நானும் கலந்து கொண்ட சில சூடான விவாதங்களின் சுட்டிகள்.
விவாதிக்கும் போது இருக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட்டு சில மாதங்கள் கழித்து ஒரு பார்வையாளனாக படிக்கும் போது கருத்துக்கள் தெளிவாகின்றன.
மேலும் வாசிக்க...
ஒரு கட்டத்துக்குள் அடங்கி விடாத பலதுறை மன்னர்களின் பதிவுக்குப் போனால், படிக்கத் தீனி உறுதியாகக் கிடைக்கும். எதிர்கால உலகைப் படைக்கும் கதையாகட்டும், நிகழ்கால அரசியலை சாத்தும் துணிச்சலாகட்டும், கட்டுப்பெட்டித்தனம் என்று அவர் நினைக்கும் மனப்போக்குகளை உடைக்கும் அடாவடியாகட்டும்
செல்லாவுக்கு நிகர் அவரேதான்.
சர்ச்சைக்குள்ளானாலும், பரபரப்பு ஏற்படுத்துவதில் சளைக்காத பதிவர்(கள்)
இட்லிவடையினர். சமீப காலமாக அடக்கி வாசித்தாலும் தமிழ் வலைப்பதிவு உலகில் நடமாடும் யாரும் தப்பி விட முடியாத தாக்கம் இட்லிவடை பதிவுகள்.
யோசிப்பவரின் அறிவியல் புனைகதைகள் ஒரு புறமிருக்க அவரது
புதிர்கள் வலைப்பதிவுகளின் தனி பரிமாணத்தைக் காட்டுகின்றன.
மேலும் வாசிக்க...
தனக்குத் தெரிந்த நடைமுறைகளை, தனது துறையின் சிறப்பியல்புகளைப் பற்றி எழுத சில பண்புகள் வேண்டும்.
- ஒன்று, ஆழ்ந்த அறிவும் அனுபவமும். தான் எழுதுவது கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும், அதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க மாட்டார்கள் என்ற புலமை வேண்டும்.
- இரண்டு. தன்னம்பிக்கை. தொழில் ரகசியங்களை எல்லாம் எழுதி விட்டால் மற்றவர்கள் அதை நகல் செய்து நமக்கு போட்டியாக வந்து விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்.
- மூன்று. சொல்வதை சுவையாக படிப்பதற்கு புரியும் படி எழுதும் திறமை வேண்டும்.
இந்த மூன்றும் ஒரே சேர இருப்பவர்களில், நான் படித்ததில் முதல் இடம்
டிபிஆர் ஜோசப் சார். வங்கித் துறையின் நடைமுறைகளைப் பற்றி எழுதும்
திரும்பிப் பார்க்கிறேன் தொடரிலும் சரி, வங்கிகளின் உயர்மட்ட அரசியலைப் பற்றி எழுதிய சூரியன்
புனைகதையிலும் சரி வெளியார் யாரும் எளிதில் தெரிந்து கொள்ள முடியாத விபரங்களை தனது எழுத்து என்னும் தேனில் குழைத்து கொடுக்கிறார்.
இரண்டாவதாக என்னைக் கவர்ந்தவர் ஜோயல் ஸ்பால்ஸ்கி என்ற மென்பொருள் வல்லுனர். பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதை விட்டதிலிருந்து ஆரம்பித்து, சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வரும் கடந்த 8 ஆண்டுகளாக மென்பொருள் துறை குறித்து, மென் பொருள் உருவாக்கம் குறித்து, வேலைக்கு ஆள் தேடுவது குறித்து உள்ளது உள்ளபடி
எழுதியுள்ள இடுகைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்டு வருகின்றன.
மொழிபெயர்ப்பை பகுதி நேர தொழிலாக ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும்
தனது அனுபவங்களை் தனது பதிவுகளில் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறார்
டோண்டு ராகவன். கால் இடறாமல் கவனமாகப் போய்ப் படித்து விட்டு வரலாம்.
மேலும் வாசிக்க...
செய்திகளின் நிகழ்வுகளின் பின்னணியைப் புரிந்து கொள்ள சிலரிடம் போக வேண்டியிருக்கும். 1990களில் இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு செய்தியை எடுத்தால் நாலா கோணங்களிலிருந்தும் அதை அலசி விபரமாக கட்டுரைகள் கொடுத்திருப்பார்கள். இப்போது அந்த அணுகுமுறையை அந்தப் பத்திரிகையிலும் பார்க்க முடிவதில்லை.
நிகழ்வுகளை நடுநிலையோடு, தனது புரிதல்களையும் படித்துத் தெரிந்து கொண்ட விபரங்களையும் சேர்த்து தரும் இடுகைகள் பத்ரியின் எண்ணங்கள். ஞானி கலைஞர் குறித்து எழுதிய விவாதத்துக்குரிய கட்டுரை பற்றிய இடுகை
இங்கே. இந்தப் பதிவில் எந்த இடுகையையும் சுட்ட,ி உள்ளே போனால் திரும்பும் போது அதைப் பற்றிய அதிகரித்த தெளிவோடு வெளியே வரலாம்.
தமிழ் சசி எடுத்துக் கொண்ட பொருளில் இறுதி ஆளுமையோடு எழுதுவார். ஈழத்து நிகழ்வுகள் ஆகட்டும், தமிழக அரசியல் ஆகட்டும் இவரது கருத்துக்களில் இருக்கும் உறுதியும் தெளிவும் மறுபக்கத்துக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடும். மாதிரிக்கு
ஒன்று அசுரன். வெளுத்து உடை உடுத்து, வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, முன்னிருக்கும் கணினியில் வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருக்கும் நமக்கெல்லாம் உண்மை நிலை உரை கல் ஒன்று வேண்டும். கல்லில் உரைப்பது போல தேய்த்துத் தேய்த்து சொன்னாலும், எல்லோரும் நின்று போக வேண்டிய அவசியமான இடுகைகள் அசுரனின் கட்டுரைகள். முடிந்தால் ஒரு விவாதத்தில் இறங்கி அவருக்கு தீனி போடுங்கள்.
சமீபத்திய இடுகையின் சுட்டியைத் தவிர்த்து (;-)) அதற்கு முந்தையதை
இங்கே பாருங்கள்்
மேலும் வாசிக்க...
மற்றவர்களைச் சிரிக்க வைப்பது ஒரு வரம். அப்படி நகைச்சுவை மன்னர்களாக இருப்பவர்களை நேரில் பார்த்து பேசினால்் அப்படிச் சிரிக்க வைக்க எவ்வளவு ஆழம் தேவை என்பது புரியும்.
தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கும் போது தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் கைப்புள்ள மோகன்ராஜ். அவரது எழுத்துக்களில் இருக்கும் கவர்ச்சியும் எளிமையும் என்னைப் போலவே பலரைக் கட்டிப் போடுகின்றன.
அவரது தடிப்பசங்க என்ற தொடரை படிக்காதவர்கள் உடனே ஒரு நடை போய் முழுசும் படிச்சுடுங்க. எட்டாவது பகுதியின் சுட்டி
இங்கே. (அப்படியே நூல் பிடிச்சுக்கிட்டே போயிடலாம், இவரும் இடுகைகளுக்கு லேபல் கொடுத்து வகைப்படுத்திக்கலை இன்னும்).
சாத்தான் குளத்து வேதங்கள் பதிவுக்குள் போய் விட்டால், பழைய இடுகைகளைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டால், அப்புறம் வலைச்சரத்துக்கு இடுகை முடிப்பது அவ்வளவுதான். எதைத் தொட்டாலும் துள்ளல் நடையில் தலைப்பில் ஆரம்பித்து கடைசி வாக்கியம் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு படிக்க வைத்து விடும் இடுகைகள்.
மாதிரிக்கு மட்டும்
ஒன்றுசும்மா டைம் பாஸ் மச்சி என்று ஆரம்பித்து இடுகைகளிலும் சரி, அவரது சிறப்புப் பின்னூட்டங்களிலும் சரி, தனி முத்திரை பதித்தவர் நம்ம லக்கிலுக். கலைஞரைப் பற்றிய இடுகைகளைக் (;-)) கூட விரும்பிப் படிக்க வைத்து விடக் கூடிய எழுத்து நடை. சிரிப்பாக எழுதுவது போலவே சீரியசான விஷயங்களை சொல்லி விட்டுப் போய் விடுவார்.
ஹாப் பாயிலின் புகைப்படத்தோடு ஒரு இடுகைசொல்லவும் வேண்டுமா!
மேலும் வாசிக்க...
தகவல் தொழில் நுட்பம் குறித்த பதிவுகளைப் பற்றிப் பேச வேண்டுமானால் ஒரு ஆங்கிலப் பதிவைக் குறிப்பிடாமல் முடியாது.
வலைப்பதிவுகள் blog என்ற வடிவில் உருவாகும் முன்பே, 1997ல் ஒரு கணினியியல் மாணவன் தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்த தளம் பத்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள், லட்சக் கணக்கான பதிவு செய்த வாசகர்கள், கோடிக் கணக்கைத் தாண்டி விட்ட பின்னூட்டங்கள் என்று வணிக முறையில் பணம் ஈட்டும் தளமாக விளங்குகிறது.
தளம்
உருவான கதைதலைகீழாக வகுத்தாலும் தமிழில் பல்வேறு நுட்பங்களை பொறுமையாக விளக்கும் வவ்வாலின் பதிவுகள் தமிழ் பதிவுலகுக்கு ஒரு நல் முத்து.
சமீபத்திய இடுகை
ஏதாவது பாலத்தில் போகும் போது, கட்டிடங்களைப் பார்க்கும் போது சாதாரணமாகக் கடந்து விடுகிறோம். மனித வரலாற்றின் ஆரம்பங்களிலிருந்தே மலர்ந்து இன்று முதிர்ந்து நிற்கும் கட்டிடக் கலையின் நுணுக்கங்களையும் அனுபவங்களையும் கொடுத்து வரும் வடுவூர் குமாரின்
இடுகைகள் தவற விடக் கூடாதவை.
திறவூற்று மென்பொருள் பாவிப்பவர்களுக்கு ஒரு உதவிக் கருவூலம் மயூரனின்
பதிவு
மேலும் வாசிக்க...