07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சுந்தரி கதிர். Show all posts
Showing posts with label சுந்தரி கதிர். Show all posts

Sunday, August 23, 2015

சுபமங்கள இறுதிநாளில்

சுகந்தம் பொங்கி சுவாசமலரெடுத்து வண்ணப்பூமாலை செய்து தோரணம் கட்டிய வலைச்சர நாளின், சுபமங்கள இறுதிநாளில்வந்திருந்து வாசித்து மணம் பெற்ற மாதவ வலைப்பூக்களுக்கு நன்றி கூறி....

மகிழ்மாலை சரமாகிய மதுமலர்கள் அறிமுகத்தில் இன்றும் சில ஆதர்ச பூக்கள்
எடுத்த பூக்களை தொடுக்கும் முன் ... இன்று நம்மின்

பல நல பல்மொழிகளில் நாம் அறிந்துகொள்ளப்போகும் மேலாண்மைத்துறை

பற்கள் சொத்தையால் வலி ஏற்பட்டு அதனை காப்பாற்ற முடியாமல் போகும் போது
பல்லை எடுத்து மேலும் தொந்தரவு ஆகாமல்..பக்கத்தில் இருக்கும் பற்களையும் கிருமி பாதிப்பு தொற்றாமல் பாதுகாக்கும் துறை

பற்கள் நேராக வராமல் தன் அமைப்பு மாறி முளைக்கும்போது பல் அடியில் சீழ்கட்டி இருந்து பாதிக்கும் போது தாடை எலும்புகள் அடிபடும் போது.. மெல்லுவதில் பிரச்சனை ஏற்படும் போது...
முக அழகை சீர்படுத்தும் அறுவைசிகிச்சை முறையும்....

மவுத் கேன்சர் எனப்படும் வாய்புற்று நோய் ஏற்படும்  போது..
அதன் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு
அதனை அறுவை சிகிச்சை முறையில் இத்துறை வல்லுனர்கள் சரி செய்வார்கள்
அழகு ஆரோக்கியமாய் இயற்கை தந்த பற்களை பேணி பாதுக்காத்து.. அழகிய முக அமைப்பையும் ஆனந்த சிரிப்பையும்
அற்புத சொல்லையும் ஆயுள் உடல்நலத்தையும் அன்புடன் காப்போம் தோழமைகளே

வரும் முன் காக்க சில குறிப்புகள்
1. இரண்டு மாத்திற்கு ஒருமுறை TOOTH BRUSH மாற்றவும்
2.ஆறுமாதத்திற்கு ஒரு முறை அருகில் இருக்கும் பல்மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்யவும்
3 சரியான முறையில் பற்களை துலக்கவும்
4.அதிகாலை ..இரவு இருமுறையும் கட்டாயம் பல் துலக்கவும்
5.இனிப்பு உணவுகள் உண்டவுடன் நன்கு வாய் கொப்பளித்து உணவுத் துகள் பற்களில் சேகரமாகாமல் செய்யவும்
6. பற்கள்தொந்தரவு அறிகுறிகள் அறிந்தவுடனே காலதாமதம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகவும்

நலம் தரும் பற்களை நன்முறையில் காத்து ஆயுள்பலம் கூட்டுவோம் அருமைகளே

இன்றின் நம்மின் ஆதர்ச பூக்களில் முதலில்
அயல்நாட்டில் பணிபுரிந்து.... அன்னைதமிழ் வாசம் பரப்பும் ஆடலரசின் எண்ணங்களாய் வலம் வரும்
தில்லயம்பலத்தான் பெயர்தாங்கிய நண்பரின் நல்மொழி வலைப்பூ


தாமிரபரணி ஆற்றங்கரை பிறந்த இவரின் தமிழில் என்றும் மணக்கும் பசுமையாய் விளைந்த கதிர்மணிகள்

உழவர் திருநாளில் உழவனுக்கு ஒர் வணக்கமாய்... சோறுடை தமிழ்நாட்டை... சொல்லி மேன்மையும் மொழிகளாய்...உயிர்மெய்தழுவி உயர்வாடும் இவர் தம் சொல்வளமை சொக்கவைக்கும் உயிராடல்
முப்பெரும் தேவிகளை முதன்மைஅழைத்து அமரவைத்து...அவர் தம் கொலுவேறிய அழகை .நவராத்திரி பெருமை சொல்லும் கவியாய்...நல்சிரிப்பு ரசனையாய்....கடல்கடந்து சென்றினும் நம் கலாச்சார பெருமை மறவாத ஈர விழிப்பாய் சொல்லாடும் இவர்தம் கொலு அழைப்பு

சதங்கை கட்டும் வண்ணப்பூ சென்று ..சற்று ஆடல் ரசித்து வாசித்து தமிழ் மணங்கள் பிரியங்களே.
**************************************************************************************************************
கலையழகு மொழி கொஞ்சி அடுத்து வரும் கவின் பூ ..பூபாள ராகமிசைக்கும் திரு பூபாலனின்..எனது கவிதைகள்


பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பெருமை மிகு அடையாளமாய் வலம் வந்து நித்தம் கவிமொழியாய் எளிமைத் தமிழை எழுத்தாய் சுவாசிக்கும் அருமை நணபரின் படைப்புகள் பல பத்திரிக்கைகளில் வெளிவந்து வாகை சூடிய போதும்
கைகட்டிய அடக்கமாய் என் புகழ் அனைத்தும் என்னுயிர் தமிழுக்கே என்றே சிந்தை துளிர்ப்பார்

செல்போன் படுத்தும் பாடு எனும் கட்டுரை சொல்லும் ..வாழ்வியல் நிதர்சனைகளை.. விகடன் அங்கீகார அக்கவிதை சொல்லும் வாழ்வோட்ட வரைமுறைகளை


விஷமாகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை ..என்று உணவுப்பெருட்களில் கலந்து கொண்டிருக்கும் நச்சுப் பொருட்களை அலசி ஆராய்ந்து விழிப்புணர்வு சொல்லும் பதிவு ..சமூகத்தின் மீதான அக்கறைகோபத்தை அறிவுத்தும்

கொலுசுஎனும் இணைய இதழ் ..நிலாமுற்ற கலந்துரையாடல்.....ஞாயிறு வரத் தப்பினாலும்.. ஞாயிரு எங்கும் மலரும் இவர்கள் இலக்கிய ஒளிவிழா ..என தமிழ்தொண்டாற்றும் வலைப்பூ பக்கம் சென்று வாசித்து வளமையாடுங்கள்

***********************************************************************************************************************
மதுரை மல்லியாய்..தன் தளம் மணக்கும் நண்பர் பழனிகுமார் பக்கங்கள்

ஏதோ எழுதி எங்கோ சேமித்த என்னை ..வலைப் பூ ஒன்று ஆரம்பியுங்கள்..உங்கள் வளமைத்தமிழ் சேமியுங்கள் என்றே நலப் பிரியமாட அழைத்த இங்கு காலூன்ற வைத்த ஆரம்பத் தமிழன்

தாய்மொழித் செழுமையை எளிமை செயலாடல்களாய் ..குறுஞ்செய்திகளில் கூட்டெழுத்து விகுதிகளாய் பெரும் உணர்வுகள் சொல்லும் இவரின் கவி மொழிகள்


ஈரமாடும் மொழி இவர் சிறப்பு

அநேகமாய் இவர் நேசிக்கும் மொழி சொல்லும் இவரின் அன்புத் தளவாட எளிமைகளை
*************************************************************************************************************************
ஆதர்ச பூக்கள் பக்கம் சென்று அன்பணைத்த தோழமைகளே

இது வரை இன்சிறப்பு வாரமாய் இங்கு எனக்கு சிம்மாசனமிட்டு வாழ்த்திய வலைச்சரத்தில் ..
நித்தம் நான் தொடுக்கும் பூக்கள் பக்கம் சென்று மணம் பெற்று ..மனம் போற்றிய தோழமைகள்

டாக்டர் ஜம்புலிங்கம்
திரு நடனசபாபதி
திரு பரிவை குமார்
திரு தளிர் சுரேஷ்
திரு துரை செல்வராஜூ


மற்றும் ஆசிரிய பொறுப்பேற்க அழைத்து அணி செய்த வலச்சர ஆகம பிதாக்களுக்கு அன்பு கூறி விடைபெறுகிறேன்....

அலுவல் நேரமாய் ஓடிக்கொண்டிருக்கும் எனக்கு ..கிடைக்கும் அரைநிமிடமும் இளப்பாற இன் மடி தரும் தாய் மொழியில்..அடுத்தவர் பக்கம் சென்று வாசிக்க நேரமில்லமல்..
அடுத்தடுத்து மொழி துள்ளி எழுத்தணைக்கும் ...என்னின்

தமிழ் பொக்கிஷங்களை....தேடி வளமையாய் சேகரித்து..இப் பொறுப்பு நான் அமர..வலக்கையாய் வந்தமர்ந்து உடன் பின் நின்று உவகை சாமரம் வீசி என் வனப்பு காத்த உயிர் தோழி மீராவுக்கு நன்றி மொழிகளை நல்முத்து முத்தங்களாய் இட்டு....

கவி விடைபெறுகிறேன்....களம் பல கண்டு கவின் தோழமை தேன்கூடாய் வலைச்சரம் ஆயுள் அமுதம் பருகி ...புதுவித தேடல் பல நான் பெற்ற பேருனபவத்துடன்.......நன்றி நன்றி நன்றி ..நட்பூ மலர்களே




மேலும் வாசிக்க...

Saturday, August 22, 2015

ஆறாம்நாள் அரும்பெடுக்கிறேன்..ஆற்று நீரோடி


நந்தவனப் பூக்களுடன் சுகந்தநடைபோட்ட நட்புகளுக்கு மன நன்றி கூறி....சீதனபூக்கள் சில எடுத்து.. ஆறாம்நாள் அரும்பெடுக்கிறேன்..ஆற்று நீரோடி

இன்று நம்மில் இதழ்மலர்ந்திருக்க வரும் வலைபூக்கள்..
திரு மண பெண்மைப் பூக்கள்... சுதந்திர இணையத்தில் சுடர் 
தமிழ் வாகைசூடி  வானுயரம் கண்ட தேன்சிட்டு பூக்கள்  

மாதவம் செய்து மாதராய் பிறந்து .. செல்ல மொழி கொஞ்சும் தமிழன்னைமடி.. செழுமையாய் தவழும் செம்மொழி சீதன பூக்களின் பூவிதழ் விரிக்கும் முன்

 பல நல பல்மொழிகளில்.....   நாம் இன்று அறிந்துகொள்ளப் போகும் மேலாண்மைத்துறை  



   பற்சொத்தைகளால் பற்களில் வலி வரும் போது அதை சரிசெய்து .. 
பற்களை பாதுக்காக்கும் துறை வேர்சிகிச்சை முறையிலும் பற்சொத்தைகள் சரி செய்யப்படும் விளையாட்டிலோ... விபத்திலோ பற்களின் சிறுபகுதி உடைந்து விழும் போதும் வயதின் காரணமாக பற்களின் மேற்பகுதி எனாமல் தேய்மானமாகி ..பற்கூச்சம் ஏற்படும் போது..இத்துறை வல்லுனர்களால் அவை சரி செய்யப்படும் இயற்கை பற்களின் இதயத்துடிப்பான .. இத்துறை அறிந்து ....இளமை சிரிப்பை காத்திடுவோம் வளமைகளே 

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

முதலாய் நம்மை சுகந்தமிழுக்க வரும் சூட்சம சீதனப் பூ ... சுடரென்று தமிழ்த் தீ தித்திக்கும் அகல்முக அகப்பூ {படம் 3} இருளிலும் எம் தமிழ் பிரகாசிக்க ....பெண்மை அவதாரமெடுத்த புதுமை பார தீ... சக்தியும் ஜோதியுமாய் தன்னை..புடம் போட்டு...10 புத்தங்களுக்கு மேல் வெளிவந்தபோதும்



தான் என்ற கர்வத்திமிர் கொள்ளாத தமிழன்னை மதிநிறை திருமதி சக்திஜோதியின் சீதன வலைப்பூ  
கொடிபிச்சிப் பூவாய் ...வனக்காடுகளில் வலம்வந்த கதிரைப் பூவை .. ஆதிகாடு ஆதிமொழி என்றே இமையணைப்பது இவரின் தனிப் பெரும் பேராண்மை  
நீயும் நானும் நாமாகி.... தள்ளி நின்று நம்மை நாமே ரசித்தல் எப்படியென்பதை இலக்கிய மொழியாய் புகுத்தி வெற்றி காண்பவர்...... அன்பிலான ஒரு சொல் ......



 மொழிகளுக்குள் சிக்காத நேசத்தை.. எப்படி எளிமையாய்..இமையணைத்து இதழ் பரப்புகிது..இக் குழைவுச் சொல்...வரை ஓவியத்தில் ஓர் வம்சவாழ்வு சொல்லி சுடரேற்றி விடுவார் ..ஜோ பெண்மை விழிப்புணர்வுகளின் பெரும்சக்தி இவர்....ஒருசமுதாய மாற்றத்தை சுவசமாய் சுவாசித்து...களைகளை களையெடுக்க வாள் எடுடுக்கும் தைரியப் பூ ஊடகங்களில் திருநங்கைகள் .... 

உத்திரவாதமாய் விமர்ச்சனம் வரும் அனல் தலைப்புகளை,... தனிமேடை அமர்ந்து சொல் எடுத்து விளாசும் துணிச்சல்..இத் தீக்கு தவிர எத் தீ க்கு வரும்
சென்று வாசியுங்கள்....செந்தீ ஏந்துவீர்கள் நீவீரும் இவருகென்று எப்படி கிடைக்கிறது..இப்படிப்பட்ட வளமை தலைப்புகள் 

புத்தகத்திற்கும்..கவிதைக்கும் புருவம் உயர்த்தி வியக்கவைக்கும் அற்புதமாய் மீன் நிறத்திலொரு முத்தம்..நிலம் புகுந்த சொற்கள்..கடலோடு இசைத்தல்......காற்றில் மிதக்கும் நீலமென சொல் எனும் தானிய விதையாய் கட்டுக்கடங்காமல்.. எழுதிக்குவித்து..கருத்தரங்கம் பல கண்டு ...கலைமகள் அரிதாரமாய் வலம் வரும் இவரின் இன்னொருமுகம் இயற்கை வளம் காக்கும் பசும் முகம்...சத்தமில்லாமல்..பசுமைப் புரட்சி செய்யும் பாச முகம் இதுவரை கிட்டத்தட்ட 50000 க்கு மேல் மரக்கன்றுகள் வளம் செய்து ..மண்காத்து மழைதர பூமி வந்த தீ மேகம் நின்று வாழும் வரம் பெற்ற நிரந்தபுகழ் தேவதை பக்கம் சென்று நாமும் கற்போமே.....கொஞ்சம் தீந்தமிழ் 

*******************************************************************************


அடுத்து வரும் அழகு சீதனப் பூ....... இணையவானொலியின் ஆர் ஜேவாய்,....அழகைமெருகில்... ஆதர்சகுரலில் ஆளுமை மொழியில்..தமிழ் தடாகம் பூத்து அரபுநாட்டில் மணக்கும் தேன்சிட்டு பூ

திருமதி சுமிதா ரமேஷின் ..

சுமியின் கிறுக்கல்களாய்...கிறக்க மனமணைக்கும் ....கீரவாணிப் பூ
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ஆழவார்கள் கூட்டி....திருமாலை அறிவோமா ..என்றெடுக்கும் இவர் மொழி

அழைத்து வந்து அமரவைக்கிது..அந்த பரந்தாமனை..பாற்கடலில் இருந்து எழுப்பி.. இவரின் இறைமொழிக்குள் ராதைமணாளனின் திருவடிகளே சரணம்

என்று தொடுக்கும் மொழியோ... எம்பெருமானை கால்மாற்றி கனிவாட வைக்கும்...கருஎழில் வளமை

இறைமொழி ஆதி அந்தமிட..விமர்ச்சன மொழிகளாய்..இவர் நம் முன் வைக்கும்.... தான் மயங்கிய மரப்பசுவும் தி ஜ வாஇ தன் மொழி ரசனையாய் ..இவர் நம் முன் சமைக்கும் விதம் அருமை

கதைகதையாம் காரணமாம் என்றே...கடவுச்சொல்லெடுத்து

காலச்சக்கர மொழிப் பார்வையில்..நிறுத்துகிறார்...நரசிம்மரை நம்முன

எழில் எடுத்த அழகு மொழியில் அனைத்து தளங்களையும் தழுவி.....மதுகொஞ்சி மனம் அள்ளும் இத்தேன்சிட்டின் சிறகலகு மொழி கண்டு சோபியுங்கள் தோழமைகளே

*********************************************************************************

இனிய கவிதை தீர்த்தமாய் அடுத்து நம் முன் மணம் பரப்ப வரும் சீதனப் பூ...

தேடல்களும் படைப்புகளுமாய்......தேன் சிறகு விரித்து வானுயர் வாகை செய்த

திருமதி கீதா ரவி அவர்களின் வசந்த வலைப்பூ 

காதலை..களவை...கோபத்தை..சிரிப்பை....கொள்லும் மொழியாய்..கொள்கல பிரியமாய்..கவிமணம் ஏந்தி நித்தம் ஈர மணம் பரப்பி..எம் தமிழன்னையை ..அயல் பூமி சென்று தரணி விதைக்கும் பூ விடாமல் துரத்தும் கோளை...விட்டுவிடு என்று கையெடுத்து வணங்கி ...எள்கற்பூரதீபமேற்றி வருத்த மொழியில்..இயல்பணைத்து...வளமையாய் நிதர்சனம் பேசுகிறார் .....சலம்பல் பண்ணும் சனிபகவனிடம்



எழூத்தணைக்கும் எல்லோரின் கனவிலும் கண்டு உண்டு ரசிப்பான்....எம் மீசைத் திமிரோன் இவரிலும் கருக்கொள்கிறான்.... ‘’பாரதி பிறந்தால்’
விரல் பிடித்து அழைத்துச்செல்லும் வேரோர் வெற்றி உலகு... முண்டாசுக்கவியின் முன்வீரமாய் மூப்பு சொல்லும் வழிநடை




விண் சென்ற எந்தைக்கு...என’ விழிநீரால் ஓர் கடிதம் ’’இவரெழுத மொழிவழித் துக்கம் மனம் நிறைந்து வழிகிறது கன்னகதுப்பெங்கும் உப்புச் சூடாய்..... இனிமையணைக்கும் மொழியாடல்களை...சென்று கண்டு ருசித்து வளமையாடுகள் தமிழ் மண வண்ணமலர்களே

****************************************************************************************************************************************


இன்றின் இறுதியாய்..நம்மை நிலவணைக்க வரும் நிலா...குழந்தை நிலா ஹேமா பெளர்ணமித்தோழியின் பார்வெல்லும் சீதன வலைப்பூ

வானம் வெளித்த பின்னும் ..என வெட்டவெளி தலைப்பிட்டு ....வாழ்வியல் சீர்பிறழ்வுகளை சிந்தைதட்டி மொழியாண்டு உயர்சிகரமேறும்
தமிழ் விந்தை கற்ற வியந்தை இவர்


மொழி சுழல் கொண்டு மையமாடும் இவரின் ஈழத்து தமிழில் அடங்காதவர்கள் மாதமிது என்று .....முள்ளிவாய்கால் கொடூர சிதறலை...கொடும் மொழியெடுத்து இவர் செப்ப


பிசைந்தமனம் வழியே வழியும் ஈரமெங்கும்..கரு கலைந்த வலியோடு கூடிய உதிரப் பிசுபிசுப்பு மண்ணிறங்கி மீண்டும் பிரபஞ்சம் ஏந்த ஈர முத்தமேந்தி வரும் தேவதூதனாய்...காற்றாகி அவன் என்னவொரு காத்திருப்பின் தவிப்பாடல்,..வனமும் வண்டும்..வானும் வெளியும் மயங்கிச் சொக்கி நிற்கிதடி..தோழி நின் மொழிதேவன் புவியிறங்க



கனா உலாவரும் கருக்களை...சொல் உருக்கள் கொண்டு பிரியமாடி...பயந்து..குட்டி புன்னகையில் புதைத்து பிள்ளைஉறக்கம் தேடும் ..பிரிய சொல்லாடல் இனிய தாலாட்டு

எழுதிக்கொண்டே போகலாம்..எவரும் கையாளமுடியாத வழியில்..இவரின் எழுத்தணைக்கும் லாவகத்தை  
வலைப்பூ பக்கம் சென்று வாசித்து மொழிசுழல்சிக்கி மோட்சம் காணுங்கள் 
கவின் மனங்களே சீதனப்பூவாய் நான் இன்று தொடுத்து வலைக் கூந்தல் சூடிய.... தேன்சிட்டுப் பூக்கள் கண்டு ..உவகைப்பிரியமெடுத்து உயிராடும் பிரியங்களே.. சந்திப்போம் .நாளோடு என் வலைநாள் மங்களமாகும் தமிழ் மண நாளில் ..
*********************************************************************************
மேலும் வாசிக்க...

Friday, August 21, 2015

இமை திறக்கிறேன்...ஐந்தாம் நாளை

சன்னிதிப்பூக்களை தரிசனம் செய்து மொழியணைத்த விழித் தோழமைகளுக்கு மனநன்றி கூறி


இமை திறக்கிறேன்...ஐந்தாம் நாளை...இன்னும் சில நந்தவனப் பூக்கள்யேந்தி நடை பயில

பல் நலம் பயிலும் மொழிகளில் இன்று நாம் அறிந்துகொள்ளப்போகும் மேலாண்மைத் துறை


செயற்கை பல் பொருத்தும் துறை பற்றிய தளம்

நிரந்தர பற்கள்.....விழுந்தால்
சொத்தையால் பிடுங்கும் நிலை வந்தால்
பல் சுற்றுப்புற எலும்பு சதைப்பகுதி பாதிப்படைவதால்

வயதின் காரணமாக பற்கள் அனைத்தும் விழும் போதும்

பேச்சு தெளிவுற அமைவதற்கும்..உண்ணும் உணவுகள் அரைபடுவதற்கும்..முகத்தோற்றம் பொலிவு பெருவதற்கும்
தாடை எலும்புகள் தேய்மானம் அடையாமல் ....உமிழ்நீர் சுரப்பு அற்றுப் போகாமல்..
ஆதலால் தொடரும் நோய்கள் தொடராமல் காப்பதற்கும் இத்துறை மிகவும் பயண்படும்


முதுமையிலும்..முத்தான ..சத்தான சிரிப்பைவழங்கி முக அழகூட்டும் துறை

*********************************************************************************
நந்தவனப்பூக்களில் ..முதலாய் நம் விழி நுழைந்து மணக்க காத்திருக்கும் மலர்.....


பூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்
..என்றுதன் அடையாளமிட்டு இதழ்விரித்த இதயச்சாரல்


சமூக ஆர்வலாய் தன்னை செதுக்கி......தமிழ்குடில் எனும் வாசகர்கள் வட்டம் வளர்த்து
தாய்மொழித்தொண்டாற்றும் பெருமகனாரின் இவ்விதயச்சாரல்
துள்ளும் மொழியின் உதிரச்சாரல்......

இறையாண்மையாய்..

இவர் தொடுக்கும் கேள்வி பதில்களான..மனக்குமுறல்....ஓர் மாபெரும் மனித இனம் அழிய
அருகிருந்தும்...அமைதியாய் ..செய்வதறியாது கைகட்டிய கோழைகளாகவே    இருக்கிறோமே ..என்று




நம் மீதே நமக்கு வெறுப்பு வரும் அளவுக்கு..யோசிப்பு... பதற வைக்கும் பதிவு...
எதுவாகினும்..நில பிரச்சனையிலேயா இழந்தோம்..ஓர் நீள்பெரும் மக்கள் கூட்டத்தை

பதவிக்கும் ஆசைக்குமா..பங்கிட்டோம் நம் மான உதிரங்களை...
இறைவனாய் எழுந்தவனை பழிகொடுத்தோம்..இறையாண்மை..என உரக்ககூவி ...விஷம் வைத்து

நினைத்தால் தூக்கம் வராத கொடுமையை..நீள்பெரும் துயரத்தை..மொழிஎடுத்து பொங்கியுள்ளதில் விழிக்கிறார்
தமிழ் காதலன்..தமிழன் எனும் அவமான உணர்வில்..அலறலாய்


மொழிக்காற்றில் முதலில் புயல் ஒன்று கண்டோம்..தென்றலும் உண்டுதானே

காதலன் இங்கு சொல்கிறார் தன் காத்திருப்பு
மலர் இதழ் கண் திறக்க ....கொடியில் குடியிருக்கும் வண்ணத்துப்பூச்சியாய்...




தவிப்பு மொழியிலும்...எழில் வளைந்து தன் நிலை சொல்லும் வளமை....மொழிச் சுழிவு..என்னே வளநயம்

நல்லிரவில் மெல்ல இதழ் திறக்கும் மலரை ...எட்டி சுவாசமணைத்து விழி அசைக்காமல் பார்த்திருக்கும் நேச உணர்வை விதைத்து செல்கிறது..இவர்தம் மொழியாடல்

கன்னித்தமிழே என் அழகியென ..செம்மொழி காதலிக்கும் வரம் பெற்ற..இத் தமிழ் காதலன்
பக்கம் சென்று பதியன் செய்யுங்கள் உங்கள் வருகையை...

*********************************************************************************
வற்றாநதியாய்..தன்னை..நீரோட்டம் பரப்பி....காற்றில் ஈரமொழி எழுதும் வல்லமை பெற்ற...


தம்பி கார்த்திக் புகழேந்தியின் கவின் நதி வலைப்பூ தான் பிறந்த மண்மொழி எடுத்து எழுத்தாடுவது
இவர்தம் புகழ் ஈரம்


ராசாதி ராசா குதிரை மேல் அமர்ந்து ஆட்சிசெய்ததையும்.....
சாமக்கோடாங்கி கோணிப்பையோடு வந்து பிடிச்சுட்டு போவாங்கிற பயமுறுத்தலையும்....கதையாய் சொன்ன பரம்பரைய தொலைத்து.....


எந்திர வாழ்வுக்குள் ஒரு மெசினாய் ஓடிக்கொண்டிருக்கும் காலசக்கரத்தில்...
இவர் போன்ற கதை சொல்லிகள்..வாழ்வை இலகுவாய்....வாழும் வாய்மொழியாய்...உணர்வெடுத்து ...வாழ்ந்த மனிதர் தைத்து சொல்லும் போது....
பெளர்ணமி மொட்டைமாடி தென்றல் அமர்ந்து ...முழங்கால் கட்டி ஆடிக் கொண்டே அசைந்த பிரியமாய் கேட்கிறது மனம்




லைட்ஸ் ஆப் சொல்லி ...வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்...
கண்ணாடிச் சட்டத்திற்குள் வாழும் ..ராமசாமி நாடாரை.....நம் கண் இமைக்குள் கண்ணீராய்
இளகுகிறது.....நெகிழும் மனம்


வரலாற்று தேடல்களின் வளமான பிரியம் இவரென்று....சொல்லும் இனிய பதிவு....
இவர்தேடி ருசியணைத்து தம் மொழியில்....மனம் செரித்த


கடாரம் கொண்டான் : கடாரமும் தமிழகமும் - டத்தோ .வீ. நடராஜன்...
இவரின் விமர்ச்சனப் பிரியங்கள் வாசிக்கும் போதே....வசித்து வருகிறது...


சோழசாம்ராஜ்ய வளமைகளை

வற்றாநதியை....கொஞ்சம் அள்ளி..கமண்டலம் அடைத்துள்ளேன்....சொல்மொழியாய்..சென்று நீராடி
நாணலாடுகள் நதிக்கரையோரம் தோழமைகளே

*********************************************************************************

ஆராவமுத பூவாய் அடுத்து எடுத்து தொடுக்கும் பூ ....வாசிப்பு பூ வசியமிருக்கும் வலைப்பூ

பேச்சை தொழிலணைத்து ..ஆசையாய் எழுத்து கட்டி மொழித் துயிலுறங்கும்
திருமதி உமா மோகனின் ....குரலாய்



உயிரும் மெய்யும் முதலெழுத்தாய் எடுத்து தொடுத்து கட்டியுள்ளார்...உயிராடும் ஆசைகளை எழுத்தாய்

அழகுப் பிள்ளை மொழியில்..அரவம் சொல்லும் நெளி வாழ்வில் தான்
எத்தனை தத்துவ அர்த்தங்கள்.....



பயமில்லா குழந்தையாய் தான் பார்க்கிறோம்..கழுத்து சுற்றி காலமாய் வலம் வரும் விடங்களை


அர்த்த பொதிவுகள் ஆயிரம் நிறைந்த சொல்லாடல் தழுவும் நிதர்சன வலிமை...அரவம்

எழுத்து மயிலிறகு கொண்டு பறக்க வானம் தேடும் பறவைசிறகடிப்பே இணையக் கடை



தோகையில்லா பெண்மயில் பலவற்றுக்கு பறக்க வானம் தரும் சுதந்திர இறகை .இவர் தன் மொழியில்

எளிமை விரித்தாட வைத்தது,,கூட்டிக்கொண்டு வருகிறது கூடவே....மழைத்தூறல் கூதலை

இருதுளிச் சாரல் என் விழிமேகம் வீசி செல்ல 


டார்வின் படிக்காத குருவியாய் புத்தகமிட்டு தம் மொழி சேகரித்த ..
இந்த வானொலி..வரவேற்பு குரல் வலை சென்றி மொழி சிக்குங்கள் தோழமைகளே 

*********************************************************************************


தமிழ் மண ..நந்தவன செழுமையில்....களக் கட்டுரையாய்....இதழில் எழுதிய கவிதை புத்தகமெடுத்து கருத்தணைக்க வருவது..நண்பர் சதீஷின்

சங்கம் வளர்த்த தமிழ்ச்சொல்லேடு அணைக்கும் ......சங்கவி



செவியுணவாய்...ருசியுணவு சொல்லி இவர் பந்திபரிமாறும்...விருந்தோம்பல் சாடல்...கல்யாணச்சோறு

நலமற்ற நாகரீக. பந்திமுறையை....துவர்ப்பு மொழி சொல்லி இவர் பரிமாறும் பாரம்பரியம்
தமிழனின் வாழ்வியல் தளவாட உறைவிடங்களை ....போஷனமாய் ..போஷிக்கிறது

பயன் மொழிகள் பல சொல்லும் பலமொழிகளை ..
இவர் செப்போடு சேகரித்த விதம் கிராமிய கிழவி சொலவடைப் பேச்சுக்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது

அப்பத்தாக்களோடும் தாத்தாக்களோடும்...நெட்டி முறித்து கொட்டாவி விட்டு காற்றில் கரையும் மொழிக்குள் தான்
எப்படி ஒளிந்துள்ளது.....ஓர் கிளைபரப்பும் ஆலம் மனித வாழ்வு




களிக்காட்டு ராசன்..எங்க அய்யன் கி.ரா வை கணநேரத்தில் நினைவில் கொண்டு வந்து நிறுத்தி...கிழம் மொழி குசும்புகள் ரசனை ப்ரியமாடவைக்கிறது...

தெளிந்த நீரோடையாய்...தேடி தேடி சேகரித்த கூழாங்கல் கூட்டுப் பிரியமே..
இவரின் சந்தனஜவ்வாது...சங்கவி வலைப்பூ

சென்று மணம் பெற்று...மனச்சுகந்தம் நிறையுங்கள் தோழமைகளே

நந்தவனப் பூக்கள் ..நால்வரின் ..வலைப்பூ தொடுத்து..தங்களோடு சேர்ந்து நானும் நல் மணம் பெற்று ....நிறைந்து நின்று விடைபெறுகிறேன்..சுவாச வாசம் ஏந்தி


நாளை சந்திப்போம்....இன்னும் சில சீதனப் பூக்களுடன்......
மேலும் வாசிக்க...

Thursday, August 20, 2015

நான்காம் நாளாய் நல்லிதய பிரியங்களுக்கு

நான்காம் நாளாய் நல்லிதய பிரியங்களுக்கு வணக்கமும்..முதல் மூன்றுநாள்..என்மொழி படித்து உவகைகொண்டு உற்சாக கருத்திட்ட பிரியங்களுக்கு நன்றியும் போற்றி... .
அனைத்துமான அன்னை வணங்கி வலைச்சர நாரெடுத்து தொடுக்கிறேன்
இன்றும்...மூன்று ..சன்னிதிபூக்களை.....அதன் முன் முதலாய் ஆசிரியனை ஆசிக்கும் தொழில் வணங்கி சில வரிகள்
பல் மருத்துவ நல மொழிகளில்
இன்று நாம் அறிந்துகொள்ளப்போகும் பல் மருத்துவ மேலாண்மைத்துறை



சீரற்ற முறையில் முளைத்து இருக்கும் பற்களை சீர்படுத்தும் துறை
பால் பற்கள் முளைப்பதிலும்...
அவை விழுந்து நிரந்தர பற்கள் வரும் போதும்..
இடையில் ஏற்படும் சில சீரற்ற பராமரிப்பால் இடைவெளி ஏற்படும் போதும்....
தாடை எலும்பு கோளாறுகளினாலயும்
வம்சவளியாக வரும் தொடர்புகளினாலும்
சிலர் குழந்தைபருவத்தில் ..ஏற்படும் விரல் சப்பும் பழக்க வழக்கத்தினாலும்..முன்பற்கள் நீட்டி 
சிலருக்கு பற்கள் முன் பின் அமைந்து ..முக தோற்றதை கோரமாக்கிவிடுகிறது,..மற்றும் உணவு மெல்லுதல்..அரைபடுதலில் குறைபாடுகள் ஏற்படும்.....
இத்தகைய பிரச்சனைகளை சரிசெய்து..அழகிய முகவடிவையும்..அற்புத சிரிப்பையும் ..தங்களுக்கு வழங்கும்
மேலாண்மைதுறையே...இத்துறை..


மண்ணில் மனிதன் பெற்ற ஒரு அழகிய நோய்,... சிரிப்பு எனும் தொற்று வியாதி..
மனதோடு மலர்தல் தரும் முகப் பொலிவை ..மகிழ்வாய் பெற்று வளமாய் வாகைசூடுவோம் பிரியங்களே
இனி செல்வோமா..செந்தமிழ் மணப் பூக்கள் தொடுக்க
முதல் பூ...தமிழ் மணம் அறிந்த..தமிழ்குடில் பூ...தாய்ப்பூ.....காய் பூ இல்லாத காயுப் பூ

                                         தூரிகைச் சிதறல்களாய்

திருமதி காயத்ரி வைத்தியநாதன் அவர்களின் தூரிகைச் சிதறல்களாய்.. சிதறிய இதழ்களில்...சில

என் விழி மணத்தில் ... கவிக் காயத்ரி ..இதழும் இறகுமாய்..இவர்தம் இளஞ்சிவப்பு வலை பார்வை கவர்ந்திழுத்து
குளுமைதந்து கூதலணைக்கிறது...மனதை மகிழ்வு கோதி வென்றுவிடுகிறார்..தன் ரசனை வடிவமைப்பில்
இளஞ்சோலை சென்று தென்றல் மொழி படிக்கும் சுகம்
அறிந்தும் அறியாததுமாய்..இவர் தரும் அன்னை மொழி.....அருமையான வாழ்வியல் மொழிகள்


நறுக்குத்தெறித்த சில வரிகளில்...வாழ்யோசிப்பு வனம் செல்லவைத்தல் ..பெரும் சிறப்பு
{{{தொலைத்தவற்றை மீட்டெடுப்பதாக எண்ணி, இருப்பதையும் தொலைத்துவிடுகிறோம்...பலநேரங்களில்/////
இதுவும் கடந்துபோகுமென்ற நம்பிக்கையும் மனதைவிட்டு கடந்து செல்லும் ஏதோ ஒரு நேரத்தில்...////
தன் உணர்வுகளுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பிறரின் அன்பை இழக்கச்செய்(கிறது)யும் ..}}} எனும் தத்துவ சொல்லாடல்களும்
அன்பின் அகராதியிலிருந்து ..முத்துதிர்க்கும்..நேச முத்தமிடல்களும்....அவரின் பக்குவமனதின் பாச ஈரம் சொல்கிறது

செடிகளுக்கும் மரங்களுக்கும்...செழுமைபிரியங்கள் உண்டு என்பதை....உரையாடல்களாய் ...உருக் கொணர்ந்து உற்றதோழியாய் .. எழில்வளைந்து ..உயிர்தந்த உரையாடல்...குழந்தையாய்..அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பிரமணிய மகவுவாய்....இடம் பாராது..இயல்பணைத்து ஈரமாக்கும் மழையாய்...தாய்மையெனவே நேசிக்க வைக்கும் மொழிகையாடல் 
ரோஜாவும், நானும்... ...உரையாடல் 



எல்லாம் சரி...எங்கேயடி தோழி..என்உயிரை காவுகொல்லும் கவிநேசம்  என்றே நானும் சுவாசம் தேட...வந்து விழிமோதி தெறிக்கிறது....
அவனதிகாரமாய் அம்மணி தளும்பி தவித்த மொழிதேன் துளி

உன் கண் சுகித்த பாதை சென்று உண்டு சுகித்து ....தித்திக்கிறது ..என் விழிப்பார்வையும்..உன்னவன்..உண்ணும்..உன் அவனதிகாரத்தில்
தூரிகைச்சிதறல் சென்று....துளிர்த்த இன்பம நுகர்ந்து நீவீரும் நிகழ்வு மணங்கள் தோழமைகளே

*******************************************************************************************

அடுத்து வரும் சன்னிதிப்  பூ

தன் பெயரையே பேராண்மையாய் எடுத்து வலைப்பூ மொழியும்..வண்ணப் பூ...ரிஷபன்


இரணடாவது ஜோதிட அறிகுறியாகும்..சுக்கிராதிபதி...ராசியை தன் நாமகரணமாய் கொண்டு
எழுத்துலக கோலோச்சும் கோள்
மலைகோட்டை கணபதி மடியமர்ந்த ஸ்ரீரங்க பிள்ளையாண்டான்
இயல்பென்பது மொழியெனினும் அதை இசையாண்டு சொல்ல சிலரால் மட்டும் முடியும்///இவரால் என்றும் முடியும்
தமிழ்மொஅழி தளவாட உணர்கள் அனைத்தையும் இவர் தன் வசப் படுத்தியிருந்தாலும்...
இவர்தம் அடையாள அகமுகமாய்...என்னில் எப்போதும் விழி ரசிப்பவை...
இவரோடு வேரோடி கன்னம் கொஞ்சும் இவர்தம் ஜ்வால்யா

எப்படி இப்படி பிள்ளை பிரியங்களை...பிள்ளையாகவும் தகப்பானாகவும் எழுதி...ப்ரியம் ரசிக்க வைக்கிராது என்றே ...
நினைத்து யோசித்து வியக்க வைக்கும் ...வித்தக மொழியாடல்



எல்லோரும் அம்மாவைக் கொண்டாடுகிறார்கள். அப்பாவின் பாசம் அழகான கவிதை. ///எத்தனை எளிமையாய் சொல்லிவிட்டார் தகப்பனெனும் கவிதையை
வாசித்தால் நிச்சயம் நின்று வசித்து வருவோம் ..ஜ்வால்யாவின் மழலை மனங்களில்
தந்தையில் தனிநிகர் சிகரம் இவர்மகள்

பால்ய ஊஞ்சல்கள்
அடுத்து அனுபவக்கதை சொல்லும்..அச்சலாத்தி பிரியங்கள்.....வாசித்து நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது



கணக்கை நிகர் செய்த கணக்காளின் வித்தியாசம்.....

வாழ்வெனும் அற்புதமாய் ..ரயிலாய்...தாயார் அத்யயன உத்சவமாய்...நம்மையும் உடன் அழைத்துசெல்கிறார் ..அவர்தம் அனுபவமாய்.....
அடுத்து கவிதை தென்றலொன்று மொழிப் புயலாய்.. சிறு கதைக்குள் மையம் கொண்டு மனதள்ளும் வித்தை.....ஸ்ரீரங்கத்தான் (சுஜாதா ) அதிகம் அணைத்திருப்பாரோ..இவரை தன் எழுத்தாய்.....முடிக்கப்படாத கடிதமும்...அந்தநாள் தேவதையும்..அள்ளுகிறது..அவ் வழி இயல்பு மொழியில்


வைதேஹி நினைவுறுத்துகிறாள்...எனக்கு ..பாலாவின் (பால குமாரன்) அகல்யாவை 
கற்கண்டு வைரமாய்..கல்கி இவரை கண்டெடுத்து மெருகேற்றி சிரசணிவித்துள்ளது ...சீர் மணிமகுடமாய் ..சிறுகதை அச்சிலேற்றி
இதுவரை ஒருமுகமாய்..கவிமுகமாய்...கண என் விழிகள்,...இன்று நீவீர் கையாளும் மொழித்திறமை கண்டு ..
பேரானந்த பிரமிப்பு கொள்கிறது...தோழா..பெருமிதம் கொள்கிறேன்..உம் மொழி  இங்கு பூத்தொடுக்க

 *********************************************************************************************

மூன்றாவது பூவாய்...இங்கு மணம் வீச மனம் கொள்வது......கனவுகளின் ஆதிக்க பிரியனாய் வலம் வரும்....
தேடல்களாய்  தித்திக்கும் தேன்  மொழிச்சாளரப் பூ......

தேடல் அறிவோர் தெளிவறியார் என்பர்..ஆனால் இவரோ..தெளிவாய் ....வேண்டியதை...தெளிய தெளிய ..தேடுவார்

பெயர் வேறு ....அழைப்பு வேறு..கனவுப் பிரியன் என்றே அனைவர் அறிந்தாலும்...இவருக்கு பயங்கரமாய்..இன்னொரு பெயர் இருக்கிறது...அது தான்======= ”””புல்லட் பாண்டி””
என் போன்றோர்  மொழியை கையில் எடுத்து உணர்வை ஆள..இவர் கொஞ்சம்  மாறுதலாய்....உணர்வை கையிக் எடுத்து மொழியை கைவளையென கொஞ்சுபவர்...
வாழும் மனிதர்களை..வார்த்தைகள் கூட்டி அழைத்து வந்து அமரவைத்து போவார்....கணினி பெண்ணை விட கள்ளிக்காட்டு கருவாச்சி யோசிப்பை அறியவே...ஆசைப்படும் அவர்தம் கரிசல் மனம்



பெண்களை பெண்பார்வையில் புரிந்துகொள்பவன் ...தனக்கு வளர்க்க ஒரு பெண்ணில்லையே என ஏங்கும் மூன்று சிங்கங்களின் முத்து தகப்பன்..முத்துகுளிக்கும் ஊர் தத்துகொடுத்த சொத்து ....இவர்தம் மனைவிப் பிரியங்களை ...வாசிக்க வாசிக்க நெகிழ்ந்து நெஞ்சு பிரியமாடும்..தோழனின் வாழ்வியலோடு வாழ்த்தி பயணித்து...கடவுள் அமைத்து வைத்த மேடை...சுந்தரி கண்ணால் ஒரு சேதியாய்...மனைவி அமைவதெல்லாமுமாய்
வாஞ்சி மணியாச்சி.....கப்பலோட்டியோனை கைதிட்டு கடும்துன்பம் படுத்தியது கண்டு.....வாஞ்சி எழுந்தான்  என்பதை வரலாறு படித்திருந்தாலும்...வாழ்வியலில் தொலைத்ததை... கடக்கும் போதெல்லாம் நினைக்கும் இவர்தம் மனமெனில்....வாஞ்சி .....உதிர சுவாசம் ..உம்மில் எப் பிறவி இணைசேர்ந்தது 

அணுஅணுவாய் ஒரு அனுக்கதிர் என்பதில் வாழ்வியலோடு..தொழிலியல் இணைத்து...இன்பதுன்ப உணர்வாய் பொங்கும்
நூலக திறப்பிடமாய் தன் வலைப்பூ வாசம் குமித்துள்ளார்.....
அயல்நாடு சென்றாலும் ..அருமையாய் வசவு  மொழி பேசுவதில்  ஒரு சுகமிருக்கிறது என்பதை இயல்பாய் அவர் இயற்கை பழிப்பை சாடுவதில் உணர முடிகிறது
Fluke Biomedical / USA பிராண்ட். அருமையான மெசின்.

Beta above 1 MeV, Gamma and x-rays above 25 keV புதிய தெரிதலும்..தெளிவும் உணர முடிகிரது..உம் வெப்ப வீச்சில் 
சொல்லும் சொல்லிலும் எழுதும் எழுத்திலும் ...இன்னும் இன்னும் என்றே தேடல் தீரா மொழிகள் ஆயிரமாயிரம் உண்டு
உம் அனுபவ பிரியமாடல்களில்...ஒருபானை சோற்றுக்கு..ஒன்றிரண்டு கருத்திட்டு மகிழ்கிறேன் நண்பரே
வந்தமர்ந்து வாசித்து..வலைப்பூ நேசிக்கும் வளர்தமிழ் சொந்தங்களே...இன்று இங்கு நின்று விடைபெற்று
நாளை நாம் இணைநடப்போம்..இன்னும் சில நந்தவனப் பூக்களுடன்....


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது