிறார்.

பிசாசு இது யாரையாவது திட்டுறத்துக்கு நாம பயன்படுத்துற வார்த்தை இதை கோபமாவோ இல்ல செல்லமாவோ பயன்படுத்தலாம்.செல்லமா தன் வலைக்கு பிசாசுக்குட்டி அப்படின்னு பேர் வைச்சிருக்கார் ஒருத்தர்.இவர் ஆண்களின் ஆளுமை பெண்களின் ஆளுமை பற்றி சொல்லியிருக்கிறார் பார்க்கலாமா?

சரியான லொள்ளு பார்ட்டி அப்படின்னு சில பேர சொல்லுவோம் .இங்கே ஒருத்தரு லொள்ளு அப்படின்னு பேர் வைச்சுக்கிட்டு பேருக்குத்தகுந்தமாதிரியே எழுதிக்கிட்டு வராரு.இவரு சம்பள உயர்வு பெற சில வழிகள் சொல்றாரு.பாத்து கடைபிடிக்கலாம் வாங்க.

காலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... "நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு.... இப்படித்தன் வலையைப்பற்றி அறிமுகம் செய்து வழக்கம் போல் அப்படின்னு பேர்வைச்சு வீராப்பு பேசுறார் .

நாஸ்தென்கா – இது எந்த மொழின்னு தெரியுதுங்களா?எனக்கும் தெரியலைங்க .சரி தெரிஞ்சுக்கலாம்னு கூகுள்ல தேடினப்போ எஸ்.ரா.அவர்களோட தளத்துக்கு கூட்டிட்டுப்போச்சு அங்கே தஸ்தாயெவ்ஸ்கி இவரோட அறிமுகமும் இவரோட (White Nights, by Fyodor Dostoevsky இந்த கதையில வரும் பெரு பெண்ணின் பெயர் என ஒரு வழியா கண்டு பிடிச்சாச்சு.இவர் அடிக்கடி எழுதுவதில்லை.இவரது ஹைக்கூ முயற்சியை ரசிக்கலாம் வாங்க.

மண்மணம் இது எல்லாருக்கு தெரியும் அது என்னங்க மண்கவுச்சி.இந்த பெயரில் உள்ள தளத்துக்கு போய் அப்படியே நாம ஊர் விளையாட்டுகளின்பலன்களை தெரிஞ்சுக்கலாமா?

படம் ரொம்ப மொக்கடா சாமின்னு ஏதாவது மொக்க படத்த பாத்து ரொம்பவே அலுத்துப்போயிருப்போம்சில நேரம்.இவரு தன்னை மொக்கசாமி-ஆனா ரொம்பஷார்ப் அப்படின்னு சொல்லுறார் தன்னைப்பத்தி. இவரு உயிர் காக்குமா மருந்துகள் அப்படின்னு கேக்குறார். 


மேலும் சில அறிமுகங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி.

மேலும் வாசிக்க...

Tuesday, January 24, 2012

நெகிழ்வுகளில் இனிக்கும் வாழ்க்கை .......

வாழ்க்கை இனிப்பது சில நெகிழ்வான தருணங்களில் புரியும் ,அப்படிப்பட்ட சில தருணங்களின் அறிமுகம் இன்று.....

வாழ்க்கை வாழ்வதற்கே இரண்டு வார்த்தைகளில் இருந்தாலும் இது மாபெரும் தத்துவமாக எனக்கு தோன்றுகிறது.என்னடா இது வாழ்க்கை என சலித்துக்கொள்ளும் சில வேளைகளில் இந்த வார்த்தை புது தெம்பூட்டும்.இதையே தனது வலையின் தலைப்பாக வைத்து எழுதி வருகிறார் திரு பிரபாகர் இவர் தாத்தாவுக்கு எழுதிய கடிதத்தை  நாமும் பார்க்கலாமா?


வாழ்வே பேரானந்தம் ,வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் ரசித்து வாழ்பவர்களால் மட்டுமே இப்படிக்கூற முடியும் .இந்த பெயரை தனது வலைக்கு வைத்து எழுதிவருகிறார்.எத்தனை  கோடி இன்பம் வைத்தாய்  என இவர் சொல்லும் தருணம் நெகிழ்வானது.


அன்பை விட ஆயுதம் எதுவுமில்லை,எத்தனை சத்தியமான வார்த்தை இது அன்பே கடவுள் என சும்மாவா சொன்னார்கள்?இந்த பெயரில் எழுதி வருகிறார் திரு சிவசங்கர் .இவருக்குப்பிடித்த நாட்களும் நிமிடங்களையும் பார்த்து வரலாமா?


நாம் வாழும்காலத்துக்குப்பிறகு அல்லது நமது முன்னோர்கள் தமது வாழ்வின் அடையாளமாக விட்டுச்செல்வதை சுவடுகள் என்போம்.தனது அடையாளமாக 
எஸ்.பி.ஜெ.கேதரன் அவர்கள் சுவடு பதித்து வருகிறார் இந்த தளத்தில், நமது மனதின் பூட்டப்பட்ட பகுதிகளை திறக்க மனிதனாய் சில நிமிடங்கள் வாழச்
சொல்லும் நிமிடங்கள் இவை .


கற்றலும் கேட்டலும் அள்ள அள்ள குறையாத செல்வங்கள்,இந்த பெயரில் குறையாத செல்வங்களை நமக்கு தந்து வருகிறார்,சகோ.ராஜி.மருந்து,சிகிச்சைகளுடன்மரணத்தை வெல்ல முக்கியமான விஷயம் பற்றி  நல்லதோர் வீணை செய்தே   இங்கே சொல்லியிருக்கிறார்.



ஒரு கடிதம் எழுதி முடித்தவுடன் கீழே உண்மையுள்ள என எழுதுவது வழக்கம் ,அது போல என்றென்றும் உண்மையுடன் என தானறிந்த உண்மைகளை எழுதிவருகிறார் திரு.இளையதாசன் இவருடன் சேர்ந்து பள்ளிக்கு போகலாம் வாருங்கள்.


சுனாமி இந்த வார்தைக்கேட்டால் பதறத்தான் தோன்றும்.ஆனால் தனது எண்ணங்கள் அலையல்ல சுனாமி எனச்சொல்லி எழுதி வருகிறார் விச்சு அவர்கள்  இவர் தனது எழுத்தால் மொக்கராசுவின் கட்டிலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பாருங்கள். 

ஊர் விட்டு ஊர் போனா சிலருக்கு உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது,காரணம் கேட்டா அந்த ஊர்க்காத்து எனக்கு ஒத்துக்கல அப்படிம்பாங்க ஆனா இந்த கோவைக்காற்று எல்லோருக்கும் ஒத்துக்கும்.ரமேஷ் வேங்கடபதி அப்படி என்னதான் சொல்றார் இந்த பேரின்ப விலாசம் பற்றி.






மேலும் வாசிக்க...

Monday, January 23, 2012

எனது மனதில் தோன்றியவை சில -

தமிழறிந்த அனைத்து உறவுகளுக்கும் எனது வணக்கங்கள்,

தற்செயலாகப் பதிவெழுத வந்தவன் நான்,சில பதிவுகளை எழுதிய பின் இந்த வேலைக்கு நான் சரி வருவேனா என என்னை நானே கேட்டுக்கொண்டிருந்த போது,சக பதிவர்கள்,நண்பர்களின் ஆதரவு,கருத்து காரணமாக இந்த வேலைக்கு எப்படியோ நம்மள ஒத்துக்கிட்டாங்க போல அப்படின்னு நினைச்சுக்கிட்டு தொடர ஆரம்பித்தேன்.இந்த நிலையில் திரு.சீனா ஐயா அவர்கள் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த போது முந்தைய ஆசிரியர்களின் பட்டியலை பார்த்து பிரமித்தேன்.நான் பதிவெழுத வந்தபிறகு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்தை எனக்களித்த ஐயாவிற்கும்,வலைச்சரம் குழுவிற்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். இனி எனது பதிவுகளின் சரம்..........
எனது முதலில் இருந்து தொடங்குகிறேன்,அம்மா,அப்பாதான் எல்லோருக்கும் முதல் , அம்மாவுக்காக சில வரிகள், தன் பிள்ளைகளை இப்படி நன்றி செய்வாயோ என கேட்கும் ஒரு தந்தையின் ஆதங்கம் இந்த பதிவு.
வீட்டிலிருந்து கிளம்பும் போது போயிட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்புவதிலிருந்து துவக்குகிறது நமது நம்பிக்கை,அந்த நம்பிக்கையைக்காப்பாற்ற பயணத்தின் போது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதுடன் சாலையில் பயணிப்போர் அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.வேகத்தடை ஒரு பாதுகாப்புக்குதான் ஆனா அதுவே சில நேரங்களில் பயணத்தடையாகிவிடுகிறதே . அதே மாதிரி ஹெட்லைட்ங்கறது பாதையை வெளிச்சமாக்கதான் ஆனா அதுவே சிலரின் வாழ்க்கையை இருட்டாக்குவது நியாயமா? மழையில் பயணிப்பது ஒரு சுகானுபவம் தான் ஆனால் அதற்காக பின்னால் கஷ்டப்பட வேண்டுமா? இசை பல பரிமாணங்கள்ல திரியுது அதே மாதிரி ஊர்ல எல்லா கலர்லையும் மாக்கான்(ர்)கள் திரியுறாங்க,அவங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்! ஹெல்மெட் அணிவது உயிரைக்காக்கும் இது எல்லாrக்கும் தெரியும்,ஹெல்மெட்டுக்கு விளக்கம் தெரியுமா?


நாம் வாழும் இந்த பூமி நமக்கு மட்டுமே சொந்தமானது அல்ல,நாம் வாழும் காலம் வரைக்கும் பூமிதான் நமக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது.அடைக்கலம் கொடுத்த பூமியை நெகிழியால்(பிளாஸ்டிக்) தவிக்கவிடலாமா? நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக நாம் விட்டுச்செல்ல வேண்டியது வசந்ததையா குப்பைகளையா? உப்பில்லா பண்டம் குப்பைக்கு போகலாம் உப்புள்ள பண்டம் போகலாமா?இது நியாயமா?

பேருந்து பணனத்தின் போது இந்த மோட்டல்களினால் பயணிகள் படும் பாடு சொல்லி மாளாது.அதனால்தான் மோட்டலைக்கண்டாலே பயணிகள் மிரளுகின்றனர்.அதுமட்டுமா?நம்ம ஊர்ல அரிசி வாங்க வசதியில்லன்னு சொல்லி இலவச அரிசி போடுறாங்க, ஆனா இதுக்கு காசு வாங்குறாங்க.
பயணம் நமக்கு பல படிப்பினைகளையும் அனுபவங்களையும் கொடுக்கும் எனது பயண அனுபவங்கள் சில......
ஓடத்தில் பயணம் செய்து கரை சேரலாம் ஆனால் தண்டவாளம் கரை சேர்த்து கேள்விப்பட்டிருக்கீர்களா?பயணிகளின் கனிவான கவனத்திற்கு என்று சொல்லுவாங்க,எனக்கு கிடைச்ச கனிவான கவனத்தை கொஞ்சம் பாருங்களேன்.

ரொம்ப சீரியஸா போய்க்கிட்டிருக்கோ?வாங்க கொஞ்சம் சிரிச்சிட்டு போலாம். இங்கே ஒருத்தரு தீப்பெட்டி கேக்குறாரு எதுக்குன்னு கேளுங்க.அச்சம்,மேடம்,நாணம் அப்படின்னா உங்களுக்கு அர்த்தம் தெரியும் பயிர்ப்புக்கு அர்த்தம் தெரியுமா?இங்க ஒருத்தர் மயக்கம் போடுறார் எதுக்குன்னு பாருங்க.அப்புறம் புதுசா ஒரு முயற்சி பல”சரக்கு”க்கடை .

வலைச்சரம் வழியாக ஒரு வேண்டுகோள்.
தானே முன்வரலாமே!!!


அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம் , நன்றி 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது