07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தென்றல் சசிகலா. Show all posts
Showing posts with label தென்றல் சசிகலா. Show all posts

Sunday, October 13, 2013

விஜயதசமி வாழ்த்துக்களுடன் !

அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன். ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் பண்டிகைகள் பற்றியும் அந்தந்த பண்டிகைகளில் என்ன செய்வது என்பது பற்றியும் தெரிந்திருக்கும்.

ஆனால் தெய்வங்களுக்கு பெயர் விளக்கமும் எந்தெந்த தெய்வங்களை வணங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதையும்  நமக்கு அருமையாக விளக்கங்களை படங்களுடன் தருகிறார் வாங்க பார்க்கலாம்.

வீடு தொழில் பிள்ளைகளின் பெயர் இப்படி எல்லாம் அவர்களை நினைவுபடுத்தும் வகையில் அவர்கள் மட்டும் முதியோர் இல்லத்தில்.
நாசூக்காக உணர்த்தும் உண்மைகள் சொன்னவங்க யார் ? வாங்க பார்க்கலாம்.

நமக்கென ஒரு பெயர் வைத்துக்கொண்டு பெயருக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள நினைப்பவர் அதிகம் அதுபோல இந்த நண்பரும் கலைவாணர் பெயரை வைத்துக்கொண்டு அவரைப்போல நகைச்சுவை உணர்வுடன் எழுதவும் முயற்சிக்கிறார். தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்துவோம் வாங்க.

குழந்தைகளுக்கு ஒரு சுபாவம் உண்டு . அவர்களை பாதுகாக்க நாம் இருக்கிறோம். ஆனால் அவர்களும் நம்மைப் போல கையில் வைத்து கொஞ்ச உணவூட்ட விளையாட வீட்டு ஒரு பொம்மையையோ அல்லது உயிருள்ள வீட்டு விலங்குகளையோ நாடுவர். அந்த நேர அவர்களின் செயல்களை ரசிக்க எத்தனை இன்பமாக இருக்கும்.. அந்த இன்பத்தை நம்முடன் பகிரும் நண்பர்.

வாழும் அனைவருக்கும் முக்கியமானது ஆரோக்கியம் அதனைப் பற்றியும் நாம் தினமும் செய்யும் பழக்கவழக்கங்களில் ஆரோக்கியம் இல்லாதவற்றையும் நமக்கு பட்டியலிட்டு விளக்குகிறார். நண்பர் ஒருவர் வாங்க. படித்து பின்பற்றி ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

இன்றோடு நிறைவடையும் ஆசிரியர் பணி சிறக்க தினம்தினம் வருகை தந்து எனை உற்சாகப்படுத்தி நண்பர்கள் மற்றும் உறவுகளாகிய உங்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பினை வழங்கிய சகோ பிரகாஷ் மற்றும் சீனா ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு தங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். 
மேலும் வாசிக்க...

Saturday, October 12, 2013

அனுபவமும் பழமொழியும் !


"இருக்கும் வரை தெரியாது பெற்றவரின் அருமை பெருமை " ! என்று பழமொழி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.   எங்க அப்பா மரணத்தருவாயில்.  அது தான் அவரின் இறுதிப் பேச்சு என அறியாத பேதையாக நான் இருந்து விட்டேன். அப்போது அவர் "ஏம்மா ! வந்த உடன் இப்படி போறேன். போறேன்னு சொல்லிட்டு போய் விடுகிறாய். கொஞ்சம் நேரம் இருந்துட்டு போம்மா என்று அழைக்க"  போப்பா நான் நாளை வருகிறேன் என்று வந்துவிட்டேன். இன்று தினம் தினம் நான் என் அப்பாவுடன் பேசினாலும் மறு வார்ததை பேச மறுக்கிறார். புகைப்படமாக இருந்து கொண்டு .  என்னைப்போல மற்றொரு தோழியும் இந்த பழமொழியை அனுபவப்பூர்வமா அனுபவிக்கிறாங்க போல..

நான் இல்லம் சேரும் வரை
வாசற் படியில் படுத்துக்கிடக்கும்
உன் விழிகள் இல்லா வெறுமை
சுடுகிறது இடி மின்னல்களின்
மொழிதல் வழி !

இவ்விதம் வரிகளால் தம் நினைவுகளை நம்முடன் பகிரும் தோழி.

நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே சொந்தமானவைகளில் இதுவும் என்று இதற்கு காசு பணம் தேவையில்லை. எந்த கட்டாயமும் இல்லை. யாருக்கும் பயப்படவும் தேவையில்லை. அப்படி என்னவாக இருக்கும் ஆமாங்க அது கனவு தான். ஆனால் அதற்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உறக்கம் வரவேண்டுமே ? இப்படியாக நடுத்தர வர்க்கத்தின் நிலையை இம்மியும் பிசகாமல் கவிதையாக சொல்றாங்க . வாங்க கேட்போம்.

 தோழமை எந்த வயதினருக்கும் சொந்தமானது தவழும் பிள்ளைகள் கூட அக்கம் பக்கத்து குழந்தைகளை சிநேகம் கொண்டு விடும் எளிதில் அந்த தோழமை வளர்ந்து பெரிதாகி பள்ளி நாட்களை வரை இனிதாக தொடரும். அத்தோடே சில பிரிந்து விடும். சில நட்புகள் மனதில் மட்டுமே வாழும். சில எங்கு இருந்தாலும் அவ்வப்போது தொடர்பில் இருக்கும். இப்படியான ஒரு தோழமையின் உணர்வுகளை இங்கே காண்போம் வாருங்கள்.

அகர முதல கற்க ஆர்வமுடன் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் .இன்று ஆங்கில மோகத்தில் "மம்மி டாடி "என்று தன் பிள்ளை அழைக்க நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் . அவர்கள் கனவு எவ்விதம் பலிக்கிறது வாருங்கள் பார்ப்போம்.

 இன்று பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை அவரே தனக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லங்க. என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டால் உடனே நம்ம ஆளுங்க அப்ப ஏதோ பழக்கம்இருக்கும் போல எப்படி கண்டு பிடிப்பது என்று சிஐடி வேலை பார்க்க ஆரம்பிப்பாங்க. அது தான் இந்த காலம் இப்படி தான் அனுபவித்த ஒரு நிகழ்வை  சொல்றாங்க அப்படி என்ன தான் சொல்றாங்க ?
வாங்க.
மேலும் வாசிக்க...

Friday, October 11, 2013

புத்தம் புதுக்காலையில் !



முதல் முறை வலைச்சர ஆசிரியரா இருந்த போதே ஆர்வம் மிகுதியால் தெரிந்த, தெரியாத பதிவர்கள் என நிறைய பதிவர்களை அறிமுகம் செய்து விட்டேன். மறுபடி இப்போ அறிமுகம் செய்தவர்களையே திரும்ப அறிமுகம் செய்யக்கூடாது என்ற முயற்சியில் தீயா வேலை பார்த்துட்டு இருக்கேன். 

அதனால சசி புதுசு புதுசா சிந்திச்சி அதாவது கல்யாண மேடையை அலங்காரம் செய்வாங்களே !  அது மாதிரி முன்னாடி அலங்காரம் பாட்டு கச்சேரி பட்டிமன்றம் இது போல எல்லாம் எழுதிட்டு அதன் பிறகு அறிமுகப்பதிவர்களை சொல்ல வேண்டும் என நினைத்து இரவு முழுக்க யோசித்து யோசித்து கண் வீங்கியதே மிச்சம். அதனால் இந்த பதிவில் எந்த அலங்காரமும் செய்யாம அப்படியே புத்தம் புது காலைல புத்தும் புது பதிவர்களை மட்டும் அறிமுகம் செய்கிறேன். படிக்க வருவதற்கு யாரும் மறுக்காம மறக்காம வருவிங்களாம். வரும் போது கையோட சுற்றமும் நட்பும் சூழ வருகை தர அழைப்பது உங்கள் ச...சி.



நீ கனி 
நான் கிளி
வேறென்ன வேண்டும் இனி.. இப்படி யாரை இவர் வர்'ணக்கிறார் தெரியுமா ? 
இதோட விடாம அவளே என் அமுதும் தேனும் அவளே என் உயிர் என்று சொல்லியபடி.   அவளை அறிமுகம் செய்ய பொண்டு பொடுசு வாண்டுகளையெல்லாம் அழைச்சிட்டு போகிறார். வாங்க நாமும் போவோம்.

எதையோ எதையோ எழுதனும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன். இப்படி நான் சொல்லவில்லை. இப்ப நாம பார்க்க போகும் நண்பர் சொல்கிறார். இவர் இப்படி மாறிவிட்டதால் இவரோட தளத்தின் தலைப்பை நமக்கு பாடம் சொல்லும் விதமாக வைத்துவிட்டார் போலும். அப்படி என்ன தலைப்பு ?

நாம டிவி பார்த்துட்டு இருக்கும் போது அதில் புகை பிடிப்பது மாதிரி அல்லது மது அருந்துவது மாதிரி நிகழ்வுகள் வந்தா கீழே சிறய எழுத்தில் புகை பிடிப்பது உடல் நலததிற்கு கேடு..இப்படி வருமில்லையா அது போல இன்னும் கொஞ்ச நாள் போனா நாம சாப்பிடும் உணவுப்பண்டங்கள் படத்தின் கீழும் வரும் என்று சொல்றாங்க. இவங்க பதிவு எழுதிட்டு இருக்கும் போதே பேனாவில் மை காலி போல அதான் இவங்க என்னை மை தா ...மை..தான்னு கேட்கிறாங்க. போய் கொடுத்து விட்டு வருகிறேன். என்ன நின்னுட்டிங்க. அதான் முன்னமே சொல்லிட்டேனே. எங்க போனாலும் சுற்றமும் நட்பும் சூழ போகனும்... ரெடி போலாமா ?

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த அரசாங்கம் விவசாயிகளின் துன்பத்தையும் தள்ளுபடி செய்துவிட்டதாகவே எண்ணி பேருவகை கொள்கிறது ! அத்தோடு விவசாயிகளை மறந்தும் போகிறது ! உண்மையில் விவசாயத்தின் விவசாயிகளின் நிலைதான் என்ன ? உழுதவன் கணக்க பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது !
இப்படி ஆதங்கப்படுவதும் நானில்லங்கோ...அதனால வாங்க இவர் யார் என்ன பெயர் என்ன சொல்கிறார் கேட்போம்.

பள்ளிக்கூடம் போய் படிக்கிற காலத்தில் வரலாறு வகுப்பு வந்தாலே கை கட்டி வாய் பொத்தி எப்ப தான் வகுப்பு முடியும் என்று காத்திருந்தவங்களா நீங்க... அப்ப வாங்க இப்பவாவது வரலாறுன்னா என்னனு தெரிந்துகொள்வோம். வரலாறுன்னா அறிவியல் தான அப்படியெல்லாம் கேட்கப்படாது... பள்ளிக்கூடம் போற மாணவரா வரனும் சரியா ? 

மீண்டும் நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Thursday, October 10, 2013

வகையான அறிமுகங்கள் !

உறவுகளுக்கு  இனிய காலை வணக்கம்.

ஆத்தோரம் போறவளே
அன்னமிருந்தா தாடி புள்ள
அடுத்த வேலை பசி வந்தா
அதுக்கும் வழிய சொல்லு புள்ள

சட்டியில சோறு கண்டு
சாந்தமா படுத்துகிட்டா - உன்
சந்ததிகளும் கெட்டுப் போகும்..

சக மனுசன் செயலைத்தான்
பார்வையிட போவோம் மச்சான்.
பாருங்க இங்க பொதுநலமா
சிந்திக்கிறவங்க  தமிழாய்

பசின்னு வந்து புட்டா
பாவிக்கு பழசு புதுசு
தெரிவதில்லை...
பாரு மச்சான் இங்க
வட்டியில சோறு போட்டு
வக்கனையாய் சாப்பிடும்
முறைய வகையாத்தான்
சொல்றாங்க..
வாயேன் மச்சான் ..

புத்தன் காந்தி ஏசு பிறந்த
பொன்னுலகம் நம் பூமி
உண்டு மட்டும் வாழ்ந்திருந்தா
உலகம் அறியுமோ பல சேதி
படிச்சி வருவோம் வாங்க மச்சான்.
வளரும் இங்கே நற்சிந்தை தான்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா
பாடிய பாரதியை மறந்துபுட்டோம்
பாட்டாய் மட்டும் படிச்சி நாமும்
இருந்து விட்டோம்...
மூடத்தனங்களை வளர்த்து விட்ட
மனுசங்க யாரு...
இவக சொல்றாக போயி கேளு.

பகலுக்கும் இரவுக்கும்
பேச பல கதைகள் 
இங்கு உண்டு...
இருண்ட பொழுதொன்றில்
இறவா கதை பேசும்..
இளம் தலைமுறையை 


மீண்டும் நாளை சந்திப்போம்...

--
தென்றல் சசிகலா.
மேலும் வாசிக்க...

Wednesday, October 9, 2013

வலை உலாவில் ரசிகனின் ரசிகா !

இனிய காலை வணக்கத்துடன் 

 "மாமோய் எங்க இருக்கிங்க..".! இசை அலைபேசியில் கேட்க. சமையல் செய்து கொண்டிருந்த ரசிகா ஓடி வந்து அதை அணைத்து விட்டு எவடி அவ என் புருசனை மாமோய்னு கூப்பிடுவது என்று வசை பாட ஆரம்பித்தால்...

சத்தம் கேட்டு ஓடி வந்த கணவன் பெயர் (ரசிகன்) ஏன்டி உனக்கு இம்பூட்டு கோபம் வருது எனக்கு போன் வந்தா  ?

ஆமாம் என் கோவத்த சொல்லுங்க.. கோபம் வந்த இந்நேரத்துக்கு போன் பண்ண அவள... என்று நறநறவென பல்லைக் கடித்தால்.

அடிப்பாவி ரிங் டோன் வைத்தது ஒரு குத்தமா ? இந்த பாடலை கேட்க எத்தனை இனிமையா இருக்கு தெரியுமா ? நீ தான் ஆசையா மாமானு கூப்பிட மாட்ட செல்லாவது கூப்ட்டு போகுது விடேன்.

அய்யோடா ஆசையப்பாரு ...

ஏன்டி நான் ஆசைப்படக்கூடாதா ? நீங்க தான் புடவை வேனும். நகை வேனும்னு ஆசைப்படனுமா ? நானாவது பரவாயில்ல என்று சிரிக்க.

என்ன சிரிப்பு அங்க.. ம் என்ன சொல்ல வந்திங்க சொல்லுங்க .

என்னத்த சொல்ல நானாவது அம்சமா ஒரு பாட்டை ரிங்டோனா வைச்சேன். உன்னைய மாதிரியா அந்த பாட்டை கேட்டா எனக்கு வருது பாரு கோபம்.

என்னவாம் அந்த பாட்டுக்கு.. ஆஹா என்ன இனிமையான பாடல் "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே " நீங்க தான் பாட மாட்டிங்க அதுவாவது பாட கேட்கிறேன். உங்களுக்கு என்னவாம் ம் என்று முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே செல்கிறாள்.

ஆமா அதை விடுங்க இவ்ளோ நேரமா போன் அடிக்குதே அப்படி என்ன தான் செய்றிங்க எடுக்காம ?

என்று எட்டிப்பார்த்தவள் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு தெரியுமே எனக்கு இந்த கம்பூட்டரை கண்டு பிடித்தவனை காளை மாடு முட்ட... என்று சொடுக்கினாள்.

ஏன்டி...ஏன்டி சாபமெல்லாம் விடாதடி இங்க பாரேன் தென்றல் தான் இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர். அதான்டி படிச்சிட்டு இருக்கேன். உன்னை மாதிரி அவங்க வாயாடி இல்ல என்ன அழகா...?

எவ அவ என்னை விட அழகு ?

ஏய... அவசரக்காரி அவங்க எழுத்தை சொன்னேன்டி.

அவங்க கவிதை படிச்சி பாரு பதிவர் சந்திப்பில் தென்றலின் கனவு புக் வாங்கிட்டு வந்தேனே.

ஏன் பசை காயுமுன்னே தூக்கிட்டு வந்திட்டிங்களா ?

அடியேய் உன்ன..

சரி சரி அப்படி என்ன தான் சொல்றாங்க ?

தமிழ் ஆர்வம் இருக்கிற எல்லோரும் கதை கட்டுரை சினிமா இப்படி பல்சுவையில் எழுதுபவர்களை இவங்க வலைச்சரத்தில் அறிமுகம் செய்து புதிதாக எழுதுபவர்களை ஊக்கப்படுத்துறாங்க. அப்படியே எங்களை மாதிரி ரசிக்கிறவர்களையும் போங்க ஐயா போய் அவர்களை இன்னும் நல்லா எழுதும்படி உற்சாகப்படுத்த சொல்றாங்க.

நல்ல விஷயம் தான் . எனக்கும் இப்படி எதாவது ஆரம்பித்து கொடுங்க மாமா.

என்ன ..? என்ன.. சொன்ன. மாமாவா.

ஆமா இப்ப தான அப்படி கூப்பிட்டா பிடிக்குமென்று சொன்னிங்க.

நீ இப்படி கொஞ்ச ஆரம்பிச்சா ? நான் கம்பூட்டர கனவுல தான் தொட முடியும். அதனால தாயி நீ போயி வாங்கி வா சமைக்க காயி.

அடப்பாவி மனுசா .. அவங்கள மாதிரி நானும் எழுதலாம்னு ஆசையா வந்தா ?

ஹஹ நீயா என்னடி எழுதுவ ?

என்ன வேனா எழுதுவேன் உங்களுக்கு என்னவாம். சரி சரி வாங்க புதுசா எழுதுறவங்க என்ன எழுதியிருக்காங்க பார்க்கலாம்.



இனி அறிமுகங்களைப் பார்ப்போமா ?
இயற்கையா கிடைப்பதை எல்லாம் இந்த நண்பர் இலவசம்னு சொல்றாரு அதோட அவற்றை எந்த வித எதிர்ப்பும் இல்லாம தமக்குனு எடுத்துட்டு அப்படியே தனக்கான பாதையில் வரும் பெண்ணை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் தெரியுமா ? வா அங்கயே போய் பார்த்துவிட்டு வரலாம்.

அடுத்து இவங்க சொல்ற நண்பர் ஆன்மீகம் அரசியல் சினிமா இப்படி நிறைய விடயங்களைப்பற்றி எழுதுகிறார் என்றாலும் . நீ டிவியல சீரியல் பார்க்கிறியே அதில் தொடரும் தொடரும் போட்டா உனக்கு எம்பூட்டு கோபம் வருது அது போல இவர் ஒரு கதை எழுதுகிறாராம் அதை படிக்கும் நபர்களுக்கு அடுத்து என்ன ஆகுமோ என்று பதைக்குமாம் அந்த மாதிரி கதை எழுதுபவராம். த்ரில் திகில் எல்லாம் கண் முன்னே தெரியுதாம் புள்ள.

அடுத்து இவங்க சொல்ற வலை உனக்கு அவசியம் தெரியனும்டி கேட்டுக்க நீதான் எங்க அப்பா உங்கள மாதிரியில்ல. எங்க மாமா இப்படி அப்படினு ஜம்பம் பேசுறவ.. உனக்கு பிடித்த தலைப்புல தான் இவங்க எழுதுறாங்களாம். வா போய் பார்க்கலாம்.

பதிவுகளை தேடிப்படித்ததில் பசிக்கிற மாதிரி இருக்கா ? சாப்பிட  நம்ம அனைவரையும் தான் அழைக்கிறாங்க. நம்மை மட்டுமில்லாமல் கோவைலிருந்து தில்லி வரை இருக்கும் அனைவரையும் அழைக்கிறாங்க. வா இனிமயாவது ருசியா எப்படி சமைக்கிறதுன்னு கத்துக்க.

அடுத்து இந்த முறை பதிவர் சந்திப்புல ஆவி ஆவின்னு எல்லோரையும்  பதற அடிச்ச ஆவியோட அறிமுகமாம்டி. இவரும் வலைச்சர ஆசிரியரா இருந்தார். உனக்கு தெரியாது இல்லையா ? அதனால மறுபடி இவங்க அறிமுகம் செய்றாங்க. இவர் நல்லா பாடுவாராம். கதை விமர்சனம் நகைச்சுவை அப்படின்னு பல்சுவையா எழுதுபவராம். ரெடியா போலாமா ?

சரிங்க மாமோய் நான் எல்லார் பதிவையும் படிக்கனும் அதனால இன்னைக்கு சமையலுக்கு விடுமுறை சரியா ?  
நாளை சந்திப்போம்.


மேலும் வாசிக்க...

Tuesday, October 8, 2013

வாங்க காப்பி (யங்கள்) பருக !


இதமான காலை வணக்கம் உறவுகளே. பொதுவாக நண்பர்கள் ஒன்றாக கூடினால் என்ன பேசுவாங்க ?

தாம் பார்த்த அல்லது நேற்று நிகழ்ந்த அல்லது கேள்விப்பட்ட நிகழ்வைப் பற்றித்தான் பேசுவாங்க. அதுபோல நானும் நேற்று படித்த புத்தகம் பற்றி தங்களிடம் பகிர்ந்து அதற்கான சரியான விளக்கங்கள் தங்கள் பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன். 

ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி குண்டலகேசி பற்றிபடித்ததை பகிர்கிறேன். விவரமான தகவல் தெரிந்தவர்கள் பகிருங்கள். அனைவருக்கும் உதவும் அல்லவா ?

சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,  மணிமேகலை,  வளையாபதி, குண்டலகேசி ஆகியவை ஐம்பெரும் காப்பியங்கள் என வழங்கப்படுவது நாம் அறிந்ததே.

இதில் முதல் மூன்று நூல்களும் முழுமையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. வளையாபதி ,குண்டலகேசி ஆகிய இருநூல்கள் முழுமையாக கிடைக்கவில்லை. வளையாபதி 72 பாடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லையாம்.

குண்டலகேசி என்னும் நூலில் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. இது விருத்தப்பாவால் அமைந்துள்ளமையின் குண்டலகேசி விருத்தம் எனவும் அழைக்கப்படுகிறது.

இது பௌத்த சமயத்தைச் சார்ந்த நூலாகும். இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். 

வளையாபதி அருகக் கடவுள் வாழ்த்து

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறல்அறி வன்அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்.

விளக்கம் : மூன்று உலகங்களில் உள்ளவர்களும் ஒருசேரத் துதித்துப் போற்றும் சிறப்புடையவர் அருகப்பெருமான் ஆவார்.  மாண்புடைய இவ்வுலக உயிர்களுக்குத் திலகம் போன்று விளங்கும் அந்தப் பெருமானின் தூய திருவடிகளைத் தொழுவேன்.  குற்றமில்லாத நெஞ்சத்துடன் சிறந்து விளங்கவும் பண்டை வினைகள் தொலையவும் அந்த இறைவனைத் தொழுது போற்றுகிறேன்.

ஒருங்குடன் - ஒன்றிய மனத்துடன் : வாலிதின் - உறுதியுடன் :
தொல்வினை - பண்டைவினை : முற்பிறப்பில் செய்தவினை. 

சிறந்த மனிதப்பிறவி 

உயர்குடி நனிஉள் தோன்றல்
ஊனமில் யாக்கை ஆதல்
மயர்வறு கல்வி கேள்வித்
தன்மையால் வல்லர் ஆதல்
பெரிதுணர் அறிவே யாதல்
பேரறம் கோடல் என்றாங்கு
அரிதிவை பெறுக லோடே
பெற்றவர் மக்கள் என்பார்.

         மக்களாய்ப் பிறந்தாலும் உயர்குடியில் தோன்றுதல் அரிது.  அங்ஙனம் தோன்றினாலும் கூன் குருடு செவிடு முதலான குறைபாடுகள் இல்லாமல் பிறத்தல் அரிது.  பிறவித்துன்பமாகிய மயக்கத்தைப் போக்கும் ஆன்ம வளர்ச்சியை இனிது உண்டாக்கும் கல்வி கேள்விகளில் சிறந்து வல்லமை பெறுதல் அரிது.

   இங்ஙனம் மெய்யுணர்வு தரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும் அவற்றிற்கேற்ப நல்லறத்தை மேற்கொண்டு ஒழுகுதல் அரிது.  மேற்கூறிய அனைத்தையும் ஒருங்கு பெற்றவரே சிறந்த மனிதப்பிறவி அடைந்தவராவார்.

உயர்குடி - ஒழுக்கம் மிகுந்த குலம் : மயர்வு - அஞ்ஞானம்.

தமிழ்மக்கள் இந்நூலை கற்றுணர இவ்விதம் அழகாக தெளிவுரையோடு புத்தகமாக தந்திருக்கும் புலவர் ப.இராசேந்திரன் அவர்களை வணங்கி நன்றி தெரிவித்து.  இன்றைய அறிமுகங்களை பார்ப்போமா ?

இவங்க மற்றவர்களிடமும் மற்றவர் இவரிடமும் அன்பை மட்டும் எதிர்பார்க்கிறாங்களாம் இப்படி எல்லா மனிதர்களும் இருந்து விட்டால் நாட்டில் பிரச்சனையே இருக்காது இல்லையா ? இவங்க தனது அறிமுகத்தை இப்படி கொடுத்து விட்டு என்ன என்ன பதிவிடுறாங்க பார்க்கலாம் வாங்க.



முகநூல் அறிமுகமான ஒரு சகோதரர் தென்றலை படித்து விட்டு தனக்கும் இப்படி எழுத ஆர்வம் என்று சொன்னாங்க. நானும் ஒரு வலை ஆரம்பித்து கொடுத்து எழுதச்சொன்னேன். தம்பி பிரகாஷ் வலை தொடங்குவது பற்றி பதிவிட்டது இப்படி என்னைப் போன்றவர்களுக்கு எத்தனை உதவியா இருக்கு பாருங்க. நன்றி தம்பி. சரி இந்த சகோதர் முதல் பகிர்வை ஆதி முதல்வனுக்கு நன்றி சொல்லும் விதமாக பகிர்ந்திருக்காங்க இன்னும் என்ன என்ன சொல்றாங்க வாங்க பார்க்கலாம்.



எனக்கு திருவண்ணாமலையில் ஒரு தோழி இருக்காங்க அவங்க பெயரும் சசிகலா.  எனக்கு சரியா வராதா ஒரு கலையை அவங்க எத்தனை அழகா தெரியுமா செய்றாங்க. அதற்க்காக ஒரு வலையும் துவங்கி இருக்காங்க வாங்க பார்க்கலாம். ஆமாங்க அழகாக கோலம் போடுறாங்க. 


அடுத்து நம்ம சகோ சீனு நடத்திய போட்டியில் கலந்து சிறப்பிக்கவே ஒரு வலை துவங்கி எழுத ஆரம்பித்த பதிவர் இவர் பெயர் நாகராசன் இவர் தமிழ் மீது உள்ள பற்றை இனி வரும் தலைமுறைகள் தாம் இன்று மறந்தும் மறுத்தும் அந்நிய மொழியை திணிக்கும் பெற்றோருக்கு மழலைகளை வைத்தே மம்மி டாடி என்று அழைக்காதே அம்மா அப்பா என்று அழகுத் தமிழால் அழைக்க கற்றுத்தருகிறார். வாங்க பார்க்கலாம்.


இவர்கள் எல்லாம் தங்களுக்கு புதியவராக இருந்தால் தொடர்ந்து அவர்கள் எழுத உற்சாகம் தரும் பின்னூட்டங்களைத் தந்து ஊக்கப்படுத்துவோம் வாருங்கள். மீண்டும் நாளை சந்திப்போம் உறவுகளே. 

மேலும் வாசிக்க...

Monday, October 7, 2013

வணக்கம் பல முறை சொல்வேன் !

அன்பின் வலை உலக உறவுகள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.

வலைச்சர ஆசிரியராய் ஆன்றோரும் சான்றோரும் அழகாய் அமர்ந்த இடத்தினிலே எனக்கொரு அங்கீகாரம் தந்து அமர்த்திய தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட வலைச்சரக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கி ....

நானே அது நானே
தென்றலாகிய நானே - மீண்டும்
வலைச்சர ஆசிரியரும்  நானே...

அடிக்க வந்துடாதிங்க..பாட்டெல்லாம் எனக்கு பாடத்தெரியாது.

சரிங்க முதலில் அறிமுகம் என் பெயர் சசிகலா. 
வலை உலகம் வந்த பிறகு தென்றல் சசிகலா என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். 
பிறந்த ஊர் வந்தவாசி பக்கத்தில் இருக்கும் அம்மையப்பட்டு கிராமம். மண் வாசத்தை சுவாசித்து, மனிதர்களை நேசித்த அண்ணாமலையாரின் இளைய புதல்வி. விவசாயின் மகள் என்பதில் பெருமிதம் அடைகிறேன். 

அன்பும் அடக்கமும் நிறைந்த ராஜகுமாரி எங்க அம்மா. பெயருக்கு தகுந்த மாதிரி ராஜகுமாரியா எல்லோர் இதயத்திலும் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்காங்க... பொதுவாக எல்லா அம்மா அப்பாவும் அவங்க குழந்தைங்க செய்கிற சேட்டைகளை ரசிப்பவங்க. அது போல எங்க வீட்டில் சேட்டைக்காரி நான் தான் அப்பா " அம்மா சமையல் நல்லா இருக்கா ? .  என் சமையல் நல்லா இருக்கா ?என்று கேட்டு இருவரையும் சண்டை போட வைத்து விட்டு சிரித்துக்கொண்டிருப்பேன்."  இரட்டைப்பிறவி தம்பியிடம் வம்பிழுத்து சரியான அடி கொடுப்பேன். அக்கா சரஸ்வதி தேவியின் சிநேகத்தில் இருந்ததால் அவர்களிடம் சகஜமாக இருக்க வில்லை.  மரியாதை கலந்த பாசம் மட்டும் . ஆனா அக்கம் பக்கத்து சகோதரிகள் போல அடித்து பிடித்து விளையாட வில்லை என் ற ஏக்கம் உண்டு. அதை என் கவிதை வரிகளிலும் சொல்லி இப்போதே அக்காவுக்கு தெரியப்படுத்தினேன். சென்ற ஆண்டு முதல் பதிவர் சந்திப்பில் எனது முதல் கவிதை வெளியீடு நடந்தது. வலை உலக உறவுகள் அனைவரும் வந்து பாராட்டி வாழ்த்தினாங்க. அவர்கள் வாழ்த்துக்களால் வளர்கிறேன். 

எனது சேட்டைகளை வீட்டில் ரசிக்கும் கணவர் மற்றும் குழந்தைகளும் வந்திருந்தாங்க. அனைவருக்கும் மீண்டும் மீண்டும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு. அன்றைய நிகழ்வை காணொலியில் கண்டு மகிழ இங்கே கிளிக் செய்யவும்.இன்றைய என் அறிமுகத்தில் இதை விட சொல்ல என்ன இருக்கு...

தென்றலைப்பற்றி சக உறவுகள் என்ன சொல்றாங்க கேட்போமா ?

எனது அறிமுகத்திற்கு என்று எனது பகிர்வுகளை நானே திரும்பிப் பார்க்கும் போது கண்ணில் பட்டவை அனைவரின் வாழ்த்தையும் பகிர முடியாது என்பதால் வாழ்த்திய அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து.. விழித்தூண்டிலில் சிக்கியவற்றை வெளியிடுகிறேன். 

தி.தமிழ் இளங்கோ

"தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு ; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்."
-பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை.

தார்மீகக் கோபமும் நாட்டு உண்மைநிலையும் அதற்கான் தீர்வும்
கலந்து தந்த மே தினப் பதிவு அருமை
தங்கள் படைப்புகளைத் தொடர்ந்து படித்துவந்தாலே
நல்ல கவிதைகள் யாரும் படைக்கலாம் என்கிற
நம்பிக்கை பிறக்கிறது
மனம் கவர்ந்த பதிவு.

அருமை
எப்போதுமே சுண்டைக்காய் கால் பணம்
சுமைகூலி முக்கால் பணம் எனத்தான்
வாழ்வின் சூழல் உள்ளது அருமையான சிந்தனை பதிவு
தொடர வாழ்த்துக்கள்


கவிதையின் ஊடாக கதையும் பின்னியிருக்கிறீர்கள். வலிமையான தமிழ் வார்த்தைகளால் எங்கள் மனதையும் பின்னி விட்டீர்கள் தென்றல். மற்றவரின் வயிறெரியப் பெறும் எதுதான் நிலைக்கும்...? பிரமாதம் கருத்தும், சொன்ன நடையும். நாளுக்கு நாள் உங்கள் எழுத்து உ(ய)ரம் பெற்று வருவதைக் கண்டு நான் மிகமிக அகமகிழ்கிறேன்.

''...எண்ணிய தெழுதுகிறேன்

எனக்கென எழுதவில்லை...''
என்று பல கருத்துகள் அலசியுள்ளீர்கள் சகோதரி. உங்கள் எழுத்துகள் பல நல்ல வினைகள் புரியட்டும். வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.

தோழி... குழந்தைகளை கவனமாக வளர்த்த பல பெற்றோர்கள் நிற்கதியாக ஆனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் உள்ளனர்... கல்நெஞ்சம் கொண்டு வயதான பெற்றோர்களை நிற்கதியாக்கிய நபர்கள் இந்த கவிதையை பிடித்து தங்கள் பெற்றோர் வளர்க்க சிரமபட்ட நிகழ்வுகளை எண்ணி பார்க்கவேண்டும்.. உங்கள் கவிதை அருமை!

எழுத்து 
மதியையும் மனதையும் 
நேர்கோட்டில் இணைக்கும் 
ஒருவித தவம் 


மதிக்கும் 
மனத்திற்கும் அவ்வப்போது 
தர்கங்கள் ஏற்படும் 
தர்காக்கள் நீளுமாயின் கலைந்துவிடும் 
நம் தவம் 

நகைப்போர் 
தூற்றுவோர் 
நம்மைச் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் 
ஒருசில நகைப்பு தூற்றலுக்காக நம் தவத்தை கலைப்பது 
அழகல்ல 

எழுத்தாய்
உருவெடுக்கும் 
நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் 
நாளைய தலைமுறையை 
நெறிப்படுத்துகிறது 

நிறைய எழுதுங்கள் தோழி.


வரிகள் தொறும் அருமை-வாரி
வழங்குகிறாய் தமிழுக்குப் பெருமை.

சென்னை பதிவர்

சென்று வந்த சசியம்மா...

உன் பதிவை யாரும் 

குறை சொல்ல முடியுமா..

மட மடன்னு கவிதை எழுதும் சசியம்மா..

உன் கவிதை வரி அத்தனையும் சந்தோஷமம்மா....

எங்கே எங்கே என்று எங்கே சென்றாலும் இப்போது எளிதில் பார்க்க முடியாத இன்பங்களை இங்கே தங்கள் கவிதையில் படித்து நினைவுக்குக் கொண்டுவந்ததில், மனதைத் தென்றல் வருடியது போல இன்பமாக உள்ளது..

பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.

தென்றலை தேடி எங்கும் செல்ல வேண்டாம் உங்கள் வலைதளம் வந்தாலே போதுமே.


மூக்குத்தி போட்டுக்கத்தான்
மூக்கொழுகி ராசாத்திக்குத்தான்
மூக்குமேல வந்த ஆசையைக்கேட்டு
மூக்கால அழுவுறா ஆத்தாளும்.
பொன்னு வக்கிற இடத்திலே
பூ வக்கத் தெரியாதா பொண்ணுக்கு?
மூக்குத்திப் பூக்குத்தி மனசத்தான்
தேத்திக்குவா அந்த மவராசி!
மனசத் தொடுற கவிதைபாடி
மயங்கவைக்கிறா இந்த சசி!

இளமதி  அழகா பூத்த ரோசாப்பூ !": 

அழகா பூத்தது ரோசா மட்டுமா.. உங்க கவிதையும்தான் ...:)

ஆளை மயக்கும் அற்புத கற்பனை!
சிற்பமோ.. சித்திரமோ.. உங்கள் கற்பனையில் உயிர்பெற்றுவிடும்!

மிக அருமையான நாட்டுப்புறக் கவிதை! 
தென்றல் வருடிய சுகம்!

கிராமத்து வாசத்தை உங்களின் தளத்தில் ஒவ்வொரு வரியிலும் பார்க்க முடிகிறது. ஆத்தோரம், தோப்போரம் என்று வரிகளிலாவது ஆறையும், தோப்பையும் நான் உங்கள் மூலம் தரிசித்துக் கொள்கிறேன்.

கவிதையின் மண்வாசனை கணினியைத் தாண்டியும் என் நாசிகளைத் துளைக்கிறது.

அருமைத் தங்கை சசிகலா! அருமை தங்கள் படைப்பு!
சும்மா “சாப்பாடு நல்லா இருந்துச்சு“ன்னு வாயால சொல்றத விட, வெக்கப்படாம “இன்னும் கொஞ்சம் பாகக்கா வறுவல் வைங்க“ன்னு கேட்டு வாங்கறதுதானே உண்மையான பாராட்டு? நான் உங்கள் வாலைப் படைப்புகளைத் தொடர்கிறேன் என் கவித்தங்கையே உன் பயணம் தொடரட்டும். பக்கததிலேயே முமு., வெண்ணிலா வேற இருக்காங்க... அப்புறமென்ன கலக்குங்க... அண்ணனின் வாழ்த்துகள்.

தாய்மொழியில் பா உருவில் என்றும் வாழ்ந்திருப்பாய், கவிதாயினி.

எளிய நடையில் அழகிய கவிதை வரிகள்.....
நேசம் மனதில் தொடங்கிவிட்டால் கவிதை வரிகள் அனாயசமாக அழகாக வெளிப்பட ஆரம்பிக்கிறது சசி....

காதல் எனும் வாசம் மனதில் மலர்ந்திருக்கும்போது எங்கிருந்து நேரம் காலம் தெரிவது? தூக்கமும் வராது.... உணவும் இறங்காது....பகையை கூட காதல் தன் வசமாக்கிவிடும் என்று அறியமுடிகிறது.... காதல் வந்த வழி எது தேடிச்செல்லும் அழகு அலாதி..... நேசத்தை என்றும் அழியா தமிழுக்கு ஒப்பாக்கி உயிருக்கு ஒப்பாக்கி.... 

இருந்தாலும் இல்லையென்று ஆனாலும் உன் உருவில் வாழ்ந்திருப்பேன் என்று முடித்திருப்பது மிக அழகு சசி...

அன்பு வாழ்த்துகள் சசி அழகிய கவிதை வரிகளுக்கு.
மஞ்சு அக்காவை நேரில் பார்த்த பிறகு...
Manju Bashini Sampathkumar மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சசி.. உன் அமைதியான புன்னகையில் கண்டுப்பிடிக்கவே முடியாது நீ இத்தனை அழகிய கவிதைகளுக்கு சொந்தக்காரி என்று... அழகிய கவிதைகளின் கருக்களை சுமந்துக்கொண்டு அடக்கத்துடன் அமைதியுடன் நீ சிரித்துக்கொண்டு இருந்த அன்றைய நாள் நினைவுக்கு வருகிறது... நிறைகுடம் நீ...இறையாசியுடன் என்றும் தொடர்க எழுத்துப்பயணம்...


வணக்கம்!

நல்ல நேரம் என்பதுவும்
கெட்ட காலம் என்பதுவும்
வல்ல சதியோன் வகுத்தனவே!
வாழ்வை உணா்ந்து தெளிந்திடுக!
சொல்ல நினைக்கும் கருத்துகளைச்
சொக்கும் வண்ண மணமேந்தி
மெல்ல வீசும் தமிழ்த்தென்றல்
மேலும் மேலும் தொடருகவே!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு.
உன்னுயிர்த் தோழிக்கு இயம்பிய பா..படித்து
என்னுயிர் ஏங்கும் இளைத்து!

[நான் உங்கள் தோழியாகப் பிறப்பெடுக்க 
ஆசை பெருக்கெடுக்கும்]

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

வாடிநிக்கும் பயிருக்கு
வாழ்க்கை தர வருவாயா

வான்மழையா பொழிஞ்சி நீ
வாழத்தான் வைப்பாயா!//
கவிதை மழை பொழிந்து மழை வேண்டி பாடிவிட்டீர்கள். அருமை.

மழை பொழிஞ்சி வாடிய பயிர், வாடிய வயிறு எல்லாம் குளிரவேண்டும்.
எல்லோர் வாழ்வும் மேம்பட மாரி மனம் இரங்க வேண்டும் மக்கள் சுற்றத்தை காக்க வேண்டும்.

 வே. நடன சபாபதி : ‘தென்றல் என்ற வலைப்பதிவில் தினம் ஒரு கவிதை பதிவிடும் சசிகலா அவர்களை ஆசுகவி எனலாம். இவரது கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகளாய் இருப்பதால் தென்றலை வீசினாலும், சமூக அவலங்களைப் பற்றி இவர் பாடும் போது அந்த கவிதைகள் தீயாகவும் சுடும். உழவன் படும் பாட்டை விளக்கும் தூரத்து பசுமை என்ற இவரது கவிதையும்,தாவரங்களின் வலியைச் சொல்லும் வேரின் வலிகள் என்ற கவிதையுமே இதற்கு சான்று.

இப்படி வாழ்த்துக்களால் வளர்கிறேன். இவர்கள் அனைவரும் வலைச்சரத்தில் தென்றல் அறிமுகம் மூலமாக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. அவ்வாறு தென்றலை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த அனைத்து நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு இன்று விடைபெறுகிறேன்..மீண்டும் நாளை சந்திப்போம்.

மேலும் வாசிக்க...

Sunday, May 20, 2012

இசை கேட்டால் புவி அசைந்தாடும்


வீணை
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.



புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி.



நாதசுவரம்
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால். பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.



வயலின்
தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.



மிருதங்கம்
மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.




தவில்
தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். வலது பக்கம் வலது கையாலும் இடது பக்கம் விரல்களாலும் முழக்கப்படும். எல்லா விரல்களிலும் கவசங்கள் அணியப்பட்டிருக்கும். இடது கையில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியை பயன்படுத்துவர்.


கஞ்சிரா
கஞ்சிரா உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.



எக்காளம்
எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும்.


பூசாரிக் கைச்சிலம்பு
கைச்சிலம்பை விரல்களில் ஏற்றி அசைத்து ஆட்டும் போது கலகல என்று சப்திக்கும் ஓசை கேட்க நன்றாக இருக்கும். மாரியம்மன் கோயில்களில் பூசாரிகள் கையிலேந்தி வழிபாட்டின் போது இசைப்பார்கள். கிராமியப்பாடல்களில் கைச்சிலம்புப் பாட்டு என்பது முக்கியமாகும். மாரியம்மன் தாலாட்டுப் பாட்டை பூசாரிகள் இசைக்கும் போது மிக இலகுவாக கைச்சிலம்பை ஒலிக்கச் செய்வர்.


தவண்டை
தவண்டை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். உடுக்கை ரூபத்தில் உள்ள பெரிய தாளக் கருவியே தவண்டை ஆகும். வழக்கமாக மாரியம்மன் கோவில்களில் இந்த இசைக் கருவி வாசிக்கப்படுவதைக் காணலாம். தவண்டை, குச்சியால் அடித்து வாசிக்கப்படுகின்றது.


உடுக்கை
கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது வாசிக்கப்படும். இது ஒரு தோல் வாத்தியம் ஆகும். உலோகத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்குப்பறை என்றும் துடி என்றும் அழைப்பர். உடுக்கை கையினால் வாசிக்கப்படும் வாத்தியமாகும். கரகம் ஆடும் போதும் பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இவ்வாத்தியம் வாசிக்கப்படுவது உண்டு.


தம்பட்டம்

தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இதன் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும். டண்டண் என்று கேட்கும் படியாக கிராம தேவதைகளின் திருவிழாக்களில் ஓர் இனத்தார் தம்பட்டங்களை வாசிப்பதை காணலாம்.


நகரா

நகரா என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம்பெற்றிருக்கும்.நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள், சாமி அல்லது அம்மன் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது நகரா என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. பெரும்பாலும் கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் போன்ற பெருங்கோவில்களில் காளை மாடு அல்லது யானையின் முதுகில் பொருத்தப்பட்டு தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது.

ஓசையின்றி ஒன்றுமில்லை,
பாசமின்றி வாழ்வில்லை,
காட்சியின்றி கனவுமில்லை,
காதலின்றி எண்ணமில்லை,
இசையின்றி இமையில்லை,
பாட்டின்றி இசையுமில்லை,
காற்றில் கலந்திருக்கும்-மூச்சு,
வாழ்வில் துணயாக-எல்லாமும்.
கவிதையாய்,காவியமாய்,
கதையாய்,ஓவியமாய்,
சிற்பமாய்,சிந்தனையாய்,
புவிவாழும் புன்னகைகள்,
பூவாய்த் தினம் மலர்ந்து,
மணம்வீச வாழ்த்துரைத்து,
வாழ்த்தி வணங்கி முடிக்கின்றேன்,
ஆக்கும் கைகள் எழுதட்டும்,
ஆயிரமாயிரம் பூமலரட்டும்,
சரமாய் நாம் இணைந்திருப்போம்,
எழுத்துலகம் வெல்லட்டும்.

மழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்?  அது எப்படிங்க உருகும் வாங்க வீடு சுரேஷ்குமாரை கேட்போம் .

மாமரத்தின் கீழே மாலைப்பொழுதுகளில் புத்தகங்களின் பக்கம்களைப் புரட்டியபடி இருக்கும் எழுத்துக்களைக் காதலிக்கும் சிறுவன் காணாமல் போயிருப்பான்.இனிமேல் தன் ஒவ்வொரு இலைகளையும்,கிளைகளையும் நேசிக்கும் ஒரு உற்ற நண்பனைத் தேடியபடி....என்று நாம் இழந்தவைகளைப் பற்றி கூறுகிறார் சுபேஷ் .

சொல்ல வந்த ஒரு விஷயத்தை நேர சொல்லத் தெரியாதா ? என்று கேட்கிறார் வருண் .

கவியருவியில் நனைய அழைக்கிறார் யாழ் நிதர்சனன் வாங்க போவோம் .

எல்லா நேரங்களிலும் துன்பம் இழிவானதும் அன்று. எல்லாக் காலங்களிலும் துயரம் வெறுக்கத்தக்கதும் அன்று. சில சூழ்நிலைகளில் காயங்கள் நமக்கு நன்மை அளிக்கும். அப்படியா எனக் கேட்கத் தூணுது இல்ல வாங்க நண்பர் ஹைதர் அலி  வலைப்பக்கம் போவோம் .

ஆடிய காலும் பாடிய வாயும்
வாங்கிய கையும் சும்மா இருக்காதுதான். இது நாம கேட்டிருப்போம் இதுக்கு புதுசா விளக்கம் சொல்கிறார் காட்டான் .

விடியல் வெகு தொலைவில் இல்லை எனக்கூறுகிறார் நிவாஸ் .

தன்னம்பிக்கை இருந்தால் போதும்! எதையும் சாதிக்கலாம் வாங்க!! என்று அழைக்கிறார் என். உலகநாதன்.

மேலும் வாசிக்க...

Saturday, May 19, 2012

பழங்களும் பல்சுவைப்பதிவுகளும் ..!

 மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன.

மாம்பழம்
மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன.கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.

பலா
இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.தென்னிந்தியாவில், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும்.
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

வாழை
முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது.
  வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ், குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை :இருப்பதால் தின்றவுடனே உடலுக்கு சக்தி கிடைக்கும். இது ஒன்றரை மணி நேரம் நாம் வேலை செய்யப் போதுமானதாகும்.  வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 நரம்புகளைத் தளர்ச்சி அடைய விடாமல் செய்கிறது.


கொய்யா
    கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.   கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

மாதுளை
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம்.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது.

புளி
இது தென்னிந்தியச் சமையலில் முக்கியமான ஒன்றாகும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தின் பயன்கள்
   1. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
   2. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
   3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
   4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
   5. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.


சீதாப்பழம்
சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

அன்னாசிப்பழம்
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

திராட்சை
உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று அவுன்ஸ் என இருவேளை அருந்தி வர குணம் பெறலாம்.திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.

பப்பாளி
 நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
 பித்தத்தைப் போக்கும்.
 உடலுக்குத் தென்பூட்டும்.
 இதயத்திற்கு நல்லது.
 மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
 கல்லீரலுக்கும் ஏற்றது.

சப்போட்டா

தினமும் 2 சப்போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப் பெறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். சரும பளபளப்பு கூடும்.
பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தை சப்போட்டா போக்கும். சப்போட்டா பழத்துடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து சாப்பிட, பித்தம் நீங்கும்.
சப்போட்டா பழ ஜூஸூடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும்.

சாத்துக்குடி
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிள்
தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் .தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.

சமையல், இலக்கியம், திரைப்படம் எனப் பலதையும் சுவைக்கவும் ரசிக்கவும் செய்பவள். இப்பொழுது உணவுடன் எழுத்துச் சமையலும் செய்ய முற்படுகிறேன். எனக்கூறும் மாதேவி இன்று மாதுளம் பழம் பற்றிக் கூறுகிறார் .

பல்லாயிரம் மையிலுக்கப்பால்
பாசத்தை தேடுகிறேன்
சொல்லாயிரம் இருக்கிறது
சொல்லத் தெரியவில்லை! நிஜத்தின் வலி வார்த்தையில் தெரிகிறது . அம்மாவின் பிரிவைத்தான் இப்படி எழுதுகிறார் சகோதரர் அருணா செல்வமே .
வெளியூர் சென்ற வேலைப்பார்ப்பதால் தாயை விட்டுப் பிரிந்த சகோவின் வருத்தம் நிறைந்த வரிகளை பார்த்துட்டு வந்திங்களா ,இங்கே என்னைப் போலவே மீண்டு வர முடியாத இடத்திற்கு சென்ற தாயை அழைக்கும் சேகர் .

இதே போன்றும் நானும் எனது தவிப்பை வரிகளில் கொட்டித் தீர்த்தேன் பாருங்களேன் .

பெரும்பாலான ஆண்கள் இப்படித்தானா ? நான் கேட்கவில்லை வேடந்தாங்கல் - கருன் கேட்கிறார் .அவரே பதிலும் சொல்றார் வாங்க போவோம் .

வாழும் காலங்களில் ஏழையாகவே வாழ்ந்துவிட்டு இறந்த பின் பணக்காரனாக ஆக்கும் ஒப்பந்தம் என்று சொல்லும் மனசாட்சி அது என்ன ஒப்பந்தம் கேட்போம் வாங்க .

பழங்களைப் பற்றி சொன்னோம் இல்ல அப்படி பழம் வாங்கும் போது எப்படி வாங்கணும் என்று உணவு உலகத்துல சொல்றாங்க வாங்க டிப்ஸ் டிப்ஸ் ...

அவங்க அவங்களுக்கு ஆசை இருக்கும் இல்ல அது போல இயற்கைக்கும் ஆசையாம் என்ன ஆசை அது வாங்க போவோம் .சக்தி வலைப்பூவிற்கு .

’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்று கூறும் கலையரசி ஊஞ்சல் ஆட வர சொல்றாங்க ஜாலி போலாமா ...?

 பழங்களை சாப்பிட்டு கோடையை குளுமையாக்குங்கள் நாளை சிந்திப்போம் .
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது