07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பெருமைமிகு பெண் பதிவர்கள். Show all posts
Showing posts with label பெருமைமிகு பெண் பதிவர்கள். Show all posts

Thursday, September 4, 2014

பெருமைமிகு பெண் பதிவர்கள்




பெண்களை கிண்டல் செய்து சிலர் எழுதினாலும் பெண்கள் இல்லாத சமுதாயத்தை நினைத்துகூட பார்க்கமுடியாது. தாயாய் , மனைவியாய் , சகோதரியாய் , தோழியாய் எப்படியாவது ஒருவகையில் யாராவது ஒரு பெண் நம் வாழ்க்கையில் இருப்பார்கள் . நம் முனேற்றதிர்க்கு காரணமாகவும் இருப்பார்கள் (வீழ்ச்சிக்கு கூட ..). எல்லா நிலையிலும் சரிசமமாக பெண்கள்  இருக்கும் இந்த உலகில் வலைபதிவில் மட்டும் இல்லாமலா?. தங்களது அருமையான பதிவுகளால் இந்த சமுதாயத்தில் தனியிடம் பிடித்த சில பெண் பதிவர்கள் பற்றி பார்ப்போம் .


என்னில் உணர்ந்தவை :

காயத்ரி தேவி என்னும் பதிவர் "எதிர்கால தேவைகள் தவிர்த்து நான் எப்பொழுதும் நானாகவே இருக்க விரும்புகிறேன்... எனது தேவைகள் என் உள்ளங்கையில் அடங்கி விடுகின்றன... அன்பு, இது ஒன்றே பிறர் என்னிடமும் நான் பிறரிடமும் எதிர்பார்க்கும் தேவைகள்" என தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார் .


இவரின் சில பதிவுகள் :

ஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்

 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல... 

 

 எண்ண தூரிகை :

meera blossom  என்ற சகோதரியின் வலைத்தளம்இது .இவர்தன்னைபற்றிசொல்லும்போது "ஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த நான், இப்பொழுது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இசையையும் புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வாழ வேண்டுமென்பது என் ஆசை. அப்படியே தொடரவும் செய்கிறேன். என் மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையாக உங்கள் முன் படைக்குறேன். வந்து ரசித்து விட்டு செல்லுங்கள். "என்கிறார் .

இவரின் சில பதிவுகள் :

 

இயற்கை தந்த அற்புத பானம்... பதநீர்.

 

என் வீட்டு தேவதை   

மகிழ்நிறை :

Mythily kasthuri rengan        என்னும்சகோதரின்வலைத்தளம்இது . இங்குகவிதைகள் ,கட்டுரைகள்எனஅனைத்தும்உள்ளதுபடித்துபாருங்கள்.

 

  இவரின் சில பதிவுகள் :

வீட்டுப்பாடம் எனும் சக்கர வியூகம் 

வரலாறு முக்கியம் பாஸ்! II 

 

 

கீத மஞ்சரி :

கீதா மஞ்சரி என்ற பெயரில் எழுதிவரும் தோழியின் வலைபூ இது . அருமையான எழுத்து நடையில் பல கட்டுரைகள் வாசிக்க கிடைகிறது . நீங்களும் போய் பாருங்கள் .


இவரின் சில பதிவுகள் :




 மாலதி :

தனது பெயரையே தனது தளத்துக்கு சூட்டி பல அருமையான பதிவுகளை எழுதிவருகிறார் மாலதி அவர்கள் . அவர்களின் படைப்புகளில் சில உங்களுக்காக ...

இவரின் சில பதிவுகள் :

 

உயிரின் ”“ஓர்”“ எழுத்து

மலைகள் சமதளமானது 

 

கனவும் கமலாவும் :

கமலா ஹரிஹரன் என்ற சகோதரியின் வலைத்தளம் இது . அருமையான , சமுக அக்கறையுள்ள பல கட்டுரைகள் , பதிவுகள் இங்கு காண கிடைகிறது .நீங்களும் படித்து ரசியுங்கள் .

 

இவரின் சில பதிவுகள் :

 

நானும், தமிழ் கடவுளும்

 

டைரிக் கிறுக்கல்கள்:

தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் வலைபூ இது . இவர்களை பற்றி அறிமுகம் தேவையே இல்லை . பதிவுலகு மட்டும் இன்றி பத்திரிகை உலகிலும் கோடி கட்டி பறக்கும் மிக சிறந்த எழுத்தாளர் இவர் கதை , கவிதை , பெண்கள் பற்றிய கட்டுரை , குழந்தைகள் கட்டுரை என அனைத்துவிதமான துறையினும் புகுந்து விளையாடுபவர் இவர் . 

இவரின் சில பதிவுகள் :

 மஞ்சள் வெளி. 

எதிர்பார்ப்பு 

/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/

கமலகானம் :

 இந்த வலைபூவினை எழுதிவருபவர் சிங்கபூரை சேர்ந்த சகோதரி கமலாதேவி அரவிந்தன் அவர்கள் . இவர் பல சிறுகதைகள் எழுதியுள்ளார் . அவை அங்குள்ள பல்கலை கழகங்களில் பாடநூல சேர்க்கபட்டுள்ளது என்பது பதிவர்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் .

இவரின் சில பதிவுகள் :

 

கமலாதேவி அரவிந்தனின் ‘நுவல்’

 

நுகத்தடி

 

 

டிஸ்கி : நிறைய பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் . அவர்களில்    சிலரை மட்டுமே சொல்லியுள்ளேன் . மற்றவர்கள் கொவித்துகொள்ளவேண்டாம் . நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த பெண் பதிவர்களின் பெயர் மற்றும் தள முகவரியை கமெண்ட்இல் தெரிவிக்கலாம் .

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது