பயன்தரும் வீட்டுத் தோட்டம்
மண்ணை முட்டி மோதி
தலையெடுக்கும் விதை
ஒவ்வொன்றுமே -
நம்பிக்கையின் சாட்சி !
துளிர்க்கும் ஒவ்வோர் இலையும்
மொட்டவிழ்த்து மணம் பரப்பும்
வண்ண மலர் ஒவ்வொன்றும்
கண்களுக்கு விருந்தாக்குமே
எழில் கொஞ்சும்
இயற்கை காட்சி !
வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், நமது அன்றாட தேவைக்கான காய்கறிகள், கீரைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இன்று விவசாயத்திற்கு , பல வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களை பயன்படுத்துகிறோம். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு இரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்பது நமக்கே தெரியாது. இயற்கையான முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம் நம் அன்றாடத் தேவைக்கான காய்கறிகளை, இயற்கை முறையில், சத்து நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம்.
வீட்டுத்
தோட்டம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, நமக்கும் தோட்டம்
அமைக்க உதவி புரியும் வலைப்பூக்கள் சிலவற்றை இன்று பார்க்கலாம்.
1. சகோதரி மகி அவர்கள் தனது தளத்தில் புதினா மற்றும் கத்தரிக்காய் அறுவடை பற்றி சொல்லி இருக்கிறார் பாருங்களேன்.
இவரது வெந்தயக் கீரை வளர்ப்பு பற்றிய பயனுள்ள பதிவையும் பாருங்களேன்.
2. பருப்புக் கீரை வளர்க்க நமக்கு நல்ல யோசனை சொல்கிறார் சகோதரி சித்ரா சுந்தர் அவர்கள்.
மீழ் சுழற்சி முறையில் கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி என்றும் சொல்கிறார் பாருங்களேன்.
3. மணத்தக்காளி / சுக்கட்டி கீரை வளர்த்த மற்றும் அறுவடை செய்த அனுபவத்தை தோழி இமா க்றிஸ் சொல்கிறார். வாருங்களேன் கேட்போம்.
செடிகள் நம்முடன் பேசும். தெரியுமோ ? தன் வீட்டு ரோஜா செடிகளுடன் தனக்கு இருக்கும் பிணைப்பைப் பற்றி இங்கு சொல்கிறார்.
4. வீட்டில் தோட்டம் போட இடமில்லையா ? கவலையே வேண்டாம். மொட்டை மாடியில் கூட அழகான பயன் தரும் தோட்டம் அமைக்கலாம் என்று சொல்கிறார் சிவா அவர்கள்.
இவர் கோவைவாசி ஆதலால், கோவையில் விதைகள் மற்றும் உரங்கள் எங்கு வாங்கலாம் என்ற விபரத்தையும் நமக்கு வழங்குகிறார். பயன்படுத்திக் கொள்வோமே.
5. சகோதரர் இளங்கோ அவர்கள் அவரது வீட்டுத் தோட்டத்தில் விளைந்திருக்கும் அற்புதமான செவ்வாழை மற்றும் கற்பூரவள்ளி வாழைப்பழம் பற்றி சொல்லி இருக்கிறார்.
இவரது வீட்டில் வளர்ந்த சேனை மற்றும் பாகல் பற்றிய பதிவு, அழகான புகைப்படங்களுடன்.
6. குப்பைவண்டி தளத்தில் தொங்கும் தோட்டம் அமைக்கும் முறை குறித்து விளக்கி இருக்கிறார்கள், பாருங்களேன்.
மண்
புழுக்களின் மகத்துவம் பற்றி நாம் அறிவோம். அவற்றை வீட்டுத் தோட்டத்தில்
வளர்க்க இயலாதவர்கள், மொட்டை மாடியில் கூட வைத்து வளர்க்கலாம் என்கிறார். மண் புழுக்களை வளர்த்து உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
7. நம்மவூர் குலசை தளத்தில் சகோதரர் முகமது சுல்தான் அவர்கள் காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி? என்று விளக்குகிறார்.
7. நம்மவூர் குலசை தளத்தில் சகோதரர் முகமது சுல்தான் அவர்கள் காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி? என்று விளக்குகிறார்.
8. வீட்டுத் தோட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமானவை குறித்து தெரிந்ததும் அறிந்ததும் தளத்தில் சகோதரர் சின்னப்பயல் அவர்கள் விளக்குகிறார்.
9. நண்பன் தமிழ் வலைப்பூவில் தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பொதுவான 10 செடிகள் பற்றி சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள். வளர்த்துப் பயன் பெறுவோம்.
10. வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி துளசி.
என்று துளசியின் பல்வேறு பயன்களையும், அவை குணமாக்கும் நோய்கள் பற்றியும் உமா அவர்கள் சொல்கிறார் பாருங்கள்.
11, தோட்டத்திற்கு வரும் விருந்தினர்களை திருமதி பக்கங்கள் தளத்தில் சகோதரி கோமதி அரசு அவர்கள் புகைப்படத்தினுள் பிடித்து நமக்கு காண்பிக்கிறார் பாருங்கள்.
12. உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, காய்கறி விதைகளை விதைக்கும் முறை, கொடிகளுக்கு பந்தல் போடும் முறை என்று பல விஷயங்களை இங்கு விளக்கிச் சொல்கிறார் மனதோடு மட்டும் தளத்தில் எழுதி வரும் சகோதரி கௌசல்யா ராஜ் அவர்கள்.
இன்றைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
மீண்டும் நாளை, வேறு சில பதிவர்களுடன் உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.
நன்றி !!!
